டந்த ஜனவரி மாதம் ஊரடங்கு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, கொரோனா காலத்தின் ஜனவரி 2020 முதல் ஜூன் 2020 வரை ரூ.8500 பணம் கேட்டு பில் அனுப்பியது பல்கலைக்கழக நிர்வாகம். கல்லூரி திறக்காமலேயே மாணவர்கள் மீது கட்டணம் கொள்ளையடிப்பதை கண்டித்து அன்றேப் தொடர் போராட்டத்தில் இறங்கினார்கள் மாணவர்கள்.

அதன் பிறகு, பல்கலைக்கழகத்தின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை மட்டும், தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜன் ஃபெயில் செய்துள்ளார். இதை கண்டித்தும் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள் மாணவர்கள். அந்தப் போராட்டத்தில் மாணவர்களுக்கு வெளியில் இருந்து பெரும் ஆதாரவு அதிகரிக்கவே பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் விடைத்தாளைத் திருத்தி மதிப்பெண்னை வெளியிடுகிறோம் என்று இரண்டு வாரம் கால அவகாசம் கேட்டது பல்கலைக்கழக நிர்வாகம்.

படிக்க :
♦ சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !
♦ சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !

அதன்பின், மாணவர்கள் வேலூரில் அகழாய்வு பணிக்கு சென்றுவிட்டு பல்கலைக் கழகத்திற்கு வந்தனர். கடந்த இரண்டு வாரமாக மதிப்பெண் வெளியிடுவது பற்றி பல்கலைக் கழத்தில் கேட்டு வருகின்றனர். ஆனால், நிர்வாகம் மாணவர்களை அலைய விடுகிறதே தவிர எந்த பதிலையும் மாணவர்களுக்கு தெரிவிக்கவில்லை.

தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜன்

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழைமை (16.3.21) அன்று நீண்ட நேரம் காத்திருந்த பிறகு தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திரராஜனை சந்தித்து பேசினர்.  “எங்களது மதிப்பெண்களை வழக்கமாக பல்கலைக்கழகத்தின் விதிப்படி INTERNAL, மற்றும் EXTERNAL என பிரித்து நோட்டிஸ் போர்டில் போடுங்கள்” என்று மாணவர்கள் கேட்டதற்கு, மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் சௌந்தரராஜன். “உன் இஷ்ட மயிருக்கெல்லாம் பண்ண முடியாது, எழவெடுத்தவனுங்களா, பொறுக்கி ரௌடிங்களா வெளியப் போங்கடா” எனவும் கூடுதலான தகாத வார்த்தைகளாலும் மாணவர்களை திட்டியுள்ளார். உடனிருந்த மாணவியிடம் பாலியல் துன்புறித்தலில் ஈடுபட்டுள்ளார். அதை எதிர்த்து கேட்ட மாணவர் ஒருவரை அடித்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

மாணவர்களை அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். பல்கலைக்கழகத்தின் பதிவாளரோ ஒருமுறை மாணவர்களை சந்தித்து, “மார்க் தானே.. போடச் சொல்கிறேன்”, என்று அலட்சியமான பதிலைச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். இது பாலியல்ரீதியிலான துன்புறுத்தல் என்பதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. மேலும் தொடர்ந்து மாணவர்களை பல்வேறு வகையில் மிரட்டிக் கொண்டிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

போராடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட புகார் கடிதம்

இந்நிலையில், 17.3.21 புதன்கிழமை அன்று இரவு தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜனை காப்பாற்ற, முன் தேதியிட்டுப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மீதே புகார் கடிதம் தயாரித்துள்ளது நிர்வாகம். காப் பஞ்சாயத்து நடத்துகிறது பல்கலைக்கழக நிர்வாகம் என போராடும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் ஒரு கமிட்டி அமைத்திருக்கிறோம். அதில் வந்து உங்கள் பிரச்சனைகளைச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளது நிர்வாகம். “இந்த கமிட்டியே ஒரு மோசடியானது என கருதுகிறோம், எனவே கமிட்டிக்கு வரும்படி எங்களுக்கு முறையாகக் கடிதம் கொடுங்கள், நாங்கள் கமிட்டிக்கு வருவதை பற்றி பரிசீலித்து சொல்கிறோம்” என்று கூறியுள்ளனர் மாணவர்கள்.

ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் கடிதம் தராமல், போராடும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தொடர்பு கொண்டு கமிட்டிக்கு வரும்படி அச்சுறுத்தல் செய்துள்ளது. அதில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், “எனது மகள் அறிவுப்பூர்வமாக யோசிக்கும் வயதையும் திறனையும் பெற்றிருப்பவள், எதுவாக இருப்பினும் அவளிடம் பேசுங்கள்” என்று நிர்வாகம் சார்பாக தொடர்பு கொண்டவரிடம் பதில் கூறியுள்ளனர்.

காணொலியை தரவிறக்கம் செய்ய

போராடும் மாணவியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் சௌந்திர ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவருக்கு துணைப்போகும் பல்கலைக்கழக பதிவாளர் மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தற்போதுப் போராடும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதேபோல், கடந்த செப்டம்பர், 2019-ம் வருடம், பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் நடத்தியதற்காகவும், பல்வேறு பிரச்சனைகளுக்குப் போராடியதற்காகவும், சென்னை ஆளுநரின் பரிந்துரையின் பெயரில் மாணவர் கிருபா மோகன் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்ததன.

போராட்ட களத்தில் இருக்கும் தொல்லியல் துறை மாணவர்கள்

தற்போது, கல்வி கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மாணவர்களை ஒடுக்குகிறது பல்கலைக் கழக நிர்வாகம். மாணவர்களின் போராடும் உரிமையைப் பறிக்கும் விதமாக தொடர்ந்து செயல்படும் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகவும், போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மற்ற கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் அமைப்புகள் தோள் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க