டந்த ஆகஸ்டு 5-ம் தேதி அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப் பிரிவின் படி காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபரில் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

எங்கும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் சிறையில் இருக்கின்றனர். பிரதான கட்சிகளான மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்துவிட்டன. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத நிலைமை இது. அரசியல் கட்சி தலைவர்கள், அவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள், வியாபாரிகள், ‘பிரிவினைவாதிகள்’ என ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் தானே பந்துவீசி தானே பேட்டிங் செய்து ஸ்கோரைத் தட்டிவிடலாம் என கணக்கு போட்டது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல்.

Kashmir-Poll
துப்பாக்கி முனையில் ஓட்டு போடும் காஷ்மீரிகள். இதுவா ஜனநாயகம்…?

370 சட்டப் பிரிவின் படியான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதால் கிடைக்கும் ‘நன்மைகள்’ குறித்து இரண்டு மாதங்களாக காஷ்மீர் முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளது பா.ஜ.க. பா.ஜ.க.வின் ‘தொண்டர்கள்’ 24X7 என தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தனர். செல்வாக்கில்லாத காங்கிரசு கட்சி மட்டும் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டி இடப் போவதாக அறிவித்தது. இருப்பினும், செல்வாக்குள்ள மாநிலக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால் சுயேட்சைகளுக்கும் பி.ஜே.பி.-க்குமான தேர்தலாக இது மாறியது. தனது கட்சியில் கீழ்மட்டத்தில் இருக்கும் ரௌடிகள், குண்டர்கள், பண்டாரம் பரதேசிகளுக்கெல்லாம் கொள்ளையடிப்பதற்கு இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை ஒரு நல்வாய்ப்பாகக் கருதியது.

ஆனால், “ஆயிரம் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்” என்பது போல இத் தேர்தலில் பா.ஜ.க.வின் நிலை மோசமாகிவிட்டது. மொத்தமுள்ள 307 பஞ்சாயத்து தொகுதிகளில் 217 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். ஏறக்குறைய ஒரு மாத காலம் முழுவதும் பா.ஜ.க. மட்டுமே பெரும் பலத்துடன் பிரச்சாரம் செய்த பொழுதும் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. 81 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது பா.ஜ.க.

குப்வாரா, பாண்டிபோரா, காண்டர்பால், ஸ்ரீநகர், குலகம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. பாரமுல்லா மாவட்டத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
♦ ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

காஷ்மீரில் பா.ஜ.க.-விற்கு கிடைத்த ஒரே ‘வெற்றி’ ஷோபியன் மாவட்டம்தான். அங்குதான் எட்டு இடங்களையும் பா.ஜ.க. வென்றது. ஆனால், அதில் ஆறு இடங்களில் எதிர்த்து யாரும் போட்டி இடவில்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

மற்றொருபுறம், இதுவரை இல்லாத வகையில் 98.3% வாக்குப் பதிவு நடந்ததாக மோடி அரசும், அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் கூறுகின்றன. சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது முதல் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்; பல எதிர்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. ஆனாலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 98.3% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக மோடி அரசு சொல்கிறது.

யாரையும் போட்டியிட விடாது தடுத்துவிட்டு, அதை ‘போட்டி’ என்கிறது பாஜக.

மோடி அரசு சொல்வது போல இது உண்மையாக இருந்தால் அதன் பொருள் என்ன? அதாவது, மாநிலக் கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. மட்டும் போட்டி இட்டு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மக்களை நிறுத்தி நடத்தப்பட்ட தேர்தலில் கூட மக்கள் பா.ஜ.க-வை வெற்றி பெறச் செய்யவில்லை, சுயேட்சையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பு என்பது, பா.ஜ.க. முகத்தில் காஷ்மீர் மக்கள் காறி உமிழ்ந்திருப்பதையே காட்டுகிறது.

ஆனால், பா.ஜ.க. சொல்வது போல அங்கு தேர்தலில் 98.3% வாக்குப் பதிவு நடக்கவில்லை என்பதற்கு பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தொகுதி பக்கமே செல்லவில்லை. பாதுகாப்பு கருதி ஸ்ரீநகரில் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர் ஊருக்குள்ளே போய் ஓட்டு கேட்கவேமுடியாது என்ற நிலைமை பல இடங்களில் நிலவியது. இதுமட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 137 வட்டாரங்களில் 19,582 இடங்களுக்கு 7,528 இடங்களில் மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 12,054 (61.5%) இடங்களுக்கு யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுதான் எதார்த்த கள நிலைமை. இந்த நிலைமை இருந்தபோதிலும் மக்கள் 98.3% மக்கள் வாக்களித்ததாக பா.ஜ.க. சொல்வது எவ்வளவு பெரிய பொய்!

பொய்களின் மூலம் பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறது. ஏனெனில், அதனிடம் உண்மை இல்லை. உண்மை அதனிடம் இருக்கவும் முடியாது. காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்திவிட்டதாகவும் பா.ஜ.க. தான் செல்வாக்காக இருக்கும் மாநிலங்களில் ஒரு பொய்யைப் பரப்பலாம். உண்மை அதற்கு நேரெதிரானது, அது அதற்குரிய வினையை ஆற்றியே தீரும். அது மோடியாலோ அவர்களை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளாலோ அந்த உண்மையை மறைத்துவிட முடியாது.

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

இவ்வளவு பேர் சுயேட்சைகள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்ற கேள்விக்கு விடை தேட ஒரு சம்பவத்தை மட்டும் பார்ப்போம். குப்வாரா மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தலில் ஷாடிகாம் கிராமத்தில் இருந்து 41 வயதுடைய நசீமா பானோ போட்டியிட்டார். அவரது ஒரே கோரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (PSA) கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்ற தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே. இதுபோல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். சுயேட்சைகள் அதிக அளவில் வெற்றிபெற்றதற்கான காரணமும் இதுதான்!

***

ரோடு போடுதல், பள்ளிக்கூடம் கட்டுதல், தெருவிளக்குக் கம்பம் அமைத்தல், உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், பாலம் கட்டுதல் போன்றவற்றில் காண்ட்ராக்ட் எடுத்து கமிசன் பார்ப்பது, டூவீலர் ஸ்டாண்ட், காய்கறி சந்தை போன்றவற்றில் வரும் வருவாயில் கமிசன் அடித்தல், நூறுநாள் வேலைத்திட்டம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு முகாம் போன்றவற்றிற்கு அரசு ஒதுக்கும் தொகையில் கமிசன் அடித்தல் என பலவகைகளில், உள்ளூர் அளவில் இருக்கும் பண முதலைகள், ரௌடிகள், ஆதிக்க சக்திகள், மாஃபியாக்கள், மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுதான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்.

அதிகாரப் பரவலாக்கல், வேர்மட்ட ஜனநாயகம், பஞ்சாயத்து ராஜ் என்று பல அலங்காரச் சொற்களால் மறைக்கப்படும் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி என்பது சாதி பலம், பண பலம், குண்டர் பலம் ஆகியவைதான் தீர்மானிக்கின்றன. பல கட்சிகள் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது, அது ஏதோ ஜனநாயகத் திருவிழா என்ற ஒரு பொய்யை தொடர்ந்து நிலைநாட்ட முடிகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் போன்ற இந்திய அரசின் ஆக்கிரமிப்பில் உள்ள இராணுவ ஆட்சி நடக்கும் பகுதிகளில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா என்று யாரும் சொல்வதில்லை. மாறாக, இவற்றை மக்கள் புறக்கணித்தே வந்துள்ளனர். இதுதான் வரலாறு.

இருப்பினும் தற்போது ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தல் இதற்கு விதிவிலக்கில்லை என்றாலும், இது பா.ஜ.க.வால், பா.ஜ.க.வின் கீழ்மட்ட குண்டர்களுக்காக மோடி அரசு நடத்திய தேர்தல் என்பதுதான் முக்கியமானது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், இதில் வெற்றி கிடைத்தது காஷ்மீர் மக்களுக்குத்தான்.

யாழினி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க