பயிர்கள் விளைந்தாலும் அழிந்தாலும் விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசு!

அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையாலும் கடுமையான பனிப்பொழிவாலும் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காப்பீட்டு நிறுவனத்திடம் ஒருமாதமாக காப்பீடுநீதி வழங்கக்கோரி அலைந்து கொண்டு இருந்துள்ளார்.

ந்தியாவில் விவசாய தொழிலை நம்பி பல இலட்சக்கணக்கான குடும்பங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சொல்லி கொள்ளும் அளவிற்கு வருமானம் கிடைக்காதபோதும் தன்னுடைய நிலத்தில் வேலை செய்கிறார்கள்.

இலாபம் கிடைக்கவில்லை என்றாலும் கூட முதலீடு செய்த பணம் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படி செய்யப்படும் விவசாயம் நன்றாக விளைந்தாலும் அரசு கொள்முதல் செய்ய முன்வருவதில்லை. மழை, புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் அழிந்தாலும் அதற்கு இழப்பீடு தர அரசு தயாராக இல்லை. உற்பத்தி செய்த அனைத்தையும் விற்றால் கூட தாங்கள் செலவு செய்த பணம் கூட கிடைப்பதில்லை. போதாதற்கு கடன் பட்டு போன்டியாவதும் தற்கொலை செய்துகொள்வதும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

படிக்க : உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!

விசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதாக கூறிக்கொண்டு ஆட்சியமைத்த அரசியல் கட்சிகளும் அதற்காக ஒரு அடியை கூட எடுத்து வைக்கவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலையை இன்று வரை உறுதி செய்யாமல் இருப்பது; விவசாயத்திற்கு தேவையான உரங்களை கூட்டுறவு மூலம் வழங்காமல் தனியார் கடைகளை நோக்கி திருப்பியடிப்பது; உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்யாதிருப்பது; இத்தனை தடைகளையும் தாண்டி பயிரிட்டாலும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும்போது அரசு போதுமான இழப்பீடு வழங்காமல் இருப்பது; இப்படி தொடந்து கொண்டே போகிறது விவசாயிகளின் அவலநிலைமை.

வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை கொண்டாரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார் சுமார் 5 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம் செய்து வந்தார். கடந்த  ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட போதும் பயீர் காப்பீடு நஷ்டஈடு என எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு ஆடிப்பட்டத்தில் ஐ.ஆர் 50 என்ற ரகத்தை பயிர் செய்துள்ளார். மேலும் வேளாண்மை துறை மூலம் 4 ஆயிரம் செலுத்தி பயிர் காப்பீடு செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த மழையாலும் கடுமையான பனிப்பொழிவாலும் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காப்பீட்டு நிறுவனத்திடம் ஒருமாதமாக காப்பீடுநீதி வழங்கக்கோரி அலைந்து கொண்டு இருந்துள்ளார்.

இதற்காக நிலத்தை வேளாண்மை அதிகாரிகள் அளவீடு செய்து இழப்பீடு தர வேண்டும். ஆனால் வேளாண்மை துறையும் காப்பீட்டு நிறுவனமும் விவசாயி சிவக்குமாரை தொடர்ந்து அழைக்களித்ததாகக் கூறப்படுகிறது. அறுவடைக்கு தயாரான நெற்பயிரை பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி அப்பகுதி விவசாயிகளுடன் ஆர்ப்பாட்டம் செய்தார். ஒரு சென்ட் அளவிற்கு நெற்பயிர்கள் நெருப்பில் கருகியது.

படிக்க : பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!

இதைப்போன்று பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் வெல்லம், ஏலம், முந்திரி, அரிசி உள்ளிட்ட 20 வகையான பொருட்களை தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சொந்த மாநில மக்களின் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யாமல் வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி என்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திட்டமிட்ட சதி என்று விவசாயிகள் சங்கங்கள் குமுறுகின்றன.

விவசாயிகளை விவசாயத்தை விட்டு தூரத்த வேண்டும் அதை நேரடியாக செய்யமுடியாது. அதனால் இந்த மாதிரியான நெருக்கடி கொடுக்கும்போது ஒன்று தற்கொலை செய்து கொல்ல வேண்டும். இல்லையேல் நிலத்தை அரசிடமோ, கார்ப்ரேட் நிறுவனங்களிடமோ கொடுத்துவிட்டு அண்டை மாநிலங்களில் கூலி வேலைக்கு சென்று பிழைத்துக் கொள்ள வேண்டும். இதையே திட்டமாக செய்துவருகிறது மத்திய, மாநில அரசுகள். விவசாயத்தை பாதுகாக்கப் போராடும் விவசாயிகளுடன் கைகோர்ப்போம்!

டேவிட்
நன்றி: தினகரன் நாளிதழ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க