பகத்சிங் நினைவு நாளை கடைபிடித்த கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் !

கடலூர் :

டலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக பகத்சிங் நினைவு நாள் கூட்டம் கடந்த 23-03-2019 அன்று நடத்தப்பட்டது. பகத்சிங் ,சுகதேவ், ராஜகுரு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தியாகிகளின் நினைவுகூரும்விதமாக உரையாற்றினார்கள்.


தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர் – 97888 08110.

புதுச்சேரி :

காதிபத்திய எதிர்ப்பு போராளிகளான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 அன்று புதுச்சேரியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் அரசியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ”நெருங்குகிறது கார்ப்பரேட் – காவி பாசிசம் : எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ் வில்லியனூர் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் நவீன், பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் செல்லக்கண்ணு, பு.மா.இ.மு. கடலூர் மாவட்ட செயலர் தோழர் மணியரசன், உள்ளிட்டோர் உரையாற்றினர்.

படிக்க:
பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?
நூல் அறிமுகம் : பகத்சிங் சிறைக் குறிப்புகள்

பகத்சிங் உள்ளிட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பு உணர்வை அரசியல் உணர்வை முன்னுதாரணமாகக் கொண்டு நெருங்கிவரும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்த்து நிற்க வேண்டுமென்ற அறைகூவலோடு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.


தகவல்:
பு.மா.இ.மு.,
புதுச்சேரி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க