ஆன்லைன் வகுப்புகள்: ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது மோடியின் டிஜிட்டல் இந்தியா!

நாமக்கல் மாவட்டம் பெரிய கோம்பை ஊராட்சியில் இணைய வழிக் கல்விக்கு சிக்னல் கிடைக்காமல் மரத்தில் ஏறி அமர்ந்து பாடத்தைப் படிக்கும் மாணவரகள்.

டந்த 2020-ம் ஆண்டில் பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “’டிஜிட்டல் இந்தியா’ திட்டம் தற்போது மக்களின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது” என்று குறிப்பிட்டார். மேலும், “டிஜிட்டல் இந்தியாவுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கவேண்டும், ஏனெனில் வளர்ச்சிக்கு மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நம் நாடு கண்டிருக்கிறது. நமது நிர்வாக மாதிரியில் ‘தொழில்நுட்பம்தான் முதன்மையானது” என்றும் தெரிவித்தார்.

மோடி கூறிய டிஜிட்டல் வளர்ச்சி யாருக்கானது ? நகர்ப்புறத்தைச் சேர்ந்த உயர் நடுத்தர வர்க்க, மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே சாத்தியமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவே தொழில்நுட்ப மயமானதாக பீற்றிக் கொள்கிறது மோடி அரசு.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி, கல்லூரிக் கல்வியை ஆன்லைனில் ஏற்பாடு செய்து அதையே டிஜிட்டல் இந்தியாவாக அறிவித்த இந்த அரசாங்கத்திற்கு, கைபேசி வசதி கூட இல்லாத சாதாரண மக்கள் இன்னும் இந்த நாட்டில் நிறைந்திருப்பது தெரியாதா ? அவர்களது பிள்ளைகள் எல்லாம் திறன்பேசிக்கும், இணைய இணைப்பிற்கும் எங்கே செல்வார்கள் ?

படிக்க :
♦ ஆன்லைன் கல்வி : 71% சாலையோரம் வசிக்கும் மாணவர்கள் பாதிப்பு
♦ மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !

ஓரளவு வளர்ச்சியடைந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலேயே, கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கும் இணையவழிக் கல்வி சாத்தியமானதாக இல்லை.

இதனை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஏழை மாணவர்களின் கல்வியை பொசுக்கிக் கொண்டிருக்கிறது டிஜிட்டல் இந்தியா. இணையவழிக் கல்வியை ஏற்பாடு செய்த மத்திய மாநில அரசுகள் அதற்கான உபகரணங்களையும், உட்கட்டமைப்பையும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும் அல்லவா ? அப்படி இந்த அரசு செய்யத் தவறியது ஏன் ?

இந்தக் கேள்விக்கான பதிலில் தான் டிஜிட்டல் இந்தியா யாருக்கானது? என்ற கேள்விக்கான பதிலும் பொதிந்துள்ளது.


கருத்துப்படம் : மு.துரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க