‘இயற்கை வாழ்வியல்’ எனும் கோமாளித்தனத்தால் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால்  ரத்தப் போக்கு ஏற்பட்டு திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் கிருத்திகா கடந்த ஜூலை (2018) இறுதியில் உயிரிழந்தார்.

இந்த மூடத்தனம் குறித்து மருத்துவர்கள் உள்ளிட்டு பலரும் எச்சரித்து வந்த நிலையில், கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் நிஷ்டை என்ற கோஷ்டியினர் வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு பயிற்சியளிக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஆகஸ்ட் 26 -ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்து விளம்பரங்கள் செய்திருந்தது.

healer bashkar
கிருத்திகா உயிரிழந்த பிறகும் ஹீலர் பாஸ்கரால் இப்படி ஒரு விளம்பரம் தைரியமாக கொடுக்க முடிகிறது என்றால்?

மேற்படி அமைப்பு ஹீலர் பாஸ்கரால் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வீட்டிலேயே பிரசவம்’ விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் இதைப் பற்றி அவரது கருத்தை அறிந்து கொள்ள ஊடகங்கள் முயன்ற போது பேட்டியளிக்க மறுத்துள்ளார் பாஸ்கர்.

எனினும், இது பற்றி தமிழக டி.ஜி.பி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தன்னிடம் நேரில் வந்து விளக்கம் கேட்டால் மட்டுமே உரிய விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாஸ்கரின் மோசடி விளம்பரம் குறித்து ஜான்சன் என்பவர் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அரசின் சுகாதாரத்துறையும் விளம்பரம் குறித்த தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

நிஷ்டை கோஷ்டி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் இந்த விளம்பரம் குறித்து ஆய்வு செய்து இருப்பதாகவும், அவர்கள் குறித்து முழு தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கோவை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குர் பானுமதி அறிவித்தார்.

விசாரணையின் போது இலவசமாக பிரசவம் பார்க்கப் பயிற்சி தருவதாக கூறி ஒவ்வொரு நபரிடமும் தலா 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை வசூலித்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஹீலர் பாஸ்கர்(42) மீதும் அவரது அலுவலக மேலாளர் சீனிவாசன்(32) என்பவரின் மீதும் சட்டப்பிரிவு 420 மற்றும் 511 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக கைது செய்துள்ளனர் போலீசார்.

தொடர்புடைய கட்டுரைகள்:

திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

பாட்டி வைத்தியத்திற்கும் பாதுகாப்பான மகப்பேற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை !

கைது செய்யப்பட்டிருப்பதாலேயே பாஸ்கரோ பாரி சாலனோ திருந்தி விடப்போவதில்லை; தங்கள் சதிக் கோட்பாடுகளைப் பிரச்சாரம் செய்யாமல் இருக்கப் போவதுமில்லை. இந்தக் கைதை தங்களது செய்ல்பாடுகளுக்குக் கிடைத்த அங்கீகாரமாக கம்பெனியின் சந்தையை விரிவு படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

இப்போதே பாஸ்கர் – பாரி ஆதரவு வாட்சப் குழுமங்களில் இவர்களின் கைதுகளுக்குப் பின் உள்ள சர்வதேச இலுமினாட்டி வலைப்பின்னலின் தொடர்பு குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருவதை கவனிக்க முடிகிறது.

மேலும், அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குமான அடிப்படை எங்கே இருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதே கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் நோயுற்ற வயதான பெண்மணி ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் ‘இயேசு வந்து காப்பாற்றுவார்’ என நம்பி வீட்டைப் பூட்டிக் கொண்டு ஜெபித்துள்ளனர் பெந்தேகோஸ்தே சபையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். பின்னர் அந்தப் பெண்மணி இறந்த பின்னும் மேலும் சில வாரங்களுக்கு வீட்டைத் திறக்காமல், சாப்பிடாமல் தொடர்ந்து ஜெபித்து வந்துள்ளனர்.

பின்னர் அக்கம் பக்கத்தவர்கள் துர்நாற்றம் வருவதை அறிந்து காவல்துறைக்கு தகவல் அளித்து கதவை உடைத்துத் திறந்த பார்த்தால் குழந்தைகள் உட்பட அக்குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் எலும்பும் தோலுமாக உயிருக்குப் போராடிய நிலையில் அழுகிய பிணத்தோடு வழிபாடு செய்து வந்தது தெரிய வந்தது .

அப்போது காவல் துறையினரிடம் ‘தங்களது ஜெபத்தால் இயேசு இறங்கி வந்து மரித்துப் போன தங்கள் தாயை உயிர்ப்பித்து தந்து விடுவார்’ என நம்பியே தொடர்ந்து ஜெபித்ததாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர். இச்செய்தி அப்போதே பத்திரிகைகளில் வெளியானது.

superstitions in religionசமீபத்தில் தில்லியில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த 11 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இன்னும் அந்த தற்கொலைகளுக்கு என்ன காரணம் என்பதை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், அக்குடும்பத்தினர் ஏதோவொரு இந்து மதப் பிரிவையோ சாமியாரையோ பின்பற்றி வந்தனர் என்பதும், குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட விதத்தில் தற்கொலை செய்து கொண்டால் மோட்சம் கிடைக்கும் என அங்கிருந்த டைரிகளில் எழுதி வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளியானது.

காசியில் செத்தால் மோட்சம் என்பதற்காக அங்கே சாவதற்காகவே செல்வோர் எத்தனை பேர்? அனாதைப் பிணங்களைச் சுமந்து கங்கை நதி மாசடைந்திருப்பது குறித்து எத்தனை ஆய்வுகள் வெளியாகியுள்ளன? இன்னும் பாரசீகத்தில் ஐ.எஸ் எனும் காட்டுமிராண்டிக் கூட்டம் இசுலாத்தின் பெயரில் எண்ணிறந்த கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது.

தொடர்புடைய கட்டுரை:

ஆன்மீகத்தால் அச்சுறுத்துகிறார்  செந்தமிழன்!

ஆக, மூடத்தனங்களுக்கு ஹீலர் பாஸ்கர், பாரி சாலன் போன்ற ஒரு சில தனிநபர்கள் மட்டும் காரணமல்ல.

அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குத்தனமான சிந்தனை முறையும் அந்த சிந்தனை முறை நீடித்து நிற்பதற்கான சமூகச் சூழலும் தான் ஹீலர் பாஸ்கர் பாரி சாலன் போன்றோரை உற்பத்தி செய்கின்றது.

இவர்கள் மூடத்தனங்களுக்கு பலியாகும் அளவுக்கு பலவீனமாய் உள்ள மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் குற்றவாளிகள் எனும் வகையில் இவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகிறார்கள். இந்தியாவில் மதம், சடங்கு பெயரில் ஏற்கனவே இருக்கும் மூடநம்பிக்கைகள் உலகமய – இணைய காலத்தில் வேறு அவதாரங்கள் எடுக்கின்றன. இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பது, இவர்களது பயிற்சி முகாம்களை அம்பலப்படுத்துவது, மக்களிடம் பிரச்சாரம் செய்வது அனைத்தும் இடையறாமல் செய்ய வேண்டியிருக்கிறது.

அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனங்களை எள்ளி நகையாடும் நிலைக்கு சமூகம் வளரும் போது இவர்கள் வெறும் காமெடியன்களாக புறக்கணிக்கப்பட்டும் சிறுமைப்பட்டும் போவார்கள். அவ்வாறான ஒரு சமூக சூழலை உண்டாக்கப் போராடுவதும், அதற்காகப் பிரச்சாரம் செய்வதும் நம் அனைவரின் கடமையும் ஆகிறது.

  • சாக்கியன்

தொடர்புடைய செய்திகள் :

30 மறுமொழிகள்

  1. வினவின் முயற்சி வீண்போகவில்லை. அடுத்து அந்த இலுமினாட்டி தம்பி தான்.

    • அய்யா ! தேமா அவர்களே !
      வினவின் முயற்சியில் தான் ஹீலர் பாஸ்கர் கைது என்ற உங்களின் புரிதலுக்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஹீலர் பாஸ்கரால் பொருளாதார ரீதியாக நட்டம் அடைந்த மருந்து கம்பெனி களின் அழுத்தமே கைதிற்கு காரணம்

  2. இதுல கொடும என்ன என்றால் என்கூட என் பக்கத்திலேயே உட்கார்ந்து அறிவியல் படித்த நண்பர்கள் கூட இந்த கேடு கெட்ட நாய்களுக்கு ஆதரவாக இருப்பதுதான். இந்த நாய்களை பல ஆண்டுகள் எதிர்த்து சலித்துப்போய் விட்டது, நம் கூட இருந்து நமக்கு ஆதரவளிக்க வேண்டிய படித்த மக்களே நமக்கு எதிராக இருக்கும் போது நமக்கு எதுக்கு இந்த வேலை என்று வெறுத்துப்போய் எவனாவது சாகும்போதுதான் இவர்களுக்கு அறிவு வரும் என்று விட்டு விட்டேன். ஆனாலும் ஒரு உயிர் பலி கொடுத்தபிறகும் இவனுக்கு ஆதரவாக இருப்பவர்களின் எண்ணிக்கை என்னை மிரள வைக்கின்றது! யாரோ சொன்னது போல் “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”.

  3. ஹீலர் பாஸ்கர் போன்ற அறிவிலிகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற போடாத பாடு படும் வினவு கொலை கூடமாக திகழும் மருத்துவ மனைகளை பற்றி சிறு குஞ்சு மணி ஆட்டம் கூட போட வில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
    விஞ்ஞானம் என்ற பெயரில் யாரை காப்பாற்ற கட்டுரை எழுதுகிறீர்கள் என தெரியவில்லை.
    எத்தனை கர்பினிகளின் உயிரை நவீன ஈன மருத்துவர்கள் கொன்றிருக்கிறார்கள் என்ற கடக்க ஆவது வெளியில் தெரியுமா? அவர்களில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டு மருத்துவ படைகள் மூடப்பட்டன? அல்லது ஞ்ஞானம் பேசிய எத்தனை பேரை நீங்கள் கைது செய்ய கூக்குரல் இட்டீர்கள்? கார்பரேட் எதிர்பு மூலாம் பூசிக்கொண்டு வேறு ஏதோ இலக்கிற்கு வேலை செய்கிறீர்கள் என்பதே இதில் தெரிகிறது

  4. Naanum healer baskar videos lam paathu iruken enaku therinju avar nalla vishayangala than pesitu irukaru
    Eye problms ku glass podatheenga simple eye practice pannale pothum and 3 months ku once bathic sapdunga vayira clean pannunga and etc information

  5. ஜெபித்தால் இயேசு வந்து காப்பாற்றுவார்; ஒரு குறித்த நேரத்தில் மரணித்தால் மோட்சம் கிடைக்கும் என்பன போன்ற மூடத்தனங்களும்,
    பசிக்கும்போதுதான் சாப்பிட வேண்டும், இரவுத்தூக்கம் மிக அவசியம், உடல் பயிற்சியும், தேவையான போதும் ஓய்வும் அவசியம் – இதை கடைபிடித்தால் உடல் தன்னைத்தானே சரி செய்யும், மருந்துகள் எடுக்க அவசியம் இல்லை என்று கூறும் இயற்கை வாழ்வியலும் ஒன்றா?
    இது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைதானே?
    இப்படியான வாழ்வியலை கடைபிடித்தால், கருவுற்ற பிறகு, மருத்துவ பரிசோதனைகளோ, இரசாயன மாத்திரைகளோ தேவைப்படாமல், இனிய சுகப்பிரசவம் வீட்டிலேயே நிகழும் என்றுதான் பாஸ்கர் கூறுகிறாரே தவிர, லைப் ஸ்டைலை மாற்றாமல் இருப்பவர்களுக்கு அல்ல!

    அவரது அனைத்துக் கருத்துகளிலும் நம்மால் முழுமையாக உடன்பட முடியாதெனினும், அவரை பிற்போக்கு வாதியாகவோ, அவரது கருத்தை ஆதரிப்பவர்களை மூடர்கள் என்றோ முத்திரை குத்தி, எதிர் நிலை சக்தியாக நிறுத்துவதன் நோக்கமென்ன?

    நீங்கள் கார்ப்பரேட் முதலாளிகள் என்கிறீர்கள், அவர் இலுமினாட்டிகள் என்கிறார். பெயர்தான் வேறு, வேறு… சொல்லும் விசயம் ஒன்றுதானே!

    தற்சார்பு வாழ்க்கை குறித்தும் நிறைய பேசுகிறார், தமிழகச் சூழலில் ரீபைண்டு ஆயிலின் தயாரிப்பு முறை மற்றும் அதன் கேடுகள், பற்பசை, அயோடின் உப்பு,மைதாவின் ஆபத்து, ஆங்கில மருத்துவத்தின் அராஜகம் போன்ற பல்வேறு விழிப்புணர்வை விதைத்ததில் அவரது பங்கை மறுக்க முடியாது.

    அவரது 5 நாள் வகுப்புக்குத்தான் 5000 வாங்குகிறார் (அங்கேயே உணவு, தங்கும் வசதி மற்றும் இயற்கை வாழ்வியல் பயிற்சி).

    நிறைய ஒருநாள் பயிற்சிகளை இலவசமாக நடத்துகிறார். நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பயிற்சியும் இலவசம்தான்.
    ஆனால் பிரசவ பயிற்சிக்காக 5000 வாங்குகிறார் என போலீசு புளுகுவதை அப்படியே வாந்தி எடுத்துள்ளீர்கள்.அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி பாஸ்கர் மீது?

    நவீன மருத்துவம் எனும் பெயரில் ஆதிக்கம் செலுத்தும் அலோபதிக்கு ஆதரவாக, மற்றெல்லா மரபுவழி மருத்துவ முறைகளை பிற்போக்கானது என நக்கலடிக்கும் போக்குதான் உங்களது கட்டுரையில் உள்ளது.
    நவீன மருத்துவம் அதிக நோயாளிகளை உற்பத்தி செய்கிறது. நவீன விவசாயம் உரம், பூச்சிமருந்துகளை உபயோகித்து இந்த மண்ணை மலடாக்கி உள்ளது. இதுதான் அறிவியல் பூர்வமானது, நம்மாழ்வார் முன்வைத்த இயற்கை வேளாண்மை பிற்போக்கானது என்றால், நவீனத்தின் பெயரால் நிகழும் அனைத்து அராஜகங்களையும் நியாயப் படுத்த முடியுமா?

    மரபு வழியோ, நவீனமோ அவற்றில் உள்ள நல்லவற்றை ஏற்பதும், தீயதை மறுப்பதும்தானே அறிவுடைமை!

  6. உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் இயற்கையாக தான் பிரசவம் நடக்கிறது (மனிதர்களை தவிர). இந்த கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை.

    ஏன் இவ்வளவு ‘சிசேரியன்’ என்று யாரவது கட்டுரை எழுதியது உண்டா ? (அல்லது) ‘பிரசவத்திற்கு மருத்துவம் இலவசம்’ என்று யாரவது சொன்னது உண்டா ?

  7. வினவு. Healer பாஸ்கர் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு விமர்சிக்கவும். முட்டாள்தனமான கட்டுரை.

  8. ஹீலர் பாஸ்கருடன் பிற பிற்போக்குகளை ஒப்பிடுவது. உமது அறிவின்மையையே காட்டுகிறது. சற்றே நிதானமாக அவர் குறித்து தெரிந்துகொண்டு விமர்சிக்கலாம்.

  9. இயற்கை வழி மருத்துவம் உடலின் மொழி போன்ற புத்தக கருத்தாக்கங்களை சுமந்து வரும் மருத்துவ ரீதியான கருத்துகளை கொண்டவர்கள் நம் உழைப்பாளி வர்க்க நலன்கள் மீது அக்கரை கொண்டவர்களே இது மாவோ லெனின் அரசியல் தத்துவ நேர்மை மீது சத்தியம் நாம் அமைப்பாக உருவெடுத்து விட்டதனால் அகங்காரமாக நடந்து கொள்ள கூடாது உண்மையை சொல்வதானால் நாம் தொழிலாழி வர்க்கத்தை நேசிப்பதற்கு ஈடாக அவர்களும் நேசிக்கிறார்கள் ஆனால் அவர்களை வர்க்க விரோதியாக நீங்கள் சித்தரிப்பது தோழர் மாவோக்கு எதிரானது

  10. இயற்கை மருத்துவம் விசயத்தில் அமைப்பு அழவுக்கு அதிகமான நிறைய 2ண்மை கொண்ட விவரங்கள் கொண்ட எழிய மனிதர்களை ஏக போக பெரு முதலாளிகளை போன்றே வெறுத்து ஒதுக்குகிறது இது ஜனநாயக பண்பாட்டுக்கு விரேராகம்

  11. மறுபரிசீலனை செய்ய வேண்டிய பதிவு,
    முறையாகவும் முழுமையாகவும் பரிசீலுத்து பதிவிடவும், இது வினவின் கட்டுறைக்கான தரம் இதில் இல்லை.

  12. எல்லா பரிசோதனையும் செய்த பின்பு கூட மருத்துவமனையில் பலர் இரக்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள், மருத்துவ சேவை தற்போது பல மருத்துவமனையில் வியாபாரம் ஆகிவிட்டதே அதற்க்கு என்ன சொல்கிறீர்கள், இன்று பெரும்பாலும் சுயபிரசவம் இல்லையே ஏன் ஒவ்வொரு ஏழையும் பிரசவத்திற்காக தாலியை அடகுவைத்து அந்த காசை வாங்கி பலரும் மருத்துவம் பார்கிறீர்களே ஏன் மருத்துவம் நியாயமான முறையில் நடந்தால் நானும் உங்கள் கருத்தை வரவேற்பேன் என் கேள்விகளுக்கு நீங்கள் வெளிப்படையாக பதிவு செய்யுங்கள், நான் சமூக விரோதி அல்ல சாமானிய இந்திய குடிமகன்

  13. வினவு. Healer பாஸ்கர் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு விமர்சிக்கவும். முட்டாள்தனமான கட்டுரை

  14. உண்மையை ஆராயாமல் வெளியிடும் இது போல பொய் கட்டுரையை நம்பவேண்டாம் .

  15. எனக்கு தற்போது நாற்பத்தி இரண்டு வயதாகிறது.
    1980 – 1986 கால கட்டத்தில் எங்கள் குடும்பம் என் தந்தையின் பணி நிமித்தமாக மணப்பாறை நகரத்தில் குடியிருந்தது.
    அப்பொழுது நான் 5-ம் வகுப்பு படிக்கும் போது மஞ்சள்காமாலை நோயால் பாதிக்க பட்டேன்.
    என் தந்தை என்னை ஆங்கில மருத்துவர் திரு லட்சுமி நாராயணன் அவர்களிடம் அழைத்து சென்றார்.
    அவர் மருந்து சீட்டை எழுதி தந்தபின் சாப்பாட்டில் (எண்ணெய் சேர்க்காமல்) இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளை சொன்னார்.

    பின்பு என் தந்தை , மருத்துவரிடம்
    டாக்டர் இந்த கீழாநெல்லி இலையை மஞ்சள்காமாலைக்கு
    தரலாமின்னு சொல்ராங்களே ?
    உங்க கருத்து என்ன டாக்டர் என்று கேட்டபோது ,
    தாராளமா கொடுங்க இந்த மாத்திரையே அந்த கீழா நல்லியில் இருந்து தயாரிச்சதுதான் என்றார்.
    அய்யா! அவர் MBBS படிச்ச ஆங்கில மருத்துவர் தான்.
    மருத்துவத்தை சேவையாய் செய்த மாமனிதர் .
    அதனால்தான் உண்மையை வெளிப்படையாக கூறினார்.
    மணப்பாறையை ஒட்டியுள்ள பல குக்கிராமங்களுக்கு மணப்பாறைதான் சிட்டி.
    அந்த ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவே வைத்தியம் பார்த்த மாமனிதர் அவர்.
    என் தந்தை போன்ற (அரசு பணியாளர்) நடுத்தர வர்க்கத்திடம் மட்டும் மிக குறைவாக 5 ரூபாய் வாங்கிக்கொள்வார்.
    ஏழைகள் என தெரிந்தால் இலவச மருத்துவமே.

    மக்கள் பணியே மகேசன் பணி என வாழ்ந்த அவர் தற்போது “மருத்துவமாமணி” என்ற பட்டதோடு மார்பளவு சிலையாக மாரியம்மன் கோயில் அருகில் இருக்கிறார்.
    ஆங்கில மருத்துவர் திரு லட்சுமி நாராயணன் கீழாநெல்லி தருவதை அறிவியலுக்கு புறம்பானது என்று தீர்ப்பிடவில்லை.
    ஹீலர் பாஸ்கர் அவர்கள் சொல்வது அனைத்தும் அறிவியல் அடிப்படையே.
    உடல் கூற்றியல் நூல்களின் சாரத்தையே தன் சொற்பொழிவாக மக்களுக்கு தந்துள்ளார்.

    மீண்டும் மீண்டும் ஹீலர் பாஸ்கரை மூடர் என்றும், பித்தலாட்டக்காரர் என்றும் கூறுவது கண்டிப்பாக உள்நோக்கம் கொண்டதே.
    ஹீலர் பாஸ்கர் சொல்லும் healing therapy ஆக இருந்தாலும் , மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பிரசவம் ஆனாலும் தகுந்த பயிற்சி பெறாமல் செய்வது ஆபத்தில்தான் முடியும்.
    திருப்பூர் சகோதரி கிருத்திகா விஷயத்தில் அவரின் கணவர் முழுமையாக
    பயிற்சி பெறாமல் அரைகுறை அறிவோடு பிரசவம் பார்த்ததே சோக முடிவிற்கு காரணம்.

    அந்த உடன்பிறவா தங்கையை நினைத்து என் மனம் கண்ணீர் வடிக்கிறது
    இனி இதுபோல் ஒரு சோகம் நடக்க கூடாது என்பதே என் நிலைப்பாடு.
    இந்த நேரத்தில் இன்னொரு கேள்வியையும் உங்கள் முன் வைக்கிறேன்.
    அண்மையில் என் தந்தைக்கு பல் சொத்தை உபாதை காரணமாக பல் மருத்துவரிடம் அழைத்து சென்றேன்.
    பல் பிடுங்கிய பின் அந்த மருத்துவர் சொன்னார் :

    அப்பாடா ! இப்பதான் relax ஆ இருக்கு சரவணன்!
    இந்த குறிப்பிட்ட கடவாய் பல்லோட வேர்
    இதய நாளங்களோட சம்பந்த பட்டது . நல்ல வேலை நல்லபடியா முடிச்சது
    பல நேரங்களில் இந்த பல்ல பிடுங்கும் போது மாரடைப்பு வந்துரும்
    NOW UNCLE IS SAFE

    இதுல இருந்து என்ன தெரியுது ?

    ஆங்கில மருத்துவம் என்றாலும் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் சிகிட்சையின் போது அதன் தொடர் புடைய வேறு உறுப்பு பாதிப்பு அடையலாம்.
    அந்த RISK உடன்தான் வைத்தியம் நடக்கிறது. அறுவை சிகிச்சையின் போது
    உறவினரிடம் கையெழுத்து வாங்குவது இதனால்தான்.

  16. இயற்கை பிரசவம் என்றால் என்ன???

    Dr.ஃபரூக் அப்துல்லா
    சிவகங்கை

    ஒரு ஆணும் பெண்ணும் கூடி
    அதனால் பெண்ணிற்கு கரு உருவாகி அது ஈறைந்து திங்கள் தாயின் வயிற்றினுள் வளர்ந்து கர்ப்ப கால இறுதியில் பிறப்பதே இயற்கையான பிரசவம்.

    இந்த இயற்கையான பிரசவம்
    இரண்டு வகைப்படும்

    ஒன்று
    பெண்ணின் ஜனனக்குழாய் எனும் வெஜைனா வழி குழந்தை பிறப்பது

    மற்றொன்று
    சிசேரியன் எனும் அறுவை சிகிச்சை செய்து அடிவயிற்றுப்பகுதியில் இருந்து மேலாக குழந்தையை எடுப்பது.

    முதலாவது பிரசவத்தை சுகப்பிரசவம் என்றும்
    இரண்டாவது வகை பிரசவத்தை ஆபரேசன் செய்து எடுத்தது என்றும் கூறுவார்கள்..

    இந்த சிசேரியன் எனும் சிகிச்சை நம்மிடையே பரவலாகி முப்பது வருடங்கள் தான் இருக்கும்

    அதற்கு முன்பு முழுக்க முழுக்க இயற்கை வழி டைப் ஒன்று பிரசவம் தான்..அதாவது சுகப்பிரசவம்

    அவ்வாறு சுகப்பிரசவம் பார்ப்பதையே தொழிலாக மருத்துவச்சிகள் செய்து வந்தார்கள். பரம்பரை பரம்பரையாக அவர்களின் வேலை இதுதான்.

    இப்படி சிசேரியன் கண்டறியப்படாத காலத்திலும் பெண்களுக்கு சிசேரியன் தேவைப்படக்கூடிய பல பிரச்சனைகள் இருந்தன

    பொதுவாக நமது நாட்டு பெண்கள் உயரம் குறைவானவர்கள்..

    குறுகலான இடுப்பெலும்பு கொண்டவர்கள்..

    குழந்தை தலை கீழே இருக்காமல் குதம் கீழே இருக்கும் தன்மை (breech)

    கால்கள் கீழே இருக்கும் தன்மை (footling)

    இரண்டு குழந்தைகள்(twins)

    குழந்தையின் தலையும் தாயின் இடுப்பெலும்பும் ஒத்துப்போகாத தன்மை (cephalo pelvic disproportion)

    நஞ்சுக்கொடி கீழிறங்கி இருக்கும் தன்மை (placenta previa)

    நஞ்சுக்கொடி கழன்று கீழிறங்கி தொங்குதல்(abruptio placentae)

    இப்படி கர்ப்ப காலத்தில் குழந்தை மற்றும் நஞ்சுக்கொடி எப்படி இருக்கிறது என்பதெல்லாம் மருத்துவச்சிக்கு தெரியாது..
    ஏன் மருத்துவருக்கு கூட அப்போது தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.

    காரணம் – ஸ்கேன் வசதி அப்போது கிடையாது

    அது போக நாம் எந்த பிரச்சனையை கண்டுபிடித்தாலும் அதற்கு சிகிச்சை ஒன்று தான் இருந்தது

    சுகப்பிரசவம் மட்டுமே ஒரு வழி..

    ஆகவே
    குதம் கீழே இறங்கிய நிலையில் உள்ள குழந்தையாக இருந்தாலும் சரி..
    இரட்டையர்களாக இருந்தாலும் சரி..
    தலையும் இடுப்பெலும்பும் ஒத்துப்போகாத தன்மை இருந்தாலும் சரி..

    தாய்க்கு வலி வந்தவுடன் மருத்துவச்சி பிரசவம் பார்க்க ஆரம்பிப்பார். குழந்தை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளி வராமல் போனால் … பெரிய உசுர காப்பாத்தியாகணும் என்று கையை உள்ளே விட்டு குழந்தையின் கையையோ காலையோ பிடித்து இழுத்து வெளியே போடுவார்.. இதில் குழந்தை சாகும். சில நேரங்களில் பிரசவம் நடக்க தாமதமானால் குழந்தை தாமதமானால் குழந்தை உள்ளேயே காட்டுப்பீ (meconium) போய் அதை தின்று செத்துவிடும்..

    தாய்க்கு அதிர்ஷ்டம் இருந்தால் ரத்த போக்கு பெரிதாக இல்லாமல் பிழைக்கலாம்.. இல்லாவிட்டால் அந்த இருவருக்கும் ஈமச்சடங்குகள் முடித்து விட்டு அடுத்த கல்யாணத்துக்கு மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.

    சில கேஸ்களில் குழந்தை பிழைத்து , தாய் இறக்கும் சூழ்நிலையில்.. காலம்பூராவும் சித்தி கொடுமையில் குழந்தை
    வாழும்..

    சரி .. நான் மேற்சொன்ன எந்த பிரச்சனைகளும் இல்லாத ஒரு பெண் பிரசவம் ஆகிறாள். குழந்தையும் சரியாக பிறக்கிறது.

    ஆனால் நஞ்சுக்கொடி வெளியேறாமல் போகும்.
    கன நேரத்தில் ஒரு லிட்டருக்கும் மேல் உதிரப்போக்கு ஆகும்.

    கண்ணுக்கு முன்னே தாய் மரணமடைவதை அந்த மருத்துவச்சிகள் வேடிக்கை தான் பார்க்க முடியும்.

    இது post partum hemorrhage .
    இதன் தாக்கத்தை நேரில் பார்த்தவர்களால் தான் கூற முடியும். பதினைந்து நிமிடங்கள் போதும். பிரசவ வீட்டை இழவு வீடாக மாற்ற.

    இப்படி பல பேரை காவு கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். அவர்களை குறை கூற முடியாது. காரணம் அதை எப்படி தடுப்பது என்று அவர்களுக்கு தெரியாது..

    சரி.. குழந்தையும் நன்றாக பிறந்து விட்டது.. தாயின் நஞ்சுக்கொடியும் பிரச்சனையின்றி வெளியே எடுக்கப்பட்டு விட்டது. ரத்த போக்கு இல்லை..

    இப்போது நமது மருத்துவச்சிகள் தங்கள் கையில் வைத்திருக்கும் பழைய பிளேடு, அருவாமணை இவற்றை கொண்டு நஞ்சுக்கொடியை நறுக்குவர்.. பின்பு அந்த நஞ்சுக்கொடியில் சாணியை பூசுவர்.

    ஆஹா நன்றாக பிறந்த குழந்தைக்கு ரண ஜன்னி எனும் neonatal tetanus வந்து சாகும்.

    தாய்க்கு பிறப்புறுப்பில் சீல் பிடித்து கிருமித்தொற்று பரவி sepsis வந்து மரணம் வரும்.

    இப்படி கர்ப்ப காலத்தில் நடக்கும் மாற்றங்கள், பிரசவத்தின் போது நடக்கும் பிரச்சனைகள் , பிரசவம் முடிந்ததும் வரும் கிருமித்தொற்று போன்ற எதற்கு விடை தெரியாமல் தான் நம் முன்னோர்கள் இருந்தார்கள்

    இதன் பயனாய்
    ஒவ்வொரு ஆயிரம் பிரசவத்திற்கும் 300 முதல் 400 குழந்தைகள் இறந்து வந்தன.

    அதாவது இரண்டு பிறப்பு என்றால் ஒரு இறப்பு..

    ஒரு லட்சம் பிறப்பிற்கு 500 க்கும் மேல் தாய்மார்கள் இறந்து வந்தனர்.

    நவீன மருத்துவத்தின் பரவலாக்கத்தால் விளைந்த நன்மைய பாருங்கள்

    ஸ்கேன் கண்டுபிடிக்கப்பட்டது. கர்ப்ப காலத்தின் போது வரும் பிரச்சனைகள்,நீர் சத்து குறைபாடு, குழந்தை குதம் கீழ இருத்தல், குழந்தை தலைகீழாக இல்லாமை, நஞ்சுக்கொடி கீழே இறங்கி இருத்தல் போன்ற பல விபரீதங்கள் முன்னறே காண முடிந்தது.

    சிசுவின் இதய துடிப்புகளை அளக்கும் டோகோகிராப் பயன்பாடு, டாப்லர் கருவி கண்டுபிடிப்பு போன்றவற்றால் சிசுவுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் கண்டறிய்பப்டுகிறது.

    சிசேரியன் கண்டுபிடிப்பால் இந்த பிரச்சனைகள் இருக்கும் தாய்மார்கள் சிசேரியன் எனும் உயிர் காக்கும் சிகிச்சை மூலம் பிரசவம் புரிந்து உயிருடன் வாழ்கின்றனர்.

    நிச்சயம்
    இது இல்லை என்றால் பிரசவத்தின் போது செத்திருக்க வேண்டிய பலரை காத்த பெருமை சிசேரியனுக்கு உண்டு.
    இறைவனுக்கே புகழனைத்தும்.

    மேலும் பிரசவத்தின் போது ஆகும் உதிரப்போக்கை தடுக்க உடனடியாக ஆக்சிடோசின் போன்ற மருந்துகள் போடப்படுகின்றன.

    உதிரப்போக்கை ஈடு செய்ய உதிரம் ஏற்றப்படுகிறது.

    சுத்தமான உபகரணங்கள்.. ஒரு முறை உபயோகித்த பொருளை மீண்டும் உபயோகிக்காமல் இருப்பதால் தொற்று கிருமிகள் வருவதில்லை.

    கர்ப்ப காலத்தில் தாய்க்கு இரண்டு முறை ரணஜன்னி தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தைக்கு டெடானஸ் வருவதில்லை. இந்தியாவில் இந்த குழந்தைகளுக்கு வரும் டெடானஸ் நோய் ஒழிக்கப்பட்டுவிட்டது.

    இப்படி நவீன மருத்துவ அறிவியலின் பயனாலும் சிசேரியன், ஸ்கேன், ரத்த ஏற்றுதல், போன்ற கண்டுபிடிப்புகளாலும் நமது சமுதாயம் பயனடைந்து வருகிறது..

    இந்த சூழ்நிலையில் தான் மரபு வழி பிரசவம் என்று முற்றிலும் தவறான கருத்துகளை மக்களிடம் பரப்பி அதன் மூலம் மீண்டும் நம்மை ஒரு நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறார்கள்.

    மக்கள் இவர்களிடம் தெளிவாக இருந்து விலகிக்கொள்ளுங்கள்.

    Dr.ஃபரூக் ___ அப்துல்லா,MBBS,MD
    சிவ கங்கை

      • உண்மையை சொன்ன ஏனுங்க கோவபடுரிங்க, இப்ப எதுக்கு அவர சாத்தான்கிரிங்க முசுலிம் என்பதாலா? ஏன் முசுலிம் MBBS MD படிச்சா செல்லாதோ?
        மேல அவர் கூறிய அனைத்தும் உண்மை. இயற்கைல மிருகங்கள் சுகபிரசவம் ஆகுதுன்னு சொல்ற முட்டாபசங்க எத்தின மிருகங்கள் இப்பிடியான பிரசினையாள சேத்தி போச்சுன்னு காட்டுல உக்காந்து கணக்கெடுதாங்களா? அதுபோக காட்டு விலங்குகளுக்கு பரிணாமம் கொடுத்த பரிசு மனிதனை விட பலமடங்கு கிருமி எதிர்ப்பு சக்தியும், காயங்கள் ஆறும் குணமும், அதனால் தாய் விலங்கே தனக்கு பிரசவம் பார்த்து கொள்ளும். மனிதர்ற்கு பரிணாமம் கொடுத்த பரிசுதான் அறிவுவளர்ச்சி , அதை பயன்டுத்தி உயிர்காக்க வேண்டியதுதான். ஒருவேளை நாம் இன்னமும் மரங்களிலேயே தாவி திரிந்தால் நமது பெண்களுக்கும் ‘சுக’ பிரசவம் பார்க்கும் அளவுக்கு தெம்பு, நோயெதிர்ப்பு சக்தி, காயம் விரைவில் ஆறும் தன்மைகள் இருக்கும். இந்த எளிய செயன்முறையை கூட புரியாமல் பிதற்றும் பதர்களை எண்ணினால்….

  17. ungal veetila irukaravangaluku neenga romba pagutharivaliyaga scientifically proven treatment thanthu avargalai 50 vaiyathukumela nadai pinamaga vala vaiyungal. naangal mooda nambikaiyana iyarkai valiyil healer baskar pondrorai pinpatri valgirom.
    Iyarakaiyai valvathu ippola mooda nambikai aagivitathu. Enna kodumai sir ithu

  18. கட்டுரையின் துவக்கத்தில் “இயற்கை வாழ்வியல்’ எனும் கோமாளித்தனத்தால் ” என்று துவங்கி இருப்பதே “இயற்கை வாழ்வியலில்.” நீங்கள் ஒரு “0”, அதாவது “வடி கட்டய முட்டாள்” என்று தெ ளிவாகதெரிகிறத.

  19. குழந்தை பெற்றுக் கொள்வது வீட்டிலா? மருத்துவமனையிலா?
    இதற்கு பெண்கள் கருத்து கூறுவது பொருத்தமாக இருக்கும்.

    அலோபதி மருத்துவம் முழுவதும் முதலாளித்துவ சுரண்டல் பேர்வழிகள் கையில் அதில் உள்ள சில நன்மைகள் நம்மை வந்து அடைவதில் சிக்கல் நீடிக்கிறது.

    தனிச்சொத்துடமை நீடிக்கும் வரையில் எளிய மக்கள் இயற்கை மருத்துவம் கூட கையாள முடியுமா?

  20. எதற்கெடுத்தாலும் அறிவியல் என்ற உங்களைப் போன்ற அறிவிலிகள் இருக்கும் வரை பன்னாட்டு மருந்து நிறுவனங்களுக்கு கொண்டாட்டம்தான். அறிவியல் பூர்வமானது என்று வழங்கப்படும் அனைத்து ஆங்கில மருந்துகளும் நோயாளிகளை குணப்படுத்துகின்றனவா? பக்க விளைவுகள் இல்லாத ஒரு ஆங்கில மாத்திரையை காட்டுங்கள்? ஜனங்களை முட்டாளாக்க உங்களைப் போன்ற முற்போக்கு என்ற பெயரில் உள்ள பிற்போக்குகளே போதும். தமிழ்நாடு குட்டுச்சுவர்தான்.

    • ஜெயமோகன் போன்ற குறுகிய சிந்தை அல்பங்களை கழுவி ஊற்றி விட்டு இவர்களின் சொல்லிதரபட்ட பகுத்தறிவு ஈயம் பூசிய அறிவியல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்கள் நம் தோழர்கள், இவர்கள் உண்மை முகத்தை அண்மையில் தான் தெரிந்து கொண்டேன். பிட்போக்குகள் அல்ல இவர்களும் நயவஞ்சகர்களே.

Leave a Reply to Thushanthan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க