Saturday, May 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 13

திருப்பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்? உண்மையை உடைக்கும் பண்பாட்டு சூழலியலாளர் | தமிழ்தாசன்

திருப்பரங்குன்றம் யாருக்குச் சொந்தம்?
உண்மையை உடைக்கும் பண்பாட்டு சூழலியலாளர் | தமிழ்தாசன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 அக்டோபர், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 22 | 1987 அக்டோபர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கொள்ளையர்களே நடத்தும் விசாரணை நாடகம்!
  • நீதியும் குருடாகிப் போனது!
  • சங்கராச்சாரி… யார்?
  • பதவிக்காக சங்கரமடத்தில் நடந்த கொலை!
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
  • முதலாளித்துவ உலகம் கொடியது
  • ’சதி’க்கு அரசே உடந்தை!
  • விமர்சனமும் விளக்கமும்
  • புலிகளின் இலட்சியம் புதைகுழிக்குப் போனது!
  • அரங்கேறப் போகும் சாதிய கலவரங்களுக்கு அறிகுறி
  • வன்னியர் போராட்டம்: சாதியத் தீமூட்டி குளிர்காயும் ஓட்டுக் கட்சிகள்!
  • உதவியா? சதியா?
  • உலக வங்கியின் பிடியில் இந்தியா!
  • தஞ்சைக் குரவப்புலம் மாஃபியா குண்டர்களின் பிடியில்…
  • இதுதான் இன்றைய இந்தியா

(இந்த இதழின் கடைசிப் பக்கம் கிடைக்கப்பெறவில்லை)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா | மீள்பதிவு

மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா மறைந்து இன்றுடன் (பிப்ரவரி 16) 69 ஆண்டுகள் நிறைவடைகிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 6, 2023 அன்று வினவு தளத்தில் வெளியான கட்டுரையை மீள்பதிவு செய்கிறோம்.

***

மகத்தான மக்கள் விஞ்ஞானி, மேக்நாட் சாகா:
வரலாறு மறைத்தாலும்
வானியலுக்கு வெளிச்சம் பாய்ச்சிய அறிவியல் மேதை!


க்களை முட்டாள்களாக்கி, காட்டுமிராண்டி நிலைக்குத் தள்ளும் பார்ப்பன பாசிசக் கும்பல், இந்துராஷ்டிரத்தை நோக்கி முனைப்புடன் செயல்பட்டு வரும் காலமிது.

இந்தப் பார்ப்பன கும்பலின் சனாதன சித்தாந்தத்திற்கு எதிராக முற்போக்கு கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதன் ஒரு அங்கமாக நவீன அறிவியல் சிந்தனைகளை மக்களிடம் விதைப்பது ஒரு முக்கியப் பணியாகும்.

அந்த வகையில் சித்தித்து செயல்பட்டவரும் சமத்துவ சமூகத்தைப் படைக்க வேண்டுமென பாடுபட்ட மக்கள் விஞ்ஞானியுமான, பல்துறை ஆற்றல் கொண்ட “மேக்நாட் சாகா”வின் வரலாற்றை, இன்றைய தலைமுறையிடம் கொண்டு செல்வது அவசியமானதொரு பணியாகும்.

இந்திய சமூகத்தின் சாதியும் வர்க்கமும் எத்தகைய கொடிய தன்மை கொண்டவை என்பதை இவரது வாழ்க்கை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அத்தகைய விஞ்ஞானியான மேக்நாட் சாகாவை, அவரது 130-வது பிறந்த நாளை ஒட்டி (அக்டோபர் 06) வினவு வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

தமிழ் வாசிப்பு தளத்தில், பார்ப்பன இந்திய சிந்தனைப் போக்கும் மேலான்மையும் பல மக்கள் விஞ்ஞானிகளை, மக்கள் அறிஞர்களை இருட்டடிப்பு செய்திருப்பதன் தாக்கத்தை உடைக்கும் வகையில் பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அதில் ஒன்றுதான், “மேக்நாட் சாகா” குறித்து வெளிவந்துள்ள நூலாகும். 

தோழர் தேவிகாபுரம் சிவா, “மேக்நாட் சாகா – ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை” என்ற தலைப்பில் எழுதியுள்ள, வாழ்க்கை வரலாற்று நூலை “பாரதி புத்தகாலயம்” தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது சிறந்த பங்களிப்பாகும்.

அந்நூலுக்கு தோழர் தேவிகாரபுரம் சிவா எழுதிய முன்னுரையை சுருக்கிக் கொடுத்துள்ளோம். இந்நூலை அனைவருக்கும் பரப்புங்கள், பகிருங்கள். நம்மில் பல மேக்நாட் சாகா-க்கள் உருவாவதற்கு வழிகோலுங்கள்!


னிதம் ததும்பும் மகத்தான வரலாறு மேக்நாட் சாகாவினுடையது. வங்க மண் தந்த வண்ணமயமான ஆளுமை மேக்நாட் சாகா.

‘விஞ்ஞானி’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மட்டுமே அகப்பட்டுவிடாத விரிவும் செறிவும் கொண்ட விரிவுறு வெளியாக அவரது ஆளுமை பிரம்மாண்டம் காட்டி நிற்கிறது. விடுதலை வீரர், சோசலிச செயல்பாட்டாளர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர், பொருளாதார நிபுணர், நிறுவனக் கட்டமைப்பாளர், உலக அமைதிப் போராளி, சமூகப் புரட்சியாளர், தொல்பொருள் ஆய்வாளர், மனித உரிமைப் போராளி, நாடாளுமன்றவாதி என அவரது ஆளுமை விரிந்து நிற்கிறது.

உண்மையில், இந்தியா உலக அறிவியலுக்கு குறிப்பாக இயற்பியலுக்கு அளித்த முதல் நேரடி பங்களிப்பு மேக்நாட்டின் வெப்ப அயனியாக்கக் கோட்பாடும், அது குறித்த அவர் பெயரிலான அயனியாக்கச் சமன்பாடுமேயாகும்.

“ஃபில் மேக்” என அழைக்கப்படும் “ஃபிலாசாபிகல் மேகசின்” (Philosophical Magazine) எனும் ஆய்விதழில், 1920-ஆம் ஆண்டு வெளிவந்த “சூரிய நிறமண்டலத்தில் அயனியாக்கம்” என்ற ஆய்வுக் கட்டுரை, மேற்கண்ட வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டையும், அவரது சமன்பாட்டையும் கொண்டிருந்தது.

நூற்றாண்டுகளாகத் தேங்கிக் கிடந்த வானியற்பியல் ஆய்வுகளுக்கு, இவை புது வழிகாட்டிட நவீன வானியற்பியல் பிறந்தது. ஆம், நவீன வானியற்பியலின் தந்தை மேக்நாட் தான். இச்சாதனை நிகழ்த்தப்பட்டபோது அவரது வயது 27 மட்டுமே.


படிக்க: நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்


மேக்நாட்டின் சாதனைக்கான பாதை அனிச்சம் பரப்பப்பட்ட மென்மலர்ப் பாதையாக இருக்கவில்லை. அது நெருஞ்சி முட்களால் நிரப்பப்பட்டதாகவே இருந்தது.

தீண்டாமைக்குட்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் ஓர் எளிய பெட்டிக்கடைக்காரரின் மகனாகப் பிறந்த மேக்நாட்டை வறுமையும், சாதிய ஒதுக்கலும் வைராக்கியமான இளைஞராகவும், சமத்துவ சிந்தனையாளராகவும் ஆக்கின.

அவரது சமகாலத்து இந்திய விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடங்களில் முடங்கிக் கிடந்தபோது தன் ஆசிரியர் பி.சி.ராயின் தாக்கத்தால் ஊக்கமடைந்து மக்கள் பிரச்சினைகளோடு தன்னை இணைத்துக் கொண்டார் அவர்.

சொந்த நாட்டின் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களிடம் காட்டிய வன்மம் மிக்க தீண்டாமை அணுகுமுறையையும், காலனி ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திய இனவெறியையும் ஒரு சேரக் கண்டு வளர்ந்தவர் மேக்நாட்.

அவரது அரசியல், சமூக நிலைப்பாடுகளைக் கட்டமைப்பதில் இவை முக்கிய பங்காற்றின. காலனிய ஆட்சியாளர்களை எதிர்த்த விதத்திலும் ஜனநாயக வகுப்பினர் எனத் தான் அழைத்த பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் தோழனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட விதத்திலும் அவர் தன் காலத்தின் பிற அறிவியலாளர்களிடம் இருந்து மாறுபட்டு நின்றார்.

இந்த நாடு மேக்நாட்டுக்கான அங்கீகாரத்தை இன்றுவரை அளிக்கவில்லை. அதை நம்மால் புரிந்துகொள்ளவும் முடிகிறது. இந்தியச் சமூகம்போல் இந்தியாவின் அறிவியல் கட்டமைப்பும்  சாதிமயமாகித்தான் கிடக்கிறது. இந்தியா விடுதலை அடைந்து நேரு தலைமையில் அமைக்கப்பட்ட அரசு, அரசின் அனைத்து அறிவியல் கட்டமைப்புகளில் இருந்தும் மேக்நாட்டைத் திட்டமிட்டு ஓரங்கட்டி வைத்தது.


படிக்க: நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்


மேக்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பே அதற்கான காரணம் என அபாசூர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் அறிவியல் புலங்களில் கூட மேக்நாட்டை அவருக்குரிய பெருமைகளோடு அறிந்தவர்கள் குறைவே. அறிவியல் மேதைகளை அறிமுகப்படுத்தும் பணி, பள்ளி பாடத்திட்டங்களில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். இங்கு சி.வி.ராமன், ஜகதீஸ் சந்திர போஸ் போன்ற சிலரைத் தவிர்த்து மேக்நாட் உட்பட பல அறிவியல் மேதைகள் பற்றி மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதில்லை.

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

மேக்நாட்டின் மாபெரும் அறிவியல் பங்களிப்புகளான வெப்ப அயனியாக்கக் கோட்பாடும் சமன்பாடும் இந்தப் பேரண்டம் தோன்றிய சில வினாடிகளில் என்ன நிகழ்ந்தது? அது எப்படி இருந்தது? என்ற ஆராய்ச்சியில் அடிப்படையான பங்காற்றுகின்றன என அறிவியலாளர் ஜே.வி.நர்லிகர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் ஏவுகணை முயற்சியில் ஏற்பட்ட இடர்பாடுகளை சாகா கோட்பாடே தீர்த்து வைத்ததாக அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். “அடிப்படை இயற்பியல் கோட்பாடு ஒன்று தவிர்க்க இயலாத வகையில் எதிர்பாராத ஆய்வுத்தளங்களிலும் பயன் அளிக்கின்றன. சாகா சமன்பாடு இதற்கு ஓர் உதாரணம்” என்று நர்லிகர் கட்டுரை குறிப்பிடுகிறது.

மேக்நாட்டின் தெரிவுசெய் கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாடு, ஒரு கோட்பாட்டு அறிவியலாளனின் ‘மாத்தி யோசி’க்கும் அற்புத ஆற்றலுக்கான சான்று. விண்மீன்களின் இயற்பியல் பண்புகளைப் புரிந்துகொள்வதில் இதுவும் முக்கியப் பங்காற்றுகிறது. உலக அளவில் ‘ஆய்வுக்கூட வானியற்பியல்’ (Laboratory Astrophysics) பெரும் துறையாக வளர்ந்து நிற்கிறது.

அரிய பெரிய வானியல் ஆய்வுக்கருவிகள் எதும் இல்லாமல் நுட்பமான வானியற்பியல் ஆய்வுகளைச் செய்து காட்டமுடியும் என்பதற்கான இத்துறையின் முன்னோடி மேக்நாட் தான். சாகா சமன்பாட்டின் இன்னொரு வடிவமான சாகா – லாங்மியூர் சமன்பாடு (Saha-Langmuire equation) அணுத்துகள் முடுக்கிகள் (Particle Accelerators) நிறை நிறமாலை மானிகள் (Mass Spectrometers) ஆகியவற்றை வடிவமைப்பதில் முக்கிய வழிகாட்டியாக உள்ளது. பிளாஸ்மா இயற்பியல் (Plasma Physics) ஆராய்ச்சிகளிலும் வெப்ப அயனியாக்கக் கோட்பாடு முக்கியப் பங்காற்றுகிறது.

சாகா, வெப்ப அயனியாக்கக் கோட்பாடு மட்டுமின்றி வளிமண்டல அடுக்கான அயனிமண்டல (ionosphere) ஆய்விலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தினார். இன்றைய வானொலி, தொலைக்காட்சி மற்றும் விண்வெளி தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த ஆய்வுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

அணு ஆற்றல் குறித்த விஷயங்களில் சாகா முன்னோடி ஆய்வாளர் ஆவார். 1931-இல் அணுக்கருத் துகள் நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்டது. 1932-இல் ஜேம்ஸ் சாட்விக் அதை உறுதிப்படுத்தினார். அணு இயற்பியலில் அடுத்து நடந்த வளர்ச்சிகளை சாகா எல்லையற்ற உற்சாகத்தோடு கொண்டாடியதோடு தன் ஆய்வுத்துறையையும் நிறமாலையியலில் இருந்து அணுக்கரு இயற்பியலுக்கு மாற்றிக் கொண்டார்.

வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டின் தர்க்கரீதியான விளைவுதான் அணுக்கரு இணைவு (nuclear fusion) வினைகள். இதை உலக அறிவியல் அறியும் முன்பே சாகாவின் கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது.

காந்த தனி துருவத்தின் (Magnetic Monopole) துருவ வலிமை (pole strength) பற்றி “பால் டிராக்”-இன் சூத்திரத்தை மேம்படுத்தியதன் மூலம் துருவ வலிமை பற்றிய டிராக்-சாகா சூத்திரம் உருவானது.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் துகள் முடுக்கியான சைக்ளோட்ரானை அமைக்கவும், அணுக்கரு இயற்பியல் ஆய்வு நிறுவனம் ஒன்றை அமைக்கவும் அவர் எடுத்துக் கொண்ட இமாலய முயற்சிகள் இந்திய இயற்பியல் வரலாற்றின் தனித்துவமான பக்கங்களை அலங்கரிக்கின்றன.

மேக்நாட் சாகா ஆய்வுக்கூடங்களில் மட்டுமே முடங்கிப் போனவர் அல்லர். அவர் சமூகம், அறிவியல், அரசியல் எனப் பல தளங்களில் தன் ஆளுமையைப் பதித்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை வாசிப்பது என்பது அவர் வாழ்ந்த 62 ஆண்டுகால இந்திய வரலாற்றையும், இந்தியாவின் அறிவியல், குறிப்பாக இயற்பியல் வரலாற்றையும் வாசிப்பதாக இருக்க முடியும்.

ஜவகர்லால் நேருவின் அறிவியல் சிந்தனைகளில் மேக்நாட்டின் தாக்கம் அதிகம். குறிப்பாக, விடுதலைக்கு முன் சாகா நேருவுக்கு எழுதிய பல கடிதங்களில் அறிவியலின் சமூகப் பயன்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். மேக்நாட் நடத்திய ‘சயின்ஸ் அண்ட் கல்ச்சர்’ இதழை நேரு தொடர்ந்து வாசித்து வந்தார்.

மேக்நாட்டால் செல்வாக்கு செலுத்தப்பட்ட விடுதலைக்கு முந்தைய நேருவின் அறிவியல் பார்வை, விடுதலைக்குப் பின் அதிகார அரசியலின் விதிகளுக்கு உட்பட்டு திசைமாறியது. கோடிக்கணக்கான எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கானதாக அல்லாமல் சில முதலாளிகளின் வணிக நோக்கத்தை வலுப்படுத்தும் ஒன்றாக இந்த நாட்டு அறிவியல் மாறியதை மேக்நாட் தன் வாழ்நாளிலேயே கண்டார்.

1956-இல் அவரது மறைவுக்குப் பின் அறிவியலை ஜனநாயகப்படுத்துவதற்கான அவரது முன்னெடுப்புகளைத் தொடர ஆள் இல்லாமல் போய்விட்டது. மக்களின் இல்லாமை, கல்லாமை, நோய்மை ஆகியவற்றை நீக்குவதற்கான கருவியாக மேக்நாட் அறிவியலை முன்மொழிந்தார். அதை வாழ்நாள் முழுதும் வலியுறுத்தினார்.

அந்த வகையில், இந்தியாவில் “மக்கள் அறிவியல்” என்ற கோட்பாட்டை முன்வைத்த முன்னோடி அவர். அவரது பிறந்த நாளான அக்டோபர் 06-ஐ ”மக்கள் அறிவியல் தினமாகக்” கொண்டாடுவதன் மூலம் மட்டுமே அவருக்குப் பெருமை சேர்க்க முடியும். அந்த நாளை எளிய மக்களின் வாழ்வை மேம்படுத்த அறிவியலை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனச் சிந்திப்பதற்கும் விவாதிப்பதற்குமான தேசிய தினமாகக் கடைபிடிக்கலாம்.

இன்று, தேசிய தினங்கள் என அறியப்படும் பெரும்பான்மை தினங்கள் உயர்சாதி தலைவர்களின், அறிஞர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய தினங்களாக மட்டுமே உள்ளன. இவற்றின் மூலம் தேச நிர்மாணத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்கெடுத்தனர் என்பது போன்ற பொய்மை நிலைநாட்டப்படுகிறது.

இந்தியாவின் முதல் பிரதமர், முதல் குடியரசுத் தலைவர் என எல்லா ‘முதல்’-உம் குறிப்பிட்ட பிரிவினராக இருப்பது தற்செயல் அல்ல. அவைபோல், எல்லா தேசிய தினங்களும் குறிப்பிட்ட பிரிவினரின் பிறந்த நாள், நினைவு நாள் என இருப்பதும் தற்செயல் அல்ல. அதிகாரம் தொடர்பான அரசியல் சதி அதில் அடங்கியுள்ளது.

சி.வி.ராமன் “ராமன் விளைவை” கண்டுபிடித்த பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினமாக’க் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், “ராமன் விளைவு” கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே மேக்நாட்டின் “வெப்ப அயனியாக்கக் கோட்பாடு” நவீன வானியற்பியலின் தந்தையாக அவரை உயர்த்தியிருந்தது.

மேக்நாட்டின் அறிவியல் சாதனை, சி.வி.ராமன் போன்றோரின் அறிவியல் சாதனைக்கு எந்த நிலையிலும் குறைவானதல்ல. அதைவிடவும், அறிவியலின் சமூக செயல்பாட்டையும் தேச கட்டுமானத்தில் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி செயல்பட்ட வகையில் மேக்நாட்டின் அறிவியல் பார்வைகள் கவனத்துக்குரியவை.

மேக்நாட் சாதாரண பொறியியல் பணிகளில் கூட மக்கள் பங்கேற்பை வலியுறுத்தியவர். பங்கேற்பு ஜனநாயகம் (participatory democracy) என்னும் உயரிய கருத்தாக்கத்தை முன்வைத்த மிகச் சிறந்த ஜனநாயகவாதி ஆவார்.

“எளிய மக்களின் வாழ்வைச் சூழ்ந்திருந்த கல்லாமை, ஏழ்மை, நோய்மை ஆகிய இடர்பாடுகளை நீக்க தனக்கான வழியில் அறிவியலை ஆயுதமாக ஏந்தி நின்றவர் மேக்நாட். அந்த வகையில், ஒரு போர்ப்படைத் தளபதிபோல் முன்நின்று சுபாஷ் சந்திர போஸ், ஜவகர்லால் நேரு, இந்திய அறிவியலாளர்கள் அனைவருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தின் சமூக செயல்பாட்டை விளக்கிப் பொருளாதாரத் திட்டமிடலைக் கற்றுக் கொடுத்தார்.

ஆனால், விடுதலை பெற்ற இந்தியா, அதிகாரம் உயர்சாதியினர் கையிலும் இந்திய முதலாளிகளின் கையிலும் இருக்க வேண்டும் என்று விரும்பியது. மேக்நாட் போன்றவர்கள் ஓரங்கட்டப்பட்டனர்.

மேக்நாட் மறைந்து 59 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அவரைப் போல் சமூகத்திற்கான அறிவியலையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலையும் தூக்கிப்பிடிக்கும் அறிவியலாளர் ஒருவரும் உருவாகவில்லை. இந்திய ஐ.ஐ.டி.க்கள், எய்ம்ஸ்-கள் போன்றவை ஏன் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளன? ஏன் அவை சாதிப் பண்டாரங்களின் தினவெடுத்த சதைப் பிதுக்கல்களாக மட்டுமே நீடிக்கின்றன? இந்த நிலை மாற என்ன செய்யவேண்டும்?

மேக்நாட் போன்ற அறிவியல் போராளிகளின் வாழ்க்கையை மீண்டும் மறுவாசிப்பு செய்ய வேண்டும். அவரது தொடர்ச்சியாகப் பல்லாயிரக்கணக்கான மேக்நாட்டுகள் ஒடுக்கப்பட்ட மாணவர்களில் இருந்து உருவாக வேண்டும்.

மகாத்மா ஜோதிபா பூலே, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மேக்நாட் போன்றோரின் மானுடநேயம் ததும்பும் வாழ்க்கைக் கதைகளை எளிய மக்களின் புதல்வர்களிடம் விளக்கிக் கூற வேண்டும். மேக்நாட்டின் வாழ்வியல் இளம் தலைமுறையினருக்கான வழிகாட்டியாக விளங்கும் தகுதி பெற்றது.


நூலின் பெயர்: மேக்நாட் சாகா: ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை
ஆசிரியர்: தேவிகாபுரம் சிவா
பக்கங்கள்: 288
விலை: ₹ 260
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை – 600 018
தொலைபேசி: 044 2433 2924
மின்னஞ்சல்: bharathiputhakalayam@yahoo.com

இணையதள முகவரி: thamizhbooks.com


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 செப்டம்பர், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 21 | 1987 செப்டம்பர் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: எதிர்க்கட்சிகளின் தேசிய மாற்று: இன்னுமொரு பாசிசக் கட்சியா?
  • வாசகர் கடிதம்
  • கருஞ்சட்டை வீரர்களுக்கு காதுகுத்தும் தி.க. வீரமணி!
  • ஆந்திர போலீசின் ‘மோதல்’ நாடகம் – வன்முறையாளர்கள் யார்?
  • நவீன இந்தியாவின் கோவில்கள்
  • கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம்: கூலி உயர்வு கிடைத்தது! கொத்தடிமைத்தனம் நீங்கியதா?
  • தமிழரசன் கொள்ளையும் கொலையும் போலீசின் பித்தலாட்டம்
  • இந்திய உளவுத்துறை: இந்திரா – ராஜீவ் கும்பலின் விசுவாச வேட்டை நாய்கள்
  • இரத்தத்தை விற்ற பிறகு…
  • காங்கிரசுக்குப் போட்டியாக போலிக் கம்யூனிஸ்டுகள் அடித்த ஊழல் கொள்ளை
  • பம்பர் பரிசுகளில் மூழ்கித் திளைக்கும் போலிகள்
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணி பாடல்கள் | வேடிக்கை பார்க்கும் அரசு | தோழர் ரவி

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணி பாடல்கள்
வேடிக்கை பார்க்கும் அரசு | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 செப்டம்பர், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 20 | 1987 செப்டம்பர் 01-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கல்லூரி ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக்கும் முயற்சி!
  • மருந்து உற்பத்தியாளர்கள் சாவு வியாபாரிகள்
  • விசாரணைக் கமிஷன்கள் மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடி
  • நரியைப் பரியாக்கும் நம்பூதிரிபாடு!
  • நெசவுத் தொழிலாளர்களின் உறுதியான போராட்டம் வெந்நீர் வார்த்தாலும் விளையும்!
  • பாலைவனமாகும் இந்தியா
  • ஊழல் புதை சேற்றில் சிக்கிய போலிக் கம்யூனிஸ்டுகள்!
  • அரசியல் ‘கிசு கிசு’ எழுதிப் பிழைக்கும் மஞ்சள் பத்திரிக்கைகள்
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஆகஸ்ட், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 19 | 1987 ஆகஸ்ட் 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈழ மக்களே! துரத்துங்கள் இந்திய ராணுவத்தை!!
  • வாசகர் கடிதம்
  • ஈழப்போராளிகளை ஆட்டிவைப்பது இந்தியா உளவுத்துறையா? சி ஐ ஏ உளவாளிகளா?
  • கதர் சட்டைக்குள்ளே ஒரு காட்டெருமை!
  • கூலி ஏழைபிணத்தின் மீது கோயில் திருவிழா!
  • மராட்டிய அரசியலை ஆட்டிப் படைக்கும் ‘வெள்ளைக் கோட்டைகள்!”
  • பர்மா: கிழக்கின் விடிவெள்ளி
  • வறட்சியின் கொடுமை வக்கற்ற ஆட்சி – செல்லாக் காசாகிவிட்ட ரூபாயின் மதிப்பு
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி…)
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஆகஸ்ட், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 18 | 1987 ஆகஸ்ட் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!
  • தரங்கெட்ட பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக இளைஞர்கள் போர்க்கொடி!
  • வெகுமதி: தொழிலாளர்களைப் பிரிக்கும் சதி!
  • வெளியாருக்கு தானம்! வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு நாமம்!
  • ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக தென்கொரிய மாணவர்களின் புரட்சிப் போர்!
  • அடையாத சுதந்திரம்! அதிகாரத்தில் தரகர்கள்!
  • காக்கிச் சட்டை கயவாளிகளின் காட்டு தர்பார்!
  • உண்மையைச் சொன்னால் ஊரைவிட்டே ஓடுவார்களாம்!
  • யாருக்கும் வெட்கமில்லை!
  • ஈழம்: ராஜீவ் துரோகம்! ரகசியங்கள்!
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாயப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51) (சென்ற இதழின் தொடர்ச்சி)
  • அரசியல் ‘கிசு கிசு’ எழுதிப்பிழைக்கும் மஞ்சள் பத்திரிக்கைகள்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை

ஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் மீதான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிசக் கும்பலின் தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம், இஸ்லாமிய மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதுடன் மற்றொருபுறம் அவர்களின் பொருளாதாரக் கட்டுமானங்களைத் தகர்ப்பதன் மூலமாக, சொந்த நாட்டிற்குள்ளேயே இஸ்லாமிய மக்களை அகதிகளாகவும் இரண்டாம்தரக் குடிமக்களாகவும் மாற்றி வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல்.

‘மசூதிகளுக்குள்ளே கோவில்கள்’
பாசிஸ்டுகளின் ‘ஆன்மீகத் தேடல்’

பாபர் மசூதிக்கடியில் ராமன் கோவில் இருந்தது என்ற கட்டுக்கதையின் மூலம் பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கு ராமனுக்கு கோவில் கட்டியுள்ள காவிக் குண்டர் படை, தற்போது வாரணாசி-ஞானவாபி மசூதி தொடங்கி இந்தியா முழுவதும் மசூதிகளுக்கடியில் கோவில்கள் இருப்பதாகக் கூறி கரசேவையை தொடங்கியிருக்கிறது.

★ மேற்கு உத்தரப்பிரதேசத்தில் சம்பல் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதியானது ஹரிஹர இந்துக் கோவிலை இடித்து, முகலாய மன்னர் முகமது பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று தீவிர இந்துத்துவவாதியான உச்சநீதிமன்ற வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், சம்பல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், மசூதியை மேற்பார்வையிட வழக்குரைஞர் ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி முதற்கட்ட சர்வே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 24-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட சர்வே பணியின்போது, சர்வே பணிக்கு வந்த அதிகாரிகளுடன் இந்து மதவெறியர்களும் சேர்ந்துக் கொண்டனர். காவிக் குண்டர்கள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தவே, தற்காப்புக்காக சம்பல் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உத்தரப்பிரதேச போலீசு மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தி அநியாயமாக ஐந்து இஸ்லாமியர்களை படுகொலை செய்தது யோகி ஆதித்யநாத் அரசு.

★ ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற தலமான, 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த குவாஜா மொய்னுதீன் சிஷ்தி தர்காவானது ஒரு பழமையான சிவன் கோவிலின் மேல் கட்டப்பட்டுள்ளது என்று இந்து சேனா என்ற அமைப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இதற்கான ஆதாரம் என்ற பெயரில் இந்து சேனா அமைப்பின் தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா மூன்று அம்சங்களை முன்வைக்கிறார்.

முதலாவதாக, ஆங்கிலேயர் ஆட்சியின் போது அஜ்மீர் நகராட்சி ஆணையராக இருந்த ஹர்பிலால் சர்தா, 1911-ஆம் ஆண்டு எழுதிய புத்தகத்தில் இந்த தர்கா ஒரு கோவிலின் மேல் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக, இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு இந்து சேனாவின் சார்பாக ஒரு குழு சொந்த முறையில் அந்த தர்காவில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த ஆய்வில் தர்காவின் சுவர்கள் மற்றும் கதவுகளில் இந்து கோவில்களில் உள்ள சிற்பங்கள் போன்றவை அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மூன்றாவதாக, எங்களது முன்னோர்கள் உட்பட அஜ்மீரில் உள்ள பலர் தர்கா இருந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் இருந்ததாகவும் அங்கு ஒரு இந்து கோவில் இருந்ததாகவும் கூறுகின்றனர். எனவே, அந்த இடம் சிவலிங்கத்திற்கு சொந்தமாகும். அந்த அடிப்படையில் நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த மூன்று காரணங்களையும் சான்றுகளாக வைத்துக்கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ள அஜ்மீர் நீதிமன்றம், சிறுபான்மையினர் விவகார அமைச்சகம், தர்கா கமிட்டி மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகிய மூன்று தரப்பினருக்கும் நவம்பர் 27-ஆம் தேதி நோட்டீசு அனுப்பியுள்ளது.

★ ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி, இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படும் கேசவ் தேவ் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று காவிக் கும்பல் வதந்தியைக் கிளப்பியது. இந்நிலையில், இதனை அடிப்படையாக வைத்து மசூதியை அகற்றுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிக்க மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

★ குதுப்மினாரை விஷ்ணுமினார் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அது இந்து கோவிலை இடித்துக் கட்டப்பட்டது என்றும் காவிக் குண்டர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எரிகின்ற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல, ஒன்றிய அரசின் தொல்லியல் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி தரம்வீர் சர்மா, “டெல்லியில் இருப்பது குதுப்மினார் இல்லை. அது குதுப்-அல்-தீன் ஐபக்கால் கட்டப்பட்டதில்லை. அது, ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர் விக்ரமாதித்யாவால் கட்டப்பட்ட சூரியக் கோபுரம்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

★ கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட சுமார் 240 ஆண்டுகள் பழமையான ஜமா மசூதிக்குள் இந்துக்களை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மாண்டியா மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது, நரேந்திர மோடி விசார் மஞ்ச் என்னும் இந்துத்துவ அமைப்பு.

மசூதி இருந்த இடத்தில், அனுமன் கோவில் இருந்தது என்று பாரசீக ஆட்சியர்களுக்கு திப்பு கடிதம் எழுதியதற்கான ஆவண ஆதாரங்கள் உள்ளது என்றும் மசூதியின் தூண்கள், சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் இந்து மதத்தைச் சார்ந்தது என்றும் எனவே வழிபாடு நடத்த மசூதியின் கதவுகளைத் திறக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் மஞ்ச் அமைப்பின் செயலாளர் மஞ்சுநாத்.

இவை மட்டுமல்ல, மத்தியப்பிரதேசத்தில் உள்ள கமல் மௌலா மசூதி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி ஞானவாபி மசூதி, மதுரா-ஷாஹி ஈத்கா மசூதி, ஆக்ரா-ஜாமா மசூதி, ஜாவுன்பூர்-அடாலா மசூதி, பதாவுன்-ஷம்சி ஜாமா மசூதி, லக்னோ-திலா வாலி மசூதி, கர்நாடகாவில் உள்ள பாபா புதன்கிரி தர்கா போன்ற மசூதிகள், தர்காக்கள் என 12 வழிபாட்டுத் தலங்கள் இந்து கோவில்களை இடித்துக் கட்டப்பட்டதாக பல்வேறு வழக்குகள் காவிக் கும்பலால் தொடரப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை அதிகாரிகளை இணைத்துக்கொண்டு உத்தரப்பிரதேச நூரிஜாமா மசூதியை இடித்து நொறுக்கிய காவி கும்பல்.

“பாபர் மசூதி வெறும் முன்னோட்டம்தான்; காசி, மதுரா மசூதிகளும் இலக்கில் உள்ளன”, “இன்னும் 1,800 கோவில்களை மீட்க வேண்டியுள்ளது” என்று கொக்கரித்தவாறே இம்மசூதிகளையும் தர்காக்களையும் வேட்டையாடத் துடிக்கிறது காவிக் கும்பல்.

இஸ்லாமியர்களின் உரிமையை பாதுகாக்குமா நீதித்துறை?

மசூதிக்கடியில் இந்து கோவில் இருப்பதாக வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் காவிக் கும்பல், உத்தரப்பிரதேசத்தில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி நூரிஜாமா மசூதியின் ஒரு பகுதியை சட்டப்பூர்வமாகவே இடித்துத் தள்ளியிருக்கிறது. 68 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலையை, 158 ஆண்டுகள் பழமையான நூரிஜாமா மசூதி ஆக்கிரமித்துள்ளது என்ற அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி, டிசம்பர் 10 அன்று பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துணையுடன் சட்டப்பூர்வமாகவே மசூதியை இடித்தது காவிக் கும்பல்.  இது இந்தியா முழுவதும் பெரும் பேசுபொருளாகி ஜனநாயக சக்திகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நூரிஜாமா மசூதி இடிக்கப்பட்ட இரண்டே நாட்களில், 1991-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது வழக்கின் தீர்ப்பு வரும்வரை, வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாட்டின் எந்த நீதிமன்றங்களிலும் புதிய வழக்கு தொடரத் தடை விதித்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற ஜனநாயக சக்திகளும் ஆளும் வர்க்க ஊடகங்களும், உச்சநீதிமன்றம் பாசிசக் கும்பலுக்கு சம்மட்டி அடி கொடுத்துவிட்டதாக தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டுத் தலங்களையும் உரிமையையும் பாதுகாக்கும் என்றனர்.

ஆனால், உச்சநீதிமன்றம் திடீரென இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக ‘சீற்றம்’ கொண்டு இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பது இது முதன்முறையல்ல. அப்படி வழங்கப்பட்ட உத்தரவுகளும் தீர்ப்புகளும் இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவோ பாசிச சக்திகளுக்கு நெருக்கடி கொடுப்பதாகவோ இருந்ததில்லை என்பதே கடந்த கால அனுபவமும் வரலாறுமாகும்.

சான்றாக, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் வீடுகள், கடைகளை புல்டோசரால் இடித்துத் தள்ளுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதத்தில் தாமே முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. கட்டடங்களை புல்டோசரால் இடிப்பதற்கு இடைக்காலத் தடைவிதித்தது. அதன் தொடர்ச்சியாக, கடந்த நவம்பர் 13-ஆம் தேதியன்று இத்தகைய வழக்குகளில் கட்டடங்களை இடிப்பதற்கு முன்பாக பின்பற்றப்பட வேண்டிய பத்து வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் உத்தரவாகப் பிறப்பித்தது. அந்த உத்தரவில், “கட்டடத்தை இடிப்பதற்கான இறுதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கும் நீதித்துறை ஆய்வு செய்வதற்கும் உரிமையாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவுக்கு தடை விதிக்கவில்லையென்றால் இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்றது.

இதுவரை பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு நீதி வழங்குவது குறித்தும் இழப்பீடு தருவது குறித்தும் வாய்திறக்காத, காவிக் குண்டர்களைத் தண்டிப்பது குறித்து மூச்சுக்கூட விடாத இந்த அயோக்கியத்தனமான தீர்ப்பை பலரும் வரவேற்றனர்.

ஆனால், தீர்ப்பு வந்த ஒரு மாதத்திலேயே அந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, நூரிஜாமா மசூதியை இடித்துத்தள்ளி மீண்டும் தனது புல்டோசர் ராஜ்ஜியத்தை தொடர்ந்துள்ளது, உத்தரப்பிரதேச யோகி அரசு. சொல்லப்போனால், நூரிஜாமா மசூதியை இடிப்பதற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் போதுதான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிலும், மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை டிசம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில் திட்டமிட்டே டிசம்பர் 10-ஆம் தேதி மசூதியை இடித்துள்ளது யோகி அரசு.

இந்நிலையில்தான் தற்போது மற்றுமொரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதுவும் களத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத பெயரளவிற்கான உத்தரவு மட்டுமே. ஏற்கெனவே சில மசூதிகளில் வழிபாடு நடத்துவதற்கான அனுமதியை சங்கப்பரிவார கும்பல்கள் நீதிமன்றத்தில் பெற்றுள்ளதால், அங்கெல்லாம் சங்கப் பரிவாரக் கும்பல் தனது நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை. அதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய்திறக்கவும் இல்லை.

உண்மையில், உச்சநீதிமன்றத்தின் இத்தகைய உத்தரவுகளும் தீர்ப்புகளும் இக்கட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை குலைந்துவிடக் கூடாது என்ற வர்க்கப் பாசத்திலிருந்தே பிறப்பிக்கப்படுகிறது.

பாசிச மோடியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய மக்கள் மீதான பாசிச ஒடுக்குமுறை என்பது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதுவரை இஸ்லாமியர்கள் மீது கும்பல் வன்முறையை நிகழ்த்திவந்த இந்து மதவெறிக் குண்டர்களுடன் தற்போது போலீஸ், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசின் உறுப்புகளும் இணைந்து சட்டப்பூர்வத் தாக்குதல் தொடுப்பது புதிய போக்காக வளர்ந்து வருகிறது. இவையன்றி, ஜனநாயக நிறுவனங்கள் என்று சொல்லப்பட்டவை அனைத்தும் பாசிச மோடி அரசின் அடியாள் படையாக மாறிவிட்டது என்பதை மக்கள் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து வருகின்றனர். இச்சூழலில் தான் தலையிடவில்லை எனில் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை இழப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தினால் உச்சநீதிமன்றம் பெயரளவிலான சில உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் வழங்குகிறது.

நீதித்துறையின் கரசேவை

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய வழக்கு தொடரத் தடைவிதித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பாசிச சக்திகளுக்கு எந்த வகையிலும் கடிவாளமிடாது என்பதையும் தாண்டி, வழிபாட்டுத் தலங்கள் 1991 சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

பாபர் மசூதி இடிப்பு சம்பவமானது இந்தியாவின் மதச்சார்பின்மையின்மை என்ற முகமூடியைக் கிழித்து தொங்கவிட்டது. இதனை தடுப்பதற்காக ஓடோடிவந்த உச்சநீதிமன்றம், 1991-ஆம் ஆண்டு மத வழிபாட்டுச் சட்டத்தில், “நாடு ‘விடுதலை’ பெற்ற ஆகஸ்டு 15, 1947 தினத்தன்று இருந்த நிலையிலிருந்து, எந்த வழிபாட்டுத் தலத்திலும் மாற்றங்கள் கொண்டுவரத் தடை விதிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் இருந்த நிலை அப்படியே தொடர வேண்டும். எந்த வழிபாட்டுத் தலங்களையும் வேறு பிரிவினருக்கோ, ஒரு பிரிவுக்குள் உள்ள மற்ற பிரிவுக்கோ முழுமையாகவோ, பகுதியாகவோ வழங்கி மாற்றங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கிறது. வழிபாட்டுத் தலங்களில் மாற்றங்கள் கோரி ஏதேனும் வழக்கு, மேல்முறையீடு மனுக்கள் தொடுக்கப்பட்டிருந்தால் அவை காலாவதியாகிறது. இனிமேல் புதிதாக வழக்குகள் தொடரத் தடை விதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டது. இந்த உத்தரவு பாபர் மசூதி தவிர பிற வழிபாட்டுத் தலங்கள் அனைத்திற்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு இறுதித் தீர்ப்பின்போதும் இக்கூறுகள் வலியுறுத்தப்பட்டன. இச்சட்டம் இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கும் சட்டமாக பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், வாரணாசியில் உள்ள சுமார் 350 ஆண்டுகள் பழமையான ஞானவாபி மசூதியில் காவிக் குண்டர்கள் வழிபாட்டு உரிமை கோரிய வழக்கு விசாரணையின் போது, “ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மையைக் கண்டறிவதை சட்டம் (வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991) தடுக்கவில்லை. அதன் தன்மையை மாற்றுவதை மட்டுமே தடை செய்கிறது” என்று அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் புதிய வியாக்கியானத்தை அளித்தபோதே இச்சட்டம் நீர்த்துப்போனது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், சந்திரசூட்டின் இந்த வாய்மொழி விளக்கத்தை சட்ட உரிமையாக எடுத்துக்கொண்டு கீழமை நீதிமன்றங்கள் மதுரா மசூதி உள்ளிட்ட பல மசூதிகளுக்குள் காவிக் குண்டர்களை அனுமதித்தன. ஞானவாபி மசூதி உள்ளிட்ட மசூதிகளில் காவிக் குண்டர்கள் வழிபாடு நடத்துவதும், நாடுமுழுவதும் உள்ள பல மசூதிகளை அபகரிக்க நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கிடப்பதும் புது போக்காகியுள்ளது.

இருப்பினும், இச்சட்டத்தை தொடக்கத்திலிருந்தே எதிர்த்துவரும் காவிக் கும்பல் முற்றிலுமாக ரத்து செய்யத் துடிக்கிறது. இந்த பாசிச நோக்கத்திலிருந்துதான் வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, நீதி பெறுவதற்கு தடையாக இருப்பதாகவும் இச்சட்டத்தின் சில பிரிவுகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்புகளும் சுப்பிரமணிய சுவாமியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இத்தகைய வழக்குகளை ரத்து செய்வதற்குப் பதிலாக, சிரமேற்கொண்டு வழக்கு விசாரணையை நடத்திக்கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இது இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும். இத்தகைய வழக்கு விசாரணையில் அளிக்கப்பட்ட உத்தரவை இஸ்லாமிய மக்களுக்கான அரண் என்று முன்னிறுத்துவது மிகவும் ஆபத்தானதாகும்.

எனவே, நீதிமன்றங்கள் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாப்பதற்கு எந்த முன்னெடுப்புகளையும் செய்யவில்லை என்பதை விட, சங்கப் பரிவாரக் கும்பல்களின் கரசேவைக்கு சட்ட வடிவம் கொடுத்து கரசேவையில் தனது பங்கை உறுதிப்படுத்தியுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

போராட்டங்களே பாசிஸ்டுகளின் கோட்டைகளை நொறுக்கும்

உண்மையில், இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டுத் தலங்கள் காவிக் கும்பலால் குறிவைக்கப்படுவதும் கட்டடங்கள் இடித்து நாசமாக்கப்படுவதும் பாசிசக் கும்பலின் இந்துராஷ்டிரம் என்ற கனவுடன் இணைந்ததாகும்.

இந்துராஷ்டிரத்தில் இஸ்லாமிய மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கத் துடித்துக்கொண்டிருக்கும் காவிக் கும்பல், அதற்காக இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைகளையும் அரசியல், பொருளாதார அதிகாரங்களையும் பறித்துவருகிறது.

அதேபோல், இந்தியாவில் நாடு முழுவதும் சுமார் 1.2 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃப் சொத்துகளின் மீதான இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறித்து அதனை கைப்பற்றிக் கொள்வதற்காக வக்ஃப் சட்டத்திருத்தத்தையும் நிறைவேற்றத் துடிக்கிறது காவிக் கும்பல். இத்தனை கோடி ரூபாய் சொத்துகளையும் அபகரிப்பதுடன், இஸ்லாமியர்களின் பொருளாதார அடிக்கட்டுமானங்களை தகர்த்து சொந்த மண்ணிலேயே அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் பாசிஸ்டுகளின் இந்துராஷ்டிரக் கனவுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காகவே இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

இஸ்லாமியர்களை தேர்தலில் வேட்பாளராக பாசிசக் கும்பல் நிறுத்தாததும், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித கேள்வியுமின்றி இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடித்து அவர்களை சொந்த நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்குவதும் இந்த நோக்கத்துடன் இணைந்ததே ஆகும்.

பாசிசமயமாகியிருக்கும் நீதித்துறையானது பாசிசக் கும்பலின் நோக்கத்திற்கு பக்கபலமாகவே நிற்கிறது. சூழல் இப்படி இருக்கையில், நீதிமன்றத்தின் மூலம் இஸ்லாமிய மக்களின் உரிமையையும் அதிகாரத்தையையும் நிலைநாட்டிவிட முடியும் என்று கருதுவது இஸ்லாமிய மக்களை பாசிசத்திற்கு பலியிடுவதிலேயே சென்று முடியும்.

எனவே, இனியும் பாசிசமயமாகிவரும் நீதிமன்றமும் இஸ்லாமிய மக்களுக்கான ஜனநாயகத்தைப் பெற்றுத்தராது. அது கரசேவை அமைப்பாக எப்போதோ மாறிவிட்டது. இந்த பாசிஸ்டுகளின் இஸ்லாமிய விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக களப்போராட்டங்களைக் கட்டியமைப்பதே உடனடி தீர்வுக்கு வழிவகுக்கும்.

மேலும், இந்துராஷ்டிரம் அமைக்கப்படுவது என்பது வெறுமனே இஸ்லாமிய மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, அது தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடிகள், தலித் மக்கள் என கோடானுகோடி உழைக்கும் மக்களை நரகத்திற்குள் தள்ளுவதாகும். இஸ்லாமியர்கள் பாசிஸ்டுகளின் முதல் பலி மட்டுமே. எனவே, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதை நோக்கமாகக் கொண்ட, நாடு தழுவிய பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்பதே உடனடி தேவையாகும்.


பாரி

(புதிய ஜனநாயகம் – ஜனவரி 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றம்: எச். ராஜாவை கைது செய் – ஜனநாயக சக்திகள் மனு

திருப்பரங்குன்றம்: எச். ராஜாவைக் கைது செய் – ஜனநாயக சக்திகள் மனு

சென்னை:

மதுரை:

காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-31 ஜூலை, 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 17 | 1987 ஜூலை 16-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராஜீவுக்கு வலை வீசும் ரஷிய வல்லரசு
  • அரியணையில் செருப்பு! ஆள்வது பரதன்!!
  • சீக்கிய பயங்கரவாதம் தீரவில்லை; தீவிரமாகிவிட்டது
  • கோதாவில் இறங்கிய நாற்காலி கம்யூனிஸ்டுகள்
  • நில்! கவனி! எச்சரிக்கை! பெருகிவரும் சாலை விபத்துக்கள்
  • கொத்தடிமைகளாக அஞ்சல் துறை ஊழியர்கள் துரோகிகளாக மஞ்சள் தொழிற்சங்கங்கள்
  • அச்சுறுத்தும் அவசர நிலை அபாயம்!
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாயப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகளின் துரோகத்தனமும் (1946—51)
  • போடப்படும் சட்டங்கள் மீறப்படுவதற்கே!
  • போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவும் மோதலும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது? உடைத்து பேசும் தோழர் அமிர்தா

திருப்பரங்குன்றத்தில் என்ன நடந்தது?
உடைத்து பேசும் தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜூலை, 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 16 | 1987 ஜூலை 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மேற்கில் வீசும் பிற்போக்கு அலை
  • காங்கிரசின் ஐந்தாம் படையாக போலிக் கம்யூனிஸ்டுகள்!
  • வாழ்வதற்காக சாகிறார்கள்
  • படுதோல்வி முன்னே… பாசிச அடக்குமுறை பின்னே…
  • ஊழல்! ஊழல்!! “ஊழலை ஒழிக்கமுடியாது! அதனுடன் ஒத்துப் போக கற்றுக்கொள்ளுங்கள்!”
  • மிதமிஞ்சி வழியும் வாய்க்கொழுப்பு
  • ஜனாதிபதி: நேரு – இந்திரா குடும்பத்தின் விலையுயர்ந்த விளையாட்டு பொம்மை
  • வளைகுடாவில் வட்டமிடும் அமெரிக்க ஆதிக்கக் கழுகு
  • வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானாப் போராட்டமும், விவசாயப் புரட்சியும் போலிக் கம்யூனிஸ்டுகள் துரோகத்தனமும் [1946 – 51]
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 16-30 ஜூன், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 15 | 1987 ஜூன் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழக போலீஸ் கொள்கை: சாராய உடையாருக்கு மரியாதை! சாமானிய ஏழைக்குத் தண்டனை!
  • ஆதிக்க வெறியர்களின் சதிக்குப் பலியாவதா? ஐக்கியப்பட்டு போராடுவதா?
  • போலிக் கம்யூனிஸ்டுகளின் அரசியல் நாகரீகம் நாறுகிறது!
  • தண்ணீர் பஞ்சமோ தலைவிரித்தாடுகிறது! குடிநீர் வாரியமோ ஊழலில் மிதக்கிறது!
  • பிரதமர் போர்வையில் கிரிமினல் குற்றவாளி
  • மீரட் கலவரம்: முஸ்லீம் மக்களுக்கு எதிராக
  • ஈழ இயக்கத்தை சீர்குலைக்கும் இந்திய உளவுப் படை ‘ரா’
  • இந்தியப் பொருளாதாரம்: பாதாளத்தை நோக்கிய பாய்ச்சல்!
  • அடியிழந்த மரம் அதிகமாக ஆடுகிறது!
  • வறட்சியின் நடுவே திராவிட வாரிசுகளின் வசூல் வேட்டை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 1-15 ஜூன், 1987 இதழ்

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 14 | 1987 ஜூன் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: அடிப்படையும் இல்லை! அருகதையும் இல்லை!!
  • பிஜி நாட்டில் நடந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு: இன்னும் ஒரு இலங்கை உருவாகிறது
  • இந்திய இடதுசாரிப் போக்கு – ஒரு கண்ணோட்டம் (சென்ற இதழின் தொடர்ச்சி…)
  • எழுந்து நின்றால் வீழ்த்துவார்! இல்லையேல் வாழ்த்துவார்!
  • ஈழம்: ஒரு திருப்பு முனை!
  • சோசலிசம் பேசியே சுரண்டிக் கொழுக்கும் காங்கிரசு கும்பல்!
  • பைனான்ஸ் கம்பெனிகள் பிளேடு பக்கிரிகள்
  • மதவெறியர்களின் காலடியில்…
  • காட்டாத்தி கூட்டுறவு விவசாய சங்கத்தில் விவசாயிகளுக்கு அண்ணா நாமம்!
  • தமிழக போலீஸ் கொள்கை: மாஃபியா குண்டர்களுக்கு மரியாதை! புரட்சிகர இளைஞர்களுக்கு சித்திரவதை!!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram