தமிழகத்தைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு || புதிய ஜனநாயகம்

மாநில அரசுகளின் மீதான தனது குடுமிப் பிடியை வலுவாக நிலைநாட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட அதிகாரிகளை மாநிலங்களின் ஆளுநராகவும் பிற முக்கிய பொறுப்புகளிலும் பாசிச மோடி அரசு நியமித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி காலம் முடிவடைவதற்கு ஓராண்டு உள்ள நிலையில், அவசர அவசரமாக நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு புதிய ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவி, .பி.எஸ். அதிகாரியாகவும் உளவுத்துறை (.பி.) அதிகாரியாகவும் பணியாற்றியவர் என்றும், நாகாலாந்தில் ஆளுநராக இருந்த பொழுது அமைதியை நிலைநாட்டியவர் என்றும் பா... ஆதரவு ஊடகங்கள் இவரைப் பற்றி புகழ்ந்தன.

ஆனால், உண்மையோ இதற்கு நேர் எதிரானது. நாகாலாந்து ஆளுநர் பொறுப்பில் இருந்து இவர் மாற்றப்படுகிறார் என்ற செய்தியை அறிந்த நாகாலாந்து பத்திரிக்கையாளர்களும் மக்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

படிக்க :

தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !

உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!

போலி சுதந்திரத்துக்குப் பின்னர் துப்பாக்கி முனையில் நாகா பழங்குடியினப் பிரதேசங்களை ‘இரும்பு மனிதர்’ வல்லபாய் பட்டேல் இந்தியாவோடு இணைத்ததற்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக நாகா மக்கள் தேசிய சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு நாகாலாந்து போராட்டக் குழுக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஆர்.என்.ரவியை மத்தியஸ்தராகக் கொண்டு ஒரு அமைதி ஒப்பந்தம் (Framework Agreement) கையெழுத்தானது. 23 ஆண்டுகளாக ஆறு பிரதமர்களால் செய்ய முடியாததை தாங்கள் செய்துவிட்டதாகவும், 60 ஆண்டுகாலப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாகவும் மோடி அரசு அப்போது தம்பட்டம் அடித்துக் கொண்டது.

ஆனால், ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட வகையில் நாகாலாந்திற்கான தனி அரசியல் அமைப்புச் சட்டம், தனி தேசியக் கொடி போன்ற வாக்குறுதிகளை இந்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிலையில், 2019ல் நாகாலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட வாக்குறுதிகளை இனி நிறைவேற்ற இயலாது என கூறி போராட்டக் குழுக்களை வஞ்சித்தார்.

நாகாலாந்தில் அமைதியை நிலைநாட்டப் போவதாகவும் இந்திய தேசியத்துடன் நாகாலாந்தை ஒருங்கிணைக்கப் போவதாகவும் கூறிய ஆர்.என்.ரவி, போராட்டக் குழுக்களை வழிப்பறி கும்பல்‘, ‘வன்முறையில் ஈடுபடும் ஆயுதக் கும்பல்என்று இழிவுபடுத்தி பேசியதால் நாகா மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளானார்.

இந்நிலையில், 2020 ஆகஸ்ட் மாதம் நாகா தேசிய இன உரிமைக்காகப் போராடிவரும் ஆயுதக் குழுவான நாகாலந்து சோசலிஸ்ட் கவுன்சில் (NSCNIM) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதி ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட வாக்குறுதிகளை இந்திய அரசும் ஆர்.என்.ரவியும் நிறைவேற்றாமல் ஏமாற்றியதோடு, ஒப்பந்தத்தில் பல மோசடிகளைச் செய்துள்ளதையும் அம்பலப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவியை அந்த மாநிலத்தில் இருந்து திரும்பப் பெறவேண்டும் என்று நாகாலாந்து மக்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியதையடுத்து, தான் மண்ணைக் கவ்வியதை மறைத்துக் கொண்டு, மோசடி தில்லுமுல்லு பேர்வழியான ஆர்.என்.ரவியை இப்போது தமிழகத்தின் ஆளுநராக நியமித்துள்ளது, மோடி அரசு.

படிக்க :

சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

சீமான் – ஹிட்லர் : அதிசயிக்கத்தக்க ஒற்றுமைகள் || கலையரசன்

மோடி அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தங்களது அதிகார வரம்பை மீறி, மாநில அரசுகளுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பது மட்டுமின்றி, எவ்வித நேர்மையையும் ஒழுக்கத்தையும் பின்பற்றாத பாசிசப் பேர்வழிகள் என்பது ஊரறிந்த கதை. தற்போது தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.

உளவுத்துறை (.பி.) சிறப்பு இயக்குனராகவும், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு துணைத்தலைவராகவும் பணியாற்றிய இவர், இந்துவெறி பாசிச பா...மோடி கும்பலை எதிர்ப்போரையும் தமிழகத்தின் உரிமைக்காகப் போராடுவோரையும் ஒடுக்குவதற்காகவே ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக மக்கள் விழிப்புடன் இருந்து காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.

அறிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க