தை நினைத்துப் பாருங்கள்.

ஒரு நாள், உங்கள் வீட்டு வாசலில் அழைப்பு மணி ஒலிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு உங்கள் நகரம்  அல்லது கிராமத்தில் ஏற்பட்ட சில போராட்டம் குறித்து உங்களுடன் பேச வேண்டும் என்று கூறும் ஒரு சில காவல்துறை அதிகாரிகளை வாசலில் நிற்கிறார்கள். சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருப்பதால், நீங்கள் காவல்துறையினருடன் உள்ளூர் காவல் நிலையத்துக்குச் செல்கிறீர்கள்.

நிகழ்வின்போது, நீங்கள் இருந்த இடத்தைப் பற்றிய அவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கிறீர்கள், ஒரு கடுமையான சட்டம் என நீங்கள் நம்புவதற்கு எதிரான போராட்டங்களில் நீங்கள் எவ்வாறு பங்கேற்றீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கிறீர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் செய்யும் வேலையை விளக்குகிறீர்கள். உங்களிடம் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் காணப்படவில்லை, உங்கள் வங்கி மற்றும் தொலைபேசி பதிவுகள் எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் உங்களுடைய தொடர்பை காட்டவில்லை.

ஆனபோதும், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967 இன் கீழ் நீங்கள் ஒரு குற்றத்தைச் செய்துள்ளீர்கள் என நம்புவதாகக் கூறும் காவல்துறையினரால் நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள். பயங்கரவாத நடவடிக்கைகளைத் திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள் என்றும், அதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆதாரம் உங்களுக்கு வழங்கப்படவில்லை.

படிக்க:
♦ பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்
♦ கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்

காவல்துறையினர் உங்களை காவலில் வைத்த பிறகு, நீங்கள் பிணைக்கு விண்ணப்பிக்கிறீர்கள். இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த விவகாரம் வரும்போது, நீங்கள் பாகிஸ்தான் உயர் ஆணையகம் மற்றும் சீனாவைச் சேர்ந்த உளவாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தீர்கள் என்பதையும், நீங்கள் பயங்கரவாத நடவடிக்கைக்கு நிதியளிக்கும் ஹவாலாவின் மையமாக இருந்தீர்கள் என்பதையும் காட்டும் ஒரு குற்றச்சாட்டு ஆவணம் இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது.

‘குற்றச்சாட்டு ஆவணம்’ என்பது தட்டச்சு செய்யப்பட்ட (கையால் எழுதப்படாத) தகவலுடன் கூடிய ஒரு தாள், இது பெயர் அல்லது உங்கள் வங்கிக் கணக்கு, அல்லது நீங்கள் தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் உளவாளிகள் எவரையும் குறிப்பிடவில்லை, ஆனால் ஒரு சீரற்ற எழுத்துக்களில் இருந்த ஒருவர் ஹவாலா நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறது.

முழு சதித்திட்டத்திலும் உங்கள் பங்கை வெளிப்படுத்தும் சாட்சிகள் வழங்கிய வாக்குமூல ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. சாட்சிகளின் வாக்குமூலங்களின் நகல்களை நீங்கள் கேட்கிறீர்கள்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 161 ன் கீழ் காவல்துறையினர் சில வாக்குமூல அறிக்கைகளை வழங்குகிறார்கள், அவை அனைத்தும் ஒரே விதமாக எழுதப்பட்டும் எழுத்துப் பிழைகளும்கூட ஒரே விதமாக இருக்கிறது. மேலும் உங்களுக்கு எதிராக எந்தவொரு குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் அது கொண்டிருக்கவில்லை, அல்லது உங்களுக்கு எதிராக என்ன ஆதாரங்கள் மீட்கப்பட்டன என்பதையும் கூறவில்லை. இந்த அறிக்கைகள் அனுமதிக்க முடியாத சான்றுகள் என்று நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள், மேலும் நீங்கள் எந்த விதத்திலும் குற்றவாளி என்பதைக் கூட அவை காட்டவில்லை என சுட்டிக்காட்டுகிறீர்கள்.

சிஆர்பிசி-யின் பிரிவு 164-ன் கீழ் குற்றவியல் நடுவர் முன் சாட்சிகளால் பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள் தங்களிடம் உள்ளன, அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த சாட்சி வாக்குமூலங்களை நீங்கள் அணுக முடியாது, ஏனெனில் அவர்கள் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும். சாட்சிகளை அடையாளம் காண முடியாது என்பதை உறுதி செய்வதற்காக காவல்துறையினர் அறிக்கைகளைத் திருத்தியதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்று கூறுகிறீர்கள். அவர்கள் மறுக்கிறார்கள், பின்னர் அவற்றை நீதிபதியிடம் கூட வழங்க வேண்டாம் அல்லது உங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இந்த வாக்குமூலங்களை குறிப்பிட வேண்டாம் என அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவல்துறையினரைக் கேட்கிறார், அவர்கள் அவருக்கு வழங்கியதைப் பார்க்கிறார், உங்கள் பிணை விண்ணப்பத்தை மறுக்கிறார், உங்களுக்கு பிணை வழங்க சட்டம் அனுமதிக்காது என்று கூறுகிறார். உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் முறையீடுகள் நிராகரிக்கப்படுகின்றன.

காவல்துறையினர் புதிதாக ஒருவரைக் கைதுசெய்த ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதிய துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்வதால், உங்கள் வழக்கு விசாரணை தொடங்கப்படாமலேயே நீங்கள் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் வழக்கு விசாரணை நடைபெறுகிறது. குற்றச்சாட்டுக்குரிய ஆவணம் பொருத்தமற்றதாக தெரிய வருகிறது. பிரிவு 161-ன் கீழ் உள்ள அறிக்கைகள் அனுமதிக்க முடியாத சான்றுகள். பிரிவு 164 வாக்குமூல அறிக்கை அளித்தவர்கள் உங்களை ஒருபோதும் குறிப்பிடவில்லை என்பதும் தெரிய வருகிறது.

ஒரு இந்திய சிறைச்சாலையின் புகழ்பெற்ற விருந்தோம்பலில் ஐந்து ஆண்டுகள் (விசாரணை முடிந்தவுடன்) கழித்த பிறகு, நீங்கள் வெளியே வருகிறீர்கள். உங்கள் வேலை பாழாகிவிட்டது, உங்கள் உறவுகள் முறிந்தன.

மேலும், உங்களுக்கு எதிரான வழக்கு தவறானதாகவும் உங்களுக்கு தீங்கிழைக்கும் நோக்கத்துக்காக போடப்பட்டதாக தெரிய வந்தாலும், நீங்கள் எதிர்க்கொண்ட எந்தவொரு துன்பத்துக்கும் இழப்பீட்டை நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது.

அருமையானதாக தோன்றுகிறது, இல்லையா?

இவை அனைத்தும் மேலே சற்று மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் இந்தியாவில் தொடுக்கப்படும் உபா (UAPA) தொடர்புடைய வழக்குகளின் முகத்தில் அறையும் உண்மை நிலவரம் இது.

காலவரிசையை  நம்பவில்லையா? பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேளுங்கள், அவர்கள் மீது நடந்து வரும் வழக்கில் இதுபோன்ற ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்கள்(அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்). அது மட்டுமல்லாமல், இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு பலர் விடுவிக்கப்பட்டனர் அல்லது கடந்த காலத்தில்  (நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது அதற்கு மேற்பட்டு சிறைகம்பிகளுக்கு உள்ளே இருந்த பிறகு) வெளியேற்றப்பட்டனர்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!
♦ பாகிஸ்தானின் புதிய அரசியல் வரைபடம் !

ஆதாரங்களைப் பற்றிய காஃப்காதனமான விஷயங்களை நம்பவில்லையா? நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடாத ஒரு பெயரான ஜாபூர் அஹ்மத் ஷா வட்டாலியிடம் கேளுங்கள், ஆனால் இது சட்டத்தின் கல்லில் எழுதப்பட்டுள்ளதால், இது அனைத்தையும் சாத்தியமாக்குகிறது.

UAPA வழக்குகள், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பொருந்தக்கூடிய அனைத்து தீவிரத்தன்மையுடனும், ஜோடிக்கப்பட்டவையாக இருப்பதை நம்பவில்லையா? விடுவிக்கப்பட்ட அல்லது வழக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட 67 விழுக்காடு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் கேளுங்கள்.

எனவே, கற்பனையானதாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கலாம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறிய கற்பனையானது உண்மையில் UAPA சட்டம் மக்களை விசாரணையில்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்க அனுமதித்த விதத்தை அடித்தளமாகக் கொண்டது. தீர்வு எதுவாக இருந்தாலும் இது அவர்களுக்கு தண்டனை தரும் செயல்முறையாக இருந்தது.

ஒருவேளை மிகவும் நம்பமுடியாத வகையில், UAPA வழக்குகளின் உண்மைதன்மை என்பது காவல்துறையினர் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாகவோ அல்லது கீழ் நீதிமன்றங்கள் அதை தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகவோ இல்லை.

ஒரு நபருக்கு எதிராக நியாயமான ஆதாரங்கள் எதுவும் இல்லாதபோது கூட பிணை மறுக்கும் இந்த திறன் UAPA க்கு உள்ளது. மேலும் இது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் இந்திய உச்சநீதிமன்றத்தால் சட்டத்தின் சரியான விளக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.

உமர் காலித்தை இது என்ன செய்யும்?

சரி, சட்டத்திற்கு உமர் காலித் உடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நீங்கள் அவரை நேசிக்கிறீர்களோ அல்லது அவரை வெறுக்கிறீர்களோ அல்லது அவரைப் பற்றி அலட்சியமாக இருந்தாலும், டெல்லி கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறி உமர் காலித் UAPA வழக்கின் கீழ் டெல்லி காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் வழக்கின் பார்வை உள்ளது.

அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அல்லது அவர்கள் இறுதியில் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டாலும், உமர் காலித்தின் வழக்கு, அவரைப் போன்ற ஒரு முழு அரசியல் போராட்டக்காரர்களை வரவிருக்கும் ஆண்டுகளில் சிறையில் அடைக்க உபா எவ்வாறு பயன்படும் என்பதைப் பார்க்க ஒரு பயனுள்ள ஆய்வாக இருக்கும் .

செப்டம்பர் 16, புதன்கிழமை, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு தனது 17,000 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த மிகப்பெரிய குற்றப்பத்திரிகை உமர் காலித் உட்பட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. அதற்காக, அடுத்தடுத்த மாதங்களில் துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும்.

நவம்பர் 2018-ல் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பீமா கோரேகான் வழக்கைப் போலவே, இந்த வழக்கில் விசாரணையை நாம் நீண்ட காலத்துக்குப் பார்க்கப் போவதில்லை என்பதை இது தெளிவுபடுத்தும். ஆனால் விசாரணை இன்னும் தொலைதூர கனவுதான் . அந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் அதிகமான செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படும்போது, செப்டம்பர் மாதத்தில் நடந்ததைப் போலவே, காவல்துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய அதிக நேரம் பெறுகிறார்கள், விசாரணை தொடங்குவதை தாமதப்படுத்துகிறார்கள்.

எஃப்.ஐ.ஆர் 59  பதிவுசெய்யப்பட்ட பல மாதங்களுக்குப் பின் உமர் காலித் கைது செய்யப்பட்டிருக்கிறார், இது இங்கேயும் அதேபோன்ற அணுகுமுறை பின்பற்றப்படுவதைக் குறிக்கிறது. காவல்துறையினரால் உமர் காலித்திற்கு எதிரான சான்றுகள் பற்றி நமக்குத் தெரிந்தவை, வாக்குமூலம் மற்றும் சாட்சி அறிக்கைகள், அமெரிக்க அதிபர் வருகை தருவதை யாரும் அறிவதற்கு முன்பே அவர் டொனால்ட் டிரம்ப்பின் வருகையை சீர்குலைக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என கூறுவதும், மக்கள் வன்முறைக்கு இலக்காகிவிடக்கூடாது என அவர் வெளிப்படையாக பேசியதும்தான்.

ஒருவேளை இறுதியில் துணை குற்றப்பத்திரிகைகள் இன்னும் ஏதையாவது சேர்க்கலாம்.

அப்படியிருக்க  – எஃப்.ஐ.ஆர் 59-ல் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரையும் போல உமர் காலித் (மனிதாபிமான அடிப்படையில் பிணை பெற்ற சஃபூரா சர்கரைத் தவிர) – பல ஆண்டுகளாக சிறையில் சிக்கித் தவிக்கப்போவது ஏன்?

பதில் UAPA-ன் பிரிவு 43D (5) இல் பொதிந்துள்ளது.

வழக்கமான கிரிமினல் வழக்குகளில், பிணை விதிமுறையாக உள்ளது. விசாரணைக்கு முந்தைய சிறை விதிவிலக்காக இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் ஒத்துழைக்கிறார்கள் என்பதைக் காட்ட முடியுமானால், குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தை மீண்டும் செய்ய வாய்ப்பில்லை,  தப்பிக்கவோ அல்லது சாட்சிகளை அச்சுறுத்தவோ போவதில்லை அல்லது சாட்சியங்களை சேதப்படுத்தவோ முடியாது என தெரிய வரும்போது- பிணை வழங்க முடியாத குற்றங்கள் என்று அழைக்கப்பட்டாலும் கூட அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்க முடியும்.

எவ்வாறாயினும், உபாவின் பிரிவு 43 டி (5), உபா(பயங்கரவாதம் மற்றும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தது)வின் அத்தியாயங்கள் IV மற்றும் VI இன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, வழக்கு நாட்குறிப்பு மற்றும் போலீசு அறிக்கையை ஆராய்ந்த பின்னர், ‘அத்தகைய நபருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்மையானது என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன என்று கருதும்பட்சத்தில்’ பிணையில் நீதிமன்றம் விடுவிக்காது.

உபாவின் கீழ் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான உண்மையான ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல், பிணை பெறுவதற்கான தடையாக காவல்துறையும் என்ஐஏவும் பல ஆண்டுகளாக கருதுகின்றன. 2008 ஆம் ஆண்டில் உபாவில் இந்த விதி சேர்க்கப்பட்டதிலிருந்து பல ஆண்டுகளாக, விசாரணை நீதிமன்றங்களும், ‘குற்றச்சாட்டின் முகாந்திரம்’ என்ற வார்த்தையின் பயன்பாட்டின் காரணமாக இதை விதிமுறையாகப் பார்க்கின்றன.

படிக்க :
♦ சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
♦ 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?

எவ்வாறாயினும், 2018-ம் ஆண்டில், என்ஐஏ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜாகூர் அஹ்மத் ஷா வட்டாலி, அவருக்கு எதிரான மேலோட்டமான ஆதாரங்களால் பிணை பெற முயன்ற வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது .

உபாவின் பிரிவு 43 டி (5)-ன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பிணை மறுத்துவிட்டது. ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம், ஆதாரங்களின் தன்மையைப் பொறுத்தவரை, வட்டாலிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முகாந்திரத்தில் “நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை” என்று கண்டறிந்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும், இது அத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட அதிக சுமையை ஒப்புக் கொண்டது, மேலும் உபாவில் எப்படி பிணை பெற இயலாது என்பதையும் ஒப்புக் கொண்டது. ஒருவரை சிறையில் தள்ளுவதை விட, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கின் நியாயத்தை மதிப்பீடு செய்ய நீதிமன்றங்கள் கோருவதன் மூலம் இது ஒரு நியாயமான உணர்வை ஊக்குவித்தது, ஏனெனில் காவல்துறை அவர்களை குற்றவாளிகள் என்று கூறி சில சீரற்ற ஆவணங்களின் மூலம்  சிறையில் அடைத்தது.

பின்னர் ஏப்ரல் 2019-ல், உச்ச நீதிமன்றம் அவற்றையெல்லாம் நீக்கியது. உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். கான்வில்கர், டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிணை வழங்கும் அணுகுமுறையை  ’பொருத்தமற்றதாக’ பார்த்தார். விசாரணையால் வழங்கப்பட்ட பொருளை முழுவதுமாக நீதிமன்றம் பார்ப்பதைவிட, வழக்கில் முகாந்திரம் இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

எனவே உச்சநீதிமன்றம் உங்களுக்கு எதிராக காவல்துறையிடம் என்ன இருக்கிறது என்பது முக்கியமல்ல, உபா பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆளானால் நீங்கள் பிணை பெற முடியாது. ஆதாரங்கள் புனையப்பட்டதாகத் தோன்றினால் அதற்கு ஒரு பொருட்டல்ல (பீமா கோரேகான் வழக்கில் சில விஷயங்கள் குறித்து நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கண்டுபிடித்தது போல). உங்களுக்கு எதிராக ஆதாரங்களை உண்மையில் பயன்படுத்த முடியாவிட்டாலும் அது ஒரு பொருட்டல்ல. சான்றுகள் முற்றிலும் பொருத்தமற்றவை என்றால் அது ஒரு பொருட்டல்ல.

நீங்கள் குற்றத்துடன் இணைந்திருப்பதைக் காட்டுகிறது என்று காவல்துறை சொன்னால்,  நீங்கள் சிறையில் சிக்கிக் கொண்டாலும், என்ன நடக்கிறது என்பதை நீதிமன்றத்தால் தெளிவாகக் காண முடிந்தாலும்..

அதனால்தான், டெல்லி கலவரங்கள் குறித்து டெல்லி காவல்துறை விசாரணையை பொருட்படுத்தாமல், சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமே வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள் என்ற உண்மையைப் பொருட்படுத்தாமல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான மிகவும் சந்தேகத்திற்குரிய ஆதாரங்களைப் பொருட்படுத்தாமல், உமர் காலித் உள்ளிட்டோர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் ஒரு நீண்ட காலத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் எந்தக் குற்றமும் செய்யவில்லை எனத் தெரிந்தாலும் டெல்லி காவல்துறையின் விசாரணை பக்கச்சார்பானது என்றும் தெரிந்தாலும்கூட அவர்கள் நீண்ட காலம் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.

அதில் இங்குள்ள உயர்ந்த  நீதிமன்றத்தின் ஒப்புதல் முத்திரை இருக்கும்.

கட்டுரை: வகாசா சச்தேவ்
தமிழாக்கம் : அனிதா
நன்றி:
த க்விண்ட்