டந்த சனிக்கிழமை கேரளம், எர்ணாகுளம் மாவட்டத்தில் கொடநாடு பகுதியில் ஒரு மாமரத்தில் 22 வயதான ஆசிப் இக்பால் மண்டல் என்ற இளைஞன் தற்கொலை செய்துகொண்டார். பல நாட்களுக்கு முன்பே அவர் வைத்திருந்த உணவு, பணம் தீர்ந்து விட்டது. நம்பிக்கை இழந்த அவர் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். ஒரு முறையல்ல, இரு முறை கேரளத்திலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள  சொந்த ஊரான முர்ஷிடாபாத்திற்கு முன்பதிவு செய்து பயணசீட்டு பெற முயற்சித்தார்.  ஆனால் இரு முறையும் பதிவு ரத்தானது.

வயர் இணைய தளம் இந்த துயரம் குறித்து விசாரித்த போது ஆசிப்பின் தந்தை ஜபேத், உடன் இருந்தார். “எல்லாம் முடிந்து விட்டது’’, என்று மனம் உடைந்து கண்கலங்கினார். ஆசிப்பின் அத்தை மகனான அன்வருள் ஃபோனை எடுத்து, “அவரால் இனி பேச முடியாது, அந்த  செய்தி வந்ததிலிருந்து வீட்டில் இதுதான் நிலை, ஆசிப்பின் தாய் பல முறை மயக்கமடைந்து விடுகிறார்’’ என்றார்.

ஆசிப்பின் இளைய தம்பி அன்வர் ஹூசைன், தான், ஆசிப்பை பார்க்க கடந்த வியாழன் அன்று சென்றதாக கூறினார். அவர் பயமடைந்தும் பதட்டமடைந்தும் இருந்தார். வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்.

இறந்து போன ஆசிஃபின் தந்தை சகோதரர் மற்றும் அவரது தாயார். (படம் – நன்றி : த வயர்)

இரு முறை ரயில் டிக்கெட் ரத்தானதால் இனி ஒரு போதும் வீட்டிற்கு போக முடியாது என்று கருதினார். திரும்பவும் சென்றுவிட்டால் அங்கிருந்து ஒரு போதும் வரமாட்டேன் என்று ஆசிப் கூறினார் என்றார் அன்வர்.

சனிக்கிழமை இரவு அன்வரும் மற்றொரு நண்பரும் ஆசிப்பின் பிணத்தை ஒரு ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு முர்ஷிதாபாத்திற்கு புறப்பட்டனர். “இம்மாதிரியான முறையில் நாங்கள் ஊருக்கு போவோம் என்று ஒரு போதும் நினைத்ததில்லை’’ என்றார் அன்வர். 2900 கிலோமீட்டர், 48 மணிநேர பயணத்திற்கு பிறகு வியாழன் அன்று காலை 6.30 மணிக்கு ஒரு வெள்ளை நிற குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் தொம்கல் பகுதி ஷிரோபரா கிராமத்திற்கு போய் சேர்ந்தது. காலை 8.30 மணிக்கு அக்கிராமத்தில் உள்ள ஒரு இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

“அவர் ரயிலில் வீட்டிற்கு வரவில்லை, இப்போது அவனது இறந்த உடல் ஒரு ஆம்புலன்ஸில் வந்துள்ளது. இதற்கு ஆன செலவு ரூ 1,30,000. நாங்கள் ரூ 1,00,000 அந்த ஓட்டுனருக்கு கொடுத்தோம். இன்னும் ரூ 30,000 தரவேண்டியுள்ளது. நாங்கள் அந்த ஓட்டுனரை இன்று இரவு வரை இங்கேயே தங்குங்கள்; அதற்குள் பணம் ஏற்பாடு செய்கிறோம் என்று கேட்டோம்”.

படிக்க:
♦ டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !
♦ கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

ஆசிப்பின் மாமா ஆசருள் பிஸ்வாஸ் கூறினார், “அவர்களுடைய குடும்பம் மிக மிக ஏழ்மையானது; ஆசிப்பின் தந்தை மற்றொருவருடைய பண்ணையில் கூலியாக வேலைபார்க்கிறார். ஆசிப்தான் மூத்த சகோதரன், இந்த தொகை அவனுடைய உடலை ஊருக்கு கொண்டுவர எங்கள் கிராமத்தினர் முன்வந்து நன்கொடையாக கொடுத்தது.

ஆசிப்பின் தந்தை ஜாபத் ஒரு பண்ணையில் தொழிலாளியாக முர்ஷிபாத்தில் வேலை செய்கிறார். அதில் உருவாகும் மொத்த வருமானத்தில் 25% ஐ கூலியாக பெறுகிறார். இது குடும்பத்தை நடத்த மட்டுமே உதவுகிறது என்றனர் அந்த குடும்பத்தினர். பணத்தை சேமிப்பது என்பது எங்களுக்கு தொலைதூர கனவாகவே உள்ளது.

ஆறு மாதத்திற்கு முன்பு, ஆசிப்பும் அன்வரும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கேரளாவிற்கு சென்றனர். ஆசிப், கொடநாட்டில் உள்ள ஒரு செங்கல் சூலையில் தினசரி ரூ 450 கூலிக்கு வேலையில் தொடங்கினான். அன்வர், டைல்ஸ் தயாரிக்கும் ஃபேக்டரியில் தினசரி ரூ 600-ற்கு வேலைக்கு சேர்ந்தான்.

“ஆசிப் ஊருக்கு போகலாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மார்ச் 23 லிருந்து, அவன் வேலை செய்த அந்த செங்கல் சூளை மூடப்பட்டுவிட்டது. வேலையாட்களுக்கு கூலி பணம் கொடுக்கப்படவில்லை. ஆசிப் மனம் மிகுந்த வருத்தமடைந்தான். அவன் ஊருக்கு நடந்து சென்றுவிடவும் முடிவெடுத்தான். நிச்சயமற்ற இந்த 47 நாட்கள் அவனை கொன்றுவிட்டது”.

அந்த குடும்பம் இது வரை எந்த உதவியும் மாநில அரசிடமிருந்து வரவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியோ, தன்னார்வ தொண்டு நிறுவனமோ ஆசிப்பின் உடலை வீட்டிற்கு கொண்டுவர எந்த உதவியும் செய்யவில்லை. அன்வருள், அந்த இறப்பு செய்தி சனிக்கிழமை காலையில் வந்த உடனே  தொம்கல் நகராட்சி தலைவர் ரஃபிகுள் இஸ்லாம் அந்த குடும்பத்தை பார்வையிட்டு தான் கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்வதாக கூறியதை உறுதிபடுத்திக்கொண்டார். வியாழன் மதியம் வரை எந்த பண உதவியும் அந்த குடும்பத்திற்கு வரவில்லை.

“ அவன் ரயில் மூலம் வீட்டிற்கு வர முயற்சித்தான். ஆனால் இரு முறையும் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டது. இப்போது நாங்கள் அவனது உடலை எடுத்து வர இலட்ச கணக்கில் செலவு செய்துள்ளோம். அரசு, முன்னரே ரயில் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தால் ஆசிப் உயிரோடு ஊருக்கு வந்திருப்பான்” என்றார் அன்வருள். பெங்கால் சம்ஸ்கிருதி மஞ்ச் என்ற சமூக அமைப்பு அரசின் இந்த செயலை வன்மையாக கண்டித்தது. இதற்கான விளக்கத்தை அரசு தரவேண்டும் என்று அது கோரிக்கை வைத்துள்ளது.

“மத்திய அரசின் இரக்கமற்ற செயலால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் அன்றாடம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புலம் பெயர் தொழிலாளர்களை ஊருக்கு கொண்டுவரவும், அவர்கள் குடியமர்த்தவும் முறையான திட்டமிடல் வேண்டும் என்று நீண்ட நாட்களாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசு பணக்காரர்களை  இந்தியாவிற்கு கொண்டுவர மட்டுமே கவனம் கொடுத்து செயல்படுகிறது. ஆசிப்பின் குடும்பத்திற்கு உரிய பொருளாதார நட்ட ஈடு தரவேண்டும் நாங்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்குதெரிவித்துகொள்கிறோம்.” என்று அந்த இயக்கத்தின் செயலாளர் கூறினார்.

தமிழாக்கம் : – முத்துக்குமார்
நன்றி : த வயர் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க