ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!
மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
உ.பி: இஸ்லாமியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மறுத்த சங்கி மருத்துவர்
ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி! சங்கிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
இதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிப்பதுடன் பார்ப்பன மதவெறி சங்கிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகேஷ் கிஷோரின் சட்ட உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் மீது தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் போடப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
இடதுசாரி, தமிழ் மற்றும் பால்புதுமையினர் அடையாளங்களுக்காகத் தாக்கப்பட்ட ஜே.என்.யூ மாணவர்
"நான் என் நண்பரின் ஸ்கூட்டியில் நர்மதா விடுதியின் உணவகத்திற்கு வந்தடைந்தேன். நான் வண்டியை நிறுத்தும்போது, ஸ்ரேயான்ஷ் என்ற மாணவன், என்னை அணுகி, அடையாளம் தெரியாத ஒரு பொருளைக் கொண்டு என் முகத்தில் பல முறை தொடர்ந்து தாக்கினான். அதே வேளையில், என்னை கொல்ல வேண்டும் என்ற தனது நோக்கத்தை வெளிப்படையாக கூறினான்."
மகாராஷ்டிரா தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்: தொழிலாளர் உரிமைகள் மீதான பேரிடி
கடை மற்றும் பிற நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் 9 மணி நேர வேலை என்பது 12 மணி நேரம் என்று ஆக்கப்படுகிறது. 5 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்பதை மாற்றி 6 மணி நேர உழைப்புக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வு என்று மாற்றியமைக்கப்படுகிறது.
வரலாற்றில் இன்று: அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாள்
இந்துச் சட்ட மசோதாவை காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சனாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜினாமா செய்து விடுவதாக இராசேந்திரப் பிரசாத் மிரட்டினார்.
மாநில அந்தஸ்து கோரும் லடாக் மக்கள் போராட்டம் வெல்லட்டும்! | ம.அ.க
லடாக் மக்களின் உரிமைக்கான கோரிக்கைகள் வெற்றி அடைய மக்கள் அதிகாரக் கழகம் ஆதரவு தெரிவிப்பதுடன், லடாக் மக்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஒன்றிய மோடி அரசை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
நாடு முழுவதும் சிறப்பு தீவிர மறு ஆய்வு: தேர்தல் ஆணையத்தின் கரசேவை
பாசிச கும்பல் தொகுதி மறுவரையறை, தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம் போன்ற பாசிச சட்ட திட்டங்கள் மூலம் தேர்தல் கட்டமைப்பை இந்துராஷ்டிரத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு செய்துவருவதன் தொடர்ச்சியாகவே இந்த சிறப்பு தீவிர மறு ஆய்வை பார்க்க வேண்டியுள்ளது.
உத்தராகண்ட்: இஸ்லாமிய பள்ளி சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல்
அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.
ஒடிசா: பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் பெண்கள் மீதான பாலியல் கொடூரங்கள்!
கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒடிசா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் சிறுமி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.
வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு | இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
வக்ஃப் சட்டம்: உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு
| இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி | தோழர் ரவி
https://youtu.be/4ZWTG2oFhJc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஐ.ஐ.எம். உதய்பூரில் இஸ்லாமிய மாணவன் மர்ம மரணம்
“அந்த அறையின் உயரத்தைப் பார்த்தால், ஒரு குழந்தை கூட தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடியாது. என் சகோதரர் உயரமாகவும் பெரியவராகவும் இருப்பார். அந்த மின்விசிறியில் அவர் தொங்குவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று ஐ.ஐ.எம். உதய்பூர் நிர்வாகத்தின் முகத்திரையைக் கிழித்தார்.
மோடி அரசின் E20 திட்டம்: கேள்விக்குறியாகும் உணவுப் பாதுகாப்பு
தற்போது அமல்படுத்தப்படும் E20 திட்டத்திற்கு கரும்பிலிருந்து 55 சதவிகிதம் எத்தனாலும், அரிசி போன்ற தானியங்களிலிருந்து 45 சதவிகிதம் எத்தனாலும் எடுக்கப்போவதாக மோடி அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே, இத்திட்டதிற்காக 2024-2025ஆம் ஆண்டில் 52 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை மோடி அரசு ஒதுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!
பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

























