‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு’ ஒரு திட்டமிட்ட படுகொலைதான் என்று  ஆதாரப்பூர்வமாக நிரூபித்த சூழலியலாளர் முகிலனை, கடந்த பிப்ரவரி 15-ம் தேதியிலிருந்து காணவில்லை.சென்னையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான ஆதாரத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டுவிட்டு, மதுரைக்கு இரயில் மூலம் கிளம்பிய முகிலன் அதன் பின்னர் காணவில்லை. அவரை கண்டுபிடித்துத் தரக் கோரி, பல முறை புகார் கொடுத்தும் எந்தத் தகவலும் இல்லை. போலீசும், தமிழக அரசும் மிகவும் தெனாவெட்டாக பதில் அளிக்கிறது.
தமிழகம் முழுவதும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கோரியும், மெத்தனமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும் போராடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று (06-03-2019)  திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று (06-03-2019) திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்களும் கல்லூரி வாயில் முன்பு தோழர் முகிலனை கண்டுபிடித்துத் தரக் கோரியும், மெத்தனமாக செயல்படும் தமிழக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க