டந்த மாதம் புல்வாமாவில் நடந்த தற்கொலை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 44 பேர் உயிரிழந்தார்கள். இதற்கு ‘பழிவாங்கும்’ விதமாக தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய விமானப்படை தாக்குதலில் 300 – 400 வரையிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் மூலம் செய்தி பரப்பியது இந்திய அரசு. வெளியுறவுத் துறை செயலர் அளித்த பேட்டியில், இந்திய தாக்குதலில் ‘மிகப் பெரும் எண்ணிக்கை’யிலான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறினார். இறந்தது எத்தனை பேர் என்கிற விவரம் நேற்றைய முப்படை தளபதிகளின் பேட்டியிலும் சொல்லப்படவில்லை.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் என்ன நடந்தது, நடக்கிறது என்பது குறித்து இந்திய ஊடகங்கள் பேச மறுக்கும் நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உண்மை விவரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதியில் ஜபா என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த 62 வயதான நூரான் ஷா, இந்திய விமானப் படை தாக்குதலில் காயமுற்ற ஒரே நபர் இவர்தான்.  செவ்வாய்கிழமை தனது மண் குடிசையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தனது இடது கண்ணுக்கு மேலே அடிபட்டதை காண்பிக்கிறார் நூரான்.

நூரான்.

“அவர்கள் சில தீவிரவாதிகளை தாக்க விரும்பினார்கள். நீங்கள் இங்கே எந்த தீவிரவாதியை பார்க்கிறீர்கள்?” என செய்தியாளரைப் பார்த்து கேட்கிற நூரான், “நாங்கள்தான் இங்கே இருக்கிறோம். அப்போ, நாங்கள்தான் தீவிரவாதியா?” என்கிறார்.

இந்தியாவின் துல்லிய தாக்குதல் 2.0, யாரும் இல்லா இடத்தில் நடத்தப்பட்டது என பாகிஸ்தான் அரசு சொன்னது. மக்களவை தேர்தலுக்காக மோடியும் அவரது பாஜக-வும் நாடகம் நடத்துகின்றனர் என பாகிஸ்தான் புரிந்து வைத்துள்ளது.

ஜாபா கிராமத்தை ஒட்டியிருக்கும் மலைச்சரிவில் நான்கு குண்டுகள் வீசப்பட்டு மரங்கள் பிளந்திருப்பதற்கான தடயங்கள் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்கிறார்கள் அந்த கிராம மக்கள். துல்லிய தாக்குதல் அதிகாலை 3 மணிக்கு நடத்தப்பட்டதால், சத்தம் கேட்டு எழுந்ததாக சிலர் சொல்கின்றனர்.

“இங்கே யாரும் இறக்கவில்லை. சில பைன் மரங்கள் இறந்துவிட்டன. அவற்றை வெட்டி விட்டார்கள். ஒரு காகமும்கூட இறந்துவிட்டது” என்கிறார் இந்தப் பகுதியில் சுற்றுலா வாகனத்தை இயக்கும் அப்துர் ரஹீது.

குண்டு விழுந்த இடத்தை காட்டும் ஜாபா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன்.

கங்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஜாபா கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த மரங்களும் ஓடைகளும் உள்ளன.  பாகிஸ்தானியர்களுக்கு  முக்கியமானதொரு சுற்றுலா இடம் இது.  400லிருந்து 500 மக்கள் இந்தப் பகுதியில் வசிக்கிறார்கள்.  ராய்ட்டர்ஸ் செய்தியாளர் 15-க்கும் அதிகமானவர்களிடம் பேசியதில் நூரான் ஷாவைத் தவிர, வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்கிறார்.

ஜாபா கிராமத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் பணியாற்றும் அதிகாரி முகமது சாதிக், இந்தியா சொல்வதைப் போல பெரிய அளவிலான பாதிப்புகள் என்று எதுவும் இல்லை என்கிறார்.

“இது வடிகட்டிய பொய். நாங்கள் ஒரே ஒரு காயம்பட்ட நபரைக்கூட பார்க்கவில்லை. ஒரே ஒருவருக்கு மட்டும் சிறிய காயம் ஏற்பட்டது. அவரும்கூட இங்கே வரவில்லை.” என்கிறார் அந்த அதிகாரி.

ஜெய்ஸ் இ முகமது அமைப்பினர் தீவிரமாக இந்தப் பகுதியில் எந்த முகாமையும் நடத்தவில்லை என்றும் அவர்கள் நடத்தும் பள்ளி மட்டுமே உள்ளது என்றும் அதுவும்கூட குண்டு விழுந்த இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளியிருக்கிறது என்கிறார்கள் பகுதி வாசிகள் சிலர்.

படிக்க:
#SayNoToWar : போரை விரும்புகிறவர்கள் உங்கள் குழந்தைகளை அனுப்பி வையுங்கள் !
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே பயிற்சி முகாம் இருந்ததாகவும் அது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு வெகு காலம் ஆகிவிட்டது என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விசயம் அனைவரும் அறிந்ததே என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மோடி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள போட்ட நாடகம்தான் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0’ என்பது ஆதாரபூர்வமாக வெளிவந்துவிட்டது.  மோடி வகையறாவின் புளுகு ஒரு வாரத்திற்குக்கூட தாங்கவில்லை. இந்தப் புளுகைக் காட்டி, ‘இந்தியன்டா’ என முழக்கமிடும் மாலன் – அர்னாப்புகளை என்ன சொல்லி அழைக்கலாம்?


கலைமதி
நன்றி: ஹஃபிங்டன் போஸ்ட்

30 மறுமொழிகள்

  1. உங்கள் பாக்கிஸ்தான் எஜமானர்கள் எழுத சொன்னதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள் போல… பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் கூட உங்களை போல் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருந்து இருக்க மாட்டார்கள்.

    • சரி, நீங்க போய் பார்த்த உண்மையதான் சொல்லுங்களேன்.

    • வணிகம் உலகமயமாகி விட்டது,கல்வியும் உலகமயமாகி விட்டது.உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறது.அதில் பாகிஸ்தான் மட்டுமல்ல,உலகமே தெரிகிறது.ஏதோ நம்ம தகுதிக்கு பக்கத்து நாடுடன் போட்டி போடுவோம் என்று நினைத்தால் தவறா? வேண்டும் என்றால் புராண காலத்தில் இருந்த போது மந்திரம் சொல்லி மறைய செய்கிற மாதிரி எல்லார் கையில் இருக்கும் போனை மறைய செய்து விட்டால் இந்த பிரச்சினை இருக்காது.

  2. மோடியின் பொய் பிரசாரத்திற்கு தோள் கொடுப்பதே சிறந்த ஈனத்தனம் என்று எண்ணி, ஜனநாயகத்தினை காப்பதற்கு பதிலாய் , பணநாயகத்திற்கு கால்பிடிக்கும் இந்திய ஊடகத்துறைக்கு மத்தியில் தைரியமாக மெய் கூறி ஓங்கி நிற்கும் தங்கள் தங்க முயற்சியை வாழ்த்துகிறோம். வணங்குகிறோம்.

    • ஒரு வெங்காயமும் இல்லை, வினவு பாகிஸ்தானின் கைகூலியாகவே செயல்பட்டு கொண்டு இருக்கிறது. பாகிஸ்தானின் JeM தீவிரவாதிகளே நாங்கள் தான் இந்தியா ராணுவத்தினரை தங்கினோம் என்று அறிக்கை விட்டு இருக்கிறார்கள், இப்போது JeM ஜிஹாதி மையத்தை இந்தியா தாக்கி இருக்கிறது இது இந்தியாவிற்கும் JeM அமைப்பிற்குமான போர் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

      பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளிடம் இருக்கும் நேர்மை கூட வினவு கூட்டங்களுக்கு இல்லை.

      • JeMஅமைப் பு இந்தியாவில் தாக்குதல் நடத்தியது அனைவருக்கும் தெரியும்.ஆனால் இந்தியா,பாகிஸ்தான் நாட்டில் உள்ள காட்டிலிருக்கும் மரங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக BBC news தெரிவிக்கிறது.முப்படை தளபதிகளும் போருக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்று அறிவித்துள்ளனர்,ஆனால் தாக்குதல் குறித்து எதுவும் பேசவில்லை.பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று சொல்வது போல் இருக்கிறது உங்கள் கதை.இந்தியா உலகிலேயே சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை.நாம் ஆசை பட்டது நடக்காத வருத்தம் தான் இப்படி எல்லாம் வினவுகாரங்களை
        பேச வைக்கிறது என்று நினைக்கிறேன்.44 பேரை நம்ம நாட்டுக்குள்ளேயே காப்பாற்ற முடியாத நம் வீரர்கள் பக்கத்து நாட்டில் போய் சிக்கி கொண்டால் என்ன செய்வது என்று பயம்தான்.ஆனால் அதே மாதிரி நடந்து விட்டதா,அதனால் நாம் அமைதியாக இருப்பதே நல்லது.இந்த இம்ரான் கான் வேறு,உலக நடப்பு நல்லா புரிந்து வைத்து கொண்டு,மக்கள் எல்லோரும் அமைதியைதான் விரும்புகிறார்கள் என்று தெரிந்த உடனே ,சமாதானம் என்று அறிவித்து உலகமே பாராட்டும் படி செய்து விட்டார்.இப்போது எல்லாம் மக்கள் பேசுவதை கேட்டால் தான் யாராக இருந்தாலும் மதிக்கிறார்கள். காலம் மாறி விட்டது என்று இதைத்தான் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.கலிகாலம்.!

        • தீவிரவாதி ஆசாரின் சகோதரர் மவுலானா அம்மார் இந்தியா அவர்களின் ஜிகாத் மதரஸாவை அழித்து விட்டது அதனால் பாகிஸ்தானிகள் எல்லோரும் இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கை விட்டு இருக்கிறார்.

          வினவு போன்ற பாக்கிஸ்தான் கைக்கூலிகளுக்கு பாக்கிஸ்தான் தீவிரவாதிகளே நேரில் வந்து இந்தியா எங்கள் பகுதி மீது குண்டு போட்டது என்று சொன்னால் கூட நீங்கள் நம்ப மாட்டிர்கள் காரணம் உங்களின் இந்திய வெறுப்பு மற்றும் பாக்கிஸ்தான் சீனா மீதான உங்களின் விசுவாசம். அதனால் நீங்கள் என்றுமே இந்தியாவிற்காக பேச போவதில்லை பாகிஸ்தானின் வார்த்தைகளையும் சீனாவின் வார்த்தைகளையும் தான் பேசுவீர்கள்.

          • நீங்களே கூறி விட்டீர்கள் தீவிரவாதிகள் என்று,ஒரு தீவிரவாதிக்கு இன்னொருவர்தான் மாற்றாக இருக்க முடியும்.அதற்கு பொருத்தமானவர் நீங்கள் தான் போலிருக்கிறது! அப்படியானால் உங்களுக்கு ஆதரவு தருபவர்களை கூட்டி கொண்டு சண்டைக்கு போகவேண்டியதுதானே! இங்கு வந்து எதற்கு வாக்குவாதம் நடத்த வேண்டும்?

            • வினவு கூட்டங்களின் பிரச்சனையே அவர்களால் வலிமையான இந்தியாவை ஏற்க முடிவது இல்லை… சீனாவிற்கு இணையாக இந்தியா வளர்ந்து விட கூடாது என்பதில் சீனாவை விட வினவு கூட்டங்கள் (இந்திய கம்யூனிஸ்ட்கள்) மிக தெளிவாக இருக்கிறார்கள்… சீனாவின் நண்பன் பாக்கிஸ்தான் அதனால் வினவு கூட்டங்களுக்கும் பாக்கிஸ்தான் நண்பன், இதன் அடிப்படையில் தான் வினவு பாகிஸ்தானுக்காக ஆதரவாக பேசுவதும் சீனாவின் சதிகளை நிறைவேற்றும் கைக்கூலிகளாக செயல்படுவதும்.

  3. அட நீங்கவேற — இதைவிட தமாஷான வண்டவாளம் பற்றி பிபிசியில் வெளிவந்து நாறுது : // பாகிஸ்தானில் இந்திய வான் தாக்குதல் நடத்தியதை இந்த புகைப்படங்கள் உறுதி செய்கின்றனவா? #BBCFactCheck // https://www.bbc.com/tamil/india-47407785 தேச அக்கறை கரைபுரண்டு ஓடுது — போலித்தனத்தில் …?

  4. இந்திய கம்யூனிஸ்ட்கள் என்றைக்குமே இந்தியாவிற்காக, இந்திய நலனுக்காக சிந்திப்பவர்கள் இல்லை, கேட்டால் எங்களுக்கு தேசம் முக்கியம் இல்லை மக்கள் தான் முக்கியம் என்று பச்சையாக பொய் சொல்வார்கள். இந்திய கம்யூனிஸ்ட் முன்பு ரஷ்யா நலனுக்காக அரசியல் செய்தார்கள் இப்போது பாக்கிஸ்தான் சீனா நலனுக்காக அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  5. கார்கில் போரில் எல்லை தாண்டியவர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லி அவர்கள் நாட்டு ராணுவ வீரர்களின் மரணத்திற்கு இறுதி மரியாதையை கூட செய்யாமல் பச்சை பொய்களை சொல்லிய பாக்கிஸ்தான் வார்த்தைகள் வினவிற்கு வேதவாக்காக இருக்கிறது.

    ஆமாம் எங்கள் ராணுவ வீரர் அபிநந்தன் பாக்கிஸ்தான் பிடியில் இருக்கிறார் அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்ற உண்மையை பேசும் இந்தியா வினவு கூட்டங்களுக்கு பொய்யாக இருக்கிறது.

    வினவு கூட்டங்களின் கேவலமான கீழ்த்தரமான செயல்களுக்கு இதை விட பெரிய ஆதாரம் வேறு என்ன இருக்க முடியும்.

  6. வெற்றி வேல்,வீர வேல் என்ற முழக்கத்துடன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று வலிமையான இந்தியாவை உருவாக்கி கொண்டு இருப்பீர்கள் என்று நினைத்தேன்.ஆனால் வாய்ச்சொல் வீரராக அல்லவா இருக்கிறீர்.இந்த வினவுக்காரர்கள் மாதிரி, நீங்கள்வெறும் காகிதப் புலி அல்ல என்று நினைக்கிறேன்!வாழ்த்துகள்!

  7. It is not spider man or Superman like situation for surgical attacks. No information about how many killed in the attack. That may come soon. Pakistan will not tell the truth as they cannot digest that IAF went inside Pakistan by escaping radar. IAF also should have gone with reliable information. But there is a possibility that terrorists might be there or vacated or Indian attack might have missed the target. Many of past US attacks became inaccurate in Afghan or Iraq and in some cases innocents killed. The purpose is symbolic that India will not hesitate to take military attacks . That message was delivered strongly and got complete international support. That is big success and it is precedent for future government. So any terrorist attacks future governments also will take similar thing whether BJP or congress.

  8. வினவிற்கு ஒரு கேள்வி

    பாகிஸ்தானின் வெளியுறவு கொள்கையே பொய்களின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. உதாரணங்கள்

    1. தாவூத் எங்கள் நாட்டிலேயே இல்லை (ஆனால் தாவூத் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்பதை அவர்கள் நாட்டு பத்திரிகைகளே ஆதாரத்தோடு வெளியில் கொண்டு வந்தன)
    2. அஜ்மல் கசாப் எங்கள் நாட்டு பிரஜையே கிடையாது, யாரோ நேபாளில் இருந்து வந்த அப்பாவியை பிடித்து கசாப் என்று சொல்கிறார்கள் (ஆனால் பாக்கிஸ்தான் பத்திரிகைகளே ஆதாரத்தோடு அவர் பாக்கிஸ்தான் பிரஜை தான் என்பதை நிரூபித்தன)
    3. கார்கிலில் ஈடுபட்டு இருப்பது போராளிகள் அவர்கள் பாக்கிஸ்தான் ராணுவத்தினர் அல்ல (ஆனால் அதன் உண்மையும் கடைசியில் நவாஸ் ஷெரிப் மூலம் வெளியில் வந்தது)
    4. ஒசாமா பின் லாடன் எங்கள் நாட்டிலேயே கிடையாது ஆனால் அமெரிக்கா ராணுவம் பின் லடேனை அவர்கள் நாட்டிலேயே புகுந்து கொன்று இருக்கிறார்கள். இந்த உண்மையை சொன்ன மருத்துவர் தற்போது பாக்கிஸ்தான் சிறையில் உள்ளார்.
    5. தற்போது கூட F16 வீழ்த்தப்பட்டது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் 2 இந்தியா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது அதில் ஒருவரை கைது செய்து இருக்கிறோம் என்று சொன்னார்கள் ஆனால் அவர்களின் இன்னொரு பைலட் கொல்லப்பட்டது பற்றி வாய் திறக்கவே இல்லை.

    இப்படி ஏராளமாக சொல்லி கொண்டு போகலாம்.

    இப்படி பொய்களை பரப்புவதையே தனது நாட்டின் கொள்கையாக வைத்து இருக்கும் பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் மட்டும் எப்படி உண்மையை பேசுகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

    நீங்கள் பாகிஸ்தான் சீனாவிற்கு ஆதரவாக நடந்துகொள்வதை தான் புரட்சி புடலங்காய் என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்களோ…

    இப்படி கூச்சமே இல்லாமல் நாட்டிற்கு எதிராக செயல்பட உங்களுக்கே வெட்கமாக இல்லையா ?

    • இந்திய அரசு,உண்மையை பேசுவதாக இருந்தால் பேச்சு வார்த்தைக்கு,ஏன் உடன்படவில்லை.தகுந்த ஆதாரங்களுடன் சென்று பாகிஸ்தானை உலக அரங்கில் அம்பலப்படுத்தி இருக்கலாமே? உண்மையில் உங்களுக்கு இருக்கும் தேசபக்தி கூட உங்கள் தலைவர்களுக்கு இல்லை.உங்களை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது.

      • உங்களின் வாதம் தவறு.

        தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்க முடியாது பாக்கிஸ்தான் முதலில் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களை நிறுத்த வேண்டும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தண்டிக்க வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்து இருக்கிறது.

        பாகிஸ்தானிடம் ஏற்கனவே மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பற்றிய ஆதாரங்களை கொடுத்து இருக்கிறது ஆனால் இன்று வரையில் பாக்கிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனைக்கும் முன்னாள் ISI அமைப்பை சேர்ந்தவரும் மும்பை தாக்குதலில் ஈடுபட்டது LeT அமைப்பு தான் என்று சொல்லியிருக்கிறார், அதே போல் அவர்கள் நாட்டு பத்திரிகைகளும் சொல்லியுள்ளன ஆனால் பாக்கிஸ்தான் இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

        தற்போது நடந்த தீவிரவாத தாக்குதல் பற்றிய ஆதாரங்களை பல உலக நாடுகளும் இந்திய அரசு கொடுத்து இருக்கிறது. இதன் அடிப்படையில் தான் ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டு இருக்கிறது… இத்தனைக்கும் வினவின் எஜமானர்களான சீனா இந்த கண்டனத்தை தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்து கடைசியில் தோற்று விட்டது.

  9. நீங்கள் சொல்வது போல,தீவிரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டார்கள்.எதன் மீதும் நம்பிக்கை இல்லாமல் தான் தீவிரவாதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்.அதைத்தான் பாகிஸ்தான் நாடும் சொல்கிறது.ஆதாரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் இருவரும் சேர்ந்து தீவிரவாதத்தை ஒழித்து விடலாம் என்று. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியும்.இல்லை என்றால் வேறுபாடுகள் தான் அதிகமாகும்.பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் ஐ.நா.விடம் முறையிட்டு கண்டனம் தெரிவிப்பது,நேர்மையாகவோ,நாகரிகமாகவோ இல்லை.44 பேர் நம் நாட்டு எல்லைக்குள் மரணமடைந்து இருப்பதால்,இங்கு உள்ளவர்களை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்.மற்றவர்கள் மேல் பழியை போட்டு, தப்ப நினைப்பதை அனுமதிக்க முடியாது.எப்படிபட்ட குற்ற செயலுக்கும் தண்டனை ,விசாரணை நடத்தி மட்டுமே வழங்கப்ப ட வேண்டும். அப்படி தன்னை விசாரிக்க அனுமதி அளிக்கும் ஒருவர் நிரபராதியாகத்தான் இருப்பார்.குற்றம் புரிந்தவர் பதற்றம், உள்ளவர்களாகவும்,மற்றவர்கள் மீது பழி சுமத்தி தப்பிக்க வும் பார்ப்பார்கள், .இத்தகைய அம்சங்களை பார்க்கும்போது ஐ.நா.ஆதரவு இந்தியாவுக்கு இருந்த போதிலும் மக்கள் ஆதரவு பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது.

    • என் கழுத்தில் நீ வைத்து இருக்கும் கத்தியை (பயங்கரவாதத்தை) முதலில் எடு பிறகு பேசுவோம் என்று இந்தியா சொல்கிறது ஆனால் பாக்கிஸ்தான் அரசும் உங்களை (வினவு) போன்றவர்களும் நாங்கள் கத்தியை வைத்து மிரட்ட தான் செய்வோம், நாங்கள் கேட்பதை (காஷ்மீரை) நீ கொடுத்து தான் ஆக வேண்டும் என்று மிரட்டி கொண்டு இருக்கிறீர்கள்.

      இதில் எங்கே பேச்சுவார்த்தைக்கு இடம் இருக்கிறது…

      சரி பயங்கரவாதிகளுக்கு வேறு வழியில்லாமல் தான் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்… அப்படி என்ன அநீதியை இந்தியா செய்து விட்டது என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

    • இங்கே யாரை விசாரிக்க சொல்கிறீர்கள்… இந்திய ராணுவ வீரர்களை நாங்கள் தான் கொன்றோம் என்று பாகிஸ்தானில் உள்ள JeM அமைப்பு பொறுப்பு ஏற்று இருக்கிறார்கள், அவர்கள் இருப்பது பாகிஸ்தானில், அவர்களை பாதுகாப்பது பாக்கிஸ்தான் அரசும் ராணுவமும் பிறகு எப்படி அவர்களை விசாரிக்க முடியும் ?

      FATF அறிக்கையின்படி 2018ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 8,707 சந்தேகத்திற்குரிய வாங்கி பரிவர்த்தனை பாகிஸ்தானில் நடந்து இருக்கிறது அதில் பல JeM அமைப்பிற்கு தொடர்பு உள்ளது பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… இந்த பணம் தான் காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்க்கிறது அதனால் தான் உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சொல்கின்றன…

    • சரி வாஜ்பாய் பாகிஸ்தானை நம்பி தானே பேச்சுவார்த்தைக்கு சென்றார் ? அதற்கு பதிலாக பாகிஸ்தான் கார்கில் போரை தொடங்கியது.
      மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சனைகளை தீர்க்க வழி என்று பேச்சுவார்த்தை தொடங்கினார் அதற்கு பதிலாக மும்பை நகரத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கினார்கள்
      மோடியும் பாகிஸ்தானோடு சுமுக உறவு வைத்துக்கொள்ள பாகிஸ்தானுக்கே நேராக சென்றார் ஆனால் அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ முகாமை தாக்கியது.

      இதற்கு மேலும் என்ன பேச்சுவார்த்தை செய்ய முடியும் ?

      பாகிஸ்தான் இந்திய மக்களை கொன்று கொண்டே இருப்பார்கள் நாங்கள் அதையெல்லாம் மறந்து விட்டு பாகிஸ்தானோடு பேச வேண்டும்… அப்படி தானே

  10. மக்களை பாதுகாக்க முடியாத அளவிற்கு இங்கு உள்ள பிரச்சினைகள் என்ன என்று முதலில் கவனியுங்கள்.ஒற்றை ஆளாக இத்தனை உயிர்களை பலி வாங்க விட்டு, இராணுவம் என்ன செய்தது? முதலில் அதற்கு பதில் என்ன?

    • காஷ்மீர் பிரச்சனையின் மூல காரணம் இஸ்லாமிய மதவெறி… பாகிஸ்தானில் இருப்பது இஸ்லாமிய சட்டம் இந்தியாவில் இருப்பது ஹிந்து மதசார்பற்ற சட்டம் அதனால் நாங்கள் இந்தியாவோடு (ஹிந்துக்களோடு) சேர்ந்து வாழ முடியாது என்பது தான் பிரச்சனையின் மூல காரணம்.

      இஸ்லாமியர்களால் ஹிந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது என்றால் பிறகு முஸ்லிம்களுக்கு இந்தியாவில் என்ன வேலை என்ற கேள்விக்கு பதில் என்ன ?

      எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய அடிப்படைவாதம் தான் பிரச்சனையின் மூல கரணம் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இந்த “the so called” முற்போக்குவாதிகளுக்கு உள்ளதா ?

      மக்கள் நலன் தான் எங்கள் விருப்பம் என்று வெளிவேஷம் போடும் வினவு கூட்டங்கள் இந்த உண்மையை பேச தயாரா ?

  11. இஸ்லாமிய அடிப்படைவாதம் தான் பிரச்சினையின் மூல காரணம் என்று சொல்லிக் கொண்டே நானும் அப்படித்தான் செய்வேன்,என்று சொல்வது இந்து தீவிரவாதம் தான்.இந்த இரண்டு பேருக்கும் இடையில் உள்ள காஷ்மீர் மக்கள் எங்களுக்கு நீங்கள் இருவருமே வேண்டாம் என்று சொல்வது சரி.அவர்கள் மட்டுமன்றி உலகிலுள்ள பெரும்பான்மை மக்கள் அமைதியாக வாழ விரும்புகிறார்கள்.தானும் வாழாமல் பிறரையும் வாழ விடாமல் இருக்கும் உங்களை போன்றவர்கள் எண்ணம் இங்கு ஈடேறாது.

    • உங்களின் இந்த மாதிரியான சிந்தனையே தவறு… உங்களின் (வினவு கூட்டங்களின்) அடிப்படை நோக்கமே காஷ்மீர் பிரிவினை தான், அதற்கு மக்கள் விருப்பம் என்ற முகமூடியை அணிந்து கொள்கிறீர்கள்… இந்த மக்களின் விருப்பம் என்ற பின்னணியில் இருக்கும் சதி திட்டங்கள் யாருக்கும் தெரியாது என்று நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் அது தவறு, உங்களின் (கம்யூனிஸ்ட்) சதி திட்டங்கள் எல்லோருக்கும் தெரியும்.

      சரி உங்களுக்கு சில கேள்விகள்

      பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்த ஹிந்துக்கள் எங்கே ? அவர்களின் நிலை என்ன ஆனது ? இதற்கு நேர்மையாக பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      காஷ்மீரின் பூர்விக மக்கள் (பண்டிட்கள்) பாகிஸ்தானோடு இணைய விரும்பவில்லை. அவர்களின் நிலை என்ன ? இஸ்லாம் அடிப்படையில் காஷ்மீரிகள் பாகிஸ்தானோடு இணைவது சரியென்றால் ஹிந்து என்ற முறை காஷ்மீரின் பூர்விக குடிமக்கள் இந்தியாவோடு இணைய விரும்புவதும் சரி தானே.

      ஜம்முவில் ஹிந்துக்கள் அதிகமாக இருப்பதால் அங்கே அமைதி நிலவுகிறது அவர்களை இந்தியாவோடு இருக்கவே விரும்புகிறார்கள், காஷ்மீர் பிரிவினை என்ற பெயரில் அவர்களையும் அழிவில் தள்ள வேண்டுமா ?

      லடாக் பகுதியில் வாழும் புத்த மதத்தை சேர்ந்தவர்களும் இந்தியாவோடு இணைந்து இருக்கவே விரும்புகிறார்கள்.

    • இஸ்லாமிய மதவெறி தான் காஷ்மீர் பிரச்சனையின் மூல காரணம், காட்டுமிராண்டி வன்முறைகளுக்கு எங்கள் நாடு அடிபணியாது… வேண்டுமானால் திபெத் மக்கள் சீனாவோடு சேர்ந்து இருக்க விரும்பாமல் தனி நாடு கேட்டு போராடி கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு தனி நாடு வாங்கி கொடுத்து உங்களின் மனித நேயத்தை காட்டுங்கள்.

      அது ஏன் எந்த ஒரு அயோக்கிய கம்யூனிஸ்டுக்கும் திபெத் மக்கள் மீது இரக்கமே வருவதில்லை.

      உங்களின் மனித நேயம் எல்லாம் போலித்தனமானது அதில் துளியும் நேர்மையும் இல்லை உண்மையும் இல்லை.

  12. முஸ்லிம்களை அந்த பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் கூட்டி கொண்டு போகட்டும்.

    இளகிய மனம் படைத்த இந்துக்களாகிய நீங்கள் ,காஷ்மீர் பூர்வீக! பண்டிட்டுகளை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வந்து விடுங்கள்.எங்களுக்கு யாரும் வேண்டாம் என்று சொல்பவர்கள் நிம்மதியாக அங்கேயே இருக்கட்டும்.இதுதான் நியாயமான தீர்ப்பு.

    அது சரி,எனக்கும் ஒரு கேள்வி,ஒத்தை ஆளாக வந்து,44 பேரை சாகடித்து விட்டு செல்லும் அளவுக்கு,இந்தியா பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறதே,அதற்கு பதில்?

    நம்ம பிரச்சனைகளை தீர்க்கவே முடியாத போது திபெத் பிரச்சனைகளை தீர்க்க நான் தயாராக இல்லை.

    • மதவெறிக்கு எங்கள் நாடு அடிபணியாது அது உலக அமைதிக்கும் நல்லது இல்லை. காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் இருக்க வேண்டும்.

      எப்படி உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களுக்கு திபெத் பற்றி பேசுவதற்கு விருப்பம் இல்லையோ அதேபோல் எங்களை போன்ற சாதாரண இந்தியர்களுக்கும் காஷ்மீர் பிரிவினை பற்றி பேசுவதற்கு விருப்பம் இல்லை.

    • என் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஓடி ஒளியும் போதே உங்களின் நோக்கமும் நேர்மையும் சந்தி சிரிக்க ஆரம்பித்துவிட்டது.

      பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் இஸ்லாமியர்களை குடியேற்றி, ஒரு ஹிந்து கூட இல்லாத பகுதியாக ஆக்கிரமித்த காஷ்மீரை மாற்றி பிறகு இந்திய காஷ்மீரில் இருந்த ஹிந்துக்களை இன அழிப்பின் மூலம் கொலை செய்து எஞ்சியவர்களை விரட்டி விட்டு… இஸ்லாமிய மதவெறியை மக்களிடம் தூண்டி, இன்னொரு பக்கம் அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் மூலம் அந்த மக்கள் விருப்படி தனியே போக விட வேண்டியது தானே என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதைவிட பெரிய அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்க முடியும், உங்களை போன்ற ஆட்களும் இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தி பேசி கொண்டு இருக்கிறீர்கள்.

      பாகிஸ்தானை போல் இந்தியாவும் காஷ்மீர் பகுதியில் ஹிந்துக்களை ஆரம்பத்திலேயே குடியேற்றி அங்கே வாழும் இஸ்லாமியர்களை எல்லாம் ஹிந்துக்களாக மதம் மாற்றி இருந்தால் இன்று காஷ்மீர் பிரச்சனையே இருந்து இருக்காது. வினவு போன்ற கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களும் எங்கள் நாட்டை பற்றி தவறாக பேசி இருக்க மாட்டார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க