“காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலத்தை உடைத்துத் தள்ளி விட்டது இந்திய அரசு” என்கின்றனர் காஷ்மீரிகள். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் அரசியல் சாசன பிரிவு 370, 35A ஆகியவற்றை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தார் அமித்ஷா.

வரலாற்று ரீதியாக காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளும்போது கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது இந்திய அரசு.

இந்த அறிவிப்புக்கு முந்தைய நாளே, காஷ்மீரில் தொலைத்தொடர்பு, இணையம், போக்குவரத்து என அனைத்தையும் முடக்கி விட்டுக் கூடுதலான இராணுவத்தையும் குவித்திருந்தது இந்திய அரசு. மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகச் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டன.

இந்திய அரசின் துரோகத்தை எதிர்த்த காஷ்மீர் மக்களின் போராட்டம் பெல்லட் குண்டுகளாலும், தோட்டாக்களாலும், கைதுகளாலும் முடக்கப்பட்டன.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, காஷ்மீரில் அமைதி நிலவுவதாக, பெரும் பான்மை ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக எழுதின. காஷ்மீரில் நிலவுவது மயான அமைதி. காஷ்மீர் மட்டுமல்ல, இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டும் காணாதவாறு, மொத்த நாடே அமைதியில்தான் இருக்கிறது.

காஷ்மீருக்கு வளர்ச்சியைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்நடவடிக்கை என்றார் அமித்ஷா. காஷ்மீரில் பிறர் சொத்து வாங்குவதைத் தடைசெய்யும் சட்டப்பிரிவு 35A நீக்கத்திற்குப் பின், சில நாட்களிலேயே முகேஷ் அம்பானி காஷ்மீரில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவிக்கிறார். எனில் இது கார்ப்பரேட்டுகளுக்கான வளர்ச்சி அன்றி வேறென்ன?

இது வெறுமனே காஷ்மீரோடு முடியக் கூடிய விசயமல்ல. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், சாகர்மாலா, எட்டுவழிச்சாலை, அதானி துறைமுகம் என ‘வளர்ச்சித் திட்டங்கள் வரிசைகட்டி நிற்க, காஷ்மீரில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகள் அரசால் இங்கும் பின்பற்றப்படுகின்றன.

இன்று நாம் காஷ்மீரின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள மறந்தால், நாளை தமிழகமும் இராணுவ ஆட்சியின் கீழ்வரும். இந்திய அரசின் இராணுவ ஆட்சியில் காஷ்மீர் மக்கள் படும் துயரங்களையும் அதை எதிர்த்து நிற்கும் அவர்களது நிலைமையையும் போராட்டக் குரலையும் தொகுத்து அளிக்கிறது இந்நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“காஷ்மீர் : துயரமும் போராட்டமும்” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு
  • காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது!
  • தெருக்களே வகுப்பறை! கற்களே பாடநூல்கள்!!
  • காஷ்மீர் மக்களின் கண்களைப் பறிக்கும் இராணுவம்
  • காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?
  • டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் காஷ்மீரிகள் தேவையில்லை!
  • பிரிவு 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம்!
  • இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் காஷ்மீர்!!
  • காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி!
  • கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது!
  • ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம்!
  • இந்தியா தோற்றுவரும் யுத்தம்!
  • இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள்!
  • “தந்தையர் இல்லா காஷ்மீர்” – திரைப்படம் கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை!
  • இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள்!
  • காஷ்மீர் மக்களைக் கொன்ற இராணுவ அதிகாரி! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம்!
  • பயங்கரவாதத்தையும் போர்ச் சூழலையும் வளர்க்கும் இந்தியா!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மீ டு இயக்கம்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மனுநீதி 2.0
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க