கும்பகோணம் அரசு கலைக் கல்லுரியில் மோடி அரசு கொண்டுவரும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிக்கக் கோரியும், சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்தும் கடந்த 25/07/2019 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.

வகுப்பு புறக்கணிப்பின் பொது கியூ பிரிவு போலீசார் இருவர் கல்லூரி வளாகத்திற்குள் வேவு பார்க்க நுழைந்தனர். அப்போது மாணவர்களிடம் அந்த இருவரையும் உளவு பார்ப்பவர்கள் என்று கும்பகோணம் பு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் திலிப் அடையாளம் காட்டிய பின்னர், மாணவர்களே அந்த இருவரையும் கல்லூரிக்கு வெளியே அனுப்பினர்! அதன் பிறகு புதியதாகக் கொண்டுவரப்படும் தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் என்றும் இக்கொள்கை சர்வாதிகாரப் போக்குடையது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு எதிராக முழக்கம் இட்டனர்.

பின்னர், தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சத்தை பு.மா.இ.மு தோழர்கள் ஒலிப்பெருக்கியால் மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தனர். இக்கல்விக் கொள்கையைப் பற்றி எடுத்துரைத்த பிறகு அனைவரிடமும் நம் கல்வி உரிமையை பறிக்கும் புதிய கல்விக் கொள்கை நமக்குத் தேவையா? என்று கேள்வி எழுப்பியதும் மாணவ, மாணவிகள் கோபத்துடன் தேவையில்லை என்று கூறினார்கள். அங்கு வந்த பிற பத்திரிகையாளர்கள் விவரங்களைக் கேட்டுச் சென்றனர். போராட்டமே மகிழ்ச்சி !
புரட்சியே தீர்வு ! அரசின் ஏழை மக்கள் விரோத,  மாணவர் விரோத முடிவுகளை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடுவோம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.
தொடர்புக்கு: 97902 15184

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க