அதிமுக குற்றக்கும்பல் ஆட்சி

டந்த ஓரிரு ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த வருமானவரித் துறை சோதனைகளின் பட்டியல் மிக நீளமானது. கரூர் அன்புநாதன், சேகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், டி.டி.வி தினகரன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், கொடநாடு, போயஸ் இல்லம், கிறிஸ்டி நிறுவனம் மற்றும் எஸ்பிகே நிறுவனம் போன்றவற்றில் எடப்பாடி, பன்னீர்செல்வத்தின் பினாமிகளும் அடக்கம்.

இவை தவிர கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கண்டெய்னர்களில் கடத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் சிக்கின. மேலும், துணை ராணுவப் படையை தலைமைச் செயலகத்தைச் சுற்றிலும் பாதுகாப்புக்கு நிறுத்தி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்ட செய்திகள் வெளியாகின. ஆனால் இன்று வரை இச்சோதனைகளின் மூலம் பிடிபட்ட கருப்புப் பணத்தை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்தச் சோதனைகள் அனைத்துமே ஆளும் எடப்பாடி – பன்னீர் கும்பலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க, மோடியால் மேற்கொள்ளப்படுபவை என்கின்றன தமிழக எதிர்க்கட்சிகள்.

ஜெயா எதிர்த்து வந்த மத்திய அரசின் நீட், உதய் உள்ளிட்ட திட்டங்களை எடப்பாடி அரசு ஆதரிக்கத் துவங்கியதை இதற்கு சான்றாகக் குறிப்பிடலாம். கூடவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்க்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவை ஆதரித்தது, மோடி அரசைக் காப்பாற்றும் முகமாக பாரளுமன்றத்தில் கூச்சலிடுவது என ஒன்று பாக்கியில்லை .

மறுபுறம் போராடும் மக்களை ஒடுக்குவதிலும் எடப்பாடி அரசு முன்னணியில் இருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கியது; அரசு ஊழியர் போராட்டம், போக்குவரத்து ஊழியர் போராட்டம் அனைத்தையும் சதி மற்றும் மிரட்டலால் அடக்கி ஒடுக்கியது.

பொதுவாக திட்டங்களைக் கொண்டு வந்துதான் ஊழல் செய்வார்கள். ஆனால், ஊழலுக்காகவே திட்டங்களைக் கொண்டு வருவதுதான் அதிமுக அரசின் பாணி. இந்த ஊழல் கும்பலை அடியாளாக்கி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்திருக்கிறது பாஜக. தமிழக மக்களின் விரோதியாக பெருத்து நிற்கும் எடப்பாடி – ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கும்பலின் யோக்கியதையை தோலுரித்துக் காட்டுகிறது இந்தத் தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி – புதிய கலாச்சாரம் மார்ச் 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

” அதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • எத்தனை அடிச்சாலும் எடப்பாடி தாங்குவது எப்படி ?
  • ரேஷனை ஒழித்துக்கட்டு ! பாஜக-வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம் !!
  • அதிமுக + பாஜக + போலீசு + புகையிலை = குட்கா கூட்டணி !
  • போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?
  • பத்தாயிரம் சமூக விரோதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி சட்டத்தை நிலைநாட்டிய எடப்பாடி !
  • தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !
  • மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !
  • அம்மாவின் ஆட்சியில் கொழிக்கும் டாஸ்மாக் – மணற்கொள்ளை !
  • அதிமுக – பாஜக: திருடன் போலீசா, திருட்டு போலீசா ?
  • ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி, அதே தேர்தல் ஆணையம் !
  • வருமான வரித்துறை சோதனை : அடிமையை மிரட்டும் பாஜக
  • எடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் ! தமிழகத்தில் பரவும் டெங்கு !
  • எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !
  • ஜெயா – சசி மட்டுமல்ல அதிமுகவே ஒரு குற்றக் கும்பல்தான்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

 புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க