க்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆறு பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைபடுத்தியிருக்கும் எடப்பாடி அரசு, அடுத்த இரைக்காக அலையும் வேட்டை நாயைப் போல, தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிகாரத்தின் தோழர்களைத் தெருத்தெருவாகத் தேடி அலைகிறது.

நக்சலைட்டுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ். அவசியம் தேவை என்று பேட்டியளிக்கிறார் எச்.ராஜா. பயங்கரவாதிகள் குறித்து ஊடகங்களுக்கு பாடம் நடத்துகிறார், பொன்னார். இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்று எகிறிக் குதிக்கிறார், தமிழிசை.

சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பொதுமக்களைக் கூட கைது செய்து சிறையிலடைத்திருப்பதன் மூலம், பா.ஜ.க. – எடப்பாடி கும்பலின் நோக்கம் என்னவென்று அம்பலமாகியிருக்கிறது. இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன?

அம்பலப்படுத்துகிறார்கள், டி.கே.எஸ். இளங்கோவன், அமைப்புச் செயலாளர், தி.மு.க.; விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பேராசிரியர் வீ.அரசு, சென்னைப் பல்கலை கழகம் (ஓய்வு).

பாருங்கள், பகிருங்கள்!

துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்தவே NSA அடக்குமுறை | டி.கே.எஸ்.இளங்கோவன்

மக்கள் முட்டாள்கள் அல்ல | பேரா வீ.அரசு

ஸ்டெர்லைட்டை மூடச் சொல்வது தேச விரோதமா | விடுதலை ராஜேந்திரன்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க