மிழக கடலோர  மீனவர்கள் கடந்த அக் 3–ம் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு மேலாக கடலுக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1) கடலோர பகுதிகளில் வரும் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்!
2) இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டுக் கொடுக்க வேண்டும்!
3) மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற வகையில்  தினம் தினம் உயரும் டீசல், பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும்.
4) கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் !
ஆகியவையே போராடும் மீனவர்களின் கோரிக்கை.

மீனவர்களின் இந்த நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, கடந்த அக் 12 அன்று நாகை புத்தூர் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். நாகை மற்றும் காரைக்கால் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் பங்கேற்புடன் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பெண்கள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசு, பின்னர் விடுவித்தது.

தொலைதூர மீனவ கிராமங்களிலிருந்து வந்திருந்தவர்களை நகர எல்லையிலேயே தடுத்து நிறுத்தினர் நாகை போலீசார். அவர்கள் வந்திருந்த வாகனத்தின் பதிவெண்ணையும் அவ்வாகனத்தில் எத்தனை பேர் வந்திருந்தனர் என்பது வரையிலான விவரங்களை சேகரித்தனர் உளவுப் போலீசார்.

மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தபொழுதே, மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மீனவ கிராமங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மட்டுமல்ல அனைத்து நாசகார திட்டங்களை தமிழகம் மீது திணிப்பதும்  தமிழக மீனவர்களை மத்திய – மாநில அரசுகள் புறம் தள்ளுவதும் திட்டமிட்டே நடத்தப்படுகிறது.

தாயிடமிருந்து குழந்தையை பறிப்பதுபோல், கடலில் இருந்து மீனவர்களையும்,   விவசாயத்திலிருந்து விவசாயிகளையும் பறிப்பதுதான் சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள்! நாசகார திட்டங்கள் மூலம் மக்களை கொல்லும் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை! உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவோம்! என்ற அறைகூவல் விடுக்கும் பிரசுரங்கள் விரிவான அளவில் மீனவ கிராமங்களிலும், அக்-12 அன்று நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தின் பொழுதும் விநியோகம் செய்யப்பட்டன.

படிக்க:
ஒக்கி : கண்ணீர்க் கடல் | வினவு ஆவணப்படம்
மீனவர்கள் சடலங்களுக்கு ஏன் உயிர் வருகிறது? #tnfisherman

உணர்வுப் பூர்வமாக மீனவ இளைஞர்கள் உள்ளிட்டு பலரும் பங்கேற்ற இந்த மறியல் போராட்டமானது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த போராட்டம் மற்ற பிரிவு மக்கள் மத்தியில் இது மீனவர்களின் பிரச்சினைகளுக்கான  போராட்டம் என தனித்துப் பார்த்து ஒதுங்கிச் சென்ற நிலையையும் காண முடிந்தது.

மீனவர்கள் மட்டுமல்ல மத்திய மாநில அரசுகள் கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் ஒட்டுமொத்த மக்களையும் கொல்லும் நச்சுக்குண்டு ஆகும். நாசகார திட்டங்கள் மூலம் மக்களை கொல்லும் மத்திய, மாநில அரசுகளை நம்பி பயனில்லை! மீனவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை இருப்பதையே இன்றைய அரசியல் சூழல் நமக்கு உணர்த்துகிறது.

வேதாரண்யம் வட்டம்,
நாகை மாவட்டம்.
தொடர்புக்கு : 93627 04120.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க