மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!
பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பையும் குறைந்த விலைக்கு சுரண்டி கொழுப்பதற்கே இதுபோன்ற திட்டங்கள்!
ஏகாதிபத்திய சுரண்டலுக்கு துணைபுரியும் இந்திய பார் கவுன்சில்!
இந்நடவடிக்கை பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் சுரண்டலையும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளையும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்களின் துணைகொண்டு சட்டரீதியாக மேற்கொள்ளத்தான் வழிவகை செய்யும்.
திராவிட(கார்ப்பரேட்) மாடல் : தனியார்மயமத்தை நோக்கி தமிழ்நாடு போக்குவரத்து கழகம்!
பொதுத்துறை என்பதன் பொருள் உழைக்கும் மக்களின் வரியால் உழைப்பால் உருவானது என்பதே. எனவே அதை முதலாளிகளுக்கு எடுத்துக்கொடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை!
சாலை விரிவாக்கத்தைக் கைவிடு! மக்களை வாழவிடு!
சாலை விரிவாக்கப்பணியால், நீர்வழிப்பாதைகளும், நீர்நிலைகளும் அழிக்கப்படும் என்று தெரிந்தேதான் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வருகிறது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை
வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் உள்ளன.
சீரழிந்து வரும் அரசு மருத்துவ கட்டமைப்பு! பலியாகும் அப்பாவி உழைக்கும் மக்கள்!
ஆண்டிற்கு 100 கோடிக்கு மேல் காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளுக்கு கோடிகளை அள்ளி கொட்டி கொண்டிருக்கிறது தமிழக அரசு. அதில் பாதி தொகையை அரசு மருத்துவ கட்டமைப்பிற்கு செலவு செய்து இருந்தால் கூட அரசு மருத்துமனையின் தரம் சிறிதாவது உயர்ந்து இருக்கும்.
மகாராஷ்டிரா: மின்சாரம் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக மின் ஊழியர்கள் போராட்டம்!
மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மின் துறையை தனியார் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒடிசா, தில்லி போன்ற மாநிலங்களில் ஏற்கனவே மின் விநியோகம் தனியாருக்கு தாரைவாக்கப்பட்டு விட்டது.
மருத்துவ துறையில் வேத மரபுகளைத் திணிக்கும் மோடி அரசு!
இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய பாசிச மோடி கும்பல் இந்தியா முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தைத் திணித்து வருகிறது. ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம்! என்கிற ரீதியில் "ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம்" என்று முழங்கி வருகிறது.
‘அவுட் சோர்சிங்’ எனும் நவீன கொத்தடிமை முறை!
“அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையின் மூலம் வேலையில் சேர்ந்தவர்களை எல்லாம் உடனடியாக நிரந்தரமெல்லாம் செய்ய முடியாது” என கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தாராவி மறுசீரமைப்பு திட்டம்: அதானிக்கு டெண்டர் – உழைக்கும் மக்களை நகரைவிட்டு விரட்ட எத்தனிக்கும் மகாராஷ்டிர அரசு!
குடிசைவாசிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் பணியை அரசே செய்து நிறைவேற்றாமல் அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கான திட்டமாக இதை மாற்றி உள்ளது.
நிலத்தின் உரிமையாளருக்கு நிறுவனத்தின் இலாபத்தில் பங்கு – மாநில தகவல் ஆணையம் தரும் புதிய அல்வா!
லாபத்தில் பங்கு என்பது முதலாளித்துவம் கண்டுபிடித்த அயோக்கியத்தனம். அதை வாங்கித் தருகிறோம் என அரசு சொல்வது அதனினும் மாபெரும் அயோக்கியத்தனம்.
கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!
2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 80,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்த போதிலும், நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
நவ 19: தொழிற்சங்க உரிமைகளை பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்!
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு ஏதுவாகதான் வங்கிகள் இணைப்பு, நிரந்தர வங்கி பணியிடங்களை தற்காலிக பணியிடங்களாக மாற்றுவது போன்றவற்றை மிகவும் வேகமாக செய்து வருகின்றனர்.
விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்
விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !
விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர்.