இந்த வாரம் 10.07.2017 முதல் 14.07.2017 வரை வினவு தளத்தில் வெளியான 32 குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் ஜி.எஸ்.டி, விவசாயப் பிரச்சினைகள், கேலிப்படங்கள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆவணப்படங்கள், புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்திகள் குறித்து உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள்,விமரிசனங்களையும் அறியத் தாருங்கள்! நன்றி
– வினவு
விவசாயியை வாழவிடு! ஆக 5 தஞ்சை மாநாடு மக்கள் அதிகாரத்தின் பலத்தை நிரூபிப்பதற்கோ, பிரபலப்படுத்துவதற்கோ அல்ல, விவசாயியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத்தான். |
ஒரு ஏழை நாட்டில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறக் காரணமான வறட்சி, போர் இரண்டுமே ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கான விளைவு எனும் போது அந்த வல்லாதிக்க நாடுகளை தண்டிப்பதற்கு பதில் ஏழை நாட்டு மக்களை தண்டிக்க வேண்டிய அவசியம் என்ன? |
ஒரு சில ஜியோ எண்களை உள்ளீடு செய்த போது அதன் உரிமையாளருடைய ஆதார் எண்ணும் வெளியானதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். |
மாடுகள் அனைத்தும் முறையான இரசீதோடு தான் கொண்டு செல்லப்படுகின்றன. விதிமுறை மீறலுக்காக பறிமுதல் என்று எழுதாமல், மாட்டு வியாபாரிகளைக் கடத்தல்காரர்களைப் போல் சித்தரித்து ஊடகங்கள் எழுதுகின்றன. |
மனுவை விசாரித்த நீதிமன்றம் போலீசு கூறிய காரணங்களையே வழிமொழிந்து தோழர் வினோத் அவர்களது பிணை மனுவை தள்ளுபடி செய்துள்ளது. |
என் பிணத்தின் மீது தான் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த முடியும் என கொக்கரித்த மோடி தான் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி புதிய இந்தியா பிறந்துள்ளதாக கூறியுள்ளார். |
கள்ளச்சாராயம்மோ, நல்லச்சாராயமோ? எதுவாக இருந்தாலும் இனிமேல் எங்கள் ஊருக்குள் விடமாட்டோம். என்று எச்சரிக்கை விடுத்த அடுத்த கணமே அக்கும்பல் அலறி அடித்து சரக்கை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர். |
கள்ளக் கடத்தல் செய்யும் மாபியா கும்பலைக் கையாள்வதைப் போல் மாட்டிறைச்சி உண்ணும் மக்களைக் கீழ்த்தரமாக நடத்துவதற்கே இந்தக் கருவியும் சோதனைகளும் பயன்படுத்தப்படும். |
மிக உயரமான மலைச்சிகரங்களில் உயிர்ப்பிழைத்திருப்பதற்கான பெருங்கூர்ப்பை (macroevolution) மூவாயிரம் ஆண்டுகால போராட்டத்தினால் திபெத்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது டார்வினின் இயற்கைத்தேர்வுக்கு மிகச்சிறந்த நிரூபணங்கள் |
கிராமப் பண்பாட்டில் தான் நாட்டின் எழுச்சி ! மோகன் பகவத் |
மாணவர்கள் மத்தியில் பு.மா.இ.மு -வின் கொள்கைகள் மற்றும் போராட்ட அனுபவங்கள் விளக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை பு.மா.இ.மு -வில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். |
பண மதிப்பு நீக்கத்தின் விளைவால் சரிந்த வணிகர்கள் இன்று வரை எழுந்திருக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். தற்பொழுது கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டி வரி சிறுவியாபாரிகளை அதளபாதாளத்திற்கு நெட்டி தள்ளியுள்ளது. |
இலங்கை, ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் பேரழிவு தந்த போர்களை உருவாக்கி, இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக அலையவிட்டவர்கள், G20 என்ற பெயரில் கூட்டம் போடுகிறார்கள். |
மனுதாரர்கள் முன்வைத்தது போல், இவ்வறிவிப்பின் அரசியல் சாசன விரோதத் தன்மை குறித்தோ, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மை குறித்தோ தமது தீர்ப்பில் வாய் கூடத் திறக்கவில்லை. |
“நீட் தேர்வு கோச்சிங் போனீயாம்மா ?”, என்று கேட்டேன். ” இல்லீங்க. போகலை”. “அப்பா என்ன பண்றார்ம்மா?”. ” திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்குறாரு”. இந்த சூழலில் அவர் செலவு செய்து கோச்சிங் போக வாய்ப்பே இல்லை. |
எங்க சார் கருப்புப் பணம் ஒழிஞ்சது? பணம் செல்லாதுன்னு சொன்ன பின்னாடி நாமெல்லாம் ஐநூறு ரூபா கிடைக்குமான்னு ஏ.டி.எம் வாசல்லே காத்து நின்னோம்.. அதே அதிகாரிங்க வீட்லேர்ந்து கட்டுக் கட்டா பணத்தை எடுக்கிறாங்க. அவங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சது? |
செத்த மொழின்னா சும்மா பாடு… செம்மொழின்னா துட்ட குடு… |
மோடி அரசின் இந்த நடவடிக்கையால் மெழுகு தீப்பெட்டி தொழிற்சாலைகளை நம்பி உள்ள 5,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. |
தாங்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத துயரங்களுக்கு மத்தியில் சவுதியில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றனர் காஷ்மீர் மக்கள். |
மோடியின் பக்தர்களான குஜராத் வணிகர்களும் தற்போது நேரில் சிக்கினால் மோடியின் கழுத்தைப் பிடிக்கும் அளவிற்கு கடுங்கோபத்துடன் இருக்கின்றனர். |
அங்க யார அடிச்சி என்னத்த புடுங்குறது ஜி… |
இஸ்லாமியர்கள் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த இன்னும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க நிறைய சுயபலிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. |
இந்த மாத இதழில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, விவசாயத்தின் அழிவு, மகாராஷ்டிர விவசாயிகள், பருப்பு விவசாயிகள், மிளகாய் விவசாயிகள், ஆரியர்கள் வருகை, பி.டி கடுகு………. |
“ஒரு தேசம், ஒரு சந்தை, ஒரு வரி” என்ற முழக்கம் “ஒரே தேசம் ஒரே பண்பாடு” என்ற இந்துத்துவ பாசிஸ்டுகளின் கொள்கையைச் சுமந்து வரும் தேர். |
ஆரம்ப கால மலையாள சினிமா உலகில் நல்ல படங்கள் வந்தன, நல்ல படைப்பாளிகள் இருந்தனர், என்பதெல்லாம் பழங்கதையாக மாறியதற்கும் திலீப் ஒரு திரைத்துறை தாதாவாக மாறியதற்கும் பெரும் வேறுபாடு இல்லை. |
நம்ம ஃபிளைட்டு வந்துருச்சுடா…அம்பி… |
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 2016-க்கும் பிப்ரவரி 2017-க்கும் இடைப்பட்ட 12 மாதங்களில் 1,982 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். |
சோக்சோ நகரில் டாக்சி ஓட்டுநராக இருக்கும் அவர், மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சியோலுக்கு செல்கிறார். அங்கு தனது மகளின் புகைப்படத்துடன் சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு எதிரில் தனியாளாகப் போராடுகிறார். |
இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 88% பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஆகும். அவர்களை, அதாவது ஆகப்பெரும்பான்மையான மக்களை இழிவு படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். |
தமக்கு எதிராக ஒரு சிறிய கருத்தைக் கூட விட்டு வைக்காமல், அதனை முளையிலேயே கிள்ளி எரிய தமக்கு அளிக்கப்பட்டிருக்கும் வானளாவிய அதிகாரத்தையும் இந்தக் கும்பல் தமது இந்து ராட்டிரக் கனவை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டுள்ளது |
ஆறுமாதத்திற்கு முன்னால் கடுமையான விலை வீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடுமையான விலை உயர்வும் என தக்காளியின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. |
இத்தனை இடர்பாடுகளையும் கடந்து ஜெர்மனில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் காஞ்சனமாலா. |