ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை – அணுக்கழிவு

தமிழகம் – புதுச்சேரியை நாசமாக்கவரும் பேரழிவுத் திட்டங்கள்

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! விளக்கப் பொதுக்கூட்டம் !
புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள் : 01-09-2019, மாலை 05.00 மணி
இடம் : மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தம், புதுச்சேரி

தலைமை :
தோழர். E.K.சங்கர், மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

கருத்துரை :
தோழர். தீனா, அமைப்பாளர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி.
தோழர். முருகானந்தம், தலைவர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி.
தோழர். திருநாவுக்கரசு, மாநில துணைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதுச்சேரி.
தோழர். காளியப்பன், தலைமைக்குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

***

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

இன்று தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டுவிட்டது. நீரழித்து, நிலமழித்து, காடு, மலை, கழனியழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு படையலிட்டு வருகிறது மோடி – எடப்பாடி கும்பல். ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை அணுக்கழிவு மட்டுமல்லாது, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் நச்சு ஆலை, கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ, பெட்ரோ – கெமிக்கல் மண்டலம் என தமிழகத்தின் ஒவ்வொரு ஏக்கர் நிலப்பரப்பும் முதலாளிகளின் லாபவெறிக்காக கபளீகரம் செய்யப்படுகிறது.

இந்த நாசகார பேரழிவு திட்டங்களை, அந்தந்தப் பகுதி மக்கள் தங்களது சொந்த பாதிப்பிலிருந்து வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடி வருகின்றனர். அதனால் அவை தனித்தனியான போராட்டங்களாக அந்தந்தப் பகுதிகளுக்குள் சுருங்கி நிற்கிறது. ஆனால், அந்தப் பேரழிவுத் திட்டங்கள் பாரத்மாலா, சாகர்மாலா என்ற பெருந்திட்டத்தின் சங்கிலிப் பிணைப்பாக நீண்டுள்ளது.

ஆனால், மக்கள் ஒருங்கிணையாத வகையில் சாதி, மத உணர்வுகள் தூண்டப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். – இந்துமதவெறி அமைப்புகள், முஸ்லீம்கள், கிறித்தவர்கள் தான் மக்களின் எதிர்களாக காட்டுகின்றனர். சாதிவெறி அமைப்புகள் சொந்தசாதிப் பெருமையைப் பேசி, மற்ற மக்களை எதிர்களாக்குகின்றனர்.

மேலும், இவை கடலோரத்தில் அல்லது காவிரி டெல்டாவில், விவசாய நிலங்களில் என தனக்கு தொடர்பில்லாத பகுதியில் செயல்படுத்தப்படும் திட்டம். எனவே, எனக்கு பாதிப்பில்லை என்று ஒதுங்கி நிற்க முடியாது. இதோ புதுச்சேரியில் நமது காலுக்கடியில் ஹைட்ரோகார்பன் வந்துவிட்டது. வழுதாவூர், பக்கிரிப்பாளையம் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுக்கான ஆய்வுப்பணி நடந்துள்ளது. மருதூர், கரிக்கலாம்பாக்கம், பாகூர் பகுதிகளிலும் அதற்கான இடம் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. காலுக்கடியில் பூமி நழுவிக் கொண்டிருக்கிறது. நாம் போராட்ட களத்திற்கு வரவேண்டிய நேரம், போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டிய நேரம் இது.

படிக்க :
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா!
♦ ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் 500 நாட்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அமைதியான முறையில் தங்களது பகுதியில் போராடினார்கள். ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில், ஆலைப் பகுதியைத் தாண்டி வீதிக்கு வந்தார்கள் மக்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மொத்த தமிழகமே வீதிக்கு வந்து ஒரே குரலில் முழங்கியது. இவை தான் அரசை நிர்ப்பந்தித்து பின்வாங்க வைத்தது. ஓரளவு வெற்றியும் கிட்டியது.

இவை தற்காலிகமானவையே, ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை திட்டங்களைச் செயல்பத்துவதற்கான அனைத்து வேலைகளையும் அரசும், நீதிமன்றமும் செய்துவருகிறது. இந்த அரசுக் கட்டமைப்பு மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்டுக்களுக்கானது என மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

எனவே, நமது போராட்டங்கள் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக மட்டுமின்றி, அவை மீண்டும் இந்த மண்ணில் செயல்படுத்தாமல் நிரந்தரமாக தடுப்பதற்கு அரசுக் கட்டமைப்பை எதிர்த்த போராட்டமாகவும் மாற வேண்டும்.

இவற்றை விளக்கும் வகையில் தான் புதுச்சேரி மக்கள் அதிகாரம் சார்பில் நடக்கும் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம், புதுச்சேரி.
தொடர்புக்கு: 87542 05589

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க