வாரார் வாரார் நம்ம வாஜ்பாயி | ம.க.இ.க பாடல்

வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறந்ததை வைத்து பா.ஜ.க அரசு மலிவான விளம்பரத்தை செய்து வருகிறது. சாலைகள், நகரங்கள், கட்டிடங்கள், பல்கலைகள் அனைத்தும் வாஜ்பாய் பெயர் மயமாகிறது. தமிழகத்தில் தேர்தல் அரசியலில் இருக்கும் இடது சாரிகள், வி.சி.க உள்ளிட்டோர் கூட வாஜ்பாய் புகழஞ்சலியில் கலந்து கொண்டனர். இவர்களே இப்படி எனும் போது மற்றவர்களை சொல்லத் தேவையில்லை.

உண்மையில் இந்த புகழுரைகளுக்கு அருகதை உள்ளவரா வாஜ்பாயி? பார்ப்பனிய இந்துமதவெறி அமைப்புக்களின் அத்தனை குற்றங்களிலும், மக்கள் விரோத சித்தாங்களிலும் பங்கு பெற்ற ஒருவரை ஏதோ மிதவாதி, நல்லவர் என்று மதி மயங்கி போற்றுவது சரியா?

வாஜ்பாயிஆர்.எஸ்.எஸ். ஊழியராக வெள்ளைக்காரனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்தது முதல் 1999-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராகி வல்லரசு நாடுகளுக்கு நாட்டையே தாரைவார்க்கும் தொழிலை செவ்வனே செய்து வந்தவர்தான் வாஜ்பாய் எனும் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்.

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் என ஆர்.எஸ்.எஸ்.கிரிமினல்களால் நடத்தப்பட்ட அத்தனை வெறியாட்டங்களுக்கும், வன்முறைகளுக்கும் உடனிருந்து முட்டுக்கொடுத்த யோக்கிய சிகாமணிதான் நமது வாஜ்பாய்.

வாஜ்பாயி பிரதமராக பதவியேற்ற காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் வெளியிட்ட பாடல் இது! அத்வானியும், அசோக் சிங்காலும் கொம்பேறி மூக்கன் வகையறா என்றால், நமது ’நல்லவர்’ வாஜ்பாய் ஒரு அக்மார்க் ‘நல்ல பாம்பு’ என்பதை அம்பலப்படுத்துகிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல்

பாருங்கள் பகிருங்கள் !

பாடல் வரிகள்:

வாஜ்பாயி… வாஜ்பாயி…
வாராது வந்த நம்ம வா…ஜ்பாயி

வாரார் வாரார் நம்ம வாஜ்…பாயி – அப்டி
வாரார் வாரார் நம்ம வாஜ்…பாயி

நாடே போற்றும் பிரதமர் இவரு
இவரப்போல தலைவரு எவரு…?

ஆயிரம் யானை மோதினாலும்…
அசைக்க முடியா ஆட்சி…
அடிச்சி சொன்னார் அடல் பிகாரி
அதுதான் சூப்பர் பேச்சு…
பிரதமர் பதவி சீட்டுக்குள்ளே போயசு மூட்டப்பூச்சி – வெளிய
தெரிஞ்சிடாம சொறிஞ்ச சொறியில
தேசிய வேட்டி கிழிஞ்சி போச்சு…

அலையலையாக எம்.பி. வந்தான்
ஆளுங்கட்சிக்கு மாறி…
சொள சொளயாக அள்ளித் தந்தார்
யாரு…? அந்த பாரி…
அவர், புள்ளக்குட்டி  ஏதுமில்லா கட்ட பிரம்மச்சாரி – ரொம்ப
உள்ள போயி நோண்டாதீங்க…
அயா…ம் வெரி சாரி…

எதிரிகள் கூட்டம் நடுநடுங்கும்
இடி முழக்கப் பேச்சு…
எதுகை மோனை சந்தம் துள்ளும்
பிரதமர் கவிதை வீச்சு…
எப்பேர்ப்பட்ட கிளிண்டனையே…
காச்சிட்டாராம் காச்சி… – கூப்ட்டு
எக்…குனார்  பார் ஜெயலலிதா…
எதுகையும் மோனையும் கொழம்பிப் போச்சு…

அய்யோ என்றார் அநீதி என்றார்…
அழுதார் அடல் பிகாரி…
அயோத்திக்காக  வடித்த கண்ணீர்
தேரும் ஒரு லாரி

பாம்புகளெல்லாம் அடையுமெடந்தான்
ஆர்.எஸ்.எஸ்சு கேம்ப்பு…
கூட்டணி கட்சிகாரங்க எல்லாம்
சும்மா… வெத்தல காம்பு…
அத்வானிக்கும் சிங்.. காலுக்கும்
கொம்பேரி மூக்கன் வீம்பு… ஆனா
அப்படி இல்ல அடல் பிகாரி…
பாவம் நல்ல பாம்பு….

******

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க