ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்குட்பட்ட தெலுங்கானா பகுதியில் நிலவிய கோரமான கொத்தடிமைத்தனத்தை எதிர்த்து, அனைத்து உழைப்பாளி மக்களும், கைவினைஞர்களும் நிலப்பிரபுக்களுக்கு இலவச உழைப்பைத் தரவேண்டுமென்று அடிமை நிலையில் வைக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் ஆயுதமேந்தி தலைமை தாங்கிப் போராடி பல இலட்சக்கணக்கான மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து சுதந்திர மனிதர்களாகப் பிரகடனம் செய்த எழுச்சியே தெலுங்கானா ஆயுத எழுச்சி.

இப்போராட்டத்தின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளை, புரியப்பட்ட அற்புதத் தியாகங்களை, அதன் சாதனைகளை இந்நூல் சுருக்கமாக விவரிக்கிறது.

வீரஞ்செறிந்த இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்கி வழிநடத்திய தோழர் பி. சுந்தரைய்யா இந்நூலைத் தன் அனுபவங்களின் வாயிலாக விவரித்திருக்கிறார். ஒரு காலகட்டத்து மக்கள் போராட்டத்துக்கான ஆவணம் இது. (நூலின் அறிமுகப் பகுதியிலிருந்து)

… சரித்திரப் பிரசித்தி பெற்ற தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியானது இதர வேறெந்த விஷயத்தையும்விட, விவசாயப் புரட்சி என்ற பிரச்சனையை முன்னுக்குத்தள்ளியது. காலஞ்சென்ற வினோபா பாவேயின் பூதான இயக்கம் என்றழைக்கப்பட்ட இயக்கமும், இந்தியா முழுவதிலும் பல மாநில சட்டமன்றங்களில் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களும், இந்த தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியின் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அணைப்பதற்காகச் செய்யப்பட்ட ஒருவகை முயற்சியேயாகும்.

இந்தப் புகழ்மிகு தெலுங்கானா போராட்டமானது இந்தியா முழுவதிலுமிருந்த நூற்றுக்கணக்கான மன்னராட்சி மாநிலங்களின் செயல்பாட்டுக்கு மரண அடியைக் கொடுத்ததோடு, இந்திய ஒன்றியத்தில் மொழிவழி அடிப்படையில் மாநிலங்களை மாற்றியமைப்பதற்கு வழிவகுத்தது. (நூலிலிருந்து பக்.9 – 10)

இந்த வீரஞ்செறிந்த விவசாயிகள் எழுச்சியின் ஒட்டுமொத்த விபரத்தை சுருக்கமாகக் கூறுவோம். இது போர்க்குணமிக்க தெலுங்கானா விவசாயிகளிடமிருந்தும் இந்த வெகுஜன விவசாயிகள் எழுச்சிக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் விசாலாந்திரா மாநிலக்கிளையிடமிருந்தும் பெரும் தியாகங்களைப் பெற்றது. கம்யூனிஸ்ட்களும் விவசாயப் போராளிகளும் 4 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் ஊழியர்களும், மக்கள் போராளிகளும் 3 முதல் 4 வருட காலம் வரையில் பாதுகாப்பு முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்; 50 ஆயிரம் பேர் அவ்வப்பொழுது போலீஸ், இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். சித்ரவதை செய்யப்பட்டனர். தொடர்ந்து வாரக் கணக்கில், மாதக் கணக்கில் பயமுறுத்தப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்த பல இலட்சக்கணக்கான மக்கள் போலீஸ், இராணுவ சோதனை வேட்டைகளுக்கும் கொடூரமான தடியடி தாக்குதலுக்கும் ஆட்படுத்தப்பட்டனர். இத்தகைய இராணுவ, போலீஸ் வேட்டைகளின் பொழுது இலட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள சொத்துக்களை மக்கள் இழந்தனர்; இவைகள், ஒன்று கொள்ளையடிக்கப்பட்டன. அல்லது அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்; அவர்கள் அனைத்து வித அவமானங்களுக்கும், இழிவுகளுக்கும் ஆளாயினர்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஆரம்பத்தில் நிஜாம் மற்றும் அவனுடைய ஆயுதமேந்திய ரசாக்கர் குண்டர்களின் தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம், ஹைதராபாத் மாநில அரசாங்கம் ஆகியவைகளின் போலீஸ், இராணுவ வன்முறை வெறியாட்டத்திற்கும் முழு ஐந்து வருட காலத்திற்கும் இந்தப் பிராந்தியம் முழுவதும் இலக்காயிருந்தது. போலீஸ் நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்த இயக்கத்தை வன்முறை மூலம் ஒடுக்குவதற்காகவும், சிதறிப்போன நிலப்பிரபுத்துவ ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் கொண்ட பலமான இராணுவப் படை அனுப்பப்பட்டது. அதிகாரபூர்வமற்ற சில மதிப்பீடுகளின்படி 1947-48-ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற, யுத்தத்தில் இந்திய அரசாங்கம் செலவிட்ட அளவுக்கு பணம், செல்வாதாரங்களை அன்று ஹைதராபாத்தில் இந்திய அரசாங்கம் செலவிட்டது.

உண்மையில், விவசாயிகள் எழுச்சியின் பெருமைமிகு சாதனைகள், ஆதாயங்கள் என்ற பூரிப்புக்கு சாதனைகள் ஆகிய இதனுடைய மறுபுறத்தைக் காணவில்லையென்றால் இந்த சித்திரம் முழுமையடையாது. இந்தப் போராட்ட காலத்தில் 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களிலிருந்த விவசாய மக்கள் சுமாராக 30 இலட்சம் பேர் (பெரும்பாலும் நலகொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள) போராடும் கிராமப் பஞ்சாயத்துக்கள் என்ற அடிப்படையில் கிராம இராஜ்யத்தை உருவாக்குவதில் வெற்றியடைந்தனர்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

இத்தகைய கிராமங்களிலிருந்த வெறுக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் கிராமப்புறப் பகுதிகளில் நிஜாம் எதேச்சதிகாரத்தின் கிராமப்புறத் தூண்களாக இருந்தவர்கள் தங்களுடைய கோட்டைகள் போன்ற வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர்; அவர்களுடைய நிலங்கள் விவசாய மக்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டன. மக்கள் கமிட்டிகளின் வழிகாட்டுதல்களின்கீழ் பத்து இலட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடையே மறு வினியோகம் செய்யப்பட்டன. அனைத்து நில வெளியேற்றங்களும் தடுக்கப்பட்டது; கட்டாய உழைப்புச் சேவை என்பது ஒழிக்கப்பட்டது. கொள்ளை இலாப, அதீத கந்துவட்டி வீதங்கள் என்பது மிகப்பெருமளவு குறைக்கப்பட்டது அல்லது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளிகளின் தினசரிக் கூலி என்பது அதிரிக்கப்பட்டது என்பதுடன் குறைந்தபட்ச கூலி என்பது அமலாக்கப்பட்டது. (நூலிலிருந்து பக். 16 – 17)

நூல்:தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
ஆசிரியர்: பி. சுந்தரைய்யா
தமிழில்: என். ராமகிருஷ்ணன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com
இணையம்:thamizhbooks.com

பக்கங்கள்: 192
விலை: ரூ 120.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: panuval |nhm

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277


இதையும் பாருங்க…

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ’வசந்தத்தின் இடி முழக்கம்’ பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க