PP Letter headபத்திரிகை செய்தி
25.01.2022
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக இனிதே நடந்தேறியது. 25.01.2022 காலை 10 மணிக்கு மக்கள் அதிகாரம் மண்டல மாநாடு பென்னாகரத்தில் தோழர் ராமலிங்கம் தலைமையில் மண்டல மாநாடு நடைப்பெற்றது.
தருமபுரி மண்டல தேர்தலில் தோழர் கோபிநாத் மண்டல செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தோழர் ராஜா மண்டல இணைச் செயலாளராகவும். தோழர் செல்வராசு மண்டல பொருளாளராகவும், தோழர் பகத், தோழர் சரவணன் ஆகியோர் மண்டலக் குழு உறுப்பினர்களாகவும் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
மண்டலத் தேர்தலுக்கு முன், பென்னாகரம் வட்டார தேர்தல் நடைப்பெற்றது. பென்னாகரம் வட்டார செயலாளராக தோழர் அருண், இணைச் செயலாளர் தோழர் சிவா, பொருளாளராக தோழர் சத்தியநாதன் மற்றும் வட்டாரக் குழு தோழர்களாக தோழர் வெங்கடேசன், தோழர் ராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அஞ்செட்டி வட்டாரக் குழு தேர்தலும் கடந்த 19.01.2022-ம் தேதி நடைப்பெற்றது. வட்டார செயலாளராக தோழர் ராமு, இணைச் செயலாளர் தோழர் சரவணன், பொருளாளர் தோழர் சென்னப்பன், செ. குழு தோழர்களாக தோழர் துரை, தோழர் ரமேஷ் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.
தருமபுரி மண்டல மாநாட்டிற்கு முன்னதாக 10-க்கும் மேற்பட்ட கிளைகளில் மாநாடு நடத்தப்பட்டு, கிளை நிர்வாகிகள் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு மண்டல மாநாடு இறுதியாக வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் அனைத்துக் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை சமரசமில்லாமல் மோதி வீழ்த்துவோம் என நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மாநாட்டு வாழ்த்துரையாக தோழர் சங்கர் பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்பு குழு, அவர்களும், தோழர் ரவிசந்திரன் மக்கள் அதிகாரம் அவர்களும் கலந்துக் கொண்டு வாழ்த்திப் பேசினர். இறுதியாக தோழர் செல்வராசு அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
தோழமையுடன்,

தோழர் கோபிநாத்
மண்டல செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
தருமபுரி மண்டலம்
9790138614

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க