PP Letter head
31.10.3021
திரிபுராவில் நடத்தப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதான
திட்டமிட்ட தாக்குதல்களை முறியடிப்போம்!
பத்திரிகை செய்தி !
ந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. இதில் முஸ்லீம் மக்களின் வீடுகளும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களும் பெரியளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
திரிபுராவின் 42 லட்சம் மக்கள் தொகையில் 9 சதவிதத்திற்கும் குறைவானவர்களே முஸ்லீம் மக்கள்.
“திரிபுராவின் பெரும்பான்மையான மக்கள் தற்போதைய வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகள் என்றாலும், இதற்கு முன் வங்கதேசத்தில் மத வன்முறைகள் நடந்தபோது இங்கு எந்த பிரச்சனையும் ஏற்பட்டதில்லை” என்று திரிபுராவைச் சேர்ந்த எழுத்தாளர் பிகாச் சவுத்ரி கூறுவதில் இருந்து திட்டமிட்ட ஒரு வன்முறை என்பது தெரிய வருகிறது.
படிக்க :
ஒன்றரை ஆண்டுகளாக மோசமான நிலையில் பென்னாகரம் பேருந்து நிலையம் || மக்கள் அதிகாரம்
முல்லைப் பெரியாறு அணை மீதான பொய்ப் பிரச்சாரம் || மக்கள் அதிகாரம் கண்டனம்
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடந்த தாக்குதலுக்கு எதிர்வினை என்ற பெயரில் விசுவ இந்து பரிசத் 3,500 பேர் கொண்ட மிகப்பெரிய பேரணி நடத்தி கலவரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்து மதவாத சக்திகளுக்கு ஆதரவாக போலீசு செயல்படுவதை பல வீடியோக்கள் மூலம் அறிய முடிகிறது. இந்து மதவெறியர்களும், போலீசும் இணைந்து நடத்திய முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
திரிபுராவில் மட்டுமல்ல நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது கலவரங்கள் நடத்தப்படும்போது எதிர்க் கட்சிகள் அமைதியாக இருப்பது என்பதை தாண்டி எதுவும் செய்ய முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. காவி –  கார்ப்பரேட் பாசிச சக்திகள் அரசின் அனைத்து நிர்வாக துறைகளிலும் ஊடுருவி இருப்பதைப் போலவே அனைத்து சாதி மத சங்கங்களையும் கைப்பற்றியுள்ளது.
அதன் மூலமாக மட்டுமே நாடு முழுவதும் சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை எவ்வித எதிர்ப்புமின்றி நடத்த முடிகிறது. இந்த மோடி – அமித்ஷா,  ஆர்.எஸ்.எஸ்.- பாஜக பாசிச கும்பலை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியாது.
காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை வலுவாகக் கட்டியமைக்க, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் திரட்ட வேண்டும். அதன் மூலமாக மட்டுமே இந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக – வி.ஹெச்.பி பாசிசக் கும்பலை ஒழித்துக் கட்ட முடியும்.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.