ன்னாட்டு நிறுவனமான பெப்சி, தன்னுடைய FC5 என்ற அறிவுசார் சொத்துடைமைப் பெற்ற உருளைக்கிழங்கு விதையைப் பயிரிட்டதற்காக  Protection of Plant Varieties and Farmers’ Rights (PPV&FR) Act, 2001 என்ற  அறிவுசார் சொத்துடைமை சட்டப் பிரிவின் கீழ் ஒன்பது விவசாயிகளின் மீது அகமதாபாத் வர்த்தக கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்தது.

இதில் 4 விவசாயிகள் தனக்கு இழப்பீடாக ஒவ்வொருவரும் சுமார் 1.04 கோடி வழங்க வேண்டும் என்றும், மீதி 5 விவசாயிகள் மீது தலா 20 இலட்சம் நட்ட ஈடு வேண்டும் என்றும் வழக்காடியது.

இந்த நீர்ச்சத்து குறைவாக உள்ள FC5 ரக விதையானது, லேஸ் சிப்ஸ்க்காக தயார் செய்யப்படுகிறது இந்த ரக விதையின் மூலம் பயிரிடப்படும் உருளைக்கிழங்கானது பெப்சியின் லேஸ் சிப்ஸ்க்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் மூலம் ஒப்பந்த விவசாய முறை மூலம் பயிரிடப்பட்டு வருகிறது.

இந்த  FC5 என்ற உருளைக் கிழங்கு விதை நாங்கள் உருவாக்கியது, ஆகவே எங்களிடம் தான் இந்த விதையை பயிர் செய்யும் விவசாயிகள் உருளைக் கிழங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

PPVR சட்டப்படி அறிவுசார் சொத்துடைமையின் படி காப்புரிமை பெற்ற விதையானது பொதுச் சந்தைக்கு வரக்கூடாது. எப்படி இந்த விதைகள் பொதுச்சந்தைக்கு வந்தது? விவசாயிகள் பொதுச் சந்தையில் FC5 விதைகளை வாங்கி அதிக மகசூல் தரும் என்று பயிரிட்டு இருக்கிறார்கள். ஏதோ பெப்சி நிறுவனத்திற்கு தெரியாமல் இந்த விதைகளை வாங்கிப் பயிரிடவில்லை. ஒவ்வொரு மகசூல் முடிவிலும் விதைகளைப் பாதுகாப்பதும், விதைகளை விவசாயிகள் பரிமாறிக் கொள்வது இயற்கையே. இந்திய விவசாயிகளைக் கேட்டு, அவர்களின் ஒப்புதல் பெற்று இந்திய அரசு FC5 போன்ற விதைகளுக்கு அறிவுசார் உரிமை கொடுப்பதில்லை.

வழக்கை திரும்ப பெற காரணம் :

தன்  நிறுவனத்தின் அனைத்து பொருட்களையும் புறக்கணிக்கப் போவதாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மூலம் வந்த அறிவிப்பின் காரணமாக அது பின் வாங்கியது. அதே சமயத்தில் கோர்ட்டில் தன் விதைகள் பயன்படுத்தும் விவசாயிகள் தன் நிறுவனத்தின் ஒப்பந்த விவசாய முறையின் மூலம் மட்டுமே பயிர் செய்ய வேண்டும். தனக்குதான் தன்னுடைய  FC5 உருளைக்கிழங்கை விற்க வேண்டும், என்று நிபந்தனையை விதித்தது.

ஆனந்த் யாக்னிக் என்ற  விவசாயிகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் இதை தன் விவசாயிகளிடம் கேட்டு அடுத்த வழக்கு விசாரணையின் போது (ஜீன் 12) கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும்  அடுத்த விசாரணை வரும்வரை இந்த விதை பயிரிடுவதற்கு இருக்கும் தடையை நீடிப்பதாக நீதிபதி MC தியாகி கூறியுள்ளார்.

படிக்க :
♦ உருளைக் கிழங்கு விவசாயிகளை அழிக்கும் சுதந்திரச் சந்தை !
♦ நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை

மேலும் பெப்சி  நிறுவனம் திமிராக தன்னுடைய நிறுவனத்தின் ஒப்பந்த விவசாயமுறை மூலம் இந்த விவசாயிகள் பயிர் செய்யலாம் என்றும் இதன் மூலம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விவசாயிகள் அதிகமான உற்பத்தி, நல்ல தரத்தில் மற்றும் நல்ல விலையில் விற்க முடியும் என்றும், விவசாயிகள் தரமான விவசாய முறையின் மூலம் பயிர் செய்ய பயிற்சியும் பெற முடியும் என்றும் பத்திரிகைகளில் தெரிவித்து இருக்கிறது.

இந்த வழக்கு உருளையின் விதைகளுக்கானதா? இல்லை உருளைக்கிழங்கின் ஏகபோக உரிமைக்கானதா?

நொறுக்குத்தீனி (ஸ்னாக்ஸ்) சந்தையில்  2010-ம் ஆண்டு பெப்சியின் பங்கு 34% ஆதிக்கமாக இருந்தது. அதுவே 2015-ல் 30% ஆதிக்கமாக உள்ளது.

சிப்ஸ் மார்க்கெட்டில் பெப்சியின் பங்கு 2010-ல் 65% ஆகவும் 2015-ல் 51% ஆகவும் உள்ளது.

இதன் மூலம் இது ஏனோ உருளைக்கிழங்கு விதைக்காக நடைப்பெற்ற வழக்காக இல்லை. இது சந்தைக்கான போராட்டமாக பெப்சி பார்க்கிறது.

இந்த வழக்கை திரும்ப பெற்றது ஏதோ விவசாயிகளிடம் பெப்சி நிறுவனம் பணிந்து போனதற்கான முகாந்திரம் இல்லை. குஜராத் அரசு, பெப்சி நிறுவனத்துடன் திரைமறைவு பேச்சுவார்தை மூலம் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டதாகக் கூறுவதும், இதன்மூலம் விவசாய உரிமை பாதுகாக்கப்பட்டதாகக் கூறுவதும் ஏமாற்று வேலையாகும்.

The Protection of Plant varities And Farmers Right  Act (PPVFRA) என்ற அறிவுசார் சொத்துடைமை ஆனது விவசாயிகளை பாதுகாப்பது போல் ஒரு தோற்றத்தை பத்திரிகைகள் இந்த விசயத்தில்  செய்தி வெளியிடுகின்றன. FC5 என்ற பெப்சியின் உரிமம் பெற்ற விதையை, வேறொரு பெயரில்தான் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வதில்தான் PPVFRA என்ற சட்டத்தில் தடை உள்ளது. விவசாயிகள் பயிர் செய்வதில் தடை இல்லை என்று விவசாயிகளுக்குப் பரிந்து பேசுவது போல் ஒரு தோற்றம் உள்ளது. 1995 உலக வர்த்தகக் கழகத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் TRIPS எனும் அறிவுசார் சொத்துடைமைக்கு இந்தியா பலியாகி வருகிறது.

இந்த வழக்கில் பெப்சி நிறுவனம் தெளிவாகக் கூறுவது என்ன?

விவசாயிகள், ஒன்று என்னுடன் சேர்ந்து நான் கொடுக்கிற விதையை பயிர் செய்து அதன் மூலம் உங்கள் பிழைப்பை நடத்துங்கள். அல்லது, எங்கள் விதையைப் பயிர் செய்யாதீர்கள். தனியாக உருளைக்கிழங்கை பயிர் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது. தனியாகப் பயிர் செய்து சந்தையில் நல்ல விலைக்கு உருளைக் கிழங்கு விலை போவது  இல்லை. அதற்கான வழியே இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் பார்த்துக் கொள்கின்றன.

நாளுக்கு நாள், உருளையின் விளைச்சல் அதிகமாக இருந்தாலும், மக்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் உருளையின் அளவு குறைவாக உள்ளது.

குஜராத் மண்டலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தன்னிடம்தான் விவசாயம் செய்ய வேண்டும். இதுதான் பெப்சி கூற வரும் செய்தி.

இது உருளைக்கிழங்கை பயிர் செய்யக்கூடிய விவசாயிகள் அனைவரும் தன்னுடைய விதையைத்தான் பயன்படுத்த வேண்டும், தனக்குத்தான் உருளையை விற்பனை செய்ய வேண்டும் என்கிறது பெப்சி நிறுவனத்தின் மிரட்டல். இதன் மூலம் இந்தியர்களின் முக்கிய  உணவுப் பொருளான உருளை சந்தையில் தனக்கான ஏகபோகத்தை நிறுவ அது முயற்சிக்கிறது.

படிக்க :
♦ களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !
♦ டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !

இந்த ஏகபோகமானது முதலாளித்துவம் அறிவுசார் சொத்துடைமை என்ற  பெயரில் TRIPS எனும் சர்வதேச ஒப்பந்தம் மூலம் WTO மூலம் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் மூலம் ஏற்பட்டது.

உருளைக்கிழங்கு விதை ஒன்றும் பெப்சியின் அப்பன் வீட்டு சொத்தல்ல. உருளைக்கிழங்கு ஒன்றும் பெப்சி கண்டுபிடித்ததும் அல்ல. அது விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பெற்ற அனுபவத்திலிருந்து வந்தது. விதையின் தொழில்நுட்பத்தில் ஒரு சிறு மாற்றத்தைப் புகுத்திவிட்டு விவசாயிகள் பல பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெற்ற அனுபவ அறிவைத் திருடிக்கொண்டு, இப்போது விவசாயிகள் எங்கள் விதையைத் திருடி விதைக்கிறார்கள் என்று கூறுகிறது முதலாளித்துவ அறிவு ஏகபோகம்.

இது ஒன்பது விவசாயிகளுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. ஒட்டும் மொத்த விவசாயிகளுக்கானது, மக்களுக்கானது. இனி FC5 உருளைக்கிழங்கை பெப்சிக்கு தெரியாமல் வைத்திருந்தால் நீங்கள் குற்றவாளி என்று கூட வழக்கு போடும் அந்நிறுவனம்.

ஒரு பயிரின் ஏகபோக உரிமையைக் கைப்பற்றத் துடிக்கும் பெப்சி போன்ற ஏகபோக நிறுவனத்தை விரட்டுவது என்பது அகமதாபாத் வர்த்தக கோர்ட்டுக்குள்ளே அல்ல. அதற்கு வெளியேதான் சாத்தியம். அதற்கு ஒன்பது விவசாயிகள் மட்டும் போதாதது ! நாமும் சேர வேண்டும் !!

பரணிதரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க