ஒடிசா: தலித் பெண் சமையலரைப் புறக்கணிக்கும் ஆதிக்கச் சாதிவெறி
தலித் பெண் சமையலராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதும், அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தடுப்பதும் அப்பட்டமான சாதிய தீண்டாமையாகும். இதனைத் தூண்டிவிடும் சாதிவெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து தண்டிக்க வேண்டும்
மகாராஷ்டிராவில் சாதியற்ற கிராமம்: தீர்மானம் நிறைவேற்றிய மக்கள்
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்ட மகாராஷ்டிரா மாவட்டத்திலேயே ஒரு கிராமம் தன்னை சாதியற்றதாக அறிவித்துக் கொண்டிருப்பது, பாசிச கும்பலுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
மேற்குவங்கம்: பூட்டிய உணவுக்கிடங்கில் கருகிய தொழிலாளர்கள்
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
குஜராத் மாடல் போலிகளின் மாடல்!
புகார்களின் அடிப்படையில் ஸ்ரீசத்யா டெய்ரி பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகளாக பால் மற்றும் பால் பொருட்களில் யூரியா, டிடர்ஜென்ட் பவுடர் போன்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைக் கொண்டு செயற்கையான பால் பொருட்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊபா (UAPA) சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? | கருத்தரங்கம்
நாள்: 13-02-2026 | நேரம்: மாலை 4:30 மணி | இடம்: பிஸி ஃபுட் அரங்கம் (Busy Food Hall), போத்தனூர் சாலை, கோவை.
பிப். 12: மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்!
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளான நிரந்தர வேலை, பணப் பயன்கள், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை,பேரம் பேசும் உரிமை இப்படி தொழிலாளி வர்க்கம் இது நாள் வரை போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பாசிச மோடி அரசு பறித்துள்ளது.
பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
கிக் தொழிலாளர்களின் அவல வாழ்வு: கணக்கெடுப்பு எடுத்துக் காட்டும் உண்மைகள்
கிக் தொழிலாளர்கள் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கின்றனர். எனினும் அவர்கள் பெறுகின்ற ஊதியமோ மிகச் சொற்பம். 62 சதவிகித தொழிலாளர்கள் பெரும் விபத்துகளிலிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கின்றனர். 27 சதவிகித தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர்
அரசு மருத்துவமனைகளில் கட்டணம்: மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசின் பாசிசம்
உழைக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டணம் விதித்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசு, எம்.எல்.ஏ., எம்.பி-க்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற உயர் வகுப்பினருக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.
மணிப்பூரில் மீண்டும் குக்கி-விரோத அரசு: குக்கி எம்.எல்.ஏ-க்களின் துரோகத்தை கண்டித்து போராட்டம்
அனைத்து மக்களுக்கும் பொதுவான அரசு என்பது போன்ற பொய் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக குக்கி மற்றும் நாகா இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை துணை முதல்வர்களாக நியமித்துள்ளது. இந்த போலி தோற்றத்திற்குப் பின்னே மணிப்பூர் இனக்கலவரத்தையும் குக்கி மக்கள் மீதான ஒடுக்குமுறையையும் மறைக்க முயல்கிறது பாசிச பா.ஜக. கும்பல்.
டெல்லி: 15 நாட்களில் காணாமல் போன 807 பேர்!
அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் என்னவென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் டெல்லியில் மட்டும் 2,32,737 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் தோராயமாக 1,80,000 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 52,000 பேரின் வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
உத்தராகண்ட்: காஷ்மீரி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்துமதவெறி கும்பல்!
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
கனிமச் சுரண்டலுக்குச் சலுகைகள் அறிவித்த பா.ஜ.க. பட்ஜெட்!
2025ஆம் ஆண்டே அமெரிக்க, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் அழுத்தத்திற்குப் பயந்து இந்திய அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றிவிட்டது. தற்போது இந்தியாவில் அணுவுலை அமைக்கப்போகும் நிறுவனங்கள் பலனடையும் வகையில் வரிச்சலுகையும் வழங்கியுள்ளது.
உதயமாகிறது முற்போக்குப் பண்பாட்டிற்கானதொரு புதிய இணையதளம்!
புரட்சிகர, முற்போக்கு அரசியல், பண்பாட்டிற்கான முதல் கலைக்களஞ்சிய இணையதளமாக, பெருவிழா.காம் இருக்கும் என்று கருதுகிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்விணையதளத்தைத் தொடங்கியுள்ளோம்.
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம்!
பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் எமது அமைப்பும் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் எமது சங்கத்தின் இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் பங்கேற்கும் விதமாக வேலைநிறுத்த அறிவிப்பை அந்தந்த நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளன.

























