நூல் அறிமுகம் : நிதி நெருக்கடி ஒரு புரிதல்

உலக நெருக்கடி யாரை அதிகமாகத் தாக்குகிறதோ, அவர்களுக்கு இந்நெருக்கடியைத் தோற்றுவித்ததில் சிறிதும் பங்கில்லை. உலகம் முழுவதுமுள்ள தொழிலாளிவர்க்கம், அன்றும் இன்றும் கடுமையான விலை கொடுத்து வருகிறது.

மிழில் பொருளாதாரச் சிந்தனைகள் குறித்த நூல்கள் குறைவாகவே வருகிறது என்கிற ஆதங்கத்தைத் தவிர்க்கிற இன்னுமொரு அரிய முயற்சி இது.

” Understanding the Financial Crisis” என அனைத்திந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு. அமானுல்லாகான் ஆங்கிலத்தில் எழுதிய நூல் தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் திரு.இயேசுதாஸ் அவர்களின் சிறப்பான தமிழாக்கத்தில் வெளிவந்துள்ளது.

2008 இல் உலகத்தையே உலுக்கிய நிதி நெருக்கடியை மையப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் முதலாளித்துவப் பொருளியல் தத்துவங்களின் பொய்மையைத் தகர்த்தெறிகிற அளவிற்கு இந்நூலின் நோக்கமும், ஆக்கமும் விரிந்துள்ளது… (க.சுவாமிநாதன் எழுதிய பதிப்புரையிலிருந்து பக்.5)

நிதி நெருக்கடி என்பது ஒரு மனிதனுக்கு நோய் வருவது போன்றது… இரண்டிலும் தீர்வு என்பது நோய்க்கானக் காரணங்களைக் கண்டுபிடித்து அதை குணப்படுத்துவதே ஆகும் என்கிறது உலக வங்கியின் 2009ம் ஆண்டு அறிக்கை. அரசுகளால் கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுவரை நோய்க்கான காரணங்களைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டது. தொடர்ந்து கொண்டிருக்கும் நிதித்துறையின் பலகீனமும், அண்மையில் அரசு கடன் சந்தைகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான போக்குகளும், உலகப் பொருளாதார மீட்சியை தாமதப்படுத்துவதாக 10.09.2010 அன்று வெளியான சர்வதேச நிதி நிறுவன அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. தற்போதைய கரன்சி யுத்தம் நிலைமையை மேலும் மோசமாக்கி வருகிறது.

உலக நெருக்கடி யாரை அதிகமாகத் தாக்குகிறதோ, அவர்களுக்கு இந்நெருக்கடியைத் தோற்றுவித்ததில் சிறிதும் பங்கில்லை. உலகம் முழுவதுமுள்ள தொழிலாளிவர்க்கம், அன்றும் இன்றும் கடுமையான விலை கொடுத்து வருகிறது… கிட்டத்தட்ட 50 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிட்டன; உலகத் தொழிலாளர் நிறுவன மதிப்பீட்டின்படி நிலைமை நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்ப 3-4 ஆண்டுகளாகும். வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர் நிலைதான் மிக மோசமானதாகிவிட்டது. வேலையில்லா நிலைமை பற்றி உலகத் தொழிலாளர் அமைப்பு அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது. உழைப்பு சக்திக்கான சந்தையின் பின்னடைவு நீள… நீள.. வேலை தேடுவோருக்கும் துன்பம் நீண்டு கொண்டே இருக்கிறது. கிடைத்துள்ள தகவல்களின்படி 35 நாடுகளில் உள்ள உழைப்பாளர்களில் 40% பேர் ஓராண்டாக வேலையின்றி உள்ளனர். அதனால் அவர்கள் நம்பிக்கை இழந்து மனநலம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். இளம் தலைமுறை வேலைவாய்ப்பின்மையால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அப்படியே வேலைவாய்ப்பிலும் அவர்களின் தகுதிக்குத் தகாத வேவையே கிடைக்கிறது. வேலை இழப்பால் நொந்துபோன தொழிலாளர்கள் உழைப்புச் சந்தையை விட்டே ஒதுங்கிவிட்டனர். (நூலிலிருந்து பக்..87,88)

படிக்க:
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு

இன்று உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு வணிகம் ஒழுங்குமுறைபடுத்தப்படாதது மட்டும் காரணம் அல்ல என்பது படிப்பினை ஆகும். முதலாளித்துவம் அதன் அமைப்பிலேயே பிரச்சனைகளும், குறைகளும் நிறைந்ததாகும். இன்று உற்பத்தி சக்திகள் பெருமளவு அதிகரித்து சமூக உற்பத்தி அதகிரித்ததும் அத்துடன் உற்பத்தி உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்டும் உள்ளது; ஆனால் சமூகத்தால் உற்பத்தி ஆன பொருட்கள் தனியாரின் உடமையாக உள்ளது. இதுவே முதலாளித்துவ அமைப்பில் உள்ள முரண்பாடு ஆகும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின் 1991ல் தொடங்கிய முதலாளித்துவத்தின் வெற்றிப் பயணம் நிதி வீழ்ச்சி (Financial Meltdown)யைத் தொடர்ந்து 2007ன் இறுதி காலாண்டிலிருந்து, எந்த ஒரு தீர்வும் கண்ணுக்குப் புலப்படாத நிலையில் பல்வேறு நிகழ்வுகளுடன் சென்று கொண்டிருக்கிறது. 1980 களில் சர்வதேச நிதி நிறுவனம் / உலக வங்கி அமைப்புகள் திணித்த திட்டங்களாலும், 1990 களில் சோசலிச அரசுகளின் வீழ்ச்சியாலும் நிலைகுலைந்து போன வளர்ந்து வரும் நாடுகள், இன்று உலகவர்த்தக நிறுவனம், சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் உலகவங்கிகளின் மூலம் தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன…

படிக்க:
உலக கந்து வட்டிக்காரனிடம் கருணை இருக்குமா ?
அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. உலகம் முழுதும் தொழிலாளி வர்க்கத்தின், விவசாயிகளின் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இவை எல்லாம் முற்போக்கு சக்திகளின் வெற்றி அலைகளை வெகுகாலம் தடுத்து நிறுத்த முடியாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி அராஜகமாக  செயல்படும், பிரச்சனைகள் நிறைந்த, லாபம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவ உலகத்தை எதிர்த்து புதிய உலகம் படைக்கும் நீண்ட போராட்டத்திற்கு தோழர் அமானுல்லாகானின் இந்த நூல் ஆயுதமாகப் பயன்படும். இந்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமய கொள்கைகளை மாற்றி அமைத்திடும் உடனடிப் போராட்டத்திற்கும் இந்நூல் உதவும்.  (நூலுக்கான முன்னுரையில் வெங்கடேஷ் ஆத்ரேயா, பக் 10,11)

நூல்: நிதி நெருக்கடி ஒரு புரிதல்
ஆசிரியர்அமானுல்லாகான்
(தமிழில்: இரா.இயேசுதாஸ்)

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 24332424, 24332924
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 96
விலை: ரூ.50.00

இணையத்தில் வாங்க:nhm.in

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க