Sunday, June 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 518

சசிகலா – கேலிச்சித்திரம்

1

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனார் சசிகலா.

sasi admk

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

இணையுங்கள்:

சென்னை அரசுக் கருவூலம் முற்றுகை ! செய்தி – படங்கள் !

4

RSYF NDLF Protest (1)“பாசிச மோடியின் 50 – நாள் கெடு முடிந்தது! உழைக்கும் மக்களின் துயரம் தீரவில்லை!” என்ற முழக்கத்தை முன் வைத்து புரட்சிகர அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் 29 டிசம்பர் 2016 அன்று நண்பகல் 12:00 மணி அளவில் சென்னை அண்ணா சாலை ஜெமினி பாலத்தில் இருந்து முழக்கமிட்டபடி பாரத ஸ்டேட் வங்கியின் மத்தியக் கருவூலக் கிளையை முற்றுகையிட்டனர். போராட்டத்தை முன்பே அறிந்துக்கொண்ட SBI நிர்வாகம் வங்கி அலுவலகத்துக்கு விடுமுறை அளித்தது.

தோழர்கள் சாலையில் அமர்ந்து “மோடி கேட்ட 50 நாட்கள் அவகாசம் முடிந்தது ! 400 கோடி கள்ளப்பணத்தை ஒழிக்கப்போவதாக சொல்லி 127 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய கருப்புப்பண ஒழிப்பு நாடகம் முடிவுக்கு வந்தது!” என முழக்கங்களை எழுப்பினர். வாகனங்களில் செல்வோரும், பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் முழக்கங்களை ஆர்வத்துடன் நின்று கவனித்து சென்றனர்.

பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது,

“கடந்த 8 நவம்பர் 2016 நள்ளிரவுமுதல் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி  அறிவித்துவிட்டு ஜப்பானுக்கு சென்று புல்லட் ரயிலில் வலம் வந்தார். பின்னர் அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர் எனக் கூறிவிட்டு இந்தியாவிற்கு விமானம் ஏறினார்.

RSYF NDLF Protest (17)இந்தியா வந்ததும் கோவாவில் பொதுக்கூட்ட மேடையிலேயே மக்கள் படும் துன்பத்திற்காக வருந்துகிறேன் என்றும் கருப்புப் பணமுதலைகளால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி கண்ணீர்விட்டுக் கதறினார். 50 நாட்கள் அவகாசம் கொடுங்கள், எல்லா பிரச்சினைகளும் சரியாகும் என்று கூறினார். அதன் பின்னரும் மக்கள் பாதிப்பு தீரவில்லை எனில் நடுரோட்டில் வைத்து என்னை தூக்கிலிடுங்கள் எனக் கூறினார்.

மேலும் இந்த அறிவிப்பு வெளியானது முதல், பா.ஜ.க தலைவர்களும் அவர்களது ஊடக கூஜாக்களும் மக்கள் எங்கும் பாதிக்கப்படவில்லை எனப் புளுகி வந்தனர். பா.ஜ.க-வின் தமிழிசைசெளந்திரராஜன் மக்கள் இதனை ‘சுகமான சுமையாகத்தான் பார்கின்றனர்’ என்றார். இல.கணேசன் ’50- நாள் கழித்து மக்கள் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் சட்டையைப் பிடித்து கேள்வி கேளுங்கள்’ என்றார்.

இந்த நிலையில் மோடி சொன்ன 50 நாள் கெடு முடிவடைந்த பின்னரும் வங்கிகளில் மக்கள் கூட்டம் குறையவில்லை. தங்களின் சொந்தப் பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு பிச்சைக்காரர்கள் போல வீதிகளில் நிற்கின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவோம். வங்கிகளை மீண்டும் மீண்டும் முற்றுகையிடுவோம். மக்கள் வங்கியில் செலுத்திய அனைத்து பணத்தையும் எடுக்கும் வரை போராட்டம் தொடரும்” என பத்திரிக்கையாளர்கள் மூலமாக மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

போராட்டத்தையொட்டி பாரத ஸ்டேட் வங்கிக் கிளைக்கு விடுமறை விடப்பட்டது. சாலை மறியல், வங்கியை முற்றுகையிடுவது என ஒரு மணிநேரம் போர்க்குணமாக போராட்டம் நடைப்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பெண்கள், குழந்தைகள் என்றும் பாராது போலீசு தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து வேனில் ஏற்றியது. இப்போராட்டத்தால் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. பின்னர் தோழர்களை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சமூக நலக் கூடத்தில் அடைத்து வைத்தது.

போராட்டத்தின் முதல் அணியினர் கைதான பிறகு அடுத்த அணியாக பல தோழர்கள் அதே இடத்தை மீண்டும் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதனால் திகிலடைந்த போலீசு அவர்களை கைது செய்து சமூக நல கூடத்தில் அடைத்ததோடு மீண்டும் போராட்டக்காரர்கள் வந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் SBI கருவூல அலுவலகத்தைச் சுற்றி போலீசு வாகனங்களை அரணாக அமைத்து யாரும் இல்லாத கட்டிடத்தை மீண்டும் காவல் காக்க துவங்கியது.

அண்ணா சாலையின் மையத்தில் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் நடக்கும் போது மோடி கும்பல் தூக்கி எறியப்படும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.

நூல் அறிமுகம் : பார்ப்பனியத்தை பதற வைக்கும் இரண்டு நூல்கள்

4

காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் விடியல் பதிப்பகம் இரண்டு நூல்களை வெளியீட்டிருக்கிறது. கவனத்துக்குள்ளாக்கும் இந்த நூல்களின் கருத்து மற்றும் கண்ணோட்டங்களால் இந்துத்துவ ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுபவர்களின் சிந்தனைக்கு மலர்ச்சியும், இந்துத்துவ வெறியர்களுக்கு எரிச்சலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

1. பெரியார் : இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)

முதாயம், மதம், சாதி, பண்பாடு, தேசியம்… என 21 தலைப்புகளில் பெரியாரின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பெரியாரின் நூல் வரிசைகளை முழுதும் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக தேர்ந்தேடுக்கபட்ட இத்தலைப்புகள் காலம், இடம், விவரங்களுடன், அன்றைய சமூக அரசியல் பின்புலத்துடன் அமைந்திருக்கின்றன.

பெரியார் அன்றும் இன்றும்சமுதாயம் என்ற தலைப்பில் 1926- இல் சென்னிமலையில், கண்ணை மூடி சாமி கும்பிடுபர்களை கண்ணை திறந்து பார்க்க வைக்கிறார் பெரியார்.

” காசி, ஜகந்நாதம், பண்டரிபுரம் முதலிய ஊர்களில் உள்ள சாமிகள் யார் தொட்டாலும் சாவதில்லை. அங்கு கோவிலுக்குப் போகிறவர்கள் எல்லாம் தாங்களே நேரில் சாமியைத் தொட்டுத் தலையில் தண்ணீர் விட்டு புஷ்பம் போட்டுக் கும்பிடுகிறார்கள். அதே பெயருள்ள சாமி நமது நாட்டில் நாம் தொட்டால் செத்துப் போய்விடுகிறது. சீரங்கம், சிதம்பரம், பேரூர், பவானி, கொடுமுடி, திருச்செங்கோடு, கரூர் முதலிய முக்கிய ஷேத்திரங்களிலுள்ள சாமிகள் – நாடார்கள் கோவிலுக்குப் போய்க் கும்பிட்டால் – அக் கோவில்களும் சாமிகளும் சாவதில்லை. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஜில்லாக்களில் உள்ள சாமிகள் மாத்திரம் நாடார்கள் கும்பிட்டால் செத்து விடுகின்றன. இப்படி, சாமிகளின் சக்தியும் உயிரும் கோயில்களின் யோக்கியதையும் ஊருக்கு ஒருவிதமாய் இருப்பானேன்? பிறகு, பார்ப்பனர்க்கு மாத்திரம் அந்தச் சாமியை உயிர்ப்பிக்கும் சக்தி இருப்பானேன்? “

இந்தச் கருத்தை வெறும் கடவுள் மறுப்பு என்று மட்டும் பார்த்து விட முடியுமா? சாமி யோக்கியதை மூலமாக சாதி யேக்கியதையை கவனத்துக்குள்ளாக்கும் இந்தக் கருத்து இன்றும் தேவைப்படுகிறது.

“பார்ப்பனர் தோழர்களுக்கு” என்னும் தலைப்போ, ” பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ் நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் – பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள்.

சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் – ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல்நிலையில் இளைத்துப்போய், வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவுத்தான் நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக்கொள்ளும் உணர்ச்சி ஆகும்.”

– என்பதன் மூலம் வெறுப்பு அரசியலின் விளைநிலம் ஆரியமே என்பது அம்பலமாகிறது. இப்படி பல தலைப்புகளும் படிப்பவரை இன்னும் விவாதிக்க வைக்கும் உயிரோட்டமாக பெரியார் காலம் கடந்தும் நிற்கிறார். இந்தக் கூட்டத்தில் நிற்கவில்லை என்றால் ரத்தம் கக்கி சாவாய் என்ற ஆரிய காரிய கட்டளை ஏதும் பெரியாரிடம் இல்லை, உன் அறிவிற்கு சிந்தித்து தேவையானவற்றை எடுத்துக்! என்ற பகுத்தறிவின் அழகை உணர நூலில் பயணியுங்கள்.

( 960 பக்ககள், நல்லதாள், அட்டைக் கட்டுடன் இந்நூல் விலை : ரூ. 300.00 )

2. இந்து இந்தியா கீதா பிரஸ்: அச்சும் மதமும் – அக்-ஷய முகுல், தமிழில்: அறவணன்.

ராமாயணமும், மகாபாரதமும் நம் சமுகத்தின் மீது காலம் தோறும் நிறுவும் அதிகாரத்தை புரிய வைக்கும் விதமாக ஏற்கனவே வெளிவந்த “இந்திய வரலாற்றில் பகவத்கீதை” (The Role of Bagaved Gita in Indian History – Premnath Bazaz 1975) நூலின் வரிசையில், அந்நூலின் கருதுகோள்கள் பலவற்றை வரலாற்று தரவுகளுடன் உறுதிப்படுத்தும் “இந்து இந்தியா உருவாக்கத்தில் கீதா பிரஸ்” நூலையும் கொண்டு வந்திருக்கிறது விடியல் பதிப்பகம். இந்நூலின் ஆங்கிலப் பதிப்பையும் விரைவில் வெளியீட உள்ளதாக விடியல் பதிப்பகம் அறிவித்துள்ளது. இச்சகம் புரிவதற்வதற்கே அச்சகம் நடத்தும் ஆரியப் பார்ப்பனக் கும்பலின் சிலந்தி வலைப்பின்னலை தரவுகளுவுடன் தருகிறது இந்நூல், இதை தமிழில் வழங்கியதற்காக மொழிபெயர்ப்பாளர், விடியல் பதிப்பக குழுவிற்க்கு நன்றி பாராட்டலாம்.

அச்சும் மதமும்இந்நூலின் தேவை பற்றி நாம் அறிய வேண்டியது,

” ஒரு இந்தியனின் மனக் கட்டமைப்பை உருவாக்கவல்ல வலிமையைப் பெற்றிருக்கும் புராண, இதிகாசங்களை, குறிப்பாக பகவத்கீதையை, படிப்பறிவு மறுக்கப்பட்ட , பகுத்தறிவு உருவாக்கப் படாத மக்களிடம் பலவடிவங்களில் திணித்து அவனது சிந்தனையை பாழ்படுத்தி, ‘இந்து இந்தியா’ என்னும் கட்டமைப்பை செயற்கையாக உருவாக்கியதில் கீதா பிரஸ் முதன்மையானது. இந்துத்துவ மார்வாடி கும்பலின் நோக்கம் – அவர்களுக்கான கட்டமைப்பு, அதிகார வர்க்கம், பொருளியல் சுரண்டல் ஆகியவற்றை நிறுவி பராமரிப்பது மற்றும் தொடர்ந்து விரிவுபடுத்துவது என்பதே. இக்கூற்று மிகையல்ல என்பதை கடந்த காலம் முதல் தற்கால மோடி காலம் வரை உள்ள சம்பவங்களைக் கண்காணித்தாலே போதும், உண்மை விளங்கும்.

இந்து இந்தியா முதலில் பண்பாட்டுத் தளங்களில் தான் எதிர்ப்பின்றி நிறுவப்படுகிறது. பின் பொருளியல் துறையில் பரவ ஆங்கிலேயர்களும், அவர்களின் வணிக, அரசியல் நோக்கங்களும் காரணமாகின்றன. பண்பாட்டின் ஒரு கூறான மொழியைப் பொருத்த வரை இந்தி பரவலாக்கப் படுகிறது,

கீதை பதிப்பகத்தின் நிறுவனர் போத்தார் அடிப்படையில் துணி வியாபாரி. ஆனால் அவர் இறுதி வரை இந்தியா முழுவதும் ‘இந்து இந்தியா’ என்னும் நூலை குறுக்கும் நெடுக்குமாக நெய்த பலருடன் இணைந்து செயல்பட்டு நெசவு செய்த துணியே அவரின் ஆகச் சிறந்த வணிகம். ஊடும் பாவுமாக ஓடுபவர்களில் பெரும் பாலோனோர் பார்ப்பன பனியாக்களே. பெரியாரின் தமிழ்நாட்டில் அத்துணி கிழிந்தே உள்ளது. பெரியாரின் சுயமரியாதை கருத்துகள் போத்தாரின் நூலை விடக் கடினமான நூலில் விரவியுள்ளது. RSS, BJP, VHP. என்னும் விசச் சிலந்திகள் தங்களது, வலையைப் பின்ன கடும் முயற்சி மேற்கொள்ளும். திருவள்ளுவரையும் அம்பேத்கரையும் விழுங்கும். பெரியார் மட்டுமே இப்பணியில் நமக்கான ஊசியும் நூலும்.

ஒரு மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியருக்கு உரிய பணியை தனது கடுமையான உழைப்பின் மூலம் செயல்படுத்தியுள்ள ஆசிரியர் அக் ஷய முகுல் இந்தியாவின் ஊடகத்துறையினருக்கான முன் மாதிரி. அவரின் கடின உழைப்பும், அறிவும் பல நூற்றாண்டுகளுக்கு சமூகத்தை விழித்தெழவைக்கும். அவரின் ஒவ்வொரு பதிவும் காலம் பல கடந்தும் சமூகத்தின் விடுதலைக்கு பயன் தரும் அர்த்தம் உடையவை. “( நூலின் பதிப்புரையிலிருந்து)

( 720 பக்கங்கள், நூலின் விலை : ரூ.650.00 )

-துரை. சண்முகம்.

நூல் வெளியீடு:
விடியல் பதிப்பகம், கோயம்பத்தூர்.
பேச : 0422 – 2576772.

நூல்கள் கிடைக்குமிடம் :
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

ஐம்பது நாளில் ஆண்டிகளின் வல்லரசு – கேலிச்சித்திரம்

0

அப்பாடா… ஒரு வழியா 50 நாள் ஆகிடுச்சி. நாளையிலிருந்து நாமளும் வல்லரசு தான்.

demonitezation-50-days-completed

 

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.

இணையுங்கள்:

மோடி கெடு முடிந்தது – அரசு கருவூலம் முற்றுகை !

3

பாசிச மோடியின் 50 நாள் கெடு முடிந்தது !
உழைக்கும் மக்களின் துயரம் தீரவில்லை !
கருப்புப் பணமும் ஒழியவில்லை !

SBI வங்கி முற்றுகைப் போராட்டம்!

29.12.2016
வியாழன் காலை 11.30 மணி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய (அரசு கருவூலம்)
ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

ந்தியாவை வல்லரசாக மாற்றப் போகிறேன் என்று ஆரவார கூச்சலிட்டு ஆட்சியைப் பிடித்த மோடி டாட்டா, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடியாகவும், கைத்தடியாகவும் செயல்பட துவங்கினார். தனது வர்க்கத்திற்கு சேவைபுரியும் வகையில் மேக்-இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா என அடுக்கடுக்கான திட்டங்களை அறிவித்துக் கொண்டே செல்கிறார்.

modi-6-finalகார்ப்பரேட் முதலாளிகளின் நலனைக் கொண்ட வளர்ச்சி, வல்லரசு என்கிற பொருளாதார கொள்கையின் ஒரு பகுதியாகத்தான் கடந்த நவம்பர்- 8 அன்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்தார். ஆனால், இதனை மூடிமறைத்து இதன் மூலம் கருப்புப் பணம், ஊழல்பணம் அனைத்தையும் ஒழித்து கிரெடிட், வாலட் கார்டுகளைக் கொண்டு பணமற்ற பரிவர்த்தனையை உருவாக்குவதன் மூலம், நாட்டை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்வதாக, அதிரடி பொருளாதாரத் தாக்குதலுக்குக் காரணம் சொன்னார், மோடி.

ரிசர்வ் வங்கி கவர்னர், நிதி ஆயோக் தலைவர், நிதி செயலர், பிரதம மந்திரி உள்ளிட்ட கையடக்க அதிகாரக்கும்பலுக்குபின் இருந்து திட்டமிடும் சிந்தனை குழாம்களின் ஆலோசனைப்படி, இந்தத்திட்டத்தை அறிவிக்கும் முன்னரே மக்களின் எதிர்ப்பை நசுக்க முப்படைகளை அழைத்து ஆலோசித்து அதன் பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்பதே உண்மை. மக்களின் மீதான தாக்குதலை நியாயப் படுத்த முடியாமல் கடந்த 46 நாட்களில் 126 முறை புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு தனது ராஜகுரு சோ பாணியில் துக்ளக் தர்பாரை நடத்திவருகிறார், மோடி.

ஆனால், எதிர்க்கட்சிகளும், படித்த அதிமேதாவிகளான அறிவுத்துறையினரும் இந்த நடவடிக்கையை முன்தயாரிப்பு இல்லாத அறிவிப்பு என்பதை மட்டும் முதன்மைப்படுத்தி கூச்சலிட்டனர். இதன் மூலம் உழைக்கும் மக்களின் மீதும், இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்பது மறைந்து விடுகிறது.

மொத்தம் 125 கோடி மக்களில் ஒரு சதவீதம் மட்டுமே வரிகட்டுகின்றனர். 90 சதவீத மக்கள் ரூபாயின் மூலம் பரிவர்த்தனை செய்வதால், வரியை ஏய்க்கின்றனர். இன்னும் வங்கிப் பக்கம் வராத 40 சதவீதம் மக்களையும், வங்கிக்குள் இழுத்து சேமிப்பை பிடுங்கத்தான் இத் திட்டம் என்பதை நிதி ஆயோக் நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட 15.4 லட்சம் கோடி, 500,1000 ரூபாயில் இன்றுவரை 14 லட்சம் கோடி வங்கிகளிலும், 75 ஆயிரம் கோடி ஜன் தன் யோஜனா திட்டத்திலும் டெபாசிட்செய்யப் பட்டுள்ளது. இந்தத் தொகை மட்டுமல்ல, இனிமக்களின் வருவாய் ஒவ்வொரு ரூபாய்க்கும் வரிபோட்டு சுரண்டுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த போகிறார்களாம்.

மொத்தப் பொருளாதாரத்தில் அரசின் கணக்குப்படியே வெறும் 6 சதவீதமுள்ள கருப்புப்பணத்தை ஒழிக்க உழைக்கும் மக்களின் கையிருப்பு பணத்தை, சம்பளத்தை, வங்கியில் செலுத்திவிட்டு வெறும் 500, 2000 எடுக்கக்கூட வழியின்றி பிச்சைக்காரர்களாக்கி தெருவிலும், வங்கியின் வாசலிலும் நிறுத்தியுள்ளது. இத்துடன் 125 பேரை ’பலி’ வாங்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு.

slideநாட்டின் பெரும்பான்மை மக்கள் ஈடுபடும் விவசாயத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களை வாங்குவது முதல் விளைந்த பொருட்களை சந்தையில் விற்பனை செய்வது வரை பண மதிப்பு நீக்கத்தால், பணம் கையில் கிடைக்காததால் ஏறக்குறைய 40 கோடி கூலி விவசாயிகளிலிருந்து சிறு, நடுத்தர விவசாயிகள் வரை வாழ்விழந்து நிற்கின்றனர்.

விவசாயத்திற்கு அடுத்து 10 கோடி மக்கள் ஈடுபடும் சில்லறை வர்ததகம், சிறுகடைகளில் வெறும் 30 சதவீதம் வியாபாரம் மட்டுமே நடைபெறுவதால் வணிகர்கள் வாழ்க்கை இழந்து நிற்கின்றனர். கட்டுமானத் தொழிலில் தமிழ்நாட்டில் மட்டும் 20 ஆயிரம் கோடி அளவிற்கு வேலைகள் தேக்கம் அடைந்துள்ளது. நாடுமுழுவதும் 1 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்து வீதியில் நிற்கிறார்கள்.

தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்புதொழில், லாரி போக்குவரத்து, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி, பெங்களூரு ஆயத்த ஆடை உற்பத்தி, குஜராத்தின் ஜவுளி பூங்கா போன்ற தொழில்கள் அனைத்தும் பணமின்றி அழிவின் விளிம்பில் நிற்கிறது. பலகோடி தொழிலாளர்கள் வாழ்விழந்து நிற்கின்றனர்.

நாடு முழுவதும் தேயிலை, ரப்பர், காப்பி, வாசனைபொருட்கள் உற்பத்தி செய்யும் தோட்டத்தொழில்களில் பணப்பரிவர்த்தனையின்றி, ஊதியம் இன்றி பட்டினிச் சாவுக்கும், தற்கொலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்களின் வாழ்வும் பணமின்றி அழிந்து கொண்டுவருகிறது.

மறுபுறம் ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்ட 4 லட்சம் கோடி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அரசு அதிகாரிகள், காண்ட்ராக்டர்கள், கனிமவள கொள்ளையர்கள், அரசியல்வாதிகள் கையில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி குவிகிறது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் முதல் உள்ளூர் வங்கி மேலாளர் வரையிலான அதிகாரிகள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவுவதையும் இந்த நடவடிக்கைக்கு வடஇந்தியாவில் 20 சதவீதம் கமிஷனும், தென்னிந்தியாவில் 20 முதல் 40 சதவீத கமிஷனும் பெற்றுக்கொண்டு மாற்றித்தர புதிய பட்டாளமே கிளம்பியுள்ளதை பற்றி அன்றாடம் வெளியாகும் செய்திகள் மோடியின் கருப்புப்பண ஒழிப்பு என்பது நாடகம் தான் என நிரூபித்துவிட்டன.

பொதுத்துறைகளை கார்ப்பரேட் முதலாளிகளும், சில்லறை வர்த்தகத்தை வால்மார்ட், ரிலையன்சு, கே மார்ட், பிக் பஜார் போன்ற பகாசுர வியாபாரிகளும், விவசாயத்தை ஒப்பந்த விவசாயமாக மாற்றி கொள்ளையிட பாயர், எக்ஸான், மோபில் போன்ற வேளாண் வர்த்தககழகங்களும், ஊறுகாய், ஊதுபத்தி உள்ளிட்ட 20 சிறு தொழில்களை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடவும் அனுமதிப்பதை ஊக்கப்படுத்துவதே பணமற்ற பரிவர்த்தனை, டிஜிட்டல் இந்தியா திட்டம். இந்த சூறையாடலுக்கு தேவைப்படும் பணத்தையும் நமது சேமிப்பிலிருந்து வழிப்பறி செய்வதே வங்கிப் பரிவர்த்தனை.

இத்தனை கொடுமைகளும், கருப்புப் பணத்தை உருவாக்கும், நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடும் கார்ப்பரேட்டுக்கள், வங்கிகளிடம் கடன் வாங்கி தொழில் நடத்தும், தேசங்கடந்த தரகு முதலாளிகளின் நலனுக்காக நடத்தப்படுகிறது என்பதே உண்மை. இந்த நடவடிக்கையில் மோடி ஆரவாரமாக அறிவித்த கருப்புப்பணம் எங்கே ஒழிந்தது?

ATM Queueபணமற்ற வங்கிப் பரிவர்த்தனை ஊழலை, கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை தீவிரவாதத்தை ஒழிக்கும் என்பது பொருளாதாரம் அறியாத முட்டாள்களின் வாதமாகும். டிஜிட்டல் பரிவத்தனை நடக்கும் ஐரோப்பிய நாடுகளான அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன், பிரான்ஸ், ஸ்வீடன் போன்ற நாடுகளில் மேற்கண்ட நடவடிக்கைகள் தொடர் கதையாகி சந்தி சிரிக்கிறது. இதே போன்ற பணமதிப்பு நீக்க நடவடிக்கை கென்யா, ஆப்கான், தான்சானியா போன்ற நாடுகளில் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்தப் பணமற்ற பரிவர்த்தனை – பணமதிப்பு நீக்க நடவடிக்கை 27 பொதுத்துறை வங்கிகளை கடன் என்ற பெயரில் கொள்ளையடித்த கார்ப்பரேட் முதலாளிகளின் 8 லட்சம் கோடியை ஒன்றுமே அசைக்காது. மாறாக, வங்கிக்கடனை கட்டாத முதலாளிகளுக்கு மீண்டும் நமது சேமிப்பு பணத்தை வாரிக்கொடுக்கவே வழிவகுக்கும். நமது வாழ்க்கையை சூறையாடிய, வீதியில் வீசியெறிந்த பொருளாதாரத் தாக்குதலை அரசியல் நடவடிக்கையை, அரசு கட்டமைப்பின் தோல்வியுடன் இணைத்து புரிந்துக் கொள்வோம். நாட்டை நாசகார வழியில் கொண்டு செல்லும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகளை தூக்கியெறியாமல் பரிவர்த்தனை பொருளான பணத்தை மாற்றுவது எந்தவகையிலும் மக்கள் பிரச்சினையை தீர்க்காது.

தினம் தினம் வங்கி வாசலில் காத்திருந்தது போதும்… 50 நாட்களில் அனைத்தும் சரியாகாவிட்டால் தெருவில் நிற்க வைத்து கேளுங்கள்“என்று வாக்குறுதி அளித்தமோடி, ‘சுகமான சுமைதான் தாங்கிக் கொள்ளுங்கள்“என்று அறிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், “சட்டையைப் பிடித்து கேளுங்கள்“என்று சவடால் அடித்த இல.கணேசன் உள்ளிட்ட பா.ஜ.க. கும்பலின் வீடுகளை தேடிச்சென்று அவர்களின் அறிவிப்புகளை உண்மையாக்குவோம். மக்களின் சேமிப்புப் பணத்தை சட்டப்பூர்வமாகவே வழிப்பறி செய்துள்ள அரசின் நடவடிக்கைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அலையலையாக திரண்டு வங்கிகளை முற்றுகையிடுவோம். இதன் மூலம் அதானி, அம்பானி முதலாளிகளுடன் கூடிக்குலாவும் பாசிசமோடியின் 50 நாள் நாடகத்திற்கு முடிவுகட்டுவோம்.

முழக்கங்கள்:

மோடி கேட்ட 50 நாட்கள்
அவகாசம் முடிந்தது !
400 கோடி கள்ளப்பணத்தை
ஒழிக்கப்போவதாக சொல்லி
127 கோடி மக்களை
நடுத்தெருவில் நிறுத்திய
கருப்புப்பண ஒழிப்பு நாடகம்
முடிவுக்கு வந்தது!

உழைக்கும் மக்களின்
கடுகு டப்பா சேமிப்பைக் களவாடி
முதலாளிகளுக்கு தாரை வார்த்ததுதான்
மோடியின் 50 நாள் சாதனை!

காசு – பணம் – துட்டு – மணி! மணி!
கருப்பு வெள்ளையாகும்
மர்மத்தை நீ கவனி!
மோடி – அதானி,
ஓ.பி.எஸ் –  ரெட்டி ஓரணி!
கருப்புப்பண கும்பலை
விரட்டியடிக்க தயாராகு நீ!

அம்பானி – அதானி – மல்லையா
போன்ற கார்ப்பரேட் முதாளிகளுக்கு
பல லட்சம் கோடிகளை
கடனாக வாரி இறைத்து
திவாலாகிப்போனது வங்கிகள்!
திவாலான வங்கிகளை தூக்கி நிறுத்த
மக்களின் சேமிப்பை
வழிப்பறி செய்துள்ளது மோடி அரசு!

சில்லரை வணிகம்,
சிறு தொழில்களை அழித்து
ரிலையன்சு, வால்மார் போன்ற
கார்ப்பரேட் கொள்ளைக்கார
கம்பெனிகளை வாழ வைக்கவே
பணமற்ற பரிவர்த்தனை –
டிஜிட்டல் இந்தியா!

நாம் உழைத்து சம்பாதித்த
பணத்தை – சேமிப்பை
வங்கியில் போட்டுவிட்டு
செயல்படாத ஏ.டி.எம்
பணமில்லாத வங்கியின் முன்
காத்திருந்து என்ன பயன்?
களத்தில் இறங்கிப் போராடு!

லஞ்சம், ஊழல், கருப்புப்பணம்
கள்ளப்பணம் ஆகியவற்றின்
ஊற்றுக்கண்ணே முதலாளித்துவம்தான்!
இந்த முதலாளித்துவத்தை ஒழிக்காமல்
கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது!

மோடி கேட்ட 50 நாட்கள்
அவகாசம் முடிந்தது !
தெருவில் நிற்க வைத்து
கேளுங்கள் என்ற மோடி,
சட்டையை பிடித்து கேளுங்கள்
என்ற இல.கணேசன்,
சுகமான சுமைதான் தாங்கிக்கொள்ளுங்கள்
என்ற பொன்.ராதாகிருஷ்ணன்
ஆகியோரை தண்டிக்க
அவர்கள் வீடுகளை முற்றுகையிடுவோம்!

கருபுப்பண முதலைகளை தப்பவிட்டு
மக்களின் சேமிப்பை கொள்ளையடித்த
பார்ப்பன பாசிச மோடி கும்பலுக்கு
எதிராக அலையலையாகத் திரள்வோம்!
கருப்புப்பண ஒழிப்பு நாடகத்திற்கு முடிவுகட்டுவோம்!

முதலாளிகள் – வங்கி அதிகாரிகள்
கூட்டு சேர்ந்து கருப்புப்பணத்தை
வெள்ளையாக்குறான்!
நாம் போட்ட பணத்தில்
2000 எடுக்க தெருவில் நிற்கிறோம்!
நம் பணத்தை எடுக்க நமக்கேன் தடை!
வங்கிகளை முற்றுகையிடுவோம்!
போட்ட பணத்தை எடுப்போம்! 

சென்னை முற்றுகைப்போராட்டத்திற்கு திரள்வீர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தமிழ்நாடு – புதுச்சேரி
தொடர்புக்கு: 9445112675, 8807532859, 9597789801

பணம் மதிப்பு நீக்கமா ? சட்டபூர்வக் கொள்ளையா ? ஐ.ஐ.டியில் APSC பிரச்சாரம்

3
Photo Shop modi
80% மக்களின் மீது துல்லிய தாக்குதல் நடத்திய மோடிஜி.

APSC

பணம் மதிப்பு நீக்க நடவடிக்கையா? அல்லது சட்டபூர்வமான கொள்ளையா?

1000 மற்றும் 500 நோட்டுகள் செல்லாது என்று செப்டம்பர் 8ஆம் தேதி அன்று மோடி அறிவித்த பின்னர் தெலுங்கானா பகுதியை சேர்ந்த 55 வயதான பெண் விவசாயியான கே. வினோதா தற்கொலை செய்து கொண்டார். அவர் தன்னுடைய நிலத்தை விற்று கிடைத்த 56 லட்சம் ரொக்க பணத்தை உயர் மதிப்பு நோட்டுகளாய் (பழைய 1000 மற்று ம்  500 ரூபாய்) வைத்திருந்தார். மோடி அறிவிப்பினால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு சம்பவத்தில், ஒடிசாவின் சம்பல்பூரை சேர்ந்த பெற்றோரிடம் இருந்த பழைய 500 நோட்டை ஆட்டோ ஓட்டுனர் பெற மறுத்ததால், தங்களுடைய இரண்டு வயது குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாமல் பறிக்கொடுத்தனர். கடந்த ஒரு மாதத்தில் மோடியின் செல்லா நோட்டு நடவடிக்கையால் 12 வங்கி ஊழியர்கள் உட்பட90 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். இதுபோல இந்தியா முழுவதும் சொல்லப்படாத கதைகள் ஏராளம்.

Tughlaq modi
நான்கு மணி நேரத்தில் புழக்கத்தில் இருந்த 86% பணத்தை செல்லாக்காசாகிய நவீன துக்ளக் மோடி

வெறும் 4 மணி நேரத்தில், செப்டம்பர் 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் பணப்புழக்கத்தில் இருந்த 86 விழுக்காடு பழைய 500, 1000 நோட்டுக்கள் சட்டரீதியான தகுதியை இழந்து வெற்று காகிதங்களாய் மாறியது. மோடியின் சொந்த வார்த்தைகளில், சொன்னால் இந்த ‘பணத்தின் மதிப்பு நீக்க நடவடிக்கை’ கள்ள நோட்டு, பயங்கரவாதம் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு ஆகும். ஆனால் இந்த பணத்தின் மதிப்பு நீக்க நடவடிக்கைக்கும் அதற்காக சொல்லப்பட்ட காரணங்க்களுக்கும் இடையே பல மைல்களுக்கு இடைவெளி இருப்பதை ஆய்வுகள் தெளிவாக காண்பிக்கின்றன.

ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தில் கள்ள நோட்டின் அளவு வெறும் 0.0007% மட்டுமே. அதாவது புழக்கத்தில் உள்ள 16.41 லட்சம் கோடி ரூபாயில் வெரும் 400 கோடி ரூபாய் மட்டுமே கள்ள நோட்டாகும். மேலும் 2015-16 நிதி ஆண்டில் பிடிபட்ட கருப்பு பணத்தில் வெறும் 6% மட்டுமே ரொக்க பணமாக பிடிபட்டது என வருமான வரித்துறை தரவு காட்டுகிறது. எனவே, கறுப்பு பண ஒழிப்பிற்காகவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்று மோடி சொல்லவது பச்சை பொய். பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மோடியின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன. ஒரு மாதத்திற்கு பிறகும் கூட கருப்பு பணம் பதுக்கியவர்கள் யாரும் அரசாங்கத்தால் கைது செய்யப்படவில்லை. ஆனால் மோடியோ மற்றும் அவரின் அடிமைகளோ 50 நாட்கள் காத்திருங்கள் ‘Acche din’ (நல்ல நாள்) வந்து கொண்டு இருக்கிறது என்று சமூக மற்றும் அச்சு ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.

கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

கடந்த ஒரு மாதமாக மக்களின் சாதாரண வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உள்ளூர் சில்லறை வணிகர்கள் கடுமையான பாதிக்கப்புக்கு ஆளாகியுள்ளனர். பெட்டி கடைகள், உணவகங்கள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், மீன் சந்தை மற்றும் பலசரக்குக் கடைகள் தங்களின் வணிகத்தில் பெரும் சரிவை சந்தித்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களால் ஊதியம் பெற முடியவில்லை; தோல், ஜவுளி மற்றும் பிற சிறு தொழில்கள் மூடும் தருவாயில் உள்ளன; கூட்டுறவு வங்கிகள் மற்றும் முதன்மை விவசாய கடன் சங்கங்கள் போதிய பணமில்லாமல் தேக்க நிலையில் உள்ளன; கட்டுமான தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவிதமும், வேலைவாய்ப்பில் 86 சதவிதமாக இருக்கும் முறைசாரா தொழில் துறை (informal sector) மீளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு அறிவிக்கப்படாத பொருளாதார அவசரநிலை, உழைக்கும் வெகு மக்களின் மீது மோடியால் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ, தனியார் வங்கிகளோ, மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு (NASSCOM), இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை (FICCI), பல திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் மின் வர்த்தக (e-commerce) நிறுவனங்களோ மோடியின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை  வரவேற்கின்றனர். உண்மையான கருப்பு பண முதலைகள் சிறிதளவு கூட பாதிக்கப்படவில்லை, ஆனால் உழைக்கும் வர்க்கமோ தாங்கள் நேர்மையாக சம்பாதித்த பணத்தை கூட பெறமுடியாமல் தவிக்கின்ற நிலையில் அவர்களுடைய வங்கி கணக்குகள் மோடியால் தணிக்கை செய்யப்படுகின்றன.

இந்த நடவடிக்கையை ஆதரிப்பவர்கள், கருப்பு பணம் என்பது வீட்டில் மூட்டையாகவோ அல்லது கட்டிலுக்கு அடியில், தலையணையில் திணித்து வைக்கப்பட்டிருக்கிறது என்று உள்ளார்ந்து நம்புகிறார்கள். ஆனால் அதற்கு மாறாக, கருப்பு பணத்தின் பெரும் பகுதி நிலம், நகை, பங்குகள், அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு என பாதுகாப்பாகவும் பரிவர்த்தனையிலும் உள்ளது. வரி இல்லா சொர்க்கங்கள் (மொரிசியஸ் தீவு, கேமன் தீவு மற்றும் பனாமா) மூலமாக இந்தியாவில் முதலீடு செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகளில் (FDI) பாதி கருப்பு பணம் ஆகும். அரசியல்வாதிகள் (பிஜேபி உறுப்பினர்கள் உட்பட), அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் சட்டவிரோதமாக பில்லியன் கணக்கான டாலர்களை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளனர். உலகளாவிய நிதி நாணய அறிக்கைப்படி(Global financial Integraty), பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் தவறாக விலை நிர்ணயம் மூலமாக வருடத்திற்கு 34.7 லட்சம் கோடி ரூபாய்க்கு சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வெளியில் செல்கிறது.

ஒட்டுமொத்தமாக 350 லட்சம் கோடி ரூபாய் 2004 மற்றும் 2013 ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் இருந்து வெளியில் சென்றுள்ளது. இந்த கறுப்பு பணம் தான் அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), அந்நிய நிறுவன முதலீடுகள் (FII) மற்றும் பங்கேற்பு குறிப்புகள் (Participatory Notes) என்ற பெயரில் வரி இல்லா சொர்க்கங்கள் வாயிலாக இந்தியாவில் மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது. கறுப்பு பணம் முதலாளித்துவ அமைப்பின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம். மேலும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே உள்ள புனித உறவு என்பது கறுப்பு பணத்திற்க்கு சட்டபூர்வமான பாதுகாப்பும் அங்கீகாரமும் வழங்குகிறது. இந்திய மக்கள் தொகையில் 10% க்கும் குறைவாக உள்ள கருப்பு பண முதலைகள் பற்றிய விவரங்களை ஆதாரங்களுடன் அறிந்த போதிலும், மோடி சர்க்கார் கருப்பு பண முதலைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் இந்தியா மக்கள் தொகையில் 80% க்கும் உள்ள சாதாரண மக்களை பணம் பரிமாற்ற நிபந்தனைகள் மற்றும் அவர்களின் வங்கி விவரங்களை ஆராய்வது என  இரக்கமற்று தொடர்ந்து சித்திரவதை செய்து வருகிறது மோடி அரசு.

Photo Shop modi
80% மக்களின் மீது துல்லிய தாக்குதல் நடத்திய மோடிஜி.

அரசியல் கட்சிகளோ, கம்யூனிஸ்ட்கள் உள்பட, பணத்தின் மதிப்பு நீக்க நடவடிக்கை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்லாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை மட்டும் முன்னிறுத்தி மோடியை கண்டிக்கின்றனர். ஆனால், இது கார்ப்பரேட் நிறுவனங்களின் பெரும் கொள்ளையால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சிக்கியுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து  வங்கிகளை காப்பாற்ற, இந்தியாவின் 80% மக்களின் கடினமாக உழைப்பினால் உருவான சேமிப்பை  கொள்ளையடிப்பதற்க்காக நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல் ஆகும்.

2016-ம் மார்ச் மாதம் நிலவரப்படி, பொது துறை வங்கிகளால் கொடுக்கப்பட்ட கடன்களில் 9.32% வராக் கடனாக மாறியுள்ளது, அது 2017-ம் மார்ச் மாத்தில்  10.10% ஆக உயரும். இந்த வராக் கடன்களின் தொகை சுமார் 4.76 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கியை பாதுகாக்க, அரசு 5 லட்சம் கோடிக்கு அதிகமான பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்குள் உட்புகுத்த வேண்டியுள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்கு பிறகு இப்போது வரை 11.55 லட்சம் கோடி ரூபாய் வங்கியில் வைப்பு நிதியாக (டெபாசிட்) செலுத்தப்பட்டுள்ளது. “பணத்தின் மதிப்பை நீக்குதல்” நடவடிக்கையின் மூலம் பெறப்படுகிற மக்களின் சேமிப்பு பணத்தை கொண்டு, பெருநிறுவனங்களால் சூறையாடப்பட்ட பணம் (வராக் கடன் வடிவில்) ஈடு செய்யப்படுகிறது. மக்கள் தொகையில் 90% இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சேமிப்பு பணத்தை, 10% இருக்கும் தரகு முதலாளிகளின் நலன்களுக்காக சூறையாடப்படுகிறது.

கறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு “மதிப்புமிக்க உத்தி” பணமில்லா பொருளாதாரம்.(cashless economy) இந்தியாவில் தற்பொழுது பரிவர்த்தணைகளில் 90% ரொக்கப் பணமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அண்மையில் பீகாரில் தனது பொதுக்கூட்ட உரையில், மோடி பணமில்லா பொருளாதாரத்திற்கு மாறுவதை பரிந்துரைத்துள்ளார்.

பண பற்றாக்குறையில் இருந்து மீள்வதற்கு மின் பரிவர்த்தனைக்கு(digital economy) மாற நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை வழங்குகிறது. இதழ்கள் மற்றும் செய்தித்தாள்களில் முழு பக்க விளம்பரங்களின் மூலம் ஒருகினைந்த பரிவர்த்தனை படிவம் (Unified Payment Interface – UPI), பரிவர்த்தனை வங்கிகள் (Payment Banks), ஆதார் மூலம் கட்டணம் செலுத்தும் அமைப்பு, கட்டமைப்பற்ற கூடுதல் சேவை தரவு (USSD), பேடிம் (Paytm) சேவை நிருவனம் மற்றும் பிற மின் பணப்பைகள் (wallets) போன்ற பல்வேறு வங்கி முறைகள் மூலம் செயல்படும் மின் பரிவர்த்தனை ஊக்குவிக்கபடுகிறது. மேலும் பழைய நோட்டுகளை மாற்ற வங்கி கணக்கு கட்டாயமாகும் என நிதி அமைச்சர் கூறுகிறார்.

முறைசாரா துறையில் பணிப்புரியும் தொழிலாளிகளின் வாராந்திர மற்றும் அன்றாட ஊதியத்தை உரிய வங்கி கணக்குகளில் மட்டுமே செலுத்த வேண்டும். “பணத்தின் மதிப்பைக் நீக்குதல்” என்ற பெயரில், மோடி வலுக்கட்டாயமாக அனைவரையும் வங்கிகளின் பிடியில் சிக்க வைத்திருக்கிறார், அதே போல் அனைத்து பணப் பரிமாற்றங்களும் மின் பரிமாற்றங்களாக செய்யப்படும் ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறார். இதனால் சிறிய பலசரக்குக் கடைகள் / காய்கறி விற்பவர்களின் வணிகம் 50% இழப்பை சந்தித்திருக்கிறது ஆனால் மின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் (supermarkets) இலாபம் இரண்டிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது. மோடி இந்த நடவடிக்கையின் மூலம் சில்லறை வர்த்தக வணிகத்தை அழித்து மின் வர்த்தக (e-commerce) நிறுவனங்கள் கிராமப்புறம் வரை தங்களின் தொழிலை விரிவுபடுத்த வழிசெய்திருக்கிறார்.

cashless-paytmகடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஏர்டெல், ரிலையன்ஸ், வோடபோன், ஐடியா மற்றும் பேடிம் (Paytm) உட்பட 11 பெரு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை வங்கி (Payment Banks) சேவையை தொடங்கஅனுமதி அளித்தது. நவம்பர் 23 ஆம் தேதி ஏர்டெல் அதன் பரிவர்த்தனை வங்கிக் சேவையை தனது 10000 சேவை மையங்களை கொண்டு சோதனை திட்டமாக ராஜஸ்தானில் தொடங்கியது. இந்த பரிவர்த்தனை வங்கியில் புதிய கணக்கை திறக்க ஆதார் அட்டை போதுமானது. சிறு நகர்ப்புறம் மற்றும் கிராமங்கள் தான் அவர்களின் முக்கிய இலக்கு. பெரும் மோசடி பேர்வழிகளான தொலைதொடர்பு நிருவனங்கள் மக்களின் சேமிப்பு பணத்தை கொள்ளை அடிக்க சட்டபூர்வமான உரிமையை மோடி கொடுத்துள்ளார்.

மோடி தனது இரண்டரை ஆண்டு கால ‘நல்லாட்சியில்’ ஜன் தன் யோஜனா, வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் அரசு சலுகைகளுக்கு கட்டாயம் ஆக்கியது, ஒருகிணைந்த பரிவர்த்தனை படிவம், ஆதார் மூலம் கட்டணம் செலுத்தும் அமைப்பு மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற முயற்சிகளின் மூலம் அனைவரையும் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் மற்றும் மின் பரிவர்த்தைனைக்கு மாறவும் நெருக்கம் கொடுத்து வந்திருக்கிறார். பெருநிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இடையில் உள்ள புனித உறவு மூலம் இந்த திட்டங்கள் எல்லாம் மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கொள்கை வகுப்பாளர்கள்(Policy makers) மற்றும் சிந்தனை குழாம் (Think tanks) கலந்து கொண்ட நிதி அயோக் (Niti Aayog) நத்திய கூட்டத்தில் உரையாற்றிய பில் கேட்ஸ்:

‘இந்தியா ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றத்திற்கு தன்னை தயார் செய்துக் கொள்ள வேண்டும். இந்தியா இன்னும் ஏழு ஆண்டுகளில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாறும்’ என்றார். அதாவது  ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவில் தொழில்நுட்பத்தை உற்பத்தித் துறையிலும் (இதனால் 2025 இல் 20 கோடி வேலை இழப்பு எதிர்பார்க்கப்படுகிறது), நிர்வாகத்தில் டிஜிட்டல் மயத்தையும் (பணமில்லா பொருளாதாரம்) உள்ளடக்கிய நான்காவது தொழில் புரட்சிக்கு(Fourth Industrial revolution) தயாராக இருக்க வேண்டும் என கொள்கை வகுப்பாளர்களுக்கு பில் கேட்ஸ் அறிவுருத்துகிறார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் முக்கிய பங்காளியான மைக்ரோசாப்ட், இந்தியாவில் 5 லட்சம் கிராமங்களில் இணைய வசதி வழங்க இந்திய அரசாங்கத்துடம் ஒரு வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இந்திய இயக்குனரும் ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருக்கும் நாசிகெட் மோர் (Nachiket Mor) இந்த பணத்தின் மதிப்பை நீக்கும் நடவடிக்கையிலும் பரிவர்த்தனை வங்கி அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மோடியின் பணமில்லா பொருளாதாரம் என்பது, ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் உழைக்கும் வர்க்கத்தை நேரடியாக கொள்ளையிடுவதற்காக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதாகும்.

பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்
பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த போதிலும், எதிர்க் கட்சிகள் தமது அரசியல் ஆதாயத்திற்காக பாராளுமன்றத்தில் பெரும் நாடகம் ஆடி வருகின்றனர். மோடி மற்றும் பா.ஜ.க உறுப்பினர்கள் வழக்கம் போல தங்களுடைய பாசிசத் தன்மையை மக்கள் மீதான ஏளனமான உரைகளையும் ஆணவமான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றனர். உண்மையில், மோடி பெருநிறுவனங்களின் லாபவெறிக்கு உணவளிக்க மக்களை 50 நாட்கள் பட்டினகிடக்க சொல்கிறார். தொழிலாளி வர்க்கத்தின் கவலை பற்றியோ, மக்களுக்கு தொடர்ந்து நிகழ்த்தப்படும் அநீதி மற்றும் தீர்க்க முடியாத இழப்புகள் பற்றியோ அக்கறைக் கொள்ளவும் ஆறுதல் சொல்லவும் யாரும் தயாராக இல்லை. உலகின் ‘பெரிய சனநாயகம்’ என்று அழைக்கப்படும் இந்திய நாட்டினுடைய அரசாங்கம் மற்றும் அதன் அரசியல் அமைப்பும் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் மக்கள் விரோத தன்மைக்கு மாறியுள்ளது.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு, மோடி தொழிலாளர்களின் சேமநல நிதி (PF) நிறுத்திவைக்கப்படும் என்று கூறிய போது, பெங்களூர் நகரமே ஸ்தம்பித்துப் போனது. மோடி பெங்களூரின் சாதாரண ஜவுளித் தொழிலாளர்களின் பெரும் எதிர்ப்பை தொடர்ந்து மோடி தனது முடிவை உடனடியாக பின்வாங்கி கொண்டார். எனவே மோடி அரசின் மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை. இது அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பாசிச அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய தருணம். நாட்டின் முன்னணி கல்லூகளில் ஒன்றில் மாணவர்களாக இருக்கும் நாம் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்கதுடன் கை கோர்த்து இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ  போராடுவது முக்கிய கடமையாகும்.

– அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம், சென்னை ஐ.ஐ.டி

நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்புநாதன் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?

0

ரெய்டுகள் இவர்களை என்ன செய்யும் ?

modi raid poster2_ppமோடி அரசே ! வருமானவரித்துறையே ! அமலாக்கத்துறையே !
ரெய்டுகள் இவர்களை என்ன செய்யும் ?
நத்தம், ஓபிஎஸ், சைதை துரைசாமி, அன்பு நாதன்
இவர்கள் மீதான ரெய்டுகள் என்ன ஆயின ?

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 99623 66321.

தாமரையில் ஆடும் பம்பரம் ! கேலிச்சித்திரம்

0

மக்கள் நலக்கூட்டணி முறிந்தது வைகோ வெளியேறினார் !

vaiko

ஓவியம்: முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.
பேச– 95518 69588

இணையுங்கள்:

ஊழல் முதலைகளை அம்பலப்படுத்திய கரூர் தோழர்களுக்கு சிறை !

0

மிழகத்தில் வருமான வரி அதிகாரிகளின் சோதனை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அ.தி.மு.க. அரசின் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் வீடு, அலுவலகம், தலைமைச் செயலகத்தில் சோதனை மற்றும் மணல் மாஃபியா சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகளின் அலுவலகங்களில் சோதனையின் போது பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மக்களின் பணமும், கட்டிக்கட்டியாக தங்கமும், விதிமுறைகளுக்கு மீறலான பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளது வருமான வரித்துறை. இந்த சோதனைகளில் புதிய ரூ 2000 நோட்டுக்கள் இலட்சக்கணக்கில் கைப்பற்றப்படிருக்கின்றன. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் தோல்வி என்பதையே கைப்பற்றப்பட்ட இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் தெரிவிக்கின்றன.

ஒருபக்கம் அரசு அதிகாரிகள் மணல் மாஃபியா கும்பல் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்படும் அதே நேரத்தில் சாதாரண ஏழை எளிய மக்கள் வங்கிகள், ஏ.டி.எம். முன்பாக ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டை எடுப்பதற்காக நாள்முழுவதும் மணிக்கணக்கில் நின்று வருகிறார்கள். அதுமட்டுமின்றி ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றவர்களில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோ(ச)டியின் கூட்டாளிகளான சகாரா, பெல்லாரிரெட்டி, அதானி, அம்பானி, பிர்லா, போன்ற கார்ப்பரேட் முதலாளிகளிடமும் மற்றும் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசின் பினாமிகளான ஷீலாபாலகிருஷ்ணன், சபீதா, டி.ஜி.பி.ராமானுஜம் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் எப்போது ரெய்டு என்று கேள்வி எழுப்பும் விதமாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக 26.12.2016 அன்று கரூர் பேருந்து நிலையத்தில் காலை 6.30 மணியளவில் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

Exif_JPEG_420
சுவரொட்டியை தேடித்தேடி கிழித்துள்ள கரூர் காவல்துறை

உடனே பொங்கி எழுந்த கரூர் நகர போலீசார் சுவரொட்டிகளைத் தேடித்தேடி கிழித்தது மட்டுமல்லாமல் சுவரொட்டி ஒட்டிய தோழர் ராஜு, விக்னேஷ்வரன் ஆகிய இருவரை விசாரணை என்ற பெயரில், கரூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் டி.எஸ்.பி கும்மராஜா மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் போஸ்டரில் குறிப்பிட்டுள்ள நபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா? ஆதாரம் இல்லாமல் எப்படி போஸ்டர் ஒட்டலாம் என்று கேட்க, தோழர்கள், அவர்கள் கொள்ளையடித்தற்கான முகாந்திரம் ஊரே அறியும் போது நேரில் சென்று ஆவணங்களைக் கைப்பற்றி ஆதாரத்தை திரட்ட வேண்டியது அரசு, வருமான வரித்துறை மற்றும் போலீசார் வேலை, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே போஸ்டர் ஒட்டப்பட்டது என்று கூறினர்.

அதன்பின் நமது வழக்கறிஞர் சென்று கேட்டதற்கு, மேற்சொன்ன காரணத்தையே போலீசார் திரும்ப கூறி, அதற்கு ஊடகங்களில் வந்த செய்திகளை கொண்டே மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்திய இவர்கள் மீது வழக்கு போட முடியாது என்று விளக்கி கூறியும், டி.எஸ்.பி கும்மராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மேலிடத்து உத்தரவு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு மேற்படி தோழர்கள் மீது இ.த.ச.பிரிவு 153 (a) எழுத்துமூலமாக அரசின்மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், r/w.4(1)TNOPP Act பொது சுவற்றில் அரசாங்க அதிகாரிகளை அவதூறு செய்ததாக கூறி பொய் வழக்கு பதிவு செய்தனர்.

தோழர்கள் கைது செய்த தகவல் அறிந்து திரண்ட தோழர்கள்
தோழர்கள் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து திரண்ட தோழர்கள்

இதனை கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கரூர் நகர காவல்நிலையம் முன்பு திரண்டு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தோழர்களை விடுவித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவே, ஏ.டி.எஸ்.பி. இளங்கோவன்,  மற்றும் இதர அதிகாரிகள் தோழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  கைது செய்தவர்களை விடுவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று போலீசாரை எதிர்த்து முழக்கம் இட, அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரளவே,  போலீசாருக்கும்  தோழர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வலுக்கட்டாயமாக போலீசார் போராட்டத்தில்  ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 35-க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மண்டபத்திற்குள்ளேயும் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்தால் மட்டுமே மதிய உணவு சாப்பிடுவோம், இல்லையென்றால் எங்களையும் சேர்த்து ஜெயிலுக்கு அனுப்புங்கள் என்று விடாப்பிடியாக போராட்டம் நடத்தினார்கள்.

இந்நிலையில்  கைது செய்யப்பட்ட ராஜு, விக்னேஷ்வரன் ஆகிய தோழர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்.1-ல் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இன்றளவில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் லஞ்ச லாவண்யம், ஊழலில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான அரசு மற்றும் அதிகாரிகள் என கூறிக் கொண்டு, கோடி கோடியாக மக்கள் பணத்தை கொள்ளையடித்து பதுக்கி வருவதை பார்த்துக்கொண்டே, மக்களுக்கு இந்த அரசின் மீதான நம்பிக்கை இழந்து ஆங்காங்கே வங்கிகளின் முன்பும் சாலைகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தை கைது செய் என்ற பேசினால் மோடியின் ஆசி பெற்ற காவல்துறைக்கு கோபம் வருகிறது. மோடியின் நடவடிக்கை யாருக்காக என்று இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர். தொடர்புக்கு: 98941 66350

மல்லையா குதிரையும் மாநகராட்சி பூங்காவும்

6

ன்று ஞாயிற்றுக் கிழமை, மதிய நேரம். வேளச்சேரி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தேன். மாநகராட்சி விளையாட்டுத் திடலில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். விளையாட்டுத்திடலின் பரப்பைப் பார்த்தவுடன் அதை படம் பிடிக்கத் தோன்றியது. அந்தப் படத்தைதான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்.

படம்-ஒன்று
தன் குடிமக்களுக்கு அரசு ஒதுக்கியுள்ள விளையாட்டு திடல்.

முதல் படத்தில் விளையாட்டுத்திடலையொட்டிய மதில் சுவருக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை இரண்டாவது படத்தில் பாருங்கள்!

படம்-இரண்டு
மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சொந்தமான கிண்டி குதிரைப் பந்தைய மைதானம்.

இந்நிலம் கிட்டத்தட்ட 160 ஏக்கரில் பரவியுள்ள இந்த நிலம் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சொந்தமானதாகும். மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் அப்பல்லோ பிரதாப் ரெட்டி, செத்துப்போன எம்.ஏ.எம் ராமசாமி செட்டியார், அவரது தத்துப்பிள்ளை முத்தையா மற்றும் இந்தியாவில் உள்ள மேட்டுக்குடிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எம்.ஏ.எம் ராமசாமிக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட குதிரைகள் இங்கு இருக்கின்றனவாம். எட்டாயிரம் கோடி ஏப்பம் விட்ட விஜய் மல்லையாவின் குதிரை கூட இந்த கிளப்பில் இருக்கிறதாம். சென்னையில் வசிக்கும் உழைக்கும் மக்களுக்கு, நகரின் மையப்பகுதியில் இவ்வளவு பெரிய இடம் குதிரைப் பந்தயத்திற்காக இருப்பது தெரியாது. ஏனெனில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் இது போன்ற கிளப் விளையாட்டுகளில் பங்கேற்றதில்லை. இந்த கிளப்பில் உறுப்பினராக சேரவேண்டும் என்றால் சந்தா மட்டுமே கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வருகிறது. மற்றபடி டாஸ்மாக்கில் காசைத் தொலைப்பது போன்று குதிரையின் மீது பந்தயம் கட்டி சூதாடித் தோற்கும் சில சூதாடிகளுக்கு இந்த நிலம் மிக பரிச்சயம். சென்னையைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள பிறபகுதியினர் இந்த நிலத்தை படிக்காதவன் படத்தில் என்னம்மா கண்ணு சவுக்கியமா பாடலில் பார்த்திருக்கலாம்.

பெரும்பான்மை மக்கள் அணுகமுடியாதபடி அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலம் யாருக்கு சொந்தம்? மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் உள்ள மேட்டுக்குடிகள் யாரும் வியர்வை சிந்தி உழைத்துப் பிழைக்கவில்லை. வயலுக்கு வரவில்லை; களை பறிக்கவில்லை. மக்களின் மக்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுக்கவும் இல்லை. ஆனால் நிலத்தை அனுபவிப்பவர்கள் இந்த மேட்டுக்குடிகள்! காலனி ஆட்சிக்காலத்தில் இந்த நிலம் வெள்ளைக்காரனுக்கு சொந்தமானதாக இருந்திருக்கிறது. அதற்கு முன்பு மன்னர்களிடம் இருந்திருக்கிறது.

மோடி அறிவித்த நவம்பர் 8 நடவடிக்கையைப் போன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பார்ப்பனியம் நால்வர்ணம் தர்மசாஸ்திரம் என்ற பெயரில் பார்ப்பனிய வேளாள நிலவுடமைச் சாதிகளைத் தவிர பெரும்பாலான மக்களை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டது. அப்பொழுதிலிருந்தே இந்த நிலத்தில் உழைக்கும் மக்களின் காலடித்தடம் உடமையாளனாக பட்டது கிடையாது. வெள்ளைக்காரன் தன் பொழுதுபோக்கிற்காக குதிரைப் பந்தயம் நடத்த இந்த நிலத்தைப் பயன்படுத்தியிருக்கிறான். வேல்ஸ் இளவரசர் ஏழாவது எட்வர்டு சென்னைக்கு வருகை தந்த பொழுது, மெட்ராஸ் ரேஸ் கிளப் எனும் மனமகிழ் மன்றம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளைக்காரன் இந்திய ராயல் வர்க்கத்தை எப்பொழுதும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டானாம். இந்த வருத்தத்தைப் போக்குவதற்காக இந்திய மேட்டுக்குடிகள் சென்னையில் காஸ்மாபோலிடின் கிளப்பை மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு இணையாக வைத்திருந்தார்களாம். 1947-இல் இந்தியாவிற்கு போலி சுதந்திரம் வழங்கப்பட்ட பொழுது அதிகாரம் வெள்ளைக்காரனிடமிருந்து இந்த தரகு முதலாளிகள் கும்பலுக்கு மாற்றப்பட்டது.

அரசு என்று மாய்மாலம் செய்த இந்தக்கும்பல் போலிசுதந்திரம் என்ற தந்திரத்தைக் காட்டி நிலத்தை மக்களிடமிருந்து முற்றிலுமாக பறித்துக் கொண்டது. ஆண்டுக் குத்தகை என்ற பெயரில் அஞ்சு பத்துக் காசுகளை மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு விட்டெறிந்திருக்கிறது. ஆனால் இதே மேட்டுக்குடிகள் 90-களில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கைகள் இந்தியாவில் புகுத்தப்பட்ட காலத்தில், பல ஏக்கர் நிலங்களை தரகுமுதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் விற்றிருக்கின்றனர். டி.எல்.ப் மற்றும் மகிந்திரே குரூப் நிறுவனங்கள் மெட்ராஸ் ரேஸ் கிளப்பிடமிருந்து 200 முதல் 300 கோடி கொடுத்து நிலங்களை தங்கள் பெயருக்கு மாற்றியிருக்கின்றனர். அரசு இதைத்தான் தொழில் முதலீடு என்று நம்மிடம் போக்கு காட்டியது.

மக்களிடம் நிலம் பறிக்கப்பட்ட கதை வரலாற்றில் முந்தையது. ஆறுகளும், கனிமவளங்களும் இதே போன்று அரசின் சட்ட திட்டங்களால் கருப்பாக அல்லாமல் வெள்ளையாகவே தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய கும்பலுக்கு மடைமாற்றப்பட்டிருக்கிறது. இன்று மக்களிடம் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு சொத்துவடிவமான ரொக்க கையிருப்பும் ஆளும் அதிகாரவர்க்கத்தால் களவாடப்பட்டிருக்கிறது.

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்ற கதையாக இந்த முறையும் மக்கள் சூறையாடப்பட்டிருக்கின்றனர். தற்பொழுது நவம்பர் எட்டு நடவடிக்கைப் பிறகு, கருப்புப் பணம் மற்றும் கடன் பத்திரங்கள் தொடர்பான விவாதங்கள், அரசு ஆளும் உறுப்புகளின் திருட்டு, மோடி பா.ஜ.க கும்பலின் அழுகுணி ஆட்டம், மேட்டுக்குடிகளின் வக்கிரம், பத்திரிக்கைகளின் மழுப்பலான மாய்மாலங்கள் என்று பலவற்றை பார்த்து வந்திருப்பீர்கள்.

இதோடு கூடவே சொத்து எப்படி பெரும்பான்மையின் கையிலிருந்து ஆகச்சிறும்பான்மையினரின் கைக்கு மாற்றப்படுகிறது; அதற்கு அரசின் அத்துணை உறுப்புகளும் மக்களுக்கு எப்படி எதிராக திரும்பியிருக்கின்றன? மக்களை எப்படி ஈவு இரக்கமின்றி இரத்தக் கவுச்சியுடன் சூறையாடுகின்றன என்பதைப் பரிசீலியுங்கள். அதற்கு நடைமுறையில் பணபறிப்பு என்ற அனுபவமும், நிலப்பறிப்பு என்ற வரலாறும் நம் கண்முன்னே இரத்த சாட்சியாக நிற்பதைக் கவனிக்கலாம்.

அரசு தன் குடிமக்களுக்கு ஒதுக்கியிருக்கும் விளையாட்டிற்கான நிலத்தையும் நவம்பர் எட்டாம் தேதி மோடி நாட்டின் 86% சதவீத பணப்புழக்கத்தை செல்லாது என்று ரத்து செய்ததையும் ஒப்பிட்டால் இந்த அரசு யாருக்கானது என்பது புரியும்.

அரசு, மக்களுக்கு வழங்கிய பணம் எனும் கடன்பத்திரம் செல்லாது என்று அறிவித்த பிறகு மக்கள் தங்கள் உடமையை இழந்து வங்கியையும் ஏ.டி.எம்மையும் தேடி நாயாக அலைக்கழிக்கப்படுகின்றனர். தான் சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கு உயிர், பொருள், ஆவி அனைத்தையும் விற்கவேண்டியிருக்கிறது.

மறுபுறத்தில் பாஜகவைச் சேர்ந்த சுரங்க ஊழல் பெருச்சாளி ஜனார்த்தன ரெட்டி 600 கோடி செலவில் தன் மகள் திருமணத்தை நடத்தியிருக்கிறார். சேகர் ரெட்டியிடம் முப்பது கோடிக்கும் மேலே புது இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் கத்தை கத்தையாக இருக்கின்றன.

கருப்புபணத்தை ஒழிப்பதாக சொன்ன இந்த நடவடிக்கை மக்களிடம் இருக்கும் கடைசி சொத்துவடிவமான பணத்தைப் பிடுங்குவதற்காகவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பதை கண்கூடாக பார்த்துவருகிறோம். அதிகாரவர்க்கம், தரகுமுதலாளிகள், அரசியல்வாதிகளின் பணம் பத்திரமாக இருக்கிறது. சொல்லப்போனால் நவம்பர் எட்டு நடவடிக்கைக்கு முன்னேயும் பின்னேயும், இக்கூட்டத்தின் பணம் அனைத்தும் வெள்ளையாக மாற்றப்பட்டிருக்கிறது. ‘இந்திய மக்களின் பணத்தை ஏகாதிபத்திய நிதிமூலதனக் கும்பலிடம் ஒப்படைக்கிற வேலைதான் மோடி எடுத்திருக்கும் நடவடிக்கை’ என்று அறிவுஜீவிகள் இப்பொழுது அறிவுநாணயத்துடன் ஒப்புக்கொள்கிறார்கள் (ஜி.சம்பத், தி இந்து ஆங்கிலம், 14-12-2016). ஆனால் ஊடக செய்திகள் இதுவரை கருப்புப் பணம் என்றே பிலிம் காட்டிவருகின்றன.

அதிகார வர்க்கத்திடம் கத்தையாக கத்தையாக இரண்டாயிரம் ரூபாய் தாள் இருப்பதைப் பார்க்கிற பொழுது, அரசின் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை மட்டும் யோக்கியம் என்றும் அது கறாராக பிற அரசு உறுப்புகளின் ஊழல்களை கண்டுபிடித்துவிடும் என்ற மதிமயக்கத்தில் மக்கள் ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் மக்களிடம் இருந்து உடமையையும் உரிமையையும் அது நிலமாக, பணமாக எதுவாக இருந்தாலும் அபகரித்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசு எனும் ஒடுக்குமுறை கருவி கொண்டு கச்சிதமாக வரலாறு முழுவதும் நிறைவேற்றி வந்திருக்கிறது. அதற்கு ஓர் உதாரணமாகத்தான் வேளச்சேரி கங்கைநகர் விளையாட்டுத்திடல் இங்குபுகைப்பட ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. இந்த அரை செண்டு நிலம், மக்களிடம் இருக்கும் புது இரண்டாயிரம் ரூபாய் தாளுக்கு இணையாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது அரசு அதிகாரவர்க்கத்திடம் சிக்கியிருக்கும் பலகோடிக்கணக்கான இரண்டாயிரம் ரூபாய் தாளுக்கு இணையாக கடலளவு மலையளவு நிலமும் இருக்குமில்லையா?

இதில் நம்மிடம் இருக்கும் தீர்வு ஒன்றே ஒன்று தான். மோடி கும்பலின் பணபறிப்பு நடவடிக்கை எதிராக எப்படிப் போராடுவது, இதிலிருந்து எப்படி மீள்வது என்று கேட்பவர்கள் ஆகச் சிறும்பான்மையான தரகுமுதலாளிகள், மேட்டுக்குடிகள் (மெட்ராஸ் ரேஸ் கிளப் போன்றவை), ஆளும் அதிகார உறுப்புகள், பன்னாட்டு கம்பெனிகள் போன்ற கும்பலிடமிருந்து இதுவரை நம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட நிலம் முதற்கொண்டு பணம் ஈறாக அனைத்து உடைமைகளையும் முற்றாக பறிமுதல் செய்யும் மக்களின் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்தைத் தொடுக்க வேண்டும் என்பதுதான் அது.

கம்யுனிசத்தில் மக்களின் சொத்துக்களை பிடுங்கிக்கொண்டுவிடுவார்கள் என்று இதுவரை முதலாளித்துவம் மரணபீதியுடன் பிரச்சாரம் செய்துவந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மார்க்சிய ஆசான்கள் கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதற்கு இப்படி பதில் அளிக்கிறார்கள்marx_1

தனியார் சொத்துடைமையை ஒழித்துக்கட்டும் எங்கள் நோக்கம் கண்டு நீங்கள் திகிலடைந்துள்ளீர்கள். ஆனால், இப்போதைய உங்கள் சமுதாயத்தில், மக்கள் தொகையில் பத்தில் ஒன்பது பங்கினரின் தனிச் சொத்துடைமை ஏற்கெனவே ஒழிக்கப்பட்டு விட்டது. ஒருசிலரிடம் தனிச்சொத்து இருப்பதற்கு ஒரே காரணம் இந்தப் பத்தில் ஒன்பது பங்கினரின் கைகளில் அது இல்லாமல் ஒழிந்ததுதான். ஆக, சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையினருக்கு எந்தச் சொத்தும் இல்லாத நிலையைத் தான் நிலவுதற்குரிய அவசிய நிபந்தனையாகக் கொண்ட ஒரு சொத்துடைமை வடிவத்தை ஒழிக்க எண்ணியுள்ளோம் என்று எங்களைப் பழித்துரைக்கிறீர்கள்.

சுருங்கக் கூறின், உங்களுடைய சொத்துடைமையை ஒழிக்க விரும்புகிறோம் என்று பழித்துரைக்கிறீர்கள். ஆம், அது மிகச் சரியே. உண்மையில் அதுவேதான் நாங்கள் எண்ணியுள்ளது.

உழைப்பை மூலதனம், பணம் அல்லது வாடகையாகவோ, ஏகபோகமாக்கிக் கொள்வதற்குத் தகுதியுடைய ஒரு சமூக சக்தியாகவோ இனி மாற்ற முடியாமல் போகின்ற கணம் முதற்கொண்டு, அதாவது, தனிநபரின் சொத்தினை முதலாளித்துவச் சொத்தாக, மூலதனமாக, இனி மாற்ற முடியாமல் போகின்ற கணம் முதற்கொண்டே [ஒரு தனிநபரின்] தனித்தன்மை மறைந்துவிடுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். எனவே, ”தனிநபர்என்று நீங்கள் குறிப்பிடும்போது, முதலாளியைத் தவிர, நடுத்தர வர்க்கச் சொத்துடைமையாளரைத் தவிர, வேறெவரையும் குறிப்பிடவில்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். உண்மையில் இந்தத் தனிநபர் துடைதெறியப்படத்தான் வேண்டும்; இத்தகைய தனிநபர் உருவாக முடியாதபடி செய்யத்தான் வேண்டும்.”

– கம்யுனிஸ்ட் கட்சி அறிக்கை

– தமிழ்வேல்

புதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !

3

நான் என்ற மனோபாவம் கொண்ட, தன்னகங்காரம் பிடித்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. எனக்கு பிறகு … பேரழிவு தான் என்று பிரெஞ்சு புரட்சியில் தலையை இழந்த மன்னன் நான்காம் லூயி கூறியதாக சொல்வதுண்டு. எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்கு பிறகு கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்கு பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால் தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களுடைய மனோபாவம். தனக்கு அடுத்தபடி இன்னார் என்று சொல்வது கூட இன்னொரு நபரை தனக்கு நிகரானவர் என்று தானே ஒப்புக் கொண்டதாகிவிடும் என்று அஞ்சுபவர்கள். இவர்கள் தன்னுடன் சேர்த்து தனது மனைவிமார்களையும், அடிமைகளையும்  பிரமிடுக்குள் புதைக்க சொன்ன எகிப்திய மன்னர்களை போன்றவர்கள்.

Pudhucherry (15)

ஆம். ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட். இந்த பாசிஸ்ட் மரணத்தின் போது பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், என எதுவும் ஓடவில்லை. தமிழகமே வெறிச்சோடி போக வேண்டும் என்று ஆளும் வர்க்கம் திட்டமிட்டே “கலவரம் நடக்கும் என்று பய பீதியை கிளப்பி”  மக்களை வீட்டிலேயே முடக்கியது.

புதுச்சேரியிலும் இதே நிலைமை தான் என்றாலும் அன்று மாலை  6 மணிக்கு சில கடைகளை திறக்க ஆரம்பித்து விட்டனர். மக்கள் நடமாட்டமும் ஓரளவிற்கு இருந்தது. அன்று மாலையே “இந்த பாசிஸ்டின்  மரணத்திற்கு கண்ணீர் சிந்த தேவையில்லை” என்று புதுச்சேரியில்  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மக்கள் கூட்டமாக உள்ள இடத்தில் தெருமுனை  பிரச்சாரம் செய்தனர்.

அப்பொழுது   டீக்கடை உரிமையாளர் அ.தி.மு.க-வின் அடிப்பொடி ஒருவர்  மட்டும் கடைகள் திறந்திருப்பதை பார்த்துவிட்டு பார்த்து எங்க அம்மா செத்துடாங்க. எல்லாரும் கடையை மூடுங்கடா என்று குடித்து விட்டு கத்திக்கொண்டு இருந்தார். அவருடைய கடை எதிரே பைக் ஸ்டான்ட் உள்ளது. அங்கே வண்டியை நிறுத்தியவர்கள்  எடுக்கச் சென்ற போது அவர்களோடும் சண்டை போட்டார், அந்த குடிகாரர்.

Pudhucherry (14)தோழர்கள் அவரிடம் சென்று , ஏன் எல்லார் கிட்டயும் பிரச்சன பண்ற… உங்க அம்மா செத்துட்டா நீ கடைய மூடு, அழுவு, காரியம் பண்ணு ஏதாவது பண்ணு எதுக்கு போற வரவங்க கிட்ட சண்ட போடற என்று கேட்டதுக்கு.., அம்மா நாட்டுக்காக தியாகம் பண்ணிருக்காங்க. கல்யாணமே பண்ணிக்கல என்று பி.ஜே.பி காரர்கள் போன்று தேசப்பற்று பாடலை பாடினார்.

அதற்கு தோழர்கள், எம்.ஜி.ஆருக்காக அவர் செய்த தியாகத்தை எடுத்துக் கூறியதும் ஒரு கணம் அமைதியானவர்,…

“எங்க அம்மாவையே இப்படி சொல்றியா… இங்கே இருங்கடா ஆளை கூட்டி வறேன்” என்று சொல்லி போனை காதில் வைத்தவாறே சென்று விட்டார்.

கடந்த 18ம் தேதி  “செத்தவன் எல்லாம் உத்தமன் ஆவதில்லை” என்ற தலைப்பில் சுவரொட்டி புதுச்சேரி  முழுவதும் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. போஸ்டரில் உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டு பலர்  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருபுவனையில் ஒட்டிய சுவரொட்டியை அந்த டீக்கடைக்காரர் கிழித்து விட்டு, தோழர் மகேந்திரன் வீட்டிற்கு சென்று பார்த்தார். தோழர் வீட்டில்  இல்லை.  அவருடைய மனைவியிடம் “ஏ….’மா உன் புருஷன் பண்றதெல்லாம் சரியில்லை. அம்மாவ திட்டி ஏதாவது பண்ணிகினு இருக்கான். சொல்லி வை. என்றி கூறிவிட்டு ஒழுங்கா அவன “டைவேர்ஸ்” பண்ணிடுமா என்று அட்வைஸ் செய்துள்ளார்.”

அதிமுக வின் அடிப்பொடிகள் போன் பன்னி,   ஏன்டா ……….! அம்மாவ எதிர்த்து போஸ்டர் போட்டிருக்க. போஸ்டர்ல அம்மாவுக்காக கண்ணீர் சிந்தறது  தமிழகத்தின் பகுத்தறிவு, சுயமரியாதைக்கு கேவலம்னு போட்டிருக்க. இப்ப தான் தமிழினம் பத்தி தெரியுதா…….? கொத்து… கொத்தாக ஈழத் தமிழனை கொன்னாங்களே அப்பலாம் தமிழினமா தெரியலையா….? அப்பல்லாம் எங்கடா போயிருந்த… உன் வாயில என்ன வச்சிருந்த…. அப்ப தமிழினத்த பத்தி பேச வேண்டியது தான… இப்ப வந்து பேசற….என்று ஆவேசமாக கேட்டார்.

Pudhucherry (12)ஈழத் தமிழர பத்தி பேசுறிங்களே “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஜெயலலிதா  தான் சொன்னார். உங்களுக்கு தெரியாதா என்று தோழர் பொறுமையாக கேட்க…” உடனே  இணைப்பை துண்டித்து விட்டார் அம்மாவின் அடிமை.

அடுத்த ஒருமணி நேரம் கழித்து மற்றொரு அழைப்பு  வந்தது.  டேய்…! பகுத்தறிவு பத்தி பேசறிங்க… பகுத்தறிவுன்னா என்னனு தெரியுமா உங்களுக்கு என்று கேட்டார்.

“இப்ப பகுத்தறிவு பற்றி பேச வேண்டிய அவசியம் என்னங்க என்று தோழர் கேட்க…,” நீங்க தான் உங்க போஸ்டர்ல பகுத்தறிவு பத்தி போட்டிருக்கிங்க என்று கூறினார்.

சரி, பகுத்தறிவு பற்றி உங்களுக்கு விளக்கனுமா?

நீங்க எங்களுக்கு விளக்க வேணாம்…. “எங்க அம்மா கால்ல விழறது தான் எங்களுக்கு பகுத்தறிவு” என்று கூறி புதிய விளக்கம் அளித்தார். எங்க அம்மா கால்ல விழறது எங்களுக்கு புண்ணியம் கெடச்ச மாதிரி. அதனால் ஒழுங்க ஒட்டின போஸ்டர எல்லாம் கிழிச்சிடுங்க என்று கூறி வைத்துவிட்டார்.

அடுத்து மூன்றாவது ஒரு அழைப்பு வந்தது. ஆரம்பிக்கும் போதே உன் பொண்டாட்டி செத்துட்டா நீ அழ மாட்டியா, என்று கேட்டார்.

Pudhucherry (17)

Pudhucherry (1)“என் மனைவி  மக்களுக்கான பிரச்சினையில பங்கெடுத்து கொண்டு சமூக அவலங்களை மாற்ற போராடுறாங்க. ஜெயலலிதா  நாட்டுக்கு ஒன்னும் செஞ்சிடல, எங்க வீட்ல இருக்க ஒரு ரூபா, ரெண்டு ரூபாயையும் திருடர ஒரு திருடியா தான் இருந்தாங்க. அதனால தான் அவங்க இறப்புக்கு கண்ணீர் சிந்த வேணாம்னு  சொல்லியிருக்கோம்.”

அதோட இல்லாம “மணல் மாபியா, கிரானைட் கொள்ளை போன்றவற்றை ஆதரித்துக் கொண்டு இருக்காங்க. இந்த மாஃபியாவோட  என் மனைவிய ஒப்பிட்டு பேசறது தப்பு. ஜெயலலிதா ஒரு பெண்ணாக சக பெண்களையே மதிக்காதவங்க, எல்லாரையும் கால்ல விழ வச்சவங்க என்று சொன்னதை அமைதியாக  கேட்டுவிட்டு….

இந்த கம்யுனிஸ்ட்ங்களே  இப்படி தான்’யா பேசுவிங்க. சம உரிமை, மயிறு மட்டன்னு… உங்ககிட்ட பேசனா ஆயிரத்தெட்டு விளக்கம் குடுப்பிங்க என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்துக் கொண்டார்..

இந்த அனுபவங்களை கொண்டு 22-ம் தேதி “அடிமைப் புத்தியையும், அரசியலற்ற கழிசடை தனத்தையும் எதிர்த்து முறியடிப்போம்” என்ற தலைப்பில் பிரசுரம் அச்சடித்து புதுச்சேரி ,திருபுவனை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தனர்.

நோட்டிசை வாங்கிய பலர் அமைதியாக சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டும், “ஏங்க… அந்தம்மா உயிரோடு இருக்கும் போது தான் அந்த வாட்டு வாட்டினிங்க. செத்த பிறகும் விடமாட்டிங்களா என்று புலம்பியவாறே சென்றனர்.”

ஜெயலலிதா இறந்து விட்டார். எனவே இவர் செய்த பாவங்களை மன்னித்து  விடு! என்று அவர்களை புனிதமாக்க முயற்சிப்பது பார்ப்பனிய அடிமை புத்தி. அதிமுக என்ற கட்சியை கைப்பற்ற  தமிழகத்தில் பாஜக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் சரி, மன்னார்குடி மாஃபியாகளும் சரி  தற்போது அரங்கேற்றி வரும் அருவருக்கத்தக்க காட்சிகளை காண சகிக்கவில்லை. யார் வந்தாலும் அதனை ஏற்றுகொள்ளும் இழிந்த மனோபாவம் தமிழகத்தில் உருவாகி வருகிறது.

ராமாயணத்தில் ராமன் வனவாசம் சென்றே பிறகு அவனது செருப்பை கொண்டு வைத்து ஆட்சி செய்வான் பரதன். அதனை பெருமை என்று நினைத்து கொண்டாடினான். ஏறக்குறைய தமிழகத்தின் நிலையும் அது தான். இதனை இனிமேலும்  அனுமதிக்கலாமா? சொரணையுள்ள தமிழர்கள் சிந்திக்கவும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.

பதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் – படங்கள்

0

பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் கொலைகளை நிறுத்து !
– கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி, படங்கள்

பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !” – 22/12/2016 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியில் முழங்கிய ஓவியங்கள் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்தின.

valluvarkottam_protest_prpc4ஆர்ப்பாட்டத்தில் திரு.த.வெள்ளையன் , தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை , தோழர் தியாகு, ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம், பேராசிரியர் சிவக்குமார், தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தோழர் வெங்கடேசன், மாநில பொருளாளர், மக்கள் கலை இலக்கிய கழகம், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி, தோழர் A.S.குமார், மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ (மா.லெ) விடுதலை, தோழர் மா.சி.சுதேஷ் குமார், மாநில இணைச்செயலர், புதிய ஜனநாயகத்-தொழிலாளர் முன்னணி, திரு.இரா.சங்கரசுப்பு, மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் பார்வேந்தன் மாநிலசெயலாளர், வழக்கறிஞர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

***

தோழர் வாஞ்சிநாதன், ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

“சாதாரண  மக்களுக்கு தான் சட்டம் எல்லாம்! கார்ப்பரேட்டுகளுக்கு, ஆர்.எஸ்.எஸ்.- க்கு, மோடிக்கு எந்த சட்டமுமில்லை!”

“மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.  இரண்டாவது எமர்ஜென்ஸி காலமிது!  தொழிலாளர்கள், விவசாயிகள் என இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்து வருகிறது.

சமீபத்தில் மூன்று இடங்களில் போலி மோதல் படுகொலைகளை நிறைவேற்றியிருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் போபாலில் 8 முசுலீம்களை சுட்டுகொன்றிருக்கிறார்கள்.  ஒரிசா – ஆந்திரா எல்லை பகுதியில் மல்கான்கிரியில் பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் என 44 பேரையும், கேரளாவில் நிலாம்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 3 பேரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

மல்கான்கிரியில் மாவோயிஸ்டுகள் கூட்டம் ஒன்றை நடத்திய பொழுது, அவர்களுக்கு கொண்டு சென்ற சாப்பாட்டில் மயக்க மருந்தையும், விசத்தையும் வைத்து அனுப்பியிருக்கிறார்கள்.  அரை மயக்கத்தில் இருந்த பலரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.  சரணடைந்த பலரையும் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள்.  மனித உரிமை அமைப்புகள் அங்கு சென்று பார்த்த பொழுது மோதல் நடந்ததற்கான எந்தவித சுவடும் இல்லை.  உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சொன்ன எந்த வழிகாட்டல்களையும் போலீசும், அரசும் மதிப்பதேயில்லை.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பகுத்தறிவாளர்கள் கல்புர்கி, பன்சாரே, நரேந்திர தபோல்கர் மூவரையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுட்டுக்கொன்றனர்.  மூவரையும் சுட்டது ஒரே வகை துப்பாக்கி தான் என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையுமில்லை.

தோழர்.வாஞ்சிநாதன்
தோழர்.வாஞ்சிநாதன்

மாவோயிஸ்டுகள், பழங்குடிகள் மீது நடவடிக்கைக்கு காரணம் என்ன?  500 மில்லியன் டன் பாக்சைட் என 28 வகை கனிம வளங்கள் காடுகளில் இருக்கின்றன.  இதை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க பழங்குடிகளும் மாவோயிஸ்டுகள் தடையாக இருக்கிறார்கள்.  எதிர்ப்பவர்களை ஒழித்துக்கட்ட முன்பு மன்மோகன் சிங்கும், இப்பொழுது மோடியும் முனைப்புடன் இருக்கிறார்கள். 2014 மிஷன் என திட்டமிட்டு, 2 லட்சம் துணை இராணுவ துருப்புகளை காடுகளில்  நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

இதற்கு தடையாக இருக்கும் எவரையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை.  சமீபத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நந்தினி சுந்தர் என்ற பேராசிரியர் உண்மை அறியும் குழுவாக அந்த பகுதிக்கு சென்றதால்,  அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மருத்துவர் பினாயக் சென் மீது தேசதுரோக வழக்கு. ஆயுள் தண்டனை விதித்தார்கள். உலகம் முழுவதிலும் கண்டனங்கள் எழுந்த பிறகு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.

சல்வா ஜூடும் என்ற சட்ட விரோதமாக ஒரு படையை உருவாக்கி, 200 பழங்குடி கிராமங்களை கொளுத்தினார்கள்.  பலரையும் கொன்றார்கள்.  உச்சநீதிமன்றம் அந்த படையை தடை செய்தது.  இப்பொழுது வேறு ஒரு பெயரில் ஒரு படையை உருவாக்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்டு என போலீசு எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? 16 பழங்குடி மக்களை மாவோயிஸ்டு என சுட்டுகொன்ற சமயத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் அந்த பகுதிக்கு சென்றிருந்த பொழுது அவருக்கு பதில் சொல்லும் பொழுது ”வெளியிலிருந்து கிடைக்ககூடிய  டெட்டாலும், மலேரியா மருந்தும் வைத்திருந்ததால் மாவோயிஸ்டு” என்றார் மாவட்ட எஸ்.பி.

Speakersஒருவர் மாவோயிஸ்டாக இருந்தாலே கைது செய்யமுடியாது. குற்றம் செய்தால் மட்டுமே கைது செய்யமுடியும். ஏதும் குற்றம் செய்யாமல் கைது செய்யப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என சமீபத்தில் கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  இவைகள் எதையும் மதிக்காமல் எதிர்ப்பவர்களை சுடு என்கிறது மத்திய அரசு. இந்த நிலையில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது என நாம் நம்ப முடியுமா?

1993-2009 வரைக்குமான காலத்தில் 2560 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன.  அதில் 1280 கொலைகள் போலி மோதல் கொலைகள் என விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்.  85% வழக்குகள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.  இதில் இஷ்ரத் சஹான் வழக்கும், மாவோயிஸ்டு மத்திய குழு உறுப்பினர் தோழர் ஆசாத் வழக்கும் அடங்கும்.  மணிப்பூரில் 1528 மோதல்கொலைகள் என படுகொலைகள் செய்திருக்கிறார்கள்.  இதுவரை ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை.

பிறகு என்ன சட்டம்? நீதிமன்றம்? நீதி? சாதாரண  மக்களுக்கு தான் சட்டம் எல்லாம்!  கார்ப்பரேட்டுகளுக்கு பார்ப்பனிய தாசர்களான ஆர்.எஸ்.எஸ். மோடி யாருக்கும் எந்த சட்டமுமில்லை.  இதைத் தான் நெருக்கடி நிலை என்கிறோம்.  இதை எதிர்த்து தான் நாட்டில் பல மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நமது போராட்டமும் அதில் ஒன்று தான். போராடும் மக்களோடு ஜனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் என அணிதிரண்டு போராடுவதின் மூலம் தான் பழங்குடி மக்களையும், மற்றவர்களையும், இயற்கை வளங்களையும் காக்கமுடியும்.

***

திரு. கோ. பாவேந்தன், வழக்கறிஞர்,
தமிழக மக்கள் முன்னணி.

”கொலைகாரர்கள் ஆட்சி செய்கிறார்கள். மக்களை காக்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கிறார்கள்”

தோழர். பாவேந்தன்
திரு. கோ. பாவேந்தன்

”கொலைகாரர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர். குஜராத்தில் 3000 முசுலீம்களை கொன்று குவித்த கொலைகார மோடி தான் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.  பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொலை தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த கொலைகாரர்கள் தான், மண்ணையையும், மலையையும், மக்களையும் காக்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கிறார்கள்.

நீதி கெட்ட சமயத்தில் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.  இது ஜனநாயக நாடா என மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது  ஜனநாயக நாடும் இல்லை. சட்டத்தின் ஆட்சியும் இல்லை. மக்களின் உரிமைகளுக்காக போராடும் பழங்குடிகளை, மாவோயிஸ்டுகளை, இஸ்லாமிய இளைஞர்களை கொன்று குவித்துகொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றிணைந்து மக்களை ஒன்று திரட்டி போராடினால் தான் இந்த பயங்கரவாதிகளை முறியடிக்கமுடியும்”

***

திரு. த. வெள்ளையன், தலைவர்,
வணிகர் சங்கங்களின் பேரவைகள், தமிழ்நாடு.

மக்களுக்கு எதிரான மோடி அரசை நாம் முறியடித்தே தீரவேண்டும்.
அதற்காக எந்தவித தியாகத்தையும்  செய்ய நாம் தயாராக இருக்கவேண்டும்

Vellaiyan
வெள்ளையன்

“கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்க தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகின்றன.  இந்திய சந்தை மிகப்பெரிய சந்தை.  சில்லறை வணிகத்தை ஒழித்து, பன்னாட்டு நிறுவனங்களை வாழவைக்க தான் மோடி 500, 1000 செல்லாது ! கார்டை பயன்படுத்துங்கள் ! என்கிறார். வணிகர்கள் இந்த சதியை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்.

‘தன்னை அழிக்க நினைப்பவர்களை நாம் அழிக்க தயங்க கூடாது” இதை சொன்னது மாவோயிஸ்டா? இல்லை. விவேகானந்தர். மகாபாராதத்தில் திரெளபதி அனைவரும் முன்னிலும் துகிலுரியப்படும் பொழுது, என்ன செய்ய? என்ன செய்ய? என கையை பிசைந்து புலம்பி கொண்டிருந்தார்கள்.  அதே போல தான் இங்குள்ள அரசியல் தலைவர்களும் தங்களது கையாலாகத்தனத்தால் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். மோடியின் திட்டங்களை முறியடித்தே தீரவேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருக்கவேண்டும்.

***

பேராசிரியர் சிவக்குமார், முன்னாள் முதல்வர்,
குடியாத்தம் அரசு கல்லூரி.

ஒடுக்குமுறை சட்டங்களாலும், போலிமோதல் படுகொலைகள் மூலம் எதிர்ப்பை அடக்க முயற்சிக்கிறார்கள். நாம் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.”

Pr_sivakumar
பேராசிரியர் சிவக்குமார்

“ தோழர்கள் பாலன், ரவீந்திரன் என தொடர்ச்சியாக போலிமோதல் படுகொலைகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தோழர்களின் உடலை தர மறுக்கும் அரசாங்கத்திடமிருந்து உடலை பெறவும், உண்மை அறியும் குழுவிலும் நான் மனித உரிமை அமைப்புகளுடன் சென்றுள்ளேன்.

கனிம வளங்களுக்காகவும், பல்வேறு திட்டங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகிற செய்தியை இந்திய அரசின் வலைத்தளத்திலேயே நாம் பார்க்கமுடியும். வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித்தரப்படுகின்றன.

நாடு முழுவதும் இதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காடுகளில் போராடும் பழங்குடி மக்களை, மாவோயிஸ்டுகளை ஒருங்கிணைக்கிறார்கள். நாடு முழுவதும் பல ஒடுக்குமுறை சட்டங்கள் மூலம், போலிமோதல் படுகொலைகள் மூலம் எதிர்ப்பை அடக்க முயற்சிக்கிறார்கள். நாம் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். மாணவர் சக்தியையும், இளைஞர் சக்தியையும் நாம் திரட்டுவோம். கொல்லப்பட்ட தோழர்கள் குப்புராஜ், அஜிதா தியாகத்தை மனதில் கொண்டு நாம் ஒன்றிணைந்து போராடுவோம் !

***

தோழர் சுதேஷ்குமார், மாநில இணைச் செயலாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

“சட்டத்தின் ஆட்சியா இங்கு நடக்கிறது? போராடி பெற்ற உரிமைகளை இழந்து நிற்கும் தொழிலாளர்கள் இதை ஏற்கவே மாட்டார்கள்”

valluvarkottam_protest_prpc“பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் பழங்குடி மக்களையும், போராளிகளையும்  போலி மோதல் படுகொலைகளை மூலம் கொன்று குவிக்கிறார்கள். குழந்தைகள் என்று கூட பார்ப்பதில்லை.  அரச பயங்கரவாதம் இது !

சட்டத்தின் ஆட்சி அதை கேள்விக்குள்ளாவதை பொறுக்கமுடியாது என்கிறார்கள்.  மாருதி தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கியது தவறு என்றது உச்சநீதிமன்றம்.  கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக 10 ஆண்டுகாலம் போராடி, இப்பொழுது இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாடுகிறார்கள்.  போராடி பெற்ற தொழிலாளர் நல சட்ட உரிமைகளை எல்லாம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தகுந்தமாதிரி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது?

நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மார்க்சிய லெனினிய கொள்கைகளை மக்களுக்கு பயிற்றுவிக்கவேண்டும். போராடுவதை தவிர வேறு வழியில்ல

***

தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

“நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல. மூலதனத்தின் ஆட்சி”

ComGanesan
தோழர் கணேசன்

“பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு விசுவாசமான மத்திய, மாநில அரசுகளை, காடுகளில் பழங்குடி மக்களை காலி செய்து கொடு ! என விரட்டுகிறார்கள்.  காங்கிரசை விட வேகமாக நிறைவேற்ற துடிக்கிறது மோடி அரசு !  கார்ப்பரேட்டுகள் அரச படைகளை மட்டும் நம்புவதில்லை.  தங்களுக்கென்று கூலிப்படையை வைத்திருக்கிறார்கள். போராடும் பழங்குடி மக்களில் உள்ள முன்னணியாளர்களை கொலை செய்கிறார்கள். அரசு போராடும் பழங்குடி மக்களை, மாவோயிஸ்டுகளை கொல்கிறார்கள். நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல ! மூலதனத்தின் ஆட்சி. ஒடுக்கப்படும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றுதிரட்டி போராடி முறியடிக்கவேண்டும்.

– உரைகள் தொடரும்

***

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
கனிமவள கொள்ளைக்காக
பார்ப்பனிய மேலாண்மைக்காய்
படுகொலைகள் செய்கின்ற
மோடி அரசை கண்டிக்கின்றோம்
படுகொலைக்கு துணைபோகும்
கேரள அரசை கண்டிக்கின்றோம் !

Muzakkamபடுகொலை ! படுகொலை !
மனித உரிமைப் படுகொலை !
மல்கான்கிரியில், நீலாம்பூரில்
போபாலில் படுகொலை !
அப்பாவிகள் படுகொலை !
கார்ப்பரேட்  கொள்ளைக்காக
அப்பாவிகள் படுகொலை !

சுடலாமா? சுடலாமா?
மாவோயிஸ்ட் என்றால் சுடலாமா?
சிமி என்றால் சுடலாமா?
யாரையும் சுடலாம் என்றால்
அரசியல் சட்டம் எதற்கு?
நீதிமன்றம் எதற்கு?

மோடியின் ஆட்சியிலே
பா.ஜ.கா ஆட்சியிலே
சட்டத்தின் ஆட்சி எங்கே ?
ஜனநாயகத்தின் வாசம் எங்கே?
துப்பாக்கிதான் ஆளுமென்றால்,
போலிசும் – கோர்ட்டும்  தான்
எதற்கு ? எதற்கு ?

இது சட்டத்தின் ஆட்சி இல்லை
இது கார்ப்பரேட் கைக்கூலிகளின்
பார்ப்பனிய வர்னாசிரமத்தை நிலைநாட்டும்  ஆட்சி !

கொல்லாதே கொல்லாதே !
பன்னாட்டு கம்பெனிகளின்
கனிமவள கொள்ளைக்காக
பழங்குடி மக்களையும்
கம்யூனிச போராளிகளையும்
கொல்லாதே கொல்லாதே !

valluvarkottam_protest_prpc2படுகொலைகள் படுகொலைகள்
மல்கான்கிரியில், மலப்புரத்தில்
போபாலில் நடந்தவை எல்லாமே
திட்டமிட்ட படுகொலைகள் !

பயங்கரவாதம், பயங்கரவாதம்
கார்ப்பரேட் நலனுக்காக
இது அரசே நடத்தும் பயங்கரவாதம்
அரச பயங்கரவாதம் !

கொள்ளை போகுது! கொள்ளை போகுது!
நாட்டின் வளங்கள் கொள்ளை போகுது!
ஆறு, மலை, காடுகள்
கொள்ளை போகுது! கொள்ளை போகுது!

விக்கிறான் விக்கிறான் !
லட்சம் ஆண்டாய் பூமித்தாயின்
கருவில் வளர்ந்த இயற்கை கொடையை
நாசகார முதலைகளாம்
பன்னாட்டு கம்பெனிக்கு
கூறு போட்டு விக்கிறான் !

மண்ணை காக்க, மலையை காக்க,
போராடும் மக்களை
பயங்கரவாதி என்கிறான் !

உண்மையை மூடிமறைத்து
என்கவுண்டரில் கொல்லுறான்!

கார்ப்பரேட் பயங்கரவாதிகள்
மிட்டலுக்கும் ஜிண்டாலுக்கும்
அம்பானிக்கும் வேதாந்தாவிற்கும்
சிவப்பு கம்பள வரவேற்பு!
எம் மக்களுக்காக போராடிய
போராளிகளுக்கு என்கவுண்டர்!

valluvarkottam_protest_prpc3பன்னாட்டு கம்பெனிகளின்
கனிமவள கொள்ளையை
எதிர்த்து நின்று போராடினால்
பயங்கராவதி பட்டமா ?

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
கருவில் உள்ள முஸ்லீம் குழந்தையை
பச்சை சிசுவை கொன்றானே
மோடியும்-ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள்

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
நரேந்திர தபோல்கர்
கல்புர்கி – பன்சாரே
பகுத்தறிவுச் சான்றோர்களை
கொன்றானே கொன்றானே
காவிக் கும்பலும் – ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள்

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
முஸ்லீம் முதியவர் அக்லக்-கை
மாட்டுக் கறி வைத்திருந்தார்  என்று
குற்றம் சாட்டி கொண்றானே
வானரக் கூட்டமும்-ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள் !

கைக்கூலிகள் கைக்கூலிகள் !
B.J.P யும்  RSS உம்
பன்னாட்டு கம்பெனிகளின்
கைக்கூலிகள் கைக்கூலிகள் !

போராளிகள் போராளிகள் !
அஜிதாவும், தேவராஜீம்

valluvarkottam_protest_prpc5மாவோயிஸ்டும் பழங்குடி மக்களும் !
இம் மண்ணைக் காக்க
போராடிய
போராளிகள் போராளிகள் !

போரை நிறுத்து போரை நிறுத்து !
உள்நாட்டு மக்கள் மீது

இசுலாமிய மக்கள் மீது
நடத்துகின்ற போரை நிறுத்து !

ஒடுக்காதே ஒடுக்காதே
கார்ப்பரேட் கைக்கூலி அரசின்
உண்மை முகத்தை அம்பலப்படுத்தும்
மனித உரிமைப் போராளிகளை
ஒடுக்காதே ஒடுக்காதே !

கைகோர்ப்போம் கைகோர்ப்போம் !
கனிமவள கொள்ளையை
எதிர்த்து நின்று போரிடும்
தேசபக்த போராட்டத்தில்
கைகோர்ப்போம் கைகோர்ப்போம் !

***

ஆர்ப்பாட்டத்தில்  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்  சார்பில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஓவியம் : முகிலன்

ஒருங்கிணைப்பு:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC),
சென்னை.
தொடர்புக்கு : 90946 66320

மக்கள் கலை இலக்கியக் கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.

பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?

146
தோழர் தியாகு

13-ம் ஆண்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ! மதுரை கருத்தரங்கம்

பொது சிவில் சட்டம்- கருப்புப் பணஒழிப்பு: இசுலாமியர்கள், சொந்த நாட்டு
மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல் !

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 13-ம் ஆண்டு தொடக்க விழா கருத்தரங்கம் 18-12-2016 அன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

தோழர் வாஞ்சிநாதன் தலைமை உரையில் “பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடி சட்ட ரீதியாகவே அரசியல் சட்டத்தை மீறியும், குற்றங்களையும் இழைத்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. ஒரு அரசாணை மூலம் மோடி அதை மீறியுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாராளுமன்ற சட்டம் மூலமே சாத்தியம் என்றே ரிசர்வ் வங்கி சட்டம் சொல்கிறது. இப்போது மோடி பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவில்லை.

தோழர். வாஞ்சிநாதன்
தோழர். வாஞ்சிநாதன்

ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலை மற்றும் தொழில் செய்யும் உரிமை அடிப்படை உரிமை {19(1)(g)} வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவையில் மட்டும் 50,000 நகைத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சென்னையில் கட்டுமானத் தொழிலில் 30,000 பேர் வேலை இழந்துள்ளனர். இன்னும் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கானோர் வேலை பறிபோய் வாழ முடியாமல் தவிக்கின்றனர். சிறு தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதேபோல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்லும் அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. மோடியின் அறிவிப்பால் 150-க்கும் மேலானோர் இறந்துள்ளனர். இது சரத்து21- வாழ்வுரிமையை மீறிய செயல்.

மேலும் நமது நேர்மையான உழைப்பில் கிடைத்த பணம் வங்கியில் முடங்கியுள்ளது. இது அரசியல் சட்டம் சரத்து 300-அ-ன் கீழ் நமது சொத்து. இச்சொத்தை மோடி எப்படி முடக்க முடியும்? நாம் வங்கியின் வாடிக்கையாளர்கள், நமக்கும் வங்கிக்குமான ஒப்பந்தமும் மீறப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி நம்மிடம் அளித்துள்ள உறுதிமொழியும் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நாம் நட்டஈடு கோர முடியும். தருவார்களா? யார் பொறுப்பு?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

”கருப்புப் பண ஒழிப்பு : சொந்த நாட்டு மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல்“ பற்றி மதுரைக் காமராசர் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் பவணந்தி வேம்புலு சிறப்புரையாற்றினார்.

“ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்துவிடுவேன் என்று மோடி சொல்கிறார். கருப்புப் பணம் என்றால் என்ன? மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணம் சம்பாதிப்பவர்கள் அதற்கு வரி கட்ட வேண்டும். வணிகர்கள் விற்கும் பொருளுக்கு வரி கட்ட வேண்டும். இப்படி பல்வேறு வகைகளிலே அரசுக்கு செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பதன் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இன்னும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இந்தப் பணம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கிறது. விலைவாசி ஏறுகிறது. இன்னும் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கருப்புப் பணம் 80 லட்சம் கோடி வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது.

PRPC Madurai (3)
பேராசிரியர். பவணந்தி வேம்புலு

கொஞ்சம் காலம் முன்பாக நமது கிராமங்களிலே பண்டமாற்று முறை இருந்தது. ஒருவரிடம் இருக்கும் உற்பத்திப் பொருளை வேறு ஒருவரிடம் கொடுத்து அவரிடம் உள்ள பொருளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள். இங்கே பணப் பரிவர்த்தனை இல்லை. பொருளைப் பதுக்கி வைத்தால் அது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே அது கடினமானது. ஆனால் பணப் பரிவர்த்தனை வந்த பின்பு கரன்சியைப் பதுக்கிவைப்பது சுலபமாகிவிட்டது. பணப் பரிவர்த்தனையின் காரணமாகத்தான் கருப்புப் பணம் உருவானது. பண்டமாற்று முறை ஒழிந்து போய் ரூபாய் நோட்டு வந்த பின்பு அதுவே பொருளாதாரத்தின் அடிபடையாக மாறிவிட்டது.

மக்கள் அனைவரிடமும் பணத்தை தாராளமாகப் புழங்கவிட்டு திடீரென்று ஒரு சில மணி நேரத்தில் செல்லாது என்று அறிவித்தால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாத மக்கள் எப்படி இந்த மாற்றத்தை எதிர்கொள்வார்கள்? அவர்களது சிறுவாட்டுச் சேமிப்பு கருப்புப் பணமாகுமா? செல்லாத பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் அல்லல் படுவதற்கு யார் காரணம்? இந்தியாவில் 40% கிராமங்களில் வங்கிகள் இல்லை. இருந்தாலும் படிக்காதவர்களுக்குப் பயன்படுத்தத் தெரியாது. இவர்களை மின்னணு பரிவர்த்தனைக்கு மாறச் சொன்னால் எவ்வாறு முடியும்? எளிய மக்களிடம் உள்ள சேமிப்பைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடி ஹிட்லரைப் போல செயல்படுகிறார். ஹிட்லர் ஜனநாயகப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். மோடியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் பிரதமர் ஆகியுள்ளர். ஹிட்லர் உருவாகுவதற்கு வெய்மர் குடியரசு அடிப்படையாக இருந்ததைப் போல மோடியின் ஆட்சிக்கு மன்மோகனின் ஆட்சி அடிப்படையாக இருந்தது. மக்கள் நல அரசு என்ற அடிப்படையே
தகர்க்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட்டுகளுக்கான அரசாகிவிட்டது.

மோடி இதைத் தன்னுடைய மிகப் பெரிய சாதனையாகப் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் இது மோடி தன் சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய துல்லியமான அரசியல், பொருளாதாரத் தாக்குதல். இதை நாம் எதிர்க்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தை தோற்கடித்ததைப் போல இந்தக் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தையும் தோற்கடிக்க வேண்டும் “ என்று பேராசிரியர் பவணந்தி வேம்புலு பேசினார்.

“பொது சிவில் சட்டம் : அனைத்து இந்துக்களுக்குமே பொதுவான சட்டம் சாத்தியமா ?” என்பது பற்றி தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு சிறப்புரையற்றினார்.

“இரண்டு தலைப்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது தான். இட்லருடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் நம் நாட்டுக்கும் தொடர்பு உள்ளது. மோடி இட்லராக முயல்கிறார். நாம் அனுமதிக்கவில்லை. ஜெர்மனியின் துயரங்களுக்குக் காரணம் யூதர்கள் என்றார் இட்லர். ஐன்ஸ்டீன் ஜெர்மனியை விட்டு ஓடிப்போனார். இந்தியாவின் துயரம் முசுலீம்கள் என்கிறார் மோடி. இந்துக்கள் மனத்தில் இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார் மோடி.

அம்பேத்கர் அவர்கள் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்  என்று விரும்பினார். எல்லா சட்டமும் இங்கே பொதுவானதாகத் தான் இருக்கிறது. ஆனால் தனி நபர் சட்டம் பற்றித் தான் இங்கே விவாதம். தனி நபர் சட்டம் மதத்துக்கு மதம் மட்டுமல்ல சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபடுகிறது. அரசியல் சட்டத்தின் உட்பிரிவாக வழிகாட்டு நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. பல சட்டங்களிலே வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கப்படாமலும் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லுகின்ற வகையிலும் உள்ளன. அரசியல் சட்டம் பிரிவு 44 அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 45 –வது பிரிவு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என்று கால நிர்ணயம் செய்கிறது. ஆனால் ஆட்சி மாறி 66 ஆண்டுகளுக்குப் பின்பும் இதுவரை அமல் படுத்தப்படவில்லை. சர்க்கரைக் கிண்ணம் என்கிற கியூபா  நாட்டில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கே தனியுடமை இயல்பாகவே உயர்வு தாழ்வை  உருவாக்கிவிடுகிறது.

தோழர் தியாகு
தோழர் தியாகு

இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நடத்திய பல்வேறு கலவரங்களிலே முஸ்லீம்கள் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன்கூட சிறைக்குச் செல்லவில்லை. கிரிமினல் சட்டங்கள் எல்லோருக்கும் பொது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. அம்பேத்கர் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் (HINDU CODE BILL) கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சியை காந்தியார், படேல், திலகர், பாபு ராஜேந்திரப் பிரசாத் போன்றவர்கள் தடுத்து நிறுத்திவிட்டார்கள். முதலில் அதற்கு ஒப்புக்கொண்ட நேரு பின்னர் அமைதியாக இருந்துவிட்டார். அது போலத் தான் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டத்தையும் தடுத்துவிட்டார்கள்.

அம்பேத்கர் அரசியல் சட்டத்தை விரும்பித் தலைமையேற்று எழுதவில்லை. எழுதவைக்கப்பட்டதாகச் சொன்னார். குறைந்தபட்சம் இடஒதுக்கீடு பாதுகாப்பு அம்சங்களைக் கருதிதான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனவே இந்துத்துவ தலைவர்கள் யாரை எவ்வாறு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள். காந்தியாரைக் கொலை செய்த கோட்சே ஏன் கொலை செய்தேன் என்று சொல்லும்போது காந்தி மக்களிடம் இருந்த சிறை அச்சத்தைப் போக்கிவிட்டார். மக்கள் கட்டுப்பாடுகளை மீறப் பழகிவிட்டனர். இது ஆபத்தான விளைவுகளை இந்து சமுதாயத்தில் உருவாக்கிவிடும். இது தேச துரோகம் என்று சொன்னான்.

தனி நபர் சட்டத்தில் மாற்றம் வேண்டும். சென்னை மாகாண சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை முத்து லட்சுமி ரெட்டி அம்மையார் முன்மொழிந்த போது அதை காங்கிரஸ் கட்சி சத்திய மூர்த்தி எதிர்த்தார். மத உரிமைகளில் அரசியல் தலையிட முடியாது என்றார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் இருந்துவிட்டார்கள். இனிமேல் வேண்டுமானால் உங்கள் குலப் பெண்களை தேவ தாசிகளாக இருக்கச் சொல்லுங்கள் என்று கடுமையாகச் சாடினார் ரெட்டி. சட்டம் நிறைவேறியது.

பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் என்றான் வள்ளுவன். ஆனால் இங்கே சாதிக்கு ஒரு நீதி, நடைமுறை உள்ளது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொள்கிறது. பெண்ணுரிமை பிரச்சினையிலும் அவ்வாறுதான். எல்லா மதங்களும் பெண்களை ஒடுக்குவதை நியாயப்படுத்துகிறது. இசுலாமியர்களிடமும் அது உள்ளது. பெண்களுக்கான சம உரிமையும் சேர்ந்ததே சமூக நியதி. ஆணாதிக்கத்திற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளது. ஆணவக் கொலைகளின் நோக்கம் என்ன? அக மண முறையைப் பாதுகாப்பதுதான். வரதட்சணைப் பழக்கம் எல்லா சாதிகளிடமும் கிடையாது. ஆனால் உயர் சாதிகளிடம் உள்ளது. இதைப் பார்த்து மற்ற சாதிகளும் பழகிக் கொள்கிறார்கள். இசுலாமிய சமூகத்தில் வரதட்சணை தடை செயப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கேயும் அது நடைமுறையில் உள்ளது. சிசுக்கொலை மேல் சாதிகளில் இல்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் இருக்கிறது. இடை நிலைச் சாதிகளிடம் இருக்கிறது. அகமண முறையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். பல பெண் குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் கொடுமை நிகழ்கிறது. இந்தப் பழக்க வழக்கங்கள் எல்லா சட்டங்களையும் மீறி நடக்கிறது.

பொது சிவில் சட்டம் என்று மோடி சொல்வது அப்பட்டமான நாடகம். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக பொது இந்துச் சட்டம் கொண்டுவர வேண்டும். சாதிக்கு ஒரு மரபு இருப்பதை, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பதை முதலில் ஒழிக்க வேண்டும். முசுலீம்கள் சிறுபான்மை என்றால் இங்கே சிறுபான்மை என்று யாரும் இல்லை. ஆதிக்கச் சாதிகளில் பார்ப்பான் ஆகச் சிறுபான்மை. அவன் தான் சமூகவிதிகளை வகுத்துள்ளான். கருவறைக்குள் ஒரு சாதி. பிரகாரத்தில் ஒரு சாதி. வெளியே ஒரு சாதி என்று இந்துக்களையே இனம் பிரித்து வைத்தவன் யார்? இந்து என்று ஒரு மதமே இல்லை என்று வரலாறு மெய்ப்பிக்கிறது. அனைவரும் இந்து என்றால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டியது தானே முதல் தேவை? ஆனால் இசுலாமியர்களை ஒடுக்கும் நோக்கத்துடன் இசுலாமியர்களுக்கான தனி நபர் சட்டங்களைக் காட்டி பொது சிவில் சட்டம் என்று சங்கப் பரிவாரங்கள் கூப்பாடு போடுகின்றன.

இந்து சனாதனவாதிகளைப் போலவே முஸ்லீம் அடிப்படைவாதிகளும் உள்ளனர். பிற மதங்களிலும் இந்த பிற்போக்குத்தனங்கள் உள்ளன. அது கட்டாயம் களையப் பட வேண்டும். இசுலாமிய சமூகத்தில் பெண் கல்வி மறுக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடுபவர்கள் மிரட்டப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். ஒடுக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் குர்தி இனப் பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடி ஐ.எஸ்.தீவிரவாதிகளை விரட்டினர். இசுலாத்தின் சாரம் சமத்துவம், அதை அவர்கள் கொண்டுவரப் போராட வேண்டும். இசுலாத்தில் சாதி கிடையாது தீண்டாமை கிடையாது. எனவேதான் இந்துத்துவம் அதைக் குறி வைக்கிறது.

மோடி அரசு ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு எதிரானது. ஆகச் சிறுபான்மையினரான பார்ப்பன சனாதனங்களை மரபுகள், பழக்க வழக்கங்கள், வழிகாட்டு நெறிமுறைகளாக வைத்துக்கொண்டு அதைப் பெரும்பான்மை இந்துக்கள் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்க எத்தனிக்கிறது. மோடி அரசு தலித் மக்கள், பழங்குடிகளுக்கு எதிரானது. இசுலாமியர்களுக்கும் இன்னும் பல மதச் சிறுபான்மையினருக்கும் எதிரானது. இந்து ராஜ்யம் என்ற ஆர்.எஸ்.எஸ்.ன் கனவை நனவாக்க சனநாயகத்தின் பெயரில் மோடி பாசிசத்தைக் கொண்டு வரப் பார்க்கிறார். பொருளியல் நெருக்கடிகளை உழைக்கும் மக்கள் தலையில் சுமத்தப் பார்க்கிறார். இதை நாம் அனுமதிக்கக்கூடாது ஒன்றிணைந்து போராட வேண்டும்.

கிளைப் பொருளாளர் தோழர் சங்கையா நன்றி சொல்ல கருத்தரங்கம் நிறைவுற்றது. கீழைக்காற்று நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. வாசிப்புத் தளம் கொண்டவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.

பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், அரசுப் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இசுலாமியர்கள், வணிகர்கள், தோழமை அமைப்பினர் 400 பேர்வரை கலந்துகொண்டு இறுதிவரை இருந்து சிறப்பித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
மதுரை

தருமபுரி : வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றும் திருடர்களைப் பாதுகாக்கும் போலீசு !

0

வெளிநாடு அனுப்புவதாகக்கூறி  தருமபுரி  மக்களை  ஏமாற்றி  பலகோடி  கொள்ளையடித்த  குறும்பட்டி  திருட்டுக்  கும்பல்  முத்துமணி – நாகப்பன்   தம்பதியின்   சொத்துக்களை  பறிமுதல்   செய்வோம்!   என்கிற  முழக்கத்தின்  கீழ்  மக்கள்  அதிகாரம்  சார்பாக   தருமபுரியில்  22.12.2016  அன்று நடந்த  சாலைமறியல்!

குடும்பத்தை நகர்த்த முடியாத ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த சிலர், நிலத்தை விற்றும் கடன் வாங்கியும் வெளிநாடு சென்றாவது சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் பரவலாக இருக்கிறது. இதை பயன்படுத்தி மோசடி மூலமாக பணத்தை சுருட்ட திட்டமிட்டனர், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் குறும்பட்டியை சேர்ந்த முத்துமணி – நாகப்பன்  தம்பதியினர்.  இவர்கள் 60- க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 2 கோடிக்கும் மேல் பணத்தை ஏமாற்றி சுருட்டியுள்ளனர். உள்ளுர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த பலரும் ஏமாந்து பணத்தை கொடுத்துள்ளனர்.

தருமபுரியில்  நல்லம்பள்ளி, பி. அக்ராகாரம் பகுதியைச் சுற்றியுள்ள  கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் சிறுக சிறுக  சேர்த்த  பணத்தையும், வட்டிக்கு  கடன்  வாங்கிய பணத்தையும்  வெளிநாட்டுக்கு  அனுப்பும்  ஏஜென்டுகள் என்ற கொள்ளை கூட்டத்திடம் பறிக்கொடுத்துவிட்டு பறிதவித்து நிற்கின்றனர்.  இந்த ஏஜென்டுகளில் முக்கியமான புள்ளி,  நல்லம்பள்ளி வட்டம்  குறும்பட்டி  கிராமத்தில்   உள்ள  நாகப்பன், அவனுடைய மனைவி  முத்துமணி மற்றும் பத்மகுமார்  ஆகியோர்.

DPI Road (3)இவர்கள் கூட்டு சேர்ந்து  ஒரு நபருக்கு  2 லட்சம் முதல்  3 லட்சம் வரை பெற்று கடந்த மே மாதம் 60 பேரை  டெல்லிக்கு அழைத்துச்சென்றானர். அங்கு சென்றவுடன் அஜய் குமார் என்வரிடம்  தொகையை  ஒப்படைத்து விட்டேன், அவர் இங்கு வருவதாக கூறிவிட்டு இப்போது  வரமுடியாது  எனக்கூறி  விட்டார், நான் ஒன்றும் செய்யமுடியாது என்று கையை விரித்து விட்டனர்.  அந்த 60 பேரும் செய்வதறியாமல்  நிலை குலைந்து போய்  வீடு திரும்பினர். இந்த தகவலை வீட்டிலும் சொல்ல முடியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் சிவன் என்பவர்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஏற்கனவே பார்த்து வந்த வேலையையும்  இழந்து  பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர். பிறகு டெல்லியில் இருந்து சென்னை வந்து, போலீசு கமிஷனரை சந்தித்து மனுக் கொடுத்தனர். பிறகு தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையம்,பொருளாதார  குற்றப்பிரிவு காவல் நிலையம், கலெக்டர், எஸ்.பி,   மீண்டும் அதியமான் கோட்டை போலீசு நிலையம்  என ஒவ்வொரு அதிகாரியையும் மூன்று , நான்கு சுற்று பார்த்தாகி விட்டது. ஆனால்  நாகப்பன்  முத்துமணியிடமிருந்து பணம் வந்த  பாடில்லை. இன்னும் எத்தனை முறை சுற்றினாலும் நீதிகிடைக்காது, பணமும்  கிடைக்காது என்று அனுபவத்தில் உணர்ந்த மக்கள், வீதியில் இறங்கினால்தான்  நீதியை  நிலை நாட்ட முடியும் என்று மக்கள் அதிகாரத்தை  நாடினர்.

பிறகு மக்கள் அதிகாரம் சார்பாக இத்திருட்டுக் கும்பலை அம்பலப்படுத்தி ஆயிரகணக்கான பிரசுரம் போட்டு, நூற்றுக்கணக்கான சுவரொட்டி  ஒட்டியும்  22.12.2016  அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது, தனிநபரை அம்பலப்படுத்தி பேசுவதால் அனுமதி கொடுக்க முடியாது என்று மறுத்து இக்கொள்ளை கூட்டத்திற்கு துணை போனது போலீசு. பாதிக்கப்பட்ட மக்கள் தடையை மீறி போராட வரமாட்டார்கள் அதனால் தாசில்தாரிடம் மனு கொடுத்துவிட்டு செல்வது என முடிவு செய்தோம். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று இருந்து போலீசார் இரண்டு தோழர்களை இழுத்து சென்று கைது செய்தனர்.  இதனை  பார்த்த அப்பகுதியில் பாதிக்கபட்ட மக்களுடன் சேர்ந்து தோழர்களை விடுதலை செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பணத்தை திரும்பப் பெற்றுதர கோரியும் மக்களோடு கைகோர்த்து  திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற  இந்த  மறியலுக்கு  மக்கள்  அதிகாரம்   தருமபுரி  மண்டல  ஒருங்கிணைப்பாளர்  தோழர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அப்போது பணமோசடி செய்த இத்திருட்டுக்கும்பலை அம்பலப்படுத்தி  முழக்கமிட்டதும்  நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். உடன் மக்களை அச்சுறுத்தும் வேலையில் இறங்கியது போலீசு. பிறகு  அவர்களை  விடுதலை செய்ய வேண்டும் என்று  முழக்கமிட்டதும் மக்களை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள், அம்மக்களைப் பார்த்து “நீ  ஏன் அவன்கிட்ட பணத்த கொடுத்து  ஏமாந்து போன, நீ இங்க வந்து உட்கார்ந்து விட்டால் உனக்கு பணம் வந்துவிடும் என்று நினைக்கிறியா?” என்று மிரட்டியவாறு  இன்ஸ்பெக்டர் கேட்டபோது “நாங்கள்  ஒரு வருசமாக  மனுக்கொடுத்து விட்டோம்  ஒன்னும் நடக்கல, எங்க பணத்தை வாங்கி கொடுக்க துப்பில்லை” என்று கிராமத்து  மக்கள் கோபத்துடன்  பதிலடி கொடுத்தனர்.

DPI Road (2)ரோட்டில்  உட்கார்ந்தால்  எந்த  அதிகாரியும்  வரமாட்டார்கள்  மண்டபத்துக்கு  வாங்க  அங்கதான்  அதிகாரி வருவார் என்று  போலிசார் நைச்சியமாக பேசிபார்த்தனர். அதற்கு  நாங்க ஒரு  வருடமாக அவர்களை  தேடிதான் போனோம்  எந்த அதிகாரியும் எங்களை கண்டுக்கவே இல்லை, நீங்க  சொல்லறது  பொய், உங்கள  நம்பி எப்படி  வரமுடியும்,  நீ  பேப்பர்ல எழுதி கொடுக்கிறியா? இப்ப அவங்க ரோட்டுக்கு வந்து எங்களுக்கு  பதில் சொல்லட்டும் என்று மக்கள் விடாப்பிடியாக போராட்டத்தை தொடர்ந்தனர். பிறகு அதிவிரைவு படையை கொண்டு அனைவரையும்  வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து குண்டுக் கட்டாக தூக்கிவேனில் ஏற்றினர். அப்போது சில பெண்களுக்கு  கையில் காயம் ஏற்பட்டது. சுமார் 30 பேரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மண்டபத்தில் அடைத்தனர். பிறகு இரவு 8.30 மணியளவில் உங்களுடைய ஆதார் எண், தொலைபேசி  எண்  கொடுத்தால் தான் விடுதலை செய்ய முடியும் என்று மிரட்டினர். அதற்கு ஆதார் எண் கேட்பது சட்டவிரோதமானது, இதனை கொடுக்க முடியாது    வேண்டுமானால் எங்களை  கைது செய்யுங்கள் என்று  பதிலடியாக  மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசினர்.

மேலும்  அத்திருட்டுக்கும்பல்  மீது  நடவடிக்கை  எடுக்கும்  வரை  நாங்கள் உண்ணமாட்டோம்  என்று   உணவை   திருப்பி அனுப்பினர்.  இரவு 10 மணி ஆகியும் எந்த  பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தது போலீசு.  இனியும்   இவர்களிடம் கெஞ்சுவதால்  ஒன்றும்  நடக்க  போவதில்லை  என்று  மக்களிடம் தோழர்கள் பேச ஆரம்பித்தனர்.

உடனே  மண்டபத்தில் மண்டபத்தில் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து போராட்டத்தை தொடங்கி முழக்கமிட்டோம். அப்போது அருகில் குடியிருப்புகளில் இருந்த மக்கள் மண்டப்பத்தை சுற்றி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தனர். பார்க்க வந்த மக்களை விரட்டியது போலீசு.  இப்போராட்டத்தை  மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்  என்று  மண்டபத்தின் மேல்  மாடிக்கு சென்று முழக்கமிட்டனர். அதன் பிறகு போலீசு அடிபணிந்தது 1 மணிநேரம்  கழித்து   நாங்கள்  உடனடியாக  நடவடிக்கை எடுக்கிறோம்  என்று கூறி இரவு 11 மணிக்கு பேச அழைத்தார் டி.எஸ்.பி சோமசுந்தரம். அப்போது ஆதார் அட்டை கேட்பது கைதானவர்கள் உன்மையான முகவரிதான் கொடுக்கிறார்களா? என்று எப்படி தெரிந்துக்கொள்வது அதனால் தான் ஐடி -யை கேட்கிறோம் என்றார். இது சட்ட விரோதம் இப்படி எதுவும் சட்டமில்லை என தோழர்கள் பதில் கொடுத்தனர். நீண்டநேரம் பேசியும் பின்வாங்காமல் இருந்த தோழர்களிடத்தில் இறுதியாக போன் நம்பரையாவது கொடுங்கள் என இறுதி சுற்றில் கேட்டனர். அப்போது சில நபர்களின் போன் நெம்பரை மட்டும் கொடுத்தோம். அதன்பிறகே இரவு    12 மணிக்கு  அனைவரையும்  விடுதலை செய்தனர்.  அடுத்த நாள் காலை உடனே எஸ்.பி  யை பாருங்கள் என்று கூறியதை அடுத்து அவரிடம் 40 பேர் சென்று மனுக்கொடுத்தனர்.

சொந்த மண்ணில் வாழ்க்கையில்லை, வேலையில்லை ஏதாவது வழி கிடைக்காதா என்று வெளிநாட்டில் வேலைகளுக்கு முயல்கின்றனர் ஏழை மக்கள். அதற்காக இருக்கும் குண்டுமணி சொத்தையோ, நகையையோ விற்று மிச்சத்திற்கு கந்து வட்டிக்கு கடன் வாங்கி தரகர்களிடம் இலட்சக்கணக்கில் கொடுக்கின்றனர். அரசின் பல்வேறு துறைகளுக்கு மாமூலைக் கொடுத்துவிட்டு தரகர்கள் இந்தப் பணத்தை விழுங்கி விடுகின்றனர். வெளிநாட்டில் வேலை என்ற கனவுடன் காத்திருந்தவர்களுக்கு பழைய அவல நிலை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. சரி கொடுத்த பணத்தை மீட்கலாமா என்று போலீசிடம் கேட்டால் போராடாதே, ஏமாந்தாய் என்று கேட்கிறார்கள்!

ஆம். இந்த அரசு நமக்கு வேலை கொடுக்கும், நமக்கு பிரச்சினை வந்தால் பாதுகாக்கும் என்று இதுவரை ஏமாந்து விட்டோம், இனி ஏமாற மாட்டோம்!

தகவல் :
மக்கள்  அதிகாரம்,
தருமபுரி.
தொடர்புக்கு;  81485  73417

மோடி வித்தை : விவசாயிகள் தலையில் இறங்கிய இரட்டை இடி !

0
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

ழைக்கும் மக்களின் தாங்கொணா துயரத்தைச் சித்தரிக்கும் “இவனோடும் சண்டை, நமக்கு இயற்கையோடும் சண்டை” என்றொரு கவிதை வரி உண்டு. தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கையறு நிலை இந்தத் துன்பியல் கவிதை வரியைத்தான் நினைவுபடுத்துகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்ததால், நடப்பு ஆண்டிலும் குறுவை சாகுபாடி இல்லாமல் போனது. தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் காரணமாக, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்த வேளையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட முடியாது” என வாதிட்டு, அந்த நம்பிக்கையில் மண்ணை வாரிப்போட்டது, மோடி அரசு. அரசு அதிகார அமைப்புகள் துரோகம் செய்துவிட்ட நிலையில், பருவ மழையை நம்பி விதைப்பைத் தொடங்கினார்கள், விவசாயிகள். பருவத்தே பெய்ய வேண்டிய மழை பொய்த்து, டெல்டா விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இப்படி அடிக்கு மேல் அடி விழுந்து கொண்டிருந்த நிலையில், மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை சம்பாவுக்கும், அதனைத் தொடரும் தாளடிக்கும் சேர்த்தே சாவுமணி அடித்து விட்டது.

பூண்டி ஒன்றியம், சோமதேவன்பட்டு கிராமத்தில் கருகிப் போன நெற்பயிர்களை மாடுகள் மேயும் அவலம்.
பூண்டி ஒன்றியம், சோமதேவன்பட்டு கிராமத்தில் கருகிப் போன நெற்பயிர்களை மாடுகள் மேயும் அவலம்.

கடந்த 55 ஆண்டுகளில் இப்படியொரு கொடூரமான அவல நிலையை நாங்கள் கண்டதில்லை என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள். ஆனால், மோடியோ, “ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், இந்தியா ஜொலிக்கத் தொடங்கிவிடும்” என வாய்ப் பந்தல் போடுகிறார். எந்த இந்தியா, எந்த இந்தியர்கள்? – மோடியிடமும், அவரது துதிபாடிகளிடமும் நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். விதைப்பைத் தவறவிட்ட பிறகு, விவசாயிகளால் எதனை அறுவடை செய்ய முடியும்? பஞ்சத்தை, பட்டினியை, தலைக்கு மேல் கத்தியாக நிற்கும் கடனை, தற்கொலையை – இவற்றைத் தவிர விவசாயிகளுக்கு வேறென்ன கிடைத்துவிடும், ஐம்பது நாட்களுக்குப் பிறகு.

மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாடெங்குமுள்ள சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மரண அடியாய் இறங்கியிருக்கிறது. இந்திய கிராமங்களை ஒரு பேரழிவின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

நவம்பர் மாதம் இந்திய விவசாயிகளுக்கு முக்கியமானதொரு பயிர்க்காலம். தமிழகத்தில் காரி காலப் பயிர்களும் (தை பட்டம்), வட இந்திய மாநிலங்களில் ராபி பயிர்களும் பயிரிடும் காலம். நெல், கோதுமை, கடுகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, உருளைக்கிழங்கு, அவரை உள்ளிட்ட உணவுப் பயிர்களும், காய்கறிகளும் இந்தப் பருவத்தில்தான் பயிரிடப்படுகின்றன. மேலும், இதற்கு முந்தைய ஆடிப் பட்டப் (காரிஃப்) பயிர்கள் விளைந்து விற்பனைக்கு வரும் காலமும் இதுதான். இப்படிபட்ட நேரத்தில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு, விளைந்த பயிர்களை விற்கவும் முடியாத, அடுத்த பட்டப் பயிர்களைப் பயிரிடுவதற்குப் பணத்தைப் புரட்டவும் முடியாத கடும் நெருக்கடியில் விவசாயிகளைச் சிக்க வைத்துவிட்டது.

விதைத்த நெற்பயிரைக் காப்பாற்ற முடியாத துயரத்தால் அகால மரணமடைந்த விவசாயிகள் (இடமிருந்து) கோவிந்தராஜ், ராஜேஷ்கண்ணன், அழகேசன்.
விதைத்த நெற்பயிரைக் காப்பாற்ற முடியாத துயரத்தால் அகால மரணமடைந்த விவசாயிகள் (இடமிருந்து) கோவிந்தராஜ், ராஜேஷ்கண்ணன், அழகேசன்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், மாவட்டக் கூட்டுறவு வங்கிகளும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூடாது; சேமிப்பு கணக்குகளில் பணம் போடவோ, எடுக்கவோ விவசாயிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசு விதித்த தடையுத்தரவு, விவசாய நடவடிக்கைகள் அனைத்தையுமே முடக்கிப் போட்டு, விவசாயிகளையும் விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் பஞ்சம் பிழைக்கப் போகும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது.

நகர்ப்புற பொருளாதாரம் இயங்குவதற்கு வர்த்தக வங்கிகள் எந்தளவிற்கு முக்கியமானதோ, அதனைவிடப் பல மடங்கு முக்கியமானது கிராமப் புறங்களில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள். மாநில அரசுகள் அறிவிக்கும் பயிர்க் கடன்கள் மற்றும் வட்டி மானியங்கள் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம்தான் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு அப்பால், விவசாயிகளுக்குத் தேவைப்படும் நகைக் கடன்களை வழங்குவது, பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரிமியம் தொகையை வசூலித்துக் கொள்வது, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடு பொருட்களை விற்பது, விவசாயிகளுக்கான சேமிப்பு கணக்குகளைத் தொடங்கிக் கொடுத்து, அவற்றைப் பராமரித்து இயக்குவது எனப் பல வகையான பணிகளைத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகின்றன.

இந்த நிதியாண்டில் தமிழக அரசு விவசாயிகளுக்கு 6,000 கோடி ரூபாய் பயிர்க் கடனையும் 200 கோடி ரூபாய்க்கான வட்டி மானியத்தையும் அறிவித்திருக்கிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வர்த்தக நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாதென்ற உத்தரவால், 6,000 கோடி ரூபாய் பயிர்க்கடனில் இன்னும் வழங்க வேண்டியுள்ள 4,000 கோடி ரூபாய் பயிர்க் கடனை அளிக்க முடியாமல் அந்தத் திட்டமே முடங்கிப் போய்க் கிடக்கிறது. மற்ற வங்கிகளைப் போல 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் தொடக்க வேளாண் கூட்டுறவு பெற்றுக் கொள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையாலும், விவசாயிகளின் சேமிப்புக் கணக்குகளில் பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் போடப்பட்டுள்ள தடையாலும், விவசாயிகளால் பயிர்க் கடனைச் செலுத்த முடியவில்லை. உரிய தேதியில் பயிர்க்கடனைச் செலுத்த முடியாத நிலையில் வட்டி மானியத்தைப் பெறுவதும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

farmers-distress-caption-1சிறு, நடுத்தர விவசாயிகள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு விவசாய வேலைகளைத் தொடங்குவதில்லை. பயிர்க் கடன், நகைக் கடன், தானிய ஈட்டுக் கடன் அல்லது தனியாரிடம் பெறும் கந்துவட்டிக் கடன் இவற்றை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியை நடத்தி வருகின்றனர். விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வாங்குவதற்கு; நடவுக்கு, நாத்துப் பறிப்பதற்கு, களையெடுப்பதற்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்கு என விவசாய வேலைகளைச் செய்யும் கூலித் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கு விவசாயிகளுக்கு அன்றாடம் ரொக்கப் பணம் கையில் இருக்க வேண்டும். பணப் புழக்கம் குறைந்துவிட்ட நிலையில், வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையில், சேமிப்புக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க முடியாத நிலையில் இந்த விவசாயப் பணிகள் அனைத்துமே முடங்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மாநில அரசின் கடன் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடியை நடத்த வேண்டுமென்றால் கந்துவட்டிக் கும்பலிடமோ குறுநிதி நிறுவனங்களிடமோ கையேந்த வேண்டும். இல்லையென்றால், நிலத்தைத் தரிசாகப் போட வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

அரசு அதிகாரிகளின் நிர்பந்தத்திற்குப் பணிந்து நேரடி நெல் விதைப்பை நடத்தி முடித்திருக்கும் டெல்டா விவசாயிகள் ஒருபுறம் மழை இல்லாமலும், மறுபுறம் கையில் பணம் இல்லாமலும், நட்ட பயிர்கள் காய்ந்து, சாவியாகிப் போவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரட்டைத் தாக்குதலால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், வேதனையால் மாரடைத்தும் இறந்து போய்விட்டனர்.

இந்த அகால மரணங்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களையும் விட்டு வைக்கப் போவதில்லை. ஏனென்றால், சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மஞ்சள் சந்தையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், 13 நாட்களில் 8,000 கோடி ரூபாய் பெறுமான மஞ்சள் விற்பனையாகமல் தேங்கி நிற்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். இந்தத் தேக்கமும், அதனால் ஏற்படக்கூடிய விலை வீழ்ச்சியும் மஞ்சள் விவசாயிகளை ஓட்டாண்டி நிலைக்குத் தள்ளக்கூடும். இந்த விற்பனை தேக்கம் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை, காங்கேயம் காளைச் சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.

* * *

கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் பாலை  தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் பாலை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் மாதம்தான் உருளைக் கிழங்கு பயிருடும் பருவம். பயிரிடுவதற்கு ஏற்ற கிழங்குகளை மார்ச் மாதத் தொடக்கத்திலேயே குளிர்பதனக் கிடங்குகளில் சேமித்து வைத்து, அதனை நவம்பரில் திரும்ப எடுத்து விதைக்க வேண்டும். ஒருபுறம் சேமிப்புக் கிடங்குகள் 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கின்றன; இன்னொருபுறமோ விவசாயிகளிடம் பணமும் இல்லை, பயிர்க் கடனும் கிடைக்கவில்லை. இதனால், கிடங்குக் கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், அதனால் கிழங்குகளைத் திரும்பப் பெற்றுப் பயிரிட முடியாமலும் தவித்துப் போய் நிற்கிறார்கள், விவசாயிகள்.

கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உருளைக்கிழங்குகளை நவம்பர் 30-க்குள் திரும்ப எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் அதனை அழித்துவிடுவார்கள் என்கிறார், ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் மெஹ்ருதீன் என்ற விவசாயி.

உருளைக்கிழங்கு சாகுபடியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலுள்ள மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 3,87,000 ஹெக்டேரில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. அதனைப் பயிரிடுவதற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜமால்பூர் பகுதியில் மட்டும் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால், அம்மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்ப்பதே அச்சமூட்டக் கூடியதாக உள்ளது.

* * *

கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

.பி. மாநிலத்தில் கோதுமை, கடுகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு வகைகளைப் பயிரிட முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அம்மாநிலத்தில் கரும்பை வெட்டி ஆலைகளுக்கு எடுத்துப் போக வேண்டிய நேரமிது. ஆனால், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்குக் கூலி கொடுப்பதற்கும், வெட்டிய கரும்பை எடுத்துச் செல்ல லாரி வாடகையைக் கொடுப்பதற்கும் பணமில்லாததால், கரும்புகள் வயலில் காயத் தொடங்கிவிட்டன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வட்டி வீதம் குறையும் என பா.ஜ.க. கும்பல் வாய்ச்சவடால் அடித்து வருகிறது. ஆனால், 3 வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த கந்து வட்டிக் கும்பல், பணத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு 5 வட்டி, பத்து வட்டி என ஏற்றிவிட்டதாக உ.பி. விவசாயிகள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவின் வாசி சந்தையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பாக 14 ரூபாய்க்கு விற்று வந்த ஒரு கிலோ பச்சை மிளகாய் அதன் பிறகு மூன்று ரூபாயாகச் சரிந்து விட்டதாகவும், 13 ரூபாய்க்கு விற்ற ஒரு காலிஃபிளவர் இன்று நான்கு ரூபாயாகவும், ஒரு கிலோ 26 ரூபாய்க்கு விற்று வந்த கத்தரிக்காய் 12 ரூபாயாகச் சரிந்துவிட்டதாகவும் பிம்பாலே என்ற விவசாயி வேதனையோடு கூறுகிறார்.

ஆந்திராவுக்குப் போனால் தக்காளியைக் காசில்லாமலேயே அள்ளிவர முடியும் என சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறுகிறார்கள்.

விளைந்த உருளைக்கிழங்குகளைச் சந்தைக்கு எடுத்துச் செல்லவும் பணமின்றி, அக்கிழங்குளைச் சேமித்து வைக்கவும் வழியின்றித் தவித்து நிற்கும் உ.பி. மாநில விவசாயிகள், அவற்றைத் தெருவில் கொட்டி ஆர்பாட்டங்களை நடத்துகின்றனர்.

மாவட்ட மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை முடக்கிய மோடி அரசின் தடையுத்தரவைக் கண்டித்து கேரள மாநில முதல்வர் பினாரயி விஜயன் தலைமையில் அம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.
மாவட்ட மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை முடக்கிய மோடி அரசின் தடையுத்தரவைக் கண்டித்து கேரள மாநில முதல்வர் பினாரயி விஜயன் தலைமையில் அம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இந்தியாவெங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கக் கூடாதென உத்தரவிட்டது மைய அரசு. இந்த உத்தரவால் சுங்கச்சாவடியை எடுத்து நடத்தும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ந்ட்டத்தை ஈடுகட்ட முன்வந்திருக்கும் மோடி அரசு, விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டம் குறித்துப் பேச மறுக்கிறது. மாறாக, நாட்டிற்காக இந்தத் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென அவர்களுக்கு உபதேசிக்கிறது. கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தாங்கிக் கொள்ள மறுக்கும் நட்டத்தை, விவசாயிகள் ஏன் மௌனமாகச் சகித்துக் கொள்ள வேண்டும்?

* * *

க்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள், விளைந்த பயிர்களை விற்பதற்குச் சந்தைக்கு வருவார்கள் என்பதையெல்லாம் அறியாமல், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்து, வேளாண் கூட்டுறவு சங்கங்களை மோடி முடக்கிவிட்டார் என்றால், அவரைப் போன்ற முட்டாள்தனமான, மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள ஆட்சியாளர் வேறு யாரும் இருக்க முடியாது. இல்லை, இதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார் என்றால், அவரைவிட விவசாயிகளுக்கு எதிரான ஆட்சியாளர் வேறு ஒருவர் இருக்க முடியாது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் கருப்புப் பண பேர்வழிகளின் புகலிடமாக இருப்பதனால்தான், அவற்றுக்குத் தடை போட்டோம் என நியாயப்படுத்துகிறது, பா.ஜ.க. குற்றவாளியே நீதிபதியாகும் அயோக்கியத்தனம் இது. ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த ஓட்டுக்கட்சிகள் அதிகார பலத்துடன் இருக்கிறதோ, அக்கட்சிகளும் கிராமப்புற ஆதிக்க சக்திகளும்தான் வேளாண் கூட்டுறவு சங்கங்களைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் காங்கிரசு, பா.ஜ.க. கும்பலின் குடும்பச் சொத்தாக இருப்பதும், அம்மாநிலத்தில் நடந்துள்ள கூட்டுறவு சங்க ஊழல்கள் அனைத்திலும் பா.ஜ.க.விற்கும் பங்கிருப்பது ஊரறிந்த உண்மை. பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்ற கணக்காக, கூட்டுறவு சங்கங்களை முடக்கி விவசாயிகளைத் தண்டிக்கிறது, பா.ஜ.க.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும் முடக்கியிருப்பதன் பின்னேயுள்ள நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு அல்ல. அதன் பின்னே வேறொரு தீய நோக்கம் மறைந்திருக்கிறது. நாடெங்கும் உள்ள 13,943 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் 2,36,890 கோடி ரூபாய் பெறுமான வைப்பு நிதியும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 81,900 கோடி ரூபாய் பெறுமான வைப்பு நிதியும் இருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இத்துணை கோடி பணத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தோடுதான் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் வங்கிச் செயல்பாடுகளுக்குத் தடை விதித்திருக்கிறது, மைய அரசு. மேலும், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மட்டுமே கூட்டுறவு வங்கிகள் எனக் கருதப்படும் என்றொரு அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டுள்ள மைய அரசு, இது நவம்பர் 24 முதல் நடைமுறைக்கு வருவதாகக் காதும்காதும் வைத்தாற் போல அறிவித்திருக்கிறது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இடத்தைப் பிடிக்கப் போவது யார்? மகளிர் சுய உதவிக் குழுக்களும், குறு நிதி நிறுவனங்களும் கிராமப்புற மக்களுக்குக் கடன் கொடுத்துக் கைதூக்கிவிடும் போர்வையில் ஏற்கெனவே கிராமப்புறங்களில் நுழைந்துவிட்டன. கிராமப்புற மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கொடுக்கப்படும் கடன்கள் 99 சதவீதம் வசூலாகிவிடுவதாலும், அக்கடன்களுக்கான வட்டி, வங்கி வட்டியைவிட அதிகமாக இருப்பதாலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் குறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றன. கூட்டிக்கழித்துப் பாருங்கள், மோடி அரசின் நோக்கம் என்னவென்று புரிய வரும். பளிச்சென்று சொல்ல வேண்டுமென்றால், கிராமப்புற விவசாயிகளைக் கந்துவட்டிக் கும்பலைவிட மோசமான குறுநிதி நிறுவனங்களின் பிடிக்குள் முழுமையாகச் சிக்க வைப்பது மோடி அரசின் எதிர்காலத் திட்டம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை அங்கீகரிக்க மறுத்து மோடி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணைதான் அதன் தொடக்கம்.

– ரஹீம்
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________