Exclusive நடுக்குப்பம் மீனவ மக்களை சூறையாடிய போலீசு – வீடியோ
காவலர்கள் குடிசைகளைப் பற்ற வைப்பதும், நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதும் அம்பலமான பின்னரும் அது மார்ஃபிங் எனக் கூறுகிறார் சென்னைக் கமிஷ்னர் ஜார்ஜ். ஆனால் காவல் துறையின் வெறியாட்டங்களுக்கு நேரடி சாட்சியாக உள்ளனர் இந்த மக்கள். இந்த வீடியோவை பாருங்கள் பகிருங்கள்.
புதிய ஜனநாயகம் – சனவரி 2017 மின்னிதழ்
பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு எதிரான பொதுமக்கள், புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகளின் போராட்டங்களை மோடியும் தனியார் ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து இருட்டடிப்பு செய்து வருவது இந்திராவின் "நெருக்கடிநிலை" காலத்தை நினைவூட்டுகிறது.
போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்
மெரினா போராட்டம் யார் நம் எதிரிகள் என்பதை தெளிவாக காட்டிவிட்டது !
விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்.
டெல்லியின் கொம்பைப் பிடி : தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு !
பொங்கல் விடுமுறையை ரத்து செய்கிறது மோடி அரசு. “கம்ப்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாட வேண்டியதுதானே” என்று கேலி பேசுகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி. “திராவிட இயக்கத்தை அழிப்போம்” என்கிறார் பொன். ராதாகிருஷ்ணன். அடக்க வேண்டியது யாரை? காளையையா, டில்லியையா?
விவசாயிகளுக்காக தூரிகைகளை ஆயுதமாக்கிய மாணவர்கள்
மாணவர்களில் ஒருவர் இரவு ஓவியம் வரைந்துகொண்டிருந்த போது (மீத்தேன் கழுகு ஓவியம்) விவசாயிகளின் நிலையை எண்ணி உணர்ச்சிவசப்பட்டு தனது கையை பிளேடால் கிழித்து அந்த ரத்தத்திலிருந்து ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்திருக்கிறார்.
கல்லூரியில் ஜியோ விற்கலாம் விவசாயிகளுக்காக பேசக்கூடாதாம் !
“பொங்கல் – கருப்புநாள்” திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி கிளை, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம்!
ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்
இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!
விவசாயிகள் மரணம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தமிழக அரசு !
விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.
விவசாயிகளுக்கு ஆதரவாக குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர் வேலை நிறுத்தம்
மேற்கண்ட கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் விவசாய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள். விவசாயிகள் வறட்சியாலும், கடன் நெருக்கடிகளாலும் தினம் தினம் உயிரிழந்து வருகின்றனர்.
சிறப்புக் கட்டுரை : தமிழகத்தைக் காக்க அதிமுகவை அழி !
ஏ-1 இறந்து விட்டதால், ஏ-2 தான் முதல்வர் என்கிறது அதிமுக. உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கப்போகிறதோ இல்லையோ, அதிமுக பொதுக்குழு சின்னம்மாவுக்கு பதவியை வழங்கிவிட்டது. குற்றம் பதவிக்கான தகுதியாகிவிட்டது.
கூகிளின் NO 1 ஆபாசம் : மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !
முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி என்ற கேள்வி எழுப்பினால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். தகுதி பற்றிய கேள்வியை ஜெயாவோடு நிறுத்தினால், எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.
சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்
“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது - வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது - என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல - இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”
விவசாயி மரணம் தேசிய அவமானம் – சீர்காழி ஆர்ப்பாட்டம்
மீத்தேன் எடுக்க அனுமதி, ஷெல் கேஸ் எடுக்க அனுமதி, அனல்மின் நிலையம் அமைக்க அனுமதி என்று மத்திய அரசும், மாநில அரசும் ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் எடுபட்டு வருகிறது.
உழவருக்காக பொங்காவிட்டால் இது உயிருள்ள நாடா ?
மேலாண்மை வாரியம் நிறுத்தி காவிரி ரத்தம் மறித்து கைக்காசையும் செல்லாதாக்கிப் பறித்து நாத்தாங்கால் மூச்சை நெறித்து பச்சை படுகொலை செய்யுது பா.ஜ.க. பாடை கட்டுது அ.தி.மு.க. ஊரையே அறுவடை செய்ய அம்மா, சின்னம்மா.