“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்பட திரையிடலை வரவேற்போம்! | மக்கள் அதிகாரம்

எத்துனை அடக்குமுறைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு மாணவர்கள் திரையிட்டிருக்கிறார்கள் என்பதை வரவேற்றாக வேண்டும். மாணவர்கள் பாசிஸ்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சி நிற்க மாட்டார்கள் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

30.01.2023

பல்கலைக்கழக மாணவர்களின் “BBC Documentary: The Modi Question”
ஆவணப்பட திரையிடலை வரவேற்போம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா பாசிச கும்பலை மக்கள் மத்தியில்
அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவோம்!

டந்த 10 நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி “BBC Documentary: The Modi Question”. இதனை முதல் பாகம் ஜனவரி 17ம் தேதியும், இரண்டாவது பாகம் 24ம் தேதியும் பி.பி.சி வெளியிட்டது. ஆவணப்படத்தை இந்திய சமூக வலைதளங்களில் வெளியிட ஒன்றிய அரசு தடைசெய்துள்ளது.

இந்த ஆவணப்படம் குஜராத் இனப்டுகொலையை அம்பலப்படுத்தியிருக்கிறது என்பதே தடைசெய்ய காரணம். 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் இசுலாமிய மக்களுக்கு எதிரான இனபடுகொலை நடந்தேறியதில் அன்றைய குஜராத் முதலைமைச்சர் இன்றைய பிரதமர் மோடிக்கு தொடர்புள்ளது என்பதை விவரிக்கிறது. ஆவணப்படமானது குஜராத் கலவரத்தின் குற்றவாளி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா கும்பல் தான் என்பதை மீண்டும் உலகறிய செய்திருக்கிறது.

டெல்லி ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள், புனேவில் உள்ள FTII(Film and Television Institute of India) மாணவர்கள், மும்பையில் TISS(Tata Institute of Social Sciences) மாணவர்கள், ஹிமாச்சல் பிரதேச பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட்டுள்ளனர்.


படிக்க: “இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!

TISS மாணவர்கள் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்த வந்தபோதும் 200 மாணவர்கள் ஒருங்கிணைந்து எதிர்கொண்டு திரையிடல் செய்துள்ளனர். ஜே.என்.யூவில் திரையிடல் செய்தபோது கல்லூரி நிர்வாகம் மின் இணைப்பை துண்டித்துள்ளது. மேலும், ஏ.பி.வி.பி அமைப்பினர் திரையிட்ட மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹைதராபாத் பல்கலைக்கழத்தில் ஆவணப்பட திரையிட்ட போது அதற்கு எதிராக ஏ.பி.வி.பி அமைப்பினர் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட்டுள்ளனர். ஹிமாச்சல் பல்கலைக்கழக நிர்வாகம் படத்தை திரையிட கூடாது என மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா பீம் ஆர்மி மாணவர் கூட்டமைப்பு திரையிட திட்டமிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ஜே.என்.யு மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் 24 பேரை கைது செய்துள்ளது காவல்துறை.

சென்னையில் கவுன்சிலர் தலைமையில் திரையிட முயன்றபோது கவுன்சிலரை கைது செய்துள்ளது. கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக திரையிட இருந்தது, சென்னையில் கைது செய்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், பல இடங்களில் திரையிட திட்டமிட்டத்திற்கே காவல்துறை அனுமதி தர மறுத்து திரையிட்டால் கைது செய்வோம் என்ற தோரணையில் காவல்துறை மிரட்டியுள்ளது.


படிக்க: தொடர்ந்து பாசிச அரசால் ஒடுக்கப்படும் ஜே.என்.யு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷெக்லா ரஷித்!


எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு மாணவர்கள் திரையிட்டிருக்கிறார்கள் என்பதை வரவேற்றாக வேண்டும். மாணவர்கள் பாசிஸ்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சி நிற்க மாட்டார்கள் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. இதற்கு முன்கையெடுத்து பல்வேறு மாநிலங்களில் திரையிட்டுள்ள இந்திய மாணவர் சங்கம் மற்றும் இடதுசாரி அமைப்புகளை வரவேற்க வேண்டும்.

குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, மோடி – அமித்ஷா கும்பல் செய்த கொடூரங்களை முழுமையாக இந்த ஆவணப்படம் கூறாவிட்டாலும் மீண்டும் ஓர் விவாதப் பொருளாக்கியதை நாம் வரவேற்க வேண்டியிருக்கிறது. இந்துராஷ்டிர கனவோடு திரிந்து கொண்டிருக்கும் பாசிச கும்பலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டிய கடமை அனைத்து ஜனநாயக, முற்போக்கு அமைப்புகள், சக்திகள் செய்ய வேண்டியுள்ளது.

பொய்கள், பேச்சுரிமை மறுப்பு, அடக்குமுறைகள், வெறியூட்டல்கள் இவை பாசிசத்தின் ஆயுதங்கள். 2002 இனபடுகொலையை எத்தனை தடைகளாலும் மறைக்க முடியாது என்பதை பாசிஸ்டுகளுக்கு செவிட்டில் அடித்துக் கூறுவோம். இனப்படுகொலையாளர்களான ஹிட்லர் – முசோலினியை அந்நாட்டு மக்கள் பழிதீர்த்தது போல் இந்திய மக்களும் காவி பாசிஸ்டுகளை பழிதீர்ப்பார்கள்.

மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க