டந்த ஜூன் 10 அன்று இஸ்லாத்திற்கு எதிரான பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கைதுகளும் பிற போலீஸ் நடவடிக்கைகளும் அரங்கேறியது.
ஜூன் 11 அன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளிவந்தது. அது அதிகம் பகிரப்பட்டது. அதில், போலீஸ் காவலில் சில இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்டதை காட்சிப்படுத்தியது. வீடியோ சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி போலீசு நிலையத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் காணப்பட்டவர்களின் உறவினர்கள் அந்த வீடியோ உண்மையில் சஹரன்பூரிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். இந்தக் கூற்றுக்களை போலீசுத்துறை தொடர்ந்து மறுத்து வந்த போதிலும் – வீடியோ சித்தரிப்பது போல – காவலில் தங்கள் உறவினர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
படிக்க :
♦ யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !
♦ உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ
காவலில் வைத்து தாக்கப்பட்டவர்களில் ஒருவர் சஹாரன்பூரில் உள்ள பீர்காலியில் வசிக்கும் முகமது அலி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அலி போலீசுக்காவலில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தாக்கப்பட்டதாகவும், துன்புறுத்தப்பட்டதாகவும் அலியின் தாயார் கூறினார்.
வீடியோவில் உள்ள மற்றொரு நபர் முகமது சைஃப். சைஃப்பின் சகோதரி, “சிறையில் அவரை சந்தித்தபோது, ​​அவரது கைகள் வீங்கியிருப்பதையும், கால்களில் காயங்கள் இருந்ததையும் பார்த்தோம். அவர்களுக்கு தண்ணீர் மற்றும் சிகிச்சை மறுக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வைரலான வீடியோ கடந்த ஜூன் 11 அன்று ட்விட்டரில் வெளிவந்தது. இதை உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேவரியாவின் பா.ஜ.க எம்.எல்.ஏ ஷலப் திரிபாதி பகிர்ந்துள்ளார். இவர் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் எம்.எல்.ஏ.வும் முன்னாள் ஊடக ஆலோசகராகவும் உள்ளார். தனது ட்விட்டர் பதிவு போலீசுத்துறையின் நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு “எதிர்வினை பரிசு” என்று விவரிக்கிறது.

“ஒவ்வொரு உண்மையான இந்தியரும் குற்றவாளிகள், கலவரக்காரர்கள் மற்றும் தேசவிரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கொண்டாடிக்கொண்டே இருப்பேன்” என்று கூறுகிறார் திரிபாதி. திரிபாதியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் மீது போலீசுத்துறை நடவடிக்கைக்கு ஆதரவு கருத்துக்களை கூறுவது திரிபாதி மட்டும் அல்ல. கடந்த ஜூன் 10 அன்று நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் ட்விட்டரில், “ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு சனிக்கிழமை வரும் என்பதை நினைவில் வையுங்கள்” என்று எழுதி, புல்டோசர் மூலம் கட்டிடத்தை இடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
ஜூன் 10 அன்று நடந்த போராட்டங்கள் தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசுத்துறை சஹாரன்பூரில் இருந்து 80-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளது. மேலும் உத்தரப்பிரதேசம் முழுவதும் மொத்தம் 13 எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு முஸ்லீம் ஆண்களின் – முஸ்ஸாமில் மற்றும் 17 வயதான அப்துல் வக்கீர் – வீடுகள் கடந்த ஜூன் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட ஒரு நாள் கழித்து இடிக்கப்பட்டன.
படிக்க :
♦ காவி பாசிச புல்டோசர்களுக்கு எதிராக களத்தில் இறங்குவோம் ! இஸ்லாமிய மக்களுக்கு தோள் கொடுப்போம் ! | மக்கள் அதிகாரம்
♦ ‘இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்’ – காவி பயங்கரவாதி பிரக்யா சிங் !
அப்துல்லின் சகோதரர் குல்பஹர், “போலீசு வரும்போது வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர். ‘உன் சகோதரனைக் கூப்பிடு, இல்லையேல் உன் வீட்டின் மீது புல்டோசர் ஓட்டப்படும்’ என்று போலீசு மிரட்டியது. அவர் அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, சம்பவ இடத்துக்கு அதிகமான போலீஸ் வாகனங்கள் வந்தன. புல்டோசர் வந்து எங்கள் வீட்டை இடிக்க தொடங்கியது.” என்றார். அவர்களது சகோதரி, “அவர்கள் தாங்களாகவே முடிவெடுத்து நடவடிக்கை எடுக்கிறார்கள்” என்றார்.
எதிர்த்து பேசினாலோ, உரிமைக்காக போராடினாலோ இனி கொடுரமாக ஒடுக்கப்படுவாய் என்பதையே இந்த பாசிச அரசுகள் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல் மூலமும், அவர்களின் வீடுகள் இடிக்கப்படுவதன் மூலமும் நமக்கு உணர்த்துகிறது.
காவி – கார்ப்பரேட் பாசிச அரசு எந்திரத்தால் (புல்டோசரால்) ஒடுக்கப்படும் முஸ்லீம் மக்களுக்கு ஆதாரவாக அரணமைத்து நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை. காவி புல்டோசர்களை நிர்மூலமாக்க பாசிச எதிர்ப்பு படையாய் களமிறங்குவோம்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க