Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 481

மோடி அரசிடமிருந்து காவிரியை மீட்போம் ! நாளை திருச்சி முற்றுகை !

0

“கடைமடை வரை காவிரி நீர் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை… உறவும் இல்லை…” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நாளை 24.03.2018 அன்று திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக!

குட்டக் குட்ட குனியாதே டெல்லிக்கு அடிபணியாதே !

 

நர்மதா, கோதாவரி, கிருஷ்ணாவுக்கு தீர்ப்பு வந்தவுடன் ஆணையம் !
பதினோரு ஆண்டுகள் ஆகியும் காவிரி மேலாண்மை வாரியம் மறுப்பு !
சமத்துவம் இல்லாத தேசிய ஒருமைப்பாடு எதற்கு?

 

‘இறுதித் தீர்ப்பு’ இதுதான்! எதிர்கால காவிரி கர்நாடகக் கழிவுகளின் கூவமாகும் ! தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் நீர் வறண்ட பாலையாகும் ! காவிரி டெல்டாவைக் கடல் கொள்ளும்! நாட்டுக்கே சோறுபோட்ட உழவர்கள் அகதிகளாவர் ! தமிழகம், குடிநீர் இன்றி நா வறண்டு தவிக்கும் !

 

இரண்டாயிரம் ஆண்டுகளாய் கம்பீரமாய் நிற்கும் கல்லணை – காவிரியில் தமிழர்களின் உரிமைக்குச் சான்று ! நேற்று வந்த டெல்லி தமிழகத்தின் உரிமையைப் பறிக்க அனுமதிப்பதா?

 

தமிழர்களின் உணவுத் தன்னிறைவுக்கு 19 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பல லட்சம் உழவர்கள், விவசாயத் தொழிலாளர்களின் வீட்டில் அடுப்பு எரிய, காவிரி நீர் வர வேண்டும்.

 

தண்ணீரைப் பண்டமாக மாற்றி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆறுகளையும், நிலத்தடி நீரையும் தாரைவார்த்து, தாகத்தில் தவிப்பவனிடம் விலைபேசும் அபாயமான இந்த அரசியல் சூழலில், காவிரி நீர் பறிபோனால் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகும்?

 

காவிரி மட்டுமா டெல்லி தாக்குதல், நீட் தேர்வு, கூடங்குளம் அணு உலை, கெயில் குழார் பதிப்பு, ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ, சாகர் மாலா திட்டங்கள்… என கொத்துக் குண்டுகள் தமிழினத்தின் மீது டெல்லியால் வீசப்படுகின்றன.

தமிழனா? இந்தியனா? முடிவு செய்வோம்!

 

டெல்லியை நம்பி, நம்பி தமிழன் சாக வேண்டுமா?
கருகிய பயிரால் விவசாயிகள் பலி! ஒக்கி புயலுக்கும், துப்பாக்கி சூட்டிற்கும் மீனவர்கள் பலி!
நீட் தேர்வால் மாணவி அனிதா பலி! மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு டெல்டா விவசாயமே பலி !

 

கருவறையில் தமிழுக்கு தீட்டு ! நீதிமன்றத்தில் தமிழுக்கு இடமில்லை! காவிரியில் இனி உனக்கு தண்ணீர் இல்லை ! ஏனென்றால் நீ… தமிழன்!

 

கர்நாடகத் தேர்தலுக்காக அரங்கேறும் வஞ்சகம் மட்டுமல்ல, காவிரித் தீர்ப்பு ! இது, திராவிட மரபு – தமிழினத்தின் மீது பார்ப்பன பாசிசம் கக்குகின்ற வெறுப்பு !

 

தமிழினத்தின் மீதான தாக்குதலை முறியடிக்க டெல்லிக்கு எதிராக தமிழகம் போர்க்களமாகட்டும் ! ஜல்லிக்கட்டுக்கு திரண்ட தமிழகம், காவிரிக்கு வெடித்துக் கிளம்பட்டும்!

மேலும் படங்கள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் காவிரிப் பிரச்சினையயொட்டி திருச்சியில் நடைபெறவுள்ள தபால் நிலைய முற்றுகையையொட்டி கரூர் பகுதியில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

கிரனடா : புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் !

0

மொரிஸ் பிஷப் (Maurice Bishop)

க்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பது குறைவு. மக்கள் நலன் பேசி பதவிக்கு வந்த பின்னர், தன்னலம் கருதி பணத்தை பதுக்கும் அரசியல் தலைவர்கள் மத்தியில், மொரிஸ் பிஷப் வித்தியாசமானவர். முன்னாள் பிரிட்டிஷ் காலனி நாடான கிரனடாவில், மக்களின் தேவை உணர்ந்து செயலாற்றிய முதலாவதும், கடைசியுமான பிரதமர் அவர் தான். மூன்றாமுலக ஏழை நாட்டை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி, இலவச மருத்துவம். சின்னஞ்சிறு தீவின் முக்கிய பொருளாதாரமான சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் கட்டுமானப் பணிகள்…. அடடா! இதெல்லாம் ‘கம்யூனிசம்’ ஆச்சே!

மொரிஸ் பிஷப்

உலகில் எங்காவது கம்யூனிசம் துளிர் விட்டால், அதனை நசுக்குவதை தனது நோக்கமாக கொண்ட அமெரிக்கா, ஒரு குட்டி நாடான கிரனடா மீது படையெடுத்தது. என்ன காரணம்? இதற்கெல்லாம் யாராவது காரணம் கேட்பார்களா? நமக்குத் தான் அது ஒரு படையெடுப்பு. அமெரிக்கர்களுக்கு இராணுவப் பயிற்சி. எத்தனை காலம் தான் கண்ணால் காணாத எதிரியுடன் போலியான மோதல் நடத்திக் கொண்டிருப்பது? நிஜமாகவே ஒரு நாட்டைப் பிடித்து, நிஜமான மனிதர்களைக் கொல்லும், நிஜமான இராணுவப் பயிற்சி.

கிரிக்கட் இரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான, மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்று கிரனடா. வெனிசுவேலா நாட்டுக்கு மேலே, சுமார் நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறு தீவு. முன்னூறு சதுர கிலோமீட்டரே அளவான குட்டி நாடு. பிரிட்டனின் காலனியாக இருந்ததால், இன்றைக்கும் அங்கே ஆங்கிலமே அதிகாரப்பூர்வ மொழி. பெரும்பான்மையான மக்கள் ஆப்பிரிக்க கறுப்பின வம்சாவளியினர். பொதுநலவாய நாடுகளில் உறுப்புரிமை பெற்ற கிரனடா இன்றைக்கும், பிரிட்டிஷ் மகாராணியின் தலைமையை ஏற்றுக் கொண்ட, பாராளுமன்ற அமைப்பை கொண்டுள்ளது.

பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், பாராளுமன்றத்தில் மார்க்சிய எதிர்க் கட்சியாக வீற்றிருந்த New Jewel Movement (NJM), 1979 ஆம் ஆண்டு ஒரு ’சதி’ப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது. சோஷலிசப் புரட்சியில் நம்பிக்கை கொண்ட அந்தக் கட்சி, ஏற்கனவே ஒரு இரகசியமான மக்கள் இராணுவத்தை உருவாக்கி இருந்தது. சதிப்புரட்சியின் பின்னர், காலனிய கால சட்டங்கள் அனைத்தும் உடனடியாக இரத்து செய்யப் பட்டன. புதியதொரு அரசமைப்பு சட்டம் இயற்றப் பட்டது. “புரட்சிகர மக்கள் அரசு” ஸ்தாபிக்கப் பட்டது. அதன் பிரதமராக மொரிஸ் பிஷப் என்ற வழக்கறிஞர் தெரிவு செய்யப் பட்டார்.

பிரிட்டிஷ் காலனிய மேற்கிந்தியத் தீவுகளில் உருவான, முதலாவது ’சோஷலிச’ நாடு அதுவாகத் தானிருக்கும். NJM மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை வழிகாட்டியாக கொண்டியங்கியது. உலகின் பிற சோஷலிச நாடுகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டது. குறிப்பாக, அயலில் இருந்த கியூபாவுடன் நெருங்கிய தொடர்பை பேணியது. கியூபாவின் உதவியுடன், மக்களின் அத்தியாவசியத் தேவைகளான கல்வி, மருத்துவம் என்பன இலவசமாக வழங்கப் பட்டன.

கரீபியன் கடல் பிரதேசத்தில் அமைந்துள்ள கிரனடா தீவு, உல்லாசப் பயணிகள் சொர்க்கமாக கருதுமளவிற்கு இயற்கை வளம் நிறைந்தது. அதற்கு அயலில் இருக்கும் தீவுகளுக்கு, வருடந்தோறும் உல்லாசப் பயணிகள் தமது விடுமுறையைக் கழிக்க சென்று வருகின்றனர். கிரனடாவுக்கும் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர வேண்டுமென்றால், ஒரு சிறந்த சர்வதேச விமான நிலையம் அவசியம். அதற்கான திட்டம், பிரிட்டிஷ் காலனியாக இருந்த காலத்திலேயே தொடங்கப் பட்டது. ஆனால், மொரிஸ் பிஷப் அரசில் தான் அது நடைமுறைக்கு வந்தது.

சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு கியூபா உதவி செய்தது. கியூப பொறியியலாளர்களும், பணியாளர்களும் வந்திறங்கினார்கள். விமான நிலையம் கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், அமெரிக்காவில் அன்றிருந்த ரீகன் அரசு, தனது கண்டனத்தை தெரிவித்து வந்தது. அப்போது பனிப்போர் காலகட்டம். அதனால், “சோவியத் யூனியனும், கியூபாவும் சேர்ந்து, கிரனடாவில் ஒரு இராணுவ விமானத் தளம் கட்டுவதாக” பிரச்சாரம் செய்தது. அமெரிக்காவில் இருந்து சென்ற உண்மை அறியும் குழுவினர், “அது இராணுவத் தளம் அல்ல. வணிக நோக்கத்திற்காக கட்டப்படும் பயணிகள் விமான நிலையம்.” என்று அறிக்கை சமர்ப்பித்தனர். ஆனால், அந்த அறிக்கையை வாங்கி குப்பைத் தொட்டிக்குள் போட்ட ரீகன் அரசு, தொடர்ந்தும் கிரனடா பற்றிய கட்டுக் கதைகளை பரப்பி வந்தது.

இதற்கிடையே கிரனடாவில், ஆளும் கட்சிக்குள் பிளவு தோன்றியது. மொரிஸ் பிஷப்புடன் முரண்பட்ட, பெர்னார்ட் கோர்ட் (Bernard Coard) தலைமையிலான குழுவொன்று அதிகாரத்தை கைப்பற்றியது. மொரிஸ் பிஷப் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். ஆனால், எதிர்ப்புரட்சியாளர்களின் எண்ணம் ஈடேறவில்லை. மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்த மொரிஸ் பிஷப் கைது செய்யப்பட்ட சம்பவம், கிரனடா முழுவதும் மக்கள் எழுச்சியை தூண்டி விட்டது. சிறையில் அடைக்கப் பட்டிருந்த மொரிஸ் பிஷப், மகத்தான மக்கள் போராட்டத்தினால் விடுதலை செய்யப் பட்டார். உண்மையாகவே மக்களின் நலன் கருதி கடமையாற்றும் தலைவர்களை, மக்கள் என்ன விலை கொடுத்தும் பாதுகாப்பார்கள் என்பதற்கு, மொரிஸ் பிஷப்பின் வரலாறு ஒரு உதாரணம்.

விதி வலியது என்பார்கள். நிலைமையை கட்டுப்படுத்தும் வழி தெரியாத எதிர்ப்புரட்சிக் கும்பல், மொரிஸ் பிஷப்பையும், அவரது ஆதரவாளர்கள் சிலரையும் சுட்டுக் கொன்றனர். 19 அக்டோபர் 1983, கிரனடா மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத துயர நாள். அன்று தான் மொரிஸ் பிஷப் படுகொலை செய்யப் பட்டார். மொரிஸ் பிஷப் படுகொலை செய்யப் பட்ட பின்னர், எதிர்ப்புரட்சி அரசு நீண்ட காலம் நிலைக்கவில்லை. அந்த சம்பவம் நடந்து சில நாடகளில், அமெரிக்க மரைன் படைகள் கிரனடா தீவை சுற்றி வளைத்தன.

25 அக்டோபர் 1983, அமெரிக்கப் படையெடுப்பு ஆரம்பமாகியது. அப்போது நடந்த சண்டையில் சில நூறு பேர் கொல்லப் பட்டனர். அமெரிக்கப் படையினரின் இலக்கு, கியூப பொறியியலாளர்களாக இருந்தது. குறைந்தது ஐம்பது கியூபர்கள் ஆக்கிரமிப்பாளர்களினால் கொல்லப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்பை எதிர்த்து, ஐ.நா.சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனாலும் என்ன நடந்தது? ஏழு வருடங்களுக்குப் பின்னர், குவைத் மீது படையெடுத்த ஈராக், ஐ.நா. -வினால் கடுமையாக தண்டிக்கப் பட்டது. பொருளாதாரத் தடைகள் கொண்டு வரப் பட்டன.

அமெரிக்காவுக்கு எதிராக கிளம்பிய சர்வதேச கண்டனம் குறித்து அந்த நாடு எள்ளளவும் கவலைப் படவில்லை. “அமெரிக்காவைக் கண்டால் ஐ.நா.வும் நடுங்கும்,” என்பது ஒரு புதுமொழி. மொரிஸ் பிஷப் படுகொலைக்கு பழிவாங்க காத்திருந்த சிலர், அமெரிக்கப் படையெடுப்பை வரவேற்றதில் வியப்பில்லை. ஆனால், அமெரிக்கா படையெடுத்த நோக்கம் வேறு. “கிரனடாவில் கம்யூனிச அபாயத்தை தடுத்து நிறுத்தி விட்டதாக,” அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உண்மை அதுவல்ல. அது உலகிற்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. அமெரிக்காவின் கூட்டாளியான, பிரிட்டன் கூட படையெடுப்பை வன்மையாகக் கண்டித்ததில் இருந்தே, அதனைப் புரிந்து கொள்ளலாம்.

கிரனடா படையெடுப்புக்கு சில நாட்களுக்கு முன்னர், லெபனான் போரில் அமெரிக்கப் படைகள் கடுமையான அடி வாங்கி இருந்தன. வியட்நாம் போருக்குப் பின்னர், அது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருந்தது. அந்தத் தோல்வியை மறப்பதற்காக, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் வல்லமையற்ற குட்டி நாடான கிரனடா மீது படையெடுத்து, தனது “வீரத்தை” காட்டி இருக்கலாம். புதிதாக உற்பத்தி செய்த, நவீன அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்தி பார்ப்பதற்கு ஒரு பயிற்சிக் களம் தேவைப் பட்டிருக்கலாம். இல்லாவிட்டால், அப்படி எந்தக் காரணமும் தேவையில்லை. அமெரிக்கப் படையினர், இதையும் “ஒரு வீடியோ கேம் விளையாட்டு” என்று கருதி இருக்கலாம்.

எது எப்படி இருப்பினும், எந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகளை காரணமாகக் காட்டி, அமெரிக்கா படையெடுப்பை நடத்தியதோ, அந்த விமான நிலையம் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சர்வதேச விமான நிலையத்திற்கு, 2009 -ம் ஆண்டு, கிரனடா கம்யூனிஸ்ட் தலைவர் மொரிஸ் பிஷப்பின் பெயர் சூட்டப் பட்டது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் கம்யூனிசம் அழிந்து விட்டதாக, பனிப்போரில் வென்றவர்கள் வரலாற்றை திருத்தி எழுதினார்கள். கிரனடா தீவைப் பொறுத்த வரையில், கம்யூனிசம் இன்றைக்கும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

-கலையரசன்

2013 அக்டோபர் 19 அன்று கிரனடா கம்யூனிஸ்ட் தலைவர் மொரிஸ் பிஷப்பின் முப்பதாவது நினைவு தினத்தையொட்டி கலையகம் தளத்தில் வெளியான கட்டுரை.

நன்றி : கலையகம்

 

எதுக்குடா இங்க ரத யாத்திரை ? ம.க.இ.க பாடல்

2

மிழக மக்களிடம் பார்ப்பனிய இந்துமதவெறியைப் பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் – விசுவ இந்து பரிசத் – பாஜக கும்பல்கள் செய்யும் முயற்சியில் புதியது இந்த இரத யாத்திரை.

இந்த இர(த்)த யாத்திரைகள் இரத்தக் களறியின்றி முடிந்ததாக வரலாறு இல்லை. இந்துத்துவக் கும்பலின் ’ராம ராச்சிய’ இரகசியத்தை அம்பலப்படுத்துகிறார்கள் ம.க.இ.க கலைக்குழு தோழர்கள்.

பாருங்கள் பகிருங்கள் !

 

பாடல் வரிகள்
*********************

எலே எங்க வந்து நடத்துற ரத யாத்திரை – ராம
ராச்சியத்துக்கு இங்குதான்டா இறுதி யாத்திரை
உன் ராமராச்சியம் அதான் மோடி ராச்சியம் – நீ
ஆரியக் கூத்தாடினாலும் அழிவு நிச்சயம் !

செருப்பை வச்சி ஆண்ட கதை ராமா யணத்துல – மோடி
செருப்பு ரெண்டும் ஆளுது தமிழகத்துல
பொண்டாட்டிய ஒதுக்கி வச்சான் ராமாயணத்துல – ஒப்புரானே
அப்படியே பொருந்துது – நா மோடியை சொல்லலை !

சீதையை மீட்டானாம் ராமாயணம் – அது அவன் பொண்டாட்டி
நான் எதுக்கு கூத்தாடணும் -எங்க
காவிரியும் பெண்தான் அவள் வந்தாகணும் – கடத்தி
வச்சவனே நீதான் – நாங்கள் மீட்டாகணும் !

குஜராத்து மாடலுதான் ராமராச்சியம் – குடிக்க
தண்ணியில்லே, பள்ளியில்லே டோட்டல் பூச்சியம் – அது
அம்பானிக்கும் அதானிக்கும் சர்வமானியம்
அப்பாவி இந்து வாயில் மாட்டுக் கோமியம் !

சூத்திரன் சம்புகன் தவமிருந்தான் அன்று
அவனை கொன்றானே ராமன் மனுதர்மம் என்று
அக்லக், பெக்லு கான் வெமுலாக்கள் இன்று
மோடி ராச்சியத்தை புதைப்பதுதான் தேசத்துக்கே நன்று !

 

 

எட்டாவது ஆண்டில் சிரிய உள்நாட்டுப் போரின் அவலம் – படங்கள்

0

சிரியாவின் உள்நாட்டுப்போர் எட்டாவது ஆண்டை எட்டிவிட்டது. அமெரிக்கா மற்றும் இரசிய வல்லரசுகளின் வல்லாதிக்கத்திற்காக இதுவரை தன்னுடைய 4,65,000 இன்னுயிர்களை இழந்து சிதிலமடைந்த சிரியா இன்னொரு ஆண்டிற்காவது தாங்குமா?

2011-ம் ஆண்டு தொடங்கிய அந்த கோரப்போரின் சுவடுகளின் ஏழுப் புகைப்படங்களை இங்கே காணலாம்.

மார்ச் 25, 2011 – தெற்கு சிரியாவின் டேரா நகருக்கு அருகேயுள்ள டேல் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டமொன்றில் ‘விடுதலை’ முழக்கமிடும் சிரியர்கள்.

ஜனவரி 23, 2012 – ஹோம்ஸின் தெருவொன்றில் சிரிய இராணுவத்திற்குச் சொந்தமான சேதமடைந்த கவச வண்டியொன்றின் முன்பு சிரிய சிறுவன் ஒருவன் நிற்கிறான்.

ஆகஸ்டு 21, 2013 – டமாஸ்கஸ் புறநகர்ப் பகுதி சாக்பாவில் விசவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் முகமூடிகள் உதவியால் மூச்சு விடுகின்றனர்.

மார்ச் 9, 2014 – சிரிய அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆதரவுப்படைகளால் அலெப்போவின் ஹெய்டரியே மாவட்டத்தில் வீசப்பட்ட பீரங்கி குண்டிற்குத் தப்பிய பெண்ணொருவர் அழுது கொண்டிருக்கும் தன்னுடைய குழந்தையுடன், அல்-சக்ஹௌர் மாவட்ட மருத்துவமனையொன்றில்.

டிசம்பர் 26, 2015 – தெற்கு இட்லிப் கிராமப்புறமான ஓம் அல்-சீரின் நிலத்தடி குகையில் உள்ள தற்காலிக தங்குமிடத்தில் உள்ள சிரிய உள்நாட்டு அகதிகள்.

டிசம்பர் 2, 2016 – சிரியாவின் அலெப்போ பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்கு அரசாங்கப் படையினர் மீண்டும் கொண்டு வந்த பின்னர் ஹனோனோ பகுதியில் முன்பு தடுப்பரண்களாக இருந்த சேதமான வண்டிகள் அருகே காணப்படும் குழந்தை இழுபெட்டி ஒன்று.

அக்டோபர் 25,2017 – வளர்ச்சிதை மாற்ற கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டரை வயது ஹலா அல்-நுபி படுக்கையில் உட்கார்ந்து அழுகிறாள். கிழக்கு கவுடாவில் ஏற்பட்டுள்ள முற்றுகை மற்றும் உணவு பற்றாக்குறையினால் அவளது நிலை மென்மேலும் மோசமாகி வருகிறது.

நன்றி : அல்ஜசீரா

காவிரியில் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் மார்ச் 24 முற்றுகைப் போராட்டம் !

0

பத்திரிக்கைச் செய்தி

21.03.2018

காவிரி ஆற்றில் தமிழக உரிமையை மறுப்பதிலும் நீரைத் தடுப்பதிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவைக் காட்டிலும் கூடுதலான வெறியுடன் செயல்படுகிறது மோடி அரசு. தேச ஒற்றுமைக்கு மொத்த குத்தகைதாரர் போல் வேடம் போடும் மோடி அரசு காவிரித் தீர்ப்பை அமல்படுத்த மறுத்து வருகிறது. கர்நாடக அரசுக்கு பக்க பலமாய்ப் பக்க மேளம் வாசிக்கிறது. மத்திய அமைச்சர் கட்கரி, நீர்வளத்துறை செயலர் உ.பி.சிங் ஆகியோர் காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழக தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.

உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும் சதி வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு. தனது தீர்ப்புகளை சற்றும் மதிக்காமல் செயல்படும் சித்தராமையா அரசு, மோடி அரசு இவற்றை உச்ச நீதிமன்றம் கடுகளவு கூட கண்டிக்கவில்லை அதேநேரம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி -யை முடுக்கி விடுகிறது மோடி அரசு.

தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி -யை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப் படையைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழ் நாட்டை ஒரு பகை நாடு போலவே நடத்துகிறது பாஜக அரசு. ஒரு புறம் உரிமைகளைப் பறிப்பது, மறுபுறம் வளங்களைச் சுரண்டுவது என்பதே தமிழகத்தைப் பற்றிய பாஜக -வின் கொள்கை. தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசோ எட்டப்பனைக் காட்டிலும் கீழாக தமிழக நலன்களை அடகு வைத்து விட்டு கொள்ளையடிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல் படுகிறது. 12 மாவட்டங்களின் விவசாயம் 20 மாவட்டங்களின் குடிநீர், இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு. காவிரியாற்றின் தமிழக உரிமை வரலாற்று வழிப்பட்டது. சட்டங்களையும் அதன் ஓட்டைகளையும் காட்டி மறுப்பதையோ, இழுத்தடிப்பதையோ ஏற்கவே முடியாது.

எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் இழைத்த அநீதி உரிய வழியில் களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி.எம்.சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசில் தமிழக எம்.பிக்களுக்கு வேலையில்லை; எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி வரும் மார்ச் 24 -ம் தேதி திருச்சியில் தலைமை அஞ்சலக முன் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழக உரிமைக்கான இப்போராட்டத்தில் அனைத்துதரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென அறை கூவி அழக்கிறோம்.
நன்றி.

இப்படிக்கு
காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

******

திருச்சி முற்றுகை  – அறைகூவல்

“காவிரியைத் தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு! நீட் முதல் நெடுவாசல் வரை தாக்குதல் மேல் தாக்குதல்! தமிழகமே கொதித்தெழு!” என்ற முழக்கத்தின் கீழ் வருகின்ற

24.03.2018 அன்று நடைபெறவுள்ள திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டத்தையொட்டி திருஅகர் முழுதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே!

மிழகத்தில் டெல்லியின் அதிகாரத்தை முடக்காமல் பா.ஜ.க அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. நீட் முதல் நெடுவாசல் வரை தாக்குதல் மேல் தாக்குதல், இனியும் பொறுக்க முடியாது? தமிழகமே கொதித்தெழு!

மார்ச் 24 சனிக்கிழமை மக்கள் அதிகாரம் உங்களை திருச்சிக்கு அழைக்கிறது.

தமிழகத்தின் எண்ணெய் வளத்தையும், எரிவாயு வளத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க தமிழகத்தையே பலிகொடுக்கிறது பா.ஜ.க. மோடி அரசு. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினோம், பாராளுமன்றத்தில் போராடினோம். ஆனால் எந்த பயனும் இல்லை.

காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இது வரை இல்லை. தமிழகத்தின் நீரை பிடுங்கி பெங்களுர் பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்து இறுதி தீர்ப்பு வழங்கி வஞ்சித்தது உச்சநீதிமன்றம்.

காவிரி நீர் பங்கீட்டில் ஓரவஞ்சணையாக செயல்பட்டு மத்திய அரசு தொடர்ந்து  தமிழகத்தை வஞ்சிக்கிறது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடகாவின் அடாவடிக்கு துணைபோகும் பா.ஜ.க. மோடி அரசை ஒரு கை பார்ப்போம். திருச்சிக்கு வாரீர்!

ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற டெல்லியின் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குவோம்!

மக்கள் அதிகாரம் உங்களை அழைக்கிறது. மார்ச் 24 சனிக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி, தலைமை தபால் நிலையம் தாங்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மீண்டும் அழைக்கிறோம்.

தமிழன் கிழிச்ச கோட்டை தாண்டாதவன், சட்டத்துக்கு பயந்தவன் தன்னை வருத்தி கொண்டு, மாத கணக்கில் உட்கார்ந்து, கோசம் போட்டு எழுந்து போய் விடுவார்கள் அவனுக்கு எதற்கு மேலாண்மை வாரியம்? என்று நினைக்கும் டெல்லியின் திமிரை அடக்கி காட்டுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருச்சிக்கு வாரீர்!

தமிழகத்தை கிள்ளு கீரையாக நடத்தும் டெல்லிக்கு எதிராக தமிழக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்.

காவிரியை தடுத்து, பெரியார் சிலையை உடைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவிற்கு எதிராக தமிழகத்தை போர்க்களமாக்குவோம். டெல்லியின் எந்த அதிகாரமும் தமிழகத்தில் செல்லாது என்ற நிலையை உருவாக்காமல் காவிரி மட்டுமல்ல, நீட், மீத்தேன், கெயில் என எதிலும் தமிழகம் தப்பிக்காது. காவிரி நீர் உரிமை விவசாயிகள் பிரச்சினை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழினத்தின் உரிமை அனைவரும் திருச்சிக்கு வாரீர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 99623 66321.

 

பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

15

பாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்போட்ட பிறகு அதனை ரீ சைக்கிளிங் செய்யும் வேலையை மார்க்சிஸ்ட் கையில் எடுத்திருக்கிறது.

பாலேஸ்வரம் கருணை இல்லம்

மா.கம்யூ வாசுகி மற்றும் குழுவினரின் பாலேஸ்வரம் கருணை இல்லம் பற்றிய உண்மை அறியும் குழு அறிக்கை 09.03.2018 அன்று ‘தமிழ் இந்துவில்’ வெளியாகியிருக்கிறது. நல்லது, என்.ஜி.ஓக்கள் மற்றும் மத நிறுவனங்களால் நடத்தப்படும் சேவை மையங்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அதன் நோக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும் அவசியம் செய்யப்பட வேண்டியவைதான். ஆனால் அதனை வாசுகி மற்றும் குழுவினர் செய்திருக்கும் விதம் ஒரு எலைட் என்.ஜி.ஓ பாணியில் இருக்கிறது என்பதுதான் கவலையுற வைக்கிறது. ஒருவேளை பத்ரி சேஷாத்ரி மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து அவர் இந்த அறிக்கை கொடுத்திருந்தால் அதுவே இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது.

முதல் குற்றச்சாட்டு, மனித எலும்பு விற்பனை.

மனித எலும்புக்கூடு விற்பனையும் மனித எலும்பு விற்பனையும் (மருந்து செய்யவாம்) நடக்கிறதா என குற்றச்சாட்டும் வகையிலான கேள்வியை எழுப்பியிருக்கிறார் வாசுகி. சும்மா கேட்டுவிட்டு கிளம்ப நீங்கள் என்ன எச்.ராஜாவா? மனித எலும்புக்கு என்ன சந்தை இருக்கிறது, அதனை எப்படி ஏற்றுமதி செய்ய முடியும், அதனை செய்ய ஏனைய அரசு நிறுவனங்கள் உதவி வேண்டுமே எனும் கேள்விகளோ தரவுகளோ இல்லை. ஆர்.எஸ்.எஸ் வாட்சப் தகவல்போல வாய்க்கு வந்ததை எழுதுவதற்கு உண்மை அறியும் அறிக்கை என பெயர் சூட்டமுடியாது.

ஒருவேளை மனித எலும்புகளுக்கு பெரும் சந்தை இருப்பது நிஜம் என்றால் இந்தியாவில் பிணம் எரிப்பது தடை செய்யப்பட்டு சுடுகாடுகள் அத்தனையும் அதானிக்கு தானமளிக்கப்பட்டிருக்கும். ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது அதற்கான அடிப்படைகளை விளக்க வேண்டாமா? பத்து ரூபாய் நாணயம் செல்லாது எனும் ஒற்றை வாட்சப் வதந்தியால் 6 மாதங்களுக்கு முன்பிருந்து இப்போதுவரைக்கும் அவற்றை செலவு செய்ய முடியவில்லை (சென்னைக்கு வெளியே). இந்த ஜமாவில் வாசுகி வகையறாக்களும் அய்க்கியமானால் எங்குபோய் முட்டிக்கொள்வது?

இரண்டாம் குற்றச்சாட்டு, கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்படும் முதியவர்கள்.

இதில் நிச்சயம் உண்மையிருக்கும்தான். ஆனால் அதனை அப்படியே விளங்கிக்கொள்ள வேண்டுமா என்பதுதான் கேள்வி. வீட்டில் கோபித்துக்கொண்டுவரும் முதியவர்கள் இத்தகைய இல்லங்களுக்கு வருவார்கள். ஆனால் அதன் சூழல் அவர்களை இன்னும் சங்கடப்படுத்தும் ஆகவே பலர் வீடு திரும்ப விரும்பலாம். இன்னும் சில முதியவர்கள் வீட்டு நபர்களாலேயே துரத்தப்பட்டவர்கள். அவர்களும் வீடு திரும்ப விரும்பலாம். அவர்களை திருப்பி அனுப்புவதில் ஏன் நிர்வாகம் அலட்சியம் காட்டியது எனும் கேள்வி நியாயம்போல தோன்றலாம். ஆனால் அவர்கள் வீட்டை கண்டறிவதும் பிள்ளைகளிடம் அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி

கைவிடப்பட்ட சிறார்களையே உறவினர்களிடம் ஒப்படைக்க முடியவில்லை. இதில் முதியவர்களை எப்படி வீட்டில் சேர்ப்பது? பெரும்பாலான முதியவர்களை அரசு அமைப்புக்களே அனுப்பியிருக்கின்றன. அவர்கள் போக விரும்பி வெளியேறினாலும் எங்கே போக இயலும்? அப்படி போய் வேறு ஏதேனும் நடந்தால் அப்போதும் வேறொரு வாசுகி வந்து “ஏன் பாதுகாப்பில்லாமல் போக விட்டீர்கள்” என கேள்வியெழுப்பக்கூடும். போக விரும்பும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்க வைப்பதற்கான தேவை என எதை வாசுகி குழு கருதுகிறது?

இந்தியாவில் பணம் இல்லாத முதியவர்கள் நாயினும் கீழாகவே நடத்தப்படுகிறார்கள். அரசும் ஏனைய நிறுவனங்களும் முதியவர்களை தேவையற்ற சுமையாகவே கருதுகின்றன. முதியவர்களால் சம்பாதிக்க இயலாது, அவர்களுக்கு மருத்துவச்செலவு அதிகம். ஆனால் அவர்களுக்குத்தான் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் அதிகம். ரயில் நிலையம், பஸ் நிலையம் ஏனைய அரசு அலுவலகங்கள் என எங்குமே முதியோருக்கென சிறப்பு வசதிகள் இருக்காது.

ஏற்கனவே சம்பாதித்து சேமித்த முதியவர்களுக்கு வட்டியை குறைத்து வயிற்றில் அடித்துவிட்டன வங்கிகள். ஆக அவர்களுக்கு இனி இருக்கும் வாய்ப்பு அடுத்தவரை அண்டி வாழ்வது அல்லது சாவுக்கு காத்திருப்பது. காசில்லன்னா சாவு நாயே என்பது எழுதப்படாத விதியாக உள்ள நாட்டில் முதியோர்கள் கைவிடப்படுவதும், அவர்களுக்கான (லாப நோக்கிலான) கருணை இல்லங்கள் உருவாவதும் அவைகள் தரமற்று இருப்பதும் நிகழ்ந்தே தீரும்.

நாம் இவற்றை வழக்கமாக பேசுவதில்லை. குறந்தபட்சம் பாலேஸ்வரம் சம்பவத்துக்கு பிறகாவது இதனை விரிவான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் வாசுகி அண்ட் கோ இதனை பாலேஸ்வரம் கருணை இல்லம் எனும் வளாகத்துக்குள்ளேயே செட்டில் செய்ய முனைவது ஒரு நாசூக்கான அராஜகம்.

அடுத்த குற்றச்சாட்டு, சுகாதாரமற்ற தங்குமிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது.

இது நிச்சயம் உறுதியான குற்றச்சாட்டுதான். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்காக யாரையேனும் தண்டிக்க விரும்பினால் நாம் நமது அரசை நடத்துவோரைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். அரசு மருத்துவமனை பொது வார்டுகளை பார்த்திருக்கிறீர்களா? அங்கே தொற்று நோய் வந்தவர்களும் தொற்றா நோய் வந்தவர்களும் ஒன்றாக கொட்டப்பட்டிருப்பார்கள்.

செத்துக்கிடக்கும் நோயாளியோடு பல மணிநேரங்களை ஏனைய நோயாளிகள் இருக்க வேண்டும். குளியல் மக் கொண்டுதான் சிறுநீரை நோயாளிகள் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். புதிய நோயாளிகள் காலியாகப்போகும் படுக்கைக்கு அருகே காத்திருப்பார்கள். அனத்தலும், கசகசப்பும் நாற்றமுமே அங்கே நிரந்தரமாக குடிகொண்டிருப்பவை. செத்தால் தேவலாம் என நோயாளிகள் சிந்திக்க வேண்டும் எனுமளவுக்குத்தான் அரசு தமது மருத்துவமனை நோயாளிகளை நடத்துகிறது.

இங்கே அதுதான் ஒரு ஏழை நோயாளியை, இயலாதவனை நடத்துவதற்கான அளவீடு. உனக்கெல்லாம் இதுவே ஜாஸ்தி எனும் தர்மகர்த்தா சிந்தனை அரசின் நிர்வாக மட்டத்தில் வேர்பிடித்திருக்கிறது. அவர்கள் பாலேஸ்வரம் இல்லத்தையும் அப்படித்தான் அனுகுவார்கள். காசு கொடுத்து தங்கவைக்கப்படும் முதியவர்களும், இயலாதவர்களும்கூட இப்படித்தான் பல இல்லங்களில் நடத்தப்படுகிறார்கள்.

இறுதி குற்றச்சாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது.

இதில் பிரதான குற்றவாளி அரசுதான். 5 மாதங்களுக்கு முன்னால் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் இல்லத்தின் சார்பாக வழங்கப்பட்டுவிட்டது. அதனை கிடப்பில் போட்டது அரசுதான். அங்கு தங்குவதற்கான ஆட்களை அரசு மருத்துவமனைகளும் போலீசுமே அனுப்பியிருக்கின்றன. இந்தியாவில் விதிமுறைகள் என்பவை தேவைப்படும்போது ஒருவனை சிக்க வைப்பதற்காகவும் லஞ்சம் வாங்கவுமே பயன்படுத்தப்படுகிறனவே அன்றி அவை ஒழுங்கான சேவை என்பதை இலக்காக கொண்டு பின்பற்றப்படுவதில்லை.

பிணங்களை அடக்கம் செய்யும் தலைவலியில் இருந்து தான் தப்பித்துக்கொள்ள போலீஸ் அவர்களுக்கு அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. ஆனால் அப்படி வழங்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. பாலேஸ்வரம் இல்லம் இப்போது மூடப்பட்டுவிட்டது. அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய அதிகாரம் வழங்கிய அதிகாரிக்கு என்ன தண்டனை? 5 மாதங்கள் உரிமத்தை தாமதித்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இவை குறித்து வாசுகி குழுவினரின் பரிந்துரைகள் என்னென்ன?

மேலும் சில கேள்விகள் எழுகின்றன..

அந்த இல்லத்தில் இருந்து வெளியேற விரும்பிய முதியவர்களின்பால் கரிசனம் கொண்ட வாசுகி குழு, அங்கே தங்க விரும்பிய முதியோரின் கோரிக்கை குறித்து ஏதேனும் யோசனை வைத்திருக்கிறதா?

அது ஒரு சாதாரண கருணை இல்லம். அரசின் கட்டமைப்பு பிரம்மாண்டமானது. அந்த அரசு ஒரு இல்லத்தை ஏற்று தற்காலிகமாகக்கூட நடத்த வக்கற்று நோயாளர்களை நலாப்பக்கமும் விசிறியடித்திருக்கிறது. ஆக 300 முதியவர்களைப் பராமரிக்கும் தகுதிகூட அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இது பற்றி மர்க்சிஸ்ட் இன்வெஸ்டிகேஷன் குழு எதுவுமே சொல்லவில்லையே, ஏன்?

ஆயிரக்கணக்கான முதியோர் காப்பகங்களுக்கான தேவை நாட்டில் இருக்கிறது. வறியவர்கள் தமது வயதான பெற்றோரை கௌரவமாக பராமரிக்க மருத்துவ உதவியும் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது. அது குறித்து மா.கம்யூ எப்போது பேசும்?

காலையில் கஞ்சி, மதியம் மற்றும் இரவில் “ரேஷன்” அரிசி சாதம் ஆகியவை மட்டுமே கிடைப்பதாகவும். இட்லியை பார்த்தே பல மாதங்கள் ஆனதாகவும் புகார்கள் வந்திருப்பதாக இக்குழு சொல்கிறது. ரேசன் அரிசி சாதம் மோசமான உணவு எனில் அந்த சோற்றைத்தான் அரசு பலகோடி மக்களுக்கு தலையெழுத்தென விதித்திருக்கிறது. நாம் என்ன செய்யலாம், ரேசன் அரிசியின் தரத்தை பற்றி கவலைப்படலாமா அல்லது ரேசன் அரிசி சோறு பாலேஸ்வரம் இல்லத்தில் இருப்பதைப் பற்றி மட்டும் கவலைப்படலாமா?

இதே அழகில்தான் இங்குள்ள ஆகப்பெரும்பாலான ஆதரவற்றோர் இல்லங்கள் சோறிடுகின்றன. அவற்றை எப்போது ஆய்வு செய்யலாம்? அவற்றுக்கான மார்க்சிஸ்ட் உ.அ.குவின் தீர்வு என்ன?

இப்போதைய பிரச்சினைக்குப் பிறகு பாலேஸ்வரம் இல்ல முதியவர்கள் பல இல்லங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த காப்பகங்கள் நிலை குறித்து மா.கம்யூ எப்போது ஆய்வு செய்யும்?

இதுவரைக்கும் பாலேஸ்வரம் இல்லத்துக்கு ஆட்களை அனுப்பியவர்கள் (போலீஸ், அரசு மருத்துவமனை) இனி எங்கே அனுப்புவார்கள். அரசின் அந்த வட்டாரங்களை எப்போது வாசுகி குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

வாசுகி குழுவினரின் நோக்கத்தையும் கண்ணோட்டத்தையும்கூட குறை சொல்ல வேண்டாம். அவை highly subjective. ஆனால் அதில் ஹீரோயிசம் மட்டுமே இருப்பதுதான் சிக்கல். இந்திய சமூக பொருளாதார அமைப்பை பீடித்திருக்கும் எண்ணற்ற நோய்களின் ஒரு அறிகுறிதான் பாலேஸ்வரம் இல்லம் மற்றும் அதன் விதிமீறல்கள். அதனை அற உணர்வோடும் குறைந்தபட்ச முழுமையோடும் மார்க்சிஸ்ட் அனுகியிருக்க வேண்டும். ஆனால் வாசுகியாரின் அறிக்கை இந்திய அரசுக் கட்டமைப்பின் ஒரு சிரங்கோடு செல்ஃபி எடுத்து போட்டுக்கொண்டது போல இருக்கிறது. ஆகவே அதனை அன்லைக் செய்ய வேண்டிய அவசியம் எழுகிறது.

நன்றி : வில்லவன்

 

பெர்லின் சுவர் மறைந்தாலும் இர‌ண்டு ஜெர்ம‌னிக‌ள் மறையவில்லை !

1

சோஷ‌லிச‌ கிழ‌க்கு ஜெர்ம‌னி இருந்த கால‌த்தில் பெர்லின் ம‌திலை “பாசிச‌ எதிர்ப்பு ம‌தில்” என்று அழைத்த‌ன‌ர். மேற்க‌த்திய‌ர்க‌ள் அதை நையாண்டி செய்து‌ “க‌ம்யூனிச‌ பிர‌ச்சார‌ம்” என்று புற‌க்க‌ணித்த‌ன‌ர். இப்போது கிழ‌க்கு ஜெர்ம‌ன் ம‌க்க‌ள் தாமாக‌வே “பாசிச‌ எதிர்ப்பு ம‌தில் இருந்த‌து ந‌ல்ல‌த‌ற்கே!” என்று கூறுகிறார்க‌ள்.

“நாங்க‌ள் பாசிச‌ எதிர்ப்பாள‌ர்க‌ளின் தாய‌க‌ம் ஒன்றை உருவாக்கி இருந்தோம். அதையிட்டு பெருமைப் ப‌ட‌ வேண்டும்.” என்று சொல்லிக் கொள்கிறார்க‌ள். (இத‌ற்கு மாறாக‌, மேற்கு ஜெர்ம‌னியில் நாஸிச‌ க‌ட‌ந்த‌ கால‌ம் ப‌ற்றிய‌ வெட்க‌ உண‌ர்வு இருக்கிற‌தே அல்லாம‌ல், பாசிச‌ எதிர்ப்புண‌ர்வு இருக்க‌வில்லை.)

அங்கு இப்போதும் இர‌ண்டு ஜெர்ம‌னிக‌ள் இருப்ப‌த‌ற்கு என்ன‌ கார‌ண‌ம்? முன்னாள் கிழ‌க்கு ஜெர்ம‌னியில் ப‌டித்த‌வ‌ர்க‌ளின் சான்றித‌ழ்க‌ளுக்கு ம‌திப்பில்லை. அர‌ச‌, த‌னியார் நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌த‌வி வ‌கிப்போரில் பெரும்பான்மையின‌ர் மேற்கு ஜெர்ம‌னியில் இருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். அத‌னால் வேல‌யில்லாப் பிர‌ச்சினை அதிக‌ம். ஜெர்மனியின் பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்று கூட‌ கிழ‌க்கு ஜெர்ம‌னியில் த‌லைமைய‌க‌த்தை கொண்டிருக்க‌வில்லை.

ஜெர்ம‌ன் அதிப‌ர் அன்கெலா மெர்க‌ல் கிழ‌க்கு ஜெர்ம‌னியை சேர்ந்த‌வ‌ர். ஆனால், அங்கே அவ‌ருக்கு ம‌திப்பில்லை. கிழ‌க்கு ஜெர்மனிய‌ருக்கு அவ‌ர் ஒரு துரோகி! பொருளாதார‌ப் பிர‌ச்சினைக‌ள், ச‌மூக‌ ஏற்ற‌த்தாழ்வுக‌ள் கார‌ணமாக‌ தீவிர‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு அதிக‌ரிக்கின்ற‌து. இஸ்லாமிய‌ வெறுப்பை காட்டும் PEGIDA, அத‌னுட‌ன் சேர்ந்து வெளிநாட்ட‌வ‌ர் எதிர்ப்பு அர‌சிய‌ல் ந‌ட‌த்தும் AfD ஆகிய‌ தீவிர‌வ‌ல‌துசாரி க‌ட்சிக‌ளுக்கான‌ ஆத‌ர‌வு கிழ‌க்கு ஜெர்ம‌னியில் அதிக‌ம்.

“Wall is gone but not divisions” The New York Times, (14 feb 2018) ப‌த்திரிகையில் பிர‌சுர‌மான‌ செய்தி.

“ஜெர்ம‌னியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை, பூர்வீக‌ ஜெர்ம‌னிய‌ரை விட‌ அதிக‌ம்” என்ப‌ன‌ போன்ற‌ த‌வ‌றான‌ ந‌ம்பிக்கைக‌ளும் காண‌ப் ப‌டுகின்ற‌ன‌. (முத‌லாளித்துவ‌த்தை புரிந்து கொள்ளாம‌ல், “வெளிநாட்ட‌வ‌ரை வெளியேற்றினால் வேலை வாய்ப்புக‌ள் கிடைக்கும்” என்று அப்பாவித்த‌ன‌மாக‌ ந‌ம்புகிறார்க‌ள்.) இத்த‌னைக்கும் கிழ‌க்கு ஜெர்மனியில் வெளிநாட்ட‌வ‌ர் எண்ணிக்கை மிக‌ மிக‌க் குறைவு.

அத‌ற்காக‌ தீவிர‌ வ‌ல‌துசாரி ச‌க்திக‌ளை ஆத‌ரிப்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் இன‌வாதிக‌ள் என்று முத்திரை குத்துவ‌து த‌வ‌று. அங்கே முக்கியமான‌ பிர‌ச்சினை பொருளாதார‌ பின்ன‌டைவே த‌விர‌ இன‌வாத‌ம் அல்ல‌. அர‌சுக்கு அழுத்த‌ம் கொடுத்து த‌ங்க‌ள‌து குறைக‌ளை கேட்க‌ வைப்ப‌து தான், தீவிர‌ வ‌ல‌துசாரிக் க‌ட்சிக‌ளுக்கு ஓட்டுப் போடும் ம‌க்க‌ளின் நோக்க‌மாக‌ உள்ள‌து. இருப்பினும், இந்த‌ வாய்ப்பை இன‌வாத‌க் க‌ட்சிக‌ள் த‌ம‌க்கு சாத‌க‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌.

தீவிர‌ இட‌துசாரிக் க‌ட்சியான‌ Die Linke -க்கும் ஆத‌ர‌வு அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து. அது முன்னாள் கிழ‌க்கு ஜெர்மனியை ஆண்ட‌ க‌ம்யூனிச‌ SED க‌ட்சியின் தொட‌ர்ச்சியாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. ஜெர்ம‌ன் ஒன்றிணைவின் போது, கிழ‌க்கு ஜெர்ம‌னிய‌ர்க‌ள் ந‌ட‌த்திய‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் பொருளாதார‌ மேம்பாட்டுக்காக‌ இருந்த‌து. அவை மேற்க‌த்திய‌ பாணி ஜ‌ன‌நாய‌கம் கோரி ந‌ட‌ந்த‌ ஆர்ப்பாட்ட‌ங்க‌ள் அல்ல‌.

-கலையரசன்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : The New York Times, (14 feb 2018) ப‌த்திரிகையில் பிர‌சுர‌மான‌து. நான் சில‌ இட‌ங்க‌ளில் விரிவான‌ விள‌க்க‌ம் கொடுத்திருக்கிறேன்.

நன்றி : கலையகம்

 

ரத யாத்திரையின் பெயரில் வரும் ரத்த யாத்திரை – சென்னையில் ஆர்ப்பாட்டம்

0

ந்துமதவெறிக்கு இழிபுகழ் பெற்ற விசுவ ஹிந்து பரிசத் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொள்வதைக் கண்டித்தும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் சென்னை அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா சிலை அருகே நேற்று (20.03.2018) மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்

ஆர்ப்பாட்டத்திற்கு புமாஇமு-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். தோழர்கள் அண்ணா சிலை நோக்கி பேரணியாகச் செல்லும் வழியில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு திரண்டு வந்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய  தோழர் கணேசன், “ தமிழகத்தில் இந்துமதவெறிக் கும்பல் காலூன்ற ரத யாத்திரை பெயரில் கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு எடப்பாடி ஓபிஎஸ் கும்பல் மறைமுக ஆதரவை அளித்து வருகிறது. தொடர்ந்து பெரியார் சிலைகள் தாக்கப்படுவதன் மூலமாக கலவரத்தை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயற்சிக்கிறது. இதனைக் கண்டித்து இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலைக் காலூன்ற விடமாட்டோம்.” என்று கூறினார்.

தோழர்களை சாலையிலிருந்து தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யத் தொடங்கியது போலீசு. கைது செய்து வண்டியில் ஏற்றும்போது ஒரு தோழர் கடுமையாகத் தாக்கப் பட்டிருக்கிறார். மேலும் ஒரு பெண் போலீசு பெண் தோழர் ஒருவரை மோசமாக திட்டி, தாக்கி கியுள்ளார். கைது செய்யப்பட்ட தோழர்கள் அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்கே காவி பயங்கரவாதிகளை அம்பலப்படுத்தி மகஇக பாடல்கள் பாடப்பட்டன.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

_________

பத்திரிக்கைச் செய்தி

20.03.2018

ர்.எஸ்.எஸ் ஆல் திட்டமிடப்பட்டு விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் ராமராஜ்ய யாத்திரை  மத மோதலை உருவாக்கும் தீய நோக்கங் கொண்டது என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டு வந்த தமிழகத்தில் இப்போது முழு சுதந்திரத்துடன் நடைபோட எடப்பாடி அரசு  அதிகாரமளித்திருக்கிறது.1500க்கும் மேற்பட்ட போலீசுப்பாதுகாப்புடன் விஸ்வ இந்து பரிஷத்தின் இந்த யாத்திரைக்கு அனுமதியளித்திருக்கும் எடப்பாடி அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமைக்கு 144 தடைவிதித்திருக்கிறது. பல தலைவர்கள் , தொண்டர்களை கைது செய்திருக்கிறது. எடப்பாடி அரசின் இச்செயல் ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, தமிழக மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமுமாகும். மக்கள் அதிகாரம் இதனை மிக வன்மையாகக்கண்டிக்கிறது.

இதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆலங்குடியில் தந்தை பெரியாரின் சிலையின் தலையைத்துண்டித்து வெறியாட்டம் போட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் கும்பலைத்தவிர வேறு யாரும் பெரியார் சிலையை அவமதிக்கத்துணிய மாட்டார்கள்; கனவிலும் நினைக்கமாட்டார்கள்.ஆனால் எச். ராஜாவுக்கு எழுந்த எதிற்பிற்குப்பிறகும்  பெரியார் சிலையை செதப்படுத்தத் துணிகிறார்களென்றால் எடப்பாடி அரசின் எடுபிடித்தனம்தான் காரணம். ஆர்.எஸ்.எஸ் க்கு விலை போகும் எடப்பாடி அரசின் இந்த துரோகத்தைத் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

எடப்பாடி அரசுக்கு தமிழகத்தை ஆள எந்த தார்மீக உரிமையும் இல்லை.எல்லா முனைகளிலும் தோற்றுப்போய் தேர்தகளிலும் மண்னைக் கவ்விவரும் பா.ஜ.க மதவெறியெனும் அபாயகரமான ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறது. தமிழக மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணமிது.  ஆர்.எஸ்.எஸ் ,வி.இ.ப முதலிய இந்து மதவெறி அமைப்புகள் முற்றாகத்தடை செய்யப்பட வேண்டும். பெரியாரின் சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பாஜ க இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம்.

தங்கள்
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,

மக்கள் அதிகாரம்.

________________________

சென்னை சேத்துப்பட்டில் பெரியார் சிலையில் மை பூசிய இந்துமதவெறியர்கள்!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பெரியார் சிலையில், யாரும் பார்க்காத சமயத்தில் மை பூசியுள்ளனர் காவிகள். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மத்தியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் நேற்று (20.03.2018) பிரச்சாரம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் தமிழகத்தில் காவி வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அடிமை எடப்பாடி அரசு ரத யாத்திரையை அனுமதிப்பதற்கு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெரியார் சிலை உடைப்பு, பெரியார் பெயரின் மீது மை பூசுதல் போன்ற செயல்களைக் கோழைத்தனமாக இரவோடு இரவாக காவிக் கும்பல் செய்துவருவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.

 

ஜியோ உலகில் இன்னும் இருக்கிறது சுருக்குப் பை !

4

ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு ரொம்பவும் வேகமா… நடந்திட்டு இருந்தேன்..  என்ன ஒரு பித்தாலாட்டம், ஸ்மார்ட் போனுக்கு போடுற சிம்முக்கு, 153 ரூபாய ரீஜார்ஜ் செய்துட்டேன்.  ஆனா, நெட் கனெக்ட் ஆகல.  என்னன்னு ரீஜார்ஜ் கடையில கேட்டா, சென்ட் மேசேஜ்-ஐ காட்டி, எங்களுக்கு போய்டுச்சி, நாங்க ஒண்ணும் பண்ண முடியாதுனுட்டாங்க…

சரி, வெயில் தாழ்ந்ததும் போவோம்னு, சாயங்காலம் 5.30 மணிக்கு ஜியோ போன் சர்வீஸ் சென்டருக்கு கிளம்பினேன். சரியான கேள்விக் கேட்டு,  சண்டைப் போடணும்னு  நடந்தேன். வழியில் எங்க பார்த்தாலும் ஜெயலலிதா போஸ்டரு. ரோடைக் கிராஸ் பண்ண முடியாத அளவுக்கு,  அடிமை விசுவாத்தை  அம்மா ஆவிக்கு காட்டியிருந்தாங்க அ.தி.மு.க. அடிமைகள்.. அம்மா இருந்தாலும் இல்லனாலும் பாதிப்பு நமக்குத்தான்னு யோசிச்சிக்கினே வேகமா நடந்தேன்.  எதிர்ல, வயதான அம்மா சிரிச்சிக்கிட்ட கிராஸ் பண்ணாங்க… நானும் சிரிச்சேன்… கடந்து வந்துட்டேன்… ஆனா, எதோ ஒண்ணு, நிறுத்தி திரும்பி பார்க்க வைச்சது….. ஏன்னடானுப் பார்த்தா, அவங்க மாட்டிருந்த சுருக்குப்பை… பல வண்ணங்கள்ள… பளபளத்தது.   என்னக் கடந்து 10 அடி போய்ட்டாங்க…

எங்க ஆயாவோட சுருக்குப்பை ஞாபகம் வந்துடுச்சி.. வயசான, எல்லாரும் சுருக்குப் பையை கடந்துத்தான் வந்திருப்போம். இப்ப காணாம போய்டுச்சினு நடந்தேன்.  இதை அப்புறம் யேசிக்கலாம்… முதல்ல சுருக்குப்பை விற்கும் அம்மாவை பிடிக்கணும்னு…. ஓடிப் பிடித்தேன்..

என்னை பார்த்ததுமே…. அவங்க முகத்துல மகிழ்ச்சி… ”என்ன பை வேணும்…..சின்னது,.. 5ரூ, இது 10ரூ,  பெருசு 20ரூ என்று திக்கி, திக்கி சொல்லி, காலைலயிருந்து இதுதான் வியாபாரம்..”  என்று,  சுருக்குப்பையை  காண்பித்து, வாங்காமல் போய்டாதே… என்பதுபோல் பார்த்தார்.  வாங்கிக்கிறேன்.. என்றதும் சிரிப்பை பதிலாக தந்தார்.

வாஞ்சையாக …பாரு, பாரு எது வேணுமோ … எடுத்துக்க…. என்று  பைகளை பிரித்து, பிரித்து காண்பித்தார்.

எந்த ஊரு?என்றேன்.
சொந்த ஊரு ஆந்திரா பக்கம்.., இங்க வந்து ரொம்ப காலமாகுது…… காஞ்சிபுரம் தாண்டி கீழம்பி…..
புள்ளைங்க… ?

பிறகு,தெலுங்கு கலந்த தமிழில் பேசினார்,

மனக்கு(எனக்கு), நாலு கூத்ரு……. எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிட்டேன்.  வூட்டுகாரு செத்து,10 வருசம்… அவரு கைரேகை பாப்பாரு…  அப்பா,  …. சஸ்போனு (கக்குஸ்) கிளின்பண்றது……  பொம்பளங்க…. இறங்க முடியாதுல்ல… அதனால, அம்மா இந்த வேலைய கத்துக் கொடுத்துச்சி……அம்மாவும் இந்த வேலைய நல்லா செய்யும்…

தினமும் எவ்ளோ கூலி வரும்?

100ரூபாய் மேல வராது. அதுவும் பாதி சாப்பாட்டுக்கே போய்டும்…. எல்லாம் விலை ஏறிப்போயிடுச்சி….. 12 மணிக்கு சாப்பிட்டது….. டீ…குடிக்கக்கூட ல்ல….. வீட்டில பேரப் புள்ளங்க  பார்த்துட்ட இருக்கும்…. அதுங், திங்கறதுக்கு வாங்கிட்டுப் போவேன்…. காலைல புள்ளங்க, ஸ்கூலுக்கு கிளம்பினதும் வந்துடுவேன்… சாயங்காலம்….. 6,7 மணிக்குப் போவேன்….

வேற வருமானம்?

1000 ரூபா பென்சன் வாங்கறேன்…. வீட்டு வாடகைக் கட்ட அத வைச்சிடுவேன்.

துணி எங்க வாங்குவீங்க?

டைலர்  துணி தைச்சிட்டு, மீதி வெட்டிப் போடும் துணிதான், மாசத்துல்ல ரெண்டு கடையில போய் நிப்பேன்….. கொடுப்பாங்க….. காசு எதுவும் கேட்க மாட்டாங்க…… அவுங்க… கடைய சுத்தப்படுத்திட்டு வருவேன்……தைக்க .ஊசியும்,  நூலும் காசுக்கு, வாரம் …50 ரூபா… குஞ்சரம் கட்ட கயிறு… வாங்குவேன், … நானே கையாலயே தைப்பேன். (குஞ்சரம் பையின் அழகை கூட்டும்)

அந்த குஞ்சர கயிற்றை, தன் கழுத்துலேயும் சரடுபோல் போட்டிருந்தார். கவனித்தப் பின் தெரிந்தது.

எப்ப, வீட்டுக்கு போவீங்க….
நடந்தேதான். வியாபாரமும்… நடந்தேதான். … இப்ப கஷ்டமில்ல… வெயில் காலம் வந்தாதான் கஷ்டம்…
பேசிக்கொண்டிருக்கும்போதே… பக்கத்தில் வேர்கடலை விற்கும் அம்மா, இவரை கைதட்டி அழைத்தார். அவரிடம் சென்றார்…..

அவர்…டீ குடிக்கிறீயா? என்றார்.
டீ வேணாம்…  கடலைக் கொடு என சைகையிலேயே பேசினார்.
அவரும் கைநிறைய வேர்கடலையை அள்ளிக் கொடுத்தார்.
நான் சொன்ன மாரி, டபுள் துணி போட்டு தைச்சிருக்கியா ? என்றார்.
அதுக்கு என்னா? … இப்ப தைச்சித் தாரேன்… காசு மட்டும் கொறைக்காம கொடு…. என்றார்.
காசுல்லாம் கிடையாது… கடலை வாங்கிக்க என்றார்,

இவரும் தைக்க ஆரம்பித்தார். ஒரு பை வாங்கிக் கொண்டு … நான் நகர ஆரம்பித்தேன். அவரை கடந்ததும் ..  என் ஆயாவின் சுருக்குப்பை ஞாபகம் எனக்கு!

அப்பாவுக்கு, எவ்ளோ கஷ்டம் வந்தாலும்,  ஆயாவின் சுருக்குப்பையில் மட்டும் பணம் இல்லாமல் இருக்காது. இப்போது நானும் புடவையின் அடி முந்தானையில்  பணத்தை  முடி,   வெளியில் தெரியாமல் வைப்பதை  என் ஆயாவிடம்தான் கற்றுக் கொண்டேன்.

பள்ளியில் படிக்கும்போது பேனா, நோட்டு  வாங்க  அப்பா பணம் தரவில்லையென்றால், ஆயாவின் பக்கத்தில் நின்று அழுது சாதிப்பது, சினிமா பார்க்க பணம் இல்லை என்று சொன்ன  ஆயாவிடம், ”இல்ல…. நீ வைச்சிருப்பே….. பையைக் காட்டு… ” என அழுது புரண்டு  வாங்கியது மறக்க முடியாது..  வீட்டில் சோறு இல்லாத நேரங்களில்,  ஆயாவின் சுருக்குப்பைதான் எங்களுக்கு இட்லி வாங்கி தந்தது.

எங்களுக்கு வந்த மழைக்கால ஜூரத்துக்கு காபியாகவும் குரோசின் மாத்திரையாகவும், வெயிலின் அம்மைக்கு இளநீராகவும் மாறிய சுருக்குபை,   பொங்கலுக்கு துணி எடுக்க வசதியில்லாம  இருந்தபோது, சீட்டிதுணியில் (காட்டன்) பாவாடையாக மாறியது எங்கள் ஆயாவின் சுருக்குப்பை!

இப்படி…  பழைய நினைவில் நடந்துக்கொண்டே சென்றதில் வந்து விட்டது ஜியோ சர்வீஸ் சென்டர்.

வாங்க மேடம்., லேட்டா வந்திருக்கீங்க….. சீக்கிரம் சொல்லுங்க…. என்றார் ஊழியர்.

என் போனை டேபிளில் வைத்து……153 ரூபாய் ரீஜார்ஜ் செய்தேன்…. டச் போனுக்கு அது செல்லாதாம்… ஜியோ போனுக்குத்தான் போகுமாம்….. இப்ப நான் என்ன செய்யறது…

சாரி மேடம்… நாங்க ஒண்ணும் செய்ய முடியாது…..

ரீஜார்ஜ் பண்ண தேதியிலிருந்து 28 வது நாள் டான்னு… எனக்கு  நெட்டு கட் ஆகுது….. போன்  பேசறது கட் ஆகுது…. எல்லாமே சிஸ்டமேடிக்கா இருக்கு…. ஆனா….. ஏத்துக்காத சிம்முக்கு நான், பணம்  தெரியாமல் போடுறேன்…. அது எப்படி? உடனே …அம்பானி கல்லா பெட்டிக்கு போய்டுது…. இதுக்கு உங்க சிஸ்டமேடிக் வேலை செய்யாதா?…… என்றேன்.

சாரி மேடம்…. நீங்க கஸ்டமர் கேருக்கு போன் போட்டு சொல்லுங்க…. நாங்க எதுவும் பண்ண முடியாது….

கஸ்டமர் கேருக்கும் போன் போட்டேன்… போன காசு …போனதுதானாம்…. இந்த, பிரச்சனை நிறைய இருக்காம்….. நாங்க தெரியப்படுத்திடுறோம்….. மேடமுனு வைச்சிட்டாங்க…. கடைசியில் என்னுடைய பணம் 153, அபேஸ்… டூ… அம்பானி.

ரூபாய், 153 ஏமாந்துட்டோமேன்னு வீட்டுக்கு திரும்பி நடக்கும்போது, சுருக்குப்பை குப்பு ஆயா… சிரித்துக் கொண்டே என்னை கடந்து போனார். அவருக்கு பை தைப்பதற்கு தையற்காரங்க இருக்காங்க. பையை வித்து கடலை கொடுக்கும் அம்மாக்கள் இருக்காங்க.ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசை! இவங்கள அழிச்சிட்டு வால்மார்ட்டு, அம்பானி, டாடான்னு நாடு மாறுனதுக்கு பிறகு நம்ம வருமானம் எப்படி போவுது, என்ன ஆச்சுன்னு கண்டே பிடிக்க முடியாது!

– லட்சுமி.

 

மோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் ! கருத்துப் படம்

2

மோடிக்கு முன்னாடி இவுங்க ஆன்மீக கார்ப்பரேட் சாமிங்க
மோடிக்கு பின்னாடி இவுங்க சூப்பர்மார்கெட் கார்ப்பரேட் சாமிங்க…!

படம்: வேலன்

இணையுங்கள்:

ஆர்.எஸ்.எஸ்-ஐ அடக்குவோம் ! வேலூரில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

0

பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக வேலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பாக 11.03.2018 ஞாயிறு அன்று கண்டணப் பேரணி – ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் நகர திராவிடர் கழகம் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் தி.மு.க, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்சிஸ்ட்), திராவிட இயக்க தமிழர் பேரவை, இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முன்னால் நாடாளுமன்ற – சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான திரு. முகமது சகி அவர்கள் வேலூர் மக்கான் பகுதியில்  அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேரணியைத் துவக்கி வைத்தார்.

மாலை 5 மணிக்கு எழுச்சியோடு தொடங்கிய பேரணி முக்கிய சாலையைக் கடந்து தலைமை அஞ்சலகம்  அருகில் அமைந்துள்ள பெரியார் சிலையை வந்தடைந்தது. திரு. முகமது சகி அவர்கள்  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் – லெனின் – அம்பேத்கர் சிலைகளை சேதப்படுத்திய இந்துத்துவக் கும்பலுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பட்டன.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் தேவதாஸ் அவர்களும், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்சிஸ்ட்) யின் மாவட்டச் செயலாளர் தோழர் தயாநிதி அவர்களும்,  முன்னால் நாடாளுமன்ற-சட்ட மன்ற உறுப்பினரும் தி.மு.க சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினருமான திரு. முகமது சகி அவர்களும் கண்டன உரையாற்றினர். இறுதியில் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோ அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்துத்துவ கும்பலுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் சார்ப்பாக நடைபெற்ற இந்தப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இது தவிர மேற்கண்ட பிரச்சனை குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 07.03.2018 புதன் கிழமை அன்று மாலை 5 மணி அளவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர். தலைமை அஞ்சலகம் அருகிலிருந்து தோழர்கள் முழக்கமிட்டவாறு சென்றது மக்களிடையே பிரச்சாரமாக அமைந்தது. முன் அனுமதி இன்றி திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்​.

சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

0

ஜான் பெலாமி ஃபாஸ்டர், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மன்த்லி ரிவ்யூ இதழின் ஆசிரியர். ஓரேகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர். மார்க்சிய சூழலியல் தொடர்பான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சூழலியலின் பால் மார்க்சியமும், குறிப்பாக மார்க்சின் எழுத்துகளும் கொண்டுள்ள அக்கறைகளை விளக்கப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்சிதை மாற்றப் பிளவு குறித்த மார்க்சின் கோட்பாடு (Marx’s Theory of Metabolic Rift)  என்ற இவரது புகழ் பெற்ற கட்டுரை, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சோசியாலஜியில் வெளியிடப்பட்டது. முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் நிகழும் நாசகரமான மாற்றங்களைச் சுட்டுவதற்கு மார்க்ஸ் உருவாக்கிய வளர்சிதை மாற்றப் பிளவு என்ற கருத்தாக்கத்தை இக்கட்டுரையின் வாயிலாக அறிமுகப்படுத்தினார் ஃபாஸ்டர்.

ஃபாஸ்டரின் கருத்துப்படி உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் ஒரு கட்டமைவு நெருக்கடியாகும். முதலாளித்துவமும் சூழலியல் பேண்தகைமையும் (Environmental Sustainability) ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை என்கிறார் ஃபாஸ்டர். மனிதகுலத்துக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் (Socialism or Cannibalism) என்றார் ஜெர்மன் கம்யூனிஸ்டு புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். ரோசாவின் கூற்றைச் சற்றே மாற்றி, சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு (Socialism or Exterminism)  எனக் கூறுகிறார் ஃபாஸ்டர்.

பத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”,  Feb 02, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.

* * *

இயற்கை குறித்து  மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்து என்ன?

பொருள்முதல்வாதிகள் என்ற முறையில் மார்க்சும் எங்கெல்சும் வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும், இயற்கை குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும் இயல்பாகவே பிரிக்கவொண்ணாதவையாகக் கருதினார்கள்.

“ஆற்றலைச் சேமிக்கின்ற அதே நேரத்தில், மனிதத் திறனின் சாத்தியங்களை நிறைவு செய்வது என்ற வகையில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தினை அறிவுபூர்வமாக நெறிப்படுத்துவதே சோசலிசம்” என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ்.

“பூமி யாருக்கும் சொந்தமானது அல்ல. இந்தப் புவிப்பரப்பிலுள்ள மக்கட்சமூகத்தினர் அனைவரும் சேர்ந்தாலும் கூட, அவர்கள் இந்தப் பூமியைத் தங்கள் உடைமையாகக் கருதவியலாது. ஒரு குடும்பத்தலைவன் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த வாரிசுக்கு விட்டுச்செல்வதைப் போல, இந்தப் பூமியைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்து, வருங்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லும் காவலர்களே மக்கட்சமூகத்தினர்” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்துக்கும் சூழலியலுக்கும் இடையிலான உறவை, அறிவியல்பூர்வமாகவும், ஒரு வலிமையான இயங்கியல் சட்டகத்தில் வைத்தும் புரிந்து கொள்ளும் விதத்திலும் வேறு யாருடைய ஆய்வும் சொன்னதில்லை என்று நான் கூறுவேன்.

சூழலியல் பேரழிவைத் தோற்றுவிப்பது முதலாளித்துவமே!

முதலாளித்துவம் என்ற தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்பு உலகின் சூழலியல் அமைப்புகள் அனைத்தையும் அச்சுறுத்துவதோடு நிற்கவில்லை. இந்தப் பூமியே மனித குலத்தின் இருப்பிடமாக தொடர்ந்து நீடித்திருக்குமா என்ற அச்சுறுத்தலை விடுக்கிறது. இது கேள்விக்கிடமற்ற உண்மை. இன்றைய அறிவியலின் எல்லாத்துறைகளும் இந்த உண்மையை அங்கீகரிக்கின்றன. 2017 நவம்பரில் உலகின் 184 நாடுகளைச் சேர்ந்த 15,000 அறிவியலாளர்கள் இது குறித்து மனித குலத்தை இன்னொருமுறை எச்சரித்தார்கள். எனவே, நாம் கேள்வியை இப்படி எழுப்பவேண்டியுள்ளது.

புவியின் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவியலாததாக்குகின்ற இந்தப் போக்கிற்கான கூறுகள், முதலாளித்துவத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்ற விதிகளிலேயே இருக்கின்றனவா? ஆம் என்பதுதான் இதற்கான விடை. முதலாளித்துவத்தின் விதி ஒன்றுதான். அதை மார்க்சின் சொற்களில் கூறுவதாயின், “மூலதனத்தைக் குவி, குவி, மேலும் குவி என்பதுதான் மோசஸின் இறைக்கட்டளை.”

அதிகரித்த அளவில் மூலதனத்தைக் குவிப்பதைத் தவிர, இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை.  அத்தகைய மூலதனக் குவிப்பு சாத்தியமாக வேண்டுமென்றால், பொருளாதாரம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு வளரவேண்டுமானால், உலகிலுள்ள அனைத்துமே வாங்கவும் விற்கவுமான பண்டமாக்கப்படவேண்டும். உலகமே பணத்தால் ஆனதாக மாற்றப்படவேண்டும்.

இந்தப் பூமியின் உயிரியல், புவியியல், வேதியியல் இயக்கப்போக்குகளில் தோன்றும் முறிவுகளும் பிளவுகளுமே (Ruptures or Rifts in the Bio-Geo-Chemical Processes of the Planet)  இதன் விளைவு. இப்பிரச்சினையைத்தான் வளர்சிதை மாற்றப் பிளவு என்று கணித்தார் மார்க்ஸ் – இன்றைய சூழல் அமைப்பியலாளர்கள் கணிப்பதைப் போலவே.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சூழலியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடுமா?

தொழில்நுட்பம் குறித்துப் பல தவறான அபிப்ராயங்கள் நிலவுகின்றன. நமது காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குக் காரணம் – தனியார் மூலதனக் குவிப்புக்கான கட்டமைப்பு என்ற பொருளில் – முதலாளித்துவமல்ல.

புதிய கண்டுபிடிப்புகள் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் சாத்தியத்தை வழங்குவதால், அணு ஆயுதங்களை இதற்குப் பொருத்தமாக நவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. துல்லியமாகத் தாக்க முடியும் என்பதால், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணு ஆயுதப் போர் கூட சாத்தியமே என்ற ஆபத்தான, அபத்தமான கருத்துகளும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த புவிக்கோளத்தில் தோன்றியிருக்கும் சூழலியல் முறிவை எதிர்கொள்வது எப்படி என்ற பிரச்சினையில் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

சூழலியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மூலதனத்தை மென்மேலும் குவித்துக் கொள்ளும் பொருட்டு, இயற்கை இந்தப் பூமிக்கு விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டிப் பொருளாதாரத்தை வளரச்செய்ய வேண்டுமென்றும், இந்த நோக்கத்தைப் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் முதலாளித்துவ அமைப்பு விரும்புகிறது. இந்த விருப்பத்தைத் தொழில்நுட்பத்தால் தீர்த்துவைக்க முடியாது.

இயற்கை விதிக்கின்ற எல்லா வரம்புகளையும் மீறப்பட வேண்டிய தடைகளாக மட்டுமே கருதுகின்ற முதலாளித்துவத்தின் மிகக் குறுகலான பார்வையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இப்பிரச்சினையைக் கடக்கவியலாத இயற்கையின் வரம்புகள் (Insuperable natural limits) என்று அழைத்தார் மார்க்ஸ். நாம் இந்தச் சமூகத்தை அர்த்தமுள்ள சமத்துவத்தையும் சூழலியல் பேண்தகைமையையும் நோக்கிப் பெருமளவில் நகர்த்திச் செல்ல வேண்டுமானால், – சுதந்திரமும் மனித குலத்தின் எதிர்காலமும் இதைத்தான் கோருகின்றன – சமூக உறவுகளை நாம் மாற்றியமைப்பது அவசியம். இந்த முதலாளித்துவ கட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாது.

சோசலிசம் இயற்கையைச் சீரழிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

“உற்பத்திச் சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சியை சோசலிசம் கோருகிறது என்று மார்க்சியம் கூறுவதால், அது இயற்கையை மிகப்பெரும் அளவில் சுரண்டுவதற்கும் அழிப்பதற்கும் வழிவகுக்காதா?” என்று கேட்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சி என்பதன் பொருள் என்ன? உற்பத்தி சக்திகளில் தலையாய சக்தி மனிதர்கள்தான் என்பதையும் அவற்றின் வளர்ச்சி என்பது வேலைப்பிரிவினயின் வளர்ச்சியே என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“இறுதியாக சோசலிசத்தின் கீழ் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைவானது, மனித சாத்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆற்றலைச் சேமிக்கும் வகையிலும் இயற்கையுடனான தமது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். இதனை உற்பத்தி உற்பத்திக்காகவே என்றோ, தொழில்மயம் தொழில்மயத்துக்காகவே என்றோ யாரும் விளக்கப்படுத்த முடியாது. வளர்ச்சியின் அலகு இந்தப் பூமிதான் என்பதால், பேண் தகைமையைத்தான் (Sustainability) மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் அறிவியல் வழியில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைச் சிலர் மறுப்பது ஏன்?

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அறிவியல் எந்த அளவுக்கு அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறதோ, அதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இன்றைய அறிவியல் உறுதியாக இருக்கிறது.

“இது அனைத்தையும் மாற்றுகிறது” (This Changes Everything -Naomi Klein)  என்ற தனது நூலில் நவோமி கிளைன் சரியாகத்தான் சொல்கிறார். அவரது கருத்துப்படி பருவநிலை மாற்றப் பிரச்சினையை வலதுசாரிகள் மறுப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது.

புவி சூடேறுதலைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியானாலும் சரி, அல்லது புதைபடிவ எரிபொருள் தொழிலின் மீது (fossil fuel industry) கட்டுப்பாடுகளை விதிக்கின்ற முயற்சியானாலும் சரி, அவற்றை முதலாளித்துவத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் புதைபடிவ எரிபொருள் தொழிலை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைகளுக்கு எதிரான அச்சுறுத்தலாகவுமே வலதுசாரிகள் காண்கிறார்கள். அந்த வகையில் வலதுசாரிகள் அஞ்சுவது சரிதான் (The Right is right)  என்கிறார் நவோமி கிளைன். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இயக்கமென்பது தவிர்க்கவியலாமல் புரட்சிகரமான மாற்றத்துக்கானதாகவும் முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்கிறார் நவோமி கிளைன்.

நவோமி கிளைன் வலதுசாரிகளை விமரிசித்த போதிலும், அவரது உண்மையான இலக்கு வலதுசாரிகள் என்பதை விடத் தாராளவாத மையவாதிகளே (liberal centrists) ஆவர். இந்த மையவாதிகள் வேறொரு முறையில் பருவநிலை மாற்றப் பிரச்சினையை மறுக்கிறார்கள். சமூக உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வராமலேயே, சந்தை மற்றும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மந்திர வித்தையைப் போல புவி சூடேறுதலைத் தடுத்து விட முடியும் என்று எதார்த்தத்துக்குப் புறம்பான வகையில் வாதிடுகிறார்கள்.

சூழலியல் பேரழிவை நம்மால் தடுக்க முடியுமா?

நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவிலிருந்து தப்புவதற்கு தொழில்நுட்பத் தடைகளோ, வேறு பௌதிகத் தடைகளோ ஏதும் இல்லை. ஆனால், வழமையான முறையில், அதாவது, மூலதனக் குவிப்பு வழக்கம் போல நிகழ்ந்து கொண்டிருக்க, அதன் போக்கிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது.

ஒரு பேரழிவைத் தடுக்கின்ற அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் முடியும். சாத்தியமான தீர்வுகள் பல உள்ளன. ஆனால், அநேகமாக அவை அனைத்துமே மூலதனக் குவிப்புக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் யாருக்கும் தேவைப்படாத, யாரும் விரும்பாத பொருட்களை, பெரும்பாலும் குப்பைகள் என்று சொல்லத்தக்கவற்றை மக்களின் தலையில் கட்டுவதற்கான விளம்பரங்களுக்காக மட்டும் ஒரு டிரில்லியன் டாலர்கள் ஆண்டுதோறும் செலவிடப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் சூழலியில்ரீதியில் அழிவுத்தன்மை வாய்ந்த துறை இராணுவம். அழிவினை இலக்காகக் கொண்ட இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது, அமெரிக்கா. மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இத்தகைய செலவுகள் அனைத்துமே தேவையற்றவை. எனினும், இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதிகளுக்கு எதிராகச் செயல்படுவது அவசியம்.

ஒரு புரட்சிகரமான எதிர்வினை என்பதன் பொருள் நாம் விதிகளை மாற்ற வேண்டும் என்பதுதான். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, எரிந்து கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு நாம் வழி தேடவேண்டும். அதற்கான நமது போராட்டத்தில்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நாம் பெற முடியும்.

முதலாளித்துவ நெருக்கடியும் பாசிசமும்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் காணும் பாசிசத்தின் எழுச்சி என்பது மையப் பொருளாதாரங்களின் மூலதனம் எதிர்கொள்ளும் கட்டமைவு நெருக்கடியுடன் தொடர்புள்ளவை.

டிரம்பும் வெள்ளை மாளிகையும்  என்ற எனது நூலில் இத்தகைய பிரச்சினைகள் பலவற்றைக் கையாண்டிருக்கிறேன். பாசிசம் என்பது நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்து பிறப்பது. அது குறிப்பான வர்க்க அடித்தளத்தைக் கொண்ட தெளிவானதொரு அரசியல் கட்டமைப்பு.  தாராளவாத ஜனநாயக அரசின் நெருக்கடியையும் பாசிசத் தன்மை கொண்ட அரசமைப்பால் அது மாற்றீடு செய்யப்படுவதையும் இது காட்டுகிறது.

1930 -களிலும் 40 -களிலும் பாசிசம் குறித்த விமரிசனமென்பது மார்க்சியத்திடமிருந்துதான் வந்தது என்றபோதிலும் அது பரவலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஒரு அரசமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சி நடப்பதைப் போன்ற தோற்றத்தை பாசிச அரசுகள் பராமரித்த போதிலும், தாராளவாத ஜனநாயக அரசுக்குரிய வரம்புகளை மறுத்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நடத்துகின்ற ஆட்சி என்றவாறே பாசிசம் புரிந்து கொள்ளப்பட்டது.

பின்னர் முதலாளித்துவத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று காட்டும் விதத்தில் பாசிசத்துக்கு வியாக்கியானம் அளிப்பதற்குத் தாராளவாதக் கோட்பாட்டுப் பிரிவினர் அரும்பாடுபட்டார்கள். பாசிசம் என்பதை ஒரு வகை உளவியல் பிறழ்ச்சி போலக் காட்டுவதற்கும், நிறவெறி தோன்றிய வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அதனைப் பிரித்தெடுத்துவிட்டு, நிறவெறிதான் பாசிசம் என்பதுபோலக் காட்டுவதற்கும் இவர்கள் பெரிதும் முயன்றார்கள். பாசிசம் என்பதை அரசியல்ரீதியான வர்க்கக் கட்டமைவாக நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அதனைத் தீர்மானகரமாக முறியடிக்க முடியும். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, முதலாளித்துவத்தை எதிர்க்கத் தயாராக இல்லாதவர்கள் பாசிசத்தை எதிர்க்க முடியாது.

ஒரு புதிய புரட்சிகர சூழலை நாம் வந்தடைந்து விட்டோமா?

முதலாளித்துவக் கட்டமைப்பை ஒரு நாளில் கடந்து சென்றுவிட முடியாதென்பதை நாம் அறிவோம். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதற்கு முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பல நூற்றாண்டுகள் ஆயின. நாம் நீண்டதொரு புரட்சி என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், தன் ஒவ்வொரு அடி வைப்பிலும் அது புரட்சிகரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்தப் பூமியும் நாமும் பிழைத்திருக்க வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதியை எதிர்த்துத்தான் நாம் நகர வேண்டும். மூலதனக் குவிப்பின் தர்க்க நியாயத்தை முறியடிக்க இடையறாது போராடவேண்டும். இது நம்முடைய காலம் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் பாடமாகும்.

சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்று நாம் பேசும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. இன்று நமது தெரிவு சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு என்பதாக மாறிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய முன் நகர்வு என்பது தவிர்க்கவியலாத் தேவை ஆகிவிட்டது. மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே  சோசலிசம்தான் என்றாகிவிட்டது.

150 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மார்க்சுடைய மூலதனத்தின் பொருத்தப்பாடு குறித்து..

மார்க்சின் விமரிசனபூர்வமான இயங்கியல் ஆய்வுமுறையும், முதலாளித்துவ சமூகம் குறித்த அவரது வரலாற்று ஆய்வுகளும் அவரது பணியைத் தன்னிகரற்றதாகவும் தவிர்க்கவியலாததாகவும் ஆக்கியிருக்கிறது. கடந்த 150 ஆண்டு காலத்தில் சமூக விஞ்ஞானத்துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தைக் காட்டிலும் மார்க்சியம் நெடிதுயர்ந்து நிற்கிறது.

மாறி வரும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சோசலிச இயக்கம் முன்னேறிச் செல்லச் செல்ல, தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவுக்கு ஊடுறுவிப் பார்த்த மார்க்சின் சிந்தனைகளுக்குள் பொதிந்திருக்கும் புதிய, புதிய அறிவியல் கூறுகளை அது கண்டு கொள்ளும் என்று ரோசா லக்சம்பர்க் ஒரு முறை சொன்னார். அது உண்மையென நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம்முடைய வரலாற்றுக் கட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களை எடுக்கலாம். ஆனால், அவருடைய ஆய்வுமுறை நீடித்து நிற்கிறது.

மொழியாக்கம்: சூரியன்

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதா ?

1

மீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ப் மீடியா என்ற ஒரு பத்திரிக்கை நிறுவனம், நடத்திய ஆய்வில் நாம் அருந்தும் பாட்டில் தண்ணீரில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நுண்துகள்கள் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சுத்தமான நீர் வேண்டும் என்று தான் பாட்டில் தண்ணீருக்கும், கேன் தண்ணீருக்கும் தண்டம் கட்டி பருகுகிறார்கள், மக்கள். இதிலுமா பிரச்சினை? என நீங்கள் எண்ணலாம்.

உலக அளவிலான பாட்டில்-கேன் என கொள்கலனில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தண்ணீர் சந்தையின் மதிப்பு ஓராண்டுக்கு சுமார் 147 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 9 இலட்சத்து 56,000 கோடி ரூபாய்கள்.

ஆர்ப் மீடியா நிறுவனம், பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்யும் 11 நிறுவனங்களின் 250 பாட்டிலை வாங்கி சோதனைக்கு உட்படுத்தியது. மொத்தம் 5 கண்டங்களில், 9 நாடுகளில் இருந்து 19 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கிருந்து குடிநீர் பாட்டில் மாதிரிகள் வாங்கப்பட்டன. இந்நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் பாலி எத்திலின் தெரெப்தலேட் (PET) என அழைக்கப்படும் பிளாஸ்டிக் வகை கலந்திருக்கிறது.

உலக அளவில் விற்பனை செய்யப்படும் பாட்டில் குடிநீரில் 100 மைக்ரான் அளவிற்கு அதிக அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 10.4 எண்ணிக்கையில் இருக்கின்றன. சில நிறுவனங்களின் பாட்டில் குடிநீரில் லிட்டருக்கு 10,000 துகள்கள் வரை இருந்திருக்கின்றன. அதேபோல் 100 மைக்ரானுக்குக் குறைவான அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் சராசரியாக லிட்டருக்கு 314.6 எண்ணிக்கையில் இருக்கின்றன.

எடுக்கப்பட்ட மாதிரிகளில் 93% பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன.  இதே நிறுவனம் கடந்த ஆண்டு குழாய் நீரில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டது. அதன்படி உலக அளவில் குழாய் நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக்கின் அளவு சராசரியாக லிட்டருக்கு 4.45 எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இது பாதுகாப்பான குடிநீர் எனக் கூறி விற்கப்படும் பாட்டில் குடிநீரை விட மிகவும் குறைவு.

உடம்பில் உட்கொள்ளப்படும் பிளாஸ்டிக் துகள்களில் சுமார் 90% நமது உடல் வெளியேற்றிவிடுகிறது என்றும் மீதமுள்ள 10% துகள்கள் நமது உடலின் திசுக்கள் மற்றும் கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்களில் தங்கிவிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர். மேலும் இந்த பிளாஸ்டிக்கில் உள்ள இரசாயனங்கள் உடலில் எவ்வகையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது குறித்த முழுமையான ஆய்வு எதுவும் இதுவரை இல்லை.

ஏகாதிபத்தியங்களால் சுரண்டப்படும் மூன்றாம் உலக நாடுகளில் தண்ணீர் வழங்கல், சேவை என்ற நிலையில் இருந்து சந்தைக்கானதாக மாற்றப்பட்டு வருகின்றது. கடந்த 30 ஆண்டுகளில் பல நாடுகளில் தண்ணீரை தனியார்மயமாக்கி விட்டார்கள்.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்  தனியார் வசம் சென்று கொண்டிருக்கிறது. உலகவங்கியின் உத்தரவிற்கு இணங்க தேசிய நீர் பாதுகாப்பு மசோதாவை நம் மீது திணிக்கத் தயாராகியிருக்கிறது மோடி அரசு. இதற்கான வரைவை கடந்த காங்கிரசு ஆட்சியிலேயே கொண்டு வந்தனர். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து   அம்மசோதா கிடப்பில் போடப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சுத்தமான நீரைப் பெற தனியாரை நாடும் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என தரக்கட்டுப்பாடு வைத்து அதனைக் கறாராக அமல்படுத்தும் மேற்குலகிலேயே பாட்டில் தண்ணீரில் அதிக அளவில் பிளாஸ்டிக் இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

இந்தியாவிலோ இதற்கென எந்த கட்டுப்பாடும் இல்லை. இருக்கும் பாதுகாப்பு முறைகளெல்லாம் அதிகார வர்க்கத்தின் ஊழல்களால் பலனில்லாமல் தூங்குகின்றன.

இதை விட முக்கியமானது, தண்ணீர் என்றால் அது பாட்டில், பாக்கெட், கேன் என மாற்றி விட்டார்கள். மக்கள் வருமானத்தில் கணிசமான அளவு குடிநீருக்குச் செல்கிறது. பொது சேவையில் பெறப்படும் குடிநீர் பாதுகாப்பற்றது என்பதாக தற்காலத்தில் மக்கள் மனங்களில் மாற்றப்பட்டு விட்டன. உணவகங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் தனியார் நிறுவனங்களின் குடிநீரே ஆதாரங்களாக இருக்கின்றன. இந்நிலையில் பாதுகாப்பான நீர் குறித்த இத்தகைய விழிப்புணர்வு யாருக்கு ஆதாயம்?

இனி பாட்டிலில் பிளாஸ்டிக் துகள் இல்லாத உயர்தர குடிநீர் என அடுத்த சரக்கு சந்தையில் புதிதாக விற்கப்படும். இப்போது செலவழிப்பதை விட இனி குடிநீருக்கான பட்ஜெட் அதிகரிக்கும். தண்ணீரில் கலந்திருக்கும் தனியார் மயம் எனும் விஷத்தை முறியடிக்காமல் பாதுகாப்பான பாட்டில்களால் என்ன பாதுகாப்பு வந்து விடப் போகிறது?

மேலும் :

போராட்டக்களத்தில் புது மொட்டுக்கள் ! இளம் தோழர்களின் அனுபவம் !

3

மதுரை காவிரி தீர்ப்புக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான இளம் தோழர்களின் அனுபவம்!

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு சேர வேண்டிய 14 டிஎம்சி தண்ணீரை குறைத்து கடந்த 16.2.2018 வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.  மறுநாள் 17.2.2018 சனிக்கிழமை மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக “டெல்லியின் அதிகாரத்திற்கு கட்டுப்படாதே” என்ற முழக்கத்தோடு மதுரையின் ஜல்லிக்கட்டு புகழ் தமுக்கத்தில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் 4 இளம் தோழர்கள் உட்பட 24 தோழர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின் இளம் தோழர்கள் தவிர மற்றவர்களை வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

கைதான 4 இளம் தோழர்களும் பு.ஜ.தொ.மு., ம.க.இ.க. அமைப்புத் தோழர்களின் குழந்தைகள் தான், அதனாலேயே போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.  அவர்களது போராட்ட அனுபவம் இது.

உலகமயத்தின் உக்கிரமான தாக்குதலில் தெருக்களில் ஓடியாடும் குழந்தைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. சுட்டி டி.வி.யும் ‍.சோட்டா பீமும் அவர்களை இரண்டடி பெட்டிக்குள் கைது செய்துவிட்டது. கொஞ்சம் வசதி வாய்ப்புள்ள குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளையோ Android மொபைல் போனின் வீடியோ கேம்ஸ்களின் பிடியில் தாரை வார்த்துவிட்டது இந்த சமூகம்.

இவற்றையெல்லாம் தாண்டித்தான் கூடங்குளம் மக்கள் போராட்டத்தில் களம் கண்ட குழந்தைகளையும், டாஸ்மாக் கடைகளை ஏறி உடைத்த சிறுவர்களையும், நெடுவாசலில் போர்களம் புகும் சிறார்களையும் காண்கின்றோம்.

இனி குழந்தைகளின் அனுபவத்திற்கு செல்வோம்.

“எங்க 4 பேருக்கும் அன்னக்கி லீவு, அதனால் முத நாளே அப்பா காவிரி வழக்குல தமிழ் நாட்ட ஏமாத்திட்டாங்க. அதனால நாளைக்கி காலையில போரட்டம் இருக்கு. நீங்களும் வாங்க, காலையில் 8 மணிக்கு எல்லாம் கெளம்பனும். சீக்கிரம் போயி தூங்குங்கன்னு சொன்னாங்க. ஸ்கூல் இருந்தா அப்பா கூட்டிட்டு போமாட்டாங்க. சில நேரம் மட்டும் லீவு போட்டுட்டு கூட்டிட்டு போவாங்க. அதே மாறி காலைல 8 மணிக்கெல்லாம் அங்க போய்ட்டோம். அப்ப அங்க ஒரு போலீஸ்காரரு அப்பாகிட்ட ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்தாரு. என்கிட்ட பேரு, படிப்பு, எல்லாம் அவரு விசாரிச்சாரு” என்று சொல்கிறார் 6 -ஆம் வகுப்பு படிக்கும் கயல்.

” அப்பறம் போராட்டம் ஆரம்பிச்சப்ப தோழர்களோட‌ சிக்னலில் இருந்து BSNL ஆபிஸ் வரை முழக்கம் போட்டுகிட்டே ஊர்வலமா போனோம். நாங்க முதல் வரிசையில் சென்றோம்.  ஏன்னா போராட்டத்துல எங்களுக்கு எப்பவுமே முதல் வரிசையில் இருக்கத்தான் பிடிக்கும்” என்று ஆர்வத்துடன் சொல்கிறார் 6 -ஆம் வகுப்பு படிக்கும்  இரணியன்.

“முதல்ல சில போலீசுதான் இருந்தாங்க, அவங்க கூட நாங்க ஊர்வலமா வற்றப்ப பக்கத்துலதான் நடந்து வந்தாங்க. ஆனா ஒன்னும் சொல்லலை. அப்பறம் ஆபிஸ் வாசல்ல டி.வி காரங்களுக்கு பேட்டி கொடுத்தப்ப, ஒரு போலீஸ் வந்து, “உடனே எல்லாம் வேன்ல ஏறுங்க உங்கள எல்லாம் கைது பண்றோம்”  என்றாரு. உடனே இப்பத்தான வந்துருக்கோம் கொஞ்சம் இருங்கன்னு தோழர்கள் சொன்னப்ப உங்கள இவ்வளவு நேரம் விட்டதே அதிகம் உடனே வேன்ல ஏறுங்கன்னு சொல்லிக்கிட்டே எல்லாரயும் புடிச்சு தள்ளி ஏத்துனாங்க. அப்புறம் வேன்ல போகும் போது அப்பா சொல்லித்தான் தெரிஞ்சது அவரு பேரு மணிவண்ணன்னு.  அவரு இன்ஸ்பெக்டராமே” என்று போலீசின் அடக்குமுறையை பயமில்லாமல் விளக்குகின்றனர் 5-ம் வகுப்பு படிக்கும் மருதுவும் 9 -ஆம் வகுப்பு படிக்கும் சூர்யாவும்.

ஒரு வழக்கறிஞராகி மக்களுக்காக சேவை செய்து உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பது சூர்யாவின் ஆசை.

மேலும் “இவங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா, நம்ம ஊருக்கு வர வேண்டிய தண்ணிய தடுத்து நிறுத்தி இருக்காங்க, அப்பறம் விவசாயம் பன்றதுக்கு எங்க இருந்து தண்ணி கிடைக்கும். எப்படி சாப்புட்றது.  இவங்களும் இந்த ஊரு தான.  நம்ம ஊரு பிரச்சினைக்கு நாம போரட‌லைன்னா வேற யாரு போராடுவான்னு நினைச்சோம்.  சரி, இவங்க (போலீசு) எப்பவுமே இப்படிதான, நல்லது பன்றவங்கள கைது பன்றது அப்படின்னு நினைச்சு விட்டுட்டோம். உடனே எங்கள(சிறுவர்களை)  மட்டும் வெளிய போங்கன்னு சொல்லிட்டு தோழர்கள மட்டும் கைது பண்ண பார்த்தாங்க ஆனாநாங்களும் கைதாவோம்னு சொல்லிட்டோம்.

ஒவ்வொருத் தரையும் குண்டு கட்டா தூக்கி வேன்ல ஏத்துனாங்க, இவங்க (போலீசு) எப்பவுமே இப்படித்தான் பன்னுவாங்கன்னு எங்களுக்கு தெரியும். ஏன்னா ரொம்ப நேரம் நாங்க போராட்டம் பண்ணா மக்கள்கிட்ட இந்த விசயம் பரவும், அத தடுக்குறதுக்கு தான் இவங்க இப்படி எல்லாரயும் உடனேயே கைது பண்ணி வேன்ல ஏத்தி மண்டபத்துல அடச்சு வச்சுருவாங்க, இதுதான் இந்த போலீசோட வேலையே. ஆனா எங்கள கைது பன்றப்பவும், ஊர்வலமா வந்தப்பவும் சுத்தி இருந்தவர்களை (மக்களை) பார்த்து கைகாட்டி வரச்சொல்லி முழக்கம் போட்டோம், ஆனால் எல்லாரும் போட்டோ எடுத்தாங்களே தவிர யாருமே வரல, எல்லாம் வேடிக்கை பார்த்துட்டுதான் இருந்தாங்க”.

மேலும் இரணியன் கூறும் போது “சின்ன பசங்கள எல்லாம் வெளிய போங்கன்னு கைய புடிச்சு இழுத்து இழுத்து விட்டாங்க, ஒரு போலீசு கை பிடிச்சு இழுக்கிறேன்னு என் கைய பிசஞ்சு விட்டான், நல்ல தடிமாடு மாதிரி இருக்காங்க. இப்பவே போன போராட்டத்துல முத வரிசையில் கொடியோடு நின்னு முழக்கம் போட்டுட்டு இருந்தப்ப என் பிரண்ட்ஸ் பார்த்துட்டு கட்சிகொடினு பட்ட பேர் வச்சுதான் கூப்புறாங்க, இதுல இது வேற தெரிஞ்சுட்டா ரொம்பவே பன்னுவாங்க” என்று தமது செயலுக்கான அங்கீகாரம் கிடைக்காமை பற்றி வருத்தத்தோடு சொல்கிறார்.

“அப்புறம் வேன்ல போய்ட்டு இருந்தப்ப அடிக்கடி சடன் பிரேக் போட்டாரு டிரைவரு. நான் கூட முன்னாடி போய் முட்டிக்கிட்டேன், அப்ப தோழர்கள் ஏன் இப்படி வண்டிய ஓட்றீங்க, எங்கள மேல கோவமான்னு கேட்டாங்க, ஆனா அந்த டிரைவரு ஏதும் சொல்லாம வண்டிய ஓட்டிக்கிட்ருந்தாரு”  என்கிறார் சூர்யா.

“அங்கருந்து மண்டபத்துல போனதுக்கு போனப்புறம் எல்லாரோட பேரு, வேல அட்ரஸ், படிப்பு, ஸ்கூல் பேரு எல்லாம் கேட்டாங்க. நாங்க கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டோம், ஏன்னா எங்கள போராட விடாம, மரியாதை இல்லாம நடத்துனதுக்காக தோழர்கள் பேரு, அடையாளம் எல்லாம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அதனால நாங்களும் தரமாட்டோம்னு சொல்லிட்டோம்.

அப்ப எங்கள பார்த்து, “நல்லா படிச்சு பெரிய ஆளா வர வேண்டாமா, ஏன் இப்படி போராட்டம்னு வந்து கஷ்டப்பட்றீங்கன்னு”  கேட்டாரு ஒரு போலீசு, உடனே நாங்க “எம்ஜிஆர் படிச்சாரா?, அவரை இப்படி கேப்பீங்களா?” அப்படீன்னு கேட்டோம், உடனே அவரு “ஏய் அவரு முதலமைச்சர்ப்பா” என்றவுடன் “அவரு படிச்சுதான் முதலமைச்சர் ஆனாரா”ன்னு திருப்பி கேட்டவுடன் “உங்க கூட பேச முடியாதுப்பா நீங்க கிளம்புங்க” அப்படின்னு சொல்லிட்டு அவரு கிளம்பிட்டாரு. அதுக்கப்புறம் எல்லா தோழர்களும் ஒவ்வொருத்தரா காவிரி ஆத்து பிரச்சினைய பத்தி பேசினாங்க. அதைப்பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டோம்”.

மேலும் கயல் மற்றும் மருது சொல்லும்போது, “நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து “எங்க மண்ணு, எங்க ஊரு” பாட்ட பாடுனோம், அப்ப தோழர்கள் எல்லாம் சந்தோசமா பார்த்து கைதட்டுனாங்க” என்று குதூகலத்துடன் சொல்கிறார்கள்.

ஆரம்ப பள்ளி ஆசிரியராகி சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டும் என்பது கயலின் கனவு.

“வெளிய இருந்த‌ தோழர்கள் ஸ்நாக்ஸ் சாக்லெட் எல்லாம் வாங்கி தந்தாங்க. காலையில் பேரு, அட்ரஸ் கேட்டப்ப சொன்ன மாதிரியே எங்கள போராட விடாம கைது செஞ்சதுக்காக போலீஸ் வாங்கி தந்த சாப்பாட சாப்ட மாடோம்னு சொல்லிட்டாங்க தோழர்கள்.  அதுக்கப்புறம் போலீஸ் சாமாதானம் பேசினதுக்கப்புறம் சாப்டறப்ப 3மணி இருக்கும்.” என்கிறார் மருது.

“அதுக்கப்பறம் நாங்க ரொம்ப நேரம் மண்டபத்துலயே ஒடி பிடிச்சு விளையாடிட்டு இருந்தோம், நடுவுல நாங்க எல்லாரும் தோழர்களாகவும், பிரகாஷ் தோழர் போலீசாவும் வேஷம் போட்டு விளாடுனோம், நாங்க எல்லாரும் சேர்ந்து போலீச(பிரகாஷ் தோழரை) தரையில போட்டு புரட்டி எடுத்துட்டோம்.”

சாயங்காலம் திடீர்னு எங்கள எல்லாரையும் ரிமாண்ட் செய்யுறோம், அதனால் மெடிகல் டெஸ்ட்க்கு ஆஸ்பத்திரிக்கு கிளம்பனும்னு போலீஸ் வந்து சொன்னாங்க. அடுத்த நாள் ஞாயித்துகிழமன்றதால எங்களுக்கு ஒன்னும் பிரச்சினையில்ல லீவுதானன்னு இருந்தோம். அங்க இருந்து GH வந்ததுக்கு அப்புறம் எங்கள(சிறுவர்களை)  எல்லாம் ரிலீஸ் செய்யுறோம்னு தோழர்கள் மட்டும் செக்கப் செய்யச் சொன்னாங்க. ஆனா நாங்க மாட்டோம்னு சொல்லிட்டோம். ஏன்னா எங்கள மாதிரி சின்னப்பசங்க எல்லாம் போராடுராங்களேன்னு மக்கள் புரிஞ்சுக்கிட்டு போராட வரணும்னுதான் கைதானாலும் பரவா இல்லைன்னு நாங்க போராட வர்றோம். அதனால நாங்க ரிலீஸ் ஆக மாட்டோம்னு சொல்லிட்டோம்.

அப்பறம் தான் எங்கள செக்கப் செய்ய கூட்டிட்டே போனாங்க. அப்ப வெளிய இருந்த தோழர்கள் வாங்கி கொடுத்த சாக்லெட்ட அங்க இருந்த போலீசுக்கு எல்லாம் நாங்க ஜெயிலுக்கு போறோம் சாக்லெட் எடுத்துக்கொங்கன்னு கொடுத்தோம்.

ஆனா அவங்க உங்கள தான் ரிலீஸ் பண்ணிட்டோம்ல என்றாங்க, சரி, நாங்க ரிலீஸாகப் போறோம் அதுக்காக எடுத்துகொங்க என்றோம் நிறய பேர் எடுத்துட்டாங்க. ஆஸ்பத்திரி வராண்டாவுல நாங்க ஜாலியா விளாடிட்டு இருந்தோம், ஆனா தோழர்கள்தான் ரொம்ப பாவம். ஒன்னுக்கு போறதுக்குகூட போலீசோடதான் போனாங்க. அங்கருந்தப்ப வெளிய இருந்த தோழர்கள் எங்களுக்கு (சிறுவர்களுக்கு) மட்டும் சாப்பாடு வாங்கி கொடுத்தாங்க. அதுக்கப்பறமும் எங்கள விடல.  போலிஸ்டேசனுக்கு கையெழுத்து போட‌ வந்தப்பகூட பசங்கள கூட்டிட்டு போயிறச்சொன்னாங்க, அத ஜட்ஜ் சொல்லட்டும்னு சொல்லிட்டு வேன்ல இருந்து இறங்க மாட்டோம்னு சொல்லிட்டோம்”

மேலும் கயல் சொல்லும் போது “அங்க ஆஸ்பத்திரியில கூட என்ன ஒரு போலிஸ் கூப்டு விசாரிச்சாரு அப்ப நம்ம இரணியந்தான் வந்து என்ன கேளுங்க நான் சொல்ரேன்னு வந்து அந்த போலிஸ்கிட்ட பேசுனான்” என்கிறார்.

“என்ன பேசினான்?” என கேட்ட போது, “அதே தான், நல்லா படி, பெரிய ஆளா வரணும், போராட்டம் எல்லாம் வேணாம்ன்னு சொன்னாரு, இவன் உடனே, ” மக்களுக்காக வாழணும் சார்” ன்னு சொன்னான்”

“இவிங்கள பெத்தாங்களா செஞ்சாய்ங்களா?” என அந்த  போலீசுகாரர் புலம்பியதாக அருகில் இருந்த தோழர்கள் கூறினர்.

“அப்புறம் ஜட்ஜ் வீட்டுக்கு வந்தப்ப கூட எங்கள வெளியவே இருக்க சொன்னாங்க. ஆனா நாங்க ஜட்ஜ் முன்னாடி ஆஜராகியே தீர்வோம்னு தோழர்கள்.. கூடவே இருந்தோம். ஆனா ஜட்ஜ்தான் எங்கள பாத்த உடனயே “குழந்தைகள எல்லாம் ரிலீஸ் பண்ணிருங்கன்னு” ஒரே போடா போட்டாரு. ஜெயில பாக்குறது ஜஸ்ட்ல மிஸ் ஆகிருச்சு” என்று ஒருவித ஏக்கத்தோடு கூறுகின்றனர்.

சரி உங்களுடைய அப்பாக்கள் எல்லாம் கைதாகி ஜெயிலுக்கு போவதை பற்றி உறவினர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று கேட்டதற்கு ” அவர்களுக்கு யாருக்கும் இது தெரியாது, இரண்டு நாள்தான் ஜெயில்ல இருந்ததால சொந்தகாரங்க யாருக்கும் தெரியல, ஆனா வீட்ல அம்மா பயந்துகிட்டே இருந்தாங்க போலீஸ் யாரும் நம்ம வீட்டுக்கு தேடி வந்துருவாங்களோன்னு,” என்கிறார் மருது.

இரணியன், “எங்கப்பாம்மா போராட்டத்துக்கு வரல.  நான் மட்டும் தோழர்களோட வந்தேன்.  நான் அரஸ்ட் ஆனது தெரிஞ்சதும் பாட்டி தான் ரொம்ப திட்டினாங்க. ” அப்பன மாதிரியே கெட்டு குட்டிச் சுவரா போகாத” ன்னு சொன்னாங்க.  நான் “நல்ல விசயத்துக்கு தானே போனேன். என்ன தப்புன்னு” கேட்டேன்.  “அப்படீன்னா இனிமே எங்கூட பேசவே செய்யாதன்னாங்க”. நான் ” சரின்னு” சொல்லிட்டேன்.  அப்பறம் ஒரு அஞ்சாறு நாள் பாட்டி எங்கூட பேசவே இல்ல.  அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சுட்டாங்க.” என்றார்.

“இப்படி 20 பேர் மட்டும் போராடினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?” என்று கேட்ப‌தற்கு “தீராதுதான். நாங்களும் எங்க பிரண்ட்ஸ்கிட்ட பேசுவோம், ஆனா அவங்க விளாட்டுலயே இருப்பாங்க. எங்கள கிண்டல் பண்ணுவாங்க,  சிலபேர் ஆசைதான் ஆனா அம்மா விடமாட்டாங்கன்னு சொல்லுவாங்க. அவங்க சொல்றதும் சரிதான எங்க அப்பா அம்மா போக சொல்றாங்க, ஆனா அவங்க அப்பா அம்மா அப்படி இல்லையே என்ன பன்றது. ஆனா நாங்க விடமாட்டோம்.  பசங்ககிட்ட விடாம பேசுவோம், அடுத்த தடவ நிறய பிரண்ட்ஸ கூட்டிட்டு வருவோம்.”

” இப்படி போராட்டம்,  போலீஸ்,  கைது,  கேஸ் என்று போய்க்கொண்டிருந்தா ஆசிரியர்,  மருத்துவர்,  வழக்கறிஞரா,  உங்களுடைய தனிப்பட்ட லட்சியங்கள், ஆசைகள் எல்லாம் என்னவாவது?” என்று கேட்டால்  “மக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த ஆசை எல்லாம், அது முடியலைன்னா இப்படி போராடி சேவை செய்ய வேண்டியதுதான்” என்றனர்.

-வினவு செய்தியாளர்கள்.

குற்றப் பாரம்பரியம் குரு பரம்பரையான கதை ! பிரைமரி எவிடென்ஸ் !

15

ழ்வார்கள் எனப்படுவோர் புனிதர்கள் என்றும், உலகமகா உத்தமர்கள் என்றும் பொதுமக்கள் நினைக்கக்கூடும். ஆனால், நித்தியானந்தா, எச்.ராசா போன்றோரையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற அளவுக்கு இவர்கள் அயோக்கிய சிகாமணிகள் என்பதை வைணவப் பார்ப்பனர்கள் எழுதியுள்ள வரலாற்று நூல்களிலிருந்தே வாசகர்கள் அறியத்தருகிறோம்.

பிரபந்த வித்வான் எதிராஜ ராமானுஜ தாசர் எனும் வைணவப் பார்ப்பனரால் தொகுக்கப்பட்டு, ஆழ்வார்கள் அமுத நிலையம், சென்னை – 2 -ஆல் வெளியிடப்பட்டுள்ள குருபரம்பரை வைபவம் (பதிப்பு : 1992) எனும் நூலிலிருந்தும், ஆறாயிரப்படி குருபரம்பரா ப்ரபாவம் (பதிப்பு : 1927) (வெளியீடு :  திருவல்லிக்கேணி நோபில் அச்சுக்கூடத்தில் சே.கிருஷ்ணமாச்சாரியால் பதிப்பிக்கப்பெற்றது) என்ற நூலிலிருந்தும் இது தொகுக்கப்பட்டுள்ளது.

பார்ப்பன மதத்தின் கிரிமினல்தன்மையை அம்பலப்படுத்தும் விதத்தில் புதிய கலாச்சாரம் மே-1993 இதழில் இக்கட்டுரை முதலில் வெளியிடப்பட்டது.

குருபரம்பரா ப்ரபாவம் என்பதன் பொருள் ஆழ்வார் பரம்பரையின் சாதனைகள் என்பதாகும். கொலை, கொள்ளை மற்றும் 420 வேலைகளைச் செய்துதான் ஸ்ரீரங்கம் கோயில் எழுப்பப்பட்டுள்ளது என்பதற்கு அவர்களே அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இது.

சமஸ்கிருதமயமாக்கப்பட்ட மணிப்பிரவாள நடையில் இவை எழுதப்பட்டுள்ளது. வாசகர்களுக்குப் புரியாது என்பதால், இவற்றைத் தமிழ்ப்படுத்தி அளிக்கிறோம்.

* * *

ரங்கநாதனுக்கு விமானம், கோபுரம், மதிற்சுவர்கள் கட்ட வேண்டுமென்று விரும்பிய திருமங்கையாழ்வார், தன் தொண்டர்களை அழைத்துத் தன் விருப்பத்தைக் கூறி, “இந்த ஆலயத் திருப்பணி செய்ய பணத்திற்கு என்ன செய்யலாம்?” என்று வினவினார். “நாகப்பட்டினத்தில் புலையர் மதத்தின் புத்தர் சிலையொன்று உள்ளது; முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட அந்தச் சிலையைக் கொண்டுவந்து சிதைத்துத் (அதை விற்றுக் கிடைக்கும் பொருளை) திருப்பணிக்குப் பயன்படுத்தலாம்” என்று அவர்கள் யோசனை கூறினர்.

(சான்றுக்கு சில வரிகள் மணிப்பிரவாள நடையில்: பெரிய பெருமாளுக்கும் திருவரங்கச் செல்வரான அழகிய மணவாளர்க்கும் விமாந மண்டப கோபுர ப்ராஸாத ப்ராகாராதி ரூபமான கைங்கர்யங்கள் செய்தருளவேணுமென்று திருவுள்ளமாய், அதுக்குத் தம்முடைய பரிஜனங்களையழைத்து நம்பெருமாளுக்குத் திருமதிள் முதலான கைங்கர்யம் ப்ணுகைக்குத் தனார்ஜநஞ்செய்யும் வருஏன் என்று கேட்டருள, அவர்களும் நாகப்பட்டணத்திலே புலையறமாயிருப்பதொரு புத்த ப்ரதிமை ஹிரண்ய ஸ்வரூபமாயிருக்கும். அத்தைக் கொண்டுவந்து சிந்நாபிந்நமாக்கி அறுப்பதே கருமங்கண்டாய் என்று விண்ணப்பஞ்செய்ய, ஆழ்வாரும் ஸம்மதித்து நாகபட்டணத்திலே போய்..)

அந்த யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு திருமங்கையாழ்வார் நாகை சென்று, அந்நகரிலிருந்த வைணவப் பெண் ஒருத்தியைச் சந்தித்து, இந்தச் சிலை இரகசியம் குறித்து வினவினார். இந்த ஊரிலுள்ள புத்த விகாரையின் உள்ளே தங்கத்தினாலான புத்தச் சிலை ஒன்று உள்ளது என்றும், அந்தச் சிலையையும், விமானத்தையும் (மண்டபத்தையும்) உருவாக்கிய சிற்பி கடல் கடந்த தீவு ஒன்றில் இருக்கிறான் என்றும் என்னுடைய மாமியார் கூறுவதுண்டு” என்று அந்தப் பெண் கூறினாள்.

இதைக் கேட்ட திருமங்கையாழ்வார், “நல்ல காரியத்தில் தாமதம் கூடாது” என்று சொல்லி, தனது தொண்டர்களையும் அழைத்துக்கொண்டு மேற்படி தீவிற்குச் சென்றார். அந்தச் சிற்பியின் வீட்டை விசாரித்து அறிந்து அவன் வீட்டருகில் நின்று தனது தொண்டர்களுடன் கீழ்க்கண்டவாறு புலம்பத் தொடங்கினார். “நாகப்பட்டினம் பவுத்தக் கோயிலையும், விமானத்தையும் உடைத்து உள்ளே இருந்த தங்க விக்கிரகத்தை ஒரு துலுக்கர்கள் கூட்டம் கொண்டு போய்விட்டது; இந்த அநீதியைக் கண்ணால் கண்டபின்னரும் நம் உயிர் பிரியவில்லையே!” வெளியிலிருந்து வீடு திரும்பிய அந்தச் சிற்பி (இந்த புலம்பலை உண்மையென நம்பி) திருமங்கையாழ்வாரிடமே வந்து விவரம் கேட்டான்.

உடனே திருமங்கையாழ்வாரும் அவரது தொண்டர்களும் புத்தர் சிலையைத் துலுக்கர்கள் திருடிச் சென்ற கதையை விலாவாரியாகக் கூறினர். இதைக் கேட்ட சிற்பி, “பீடத்திலிருந்து சிலையை அகற்ற முடியாதவாறு அதனைச் சங்கிலி கொண்டு பிணைத்து, அபிசேக நீர் வெளியேறும் நீர்த்தாரையின் கீழ் கல்லுக்குள் ஒரு இரும்பு ஆணியில் அந்தச் சங்கிலியின் மறுமுனையைக் கட்டியிருந்தேன். இந்த இரகசியத்தை என்னுடனிருந்த துரோகி எவனோ திருடர்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டானே” என்று கூறி விழுந்து கதறியழத் தொடங்கினான்.

இவ்வாறு சிலையமைப்பின் இரகசியத்தை அறிந்து கொண்ட ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் உடனே கடற்கரை நோக்கிச் சென்றனர். கடற்கரையில் தருமவானான ஒரு பாக்குக் கப்பல் வியாபாரியைக் கண்டு அவனுக்கு ஆசி கூறிய ஆழ்வார், தானும் தனது தொண்டர்களும் விரதமிருந்து வருவதாகவும் தங்களை நாகப்பட்டினத்தில் கொண்டு சேர்க்க வேண்டுமென்றும் அவனிடம் கோரினார். வியாபாரியும் மகிழ்வுடன் அவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டான்.

கப்பல் போய்க்கொண்டிருக்கும்போது, அக்கப்பலிலிருந்து ஒரேயொரு கொட்டைப் பாக்கை எடுத்து, அதை இரண்டாகப் பிளந்தார் திருமங்கையாழ்வார். அதில் ஒரு பாதியை அவ்வணிகனிடம் கொடுத்து மறுபாதியைத் தன் கையில் வைத்துக்கொண்டு, “இந்தப் பாதிப்பாக்கு எனக்குத் தேவைப்படுகிறது, எனவே ‘பாதிப்பாக்கு எனக்குத் தருவதாக’ ஒரு சீட்டு எழுதிக்கொடுங்கள்” என்று கேட்டார். வணிகனும் அவ்வாறே எழுதிக் கொடுத்தான்.

அந்தச் சீட்டை வாங்கிக்கொண்ட ஆழ்வார் கப்பல் கரை சேர்ந்தவுடனே கப்பலிலிருந்த பாக்கில் பாதியை எண்ணித்தருமாறு வணிகனிடம் கேட்டார். அதிர்ச்சியடைந்த வணிகன் கப்பலில் ஆழ்வார் வெட்டிவீசிய பாதிப்பாக்கைத் தேடிக் கண்டுபிடித்து, “இந்தா உன்னுடைய பாதிப் பாக்கு” என்று திருப்பித் தந்தான். “இந்த அரைப்பாக்கையா நான் கொடுத்தேன்? நீ எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டி உன் சகவணிகர்களிடமே நியாயம் கேட்போம்” என்று ஆழ்வார் கூற, வணிகனும் சம்மதித்தான்.

வணிகர்கள் ஆழ்வாருக்குச் சாதகமாகத் தீர்ப்புச் சொல்ல, வேறு வழியில்லாமல் (கப்பலில்) பாதிப்பாக்குக்கான தொகையை ஆழ்வாரிடம் கொடுத்து அனுப்பினான் வணிகன்.

இப்படியாக அந்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு புத்த விகாரைக்கு வந்து சேர்ந்த ஆழ்வாரும் அவர்தம் தொண்டர்களும் அங்கே ஒளிந்திருந்து, நள்ளிரவில் அந்த தங்க விக்கிரகத்தைத் திருடி, அதைச் சிதைத்து எடுத்துச் சென்றனர்.

சிலையைக் கொண்டு போகும்போது விடிந்து விடவே, ஒரு உழுத வயலில் சிலையைப் புதைத்து வைத்துவிட்டு அருகே காவல் நின்றார்கள். நிலத்துக்குச் சொந்தக்காரன் நாற்றுக் கட்டுடன் நடவு செய்வதற்காக அங்கே வந்து சேர்ந்தான். அவனை மறித்து, “இது என் பாட்டன் தேடின நிலம்” என்று ஆழ்வார் கூறவே, விவாதம் முற்றியது. “நாளை விடிவதற்குள் பத்திரம் கொண்டுவருகிறேன்; இல்லையேல், நீ உழுது கொள்” என்று ஆழ்வார் கூற, அவனும் சம்மதித்துத் திரும்பினான்.

இரவு வரை காத்திருந்து சிலையை அங்கிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பி ஆழ்வாரும் அவரது தொண்டர்களும் ஸ்ரீரங்கம் அருகில் உள்ள உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர்.

சிலை திருட்டுப் போனதையறிந்து நாகை நகரத் தலையாரியும், மணியக்காரரும் விகாரையை நன்றாகச் சோதித்து, பிறகு சிலை திருடர்கள் போன வழியறிந்து உத்தமர் கோயில் வந்து சேர்ந்தனர். “சிலை எங்கே?” என்று திருமங்கையாழ்வாரிடம் அவர்கள் கேட்க, ஆழ்வார், “எனக்குத் தெரியாது” என்றார். “அப்படியானால் உமக்குத் தெரியாதென்று சத்தியம் செய்வீரா?” என்று அவர்கள் கேட்டவுடனே, மேலை வருஷம் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று உங்கள் விக்கிரகத்தின் சுண்டுவிரல் குறையாமல் திருப்பித் தருகிறேன்.” என்று அவர்களுக்கு ஆழ்வார் சீட்டெழுதிக் கொடுத்தார்.

அதன்பின் விக்கிரகத்தை உருக்கி விற்றுக் கிடைத்த பொருளில் கோயில் திருப்பணி தொடங்கி நடத்தினர். கோயில் மதில் சுவர் கட்டும்போது தொண்டரடிப் பொடியாழ்வாரின் (பார்ப்பனர்) நந்தவனம் குறுக்கே வர, அதைத் தவிர்த்து மதிலைக் கட்டுவித்தார். இதனால் தொண்டரடிப் பொடியாழ்வார் பெரிதும் மகிழ்ந்தார்.

குறிப்பிட்ட காலக்கெடுவில் நாகையிலிருந்து சிலையைப் பறிகொடுத்தவர்கள் வந்தனர். ஆழ்வார் எழுதிக் கொடுத்த சீட்டைக் காண்பித்து சிலையைத் திருப்பிக் கேட்டனர். ஆழ்வார் சிலையின் சுண்டு விரலை மட்டும் திருப்பிக் கொடுத்தார். நியாயம் சொல்பவர்களும், “சீட்டுப்படி சிறுவிரலைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்” என்று தீர்ப்புக் கூற, சிலைக்கு உரியவர்கள் இந்த சிறுவிரலும் வேண்டாமென்று திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

அடுத்து, கோயில் கட்டிய கொத்தனார்களும் சித்தாட்களும் கூலி கேட்டனர். “காவிரிக்கு அந்தப்புறம் ஒரு தீவில் வேண்டிய அளவு பொன்னும் பொருளும் உள்ளன. அங்கு வந்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி, அவர்களையெல்லாம் ஓடத்திலேற்றி அழைத்துப்போனார் திருமங்கையாழ்வார். நட்டாற்றில் வைத்து ஓடக்காரனுக்கு ஆழ்வார் ஜாடை காட்ட, அவன் இன்னொரு ஓடத்தில் ஆழ்வாரை ஏற்றிக் கொண்டு, அந்தத் தொழிலாளிகள் இருந்த ஓடத்தைக் கவிழ்த்துவிட்டான்.

ஆழ்வாரும் ஓடக்காரனும் கோயில் வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொழிலாளிகளுடைய பிள்ளைகள் இருவரையும் சூழ்ந்துகொண்டு, “எங்கள் பெற்றோர் எங்கே?” என்று கேட்டனர். “ஒரு தீவிலே பொன்னையும் பொருளையும் காட்டிவிட்டோம்; அவர்கள் அதை மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஆழ்வார் அவர்களுக்கு சமாதானம் சொன்னார். அதை நம்பாத அந்தப் பிள்ளைகள், “எங்கள் தகப்பன், பாட்டன்மாரை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டீர்கள். அவர்களை உயிருடன் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினாலொழிய, உங்களைப் போகவிடமாட்டோம்” என்று ஆழ்வாரை மறித்துக் கொண்டனர். ஆழ்வார் செய்வதறியாமல் விழித்து நின்றார்.

பிறகு ஆழ்வாரின் கனவில் தோன்றிய அரங்கன், “ஏன் கலங்குகிறாய்? அந்தத் தொழிலாளர்களின் பிள்ளைகளை அழைத்து காவிரியில் நீராடச் சொல்லி, அனைவரின் நெற்றியிலும் நாமத்தைச் சார்த்தி என் சந்நிதியில் கொண்டு வந்து நிறுத்து, பிறகு அவரவரின் அப்பன், பாட்டன்மாரின் பெயர் சொல்லி அழைக்கச் சொல்” என்றான்.

ஆழ்வாரும் அவ்வாறே அவர்களை அரங்கனின் சந்நதியில் கொண்டுவந்து நிறுத்த, அவர்களும் தத்தம் பெற்றோரின் பெயர் சொல்லி அழைத்தார்கள். பிதுருக்களாக மாறியிருந்த (அதாவது செத்துப்போன) அவர்களது பெற்றோர்கள் பெருமானின் பின்புறமிருந்து தத்தம் பிள்ளைகளிடம் கீழ்வருமாறு கூறினார்கள். “ஆழ்வாரின் திருவருளால் நாங்கள் அரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டோம். நீங்கள் ஆழ்வாருக்கு எதிராகக் கலகம் செய்யாமல், அவருக்கு சேவை செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

* * *

வ்வளவு நயவஞ்சகமான, கீழ்த்தரமான, கொடூரமான கிரிமினலைத்தான் ஆழ்வார் என்று கொண்டாடுகிறார்கள். இன்று ஆர்.எஸ்.எஸ். எத்தகைய கிரிமினல் வேலைகளையெல்லாம் செய்கிறதோ, அவை அத்தனையும் அன்றே செய்து காட்டியிருக்கிறார் திருமங்கையாழ்வார்.

ஆண்டாள் பற்றி எழுதியதற்கு பிரைமரி எவிடென்ஸ் இருக்கிறதா என்று கேட்பவர்கள், இந்த எவிடென்ஸுக்கு என்ன பதில் சொல்வார்கள்? ஆண்டாள் பாசுரம், நாச்சியார் திருமொழி ஆகியவற்றின் மகத்தான படைப்புவெளியையும் கவிதைப்பரப்பையும் கொண்டாடி மெய்சிலிர்ப்பவர்கள், இந்த குருபரம்பரா ப்ரபாவத்துக்கு என்ன விளக்கம் சொல்வார்கள்?

புத்தர் சிலையைத் திருடியதும், வியாபாரியைச் சூது செய்து ஏமாற்றியதும், கோயிலைக் கட்டிய தொழிலாளியை கொன்றதும் திருமங்கையாழ்வாரின் படைப்புவெளியா? இந்த அயோக்கியத்தனங்களுக்கும் ஆழ்ந்த ஆன்மீக அர்த்தங்கள் உண்டா? வைரமுத்துவை எச்.ராஜா கேட்டது போல, அவாளைத் திருப்பிக் கேட்பதாயின், எத்தகைய மொழியில் திருப்பிக் கேட்க வேண்டும்?

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com