அனைவரும் பங்கேற்று வரலாறு படைப்போம் !
மக்கள் உழைப்பையும் நாட்டின் வளங்களையும் சூறையாடும் கார்ப்பரேட் -காவி பாசத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் !

அன்பார்ந்த தொழிலாளர்களே!

விலைமதிக்க இயலாத இரயில்வே குத்தகைக்கு, BSNL, LIC பொதுத்துறை பங்குகள் விற்பனை, மொத்தமாக தொழிலாளர் சட்டங்கள் திருத்தம், புதிய வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, சுற்றுசூழல் திருத்தச் சட்டம், ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாக கிரிமினல் சட்டங்களில் திருத்தங்கள் என கொரானா நெருக்கடியிலே தினமொரு திருத்தங்கள் செய்து மொத்த நாட்டு மக்களையும் அடக்கி, ஒடுக்கி மக்களின் பல நூறாண்டு உழைப்பையும் நாட்டின் வளங்களையும் கார்ப்பரேட்களுக்கு தாரை வார்த்துக்கொண்டிருகிறது, காவி பாசிஸ்டுகளின் தலைமையிலான மத்திய அரசு.

தொழிலாளர்கள் சட்டங்கள் திருத்தம்: இதன் மூலம் பணிநிரந்தரமில்லாமல் அற்பக் கூலிக்கு வரம்பில்லாமல் உழைப்பை சுரண்டுவதை உத்திரவாதம் செய்கிறது. நீம், FTE, அப்ரண்டீஸ், காண்ட்ராக்ட் என தொழிலாளர்களின் உழைப்பை சுரண்ட பல திட்டங்கள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

படிக்க :
♦ நவம்பர் 26 : தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
♦ அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!

புதிய வேளாண் சட்டங்கள் : கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு வசதியாகவும் சிறு – குறு விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லவும் வழிவகுக்கிறது. நாட்டின் சந்தைவாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்த முடியும் எனக் கூறும் அரசு 74 ஆண்டுகளில் அதனை ஏன் செய்யவில்லை என்ற மக்களின் கேள்வியிலிருந்தே விவசாயிகள் பக்கம் அரசு இல்லை என்பது விளங்கிவிடும். விளைபொருளுக்கு பொருத்தமான விலை வழங்காமல் சந்தைவாய்ப்பு என அரசு கூறுவது நட்டாற்றில் விவசாயிகளை இறக்கிவிடுவதாகும்.

பொதுத்துறைகள் தனியார்மயம் : மக்களின் வரிப்பணத்தில் கட்டியெழுப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் என்ற பெயரில் கார்ப்பரேட் சூறையாடலுக்கு திறந்துவிடப்படுகிறது. பல லட்சம் கோடி மதிப்புள்ள 74 ஆண்டுகளில் வளர்க்கப்பட்ட பொதுத்துறைகள் அற்பத்தொகைக்கு குத்தகை, பங்கு விற்பனை என்பது உலகிலேயே மிகப்பெரிய ஊழல், மோசடி என்றால் மிகையில்லை.

சுற்றுசூழல் திருத்தச் சட்டங்கள் (ElA) : இயற்கை வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் சூறையாடுவதில் இருக்கககூடிய கட்டுப்பாடுகளை நீக்கி நாட்டை பாலைவனமாக்கவும் மக்கள் கேள்வி கேட்கும் உரிமையையும் பறித்துவிடுகிறது.

புதிய கல்விக் கொள்கை (NEP) : 3, 5, 8, 10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் என வடிகட்டுவதும் பள்ளியிலே தொழிற்கல்வி என்பது மாணவர்களின் கல்வி உரிமையை பறித்து குறைந்த கூலிக்கு வேலையாட்களை தயார்படுத்தவே எத்தணிப்பதாகும்.

கிரிமினல் சட்டங்களில் திருத்தம் : இந்த அரசு கார்ப்பரேட் கொள்ளை துணைபோகிறது, மற்றொரு கிழக்கிந்திய கம்பெனியாட்சி என்று யாரேனும் விமர்ச்சித்தால் விசாரணையின்றி, பிணை கூட இல்லாமல் சிறையிலடைக்கவே சட்டதிருத்தங்கள் நடக்கின்றது.

அயோத்தியில் ராமர் கோவில், 3 ஆயிரம் கோடியில் படேலுக்கு சிலை என இந்த ஆட்சி ஏதோ இந்துக்களின் நலனுக்கான ஆட்சி என்று ஒரு தோற்றத்தை உருவாக்கப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக மோடி தலைமையிலான ஆட்சி தொடங்கியதிலிருந்து பணமதிப்பு நீக்கம், GST வரிக்கொள்கை முதல் புதிய வேளாண் சட்ட திருத்தங்கள் வரை இந்நாட்டில் ஆகப் பெரும்பான்மையான இந்துக்களை நாடோடிகளாக மாற்றியிருக்கிறது. இன்றளவில் சிறு-குறு தொழில்முனைவோர், விவசாயிகளை தற்கொலைக்கும் தள்ளியிருக்கிறது. இந்நாட்டின் பெரும்பான்மை இந்து மக்களையே காவு கேட்கும் இந்த ஆட்சியை நீடிப்பதற்கான காரணம் என்ன கேள்வியிலிருந்து தான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றி அமைக்கமுடியும்.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடிக்க கொண்டு வந்ததுதான் புதிய தாராளவாதக் கொள்கையாகும். இது தற்போது காட், காட்ஸ் ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா உட்பட பல நாடுகளை சூறையாடிக்கொண்டிருக்கிறது.

இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அதிக உற்பத்தி, குறைந்த கூலி கொள்கையால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்ததால் சர்வதேச அரங்கில் வீழ்ந்து கிடக்கும் முதலாளித்துவத்தை மீட்கவும் ஈடுகட்டுவதற்காகவும் சர்வதேச நிதி மூலதன ஆதிக்கம் கும்பல் கொடுக்கும் அழுத்தங்களுக்கு ஏற்ப அதாவது, குச்சியின் அசைவுக்கு ஆடும் குரங்கைப் போல மத்தியில் ஆளும் BJP ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஒருவேளை சர்வதேச கார்ப்பரேட் கொள்ளைக்கு உட்பட்டு ஆட்சி நடத்த வில்லை எனில் BJP ஆட்சி செய்ய இயலாது. கோடிக்கணக்கான இந்து மக்கள் பாதிக்கப்பட்டாலும் சர்வதேச நிதி மூலதன ஆதிக்கம் கும்பலுக்கு கொள்ளையடிக்க வசதியாக விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் , இயற்கைவளங்கள், பொதுத்துறைகள் தொடர்புடைய சட்டங்களை எல்லாம் திருத்திக் கொண்டிருக்கிறது, BJP தலைமையிலான மத்திய அரசு.

மற்றொரு பக்கம், BJP தனது கார்ப்பரேட் சேவையை மறைக்கவும் மக்களை திசை திருப்பவும் குடியுரிமை சட்ட திருத்தம், பாகிஸ்தான் தீவிரவாதம், சீனா ஊடுருவல், முஸ்லிம், கிறிஸ்தவர்கள் அன்னியக் கைக்கூலிகள், வங்கதேச அகதிகள் ஊடுருவல் என்று பல வழிகளில் ஆட்சியை தக்கவைக்க மக்களிடையே விரோத மனப்பான்மையையும், முரண்பாட்டையும் விசவிதைகளையும் திணித்துக் கொண்டிருக்கிறது.

உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை!

உதாரணமாக : இந்த புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்திய பிறகு இந்த நாட்டின் ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் குப்பை மேடாக மாறிக்கொண்டிருக்கிறது. குடிநீர் கூட விலை கொடுத்து வாங்கவேண்டும் என்ற கட்டாயம் வந்துள்ளது. மேலும் இந்தப் பொருளாதாரக் கொள்கை அடுத்த 25 ஆண்டுகள் நீடித்தால் இந் நாட்டு மக்கள் உணவுக்கும் சுகாதாரத்திற்கும் அல்லாடும் நிலைமை வந்து நிற்கும். உள்நாட்டு வளங்கள் சூறையாடப்பட்டு ஏற்படும் பற்றாக்குறைக்கு உள்நாட்டுக் குழப்பங்கள் தான் ஏற்படும். பார்ப்பன ஆர்எஸ்எஸ் பிஜேபி தலைமையானது இந்த நாட்டு மக்களின் பிரச்சனையை தீர்க்க ஒருபோதும் தயாராக இருக்காது. காரணம் என்னவென்றால் மனுதர்ம விதிகளின்படி உழைக்கும் மக்கள் (சூத்திரன்) பட்டினியில் உள்நாட்டிலே அகதியாக அலைவதில் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. வடமாநில மக்கள் 10 கோடி பேர் அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தானே ஆட்சி செய்து வருகிறார்கள் .

மேலும், ஒக்கி புயல், கஜா புயலுக்கு BJP தலைமையிலான அரசு தமிழக மக்களைக் காப்பாற்ற தேவையான எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. அதுபோல தற்போது மழை வெள்ளத்தால் நெருக்கடி ஆகும்பொழுது மக்களை உதவ இந்த அரசு தயாராக இல்லை.

கொரானா வைரஸ் : மருத்துவம், சுகாதாரத்துறைக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கினாலும் போதிய ஆய்வுகள் குறித்த விவரங்கள் இல்லாமல் கைதட்டவும் விளக்கேற்றவும் சொன்னதன் மூலம் அம்பலப்பட்டது, மோடி தலைமையிலான மத்திய அரசு. மற்றொரு பக்கம் கார்ப்பரேட் கம்பெனிகள் பல ஆயிரம் தொழிலாளர்கள் வைத்துக்கொண்டு ஆலைகளை இயக்கி கொள்ளையடிக்கவும் நிபந்தனைகளை தளர்த்திவிட்டிருகிறது. இது மொத்ததில் தோல்வியடைந்து, அம்பலப்பட்டு எதிர்நிலைக்கு சென்றுவிட்ட அதிகார கட்டமைப்பாகும்.

இது கார்ப்பரேட் நலனுக்கான அரசு என்பது அம்பலமாகிவிட்டது !
பொதுமக்கள் நலனில் அக்கரையில்லை என்பதும் தெளிவாகிவிட்டது !

தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், சிறு-குறு தொழில்முனைவோர் என அனைவரும் பங்கேற்போம்!
நாட்டின் சட்டங்கள், திட்டங்கள் வகுப்பதில் மக்களுக்கு அதிகாரம் வேண்டுமென முழங்குவோம்!
மக்களையும் நாட்டையும் சூறையாடும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க அணிதிரள்வோம் !

மத்திய அரசே!
💥 மக்கள் விரோத சட்ட திருத்தங்களை திணிக்காதே!
💥கார்ப்பரேட் கொள்ளைக்கு இயற்கை வளங்களையும் பொதுத்துறைகளையும் திறந்துவிடாதே!
💥 மக்களின் வாழும் உரிமைகளை பறிக்காதே!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு : 97880 11784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க