உயர்கல்வி எதிர்கொள்ளும் நெருக்கடிகள் : நெல்லையில் அரங்கக் கூட்டம்

நாள் : 10.11.2018 நேரம் மாலை 5 மணி
இடம்: மூர்த்தி அரங்கு, சகுந்தலா இன்டர்நேசனல்,
வண்ணார்பேட்டை, நெல்லை.

தோழமைமிக்க பேராசிரியர்களே, மாணவ நண்பர்களே!

டந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில் புகுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக, பொதுநலனுக்கான கல்வி என்பது விற்பனை சரக்காக, மதிப்பீடுகளற்ற பண்டமாக மாற்றப்பட்டுள்ளது.

நல்ல மாணவர்களை – சமூதாயத்தை உருவாக்க வேண்டிய இந்த கல்வி – அமைப்பு கிரிமினல் மயமானதன் விளைவாக சமூகமும் கிரிமினல் மயமாகி வருகிறது. கல்வித்துறையில் தற்போது மத்திய – மாநில அரசுகள் செய்து வரும் மாற்றங்கள் அனைத்தும், இதுவரை எதையெல்லாம் நாம் சட்ட விரோதம், விதிமுறைகளை மீறிய செயல் என்று மனம் குமுறி வந்தோமோ அதையெல்லாம் சட்டபூர்வமாக்கும் நடவடிக்கைகளாக்கிவிட்டன.

சமீப காலமாக உயர்கல்வித்துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடும் அதற்கு முந்தையதைவிட அளவில் மிகப்பெரியதாகவும், தன்மையில் பேரளவு கிரிமினல் மயமானதாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களை தலைமைப் பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது, தமிழக பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆதரவாளர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பார்க்க :
♦ கல்வித்துறை முழுவதும் தனியார்மயமாக்கும் சதி | சிவக்குமார் | கருணானந்தம் | அரசு | காணொளி
♦ உயர்கல்வி எதிர்கொள்ளும் சவால்கள் | முனைவர் ரமேஷ் உரை

பாடப் புத்தகங்களில் மத வெறிக்கருத்துக்களை திணிப்பது, புராணக் கட்டுக்கதைகளை அறிவியல் உண்மையாக திரித்துக்கூறுவது. பிராந்திய மற்றும் தேசிய இனங்களின் பண்பாடு – கலாச்சாரம் – மொழி அடையாளங்களை அழித்து ஒற்றைக் கலாச்சாரமாக மாற்றுவதையே இலக்காக வைத்து செயல்படுவது என தனது நச்சு ஆக்டோபஸ் கரங்கள் மூலம் பெரும்பான்மை மக்களை நாசமாக்கி வருகிறது இவ்வாளும் அரசு, தமிழக அரசு அதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கிறது.

கடந்த நான்கு ஆண்டு கால மோடியின் ஆட்சியில் உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. அத்தோடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த உயர்கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான பல நடவடிக்கைகளும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இல்லாத அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்திற்கு இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்தை இவ்வரசு வழங்கியுள்ளது.

கல்வி முதலாளிகளின் கொள்ளைக்காக இந்திய மருத்துவக்குழு (MCI) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) இரண்டையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. திறமையானவர்களை தேர்ந்தெடுக்கிறோம் என்ற பெயரில் நீட் தேர்வை திணித்து காசு உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவக்கல்வி என்ற நிலமையை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

இது இந்நாட்டின் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மற்றும் பெண் சமூகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப்பறித்து பணம் உள்ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை நோக்கித் தள்ளும்.

இச்சூழலில் கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்தும் கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் மதவெறி சக்திகளிடமிருந்து கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கப்பெறச் செய்வதுமே இன்றைய காலக்கட்டத்தின் மிகமுக்கியமான கடமையாக உள்ளது.

இப்பணிக்காக பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், கல்வியாளர்களும், கல்வியின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும் ஒன்று சேர்வோம்.

இது குறித்து விவாதிப்பதற்கான ஒரு மேடைதான் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு. வாருங்கள் கலந்துரையாடுவோம் !

*****

நிகழ்ச்சி நிரல்:
தலைமை :

பேரா. ஜெ. அமலநாதன்,
நெல்லை ஒருங்கிணைப்பாளர் CCCE,
பொருளியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளை.

வாழ்த்துரை :

பேரா. தொ. பரமசிவன்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
ம.சு.பல்கலைக்கழகம், நெல்லை.

கருத்துரை :

தமிழகத்தில் பெருகிவரும் தனியார் கல்வி வணிகம் :
பேரா. வீ. அரசு
ஒருங்கிணைப்பாளர் CCCE,
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், சென்னை பல்கலைக்கழகம்.

ஊழல், பாலியல் முறைகேடு – சீரழிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்:
பேரா. சோமசுந்தரம்
துணை ஒருங்கிணைப்பாளர் CCCE,
கணிதவியல் துறை, ம.சு.பல்கலைக்கழகம், நெல்லை.

காவிமயமாக்கப்படும் உயர்கல்வி :
முனைவர். க. ரமேஷ்
துணை ஒருங்கிணைப்பாளர் CCCE, சென்னை.

நன்றியுரை :

பேரா. நவநீதன்
மனோ கல்லூரி, சேரன்மகாதேவி.

*****

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு
(Co-ordination Committee for Common Education)
திருநெல்வேலி. தொடர்புக்கு : 94892 35387.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க