Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 481

தேசப்பற்றுக்கு ஜனகனமண – தோசை சட்னிக்கு ஜி.எஸ்.டி !

1

நாம் வாழும் தேசம்

சுவரொட்டியில்
வீரவசனம்,
சோடையற்ற
மேடைப்பேச்சு,
சொற்கள் மழையில்
சொரணையற்ற
மக்கள் கூட்டம் !

தேர்தல்
சுற்றறிக்கையில்
சொர்க்கம்,
சொந்த ஆட்சியில்
நெற்றியில் ஒற்றை
நாமம்!

தேர்தல் !
படித்தவனுக்கு
விடுமுறை நாள்,
பாமரனுக்கு
திருவிழா !

தேசப்பற்றுக்கு
திரையரங்கில்
ஜனகனமன,
தோசை சட்னிக்கு
உணவகத்தில்
ஜிஎஸ்டி !

மாடு விற்க
ஐந்து ஆவணம்,
மாட்டிகிட்ட
கண்டெய்னருக்கு
மூன்றுமாத
திரைக்கதையில்
மக்கள் காதில்
மலர் ஆரணம் !

கோட்டுக்கு
பத்து லட்சம்,
மலம் கழிக்க
வாழை இலை,
சிலை வைக்க
காசிருக்கு – ஆக்சிஜன்
சிலிண்டர் வைக்க
காசில்லை!

ஊழல் சிறைவாசிக்கு
ஷாப்பிங் சலுகை,
சல்லாப சாமியாருக்கு
சாலை மறியல்
போராட்டம்!

அப்பாவி சிறைவாசிக்கு
தலைமுறை கடந்து
தலை நரை !
பாவமென்று
பரோலில் விட்டால்
வழக்குபோடும்
பன்னாடை
பிறப்புகள் !

ஏன்னு கேட்டா
Anti Nationalist
Uncle Nationalist,
போமா நீன்னு
சொல்லும்
பேமானி அல்லக்கைகள் !

கொதித்தெழாத
குருதி,
நரம்பு தளர்ச்சியில்
நம் மானம்,
தள்ளாடும்
கிழவனாய்
தன்மானம் !

விவசாயிக்கு
வட்டிக் கடன் !
வர்த்தக
முதலைக்கு
வாரா கடன்
வரிவிலக்கு !

நீயே சொல்?
எவன் வந்தால்
விடியல்
நமக்கு ?

-த. ஹாஜி

_____________

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

செப் 1 முதல் ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் : தமிழ்நாடு ஒரு கேனப்பய ஊரு சார் !

3

மிழகத்தில் வரும் 2017, செப்டம்பர் 1 -ம் தேதி முதல் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்களும் தங்களது ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை வாகன சோதனையின்போது காண்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டவர், போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர்! தமிழக அரசுப் பேருந்து டிப்போக்களையே வங்கியில் அடமானம் வைத்து ஆட்டம் போடும் அதிமுக அமைச்சர் இவர்.

தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்கள் 13 லட்சம், போக்குவரத்து அல்லாத பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் 2 கோடியே 20 லட்சம் என மொத்தம் 2.33 கோடி வாகனங்கள் உள்ளன. அதேபோல தமிழகத்தில் உள்ள 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 19 லட்சத்து 87 ஆயிரத்து 480 பேருக்கு பழகுநர் ஓட்டுநர் உரிமங்களும், 9 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேருக்கு நிரந்தர ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டும்பொழுது போக்குவரத்து காவல் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனையிட்டால் ஓட்டுனர்கள் தங்களின் ஓட்டுனர் உரிம நகலை காண்பிப்பது என்பது தான் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், இந்த நகல் நடைமுறையில் பல மோசடிகள் நடப்பதாக வட்டார போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வருவதாக கூறி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து துறை சார்ந்தவர்கள் கூறுவது என்ன?

சென்னை குன்றத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலத்தில் பழகுனர் ஓட்டுனர் உரிமம், மற்றும் புதுப்பித்து வழங்கக்கூடிய வேலையை கடந்த பதினைந்து ஆண்டாக செய்து வரும் ரிஸ்வான்,

“தமிழக அரசின் இந்த திட்டம் ஓட்டுனர்களை கடுமையாக பாதிக்க கூடியது தான். உதாரணமாக சென்னையில் ஓடக்கூடிய ஆட்டோக்களில் பெரும்பாலானவை வாடகைக்கு எடுத்து ஓட்டக் கூடியவை. இவர்கள் தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தை ஆட்டோ உரிமையாளரிடம் கொடுத்து விட்டு தான் ஓட்டுவார்கள். ஆனால் இந்த முறை அமுல்படுத்தபட்டால் அவர்கள் எந்த நம்பிக்கையில் ஆட்டோக்களை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் ஆட்டோ தொழில் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

மேலும், ஒரு முறை உரிமம் தொலைந்து போனாலோ அல்லது போலிசோ, வட்டார போக்குவரத்து அலுவலரோ (RTO) சோதனையின் போது பறிமுதல் செய்தால் திரும்ப பெறுவது மிகவும் கடினம். RTO -விடம் இருந்து பெறுவதற்க்கு ஒரு வாரம் ஆகிவிடும். போலீசிடம் இருந்து பெற வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆகிவிடும்.

அதுபோக தொலைந்து விட்ட உரிமத்தைத் திரும்ப பெறுவதற்கு போலீசில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து அதனை RTO -விடம் ஒப்படைக்க வேண்டும். அந்த RTO, குறிப்பிட்ட இந்த நபருடைய ஒரு லைசென்ஸ் தங்கள் அலுவலகத்தில் உள்ளதா என்று கேட்டு கடிதம் எழுதுவார். அவர்கள் கொடுக்கும் பதிலில் இருந்து தான், புது லைசென்ஸ் கிடைக்கும். இதற்கு அவர் புது உரிமத்தையே எடுத்து விடலாம்.

அதுமட்டுமில்லாமல் 2016 டிசம்பர் 25 -ம் தேதிக்கு பிறகு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டணங்கள் எல்லாம் அதிகரித்து விட்டன. குறிப்பாக ஆன்லைன் முறை வந்த பிறகு அதிகரித்து விட்டது. அதே போல ஆட்டோக்களுக்கு பெர்மிட் வாங்குவதற்கு ராணுவக்கொடி என்ற பெயரில் 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லை. ஆனால் வாங்கினால் தான் பெர்மிட் கொடுப்போம் என்ற நிலை வந்து விட்டது. லைசென்ஸ் வாங்குபவர்களிடமும் வசூலிக்கிறார்கள்.

ஆன்லைன் முறை என்பதே இந்த துறையை தனியார்மயமாக்குவதற்கு தான். இன்னும் ஒரு வருடத்தில் இந்த துறை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு, போக்குவரத்து அலுவலர், இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற அதிகாரிகளும், புகைப்பட பிரிவில் வேலை செய்யும் ஊழியர்களை தவிர மற்ற அனைவரும் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும்”, என்கிறார்.

சோமு, வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளரிடம் தொலைபேசியில் கேட்டபோது :

இந்த திட்டம் என்பது அப்பாவி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் ஒரு திட்டம் தான். எங்களை போன்ற பயிற்சி பள்ளிகளுக்கு வருமானம் வரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இதன் மூலம் பாதிக்கப்பட போவது மக்கள் தான். இந்த திட்டம் அனைத்தும் தனியார்மயமாக்குவதற்கான வேலையை தான் மோடி செய்து வருகிறார், என்கிறார்.

வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் கதிரவன்

வாகனங்களுக்கு வேகக்கட்டுபாடு கருவி பொருத்தும் கதிரவன்,

ஏற்கனவே இந்த துறையை தனியார்மயமாக்க போவதா அறிவிச்சாங்க. அதுக்கான வேலை தான் இதெல்லாம். தனியார்மயமானவுடனே எந்த நிறுவனத்தோட வாகனமோ, அவனே எல்லாத்தையும் முடிச்சி கொடுத்துடுவான். அதுக்கப்புறம் எங்களுக்கெல்லாம் வேலையே இல்ல. மக்கள் அனைவரும் ஒண்ணா சேர்ந்து இந்த திட்டத்தையே எதிர்க்கணும் என்கிறார்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிவில் வேலை பார்க்கும் மதன்,

இந்த திட்டம் சிறப்பானது தான். வாகனம் ஓட்டுபவர்கள் லைசென்ஸ் வைத்திருப்பதே இல்லை. இந்த அறிவிப்பின் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும். மேலும் வாகனம் ஓட்டுவார்கள் பாதிபேர் இன்சூரன்ஸ் போடுவதில்லை. இந்த அறிவிப்பு இன்சூரன்ஸ் எடுக்க வழிவகுக்கும். அவர்களுக்கு இதன் மூலம் நன்மை தான் என்கிறார்.

இன்சுரன்ஸ் போட்டவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்குவதில்லையே என்று கேட்டால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் பதினைந்து நாட்களுக்குள் எங்களுக்கு தகவல் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுப்போம். இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். காப்பீடு பாலிசிக்காக வலையுடன் அலையும் இந்நிறுவனங்கள், விபத்து இழப்பீடு என்றதும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை கூறி அலைக்கழிக்கிறார்கள். ஓட்டுநர் உரிமம் தொலைந்தாலும் அதே கதைதான்.

ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் கூறுவது என்ன?

குன்றத்தூர் அலுவலகத்திற்கு வந்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம்

ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம், அவருடைய மனைவி பேச்சியம்மாள்

நான் மூணு வருசமா வாடகைக்கு ஆட்டோ ஓட்டுறேன். என்னோட லைசென்ஸ் ஓனர்கிட்ட இருக்கு. இப்ப இந்த மாதிரி சொன்னா நாங்க எப்படி பொழைக்கிறது? இப்ப புது ஆட்டோ வாங்கலாம்னு நெனச்சேன். அதுக்கு “பெர்மிட்” வாங்க பேட்ச் இருக்கணும்னு சொல்றாங்க. பேட்ச் வாங்க படிச்சிருக்கணும். நான் படிக்கல. சரி என்னோட மனைவி பேர்ல வாங்கலாம்னு நெனச்சேன். யார் பேர்ல எடுக்கிறோமோ அவங்களும் பேட்ச் போட்டிருக்கணும்னு சொல்றாங்க. இதெல்லாம் என்ன சார் சட்டம். கடைசி வரைக்கும் நாங்க வாடகைக்கு தான் வண்டி ஒட்டணுமா? இந்த மோடி அரசாங்கம் பன்றதெல்லாம் பார்த்தா “தூக்கு போட்டு தற்கொலை” பண்ணிகிற நிலைமை தான் இருக்கு என்கிறார்.

டாடா ஏசி ஓட்டுனர் சுரேஷ்குமார், கேரளா

தமிழ்நாடு ஒரு கேனப்பயன் ஊர் சார். இங்க கேக்க ஆளு இல்ல. இதே கேரளாவுல இந்த மாதிரி அறிவிச்சா உடனே போராட்டம் தான் நடக்கும். சென்ட்ரல் கவர்மெண்டு இன்னா சொல்லுதோ அதை தான் இங்க இருக்கவங்க கேக்குறாங்க. இந்த திட்டம் போலீசு கொள்ளையடிக்க தான் வழிவகுக்குமே… ஜெராக்ஸ் வச்சிருந்தாலே காச புடுங்கிப்பானுங்க. இப்ப ஒரிஜினல் வேற சொல்ல வேணுமா. அவன் என்ன கேக்குரானோ அத கொடுக்கணும். போலிசை எதிர்த்து பேச முடியாது. எல்லாத்தையும் புடுங்கி கொளுத்திட்டு நம்ம கிட்ட எதுவுமே இல்லன்னு கேசு போடுவன். என்ன செய்வது? என்கிறார்.

லாரி ஓட்டுனர் சுரேஷ்குமார்

சுரேஷ்குமார், லாரி ஓட்டுனர்

எங்க வேலையில இதெல்லாம் சாத்தியமே இல்ல. எங்களோட லைசென்ஸ் ஓனர்கிட்ட தான் இருக்கும். ஏன்னா, ஏதாவது ஆக்சிடென்ட் பண்ணிட்டா விட்டுட்டு ஓடிவான்னு வாங்கி வச்சிப்பாங்க. போலிசு கேட்டா நாங்க எதை கொடுக்கிறது? நாங்க எப்பவுமே லுங்கி தான் கட்டிக்கிட்டு இருப்போம். போற இடத்துல படுப்போம். இதை எல்லாம் பத்திர படுத்தி வக்க முடியுமா? காணாம போயிட்டா, திரும்ப வாங்குற வரைக்கும் பொழப்பு இருக்காது. அவ்ளோ சீக்கிரம் வாங்கவும் முடியாது என்கிறார்.

பஞ்சர் கடை ராஜ்குமார்.

ராஜ்குமார், பஞ்சர் கடை

இந்த சட்டத்தால சாதகமும் இருக்கு பாதகமும் இருக்கு. தொலைந்து விட்டால் திரும்ப வாங்குறது தான் கஷ்டம் என்கிறார்.

ராமசாமி, இரும்பு பட்டறை தொழில் செய்பவர்.

இது ஜனநாயக நாடே கிடையாது. ஒரு சர்வாதிகார நாட்டுல தான் இந்த மாதிரி சட்டங்கள் எல்லாம் போட்டு மக்களை துன்புறுத்துவாங்க. இப்ப அதுதான் நடக்குது. இந்த சட்டத்தால மோசடிய தடுக்க முடியும்னு சொல்றாங்க. இதுல என்ன பெரிய மோசடிய தடுத்துட போறாங்க. பைக்கை திருடி போலியான ஆர்.சி. புக்கையே ரெடி பண்றாங்க. ஜிஎஸ்டி-ய கொண்டு வந்தது கூட தான் மோசடி. பெட்ரோல் விலை பதினைந்து நாளைக்கு ஒரு முறை ஏற்றப்படும்னு சொன்னாங்க. அப்புறம் தினமும் ஏறும்னு சொன்னாங்க. இன்னைக்கு ரூ.6 ஏறியிருக்கு. இது மோசடி இல்லையா? பெட்ரோலுக்கு ஜிஎஸ்டி வரி போடாம விட்டது மோசடி இல்லையா? இந்த அரசாங்கமே மோசடி பண்ற அரசாங்கமா தான் இருக்கு. இந்த சட்டத்தை யாரும் அவங்க பின்பற்றுவது கிடையாது. மக்களத்தான் கொல்றாங்களே.

ஹெல்மட் சட்டத்தை போட்ட நீதிபதிய ஹெல்மட் போட்டு ஓட்ட சொல்லுங்க. அதெல்லாம் ஓட்ட மாட்டாரு. ஹெல்மெட் போட்ட பிறகு எவ்ளோ ஆக்சிடென்ட் நடந்திருக்கு. பைக் ரேஸ்ல எவ்ளோ பேர் செத்து போயிருக்கான். இதையெல்லாம் இவங்க சட்டத்தால கட்டுபடுத்த முடியல. இப்ப ஒரிஜினல் லைசென்ஸ் தான் கட்டுப்படுத்த போகுதா? அரசாங்கத்துக்கு வருமானம் வேணும். அதுக்கு எந்த வழியிலாவது மக்கள் கிட்ட இருந்து புடுங்கனும். அதுக்கு தான் சார் இந்த சட்டமெல்லாம் உதவும் என்கிறார்.

***

ண்மை தான். தமிழத்தில் கடந்தாண்டில் மட்டும் 14 லட்சத்து 62 ஆயிரத்து 873 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு லைசென்ஸ் இல்லாதது, வரி செலுத்தாதது, அதிக பாரம் ஏற்றியது உள்ளிட்ட காரணங்களுக்காக 2,37,649 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். லைசென்ஸ் இல்லாத காரணத்துக்காக மட்டும் 44,446 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அபராத கட்டணமாக போக்குவரத்து துறை 74 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கிறது.

மேற்கண்ட இந்த வருமானத்தில் மோசடி நடந்துள்ளது என்பதே உண்மை. கடந்த 2013 -ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 33 கோடியே 88 லட்சத்து 34 ஆயிரத்து 749 ரூபாய் அரசிற்கு வருமானம் ஈட்டித்ததுள்ளதாக RTO பாஸ்கரன் தெரிவித்தார். இந்த புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகம் முழுவதும் வாகன தணிக்கை மூலம் வரும் வருமானம் பல மடங்கு அதிரித்திருக்க வேண்டும்.

சென்னையில் திரும்பிய திசை எங்கும் போலீசின் வாகன தணிக்கை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் அதிக பணம் வசூலிப்பதாக மக்கள் புலம்பல் என்ற செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் வசூலிக்கப்பட்ட பணம் எங்கே? பல கோடிகள் கணக்கில் காட்டப்படாமல் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போலீசும் ஏப்பம் விட்டுள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

தற்பொழுது மோடி அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தம் -2017, வாகன பதிவு, எப்.சி., லைசென்ஸ் வழங்குவது, என அனைத்தும் தனியாரிடம் வழங்க வழிவகை செய்துள்ளது. அனைத்து விதமான வண்டிகளையும் குறிப்பிட்ட காலம் மட்டும் தான் இயக்க முடியும். ‘பெர்மிட்’ வழங்கும் உரிமையை மாநில அரசிடம் இருந்து பறித்துவிட்டு கார்ப்பரேட் முதலாளிக்கு லட்சக்கணக்கான பெர்மிட் வழங்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இதன் மூலம் டிரைவர்கள், கனரக, இலகுரக வாகன உரிமையாளர்கள், இருசக்கரம் மற்றும் இரு சக்கர மெக்கானிக், பெயிண்டர், டிங்கர், எலக்ட்ரீசியன், வெல்டர், டயர் பஞ்சர், ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளிடம் கூலி அடிமைகளாக தள்ளப்படுவார்கள் என்ற மாபெரும் அபாயமும் உள்ளது.

எனவே போக்குவரத்துத்துறை தனியார்மயமாக்கப்படுவதற்க்கு எதிராக ஒட்டுமொத்த தொழிலாளிகளும் ஒரே அணியில் திரண்டு எதிர்ப்பதன் மூலம் மட்டுமே எதிர்வரும் அபாயத்தை முறியடிக்க முடியும்.

நேர்காணல் – படங்கள் : வினவு செய்தியாளர்

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வடகொரியா தயாரித்த பயங்கரமான ஆயுதம் ! புகைப்பட ஆதாரங்கள்

0

மெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வடகொரியா எப்படி பிரச்சாரம் செய்து வருகிறது என்பதை 29.08.2017 அன்று வெளியான கார்டியன் நாளிதழ், புகைப்படங்களாக வெளியிட்டிருந்தது.

தி கார்டியன் நாளிதழ் இப்புகைப்படங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருப்பது ஏன்?

‘வடகொரியாவிற்கு அணு ஆயுத பலம் இருக்கிறது’. ‘சின்ன அண்ணன் சீனா பின்னாடி இருக்கிறான்’. ‘வடகொரியா ஒரு கம்யுனிச நாடு’ என்று பல தரப்பினர் தங்களுக்கு தோன்றிய பலவண்ணக் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் இது இங்கு மையமான விசயம் அல்ல.

கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் சுவரொட்டிகளை பிரச்சார பீரங்கிகளாக பயன்படுத்துவதைக் கவனியுங்கள். அணு ஆயுத பலத்தால் அமெரிக்காவை வீழ்த்திவிட முடியாது. அணு ஆயுதத்தை விட பயங்கரமான ஆயுதம் மக்களிடையே ‘அமெரிக்கா ஏகாதிபத்தியம் வீழ்த்தப்பட வேண்டியது’ என்று அரசியல் பிரச்சாரம் செய்வதுதான்.

இப்பொழுது வரை வடகொரியா தயாரித்த மிகப் பயங்கரமான ஆயுதம் இதுவே! இது அமெரிக்காவை அச்சுறுத்தும் என்பதில் சந்தேகமில்லை!

இதை ஆங்கிலப்பத்திரிக்கை கார்டியனும் ஆமோதிக்கிறது! பிரச்சாரம் செய்கிறது! பாருங்கள்! பகிருங்கள்!

அமெரிக்கக் கொடியை கிழித்தெரியும் வடகொரிய பெண்: நெற்றித் துணியில் அமெரிக்க ராணுவமே வெளியேறு! பிரகடனம். அமெரிக்க அத்துமீறலை எதிர்ப்போம்.

 

“அமெரிக்க ஏகாதிபத்தியமே அசட்டைத்தனத்தோடு போருக்குத் தூண்டாதே!” எச்சரிக்கும் சுவரொட்டி.

கொட்டை எழுத்துகளில் பிரகடனம் சொல்வது இதுதான்: “நமது நாட்டின் ஒட்டுமொத்த ஒற்றுமை பலத்தால் அமெரிக்காவின் அணு ஆயுதப் போருக்கான திட்டத்தை நசுக்குவோம்”

 

“எங்கள் பரம வைரி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு மரணம்!”-முரசு கொட்டும் மற்றொரு சுவரொட்டி

இந்த சுவரொட்டி சொல்லும் செய்தி: “எங்களை நோகடிக்க துணிந்தவர்கள் தக்க தண்டனையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

 

தந்தை நாட்டை ஒன்றுபடுத்தி அமெரிக்கனை விரட்டியடிப்போம்: வடகொரிய பிரச்சார சுவரொட்டியின் பிரகடனம்.

‘எங்கள் வழியை யாராலும் தடுக்க முடியாது’-துணிச்சலுடன் அறிவிக்கும் மற்றொரு பிரச்சார சுவரொட்டி!

“எங்களுடன் போரைத் தொடங்கு! “முதல் வேளையாக அமெரிக்க இழிமகனைத் தாக்குவோம்.”

நன்றி: தி கார்டியன்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

ஏகாதிபத்திய எதிர்ப்புக் குரலாய் ஒலிக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெழுகுவர்த்தி ஏற்றினால் குண்டர் சட்டமா ? மதுரை கருத்தரங்க செய்தி

1

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பாக கடந்த 26.08.2017 அன்று எங்கே “அரசியல் சட்டத்தின் ஆட்சி?” கருத்தரங்கம் நடைபெற்றது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை உரை நிகழ்த்திய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் “தமிழகத்தில் மக்களுக்காகப் போராடுவோர் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஆனால் இன்று அரியானா, டெல்லி,ராஜஸ்தான், பஞ்சாபில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் நடக்கிறது. சுமார் 35-40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை நடக்கும் என முன்பே தெரிந்தும், பாஜக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் தடுப்புக் காவல் சட்டங்கள் பயன்படுத்தப்படவில்லை? இதேபோல் விவசாயிகள் லட்சம் பேர் டெல்லியில் நுழைந்தால் விட்டுவிடுவார்களா?

குற்றங்களை முன்கூட்டியே தடுக்கச் சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்தும் நிறுவனங்கள் முழுக்க அரசியல் சட்டத்திற்கே விரோதமாக மாறிவிட்டன. காவி பாசிஸ்டுகள் ஆட்சியில், அரசமைப்பு நிறுவனங்கள் இப்படித்தான் இருக்கும். இதுதான் பிரச்சனை!

அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமை எனத் தீர்ப்பு வந்துள்ளது? இது எப்படி அமலாகும்? ஏற்கனவே கருத்துரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. அந்த உரிமையைப் பயன்படுத்தியதற்காகத்தான் இன்று வளர்மதியும், திருமுருகன் காந்தியும் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். துண்டறிக்கை கொடுப்பதும், மெழுகுவர்த்தி ஏற்றுவதும் குண்டர் சட்டத்தில் வருமா? போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்புக் காவல் சட்டம், இன்று போராடுவோருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

இதை முதல்வர் சட்டசபையிலேயே அறிவிக்கிறார்! கூவத்தூரிலும், புதுச்சேரியிலும்தான் அரசியல் சட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கேவலத்திற்கு சட்ட நிபுணர்கள் வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசமைப்பு நிறுவனங்கள் தோற்றுவிட்டதற்கு அயோத்தி பாபர் மசூதி இடிப்பு கிரிமினல் வழக்கு ஓர் உதாரணம். உலகமே பார்க்க குற்றம் இழைத்த அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் ஜோசி மீது இன்றுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? குற்றம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டது!

ஜெயலலிதாவையும் செத்த பின்தான் தண்டித்தார்கள்! காவிரி வழக்கிலும் இதுதான் நிலை! வாழ்வுரிமை அடிப்படை உரிமைதான்! 3,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். அவர்களின் வாழ்வுரிமையை உச்சநீதிமன்றம் கேட்குமா?

அரசமைப்பின் பாராளுமன்றம், சட்டமன்றங்கள், நிர்வாகம், நீதித்துறை என அனைத்து நிறுவனங்களின் தன்மையும் மாறிவிட்டன. இதுதான் ஜெர்மனியில் நடந்தது. ஹிட்லரும் மோடியைப் போல புதிய ஜெர்மனி பேசினார். அவருக்கு அனைத்து அரசமைப்பு நிறுவனங்களும் ஆதரவளித்தன. சட்டப்படிதான் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தியாவிலும் இன்று இதுதான் நடக்கிறது. இதற்கெதிராக ஓர் ஜனநாயகப் புரட்சியை நடத்த வேண்டியுள்ளது. இது எனது கருத்து மட்டுமல்ல!  70 ஆண்டுகால சுதந்திர வரலாற்றை ஆய்வுசெய்து “பிரண்ட் லைன்” பத்திரிக்கை சமீபத்தில் சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கோரப்பட்டிருப்பதும் “ஜனநாயகப் புரட்சிதான்”. எனவே அனைவரும் ஒன்றிணைவோம்! போராடுவோம்!” என்றார்.

அடுத்துப் பேசிய திண்டுக்கல் மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலர் திரு ஆனந்த முனிராஜ் அவர்கள் “நீட் தேர்விலே சட்டத்தின் ஆட்சி இல்லை என்பது தெரிந்துவிட்டது. மனுதர்ம ஆட்சிதான் இங்கு நடக்கிறது. இதை உச்சநீதிமன்றமும் ஆதரிக்கிறது. தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மக்கள் பிரச்சனைகளுக்குப் போராடி வந்தார்கள்! இன்று போராடவிடாமல் நீதித்துறையால் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர்கள் முன்பு போல் இருந்திருந்தால் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் கிளர்ச்சி நடந்திருக்கும். அது நாடு முழுவதும் பரவியிருக்கும். இதைத் தெரிந்துதான் ஒடுக்கிவிட்டார்கள். நீதிமன்றங்கள் சாதி, மத அடிப்படையில் தீர்ப்பளிக்கின்றன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே தேர்வு என காவிகள் அமல்படுத்துகின்றனர்.

இந்தியாவில் இது எப்படி சாத்தியமாகும்? குக்கிராமத்து மாணவனும்,டெல்லியில் சி.பி.எஸ்.சி. -யில் படித்த மாணவனும் ஒன்றா? நீதிமன்றங்கள் ஒழுங்காக இருந்தால் பாதிப் பிரச்சனைகள் சரியாகும். ஆனால் இங்கு  மாற்றப்பட, எதிர்க்கப்பட வேண்டியதே நீதித்துறைதான்! கேரளாவில் ஒரு முசுலீம் பையனும், இந்துப் பெண்ணும் திருமணம் செய்த வழக்கில் “ லவ் ஜிகாத்” என்று சொல்லி தேசியப் புலனாய்வு அமைப்பிடம் விசாரணைக்கு ஒப்படைக்கிறது உச்சநீதிமன்றம் . திருமணம் அவரவர் சொந்த உரிமை. இதில் விசாரணைக்கு என்ன உள்ளது? இது இந்துத்துவத் தீர்ப்புதான். இதைத்தான் நாம் தீவிரமாக எதிர்க்க வேண்டியுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் அவர்கள் “கோவாவில் தேர்வு செய்யப்படுவோர் ஒரு கட்சியினர், ஆட்சியில் அமர்வோர் வேறு கட்சியினர், இது மணிப்பூர், பீகார் எனத் தொடர்கிறது. தமிழகத்திலோ சொல்லவே தேவையில்லை. இந்திய அரசியல் சட்ட முகப்புரையில் சொல்லப்பட்ட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்டவைகளுக்கு அச்சுறுத்தல் வந்துள்ளது.

நேரு அவர்கள் அன்றே  சொன்னார் “கம்யூனிஸ்டுகளால் இந்திய அரசமைப்பிற்கு ஆபத்தில்லை! ஆனால் வலதுசாரி மதவாதிகளால் ஆபத்துவரும்” என்று. அதுதான் இன்று நடக்கிறது. பசுப்பாதுகாப்பு என்று சொல்லி நாடு முழுவதும் பலர் அடித்தே கொல்லப்படுகின்றனர். ஜீனத் என்ற சிறுவன் டெல்லியில் ஓடும் ரயிலில் அடித்தே கொல்லப்பட்டான். யாரும் தடுக்க முன்வரவில்லை. காசுமீரில் ராணுவ ஜீப்பில் ஒருவர் கட்டி வைக்கப்பட்டு ஊர், ஊராக இழுத்துச் செல்லப்படுகிறார். எத்தனை பெரிய மனித உரிமை மீறல் இது? இதை விடக் கொடுமை, இராணுவத்தை அவமதிக்கக் கூடாது என்று பலர் ஆதரிப்பதுதான்! அரசு மக்களுக்கா? இராணுவத்திற்கா?

இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கருவை பாராளுமன்றம், மாற்ற முடியாது என 13 நீதிபதிகள் அமர்வு கேசவானந்த பாரதி வழக்கில் சொல்லியுள்ளது. இதன்படி மதச்சார்பற்ற அரசு, சமத்துவம் எல்லாம் அடிப்படைகள். ஆனால் நீட் தேர்வில் இது மீறப்பட்டுள்ளது. ஏற்கனவே 5 நீதிபதிகள் அமர்வு “மாநில அரசுகள் தேவைப்பட்டால் தனியாக  தேர்வு, அட்மிசன் முறை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றக் குழுவும் இதையே தெரிவித்துள்ளது.தற்போது இந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது.

இதேபோல் நாளை 16 நீதிபதிகள் உட்கார்ந்து மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தின் அடிப்படை இல்லை என முடிவெடுக்கலாம்! இன்றைய நாட்டின் நிலை இப்படித்தான் உள்ளது. இதைத் தடுக்க தனித்தனியாய் புலம்பி பயனில்லை. எல்லோரும் போராட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு மத்திய அரசு அடிபணிந்தது. ஆனால் அதையும் கடைசியில் எல்லோரும் கலைந்த பின்பு, தாக்குதல் நடத்தி இழிவுபடுத்தியது அரசு.

தேசிய நீதிபதிகள் ஆணைய வழக்கில் நீதிபதிகள் நியமனம் உச்சநீதிமன்றத்தைச் சார்ந்தது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இத்தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், மத்திய அரசு செய்த முயற்சியை தலைமை நீதிபதி திரு.ஹெகர் அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதன்படி தேசப் பாதுகாப்பு எனச் சொல்லி, தான் விரும்பாதவர்களை மத்திய அரசு தடுக்கலாம். மாட்டுக் கறிப் பிரச்சனையிலும் இதுதான் நிலை. நான் ஆஜரான வழக்கில் மாட்டுக்கறி தடை வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. மறுநாளே கேரள உயர்நீதிமன்றம் “மாட்டுக்கறிக்கு எங்கே தடை உள்ளது? எனக் கேட்டு வழக்கை தள்ளுபடி செய்தது”.ஆனால் விதிகளில் வெட்டுவதற்காக மாட்டை விற்கவோ, வாங்கவோ கூடாது என உள்ளது. இந்தியாவின் முகம் பன்முகத்தன்மைதான். இதை சீர்குலைக்கும் முயற்சி நடக்கிறது. அதை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.”

இறுதியாக உரை நிகழ்த்திய  சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான திரு.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் “ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச சட்டத்தின் ஆட்சியும் மோடி வந்த பின்பு போய்விட்டது. தமிழகத்தில் கடந்த ஓராண்டாய் சட்டமே இல்லை.தேர்தல் ஆணையம்,சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை அனைத்தும் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. குட்கா ஊழலில் உள்ளவர் டி.ஜி.பி.யாக உள்ளார். தலைமைச் செயலர் வருமான வரித்துறை கடிதமே வரவில்லை என நீதிமன்றத்தில் பொய்சொல்கிறார்.

வினவு என்ற இணையதளத்தில் குண்டாஸ் என்ற பாடல் வெளியாகியுள்ளது. அருமையான வெளிப்பாடு. தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைமையில் உள்ள எனக்கு இந்தத் திறமை இல்லையே எனப் பொறாமையாய் உள்ளது. அப்பாடலில் சொன்னது போல “இந்த அக்கூஸ்டு எல்லாம் சேர்ந்து மாணவர்கள் மீது குண்டாஸ்” போடுகிறது. அனைத்து நிறுவனங்களும் சேதமாகி விட்டன. நீதிமன்றங்களில் 5% தான் எப்போதாவது அந்தரங்க உரிமை போன்ற சில தீர்ப்புகள் கிடைக்கின்றன.பத்திக்கைகள் உள்ளிட்ட ஊடகங்கள் விலைபோய்விட்டன.

ஆனால் மாற்று ஊடகமாக சமூக வலைத்தளம் உருவாகியுள்ளது. தமிழகத்தில் 50% -க்கும் அதிகமான மக்கள் ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர். இதில் 90% பேர் இளைஞர்கள். இவர்கள் மூலம் நாம் கருத்துக்களைக் கொண்டு செல்ல முடியும். மாற்றத்தை உருவாக்க முடியும்”என்று பேசினார்.

இறுதியாக தீர்மாங்கள் நிறைவேற்றப்பட்டு கருத்தரங்கம் நிறைவுற்றது. வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் :

  • இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான கருத்துரிமையை நசுக்கி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள மாணவி வளர்மதி, மே 17  திருமுருகனை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்.
  • இந்திய அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி பணநாயகம் மூலம் தேர்தலை நிறுத்திய கரூர் அன்புநாதன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, விஜயபாஸ்கர் மற்றும் மணல் மாபியா சேகர் ரெட்டி, அவரது கூட்டாளி ராம்மோகன்ராவ் ஆகியோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை மத்திய, மாநில அரசுகள், மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
  • அடிப்படை உரிமையான தொழில் உரிமையைப் பறித்து கடந்த சுமார் 200 நாட்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் முருகனை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
  • நெடுவாசல், கதிராமங்கலம் மக்களின் போராடும் உரிமையை அரசு பறிக்கக்கூடாது. மக்களின் கோரிக்கையை ஏற்பதுடன், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
  • நீட் தேர்வு என்பது உலக வர்த்தக ஒப்பந்தம் மற்றும் மனுநீதியைத் திணிக்கும் செயல். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கல்விக் கொள்கை என்பது சர்வாதிகாரம். நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும். அனைத்து தேசிய இன மக்களின் உரிமைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
  • தடுப்புக் காவல் சட்டத்தை அங்கீகரிக்கும் இந்திய அரசியல் சட்ட சரத்து 22(4)(5)(6)(7) நீக்கப்பட வேண்டும். கருத்துரிமை முழுமுற்றான உரிமையாக ஏற்கப்பட வேண்டும். மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-சின் பாசிசத்தை எதிர்த்து நடைபெறும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.

_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

மக்கள் கருத்துரிமையின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !

0
தொலைக்காட்சி ஒளிபரப்பு வாகனத்தை அடித்து நொறுக்கும் வன்முறைக் கும்பல்

குர்மீத் ராம்ரஹீமுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ள ஹரியாணா மாநில சி.பி.ஐ நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. குர்மீத் தனது தேரா மடத்தைச் சேர்ந்த இரண்டு பெண் சீடர்களைப் பல ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 28 -ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்ட போது தான் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பங்களிப்பு செய்துள்ளதாகவும், எனவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னும் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற மறுத்து தரையில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்த குர்மீத் ராம்ரஹீமை போலீசார் தரதரவென்று இழுத்துச் சென்றதாக பத்திரிகை செய்திகள் அறிவிக்கின்றன.

சாமியார் குர்மீத் ராம்ரஹிம்

குர்மீத்தின் குற்றத்தை கடந்த 25 -ம் தேதி வெளியிட்ட தனது தீர்ப்பில் உறுதி செய்தது நீதிமன்றம். அதைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்ற பாஜக சொம்புகள் உள்ளிட்டு அனைத்து ஊடகங்களும் களத்தில் இறங்கிக் கம்பு சுழற்றத் துவங்கின. “கடவுளை மனிதன் தண்டிப்பது” சாத்தியமில்லை என நம்பி நீதிமன்ற வளாகத்தை உற்சாகமாகச் சூழ்ந்திருந்த குர்மீத்தின் சீடர்கள் கலவரம் செய்யத் துவங்கவே, வழக்கமான பாஜக ஊதுகுழல்கள் தங்களது சுருதியை மாற்றிக் கொண்டன. “எம்.எல் கட்டர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை” என உச்சஸ்தாயியில் சுருதி சேர்க்கத் துவங்கினார் அர்னாப் கோஸ்வாமி.

குர்மித் ராம்ரஹீமுக்காக நடந்த கலவரத்தில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 300 -க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மலோட் மற்றும் பல்லுவான்னா ஆகிய இரண்டு இடங்களில் உள்ள இரயில் நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தில்லி ஆனந்த் விகார் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரேவா எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு கோச்சுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. என்.டி.டி.வி, இந்தியா டுடே உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் நேரலை வாகனங்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மானசா பகுதியில் உள்ள தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் கொளுத்தப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி ஒளிபரப்பு வாகனத்தை அடித்து நொறுக்கும் வன்முறைக் கும்பல்

குர்மித் ராம்ரஹீமுக்கு எதிரான தீர்ப்பு வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே; அதாவது ஆகஸ்டு 23 -ம் தேதியில் இருந்தே தீர்ப்பு வெளியாகும் நீதிமன்றத்தையும் அது அமைந்திருக்கும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சகுலா நகரையும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். ஆகஸ்ட் 23 -ம் தேதியில் இருந்தே பஞ்சகுலாவில் குவியத் துவங்கிய ராம்ரஹீமின் பக்தர்களுடைய எண்ணிக்கை, தீர்ப்பு வெளியான அன்று 2 லட்சத்தைத் தொட்டதாக கூறுகின்றன ஊடகங்கள். தீர்ப்பு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாகவே இணைய சேவை நிறுத்தப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சி.ஆர்.பி.எப்பின் 97 அணிகள் (Companies) இறக்கப்பட்டது; சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 16 அணிகளும், சாஷ்த்திர சீமா பால் (Sashtra seema Bal) எனும் எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 37 அணிகளும், எல்லைப் பாதுகாப்புப் படையின் 21 அணிகளும், இந்தோ – திபெத் எல்லைப் போலீசு படையைச் சேர்ந்த 12 அணிகளும் களத்தில் இறக்கப்பட்டன. 48 மணி நேரத்துக்கு முன்பே 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு முழு அளவிலான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு பாதுகாப்புப் படைகள் களத்தில் நிறுத்தப்பட்ட பின்னும் ஒரு கலவரத்தை உண்டாக்கும் அளவுக்கு குர்மித் ராம்ரஹீம் அவ்வளவு பெரிய அப்பாட்டக்கரா? உண்மையில் பாதுகாப்புப் படைகளின் சக்தியை மீறித் தான் கலவரம் நடந்ததா?

குர்மீத் ராம்ரஹீம் சிங்

டிகர், பாடலாசிரியர், பாடகர், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர், சமூக சேவகர், “விளையாட்டு” ஆர்வலர் என பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ள 50 வயதான குர்மித் ராம்ரஹீமின் அடையாளம் – சாமியார். பலூசிஸ்தானைச் சேர்ந்த மஸ்தானா பலோசிஷ்தானி என்பவரால் 1948 -ம் ஆண்டு துவங்கப்பட்ட ஒரு மதவாதக் குழு தேரா சாச்சா சௌதா. சீக்கிய மற்றும் இந்து மத நம்பிக்கைகளைக் கலந்து கிண்டப்பட்ட இந்தக் கிச்சடியின் மேல் இசுலாம் மற்றும் கிருஸ்தவ மதங்களில் இருந்து கடன் வாங்கப்பட்ட சில கருத்துக்களைக் கொத்தமல்லி கருவேப்பில்லையாக தூவப்பட்டிருக்கும்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இடைநிலைச் சாதிகள் மற்றும் தலித்துகளிடையே பிரபலமாக இருக்கும் இந்த மதவாதக் குழுவுக்கு சுமார் 6 கோடி பக்தர்கள் உள்ளனர். இந்தக் குழுவின் தலைமைப் பீடத்தில் 1991 -ம் ஆண்டு அமர்கிறார் குர்மீத் ராம்ரஹீம். பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தில் சீக்கிய மதச் சாயல் கொண்ட பல்வேறு மதக்குழுக்களில் இருந்து தேரா சாச்சா சௌதா சற்றே வேறுபட்டதாகும்; மற்ற மதக்குழுக்கள் தமது வெளிப்படையான அரசியல் முடிவுகளை அறிவித்துக் கொள்ளாத நிலையில், தேரா சாச்சா சௌதா ஒவ்வொரு தேர்தலின் போதும் தனது உறுப்பினர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக அறிவித்து விடும்.

கடந்த 2014 -ம் ஆண்டுக்கு முன்புவரை வெளிப்படையான காங்கிரசு ஆதரவாளராக இருந்த குர்மீத், அதன் பின் தனது ஆதரவை பாரதிய ஜனதாவுக்கு மாற்றிக் கொண்டார். மற்றபடி பொதுவாக இந்து சாமியார்களும் மடங்களும் பின்பற்றும் அதே வழிமுறைகள் தான் குர்மீத்தினுடையதும். மருத்துவ முகாம்கள், பேரழிவுக் காலங்களில் உதவி செய்வது போன்ற “சமூக சேவைகளுடன்” பிரதமர் நரேந்திர மோடியே புகழும் அளவுக்கு தன்னை தூய்மை இந்தியா திட்டத்தோடு இணைத்துக் கொண்டார்.

குர்மீத்தின் குற்றப்பட்டியல்

குர்மீத் ராம்ரஹீம் தற்போது தண்டிக்கப்பட்டிருக்கும் வழக்கு 2002 -ம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய்க்கு எழுதப்பட்ட ஒரு கடித்ததில் துவங்கியது. அக்கடிதத்தில், குர்மீத் தன்னையும் மடத்தில் இருந்த பிற பெண் சாமியார்களையும் பாலியல் வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிடுகிறார். தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தேரா மடத்தின் தீவிர பக்தர்கள் என்றும், குர்மீத்தைக் கடவுளாகவே ஏற்றுக் கொண்டவர்கள் என்றும் அப்பெண் குறிப்பிடுகிறார்.

ஹரியானாவின் இடைநிலை சாதிகள் மற்றும் தலித்துக்கள் மத்தியில் செல்வாக்கோடு உள்ளது குர்மீந்தின் தேரா சச்சா சவுதா அமைப்பு – சாமியாருக்கு ஆதரவாக சாலையில் காத்துக்கிடந்த பக்தர்கள்

ஒரு நாள் அந்தப் பெண்ணை தனது இரகசிய அறைக்கு அழைத்துள்ளார் குர்மீத். அங்கே நீலப்படம் பார்த்துக் கொண்டிருந்த “கடவுளை” கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் அப்பெண். தனது அரசியல் செல்வாக்கை குறிப்பிட்டும் கைத்துப்பாக்கியைக் காட்டியும் மிரட்டிய குர்மீத், ஏற்கனவே ‘தேரா’வின் மேலாளர் ‘ஃபக்கீர் சந்த்’தை கொன்று மறைத்ததைப் போல அந்தப் பெண்ணையும் கொன்று விவகாரத்தை எந்த சிக்கலும் இல்லாமல் மறைத்து விட முடியும் என்று மிரட்டியுள்ளார். உயிருக்கு அஞ்சிய அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த குர்மீத், சுமார் மூன்றாண்டுகளாக இந்தக் கொடுமையைத் தொடர்ந்து செய்துள்ளார்.

மடத்தில் தங்கியிருந்த தான் மட்டுமின்றி பிற பெண்களும் இதே போல் சித்திரவதை செய்யப்பட்டு வருவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அப்பெண், அதை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்தார். முதலில் ஹரியாணா ஊடகங்களிலும் பிற இந்திய ஊடகங்களிலும் வெளியான இவ்விவகாரம், வட இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விசயமாக மாறியது.

உள்ளூர் பத்திரிகையாளர் ராம்சந்தர் என்பவர், பாலியல் வல்லுறவு குறித்த கடிதத்தையும் குர்மீத்தின் பிற முறைகேடுகளையும் அம்பலப்படுத்தி எழுதி வந்தார். மக்களிடையே தனது போலி பிம்பம் கலைவதைக் கண்டு ஆத்திரமுற்ற குர்மீத், தனது அடியாட்களைக் கொண்டு ராம்சந்தரை சுட்டுக் கொல்கிறார். பாலியல் வழக்கைத் தொடர்ந்து ராம்சந்தரைக் கொலை செய்ததாக மேலும் ஒரு வழக்கு குர்மீத்தின் மேல் தொடரப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக் கடிதத்தை ஹரியாணா உயர்நீதி மன்றம் தானே முன்வந்து வழக்காக ஏற்றுக் கொண்டு (suo – moto) அதைக் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிடுகிறது. தேரா மடத்தை விட்டு வெளியேறிய பல பெண் சாமியார்களை சி.பி.ஐ விசாரித்த போது, இரண்டு முன்னாள் பெண் சாமியார்கள் தாங்கள் குர்மீத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர். தான் கிருஷ்ணரின் அவதாரமென்றும், மடத்தில் உள்ள பெண் சாமியார்கள் கோபியர்கள் என்றும் சொல்லி அவர்களை மூளைச் சலவை செய்த குர்மீத், அவர்களின் பாவங்கள் போக்கப்பட வேண்டும் என்றால் தன்னோடு உறவு கொள்ள வேண்டும் எனச் சொல்லியே பெண் சாமியர்களைப் பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.

வழக்கை விசாரித்த சி.பி.ஐ, 2007 -ம் ஆண்டு ஜூலை 30 -ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது. பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் சாமியார்களோடு குர்மீத் சிங்கின் உதவியாளர் ஒருவரையும் சாட்சியாக வழக்கில் இணைத்துள்ளது சி.பி.ஐ. பாலியல் குற்றங்களைத் தவிர ஏராளமான முறைகேடுகளில் குர்மீத் ஈடுபட்டுள்ளார். தனது சீடர்கள் பாலியல் ‘நல்லொழுக்கத்தை’ கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக மடத்தைச் சேர்ந்த சுமார் 300 ஆண் சாமியார்களின் விரைகளை அறுத்த குற்றச்சாட்டும் குர்மீத் சிங்கின் மேல் உள்ளது.

குர்மீத் பாரதிய ஜனதா கூட்டணி

காங்கிரசு ஆதரவு மனநிலையில் இருந்த குர்மீத்தை பாரதிய ஜனதா கடந்த 2014 -ம் ஆண்டு வாக்கில் தனது செல்வாக்குக்குள் வென்றெடுத்தது. அப்போதே பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சீக்கியர்களோடு குர்மீத்துக்கு கடுமையான முரண்பாடு இருந்தது. தங்களது மத நம்பிக்கைகளை குர்மீத் இழிவு படுத்துவதாக சீக்கிய குருத்வாராக்கள் தேரா மடத்துடன் கடுமையாக மோதிக் கொண்டிருந்தன. எனினும் ஹரியாணாவில் உள்ள ஜாட் சாதியினரின் வாக்கு வங்கியின் கணிசமான சதவீதத்தைப் பெற்றிருந்த பாரதிய ஜனதா, இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையேவும் தலித்துகளிடையேயும் செல்வாக்கு பெற்றிருந்த குர்மீத் தங்கள் பக்கமிருப்பது ஆதாயம் எனக் கணக்குப் போட்டது.

பஞ்சகுலாவில் வன்முறையில் ஈடுபடும் குர்மீத்தின் ஆதரவாளர்கள்

பாரதிய ஜனதாவின் தேர்தல் கணக்கு தப்பவில்லை. 2014 -ம் ஆண்டு நடந்த ஹரியாணா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா குர்மீத்தின் ஆசீர்வாதங்களோடு அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்தவுடன் சில பத்து சட்டமன்ற உறுப்பினர்களை தேரா மடத்துக்கு ஓட்டிச் சென்ற எம்.எல் கட்டார், குர்மீத்தின் ஆசிகளை பயபக்தியோடு பெற்றுக் கொண்டார். பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளை மீறி குர்மீத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது “சாதனைகளை” தேர்தல் பிரச்சார மேடையிலேயே பாராட்டிப் பேசினார் நரேந்திர மோடி. சமீபத்தில் மக்களவைக்குத் தேர்வான அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி இரானியின் வெற்றிகளுக்கான பாராட்டுதல்களை குர்மீத் தெரிவித்திருந்தார்.

ஹரியாணா மாநில பாரதிய ஜனதா அரசின் மூன்று அமைச்சர்களான ராம்விலாஸ் ஷர்மா, அனில் விஜ் மற்றும் குரோவர் ஆகியோர் தேரா மடத்துக்கு சுமார் 1.12 கோடி நிதி வழங்கினர். மாநில கல்வித்துறை அமைச்சர் “பாரம்பரிய விளையாட்டுக்களை” வளர்ப்பதற்காக அரசு நிதியில் இருந்து குர்மீத்துக்கு 51 லட்சம் வழங்கியுள்ளார். குர்மீத் பார்ப்பனியத்தின் பாரம்பரிய விளையாட்டான பாலியல் வல்லுறவுகளில் சேம்பியன் அல்லவா?

தீர்ப்பு வெளியான ஓரிரு தினங்களுக்குப் பின் அது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள குர்மீத்தின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் சிங், கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததற்கு கைமாறாக பாலியல் வல்லுறவு வழக்கு திரும்ப பெறப்படும் என பாரதிய ஜனதா சார்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும், தற்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளின் ஆதரவு தங்களது “கடவுளுக்கு” இருப்பதை நன்கு உணர்ந்த்தாலேயே குர்மீத்தின் அடிபொடிகளால் இவ்வளவு பெரிய கலவரத்தை துவங்கி நடத்த முடிந்தது. ஆகஸ்டு 25 -ம் தேதி நீதிமன்றம் குர்மீத்தின் குற்றத்தை உறுதி செய்து நீதிபதி வாசித்த தீர்ப்பின் விவரங்கள் நீதிமன்றத்தைச் சூழ்ந்து நின்ற அவரது சீடர்களுக்கு தெரிய வந்த கணமே கலவரம் துவங்கியது. தீவைப்புகளும், கல்வீச்சுகளும் நடந்து கொண்டிருந்த நேரத்தில் போலீசார் முன்னேறிச் சென்று எச்சரிக்காமலும், தடியடி நடத்தாமலும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர்.

கலவரம் துவங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே மக்களின் சாவு எண்ணிக்கை உயரத் துவங்கியது. அதே நேரம் குர்மீத்தின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினரோ தங்கள் கடவுளைச் சீண்டினால் இந்தியாவையே துண்டு துண்டாக்கி விடுவோமென தொலைக்காட்சி ஊடகங்களில் சவடால் அடித்துக் கொண்டிருந்தனர். ஜே.என்.யூ மாணவர்கள் இந்தியா ஒழிக என கோஷமிட்டதாக சித்தரிக்கும் ஒரு போலி வீடியோவை முன்வைத்து “தேசபக்தியை” கிண்டிக் கிளறிக் கொண்டிருந்த ஊடகங்கள், குர்மீத்தின் அடியாட்கள் வெளிப்படையாக சவால் விடுவதைக் கண்டுகொள்ளாமல் “வன்முறை, பொது அமைதி, தீவைப்பு, கல்வீச்சு” என நடுத்தர வர்க்க மக்களின் பொதுபுத்தியை சொரிந்து விட்டு டி.ஆர்.பி -யாக கல்லாகட்டினர்.

இந்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த போது ஊடகங்களில் பேசிய பாரதிய ஜனதாவின் உ.பி மாநில பாராளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ், “கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் பாராமல் ஒரு பெண்ணின் வார்த்தைகளுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுப்பதாக” குமுறினார். மற்றொரு பாரதிய ஜனதா தலைவர் சுப்பிரமணிய சுவாமியோ மடங்களின் குருமார்களை இது போன்ற வழக்குகளில் சிக்க வைத்து அவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் சதி நடப்பதாக ஓலமிட்டார். இந்தியா டுடே தொலைகாட்சியில் பேசிய பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான ஷாஸியா இல்மி, “ஓட்டு வங்கி என ஒன்று இருப்பது எதார்த்தம்; இது போன்ற சாமியார்களின் பின்னே வாக்காளர்கள் திரண்டிருப்பது இன்னொரு எதார்த்தம்; எனவே குர்மீத்தின் ஆதரவைப் பெற நாங்கள் அவரது காலில் விழுந்ததில் என்ன தவறு?” என்கிற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே காஷ்மீரில் கலரவத்தை “கட்டுப்படுத்த” அப்பாவி மக்களில் ஒருவரை ஜீப் முனையில் கட்டி ஊர்வலம் சென்ற வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான பாதுகாப்புப் படையினரோ குர்மீத்தை பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றனர். பிரதமர் மோடி பயன்படுத்தும் அதே மாடல் ஹெலிகாப்டரில் பறந்த குர்மீத்துடன் அவரது மகள் ஹனிபிரீத்தும் மருமகனும் உடனிருந்தனர்.

மிக நீண்ட சட்ட போராட்டங்களுக்குப் பின் குற்றம் இழைத்தவர் தண்டிக்கப்பட்டு விட்டார். ஆனால், அவர் குற்றமிழைப்பதற்கான திமிரை வழங்கிய ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை யார் தண்டிப்பது? சந்திரா சாமி துவங்கி பிரேமானந்தா, ஜெயேந்திரன், நித்தியானந்தா, அசாரம் பாபு, குர்மீத் ராம்ரஹீம் உள்ளிட்டோர் அம்பலமாகிவிட்டனர். இவர்களுக்கும் சரி, ஜக்கி, டபுள் சிரீ, பாபா ராம்தேவ் போன்றோருக்கும் சரி – குற்றமிழைப்பதற்கான அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுப்பது பொதுவாக ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் என்றாலும் குறிப்பாக இந்துத்துவ பாரதிய ஜனதா தான்.

எரிவதைப் பிடுங்கும் போது, தானாகவே கொதிப்பது அடங்கி விடும் என்பதை மக்கள் உணர வேண்டிய காலம் நம் கண் முன்னே கடந்து கொண்டிருக்கிறது.

மேலும் :

_____________

இந்த கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… !

3

டந்த 2016 செப்டம்பர் 23, 24 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கே தலைப்புச் செய்தி ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தன் வாழ்நாளில் மருத்துவமனைக்கே போகாத ஜெ. எப்படி அட்மிட் ஆனார்..? போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு போகாமல் அப்போலோ ஏன் போனார்…? என்பது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான பதில்களை ஊடகங்கள் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தான் கோயம்புத்தூர் என்ற ஒரு மாவட்டத்தில் மட்டும் தலைப்பு செய்தி வேறு ஒன்றாக அமைந்தது.

அது சசிக்குமார் என்ற இந்து முன்னணியை சேர்ந்த பொறுக்கி கொலை செய்யப்பட்ட செய்தி. பிற மாவட்டங்களில் இது ஒரு சாதாரண கொலையாக தெரியலாம். ஆனால் இந்து முஸ்லீம் கலவரம் நடந்த ஊர் தமிழ்நாட்டிலேயே பி‌ஜேபி வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு ஊர் என்ற நிலையிலிருக்கும் கோவை மாநகருக்கு இது ஒரு அபாய அறிகுறி. அதைத்தொடர்ந்து காவல்துறையின் முழு ஆசியோடு 18 கிலோமீட்டர் தூரம் நடந்த சவ ஊர்வலம், கலவரம் கடைகள் சூறை செல்போன் கடையில் திருட்டு கோமாதா பக்தர்களின் கோமாதா பிரியாணி திருட்டு போன்றவை அப்பட்டமாக அம்பலப்பட்டு சந்தி சிரித்த விவகாரங்கள்.

மேற்படி சசிக்குமார் கொலையில் இது வரை இரண்டு முஸ்லீம்களை பிடித்து விசாரித்துக் கொண்டுள்ளார்கள். முழு விவரம் ஒரு வருடமாகியும் வெளிவரவில்லை. ஆனால் இந்த ஒரு வருடத்தில் காவிப் புழுதி கோவையை எட்டு திசைகளிலும் வளைத்து நிற்கிறது. கோவை CPM அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் வி‌எச்‌பி என்ற குண்டர் படையை சேர்ந்த பொறுக்கி ஒருவன் பெட்ரோல் குண்டு வீசுகிறான். அடையாளம் தெரியாத நபர் என்று முதலில் டக்கால்டி விட்டுக் கொண்டிருந்த போலீஸ் பின்பு வேறு வழியில்லாமல் சிசிடிவி பதிவுகள் மூலம் அவனை கைது செய்கிறார்கள். வளர்மதிகளும், திருமுருகன்களும் குண்டர் சட்டத்தில் கைதாகுகையில் பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு குண்டர் சட்டம் இல்லை.

மோகன் பகவத்

கோவை எட்டிமடையில் கடந்த மார்ச் மாதம் அமிர்ந்தானந்த மயி அம்மா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இன் தேசிய செயற்குழு கூட்டம் மோகன் பாகவத் தலைமையில் நடக்கிறது. இந்நிகழ்வுக்காக பல்கலைக் கழகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கிறார்கள். அம்மா அவர்கள் பாகவத் உடன் ஒரு மணி நேரம் கலந்துரையாடல் செய்கிறார்.

கடந்த ஜூலை மாதம் புதிய மாணவன் என்ற மாணவர் பத்திரிக்கையை விற்ற காரணத்திற்காக அதன் முகப்பில் மோடி படம் போட்டிருந்ததற்காக சட்டக்கல்லூரி மாணவர் வினோத் பாஜக வழக்கறிஞர் ஒருவனின் புகாரில் பெயரால் கைது செய்து சிறையிலடைக்கப்படுகிறார். மூன்று முறை ஜாமீன் மறுக்கப்பட்டு பின்னர் 17 நாட்கள் கழித்து கிடைக்கிறது.

கடந்த ஜூலை 10 அன்று ‘அக்கா’ வானதி வீடு இருக்கும் தொண்டாமுத்தூர் அருகே ஈழ அகதிகள் முகாமில் நடந்த சிறு தகராறில் ஒரு நபர் பஞ்சாயத்து பண்ணப் போகிறார். அதில் ஏதோ பிரச்சினை ஏற்பட அந்த நபரின் மகனும் இந்து முன்னணி பகுதி நிர்வாகியுமான பொறுக்கி ஒருவன் சக பொறுக்கிகளை கூட்டி வந்து அகதி முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசுகிறான். சாதாரண அடிதடி வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடக்கிறது மோகன் பகவத் தலைமையில். கொங்குநாடு, குமரகுரு, அரசுக் கலைக் கல்லூரி போல இன்னும் பல கல்லூரிகளில் நிர்வாக ஒத்துழைப்புடன் காவல்துறை ஒத்துழைப்புடன் ஆர்.எஸ்.எஸ்., கூட்டங்கள் ஷாகாக்கள் நடக்கின்றன.

பிள்ளையார் சிலை வைக்க சிபிஎம் கட்சியின் கொடிக்கம்பத்தை அகற்றிய இந்து முன்னணி மீது வழங்கப்பட்டுள்ள புகார்.

போன வாரம் கோவிந்தம்பாளையத்தில் விநாயகர் சிலை வைக்க இடம் இல்லை என்று சி.பி.ஐ.(எம்) கட்சி கொடிக் கம்பத்தை பிடுங்கி எறிந்து அராஜகம் செய்துள்ளார்கள் இந்து மத வெறியர்கள்.

இப்படி தொழில் நகரமான கோவை எந்நேரமும் கலவர நகராக மாற்றப்படுவதற்கான எல்லா அறிகுறிகளும் தென்படுகின்றன. மேயராகவோ அல்லது  MLA -வோ ஆகி ஸ்மார்ட் சிட்டி முதல் இன்ன பிற மத்திய அரசு திட்டங்களில் ஊழல் செய்ய நாடி நரம்பெல்லாம் துடிக்க துடிக்க அலைந்து கொண்டிருக்கிறார் வானதி ‘அக்கா’.

தமிழக உரிமை பிரச்சினைகளுக்கெல்லாம் பொங்காத, போராடாத இந்த ‘அக்கா’ ஸ்மார்ட் சிட்டி திட்ட CEO நியமனத்தில் அண்ணா திமுக அரசியல் செய்துவிட்டது என ஆர்ப்பாட்டம் செய்கிறார். அதிலும் மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியை பயன்படுத்தி வங்கிகளிலும் இன்னும் பல வொயிட் காலர் ஊழல்கள் மூலம் பணம் சம்பாதித்து ருசி கண்டுள்ளார் வானதி. பாரதிய ஜனதா கிரிமினல் கும்பல் அதிமுக என்ற கொள்ளைக் கூட்டத்தின் மீது தனது அதிகாரத்தை அதன் செப்டிக் டாங்க் வழியே உள்ளே நுழைந்து நிறுவியுள்ள இந்த சூழ்நிலை இந்து முன்னணி பி‌ஜேபி பொறுக்கிகளுக்கு ஸ்டெட்ராய்ட் ஊசி போட்டுக் கொண்டதற்கு இணையான வெறியை அவர்களின் மூளையின் மூலையில் உற்பத்தி செய்துள்ளது.

ஜைலாக் ஊழல் புகழ் வானதி ‘அக்கா’

மிக அபாயகரமானது என்று தெரிந்தும் சசிகுமாரின் சவ ஊர்வலம் பதினெட்டு கிலோ மீட்டர் நடத்த அனுமதித்து இந்த கலவரத்திற்கு காரணமாயிருக்கும் கமிஷனர் அமல்ராஜ்தான்,SFI, DYFI, RSYF, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகளை தேச விரோத செயல்களில் ஈடுபடும் அமைப்புகள் என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கிறார்.  இப்படியான முறையில் அயோக்கியர்கள் + அரசு என்ற இந்த ஆபத்தான கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகளை எதிர்நோக்கி இருக்கிறது கோவை.

இதோ விநாயகர் சதுர்த்தி வந்து விட்டது. கடந்த வருட விநாயகர் சதுர்த்தியில் தடாகம் அருகே இந்து முன்னணி நடத்தும் விழாவில் வந்து மத்தளம் அடிக்க மறுத்ததற்காக கவுண்டர் சாதி இந்து முன்னணியினர் தாழ்த்தப்பட்ட சாதி இந்து முன்னணியினர் மீதே தாக்குதல் நடத்தினர்.

 

இந்த வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையின் மேட்டுப்பாளையம் ரோட்டில் மின்விளக்கு கம்பங்களின் மீது இந்து முன்னணி கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார்கள். பறப்பது கொடி மட்டுமல்ல கோவை காவல் துறையின் காவிக் கோமணமும் தான்.

கோவை முழுக்க இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, பாரத் சேனா, இந்து மக்கள் முன்னணி, சிவ சேனா, ஸ்ரீராம் சேனா, விவேகானந்தா பேரவை, விவேகானந்தா மக்கள் இயக்கம், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஏராளமான லெட்டர் பேட் கூலிப்படைகள் மூலம் நகர் முழுக்க 390 சிலைகளும் புறநகரில் சுமார் 1,400 சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் தெரு ஓரத்தில் சாக்கடை மீதெல்லாம் மேடை போட்டு பிள்ளையாரை அமர வைத்து காக்கும் கடவுளான பிள்ளையாரை குடிகார பக்தர்களிடமிருந்தும் இன்ன பிற துஷ்ட சக்திகளிடமிருந்தும் துப்பாக்கி ஏந்திய காவல் துறை காவல் காத்துக் கொண்டிருக்கிறது. போலீஸ் மற்றும் பொறுக்கிகள் கூட்டணி உருவாவதும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஒப்பந்தமாவதும் இரவும் பகலும் சிலையின் கீழே உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் மிதந்து கொண்டும் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான்.

சென்ற முறை விநாயகர் சதுர்த்தி வசூலின் போது துடியலூர் மகாலட்சுமி பேக்கரியிடம் வசூல் செய்துள்ளார்கள் காவிகள். ஆயிரக்கணக்கில் கொடுப்பார் என எதிர்பார்க்க அவரோ 300 கொடுத்து போதும் என அனுப்பியுள்ளார். கறுவிக் கொண்டே வெளியேறிய இந்து முன்னணியினர் சசிக்குமார் சாவு ஊர்வல கலவரத்தில் போலீஸ் துணையோடு ‘இந்துக்கடையான’ மகாலட்சுமி பேக்கரியை சூறையாடிவிட்டனர்.

இந்த முறை போஸ்டர் நோட்டீஸ் அனைத்திலும் மாவீரன் சசிக்குமார் என புகைப்படம் போட்டு நேரடி மிரட்டல் வசூலே நடைபெறுகிறது. போலீஸ் பொத்திக் கொண்டு அனுமதிக்கிறது.

போலீசின் பத்திரிக்கை அறிவிப்பிலேயே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது ; விசர்ஜன ஊர்வலம் என்றெல்லாம் வார்த்தை பிரயோகங்களை பார்க்கையில் கமிஷனர் ஆபீஸில் தயாரான அறிக்கையா காவிகள் ஆபீஸில் தயாரான அறிக்கையா என்றே சந்தேகம் வருகிறது.

புறநகரில் 1,000 போலீஸ் மாநகரில் 2,000 போலீஸ்,சிலைகளை கரைக்க தனி இடம், தண்ணீர் வசதி, ஆயிரக்கணக்கில் போலீஸ் பந்தோபஸ்து, தீயணைப்பு துறை என மக்களை முட்டாளாக்க மத வெறியர்களாக்க இயற்கை சுற்றுச்சூழலை மாசுபடுத்த மக்கள் பணத்தோடு நடைபெறும் இந்த அயோக்கியத்தனம் நாளுக்கு நாள் வளர்ந்தே வருகிறது.

பழனிக்கு தைப்பூச நடை, வெள்ளிங்கிரி ஆண்டவரை பார்க்க நடை, காரமடை பந்த சேவ நடை, பங்குனி உத்திரம், குமரன் குன்று, மாசாணி அம்மன் கோவில் நோன்பு என ஏராளமான நிகழ்வுகள் பல லட்சம் பக்தர்களோடு சிறு அசம்பாவிதம் என்ற பேச்சுக்கே இடமின்றி நடக்கிறது. ஆனால், நூறு பொறுக்கிகள் சேர்ந்து நடத்தும் நிகழ்வுக்கு மாநகரே பதட்டம் ஆகும் அளவு சிக்கலாகி வருகிறது.

பார்த்தீனிய செடி; யாரும் வெள்ளாமை செய்யாமல் பரவுவது போல பாசிச கும்பல் கோவை நகரெங்கும் பரவுகிறது. மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்கள் கரம் கோர்த்து இந்த களைகளை வெட்டி வீச வேண்டும். கோவையை மீட்க வேண்டும்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை மாவட்டம்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீட் தேர்வை ஆட்டுவிக்கும் குடுமி – கேலிச்சித்திரம்

4

பார்ப்பனக் குடுமியில் சிக்கிக்கொண்ட மருத்துவக் கல்வி ! – கேலிச்சித்திரம்

கேசிச்சித்திரம் : முகிலன்

இணையுங்கள்:

_____________

இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ரேசன் – கேஸ் மானிய வெட்டு ! புதுச்சேரியில் திரண்ட தொழிலாளி வர்க்கம் !

0

ரேசன், கேஸ் மானியங்களை வெட்டு ! மக்களைப் பலியிடு ! நடப்பது – உலக வங்கி, கார்ப்பரேட்டுக்களின் ஆட்சி !

த்தியில் ஆளும் பாசிச மோடி அரசு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என மக்கள் என்ன தான் கஷ்டப்பட்டாலும், அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் தனது கார்ப்பரேட் விசுவாசத்தைக் காட்டுவதில் குறியாய் இருக்கிறது. ரேசன் பொருட்களுக்கு நிபந்தனை, கேஸ் மானிய ரத்து என தனது அடுத்த தாக்குதலை மக்கள் மீது தொடுத்திருக்கிறது.

இதனால், வருடம் ஒரு லட்சம் வருமானமுள்ளவர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளவர்கள், மூன்று அறை கொண்ட வீடுள்ளவர்கள், வீட்டில் ஏ.சி. பிரிட்ஜ் வைத்திருப்பவர்கள் ஆகியோருக்கு ரேசன் பொருட்கள் கிடையாது. மொத்தத்தில் யாருக்கும் ரேசன் பொருட்கள் கிடையாது என்பதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறார் மோடி. மேலும், கேஸ் மானியத்தை முழுவதுமாக ரத்து செய்தும், மாதம் ரூ.4 விலையேற்றிக் கொள்ள கேஸ் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தும் அவை செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது மோடி அரசு.

ஏற்கனவே மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், தொழில் இழந்தும், வேலை இழந்தும், கூலி இழந்தும் வீதியில் வீசியடிக்கப்பட்டனர். அற்ப கூலி பெறுபவர்கள் ஜி.எஸ்.டி. என்ற வரியின் மூலம் நடந்த வழிப்பறியால் போண்டியானார்கள். எத்தனை ஏக்கர் நிலமிருந்தாலும், மானிய வெட்டு, வறட்சியால் விவசாயம் இல்லாததால் செத்து வருகின்றனர் விவசாயிகள். இத்தனை மக்களின் உயிரையும் இது நாள் வரை பிடித்து வைத்திருந்தது இந்த ரேசன் அரிசி தான். இனி அதற்கும் வழியின்றி பட்டினியில் தள்ளி மக்களைக் கொல்லப் போகிறது மோடியின் கும்பல். ஏற்கனவே உத்திரவாதமான வேலையோ, கூலியோ இல்லாமல் அல்லல்படும் மக்களுக்கு கேஸ் மானிய ரத்தும், விலை உயர்வும் மேலும் ஒரு சுமையாக மாறும்.

இப்படி நம்மீது தொடுக்கப்படும் தொடர் தாக்குதல்களுக்குக் காரணம், மத்திய மாநில அரசுகள் பின்பற்றும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகளே. எனவே, கொள்கைகள் என்று சொல்லி, கொள்ளையை நடத்துகின்ற, மக்களுக்கு எதிராக மாறிப்போன. இந்த அரசுக் கட்டமைப்பைத் தகர்க்காமல், இந்த கட்டமைப்பைக் கட்டிக் காக்கின்ற ஓட்டுக் கட்சிகளை மாறி மாறி தேர்ந்தெடுப்பதால் மக்கள் பிரச்சினை தீரப்போவதில்லை.

நமது பிரச்சினைகளுக்கான தீர்வு இந்தக் கட்டமைப்புக்கு வெளியில் தான் உள்ளது. எனவே, மக்களுக்கு உண்மையான அதிகாரம் வழங்கும் சமூகத்தை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் படைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதே நமது முதன்மையான பணியாகக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கி மக்கள் நெருக்கமாக உள்ள கடைவீதி அமைந்துள்ள புதுச்சேரி, வில்லியனூர் கோட்டை மேடு சந்திப்பில் 21.08.2017 அன்று மாலை 05.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.

நடப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஆட்சி அல்ல; 1990 -களின் துவக்கத்தில் ஆட்சியாளர்களால் கையெழுத்திடப்பட்ட அடிமை சாசனத்தின் மூலம் உலக வங்கி, பன்னாட்டு கார்ப்பரேட்டுக்களின் ஆட்சி. அவர்களது கோலுக்கு ஆடும் குரங்காகத் தான் இருக்கின்றனர் ஓட்டுக்கட்சிகள். எனவே, இந்தக் கட்டமைப்பில் இதற்கான தீர்வு இல்லை. கட்டமைப்புக்கு வெளியே தான். தேவை ஆட்சி மாற்றம் அல்ல! மக்களின் கைக்கு வரும் அதிகார மாற்றம் தான் என்பதை புஜதொமு-வின் மாவட்டத் தலைவர் தோழர். சரவணன் தனது தலைமையுரையில் பதிவு செய்தார்.

அடுத்து பேசிய புஜதொமு மாநிலப் பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு, கேஸ் மானியம், ரேசன் பொருட்கள் ரத்து மட்டுமல்ல பிரச்சினை, தொழிலாளர் சட்டத்திருத்தம், நீட் தேர்வு, நெடுவாசல், கதிராமங்கலம் விவசாயிகளின் போராட்டம் என இந்த அரசால் மக்கள் படும் துன்பங்களை மக்களின் மொழியில் எதார்த்தமாகப் பேசினார்.

அடுத்து பேசிய புஜதொமு-வின் மாநில இணைச் செயலாளர் தோழர் மகேந்திரன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் பதவிச் சண்டை, அதிகாரச் சண்டையைத் தான் ஊடகங்கள் முதன்மைப்படுத்துகிறது, தமிழகமெங்கும் மக்கள் நடத்தும் போராட்டங்களை இருட்டடிப்பு செய்வதை அம்பலப்படுத்தினார்.

இறுதியாகப் பேசிய புஜதொமு-வின் பொதுச்செயலாளர் தோழர் லோகநாதன், வேலை செய்யத் தயாராயிருக்கும் மக்களுக்கு வேலையில்லை. வேலையில் இருப்பவர்களுக்குக் கூலியில்லை. விவசாயிகளால் விவசாயம் செய்ய முடிய வில்லை இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் தான் கேஸ் மானியம் ரத்து, ரேசன் பொருட்கள் ஒழிப்பை திணிக்கிறது மோடி அரசு. முதலாளி களுக்கு ஏற்ற திட்டங்களை வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பொய் சொல்வதும், அத்திட்டங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், ஆர்.எஸ்.எஸ். வானரங்களை வைத்து தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தி மக்களை முட்டாளாக்கும் வேலையைத் தான் செய்து வருகிறது பார்ப்பனக் கும்பல். மோடி பதவியேற்பதற்கு முன்பே, ஒரு மதவெறி பாசிஸ்டான மோடியின் நடவடிக்கைகள் எப்படி என்று உணர்ந்து அம்பலப்படுத்தினோம்.

மோடி மட்டுமல்லாது. நாடாளுமன்ற, சட்டமன்ற ஓட்டுக்கட்சிகளின் ஒவ்வொரு திட்டங்களையும் புரிந்து கொண்டு எதிர்ப்பதற்கு பிரச்சினையின் பின்னுள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலை வைத்துத் தான் ஓட்டுப்போடும் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பாதை மக்களுக்கு எதிராகிப் போனது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தக் கட்டமைப்பை தகர்த்து, மக்களது அதிகாரத்தைக் கொண்ட மாற்றுக் கட்டமைப்பு நிறுவுவதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமே ஆகும் என வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் நாடு முன்னேற்றமுன்னு மோடி முழங்குறாரு, வரிக்கு மேலே வரியப் போடுற அரசாங்கம், மானத்தை இழந்து வாழ்க்கை வேணுமா, எச்சரிக்கை, எச்சரிக்கை ஆகிய ம.க.இ.க.-வின் புரட்சிகர பாடல்களை தோழர்கள் பாடினர்.

அருகில் உள்ள கடைக்காரர், ஒவ்வொரு முறையும் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்ன பேசி என்ன ஆகப் போகிறது என்று நினைத்ததுண்டு. ஆனால், ஒவ்வொரு விசயமும் நச்சென்று இருக்கிறது. பாடல்கள் நிலவும் சூழ்நிலைகளுக்கு மிகவும் பொருத்தமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கிறது என்றார்.

பறையிசை, முழக்கம், உரைகள், பாடல்கள் ஆகியவை நூற்றுக்கணக்கான மக்களை நின்று கவனிக்க வைத்ததுடன், ஆர்.எஸ்.எஸ். பற்றியும், இந்த அரசின் கட்டமைப்புத் தோல்வியைப் பற்றியும் சிந்திக்க வைத்து மக்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி, தொடர்புக்கு : 95977 89801.

_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் ஆக்கிரமிப்பு விநாயகர்கள் !

0
என்ரான் விநாயகர் - 1995, ஆக - செப் - அக் இதழில் வெளியான ஆர்.எஸ்.எஸ். நாயகர்களின் அடிமை விநாயகர் என்ற கேலிச்சித்திரம்

சென்னையில் 2,700 சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி, பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார் என்கிறது இன்றைய செய்தி. 2,700 இடங்களில் ஆகப்பெரும்பாலானவை சாலை ஆக்கிரமிப்புகள். ஆண்டுதோறும் இந்த ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன. இவை அனைத்தையும் ஆசீர்வதித்து அனுமதியும் வழங்குகிறது போலீசு.

இது ஆடி மாத கோயில் திருவிழாக்களைப் போல மத நம்பிக்கை சார்ந்த விசயம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி என்பது மத நம்பிக்கை சார்ந்த விழாவாக இருக்கலாம். ஆனால், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்றோர் நடத்தும் விநாயகர் ஊர்வலமும், அதற்காக நகரம் முழுவதும் நிறுவப்படும் ஆக்கிரமிப்பு விநாயகர்களும் மத நடவடிக்கைகளோ மத உரிமைகளோ அல்ல.

மகாராட்டிரத்தில் பார்ப்பன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் திலகரால் தொடங்கப்பட்ட இந்த விநாயகர் ஊர்வலம், 1991 -96 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் தலையெடுத்தது. திருவல்லிக்கேணியில் திட்டமிட்டே கலவரமும் அரங்கேற்றப்பட்டது.

இந்த பின்புலத்தில் விநாயகர் வழிபாடு என்ற பெயரில் நடத்தப்படும் இந்த ஆக்கிரமிப்புகளுக்கு மாநகராட்சியும், காவல்துறையும் அனுமதி வழங்குவது சட்டவிரோதமானது என்றும், அரசியல் சட்டப்பிரிவு 25, 26 வழங்கும் மத உரிமை என்பது இதற்குப் பொருந்தாது என்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். இதனை விசாரிக்காமல் வாய்தா போட்டு இழுத்தடித்து முடக்கியது உயர்நீதிமன்றம்.

இந்த பின்புலத்தில் 1997 நவம்பர் புதிய கலாச்சாரம் இதழில் இது குறித்து வெளியிடப்பட்ட கட்டுரையை சற்றே சுருக்கித் தந்திருக்கிறோம். இக்கட்டுரையைப் படியுங்கள்.

இந்த விநாயகர் பெயரில் இந்து மதவெறிக்காலிகள் நடத்தும் ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். நமது போராட்டத்தை நாம் தொடருவோம்.

***

சென்ற ஆண்டு (1996) விநாயகர் ஊர்வலம் தொடர்பாக சென்னை நகரக் காவல்துறைக்கு (தமிழக அரசுக்கு) எதிராக இந்து முன்னணி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு, இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவும்.

கடந்த ஆண்டுகளில் அந்தப் பாதை வழியே சென்றபோது நடந்த கலவரங்கள், துப்பாக்கிச்சூடு ஆகியவை காரணமாக மேற்கூறிய பாதையில் ஊர்வலமாகச் செல்ல அனுமதி மறுத்த காவல்துறை, வேறு பாதை வழியாகச் செல்ல ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியது.

பாக் விநாயகர்

ஊர்வலப்பாதை ‘மதச் சம்பிரதாயம் சம்மந்தப்பட்ட விசயம்’ என்றும் அதைத் தன் விருப்பம் போல் மாற்றியமைக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை என்றும் கூறி சென்னை உயர் நீதி மன்றத்தில் இந்து முன்னணி ‘விநாயகர் சதுர்த்தி மத்தியக் குழு’ என்ற பெயரில் வழக்கு தொடர்ந்தது.

தனது வாதங்களைக் கீழ்கண்டவாறு முன்வைத்தது :

இந்து முன்னணியின் வாதங்கள்

கடந்த 13 ஆண்டுகளாக, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை சென்னையை சேர்ந்த இந்துக்கள் தமது வீட்டிளளவில் நடத்தும் விழாவாக மட்டும் நடத்தவில்லை; பொதுச் சாலைகளில் அலங்காரப் பந்தல் அமைத்து சிலைகளை வைத்து வழிபாடுகள் மற்றும் நிகழ்ச்சிகல் நடத்தி வருகின்றனர்.

பிரிட்டிஷாரை எதிர்த்து சுயராச்சியம் அடைவதற்கு இந்தியர்களை ஒன்றுபடுத்தும் நோக்கத்துடன் விநாயகர் ஊர்வலம் எனும் சம்பிரதாயத்தை திலகர் தான் முதன்முதலில் துவக்கினார். காந்தி கண்ட ராமராச்சியத்தைத் தோற்றுவிப்பதற்காகப் பலதரப்பு மக்களிடமும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதற்கு மேற்கூறிய விநாயகர் ஊர்வலம் தேவையாக உள்ளது.

இது ஒரு மத சம்பிரதாயம் என்பதால் இந்த ஊர்வலத்தை நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை; ஊர்வலப் பாதையைத் தீர்மானிக்கவோ, திருத்தவோ காவல் துறைக்கு அதிகாரம் கிடையாது என்பது இந்து முன்னணியின் வாதம்.

காவல் துறையின் வாதங்கள்

காவல்துறை (தமிழக அரசு) தனது எதிர் மனுவில் கீழ்கண்டவாறு பதிலளித்தது :

கடந்த ஆண்டுகளில் பல சந்தர்பங்களில் இந்து – முசுலீம் மோதல் கலவரம், துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த ஆண்டும் அவ்வாறு சட்டம் ஒழுங்கு பிரச்சினை தோன்ற வாய்ப்புள்ளது.

விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று கரைப்பது என்பது சென்னையில் சமீபகாலத்தில் ஏற்பட்டதுதானேயொழிய மரபு அல்ல, எனினும் இப்பழக்கம் பற்றி ஏதும் கருத்துக் கூற அரசு விரும்பவில்லை.

திலகர் இம்மரபைத் துவக்கியதிலும் அரசியல் நோக்கம் தான் மேலோங்கியிருக்கிறது. தற்போது இந்து முன்னணி ஞாயிற்றுக்கிழமையன்று ஊர்வலம் வைத்திருப்பதும் ஆகம விதிகள் சாத்திரங்களின் அடிப்படையில் அல்ல; மயிலைக் கோயில் சார்பாக நடத்தப்படும் அறுபத்து மூவர் விழா போன்றவைகள் தான் ‘மத ஊர்வலம்’ என்ற அடிப்படையில் காவல்துறை முன் அனுமதியில்லாமல் நடத்த முடியும். விநாயகர் ஊர்வலம் அத்தகையது அல்ல. எனவே காவல்துறை முன் அனுமதி பெற்றுத்தான் தீர வேண்டும் என்பது அரசுத் தரப்பு வாதம்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ணுகுமுறை!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் தனது தீர்ப்பில் உயர்நீதி மன்றம் கீழ்கண்ட விசயங்களை குறிப்பிட்டது.

கோக் விநாயகர்

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை நிறுவி, குறிப்பிட்ட காலத்திற்கு வழிபட்டு, பின்னர் அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பது மத சம்பிரதாயத்தின் பிரிக்கவெண்ணாத அம்சம்தான் என்பதை ஏற்க்கலாம்… ஆனால் அந்த குறிப்பிட்ட பாதை வழியாக ஊர்வலம் செல்வதுதான் வெகு நீண்ட காலம் கடைபிடிக்கப்பட்டுவரும் சம்பிரதாயம் என்று நிரூபிக்க ஆதாரம் ஏதும் (இந்து முன்னணியினரால்) தரப்படவில்லை.

விநாயகர் இந்த இடத்தில்தான் வைத்து வழிபடவேண்டும். இன்ன இடத்தில்தான் கரைக்க வேண்டும் என்பதற்கும் ஆதாரம் ஏதும் தரப்படவில்லை…

மேலும் சுதந்திரப் போராட்ட காலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்கான அரசியல் கருவியாக இவ்விழா பயன்படுத்தப்பட்டதைப் போலவே, இன்றும் சில இடங்களில், சில சந்தர்ப்பங்களில் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இது பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையையும் நாம் மறந்து விட முடியாது. எனினும் இவ்வாறு அரசியல் நோக்கத்திற்கு பயன்படுகிறது என்பதலேயே இந்த ஊர்வலம் தனது மதத் தன்மையை இழந்து விடுவதில்லை.

அடுத்ததாக அரசியல் சட்டப்பிரிவு 25, 26 மற்றும் 19(1) (b) ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் முன்னுரிமைகள் அல்ல; குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிலவும் எதார்த்தமான நிலைமைகள், ஊர்வலத்தின் போது கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவற்றை முறைப்படுத்த (அரசுக்கு) அதிகாரம் உண்டு.

எனவே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதென்பது மதச் சம்பிரதாயம் தான் என்ற போதிலும், அது முற்றுரிமை அல்ல என்றும் அதனை முறைப்படுத்தவும், கட்டுப்பாடுகள் விதிக்கவும் காவல்துறைக்கு அதிகாரம் உண்டு என்றும் கருதுகிறோம்.”

இவ்வாறு உயர் நீதிமன்ற பெஞ்சு சென்ற ஆண்டு தீர்ப்புக் கூறியது,

எது மத உரிமை ?

மேற்கூறிய உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக இப்பிரச்சினை தீர்ந்துவிட்டதா? நாளையே இந்த அரசோ அல்லது வேறெந்த அரசோ – பழையபடி மசூதி வழியாகவே ஊர்வலம் செல்ல அனுமதியளிக்கலாம்.

எனவே, ஊர்வலப் பாதையல்ல பிரச்சினை – விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பார்ப்பன இந்துமதவெறி அரசியலை நடத்துவது இந்து முன்னணியின் மத உரிமையா என்பது தான் பிரச்சினை.

பாட்ஷா விநாயகர்

இந்த ஆண்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் சென்னை மேயர், மாநகராட்சி ஆணையர், காவல்துறை ஆணையர், மாநிலக் காவல்துறை இயக்குநர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோருக்கு ஒரு தாக்கீது அனுப்பப்பட்டது. “சென்னையிலும், மற்றும் பிற நகரங்களிலும் கடைவீதிகள், முச்சந்திகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது” என அதில் கூறப்படிருந்தது. ஆனால் இதற்குப் பதில் இல்லை.

ஆனால் சிலை வைக்க இடம் பிடிப்பது தொடர்பாக இந்து முன்னணிக்கும் இந்து மக்கள் கட்சிக்குமிடையே தகராறு ஏற்பட்டதால், இரு அமைப்பினரும் எந்தெந்த இடங்களில் சிலை வைக்கலாம் என்பதை ஆர்.டி.ஓ. ஒதுக்கித் தருவாரென அரசு அறிவித்தது. அதாவது பொது இடங்களை ஆக்கிரமிக்க ஆர்.டி.ஓ. ஏற்படு செய்து தருவார் என்பது தான் இதன் பொருள்.

இந்து முன்னணி நடத்தும் விநாயகர் வழிபாடும், ஊர்வலமும் மத உரிமைகள் அல்ல என்றும், பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகளை வைக்க அரசே அனுமதிப்பது சட்டவிரோதம் என்றும் பொதுநலன் கோரும் வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ம.க.இ.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதூர்த்தி என்பது அனைத்து சாதியினரும் கொண்டாடும் பண்டிகை அல்ல; சிறுபான்மையான பார்ப்பன ‘உயர்’ சாதி இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் பண்டிகை. களிமண் உருவ பொம்மையை வைத்து வழிபடுவதும் பிறகு அதை கிணறு, குளம், ஆற்றில் கரைப்பதும் அவர்களது மரபு.

அரசின் கோழைத்தனம் !

பெரிய விநாயகர் சிலகளைப் பொது இடங்களில் நிறுவி, பிறகு அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பதென்பது கடந்த 14 ஆண்டுகளாக இந்து முன்னணி உருவாக்கி வரும் ‘மரபு’. ‘திலகர் செய்தார்’. ‘காந்தியின் ராமராஜ்ஜியம்’ என்று இந்து முன்னணி எதைச் சொன்னாலும் அதையெல்லாம் அரசியல் நோக்கத்திற்கானவையே. இதைத் தனது எதிர் மனுவில் அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது; எனினும் இதை வலியுறுத்தாமல் கோழைத்தனமாகப் பின்வாங்கிவிட்டது.

வெகு நீண்ட காலமாக நிலவிவரும் பழக்கம் மட்டும் தான் ‘மத சம்பிரதாயம்’ என நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சம்பிரதாயம் இந்து மதத்தினர் அனைவராலுமோ, ஒரு உட்பிரிவினராலோ, ஒரு சாதியாலோ, ஒரு வட்டாரத்தினரலோ பின்பற்றப்பட்டல் மட்டுமே அது சம்பிரதாயமாக ஏற்கப்பட வேண்டும். மதச் சம்பிரதாம் என்பதற்கு உச்சநீதிமன்றம் இதுவரை அளித்துள்ள விளக்கங்கள் இவ்வாறுதான் கூறுகின்றன.

என்ரான் விநாயகர்

எனவே இந்து முன்னணி உருவாக்கியிருக்கும் இந்த விநாயகர் வழிபாடு ஒரு மத சம்பிரதாயம் அல்ல; அரசியல் சட்டப்பிரிவுடன் 25, 26 –இன் கீழ் வழங்கப்படும் மத உரிமை எனும் அடிப்படை உரிமையைப் பெறத் தகுதியானதல்ல.

மேலும், ஒரு சம்பிரதாயத்தை உருவாகுவதற்கு இந்து முன்னணி என்பது ஒரு மடமோ, ஆதினமோ, சாதியோ, உட்பிரிவோ அல்ல; சட்ட மொழியில் சொன்னால் அது ஒரு அரசியல் பன்பாட்டு அமைப்பு – அவ்வளவு தான்! மத மரபைத் தோற்றுவிக்கும் அதிகாரம் அதற்குக் கிடையாது. யார் வேண்டுமானாலும் மதச் சம்பிரதாயத்தைப் புதிதாகத் தோற்றுவிக்கலாம் என்றால் நாமும் துடைப்பக்கட்டை வழிபாடு ஒன்றைத் துவக்கி மத உரிமை கோரலாம்; அல்லது ஊர்வலமாக விநாயகரை எடுத்துச் சென்று கரைப்பதற்குப் பதிலாக ‘உடைப்பது தான் எங்கள் சம்பிரதாயம்’ என்றும் நாம் கூறலாம்.

ஆக்கிரமிப்பு இந்து சம்பிரதாயமா?

“ஐஸ் ஹவுஸ் மசூதி வழியாச் செல்வது தான் மதச் சம்பிரதாயம்” என்பதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதே போல பொது இடங்களை ஆகிரமிப்பது தான் “இந்து சம்பிரதாயம்” என்று ராம கோபாலன் வாதாட முடியாது. அப்படியொரு ‘மத உரிமை’ இருந்திருந்தால், தாங்கள் ஆக்கிரமித்த இடங்களில் எல்லாம், ஜெ – சசி கும்பல் ஒரு பிள்ளையார் கோயிலைக் கட்டியிருக்கும்.

சென்னையிலும் பிற நகரங்கலிலும் பேருந்து நிறுத்தங்கள், முச்சந்திகள், கடைவீதிகள், நடைபாதைகள், நகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் – ஆகியவற்றில் தான் இந்து முன்னணியின் விநாயகர்கள் எழுந்தருளுகின்றனர். மேற்கூறிய இடங்கள் ‘அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டுத் தளங்கள்’ அல்ல; அதாவது கோயில்கள் அல்ல. எனவே எந்தப் பொது இடத்திலும் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என அரசு கறாராக உத்திரவு பிறப்பிக்க முடியும். ஆனால் அரசோ ஆக்கிரமிபாளர்களுக்கு இடத்தைப் பகிர்ந்தளிக்க ஆர்.டி.ஓ –வை நியமிக்கிறது.

மாயா(வதி) விநாயகர்

இவ்வழக்கில் அரசு மற்றும் நீதி மன்றத்தின் அனுகுமுறையைக் கூர்ந்து கவனியுங்கள். “அரசியல் நோக்கம் கொண்டதுதான் – எனினும் அதுபற்றி நாங்கள் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை” என்கிறது அரசு. “அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்துவது உண்மைதான் எனினும் ஊர்வலம் தனது மதத்தன்மையை இழந்துவிடுவதில்லை” – என்கிறது நீதி மன்றம்.

இந்து முன்னணியின் விநாயகர் (வழிபாடு) ஊர்வலம், அரசியல் நடவடிக்கையா, மதச்சடங்கா இரண்டில் எது என்பதே நம் கேள்வி. பொது இடங்களை ஆக்கிரமித்து விநாயகர் சிலைகளை வைப்பது மத நடவடிக்கை என்றால், பாபர் மசூதியை ஆக்கிரமித்து (இடித்து) ராமன் சிலை வைத்ததும் மத நடவடிக்கை என்று தான் ஏற்க வேண்டியிருக்கும்.

இந்து மதவெறியர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஒரே நேரத்தில் மதத்தை அரசியல் நடவடிக்கையாகவும், அரசியலை மதச்சடங்காகவும் நடத்துவதற்கு இந்து முன்னணிக்கு இப்படித்தான் வாய்ப்பளிக்கப்படுகிறது.

இவ்விரண்டு உரிமைகளையும் தெளிவாக இனம் பிரிக்கவியலாதவாறு வேண்டுமென்றே மொன்னையாக்கியிருக்கிறார்கள் அரசியல் சட்டத்தை உருவாக்கிய ‘சிற்பிகள்’ அவ்வாறு இனம் பிரித்துச் சொல்ல வேண்டிய நெருக்கடிகள் வரும் போது அரசு வழுக்குகிறது; நீதிமன்றம் அப்போதைக்குத் தப்புவதற்கு ஒரு சந்து கிடைக்குமோ என்று தேடுகிறது.

மத உரிமையா, மதச்சார்பற்ற உரிமையா எதற்கு முன்னுரிமை?

மத உரிமையும், மதசாற்பற்ற சிவில் உரிமைகளும் மோதிக் கொள்ளும் சந்தர்ப்பங்களில் அரசும், நீதி மன்றமுன் மதச்சார்பற்ற உரிமைக்குத் தான் உடனே குழி வெட்டுகின்றன.

மத உரிமைகள் விசயத்தில் நீக்குப் போக்காகவும், தாராள மனதுடனும் நடந்து கொள்ளும் நீதி மன்றங்கள் சிவில் உரிமைகள் விஷயத்தில் வேறு அளவு கோலைப் பயன்படுத்துகின்றன.

கொழுக்கட்டைக்குப் பதிலாக கையெறி குண்டு போன்ற நவீன ஆயுதங்களைத் தாங்கி விநாயகர்கள் பவனி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்தில் வருபவர்கள் கையில் பை கூடக் கொண்டுவரக்கூடாது என நிபந்தனை விதித்தது நீதிமன்றம்.

ஜெயின் விநாயகர்

சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம் கடையடைப்புகளுக்கு (பந்த்) எதிராக வழங்கியுள்ள தீர்ப்போ, அரசியல் சட்டப்பிரிவு -19 வழங்கும் அடிப்படை உரிமையை கிட்டத்தட்ட ரத்து செய்து விடுகிறது.

ஓட்டுப் பொறுக்கிகளைச் சாக்கு வைத்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு காரணம ஏதும் கூறாமல் எந்த நடவடிக்கையையும் தடை செய்யும் வாய்ப்பை காவல்துறைக்கு வழங்குகிறது. எல்லா வகையான போராட்டங்களையும் வெறுக்கும் மேட்டுக்குடி வர்க்கத்தின் அரசியலற்ற மனோபாவத்திற்கு சட்டத் தகுதி வழங்கியிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

சட்டப் பிரிவு -25 இன் கீழ் மத உரிமை என்ற பெயரில் இந்து மதவெறியர்களின் உரிமை சட்டப்படி அங்கீகரிக்கப்படுகிறது; சட்டப்பிரிவு -19 வழங்கும் கருத்துரிமையும், அரசியல் உரிமைகளும் சட்டப்படியே பறிக்கப்படுகின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பாசிசம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுகிறது; ஜனநாயகம் சட்டப்படியே தடை செய்யப்படுகிறது

சூரியன்

புதிய கலாச்சாரம், நவம்பர் – 1997 இதழில் வெளியான கட்டுரை.

கேலிச்சித்திரங்கள் : 1995, ஆக – செப் – அக், புதிய கலாச்சரம் இதழில் வெளியான ஆர்.எஸ்.எஸ். நாயகர்களின் அடிமை விநாயகர் என்ற தலைப்பில் வெளியானவை!

 

சிறப்புக் கட்டுரை : விவசாயிகளை ஒழிக்கப் போகும் கார்ப்பரேட் சந்தை !

0

ந்திய விவசாயத்தைப் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் வர்த்தகச் சூதாட்டக் களமாக  மாற்றுவதையே தனது வேளாண்மைக் கொள்கையாகக் கொண்டுள்ளது மோடி அரசு! இதற்கேற்ப வேளாண்மைத் துறையின் விதை, நீராதாரங்கள், நிலம், இயற்கைவளம்  என அனைத்துக் கட்டமைப்புகளும் கார்ப்பரேட் நலனுக்கேற்ப மறு சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போதுள்ள  வேளாண் சந்தைகளையும் கார்ப்பரேட் நலனுக்கானதாக மறுசீரமைக்கும் வகையில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகிய இரு திட்டங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் (FPO)

விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம் என்பது கூட்டுறவு அமைப்பின் உருத்திரிந்த வடிவம். உலக முதலாளித்துவத்துக்கு சோசலிச அரசும் சமூக அமைப்பும் சவாலாக விளங்கிய சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில், சோசலிசத்தின்பால் ஈர்க்கப்படும் மக்களைத் திசை திருப்பும் நோக்கத்துடனும் எல்லாத் துறைகளிலும் கூட்டுறவுகள் திட்டமிட்டே ஊக்குவிக்கப்பட்டன.

முதலாளித்துவ சந்தையின் சுரண்டலிலிருந்து ஒப்பீட்டளவிலான ஆறுதலை இந்தக் கூட்டுறவு அமைப்புகள் வழங்கியதால், தொழிலாளர் கூட்டுறவுகள் முதல் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டுறவு வரையிலான பல்வேறு சிறு உடைமையாளர்களின் கூட்டுறவு அமைப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மக்களின்  ஆதரவைப் பெற்றன. கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றிய இந்திய அரசும் அன்று கூட்டுறவை ஊக்குவித்தது.

விவசாயி விளைபொருள் சந்தையை இணையதளம் வழியாக தேசியமயமாக்குவது தொடர்பாக இந்திய அரசும் கர்நாடக மாநில அரசும் இணைந்து, கர்நாடக மாதிரியை நாடெங்கும் விரிவுபடுத்துவது தொடர்பாக 26 மாநிலங்களைச் சேர்ந்த வேளாண் அதிகாரிகளைக் கூட்டி வைத்து நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் (கோப்புப் படம்)

சோசலிசம் தனக்குச் சவாலாக இருந்தவரை இந்தக் கூட்டுறவு அமைப்புகளைச் சகித்துக் கொண்ட உலக முதலாளித்துவம், சோசலிசம் வீழ்ந்த மறுகணமே கூட்டுறவு அமைப்புகளை வீழ்த்தும் நடவடிக்கையை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தொடங்கியது. புதிய தலைமுறை கூட்டுறவு அமைப்புகள் (New Generation Co-operatives) என்று அழைக்கப்பட்ட இந்த அமைப்புகள், கூட்டுறவு என்ற பெயரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அந்த அமைப்புகளை முதலாளித்துவ கூட்டுப்பங்கு நிறுவனங்களாக மாற்றின.

சிறு உடைமையாளர்களை அடித்து அழிப்பது, அணைத்து அழிப்பது  என்ற இரு வழிமுறைகளில், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தது. சிறு, குறு விவசாயிகள் தனித் தனியே சிதறி இருப்பதால், சந்தையில் அவர்களால் போட்டியிட இயலவில்லை என்றும் அவர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக மாற்றுவதன் மூலம் போட்டியிடும் திறனை அவர்களுக்கு உருவாக்குவதாகவும் இந்த அமைப்புகளுக்கு வடிவம் கொடுத்திருக்கும் உலக முதலாளித்துவ நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்த வகையில் 2003 -ல் வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கம். 1956 -ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கம்பெனிகள் சட்டத்தின் பிரிவு 581-இல் ஒரு திருத்தம் செய்ததன் மூலம் இந்த சங்கங்கள் கம்பெனிகளாக அங்கீகரிக்கப்பட்டன. உற்பத்தி, கொள்முதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் தொடங்கி, பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்துகொள்வது வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் இந்தக் கம்பெனிகள் ஈடுபடலாம் என்று இச்சட்டம் அங்கீகரித்தது.

நபார்டு வங்கியின் பரிந்துரையின் பேரில் அமலாகிவரும் இத்திட்டத்தின்படி, முதலில் கிராம அளவில் 15, 20 சிறு  குறு விவசாயிகளை இணைத்து விவசாயிகள் விருப்பக் குழுக்களை (INTREST GROUPS) உருவாக்குவது, இதில் முறையாக இயங்கும் குழுக்களை இணைத்து 1,000 விவசாயிகளைக் கொண்ட ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கமாக (FPO) அமைக்கப்படும் என்கிறார்கள்.

ஏற்கெனவே இது போல கரும்பு, தென்னை, மஞ்சள், வாழை விவசாயிகள் தனித்தனிச் சங்கங்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் தனித்து செயல்படுமளவுக்குத் தகுதி, திறமையைப் படிப்படியாக வளர்த்துக் கொள்ளும் சங்கம், எதிர்காலத்தில் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியாக (Farmer producer company – FPC) செயல்படுத்தப்படும் என்றும் கூறுகிறது, நபார்டு வங்கி.

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பின்னணி

கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து அமலாகிவரும் இத்திட்டத்தை தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருப்பது சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பு (SMALL FARMERS AGRI & BUSINESS CONSORTIUM) என்ற நிறுவனம்.

விவசாயிகள் பெயரில் இயங்கும் இந்த நிறுவனத்தில் விவசாயிகள் யாரும் எந்தப் பொறுப்பிலும் கிடையாது. முழுக்க ஓய்வு பெற்ற மத்திய வேளாண்துறை மற்றும் நபார்டு வங்கியின் பல்வேறு உயர் அதிகாரிகள்தான் இதன் தலைமை நிர்வாகிகளாக உள்ளனர். மத்திய வேளாண்மைத் துறையில் பதிவுபெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனமாக இது செயல்படுகிறது. மேலும், வங்கியல்லாத நிதி நிறுவனமாகவும் ரிசர்வ் வங்கியால் இந்நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

SFAC  நேரடியாக FPO -வை அமைக்கும் பணிகளில் ஈடுபடுவதில்லை. மாறாக, இந்தியாவில் செயல்பட்டுவரும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடியாட்களான 21 சமூகக் குழுக்கள் மற்றும் ஆதார நிறுவனங்கள் (resource institute) என்ற பெயரிலான நூற்றுக் கணக்கான தன்னார்வக் குழுக்களை இப்பணியில் இறக்கிவிட்டு, இவற்றைக் கண்காணித்து இயக்கும் வேலையை மட்டுமே செய்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒருசில ஆதார நிறுவனங்களை SFAC நியமித்துள்ளது. இந்த ஆதார நிறுவனங்கள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைப்பதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட வட்டாரத்தின் விவசாய வளம், பயிராகும் முக்கிய விளைபொருள்கள், அதன் சந்தை நிலவரம், பொதுவான மக்களின் கலாச்சாரம் மற்றும் மனநிலை, அரசியல் கட்சிகளின் செல்வாக்கு ஆகியவற்றை ஆய்வுசெய்து அறிக்கை தயாரிக்கும். இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கப்படும்.

ஆய்வில் பரிந்துரைக்கப்படும் பயிர்களுக்குத்தான் உற்பத்தியாளர் சங்கத்தில் முன்னுரிமை கொடுக்கப்படும். இதற்கான நவீன தொழில்நுட்பம், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு, சந்தைப்படுத்துவது ஆகியவை குறித்தும், சங்கத்தை சுயமாக நிர்வகிப்பது குறித்தும் இந்த ஆதார நிறுவனங்களே விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கின்றன.

எதற்கு இந்த திடீர் கரிசனம்?

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கம் தொடங்கிய காலத்திலிருந்து விவசாயத்தைப் புறக்கணித்து வரும் அரசுக்கு ஏன் இந்த திடீர் கரிசனம்?

”வேளாண்மைத்துறையில் தனியார் முதலீட்டை அதிகரிப்பது, இதற்கான விவசாயிகளின் அங்கீகாரத்தை உறுதி செய்வது ஆகியவற்றின் மூலம் இந்திய வேளாண் வர்த்தகத்தை மேம்படுத்துவது”, ”தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் விவசாயிகள் இணைந்து செயல்படுவதற்கான தொழில்நுட்ப உறவுகளை ஏற்படுத்துவது” என்று தங்களின் நோக்கத்தைக் கூறுகிறது SFAC –  என்ற சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பின் இணையத்தளம்.

விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சிறு, குறு விவசாயிகளும் கூடத் தனியார்தான். இந்தத் தனியார்களின் முதலீட்டை அதிகரிப்பதற்கு உதவ மறுக்கும் அரசு, கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிப்பதையும், அதற்கு விவசாயிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதையும் தான் இவ்வாறு குறிப்பிடுகிறது.

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் என்பது ஒரு கம்பெனியாக பதிவு செய்யப்படுவதால், இயல்பாகவே இதில் அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தான் தலைமை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர். பிற சிறு விவசாயிகள் அனைவரும் கம்பெனியின் பங்குதாரர்களாக மட்டுமே இருப்பர்.  என்ன பயிரிடுவது, என்ன விலைக்கு விற்பது ஆகியவற்றை FPO -வின் தலைமை நிர்வாகிகளும், இவர்களுக்கு நிர்வாக ஆலோசகராக உள்ள ஆதார நிறுவனத்தின் பிரதிநிதிகளும்தான் முடிவு செய்வார்கள். இது சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட்டுகளின் நோக்கத்துக்கு ஏற்பவே இருக்கும்.

விளைபொருளின் விலையையும் ஒப்பந்தம் செய்திருக்கும் கார்பரேட்டுகள் தான் தீர்மானிப்பார்கள். இந்த வர்த்தகச் சந்தையில் தலையிடுவதற்கு அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, ”குறைந்தபட்ச விலை”, ”விலை நிர்ணயம்” என்று விவசாயிகள் அரசிடம் கேட்க முடியாது என்பது மட்டுமல்ல, அந்த சொற்களை உச்சரிப்பதே அங்கு சாத்தியமில்லை.

மேலும், உரம், மருந்து மற்றும் வேளாண் கருவி வியாபாரம், இந்திய உணவுக் கழகத்திற்கு இணையாக விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வது, அதைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பது, சங்க உறுப்பினர்களுக்கு கடன் கொடுத்து வசூலிப்பது ஆகிய நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும் என்று மத்திய வேளாண்துறை வெளியிட்டுள்ள FPO-க்கான வழிகாட்டு நெறிமுறை அறிக்கை தெரிவிக்கிறது.

அதாவது, வேளாண் சந்தையின் மீது இதுவரை இருந்துவந்த பெயரளவிலான கட்டுப்பாடு மற்றும் விவசாயிகள்பால் அரசுக்கு இருந்த கடப்பாடு ஆகியவற்றை முழுமையாகக் கைவிடுவதற்கும், விவசாயிகளை கார்ப்பரேட் முதலைகளின் வாய்க்கு தின்னக் கொடுப்பதற்கும் அரசு செய்து வரும் பல ஏற்பாடுகளில் இதுவும் ஒன்று.

இதுவரை 25 மாநிலங்களில் மொத்தம்  975 FPO -க்கள் அமைக்கப்பட்டுள்ளன. (இதில் SFAC – நேரடியாக இயக்குவது மட்டும் 636, பிற நிறுவனங்கள் மூலம் இயங்குவது 339) சுமார் 10 லட்சம் விவசாயிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 51 FPO -க்கள் இயங்குகிறது. பசுமைப் புரட்சியின் பிதாமகன் சி.சுப்ரமணியம் உருவாக்கிய நேசனல் அக்ரோ பவுண்டேசன் உட்பட 11 நிறுவனங்கள் தமிழகத்தில் FPO அமைப்பதற்கான ஆதார நிறுவனங்களாகச் செயல்பட்டு வருகின்றன.

ஈஷா யோகா மையத்தில் நடைபெரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் (கோப்புப் படம்)

2012 -ஆம் ஆண்டில் கோவை அருகில் உள்ள தொண்டாமுத்தூரில் ஜக்கி வாசுதேவின் ஈஷா பவுண்டேசன் அமைப்பு தான், தென்னை விவசாயிகள் மத்தியில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களை உருவாக்கியிருக்கிறது.

2017 – 18 -ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஏற்படுத்தும் பொருட்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக  தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள 81.18 லட்சம் விவசாயிகளில் சுமார் 92% பேர் சிறு, குறு விவசாயிகள் என்றும்,  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 40 லட்சம் விவசாயிகளை இந்த அமைப்பில் இணைக்கவிருப்பதாகவும் அரசு அறிவிப்பு கூறுகிறது.

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பல்வேறு வழிகளில் கள்ள உறவு வைத்துள்ள ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், சமூகக் குழுக்களால் இயக்கப்படும் SFAC – நிறுவனம், மத்திய வேளாண்துறையின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் துணை நிறுவனமாகவே செயல்படுகிறது. FPO -வைப் போலவே e-NAM – எனும் தேசிய வேளாண் மின்னணுச் சந்தைத் திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பையும் SFAC -க்கே கொடுத்துள்ளது மத்திய அரசு.

தேசிய வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை (e-NAM)

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்பதைப் போல, தேசிய வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தையை ஏற்படுத்துவது என்பதும் மோடியின் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை

”மதுரை, ஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்று நாடு முழுவதும் உள்ள முக்கிய வேளாண் சந்தைகளின் தினசரி விலை நிலவரம், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள சரக்குகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை மின்னணு விவரங்களாகத் திரட்டுவது, இதன் மூலம் எந்த மாநிலத்திலிருக்கும் ஒரு வர்த்தகரும், விவசாயியும் நாடு முழுவதுமுள்ள விலை நிலவரத்தைத் தெரிந்து கொள்ள முடியும். குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட்ட 25 விளை பொருட்களுக்கு இலாபகரமான விலையைப் பெற பேரம் பேச முடியும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்கலாம்” என்று மத்திய வேளாண்துறை கூறுகிறது.

வணிகர்கள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் கொள்முதல் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற, தாராள லைசென்சு வழங்குவது, வேளாண் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தர நிர்ணயம் மற்றும் ஏல விதிமுறைகளை உருவாக்குவது, அரசின் வேளாண் விற்பனைக் கமிட்டி(APMC) -யின் செயல்பாட்டு வரம்பைக் கட்டுப்படுத்துவது, கொள்முதல் செய்யும் இடத்தில் மட்டுமே வரி விதிப்பது (single point levy), நாடு முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே லைசென்ஸ் வழங்குவது ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கித் தான் இந்த வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை வடிவமைக்கப்பட்டு வருகிறது.

தனியார் மற்றும் கார்ப்பரேட் வேளாண் நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ளூரளவில் செயல்படும் சந்தைகளும், இடைத்தரகர்களும் பெரும் தடையாக உள்ளனர். தங்களுக்கு நெருக்கமாகவும், ஏற்கெனவே அறிமுகமாகமானவர்களாகவும் இருப்பதால் உள்ளூர் தரகர் மற்றும் வியாபாரிகளையே விவசாயிகள் நம்பிக்கையான நபர்களாக பார்க்கின்றனர். இந்த சந்தை முறைக்கு அப்பாற்பட்ட அந்நிய நிறுவனங்களால், விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை.

எனவே, உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் விடுபடவேண்டுமானால், நேரடியாக தேசிய சந்தையை அணுக வேண்டும் என்றும், அங்கே ஒரு பொன்னுலகம் காத்திருப்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது மோடி அரசு. ஒரு தேசம்  ஒரு வரி, ஒரு தேசம்  ஒரு கல்வி, ஒரு தேசம்  ஒரு பண்பாடு என்ற வரிசையில் வருகிறது ஒரு தேசம் ஒரு சந்தை என்ற இந்த ஏற்பாடு. உள்ளூர் கமிசன் மண்டிக்காரர்களின் சுரண்டலை ஒழிப்பது என்ற பெயரில் உள்ளூர் அளவிலும், மாநில அளவிலும் நிலவுகின்ற பொருளாதாரத்தை முற்றிலுமாக வேரறுப்பதும், இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக் கொள்ளைக்கு வேளாண் சந்தைகளைத் திறந்து விடுவதுமே மின்னணு வர்த்தகச் சந்தை முறையின் நோக்கம்.

விவசாய விளைபொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு e-NAM அவசியம் என்று இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி கூறியிருப்பதும்,FICCI மற்றும் CII போன்ற தரகு முதலாளிகளின் சங்கங்கள், வேளாண் விற்பனைக் கமிட்டிகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் e-NAM -ஐ கொண்டு வர வேண்டும் என்று கோரி வருவதும் இதற்கான நிரூபணங்கள்.

அதனால் தான் கார்ப்பரேட் காவலனான மோடி, 250-ஆக உள்ள மின்னணு வேளாண் சந்தையை நடப்பாண்டில் (2017 – 18)  585-ஆக உயர்த்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவின் முன்மாதிரி ! விவசாயிகளுக்குச் சவக்குழி !

இதுவெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது கர்நாடக மாநிலத்தின் நிலை. அங்கே ராஷ்ட்ரிய இ-மார்க்கெட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (ReMS) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன், கர்நாடகா வேளாண்துறை இணைந்து 2015 -ல் ஒருங்கிணைந்த சந்தை (unified market platform) முறையை கொண்டுவந்துள்ளது.

11,000 கிராமங்கள்,   22 லட்சம் விவசாயிகள், 17,000 கமிசன் ஏஜெண்டுகள்,  32,000 வர்த்தகப் பங்குதாரர்கள்,  157 சந்தைகள் ஆகிய பலத்துடன் ஆண்டுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது, ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனம். இந்த வர்த்தகச் சூதாட்ட நிறுவனம்தான் இன்று, கர்நாடகா மாநிலம் முழுக்க விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற தனியார் சங்கிலித்தொடர் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்து வருகிறது. இந்த கர்நாடகா மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்கும் நோக்கத்தில் சமீபத்தில் 26 மாநில வேளாண் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்.

ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் போலவே, NeML, ECO e MARKET, FRESH e MARKET, NCDFL E MARKET என்று  பல பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தனித்தனியே FPO -க்களை உருவாக்கிக் கொண்டு கார்ப்பரேட் சேவையில் வரிசை கட்டி நிற்கின்றன. இவர்களுக்கான புரவலனாகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் ம.பி., மகாராட்டிரா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ”ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தால் வழக்கத்தைவிட கர்நாடக விவசாயிகள் 38% சதவீதம் அதிக லாபம் பெற்றிருப்பதாக” ஒரு பிரச்சாரத்தை கிளப்பி விட்டது நிதி ஆயோக். பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு பரிசீலித்தால், அது வெறும் 13% மட்டுமே என்பது பின்னர் அம்பலமானது.

இ.சாப்பல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நேரடிக் கொள்முதலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்திய மாநிலம் மத்திய பிரதேசம். கமிசன் மண்டிக் காரர்களைவிட கார்ப்பரேட்டுகள் அதிக விலை தருகிறார்கள் என்ற புருடா அங்கே ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. அது மட்டுமல்ல, ம.பி.யில் 21 சந்தைகள் e-NAM உடன் இணைக்கப்பட்டுள்ளன. விலை வீழ்ச்சிக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மாண்ட்சோர் சந்தையும் அவற்றில் ஒன்று.

விளைபொருட்களுக்கு நியாயமான விலை, அரசு கொள்முதல் என்பதுதான் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை. 25 பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை என்று ஒன்றை அரசு நிர்ணயம் செய்தாலும், அரிசி, கோதுமை ஆகிய இரண்டை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இது நாடுமுழுவதும் நடக்கும் விவசாய கொள்முதலில் வெறும் 6% மட்டுமே. மீதமுள்ள பொருட்களை படுபாதாள விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தாலும், அதனைத் தடுக்கவோ தண்டிக்கவோ மத்திய மாநில அரசுகள் சட்டம் எதுவும் இயற்றவில்லை.

தேசிய மின்னணு சந்தையில் குறைந்தபட்ச விலைக்கு கீழே யாரும் விலை கேட்கக் கூடாது என்ற விதியெதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சுதந்திர சந்தைக்கு எதிரானது என்பதால் குறைந்தபட்ச விலை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.

அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் நவீன வேளாண் முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலமைகளால் பெரும்பான்மையான சிறு விவசாயிகளின் சிறுவீத உற்பத்தி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதை FPO என்ற பெயரில் ஒன்றாகத் திரட்டி, சுதந்திரச் சந்தை முறைக்குள் கொண்டுவருவதன் மூலம், சிறு குறு விவசாயிகளை நிரந்தரமாக ஒழித்துக்கட்டுவது என்பதற்காக தந்திர வலை விரிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளைக் கவ்விப்பிடிக்கும் கிடுக்கியின் இரண்டு முனைகள். வாழ வழிகேட்டு மன்றாடும் விவசாயிகளை இந்தக் கிடுக்கியால் பிடித்து, கார்ப்பரேட் முதலைகளுக்கு தின்னக் கொடுக்கிறது மோடி அரசு.

 -மாறன்
-புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

விவசாயம் குறித்த இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அந்தரங்க உரிமை – உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஆதாரை ரத்து செய்யுமா ?

5

குடிமக்களின் “அந்தரங்க உரிமை” (Right to privacy), இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் என 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 24-08-2017 அன்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

ஆதார் திட்டத்திற்கு எதிராக, அதனைத் தடை செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, கே.எஸ்.புட்டசாமி கடந்த 2012 -ம் ஆண்டு பொதுநல வழக்காக தாக்கல் செய்தார். அவரைப் போன்றே சமூக ஆர்வலர்களான பெசவாடா வில்சன், அருணா ராய், நிக்கில் தேய் உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்டவர்களும் ஆதாருக்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தனர்.

“அந்தரங்க உரிமை” இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும் என 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனினும் மத்திய அரசு ஆதார் திட்டத்தை ரத்து செய்யுமா என்பது கேள்விக்குறியே!

இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கில், “ஆதார் திட்டமானது, தனி மனித அந்தரங்க உரிமையைப் பறிப்பதாகவும், சமத்துவத்திற்கான உரிமையைப் பறிப்பதாகவும் உள்ளது” என்றும், “அது மையப்படுத்தப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற அரசை நோக்கியே இட்டுச் செல்லும்; ஆதார் என்பது தனிமனித அந்தரங்கத் தகவல்கள் திருட்டுப் போவதற்கு வழிமுறையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது” என்றும் “இதன் காரணமாக, ஆதார் திட்டத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்ய வேண்டும்” என்றும் மனுதாரர்கள் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதாடிய அட்டர்ணி ஜெனரல் கே.கே. வேணுகோபால் “எம்.பி.சர்மா வழக்கு (1954)” மற்றும் “கரக்சிங் வழக்கு(1962)” ஆகியவற்றில் உச்சநீதிமன்ற அமர்வு கொடுத்துள்ள தீர்ப்பைச் சுட்டிக் காட்டி ‘அந்தரங்கத்திற்கான உரிமை’ என்பது அடிப்படை உரிமை அல்ல என வாதடினார்.

மேலும் அந்தரங்கம் என்பது ஒரு மேலோட்டமான கருத்தாக்கம்; மேலோட்டமான கருத்தாக்கங்களை எல்லாம் அடிப்படை உரிமைகளாக்க முடியாது; அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 14, 19 மற்றும் 21 ஆகிய எந்தப் பிரிவிலும் அந்தரங்கத்திற்கான உரிமை குறித்து குறிப்பிடப்படவில்லை; இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்தரங்கம் போன்று முழு வடிவமற்ற எதையும் அடிப்படை உரிமைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது; உணவு, உடை, இருப்பிடத்திற்கான அடிப்படை உரிமைகள், அந்தரங்க உரிமைகளை விட முதன்மையானவை என்றும் வாதாடினார்.

இறுதியாக வளரும் நாடுகளில் கண்டிப்பாக ஒரு அடையாள அமைப்பு முறை பின்பற்றப்பட வேண்டும், என்ற உலக வங்கியின் அறிக்கையை சுட்டிக் காட்டி ஆதார் கண்டிப்பாகத் தேவை என்று வலியுறுத்தினார். ஆதார் உலக வங்கியின் உத்தரவிற்கிணங்க கொண்டு வரப்பட்ட திட்டம் தான் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவித்திருக்கிறார், அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்.

இதனையடுத்து அந்தரங்கத்திற்கான உரிமை, அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையில் வருமா என்பது குறித்து முடிவெடுக்க 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றியது உச்சநீதிமன்றம். அரசியல் சாசன அமர்வில் மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தமது பழைய வாதங்களையே முன் வைத்து வாதாடினார்.

மனுதாரர்கள் சார்பில் இதற்கு எதிர்வாதம் வைத்த மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம், “அந்தரங்கம் என்பது, சிந்திப்பதற்கும், சரியானவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கும் தனிமனித சுயாட்சிக்குமான சுதந்திரமே ஆகும்; இத்தகைய அந்தரங்க உணர்வை மேற்கொள்ளாமல் எவ்வித அடிப்ப்டை உரிமைகளையும் நடைமுறைப்படுத்த முடியாது” என வாதாடினார்.

ஆதார் திட்டம் உலக வங்கியின் ஆணைப்படி செயல்படுத்தப்படுவதை மறைமுகமாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு வழக்குறைஞர் கே.கே. வேணுகோபால்

மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய முன்னால் அட்டர்னி ஜெனரல் சோரப்ஜி, அந்தரங்கத்திற்கான உரிமை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் 14, 19 மற்றும் 21 ஆகிய அனைத்துப் பிரிவுகளிலும் அடங்கியிருப்பதையும் சுட்டிக் காட்டினார். மேலும் பத்திரிக்கைக்கான சுதந்திரம் என்பது அரசியல் சாசன சட்டத்தில் நேரடியாக இல்லை என்பதைச் சுட்டிக் காட்டிய சோரப்ஜி, “பத்திரிக்கை சுதந்திரம் எவ்வாறு பிரிவு 19 -லிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதோ, அதைப் போலவே அந்தரங்கத்திற்கான உரிமை என்பதை பிரிவு 21 -லிருந்து பரந்த முறையில் எடுத்துக் கொள்ளலாம்” என்று வாதிட்டார்.

இந்த வாத பிரதிவாதங்களைக் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை 24-08-2017 அன்று அறிவித்தது. அந்தரங்கத்திற்கான உரிமை குடிமக்களின் அடிப்படை உரிமையாகும்; அது, அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையில் (Right to live) அடங்கும்; அந்தரங்கத்திற்கான உரிமை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளுக்கான ஒட்டுமொத்த பிரிவுகளுக்குள்ளும் அடங்கும் என்றும் கூறியுள்ளது.

இத்தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் ஆதார் திட்டத்திற்கான பலத்த அடி எனக் கருதுகின்றனர். ஆனால் இதற்கு முன்னரே உச்சநீதிமன்றம் , ஆதார் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செயல்படுத்தப்பட்ட இலட்சணத்தை வைத்து ஆதார் திட்டத்தின் மீதான இத்தீர்ப்பின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஆதார் குறித்த ஒரு வழக்கில், ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என சில ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆதார் இருந்தால் தான் பள்ளித் தேர்வு எழுத முடியும் என்பதில் தொடங்கி, ஆதார் இருந்தால் தான் பிணத்தைக் கூட எடுக்க முடியும் என்ற வகையில் தான் இன்று வரை மத்திய அரசு பல்வேறு சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இதுவரையிலும் மதிக்காத மத்திய அரசு, இனி மேல் புதுப்பிறவி எடுத்தா உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து விடப் போகிறது?

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் அமர்ந்தது முதல் இன்று வரை தொடர்ச்சியாக உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம் ஆகிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு நிறுவனங்களின் மகுடிக்கேற்ற பாம்பாய் ஆடி வருகிறது. ஜன்–தன்–யோஜனா, மானியம் வங்கிக் கணக்கோடு இணைப்பு, புதிய கல்விக் கொள்கை, மருத்துவம் தனியார்மயம், சமையல் எரிபொருள் மானியம் இரத்து, ரேஷன் கடைகள் மூடல் எனத் தொடர்ச்சியாக மக்கள் நலத் திட்டங்களை முடக்கி, மானியங்களை ஒட்டு மொத்தமாக ஒழித்து விட முனைந்து வருகிறது.

இந்த மக்கள் விரோத செயல்பாடுகளை எல்லாம் ஊழல் ஒழிப்பு, வெளிப்படைத்தன்மை, முறைகேடுகள் ஒழிப்பு என பல்வேறு பெயர்களில் நியாயப்படுத்தி வருகிறது
இந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கவும் அதன் எதிர்ப்புகளை நசுக்கவும் அறிமுகப்படுத்தப்பட்ட உத்தி தான் ஆதார். ஆதார் என்னும் தனிப்பட்ட அடையாள முறையின் மூலம் மக்களின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருகிறது மத்திய அரசு. இன்னொரு புறம் மக்களின் அனைத்து தகவல்களையும் பதிந்து கொண்டு அவர்களது வாழ்க்கை, பொருளாதாரம் போன்றவற்றை தீர்மானிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பயன்படுத்துவதும் ஆதாரின் நோக்கமாகும்.

அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மக்களோ, தனிநபர்களோ போராடும் போது அவர்களை தனித்தறிந்து அவர்களது அன்றாட செயல்பாடுகளை ஆதார் அட்டையின் மூலம் முடக்க முடியும். அதன் காரணமாகவே, ஆதாரை கல்வி பயில்வதில் தொடங்கி வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு என இழுத்து கடைசியில் சுடுகாடு வரைக்கும் கட்டாயமாக்கியிருக்கிறது மோடி அரசு.

தற்போதைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அந்தரங்கத்திற்கான உரிமை, ஒரு அடிப்படை உரிமை என்பதை ஒரு காகிதத்தில் அச்சடித்துத் தந்திருக்கிறது, அவ்வளவுவே. இதனை அடிப்படையாக வைத்து, பிரதான வழக்கில் ஆதார் கட்டாயமாக்கப்படுவதை இரத்து செய்து இதே நீதிமன்றம் உத்தரவிடுமா? என்பது கேள்விக்குறியே! அப்படியே இரத்து செய்தாலும் அதனை மோடி அரசு நடைமுறைப்படுத்தாது என்பதே நமது முன் அனுபவம் நமக்குச் சொல்லும் பாடம். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட அரசு திட்டம் – மானியத்திற்கு பயனர்கள் அனைத்து தகவல்களையும் தரவேண்டும் என்று சொல்லிக் கூட மறைமுகமாக ஆதாரை கட்டாயமாக்க முடியும். “உங்கள் தேசத்தைக் காக்க உங்களது விவரங்களை கொடுங்கள், கொடுக்காதவர்கள் தேசவிரோதிகள்” என்று பாஜக அறிவுக் கூலிப்படையினர் விவாதங்களில் மிரட்டினார்கள். ஆக அப்படியும் கூட ஆதாரை மறைமுகமாக கட்டாயமாக்கலாம்.

ரேசன் மானியம் ரத்தானதை எதிர்த்துப் போராடுவதும், ஆதார் திட்டத்தை எதிர்ப்பதும் வேறு வேறு அல்ல! இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் முதலாளிகளுக்கு விற்று வரும் இந்திய அரசு அதற்கான பிடிமானத்தை ஆதார் மூலம் உருவாக்க நினைக்கிறது. அல்லது கிட்டத்தட்ட உருவாக்கி விட்டது. முன்னதை வீழ்த்தும் போராட்டம் வலுப்பெறும் போது பின்னது தானாகவே வலுவிழக்கும்.

மேலும் படிக்க :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஷெல்லி லூபென் – ஒரு முன்னாள் போர்னோ நடிகையின் வாக்குமூலம்

5

போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம் – பாகம் 2

பாசப்படங்களில் அலங்காரத்தோடு வரும் பெண்கள், அவர்கள் நடிகைகள் என்று அழைக்கப்பட்டாலும், அது வெறுமனே நடிப்பில்லை. தன் உடலையும், வாழ்வையும் சிதைப்பதற்காக ஊதியம் வாங்கும் ஒரு தற்கொலைத் தொழில்தான் அது. அலங்காரத்தையும், பாலியல் அசைவுகளையும் ஆவேசத்தோடு பார்க்கும் பார்வையாளர்களுக்கு அப்பெண்ணின் பிறப்புறுப்பு எப்படி சிதைக்கப்படுகிறது என்றோ அவள் பிறந்த வாழ்வின் பொருளே எப்படி குதறப்படுகிறது என்றோ தெரிவதில்லை.

ஷெல்லி லூபென் அப்படி ஒரு நடிகை – என்ன சொல்கிறார்?

இருபத்தி நான்கு வயதில் ஆபாசப் பட உலகில் நுழைந்தேன். அதற்கு முன் விபச்சாரியாக, கேளிக்கை விருந்துகளில் ஆபாச நடனமாடும் பெண்ணாக காலம் கழித்தேன். மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவள் நான். ஆபாசப் பட உலகத்தால், ஒரு காலத்தில் நான் வெகுவாகப் புகழப்பட்டேன். போர்னோ உலகில் நுழையும் போது எனக்கு பலவித வாக்குறுதிகள் தரப்பட்டன. பணம், புகழ், அங்கீகாரம், போர்னோ உலகின் மாடல் என்று எல்லாமே என் காலடியில் வந்து சேரும் என்று பொய் வாக்குறுதியளித்தனர்.

ஷெல்லி லூபென்

இதைத் தவிர 3 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை இலவசம் என்றனர். அதாவது என் உடல்நலத்தைப் பேணுவதில் அவர்களுக்கு அத்தனை அக்கறையாம்! 30 படங்களில் நடித்த பிறகு எனக்கு இரண்டு கொடிய பால்வினை நோய்கள் வந்தன. ஒன்று எச்.பி.வி (Human Papilloma Virus – HPV) இரண்டாவது ஹெர்பீஸ்(Herpes). முதலாவது பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் இரண்டாவது நோயான ஹெர்பீஸ் இப்போதுள்ள எச்.ஐ.வி(HIV)-க்கு சமமானது. இந்த நோய் ஒருவருக்கு வந்ததென்றால் அவருடைய வாழ்க்கை முடிந்து விட்டது எனலாம். ஆகவே இந்நோய் என் வாழ்வையே பாழாக்கியது. தூக்க மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றேன்.

ஆனால் துரதிஷ்டவசமாக நான் சாகவில்லை. என் உடலில் எங்கு பார்த்தாலும் ஹெர்பீஸ் நோயின் தாக்கம் வெளிப்பட்டது. உதடுகள், தொண்டை, பிறப்புறுப்பு, மலத்துவாரம் என எல்லா இடங்களிலும் இந்த நோய் என்னை வாட்டி வதைத்தது. கிட்டத்தட்ட ஒரு பேய் போல மாறிவிட்டேன். என்ன சொல்லி என்னை இங்கு அழைத்து வந்தார்களோ அதற்கு எதிர்மாறாகவே எல்லாம் நடந்தது. கண்ணாடி முன் என் உருவத்தையே பார்க்கச் சகிக்காத அளவுக்கு தோற்றம் மாறியது.

என் வாழ்க்கை முடிந்துவிட்டதென நினைத்தேன். என்னைப் போன்றே இந்தத் தொழிலில் ஈடுபடும் பல பெண்களும் இவை போன்ற நோய்களால் பாதிக்கப்படும்போது வாழ்வே முடித்துவிட்டதாக கருதிக்கொண்டு தற்கொலை செய்கின்றனர். இத்தகைய பால்வினை நோய்கள் இத்தோடு நின்றுவிடுவதில்லை. எனக்கு 43 வயதாகின்றது. மாதவிடாய் பிரச்சினை இன்னும் தீரவில்லை, ஹெர்பீஸ் நோயால் என் கருப்பையின் வாய்ப் பகுதியை வெட்டி எடுத்து விட்டனர். மொத்தத்தில் என் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு விட்டது.

இப்படி ஆபாசப் பட உலகம் எங்களை மட்டும் சிதைப்பதில்லை. பார்ப்பவர்களையும் உயர் மன அழுத்தத்தில் தள்ளுகின்றது. ஆபாசப் படங்களை ஒரு நோய் என்றே சொல்வேன். பார்ப்பதற்கு அழகாகக் காட்சிப்படுத்தப்படும் இந்தப் படங்களில் நடிக்கும் பெண்களின் நிலை என்னவாகுமென்று நீங்கள் புரிந்து கொண்டால் இந்த நோயை ஒழிக்க நீங்களும் முயற்சி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த உரை மட்டும் நமக்கு போதுமா என்ன? ஷெல்லி லூபென்னுக்கும் தெரியும். அதற்காகவே அவர் தனது குழந்தைப் பருவம் துவங்கி போர்னோ பருவம் குறித்த நாட்களை கதையாக விவரிக்கிறார். யாரும் இத்தகைய கதையை அதுவும் தனது சொந்த வாழ்க்கையை விவரிப்பது அசாத்தியம். ஏழ்மை, விபச்சாரம், துகிலுறியும் நடனம், போர்னோ இறுதியில் அழிவு இவைதான் இவர்களது பொது அத்தியாயங்கள்…. என்றாலும் அந்த வாழ்வின் இருண்ட பக்கங்களை எப்படி உணர்வது? வெளிச்சத்தில் எடுக்கப்படும் போர்னோ படங்களை இருட்டில் பார்த்து குதூலிக்கும் எவரும் அந்த குதூலகத்தை தொடர முடியாது. ஏனெனில் நடிப்பில் எப்படி வலியும் வதையும் இருக்கிறதோ அதுவே பார்க்கும் போதும் இறுதியில் வந்து சேர்கிறது.

இனி ஷெல்லி லூபென்னின் கதையைப் பார்ப்போம்.

ஓ! ரிக்கி இன்று நீ என்னை அழ வைக்கப் போகிறாய் என்று நினைக்கிறேன். போர்னோ உலகின் அவலங்களை உன் முன்னே நின்று சொல்வதற்கு எனக்கு கண்டிப்பாக மனத்திடம் தேவை. அது அத்தனை எளிதான ஒன்றா என்ன? எனவே என்னை திறந்த மனதுடன் பேச அனுமதிக்க வேண்டுகிறேன்.

ஒரு வேளை நான் சொல்லி முடித்தபின் நீங்கள் எனக்கு நன்றி கூற விழையலாம்; ஏனென்றால் போர்னோவால் பாதிக்கப்படாத குடும்பம் உண்டா என்ன? ஒரு மளிகைக் கடைக்குப் போனால் கூட அங்கே சிலர் என்னிடம் வந்து என் கணவர் போர்னோவில் இருக்கிறார் அல்லது தன் மகன் போர்னோவில் இருக்கிறார் என்று புலம்புகின்றனர். போர்னோ எல்லா இடங்களிலும் நுழைந்து விட்டது. போர்னோ என்பது மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் ஒரு மோசமான பொய் நம்பிக்கை என்பதை என்னால் நிரூபிக்க முடியும்.

விபச்சாரத் தொழிலிருந்து போர்னோ உலகத்திற்கு எப்படி வந்தேன் என்பதை முதலில் சொல்கிறேன். முதலாவதாக தெருக்களில் விபச்சாரத்தில் ஈடுபட்டேன். எனக்குத் தெரிந்த வரையில் போர்னோ உலகில் நுழையும் எல்லா பெண்களும் ஏறக்குறைய இதே வழியில் தான் நுழைகின்றனர்.

நான் என்னுடைய 9-ம் வயதில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டேன். ஒரு பெண்ணால் ஓரினச் சேர்க்கைக்கு உள்ளாக்கப்பட்டேன்; மற்றொரு முறை ஒரு ஆணால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். அப்போது அவர் என்னிடம் இதை உன் பெற்றோரிடம் சொல்லத் தேவையில்லை என்று கூறினார். இரகசியம் என்பது இது தானோ என்றே அப்போது நான் உணர்ந்தேன். அந்த வயதில் அதை யாரிடமும் சொல்லத் துணிவில்லை. இது என்னிடம் ஒரு வன்முறைப் பண்பை உருவாக்கியது. ஏனோ என் பெற்றோரால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என் குடும்பத்தில் ஒரு கறுப்பு ஆடானேன். என்னால் குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் உருவாயின. என் செயல்பாடுகளினால் அதிருப்தியடைந்த என் தந்தை நோய்வாய்ப்பட்டார். ஒரு கட்டத்தில் என்னை வீட்டை விட்டே விரட்டி விட்டார்.

கையில் கிடைத்த பைபிளுடன் வீட்டை விட்டு வெளியே வந்த எனக்கு அப்போது வயது 18. மேல்நிலைப் படிப்பைச் சராசரியாக முடித்துவிட்ட இளம்பெண் நான். உலகத்தைப் பற்றிய அறிவு கிஞ்சிற்றும் தெரியாத வயது அது. என்னை ஒரு முட்டாளாக, யாராலும் நேசிக்கப்படாதவளாக, வாழத்தகுதியற்றவளாக உணர்ந்தேன். அப்படி நான் தனித்து விடப்பட்ட சான் ஃபெர்னாடோ பள்ளத்தாக்கு தான் ஆபாசப் பட உலகின் பிறப்பிடம், 85% ஆபாசப்படங்கள் கலிஃபோர்னியாவில் தான் உற்பத்தியாகின்றன என்ற விவரமெல்லாம் அப்போது எனக்குத் தெரியவில்லை.

உலகில் தனித்துவிடப்பட்ட எனக்கு அப்போது துணையாய் இருந்தது பைபிள் மட்டுமே. சிறு பிள்ளையிலிருந்தே மறைக்கல்வி வகுப்புகளுக்குப் போனதால் அதை எப்போதும் கையில் வைத்திருப்பது பழக்கமாகிவிட்டது. இப்போது இயேசுவை நோக்கிப் பேசினேன் “இயேசுவே என்னை இப்படி அனாதையாக அலையவிட உமது மனம் எப்படி ஒப்புக்கொண்டது?”. பின்புறம் ஒரு ஆணின் மென்மையான குரல் என்னை நோக்கி “இனிய பெண்ணே! என்ன ஆனது உனக்கு?” என்று கேட்டது. உடனே நான் அவரிடம் வீட்டில் நடந்ததைக் கூறி அழ ஆரம்பித்தேன். கவலைப்படாதே சிறுமியே நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று அவர் திரும்பக்கூற உடனே நான் இயேசு தான் எனக்காக ஒரு நபரை அனுப்பியதாக நம்பினேன்.

அந்த நபர் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைக் காட்டி அங்கே ஒரு நல்ல மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருடன் நீ சில நிமிடங்கள் தனிமையில் செலவிட்டால் 35 டாலர் பணம் தருவார் என்று நைச்சியமாகப் பேசினார். உடனே எனக்குக் கோபம் வந்துவிட்டது. ”என்னை என்ன விபச்சாரியென்றா நினைத்துக்கொண்டீர்கள்; நான் வீட்டை விட்டு வெளியே விரட்டப்பட்டவள் தான். ஆனால் விபச்சாரியல்ல” என்று கத்தினேன். ஆனால் அந்தக் கோபத்திலும் ஒரு கெட்ட எண்ணம் தோன்றியது. கடவுளுக்கும் என் மேல் அக்கறையில்லை; பெற்றோருக்கும் என் மேல் அக்கறையில்லை. பின் எதற்காக நான் அச்சப்படவேண்டும்?

அந்தக் கணத்திலிருந்து நான் விபச்சாரியாக மாறினேன். அந்த நல்ல மனிதரிடம் 35 டாலருக்காக விலை போனேன். அவரின் அன்பும் பணமும் என்னை ஆட்கொண்டன. என் தந்தை ஒரு போதும் என் மீது அன்பு காட்டியதில்லை. எனவே ஏதோ ஒன்று என்னை அவரிடம் ஆட்கொள்ள வைத்தது. ஆரம்பத்தில் இது ஒரு ஏமாற்றும் வித்தை என்பதை நான் அறியவில்லை; போகப்போக அவரின் கொடூர குணம் வெளிப்பட ஆரம்பித்தது. இயற்கைக்கு முரணான வழிகளில் என்னைப் பலருடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதால் அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்தேன்.

இப்போது உலகம் வேறு விதமாகக் காட்சியளித்தது. ஏன் நான் பிறரைச் சார்ந்திருக்க வேண்டும், நானே ஏன் நேரடியாக விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று எண்ணி, தெருக்களில் நேரடியாக விபச்சாரத்தில் இறங்கினேன். அடித்தட்டுத் தொழிலாளர்களிடம் சென்று 50 டாலர்களுக்கு விலை போனேன். மெக்கானிக் கடைகளின் பின்புறம் உள்ள அழுக்குப்பிடித்த அறைதான் படுக்கை அறை. சுத்தம், சுகாதாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒரு முறை ஒரு மனிதனின் ஆணுறுப்பிலிருந்து விந்தணுவும், இரத்தமும் வெளி வந்ததை என் முகத்தில் தெளிக்க விட்டான். இது என்னை மிகவும் அச்சுறுத்திய ஒன்று; ஏனென்றால் அப்போது என்னுடைய வயது வெறும் 18. என் முடியைப் பிடித்து இழுத்து அடிப்பார்கள், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்வார்கள்; பெரும்பாலும் இயற்கைக்கு முரணான உடலுறவு; ஆனால் மறுப்பேதும் சொல்ல முடியாது; நான் ஒரு விலைமகள் அல்லவா?

இரண்டாவது நிகழ்வு என்னை மற்றொரு விபச்சாரி சந்தர்ப்பவசமாகப் பார்க்க நேரிட்டது. நீ ஏன் தனியாக அலையவேண்டும், நம்மைப் போன்றோருக்கு வேலை கொடுக்க பல பேர் இருக்கின்றனர் என்று கூறி என்னை அழைத்துச் சென்று ஒரு மேடம்-இடம் கொண்டு சென்றார். விபச்சாரம் என்பது வாழ்வில் சுவராசியமான ஒன்று என்பது அவர் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடம். உடல் சுகாதாரம், உடல் கவர்ச்சி இவையிரண்டையும் எப்படிப் பராமரிப்பது என்பதை அவர்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்.

இப்போது ஆண்களின் மீதான என் வெறுப்பு மேலும் அதிகமானது. 50 வயதைக் கடந்த அந்தப் பெண் தான் விபச்சாரத்தின் போது வரும் சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது; சூழ்நிலைகள் சிக்கலாகும் போது எப்படி பொய் சொல்லி தப்பிப்பது, குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலிசிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று கற்றுக் கொடுத்தார். போலிசிடம் சிக்கிக் கொள்ளும் போது அந்த நாளில் கிடைத்த பணமெல்லாம் அவர்களுக்குப் போய் விடும்; போதாக்குறைக்கு அவர்களுடன் மது விருந்துகளுக்கு வேறு அழைத்துச் செல்வார்கள் அந்த வெட்கம் கெட்ட அதிகாரிகள்.

விபச்சாரத்தில் பொதுவாக பெண்களுக்கு பல்வேறு சிக்கல்கள் வரும். ஆணுறை அணிந்து உடலுறவு கொள்ள ஆரம்பிப்பார்கள், சில நிமிடங்களில் அதைக் கழட்டி எறிந்து விடுவார்கள்; எழுந்து சோதிக்கக் கூட அனுமதி கிடைக்காது; சிலர் ஆபாசப் படங்களைப் பார்த்துக்  கொண்டே உடலுறவில் ஈடுபடுவார்கள். ஒருவேளை விபச்சாரத் தொழிலை விட போர்னோ தொழில் இலகுவாக இருக்குமோ என்று நினைப்பேன். அந்த ஆசை தான் என்னை போர்னோ உலகை நோக்கி இழுத்தது.

விபச்சாரத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களைப் போலவே என்னையும் மது மற்றும் போதைப் பொருள் அருந்தச் சொல்லி கட்டாயப்படுத்துவர். சிலருக்கு பால் வினை நோய்கள் இருப்பது நன்கு தெரிந்திருந்தாலும் அதை எங்களிடம் மறைத்து பாதுகாப்பற்ற வகையில் உடலுறவு கொள்வார்கள். சிலர் எங்களிடமிருக்கும் எல்லா பொருள்களையும் பறித்துக் கொண்டு விரட்டிவிடுவர். இந்த 14 மாத விபச்சாரத் தொழிலில் இரண்டு முறை கர்ப்பமாகினேன். முதல் குழந்தை உருவான சில நாட்களில் ஒரு காமவெறியனால் நான் கடுமையாகத் தாக்கப்பட்டதால் கரு கலைந்து போனது. ஆனால் இரண்டாவது கரு பிழைத்துக் கொண்டது. அப்போது என்னுடைய பெயர் ஜொவானி.

மூன்றாவதாக விபச்சார வாழ்க்கையின் மீது வெறுப்புற்று ஆபாச நடன விடுதியில் சென்று கவர்ச்சி நடனம் ஆடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் எனக்குப் போதிய வயது தகுதியில்லை. பாலியல் தொழிலில் சீக்கிரம் வளர்ந்தால் தான் காசு பார்க்க முடியும். அமெரிக்காவானாலும் மாற்று வழி இல்லையா என்ன? போலி அட்டை ஒன்றைத் தயாரித்தேன். வேலையும் கிடைத்தது. நடன விடுதி உரிமையாளருக்கு என் வயதைப் பற்றியா கவலை? என் உடலைப் பற்றி தானே?

விபச்சார வாழ்க்கைக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. விபச்சார விடுதிகளில் இருந்த சுகாதாரம் என்பது இமியளவும் இல்லை. இதில் குறிப்பாக நாங்கள் உடை மாற்றிக் கொள்ளும் அறை மிக மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டிருக்கும். கிழிந்து போன அழுக்குத் துணிகள், போதைப் பொருட்கள், உடைந்த கண்ணாடிகள் இன்னும் பலப்பல. இந்த அறைகள் தான் எங்களுக்கு உடைமாற்றும் அறை. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆபாச நடன விடுதிகளில் கூட இதே நிலை தான். நீங்கள் ஹாலிவுட் படங்களைப் பார்க்கும் போது கதாநாயகன் நடன விடுதிகளுக்குச் செல்லும் காட்சிகள் வரும். அதைப் பார்த்து இப்படி ஒரு உல்லாச நடன விடுதியா என்று வியந்திருப்பீர்கள். ஆனால் அவையனைத்துமே பொய் என்பதற்கு இதை விட ஒரு விளக்கம் தேவையில்லை.

வாடிக்கையாளர்கள் ஆபாச நடனமாடும் என்னைப் போன்ற பெண்களை, மிகவும் மோசமான வார்த்தைகளால் தான் அழைப்பார்கள். அங்கே விபச்சாரமும் தவிர்க்க முடியாத ஒன்று. நடன விடுதியில் எங்காவது ஒரு மூலையிலோ, அல்லது வாகனங்கள் நிறுத்தும் பகுதியிலோ விபச்சாரத்தில் நாங்கள் ஈடுபட வேண்டி வரும். வழக்கம்போல மதுவும், போதைப் பொருட்களும் இலவசமாகக் கிடைக்கும். திடீரென மிருகங்கள் போல் அடித்துக் கொள்வார்கள்; சில சமயங்களில் துப்பாக்கிச் சூடும் நடக்கும். ஒரு முறை எனக்கு மிக அருகில் இருந்த ஒருவரைச் சுட்டுக் கொன்றதில் என் மீது இரத்தம் சிதறிக் கொட்டியது. மரணத்தின் விளிம்பிற்குச் சென்று வருவது சாதாரண நிகழ்வாகியது.

இப்படி இருக்கும்போது நான் அடிக்கடி பார்த்த விளம்பரம் ஒன்று என்னை வெகுவாகக் கவர்ந்தது. மெக்சிகோ நாட்டில் ஒரு ஆபாச நடன விடுதியில் வாரத்திற்கு 2000 அமெரிக்க டாலர்கள் சம்பளம் என்ற விளம்பரம் தான் உடனடியாக அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட போது கடற்கரையில் நடனமாட வேண்டும், கை நிறைய பணம் என்றனர். முதல் வகுப்பு விமானக் கட்டண இரசீதுடன் நான் சேர வேண்டிய இடம் குறித்த தகவலும் வந்தது. ஆனால் நான் தரை இறங்கி மெக்சிகோ சென்றடைந்ததும் தான் எனக்கு அங்குள்ளவர்கள் மூலம் நிலவரமே புரிந்தது!!! ஆம் நான் பாலியல் தொழிலுக்காக நாடு கடத்தப்பட்டேன்!!.

நான் இருந்த இடத்தைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அன்றே தப்பிக்காவிடில் பிறகு வாய்ப்பேயில்லை என்று கருதி கட்டிடத்தில் நெருப்பு பிடித்து விட்டதாக கத்திக்கொண்டே வெளியில் ஓடி வந்து இறுதியில் வாயிற்காப்பாளன் வெளியே விட மறுக்க அவனை ஒரே அடியாய் அடித்துத் தள்ளிவிட்டி ஒரு காரைப் பிடித்து ஒரு வழியாக வெளியேறி திரும்பவும் அமெரிக்காவுக்கு வந்து விட்டேன்.

ஆறு வருடங்கள், விபச்சாரம், ஆபாச நடனம் அப்பப்பா சலித்துப் போய் விட்டது வாழ்க்கை! தொடர்ந்து பலமுறை தற்கொலை முயற்சிகள் செய்தேன்! ஆனால் எப்படியோ காப்பாற்றப்பட்டு விட்டேன். ஆண்களைக் கண்டாலே எரிச்சலாயிருந்தது. இவர்களால் வராத பிரச்சினைகள் தான் என்ன? புலிமியா, போதை பழக்கம், பேரனோயா எனப்படும் மனநோய், உயர் மனஅழுத்தம், பி.டி.எஸ்.டி(PTSD – Post-Traumatic Stress Disorder ) எனப்படும் பயத்தினால் உருவாகும் ஒருவித மனநோய், பித்துப் பிடித்தல் இப்படி பல நோய்களால் எங்களுக்கு அச்சுறுத்தலுண்டு.

இந்த நிலையில் தான் ஆபாச நடன விடுதிக்கு சில சமயங்களில் நடனமாட வரும் ஒரு பெண் என்னிடம் வந்து “ நீ மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளாய்! ஏன் நீ போர்னோ உலகத்துக்குள் வரக்கூடாது? அங்கு ஒரு படத்தில் நீ நடித்தாலே போதும், 2000 அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைக்கும், அது மட்டுமன்றி, பெயரும், புகழும் சேர்த்தே கிடைக்கும் என்று ஆசை காட்டினாள். சட்டப்பூர்வமான தொழில், மருத்துவ சோதனைகள் இலவசம், கை நிறைய பணம், வேறு என்ன வேண்டும் இதை விட. ஏற்கனவே ஒரு குழந்தைக்குத் தாயானதால் இது பாதுகாப்பான தொழிலாகத் தோன்றியது.

நான்காவதாக போர்னோ துறையில் நுழைந்தேன். இப்போது என் பெயர் ராக்சி(Roxy).

(தொடரும்)

-வரதன்

(இக்கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்)

_____________

இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா? மக்களின் விழிப்புணர்ச்சிக்கு போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கண்ணைப் பறிக்கும் கம்பியில்லா வண்ணச் சிறை !

3

“எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பிக்பாஸ்” வசந்த் & கோ விளம்பரத்தில் கமலுக்குப் போட்டியாக வசந்த குமார் தோரணை காட்டியிருந்தார். ஆடித் தள்ளுபடியின் இணைப்பு விளம்பரங்களில் நாளுக்கொரு அறிவிப்பு!

“இப்போது அலுவலகம் போக நல்ல பேண்ட் இல்லையே” என்றார் கணவர். முன்பு “திருமணம் ஆனபிறகுதான் ஒழுங்கா சட்டை பேண்ட் போட ஆரம்பித்திருக்கிறேன்” என்றதும் அவர்தான். தன்னை மறந்து அலுவலகத்தில் பணியாற்றுவதாக அவருக்கு ஒரு நினைப்பு. ஆனாலும் அவரைக் கவனிக்க ஒருத்தி இருக்கிறேன் என்பதால் வரும் மிதப்புதான் அது என்றால் அவர் அத்தனை சீக்கிரம் ஒத்துக் கொள்ள மாட்டார். போகட்டும். தி நகருக்கு போக வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவருக்கு இரண்டு பேண்ட், வாய்ப்பிருந்தால் எனக்கு இரண்டு சேலை.

மாதிரிப் படம்

சரவணா ஸ்டோர் ஆடி தள்ளுபடியின் “ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்“ என்ற விற்பனை விளம்பரம், எல்லா இடங்களிலும் இழுத்தது. முன்பெல்லாம் ரங்கநாதன் தெருவில் இருக்கும் சரவணாதான் எங்களுக்கு அத்துப்படி. இப்போது அங்கேயே இரண்டோ மூன்றோ வந்து விட்டது. பேருந்தில் இறங்கி அருகாமையில் இருக்கும் சரவணா ஸ்டோருக்கு போனேன்.

காலை நேரம் என்பதால் கூட்டம் அலை மோதவில்லை. பேண்ட் எடுப்பதில் பிரச்சினை இல்லை. சேலைதான் அலைக்கழித்தது. ஒன் + ஒன் என்ற அட்டை தொங்கவிட்ட விலை சலுகை அட்டைப் பெட்டியில் என்னையும் சேர்ந்து ஐந்து பேர் இருந்தனர். ஒரே விலையில் இரண்டு சேலை கிடைக்காமல் அனைவருமே குப்பையைக் கிளறும் கோழியானோம். “பிளீஸ்க்கா கொஞ்சம் கலைக்காம பாருங்க” என்றவாறு வயிற்றை பிடித்துக் கொண்டு வலி தாங்காத வேதனையுடன் புன்னகையை முத்தில் காட்டினாள் அந்த விற்பனைப் பெண்.

என்னம்மா ஆச்சு உடம்புக்கு முடியலையா?

ஆமாக்கா வயித்து வலி.

ப்ரீயட் டயமாம்மா?

இல்லக்கா ஒரு வாரமா வலிக்குது. அல்சர் வந்துருச்சா, இல்ல தண்ணி அதிகம் குடிக்காததால ஏதாவது பிரச்சனைன்னு தெரியல.

தெரிஞ்சே ஏன் தண்ணி குடிக்காம இருக்கீங்க?

ஏ.சி.யிலேயே நிக்கறதால தண்ணி தாகமே அடிக்காது. எந்த நேரமும் கஸ்டமரு கூடவே இருக்கணுமா, நமக்கா தண்ணிக் குடிக்க ஞாபகம் வராது.

சரிம்மா.! டாக்டர பாக்க வேண்டியதுதானே?

சூட்டு வலி; கடையில மாத்தர வாங்கிப் போட்டா சரியாடும்னு நெனச்சேன். ஆனா மாத்தர போட்டா கொஞ்சம் கொறையுது இல்லன்னா உயிர் போறா மாதிரி வலிக்கிது. நாள மறுநாள்தான் டாக்டர பாக்கனும்!

ஏன் நாள கடந்துறீங்க. இன்னைக்கி பாத்தா என்ன?

லீவெல்லாம் கொடுக்க மாட்டாங்கக்கா. ஒடம்புக்கு முடியலன்னு போட்டுக்கலாம். ஆனா சம்பளம் கெடையாது.

ஒரு நாள் சம்பளம் போன பரவால்ல. உடம்புதானே முக்கியம் லீவு போட வேண்டியதுதானே?

விடுமுறை நாள்ல நாம லீவு போட்டா ஒரு வார சம்பளத்த கட் பண்ணிருவாங்க!

மாதிரிப் படம்

என்னம்மா அநியாயமா இருக்கு?

இப்புடிதான் இருக்கும்ங்கறத ஏத்துக்கிட்டுதானே வேலைக்கே வந்துருக்கோம். நாமெ வருத்தப்பட்டா முதலாளிங்க இரக்கப்படவா போறாங்க!

உங்களுக்கு வார விடுமுறையே கிடையாதா?

மாசம் ரெண்டு நாள் லீவு உண்டு. ஆனா சம்பளம் தான் கிடையாது.

அதுக்குப் பேரு விடுமுறையே கெடையாதே?

சரி சலுகையின்னு வச்சுக்குங்க. எது எப்படியோ சம்பளம் கிடையாது. பிறகு எப்படி லீவு போட முடியும்?

அப்டின்னா வெளி உலகம், பொழுது போக்கு, எதுவும் கெடையாதா?

லீவு போட்டா தூங்கலான்னுதான் வருது. அப்பறம் எங்க பொழுது போக்கறது.

நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சியெல்லாம் பாக்க மாட்டீங்களா?

நாமெ ரெண்டு பேரும் இங்க பேசறத எங்க பிக் பாஸ் கேமராவுல பாத்துருப்பாரு. இப்ப வந்துருவாரு பாருங்க. சில நாளு ஒரு ஏழெட்டு பேருங்க ஒரு ஃப்ரண்டு போன்ல பாத்துருக்கோம். அதுவும் முழுசா பாக்கறதுக்குள்ள தூக்கம் வந்துரும். காலையிலேருந்து நிக்கறதால இடுப்பு வலியும் உள்ளங்கால் எரிச்சலும் அப்படியே ஆள சாச்சுப்புடும். பிறகு எங்கக்கா பிக்பாஸூ?

அப்படின்னா நீங்க தூங்க போக 12, 1 மணி ஆகிடும் போலருக்கே!

ஆமாக்கா. இதுபோல கடைங்களுக்கு வேலைக்கி வர்ரது அகதி முகாமுக்குள்ள வர்ரது போலதான். கடைக்குள்ள சுதந்திரமா சுத்தி சுத்தி வேலை பாக்கலாம். வெளிய எங்கும் போக முடியாது.

உங்க சொந்த ஊரு எது?

உளுந்தூர்பேட்டை பக்கத்துல ஒரு கிராமம்.

அம்மா அப்பா ஊர்ல இருக்காங்களா?

அம்மா இறந்துட்டாங்க. அப்பா மட்டும் இருக்காரு. நானும் தங்கச்சியும் இங்க வேலை செய்யுறோம். அப்பா, பாட்டி, தம்பி எல்லாரும் ஊருல இருக்காங்க.

நீங்களும் ஊரிலேயே ஏதாவது வேலை பாக்கலாமில்ல!

அங்க என்னாக்கா வேலை இருக்கு. ஊருல இருக்கப்ப விவசாய வேலைக்கி போவேன். இப்பெல்லாம் தினமும் வேலை இருக்கறதில்ல. தங்கச்சியும் பெரிய பொண்ணாயிட்டா, கல்யாணமுன்னா நாலு காசு வேணுமேன்னுதான் இங்க வந்தோம்.

நீங்க வேலைக்கி வந்து எத்தன வருசமாச்சு?

கிட்டத்தட்ட மூணு வருசமாகப் போகுது.

வேற ஊர்கள்ளேருந்தும் ஆளுங்க வேலைக்கி வாராங்களா?

திருநெல்வேலி, தஞ்சாவூரு, அரியலூரு, சேலம் எல்லா ஊருலேருந்தும் வந்துருக்காங்க.

பெரும்பாலும் சின்ன வயசு பசங்களாவே இருக்கிங்களே எப்படி?

அஞ்சாறு மாடிக்கும் அலஞ்சு திருஞ்சு காலையில 9 மணிக்கி ஆரம்பிச்சு ராத்திரி 11 முடிய ஓடிட்டே இருக்க, பசங்களால மட்டும் தான் முடியும்.

போதுமான அளவு சம்பளம் கொடுப்பாங்களா?

போதுமான அளவு சம்பளம் இருந்தா லீவு போட்டுட்டு டாக்டர போயி பாத்துருக்க மாட்டேனா? வலிய பொருத்துட்டு எதுக்கு வேலை செய்றேன்?

என்னாம்மா சம்பளம் கொடுப்பாங்க?

ஒம்பதாயிரம் தருவாங்கக்கா. சாப்பாடு தங்கறது எல்லாம் ஃப்ரி. காலையில வரனும். ராத்திரி போகனும்.

அம்மா அப்பாவை பாக்க ஊருக்கு எப்ப போவீங்க?

வருசத்துக்கு ரெண்டு தடவ ஒரு வார லீவுல போய் வருவோம். அந்த நாளுக்கு சம்பளம் கிடையாது.

நடுத்தர வயசு பெண்கள் வேலை செய்றாங்களே அவங்களும் வெளியூரா?

கல்யாணம் ஆயிட்டா வெளியூரு பொண்ணுங்கள வேலைக்கி எடுத்துக்க மாட்டாங்க. சென்னைய சேர்ந்தவங்க மட்டும் வாட்சுமேன், செக்கியூரிட்டி வேலை பாக்குறாங்க.

உங்களுக்கு கல்யாணம் ஆனா வேலைக்கி என்ன பண்ணுவீங்க?

மாதிரிப்படம்

ஒக்கார வச்சு சோறு போட்ற பெரிய படிப்பு மாப்பிளைங்களா என்ன கட்டிக்கப் போறாங்க? அவரு பயிரு போட்டா நாமெ கள எடுக்கனும், அவரு கொத்தனாருன்னா நாமெ சித்தாளு பொழப்ப மாத்திக்கிட்டு போக வேண்டியதுதான்!

அந்த பெண் சொன்னது போலவே (பிக்பாஸ்) சூப்ரவைசர் வந்து விட்டார். நாங்கள் நின்ற இடத்துக்கு அடுத்த ஆடை வரிசையில் நுழைந்து எங்கள் எதிரில் திடிரென நிற்பதைப் பார்த்து எனக்கே கொஞ்சம் திக்ககென்றுதான் இருந்தது. வந்தவர் அந்த பெண்ணைக் கேள்விகளால் விரட்ட ஆரம்பித்தார்.

என்ன பண்ணிட்டு இருக்கே. கஸ்டமெருக்கு வேண்டியத எடுத்து தராமெ?

இல்ல சார் ஒரே விலையில ரெண்டு புடவை செட்டாகாமெ கஸ்டமர் தேடிட்டே இருக்காங்க.

அவங்களுக்கு உதவி பண்ணாம நீ என்ன பண்ணிட்டுருக்கே?

கஸ்டமர் கேக்கறதான் எடுத்து கொடுக்க முயற்சி பண்ணிடுருக்கேன் சார்.

ஆஃபர்ல செட்டாகலேன்னா சிங்கிள் பீசுல எடுத்துக் காமி. கஸ்டமருக்கு எது தேவையின்னு தெரிஞ்சுக்க. ஒனக்கு நேரத்த கடத்த நல்ல சான்ஸ்ன்னு நிக்காதே.

சரிங்க சார்…..

பிறகு சூப்பர்வைசர் இடத்தை விட்டு நகர்ந்தார்.

பரவாயில்ல. நான் நெனைச்சத விட சூப்பரவைசர் லேட்டாதான் வந்துருக்காரு. “நீங்க சீக்கரம் முடிங்கக்கா” என சிரித்தாள் அந்தப் பெண்.

சாரிம்மா. எல்லாம் என்னாலதான்.

அப்புடியெல்லாம் சொல்லாதிங்கக்கா. இவனுங்க இப்படிதான். அடிபட்டுட்டாக் கூட பாத்து செய்ய மாட்டியானு திட்டிட்டுதான் போவானுங்களே தவிர கரிசனமா விசாரிக்க மாட்டானுங்க.

என்னால உங்க வேலைக்கி பிரச்சனையாகிடப் போகுது.

வேலைய விட்டெல்லாம் தூக்க மாட்டானுங்க. உங்களப் போல ஆளுங்க பாக்க முடியாதபடி பேக்கிங் செக்சனுக்கு மாத்திடுவானுங்க. அந்தாளு திட்றதுக்கு வேற காரணமும் இருக்குக்கா. கஸ்டமர் துணிகள ரொம்ப நேரம் கலைச்சுப் போட்டுட்டே இருந்தா அவங்க எடுக்க மாட்டாங்கன்னு தொறத்துறதுக்கும் எங்களதான் திட்டுவானுங்க

நல்லா திட்டு வாங்க வச்சுட்டாளே புண்ணியவதின்னு நான் போன பிறகு என்ன திட்ட போறீங்க?

அட நீங்க வேறக்கா!. கம்பி இல்லாத கண்ணப் பறிக்கும் வண்ண கலர் ஜெயிலுக்கா இது. வர்ர கஸ்டமரும் துணி பத்திதான் பெரும்பாலும் பேசுவாங்க. யாராச்சும் சில பேருதான் இரக்கப்பட்டு எங்களப் பத்தி விசாரிப்பாங்க. நாங்களும் தன்னமறந்து எங்க பாட(வாழ்க்கையை) பேசுறோம். அதுவும் இல்லன்னா வாழ்க்கைய வெறுத்துரும்.

அவள் முடித்துக் கொண்டு வேலையில் மூழ்கிப் போனாள். எனக்கும் ஒரே விலையில் இரண்டு சேலைத் துணி கிடைக்கவில்லை. அனேக நாட்கள் அவளுக்கு வெறுப்பாகத்தான் கழிந்திருக்கும். இருந்தாலும் அவளை வாழ்க்கையோடு ஓட வைப்பது எது? யோசித்துக் கொண்டே படியிறங்கினேன்.

-சரசம்மா
(உண்மைச் சம்பவம். ஊர், அடையாளங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.)

_____________

நமக்கு மட்டும் ஏம்ப்பா நாள் முழுக்க சோளச்சோறு !

1

ஆன்மாவின் அழைப்பு

ப்பொழுதெல்லாம் நெற்சோறு காண்பதரிது
மூன்று வேளையும் சோளச்சோறு தான்
இல்லையெனில்
புழுக்கள் நெளியும் ரேசன் அரிசி
பருக்கைகளே தட்டை நிரப்பியிருக்கும்.

பொக்கிஷமாய் விதை நெல் காத்து,
முதுகெலும்புகள் நொறுங்க
நிலத்தை உழுது,
பகலிரவு பாராமல் பராமரிப்பு செய்து…
நெல் மணிகளை
களத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும்,
அப்பாவிடம் அழுதுகொண்டே கேட்டதுண்டு..

‘நமக்கு மட்டும் ஏம்ப்பா
நாள் முழுக்க சோளச்சோறு’ என்று.

பதின் பருவம் வரை
இட்லி, தோசை, பனியாரத்தை எண்ணி
எப்பொழுதாவது வரும் பண்டிகைகளுக்காக
ஒவ்வொரு நாளும் காத்திருந்ததுண்டு.

இங்கே…
பகிரப்பட்டது எல்லாம் அப்பா அறியாததல்ல

இரவு முழுக்க விட்டத்தை பார்த்தவாறே இருந்துவிட்டு
அதிகாலையில் மாட்டை அவிழ்த்துக்கொண்டு
வயலில் வந்து நிற்பார்.
நெடுநாட்களுக்கு பிறகே அறிந்துகொண்டேன்
அப்பாவின் ஆன்மா விளைநிலமென்று.
அன்றிலிருந்து அவரின் அசைவுகள்
ஒவ்வொன்றும் எனக்கு கம்பீரமாய் தெரிந்தன.

அது ஒரு அறுவடைக்காலம்
நெற்கதிர்களை நேர்த்தியாக
அறுப்பதில் அப்பா லாவகமானவர்
ஏதோ ஒரு சிந்தனையில்
கதிர்களை இழுத்து அறுத்தபோது
விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார்
அன்று – அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள்
மண்ணுக்கு உரமாகிப்போனது.

அப்பாவைப் போலத்தான் மாமாவும்
மென்மையானவர்
வியர்வை சிந்த
உழைத்து திரும்பும் மாமா
முகம் கழுவ வாய்க்காலில் வந்து நிற்பார்
தெளிந்த நீரில் கெண்டை மீன்கள்
துள்ளித் தவழுவதை பார்த்த பின்
காலை வைத்து கலைக்க விரும்பாமல்
துண்டில் துடைத்தபடியே சென்றுவிடுவார்.

இன்று அதே வாய்க்காலில்
சாக்கடைக் கழிவுகளையும்,
ரசாயணக்கழிவுகளையும்
சத்தமில்லாமல் இறக்குகின்றன கார்ப்பரேட்டுகள்.

அது ஒரு கோடைக்காலம்
வயலில் களை எடுத்துக்கொண்டிருந்த
அக்கா வயிற்றைப் பிடித்தவாறே அமர்ந்துவிட்டாள்.
பின்புறமாக வழிந்த உதிரம் உறைந்திருந்தது.
அம்மா வருவதற்குள்
தண்ணீரோடு செந்நீரும் கலந்து நிலத்தில் பாய்ந்தது.

சிறுவனாக அதை திகைப்புடன்
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
வளர்ந்த பிறகு தான் அன்று
அக்கா பெரியவளாகியிருக்கிறாள் என்பது தெரிந்தது.

அம்மாவுக்கு அவள் சினேகிதி
ஆனால் உறவுமுறைப்படி எனக்கு பெரியம்மா
விளையாட்டாக பேசுவதில் வித்தகி.
ஒரு நாள் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தாள்
“மேலத்தெருக்காரர் வயலுக்கு நடவு வேலைக்கு போயிருந்தேன்
நடுவயலில் நிற்கும் போது சிறுநீர் வந்துவிட்டது’’
அதட்டிப்பேசும் அந்த ஆண்டையிடம்
எப்படி வாயைத் திறப்பது என்று
நைசாக வயலுக்குள்ளேயே இருந்துவிட்டேன்” என்றாள்.

பெரியம்மாவின் பேச்சு அம்மாவை பெருஞ்சிரிப்பில் ஆழ்த்தியது.
அதிகாரிகள் கூறியபடி
பொட்டாசியத்தையும், யூரியாவையும்
கொட்டிவிட்டு
காத்திருந்தும்
ஆற்றில் நீர் வந்தபாடில்லை.
ஆறு வறண்டு போனதற்கு பின்னாலிருந்த
அரசியல் எனக்கு அன்று புரியவில்லை

ஆனால்…

பிள்ளையைப் போல பாதுகாத்த பயிர்கள்
வாடி நிற்பதை கண்டு
பதறிய அண்ணன்
நெடுந்தூரம் சென்று
நீர் சுமந்து உயிரூட்டினார்

எனினும்
குறைமாத குழந்தையைப் போல
பயிர்கள் பாதியிலேயே சரிந்து விழுந்தன.
பயிர்களோடு தன் உயிரையும் மாய்த்துக்கொள்ள
பூச்சி மருந்தை அருந்திய அண்ணன்
பயிர் சரிந்த நிலத்திலேயே தானும் சரிந்து விழுந்தார்.

இப்படித்தான்…

இப்படியாகத்தான்
எங்களின்
பிறப்பு, இறப்பு
வியர்வை, இரத்தம்
கண்ணீர்
சிறுநீர் அனைத்தும்

இயற்கை உரமாய்
நிலத்தின் ஆன்மாவாய்…
காலங்காலமாக இந்த நிலத்தில் புதைந்த
வரலாறு நீண்டு கிடக்கிறது….

இன்றோ அனைத்தையும் மறந்த
ஆண்ட்ராய்ட் மனிதனாக,
பெருநகரின் கான்கிரீட் காடுகளில்,
அடையாளம் இழந்த என்னை,
உழுத நிலத்திற்கே உரமாகிப்போன
எனது மூத்தகுடிகளின் ஆன்மா
நெடுவாசலுக்கு அழைக்கிறது

பார்..
உனது நிலத்தைப் பார்
கார்ப்பரேட்டுகளுக்காக
கதிராமங்கலத்திற்கு கருமாதி நடத்தும்
அநீதியைப் பார் என்கிற ஓலம்
எனது செவிப்பறைகளை பிளக்கிறது

நெஞ்சை அறுக்கும் அவர்களின்
ஓலத்தையும் ஒப்பாரியையும் கேட்டவாறே
அறுசுவை உணவை உண்டு
குளிரூட்டப்பட்ட அறையில் உன்னால் துயில முடியுமா?

என் மனசாட்சி
என்னை உலுக்குகிறது.
அனைத்தையும்
வேடிக்கை பார்த்தவாறு வாழவிருக்கும் நீயா
ஆதிக்குடிகளின் அடுத்த தலைமுறை?

கேள்வி புரிந்தால் மவுனம் கலைத்து
கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான களப்போரில்
நம் கால்கள் நெடுவாசல் நோக்கியும்
கதிராமங்கலம் நோக்கியும் நகரட்டும்..

– முகிலன்
_____________

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !

5

த்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பிரதமரின் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம், ஒரு முன்னோடித் திட்டமென்றும் விவசாயிகள் தற்கொலைக்கு ஒரு தீர்வு என்றும், அரசின் கொள்கைகள் விவசாயிகளுக்கு ஆதரவாக மாறி வருவதன் தொடக்கமென்றும் பலவாறாகப் பீற்றப்பட்டது.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் துயரத்துக்கு முடிவு காணப்போகிறது என்று அரசாங்கம் கூறிக்கொண்டாலும், உண்மையில் இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் விவசாயிகளைக் காப்பாற்றுகின்ற பொறுப்பிலிருந்தும் அரசு தன்னை கழற்றிக் கொள்கிறது என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

ம.பி. மாநிலம், ஸெஹோர் எனுமிடத்தில் நடந்த விவசாயிகள் பேரணியில், பிரதமர் பயிர்க் காப்பீடு திட்டத்தின் நடைமுறை விதிகளை வெளியிடும் நரேந்திர மோடி.

எந்தப் புதிய தாராளவாதக் கொள்கை விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்காதோ, அந்தக் கொள்கையை நோக்கி விவசாயிகளைத் தள்ளிவிடுவதும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கையில் விவசாயிகள் என்ற மிகப்பெரிய சந்தையைத் தங்கத்தட்டில் வைத்து வழங்குவதும், காப்பீட்டு தொழிலை மேலும் தனியார்மயமாக்குவதும்தான் இத்திட்டத்தின் நோக்கங்கள்.

2016 – 17 ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கப்பட்டது. இதே அளவு தொகையை மாநில அரசுகளும் ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மொத்தம் ரூ.13,420 கோடியை அரசு இதற்குச் செலவிட்டிருக்கிறது. நாட்டின் 50% விவசாயிகளை இத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதுதான் தனது நோக்கம் என்று கூறியிருக்கிறார் பிரதமர்.

இத்திட்டத்தின்படி, விவசாயிகள் சம்பா பயிருக்கு 1.5%, குறுவைக்கு 2%, பணப்பயிர்களுக்கு 5% பிரீமியம் செலுத்த வேண்டும். மீதி பிரீமியம் தொகை முழுவதையும் அரசு செலுத்தும். பிரீமியத்தில் அரசின் பங்களிப்புக்கு முன்பு உச்சவரம்பு இருந்தது. இதன் காரணமாக, காப்பீடு செய்யும் தொகையின் அளவும் குறைந்தது. இப்போது அரசு பங்களிப்புக்கு இருந்த அந்த உச்சவரம்பு நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக விவசாயி மொத்த இழப்புக்கும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்று மோடி அரசு கூறுகிறது.

***

வழக்கமாக விவசாயிகளுக்கு மானியமோ, வங்கிக் கடனோ, மானிய விலையில் மின்சாரமோ வழங்கினால், உடனே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கார்ப்பரேட் ஊடகங்கள், இந்த காப்பீடு திட்டத்தை மட்டும் பெரிதும் வரவேற்றுள்ளன.

ஏனென்றால், காப்பீட்டு நிறுவனங்களைப் பொருத்தவரையில் இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் முந்தைய திட்டங்களைவிட அவர்களுக்கு மிகவும் இலாபகரமானது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களாக 10 தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அரசு அறிவித்திருக்கிறது. அவற்றோடு ஒப்புக்குச் சப்பாணியாக இந்திய வேளாண் காப்பீட்டுக் கழகம் என்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தையும் சேர்த்து அறிவித்திருக்கிறது.

சுயதம்பட்டம் : மோடி அரசில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, மோடியின் நலம்விரும்பிகள் மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட நடைபயணம்.

அது மட்டுமல்ல, புனிதமாய் போற்றிப் புகழப்பட்ட ”சுதந்திரப் போட்டி” என்ற சந்தைக் கோட்பாட்டுக்கு எதிராக, ஒரு வட்டாரத்தில் ”ஒரு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்” என்றும் அரசு அறிவித்துள்ளது. அதாவது, ”அரசு மானியத்தால் இலாபம் உத்திரவாதம் செய்யப்பட்ட ஒரு சந்தையை”த் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறது அரசு.

இந்தப் புதிய காப்பீடு இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புக்கு மட்டுமே பொருந்தும். மனிதர்களால் தோற்றுவிக்கப்படும் ”விளைபொருட்களின் விலை வீழ்ச்சி” என்ற பேரழிவுக்குக் காப்பீடு கிடையாது. ஆனால், இத்தகைய விலை வீழ்ச்சியின் விளைவாகத்தான் நல்ல விளைச்சலுக்குப் பின்னும் விவசாயிகள் நட்டமடையும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

விளைச்சல் குறைந்துவிட்ட நிலையிலும், விலை வீழ்ச்சியுறுதல் என்கிற முற்றிலும் வினோதமானதொரு சந்தை நடப்பை கடந்த இரண்டாண்டுகளாகக் கண்டுவருகிறோம். அதுவும் 2014 – 15 மற்றும் 2015 – 16 ஆகியவை வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆண்டுகள். இந்த விலை வீழ்ச்சி மற்றும் சந்தை அராஜகங்களால் விவசாயிகளின் வருவாய் பாதிக்கப்படாமல் அரசு காப்பீடு செய்திருக்க வேண்டும்.

ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அந்நிய முதலீட்டாளர்களுக்கும் இலாப உத்திரவாதம் கொடுக்கும் அரசு, அத்தகைய உத்திரவாதத்தை விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கிறது. ஏனென்றால், அது உலக முதலாளித்துவம் வகுத்திருக்கின்ற சுதந்திரச் சந்தைக் கோட்பாட்டுக்கு எதிரானதாயிற்றே!

விரிவான பார்வையின் முக்கியத்துவம்

இன்று நாம் ”காப்பீடு” என்ற சொல்லைக் கேட்டதும் ஒரு காப்பீட்டு நிறுவனத்திடம் ”பாலிசி” எடுப்பது என்றே சிந்திக்கப் பழகியிருக்கிறோம். ஆனால், காப்பீடு என்பது பணம் சார்ந்த ஒரு ஒப்பந்தமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இதைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

உண்மையில் காப்பீடு என்பதுதான் என்ன?  ”இன்சூர்” (காப்புறுதி) என்ற சொல், ”ஷ்யுர்” (Sure – உறுதி) என்ற வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்ததே. இதன் பொருள், உறுதிப்படுத்துவது அல்லது பாதுகாப்பளிப்பது; ”இழப்பு, அழிவு, இன்னல், இன்னவற்றுக்கு இட்டுச்செல்லும் நிகழ்வைத் தடுப்பதற்கு முயற்ச்சிப்பது” மற்றும் ”காப்பீட்டு நிறுவனத்துக்கு ஒரு தொகையைச் செலுத்துவதன் மூலம் இழப்பு, திருட்டு அல்லது சொத்துக்கு ஏற்படும் அழிவு அல்லது விபத்தில் ஏற்படும் காயம், சாவு போன்ற நிகழ்வுகளுக்குப் பணவகையில் ஈடுசெய்யும் ஒரு ஏற்பாடு”  என்பதுதான் ஆங்கில அகராதி இந்தச் சொல்லுக்கு கூறுகின்ற பொருள்.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. காப்பீடு நிறுவனத்தின் தலைமை அலுவலகம்.

ஆக, காப்பீடு என்பதன் சாரம், தனிநபரை அல்லது ஒரு குழுவினரை வரவிருக்கும் பாதக நிகழ்வுகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு முன்னேற்பாடு என்பதுதான். காடுகள் அழியாமல் தடுப்பதன்மூலம் வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது, தீ விபத்துக்கான காரணங்களைக் களைவதன் மூலம் தீயினால் ஏற்படும் அழிவிலிருந்து பாதுகாப்பது என்பன போன்ற வருமுன் காக்கும் நடவடிக்கைகளும்கூட காப்பீட்டு நடவடிக்கைகள்தான்.

தனி நபர்கள் தங்களது வருமானத்திலிருந்து ஒரு பகுதியைச் சேமிப்பதன் மூலம் எதிர்காலத்தில் நேரக்கூடிய பாதக நிகழ்வுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சேமிப்புகளும்கூட ஒருவகைக்  காப்பீடே.

ஒரு அரசு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் தனது குடிமக்களைத் தீங்கு இழைக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கக் கடமைப்பட்டிருக்கிறது. லாக் போன்றவர்கள் முன்வைத்த, அரசு பற்றிய முதலாளித்துவக் கோட்பாட்டின்படி, அரசு என்பதே சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒருவகைக் காப்பீடுதான்: அரசானது தங்களைத் தீங்கு நேராவண்ணம் பாதுகாக்கும் என்ற அடிப்படையில்தான் குடிமக்கள் தங்களது உரிமைகளின் ஒரு பகுதியை அரசுக்கு விட்டுத்தருகிறார்கள்.

”அனைவருக்குமான இலவச மருத் துவம்” என்பது பணம் இல்லாததால் உடல்நலத்தைப் பேண முடியாதவருக்கும் உடல்நலப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகளைக் காப்புறுதி செய்யும் பொருட்டு ”தானியங்களின் பொதுக் கொள்முதல்” செய்யப்படுகிறது.

வறுமை காரணமாக குறைந்த பட்ச சத்துணவைப் பெறமுடியாத நிலையிலிருந்து ஏழைகளைக் காக்கும் பொருட்டு உணவுப்பொருள் பொதுவினியோகம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால், உலக வங்கியேகூட இந்த பொதுவினியோக முறையை ”பாதுகாப்பு வலை” (Safety net) என்றுதான் கூறுகிறது. காப்பீடு என்பதன் பொருள் இதுதான்.

இருப்பினும், தனிமனிதனுக்கும் இலாப நோக்கில் இயங்கும் ஒரு நிறுவனத்துக்கும் இடையிலான பொருளாதார ஒப்பந்தம் என்ற பொருளில் மட்டும்தான் காப்பீடு என்ற சொல் இன்று புரிந்து கொள்ளப்படுகிறது. அது, காப்பீட்டின் ஒருவகை மட்டுமே என்பதோடு, சிறப்பானதொரு வகையும் அல்ல. மொத்த சமூகத்தின் நலன் கருதி எடுக்கப்படும் அனைவருக்குமான பாதுகாப்பு  நடவடிக்கையோடு ஒப்பிடும்போது தனி நபருக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் காப்பீடு என்பது தரம் தாழ்ந்ததுதான்.

கணிசமான நபர்கள் காப்பீட்டு வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டிருக்கிறார்கள் என்பதே காப்பீட்டின் செயல் திறனை மதிப்பிடுவதற்கான அளவுகோல் ஆகிவிடாது. (அப்படித்தான் மோடி அரசு கூறிக் கொண்டிருக்கிறது) மாறாக, தேவைப்படும் தருணத்தில் அது மக்களை இழப்புகளிலிருந்து உண்மையிலேயே பாதுகாக்கிறதா என்பதில்தான் அதன் செயல் திறன் அடங்கியிருக்கிறது.

பகைநிலை உறவு

காப்பீடு நிறுவனங்கள், ”நம்பிக்கை”, ”பாதுகாப்பு”, என்ற சொற்களைப் போட்டு விளம்பரம் செய்தாலும் நடைமுறையில் பாலிசிதாரர்களுக்கும் காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையிலான உறவு பகைத்தன்மையுடையதேயாகும். ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் இலாபம் எப்படிப் பெறப்படுகிறது? பிரீமியம் மூலமான வரவு மற்றும் அந்தப் பணத்தைக் கடன் பத்திரங்கள், பங்கு பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து, அதன் மூலம் பெறப்படும் தொகை ஆகியவையே ஒரு நிறுவனத்தின் வரவு ஆகும்.

பாலிசிதாரர்களின் இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்காக அளிக்கப்படும் தொகை மற்றும் நிறுவனத்தின் நிர்வாகச் செலவுகள் ஆகியவையே செலவுகள். வரவிலிருந்து செலவுகளைக் கழித்தால் கிடைப்பது அந்த நிறுவனத்தின் இலாபம்.

ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்ட நபருக்கு காப்பீடு வழங்கலாமா, வழங்கலாமெனில் அதற்கு எவ்வளவு கட்டணம் தீர்மானிப்பது என்பதை இலாப நோக்கில்தான் கணக்கிட்டு முடிவு செய்யும். மேலும், இழப்பீட்டுக் கோரிக்கைகளுக்கான செலுத்துகைகளையும் இயன்ற அளவுக்குக் குறைக்கவும் கோரிக்கைகளை நிராகரிக்கவுமே முயற்சி செய்யும்.

எடுத்த பாலிசியால் ஒரு பயனும் இல்லை எனும்படியான பாலிசிகளை காப்பீடு நிறுவனங்கள் மக்களுக்கு விற்கின்றன. கட்டணப் பிறழ்வால் காலாவதியாகி பாலிசிதாரர்கள் அடையும் இழப்பில் காப்பீட்டு நிறுவனங்கள் இலாபம் பார்க்கின்றன. இழப்பு நேர்வதற்கான வாய்ப்பு கூடுதலாய் இருப்பின், அவ்வாறான நபர்களுக்கு காப்பீடு வழங்குவதைக் காப்பீட்டு நிறுவனங்கள் தவிர்க்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை, 2005 – 2012 காலப்பகுதியில் காப்பீட்டுத் துறையில் நுழைந்த ஏராளமான தனியார் நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் செய்த மோசடி வியாபாரம் காரணமாக, மிகப்பெரும் அளவில் பாலிசிகள் காலாவதி ஆயின. இதனால் பாலிசிதாரர்களுக்கு ரூ.1.5  1.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்த மாபெரும் மோசடியில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவனங்கள் எந்த ஒரு தண்டனைக்கும் ஆளாகவில்லை. மேற்படி அனுபவங்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கும் பகைநிலை உறவையும், மோசடி நடைமுறையையும் நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

நட்டம் மக்களுக்கு, இலாபம் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு !

உண்மை இப்படி இருப்பினும், விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு காப்பீட்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்வதாக அரசு கூறுகிறது. இது நம்பத்தக்கதாக இருக்கிறதா? தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு மானியம் கொடுக்க அரசு விழைகிறது என்பதுதான் உண்மை.

மகாராட்டிராவில் நடந்தது என்ன? 2016 குறுவைப் பருவத்தில் பிரீமியமாக ரூ.4,000 கோடி வசூல் செய்யப்பட்டது. காப்பீட்டுச் செலுத்துகையாக ரூ.2,000 கோடி ரூபாய்தான் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

பருவமழை பொய்த்துவிடும் என்று தெரிந்தால், அந்த குறிப்பிட்ட ஆண்டில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், ஏலமெடுப்பதற்கே வருவதில்லை. அல்லது வேண்டுமென்றே பிரீமியம் தொகையைக் கடுமையாக உயர்த்தி வைப்பதன் மூலம் ஏலத்தில் தம்மைத்தாமே தோற்கடித்துக் கொள்கிறார்கள்.

இத்தகைய வழிமுறையின் மூலம் இலாபம் கிடைக்கத்தக்க பகுதிகளை தனியார் நிறுவனங்கள் ஒதுக்கிக் கொள்கின்றன. நட்டம் தரும் பகுதிகள் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் தலையில் கட்டப்படுகின்றன. அவர்களும் ஒதுங்கிக் கொண்டால், விவசாயிக்கு காப்பீடே கிடையாது. இதுதான் பிரதமரின் புதிய திட்டம்.

காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு செலுத்தும் பிரீமியத் தொகை குறித்த சில விவரங்களைப் பாருங்கள். பீகாரில் நெல்லுக்கு 35%, குஜராத்தில் பருத்திக்கு 25%, கர்நாடகாவில் துவரம்பருப்புக்கு 46.7%, மகாராட்டிரத்தில் பருத்திக்கு 22%, மத்திய பிரதேசத்தில் சோயாவுக்கு 30%, ராஜஸ்தானில் கொத்தவரைக்கு 48%. காப்பீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் மேற்கண்ட அளவிலான தொகையை தனியார் நிறுவனங்களுக்கு அரசு பிரீமியமாகச் செலுத்துகிறது.

பயிருக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து ஆய்வு செய்யும் காப்பீடு நிறுவன அதிகாரிகள். (கோப்புப் படம்)

மொத்த காப்பீட்டுத் தொகையில் பாதியளவுக்கும், அதற்குச் சற்று குறைவாகவும் பிரீமியமாகவே செலவழிக்க அரசு தயாராக இருக்கும்போது, இந்தப் பணத்தை எதற்காகத் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கையில் கொடுக்க வேண்டும் என்பதே கேள்வி. இழப்பீட்டைத் தானே மதிப்பீடு செய்து அரசே விவசாயிக்கு நிவாரணம் வழங்கலாம். அல்லது பொதுத்துறை காப்பீடு நிறுவனங்களைக்கூட இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே.

அரசு அல்லது பொதுத்துறை ஊழியர்களைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் வேகமாகவும் திறமையாகவும் வேலை செய்யும் என்று தனியார்மய ரசிகர்கள் நம்புகிறார்கள். காப்பீட்டுத் தொகையைக் கொடுக்காமல் நிராகரிப்பது எப்படி என்பதுதான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் அணுகுமுறை. இலாபம் தான் அவர்களது நோக்கம். இந்த இலாப நோய் பொதுத்துறை நிறுவனங்களையும் பற்றிக் கொண்டு விட்டதைத்தான் இப்போது நாம் கண்டு வருகிறோம்.

எனவே, பிரதமரின் இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் பொருளாதார ரீதியில் அரசுக்கோ  விவசாயிகளுக்கோ ஆதாயம் தரக்கூடியது என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

அப்படியானால், எதற்காக இந்த காப்பீட்டுத் திட்டம் ?

இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளுக்கு பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவதோ, அத்தகைய பாதுகாப்பை வழங்குவதற்கான பொருளாதார ரீதியில் பாதுகாப்பான ஏற்பாட்டை உருவாக்குவதோ அல்ல என்பதை இதுவரை பார்த்த விவரங்களின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள இயலும். மாறாக, விவசாயிகளை அவர்கள் எதிர்கொள்ளும் துன்ப துயரங்களிலிருந்து பாதுகாக்கின்ற தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ளவும், கைகழுவவும் இந்த திட்டம் பயன்படுகிறது என்பதுதான் இதன் மூலம் அரசுக்கு கிடைக்கின்ற மிக முக்கியமான ஆதாயம்.

விவசாயிகளின்பால் எவ்வளவுதான் இரக்கமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்த போதிலும், அவர்களுடைய துயரத்தை துடைக்கும் பொறுப்பை இந்த அரசால் முற்றிலுமாகத் தட்டிக்கழிக்க இயலவில்லை. கொள்முதலும் நிவாரணமும் கேட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை இந்த அரசு தவிர்க்கவியலாமல் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கேட்டு பெங்களூரில் நடந்த முற்றுகைப் போராட்டம். (கோப்புப் படம்)

எடுத்துக்காட்டாக, 2004 -ல் விவசாயிகளின் அதிருப்தியும் கொந்தளிப்பும்தான் வாக்குகளாக மாறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பதவியில் அமர்த்தியது. அரசுக் கொள்முதல், விவசாயிகளுக்கு வங்கிக்கடன், விவசாயத்துறையில் முதலீடு போன்ற விசயங்களில் ஏற்கெனவே பின்பற்றப்பட்ட கொள்கைகளை ஒரளவுக்கு மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஐ.மு.கூட்டணி அரசுக்கு ஏற்பட்டது. சமீபத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தினைக் கிண்டல் செய்த மோடி அரசு, அதற்கான ஒதுக்கீட்டைக் குறைத்தது. பின்னர், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது.

2015 -ல் பருத்தி விவசாயிகளின் நீண்ட போராட்டத்தை பஞ்சாப் சந்தித்தது. மார்ச், 2016 -ல் பல்லாயிரக்கணக்கான கர்நாடக விவசாயிகள் பெங்களூருவை முற்றுகையிட்டார்கள். ஏப்ரல் 2016 -ல் நாசிக்கில் மராட்டிய விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டு போராடினார்கள். இந்த போராட்டங்கள் அனைத்தும் நியாயமானவை. ஏனென்றால் விவசாயிகளைப் பாதுகாப்பது, அதாவது அவர்களுக்கு காப்பீடு வழங்குவது அரசின் பொறுப்புதான்.

பிரதமரின் இந்தப் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், விவசாயிகளைக் காப்பீட்டு கம்பெனிகளிடம் கைகாட்டி விட்டுவிட்டு, தனது பொறுப்பை நிறைவேற்றி விட்டதாக கூறிக்கொள்ள அரசு முயற்சிக்கிறது. எனவே, பயிர் காப்பீடு என்பது மக்களின் கோபத்திலிருந்து புதிய தாராளவாதக் கொள்கைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியல் ரீதியான காப்பீடு. அதே நேரத்தில் இது தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புதிய தாராளவாத மானியமும்கூட.

பொது சுகாதாரத் துறையின்பால் அரசு கடைப்பிடிக்கும் அணுகுமுறையுடன் இது ஒப்பிடத்தக்கது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கால் சதவீதம் ஒதுக்கினால் போதும், இந்திய மக்கள் தொகையில் கீழ்நிலையில் உள்ள 50% பேருக்கு ஓரளவு மருத்துவக் காப்பீடு வழங்கிவிட முடியும். இதைக் கொடுத்துவிட்டால், எல்லோருக்கும் இலவச மருத்துவம் என்ற கோரிக்கையே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் நிதி ஆயோகின் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா.

மொத்தத்தில் இவையனைத்தும் தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும் பயிர் காப்பீட்டு நிறுவனங்களும் கொள்ளை இலாபம் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் என்பதே உண்மை.

இந்திய வேளாண்மைக்குத் தேவைப்படும் காப்பீடு எத்தகையது?

இந்திய வேளாண்மைக்குக் காப்பீடு தேவை. ஆனால், அது நிதி வடிவிலான காப்பீடு அல்ல. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமே விவசாயம்தான் என்று பார்க்கின்ற, வேளாண் தொழிலுக்கு முக்கியமாக, அதில் பாடுபடும் விவசாயிகள் நலனுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கின்ற ஒரு அரசு நமக்கு வேண்டும்.

அதாவது, நீடித்து நிற்கக்கூடிய முறையிலானதும், போதுமான அளவிலானதுமான உற்பத்தியை அடைவதன் தேவைக்கேற்ப விவசாயிகளுடைய ஜனநாயகபூர்வ அமைப்புகளின் ஒத்துழைப்போடு திட்டமிடும் அரசு ந

மக்கு வேண்டும்;

நீர்ப்பாசனம் மற்றும் நிலவள முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பொதுத்துறை முதலீடு, விவசாயப் பணிகளுக்கு நிதியுதவி, பொதுத்துறை விவசாய ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணியாளர்கள், கட்டுப்படியான விலையில் உள்ளீட்டுப் பொருட்கள், நியாய விலையில் உற்பத்திப் பொருட்களின் கொள்முதல் ஆகியவை வேண்டும்.

இதுதான் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த காப்பீடாக இருக்கும். விளைச்சலோ வருவாயோ வீழ்ந்தால் வழங்கப்படும் காப்பீடு என்பது இந்த ஒருங்கிணைந்த காப்பீட்டின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அணுகும்பட்சத்தில், காப்பீடு என்பது தண்டச் செலவாக இருக்காது. மாறாக, நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் தொழில்துறைப் பண்டங்களின் உள்நாட்டு சந்தை விரிவடைவதையும் உறுதிப்படுத்துகின்ற தேசிய வளர்ச்சித் திட்டத்தின் அங்கமாக இருக்கும்.

ஆனால், இவையெதுவும் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இல்லை. விவசாயிகளுக்கு எஞ்சியிருக்கும் சில பாதுகாப்புகளையும் ஒழித்துக்கட்டுவதே அரசின் இலக்காக இருக்கிறது. இயற்கைப் பேரழிவுகளால் மட்டுமல்ல, மனிதர்கள் உருவாக்கும் திட்டமிட்ட பேரழிவுகளாலும் விவசாயிகள் கடுமையாகத் தாக்கப்படவிருக்கிறார்கள். இத்தகையதொரு சூழலில் ஏழை விவசாயிகளுக்கு காகிதப் பத்திரங்களை விநியோகித்து விட்டு, அவர்களுக்குக் காப்பீடு வழங்கி விட்டதாகக் கூறுவதென்பது, குரூரமானதொரு நகைச்சுவை.

மொழியாக்கம்: சூரியன்

 ”ஆஸ்பெக்ட்ஸ் ஆஃப் இந்தியாஸ் எகானமி” (எண் 6667) இதழில்  ”விவசாயிகளிடமிருந்து அரசைக் காப்பீடு செய்து கொள்ளுதல்” என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

– புதிய ஜனநாயகம்s, ஆகஸ்ட் – 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி