க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை கட்டியமைத்து நடத்தியுள்ளோம். குறிப்பாக கொரானா காலங்களில் மக்கள் வாழ்விழந்து வாழ வழியற்ற நிலையில் வாடியபோது அதனை எதிர்கொள்வதற்காக மக்களுடைய உரிமைகளை பெற்றுத்தர பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம்.
அப்படி நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு தருமபுரி மாவட்ட காவல்துறை பல்வேறு பொய் வழக்குகளை போட்டு மக்கள் அதிகாரம் தோழர்களை அன்றாடம் நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் வகையில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கினால் பல முன்னணியாளர்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டு சொந்த வேலை இழந்து தினம்தோறும் நீதிமன்றம் சென்று வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக வழக்கிற்காக அலைகழிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற STC-எண் 753,2828,399,669 ஆகிய 4 வழக்குகளில் கடந்த 21.2.2022, 22.2 2022 ஆகிய தேதிகளில் 20-க்கும் மேற்பட்ட தோழர்கள் இது பொய் வழக்குதான் என்பதை நிறுவி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
நீதிமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான இடமாக ஒருநாளும் இருந்ததில்லை. குறிப்பாக நீதிமன்றம் என்றாலே, மக்களுக்காக போராடுபவர்களை, சமூக மாற்றத்தை விரும்புபவர்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை, அடக்கி ஒடுக்கி ஆளுகின்ற ஒரு சர்வாதிகார கூட்டம் என்ற வகையிலே தான் செயல்படுகிறது. எடப்பாடி ஆட்சி செய்த காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக-விற்கு துணையாக நின்று எந்த போராட்டங்கள் நடத்தினாலும் பொய் வழக்குகளை போட்டு வந்தது, போலீசு.
குறிப்பாக வேளாண் சட்டம், நீட் எதிர்ப்பு, காவிரி பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்னைகளில் மக்கள் அதிகாரம் தலையிட்டு போராடி வந்தது. அதேபோல் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னின்று நடத்தினோம். பாசிச பாஜகவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது எமது அமைப்பு தான். இப்படி ஜனநாயக முறையில் போராடுவதற்கு சட்டம் வழங்கிய ஜனநாயகத்தை ஒருபோதும் தருமபுரி காவல்துறை மதித்து நடந்தது கிடையாது.
நான் போடுவது பொய் வழக்கு தான் என்னை ஒன்றும் புடுங்க முடியாது என்று வெளிப்படையாகவே B1 காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் பேசினார். கொரானா காலத்தில் நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றதைக் கூட வழக்குப் போட்டு இன்று வரை நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்க வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொய் வழக்குகளை தருமபுரி மாவட்ட காவல்துறை போட்டு வருகிறது.
தற்போது ஆட்சியைப் பிடித்த திமுகவோ இதுபோன்ற போராட்ட வழக்குகளை எல்லாம் நாங்கள் ரத்து செய்கிறோம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே இருக்கிறது. இன்றுவரை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு, வேளாண் சட்டத்திற்கு எதிரான வழக்கு, நீட்டுக்கு எதிரான போராட்டத்தின் வழக்கு என பல வழக்குகளுக்கு இன்றும் நீதிமன்றத்தின் படி ஏறித்தான் வருகிறோம்.
தமிழக அரசின் மூலமாக கொடுக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் கொடுத்தால்கூட வழக்கு தள்ளுபடி பற்றி நான் முடிவு செய்ய முடியாது என்கிறார் நீதிபதி. சட்டம் ஒன்றாகவும், நடைமுறை வேறாக இருக்கிறது. இதுபோன்ற பொய் வழக்குகளை தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூட அரசு வழக்கறிஞர்கள் முன்வருவதில்லை. சட்டத்தை துளியும் மதிப்பது கிடையாது. ஆனால் நாங்கள் வழக்குகளை எல்லாம் ரத்து செய்து விட்டோம் என்ற வெற்று அறிவிப்பு மட்டும் சாதனை பட்டியலில் உள்ளது.
படிக்க :
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
எச்சரிக்கை – உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் || களத்தில் காலூன்றும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக !
வேளாண் சட்டம் ரத்து செய்துவிட்ட பிறகு கூட அதற்கான வழக்கை நீதிமன்றம் நடத்துவது கேலிக்கூத்தானது. அரசின் உண்மையான நோக்கம் போராடுபவர்களை ஒடுக்குவது தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட தோழர்கள் நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டு வருகிறோம். அந்த வழக்குகளை எல்லாம் தருமபுரி காவல்துறை திட்டமிட்டு பதிவு செய்து அதன் மூலமாக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையில் இன்றளவும் ஈடுபட்டுவருகிறது.
ஏன் பழி வாங்குகிறது? மக்கள் அதிகாரம் அமைப்பு தொடர்ச்சியாக சமூக பிரச்சனைகளில் தலையிட்டு போராடுகிறது. அந்த அமைப்பின் செயல்பாடுகளை ஒடுக்க வேண்டும் என்றால் அதற்கு பொய் வழக்குதான் சரி என பார்க்கிறது காவல் துறை. மிகக் கேவலமான வேலைகளில் கீழ்த்தரமாக செயல்படுகிறது தமிழக அரசு. இதுபோன்ற பொய் வழக்குகளை துணிவோடு எதிர்கொண்டு போராடி வருகிறது மக்கள் அதிகாரம்.
இந்த வழக்குகளை எதிர்கொள்வதற்காக தோழர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர், தோழர் ஆசியஜோதி, வழக்கறிஞர், தோழர் பிரசாந்த், வழக்கறிஞர் ஆகியோர் தொடர்ந்து போராடி நீதிமன்றத்தின் பொய்களை உடைத்தெறிந்து விடுதலையை பெற்றுத் தந்துள்ளனர். இது போன்ற பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. வரும் காலங்களில் பிற வழக்குகளையும் பொய் வழக்கு என்பதை நிருபித்து விடுதலை பெறுவோம்.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9097138614.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க