Tuesday, June 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 519

பதினைந்து ஆண்டுகளில் 2560 போலி மோதல் கொலைகள் – வள்ளுவர் கோட்ட உரைகள் – படங்கள்

0

பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் கொலைகளை நிறுத்து !
– கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி, படங்கள்

பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து !” – 22/12/2016 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியக் கண்காட்சியில் முழங்கிய ஓவியங்கள் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தன்மையை அம்பலப்படுத்தின.

valluvarkottam_protest_prpc4ஆர்ப்பாட்டத்தில் திரு.த.வெள்ளையன் , தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை , தோழர் தியாகு, ஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம், பேராசிரியர் சிவக்குமார், தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தோழர் வெங்கடேசன், மாநில பொருளாளர், மக்கள் கலை இலக்கிய கழகம், வழக்கறிஞர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி, தோழர் A.S.குமார், மாநிலக் குழு உறுப்பினர், சி.பி.ஐ (மா.லெ) விடுதலை, தோழர் மா.சி.சுதேஷ் குமார், மாநில இணைச்செயலர், புதிய ஜனநாயகத்-தொழிலாளர் முன்னணி, திரு.இரா.சங்கரசுப்பு, மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் பார்வேந்தன் மாநிலசெயலாளர், வழக்கறிஞர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

***

தோழர் வாஞ்சிநாதன், ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

“சாதாரண  மக்களுக்கு தான் சட்டம் எல்லாம்! கார்ப்பரேட்டுகளுக்கு, ஆர்.எஸ்.எஸ்.- க்கு, மோடிக்கு எந்த சட்டமுமில்லை!”

“மிகுந்த நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.  இரண்டாவது எமர்ஜென்ஸி காலமிது!  தொழிலாளர்கள், விவசாயிகள் என இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மீது மோடி அரசு போர் தொடுத்து வருகிறது.

சமீபத்தில் மூன்று இடங்களில் போலி மோதல் படுகொலைகளை நிறைவேற்றியிருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் போபாலில் 8 முசுலீம்களை சுட்டுகொன்றிருக்கிறார்கள்.  ஒரிசா – ஆந்திரா எல்லை பகுதியில் மல்கான்கிரியில் பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் என 44 பேரையும், கேரளாவில் நிலாம்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 3 பேரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

மல்கான்கிரியில் மாவோயிஸ்டுகள் கூட்டம் ஒன்றை நடத்திய பொழுது, அவர்களுக்கு கொண்டு சென்ற சாப்பாட்டில் மயக்க மருந்தையும், விசத்தையும் வைத்து அனுப்பியிருக்கிறார்கள்.  அரை மயக்கத்தில் இருந்த பலரையும் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.  சரணடைந்த பலரையும் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள்.  மனித உரிமை அமைப்புகள் அங்கு சென்று பார்த்த பொழுது மோதல் நடந்ததற்கான எந்தவித சுவடும் இல்லை.  உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி சொன்ன எந்த வழிகாட்டல்களையும் போலீசும், அரசும் மதிப்பதேயில்லை.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பகுத்தறிவாளர்கள் கல்புர்கி, பன்சாரே, நரேந்திர தபோல்கர் மூவரையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுட்டுக்கொன்றனர்.  மூவரையும் சுட்டது ஒரே வகை துப்பாக்கி தான் என்பது விசாரணையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.  அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையுமில்லை.

தோழர்.வாஞ்சிநாதன்
தோழர்.வாஞ்சிநாதன்

மாவோயிஸ்டுகள், பழங்குடிகள் மீது நடவடிக்கைக்கு காரணம் என்ன?  500 மில்லியன் டன் பாக்சைட் என 28 வகை கனிம வளங்கள் காடுகளில் இருக்கின்றன.  இதை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க பழங்குடிகளும் மாவோயிஸ்டுகள் தடையாக இருக்கிறார்கள்.  எதிர்ப்பவர்களை ஒழித்துக்கட்ட முன்பு மன்மோகன் சிங்கும், இப்பொழுது மோடியும் முனைப்புடன் இருக்கிறார்கள். 2014 மிஷன் என திட்டமிட்டு, 2 லட்சம் துணை இராணுவ துருப்புகளை காடுகளில்  நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

இதற்கு தடையாக இருக்கும் எவரையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை.  சமீபத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் நந்தினி சுந்தர் என்ற பேராசிரியர் உண்மை அறியும் குழுவாக அந்த பகுதிக்கு சென்றதால்,  அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மருத்துவர் பினாயக் சென் மீது தேசதுரோக வழக்கு. ஆயுள் தண்டனை விதித்தார்கள். உலகம் முழுவதிலும் கண்டனங்கள் எழுந்த பிறகு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்.

சல்வா ஜூடும் என்ற சட்ட விரோதமாக ஒரு படையை உருவாக்கி, 200 பழங்குடி கிராமங்களை கொளுத்தினார்கள்.  பலரையும் கொன்றார்கள்.  உச்சநீதிமன்றம் அந்த படையை தடை செய்தது.  இப்பொழுது வேறு ஒரு பெயரில் ஒரு படையை உருவாக்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்டு என போலீசு எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? 16 பழங்குடி மக்களை மாவோயிஸ்டு என சுட்டுகொன்ற சமயத்தில் எழுத்தாளர் அருந்ததிராய் அந்த பகுதிக்கு சென்றிருந்த பொழுது அவருக்கு பதில் சொல்லும் பொழுது ”வெளியிலிருந்து கிடைக்ககூடிய  டெட்டாலும், மலேரியா மருந்தும் வைத்திருந்ததால் மாவோயிஸ்டு” என்றார் மாவட்ட எஸ்.பி.

Speakersஒருவர் மாவோயிஸ்டாக இருந்தாலே கைது செய்யமுடியாது. குற்றம் செய்தால் மட்டுமே கைது செய்யமுடியும். ஏதும் குற்றம் செய்யாமல் கைது செய்யப்பட்டவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என சமீபத்தில் கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.  இவைகள் எதையும் மதிக்காமல் எதிர்ப்பவர்களை சுடு என்கிறது மத்திய அரசு. இந்த நிலையில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது என நாம் நம்ப முடியுமா?

1993-2009 வரைக்குமான காலத்தில் 2560 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன.  அதில் 1280 கொலைகள் போலி மோதல் கொலைகள் என விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்.  85% வழக்குகள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை.  இதில் இஷ்ரத் சஹான் வழக்கும், மாவோயிஸ்டு மத்திய குழு உறுப்பினர் தோழர் ஆசாத் வழக்கும் அடங்கும்.  மணிப்பூரில் 1528 மோதல்கொலைகள் என படுகொலைகள் செய்திருக்கிறார்கள்.  இதுவரை ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை.

பிறகு என்ன சட்டம்? நீதிமன்றம்? நீதி? சாதாரண  மக்களுக்கு தான் சட்டம் எல்லாம்!  கார்ப்பரேட்டுகளுக்கு பார்ப்பனிய தாசர்களான ஆர்.எஸ்.எஸ். மோடி யாருக்கும் எந்த சட்டமுமில்லை.  இதைத் தான் நெருக்கடி நிலை என்கிறோம்.  இதை எதிர்த்து தான் நாட்டில் பல மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நமது போராட்டமும் அதில் ஒன்று தான். போராடும் மக்களோடு ஜனநாயக சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர் என அணிதிரண்டு போராடுவதின் மூலம் தான் பழங்குடி மக்களையும், மற்றவர்களையும், இயற்கை வளங்களையும் காக்கமுடியும்.

***

திரு. கோ. பாவேந்தன், வழக்கறிஞர்,
தமிழக மக்கள் முன்னணி.

”கொலைகாரர்கள் ஆட்சி செய்கிறார்கள். மக்களை காக்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கிறார்கள்”

தோழர். பாவேந்தன்
திரு. கோ. பாவேந்தன்

”கொலைகாரர்கள் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றனர். குஜராத்தில் 3000 முசுலீம்களை கொன்று குவித்த கொலைகார மோடி தான் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.  பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொலை தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த கொலைகாரர்கள் தான், மண்ணையையும், மலையையும், மக்களையும் காக்க போராடுபவர்களை பயங்கரவாதிகள் என சித்தரிக்கிறார்கள்.

நீதி கெட்ட சமயத்தில் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.  இது ஜனநாயக நாடா என மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது  ஜனநாயக நாடும் இல்லை. சட்டத்தின் ஆட்சியும் இல்லை. மக்களின் உரிமைகளுக்காக போராடும் பழங்குடிகளை, மாவோயிஸ்டுகளை, இஸ்லாமிய இளைஞர்களை கொன்று குவித்துகொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றிணைந்து மக்களை ஒன்று திரட்டி போராடினால் தான் இந்த பயங்கரவாதிகளை முறியடிக்கமுடியும்”

***

திரு. த. வெள்ளையன், தலைவர்,
வணிகர் சங்கங்களின் பேரவைகள், தமிழ்நாடு.

மக்களுக்கு எதிரான மோடி அரசை நாம் முறியடித்தே தீரவேண்டும்.
அதற்காக எந்தவித தியாகத்தையும்  செய்ய நாம் தயாராக இருக்கவேண்டும்

Vellaiyan
வெள்ளையன்

“கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்க தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகின்றன.  இந்திய சந்தை மிகப்பெரிய சந்தை.  சில்லறை வணிகத்தை ஒழித்து, பன்னாட்டு நிறுவனங்களை வாழவைக்க தான் மோடி 500, 1000 செல்லாது ! கார்டை பயன்படுத்துங்கள் ! என்கிறார். வணிகர்கள் இந்த சதியை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்.

‘தன்னை அழிக்க நினைப்பவர்களை நாம் அழிக்க தயங்க கூடாது” இதை சொன்னது மாவோயிஸ்டா? இல்லை. விவேகானந்தர். மகாபாராதத்தில் திரெளபதி அனைவரும் முன்னிலும் துகிலுரியப்படும் பொழுது, என்ன செய்ய? என்ன செய்ய? என கையை பிசைந்து புலம்பி கொண்டிருந்தார்கள்.  அதே போல தான் இங்குள்ள அரசியல் தலைவர்களும் தங்களது கையாலாகத்தனத்தால் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். மோடியின் திட்டங்களை முறியடித்தே தீரவேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருக்கவேண்டும்.

***

பேராசிரியர் சிவக்குமார், முன்னாள் முதல்வர்,
குடியாத்தம் அரசு கல்லூரி.

ஒடுக்குமுறை சட்டங்களாலும், போலிமோதல் படுகொலைகள் மூலம் எதிர்ப்பை அடக்க முயற்சிக்கிறார்கள். நாம் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.”

Pr_sivakumar
பேராசிரியர் சிவக்குமார்

“ தோழர்கள் பாலன், ரவீந்திரன் என தொடர்ச்சியாக போலிமோதல் படுகொலைகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தோழர்களின் உடலை தர மறுக்கும் அரசாங்கத்திடமிருந்து உடலை பெறவும், உண்மை அறியும் குழுவிலும் நான் மனித உரிமை அமைப்புகளுடன் சென்றுள்ளேன்.

கனிம வளங்களுக்காகவும், பல்வேறு திட்டங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகிற செய்தியை இந்திய அரசின் வலைத்தளத்திலேயே நாம் பார்க்கமுடியும். வேதாந்தா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித்தரப்படுகின்றன.

நாடு முழுவதும் இதற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காடுகளில் போராடும் பழங்குடி மக்களை, மாவோயிஸ்டுகளை ஒருங்கிணைக்கிறார்கள். நாடு முழுவதும் பல ஒடுக்குமுறை சட்டங்கள் மூலம், போலிமோதல் படுகொலைகள் மூலம் எதிர்ப்பை அடக்க முயற்சிக்கிறார்கள். நாம் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். மாணவர் சக்தியையும், இளைஞர் சக்தியையும் நாம் திரட்டுவோம். கொல்லப்பட்ட தோழர்கள் குப்புராஜ், அஜிதா தியாகத்தை மனதில் கொண்டு நாம் ஒன்றிணைந்து போராடுவோம் !

***

தோழர் சுதேஷ்குமார், மாநில இணைச் செயலாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

“சட்டத்தின் ஆட்சியா இங்கு நடக்கிறது? போராடி பெற்ற உரிமைகளை இழந்து நிற்கும் தொழிலாளர்கள் இதை ஏற்கவே மாட்டார்கள்”

valluvarkottam_protest_prpc“பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை தடுக்கும் பழங்குடி மக்களையும், போராளிகளையும்  போலி மோதல் படுகொலைகளை மூலம் கொன்று குவிக்கிறார்கள். குழந்தைகள் என்று கூட பார்ப்பதில்லை.  அரச பயங்கரவாதம் இது !

சட்டத்தின் ஆட்சி அதை கேள்விக்குள்ளாவதை பொறுக்கமுடியாது என்கிறார்கள்.  மாருதி தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கியது தவறு என்றது உச்சநீதிமன்றம்.  கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக 10 ஆண்டுகாலம் போராடி, இப்பொழுது இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் வாடுகிறார்கள்.  போராடி பெற்ற தொழிலாளர் நல சட்ட உரிமைகளை எல்லாம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தகுந்தமாதிரி மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இங்கு சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது?

நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மார்க்சிய லெனினிய கொள்கைகளை மக்களுக்கு பயிற்றுவிக்கவேண்டும். போராடுவதை தவிர வேறு வழியில்ல

***

தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

“நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல. மூலதனத்தின் ஆட்சி”

ComGanesan
தோழர் கணேசன்

“பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு விசுவாசமான மத்திய, மாநில அரசுகளை, காடுகளில் பழங்குடி மக்களை காலி செய்து கொடு ! என விரட்டுகிறார்கள்.  காங்கிரசை விட வேகமாக நிறைவேற்ற துடிக்கிறது மோடி அரசு !  கார்ப்பரேட்டுகள் அரச படைகளை மட்டும் நம்புவதில்லை.  தங்களுக்கென்று கூலிப்படையை வைத்திருக்கிறார்கள். போராடும் பழங்குடி மக்களில் உள்ள முன்னணியாளர்களை கொலை செய்கிறார்கள். அரசு போராடும் பழங்குடி மக்களை, மாவோயிஸ்டுகளை கொல்கிறார்கள். நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல ! மூலதனத்தின் ஆட்சி. ஒடுக்கப்படும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றுதிரட்டி போராடி முறியடிக்கவேண்டும்.

– உரைகள் தொடரும்

***

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
கனிமவள கொள்ளைக்காக
பார்ப்பனிய மேலாண்மைக்காய்
படுகொலைகள் செய்கின்ற
மோடி அரசை கண்டிக்கின்றோம்
படுகொலைக்கு துணைபோகும்
கேரள அரசை கண்டிக்கின்றோம் !

Muzakkamபடுகொலை ! படுகொலை !
மனித உரிமைப் படுகொலை !
மல்கான்கிரியில், நீலாம்பூரில்
போபாலில் படுகொலை !
அப்பாவிகள் படுகொலை !
கார்ப்பரேட்  கொள்ளைக்காக
அப்பாவிகள் படுகொலை !

சுடலாமா? சுடலாமா?
மாவோயிஸ்ட் என்றால் சுடலாமா?
சிமி என்றால் சுடலாமா?
யாரையும் சுடலாம் என்றால்
அரசியல் சட்டம் எதற்கு?
நீதிமன்றம் எதற்கு?

மோடியின் ஆட்சியிலே
பா.ஜ.கா ஆட்சியிலே
சட்டத்தின் ஆட்சி எங்கே ?
ஜனநாயகத்தின் வாசம் எங்கே?
துப்பாக்கிதான் ஆளுமென்றால்,
போலிசும் – கோர்ட்டும்  தான்
எதற்கு ? எதற்கு ?

இது சட்டத்தின் ஆட்சி இல்லை
இது கார்ப்பரேட் கைக்கூலிகளின்
பார்ப்பனிய வர்னாசிரமத்தை நிலைநாட்டும்  ஆட்சி !

கொல்லாதே கொல்லாதே !
பன்னாட்டு கம்பெனிகளின்
கனிமவள கொள்ளைக்காக
பழங்குடி மக்களையும்
கம்யூனிச போராளிகளையும்
கொல்லாதே கொல்லாதே !

valluvarkottam_protest_prpc2படுகொலைகள் படுகொலைகள்
மல்கான்கிரியில், மலப்புரத்தில்
போபாலில் நடந்தவை எல்லாமே
திட்டமிட்ட படுகொலைகள் !

பயங்கரவாதம், பயங்கரவாதம்
கார்ப்பரேட் நலனுக்காக
இது அரசே நடத்தும் பயங்கரவாதம்
அரச பயங்கரவாதம் !

கொள்ளை போகுது! கொள்ளை போகுது!
நாட்டின் வளங்கள் கொள்ளை போகுது!
ஆறு, மலை, காடுகள்
கொள்ளை போகுது! கொள்ளை போகுது!

விக்கிறான் விக்கிறான் !
லட்சம் ஆண்டாய் பூமித்தாயின்
கருவில் வளர்ந்த இயற்கை கொடையை
நாசகார முதலைகளாம்
பன்னாட்டு கம்பெனிக்கு
கூறு போட்டு விக்கிறான் !

மண்ணை காக்க, மலையை காக்க,
போராடும் மக்களை
பயங்கரவாதி என்கிறான் !

உண்மையை மூடிமறைத்து
என்கவுண்டரில் கொல்லுறான்!

கார்ப்பரேட் பயங்கரவாதிகள்
மிட்டலுக்கும் ஜிண்டாலுக்கும்
அம்பானிக்கும் வேதாந்தாவிற்கும்
சிவப்பு கம்பள வரவேற்பு!
எம் மக்களுக்காக போராடிய
போராளிகளுக்கு என்கவுண்டர்!

valluvarkottam_protest_prpc3பன்னாட்டு கம்பெனிகளின்
கனிமவள கொள்ளையை
எதிர்த்து நின்று போராடினால்
பயங்கராவதி பட்டமா ?

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
கருவில் உள்ள முஸ்லீம் குழந்தையை
பச்சை சிசுவை கொன்றானே
மோடியும்-ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள்

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
நரேந்திர தபோல்கர்
கல்புர்கி – பன்சாரே
பகுத்தறிவுச் சான்றோர்களை
கொன்றானே கொன்றானே
காவிக் கும்பலும் – ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள்

யார் பயங்கரவாதி? யார் பயங்கரவாதி?
முஸ்லீம் முதியவர் அக்லக்-கை
மாட்டுக் கறி வைத்திருந்தார்  என்று
குற்றம் சாட்டி கொண்றானே
வானரக் கூட்டமும்-ஆர்.எஸ்.எஸ்-சும்
பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள் !

கைக்கூலிகள் கைக்கூலிகள் !
B.J.P யும்  RSS உம்
பன்னாட்டு கம்பெனிகளின்
கைக்கூலிகள் கைக்கூலிகள் !

போராளிகள் போராளிகள் !
அஜிதாவும், தேவராஜீம்

valluvarkottam_protest_prpc5மாவோயிஸ்டும் பழங்குடி மக்களும் !
இம் மண்ணைக் காக்க
போராடிய
போராளிகள் போராளிகள் !

போரை நிறுத்து போரை நிறுத்து !
உள்நாட்டு மக்கள் மீது

இசுலாமிய மக்கள் மீது
நடத்துகின்ற போரை நிறுத்து !

ஒடுக்காதே ஒடுக்காதே
கார்ப்பரேட் கைக்கூலி அரசின்
உண்மை முகத்தை அம்பலப்படுத்தும்
மனித உரிமைப் போராளிகளை
ஒடுக்காதே ஒடுக்காதே !

கைகோர்ப்போம் கைகோர்ப்போம் !
கனிமவள கொள்ளையை
எதிர்த்து நின்று போரிடும்
தேசபக்த போராட்டத்தில்
கைகோர்ப்போம் கைகோர்ப்போம் !

***

ஆர்ப்பாட்டத்தில்  மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்  சார்பில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஓவியம் : முகிலன்

ஒருங்கிணைப்பு:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC),
சென்னை.
தொடர்புக்கு : 90946 66320

மக்கள் கலை இலக்கியக் கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
பெண்கள் விடுதலை முன்னணி.

பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?

146
தோழர் தியாகு

13-ம் ஆண்டில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ! மதுரை கருத்தரங்கம்

பொது சிவில் சட்டம்- கருப்புப் பணஒழிப்பு: இசுலாமியர்கள், சொந்த நாட்டு
மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல் !

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளையின் 13-ம் ஆண்டு தொடக்க விழா கருத்தரங்கம் 18-12-2016 அன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணி ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

தோழர் வாஞ்சிநாதன் தலைமை உரையில் “பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மோடி சட்ட ரீதியாகவே அரசியல் சட்டத்தை மீறியும், குற்றங்களையும் இழைத்துள்ளார். இந்திய அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. ஒரு அரசாணை மூலம் மோடி அதை மீறியுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை பாராளுமன்ற சட்டம் மூலமே சாத்தியம் என்றே ரிசர்வ் வங்கி சட்டம் சொல்கிறது. இப்போது மோடி பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவில்லை.

தோழர். வாஞ்சிநாதன்
தோழர். வாஞ்சிநாதன்

ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலை மற்றும் தொழில் செய்யும் உரிமை அடிப்படை உரிமை {19(1)(g)} வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவையில் மட்டும் 50,000 நகைத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சென்னையில் கட்டுமானத் தொழிலில் 30,000 பேர் வேலை இழந்துள்ளனர். இன்னும் திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் லட்சக்கணக்கானோர் வேலை பறிபோய் வாழ முடியாமல் தவிக்கின்றனர். சிறு தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதேபோல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம் செல்லும் அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. மோடியின் அறிவிப்பால் 150-க்கும் மேலானோர் இறந்துள்ளனர். இது சரத்து21- வாழ்வுரிமையை மீறிய செயல்.

மேலும் நமது நேர்மையான உழைப்பில் கிடைத்த பணம் வங்கியில் முடங்கியுள்ளது. இது அரசியல் சட்டம் சரத்து 300-அ-ன் கீழ் நமது சொத்து. இச்சொத்தை மோடி எப்படி முடக்க முடியும்? நாம் வங்கியின் வாடிக்கையாளர்கள், நமக்கும் வங்கிக்குமான ஒப்பந்தமும் மீறப்பட்டுள்ளது. பணம் கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி நம்மிடம் அளித்துள்ள உறுதிமொழியும் ஒருதலைப்பட்சமாக மீறப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் நாம் நட்டஈடு கோர முடியும். தருவார்களா? யார் பொறுப்பு?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

”கருப்புப் பண ஒழிப்பு : சொந்த நாட்டு மக்கள் மீதான மோடியின் துல்லியத் தாக்குதல்“ பற்றி மதுரைக் காமராசர் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் பவணந்தி வேம்புலு சிறப்புரையாற்றினார்.

“ரூ.500,1000 செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்துவிடுவேன் என்று மோடி சொல்கிறார். கருப்புப் பணம் என்றால் என்ன? மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் பணம் சம்பாதிப்பவர்கள் அதற்கு வரி கட்ட வேண்டும். வணிகர்கள் விற்கும் பொருளுக்கு வரி கட்ட வேண்டும். இப்படி பல்வேறு வகைகளிலே அரசுக்கு செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தாமல் ஏய்ப்பதன் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இன்னும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் மூலம் கருப்புப் பணம் உருவாகிறது. இந்தப் பணம் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கிறது. விலைவாசி ஏறுகிறது. இன்னும் பல சீர்கேடுகளை உருவாக்குகிறது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கருப்புப் பணம் 80 லட்சம் கோடி வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது.

PRPC Madurai (3)
பேராசிரியர். பவணந்தி வேம்புலு

கொஞ்சம் காலம் முன்பாக நமது கிராமங்களிலே பண்டமாற்று முறை இருந்தது. ஒருவரிடம் இருக்கும் உற்பத்திப் பொருளை வேறு ஒருவரிடம் கொடுத்து அவரிடம் உள்ள பொருளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்வார்கள். இங்கே பணப் பரிவர்த்தனை இல்லை. பொருளைப் பதுக்கி வைத்தால் அது எல்லோருக்கும் தெரிந்துவிடும். எனவே அது கடினமானது. ஆனால் பணப் பரிவர்த்தனை வந்த பின்பு கரன்சியைப் பதுக்கிவைப்பது சுலபமாகிவிட்டது. பணப் பரிவர்த்தனையின் காரணமாகத்தான் கருப்புப் பணம் உருவானது. பண்டமாற்று முறை ஒழிந்து போய் ரூபாய் நோட்டு வந்த பின்பு அதுவே பொருளாதாரத்தின் அடிபடையாக மாறிவிட்டது.

மக்கள் அனைவரிடமும் பணத்தை தாராளமாகப் புழங்கவிட்டு திடீரென்று ஒரு சில மணி நேரத்தில் செல்லாது என்று அறிவித்தால் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்? கிராமப்புறங்களில் படிப்பறிவு இல்லாத மக்கள் எப்படி இந்த மாற்றத்தை எதிர்கொள்வார்கள்? அவர்களது சிறுவாட்டுச் சேமிப்பு கருப்புப் பணமாகுமா? செல்லாத பணத்தை வைத்துக்கொண்டு அவர்கள் அல்லல் படுவதற்கு யார் காரணம்? இந்தியாவில் 40% கிராமங்களில் வங்கிகள் இல்லை. இருந்தாலும் படிக்காதவர்களுக்குப் பயன்படுத்தத் தெரியாது. இவர்களை மின்னணு பரிவர்த்தனைக்கு மாறச் சொன்னால் எவ்வாறு முடியும்? எளிய மக்களிடம் உள்ள சேமிப்பைக் குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோடி ஹிட்லரைப் போல செயல்படுகிறார். ஹிட்லர் ஜனநாயகப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். மோடியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் பிரதமர் ஆகியுள்ளர். ஹிட்லர் உருவாகுவதற்கு வெய்மர் குடியரசு அடிப்படையாக இருந்ததைப் போல மோடியின் ஆட்சிக்கு மன்மோகனின் ஆட்சி அடிப்படையாக இருந்தது. மக்கள் நல அரசு என்ற அடிப்படையே
தகர்க்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட்டுகளுக்கான அரசாகிவிட்டது.

மோடி இதைத் தன்னுடைய மிகப் பெரிய சாதனையாகப் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் இது மோடி தன் சொந்த நாட்டு மக்கள் மீது நடத்திய துல்லியமான அரசியல், பொருளாதாரத் தாக்குதல். இதை நாம் எதிர்க்க வேண்டும். இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தை தோற்கடித்ததைப் போல இந்தக் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தையும் தோற்கடிக்க வேண்டும் “ என்று பேராசிரியர் பவணந்தி வேம்புலு பேசினார்.

“பொது சிவில் சட்டம் : அனைத்து இந்துக்களுக்குமே பொதுவான சட்டம் சாத்தியமா ?” என்பது பற்றி தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் தியாகு சிறப்புரையற்றினார்.

“இரண்டு தலைப்புகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது தான். இட்லருடைய பொருளாதாரக் கொள்கைகளுக்கும் நம் நாட்டுக்கும் தொடர்பு உள்ளது. மோடி இட்லராக முயல்கிறார். நாம் அனுமதிக்கவில்லை. ஜெர்மனியின் துயரங்களுக்குக் காரணம் யூதர்கள் என்றார் இட்லர். ஐன்ஸ்டீன் ஜெர்மனியை விட்டு ஓடிப்போனார். இந்தியாவின் துயரம் முசுலீம்கள் என்கிறார் மோடி. இந்துக்கள் மனத்தில் இந்த எண்ணத்தைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார் மோடி.

அம்பேத்கர் அவர்கள் ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்  என்று விரும்பினார். எல்லா சட்டமும் இங்கே பொதுவானதாகத் தான் இருக்கிறது. ஆனால் தனி நபர் சட்டம் பற்றித் தான் இங்கே விவாதம். தனி நபர் சட்டம் மதத்துக்கு மதம் மட்டுமல்ல சாதிக்கு சாதி, வட்டாரத்துக்கு வட்டாரம் மாறுபடுகிறது. அரசியல் சட்டத்தின் உட்பிரிவாக வழிகாட்டு நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. பல சட்டங்களிலே வழிகாட்டு நெறி முறைகள் வகுக்கப்படாமலும் எப்படி வேண்டுமானாலும் விளக்கம் சொல்லுகின்ற வகையிலும் உள்ளன. அரசியல் சட்டம் பிரிவு 44 அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 45 –வது பிரிவு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என்று கால நிர்ணயம் செய்கிறது. ஆனால் ஆட்சி மாறி 66 ஆண்டுகளுக்குப் பின்பும் இதுவரை அமல் படுத்தப்படவில்லை. சர்க்கரைக் கிண்ணம் என்கிற கியூபா  நாட்டில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. மருத்துவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கே தனியுடமை இயல்பாகவே உயர்வு தாழ்வை  உருவாக்கிவிடுகிறது.

தோழர் தியாகு
தோழர் தியாகு

இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நடத்திய பல்வேறு கலவரங்களிலே முஸ்லீம்கள் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.காரன் ஒருவன்கூட சிறைக்குச் செல்லவில்லை. கிரிமினல் சட்டங்கள் எல்லோருக்கும் பொது. ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. அம்பேத்கர் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் (HINDU CODE BILL) கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சியை காந்தியார், படேல், திலகர், பாபு ராஜேந்திரப் பிரசாத் போன்றவர்கள் தடுத்து நிறுத்திவிட்டார்கள். முதலில் அதற்கு ஒப்புக்கொண்ட நேரு பின்னர் அமைதியாக இருந்துவிட்டார். அது போலத் தான் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டத்தையும் தடுத்துவிட்டார்கள்.

அம்பேத்கர் அரசியல் சட்டத்தை விரும்பித் தலைமையேற்று எழுதவில்லை. எழுதவைக்கப்பட்டதாகச் சொன்னார். குறைந்தபட்சம் இடஒதுக்கீடு பாதுகாப்பு அம்சங்களைக் கருதிதான் எழுதினேன் என்று தெரிவித்தார். எனவே இந்துத்துவ தலைவர்கள் யாரை எவ்வாறு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வாறு பயன்படுத்திக் கொண்டார்கள். காந்தியாரைக் கொலை செய்த கோட்சே ஏன் கொலை செய்தேன் என்று சொல்லும்போது காந்தி மக்களிடம் இருந்த சிறை அச்சத்தைப் போக்கிவிட்டார். மக்கள் கட்டுப்பாடுகளை மீறப் பழகிவிட்டனர். இது ஆபத்தான விளைவுகளை இந்து சமுதாயத்தில் உருவாக்கிவிடும். இது தேச துரோகம் என்று சொன்னான்.

தனி நபர் சட்டத்தில் மாற்றம் வேண்டும். சென்னை மாகாண சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை முத்து லட்சுமி ரெட்டி அம்மையார் முன்மொழிந்த போது அதை காங்கிரஸ் கட்சி சத்திய மூர்த்தி எதிர்த்தார். மத உரிமைகளில் அரசியல் தலையிட முடியாது என்றார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் இருந்துவிட்டார்கள். இனிமேல் வேண்டுமானால் உங்கள் குலப் பெண்களை தேவ தாசிகளாக இருக்கச் சொல்லுங்கள் என்று கடுமையாகச் சாடினார் ரெட்டி. சட்டம் நிறைவேறியது.

பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும் என்றான் வள்ளுவன். ஆனால் இங்கே சாதிக்கு ஒரு நீதி, நடைமுறை உள்ளது. உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொள்கிறது. பெண்ணுரிமை பிரச்சினையிலும் அவ்வாறுதான். எல்லா மதங்களும் பெண்களை ஒடுக்குவதை நியாயப்படுத்துகிறது. இசுலாமியர்களிடமும் அது உள்ளது. பெண்களுக்கான சம உரிமையும் சேர்ந்ததே சமூக நியதி. ஆணாதிக்கத்திற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளது. ஆணவக் கொலைகளின் நோக்கம் என்ன? அக மண முறையைப் பாதுகாப்பதுதான். வரதட்சணைப் பழக்கம் எல்லா சாதிகளிடமும் கிடையாது. ஆனால் உயர் சாதிகளிடம் உள்ளது. இதைப் பார்த்து மற்ற சாதிகளும் பழகிக் கொள்கிறார்கள். இசுலாமிய சமூகத்தில் வரதட்சணை தடை செயப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கேயும் அது நடைமுறையில் உள்ளது. சிசுக்கொலை மேல் சாதிகளில் இல்லை. ஆனால் ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் இருக்கிறது. இடை நிலைச் சாதிகளிடம் இருக்கிறது. அகமண முறையைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். பல பெண் குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் கொடுமை நிகழ்கிறது. இந்தப் பழக்க வழக்கங்கள் எல்லா சட்டங்களையும் மீறி நடக்கிறது.

பொது சிவில் சட்டம் என்று மோடி சொல்வது அப்பட்டமான நாடகம். அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பாக பொது இந்துச் சட்டம் கொண்டுவர வேண்டும். சாதிக்கு ஒரு மரபு இருப்பதை, பெண்ணுக்கு சொத்துரிமை மறுப்பதை முதலில் ஒழிக்க வேண்டும். முசுலீம்கள் சிறுபான்மை என்றால் இங்கே சிறுபான்மை என்று யாரும் இல்லை. ஆதிக்கச் சாதிகளில் பார்ப்பான் ஆகச் சிறுபான்மை. அவன் தான் சமூகவிதிகளை வகுத்துள்ளான். கருவறைக்குள் ஒரு சாதி. பிரகாரத்தில் ஒரு சாதி. வெளியே ஒரு சாதி என்று இந்துக்களையே இனம் பிரித்து வைத்தவன் யார்? இந்து என்று ஒரு மதமே இல்லை என்று வரலாறு மெய்ப்பிக்கிறது. அனைவரும் இந்து என்றால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே சட்டம் இருக்க வேண்டியது தானே முதல் தேவை? ஆனால் இசுலாமியர்களை ஒடுக்கும் நோக்கத்துடன் இசுலாமியர்களுக்கான தனி நபர் சட்டங்களைக் காட்டி பொது சிவில் சட்டம் என்று சங்கப் பரிவாரங்கள் கூப்பாடு போடுகின்றன.

இந்து சனாதனவாதிகளைப் போலவே முஸ்லீம் அடிப்படைவாதிகளும் உள்ளனர். பிற மதங்களிலும் இந்த பிற்போக்குத்தனங்கள் உள்ளன. அது கட்டாயம் களையப் பட வேண்டும். இசுலாமிய சமூகத்தில் பெண் கல்வி மறுக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடுபவர்கள் மிரட்டப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். ஒடுக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் குர்தி இனப் பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடி ஐ.எஸ்.தீவிரவாதிகளை விரட்டினர். இசுலாத்தின் சாரம் சமத்துவம், அதை அவர்கள் கொண்டுவரப் போராட வேண்டும். இசுலாத்தில் சாதி கிடையாது தீண்டாமை கிடையாது. எனவேதான் இந்துத்துவம் அதைக் குறி வைக்கிறது.

மோடி அரசு ஒடுக்கப்பட்ட இந்துக்களுக்கு எதிரானது. ஆகச் சிறுபான்மையினரான பார்ப்பன சனாதனங்களை மரபுகள், பழக்க வழக்கங்கள், வழிகாட்டு நெறிமுறைகளாக வைத்துக்கொண்டு அதைப் பெரும்பான்மை இந்துக்கள் என்ற பெயரில் அனைவர் மீதும் திணிக்க எத்தனிக்கிறது. மோடி அரசு தலித் மக்கள், பழங்குடிகளுக்கு எதிரானது. இசுலாமியர்களுக்கும் இன்னும் பல மதச் சிறுபான்மையினருக்கும் எதிரானது. இந்து ராஜ்யம் என்ற ஆர்.எஸ்.எஸ்.ன் கனவை நனவாக்க சனநாயகத்தின் பெயரில் மோடி பாசிசத்தைக் கொண்டு வரப் பார்க்கிறார். பொருளியல் நெருக்கடிகளை உழைக்கும் மக்கள் தலையில் சுமத்தப் பார்க்கிறார். இதை நாம் அனுமதிக்கக்கூடாது ஒன்றிணைந்து போராட வேண்டும்.

கிளைப் பொருளாளர் தோழர் சங்கையா நன்றி சொல்ல கருத்தரங்கம் நிறைவுற்றது. கீழைக்காற்று நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. வாசிப்புத் தளம் கொண்டவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.

பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், அரசுப் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இசுலாமியர்கள், வணிகர்கள், தோழமை அமைப்பினர் 400 பேர்வரை கலந்துகொண்டு இறுதிவரை இருந்து சிறப்பித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
மதுரை

தருமபுரி : வெளிநாட்டில் வேலை என்று ஏமாற்றும் திருடர்களைப் பாதுகாக்கும் போலீசு !

0

வெளிநாடு அனுப்புவதாகக்கூறி  தருமபுரி  மக்களை  ஏமாற்றி  பலகோடி  கொள்ளையடித்த  குறும்பட்டி  திருட்டுக்  கும்பல்  முத்துமணி – நாகப்பன்   தம்பதியின்   சொத்துக்களை  பறிமுதல்   செய்வோம்!   என்கிற  முழக்கத்தின்  கீழ்  மக்கள்  அதிகாரம்  சார்பாக   தருமபுரியில்  22.12.2016  அன்று நடந்த  சாலைமறியல்!

குடும்பத்தை நகர்த்த முடியாத ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த சிலர், நிலத்தை விற்றும் கடன் வாங்கியும் வெளிநாடு சென்றாவது சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் பரவலாக இருக்கிறது. இதை பயன்படுத்தி மோசடி மூலமாக பணத்தை சுருட்ட திட்டமிட்டனர், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் குறும்பட்டியை சேர்ந்த முத்துமணி – நாகப்பன்  தம்பதியினர்.  இவர்கள் 60- க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 2 கோடிக்கும் மேல் பணத்தை ஏமாற்றி சுருட்டியுள்ளனர். உள்ளுர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த பலரும் ஏமாந்து பணத்தை கொடுத்துள்ளனர்.

தருமபுரியில்  நல்லம்பள்ளி, பி. அக்ராகாரம் பகுதியைச் சுற்றியுள்ள  கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் சிறுக சிறுக  சேர்த்த  பணத்தையும், வட்டிக்கு  கடன்  வாங்கிய பணத்தையும்  வெளிநாட்டுக்கு  அனுப்பும்  ஏஜென்டுகள் என்ற கொள்ளை கூட்டத்திடம் பறிக்கொடுத்துவிட்டு பறிதவித்து நிற்கின்றனர்.  இந்த ஏஜென்டுகளில் முக்கியமான புள்ளி,  நல்லம்பள்ளி வட்டம்  குறும்பட்டி  கிராமத்தில்   உள்ள  நாகப்பன், அவனுடைய மனைவி  முத்துமணி மற்றும் பத்மகுமார்  ஆகியோர்.

DPI Road (3)இவர்கள் கூட்டு சேர்ந்து  ஒரு நபருக்கு  2 லட்சம் முதல்  3 லட்சம் வரை பெற்று கடந்த மே மாதம் 60 பேரை  டெல்லிக்கு அழைத்துச்சென்றானர். அங்கு சென்றவுடன் அஜய் குமார் என்வரிடம்  தொகையை  ஒப்படைத்து விட்டேன், அவர் இங்கு வருவதாக கூறிவிட்டு இப்போது  வரமுடியாது  எனக்கூறி  விட்டார், நான் ஒன்றும் செய்யமுடியாது என்று கையை விரித்து விட்டனர்.  அந்த 60 பேரும் செய்வதறியாமல்  நிலை குலைந்து போய்  வீடு திரும்பினர். இந்த தகவலை வீட்டிலும் சொல்ல முடியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும் சிவன் என்பவர்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஏற்கனவே பார்த்து வந்த வேலையையும்  இழந்து  பலர் நடுத்தெருவில் நிற்கின்றனர். பிறகு டெல்லியில் இருந்து சென்னை வந்து, போலீசு கமிஷனரை சந்தித்து மனுக் கொடுத்தனர். பிறகு தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையம்,பொருளாதார  குற்றப்பிரிவு காவல் நிலையம், கலெக்டர், எஸ்.பி,   மீண்டும் அதியமான் கோட்டை போலீசு நிலையம்  என ஒவ்வொரு அதிகாரியையும் மூன்று , நான்கு சுற்று பார்த்தாகி விட்டது. ஆனால்  நாகப்பன்  முத்துமணியிடமிருந்து பணம் வந்த  பாடில்லை. இன்னும் எத்தனை முறை சுற்றினாலும் நீதிகிடைக்காது, பணமும்  கிடைக்காது என்று அனுபவத்தில் உணர்ந்த மக்கள், வீதியில் இறங்கினால்தான்  நீதியை  நிலை நாட்ட முடியும் என்று மக்கள் அதிகாரத்தை  நாடினர்.

பிறகு மக்கள் அதிகாரம் சார்பாக இத்திருட்டுக் கும்பலை அம்பலப்படுத்தி ஆயிரகணக்கான பிரசுரம் போட்டு, நூற்றுக்கணக்கான சுவரொட்டி  ஒட்டியும்  22.12.2016  அன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது, தனிநபரை அம்பலப்படுத்தி பேசுவதால் அனுமதி கொடுக்க முடியாது என்று மறுத்து இக்கொள்ளை கூட்டத்திற்கு துணை போனது போலீசு. பாதிக்கப்பட்ட மக்கள் தடையை மீறி போராட வரமாட்டார்கள் அதனால் தாசில்தாரிடம் மனு கொடுத்துவிட்டு செல்வது என முடிவு செய்தோம். அப்போது பேருந்து நிலையத்தில் நின்று இருந்து போலீசார் இரண்டு தோழர்களை இழுத்து சென்று கைது செய்தனர்.  இதனை  பார்த்த அப்பகுதியில் பாதிக்கபட்ட மக்களுடன் சேர்ந்து தோழர்களை விடுதலை செய்ய கோரியும், பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பணத்தை திரும்பப் பெற்றுதர கோரியும் மக்களோடு கைகோர்த்து  திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் நடைபெற்ற  இந்த  மறியலுக்கு  மக்கள்  அதிகாரம்   தருமபுரி  மண்டல  ஒருங்கிணைப்பாளர்  தோழர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். அப்போது பணமோசடி செய்த இத்திருட்டுக்கும்பலை அம்பலப்படுத்தி  முழக்கமிட்டதும்  நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். உடன் மக்களை அச்சுறுத்தும் வேலையில் இறங்கியது போலீசு. பிறகு  அவர்களை  விடுதலை செய்ய வேண்டும் என்று  முழக்கமிட்டதும் மக்களை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள், அம்மக்களைப் பார்த்து “நீ  ஏன் அவன்கிட்ட பணத்த கொடுத்து  ஏமாந்து போன, நீ இங்க வந்து உட்கார்ந்து விட்டால் உனக்கு பணம் வந்துவிடும் என்று நினைக்கிறியா?” என்று மிரட்டியவாறு  இன்ஸ்பெக்டர் கேட்டபோது “நாங்கள்  ஒரு வருசமாக  மனுக்கொடுத்து விட்டோம்  ஒன்னும் நடக்கல, எங்க பணத்தை வாங்கி கொடுக்க துப்பில்லை” என்று கிராமத்து  மக்கள் கோபத்துடன்  பதிலடி கொடுத்தனர்.

DPI Road (2)ரோட்டில்  உட்கார்ந்தால்  எந்த  அதிகாரியும்  வரமாட்டார்கள்  மண்டபத்துக்கு  வாங்க  அங்கதான்  அதிகாரி வருவார் என்று  போலிசார் நைச்சியமாக பேசிபார்த்தனர். அதற்கு  நாங்க ஒரு  வருடமாக அவர்களை  தேடிதான் போனோம்  எந்த அதிகாரியும் எங்களை கண்டுக்கவே இல்லை, நீங்க  சொல்லறது  பொய், உங்கள  நம்பி எப்படி  வரமுடியும்,  நீ  பேப்பர்ல எழுதி கொடுக்கிறியா? இப்ப அவங்க ரோட்டுக்கு வந்து எங்களுக்கு  பதில் சொல்லட்டும் என்று மக்கள் விடாப்பிடியாக போராட்டத்தை தொடர்ந்தனர். பிறகு அதிவிரைவு படையை கொண்டு அனைவரையும்  வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து குண்டுக் கட்டாக தூக்கிவேனில் ஏற்றினர். அப்போது சில பெண்களுக்கு  கையில் காயம் ஏற்பட்டது. சுமார் 30 பேரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று மண்டபத்தில் அடைத்தனர். பிறகு இரவு 8.30 மணியளவில் உங்களுடைய ஆதார் எண், தொலைபேசி  எண்  கொடுத்தால் தான் விடுதலை செய்ய முடியும் என்று மிரட்டினர். அதற்கு ஆதார் எண் கேட்பது சட்டவிரோதமானது, இதனை கொடுக்க முடியாது    வேண்டுமானால் எங்களை  கைது செய்யுங்கள் என்று  பதிலடியாக  மக்கள் அதிகாரம் தோழர்கள் பேசினர்.

மேலும்  அத்திருட்டுக்கும்பல்  மீது  நடவடிக்கை  எடுக்கும்  வரை  நாங்கள் உண்ணமாட்டோம்  என்று   உணவை   திருப்பி அனுப்பினர்.  இரவு 10 மணி ஆகியும் எந்த  பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தது போலீசு.  இனியும்   இவர்களிடம் கெஞ்சுவதால்  ஒன்றும்  நடக்க  போவதில்லை  என்று  மக்களிடம் தோழர்கள் பேச ஆரம்பித்தனர்.

உடனே  மண்டபத்தில் மண்டபத்தில் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்து போராட்டத்தை தொடங்கி முழக்கமிட்டோம். அப்போது அருகில் குடியிருப்புகளில் இருந்த மக்கள் மண்டப்பத்தை சுற்றி ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தனர். பார்க்க வந்த மக்களை விரட்டியது போலீசு.  இப்போராட்டத்தை  மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்  என்று  மண்டபத்தின் மேல்  மாடிக்கு சென்று முழக்கமிட்டனர். அதன் பிறகு போலீசு அடிபணிந்தது 1 மணிநேரம்  கழித்து   நாங்கள்  உடனடியாக  நடவடிக்கை எடுக்கிறோம்  என்று கூறி இரவு 11 மணிக்கு பேச அழைத்தார் டி.எஸ்.பி சோமசுந்தரம். அப்போது ஆதார் அட்டை கேட்பது கைதானவர்கள் உன்மையான முகவரிதான் கொடுக்கிறார்களா? என்று எப்படி தெரிந்துக்கொள்வது அதனால் தான் ஐடி -யை கேட்கிறோம் என்றார். இது சட்ட விரோதம் இப்படி எதுவும் சட்டமில்லை என தோழர்கள் பதில் கொடுத்தனர். நீண்டநேரம் பேசியும் பின்வாங்காமல் இருந்த தோழர்களிடத்தில் இறுதியாக போன் நம்பரையாவது கொடுங்கள் என இறுதி சுற்றில் கேட்டனர். அப்போது சில நபர்களின் போன் நெம்பரை மட்டும் கொடுத்தோம். அதன்பிறகே இரவு    12 மணிக்கு  அனைவரையும்  விடுதலை செய்தனர்.  அடுத்த நாள் காலை உடனே எஸ்.பி  யை பாருங்கள் என்று கூறியதை அடுத்து அவரிடம் 40 பேர் சென்று மனுக்கொடுத்தனர்.

சொந்த மண்ணில் வாழ்க்கையில்லை, வேலையில்லை ஏதாவது வழி கிடைக்காதா என்று வெளிநாட்டில் வேலைகளுக்கு முயல்கின்றனர் ஏழை மக்கள். அதற்காக இருக்கும் குண்டுமணி சொத்தையோ, நகையையோ விற்று மிச்சத்திற்கு கந்து வட்டிக்கு கடன் வாங்கி தரகர்களிடம் இலட்சக்கணக்கில் கொடுக்கின்றனர். அரசின் பல்வேறு துறைகளுக்கு மாமூலைக் கொடுத்துவிட்டு தரகர்கள் இந்தப் பணத்தை விழுங்கி விடுகின்றனர். வெளிநாட்டில் வேலை என்ற கனவுடன் காத்திருந்தவர்களுக்கு பழைய அவல நிலை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. சரி கொடுத்த பணத்தை மீட்கலாமா என்று போலீசிடம் கேட்டால் போராடாதே, ஏமாந்தாய் என்று கேட்கிறார்கள்!

ஆம். இந்த அரசு நமக்கு வேலை கொடுக்கும், நமக்கு பிரச்சினை வந்தால் பாதுகாக்கும் என்று இதுவரை ஏமாந்து விட்டோம், இனி ஏமாற மாட்டோம்!

தகவல் :
மக்கள்  அதிகாரம்,
தருமபுரி.
தொடர்புக்கு;  81485  73417

மோடி வித்தை : விவசாயிகள் தலையில் இறங்கிய இரட்டை இடி !

0
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

ழைக்கும் மக்களின் தாங்கொணா துயரத்தைச் சித்தரிக்கும் “இவனோடும் சண்டை, நமக்கு இயற்கையோடும் சண்டை” என்றொரு கவிதை வரி உண்டு. தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கையறு நிலை இந்தத் துன்பியல் கவிதை வரியைத்தான் நினைவுபடுத்துகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்ததால், நடப்பு ஆண்டிலும் குறுவை சாகுபாடி இல்லாமல் போனது. தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் காரணமாக, சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்த வேளையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட முடியாது” என வாதிட்டு, அந்த நம்பிக்கையில் மண்ணை வாரிப்போட்டது, மோடி அரசு. அரசு அதிகார அமைப்புகள் துரோகம் செய்துவிட்ட நிலையில், பருவ மழையை நம்பி விதைப்பைத் தொடங்கினார்கள், விவசாயிகள். பருவத்தே பெய்ய வேண்டிய மழை பொய்த்து, டெல்டா விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இப்படி அடிக்கு மேல் அடி விழுந்து கொண்டிருந்த நிலையில், மோடி அரசு அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை சம்பாவுக்கும், அதனைத் தொடரும் தாளடிக்கும் சேர்த்தே சாவுமணி அடித்து விட்டது.

பூண்டி ஒன்றியம், சோமதேவன்பட்டு கிராமத்தில் கருகிப் போன நெற்பயிர்களை மாடுகள் மேயும் அவலம்.
பூண்டி ஒன்றியம், சோமதேவன்பட்டு கிராமத்தில் கருகிப் போன நெற்பயிர்களை மாடுகள் மேயும் அவலம்.

கடந்த 55 ஆண்டுகளில் இப்படியொரு கொடூரமான அவல நிலையை நாங்கள் கண்டதில்லை என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள். ஆனால், மோடியோ, “ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள், இந்தியா ஜொலிக்கத் தொடங்கிவிடும்” என வாய்ப் பந்தல் போடுகிறார். எந்த இந்தியா, எந்த இந்தியர்கள்? – மோடியிடமும், அவரது துதிபாடிகளிடமும் நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான். விதைப்பைத் தவறவிட்ட பிறகு, விவசாயிகளால் எதனை அறுவடை செய்ய முடியும்? பஞ்சத்தை, பட்டினியை, தலைக்கு மேல் கத்தியாக நிற்கும் கடனை, தற்கொலையை – இவற்றைத் தவிர விவசாயிகளுக்கு வேறென்ன கிடைத்துவிடும், ஐம்பது நாட்களுக்குப் பிறகு.

மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாடெங்குமுள்ள சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு, விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு மரண அடியாய் இறங்கியிருக்கிறது. இந்திய கிராமங்களை ஒரு பேரழிவின் வாசலில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.

நவம்பர் மாதம் இந்திய விவசாயிகளுக்கு முக்கியமானதொரு பயிர்க்காலம். தமிழகத்தில் காரி காலப் பயிர்களும் (தை பட்டம்), வட இந்திய மாநிலங்களில் ராபி பயிர்களும் பயிரிடும் காலம். நெல், கோதுமை, கடுகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, உருளைக்கிழங்கு, அவரை உள்ளிட்ட உணவுப் பயிர்களும், காய்கறிகளும் இந்தப் பருவத்தில்தான் பயிரிடப்படுகின்றன. மேலும், இதற்கு முந்தைய ஆடிப் பட்டப் (காரிஃப்) பயிர்கள் விளைந்து விற்பனைக்கு வரும் காலமும் இதுதான். இப்படிபட்ட நேரத்தில் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு, விளைந்த பயிர்களை விற்கவும் முடியாத, அடுத்த பட்டப் பயிர்களைப் பயிரிடுவதற்குப் பணத்தைப் புரட்டவும் முடியாத கடும் நெருக்கடியில் விவசாயிகளைச் சிக்க வைத்துவிட்டது.

விதைத்த நெற்பயிரைக் காப்பாற்ற முடியாத துயரத்தால் அகால மரணமடைந்த விவசாயிகள் (இடமிருந்து) கோவிந்தராஜ், ராஜேஷ்கண்ணன், அழகேசன்.
விதைத்த நெற்பயிரைக் காப்பாற்ற முடியாத துயரத்தால் அகால மரணமடைந்த விவசாயிகள் (இடமிருந்து) கோவிந்தராஜ், ராஜேஷ்கண்ணன், அழகேசன்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், மாவட்டக் கூட்டுறவு வங்கிகளும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூடாது; சேமிப்பு கணக்குகளில் பணம் போடவோ, எடுக்கவோ விவசாயிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசு விதித்த தடையுத்தரவு, விவசாய நடவடிக்கைகள் அனைத்தையுமே முடக்கிப் போட்டு, விவசாயிகளையும் விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் பஞ்சம் பிழைக்கப் போகும் நிலைக்குத் தள்ளிவிட்டிருக்கிறது.

நகர்ப்புற பொருளாதாரம் இயங்குவதற்கு வர்த்தக வங்கிகள் எந்தளவிற்கு முக்கியமானதோ, அதனைவிடப் பல மடங்கு முக்கியமானது கிராமப் புறங்களில் இயங்கி வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள். மாநில அரசுகள் அறிவிக்கும் பயிர்க் கடன்கள் மற்றும் வட்டி மானியங்கள் உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம்தான் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்கு அப்பால், விவசாயிகளுக்குத் தேவைப்படும் நகைக் கடன்களை வழங்குவது, பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்கான பிரிமியம் தொகையை வசூலித்துக் கொள்வது, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடு பொருட்களை விற்பது, விவசாயிகளுக்கான சேமிப்பு கணக்குகளைத் தொடங்கிக் கொடுத்து, அவற்றைப் பராமரித்து இயக்குவது எனப் பல வகையான பணிகளைத் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செய்து வருகின்றன.

இந்த நிதியாண்டில் தமிழக அரசு விவசாயிகளுக்கு 6,000 கோடி ரூபாய் பயிர்க் கடனையும் 200 கோடி ரூபாய்க்கான வட்டி மானியத்தையும் அறிவித்திருக்கிறது. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வர்த்தக நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாதென்ற உத்தரவால், 6,000 கோடி ரூபாய் பயிர்க்கடனில் இன்னும் வழங்க வேண்டியுள்ள 4,000 கோடி ரூபாய் பயிர்க் கடனை அளிக்க முடியாமல் அந்தத் திட்டமே முடங்கிப் போய்க் கிடக்கிறது. மற்ற வங்கிகளைப் போல 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் தொடக்க வேளாண் கூட்டுறவு பெற்றுக் கொள்ளுவதற்கு விதிக்கப்பட்ட தடையாலும், விவசாயிகளின் சேமிப்புக் கணக்குகளில் பணம் போடுவதற்கும் எடுப்பதற்கும் போடப்பட்டுள்ள தடையாலும், விவசாயிகளால் பயிர்க் கடனைச் செலுத்த முடியவில்லை. உரிய தேதியில் பயிர்க்கடனைச் செலுத்த முடியாத நிலையில் வட்டி மானியத்தைப் பெறுவதும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.

farmers-distress-caption-1சிறு, நடுத்தர விவசாயிகள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு விவசாய வேலைகளைத் தொடங்குவதில்லை. பயிர்க் கடன், நகைக் கடன், தானிய ஈட்டுக் கடன் அல்லது தனியாரிடம் பெறும் கந்துவட்டிக் கடன் இவற்றை நம்பித்தான் பெரும்பாலான விவசாயிகள் சாகுபடியை நடத்தி வருகின்றனர். விதை, உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களை வாங்குவதற்கு; நடவுக்கு, நாத்துப் பறிப்பதற்கு, களையெடுப்பதற்கு, தண்ணீர் பாய்ச்சுவதற்கு என விவசாய வேலைகளைச் செய்யும் கூலித் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கு விவசாயிகளுக்கு அன்றாடம் ரொக்கப் பணம் கையில் இருக்க வேண்டும். பணப் புழக்கம் குறைந்துவிட்ட நிலையில், வங்கிகளில் கடன் பெற முடியாத நிலையில், சேமிப்புக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்க முடியாத நிலையில் இந்த விவசாயப் பணிகள் அனைத்துமே முடங்கிப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மாநில அரசின் கடன் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடியை நடத்த வேண்டுமென்றால் கந்துவட்டிக் கும்பலிடமோ குறுநிதி நிறுவனங்களிடமோ கையேந்த வேண்டும். இல்லையென்றால், நிலத்தைத் தரிசாகப் போட வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.

அரசு அதிகாரிகளின் நிர்பந்தத்திற்குப் பணிந்து நேரடி நெல் விதைப்பை நடத்தி முடித்திருக்கும் டெல்டா விவசாயிகள் ஒருபுறம் மழை இல்லாமலும், மறுபுறம் கையில் பணம் இல்லாமலும், நட்ட பயிர்கள் காய்ந்து, சாவியாகிப் போவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இரட்டைத் தாக்குதலால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் இதுவரை 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், வேதனையால் மாரடைத்தும் இறந்து போய்விட்டனர்.

இந்த அகால மரணங்கள் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களையும் விட்டு வைக்கப் போவதில்லை. ஏனென்றால், சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மஞ்சள் சந்தையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், 13 நாட்களில் 8,000 கோடி ரூபாய் பெறுமான மஞ்சள் விற்பனையாகமல் தேங்கி நிற்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். இந்தத் தேக்கமும், அதனால் ஏற்படக்கூடிய விலை வீழ்ச்சியும் மஞ்சள் விவசாயிகளை ஓட்டாண்டி நிலைக்குத் தள்ளக்கூடும். இந்த விற்பனை தேக்கம் ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை, காங்கேயம் காளைச் சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை.

* * *

கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் பாலை  தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் பாலை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் மாதம்தான் உருளைக் கிழங்கு பயிருடும் பருவம். பயிரிடுவதற்கு ஏற்ற கிழங்குகளை மார்ச் மாதத் தொடக்கத்திலேயே குளிர்பதனக் கிடங்குகளில் சேமித்து வைத்து, அதனை நவம்பரில் திரும்ப எடுத்து விதைக்க வேண்டும். ஒருபுறம் சேமிப்புக் கிடங்குகள் 1,000, 500 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கின்றன; இன்னொருபுறமோ விவசாயிகளிடம் பணமும் இல்லை, பயிர்க் கடனும் கிடைக்கவில்லை. இதனால், கிடங்குக் கட்டணத்தைச் செலுத்த முடியாமலும், அதனால் கிழங்குகளைத் திரும்பப் பெற்றுப் பயிரிட முடியாமலும் தவித்துப் போய் நிற்கிறார்கள், விவசாயிகள்.

கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உருளைக்கிழங்குகளை நவம்பர் 30-க்குள் திரும்ப எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால், அவர்கள் அதனை அழித்துவிடுவார்கள் என்கிறார், ஜமால்பூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் மெஹ்ருதீன் என்ற விவசாயி.

உருளைக்கிழங்கு சாகுபடியில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலுள்ள மேற்கு வங்கத்தில் ஏறத்தாழ 3,87,000 ஹெக்டேரில் உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது. அதனைப் பயிரிடுவதற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஜமால்பூர் பகுதியில் மட்டும் இரண்டு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால், அம்மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்ப்பதே அச்சமூட்டக் கூடியதாக உள்ளது.

* * *

கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.
கூட்டுறவு வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து குஜராத் மாநில விவசாயிகள் சூரத் நகரில் நெல்லை தெருவில் கொட்டி நடத்திய ஆர்ப்பாட்டம்.

.பி. மாநிலத்தில் கோதுமை, கடுகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு வகைகளைப் பயிரிட முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அம்மாநிலத்தில் கரும்பை வெட்டி ஆலைகளுக்கு எடுத்துப் போக வேண்டிய நேரமிது. ஆனால், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்குக் கூலி கொடுப்பதற்கும், வெட்டிய கரும்பை எடுத்துச் செல்ல லாரி வாடகையைக் கொடுப்பதற்கும் பணமில்லாததால், கரும்புகள் வயலில் காயத் தொடங்கிவிட்டன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வட்டி வீதம் குறையும் என பா.ஜ.க. கும்பல் வாய்ச்சவடால் அடித்து வருகிறது. ஆனால், 3 வட்டிக்குக் கடன் கொடுத்து வந்த கந்து வட்டிக் கும்பல், பணத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு 5 வட்டி, பத்து வட்டி என ஏற்றிவிட்டதாக உ.பி. விவசாயிகள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவின் வாசி சந்தையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பாக 14 ரூபாய்க்கு விற்று வந்த ஒரு கிலோ பச்சை மிளகாய் அதன் பிறகு மூன்று ரூபாயாகச் சரிந்து விட்டதாகவும், 13 ரூபாய்க்கு விற்ற ஒரு காலிஃபிளவர் இன்று நான்கு ரூபாயாகவும், ஒரு கிலோ 26 ரூபாய்க்கு விற்று வந்த கத்தரிக்காய் 12 ரூபாயாகச் சரிந்துவிட்டதாகவும் பிம்பாலே என்ற விவசாயி வேதனையோடு கூறுகிறார்.

ஆந்திராவுக்குப் போனால் தக்காளியைக் காசில்லாமலேயே அள்ளிவர முடியும் என சென்னை கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறுகிறார்கள்.

விளைந்த உருளைக்கிழங்குகளைச் சந்தைக்கு எடுத்துச் செல்லவும் பணமின்றி, அக்கிழங்குளைச் சேமித்து வைக்கவும் வழியின்றித் தவித்து நிற்கும் உ.பி. மாநில விவசாயிகள், அவற்றைத் தெருவில் கொட்டி ஆர்பாட்டங்களை நடத்துகின்றனர்.

மாவட்ட மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை முடக்கிய மோடி அரசின் தடையுத்தரவைக் கண்டித்து கேரள மாநில முதல்வர் பினாரயி விஜயன் தலைமையில் அம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.
மாவட்ட மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை முடக்கிய மோடி அரசின் தடையுத்தரவைக் கண்டித்து கேரள மாநில முதல்வர் பினாரயி விஜயன் தலைமையில் அம்மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளையின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இந்தியாவெங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளில் வாகனக் கட்டணம் வசூலிக்கக் கூடாதென உத்தரவிட்டது மைய அரசு. இந்த உத்தரவால் சுங்கச்சாவடியை எடுத்து நடத்தும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட ந்ட்டத்தை ஈடுகட்ட முன்வந்திருக்கும் மோடி அரசு, விவசாயிகளுக்கு ஏற்பட்ட நட்டம் குறித்துப் பேச மறுக்கிறது. மாறாக, நாட்டிற்காக இந்தத் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென அவர்களுக்கு உபதேசிக்கிறது. கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் தாங்கிக் கொள்ள மறுக்கும் நட்டத்தை, விவசாயிகள் ஏன் மௌனமாகச் சகித்துக் கொள்ள வேண்டும்?

* * *

க்டோபர், நவம்பர் மாதங்களில் விவசாயிகள் புதிய பயிர்களைப் பயிரிடுவார்கள், விளைந்த பயிர்களை விற்பதற்குச் சந்தைக்கு வருவார்கள் என்பதையெல்லாம் அறியாமல், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்து, வேளாண் கூட்டுறவு சங்கங்களை மோடி முடக்கிவிட்டார் என்றால், அவரைப் போன்ற முட்டாள்தனமான, மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள ஆட்சியாளர் வேறு யாரும் இருக்க முடியாது. இல்லை, இதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார் என்றால், அவரைவிட விவசாயிகளுக்கு எதிரான ஆட்சியாளர் வேறு ஒருவர் இருக்க முடியாது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் கருப்புப் பண பேர்வழிகளின் புகலிடமாக இருப்பதனால்தான், அவற்றுக்குத் தடை போட்டோம் என நியாயப்படுத்துகிறது, பா.ஜ.க. குற்றவாளியே நீதிபதியாகும் அயோக்கியத்தனம் இது. ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த ஓட்டுக்கட்சிகள் அதிகார பலத்துடன் இருக்கிறதோ, அக்கட்சிகளும் கிராமப்புற ஆதிக்க சக்திகளும்தான் வேளாண் கூட்டுறவு சங்கங்களைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் காங்கிரசு, பா.ஜ.க. கும்பலின் குடும்பச் சொத்தாக இருப்பதும், அம்மாநிலத்தில் நடந்துள்ள கூட்டுறவு சங்க ஊழல்கள் அனைத்திலும் பா.ஜ.க.விற்கும் பங்கிருப்பது ஊரறிந்த உண்மை. பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்ற கணக்காக, கூட்டுறவு சங்கங்களை முடக்கி விவசாயிகளைத் தண்டிக்கிறது, பா.ஜ.க.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும் முடக்கியிருப்பதன் பின்னேயுள்ள நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு அல்ல. அதன் பின்னே வேறொரு தீய நோக்கம் மறைந்திருக்கிறது. நாடெங்கும் உள்ள 13,943 மாவட்டக் கூட்டுறவு வங்கிகளில் 2,36,890 கோடி ரூபாய் பெறுமான வைப்பு நிதியும், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் 81,900 கோடி ரூபாய் பெறுமான வைப்பு நிதியும் இருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இத்துணை கோடி பணத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நோக்கத்தோடுதான் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாவட்டக் கூட்டுறவு சங்கங்களின் வங்கிச் செயல்பாடுகளுக்குத் தடை விதித்திருக்கிறது, மைய அரசு. மேலும், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மட்டுமே கூட்டுறவு வங்கிகள் எனக் கருதப்படும் என்றொரு அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டுள்ள மைய அரசு, இது நவம்பர் 24 முதல் நடைமுறைக்கு வருவதாகக் காதும்காதும் வைத்தாற் போல அறிவித்திருக்கிறது.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இடத்தைப் பிடிக்கப் போவது யார்? மகளிர் சுய உதவிக் குழுக்களும், குறு நிதி நிறுவனங்களும் கிராமப்புற மக்களுக்குக் கடன் கொடுத்துக் கைதூக்கிவிடும் போர்வையில் ஏற்கெனவே கிராமப்புறங்களில் நுழைந்துவிட்டன. கிராமப்புற மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கொடுக்கப்படும் கடன்கள் 99 சதவீதம் வசூலாகிவிடுவதாலும், அக்கடன்களுக்கான வட்டி, வங்கி வட்டியைவிட அதிகமாக இருப்பதாலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் குறு நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றன. கூட்டிக்கழித்துப் பாருங்கள், மோடி அரசின் நோக்கம் என்னவென்று புரிய வரும். பளிச்சென்று சொல்ல வேண்டுமென்றால், கிராமப்புற விவசாயிகளைக் கந்துவட்டிக் கும்பலைவிட மோசமான குறுநிதி நிறுவனங்களின் பிடிக்குள் முழுமையாகச் சிக்க வைப்பது மோடி அரசின் எதிர்காலத் திட்டம். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை அங்கீகரிக்க மறுத்து மோடி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணைதான் அதன் தொடக்கம்.

– ரஹீம்
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

மோடி அறிவிப்பால் மக்கள் படும்பாடு ! பு.மா.இ.மு தெருமுனைக் கூட்டம்

0

த்திய அரசின் ரூ500, 100 செல்லாது! அறிவிப்பும் மக்கள் படும்பாடும்! என்ற தலைப்பில் 21.12.2016 அன்று மாலை 6 மணியளவில், மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

20161221_185012

கூட்டத்திற்கு பு.மா.இ.மு–ன் சென்னை கிளை செயலாளர் தோழர் ராஜா தலைமை தாங்கினார். தோழர்கள் செந்தில், சாரதி, திருமலை(ஏரிக்கரை பகுதி செயலர்), கணேசன்(மாநில ஒருங்கிணைப்பாளர்) ஆகியோர் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினர். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர படல்கள் பாடப்பட்டது.

கருப்பு பணம் ஒழிக்கிறேன், கள்ள நோட்டை ஒழிக்கிறேன் என மோடி எடுத்த நடவடிக்கையின் உண்மை என்ன? சாதாரண உழைக்கும் மக்களாகிய நாம் தான் பாதிக்கப்படுகிறோம். ‘ஒருவர் வீட்டில் பணம் திருட்டு போய்விட்டது என்றால், அவரையும், அவர் சந்தேகப்படும் நபர்களையும் கூப்பிட்டு விசாரிக்கும் போலீசு. அதுபோல், கருப்புப்பணத்தை ஒழிக்க, சந்தேகத்திற்கு உரிய நபர்களை பிடித்து விசாரித்து கருப்புப் பணத்தை வெளி கொண்டு வந்திருக்கலாம்’.

ஆனால், அதைசெய்யாமல் நாட்டின் ஒட்டு மொத்த மக்களையும், குற்றவாளிகள் என மோடி தண்டிப்பது சரியா? எனவே இது கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கை அல்ல. மாறாக ஏழை மக்களில் வீட்டில் இருக்கும் சேமிப்புகளை வங்கிக்கு வரவழைத்து கொள்ளையடிப்பதே மோடியின் திட்டம். ஆனால், இதை புரிந்துக் கொள்ளாமல் ‘மோடி நமக்கு நல்லது செய்வார், கருப்புப்பணத்தை ஒழிப்பார்’ என பெரும்பாலான மக்கள் நம்பிக் கொண்டிருப்பது தான் உண்மையில் வருத்தமான செய்தி.

மோடி, அவரது நடவடிக்கைகளின் மூலம் ‘நான் உழைக்கும் மக்களுக்காக இல்லை’ என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், நாம் மோடியின் மீது நம்பிக்கை வைத்து வங்கில் பணத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் செலுத்திய இந்த பணத்தை காட்டி, கருப்புப்பணம் வங்கில் வந்துள்ளது என கூறுகிறார் மோடி.

நாம் வங்கியில் போட்ட பணம், ஏதோ நம் பெயர் போட்டு அக்கவுண்டில் பூட்டி வைத்திருக்கிறார்கள், நாம் சென்றால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். ஆனால், நாம் வங்கியில் போட்ட பணத்தை எடுக்க கூடாது என உத்தரவு போட்டிருக்கிறார் மோடி.

இன்னமும் அது புரியாமல், மோடி எது செய்தாலும் மக்கள் நன்மைக்குதான், 50 நாட்கள் பொருத்திருங்கள். நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் என பா.ஜ.க போன்ற கட்சிகள் கூறுவதை மக்களில் சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

சரியாக 50 நாட்கள் முடிந்து 51-வது நாள் டிசம்பர் 29 ஆம் தேதி நரியின் (மோடியின்) சாயம் முழுமையாக வெளுக்கும்.

எனவே நம் வாழ்க்கைக்காக நாம் தான் போராட்ட வேண்டும். உடனே நம் பணம் அனைத்தையும் வங்கில் இருந்து எடுங்கள். உடனே புரட்சிகர அமைப்புகளில் இணைந்து, போராட்டங்களை கட்டியமையுங்கள்  என மக்களை அறைக்கூவி அழைத்தது இந்த கூட்டம்.

இந்த கூட்டத்தில் தோழர்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள், பகுதி உழைக்கும் மக்கள், பாதசாரிகள், வியாபாரிகள் என 300 -க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
( படங்கள் : வினவு செய்தியாளர்கள் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை – தமிழ்நாடு.
தொடர்பு எண் : 9445112675

 

மோடியின் சிலந்தி வலையில் சிக்கும் சிறு வணிகம் – சிறு தொழில் !

1
வாடிக்கையாளரை எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போன சென்னை நகர நடைபாதை வியாபாரி.

டந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று தனது மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், ”ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள்; பணக்காரர்கள் தூக்கமாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார் மோடி. ஆனால் பலசரக்குகள், காய்கறிகள், பழங்கள் விற்கும் சிறுவணிகர்களும், சிறு- குறுந்தொழில் முனைவோரும், சிறு விவசாயிகளும், லாரி உரிமையாளர்களும் தொழிலும் விவசாயமும் வியாபாரமும் செய்ய முடியாமல் தத்தளிப்பதோடு, கூலி விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள் – என நாட்டின் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்கள்தான் வேலையில்லாமல் பட்டினியால் தூக்கமின்றிப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எட்டாயிரம் கோடி ரூபாய் பெறுமான மஞ்சள் விற்பனையாகாமல் தேங்கி நிற்கும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்ட மஞ்சள் சந்தை.
எட்டாயிரம் கோடி ரூபாய் பெறுமான மஞ்சள் விற்பனையாகாமல் தேங்கி நிற்கும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்ட மஞ்சள் சந்தை.

மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியின் காரி பாவோலி எனுமிடத்திலுள்ள ஆசியாவின் மிகப் பெரிய வெல்ல மண்டி முடங்கிக் கிடக்கிறது. சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் சென்னை – கோயம்பேடு சந்தையில் மக்கள் வரத்து 80 சதவீதம் குறைந்து, வெறிச்சோடிக் கிடக்கிறது. தினந்தோறும் 4 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்த இக்காய்கறிச் சந்தையில் தற்போது ரூ.1 கோடி அளவுக்கு கூட வியாபாரம் நடைபெறவில்லை. இங்குள்ள ஆயிரக்கணக்கிலான சிறு வியாபாரிகள், அவர்களைச் சார்ந்துள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகி நிற்கின்றனர். மோடியின் திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 21 லட்சம் சிறு வணிகர்களின் வாழ்க்கை மூன்றாண்டுகளுக்குப் பின்னோக்கிப் போய்விட்டது என்கிறார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவரான விக்கிரம ராஜா.

சில ஆயிரங்களைக் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்து அதில் கிடைக்கும் அற்ப வருவாயில் வாழ்க்கையை ஓட்டிவரும் தள்ளுவண்டி வியாபாரிகள், பழங்களும் காய்கறிகளும் அழுகிப் போகும் அபாயத்தில் இருப்பதால், எந்த காய்கறியானாலும் கிலோ 5 ரூபாய் என்று கூவியழைத்தாலும் வாங்குவதற்கு யாரிடமும் பணமில்லை. “சிகரெட் வித்தா பத்து காசு, கலர் வித்தா இருபத்தஞ்சு காசு, பால் வித்தா ஐம்பது காசுன்னு ஓடிக்கிட்டிருந்த என் பொழப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டார் மோடி” என்று பெட்டிக்கடைக்காரர்கள் புலம்புகிறார்கள். சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேலான கட்டுமானத் திட்டங்களில் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், பெயிண்டர், தச்சுவேலை செய்பவர்கள் – என ஏறத்தாழ 5 லட்சம் கூலித் தொழிலாளர்கள் வேலையில்லாமல் பரிதவிக்கிறார்கள். சென்னை – புதுப்பேட்டையில் உள்ள வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகளில் 500 ரூபாய்க்கு கூட வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் சம்பளம் கூட தரமுடியாததால் பல மெக்கானிக்குகள் வேலையிழந்துள்ளனர்.

2020-ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் வகையில் திருப்பூரின் பின்னலாடை – ஆயத்த ஆடைத்தொழிலை விரிவாக்கப் போவதாக பிரதமர் தனது ”விஷன் 2020” திட்டத்தின் மூலம் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால் அவரது பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், டாலர் நகரம் என்றழைக்கப்பட்ட திருப்பூர் இன்று செல்லாக்காசு நகரமாகிவிட்டது.

வாடிக்கையாளரை எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போன சென்னை நகர நடைபாதை வியாபாரி.
வாடிக்கையாளரை எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போன சென்னை நகர நடைபாதை வியாபாரி.

திருப்பூரிலுள்ள ஏறத்தாழ 2,000க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்கூடங்கள் அனைத்தும் ஏறத்தாழ லே-ஆப் விடப்பட்ட நிலையில் உள்ளன. சட்டைகள் உற்பத்தி செய்யும் தென்னிந்திய சிறு தொழில் முனைவோர் கூட்டமைப்பு (SISMA) தொழிலாளர்களுக்கு ரொக்கமாக கூலி கொடுக்க முடியாத நிலையில், வாரத்துக்கு 15 ஷிப்டுகளுக்குப் பதிலாக 6 ஷிப்ட் மட்டுமே வேலை கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் மழை-வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அரசின் புறக்கணிப்பால் அதிலிருந்து மீளமுடியாமல் தத்தளித்து, பின்னர் மெதுவாக உயிர் பெற்ற ஆயிரக்கணக்கான சிறு – குறுந்தொழில் நிறுவனங்கள் மீண்டும் இப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதுமுள்ள அனைத்து சிறு, குறுந்தொழில்கள் ஏறத்தாழ 40 முதல் 60 சதவீத அளவுக்கு நட்டமடைந்துள்ளன என்கிறார் கோவை கொடிசியா அமைப்பின் முன்னாள் தலைவரான இளங்கோ. அன்றாடம் பல நூறு கோடி ரூபாய் வரை புரளக்கூடிய ஈரோடு ஜவுளித் தொழிலும், மஞ்சள் சந்தையும் முடங்கிப் போய் விவசாயிகளும் வியாபாரிகளும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

தூத்துக்குடி, ராமேஸ்வரம் மாவட்டங்களில் நாள்தோறும் ரூ.10 கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்துவந்த மீன்பிடி தொழில் முடங்கிப் போயுள்ளது. மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்க வியாபாரிகள் வருவதில்லை. மீன் பிடி தொழிலுக்கு பயன்படும் டீசல், ஐஸ் கட்டிகள் வாங்குவதற்கும் மீனவர்களிடம் பணமும் இல்லை. இதனால் இம்மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்ல முடியாமல், பல்லாயிரக்கணக்கான மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் பெங்களூரு நகர வணிகத் தெரு.
வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடக்கும் பெங்களூரு நகர வணிகத் தெரு.

தமிழகத்தின் வால்பாறை, ஆனைமலை மற்றும் கேரளத்தின் வயநாடு, மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து ஏறத்தாழ 10,15 கி.மீ. தொலைவிலுள்ள வங்கிக்கு வந்து பணத்தை மாற்ற போக்குவரத்து செலவாகும், மேலும் ஒரு நாள் கூலியையும் இழக்க நேரிடும் என்பதால், பெரும்பாலோர் தங்களிடமுள்ள நோட்டுகளை மாற்ற முடியவில்லை. இத்தொழிலாளர் குடும்பங்கள் கடந்த ஒரு மாத காலமாக முறையாக சோறு தின்ன முடிவதில்லை. இம்மக்கள் ஓட்டுப் போட வேண்டுமென்று கழுதை, குதிரைகள் மீது ஓட்டு எந்திரத்தை தூக்கி வைத்து ஆறு, மலை, காடுகளைத் தாண்டி வந்து ஜனநாயகக் கடமையாற்றச் சொல்லும் ஆட்சியாளர்கள், அதே மாதிரி இம்மக்களைத் தேடி வந்து ரூ. 500, 1000 நோட்டுகளை மாற்ற ஏற்பாடு செய்ய முன்வரவில்லை.

கூட்டுறவு சங்கங்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுக்க வரம்பும் கட்டுப்பாடும் ரிசர்வ் வங்கி விதித்துள்ளதால் கேரளத்தின் முந்திரி, ஏலக்காய், மிளகு, பாக்குத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை. தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களால் வங்கிகளிலிருந்து பணத்தை எடுக்கவோ, பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு கொடுக்கவோ முடியாததால், மாடுகளுக்குத் தீவனங்கள் வாங்கக் காசில்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

குஜராத்தின் ஜவுளித் தொழில் மையமான சூரத்தில் 165 ஜவுளிச் சந்தைகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ 10 லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் திடீர் அறிவிப்புக்குப் பிறகு, வாரத்துக்கு பாதி நாள்தான் இவர்களுக்கு வேலை கொடுக்கப்படுவதால், ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பட்டினி கிடக்கின்றனர். ஜவுளி உற்பத்தியோ வீழ்ந்து கிடக்கிறது. இதுவொருபுறமிருக்க, சூரத்தின் செயற்கை வைரம் பட்டைத் தீட்டும் தொழில் முற்றாக முடங்கிவிட்டது.

தமிழகத்தில் திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. மோடியின் செல்லாக்காசு அறிவிப்பால், 2 கோடி கிலோ அளவுக்கு கறிக்கோழி தேக்கம் அடைந்து ரூ.200 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் புலம்புகின்றனர்.

வியாபாரம் முடங்கிப் போனதால் வேலையேதுமின்றிப் போன டெல்லி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்.
வியாபாரம் முடங்கிப் போனதால் வேலையேதுமின்றிப் போன டெல்லி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்.

சுருக்கமாகச் சொன்னால், தனது பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் சிறு தொழில்களையும் சிறு வணிகத்தையும் அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தி, அவற்றைச் சார்ந்துள்ள கோடிக்கணக்கான உழைப்பாளர்களை வீதியில் வீசியெறிந்துள்ளார் மோடி. நாடு முழுவதும் பொருளாதார மந்தநிலையால் ஏற்கெனவே வேலையின்மை தீவிரமாகியுள்ள நிலையில், மோடியின் இந்த அதிரடி அறிவிப்பானது, ஏதாவது கைத்தொழில், சிறுவியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் நிரந்தரமாகவே மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.

நம் நாட்டில் வேளாண்மைக்கு அடுத்து அதிகமான அளவில் வேலை வாய்ப்பினை அளித்திடும் துறையாக இருப்பது சிறுதொழில்கள்தான். மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் சிறு தொழில்கள் உள்ளன. நாட்டில் ஏறத்தாழ 10 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் துறையாக சில்லறை வணிகம் இருக்கிறது.

இருப்பினும், தனியார்மய – தாராளமயமாக்கத்துக்குப் பின்னர், அரசின் புறக்கணிப்பாலும், பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பாலும் சிறு தொழில்கள் மவுனமாக அழிக்கப்பட்டு வருகின்றன. சிறு, குறுந்தொழில்களுக்கு வங்கிக் கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. நாடெங்குமுள்ள 5.8 கோடி சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ள போதிலும் 4 சதவீத நிறுவனங்களுக்குத்தான் வங்கிக் கடன் கிடைத்திருப்பதை அரசின் புள்ளிவிவரங்களே ஒப்புக் கொள்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் தமது உற்பத்தியில் 20 முதல் 30 சதவீத வேலைகளை குறு மற்றும் சிறு நிறுவனங்களிடம் கொடுத்து வாங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டாலும், அதனை ஆட்சியாளர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அரசின் பொருளாதாரக் கொள்கையும் குறு, சிறு நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லை. பொருளாதார மந்தம், தேக்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான அரசின் தொழிற்கொள்கை ஆகியவை காரணமாக ஜாப் ஆர்டர் கிடைக்காமல், ஏற்கெனவே குறு மற்றும் சிறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டு நிற்கின்றன.

இதுவும் போதாதென்று சிறுதொழில் பட்டியலில் இருந்து ஊறுகாய், மெழுகுவர்த்தி, ஊதுவத்தி, தீக்குச்சி, பூட்டு, ரொட்டி, நோட்டுப் புத்தகங்கள், ஸ்டீல் பீரோ, சேர், ஷட்டர், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட 20 பொருட்களை நீக்கி மைய அரசு உத்தரவிட்டுள்ளதால், இத்தொழில்களை இனி கார்ப்பரேட் நிறுவனங்களே நேரடியாக மூலதனமிட்டுத் தொடங்க முடியும். இதுவரை இத்தொழிலை நடத்திவந்த குறு மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் இனி கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டிபோட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன.

முன்பேர வர்த்தகம், இணையதள வர்த்தகம், ஒப்பந்த விவசாய உற்பத்தி, பெரும் கிடங்குகளில் நவீன வசதிகளுடன் பதுக்கல் ஆகியவற்றின் மூலம் சந்தைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் உணவுப் பொருட்கள் தானியங்கள் உள்ளிட்டு பல்வேறு பண்டங்களின் மேல் நடக்கும் இந்தச் சூதாட்டச் சந்தையின் மதிப்பு 45 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாகும். இந்தச் சூதாட்டத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய தொடர் தாக்குதல்களால் ஏற்கெனவே நிலைகுலைந்து போயுள்ள சிறு வணிகர்களையும் சிறுதொழில் புரிவோரையும் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிந்தேதான் மோடி கும்பல் இந்த அதிரடி தாக்குதலை நடத்துகிறது. கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும் தமது உடைமைகளை அடகுவைத்தும் கையைக் காலை ஊன்றி சிறுதொழில் புரிவோரும் சிறு வணிகர்களும் சுதேசி சவடால் அடித்த பா.ஜ.க.வை பெரிதும் நம்பி ஆதரித்தனர். அவர்களின் முதுகின் மேலேறி ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க. இப்போது அவர்களை எட்டி உதைத்துக் கொண்டிருக்கிறது. தமது வாழ்வாதாரம் முடங்கிவிட்டதை எண்ணி சிறுதொழில் முனைவோரும் சிறு வணிகர்களும் கதறிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணெதிரே இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி கும்பல் இவர்களுக்கு வாயளவில்கூட ஆறுதல் கூற முன்வரவில்லை.

மாறாக, வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைககளில் கருப்புப்பணம் உருவாக வாய்ப்பில்லை என்றும், ரசீதுகளே இல்லாமல் ரொக்கப் பரிமாற்றத்தின் மூலம் நடக்கும் வியாபாரத்தால்தான் கருப்புப்பணம் உருவாகி வருவதாகவும் மோடி கும்பல் சிறுவணிகர்கள் மீது அநியாயமாகப் பழிபோடுகிறது. வரி செலுத்தாமல் ஏய்க்கும் நோக்கத்தோடுதான் வங்கி வழியான வர்த்தகத்துக்கு இவர்கள் மாற மறுக்கிறார்கள் எனக் குற்றம் சாட்டுகிறது. ஆனால், பெருமளவிலான கருப்புப்பணம் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் வழியாகத்தான் திரள்கிறது. இந்த வர்த்தகத்தின் போலியான கம்ப்யூட்டர் பில்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் சென்று வருகின்றன.

சிறு தொழில் முனைவோர், சிறு வணிகர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து தனது வரி வருவாயை அதிகரித்துக் கொள்ளத்தான் மோடி கும்பல் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே 28 சதவீத அளவிற்கு மறைமுக வரிகளையும், அதற்கும் மேலாக செஸ் வரிகளையும் திணித்துச் சுரண்டுவது போதாதென்று, இந்த வர்க்கத்தினரை நேரடி வருமான வரி வலைக்குள்ளும் சிக்க வைப்பதுதான் மோடியின் திட்டம். சிறு வணிகர்களும் சிறுதொழில் புரிவோரும் இனி வங்கி மூலமாகத்தான் தமது வரவு – செலவுகளைச் செய்யவேண்டுமென அவர்கள் மீது கட்டாய வரிவிதிப்பைத் திணிப்பது, சில்லறை வணிகத்தை ஒழித்து ரிலையன்ஸ், வால்மார்ட், பிக் பஜார் போன்ற பெரும் வணிகத்தை கொழிக்க வைப்பது, வங்கிகளிலுள்ள மக்கள் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கி வராக்கடனாக அவற்றைத் தள்ளுபடி செய்வது என்ற நோக்கத்துடன்தான் மோடி கும்பல் இந்த அதிரடித் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே சிறுதொழில், சில்லறை வணிகம் மற்றும் விவசாயத்தை அறவே புறக்கணித்து நசிவடையச் செய்திருப்பது போதாதென்று, இப்போது இந்தத் துறையினரை மரணக் குழிக்குள் தள்ளிவிட்டுள்ள மோடி அரசுக்கு சிறுவணிகர்களும் சிறு தொழில் நடத்துவோரும் எதற்காக வரி கட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பி போராடுவதைத் தவிர, இனி வேறு என்ன வழியிருக்கிறது?

– தனபால்
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம் – பகுதி 4

1

நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, மிகக் கொடிய சாதிய அமைப்பையும், சனாதன மதத்தையும் உருவாக்கியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்தாம். இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அந்த அமைப்புக்கும் அதை உருவாக்கிய ஆரியப் பார்ப்பனர்களுக்கும் எதிராக நியாயமான வெறுப்பும் ஆத்திரமும் கொண்டுள்ளார்கள். இந்த உணர்வுகளை மழுங்கடிக்கவும் திசை திருப்பவும் போலி மார்க்சிஸ்டுகளான சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் முயலுகிறார்கள். அதற்காக நால் வருணப் பாகுபாட்டைப் போலவே, சாதிய அமைப்பு சமூகப் பொருளாதார வளர்ச்சியில் தானே உருவானது அதை நியாயப்படுத்தும் நோக்கம், தத்துவத் தேவையை ஒட்டி உருவானதுதான் இந்துமதம் என்று காட்டமுயன்றுள்ளனர்.

nambhuthiri
ஆரிய பார்ப்பன சனாதன மதத்தையே வேதமதம், பிராமண மதம், இந்து மதம் என்று மூன்று வெவ்வேறு மதங்களாகப் பிரித்துச் சித்தரிக்கிறார்கள் போலி மார்க்சிஸ்டுகள்.

“இந்துமதம்” என்றொரு மதம் இந்த நாட்டில் எப்போதுமே இருந்தது கிடையாது. இங்கே ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக இருந்து வருவதெல்லாம் நால் வருண – சாதீய சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஆரிய பார்ப்பன சனாதன மதம் தான். இந்தச் சமூக அமைப்பை உருவாக்கிய மதம் இதுதான். இதை நியாயப்படுத்தி, பாதுகாத்துக் கொள்வதற்காக அவ்வப்போது பல தத்துவ விளக்கங்கள் வேத, வேதாந்த உபநிடத, புராண, இதிகாச கட்டுக்கதைகளைக் கற்பித்து, புதுப்புது வடிவங்களை எடுத்து வருகிறது. அந்த ஆரிய – பார்ப்பன சனாதன மதத்தின் இப்போதைய “அவதாரம்” தான் இந்து மதம்.

ஆனால் மார்க்சிய வரலாற்று ஆய்வு என்கிற பெயரில் ஆரிய பார்ப்பன சனாதன மதத்தையே வேதமதம், பிராமண மதம், இந்து மதம் என்று மூன்று வெவ்வேறு மதங்களாகப் பிரித்துச் சித்தரிக்கிறார்கள் போலி மார்க்சிஸ்டுகள். இதன் மூலம் இன்றைய கேடுகெட்ட சாதி, மத அமைப்புக்குக் காரணமானவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் அல்லவென்றும் அவர்கள் உருவாக்கிய சமூக, மத அமைப்பு எப்போதோ மறைந்து விட்டது என்றும் சாதித்து அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கு எத்தணித்துள்ளனர்.

“பண்டைக்கால வருணாசிரம தர்மமும் அதில் இருந்த பிராமண ஆதிக்கமும் இன்றைக்கும் சமுதாய வாழ்க்கையில் இருப்பதாகக் கூறுவது உண்மையல்ல. பிராமண சாதி அந்தஸ்து இன்று மதிப்பையோ உரிமையையோ, சலுகைகளோ பெறுவதற்குப் பயன்படக் கூடியதல்ல. இன்று சாதீயமுறையில் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பிரபுக்களான இந்து உயர் சாதியினர்தான் சாதி ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்கள்தான் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் நடத்துகின்றனர், ஆதிக்கம் செலுத்துகின்றனர். உண்மையில் இது நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் தான் வர்க்க முரண்பாடுதான்” (மார்க்சிஸ்ட் ஏப் 1994 பக்:42), என்கிறார்கள், போலி மார்க்சிஸ்டுகள்.

இப்போது மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பார்ப்பன ஆதிக்கம் மறைந்துவிட்டது என்று சாதிக்கும் இந்த நோக்கத்துக்காகவே பின்வருமாறு போலி மார்க்சிஸ்டுகள் வாதம் புரிகின்றனர்.

“இந்தியாவில் வருணாசிரம தர்ம முறையிலான அடிமைச் சமுதாயம் நீடித்து நிலைத்து இருக்கவில்லை. விவசாயமும் அதனுடன் இணைந்த கைத்தொழில்களும் வளர்ச்சியடைந்த போது, வருணாசிரம தர்மம் வீழ்ச்சி அடையும் நிலைமை ஏற்பட்டது. அதில் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களுக்கெதிரான புத்த, சமண, அசீவக. சூத்திரசார்பு மதங்களின் எதிர்ப்பு இயக்கங்களின் விளைவாகவும் வருணாசிரம முறை அப்போதே நிலை குலையத் தொடங்கிவிட்டது…. சில இடங்களில் மன்னராட்சி முறை வலுவடைந்த போது சத்திரியர் கை மேலோங்கியது. பிராமணர்களின் மேலாதிக்கம் வீழ்ச்சியடைந்த போதிலும் பிராமணர்களின் செல்வாக்கு பொதுவாக நீடித்து வந்தது. இருப்பினும் நால் வருணமுறை சிதைந்தது. பொருளுற்பத்தியிலும், விவசாயம், பல்வேறு வகை கைத்தொழில்களிலும் கலையும் கலாச்சாரமும் வளர்ந்து சமுதாய வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. “தொழில்களின் பெருக்கத்திற்கேற்ப ஏராளமான சாதிகள் தோன்றின. பழைய நான்கு வருணத்தினர் எண்ணற்ற சாதியினராயினர். தொழில்கள் குலத்தொழிலாகியது. அதற்கேற்ப சாதிகள் உருவாயின. குலத்தொழிலும் சாதியும் மக்களின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அம்சங்களாயின. சாதிய முறையை எதிர்த்த பழைய மதங்கள், புத்த, சமண, அசீவக மதங்கள் புதிய நிலைமைக்குப் பொருந்தவில்லை. இந்நிலையில் சாதீயத்தை உட்கொள்ளக்கூடிய, அதனை நிரந்தரமானதும் தெய்வீகமானதும் என்று ஆக்குவதற்கான தத்துவங்களைக் கொண்ட மதமாக இந்துமதம் வளர்ந்து வந்தது. அது இந்திய மக்களின் பொருளியல்-கருத்தியல் வாழ்க்கையில் ஆழமான இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதன் தாக்கம் இன்றைக்கும் நீடிக்கிறது. இவ்வாறுதான் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் வரலாற்று வளர்ச்சியைப் புரிந்து கொள்கிறது” (1994 ஏப். மார்க்சிஸ்ட் பக்: 43-44).

ஆக, பொருளுற்பத்தி வளர்ச்சி காரணமாக ஒரே தொழில் செய்து வந்த மக்கள் தாமே ஒரு குலமாகி, ஒரு சாதியாகி விட்டனர். அல்லது வேலைப் பிரிவினை தவிர்க்க முடியாமல் சாதிகளை உருவாக்கிவிட்டது. அதுவும் சமூக முன்னேற்றத்துக்கு உதவியது. இதுதான் போலிக் கம்யூனிஸ்டுகளின் ஆய்வு முடிவு. இதையே மேலும் விரித்து, உறுதிப்படுத்தி பின்வருமாறும் எழுதியுள்ளனர்.

வேலைப் பிரிவினை தவிர்க்க முடியாமல் சாதிகளை உருவாக்கிவிட்டது. அதுவும் சமூக முன்னேற்றத்துக்கு உதவியது.
குஜராத் தலித் மக்கள்  மீதான தாக்குதல்: வேலைப் பிரிவினை தவிர்க்க முடியாமல் சாதிகளை உருவாக்கியதை மட்டும் சொல்லும் போலி மார்க்சிஸ்டுகள் ஆரிய நிறவெறிக்கும் வருண அமைப்புக்கும் உள்ள தொடர்ச்சியை மறைக்கிறார்கள்.

“பொருளுற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சி எண்ணற்ற வேலைப் பிரிவினைகளை உருவாக்கிவிட்டது. ஒரு தொழில் செய்தோர் பரம்பரையாக அதே தொழில் – செய்தனர். அவர்கள் ஒரு சாதியினராயினர். தொழில் பிரிவினையின் அடிப்படையில் அமைந்த இந்த சாதிப் பாகுபாடு பொருளுற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் சமுதாயம் ஒட்டுமொத்தமாக முன்னேறவும் உதவியது. அன்று சமுதாயத்தில் ஆதிக்க நிலையில் இருந்தவர்களும் ஆட்சியாளர்களும் இதனை நிரந்தரமாக்கி விட்டனர். செய்யும் தொழிலுக்கேற்ப கீழ்சாதி – மேல்சாதி முறை அமைந்தது.” (1994 ஜன. மார்க்சிஸ்ட், பக்:31)

இன்னும் ஒருபடி மேலே போய் சாதிமுறை உருவானதற்கு மக்களையே காரணம் காட்டி பழிபோடுகின்றனர். அவர்கள் கொடுத்த வாய்ப்பை சுரண்டும் வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொண்டு கர்மபலன், தெய்வீகம் எனக் கற்பித்து நிரந்தரமாக்கிவிட்டனர் என்றும் போலி மார்க்சிஸ்டுகள் கூறுகின்றனர்.

”அதிகரித்த விவசாய உற்பத்தி, குடியிருப்புகள், நகரங்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்ய எண்ணற்ற தொழில் பிரிவுகள் தோன்றின. ஒரு தொழில் செய்தோர் – அதனைக் குலத் தொழிலாகக் கொண்டனர். குலத்தொழில் முறை தோன்றியது. இதனால் அவரவர் ஒரு தொழிலுக்கு உத்திரவாதம் பெற்றனர். ஒரு தொழில் தெரிந்தவனுக்கு வேறு தொழில் தெரியாது. ஆகவே அவர் அதே தொழிலைத் தான் செய்தாக வேண்டும். ஆகவே நிலப்பிரபுக்கள்- மேல்தட்டு வர்க்கத்தினர் – இவர்களின் உழைப்பைக் குறைந்த கூலிக்குப் பெறும் வாய்ப்புப் பெற்றனர். அவர்களின் தத்துவாசிரியர்கள் ஒரு தொழில் செய்வோர் ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்று வரையறுத்து அதனை நிரந்தரப்படுத்தினர். கீழ்ச்சாதியில் பிறப்பது முன்பிறப்பின் கர்மபலன் சாதிவேறுபாடு தெய்வீகமானது என்றனர். இந்த முறையில் மக்கள் கடுமையான சுரண்டலுக்கு இரையாகினர்” (1994 ஏப். மார்க்சிஸ்ட் பக்: 12-13).

இப்படி, வேலைப்பிரிவினை, குலத் தொழிலானது மற்றும் பொருளுற்பத்தித் தேவை ஆகியவை காரணமாக சாதிய அமைப்பு தோன்றியது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று போலி மார்க்சிஸ்டுகள் சாதிக்கின்றனர்.

போலி மார்க்சிஸ்டுகள் தமது மேற்கண்ட ஆய்வுகள், முடிவுகளுக்கு எவ்வித சான்றுகளும் தரவில்லை; அதற்குப் பதிலாக இவை ஏதோ மார்க்சிய இயக்கவியல் – வரலாற்றியல் பொருள் முதல்வாத அடிப்படையிலானவை என்று வாதிடுகின்றனர். “சாதிப் பாகுபாட்டிற்கு இந்துமதம் தான் காரணம். இந்துமதத்தை ஒழித்துவிட்டால் சாதியை ஒழித்து விடலாம் என்பது தவறு என்கின்றனர். இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயம் வலுவடைந்த போது, பிராமண மதமும், வருணாசிரமமும் வீழ்ச்சியடைந்த பிறகு சாதிகள் தோன்றின. நிலப் பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் அரவணைக்கக் கூடியதாகத்தான் இந்துமதம் உருவாகியது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டில் யாராலும் நிறுவப்பட்ட மதமல்ல, நிலப்பிரபுத்துவ சாதீயவாழ்க்கை முறைக்குச் சாதகமாக பலரால் உருவாக்கப்பட்டவை தாம் இந்துமத தத்தவங்களாயின என்கின்றனர்.

“இந்துமதமும் சாதிகளும் தோன்றியதற்கான பொருளாயத, சமூகக் காரணங்களை புரிந்து கொள்ளாமல் அவை யாரோ சில சூழ்ச்சிக்காரர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவது என்ன பொருள் முதல்வாதம்? நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையும் சமுதாய வாழ்க்கை முறையும் தானே அதன் அடித்தளம். அதில்தானே சாதியும் இந்துமதமும் வேர் விட்டு வளர்ந்தது” (மேற்படி பக்:52) என வாதிடுகின்றனர்.

நால் வருண அமைப்பு முறையில் பிராமணர்களின் கட்டுங்கடங்காத அதிகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.
நால் வருண அமைப்பு முறையில் பிராமணர்களின் கட்டுங்கடங்காத அதிகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது.

இவை உண்மையில் மார்க்சிய வரலாற்றியல் பொருள் முதல்வாத போர்வை போர்த்தியது. அத்தத்துவத்தைக் கொச்சைப்படுத்தி யந்திரமுறையில் பிரயோகித்து ஆரிய – பார்ப்பன நலன் காக்கப் புனையப்பட்ட ஆய்வுகளும் முடிவுகளும் ஆகும். இந்தியாவின் சாதி, மத அமைப்பு தனிச் சிறப்பான தன்மைகளைக் கொண்டது என்று ஒப்புக் கொள்ளும் இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் அதற்கான அடிப்படைகளைத் தேடும் ஆய்வில் இறங்க மறுத்து வெறும் சூத்திரங்களைச் சொல்லுகின்றனர்.

நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும் சமுதாய வாழ்க்கை முறையும் இந்தியச் சாதி, மத அமைப்பின் அடித்தளம் என்பது உண்மைதான். ஆனால் இந்தியாவில் அவற்றுக்கு முன்பு நிலவிய வருணாசிரம பாகுபாடும், ஆரியப் பார்ப்பன சனாதனமும் அடங்கிய ஆண்டான் – அடிமை சமூக அமைப்பு தகர்த்தெறியப்பட்டு ஒரு புதிய உற்பத்தி முறையையும் சமுதாய வாழ்க்கை முறையும் நிறுவப்படவில்லை. “வேதமதம்”, “பிராமண மதம்” என்று போலி மார்க்சிஸ்டுகளால் அழைக்கப்படும் ஆரிய – பார்ப்பன சனாதன மதத்தின் மறுபதிப்பாகத்தான் ”இந்து மதம்” உருவானது. வருணாசிரமப் பாகுபாட்டின் தொடர்ச்சிதான் சாதிய அமைப்பு. இவற்றை ஒப்புக் கொள்ளும் வகையில் போலி மார்க்சிஸ்டுகளே எழுதிய சான்றுகளையும் நாம் காட்ட முடியும்.

”நால் வருண அமைப்பு முறையில் பிராமணர்களின் கட்டுங்கடங்காத அதிகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. அதன் எதிரொலி தான் சாருவாக சிந்தனைகள், அசீவக, புத்த, சமண தத்துவங்களின் தோற்றம். வர்ணாசிரம தர்ம கட்டுக்கோப்புகளை மீறும் போக்குகள் வெடித்தன. அடிமை முறையில் சிதைவுகள் ஏற்படத்துவங்கின. நிலப்பிரபுத்துவ முறை வளரத் தொடங்கியது. இந்த வளர்ச்சிப் போக்கில் பிராமண மதமும் பிராமணிய ஆதிக்கமும் முன்புபோல் நீடிக்க முடியவில்லை. புதிதாக வளர்ந்து வந்த நிலப்பிரபுத்துவ முறைக்கு ஏற்ப சில மாறுதல்கள் ஏற்பட்டன. பிராமண மதம் புதிய வடிவத்தை மேற்கொண்டது. அதனுடைய பல அம்சங்கள் தான் இப்போதைய இந்து மதத்தின் தத்துவங்களாக, சடங்குகளாக சம்பிராதயங்களாக மாறியுள்ளன….”

“இந்திய உபகண்டத்தில் வருணாசிரம அடிமை முறையில் சிதைவு ஏற்பட்ட போது நிலப்பிரபுத்துவ முறை வளரத் தொடங்கியது. இத்துடன் விவசாயத்திற்கும் குடியிருப்புக்கும் தேவையான ஏராளமான கைத் தொழில்களும் வளர்ச்சியடைந்தன. இவைகளை நிரந்தரமாகப் பாதுகாக்கும் பணியினைத் தான் பழைய பிராமண மதத்தின் புதிய பதிப்பாகத் தோன்றிய இந்துமதம் நிலப்பிரபுத்துவ அமைப்பை நிரந்தரமாக்கத் தேவையான தத்துவங்களை அது போதித்தது. கைத் தொழில்களையெல்லாம் குலத் தொழில்களாக்கியது. குலத்தொழில் அடிப்படையில் சாதிகள் உருவாகின. மிகவும் கடினமான வேலைகளைச் செய்தவர்கள் மிகவும் கீழான சாதியினராக்கப்பட்டனர். அது கடவுளின் கட்டளை என்று கூறப்பட்டது. குலத் தொழிலைப் பரம்பரையாகக் கொண்ட சாதியினராக இந்திய சமுதாயம் பிரிந்தது. எண்ணற்ற சாதியினராக இந்திய மக்கள் பிரிந்தனர்.” (மார்க்சிஸ்ட் 1993 பிப். பக்:33)

இதிலிருந்து தெரிவது என்ன? பிராமண மதத்தின் மறுபதிப்பாகவே இந்து மதம் உருவானது. குலத்தொழிலாகவும் சாதிகளாகவும் பிரிவதற்கு இந்துமதம் காரணமாக இருந்தது. வருணமுறையின் தொடர்ச்சியாகவே சாதிகள் ஏற்பட்டன என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலி மார்க்சிஸ்டுகளே ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது தானே. நான்காண்டுகளுக்கு முன்பு இன்னும் நேரடியாக பின்வருமாறு எழுதினர்.

“வைதீக மதத்திற்கெதிரான பிராமண ஆதிக்கத்திற்கெதிரான புத்த, ஜைன அசீவக மதத் தலைவர்களின் கருத்துப் போரும் வலுவடைந்தபோது, நான்கு வர்ண முறை முன்போல் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதில் சிதைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாயிற்று. அன்றைய சமுதாயத்தில் பொருளியில் கருத்தியல் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியினால் இம்மாறுதல் ஏற்பட்டது.”

கர்ம மார்க்கம் பற்றிய தத்துவத்தை உருவாக்கியது பிராமண மதமா? இந்து மதமா? இரண்டுமா?
கர்ம மார்க்கம் பற்றிய தத்துவத்தை உருவாக்கியது பிராமண மதமா? இந்து மதமா? இரண்டுமா?

“நான்கு வருண முறையில் சில சிதைவுகள்தான் ஏற்பட்டன. அது மறையவில்லை. அதே நேரத்தில் இந்திய சமுதாய வாழ்க்கையின் – உற்பத்தி முறையின் அடிப்படையாக அமைந்திருந்த சாதீய அமைப்பில் எந்த சிதைவும் மாறுதலும் ஏற்படவில்லை. மாறாக சமுதாய வளர்ச்சியோடு சேர்ந்து, புதிய புதிய தொழில்கள் உருவானபோது, புதிய புதிய சாதிகள் தோன்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் குலத் தொழில், பாரம்பரியத் தொழில், தொழில்களுக்கேற்ப வருமானத்தில் வேறுபாடு, வாழ்க்கை முறையில் வேறுபாடு, அவைகளின் சடங்கு சம்பிரதாயங்களில் வேறுபாடு, பிறப்பு முதல் இறுதி அடக்கம் வரை ஒவ்வொன்றிலும் இந்த வேறுபாடுகளைப் பார்க்கலாம். பிராமண மதத்தின் மறுமலர்ச்சியாக உருவான இந்துமதம் இச்சாதி வேறுபாடுகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் உட்கொண்டதாகப் பரிணமித்தது. தொடாமையும், தீண்டாமையும், உடன்கட்டை ஏறுதல் போன்ற அனைத்து சமூகக் கொடுமைகளும் இந்து மதத்தின் புனித தர்மங்களாக்கப்பட்டன. வாழ்க்கை முறையோடு இணைந்த ஒன்றாக ஆக்கப்பட்டது. சாதி இந்துமத ஆசாரத்தோடு இணைக்கப்பட்டது. பொருளியல் வாழ்க்கையினாலும் கருத்தியல் வாழ்க்கையினாலும் மக்கள் சாதியத்துடனும் மதத்துடனும் பின்னிப் பிணைக்கப்பட்டனர். பிராமண மதத்தின் தொடர்ச்சியான இந்து மதம் நிலப்பிரபுத்துவ காலத்தில் அதற்குப் பொருத்தமான அமைப்பாக விளங்கியது. (1990 நவ. மார்க்சிஸ்ட் பக்: 46 – 47)

இது நால் வருணமுறை சிதைந்து அதன் பின் சாதி முறை வந்தது என்றும் வேத – பிராமண – இந்து மதங்கள் ஒன்றின் மறைவுக்குப் பின் ஒன்றாகத் தோன்றியது என்றும் போலி மார்க்சிஸ்டுகள் வாதிடுவது பித்தாலட்டம் என்பதை நிருபிக்கும் வாக்கு மூலம். வருணமுறை முற்றாக சிதையாமல் அதோடு சாதி முறை தோன்றி வளர்ந்தது; “பிராமண மதத்தின் மறுவடிவமாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதுதான் இந்து மதம் என்றும் அவர்களே நான்காண்டுகளுக்கு முன்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதற்கு மேலும் பல ஆதாரங்களை அவர்களே முன்பு அளித்துள்ளனர்.

(நால் வருணமுறை) “இதுதான் இந்தியாவின் முதல் சாதிய முறை அல்லது சாதீயத் திரை போர்த்தப்பட்ட அடிமை முறை (1993 ஜூலை மார்க்சிஸ்ட் பக்:33) நால்வருண முறையின் இந்திய அடிமை முறையின் தத்துவங்கள் தான் வேதங்களும் உபநிடதங்களும் பிராமண ஆதிக்கத்திலான சாதீய முறையின் தத்துவங்களும் இவைகள் தான்” (1993 அக். மார்க்சிஸ்ட் பக்::34). “ஆரியர்கள் திராவிட மக்கள் மீது வெற்றி கொண்ட பிறகு நால்வருண சமுதாய முறை உருவாகியது. அதில் ஆரியர்கள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். வேதங்கள் அதன் வழிகாட்டியாக இருந்தன. அந்த சமுதாய வளர்ச்சிப் போக்கு வெறுக்கத்தக்க சாதீய முறையைத் தோற்றுவித்தது” (மேற்படி பக்:42) ”நால்வருண முறையும் பிராமண ஆதிக்கத்திலான சாதிமுறையும் இந்திய சமுதாயத்தில் நீண்ட நெடுங்காலம் மிக வலுவாக இருந்தன. சில நூற்றாண்டுகளில் இந்த முறை சில மாறுதல்களுடன் இந்தியா முழுவதும் பரவியது” (மேற்படி பக்:31)

நால்வருண முறையின் தொடர்ச்சியாகவே சாதீய முறை வளர்ந்தது என்பதை போலி மார்க்சிஸ்டுகளின் தலைமை குரு சங்கரன் நம்பூதிரியே பின்வருமாறு ஒப்புக் கொண்டார். “சமூகப் பொருளாதார முறை மிகவும் சிக்கலான போது பிராமணர்களும் ஷத்திரியர்களும் வைசியர்களுமாக பகிர்ந்து கொள்ளக்கூடிய உபரி அதிகரித்து வருவதும் அதை உற்பத்தி செய்கின்ற சூத்திர சாதியினரின் உழைப்பு மேலும் பல பிரிவுகளைக் கொண்டதாகவும் ஆனபோது, சாதிகளின் எண்ணிக்கையும் அவைகளுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்தன”. இப்படிச் சொல்லும் நம்பூதிரி, சாதி என்பதை வருணத்திற்கு இணையான மாற்றுச் சொல்லாகவும் பல இடங்களில் பயன்படுத்துகிறார். (ஆதாரம் இ.எம்.எஸ் எழுதிய இந்திய வரலாறு மார்க்சிய கண்ணோட்டம்) அவரது சீடர் பி.ஆர்.பி. பின்வருமாறு எழுதியுள்ளார். “நால் வருணமுறையிலேயே சாதிப் பாகுபாடு முளைவிடத் தொடங்கியது. இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடையத் தொடங்கிய 14-ம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் அது சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது.” (1993 ஜன மார்க்சிஸ்ட் பக்: 31)

ஆக, நால் வருணமுறையும் சாதீய முறையும் ஒரே சமயத்தில் நிலவியதையும், வேத – உபநிட தத்தத்துவங்களே சாதி முறைக்கான தத்துவங்களாக உள்ளதையும் போலி மார்க்சிஸ்டுகள் ஒப்புக் கொள்கின்றனர். சாதீய முறையும், இந்து மதமும் எப்படித் தோன்றின என்பதில் மட்டுமல்ல, எப்போது தோன்றின என்பதிலும் இவர்கள் முன்னுக்குப்பின் முரணாக எழுதிப் பித்தாலட்டம் செய்கின்றனர்.

caste1
நால் வருணத்தினருக்கு தொண்டூழியம் புரியும் மக்கள் தீண்டப்படாத சண்டாளர்கள் – தாழ்த்தப்பட்ட மக்கள்……..

“பிராமண மதமும் இந்து மதமும் ஒன்றுதான் என்றோ அல்லது அதிலிருந்து தோன்றியதுதான் இந்துமதம் என்றோ கூறுவது உண்மையல்ல. பிராமண மதம் நால் வருணமுறையின் மதம்; கி.மு. ஆயிரம் ஆண்டு காலத்தின் மதம். நிலப்பிரபுத்துவம் வலுவடையாத காலத்தின் மதம். நிலப்பிரபுத்துவம் வலுவடைந்த காலத்தில் மன்னர்களின் ஆதரவுடன் தோன்றி வளர்ந்ததுதான் இந்து மதம், இந்தியாவின் மத்திய காலமான கி.பி. 320-க்குப் பின் தோன்றிய மதம் இந்துமதம் “…………… “இவை இரண்டும் மாறுபட்ட காலங்களிலும் சமூகப் பின்னணியிலும் தோன்றிய மதங்கள். இரண்டு மதங்களுக்கும் சுமார் 2500 ஆண்டு கால இடைவெளி கொண்டது “.

“இந்து மதம் இந்திய சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. பெரும்பான்மையான மக்களைக் கவர்ந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளாக அது நிலை பெற்றுள்ளது” (1994 ஜன மார்க்சிஸ்ட் பக்:54)

பிராமண மதத்தின் மறுபதிப்பாக மறுமலர்ச்சியடைந்தது, அதன் புது வடிவம் தான் இந்து மதம் என்று முன்பு கூறி விட்டு ஓராண்டுக்குள் இரண்டும் ஒன்றல்ல, அதிலிருந்து இது தோன்றியதல்ல என்று பித்தாலட்டம் செய்வது இருக்கட்டும். இதில் குறிப்பிடும் காலங்களை கணக்கிட்டுப் பாருங்கள். கி.பி. 320-க்குப் பின் தோன்றியதாகக் கூறப்படும் இந்து மதம் இந்தியாவில் நிலைபெற்று 2000 ஆண்டுகளாகி விட்டதாகக் கூறுவது பித்தாலாட்டம் இல்லையா? இப்போது என்ன கி.பி.2320-லேயா வாழ்கிறோம்? அதிருக்கட்டும். பிராமண மதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடைவெளி 2500 ஆண்டுகள் என்று இன்னொரு பித்தாலாட்டம். கி.பி. 320-க்குப் பின் இந்து மதம் தோன்றியது என்கிறார்கள். அதில் இருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிராமண மதம் தோன்றியது என்றால், கி.மு. 2180-இல் என்றாகிறது. ஆனால் சில வரிகளுக்கு முன்புதான் பிராமண மதம் கி.மு. ஆயிரம் ஆண்டு மதம் என்று எழுதியுள்ளனர். அதற்குச் சில வரிகளுக்கு முன்பு, ”இந்திய நாட்டில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகளில் தோன்றிய மெளரிய ஆட்சிக் காலத்திலேயே நிலப்பிரபுத்துவ முறை தோன்றியது” என்று எழுதியுள்ளனர். இதன்படியும் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்த பின் அதாவது கி.பி.320-க்குப் பின் தோன்றியது இந்து மதம் என்ற படியும் பார்த்தால் மேலும் குழப்பம் ஏற்படுகிறது. அதாவது நிலப்பிரபுத்துவம் தோன்றிய பிறகு அது வலுவடைய 3320 ஆண்டுகள் பிடித்தன என்றாகிறது. இதோடு பிராமண மதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடைவெளி 2500 ஆண்டுகள் என்பதையும் ஒப்பிட்டுப்பார்த்தால் பிராமண மதம் தோன்றுவதற்கு முன்பே நிலப் பிரபுத்துவம் தோன்றி விட்டது என்றாகிறது. இன்னுமொரு வேடிக்கை ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியதாக இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் கூறுவது 3500 ஆண்டுகள் என்பதோடு ஒப்பிட்டால் ஆரியர்களின் வருகைக்கு முன்பே பிராமண மதமும், அதற்கு முன்பே வேதமதமும் இந்தியாவில் இருந்ததாகிறது!

அது மட்டுமல்ல. 1993 ஜனவரியில் இப்போலிகளின் தத்துவ ஏடு, 14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் இந்திய சமுதாயத்தில் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது. சாதிய அமைப்பு சமூகம் முழுவதையும் பற்றிக் கொண்டது என்று எழுதியது. இது மேலும் மேலும் முரண்பாடானது. இதன் படி இதற்குப் பிறகு தான் இந்து மதம் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் இந்து மதம் 2000 ஆண்டுகளாக நிலை பெற்றுள்ளதாகவும் கூறுகிறார்கள். அப்படியானால் கி.பி. 3400-லேயா நாம் வாழ்கிறோம்? கி.மு. 3000-த்தில் தோன்றி கி.பி. 14-ம் நூற்றாண்டில் தான் நிலப்பிரபுத்துவம் வலுவடைந்தது என்றால் அதன் வளர்ச்சி 4400 ஆண்டுகாலம் பிடித்ததா? நிலப் பிரபுத்துவமும், சாதி அமைப்பும் வலுவடைந்து, சமூகம் முழுவதும் பரவி 600 ஆண்டுகள் தானாகிறதா? இவையெல்லாம் எண்ணிக்கை தெரியாத குற்றமா? வேண்டுமென்றே செய்யும் பித்தலாட்டமா?

ஏற்கனவே எடுத்துக் காட்டியவாறு, பிராமண மதம், பிராமண ஆதிக்கம், நால் வருணமுறை ஆகியவற்றை எதிர்த்துப் புத்த, அசீவக சமண மதங்கள் போராடி, அவற்றை வீழ்த்திய பிறகு தான் சாதீய அமைப்பு தோன்றியது என்பதுதான் போலி மார்க்சிஸ்டுகளின் இப்போதைய நிலைப்பாடு. ஆனால் இப்படிச் சொல்வதற்கு சில மாதங்கள் முன்பு வரை, புத்த, சமண ஆசீவக மதங்கள் தோன்றுவதற்கு முன்பே சாதிய முறை இருந்ததாகவும். நால் வருணமுறையோடு சாதீய முறையையும் இம்மதங்கள் எதிர்த்ததாகவும், இந்து மதத்திற்கு முன்பாக பிராமண மதமே கர்மபலன் கற்பித்து சாதிமுறையை நியாயப்படுத்தியதாகவும் இவர்களே எழுதி வந்தனர்.

“சூத்திரர்கள் கீழ் சாதியினராயினர். அவர்கள் மோட்சம் அடைய பிராமண மதம் வழிகாட்டியது. கரும மார்க்கம் – மேல் வருணத்தினரின் நல்வாழ்வுக்காக சூத்திரர்கள் – கீழ்சாதியினர் அவரவர் குலத்தொழிலைப் பிரதிபலன் பாராமல் நியாயமான ஊதியம் கேட்காமல் செய்வது. இதன் மூலம் மேல் சாதியினருக்கும் சேவகம் புரிவது- இதுதான் மோட்சத்தை அடையும் கரும மார்க்கம். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய உபகண்டத்தில் உருவான சமுதாய வாழ்க்கை முறை இது” (1993 ஜூலை மார்க்சிஸ்ட் பக்: 37).

“நால் வருணத்தினருக்கு தொண்டூழியம் புரியும் மக்கள் தீண்டப்படாத சண்டாளர்கள் – தாழ்த்தப்பட்ட மக்கள்…….. இவர்கள் மோட்சத்தை அடைய கர்ம மார்க்கம் – கடமையாற்றுவது, மேல் சாதியினர் இடும்பணிகளைச் செய்வது இது ஒன்றுதான் மார்க்கம் – இவ்வாறு தான் அடைய வழிகாட்டியது இந்துமதம் (1994 ஜன. மார்க்சிஸ்ட் பக்: 48).

ஆறு மாதத்தில் புரட்டிப் புரட்டிப் போலி மார்க்சிஸ்டுகள் கூறுவதில் எது உண்மை? கர்ம மார்க்கம் பற்றிய தத்துவத்தை உருவாக்கியது பிராமண மதமா? இந்து மதமா? இரண்டுமா? அது மட்டுமல்ல பிராமண மத, பிராமண ஆதிக்க வீழ்ச்சிக்கு பின்பு சாதிமுறை உருவாகவில்லை. அவற்றின் காலத்திலேயே நிலவி இருக்கிறது என்பதை இதன்மூலம் ஒப்புக் கொள்கின்றனர்.

“புத்த ஜைன மதங்களும் பிராமண மதத்தையும் பிராமண ஆதிக்கத்தையும் வருண, சாதிப் பாகுபாட்டையும் எதிர்த்துத் தோன்றிய மதங்கள்” “பிராமண மதத்தையும். பிராமண ஆதிக்கத்தையும் சாதி முறைகளையும் இவர்கள் (அசீவகர்கள்) கடுமையாக எதிர்த்தனர். கருமவினை பற்றிய பிராமணர்களின் தத்துவ விளக்கங்களை இவர்கள் மறுத்தனர்” (1993 டிசம் மார்க்சிஸ்ட் பக்: 36-37) என்கின்றனர்.

இதன் மூலம், சாதிப் பாகுபாடு, புத்த, ஜைன, அசீவக மதங்களின் தோற்றத்துக்கு முன்பே நிலவின. அம்மதங்கள் தோன்றிய பிறகு உருவானதல்ல என்பதை போலி மார்க்சிஸ்டுகளே ஒப்புக் கொள்கின்றனர். இறுதியாக இவர்களின் இன்னொரு பழைய வாக்குமூலத்தைப் பாருங்கள்.

(கி.மு. மூன்றாவது நூற்றாண்டாகிய) “இக்காலத்தில் தான் பல மதங்களின் வரலாறு ஆரம்பமாகிறது. இது வரை பல்வேறு கால கட்டங்களில் வேத மதம், வைதீக மதம், வருணாசிரம தர்மம், ஆரிய தர்மம், சனாதன தர்மம் என்று வெவ்வேறு பெயர்களில் அறியப்பட்டாலும் சாராம்சத்தில் அவை அனைத்தும் ஒன்று தான். கி.மு. முதலாவது ஆயிரம் ஆண்டில் அது சகல வருண – சாதி முறைகளையும் சடங்குகளையும் அனுஷ்டிக்கிற பிராமண மதமாயிற்று” (1990 நவ மார்க்சிஸ்ட் பக்: 46).

ஆக, சாதி – மத அமைப்பை உருவாக்குவதில் திட்டமிட்ட கொள்கையும் சூழ்ச்சியும் ஆரிய பார்ப்பனர்கள் பயன்படுத்தியதைப் போலவே இந்தப் போலி மார்க்சிஸ்டுகள் செய்கின்றனர் என்பது தெரிகிறது.

– தொடரும்

புதிய கலாச்சாரம், ஜனவரி 1995.

மேலும் படிக்க :

மின்சாரம் வேண்டுமா ? மக்கள் அதிகாரமே தீர்வு !

3

பிணந்திண்ணிகளாய் மின்வாரியம்! மிருக சாட்சிகளாய் காக்கிப் போலீசு !
மக்கள் அதிகாரமே தீர்வு! நிரூபித்துக் காட்டிய மக்கள்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடியது வார்தா புயல். ஏற்கனவே கடந்த ஆண்டு மழைவெள்ளத்தின் போது செயலற்றுக் கிடந்த தமிழக அரசு, வர்தா புயல் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என முன் கூட்டியே தெரிந்தும் எவ்வித முன் எச்சரிக்கை, முன்ஏற்பாடுகளையும் செய்யாமல் அரசாங்கமும் அதிகாரிகளும் அம்மா’வின் சமாதியைச் சுற்றி வந்தனர். முறிந்து கிடந்த பல ஆயிரம் மரங்களில் பெரும் பகுதியை மக்களே வெட்டி அப்புறப்படுத்தினர். காக்கிப்போலீசு போட்டசட்டை கசங்காமல் வேடிக்கைப் பார்த்து நின்றனர். சென்னையின் புறநகர்ப் பகுதிகளான காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் அரசின் மராமத்து நடவடிக்கை முற்றிலும் முடங்கிப் போய் கிடந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு சரி செய்யப்படாமல் இருளில் மூழ்கிக் கிடந்தது. திருநின்றவூரை ஒட்டிய பாக்கம் வரையிலான பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி மக்கள் அதிகாரம்தான் தீர்வு என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

வர்தா புயலின் சேதங்களை சரி செய்யும் பு.மா.இ.மு தோழர்கள் ( கோப்புப் படம் )
வர்தா புயலின் சேதங்களை சரி செய்யும் பு.மா.இ.மு தோழர்கள் (கோப்புப் படம்)

திருநின்றவூர் நாசிக் நகர், ஸ்ரீபதிநகர், குமரன் நகர்,சீனிவாச நகர், சம்பந்தம் நகர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதை சரி செய்ய மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே பகுதியில் வாழும் மக்கள் அதிகாரம் சென்னை மண்டல உறுப்பினர் தோழர் எழில்மாறன் பகுதிமக்களை அழைத்துப்பேசி மின்வாரியத்தில் புகார் அளித்தார். அதன் பின்னும் நடவடிக்கை ஏதும் இல்லை. மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு பலமுறை முறை தொடர்பு கொண்டபோதும் அவர் போனை எடுக்கவே இல்லை. இந்த நிலையில் பகுதி மக்களை இணைத்துக்கொண்டு தோழர்.எழில்மாறன் வீடு வீடாகச் சென்று “ வீதியில் இறங்கிப் போராடாமல் மின்சாரம் கிடைக்காது” என்பதை வலியுறுத்தியும் உணர்வூட்டியும் பேசினார்.

இந்த நிலையில் நாசிக் நகர் பகுதி மக்கள் 17.12.2016 மாலை ஆறு மணி அளவில் பெரிய பாளையம் சாலையை மறித்து போராட்டத்தில் இறங்கி தோழர் எழில்மாறனை வழி நடத்த அழைத்தனர். இப்பிரச்சினைக்கு காரணமே தோற்றுப் போன , எதிர்நிலை சக்தியாகிப்போன இந்த அரசுக்கட்டமைப்பை வீழ்த்தாமல் நமக்கு விடிவு இல்லை என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டு முன்னணியில் நின்று போராட்டத்தை வழிநடத்தினார். மக்களும் ஆர்ப்பரித்து முழக்கமிட்டு சாலையை முடக்கினர். அரைமணி நேரம் கழித்து கடுப்புடன் வந்த போலீசு “கலைந்து போங்க, EB-யில பேசலாம், எல்லா இடத்துலேயும் பிரச்சினையா இருக்கு,அவங்க என்னதான் செய்வாங்க” என மின்வாரியத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசி போராட்டத்தை கலைக்க முயன்றது. இதை ஏற்க மறுத்த மக்கள் மின்சாரம் வராமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம், மின்வாரிய அதிகாரிகளை இங்கே வரச்சொல் என உறுதியாகச் சொல்லி சாலையிலே அமர்ந்தனர்.
உடனே தள்ளிப்போய் நின்று போனில் யாரிடமோ பேசிவிட்டு வந்த போலீசு “நாளை காலை 11 மணிக்கு கரண்ட் வந்துவிடும், கலைந்து போங்க” என்று மிரட்டிப் பார்த்தது போலீசு. மிரட்டலுக்கு அஞ்சாமல் மக்கள் உறுதியுடன் போராடினர். போலீசுக்கும் மக்களுக்குமான வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒரு பகுதியில் மின்சாரம் வந்துவிட்டது. மக்களின் போராட்டத்திற்கு பணிந்த மின்வாரியம் மையத்தொகுப்பில் இருந்து நேரடியாக மின்சாரத்தை வழங்கியது. மற்றொரு பகுதியில் மின் கம்பங்கள் முறிந்து கிடந்ததால் மறு நாள் காலை அவகாசம் கேட்டது மின்வாரியம். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் “நாளை காலை 11 மணிக்கு கரண்ட் வரவில்லை என்றால் 11.30 மணிக்கு சாலை மறியல் இங்கு நடக்கும்” என எச்சரிக்கை விடுத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

வர்தா புயலின் சேதங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் மீனவர்கள் (கோப்புப் படம்)
வர்தா புயலின் சேதங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் மீனவர்கள் (கோப்புப் படம்)

5 நாட்களாகமின்சாரம் இன்றி கொசுக்கடியில் தண்ணீர் கூட இல்லாமல் கேட்பாரற்று கிடந்த மக்கள் வீதியில் இறங்கிப் போராடிய ஒரு மணி நேரத்தில் தங்கள் அதிகாரத்திற்கு போலீசையும் மின்வாரியத்தையும் பணிய வைத்து தங்களின் உத்தரவை நிறைவேற்ற வைத்தனர். மறுநாள் காலையிலும் மக்கள் விடுத்த கெடுவிற்கு பயந்து 10.30 மணிக்கெல்லாம் மின்சாரத்தை வழங்கியது மின்வாரியம். மறுநாள் 18.12.2016 அன்று சரியாக காலை 11 மணியளவில் ஸ்ரீபதிநகர், குமரன் நகர், சீனிவாசநகர், சம்பந்தம் நகர் ஆகிய பகுதிகளைச் செர்ந்த மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக தோழர்.எழில்மாறனை அழைத்துக்கொண்டு அதே பெரியபாளையம் சாலையை மறித்தனர்.

தோழர் எழில்மாறன் முழக்கமிட்டதை உற்சாகமாக மக்கள் கேட்டு முழக்கமிட்டனர்.“ கரண்டு இல்லை,தண்ணீர் இல்லை, டாஸ்மாக் தண்ணீர் மட்டும் ஆறாக ஓடுது” என்ற முழக்கத்திற்கு மக்கள் எழுந்து நின்று கைதட்டி விசிலடித்து ஆர்ப்பரித்தனர். இதைக் கண்டு பீதியடைந்த போலீசு மக்கள் அதிகாரம் தோழர்கள்தான் வழி நடத்துகிறார்கள் என்று அறிந்து “ நீதான் நேற்றும் மக்களை தூண்டிவிட்டு ரோட்ட மறிக்குறே, இனைக்கும் ரோட்ட மறிக்குறே, இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, உன்னை கைது செய்வேன்” என்று அநாகரீகமாக மிரட்டி தோழர் எழில்மாறனை இழுத்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரை மக்கள் சூழ்ந்து கொண்டு “ அவரை எப்படி லூசுன்னு சொல்லுவே, நீ தான்யா லூசு, இங்கு நீ எதுக்கு வந்தாய், EB காரனை வரசொல்லு, தப்பு பண்ணது அவன், EB காரனால தான் ரோட்டை மறிச்சோம், அவந்தான் சட்டம் ஒழுங்கை கெடுத்தவன் அவனைப் போய் அரெஸ்ட் பண்ணு” என்று தோழர் எழில்மாறனை மக்களிடமிருந்து பிரிக்கவிடாமல் தடுத்தனர்.

காட்சிகள் மாறின. எத்தனையோ முறை போன் செய்த போதும் எடுக்காத உதவிப் பொறியாளர் ஓடி வந்தார்.தோழர் எழில்மாறனின் கையைப் பிடித்துக் கொண்டு “இன்று மாலை 6 மணிக்கு கரண்ட் வந்துவிடும்” என்று கெஞ்சினார். இன்று மாலை 6 மணிக்குள் மின்சாரம் வராவிட்டால் மீண்டும் சாலையை மறிப்போம் போராட்டம் தொடரும் எச்சரிக்கை செய்துவிட்டு மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கினர். சரியாக 6 மணிக்கு முன்னரே மின்சாரம் வந்தது.
பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது வீதியில் இறங்கிப் போராடுவதில்தான் உள்ளது என்பதை மக்களின் போராட்டம் நிரூபித்துக் காட்டியது. போலீசு சொன்னது போல மக்களை போராடத் தூண்டிய தோழர் எழில்மாறனின் வயதோ 67. தன் உடலில் உள்ள பல்வேறு உபாதைகளையும் பொருட்படுத்தாமல் துடிப்போடு போராடும் இளைஞரான அவருக்கு பகுதி மக்களின் பாசமும் பாராட்டுக்களும் மலை போல குவிகின்றன. தோழரின் வீட்டுக்கே வந்து மக்கள் தங்கள் வெற்றியின் மகிழ்ச்சியை நெகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். பகுதியில் நடந்து செல்லும் போது இதுவரை பார்த்திராதவர்கள் எல்லாம் பார்த்துப் பேசுவதும், பேசிராதவர்களெல்லாம் பெண்கள் உட்பட கைக்கொடுத்து பேசுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்போதும் வெளிநாட்டில் பணி புரியும் இப்பகுதியைச் சார்ந்த ஒரு இளைஞர் இங்கு இருக்கும் போது 5 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து இருக்கிறார். போராட்டத்திற்கு தோழர் எழில்மாறன் தலைமை தாங்கியதை கேள்விப்பட்டு நேரம் கூட பார்க்காமல் இரவில் வந்து வாழ்த்திவிட்டுப்போனார். சாலையில் நடந்து செல்லும் போது போதையில் கிடந்த ஒருவர் தோழரை “ உங்களை போலீசு லூசுன்னு சொன்னான், நான் திருப்பி நீ தாண்டா லூசுன்னு திட்டுனேன்” என்று கூறியவரிடம் “எல்லாம் சரிதான் தண்ணி அடிப்பதை கொஞ்சம் நிறுத்துங்களேன் ” என்றிருக்கிறார். அவர் மீண்டும் அடுத்த நாள் நிதானமான நிலையில் வீட்டிற்கு வந்து இனிமேல் நான் குடிக்கமாட்டேன் என்று சொல்லியுள்ளார். பள்ளி மாணவர்கள் “அடுத்த போராட்டம் எப்ப தாத்தா, நாங்க தயார்” என்று தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். போராட்டம்தான் மகிழ்ச்சி என்ற மார்க்சின் வரிகளை நினைவுபடுத்துவதாக அமைந்தது இச்சம்பவம்.

புயலில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களைவிட தரமற்று பராமரிப்பு இன்றி கிடந்த மின்கம்பங்களே அதிகம் முறிந்துள்ளன. புதிய மின்கம்பங்களை மக்களே தங்கள் சொந்த செலவில் வாங்கி மாட்டு வண்டியில் அவற்றைத் எடுத்துச் சென்று நட்டனர். மின்கம்பங்களை ஊன்ற தற்காலிகமாக வந்திருந்த ஆந்திரத் தொழிலாளர்களுக்கும் உணவினை மக்கள் தான் கொடுத்தனர்.

மின்வாரியமோ, அரசோ எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல் புயல்பாதிப்பை பயன்படுத்தி எரியும் வீட்டில் பிடுங்கியது மிச்சம் என்று லஞ்சம் கொடுக்கும் இடங்களுக்கு முதலில் மின்சாரம் வழங்குது என கூச்ச நாச்சமின்றி செயல்படுகிறது. தேர்தலுக்காக ஓட்டுகேட்டு வந்த பலரும் மக்களின் பிரச்சினையை தீர்க்க முன்வராமல் மின்வாரியத்துக்கு லஞ்சம் வாங்கித்தரும் புரோக்கர்களாக செயல்பட்டனர். நம்மை ஆளும் தகுதியை அரசு இழந்துவிட்டது, தான் செய்ய வேண்டிய கடமையை செய்ய முடியாமல் தோறுப் போய்விட்டது, மக்களின் வரிப்பணத்திற்கு வேலை செய்யாமல் லஞ்சப்பணத்திற்கு வேலை செய்து மக்களுக்கு எதிரானதாக மாறிவிட்டது. இனியும் இந்த அரசுக்கட்டமைப்பை நம்பிப் பலனில்லை.

மக்கள் அதிகாரம்தான் தீர்வு என்பதை மக்கள் நடைமுறையில் நிரூபித்துள்ள போராட்டம் இது !

( ஸ்ரீபதி நகரில் சேதமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்கள் )

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை, 91768 01656.

தோழர் கோட்டை நினைவேந்தல் பொதுக்கூட்டம்

0

தோழர்  கோட்டை நினைவேந்தல்  பொதுக்கூட்டம் ! கொடிக்கம்பம் – உருவபடம் திறப்புவிழா !

துரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், முண்டுவேலம்பட்டியில் 15.12.2016 அன்று மாலை 4:00 மணியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பில், கடந்த 18.11.2016- அன்று மரணமடைந்த  தோழர் கோட்டை அவர்களுக்கு நினைவேந்தல் பொதுக்கூட்டம்   நடைபெற்றது.

tholar kottai (1)விவசாயிகள் விடுதலை முன்னணி  உசிலை வட்ட செயலாளர் தோழர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க தோழர் துரைசண்முகம், மக்கள் அதிகாரம் தேனிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், திருமங்கலம் வி.வி.மு அமைப்பாளர் தோழர் வீரணன், செக்கானூரணி  வி.வி.மு தோழர் ஆசை,  மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் தோழர் வழக்கறிஞர் பா.நடராஜன், முண்டுவேலம்பட்டி கிராம நலக்கமிட்டி தலைவர் சோலை, சி.பி.எம். தோழர் முத்துப்பாண்டி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் தோழர் ஆர்.பாண்டி, மற்றும் 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கம் செயலாளர் திரு.பெருமாள் ஆகியோர் இரங்கல் உரை நிகழ்த்தினர். மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி நிறைவுரை நிகழ்த்தினார். தேவாரம் பகுதி தோழர்கள் கலைநிகழ்ச்சி நடத்தினார்கள்.   இந்த நினைவேந்தல் பொதுக்கூட்டம் பொது வாழ்க்கையில் நமது கடமை என்ன என்பது குறித்து அந்தப் பகுதி மக்களை சிந்திக்க வைத்துள்ளது.

தோழர் சந்திரபோஸ் தன்னலம் கருதாமல் பொதுநலத்துடன் அமைப்பை உயர்த்திப் பிடித்து  செயல்பட்டு மறைந்த தோழர் கோட்டைக்கு சிவப்பஞ்சலி செலுத்தி, தனது தலைமை உரையை துவங்கினார். வி.வி.மு அமைப்பு  உசிலம்பட்டியில் நடத்திய  எழுச்சிமிகு போராட்டங்களின் வாயிலாக தி.மு.க அமைப்பில் இருந்த  தோழர் கோட்டை  வி.வி.மு அமைப்பில் சேர்ந்ததையும், அதன் பிறகு தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு  இன்றுவரை  விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதி வாழ்ந்ததையும் நினைவுகூர்ந்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்த உறுதி ஏற்போமென பேசினார்.

tholar kottai (4)இரங்கல் உரை நிகழ்த்திய முண்டுவேலம்பட்டி கிராம நலக்கமிட்டி தலைவர் சோலை, தோழர் கோட்டை பொதுச்சொத்தை காப்பாற்றுவதிலும்   அதனை பராமரிப்பதிலும் மிகவும் திறமைவாய்ந்தவர். அவர் பசி அறியாதவர்  பொது  வேலைகளுக்குச்  செல்லும்போது அந்த வேலையை முடிக்காமல் உணவு அருந்தமாட்டார். அதிகாரிகளைச் சந்தித்து மக்களின் உரிமைகளை  பேசுவதில்   மிகவும் துணிச்சலானவர்  என்று அவருடன் இருந்து செயல்பட்ட நினைவுகளை பதிவு செய்தார்.

பார்வர்ட் பிளாக் ஆர்.பாண்டி தனது இரங்கல் உரையில் தோழர் கோட்டை இறப்பதற்கு முதல் நாள் மோடியின் கருப்பு பணம் மோசடி நாடகத்தை அம்பபலப்படுத்தி பிரசுரம் வீடுவீடாக வினியோகம் செய்தது மட்டுமல்லாமல்   பத்துக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த ஒரு இடத்தில் அந்த பிரசுரத்தை சத்தமாக வாசிக்க ஆரம்பித்தார். ஏனென்று கேட்டதற்கு அவங்க நோட்டீசு வாங்க மாட்டங்க, வாங்கினாலும் படிக்க மாட்டாங்க அதனால்தான்  நானே வாசிக்க ஆரம்பித்தேன், இப்ப எல்லோரும் கேட்டுத்தான ஆகணும் என்று கூறினார். கோட்டை அமைப்பில் இணைவதற்கு முன் போதைக்கு அடிமையாகி இருந்தார், அமைப்பிற்கு வந்தபின் வி.வி.மு அவரை  நல்வழிப்படுத்தி ஒரு சிறந்த மனிதனாக மாற்றி விட்டது.

சி.பி.எம்.தோழர் முத்துப்பாண்டி தனது உரையில் நல்ல தோழரை, நல்ல நண்பரை, நல்ல உறவினரை இழந்து விட்டேன். கம்யூனிச கொள்கையை 100 சதவீதம் நிலை நாட்டியவர். முதலாளித்துவ சட்டத்தை உடைத்தெறிந்து  ஊர் பொது திருமணமண்டபம் கட்டுவதில் முழுமையாக ஈடுபட்டவர்.

வி.வி.மு தோழர்  வீரணன் தனது உரையில் கருத்தாலும் கரத்தாலும் உழைக்கின்ற  முண்டுவேலம்பட்டி மக்களே, தோழர் கோட்டை உங்கள் ஊரில் ஒரு பொதுக்கூட்டம் போடவேண்டும் என்று பலமுறை பேசினார். ஆனால் இந்த பொதுக்கூட்டம் அவருக்காகவே  இன்று நடைபெறுகிறது. பாட்டாளி வர்க்க அரசு அமைந்தால்தான் அனைத்து மக்களும் நலமாக வாழமுடியும் என்ற தோழர் கோட்டையின் நினைவுகளை நனவாக்க அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர வி.வி.மு  அமைப்பில் இணைந்து செயல்பட வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தார்.

தோழர் . மோகன்
தோழர் . மோகன்

58 கால்வாய் செயலாளர்  ஐயா.  பெருமாள் தனது உரையில்  தோழர் கோட்டை சஞ்சீவி இலை போல் இந்தப் பகுணியில் செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அவரைப் போல் நாமும் விவசாயிகளின் நலனை உயர்த்திப் பிடிப்போம் சபதமேற்போம், என்றார்.

தோழர். மோகன் தனது உரையில் வாழும்போது  செத்துக் கிடக்கும் உள்ளங்கள் இருக்கும் மக்களிடையே,  தோழர். கோட்டை செத்தும்  எல்லோருடைய மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  நல்ல பண்புகளோடு வாழ்வது  உலகத்திலேயே பெருமையானது.  பொது வாழ்க்கையில் ஈடுபடுவதே  கோட்டையின் சிறப்பு. பொதுவுடமை சிந்தனை உள்ளவர்கள் எப்பொழுதுமே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்கள்.  தோழர் கோட்டையும் பொதுவுடமை சிந்தனைக்கும், தோழமைக்கும் உரித்தானவர். தோழர் கோட்டையை மண்னில் புதைத்துவிட்டோம் அவருடைய சிந்தனையை நம்முடைய அனைவரின் சிந்தனையில் புதைத்து  அவர் விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்வோம் என்று பேசினார்.

தோழர் துரைசண்முகம் தனது உரையில் இந்த ஊரில் தோழர் கோட்டை மையப்புள்ளியாக இருந்து சமூக தொண்டு செய்து வர்க்க உணர்வோடு பண்பாட்டு உணர்வோடு கடைசிவரை வாழ்ந்து இறந்துள்ளார்.  ஓட்டுக்கட்சி அரசியலிலிருந்து வந்த தோழர் கோட்டையை வி.வி.மு அமைப்பு ஒழுக்கமுள்ள சமூக மனிதனாக மாற்றியுள்ளது.  தோழர் கோட்டை அன்றிலிருந்து சிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்துள்ளார். கம்யூனிஸ்ட்கள்  சாவைக்கண்டு பயப்படுவதில்லை. தியாகம் அற்பணிப்போடு கொள்கையை உயர்த்திப்பிடித்து வாழும் கம்யூனிஸ்ட்டுகள்தான் கடைசிவரை உழைக்கும் மக்களுக்கு பாதுகாவலர்களாக இருக்க முடியும்.

தோழர் . துரை. சண்முகம்
தோழர் . துரை. சண்முகம்

நமது நாட்டில் மக்களுக்கு நல்ல அரிசிக்கு வழியில்லை, மோடி வல்லரசு கனவு காண்கிறார், இன்று படித்த இளைஞர்கள்   ஏதுமற்றவர்களாக  மாற்றப்பட்டுள்ளார்கள். வ.உ.சி மரணப்படுக்கையில் இருக்கும்போது தன் பிள்ளைகளை  பார்த்து உங்களுக்கு எதுவும் சேர்த்து வைக்கவில்லையே என்று கவலைப்படவில்லை.  “இந்த அடிமை இந்தியாவில் உங்களை விட்டு விட்டு சாகப்போகிறேனே” என்றுதான்  கவலைப்பட்டார்.    இன்று இந்தியாவை காப்பாற்ற ஒரே வழி வர்க்க போராட்டம் தான், அது தான் நம் சக்தி, உழைப்பவனுக்கு அதிகாரம் வேண்டும், அதிகப்படியான மக்கள் மகிழ்சியை தேடி ஓடுகிறார்கள். போராட்டம் செய்வதில்தான் மகிழ்ச்சி என்றார் கார்ல் மார்க்ஸ். நல்லதை செய்தவனையே கெட்டவன் என்றும், கெட்டது செய்தவனை நல்லவனாக சித்தரிக்கும் இந்த சமூகத்தில் நமது தோழர் கோட்டை சமுதாயத்திற்கு நல்லது மட்டுமே செய்து நமது ரத்தத்திலும் சித்தத்திலும் கலந்து மறைந்துவிட்டார். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடருவோம், என்று  முடித்தார் தோழர் துரை சண்முகம்.

தோழர் குருசாமி தனது நிறைவுரையில் தோழர் கோட்டைக்கு நடக்கும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் புகழுக்காக நடத்தப்படவில்லை. புகழுக்கு உரியவராக தன்னை மாற்றிக்கொண்ட  தோழர் கோட்டைகாக நடக்கிறது. நீ  விழித்துக்கொள் உரிமை பெறவில்லையென்றால் ஊரில் குடியிருக்க முடியாது. ஈவு  இறக்கமற்ற கொடியவர்கள்  நம்  தலை மீது ஈட்டியை தாங்கிக்கொண்டிருக்கிறார்கள் பலம், பலவீனம் அற்பத்தனத்திற்கு ஆசைபடாமல் அற்பணிப்பு உள்ள தோழராக புரட்சிகர அமைப்பில் ஈடுபட்டு இந்த சமூக மாற்றத்தில் பங்கேற்போம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

கம்பம் பகுதி தோழர்கள்  சிறப்பானதொரு புரட்சிகர கலை நிகழ்ச்சி நடத்தினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி.
உசிலம்பட்டி.

மண்டியிட்டது யார் ? கருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா ?

108
பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான மறுநிமிடமே சென்னை நகைக்கடையொன்றில் குவிந்த பண முதலைகளின் கூட்டம்.

மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல மாதங்களாக மிகவும் இரகசியமாகத் திட்டமிடப்பட்டு, கருப்புப் பணக் கும்பலுக்கு எதிராக ஏவப்பட்ட ‘துல்லிய’ தாக்குதல் என்றும், இதன் காரணமாக கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற முடியாமல் முழித்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. ஆனால், இந்த நடவடிக்கையின் பிறகு நாட்டில் நடப்பதென்னவோ பா.ஜ.க.வும் அதன் துதிபாடிகளும் கூறிவருவதற்கு நேர் எதிராக இருக்கிறது.

பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான மறுநிமிடமே சென்னை நகைக்கடையொன்றில் குவிந்த பண முதலைகளின் கூட்டம்.
பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான மறுநிமிடமே சென்னை நகைக்கடையொன்றில் குவிந்த பண முதலைகளின் கூட்டம்.

பொதுமக்கள் தாம் உழைத்து சம்பாதித்த பணத்தை மாற்றுவதற்குத் தெருவில் நிற்கிறார்கள். ஊரை அடித்து வாயில் போட்ட கருப்புப் பணக் கும்பலோ தமது பணத்தை நோகாமல் மாற்றி வருகிறது.

கிரிமினல் குற்றச் சட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்வதற்கான வாய்ப்பைக் குற்றவாளிகளே ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் என்பார் காரல் மார்க்ஸ். அதனை மெய்யாக்கி வருகிறார்கள் இந்தியாவின் கருப்புப் பண முதலைகள். அவர்கள் தம்மிடமுள்ள கருப்புப் பணத்தை வெள்ளையாக்க ஒவ்வொரு நாளும் புதுப்புது வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனைத் தடுப்பது என்ற பெயரில் மோடி அரசு ஒவ்வொரு நாளும் விதவிதமான கட்டுப்பாடுகளை அறிவித்து, அசடு வழிந்து நிற்கிறது.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு மோடி அவிழ்த்துவிட்ட துல்லிய தாக்குதல் ஒரு புதிய கருப்புப் பணச் சந்தையை உருவாக்கியிருப்பதை இன்று நாம் நேருக்கு நேர் காண்கிறோம். ஆடிட்டர்கள், வங்கி மேலாளர்கள், அரசு அதிகாரிகள், நகைக் கடைக்காரர்கள், கந்துவட்டி கும்பல்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனங்கள், ஹவாலா கும்பல்கள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், திரையரங்கு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், தனியார் மருத்துவமனைகள், கோவில்கள், மடங்கள் எனப் பலரும் கருப்பை வெள்ளையாக்கித் தரும் இந்த இலாபகரமான தொழிலில் இறங்கியுள்ளனர். இந்தப் புதிய கருப்புத் தொழிலைப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், டாக்டர்கள், இஞ்சினியர்கள், வக்கீல்கள் உள்ளிட்ட கருப்புப் பணக் கும்பல், தங்களிடம் உள்ள கணக்குக் காட்டமுடியாத பணத்தை 25% முதல் 70% வரை கமிசன் கொடுத்து வெள்ளையாக மாற்றிவருகின்றனர்.

சேலம் அருகே நடந்த வாகனச் சோதனையின்போது பா.ஜ.க.வின் சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலர் அருணிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபது இலட்ச ரூபாய் பெறுமான 2,000 ரூபாய் நோட்டு கட்டுக்கள் கொண்ட கருப்புப் பணம்.  (உள்படம்) பா.ஜ.க.வைச் சேர்ந்த யோக்கியன்  அருண்.
சேலம் அருகே நடந்த வாகனச் சோதனையின்போது பா.ஜ.க.வின் சேலம் மாவட்ட இளைஞர் அணிச் செயலர் அருணிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபது இலட்ச ரூபாய் பெறுமான 2,000 ரூபாய் நோட்டு கட்டுக்கள் கொண்ட கருப்புப் பணம்.
(உள்படம்) பா.ஜ.க.வைச் சேர்ந்த யோக்கியன் அருண்.

மோடியின் அறிவிப்பு வந்த மறுநிமிடமே, கருப்புப் பணக் கும்பல் பறந்து சென்று தட்டியது நகைக் கடைகளின் கதவுகளைத்தான். சென்னை, மும்பய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அறிவிப்பு வெளியான நாளன்று இரவு எட்டு மணிக்கு மேல் களைகட்டத் தொடங்கிய தங்க நகை வியாபாரம் நள்ளிரவைத் தாண்டியும் ஜாம்ஜாமென்று நடந்தது. மும்பை, பூனே, நாசிக், கோவா ஆகிய நான்கு நகரங்களில் அன்றைக்கு இரவு மட்டும் 36 கோடி ரூபாய் அளவிற்கு தங்கம் விற்பனையானது. மும்பை நகரில் மட்டும் 16 கோடி ருபாய் அளவிற்குத் தங்கம் வாங்கப்பட்டிருக்கிறது. இது அதற்கு முந்தைய நாள் தங்க விற்பனையான 69 இலட்சத்தை விட 23 மடங்கு அதிகமாகும். நகைக் கடைகளுக்கு அடுத்து, கோவில்களும், பூசாரிகளும், மடங்களும்தான் கருப்புப் பணக் கும்பலை இரட்சித்தன.

நாட்டின் மிகப் பெரிய கந்துவட்டிக் கும்பலான மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பணத்தை மாற்றுவதும் துரிதமாக நடைபெறுகிறது. மகளிர் சுய உதவிக் குழுகளில் உள்ள பெண்கள் அனைவருக்கும் தலைக்கு 2 இலட்ச ருபாய் தரப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தப் பரிமாற்றத்திற்கு 10 ஆயிரம் ருபாய் கமிசனாக அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

வங்கி மேலாளர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு, பொதுமக்களின் பெயர்களில் செல்லாத நோட்டுக்கள் வங்கிகளின் வழியாகவே மாற்றப்படுகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்குத் தொடங்கக் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் முதல் சிம் கார்டு வாங்குவதற்காகப் பெட்டிக் கடையில் கொடுத்த ஆவணங்கள் வரை அனைத்தும் களவாடப்பட்டு, மக்கள் மாற்றியது போல் போலியான கோப்புகளை உருவாக்கி, இந்த தகிடுதத்தம் நடைபெறுகிறது.

ஊழல், லஞ்சத்தில் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கும் ஜெயா-சசி கும்பலோ எவ்வித சிரமமும் அலைச்சலுமின்றி, டாஸ்மாக், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தியே காரியத்தைச் சாதித்துக் கொள்கிறது. மோடியின் அறிவிப்பு வந்த மறுநொடியே அரசு போக்குவரத்துக் கழகங்கள், பயணிகளிடமிருந்து 500, 1000 நோட்டுக்களை வாங்குவதை நிறுத்திவிட்டன. ஆனால், போக்குவரத்துக் கழகத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் முழுவதும் 1,000, 500 ரூபாய் கட்டுக்களாகவே சென்றன. வசூலான சில்லறைப் பணம் முழுவதும் எங்கு போயிருக்கும் என விளக்கத் தேவையில்லை.

black-white-exchange-captionதமிழகம் முழுவதும் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு வரும் வருமானம் 20 கோடி ருபாய்க்கும் அதிகம். டாஸ்மாக்கின் தினசரி வருமானம் கிட்டதட்ட 70 கோடி ருபாய். நாளொன்றுக்கு 90 கோடி ரூபாய், நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை 52 நாட்கள், இதைப் பெருக்கினால் கிடைப்பது கருப்பு வெள்ளையான விவரம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு பெட்ரோல் நிலையங்கள், பேருந்துகள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் செல்லாத நோட்டுக்களைப் பயன்படுத்தலாம் என அறிவித்தது, மோடி அரசு. ஆனால், அச்சலுகையே கருப்புப் பணத்தை மாற்றுவதற்கான பல புதிய வழிகளைத் திறந்துவிட்டது.

மராட்டிய மாநிலத்தில் திரையரங்குகளில் பழைய நோட்டுக்களை வாங்கலாம் என அம்மாநில அரசு அறிவித்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட திரையரங்கு முதலாளிகள், படம் பார்க்க யாரும் வராமல் காத்து வாங்கிய திரையரங்குகள் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதாகக் கணக்கு காட்டிக் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றித் தரும் தொழிலைத் தொடங்கினர்.

வார நாட்களில், பயணிகள் யாரும் இல்லாமல், வெறுமனே கூரியர் சர்வீஸ்களாகப் போய்வரும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதாகக் கூறித் தனியார் போக்குவரத்து முதலாளிகள் செல்லாத நோட்டுகளை வங்கிகளில் கட்டுகிறார்கள்.

சினிமா நட்சத்திரங்கள் ஹவாலா பேர்வழிகள் மூலம் தங்களது கறுப்புப் பணத்தை அமெரிக்க டாலர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். தனியார் சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் தமது ஆசிரியர்களின் கணக்கிலும், தொழில் அதிபர்கள் தமது ஊழியர்கள், தொழிலாளர்களின் கணக்கிலும் பல மாதச் சம்பளத்தை முன்பணமாகச் செலுத்தி பல கோடி ரூபாய் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கியிருக்கின்றனர்.

நெல்லை நகர புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் முகந்தெரியாத நபர் கொடுத்துச் சென்ற 50,000 ரூபாய் பணத்திற்கு இலவசமாக பெட்ரோல் பிடிக்கக் கூடிய ஆட்டோக்கள்.
நெல்லை நகர புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் முகந்தெரியாத நபர் கொடுத்துச் சென்ற 50,000 ரூபாய் பணத்திற்கு இலவசமாக பெட்ரோல் பிடிக்கக் கூடிய ஆட்டோக்கள்.

மோடி, தனது அரசின் சாதனையாகச் சொல்லிக்கொள்ளும் ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள், மிகவும் வெளிப்படையாகவும் அரசிற்குச் சவால்விடும் வகையிலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கப் பயன்படுத்தப்படுகிறது. பணமே இல்லாமல் முடங்கிக் கிடந்த இவ்வங்கி கணக்குகளில் 64,000 கோடி ருபாய் அளவிற்கு பணம் கொட்டப்பட்டிருப்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. 2.5 லட்சம் ருபாய்க்கும் அதிகமாக உள்ள வங்கிக் கணக்குகள் கண்காணிக்கப்படும் எனச் சவடால் அடித்தது மோடி அரசு. கருப்புப் பணக் கும்பலோ தமது பணத்தை 2 இலட்சம் ருபாய்களாகப் பிரித்து ஜன்தன் திட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தி, மோடியின் முகத்தில் கரியைப் பூசியது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக, அந்தக் கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகையை மாதம் பத்தாயிரத்துக்கு மேல் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவிக்கிறார், மோடி.

இவையெல்லாவற்றையும் விட, கருப்புப் பணத்தின் காவலர்களான ஆடிட்டர்கள், மிகத் தந்திரமான முறையில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக்கொண்டே கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி, மோடிக்கு பெப்பே காட்டிவருகின்றனர். புதிது புதிதாக நிறுவனங்கள் தொடங்குவது அல்லது ஏற்கெனவே நட்டமடைந்து திவாலான பழைய நிறுவனங்களைத் தூசிதட்டி திரும்ப எழுப்பி, அவற்றிற்கு மாநிலம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி, ஒவ்வொரு கிளைக்கும் ஊழியர்கள், இயக்குநர்கள் என நியமித்து, அவர்களுக்குச் சம்பளம், நிறுவனத்தை நடத்தியதன் மூலம் வந்த வருமானம், ஏற்பட்ட செலவு எனப் புகுந்து விளையாடுகின்றனர்.

இவை மட்டுமன்றி, அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு, விவசாயக் கடனைக் கட்டுவதற்கு எனப் பல வழிகளில் கருப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படுகிறது.

கள்வன் பெரிதா, காப்பான் பெரிதா என்ற இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில், கைப்புள்ள வடிவேலு கணக்காகச் சட்டை கிழிந்து நிற்கும் மோடி, “நீங்களாகவே வந்து கருப்புப் பணத்தை வங்கிகளில் செலுத்திவிட்டால், அபராதத்தோடு 50 சதவீதம்தான் வரி; நாங்களாகச் சோதனை நடத்திப் பிடித்தால், அபராதத்தோடு சேர்த்து 85 சதவீத பணத்தைப் பறிமுதல் செய்துவிடுவோம்” என வருமான வரிச் சட்டத்தில் திடீர் திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

இந்தத் திருத்தத்தைக் கருப்புப் பணக் கும்பலுக்கு எதிரான இறுதி எச்சரிக்கையாகப் பிதற்றுகிறார்கள், மோடியின் ஆதரவாளர்கள். ஆனால், உண்மையில் கருப்புப் பணக் கும்பலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இன்னொரு சலுகைதான் இது. வெளிச் சந்தையில் 70 சதவீதம் வரை கமிசன் கொடுத்து கருப்புப் பணத்தை மாற்றியவர்களிடம் 50 சதவீதம் “வரி”யைப் பெற்றுக் கொண்டு அரசே அவர்களின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கித் தரும் கேவலமான புரோக்கர் வேலைதான் இந்தத் திருத்தம். 200 சதவீதம் வரை வரி விதிப்போம் என வீராப்பு பேசிய மோடி, 50 சதவீதம்தான் வரி என இறங்கிவந்து கருப்புப் பண பேர்வழிகளிடம் பேரம் நடத்துகிறார். சாதாரண பொதுமக்களின் கைகளில் மை வைத்து அவமானப்படுத்தும் இந்தக் கும்பல், பணம் வந்த வழியைக் கேட்க மாட்டோம் என கருப்புப் பணக் கும்பலிடம் மண்டியிட்டு நிற்கிறது.

மோடியின் இப்பண மதிப்பு நீக்க நடவடிக்கையைப் புனிதப் போராகச் சித்தரிக்கிறது இந்துமத வெறிக் கும்பல். ஆனால், போர் தொடங்கும் முன்பே மோடி குப்புற வீழ்ந்துவிட்டார் என்பதைத்தான் நள்ளிரவு நகைக்கடை வியாபாரம் தொடங்கி வருமான வரிச் சட்டத் திருத்தம் வரையிலான நடப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

– அழகு
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________

இந்தியன் வங்கி கொள்ளையில் மோடியின் டிஜிட்டல் இந்தியா – ஆதாரங்கள் !

0

ருப்பு பண ஒழிப்பு மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என கொஞ்சமும் வெட்கமின்றியும், குற்ற உணர்வின்றியும் புளுகினார் மோடி. மறுபக்கத்தில் மக்கள் படும் துண்பமும், வேலையிழப்பும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். குறைந்த பட்சமாக வங்கியில் வினியோகிப்பதாக சொல்லப்படும் பணமும், மீண்டும் புதிய நோட்டுகளாக இதே ஏழை மக்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி, மீண்டும் பணக்காரர்களுக்கே கொடுக்கப்படுகிறது. நாடு முழுவதும்  இதே நிலைதான் உள்ளது. வங்கி அதிகாரிகளும், போலீசாரும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் கூட்டுசேர்ந்து பணத்தை மாற்ற கமிஷன் பெறுவது, என்பது ஒரு தொழிலாகவே நடைப்பெறுகிறது.
இவ்வாறு தருமபுரி புலிக்கரையில் செயல்படும் இந்தியன் வங்கியில் பெரும் கொள்ளை நடந்துள்ளது.

Pulikarai Indian bankதருமபுரியிலிருந்து பாலக்கோடு செல்லும் வழியில் அமைந்திருப்பதுதான் புலிகரை கிராமம். கரும்பு விவசாயிகள், பூ விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்ற மக்களுக்கு பணப் பரிமற்றத்திற்கான ஒரே இடம் என்றால், புலிக்கரை இந்தியன் வங்கிதான்.
இந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் விவசாயி சிவக்குமார். இவர் நகைக் கடனுக்கு வட்டிக் கட்டவில்லை என்பதால் இவரது வங்கிக் கணக்கு முடக்கி வைத்திருந்தார் புலிகரை இந்தியன் வங்கி மேலாளர் பிரபாகரன். இதற்காக பலமுறை சிவக்குமார் வங்கி மேலாளரிடம் கெஞ்ஜியும் வங்கி மேலாளர்  மசியவில்லை. இதனால், மனமுடைந்து தனது சேமிப்புப் பணத்தை எடுக்கமுடியாமல் தவித்துவந்தார்.ஒரு கட்டத்தில் இந்தப் பணத்தை எடுக்க முடியாது என்பதால், அதனை மறந்தே போய்விட்டார்.

pulikarai 2கடந்த நவம்பர் மாதம் மோடியின் பண மதிப்பிழக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு நாள் திடீரென இவரது செல்ஃபோனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதனைப் பார்த்தவுடன் சிவக்குமாருக்கு ஆச்சரியமும் சந்தோசமும் ஏற்பட்டது. என்ன காரணம்? கஷ்டப்படுபவனுக்கு கடவுள் மேல நம்பிக்கையிருப்பவனுக்கு கடவுள் கூரையை பிய்த்துக் கொண்டு பணத்தைக் கொட்டுவார் என்று தங்களது கஷ்டத்தை மறப்பார்கள் கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனைவிட ஆச்சரியமாக, பணம் செல்ஃபோனில் வந்து விழுந்தது. ஆமாம், முடங்கியிருந்த அவரது வங்கிக் கணக்கில் 1,32,758. ரூபாய் போடப்பட்டிருந்தது. இவருக்கு சந்தோசம் தாங்கவில்லை. இருந்தாலும் செல்ஃபோனில் ஏதாவது தவறு நடந்திருக்குமா என்று சந்தேகத்துடன், தனது கணக்கை மீண்டும் மீண்டு சரி பார்த்தார். இவர் ஸ்டேட்பாங்க் ஏ.டி.எம்-மிலும் கணக்கை சரிபார்த்தார். ஆனால், மீண்டும் மீண்டும் அவரது வங்கிக் கணக்கில் இலட்ச ரூபாய்க்கும் மேல் சேர்ந்திருப்பது உறுதியானது.

இதற்குள் அன்று மாலைக்குள் அவரது வங்கிக் கணக்கில் சில மாற்றங்கள் நடப்பதைப் பார்த்தார். அதனை அவரால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை. அதன் பின்னர்தான் ஒருவாராக யூகித்துக் கொண்டார். அதாவது, அடமானத்தில் இருந்த அவரது நகையை யாரோ எடுத்துவிட்டு, மறு அடமானத்தில் வைப்பதாக அதன் போக்கு அமைந்திருப்பதை உணர்ந்து கொண்டார்.

pulikarai 3இவர் சற்று விவரம் தெரிந்த விவசாயி. எஸ்.எம்.எஸ். பார்க்கும் அளவிற்கு இவர் இருந்ததால்தான் இவரது வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டு எடுத்துள்ளதை இவரால் புரிந்து கொள்ள முடிந்துள்ளது. இதுபோல பலரது வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளதையும் பின்னர் எடுத்துள்ளதையும் மக்கள் தெரிவித்தனர். இந்தியன் வங்கி மேலாளர் பிரபாகரன் இப்படி பல இலட்சங்களை பரிமாற்றம் செய்து கொடுத்துள்ளதை புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதுதான் இந்த வங்கியை சுற்றியுள்ள பல கிராமங்களில் உள்ள விவசாய வங்கி கணக்கு மூலம் பணக்காரர்களின் கருப்பு பணத்தை மாற்றியுள்ளது அம்பலமானது.

இந்த மோசடியை அம்பலபடுத்தி மக்கள் அதிகாரம் சார்பாக, இந்தியன் வங்கி மேலாளரைக் கைது செய்யக் கோரியும் கருப்புப் பண ஒழிப்பின் முகவிலாசத்தை அம்பலப்படுத்தியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரொட்டி ஒட்டிய பிறகு இரவோடு இரவாக வங்கி மேலாளரே ஆட்களை அழைத்து சென்று சுவரொட்டிகளை கிழித்துள்ளார். இதனை அறிந்த மக்கள் அதிகாரம் மீண்டும் அதிகாலையே சுவரொட்டி ஒட்டியது. இதனை எதிர்பார்க்காத மேனேஜர் மக்கள் அதிகாரம் தொடர்பு எண்ணுக்கு போன் செய்து தான் எந்த தவறு செய்யவில்லை உங்கள் பிரபலத்திற்காக போஸ்டர் போடரிங்க என்றார். எங்களிடம் ஆதாரம் உள்ளது என பதிலளிக்கவே கொஞ்சம் பம்மினார். அடுத்து போலீசார் போன் செய்து ஆதாரம் கொடுங்கள் உங்கள் மீது கேஸ் கொடுத்துள்ளார் வங்கி மேலாளர் என கொஞ்சம் மிரட்டும் தோனியிலும், மறுபக்கத்தில் பஞ்சாயத்து பேசிக்கொள்வதற்கும் முயற்சி மேற்கொண்டனர். இவை எதற்கும் மசியதா போது ஒரு நபரை அனுப்பி மக்கள் அதிகாரம் தோழர்களிடத்தில் சமாதானம் பேச வைத்தார் வங்கி மேலாளர் பிரபாகரன்.

அப்படி பேச வந்த நபரிடம் என்ன பேச வேண்டும் என தோழர்கள் கேட்க, அதற்கு வந்தவர் சொன்னார் பணம் மாறியது எல்லாம் உண்மைதான் நீங்க என்ன டிமாண்டு வைக்கிறீங்க என்றார். இப்படி சாதாரண ஏழை மக்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி  மோசடி செய்வது, பணக்காரர்களின் பணத்தை மாற்றி கொடுப்பது தவறுயில்லயா என்று கேட்க, அதற்கு பணமெல்லாம் அமைச்சரின் பினாமி மூலம் வந்தது என்றார். நீங்க சொல்லுங்க என்றார். பேரம் பேசுவதற்கு தான் வந்தது இதன் மூலம் நமக்கு புரிந்து விட்டது. கொஞ்ச நேரம் பேசி பார்த்தார், இவர்கள் செட்டாக மாட்டார்கள் என சென்றுவிட்டார். ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கி கணக்கில் மட்டுமே பல லட்சம் கொள்ளையடிக்கும் போது, பணமில்லாத பரிவர்த்தனை என்பது யாருக்கு சேவை செய்யும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

pulikarai 1இந்நிலையில்,  மக்கள் அதிகாரம்  போராட்டத்தின்  காரணமாக மேலும் அம்பலபட்டு விடுவோம் என்ற நினைத்த வங்கி மேலாளர் சிலர் வங்கி கணக்கில் போடப்பட்ட பணத்தை உடனே எடுக்காமல் விவசாயிகளின் வங்கி கணக்கில் விட்டுவைத்துள்ளார். இந்தப் பிரச்சனையின் மையம் என்ன? மோடியின் டிஜிட்டல் இந்தியா என பேசி வரும் இந்த நிலையில், ஒருவரது வங்கிக் கணக்கில், அவரது ஒப்புதல் இல்லாமல், அவரது கையெழுத்து இல்லாமல், அவருக்குத் தெரியாமல் பணத்தைப் போட்டு எடுக்க முடியும்; அதனை ஒரு சாதாரண வங்கி மேனேஜரே செய்ய முடியும் என்பதுதான். மேனேஜர் செய்ய முடிந்ததை, அந்த வங்கியில் வேலை செய்யும் எந்த ஊழியரும் செய்யமுடியும்; அந்தத் தொழில் நுட்பம் தெரிந்த இளைஞர்களும் செய்ய முடியும்.

ஏற்கனவே, ஏ.டி.எம் கடவு எண்களைத் திருடுவது, செல்ஃபோன் பாஸ்வேர்டுகள் திருடுவது எல்லாம் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில், இந்தக் கொள்ளையை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது எவ்வளவு பெரிய ஆபத்து என மக்கள் உணர வேண்டும்..

இது மட்டுமல்ல, பல பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் (சாப்ட்வேர் கம்பெனிகள்) இந்தியாவில் வங்கிப் பரிமாற்றம் எந்த வகையிலும் பாதுகாப்பானதில்லை என்று அண்மையில் அறிவித்துள்ளன. மோடியின் டிஜிட்டல் இந்தியாவினால், ஏழைகளின் வங்கிப் பணம் எல்லாம் கண்டவனெல்லாம் திருடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைவிடக் கொடுமை என்னவெனில், இந்த டிஜிட்டல் இந்தியாவில் நாம் ஒப்புதல் கொடுத்தது போலவே ஒரு தோற்றத்தை உருவாக்கி திருட முடியும் என்பதுதான். ஆகையால், கார்ப்பரேட் கொள்ளையர்கள் நமது பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமல்ல, கண்டவனெல்லாம் திருடலாம். இந்தத் திருட்டையும் மக்கள் உடனே புரிந்து கொள்ள முடியாது. வங்கியில் காசு இல்லை என்று பொருள் வாங்க போகும் போதுதான் தெரிந்து கொள்ள முடியும். இந்த மோசடியை முறிடிக்க உடனே வீதிக்கு வருவதுதான் போராடுவதுதான் நமக்கு முன் இருக்கும் ஒரே வழி.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி :  81485 73417.

தர்மபுரி : டியூசன் போர்வையில் வன்புணர்ச்சி செய்த சிவக்குமார் !

0

ன்றைய சமானிய மக்களின் கனவு எதிர்பார்ப்புகள் எல்லாம் அரசு வேலை, மாத சம்பளமும் ,சொகுசு வாழ்க்கையுமே இன்றைக்கு இலக்காக மாறிவிட்டது. இந்த கனவு வாழ்க்கைக்காக ஏங்கும் ஏழை பெற்றோர்களை சுண்டி இழுக்கும் வகையில் விளம்பரங்களை  செய்யும் பள்ளி, கல்லூரி விளம்பரங்களை நாம் பார்க்க முடியும். இந்த அவசர வாழ்க்கையின்  தேவையை பெற போராடும் சாமனிய மக்கள் தங்களால் முடிந்த அளவு முயற்சிக்கின்றனர். அரசு பள்ளியில் படித்தாலும் தனியார் டியூசனுக்கு சென்றாவது மதிப்பெண் அதிகமாக பெற்றுவிட வேண்டும் என எதிர்பார்த்து ஏழைப் பெற்றோர்கள் செயல்படுகின்றனர்.

ஆனால் அதுவே பிள்ளைகளுக்கு பாதிப்பாக மாறிவிட்டால்  அதனை எதிர்த்து போராடாமல் ஒதுங்கி நிற்கின்றனர், அல்லது பெயர் வெளிவர கூடாது என்று பார்க்கின்றனர். அதற்கு காரணம் சமூக ரீதியானது என்று சிந்திப்பதில்லை. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுக்காவில் கடந்த  4 ஆண்டுகளுக்கு முன் டியூசன் சென்டராக தொடங்கினார், பாலக்கோடு பகுதியை சார்ந்த சிவக்குமார் என்பவர். பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு ஏழை மாணவ மாணவிகள் படித்து வந்தனர்.  தருமபுரியில் ஒரு டியூசன் சென்டரும் தொடங்கினார் சிவக்குமார். 2014-ம் ஆண்டு படிக்க வந்த ஒரு மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் படமும் பித்துள்ளார் வக்கிரம் பிடித்த சிவக்குமார். தற்போது பலாத்காரம் செய்த மாணவியின் வீடியோ காட்சியை தனது நண்பர்களுக்கு பகிர்ந்து, மீண்டும் அந்த மாணவியை மிரட்டி தனக்கு பனியவைக்கவும் கொடூரமாக முயற்சித்துள்ளார் இந்த பொறுக்கி சிவக்குமார்.

பாதித்த மாணவி ஒருவர் கடந்த 4-ம்தேதி பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தள்ளார். இந்த புகார் அடிப்படையில் விசாரித்த போது 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை தனியாக பாடம் நடத்துவதாக கூறி தனிமையில் அழைத்து, டீ குளிர்பானங்களில் மயக்க மருந்து கொடுத்து சீரழித்துள்ளார் கயவனாக சிவக்குமார். இதுபோக தனது கூட்டாளிகளான ஈஸ்வரன், மற்றொரு செல்போன்கடை நடத்தி வரும் சிவக்குமார் உட்பட மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து நிர்வணமாக ஆக்கி எடுத்த வீடியோக்களை காட்டி தனது பாலியல் வெறிக்கு, மூவரும் கூட்டாக செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை எழுதகூட முடியாத அளவுக்கு கேவலமாக நடந்துள்ளனர், இதனால் இதனை இத்தோடு சுருக்கி கொள்கிறேன்.

இந்த கொடூர செயலில் ஈடுப்பட்ட சிவக்குமார் யார் தெரியுமா ? கடந்த சட்டமன்ற தேர்தல்போது பாலக்கோடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நின்ற வெங்கடேசனின் உடன் பிறந்த சகோதரன். ‘அண்ணன்’ சீமானோடு நெருக்கமாக போட்டோ எடுத்து அதனை வளைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த கேடி சிவக்குமார். சிவக்குமாரை யாரோ ஒருவர் அண்ணன் சீமானோடு புகைப்படம் எடுத்து விட்டார் என்று நாம் தமிழர் கட்சி தப்பிக்க முடியாது. ஏனெனில் பொறுக்கி சிவக்குமாரின் அண்ணனே நாம் தமிழரின் வேட்பாளர் என்பதோடு ஒரு முக்கிய பிரகமுகரும் கூட. இத்தகைய ஓட்டுப் பொறுக்கும் கட்சியின் வட்டாரத் தளபதிகள் அனைவரும் தமது கட்சி செல்வாக்கை வைத்து இது போன்ற தவறுகளை செய்யும் குற்றவாளிகளை தப்ப விடுகின்றனர். குற்றம் செய்வோரும் இப்படி கட்சி செல்வாக்கை கேடாக பயன்படுத்துகின்றனர்.

தமிழன் என்றே ஒரே தகுதி இருந்தால் போதும் நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர் ஆகிவிடலாம் என்பதால் சிவக்குமாரும் அண்ணனோடு சேர்ந்து வளர்ந்து வரும் ‘தலைவராக’ தன்னை நினைத்துக் கொள்கிறார்.

Screenshot_2016-12-21-16-23-19-34

மேலும் கடந்த ஆண்டு இதே பாலக்கோடு நகரத்தில் சிவராஜ் என்ற கந்துவட்டிகாரன், ஏழை பெண்களுக்கு கடன் கொடுத்து அந்த கடனை கட்ட முடியாத பெண்களை தனது தோட்டத்து வீட்டிற்கு வரவழைத்து வலுகட்டாயமாக பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறார். இதனை ரகசியமாக படம் பிடித்து தனது பாலியல் இட்சைக்கு வரவேண்டும் என வலுகட்டாயமாக படத்தை காட்டி பல பெண்களை  மிரட்டி பணிய வைத்திருக்கிறார். இப்படி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கொடூரமான சிவராஜ். குண்டர் சட்டத்தில் உள்ளே அடைத்தாலும் தற்போது வெளியில் வந்து நல்லவன் போல் இதே பாலக்கோட்டில் வலம்வருகிறார்.

இன்றைக்கு பெரும்பான்மையான சம்பவங்கள் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதனை வைத்து மிரட்டி பணிய வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக காதலிக்க மறுக்கும் பெண்களின் படத்தை மார்ஃபிங் செய்து ஆபாசமாக இனையத்தில் விடுவது போன்ற செய்திகள் வெளிவந்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும் அன்றாடம் பத்திரிகைகளில் வருகிறது. பத்திரிகைகளோ அவற்றை பாலியல் வேட்கையைத் தூண்டும் விதமாகவும், ஒரு குற்றம் என்ற பார்வையை மறைத்தும் எழுதுகின்றன. இந்த சம்பவங்கள் ஏன் நடக்கின்றது, என்னதான் காரணம் ?

பண்பாட்டு சீரழிவு, நுகர்வு வெறி, போதை, சினிமா, என இளைஞர்களை சீரழித்து வரும் இந்த சமூகத்தில் இணையமும், குறுக்கு வழியில் சம்பாதிப்பதும் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக பிள்ளைகளை சமூக நெறியுடன் வளர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தும், நினைத்ததை நிறைவேற்றவும் செய்கின்றனர் பெற்றோர். தனியார் பள்ளி-கல்லூரிகளில், டியூசன் சென்டரில் ஆண்டு விழா என்ற பெயரில், ஆபாச படாலுக்கு நடனமாடுவதும், அதனை பெற்றோர்களே கைத்தட்டி ரசிப்பதும்தான் இன்றைய உன்மையான நிலை. இது தவறில்லை என கருதுகின்றனர். அத்தோடு பக்தர்கள் நடத்தம் அனேக கோவில் திருவிழாக்களில் காமவெறி-அரை நிர்வாண ஆட்டங்கள் இன்று ஊருக்கு ஊர் நடந்து வருகின்றது. இதனை எதிர்த்து பெற்றோர்களும் மக்களும் போராடுவதில்லை.  இங்கு தான் இந்த சீரழிவின் தொடக்கம் இருக்கிறது என்பதை பெற்றோர்கள் அறிவதில்லை.

இன்று நாம் விரும்பவிட்டாலும் இந்த சீரழிவு கலாச்சாரம் அன்றாடம் டிவியிலும், செல்போனிலும் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது.  கடந்த 2015-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தை மறந்திருக்க மாட்டோம். காதலிக்க மறுத்த காரணத்தால் வினுப்ரியா என்ற பெண்னை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் விட்டான் ஒரு கொடூரன். இதனை இணையத்தில் இருந்து நீக்க சைபர் கிரைம் போலிசை நாடினார்,  வினுப்ரியாவின் தந்தை. இணையத்தில் வெளியிட்ட கொடூரனை விட மோசமாகக நடந்து கொண்டது போலிசு. மார்ஃபிங் படத்தை நீக்க லஞ்சமாக புதிய செல்போனை கேட்டனர். அதனையும் வாங்கி கொடுத்தனர். அப்போதுகூட அந்த மார்பிங் படத்தை அகற்றவில்லை. இதனால் மனமுடைந்து போன வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டார். இன்னும் எத்தனை பேர்தான் சாக வேண்டும்? இதனை இனியும் அனுமதிக்க போகிறோமா ?

போலிசும், நீதி மன்றமும், அரசு உயர் அதிகாரிகளும் இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளாக இருக்கும் போது இவர்களிடத்திலேயே நீதி கேட்பது, தண்டிப்பது என்பது கொஞ்சமும் சாத்தியமில்லை. இன்று இந்த செய்தியை சுவாரசியமாக எழுதும் பத்திரிகைகளுக்கு விற்பனை கூடும் அவ்வளவுதான்.  இதுதான் நீதிமன்றங்களிலும், போலீசார் மத்தியிலும் நடக்கிறது. நீதிமன்றம், சட்டம் என்பது இந்த குற்றவாளிகளை தண்டிக்காது மாறாக பாதுகாக்கும். நாட்டை சீரழிக்கின்ற கலாச்சார சீரழிவை உற்பத்தி செய்து வருகின்ற நுகர்வுவெறி, போதை, சினிமா கழிச்சடைகளை ஒழித்துக்கட்ட போராட முன்வர வேண்டும். சமூகத்தில் வலம்வரும் இந்த நச்சு பாம்புகளை தண்டிக்கிற அதிகாரத்தை நாம் கையிலெடுக்க வேண்டும்.  புதிய புரட்சிகர பண்பாட்டை வளர்தெடுக்க வேண்டும். இதுதான் ஒரே தீர்வு.

தோழர் . கோபிநாத். வட்டார செயலர்
விவசாயிகள் விடுதலை முன்னணி
பென்னாகரம் வட்டம : 9943312467.

சேலம் உருக்காலையை பறிக்கும் மோடி அரசு ! ஓசூர் ஆர்ப்பாட்டம்

0

பறிபோகிறது சேலம் உருக்காலை! பறித்தெடுக்கிறது பாசிச மோடி அரசு!

  • ஆர்ப்பாட்டம்
  • நாள்: 22-12-2016 மாலை 5 மணி
  • இடம்: பழைய நகராட்சி அலுவலகம் எதிரில், ஓசூர்.

Salem Steel Banner

ழைக்கும் மக்களே!

  • தமிழகத்தின் சொத்தான – இலாபம் ஈட்டித்தரும் மகாரத்தினம் தனியாருக்குத் தாரைவார்ப்பு!
  • அந்நியச் செலாவணி ரூ.800 கோடியை – இறக்குமதி வரி ரூ.1,200 கோடியை அரசுக்கு ஈட்டித்தரும் பொக்கிசத்தை தனியார் சுருட்டிக்கொள்ள அனுமதி!
  • சேலம் உருக்காலைக்கு தேவையான இரும்பை தரும் வாய்ப்புள்ள கஞ்ச மலையை, வேடியப்பன் மலையை வெட்டியெடுக்க பன்னாட்டுக் கம்பெனியான ஜிண்டாலுக்கு அனுமதி!
  • சேலம் உருக்காலையை விற்று, தமிழகத்தை வஞ்சிக்கும், தொழிலாளர் வாழ்வைச் சூறையாடும் பாசிச மோடி அரசின் வஞ்சகத்தை முறியடிப்போம்!
  • நாடு மீண்டும் அடியாவதைத் தடுப்போம்!

__________

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, தொழிலாளர்களே!

சேலம் உருக்காலை தனியார்மயமாகிறது. ஜிண்டால் என்ற கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டிற்கு செல்ல இருக்கிறது. சேலத்தின் இயற்கை வளம், நமது நாட்டின் இயற்கை வளம், மகாரத்தினா என்ற தமிழகத்தின் பெருமிதத்தின் அடையளம், ஆயிரக்கணக்கான தொழிலாளர் உழைப்பில் உயர்ந்த நிறுவனம், நமது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வரிப் பணத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம், இன்று கார்ப்பரேட் கம்பெனியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட இருக்கிறது. இது அநீதி, இது துரோகம்!

அன்று அடிமை மன்னர்களிடம் ஒப்பந்தம் போட்டு நமது நாட்டையே வெள்ளையர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு சென்றார்கள். சொந்த நாட்டு மக்களை அன்னியர்கள் என்று சொல்லி அடிமைப்படுத்தினார்கள். அதே காலனியாதிக்கம் இன்று மறுவடிவம் எடுத்து வருகிறது, மோடி என்ற கார்ப்பரேட் அடிமையின் மூலம். பிரதமர் என்ற போர்வையில் இருக்கும் இந்த கைக்கூலி நமது சேலம் உருக்காலையையும் கஞ்சமலையையும் திருவண்ணாமலை வேடியப்பன் மலையையும் ஜிண்டால் என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு விற்றுவிட்டார். இனி, சேலத்தின் மக்கள் அன்னியர்கள், வந்தேறிகள்! அவர்கள் மீது என்ன விதமான கட்டுப்பாடுகளையும் ஜிண்டால் செலுத்த முடியும். இந்த அடிமைத்தனத்தை சகித்துக் கொள்ள முடியுமா?

தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கெயில் எரிவாயு குழாய் திட்டம், சிப்பெட் தனியார்மயம், மாடர்ன் பிரட் தனியார்மயம் என்று நமது இயற்கை வளங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் அன்னியர்களின் கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன. ஆம், நமது நாட்டை ஒரு அடிமை மேகம் சூழ்ந்து வருகிறது.

ஆகையால், உருக்காலை தனியார்மயம் என்பது ஏதோ சேலத்து மக்களின் பிரச்சனை, தொழிலாளர்களின் பிரச்சனை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. இது கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உழைத்து வாழும் கோடானக் கோடி மக்களுக்கும் இடையிலான பிரச்சனை! நமது நாட்டை அடிமையாக்கும் ஓட்டுக் கட்சிகள்–அதிகார வர்க்கத்தினருக்கும் தன்மானமுள்ள ஒவ்வொரு குடிமக்களுமான பிரச்சனை! சுதந்திரமா, அடிமைத்தனமா என்ற பிரச்சனை!

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்ததன் மூலம் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் மீது ஒரு போரைத் தொடுத்துள்ள மோடி அரசும் இவரை இயக்கும் RSS பார்ப்பன இந்து மதவெறியர்களும் நமது போராட்டங்களை திசைத்திருப்ப சாதி, மத வெறியைக் கிளைப்பிவிடுதற்கு பலியாகாமல், ஒன்றிணைந்து போராடுவோம்! சேலம் உருக்காலை தனியார்மயத்தை முறியடிப்போம்!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784

கருப்புப் பணம் : மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள்

17
சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்

பா.ஜ.க அரசின் ரூபாய் மதிப்பழிப்பு நடவடிக்கை ஆரம்பித்து மூன்று வாரங்களுக்கு பிறகு கருத்துக் கணிப்பு ஒன்று நடத்த முடிவு செய்தோம். பொதுவான ஊடக செய்திகள், நேரடி அனுபவங்கள், ஆங்காங்கே மக்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து சுமார் 25 கேள்விகளை தெரிவு செய்தோம். அதையும் பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு 13 கேள்விகளாக சுருக்கினோம்.

எங்களுடைய நோக்கம் கருப்புப் பணம் குறித்து மக்களுக்கு என்ன தெரியும், மோடியின் அறிவிப்பு குறித்து என்ன கருதுகிறார்கள், இந்த நடவடிக்கை என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் – ஏற்படுத்தாது என்பதை துல்லியமாக கண்டுபிடிப்பது. அதே நேரம் முதலாளித்துவ ஊடகங்கள் – நிறுவனங்கள் பின்பற்றும் குறிப்பிட்ட பதிலை வாங்குவதற்காகவே தயாரிக்கப்படும் கேள்விகள்-சர்வேக்களுக்கு மாறாக, உண்மை நிலவரத்தை கண்டுபிடிக்கும் வண்ணம் கேள்விகள், அனைத்து கருத்துக்களுக்கும் வாய்ப்பு அளிக்குமாறான பதில்களையும் உள்ளடக்கி தயாரித்தோம்.

பிறகு யாரிடம் எடுப்பது என்ற பிரச்சினை. சாதாரண மக்கள், நடுத்தர வர்க்கம், மாத அதிக ஊதியம், குறைந்த மாத ஊதியம், தினசரி ஊதியம், மாணவர்கள், இல்லத்தரசிகள், சிறு வணிகர்கள் போன்ற பெரும்பான்மை மக்களை சென்றடைவதற்கு திட்டமிட்டோம். அதன்படி சென்னை, வேலூர், திருச்சி, கோவை, தஞ்சை, மதுரை ஆகிய நகரங்களில் பகுதிகள் தீர்மானிக்கப்பட்டன.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் ஆர்வத்துடன் பங்கேற்ற ஆட்டோ தொழிலாளிகள்,சென்னை.

சென்னையில் எம்.எம்.டி.ஏ காலனி மற்றும் மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி குடியிருப்புக்கள், இரு பகுதிகளிலும் கடைத்தெரு, சந்தை போன்ற பொது இடங்கள்; திருச்சியில் திருவெறும்பூர், சுப்ரமணியபுரம், வயலூர் போன்ற புறநகர் பகுதிகளின் குடியிருப்புகள், கடைத்தெருக்கள், ஏ.டி.எம் வரிசைகள், பிஷப் ஹீபர் கல்லூரி; தஞ்சையில் புது பேருந்து நிலையம், கடைத்தெரு, கட்டிடத் தொழிலாளிகள், மானோஜிப்பட்டி குடியிருப்பு; மதுரையில் நீதிமன்ற வளாகம், மகவுப் பாளையம் – எல்லீசு நகர் – பழங்காநத்தம் குடியிருப்புக்கள், கடை வீதிகள், ஏ.டி.எம் வரிசைகள்; கோவையில் சூலூர், கவுண்டம்பாளையம், துடியலூர் குடியிருப்புகள்; வேலூரில் பழைய பேருந்து நிலையம், புது பேருந்து நிலையம்; ஆகிய இடங்களில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது.

மொத்தமாக 85 தோழர்கள் கருத்துக் கணிப்பில் பங்கேற்றனர். சில இடங்களில் ஒரு நாளும் சில ஊர்களில் இரு நாட்களும் கருத்துக் கணிப்பு நடைபெற்றன. சென்னையில் 12.12.2016 அன்று வீசிய புயலுக்கு முந்தைய நாளில் எடுக்கப்பட்டது. மற்ற ஊர்களில் அதே நாளிலும் அடுத்து வரும் இரு நாட்களிலும் எடுக்கப்பட்டன. கருத்துக் கணிப்பை அனுபவம் வாய்ந்த தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.

சென்னையில் வினவு செய்தியாளர் குழு, ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்களும் மற்ற நகரங்களில் ம.க.இ.க தோழர்களும் பங்கேற்றனர். களத்திற்குச் செல்லும் தோழர்களின் அரசியல் அமைப்பு பின்புலம் அறிமுகமாகாத வண்ணம் பகுதிகள் தெரிவு செய்யப்பட்டன. எங்கள் படிவங்களை நிரப்பிய மக்களில் மூன்று பேர் மட்டும் தோழர்களை ‘இன்னார்’ என்று கண்டு பிடித்தனர். அதே நேரம் அந்த மூன்று பேரும் அதற்காக தமது கருத்தை மாற்றிக் கொள்ளாமலேயே படிவங்களை நிரப்பினர்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
படியில் அமர்ந்து படிவத்தை நிரப்புகிறார் ஒருவர், சென்னை

வீடுகளில் உள்ள பெண்கள், சாதாரண மக்கள் பலரிடம் கேள்விகளைக் கேட்டும், புரிய வைத்தும் பதில்கள் நிரப்பப்பட்டன. நடுத்தர வர்க்கத்தினர் அவர்களே பதிவு செய்தனர். ஏ.டி.எம் வரிசைகளில் நின்றோர் கொலை வெறியுடன் கருத்துக்களை பேசிய வண்ணம் ஆவேசத்துடன் படிவங்களை நிரப்பினர். திருநங்கைகள் இருவரும், தமிழ் தெரிந்த சில வெளிமாநிலங்களைச் சேர்ந்தோரும் இக்கணிப்பில் பங்கேற்றிருக்கின்றனர்.

செய்தியாளர்கள் பல்வேறு சிறிய குழுக்களாக பிரிக்கப்பட்டனர். சந்திக்கும் மக்களின் வயது, பாலினம், தொழில் மற்றும் கட்சி சார்பு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்வது, முடிந்த வரை அனைத்துப் பிரிவு மக்களின் கருத்துக்களும் பிரதிபலிக்கும் வகையில் கருத்துக்கணிப்பை நடத்துவது என அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருந்தது.

கருத்துக்களை அறிந்து அதை வெளியிடுவதோடு, நாங்களே விரும்பாத கருத்தாக இருந்தாலும் கூட அது ஏன் மக்களிடம் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதையும் அதற்கான சமூக பொருளாதார பின்புலத்தையும் ஆய்வு செய்வதே எமது நோக்கமாக இருந்தது. இந்த பகுதி அடுத்த பாகத்தில் வெளிவரும். முதலில் கருத்துக் கணிப்பு யார் யாரிடம் எங்கே என்ன பிரிவினரிடத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விளக்கப் படங்களைப் பாருங்கள்.

_______

சர்வேயில் பங்கேற்ற மொத்த மக்கள்

Ques1-total-per

____________________

சர்வேயில் பங்கேற்ற மக்கள் இடம் வாரியான எண்ணிக்கை மற்றும் சதவீதம்

2ques-city

____________________

சர்வேயில் பங்கேற்ற மக்கள் வயது வாரியான விவரம்

Ques3-age

____________________

சர்வேயில் பங்கேற்ற மக்களின் வருமான ரீதியிலான பிரிவு எண்ணிக்கை மற்றும் சதவீதம்

Backup_of_chart1

____________________

சர்வேயில் பங்கேற்ற மக்களின் நகரம், கிராமம் சதவீதம்

Backup_of_chart2

____________________

சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் நாளிதழ் படிக்கும் பழக்கம்

Backup_of_chart3

____________________

சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் டி.வி செய்தி பார்க்கும் பழக்கம்

 Backup_of_chart4

____________________

சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் நாளிதழ், டி.வி செய்தி இரண்டும் பார்க்கும் பழக்கம்

 Backup_of_chart5

____________________

சர்வேயில் பங்கேற்ற  3157 பேரில் கட்சி ஆதரவு

Backup_of_chart6

____________________

ருத்துக் கணிப்பு முடிந்த பிறகு அனைத்து படிவங்களையும் கணினியில் பதிவு செய்யும் இமாலய பணி அச்சுறுத்தியது. அடுத்த நாளே வந்த வர்தா புயல் எமது பணியை பெரிதும் பாதித்தது. பிறகு தகவல் பதிவு செய்வதற்கான மென்பொருளை தயார் செய்து பல தோழர்கள் தமது அலுவலக பணிகளை முடித்து விட்டு கணினியேற்றம் செய்தனர். ஒரிரு தோழர்கள் இதற்காக கடுமையாக உழைத்தனர். பிறகு தகவல் பதிவு முடிந்து அதை பல்வேறு முறைகளில் சரிபார்த்து, பல்வேறு முறைகளில் இணைத்து ஆய்வு முடிவுகளை எடுக்கும் பணி நடந்தது. இறுதியாக வரைபடங்களை தயாரித்து அனைத்தும் சர்வே முடிவுகளாக உங்கள் பார்வைக்கு வருகிறது.

அனைத்து இடங்களையும் சேர்த்து இந்த கருத்துக் கணிப்பிற்கு ஆன செலவு, படிவம் தயாரிப்பு, எழுது பொருள் செலவு, உணவு தேநீர் செலவு அனைத்தும் சேர்ந்து ரூ. 6,000த்திற்குள் மட்டும்தான். சென்னை சர்வேயில் பங்கேற்ற தோழர்கள் பலர் தமது காலை, மதிய உணவை அம்மா உணவகத்தில் முடித்தனர். அதுவும் அன்றைக்கு ஜெயலலிதா மரணத்தை ஒட்டி அங்கே இலவசமாக வழங்கப்பட்டது.

பொதுவாக கருத்துக் கணிப்புக்கான செலவு என்பது சந்திக்கப்படும் மக்களின் தலைக்கு இத்தனை ரூபாய் என்று தீர்மானிக்கப்படுகிறது. மேலோட்டமான சர்வே, விரிவான சர்வே, ஆழமான சர்வே என்று இதற்கு முதலாளித்துவ உலகம் விலையை நிர்ணயித்திருக்கிறது. வினவு சர்வேயை அதோடு ஒப்பிட்டுப்பார்த்தால் தலைக்கு 1000 ரூபாய் என்று வைத்தால் முப்பது இலட்சம் வருகிறது. அதையே ரூ.6000 செலவில் உங்களுக்குத் தருகிறோம்.

கருத்துக் கணிப்பில் கேட்க்கப்பட்ட கேள்விகள் – அதற்கு மக்கள் அளித்த பதில்கள்:

1. எல்லையில் வீரர்கள் கஷ்டப்படும் போது ஏ.டி.எம்.மில் நிற்க உனக்கு என்ன கேடு என்ற கேள்வி

ques1-army

____________________

2. ஜெயலலிதா, சசிகலா, சன் டி.வி மாறன்களின் கருப்புப் பணத்தை மோடி கைப்பற்றுவாரா?

ques2-modi-capture

____________________

3. கருப்பு பணத்தில் 50% அரசுக்கு கொடுத்துவிட்டு 50% வைத்துக் கொள்ளலாம் என்று சென்ற வாரம் மோடி அரசு புதிய சட்டம் கொண்டு வந்திருப்பது சரியா, தவறா?

ques3-new-law

____________________

4. பார்ட்டிசிபேட்டரி நோட் என்பது பற்றி தெரியுமா?

ques4-participatry-note

____________________

5. கருப்புப் பணம் அதிகமாக இருப்பது எங்கே?

ques5-blackmoney

____________________

6. ரஜினி, அமிதாப் பச்சன் போன்ற நடிகர்கள் வாங்கும் சம்பளம் எத்தகையது?

ques6-actor-salary

____________________

7. மோடியின் நடவடிக்கையால் அரசு அலுவலகங்களில் இலஞ்சம் ஒழியுமா?

ques7-bribe

____________________

8. அண்ணாச்சி கடைகளில் நீங்கள் எந்த முறையில் பொருள் வாங்க விரும்புகிறீர்கள் ?

ques8-department-store

____________________

9. இனிமேல் தனியார் பள்ளி / கல்லூரிகளில் கருப்புப் பணமாக வாங்கப்படும் கட்டாய டொனேசன் நிறுத்தப்படுமா?

ques9-school-college

____________________

10. பி.ஜே.பி., காங்கிரஸ் கட்சிகளுக்கு முதலாளிகள் கொடுக்கும் நன்கொடை

ques10-parties

____________________

11. மோடி நடவடிக்கையால் பாதிப்பிருந்தாலும் நீங்கள் ஏன் போராடவில்லை?

ques11-affested

____________________

12. மோடியின் நடவடிக்கையால் சிறுதொழில்கள், சிறு வணிகம் தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. என்ன கருதுகிறீர்கள்?

ques12-small-industry

____________________

13. நீங்கள் எத்தனை நாட்கள் வங்கியின் முன் வரிசையில் நின்றீர்கள்?

ques13-queue

____________________

“அரசியல்வாதிங்க கஸ்டப்படறாங்களா? எங்க சார்.. ஒரு அரசியல்வாதி கஸ்டப்படறத காட்டுங்க பாக்கலாம்? வயசாளி ஜனங்கதான் சார் லைன்லே நின்னு செத்து விழறாங்க? அந்த ஆளுக்கு ஒரு மனசாட்சி இருக்காதா… இத்தினி ஜனங்க செத்துப் போயிருக்காங்களேன்னு உறுத்தாதா? என்ன சார் ஜென்மம்”

“இல்லைங்க.. இப்படியெல்லாம் கொஞ்சம் நாள் சிரமங்கள் இருக்கும், அதைப் பொறுத்துக்கிட்டா எதிர்காலம் நல்லா இருக்கும்னு தானே மோடி சொல்றாரு? கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டாமா?”

“ஒழிக்கட்டும்.. யாரு வேண்டாமின்னு சொன்னா? ஆனா இவரா ஒழிக்கப் போறாரு? அம்மா செத்து மாலை போட வந்தவரு.. நேரா போயி சசிகலா மண்டைய நீவிக்கிட்டு நிக்கிறாரு. இவரு எங்கேர்ந்து கருப்புப் பணத்தை ஒழிச்சிடப் போறாரு?”

– வினவு சர்வேயில் தனியார் பள்ளி ஆசிரியையின் கருத்து

சிறுபான்மை என்றாலும் கணிசமான மக்கள் “மோடியின் நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கானதே” என்று நம்பினர். அவ்வாறு நம்பியவர்களும் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்காதோரும் மதிப்பழிப்பு நடவடிக்கை செயல்படுத்தப்படும் முறையை மிகக் கடுமையாக விமரிசித்தனர். ஆச்சரியமாக, பாரதிய ஜனதா ஆதரவாளர்களும், மோடியின் இரசிகர்களுமே கூட இந்நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிந்து விடாது என்றே தெரிவித்தனர்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பள்ளி ஆசிரியை, சென்னை

உழைக்கும் மக்களில் ஒரு சிறு பிரிவினர் தாம் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளை ‘தேச நலனை’ முன்னிட்டு தாங்கிக் கொள்வதாக தெரிவித்தனர். என்றாலும், பெரும்பான்மை மக்கள் மோடியின் நடவடிக்கை கருப்புப் பண ஒழிப்புக்கானது அல்ல என்றே நம்புகின்றனர். பொருளாதார ஆய்வுகளில் இருந்தோ, பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையிலோ மக்கள் அந்த முடிவுக்கு வந்தடையவில்லை; மாறாக தமது சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகளில் இருந்தே அந்த முடிவுக்கு வந்துள்ளனர். அதே நேரம் மோடியின் நடவடிக்கையை ஆதரிக்கும் கணிசமானோரின் கருத்தை உருவாக்கும் பணியில் ஊடகங்களின் செல்வாக்கு இருப்பதையும் நாம் மறுக்க இயலாது.

படிவத்தின் ஆரம்பத்தில் வயது, தொழில், பாலினம், கட்சி சார்பு, டி.வி – தினசரி செய்தி படிக்கும் பார்க்கும் வழக்கம் போன்ற அறிமுக விவரங்களைப் பெற்றுக் கொண்டோம். அதன் அடிப்படையில் இந்த சர்வேயின் முடிவுகள் குறித்த ஆய்வு அடுத்த பாகத்தில் வெளிவரும்.

”கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன்னு சொல்றாரு.. சரிங்க, ஆனா இது வரைக்கும் கருப்புப் பணம் வச்சிருக்கிற ஒரு அரசியல்வாதி, ஒரு காலேஜ் ஓனருன்னு எவனையுமே அரெஸ்ட் பண்ணலைங்களே? தோ பாருங்க.. இன்னிக்கு ஞாயித்துக் கிழமை.. கறியெடுக்க கையிலே காசில்ல. ரெண்டு மூணு நாளாவே வேலை செய்துட்டு இருந்த ஏ.டி.எம்கள் கூட வேலை செய்யாமே கிடக்கு. காலைலேர்ந்து ஒவ்வொரு தெருவா சுத்தி வந்தும் பாத்தாச்சி.. தோ அங்கே பாருங்க.. கார்லே போறான் அவன் கஷ்டப்படுவான்னா நினைக்கிறீங்க?”- என்கிறார் லெட்சுமணன்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சென்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளார். லெட்சுமணன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு அருகே இருந்த அவரது நண்பர் மணிகண்டன் குறுக்கிடுகிறார்..

“ஏய்.. இருப்பா. தினத்தந்தியப் பாரு வேலூர்ல கோடி கோடியா புடிச்சிருக்கானாம்.. மோடி ஒருத்தனையும் விடமாட்டாருபா..” என்றவர், நம்மிடம் “சார், சுதந்திரத்திலேர்ந்து எத்தினி பேரு ஆண்டிருக்காங்க.. எவன் ஒருத்தனுக்காவது மோடிக்கு இருந்தா மாதிரி தில்லு இருந்திருக்கா? நீங்க வேணா பாருங்க.. இப்ப ரெண்டாயிரம் நோட்டு விட்டிருக்காரா.. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் அதை வாங்கிப் பதுக்குனதுக்கு அப்புறம் அதையும் செல்லாதுன்னு சொல்லிடுவாரு.” என்றார்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் ஆர்வத்துடன் படிவத்தை நிரப்பும் இளைஞர்.

“அப்படியே செத்து செத்து வெளையாட வேண்டியது தானா? யோவ்.. புடிச்சதெல்லாம் புது நோட்டுய்யா.. கவருமெண்டுக்கே தெரியாம எப்டி அவனுக்கு கிடைச்சிதாம்? என்னாங்கடா கொரளி வித்த காட்றீங்க” என்று தனது நண்பரை முறைத்த லெட்சுமணன், நம்மிடம் திரும்பி “சார், எப்டி பழைய கருப்புப் பணத்தை புது கருப்புப் பணமா மாத்தினானுங்களோ அதே மாதிரி நாளைக்கு ரெண்டாயிரம் நோட்டு செல்லாதுன்னு அறிவிச்சா வேற நோட்டுக்கு மாத்திடுவானுங்க. கவர்மெண்ட்டே இதுக்கு உள்கை சார்” என்கிறார்.

நண்பர்களின் மோதலுக்கு காரணமாகி விடக்கூடாதென அவர்கள் நிரப்பிய படிவங்களை வாங்கிக் கொண்டு நகர்ந்தோம். மோடி ரசிகர் மணிகண்டன் நிரப்பியிருந்த படிவத்தைப் பார்வையிட்டோம் அதில் பள்ளி கல்லூரிகளில் செலுத்தப்படும் டொனேசன் இனிமேலும் கருப்பாகத் தான் இருக்கும் என்பதற்கான பெட்டியில் டிக் அடித்திருந்தார். இருபத்தைந்து வயதுக்கு கீழ் இருந்த இளைஞர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சி ஆதரவற்றவர்களாவோ, மோடி ரசிகர்களாகவோ இருந்தனர். அவர்களுமே கூட இந்நடவடிக்கை லஞ்சத்தை ஒழித்து “வெள்ளையான” இந்தியாவைப் படைக்கும் என நம்பவில்லை.. “ஒரு அட்டெம்ப்ட் தானே பாஸ்” என்றார் ஒரு இளைஞர். அதே நேரம் இந்த பிரிவினர் குறிப்பாக மாணவர்கள் நாட்டு நடப்பு குறித்த பொது அறிவு ஏதுமற்றும் இருந்தது உண்மை. அது குறித்த ஆய்வும் இரண்டாம் பாகத்தில் வரும்.

“ஒன்றுமில்லாததற்கு ஏதோவொரு முயற்சி எடுப்பது நல்லது தானே” என இளைஞர்கள் நினைக்கிறார்கள் என்றால் குடும்பத் தலைவிகளின் கருத்தோ அதற்கு நேர் எதிரான திசையில் இருந்தது.

“மோடி அக்கவுண்டுலே காசு போடுங்கன்னு சொன்னதை நம்பி 13 ஆயிரத்த போட்டேன் தம்பி. ரெண்டு நா மின்ன போயி கேட்டா காசு தரமாட்டோமின்னு பேங்குல சொல்லிட்டாங்க. நான் போயி மேனேஜரு கிட்டே அழுகவும் ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் தாரோமின்னு சொன்னாரு. அன்னிக்கு சொன்ன படி காசு குடுத்தாங்க. நேத்து காசு எடுக்கலாமுன்னு ஆட்டோவுக்கு போக வர 100 ரூபா செலவு செஞ்சிட்டு பேங்குக்கு போனா இல்லேன்னு திருப்பி அனுப்பிட்டாங்க” என்கிறார் 60 வயதான பாத்திமா என்கிற முதிய பெண்.

அவரது வீட்டு வாடகையை வசூலிக்க புரசைவாக்கத்திலிருந்து வந்திருந்தார் வீட்டு உரிமையாளர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கும்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் தோழர் ஒருவரிடம் பதில்களைச் சொல்கிறார் பழம் விற்பனை செய்யும் அம்மா.

“சார் தப்பா நெனச்சிக்காதீங்க.. இன்னும் ரெண்டு ஒரு நாள்லே நானே கொண்டாந்து குடுத்துடறேன்” என்று அவரிடம் சொல்லி வழியனுப்பிக் கொண்டிருந்தார் பாத்திமா.

“மனுஷனுக்கு மனுஷன் இது கூட செய்யாட்டி எப்படிம்மா..” என்றவர் இரண்டடி நகர்ந்த பின் திரும்பி ”காசு கிடைச்சதும் கொண்டாந்து குடுத்துடுங்க.. இப்ப நான் வந்து போறதுக்கே இருநூறு ரூபா செலவு செய்திட்டேன்” என்றபடி நடையைக் கட்டினார்.

“பாருங்க தம்பி, இனி நான் வாடகை குடுக்க போக வர ஆட்டோவுக்கு செலவு செய்யனும். வயசாயிப் போச்சி.. பஸ்சுலயும் போக முடியாது. ஏதோ ஓனரு நல்ல மனுசனா இருக்கப் போயி பதினோராந்தேதி ஆகியும் வாடகை வசூலாகலைன்னு சத்தம் போடாம போறாரு” என்கிறார் பாத்திமா.

குடும்ப பாரத்தை தாங்குவதற்காக சிறிய நிறுவனங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் பலருக்கும் சம்பளம் அளிக்கப்படவில்லை.

“சார் எங்க மேடம் தினசரி கொஞ்சம் கொஞ்சமா காசு எடுத்து அதையெல்லாம் சேத்து வைச்சி தான் சம்பளம் குடுக்க முடியும்னு சொல்லிட்டாங்க. இப்ப செலவுக்கு நாங்க எங்க சார் போவோம்? மோடி குடுப்பாரா சார்?” என்றார் தனியார் பள்ளி ஆசிரியை ப்ரமிளா.

அதே நேரம் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளும் அரசியல் – பொது அறிவில் பின்தங்கியிருப்பதை பார்க்கமுடிகிறது. அவர்களின் கருத்தை டி.விக்கள் உருவாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது.  இல்லத்தரசிகளில் கணிசமானோர் மோடியின் நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். ஆனால் வேலைக்கு போகும் பெண்களோ மோடியை கடுமையாக எதிர்க்கின்றனர். இது குறித்த ஆய்வும் பின்னர் வரும்.

மக்களின் துயரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அரும்பாக்கம் அண்ணா பெரும்பாதையில் இருக்கும் கறிக் கோழி கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தோம்.

“யாரும் செலவு செய்யத் தயாரில்ல சார். கைலேர்ந்து போனா வராதுன்னு எல்லாரும் கிடைச்ச ஆயிரம் ரெண்டாயிரத்தையும் வீட்லேயே வைச்சி பாத்து பாத்து தண்ணி குடிச்சிட்டு இருக்கானுங்க. எங்க பொழப்பு நாறிடிச்சி சார்” என்றார்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
சமையல வேலையுடன் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் ஒரு தொழிலாளி!

அவருக்கு அக்கம் பக்கமாக கடை போட்டிருந்தவர்கள் தற்போது வியாபாரம் இல்லாமல் மூடி விட்டதாகத் தெரிவித்தார். “சார் இந்தக் கோழியெல்லாம் தாங்காது சார். வர வர தள்ளி வுட்டுடனும். தேங்கிடிச்சின்னா நம்ப கைக்காசு தான் போகும்” என்றவர், பகுதியில் இருந்த சில அசைவ உணவகங்களின் ஆர்டர் குறைந்த அளவிலாவது வந்து கொண்டிருப்பதால் தனது பிழைப்பு ஏதோ ஓடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அவரிடம் ஸ்வைப் மிசின் வைத்துக் கொள்வதில் என்ன பிரச்சினை என்று கேட்டோம் “சார், நான் படிச்சதே அஞ்சாங்கிளாஸ் தான்.. அதுக்கெல்லாம் என்னா ரூல்சுன்னே தெரியாது சார்” என்றார்.

இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் ஏஜெண்ட் ஒருவர், வங்கி அட்டைகளைத் தேய்த்து வண்டி வாங்கிச் சென்ற தனது வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை நகல்களை ஒப்படைக்க வேண்டுமென அவரது வங்கி திடீரென சொன்னதாகவும், இப்போது அந்த வாடிக்கையாளர்களை எங்கே போய்த் தேடுவதெனத் தெரியவில்லை எனவும் புலம்பினார். மேலும், பல சந்தர்பங்களில் வங்கி அட்டைகளைத் தேய்த்து வண்டி வாங்கிச் சென்று இரண்டு நாட்கள் கழித்தே தனது கணக்குக்கு பணம் மாறுவதாகவும் தெரிவித்தார்.

“சரிங்க.. மோடி நாட்டோட பிரதமரு. அவரு சொல்றதுல எதுனா அர்த்தம் இருந்தாகனும் இல்ல. நீங்க கண்டிப்பா கார்டுல தான் வண்டி தருவேன்னு சொல்லிட வேண்டியது தானே?”

“சார் இதுக்கு இணையம் வேலை செய்யனும். அப்படியே வேலை செய்தாலும் பேங்க்கோட சர்வர் ஒழுங்கா இருக்கனும்.. அதாவது மூட்டைப்பூச்சி நசுக்கற மிசின் மாதிரி சார். அப்படியே ரெண்டு நாள் கழிச்சி நம்ம அக்கவுண்டுக்கு காசு வந்தாலும், ஒரு வாரத்துக்கு இவ்வளவு தான் எடுக்க முடியும்னு லிமிட் செட் பண்ணியிருக்காப்ல மோடி.. அப்புறம் நாங்க ரொட்டேசனுக்கு எங்கே போவோம்? எல்லாம் கேட்கிறதுக்கு நல்ல இருக்கும் அவ்ளோ தான் சார்” என்றார் சலிப்பாக.

மக்களின் துன்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது ஒரு பக்கமென்றால் அதை எந்த வகையிலும் எதிர்க்காமல் சமூகத்தில் நிலவும் அச்சுறுத்தும் மௌனமோ இன்னொரு புறம். அது குறித்த கேள்வியும் படிவத்தில் உண்டு. அதில் பெரும்பாலானோர் வேறு வழியில்லை என்றே தெரிவித்தினர்.

திருச்சியில் முதல் கேள்விக்கு சரி என்றும், தவறு என்றும் டிக் அடித்தவர்களிடம் விளக்கம் கேட்டு அவர்கள் அளித்த பதில் மூன்று வகையாக இருந்தது.

அ.தி.மு.க-பி.ஜே.பி இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இராணுவ வீரர்கள் நாட்டுக்காக நிற்கின்றனர் நாம் ஏ.டி.எம்-ல் நிற்பது ஒன்றும் தவறு இல்லை. என்று கூறினார்கள்.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
வினவு கருத்துக் கணிப்பில் பங்கேற்ற நடுத்தர வர்க்க மக்கள், சென்னை

கட்சி சாராத அரசு ஊழியர்கள், வியாபரிகள், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஓரளவு அரசியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் இராணுவ வீரர்கள் சம்பளத்திற்காக நிற்கின்றனர் எங்களது பணத்தை எடுக்க நாங்கள் ஏன் நிற்க வேண்டும்? வேலைகளை விட்டுவிட்டு இங்கு வந்து காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு எத்தனை முதலாளிகள் காரை ரோட்டில் போட்டு விட்டு  நிற்கிறார்கள்? நீங்களே பாருங்கள். மோடி வந்து வரிசையில் நிற்பாரா? இல்லை. இந்த ஆளு நிர்வாக திறமையில்லாத நபருங்க  இந்த இரண்டாயிரம் பணத்திற்காக தினமும் இந்த வெயிலில் நிற்க வேண்டியுள்ளது, என்று கூறினார்கள்.

இன்னும் சிலபேர் அரசுக்கு சார்பாக சர்வே எடுக்கிறீங்களா? என்று கேட்டனர். இல்லை ஊடக ஆராய்ச்சி என்று ஏதோ சொன்னதும் ஒருவர் உங்களால் தான் இந்த மோடி ஆட்சிக்கு வர முடிந்தது. விளம்பரம் செய்தே பிரதமரா வந்துவிட்டான் பாவி, உங்களை முதலில் உதைக்க வேண்டும் என்றார். சிலர் மோடியின் நோக்கமே வரி கூட்டுவதற்கு தான் இப்படி செய்கிறார் என்றனர்.

மூன்று நபர்கள் படிவத்தில் அரசியல் கட்சிகளின் பெயர்களை வெளிப்படையாக போடக்கூடாது (காங் + பா.ஜ.க வாங்கும் கருப்புப் பண நன்கொடை குறித்த கேள்வி) எவனாவது சண்டைக்கு வருவார்கள், அதனால் பெயர்களை தவிர்த்து விடுங்கள் என்றனர். சிலர் ஏ.டி.எம் வரிசையில் நிற்பவர்கள் கருப்பு பணம் வைத்துள்ளவர்களா? என்ற கேள்வியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றனர்.

திருச்சியின் மைய SBI வங்கிக்கு முன்  எடிஎம் வரிசையில் உள்ளவர்களிடம் சர்வே எடுத்த போது தான் மோடியை கெட்டவார்த்தைகளில் திட்டினார்கள். முக்கியமாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக படியான பாதிப்பில் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

அதே நேரம் குடியிருப்பிலோ, மதுரை நீதிமன்ற வளாகத்திலோ மோடியை ரசிக்கும் மக்களும் உண்டு. கோவையில் பா.ஜ.க தரப்பினரும் டி.வி விவாதங்களில் பேசுவது போலவே சொல்கின்றனர். இருப்பினும் படிவத்தில் அவர்கள் அனைத்திற்கும் மோடிக்கு ஜே போடவில்லை.

சென்னை சர்வேயில் பங்கெடுத்த மக்கள்
பழ வியாபாரத்தோடு படிவத்தையும் படித்து நிரப்புகிறார் ஒரு இளைஞர், சென்னை

கட்சி சார்பு என்று பார்த்தால் எங்களது கணிப்பில் மொத்த மக்களில் 4 சதவீதம் பேர் பா.ஜ.க-விற்கு ஆதரவு என்றே தெரிவித்திருக்கின்றனர். அவர்களுடைய கருத்துரைக்கும் பாணியும், அ.தி.மு.கவினரின் பாணியும் பெரிய அளவில் வேறுபடவில்லை. ஆனால் அ.தி.மு.கவில் சாதாரண மக்களும் பா.ஜ.கவில் நடுத்தர வர்க்கமும் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தி.மு.க செல்வாக்கு அதிகம் இருந்த தஞ்சை, வேலூர் பகுதிகளில் கருத்துக்கள் மற்ற ஊர்களை விட மாறுபட்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது.

சென்னையில் சொந்தமாக பட்டரை வைத்திருக்கும் மெக்கானிக் ஒருவரை சந்தித்தோம். குழந்தைக்கு உடல் சுகமில்லை எனவும், கடந்த மூன்று நாட்களாக வங்கியில் பணம் எடுக்க முடியாமல் தவிப்பதாகவும், தெருவில் போவோர் வருவோரில் எப்போதோ பார்த்து சிரித்தவர்களைக் கூட விடாமல் கைநீட்டி காசு கேட்டும் கிடைக்கவில்லை என்றும், கிட்டத்தட்ட பிச்சைக்காரனின் நிலைக்கு தான் வந்து விட்டதாகவும் சொல்லிக் கண்கலங்கினார்.

“சரிங்க… கஸ்டப்படறேன்னு சொல்றீங்க. இதுவரைக்கும் நாங்கள் பார்த்த பலரும் இதையே தான் சொல்றாங்க ஆனா ஏன் யாருமே போராட முன்வரலை?”

“வேற வழியில்ல சார்..” என்றவர் அவரிடமிருந்த படிவத்தை நம்மிடம் தந்து விட்டு தலையைக் குனிந்து கொண்டார்.

மொத்தத்தில் மிகப் பெரிய ஏமாற்றம் ஒன்றை மக்களிடம் காண முடிந்தது. அதோடு கூட எப்போது வெடிக்கும் எனத் தெரியாத எரிமலை ஒன்று உள்ளே குமைந்து கொண்டிருப்பதையும் கண்டுணர முடிந்தது.

  • தொடரும்

தகவல் தொகுப்பு: வினவு செய்தியாளர்கள் மற்றும் ம.க.இ.க மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, வேலூர் தோழர்கள்
வரைபடம், வடிவமைப்பு: துரை – கலா
களப்பணி: ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் மற்றும் வினவு செய்தியாளர்கள்
மென்பொருள், தகவல் பதிவு: வினவு தொழில்நுட்பக் குழு
ஆய்வு – ஒருங்கிணைப்பு: வினவு கருத்துக் கணிப்புக் குழு

மக்கள் சேமிப்பை ரத்தமாய் உறிஞ்சும் மோடி ‘அட்டை’ !

0

மோடி வித்தை: மக்களின் சேமிப்பை உறிஞ்சவரும் பிளாஸ்டிக் “அட்டைகள்!”

1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மோடியின் துக்ளக் தர்பார் நடவடிக்கை கருப்புப் பணத்தை மட்டுமல்ல, கள்ளப் பணப் புழக்கத்தைக்கூட ஒழித்துவிடாது என்பதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடங்கி வங்கி வாசலில் காத்துக்கிடக்கும் பாமரன் வரை பலரும் கூறிவிட்டனர். இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும், முதலீடு குறையும், வேலையிழப்புகள் ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். அதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தென்படத் தொடங்கிவிட்டதை விவசாயிகளும், சிறு வணிகர்களும், தினக்கூலித் தொழிலாளர்களும் படும்பாடு எடுத்துக் காட்டுகிறது.

cashless-paytm
பிளாஸ்டிக் பண அட்டைகளைப் பெற்று வியாபாரம் நடத்தும்படி வலிந்து தள்ளப்பட்டுள்ள சிறு வணிகம்.

இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு மோசடி என்றால், இதனின் நோக்கம்தான் என்ன? இந்த இரண்டரை வருட ஆட்சியில் பலமுனைகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள மோடியும் அவரது அரசும், தமது பிம்பத்தைத் தூக்கிநிறுத்திக் கொள்ளவா? அல்லது, எதிர்வரவுள்ள உ.பி., பஞ்சாப் மாநிலத் தேர்தல்களில் வலுமிக்க எதிர்க்கட்சிகளை முடக்கிப் போடும் நோக்கத்திற்காகவா? அல்லது இந்த அரசியல் காரணங்களுக்கு அப்பால் வேறு எதுவும் மறைமுகத் திட்டம் மோடிக்கு இருக்கிறதா?

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஆம் எனப் பதில் கூறலாம். பீற்றிக் கொள்ளப்படும் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னே மோடியின் சுயநல அரசியல் கணக்குகளும், மோடியைப் பெருஞ்செலவில் பிரதமராக அமர்த்தியிருக்கும் தரகு முதலாளிகளின் நலன்களும் மறைந்திருக்கின்றன.

பிரதமர் நரேந்தர மோடி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை நவம்பர் 8 அன்று இரவில் வெளியிட்டார். மறுநாள் காலை நாளிதழிலேயே, இந்த அறிவிப்பை வரவேற்று மோடியின் படத்தைப் போட்டு முழுப் பக்க விளம்பரத்தை வெளியிட்டது பேடீம் என்ற நிறுவனம் பேடீம், கைபேசி வழியாக பணப் பரிமாற்ற வர்த்தகத்தை நடத்தி வரும் நிறுவனம்.

cashless-big-bazaar
வங்கிகளில், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முடியாதவர்கள், பிக் பஜார் என்ற தனியார் நிறுவனக் கடைகளில் கார்டைத் தேய்த்துப் பணம் எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம்.

பேடீம் போன்ற தனியார் பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் மட்டுமின்றி, பொதுத்துறை வங்கிகளும்கூட பணப் பரிமாற்றத்திற்குத் தங்களின் செயலிகளைப் பயன்படுத்துமாறும், அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்ற விளக்கத்தோடும் நவம்பர் 8-க்குப் பிறகு விளம்பரங்களை வெளியிட்டன.

இதே நேரத்தில்தான் மைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ”இந்தக் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை இந்தியாவைப் பணமற்ற பொருளாதாரத்திற்கு உந்திக்கொண்டு போகும் முதல் அடி” எனத் தெரிவித்தார்.

பணத்திற்குப் பதிலாக, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற அட்டைகளையும், பணப் பரிமாற்ற செயலிகளையும் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதும் விற்பதுமான வர்த்தக நடவடிக்கைகளைத்தான் பணமற்ற பொருளாதாரம் எனக் குறிப்பிடுகிறார்கள். கறுப்புப் பணம் உருவாவதற்கும், அதனைப் பதுக்கி வைப்பதற்கும் பணப் பொருளாதாரம்தான் காரணமாக இருப்பதாகவும், பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறிச் செல்லுவதன் மூலம் கறுப்புப் பணத்தையும் இலஞ்சத்தையும் அறவே ஒழித்துக்கட்டிவிட முடியுமென்றும்; பண வீக்கத்தை, அதாவது விலைவாசியைக் கட்டுப்படுத்தி, கடனுக்கான வட்டியையும் குறைத்துவிட முடியுமென்றும் பணமற்ற பொருளாதாரம் குறித்துக் கவர்ச்சிகரமான பிரச்சாரத்தை நடத்தி வருகிறது, பா.ஜ.க.

* * *

நாட்டிலுள்ள 1,34,000 வங்கிக் கிளைகளில் 84,000 வங்கிக் கிளைகள் பெரு நகரங்களிலும், நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே இயங்கி வருகின்றன. அதாவது, ஒவ்வொரு ஐந்து கிராமங்களுள் நான்கு கிராமங்களில் வங்கிக் கிளைகளே என்பதுதான் இதிலிருந்து கிடைக்கும் உண்மை. ஒவ்வொரு ஐயாயிரம் பேரில் ஒருவரிடம் மட்டுமே கிரெடிட் கார்டு உள்ளது. ஒவ்வொரு ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டுமே டெபிட் கார்டு உள்ளது. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு அட்டை வைத்திருப்பவர்களுள் பெரும்பாலோர் அதனைப் பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துவதில்லை. இந்த பிளாஸ்டிக் பண அட்டைகளை வைத்திருப்போரில் 90 சதவீதப் பேர், அவற்றை ஏ.டி.எம். மிஷின்களிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

cashless-posநாட்டிலுள்ள 1.4 கோடி வர்த்தக நிறுவனங்களில் வெறும் 14 இலட்சம் கடைகளில் மட்டுமே பண அட்டைகளைப் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. நாட்டின் மொத்த தொழிலாளர்களுள் 33 சதவீதம் பேர் – ஏறத்தாழ 15 கோடி தொழிலாளர்கள் பணக் காகிதத்தை மட்டுமே நம்பியிருக்கும் அமைப்புசாரா தினக்கூலி தொழிலாளர்கள். இவை அனைத்திற்கு மேலாக ஒவ்வொரு நாளும் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளுள் 87 சதவீதம் பணப் பரிமாற்றம் வழியாகத் தான் நடைபெறுகிறது.

இந்தியாவின் வர்த்தக, பொருளாதார நிலவரம் இவ்வாறிருக்க, வங்கிக் கணக்கும், ஸ்மார்ட் போனும், ஆதார் அட்டையும், பண அட்டைகளைத் தேய்க்கும் இயந்திரங்களும் இருந்துவிட்டால் பணமற்ற பொருளாதாரத்திற்குக் கைசொடுக்கும் நேரத்தில் மாறிச் சென்றுவிடலாம் என பா.ஜ.க. தலைவர்கள் கதைப்பது கதைகளுக்குக்கூட ஒத்துவராத கற்பனை. இன்னொருபுறமோ, பா.ஜ.க.வின் இந்த விபரீதக் கற்பனை சாதாரண மக்கள் மீது ஏவிவிடப்படும் பொருளாதார வன்முறையாகும்.

இரண்டாவதாக, பணமற்ற பொருளாதாரத்தின் மூலம் கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியும் என்ற பா.ஜ.க.வின் வாதம் மாபெரும் பொய். முதலாளித்துவ பொருளாதாரத்தின் கீழ் பணத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட முடியாது என்பது ஒருபுறமிருக்க, இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக பிளாஸ்டிக் பணத்தைப் பயன்படுத்தும் ஏகாதிபத்திய நாடுகளில்கூட கருப்புப் பொருளாதாரம் ஒழிந்துவிடவில்லை. அமெரிக்காவில் 1,60,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கும், ஜப்பானில் 48,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிற்கும் கருப்புப் பொருளாதாரம் கோலோச்சுவதாகக் குறிப்பிடுகிறது, உலக வங்கியின் அறிக்கை.

cashless-captionஉலகிலேயே பிரேசில்தான் பணப்புழக்கம் குறைவாகவும், பிளாஸ்டிக் அட்டை புழக்கம் அதிகமாகவும் உள்ள நாடு. ஆனால், பிரேசிலில்தான், பணப்புழக்கம் அதிகமாக உள்ள நாடுகளைக் காட்டிலும் இலஞ்சமும் கருப்புப் பணமும் பிசாசுத்தனமாகத் தலைவிரித்தாடுவதைப் பல்வேறு புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் மூலம்தான் பெருமளவில் கருப்புப் பணம் திரள்கிறது. இந்த வர்த்தகத்திற்குரிய பில்கள் அனைத்தும் வங்கிகளின் வழியாகத்தான் சென்று வருகின்றன. இப்படிச் சட்டபூர்வமாக மட்டுமின்றி, சட்டவிரோத வழிகளிலும் கருப்புப் பணத்தைக் கடத்துவதற்கு வங்கிகள் புரோக்கர்களைப் போலச் செயல்பட்டுவருவதும் அம்பலமாகியிருக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த ஹெச்.டி.எஃப்.சி. என்ற தனியார் வங்கி போதை மருந்து கடத்தல் பணத்தைக் கைமாற்றிய விவகாரமும், டெல்லியிலுள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளையொன்றின் வழியாகப் போலியான ஏற்றுமதி ரசீதுகள் தயாரிக்கப்பட்டு, கருப்புப் பணம் கடத்தப்பட்ட விவகாரமும் வங்கிகளின் குற்றப் பின்னணியை எடுத்துக்காட்டும் சமீபத்திய உதாரணங்கள்.

உண்மை இவ்வாறிருக்க, மோடியும் பா.ஜ.க. கும்பலும் வங்கிகளின் வழியாக நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகள்தான் வெளிப்படையானவை என்றும், பணப் பரிமாற்றம் மூலம் நடைபெறும் வர்த்தகம் அனைத்தும் கருப்பென்றும் அபாண்டமாகப் பழி போடுகின்றன. குறிப்பாக, வரி கட்டாமல் ஏய்க்கும் நோக்கில்தான் சிறு வணிகர்கள் பணமற்ற பொருளாதாரத்திற்கு மாற மறுக்கிறார்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள். பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கும் பொதுமக்களை அக்குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதாக அவமதிக்கிறார்கள்.

cashless-tribal-village
மேற்கு வங்கத்தின் சுந்தர வனப் பகுதியில் அமைந்துள்ள, 5,000 பேர் வசிக்கும் கோராமாராவைச் சுற்றி 12 கி.மீ. தூரத்திற்கு எங்கும் வங்கி வசதிகள் கிடையாது.

ரசீதுகளே இல்லாமல் சிறு வணிகம் நடந்துவருகிறது என்ற குற்றச்சாட்டில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறதோ, அதைவிடப் பல மடங்கு அளவிற்கு கம்ப்யூட்டர் மூலம் ரசீதுகளைத் தயாரித்து வியாபாரம் நடத்தும் மால்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன என்பதும் உண்மை. வரி ஏய்ப்பைத் தடுத்து நிறுத்தி, வரி வருமானத்தை அதிகரிப்பதுதான் மோடி அரசின் உண்மையான நோக்கமென்றால், அவர்கள் வோடாஃபோன் மீதும், நோக்கியா மீதும்தான் முதலில் பாய வேண்டும். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் ஐந்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வாரி வழங்குவதை நிறுத்த வேண்டும்.

அதனைச் செய்வதற்கு விருப்பமோ, துணிச்சலோ இல்லாத மோடி கும்பல், தனது வரி வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கு சிறு வணிகர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினரைக் குறி வைக்கிறது. ஏற்கெனவே 28 சதவீத அளவிற்கு மறைமுக வரிகளும், அதற்கும் மேலே செஸ் வரிகளும் சுமத்தப்பட்டுச் சுரண்டப்பட்டு வரும் இவர்களை நேரடி வரியான வருமான வரி வலைக்குள்ளும் சிக்க வைப்பதுதான் மோடியின் திட்டம். ஒருபுறம் வரி விதிப்புகள் மூலமும், இன்னொருபுறம் பொதுமக்களின் கைகளிலுள்ள ரொக்கப் பணத்தையும், சேமிப்புகளையும் வங்கிகளின் கஜானாவிற்குக் கொண்டுவருவதன் மூலமும் அரசின் பற்றாக்குறையை ஈடுகட்டிக் கொள்வதோடு, இந்தியத் தரகு முதலாளிகளுக்குத் தேவைப்படும் மூலதனத்தையும் திரட்டிக் கொடுக்கும் திட்டத்தோடுதான் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது; பணமற்ற பொருளாதாரம் குறித்து ஆரவாரம் செய்யப்படுகிறது.

2015-16 ஆம் நிதியாண்டில் நாட்டிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுள் ஆறு பொதுத்துறை வங்கிகள் மட்டும்தான் இலாபம் ஈட்டியுள்ளன. ஸ்டேட் பாங்க் குழுமம் உள்ளிட்ட அந்த ஆறு வங்கிகளின் இலாபமும் அதற்கு முந்தைய நிதியாண்டைவிடக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் இப்படி நட்டத்தில் சிக்கி, திவாலாகும் நிலை நோக்கிச் செல்லத் தொடங்கியிருப்பதற்குக் காரணமே வங்கிகளின் வாராக் கடன்தான்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றபொழுது, 2014-15 ஆம் நிதியாண்டில் 2.67 இலட்சம் கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், 2015-16 ஆம் நிதியாண்டின் இறுதியில் 4.76 இலட்சம் கோடியாகவும், ஜூன் 2016 இறுதியில் 6.50 இலட்சம் கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. வாராக் கடன் என வரையறுக்கும் நிலையில் உள்ள 3.30 இலட்சம் கோடி ரூபாய்களையும் இதோடு சேர்த்தால், பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், அதனின் மொத்தக் கடனில் 16 சதவீதமாகும் எனக் குறிப்பிடுகிறது கிரெடிட் சுயிஸ் நிறுவனம்.

ரிசர்வ் வங்கி மார்ச் 2015-இல் வெளியிட்ட அறிக்கையில் வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 100 நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை ஏறத்தாழ 20 சதவீதமாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறது. அவற்றுள் ஒரு பத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொகை மட்டும் 56,467 கோடி ரூபாய்.

இந்தத் தரகு முதலாளிகளிடமிருந்து கடனை வசூலித்து பொதுத்துறை வங்கிகளின் நிதிநிலையைச் சீராக்க அரசு தயாராக இல்லை. ஸ்டேட் வங்கிக் குழுமத்தின் இலாபம் 67 சதவீதம் சரிந்துவிட்ட நிலையில்கூட, அவ்வங்கிக் குழுமம் 60 முக்கிய நிறுவனங்கள், பிரமுகர்கள் செலுத்த வேண்டிய ஏழாயிரம் கோடி ரூபாய் பெறுமான கடன்களைச் சமீபத்தில் தயங்காமல் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் மோடி அரசால் இலண்டனில் வைத்துப் பாதுகாக்கப்படும் தரகு முதலாளி விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகை 1,201 கோடி ரூபாய். அரசு வங்கிகளால் தள்ளுபடி செய்யப்படும் வாராக் கடன்கள் அனைத்தும் தரகு முதலாளிகளிடம் கருப்புப் பணமாகத் திரள்கிறது என்பதே உண்மை.

வாராக் கடன்களால் திவாலாகும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுப்பதற்கும், அவை புதிய கடன்களை வழங்குவதற்கும், ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள் விதித்துள்ள பாஸல் 3 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் மார்ச் 2019-க்குள் பொதுத்துறை வங்கிகளுக்கு 2,40,000 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகையை ஒரே மூச்சில் வங்கிகளில் திரட்டிக் கொள்ளும் மறைமுக நோக்கத்தோடுதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

பணமதிப்பு நீக்கப்பட்ட 14 இலட்சம் கோடி ரூபாயில் பொதுமக்கள் கியூவில் நின்று மாற்றிக் கொண்டது போக, வங்கிகளில் சேமிப்பாகச் சேரும் தொகை ஒன்பது இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஒன்பது இலட்சம் கோடி ரூபாயில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயச் சேமிப்பாக செலுத்த வேண்டிய தொகை 2.25 இலட்சம் கோடி ரூபாயாகும். இந்தத் தொகை மிகக் குறைந்த வட்டியில் அரசுக்குக் கடனாக அளிக்கப்படும். மேலும், வங்கிகளில் செலுத்தப்பட்ட ஒன்பது இலட்சம் கோடி ரூபாய் மூலம் அரசுக்கு 90,000 கோடி ரூபாய் வருமான வரியாகக் கிடைக்கும். இவை போக, வங்கிகளில் செலுத்தப்படாமல் கைவிடப்படும் கருப்புப் பணம் 2.5 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என அரசு மதிப்பிட்டிருக்கிறது. இதுவும் அரசின் நிதி அறிக்கையில் வரவாகக் காட்டப்பட்டு, இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் மட்டும் அரசிற்கு நோகாமல் கிடைக்கும் வருமானம் 5.5 இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்படுகிறது. அரசிற்குக் கிட்டும் வருமானத்திற்கு அப்பால், வங்கிகளிடம் பொதுமக்களின் சேமிப்பாக 6.75 இலட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றும், இந்தப் பணத்தைத் திரும்ப எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளால் இந்தச் சேமிப்பின் பெரும்பகுதி வங்கிகளின் புழக்கத்திலேயே இருத்தப்படும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு பொதுமக்களுக்குத் தேவையான சாலை வசதி, சுகாதார வசதிகளைச் செய்து தரப் போவதாகக் கூறுகிறது, மோடி அரசு. இது காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் பொய். பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கல்வி போன்ற மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்யப் போவதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறியிருக்கிறதா? கல்வி, சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு என்ற பெயர்களில் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வரும் செஸ் வரிகள், அவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டதுண்டா? பொதுமக்களின் பணம் வங்கிகளில் கோடிக்கணக்கில் குவியத் தொடங்கியவுடனேயே, பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டித் தொகையைக் குறைத்துவிட்ட மோடி அரசு, பொதுமக்களின் நலனுக்காக இந்தப் பணத்தைச் செலவிடும் எனக் காதில் பூ முடிந்தவன்கூட நம்ப மாட்டான்.

மாறாக, இந்தப் பணம் முழுவதும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குறைந்த வட்டியில் கடனாகத் தரப்படும். அரசு-தனியார் கூட்டுத் (பி.பி.பி.) திட்டங்களில் அரசின் முதலீடாகக் கொட்டப்படும். அரசின் பற்றாக்குறையும், வாராக் கடனால் வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நட்டமும் ஈடு செய்யப்படும்.

சுருக்கமாகச் சொன்னால், கருப்புப் பணத்திற்கு எதிராக மோடி தொடங்கியிருக்கும் இந்தப் புனிதப் போர், பொது மக்களின் கைகளில் இருந்த சேமிப்புகளை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருக்கிறது. சில்லறைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பணமற்ற பொருளாதாரத்திற்கு மாறும்படியான நிர்பந்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிர்பந்தம் வாயிலாக, பேடீம் உள்ளிட்ட பணப் பரிமாற்ற நிறுவனங்கள், ரிலையன்ஸ், எஸ்ஸார் உள்ளிட்ட தரகு முதலாளிகள் தொடங்கவுள்ள பேமண்ட் வங்கிகளின் வர்த்தகத்திற்கும் இலாபத்திற்கு உத்தரவாதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது இந்தியாவிற்கு நல்ல நாள் பிறக்கப் போவதாக உடுக்கை அடித்தார். பொது மக்கள் தமக்குச் சொந்தமான பணத்தை எடுக்க வங்கி வாசலில் காத்துக் கிடக்கிறார்கள். இந்தியத் தரகு முதலாளிகள் வங்கிகளில் முடக்கப்பட்டிருக்கும் மக்களின் பணத்தில் மஞ்சக் குளிக்கப் போகிறார்கள். மோடியும் பா.ஜ.க.வும் பிரச்சாரம் செய்ய நல்ல நாள் இப்படித்தான் விடிந்திருக்கிறது.

– செல்வம்
___________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2016
___________________________________