மாரிதாஸுக்கு கருத்துரிமை கிடையாதா?
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதியன்று கோத்ரா இரயில் எரிப்பு நடந்தது. எந்த விசாரணையும் துவக்கப்படுவதற்கு முன்னர், அடுத்த நாளே குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான சந்தேஷ் மற்றும் குஜராத் சமாச்சார் ஆகியவற்றில், மிகக்கொடூரமான வெறுப்புச் செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிடப்பட்டன. அதிலும் சந்தேஷில் “ஐம்பது இந்துக்கள் எரித்துக் கொலை” என்று முழுக்க முழுக்க படங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. அந்த பத்திரிகையை பல்லாயிரக்கணக்கில் ஜெராக்ஸ் எடுத்து, வி.ஹெச்.பி.-யினர் தெருத்தெருவாக விநியோகித்து மிகப்பெரிய வெறுப்புப் பிரச்சாரத்தைத் துவங்கினர்.
அதுமட்டுமில்லாமல் மற்றொரு கட்டுரையில், “கோத்ரா இரயில் எரிப்பில் மீட்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களை ஆய்வுசெய்ததில், அவர்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டிருக்கின்றன. அவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று சந்தேஷில் வெளியாகி இருந்தது.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
மார்ச் 1-ம் தேதியன்று சந்தேஷில் வெளியான மற்றொரு கட்டுரையில், “இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது. மசூதியில் இருந்து அனைவரையும் உடனடியாக கோத்ரா இரயில் நிலையத்திற்கு அழைத்து வாருங்கள். இஸ்லாமுக்கு எதிரானவர்களை கொன்று தீர்ப்போம்” என்று முஸ்லிம்கள் சொல்லியதாக எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 1-ம் தேதியில் வெளியான ஒரு கட்டுரையில், “சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா இரயில் நிலையத்திற்கு வரும்போது, அதற்காகவே 7000 – 8000 முஸ்லிம்கள் அந்த இரயில் நிலைய ப்ளாட்பாரமில் காத்துக்கொண்டிருந்தனர்” என்று எழுதப்பட்டது.
அதே மார்ச் 1-ம் தேதியன்று வெளியான இன்னொரு கட்டுரையில், “உத்தரப் பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் தான் குஜராத்தின் பல இடங்களில் மினி பாகிஸ்தானை உருவாக்குகிறார்கள். அதனால் போலீசுத்துறை அவர்களை ‘கவனிக்க’ வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.

சீமான் கக்கும் விச கருத்துகளை பற்றி குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது.
தமிழகத்தை கலவர பூமியாக்க கைக்கூலிகளை வளர்த்து வருகிறது பார்ப்பன RSS-BJP கும்பல்.
DR.ராம்தாஸ்
DR.கிருஷ்ணசாமி & ஜான்பாண்டியன்
சீமான், மாரிதாஸ், அண்ணா மலை, L.முருகன் மற்றும் சிலர் கொண்டு செயல்படுகிறது.
சமூகநீதி பேசுபவர்கள் இதையும் புரிந்துகொண்டு செயல்படே வேண்டும்.
ஈனப்பிறவிகள் மட்டுமே பொய்யை பரப்புவார்கள்
மாரிதாஸ் பணத்துக்காக இதைச்செய்கிறான் அவனுக்கு ஆர்எஸ்எஸில் இருந்து பணம் வருது அதன் மூலம் வொயிட் போர்டு டிஜிட்டல் போர்டா மாறி விட்டது அவன் பொய்களை அம்பலப்படுத்தி முற்போக்காளர்கள் வீடியோக்கள் வெளி வருவதும் குறைந்துவிட்டது