விருதாச்சலத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து, போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாரக் கோரி, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 20.09.2019 அன்று காலை 11 மணி அளவில் விருதாச்சலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
♦ கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

இதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அனைத்து விவசாய சங்கங்களின் மாநிலச் செயலாளர்  திரு ஸ்டீபன், ஜனநாயக விவசாயிகளின் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் திரு அன்பழகன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் மற்றும் கடலூர் மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருதாச்சலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க