பத்திரிகைச்செய்தி
10.03.2022
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும், தமிழனுக்கும் தடை !
யானைக்கு திருட்டுத்தனமாக சொகுசு மண்டபம் கட்டும் தீட்சித பார்ப்பனர்கள் !
தில்லைக் கோயிலை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இயற்று !
சென்றமாதம் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் தமிழில் பாடச் சென்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை தாக்கிய தீட்சிதர்களுக்கு எதிராகவும் தில்லைக் கோயிலை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், நந்தன் நுழைந்தான் என்பதற்காகவே தீண்டாமை என்று கூறி அடைக்கப்பட்டிருக்கும் தெற்கு வாயிலை உடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ச்சியாக போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே முன்னதாக நாட்டியாஞ்சலி நடைபெற்ற இடத்தில் மீண்டும் தீட்சிதர்கள் பள்ளம் தோண்டி யானைக்கு என்று பிரம்மாண்ட சொகுசு கட்டிடம் கட்டி வருகிறார்கள் தீட்சித பார்ப்பனர்கள் . இந்தச் செய்தி பக்தர்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது என்பது மட்டுமல்ல, பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து தில்லை கோயிலை மீட்டெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நம் அனைவருக்கும் விடப்பட்டுள்ள சவால்.
படிக்க :
இலக்கியம் கற்றுக்கொள்ள இலக்கிய நூல்கள் மட்டும் போதுமா ? || பாவெல் சக்தி
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
இப்படி அனுமதியின்றி மண்டபம் கட்டுவதால் தொன்மை வாய்ந்த திருமலை நாயக்கர் மதில் சேதமடையும் வாய்ப்பு உள்ளது. கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு தொழில்துறை, நகராட்சி ஆகியவற்றிடம் இருந்து அனுமதியும் பெறவில்லை.
தீட்சித பார்ப்பனர்களின் இந்த திமிர்த்தனமாக நடவடிக்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள் போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
மேலும் இப்படிப்பட்ட தில்லுமுல்லுகளையும் அயோக்கியத்தனங்களையும் தொடர்ச்சியாக செய்துவரும் தீட்சிதர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
தில்லைக் கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சிறப்புச் சட்டத்தை வருகின்ற சட்டமன்றத் தொடரிலேயே தமிழ்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம் தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க