மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி – பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி – பிரக்யா சிங் தாக்கூர் கடந்த ஜூன் 9 அன்று, முஹம்மது நபியை அவதூறு செய்ததற்கான இடைநீக்கம் செய்யப்பட்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
செய்தியாளர்களிடம் காவி பயங்கரவாதி பிரக்யா, “இது இந்தியா, இது இந்துக்களுக்கு சொந்தமானது, சனாதன தர்மம் இங்கேயே இருக்கும். அதை உயிருடன் வைத்திருப்பது எங்கள் பொறுப்பு, நாங்கள் அதை செய்வோம். இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் (நுபுர் சர்மாவிற்கு எதிரான கருத்து) செய்திருக்கிறார்கள். கமலேஷ் திவாரி ஏதோ சொல்ல கொன்றுவிட்டனர். வேறொருவர் (நுபுர் ஷர்மா) ஏதோ சொன்னார், அவர்களுக்கும் கொலை மிரட்டல் வந்தது. நமது தெய்வங்களை சிதைத்து திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். இது அவர்களின் மனநிலையை காட்டுகிறது.” என்றார்.
நூபுர் ஷர்மாவைத் தவிர, மற்றொரு பாஜக தலைவரான நவீன் ஜிண்டாலும் முகமது நபியைப் பற்றி அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது, இது இந்தியாவில் மட்டுமல்ல, வளைகுடா நாடுகளிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனால் நுபர் சர்மாவை இடைநீக்கம் செய்து ஜிண்டாலை வெளியேற்றியது பாஜக.
படிக்க :
♦ மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு !
♦ மாலேகான் குண்டுவெடிப்பு கிரிமினல் பிரக்யாசிங் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினராம் !
முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களுக்காக தண்டிக்கப்பட்ட இந்துத்துவா தலைவர் கமலேஷ் திவாரி – அக்டோபர் 18, 2019 அன்று உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார்.
திவாரியின் கொலைக்கு முஸ்லீம் மதகுருமார்கள் மீது போலீசுத்துறை குற்றம் சுமத்தியது – ஆனால், அவரது கொலைக்கு உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆதித்யநாத் அரசாங்கம்தான் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதன் பின்னர்தான் திவாரி கொலை வழக்கு ஒரு கூர்மையான திருப்பு முனையை எடுத்தது. திவாரியின் தாயும் மருமகனும், தாத்தேரியில் வசிக்கும் உள்ளூர் பாஜக தலைவர் சிவக்குமார் குப்தா, ‘கோயில் தகராறு’பிரச்சினையில் திவாரியைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறினர்.
சிவக்குமார் குப்தா ஒரு “மாஃபியா” என்றும், அவர் மீது சுமார் 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். திவாரி, தான் கொல்லப்படுவதற்கு முன்பு முகநூல் நேரலை வீடியோவில், பாஜக தலைவர்கள் தன்னை கொலை செய்ய சதி செய்வதாக கூறியிருந்தார். ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றவுடன், அவரது பாதுகாப்பு அகற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
