திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
திரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
ரொம்ப நாளைக்குப் பெறவு வினவுக்காரவுக “அண்ணாச்சி, உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தீர்ப்பு படிச்சிருப்பீங்களே, எழுதுறீங்களா”ன்னு கேட்டாக. ஏற்கனவே எத்தனையோ தபா எழுதலாம்னு கேட்டப்போ, அதெல்லாம் உங்க காமடிக்கு செட்டாகாது, சீரியஸா எழுதற விசயமுன்னு சொன்னீகளே, இதுவும் அப்படிப்பட்டதுல்லான்னு கேட்டேன். “இல்லை அண்ணாச்சி இது சிரிச்சுக்கிட்டே எழுதுற விசயம், சிரிங்கன்னு” டக்குனு போன வைச்சுட்டாங்க.
எக்குத்தப்பா ஏதாவது எழுதி நம்மள மாட்டுறாங்களோன்னு ஒரு சம்சயம் (சந்தேகம்) மனசிலுண்டு. சரி, வுடுங்க பாத்துக் கிடலாம். காந்தியே செத்துட்டாரு, சிவாஜக்கே சில வெச்சுட்டாங்க!
நோட்டுக்கு வேட்டு வெச்சுட்டாரு மோடி அவரு தாடிக்கேத்த கேடின்னுட்டு தேசமே கானாவுல அறம் பாடிக்கிணு கீறப்போ உச்சநீதிமன்றம் இப்புடி ஒரு தீர்ப்ப அவுத்து வுட்டுறுக்கு!
நவம்பருல நோட்டெல்லாம் செல்லாதுன்னு பத்து இலட்ச ரூபா கோட்டு கனவான் சொன்னப்பவே நம்ம சேட்டன் கவுதம் வாசுதேவ மேனன் (பெயரை சின்னதா வைக்க கூடாதா ராசா?) உசாரா விரல்லயே வித்தை காட்டுற தம்பி சிம்பு படத்தை ரிலீஸ் பண்ணாம பூட்டி வைச்சிருக்கணும். ஆசை யார வுட்டுதுங்குற கணக்கா படத்த வுட்டாக. மல்டி பிளக்ஸ்ல ஆரம்பிச்சு மகாலெட்சுமி தியேட்டர் வரைக்கும் ஆளில்லாம வாச்சுமென்னெல்லாம் அன்னைக்கு ஒரு கட்டு கணேஷ் பீடியை அதிகம் பிடிச்சாகளாம்.
கபாலியில 1000-ம் 500-ன்னு ஏமாந்தப்பவே நம்ம பயலகளெல்லாம் இனி தமிழ் ராக்கர்ஸ்தான் நம்மோட தியேட்டர்னு சுடுகாட்டுல சத்தியம் எடுத்துட்டு அன்னாடம் 12 மணி ராவுல டவுண்லோட போட்டு விட்டுட்டானுவ. இதுல தியேட்டர்ல தேசிய கீதம் பாடு இல்லேன்னா ஓடுன்னு சொன்னா எவம்டே சினிமா பாக்க வருவான்?
ஏம்பா நீதிபதிகள்ள, இந்த மிஸ்ரா, ராய் இவுகளெல்லாம் எடுக்க மாட்டமோன்னு ஒரு ஃபத்வா போட்டா என்னப்பா? ஒருத்தரு கோவில்ல வேட்டிய கட்டு, தாவணிய போடு இல்லேன்னா உள்ள உடமாட்டோம்குறாரு. இன்னொருத்தரு அய்யமாரத் தவிர மத்தவனெல்லாம் கருவறைக்குள்ள வராதங்குறாரு. வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்னு வடிவேலு அண்ணாச்சி சொன்னா அதுல சிரிக்கவும் சிந்திக்கவும் நிறைய இருக்கு. ஆனா உயந்த சாதிக்காரவுக கொலை செய்ய மாட்டாங்கன்னு வெண்மணியிலேந்து, பன்வாரி தேவியோட ராஜஸ்தான் வரை சொல்ற நீதிபதிய பாத்தா அதுல விசமும் வில்லங்கமுமுல்லா நெம்பி வழியிது!
தீபக் மிஸ்ரா, அமிதவ் ராய்ன்னு உச்சியில நீதிய பதுக்கி வச்சுருக்கிற இரண்டு பேருதான் இப்ப தியேட்டர்ல ஜனகனமண வேணுமுன்னு ஒத்தக்கால்ல உத்தரவு போட்டுருக்காக. தீர்ப்பு சொல்ற அன்னைக்கு அவங்க வீட்டு குழந்தைங்க ஏதும் மோடி அமித்ஷாவ பாத்து மிரண்டு கத்தி ஐயாமாரு மூட அவுட்டாக்கிட்டாங்களோ தெரியல.
அந்த உத்தரவுல இன்னா சொல்லக்கீறாங்கன்னா:
இதை தியேட்டரு ஓனருங்க செய்யலேன்னா நீதிமன்ற வழக்கு போடுவோமுன்னு மிஸ்ராவும், ராயும் மாட்ரிக்ஸ் படத்துல வாற ஏஜெண்ட் ஸ்மித் கணக்கா கண்டிசனாக சொல்லிட்டாங்க.
ஏற்கனவே மகாராஷ்டிர சட்டசபையில பாரதமாதா ஜெய் சொல்லலேன்னு ஒரு பாய வெளியேத்தி அலப்பறை பண்ணுன பா.ஜ.க-மாரு இதுதான் சாக்குண்ணு உடனே நடைமுறைபடுத்துரோம்னு துள்ளிட்டாய்ங்க! ஏ.டி.எம்லேயும், பேங்குலயும் ஜனமான ஜனம் மோடி வரட்டும் பாத்துக்குறோம்னு குதிச்சப்போ, எல்லையில வீரனுங்க சாவுற போது ஏ.டி.எம்ல செத்தா என்னடான்னு கல்யாணராமன்லேர்ந்து, சுமன் சி ராமன் வரைக்கும் சாபம் மேல சாபம் போட்டு மெய்யாலுமே அது பலிச்சும் போச்சு!
இப்ப தியேட்டர்ல ஜயஹே பாடனும்முனு ஒரு விவாதத்தை ஏத்தி விட்டா ஃபேஸ்புக்குக்கும் வாட்ஸ்அப்க்கும் வாக்கப்பட்ட பயலுவ அதையே பேசிப் பேசி நோட்டு விவகாரத்தை மறந்துருவாணுகள்ளா? ஐடியான்னா அது அமித்ஷாம்தாடே!
போதாக்குறைக்கு கலிங்கப்பட்டி ஜமீனுகிட்ட மைக்க கொடுத்துட்டா நாடு பூறா பதினெட்டு பட்டிக்கும் தேசிய கீதத்த வகுப்பெடுத்து வாய்க்கால் வெட்டி அதுல கப்பலே உடுவாருல்லா! அப்பாலிக்கா அந்த கப்பல்ல ஈழம் வேழம்ணு முழங்குனாருன்னா பெறவு எதுக்குடே தியேட்டருக்கு போவணும்! ஆதித்யா சானலுக்கே நம்ம வைகோ அண்ணாச்சிதாம்டே போட்டி!
மோடிக்கு வெற்றி, செல்லாத நோட்டுக்கு மக்களோட ஆதரவுன்னு ஜூ.வி-லேர்ந்து தந்தி டி.வி வரைக்கும் சளைக்காம பேசுற பயலுவ இனி ஜனகனமணவ வைச்சு கம்பெனி ஆர்ட்டிஸ்ட்ட கத்த வைச்சு ஒரு மாசம் ஓட்டுவாணுகள்ளா!
என்ன இருந்தாலும் தேசம்னாலும், தேசபக்தின்னாலும், தேசிய கீதம்னாலும் சும்மாவாடே! இவுணக பேலுறதும் மோளுறதும் அடைச்சுப் போச்சுன்னா பாரத மண்ணே வணக்கமுன்னு ஆர்.எஸ்.எஸ் காரனுவுகளோ இல்லை சமூக ஆர்வலருண்ணு காவி ஜட்டிய மறைச்சுக்கிணு வாரவனையும் சாக்கடையில கைய வெக்கச் சொல்லு பாப்போம்!
பாதாளச் சாக்காடையில இறங்கி ஒரு தபாவாச்சும் முங்கி எந்திரிக்கிறவன்தான் தேசபக்தன்னு ஒரு சட்டம் போட்டா என்னடே நடக்கும்? தந்தி டி.வி பாண்டே பய சிட்னிக்கு ஓடிருவான். புதிய தலைமுறை பச்சமுத்து பாங்காக் பறந்துருவான். பா.ஜ.க எச்ச ராஜா பெல்ஜியத்துக்கு கிளம்பிருவான். மோடி, அமித்ஷாவெல்லாம் என்னத்துக்கு தூரமான்னு லாகூருலயே குதிச்சிருவான்.
ஏலே கத கேக்குற தம்பிகளா நாஞ் சொல்லுறது கத இல்லடே. பர்மாவுல அந்தக் காலத்துல துப்புறவு தொழிலாளிங்க ஸ்டிரைக் பண்ணுனுப்ப, அரசாங்கமே விரட்டியும் கிளம்பாத செட்டியாருங்கல்லாம் இனிமே அவங்க அவங்க ஆயை பாக்கெட்டுல கட்டி ரங்கூன வுட்டு தூரமா போட்டுட்டு வரணும்னு அரசாங்கம் சொன்னப்போ ஆள வடுங்கன்னு சென்னைக்கு கப்பலு ஏறிட்டாங்கடே.
சரி அத வுடு, இப்ப என்ன தேசிய கீதம் பாடணும்.
பாரத மாதான்னா யாரு, வேளாங்கண்ணி மாதிரி வடக்கத்திய மாதாவான்னு கேக்குற பயலுக கூட இன்ன தேதிக்கு சன்னி லியோன, டெஸ்க்டாப்ல கோயில் கட்டி கும்புடுதாணுக! அதான் நம்ம மிஸ்ராவும், ராயும் ரோசனை பண்ணி தேசத்துக்கு ஏதாச்சும் செஞ்சு கீதத்தை செஞ்சுரணும்னு முடிவு பண்ணிட்டாக.
சரிங்க ஆபிசர். எதுக்கு அத தியேட்டரோட பூட்டணும். பூரா இடங்கள்ளயும் திறந்து வுட்டா பெறவு தேசபக்தி பூத்துக் குலுங்கும்லா? அதுக்குத்தான் நொம்ப ரோசனை பண்ணி சில ஐட்டத்தை சொல்லிட்டு போறேன், பாத்து செய்யுங்க!
பாயிண்ட் நம்பர் 1: அப்பல்லோ தொட்டு அரசாங்க ஆஸ்பத்திரி வரை அல்லா ஆபரேசன் தியேட்டர்லயும் (இதுவும்தான் தியேட்டர்தாம்டே) கத்திய தொடுறதுக்கு முன்னாடி ஜனகனமண பாடணும்னு ஆக்கணும். சரி எப்படியும் நாம பொழைக்க மாட்டோம்னு நினைக்கிற நோயாளியெல்லாம் இதுதான் கிளைமாக்ஸ்னு புரிஞ்சுகிட்டு புண்ணியமா போய்ச் சேந்துருவான்.
பாயிண்ட் நம்பர் 2: ராவுல 9 மணிக்கு தம்பி பாண்டேவும், அண்ணே ஆர்னாப்பும் டி.வியில கத்துற விவாதத்த தேசிய கீதத்த போட்டு ஆரம்பிச்சா ரெண்டு பயபுள்ளைகளுக்கும் வேலை ஈசியா முடிஞ்சிரும். பேச வராவங்கள்ள யாரு பாடுறா, யாரு வாயசைக்கிறா, யாரு ஒப்பேத்துறான்னு கண்டுபிடிச்சா கிளைமேக்சுல தேசிய கீதம் தெரியாத நீதான தேசத்துரோகின்னு அதுக்கு ஆதராம புட்டேஜ்ஜ போட்டா போச்சு!
பாயிண்ட் நம்பர் 3: ரேசன் கடையில தேசிய கீதத்த பாடிக் காமிச்சாத்தான் இலவச அரிசின்னு ஒரு அறிவிப்பு போட்டீங்கன்னா அடடே மானியத்த வெட்டுறுதக்கு இப்புடி ஒரு ரோசனையான்னு உலக வங்கிக்காரனே ஒரு ஆச்சரியக்குரியோட வாயப் பொளப்பானுகல்லா!
பாயிண்ட் நம்பர் 4: டாஸ்மாக் பாருல ஒரு மணிநேரத்துக்கு ஒரு வாட்டி தேசிய கீதம் போடணும். அத போடும் போது ஸ்டெடியா நின்னா ஒரு குவார்ட்டர் இனாம்னு ஒரு அறிவிப்பு போட்டா, மொத்த தமிழ்நாடே ஒரு ராத்திரியிலேயே தேசிய கீதத்த கரைச்சு குடிச்சு இந்தியாவுக்கே முன்மாதிரியா ஆயிருமுல்லா! பெறவு குடிச்சுட்டு சீனு போடுறவனெல்லாம் ஒரு குவார்ட்டர் இனாம்ங்கிறத மனசுல வெச்சுகிட்டு பவிசா நடப்பாம்லா!
பாயிண்ட் நம்பர் 5: இந்தியா ஃபுல்லா அல்லா வூட்டுங்கள்ளேயும் தினமும் ஒரு வாட்டி அய்யருமாறு காயத்ரி மந்திரம் மாதிரி தேசிய கீதம் பாடணும். யாரு இத போடாம டபாய்க்கிறாங்கண்ணு ஒரு சேட்டிலைட் கோட 2000 ரூபாய் நோட்டுல போட்ட மாதிரி ஓட்டுக்குள்ளயோ கூரைக்குள்ளயோ போட்டா டேட்டா பேசுல டிமிக்கி குடுக்குறவனுங்க தெரிஞ்சுருவாணுங்க. அப்பால மாசத்துக்கு ஒரு தபா இப்புடி தேசிய கீதம் பாடாத வீடுங்கள்ள திருடங்க புகுந்து திருடலாம், போலீசு வராது, கேஸ்ஃ ஆகாதுன்னு ஒரு அறிவிப்பு கொடுத்துப் பாரு! பெறவு 30 நாட்கள்ள தேசிய கீதத்த பாராயணம் செய்வது எப்படின்னு புக்லேர்ந்து, டிரைனிங் சென்டர் வரை பிசினஸ் பிச்சுகிடுமுல்லா!
பாயிண்ட் நம்பர் 6: ஒரு குடும்பத்துல அத்தனை பேரும் தேசிய கீதத்த சரியா பாடிக் காம்பிச்சா அவுங்க ஆதார் கார்டுல ஒரு ஸ்டார ஏத்தி, இந்த ஸ்டார் இருந்தா சரவணா ஸ்டோர்லேந்து, நல்லி குப்புசாமி வரை அல்லாக் கடைங்கள்ளயும் ஒரு சரோஜாதேவி சோப்பு டப்பா இனாமுன்னு சொன்னா இன்னா நடக்கும்? பெறவு டப்பா பத்தலேன்னு சீனாவுலேந்துதான் இறக்கணும்.
பாயிண்ட் நம்பர் 7: ஆன்சைட் போக விரும்புற நம்ப ஐ.டி தம்பிமாரு பத்து கிராமத்துல நூறு பேருக்கு தேசிய கீதத்த கத்துக் கொடுக்கணும். கொடுத்தா அமெரிக்கா நிச்சியமுன்னு ஒரு அறிவிப்பு போடு! பயபுள்ளைக ஃபேஸ்புக்க காலி பண்ணிட்டு கிராமம் கிராமமா சுத்துவாணுகல்லா!
பாயிண்ட் நம்பர் 8: மாட்டுக்கறி துன்னுறவணுங்க ஒரு நாளைக்கு ஐஞ்சு வாட்டி தேசிய கீதத்த பாடணும், துன்னாதவனுக்கு கிடையாதுன்னு சொல்லிப் பாரு! வேற வழியில்லாம நாட்டுக்காக மாட்ட தியாகம் பண்ணுவாங்க. நாமளும் நாடயும், மாடயும் காப்பாத்துனமாறி ஆச்சுல்லா?
ஃபைனல் பாயிண்ட் நம்பர் 9: அல்லாரு வூட்டுலயும் படுக்கும் போது கண்டிசனா தேசிய கீதம் பாடணும்னு அதுக்கும் சாட்டிலைட் கோடு போட்டு பாடலேன்னா டி.வி கட் பண்ணிருவோம்னு சொல்லு! பயபுள்ளைக கந்தசஷ்டிக் கவசம் மாறி பிச்சு மேஞ்சுருவாங்கல்லா? சீரியலு பாக்காம நம்ம மாதர் குலங்க வாழ முடியாதுல்லா?
– காளமேகம் அண்ணாச்சி
எங்கே புதிய 500 ரூபாய் நோட்டு? பணத்தை இழந்த பிறகு அனைவரும் கேட்கும் கேள்வியிது. நாம் அனைவரும் வாட்ஸப்பிலோ அல்லது தொலைக்காட்சியிலோ அதைப் பார்த்திருக்கிறோம் ஆனால் உண்மையில் நம்மில் பெரும்பாலானோர் அதைத் தொட்டுப் பார்த்ததில்லை. காரணம் இன்றியமையாத அந்தப் பண மதிப்பை அச்சிடுவதில் இருக்கும் மொத்த நிர்வாகக் குளறுபடிகள்.
தாமதத்திற்கான காரணத்தை ஆராயும் முன் 500 ரூபாய் பணத்தாளின் இன்றியமையாமையைப் பார்த்து விடுவோம். செல்லாக்காசுத் திட்டத்தை நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவிக்கும் முன்னர் 500 ரூபாய் மதிப்பிலான 1,660 கோடி பணத்தாள்கள் இருந்தன. ஒட்டுமொத்த நாணய மதிப்பில் பாதிக்கும் அதிகமாகப் புழக்கத்திலிருந்த அதன் மதிப்பு 8.3 இலட்சம் கோடி ரூபாயாகும். எனவே அது புழக்கத்தில் இருந்த இன்றியமையாத ஒரே நாணய மதிப்பாகும்.
அதிர்ச்சியூட்டும் விதமாக மோடியின் அறிவிப்பிற்குச் சற்று ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் புதிய 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் பணித் தொடங்கியது. இரண்டு அச்சகங்களால் கடந்த மூன்று வாரங்களில் 1 கோடி பணத்தாள்கள் மட்டுமே அச்சடிக்க முடிந்தது. இயல்பு நிலைமைக்குத் திரும்பக் கூடுதலாக ஒரு 1,659 கோடி பணத்தாள்கள் அச்சடிக்கப்பட வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஏற்கனவே புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் பணத்தாள்களில் வெறும் 0.06% மட்டுமே ரிசர்வ் வங்கியால் மாற்ற முடிந்தது. இவ்வளவு பணத்தாள்களையும் அச்சடிக்க எத்தனை காலமாகும் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.
இந்தக் கேள்விக்கு விடை தேடும் பொருட்டு நாசிக்கில் 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் நாணய நோட்டு அச்சகத்திற்கு(CNP) சென்றோம். CNP ஐ தவிர மத்தியப்பிரதேசத்தின் தேவாஸில் உள்ள நாணய நோட்டு அச்சகத்திலும் 500 ரூபாய் பணத்தாள் அச்சிடப்படுகிறது. இரண்டு அச்சகங்களும் நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகத்தை (Security Printing and Minting Corporation of India) சேர்ந்தவை.
மேலும் 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கும் இரண்டு அச்சகங்களையும் ரிசர்வ் வங்கி இயக்குகின்றது. நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பிற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தப் பணத்தாள்களை அச்சிடும் பணித் தொடங்கியது. நவீன இயந்திரங்களைக் கொண்டிருக்கும் இந்த அச்சகங்கள் வேகமாக அச்சிடும் திறன் படைத்தவை. 2000 ரூபாய் பணத்தாளை அச்சிட நல்ல இயந்திரங்களைக் கொண்ட இந்த அச்சகங்கள் முன்கூட்டியே பணிக்கப்பட்டதால் மோடி அறிவிப்பிற்குப் பிந்தைய 48 மணி நேரத்திற்குள் வங்கிகளுக்கு அந்தப் பணத்தாள்கள் கிடைத்தன.
பிறகு அதே போல 500 ரூபாய் பணத்தாளை அச்சிட ரிசர்வ் வங்கியையும் நிதியமைச்சகத்தையும் தடுத்தது எது? 7 வாரங்களுக்குப் பிறகே 500 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடத் தொடங்கப்பட்டது ஏன்? மிக இன்றியமையாத நாணயப் பணத்தாள்களை அச்சிடும் பணி பழைய தொழில்நுட்பங்களைக் கொண்ட இரண்டு அச்சகங்களுக்குக் கொடுக்கப்பட்டது ஏன்? யார் அந்த முடிவை எடுத்தது?
CNP அதிகாரிகள் பத்திரிக்கையாளர்களிடம் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்றாலும் 500 ரூபாய் அச்சடிப்பில் ஈடுபடும் சில ஊழியர்கள் பேரை வெளியிடாத பட்சத்தில் பேச ஒத்துக் கொண்டனர். ரிசர்வ் வங்கியின் உத்தரவை வெறுமனே தாங்கள் நிறைவேற்றியதாக வேலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கூறினர். காலதாமதத்திற்கும் அதைத் தொடர்ந்தக் குழப்பத்திற்கும் ரிசர்வ் வங்கிதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினர்.
வடிவமைப்பு, தாள் மற்றும் அனுமதி எங்களுக்குக் கிடைத்த பின்னர் புதிய நோட்டிற்கான வேலையைத் தொடங்கினோம். கள நிலவரங்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளுக்குத் தெரியாது. ரிசர்வ் வங்கி சொந்தமாக இரண்டு அச்சகங்களை அங்கே தொடங்கி 2000 ரூபாய் பணத்தாள்களை அச்சடிக்கிறது. ஆனால் அச்சில் தரம் இல்லை. பணத்தாள் காய்வதற்குக் கூட எங்களுக்கு அவர்கள் நேரம் கொடுக்கவில்லை. பணத்தாள்களை வடிவமைத்தல் மற்றும் அச்சடிக்கும் தொழிலில் 1925-லிருந்து நாங்கள் இருக்கிறோம்.. ஆனால் வடிவமைப்பு முதல் அச்சிடுதல் வரை அனைத்தையும் ரிசர்வ் வங்கியே செய்ய இப்போது விரும்புகிறது. ஆனால் அது கட்டுப்படுத்தும் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.
பல்வேறு ஊழியர்களைச் சந்தித்த பிறகு SPMCIL ற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே முரண்பாடு இருந்தது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நீண்டக்காலமாகவே சண்டை நடந்து வந்ததாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவரரான கே.சி.சக்ரபர்த்தி தி குயன்ட் ஊடகத்திடம் (The Quint) உறுதிபடக் கூறினார். 500 ருபாய் பணத்தாள்களை அச்சடிப்பதில் உள்ள காலதாமதத்திற்கு நிதியமைச்சரை அவர் குற்றம் சாட்டினார்.
SPMCIL ன் அச்சகங்கள் திறமைக்குப் பெயர் பெற்றவை அல்ல. அவை சற்று மந்தமான அச்சகங்கள். ஆனால் SPMCIL நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக இயக்குனர் இல்லை என்பதுதான் முக்கியமான விடயம். இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தலைவர் இல்லாமல் எப்படி அவர்கள் இருக்க முடியும்? விரைவான முடிவுகளை எடுக்க யார் இருக்கிறார்கள்?
– கே.சி.சக்ரபர்த்தி, முன்னாள் துணைத் தலைவர், இந்தியன் ரிசர்வ் வங்கி.
2016, ஜூலையில் எம்.எஸ்.ராணா அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைமை இயக்குநர் நியமனம் செய்யப்படும் வரையில் அந்நிறுவனத்திற்குப் பொறுப்பாளராக நிதியமைச்சகத்தில் இணைச் செயலாளராக உள்ள பிரவீன் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் மற்றும் ஒட்டுமொத்தக் குழப்பத்திற்கு யார் காரணம் என்று கேட்டபோது பெயர்களைச் சொல்ல மறுத்துவிட்டார் சக்ரபர்த்தி. ஆனால் நிதியமைச்சரை குற்றம் சாட்டினார்.
யார் காரணம் என்று நமக்குத் தெரியவில்லை. அஃது ஆய்வுக்குரியது. நியமனம் செய்யும் பொறுப்பில் இருப்பவர்களைத் தான் கேள்வி கேட்க வேண்டும். ஒட்டுமொத்த நடவடிக்கையையும் சரியான வழியில் செய்ய அவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும்.
– கே.சி.சக்ரபர்த்தி, முன்னாள் துணைத் தலைவர், இந்தியன் ரிசர்வ் வங்கி.
அதே கேள்வியை நிதியமைச்சகத்திடம் தி குயன்ட் கேட்ட போது அவர்கள் பதிலைத் திருப்பிப் போட்டார்கள்.
பணி நியமன நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. நிர்வாகப் பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு நிலைமைகளைச் சமாளிக்கும் திறமை இருக்கிறது. அறிவிப்பு திடீரென்று வந்தது. சூழ்நிலைகள் படிப்படியாகச் சீராகி வருகின்றன. சில பகுதிகளில் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால் பெரிய அளவிற்குப் பிரச்சினைகளைச் சமாளித்து விட்டோம்.
– டி.எஸ்.மாலிக், செய்தித் தொடர்பாளர், நிதியமைச்சகம்.
ரிசர்வ் வங்கிக்கும் 500 ரூபாய் பணத்தாள் அச்சடிக்கும் அச்சகத்திற்கும் ஒரு வெளிப்படையான முரண்பாடு இருக்கிறது. பணத்தாள்களை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு முழுநேரத் தலைமை நிர்வாக இயக்குனர் இல்லை. இன்னும் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. தகவல் தொடர்பு இடைவெளிப் பிரச்சினை இருந்ததா? இந்தப் பணத்தாள்களை அச்சடிக்க மந்தமான அச்சகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்? இந்த முடிவுகளுக்குப் பொறுப்பானவர் யார்?
ரிசர்வ் வங்கி பேசினால் இந்தக் கேள்விகளில் பெரும்பாலானவைக்கு விடை கிடைத்து விடக் கூடும். எனினும் ரிசர்வ் வங்கிக்கு தி குயன்ட் அனுப்பிய கேள்விப்பட்டியலுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
(புதிய பணத்தாள் அச்சடிக்கும் பணியில் இருக்கும் கூத்துக்குளைப் பார்த்தால் இதில் ஏதோ சதித்திட்டம் இருக்க வேண்டும். அல்லது இவர்கள் அடி முட்டாள்களாக இருக்க வேண்டும். செலவழிக்கவே முடியாத 2000 ரூபாய் நோட்டு கிடைத்து, செலவழிப்பிற்கு அத்தியாவசியமான 500 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை. ஒரு சதவீதம் கூட புதிய பணத்தை அளிக்காமல் மோடி அரசு நாட்டு மக்களை எப்படி சித்திரவதை செய்கிறது என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்று
– வினவு)
தமிழ்நாடு தேசிய பஞ்சாலைக் கழகத்துக்குச் சொந்தமான ஏழு மில்களிலும் 150 கோடி ரூபாய் மதிப்பிலான நூலும் துணியும் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இனிமேல் உற்பத்தி ஆகும் நூலும் துணியும் இதனுடன் சேர்ந்து நெருக்கடியை கூடுதலாக்கப் போகிறது.
இதனால் வாரத்தில் ஒருநாள் (ஞாயிறு) விடுமுறை விடப்பட்டு உள்ளது. சனிக்கிழமை லே ஆப் விடப்பட்டு இரண்டு நாட்கள் விடலாம் எனும் கருத்தில் நிர்வாகம் உள்ளது.
ஏறத்தாழ நூற்றுக் கணக்கான தினக்கூலிகள், கேசுவல் அப்ரண்டீஸ் என பல்வேறு பெயர்களில் உள்ள, பல பத்தாண்டுகள் வேலை செய்த ஆண் – பெண் தொழிளாளர்கள் வேலை இல்லாமல் அனாதைகள் போல தெருவில் நிற்கின்றனர். திரும்பப் பெற முடியாத தங்களது இளமையை உழைப்பை என் டி சி-க்கு அர்ப்பணித்தவர்கள். இருண்ட எதிர்காலத்தில் உள்ளனர். மண்டல சங்கம் இவர்களுக்காக போராடத் தயாராக உள்ளது.
மோடி அரசின் 500 / 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததின் மூலம் நூல் விற்பனை மேலும் சரிந்துள்ளது. அடுத்து வரவிருக்கின்ற GST வரிவிதிப்பின் மூலம் என் டி சி – யின் நூல் விற்பனை அதல பாதாளத்துக்கு போக உள்ளதை அனைவரும் அறிவோம். இதனால் என் டி சி-யில் வேலை செய்யும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஆபத்து வந்து விட்டது. மொத்தமாக மூன்று மாதத்திற்கு மூடப்படலாம். நூல் மேலும் தேக்கமடைந்தால் ஆறு மாதத்திற்கும் மூடப்படலாம். இதன் அடுத்த கட்டமாக ஆலை மூடலும் வர வாய்ப்பு உள்ளது. நிரந்தரத் தொழிலாளர்களும் கேசுவல் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும் இணைந்து புரட்சிகர சங்கமாக அணி திரண்டால் இதனை மாற்றி அமைக்க முடியும்.
ஆலைகள் மூடினால் நல்லபடியாக VRS வாங்கி நைசாக வெளியே செல்லலாம் என சில பேர் நினைக்கலாம். சங்கம் பலமாக இருந்து போராட்டம் தீவிரமாக நடந்தால் தான் மேற்படி மதியூகிகளும் பலன் பெற முடியும் என்பதை அறிந்து கொள்வது நல்லது.
28.10.2016 அன்று மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித் துள்ளது. எவையெல்லாம் விற்பனைக்கு வரும் என்பதை ஏலத்திற்கு வரும் போது தெரிந்து கொள்ளலாம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பீதி கிளப்பி உள்ளார்.
ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற் சாலை மூடல் , சேலம் உருக்காலையின் கழுத்தில் கத்தி தொங்குவது, LIC-யை விற்பது, வங்கிகளை மூடுவது போன்ற அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் என் டி சி-க்கு வரவிருக்கும் ஆபத்தை உறுதிப்படுத்துகிறது. ஆலை மூடல் எல்லாம் வராது என்று திண்ணை தூங்கிகள் ஜல்லி தட்டுவதைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.
ஆலை மூடல் ஆபத்தை ஒட்டுக் கட்சிகளால் தடுத்து நிறுத்தவே முடியாது. தொழிலாளர்களுக்கு ஏற்படும் எந்த வித ஆபத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. தென்னிந்தியாவின் மான்செஸ்டராம் நமது கோவையில் அத்துனை ஆலைகளும் மூடப்படுவதற்கு இவர்களே காரணம்.
என் டி சி-யில் உறுப்பினர் சேர்க்கைக்காகவும் அங்கீகாரத் தேர்தலில் ஒட்டுக்காகவும் பிரியாணி, பிராந்தி, பால்குக்கர், வேட்டி, சேலை கொடுத்தது யார்? தொழிற் சங்கத்தை கேவலப்படுத்தியது யார்? டாஸ்மாக் பார்களில் உறுப்பினர் சேர்க்கையும் ஒட்டு வேட்டையும் நடத்தியவர்களுக்கு உரிமைகள் பறிப்பு குறித்து போராட முடியுமா? முடியாது.
உறுப்பினர் சேர்க்கைக்கும் , ஓட்டு வாங்குவதற்கும் பணம் கொடுக்காத ஒரே சங்கம் நமது சங்கம் மட்டும் தான். புரட்சிகரமான தத்துவத்தால் ஒளியூட்டப்பட்டு வர்க்கப் போராட்டத்தை செயல் துடிப்புடன் நடத்தும் சங்கம் நமது சங்கம் மட்டும் தான்.
தமிழ் நாட்டிலேயே இந்த ஆண்டும் கூடுதலான சதவீத போனசை கோவையில் பெற்றுத் தந்தது நமது சங்கம் தான். நான்கு ஆண்டுகளாக நமது சாதனையை முறியடிக்க யாரும் இல்லை. என் டி சி-யில் போனஸ் அரியர்ஸ் வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ஒரே சங்கம் மண்டல சங்கம்தான்.
தென் இந்தியாவிலேயே நமது சங்கம் மட்டும் தான் அரியர்ஸ் கேட்டு வழக்கு போட்டுள்ளோம் . வழக்கு எண் W.P. NO.1 7395/2016 – Date : 07-04-2016. தொழிற்சங்கப் பாரம்பரியம் எனப் பேசுகின்ற கேரளாவும் வழக்கு போடவில்லை.
இதில் நாம் அடையப் போகும் வெற்றி தென் இந்தியாவில் உள்ள எல்லா என் டி சி தொழிலாளர்களுக்கும் கூடுதலாக ரூ.3500/- கிடைக்கும். தினக்கூலித் தொழிலாளர்களுக்கு மீண்டும் என் டிசி-யில் வேலை வாய்ப்பு பெற முடியுமா எனக் கேட்டால் முடியும் என்கிறோம். தேங்கி நிற்கும் நூலையும் துணியையும் விற்க முடியுமா எனக் கேட்டால் விற்க முடியும் என்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமையும் என் டி சி மில்களை மூடுவிழா நடத்தாமல் ஒட்ட முடியுமா என்றால் முடியும் என்கிறோம். என் டி சி ஆலை மூடல் சதியை முறியடிக்க முடியுமா எனக் கேட்டால் நிச்சயம் முடியும் என்கிறோம். மத்திய அரசை எதிர்த்து வெற்றி கொள்ள முடியுமா எனக் கேட்டால் முடியும் என்கிறோம்.
இது எப்படி சாத்தியமாகும் என்று நல்ல உள்ளம் படைத்த போராட்டக் குணம் கொண்ட தோழர்கள் கேட்கலாம். அவர்கட்கு எமது பணிவான பதில் இதுதான். டெல்டா மாவட்டங்களில் விளை நிலங்களை பாலைவனமாக்க வந்த மீத்தேன் எடுக்கும் திட்டத்தை விவசாயிகள், அமைப்புகள், தமிழக மக்கள் ஆகியோர் இணைந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசை பின் வாங்க வைத்தனர். இதன் விளைவாக 10-11-2016 அன்று தமிழகத்தில் மீத்தேன் திட் டம்
ரத்து என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.
18.04.2016 அன்று இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரில் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் மத்திய அரசை எதிர்த்து போராடி வென்றார்கள். தொழிலாளர்களது பி.எப். சேமிப்பை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க சட்ட விதிமுறைகளை திருத்தம் செய்தது மோடி கும்பல். இதற்கெதிராக போர்க் கோலம் பூண்டனர் பெங்களூர் தொழிலாளர்கள். துப்பாக்கி சூடு , தடியடி, அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர். மோடி + கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டுச் சதியை முறியடித்தனர்.
போராடினால் மட்டுமே உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்பதை என் டி சி தொழிலாளர்களாகிய நாமும் உணர்வோம்.
ஆகவே என் டிசி-யில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள், கேசுவல் தினக்கூலித் தொழிலாளர்கள், அலுவலக ஊழியர்கள் அனைவரும் இணைந்து போராட்டக் களம் காண்போம் என அறைகூவல் விடுக்கிறோம்.
கண்டன ஆர்ப்பாட்டம்
நிகழ்ச்சி நிரல்:
உரைகள்:
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு 96297 30399
ஏ.டி.எம். வரிசையில் எனக்குப்பின் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கையில் ஒரு 100 ரூபாய்த் தாளும் ஒரு ஏ.டி.எம். அட்டையும் இருந்தது. முகத்தில் கலக்கம். விழிகள் அலைபாய்ந்தபடி இருந்தன. நான் அவரைப் பார்த்ததும், ‘இந்த ஒரு நோட்டுதான் தம்பி இருக்கு. பொண்ணுக்கு வைரல் ஃபீவர். இருந்த காசை வெச்சு டாக்டர்கிட்ட காட்டிட்டேன். மருந்து வாங்கணும்னா 200, 300 ஆகும். அதான் எடுக்க நிக்கிறேன்’ என்றார். பரிதாபமாக இருந்தது.
வரிசை அசைந்து நகர்ந்தது. ஏ.டி.எம். காவலாளி, ஒருவர் ஓர் அட்டையை மட்டும் பயன்படுத்தி பணம் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தபடி இருந்தார். அவர், இதை உறுதியான குரலில் அழுத்திச் சொன்னால் என்ன நடக்கும் என்பதை முந்தைய நாள் வேறொரு ஏ.டி.எம்-மில் கண்டேன். அந்தக் காவலாளியை ஆங்கில மற்றும் தமிழ் கெட்டவார்த்தைகளால் திட்டினார் ஒரு நடுத்தர வர்க்க ஆசாமி. அதைப்போன்ற அனுபவம் இவருக்கும் இருக்கக்கூடும். அதனால், இவரது குரலில் பணிவு கூடுதலாக இருந்தது.
எந்த நிமிடமும் பணம் தீர்ந்துவிடக்கூடும் என்ற பதற்றம் எல்லோருக்கும் இருந்தது. எனக்குப்பின்னே நின்ற பெண் கையில் இருந்த 100 ரூபாயை இறுக்கி கசக்கிப் பிடித்திருந்தார். நாட்டின் பொருளாதாரத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கருப்புப் பணத்துக்கு எதிரான போரில் தானும் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை. இருப்பினும் நின்றுகொண்டிருந்தார். மீண்டும் அவரைப் பார்த்தேன். பேரிடர் நேரங்களில் புதிய மனிதர்களுடன் உரையாடுவதற்கு மனிதர்களுக்கு காரணங்கள் தேவைப்படுவது இல்லை.
‘புள்ளைய மாமியார்கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்ப்பா. அது பாவம், மாவு கடை வெச்சிருக்கு. கடையைப் பாக்குமா? உடம்பு சரியில்லாத புள்ளையப் பாக்குமா? நானும் பணம் எடுக்க இந்த ஏரியா பூரா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். ஒரு ஏ.டி.எம்-முலயும் துட்டு இல்ல. துட்டு இருந்தா இவ்வளவு கூட்டம்’ என்றார்.
பிறகு வரிசை நகர்ந்து, எனக்குமுன்னே நான்கு பேர்களாக இருந்தபோது பணம் முடிந்துபோய் அனைவரும் வேறுவேறு ஏ.டி.எம்.களைத் தேடி வெவ்வேறு திசைகளுக்கு ஓடினோம். அந்தப் பெண் கேவலமான கெட்டவார்த்தைகளால் இந்த நாட்டின் தலைமை அமைச்சரை திட்டியபடி நகர்ந்தார்.
செல்லும் இடம் எல்லாம் செல்லாக்காசு விவகாரத்தில் ஏதேனும் பாதிப்பா என்பதை விசாரிக்கிறேன். என் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டுக்கறி கடைக்காரரிடம், நவம்பர் 14ஆம் தேதிவாக்கில் விசாரித்தபோது, பாதிக்குப் பாதி விற்பனை குறைந்துவிட்டதாகச் சொன்னார். வார நாட்களில் நாள் ஒன்றுக்கு நான்கு ஆடுகள் விற்பனைசெய்யும் நிலையிலிருந்து, வெறும் ஒரு ஆடு என்ற நிலைக்கு வந்தார். ‘இந்த யாவாரமும் ஆயிரம், ஐநூறு வாங்குறதுனால… இல்லேன்னா இதுவும் இருக்காது’ என்றவர், கடந்த நான்கு நாட்களுக்குமுன்பு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த மற்ற வார நாட்களில் முழுமையாக கடையை மூடிவிட்டார்.
காலை நேரத்தில் கூட்டம் நிரம்பி வழியும் சூளைமேடு பெரியார் பாதை மீன் சந்தை வெறிச்சோடிக் கிடக்கிறது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைவிட வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களும் ‘500, 1000 வாங்குறோம். இல்லேன்னா இதுவும் இல்ல’ என்கிறார்கள். இது நீண்டகாலம் நீடிக்க முடியாது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதற்கான இறுதித் தேதி டிசம்பர் 30 என்பதால், டிசம்பர் 15 தேதிக்குப்பிறகு பழைய 500, 1000 வாங்குவதை நிறுத்திக் கொள்வார்கள். இந்த குறைந்த வியாபாரமும் முடங்கிப்போகும்.
சட்ட நீதிக்கும், இயற்கை நீதிக்கும் பொருந்தாத இந்த செல்லாக்காசு நடவடிக்கையால் பெரும்பான்மை மக்கள் ஒவ்வொரு நாளும் துன்பத்தில் உழல்கின்றனர். நான் உழைத்துச் சேர்த்த செல்வத்தை செலவு செய்யக்கூடாது என்று சொல்ல நீ யார்? இந்த அரசாங்கம் உண்மையில், இந்திய மக்களிடம் இருக்கும் பணத்தை வழிப்பறி செய்திருக்கிறது.
மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த இவர்கள், இருக்கும் வேலைவாய்ப்பையும் பறித்துக்கொண்டுவிட்டார்கள். பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் தாக்குப் பிடிக்க முடியாமல் தங்கள் தொழிலாளர்களின் ஒரு பகுதியினரை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. சின்னஞ்சிறிய தொழிலகங்கள் தற்காலிமாக உற்பத்தியை நிறுத்திக்கொண்டுவிட்டன. இவற்றில் பணிபுரிந்து வேலையிழந்திருக்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் சொந்த கிராமங்களுக்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். எந்தப் புள்ளியிலிருந்து அவர்கள் கிளம்பினார்களோ அந்தப் புள்ளிக்கே திரும்பியிருக்கிறார்கள். பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் வெறுங்கையுடன் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இது உருவாக்கப்போகும் தாக்கம் மிகப் பெரியதாக இருக்கும். உதிரித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கீழ்நிலை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, டிமாண்டைவிட சப்ளை அதிகரித்து, அவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்படுவதைக் காட்டிலும் கூலி குறைத்து வழங்கப்படும். இந்தப் போக்கு, கிராமப்புற பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கப்போகிறது.
இப்போதே, ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய். மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி என பல கை மாறித்தான் இந்த 10 ரூபாய். அப்படியானால், இதில் விவசாயிக்குக் கிடைப்பது எவ்வளவு? மற்ற காய்கறிகளுக்கும் இது பொருந்தும். பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கப்படும் மற்ற காய்கறிகளும்கூட, செல்லாக்காசு காரணமாக அல்லது அதைக் காரணம்காட்டி கொள்முதல் செய்யப்படும் இடங்களில் மிகக் குறைந்த விலைக்கே எடுக்கப்படுகின்றன. போட்ட முதல்கூட எடுக்க முடியாது.
இப்படி இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மிக நேரடியாக பாதிக்கக்கூடிய இவ்வளவு மோசமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ள இந்த பாஜக அரசை விமர்சிக்கும்போது நாம், அதன் முழுமையில் இருந்து மதிப்பிட வேண்டும். ‘மோடி அரசு, மோடி அரசு’ என்று விமர்சிப்பதை சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டியிருக்கிறது. ஏனென்றால், மோடி என்ற நபரும் பெயரும் ஒரு முகமூடி. பின்னுள்ள காவி கும்பல்தான் உண்மையான சூத்திரதாரி. நாளை இந்தப் பிரச்னை கைமீறிப் போகும்போது, தங்கள்மீது பழிவராமல் இருக்கவும் மக்களின் கோபத்தை ஆற்றுப்படுத்தவும் மோடி என்ற பிம்பத்தை பலி கொடுக்கத் தயங்க மாட்டார்கள். மொத்தப் பிரச்னைக்கும் காரணம், தனி ஒரு நபர்தான் என்பதைப்போல சிக்கலை சுருக்கி, தங்கள் இருப்பைத் தக்கவைக்க முயற்சிப்பார்கள். எனவே, இதை மோடி அரசு என்ற வரம்பைக் கடந்து உற்று நோக்கவேண்டியிருக்கிறது.
– பாரதி தம்பி
கட்டுரையாளர் குறிப்பு: பாரதி தம்பி, பத்திரிகையாளர். நியூஸ் 18 தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பிரிவின் பொறுப்பாளராக இருக்கும் இவர் ‘தவிக்குதே தவிக்குதே ’- ‘கற்க கசடற – விற்க அதற்குத் தக’- ‘குடி குடியை கெடுக்கும்’ எனும் நூல்களை எழுதியுள்ளார். இவரது ‘கற்க கசடற – விற்க அதற்குத் தக’ மாற்றுக் கல்வி ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூலாகும்.
நன்றி: மின்னம்பலம்
பண மதிப்பைக் குறைத்தல் விளைவு : அளப்பரிய வேலையிழப்புகளால் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்களிடம் பணமோ உணவோ எதுவும் இல்லை
பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூவாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த 11 நாட்களுக்குப் பிறகு, கட்டுமானத் துறையில் வேலையிழப்புக்களைச் சந்திக்கும் தமிழகத்தில் வேலை செய்யும் 5 இலட்சம் புலம் பெயர்ந்த மற்றும் அமைப்புச்சாராத் தொழிலாளர்களில் இருவருடைய குரல் மட்டுமே இவை.
நிபுணர்கள் மற்றும் பல்வேறு முகவர்களைப் பொறுத்தவரையில் கட்டுமானத்துறை இப்பகுதியில் நிலைகுலைந்த நிலைக்கு வந்திருக்கிறது. கட்டுமானத்துறையில் மாநிலத்திலேயே பெரும்பங்கு வகிக்கும் சென்னை, கோவை, திருச்சி மற்றும் ஏனையப் பகுதிகளில் நிலவும் பணத்தாள் தட்டுப்பாடு விரைவில் சரியாகாவிடின் வரும் ஒரு ஆபத்தான சூழ்நிலை வருமென்று சென்னையில் இருந்து வரும் பல்வேறு அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
கூலி மற்றும் உணவில்லாமல் தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்ததாக வரும் அறிக்கைகளை ஆமோதிக்கிறார் இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கக் கூட்டமைப்பின்(CREDAI) தமிழகப் பிரிவைச் சேர்ந்த என்.நந்தகுமார். தொழிலாளர்கள் அன்றாட உணவிற்கு அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே ஏற்பாடு செய்யுமாறு CREDAI அமைப்பைச் சேர்ந்த முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
“சற்றேறக்குறைய எந்த ஒருக் கட்டுமானத் திட்டத்திலும் 100 லிருந்து 200 தொழிலாளர்கள் இருப்பார்கள். சென்னை CREDAI மட்டுமே 130 (முன்னணிக் கட்டுமான மேம்பாட்டாளர்கள்) உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. சூழ்நிலைச் மிகவும் சரியில்லாததினால் உடனடியாக உணவை வழங்க எங்களில் பெரும்பாலோனோர் திட்டமிட்டு உள்ளோம். பட்டினியைத் தவிர்க்கத் தனியார் உணவு வழங்கும் சேவையையும் சிலர் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
இருந்த போதிலும், சென்னையில் உள்ள ஒட்டுமொத்த கட்டுமான மேம்பாட்டாளர்கள் மற்றும் திட்டங்கள் CREDAI அமைப்பின் கீழில்லை. CREDAI அல்லது வேறு எந்த அமைப்பிலும் சார்ந்திராத 500-600 அமைப்புச்சாராக் கட்டுமான மேம்பாட்டாளர்கள் சென்னையில் இருப்பதாகத் தொழிலாளர் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகிறார். “நூற்றுக்கணக்கான திட்டங்களும் அவற்றில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமான மேம்பாட்டாளர்களாலோ அல்லது மாநில அரசினாலோ இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாது” என்று அவர் கூறினார்.
கடைசி 4 நாட்களில் மட்டும் சென்னை மாநகரம், பழைய மகாபலிபுரம் சாலை, GST சாலைப் பகுதியில் 200-க்கும் அதிகமான கட்டுமானத் திட்டங்கள் ஒன்று நின்று விட்டன அல்லது பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறினார் தொழிலாளர்த் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். ஆயினும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1000 கட்டுமானத் திட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக CREDAI மற்றும் ஏனைய ஆதாரங்கள் கூறின.
கட்டுமானத் துறையில் 30% லிருந்து 40% வரைக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டாளரும் BSCPL நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான பி.சீனைய்யா கூறினார். இவரது BSCPL நிறுவனம் பெரிய நெடுஞ்சாலை மற்றும் நீர்பாசனத் திட்டங்களைத் தீட்டுவதில் நிபுணத்துவம் பெற்றது.
“இன்னும் 10 நாட்களில் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும் என்று நம்புகிறோம். கட்டிடத்தை வாங்கியவரிடம் இருந்து பணம் வருவது நின்று விட்டதால் தொழிலாளர்களுக்குக் கூலியைக் கொடுப்பதற்கு ஒப்பந்ததாரர்களிடம் பணம் இல்லை. அரிதாக, ஏதேனும் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதில் அவர்களது பாக்கி செலுத்தப்படும். இந்த நெருக்கடித் தொடர்ந்தால் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாதிக்கப்பட இருப்பதாக” அவர் கூறினார்.
இனி அடுத்தச் சில நாட்களில் மிகவும் மோசமான நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என்று கட்டுமானத் துறையை ஆட்டுவிப்பவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளப் போதிலும் தொழிலாளர்கள் அவர்களது உடனடி பிரச்சினையை சமாளிக்கவே போராடுகிறார்கள். தொழிலாளர்கள் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது முகாம்களில் பட்டினியாய் இருக்கிறார்கள் என்று கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு முன்னணி கட்டிட மேம்பாட்டாளரிடம் கொத்தனாராக வேலை செய்த 42 வயதான ஆர்.அய்யனார் கூறுகிறார்.
ஒரு ஆண்டு காலமாக நான் வேலை செய்த வில்லா மற்றும் அடுக்குமாடி கட்டுமானப் பணி ஒன்று ஞாயிற்றுகிழமையன்று (நவம்பர் 13) நிறுத்தப்பட்டது. ஒப்பந்தக்காரர் எங்கிருக்கிறார் என்று எந்த ஒரு விவரமும் எங்களிடம் இல்லை. கூலியைப் பெறுவதற்காக 300 தொழிலாளர்களுக்கு மேல் காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார். பொதுத்துறை வங்கிக்கிளையொன்றில் வரிசையில் காத்திருக்கும் போது, மூன்றுப் பைகள் நிறையப் பணத்துடன் ஒரு வாடிக்கையாளரை நேரடியாக உள்ளேச் செல்ல வங்கி அதிகாரிகள் இசைவளித்தனர் என்றும் அவர் கூறுகிறார்.
“பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்களை பைகளில் இருந்து எடுத்து எண்ணத் தொடங்கினார்கள். பணக்காரர்களை தண்டிக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். யார் இப்பொழுது தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்? பணக்காரர்கள் ஒரு செல்பேசி அழைப்புக் கொடுத்தால் போதும். வங்கி மேலாளர் பணத்துடன் பணியாளர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி விடுவார்” என்று கூறுகிறார் அய்யனார்.
செல்பேசிக்கு ரீசார்ஜ் செய்யக் கூடப் பணம் இல்லாததால் கடந்த மூன்று நாட்களாக தனது குடும்பத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கட்டுமானத் தொழிலாராகவும் சாயம் பூசுபவராகவும் வேலை பார்க்கும் 32 வயதான நிசாமுதின் கூறினார். அவர் கொல்கத்தா அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். “நான் மூன்று நாட்களாக ஒழுங்காக சாப்பிடவில்லை” என்கிறார்.
திங்கள் கிழமைக்கு முன்னதாகவே உணவு அளிப்பதாக ஒப்பந்ததாரரின் நண்பர் ஒருவர் வாக்குறுதி கொடுத்தார் என்றாலும் “ஒப்பந்தக்காரரின் செல்பேசி துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவரது நண்பரும் செல்பேசி எண்ணைக் கொடுக்க மறுத்துவிட்டார். நாங்கள் காத்திருப்போம்” என்று அவர் கூறினார்.
ஒரு பெரிய எண்ணிக்கையில் இந்த தொழிலாளர்கள் வேலையிழப்பைச் சந்திக்கிறார்கள். பணத்தாள் பற்றாக்குறையால் வாரக் கூலிக் கொடுக்கவியலாமல் ஒப்பந்தக்கரர்களும் கையறு நிலையில் இருப்பதாக மெட்ராஸ் மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பயிற்றுவிக்கும் பொருளாதார வல்லுனரான எஸ்.ஜானகிராமன் கூறினார்.
“நமது நாட்டின் ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கையான 64 கோடியில் 90% முறைசாராத் துறைகளை சார்ந்தவர்கள். ஒட்டுமொத்த GDP யில் அவர்களது பங்கு 50%ஆகும். அவர்களில் விவசாயத் துறையில் இருப்பவர்கள் 50% ஆக இருக்கும் அதே நேரத்தில் கட்டுமானத்துறையில் 30% இருக்கின்றனர். அரசாங்கம் இந்த அடிப்படை உண்மையை நிராகரிக்குமானால் பஞ்சம் உள்ளிட்ட நாசகரமான விளைவை நாங்கள் சந்திக்க நேரிடும்” என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தைப் பாராட்டியதாக கட்டுமானத்துறையின் முன்னணியாளரும், CREDAI ன் நிர்வாகக் குழு உறுப்பினரும் மற்றும் SSPDL குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனருமான பிரகாஷ் சால்லா கூறினார். ஆனால் செயல்படுத்தும் முறைகளைச் “சிறப்பாக திட்டமிட்டு இருக்க வேண்டும்” என்று கூறினார். “அரசாங்கம் உடனடியாக செயல்படவில்லையெனில் விளைவு தீவிரமானதாக இருக்கும்” என்று மேலும் எச்சரித்தார்.
ஆக கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும், வீடு கட்டும் உடமையாளர்களுக்கம் கட்டிடம் நின்று போனதைத் தாண்டி வேறு பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் இங்கே வேலை செய்யும் தொழிலாளிகளோ மோடியின் அறிவிப்பு பட்டினியில் தள்ளி விட்டது.
– நன்றி: Indian Express.
சென்னை மாநாகராட்சியின் 188-வது வார்டுக்கு உட்பட்ட மயிலை பாலாஜி நகரில் 1000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றன. இப்பகுதியில் வாழும் மக்கள் தினசரி வேலைக்கும், பள்ளி, கல்லூரிக்கு செல்லவும் வேளச்சேரி-பள்ளிக்கரணை பிரதான சாலையையே பயன்படுத்துகின்றனர். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இச்சாலையில் போதுமான சிக்னல்கள் இல்லை. வேகத்தடைகளோ ஒன்றுகூட இல்லை. எனவே இச்சாலையில் அடிக்கடி கோரமான விபத்துகளும், உயிர் இழப்புகளும் நடந்து வருகின்றன.
உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் இயங்கி வரும் ‘பெண்கள் விடுதலை முன்னணி இப்பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மனுக்கொடுத்தால் மதிக்கமாட்டார்கள், வீதிக்கு வருவது தான் ஒரே தீர்வு என்று தோழர்கள் வீடுவீடாக பிரச்சாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஒரு கோர விபத்து நடந்து விட்டது. குடியிருப்பு பகுதியிலிருந்து சாலையை கடப்பதற்கு ஒரு பெண் வந்த போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தால் தூக்கி வீசப்பட்டார். விபத்துக்கு காரணமான பைக்கில் வந்த மூன்று இளைஞர்களில், பைக்கை ஓட்டிக்கொண்டு வந்த இளைஞர் சாலையில் தூக்கியெறியப்பட்டு இறந்து விட்டார். பைக்கில் வந்த மற்ற இரண்டு இளைஞர்களும், அந்த பெண்ணும் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செய்தியறிந்து உடனடியாக களத்தில் இறங்கிய பெ.வி.மு தோழர்கள் பகுதி மக்களை அணிதிரட்டி செயல்படாத அரசை செயல்பட வைக்க நாம் சாலையில் அமர வேண்டும் என்று பிரச்சாரம் செய்து மக்களை அணிதிரட்டினர். முதலில் பத்து பெண்களே வந்தனர். அவர்களை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று பெண்களை அழைத்தனர். ஒவ்வொரு தெருவையும் கடக்கும் போதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பெண்களிடம், தினம் தினம் உயிர்பலி கொடுக்கப் போகிறோமா? அல்லது போராடி இரண்டில் ஒன்று பார்க்கப்போகிறோமா? வண்டியில் அடிபட்டு சாவதை விட போராட்டத்தில் போலீசிடம் அடிவாங்குவது மேல். நாம அமைதியாக இருப்பதால் தான் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றன என்று பேசியபோது பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக அணிதிரள துவங்கினர்.
நமக்கு எதுக்கு வம்பு என்கிற சுயநலத்தின் மீது, மவுனத்தின் மீது, அச்சத்தின் மீது பெண் தோழர்கள் ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பி, சண்டையிட்டு தான் மக்களை வீதிக்கு அழைத்து வந்தனர். கூட்டம் கூட கூட வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த பெண்கள் கூட வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அணிதிரண்டனர். பெண்கள் திரள்வதை பார்த்த ஆண்களும் இளைஞர்களும் அழைக்காமலே வந்தனர்.
திரண்டிருந்த மக்களை அழைத்துக் கொண்டு பெண்கள் விடுதலை முன்னணி செயலர் தோழர் செல்வி தலைமையில் வேளச்சேரி பள்ளிக்கரணை பிரதான சாலையை மறித்து போராட்டம் துவங்கியது.
500 க்கு மேற்பட்ட மக்கள் சாலையை மறித்துக்கொண்டு அமர்ந்தனர். காவல் துறையால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பகுதி பெண்களோ கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினர். அவற்றை எதிர்கொள்ள முடியாத போலீசு சுற்றி இருந்தவர்களை அடித்து விரட்டத் துவங்கியது. அதுவரை தயங்கிக்கொண்டிருந்த பெண்கள் களத்திற்கு வந்ததும். தயக்கமின்றி கேள்வி கேட்டனர். சில நிமிடங்களில் அதிகாரிகள் வந்து குவிந்தனர்.
மக்கள் தன்னெழுச்சியாக தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள், நாலு சாத்து சாத்தினால் கலைந்துவிடுவார்கள் என்று எண்ணிய போலீசு, அரட்டவும் மிரட்டவும் அடிக்கவும் துவங்கியது. மக்கள் அச்சமின்றி அசராமல் நிற்பதை பார்த்து இது அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட கூட்டம் என்பதை தெரிந்து கொண்டு நைச்சியமாக பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இந்த மாதிரி பிரச்சினைக்கெல்லாம் எந்த அதிகாரிகிட்ட போய் சொல்லனும்னு தெரியாதா உங்களுக்கு? உங்களால எவ்வளவு ட்ராபிக்க பாருங்க. எது எதுக்கு என்னென்ன பண்ணனும்னு கூட தெரியல. ஜனங்கள மட்டும் நல்லா தூண்டிவிடுறீங்க. இதை வைச்சிக்கிட்டு அரசியல் பண்ணாதீங்க என்றார் இன்ஸ்பெக்டர்.
ரோட்டுக்கு வர்றவங்க உயிரோட வீட்டுக்கு போகணும் அதுக்கு ஒரு சிக்னலோ, வேகத்தடையோ போட்டுக்கொடுங்கன்னு தான் கேக்குறோம். அதை செஞ்சு குடுத்தா நாங்க ஏன் ரோட்டுக்கு வரப்போறோம் என்றதும் உடனடியாக ட்ராபிக் போலீசாரை அழைத்து சிக்னல் அமைத்து தருவதாக கூறினர். தாசில்தாரும், வி.ஏ.ஒ வும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த பிரதான சாலையே ஸ்தம்பித்து விட்டது. அதிகாரிகள் உறுதியளித்ததன் அடிப்படையில் தற்போது கலைந்து செல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டு, மக்களிடம் விளக்கப்பட்டது. அதனடிப்படையில் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அதிகாரிகள் உறுதியளித்தவாறு பிரச்சினையை தீர்க்க கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்தாவிட்டால் மீண்டும் ரோட்டுக்கு வருவோம் என்பதையும் கூறிவிட்டு கலைந்தோம்.
தோழர்களும் பகுதி பெண்களோடு பகுதிக்கு சென்றுள்ளனர். அரை மணி நேரத்தில் அய்யா கூப்பிடுறாங்க வாங்க என்று தொலைபேசியில் பேசினார் ஒருவர். மூன்று தோழர்கள் கிளம்பி மறியல் செய்த இடத்திற்க்கு வரும் வழியிலே பகுதிப் பெண்கள் எல்லாம் எங்க போறீங்க என்று கேட்டார்கள். காவல் துறை கூப்பிட்டுள்ளார்கள் என்று கூறிய உடன் நான் வருகிறேன் நான் வருகிறேன் என்று மறுபடியும் பெண்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். இவ்வளவு பேர் வேண்டாம் என்று கூறி பத்து பேர் கிளம்பி சென்றோம். 5, 6 வண்டிகளில் 50 மேற்ப்பட்ட காவல் துறையினர் நின்று இருந்தனர். எங்ககிட்ட சொல்லாம இப்படி பண்ணிட்டீங்களே எங்கிட்ட சொல்லியிருந்தா நான் ஏற்பாடு பண்ணியிருப்பேனே என்றார் அப்பகுதி இன்ஸ்பெக்டர். உங்களுக்கு தெரியாதா சார் டெய்லி விபத்து நடக்குதுன்னு நேத்து கூட ஒரு பையன் இறந்து இருக்கான் என்றோம். தெரியுமா நானே எங்காரில் ரத்தத்தோட தூக்கிட்டு போயிருக்கேன். இங்க வேகத்தடை போடமுடியாதும்மா ரூல்ஸ்ச மீறி செய்ய முடியாதும்மா என்றார். உடனே ஒரு தோழர் மக்களுக்கு பயன்படாத ரூல்ஸ் எதுக்கு சார் ரூல்ஸ்சையே மாத்துங்க சார் என்று சொன்ன உடன் ஏற இறங்க பார்த்து விட்டு ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு இப்ப நான் யாரையாவது அரஸ்டு பண்ணனுமே என்றார். அரஸ்டு பண்ணுவதாக இருந்தால் தலைவர் என்ன யாரை வேண்டுமானாலும் பண்ணுங்க சார் என்று தாமதிக்காமல் சொன்ன உடன். ஒன்றுமே பேசாமல் சரி சரி போங்க என்றார்.
போலீசையும், அதிகாரிகளையும் பணிய வைத்த இந்த போராட்ட அனுபவம் பெண்களுக்கு புதிய உற்சாகத்தையும், போராடினால் தான் உரிமைகளை பெற முடியும் என்கிற நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. போராட்டத்தை முடித்துவிட்டு கலைந்து செல்லும் போது, அடுத்து இந்த டாஸ்மாக் கடைக்கு எதிராகவும் இது போல ஒரு போராட்டத்தை நடத்தினா தான் சரிபடும் என்று பகுதி பெண்கள் பேசிக்கொண்டு சென்றனர். ஆம் அவர்கள் குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் சனியனுக்கு எதிராகவும் பெ.வி.மு தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. பகுதி பெண்களின் துணையோடு விரைவில் பாலாஜி நகரிலிருந்து அந்த டாஸ்மாக் கடை ஒழித்துக்கட்டப்படும்.
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை
தொடர்புக்கு- 98416 58457
மோடியை ஆதரித்து வைகோ பேச்சு !
மக்களோட கொலவெறி தெரியாம வசனம் பேசாதீங்க வைகோ… அப்புறம் பிரிச்சி மேஞ்சிற போறாங்க !
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
“திரு. கே டி ராகவனுடைய சகோதரன் இயக்குநராக இருந்து குஜராத் அரசிடமிருந்து ஆர்டர் வாங்கி சொன்ன வாக்கை காப்பற்றாமல் பலரை ஏமாற்றி கோர்ட் ஆர்டர் மூலமாக மூடப்பட்டதற்கு காரண கர்த்தா இந்து மத காவலன் (அவரே சொல்லிக்கொள்வது) தனி மனித ஒழுக்க சீலன் !! என்னை குறை சொல்வது மல்லக்காய் படுத்து எச்சல் துப்பிக் கொள்வதற்கு சமம்.”
– இதை சொன்னது வேறு யாரும் அல்ல பா.ஜ.க-வின் தலைவரும் நடிகருமான எஸ்.வி சேகர். ஒரு பா.ஜ.க தலைவரே மற்றொரு தலைவர் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறாரே என்று நீங்கள் அதிர்ச்சியடையலாம். அதன் பொருட்டு இந்த முன்கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம்.
பா.ஜ.க-வின் மாநிலச் செயலாளர் பதவியில் இருப்பவர் இந்த கே.டி.ராகவன். இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். சுமந்த் சி ராமன், மாத்ருபூதம், பெருமாள் மணி, பானு கோம்ஸ் போன்ற அரசியல் விமர்சகர் என்ற முகமுடியுடன் வரும் அதிகாரப்பூர்வமற்ற ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பேச்சாளர்களுக்கு நடுவில் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க. வின் சொந்த முகத்துடன் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து வருகிறார்.
சென்ற 2015-ம் ஆண்டு தாலி பற்றிய விவாதம் தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது இந்து வானரங்கள் குண்டு வீசிய விவகாரத்தில் புதிய தலைமுறையின் விவாதங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்ற ’கொள்கை’ முடிவெடுத்திருந்தனர் தமிழக பா.ஜ.க. வினர். இந்தப் பங்காளிச் சண்டையை அடுத்து சில நாட்கள் அவர்கள் பு.தலைமுறை விவாதத்திற்கு செல்லாமல் இருந்த போது எஸ்.வி.சேகரோ அந்த முடிவை மீறி விவாதங்களில் பங்கெடுக்கிறார்.
மோடியை நேரடியாகவே சந்திக்கும் அளவிற்கு செல்வாக்கோடு இருக்கும் தான் கட்சி முடிவுகளை பின்பற்றத் தேவையில்லை என்ற ’தன்னடக்கம்’ தான் அவருடைய கலகத்திற்கு காரணம். மேலும் காங்கிரசு போன்று கோஷ்டி மோதலுக்கும், கோஷ்டி கழுத்தறுப்புக்கும் பா.ஜ.க-வும் பெயர் பெற்றதுதான். தமிழகத்தில் அப்படி சில பல கோஷ்டிகள் செயல்படுகின்றனர். ஃபேஸ்புக்கில் கொஞ்சம் இவர்கள் உலகில் நுழைந்து பார்த்தால் காவி வேட்டி கிழிந்து சண்டையிடும் பல்வேறு தர்ம யுத்தங்களைப் பார்க்கலாம்.
இந்த இலட்சணத்தில் அ.தி.மு.கவில் குப்பை கொட்ட முடியாமல் இங்கே நுழைகிறார் எஸ்.வி.சேகர். அவரை மற்ற கோஷ்டி தலைவர்கள் சரியாக பயன்படுத்தவில்லை, மரியாதை தரவில்லை என்ற குறையோடுதான் அவர் புதிய தலைமுறை விவாதத்தில் முடிவை மீறி கலந்து கொள்கிறார்.
அப்படி விவாதத்தில் கலந்து கொண்டாலும், பா.ஜ.க. வின் ‘அர்ரம் குர்ரம்’ விவாத முறைக்கும் மக்கள் விரோத கருத்துக்கும் மாறாக எதையும் பேசிவிடப் போவதில்லை என்றாலும், கட்சியின் சில தலைவர்களுக்கு எஸ்.வி.சேகரின் ’தன்னடக்கத்தால்’ எரிச்சல் ஏற்படுகிறது. கே.டி.ராகவன் போன்றோர் கட்சிக்கு ’புதிதாக’ வந்த எஸ்.வி.சேகரை விமர்சிக்கின்றனர். கட்சிக்குள் புகைச்சலும் உள்குத்து சண்டையும் ஆரம்பிக்கிறது.
இதையடுத்து சென்ற 2015, ஜூன் மாதம் பா.ஜ.க-வின் கே.டி.ராகவனுக்கும் எஸ்.வி சேகருக்கும் இடையில் நடந்த சண்டை வலுத்து எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக்கில் தெரிவித்த கருத்து தான் மேற்சொன்னது. இதில் கே.டி ராகவனுடைய சகோதரர் கே.டி சீனிவாசனது ஊழலை பிட்டு வைக்கிறார் எஸ்.வி.சேகர்.
இதற்கு அதே பதிவில் பதிலளித்த கே.டி.ராகவன் “திரு, சேகர்.. வணக்கம். நீங்கள் பதிவிட்ட இந்த நிறுவனத்தில் என்னுடைய சகோதரர் சில இயக்குனரில் ஒரு இயக்குனராகவும் வேலை செய்தார் என்பது உண்மை… இயக்குனர் பொறுப்பிலிருந்து அந்த நிறுவனத்தின் தலைவரோடு கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தார் என்பது உண்மை.. அந்த நிறுவனம் இப்போது நீதி மன்ற உத்திரவு படி மூட பட்டிருப்பதும் உண்மை.. அந்த நிறுவனம் மூடப்பட்டதால் என்னுடைய சகோதரர் வேலை இழந்தார் என்பதும் உண்மை. அது அவருடைய சொந்த நிறுவனம் அல்ல என்பதும் உண்மை. ஆனால் இதிலே என்னுடைய பெயரை இழுக்க காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாமா? உங்களுடைய சகோதரரின் தொழிலுக்கோ, அவர் செய்து கொண்டிருக்கும் வேலைக்கோ நீங்கள் எப்படி காரணமாவீர்கள்?” என்று கேட்டுள்ளார்.
கே.டி. ராகவனின் சகோதரர் கே.டி சீனிவாசன் இயக்குனராக இருக்கும் நிறுவனத்தின் பெயர் ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ்’ (EDserve Soft systems). ஒரு நிறுவனத்தில் இயக்குனராக யார் இருப்பார்கள், இருக்க முடியும்? உதாரணமாக, தி ஹிந்து இதழின் உடைமையாளர்களான கஸ்தூரி அன் சன்சில் யார் இயக்குனராக முடியும்? திருமாவளவனோ, கிருஷ்னாசாமியோ இயக்குனராக முடியுமா? கஸ்தூரி அய்யங்காரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருப்பவர்கள் தான் இயக்குனராக முடியும்.
அடுத்ததாக, ”அந்த நிறுவனத்தின் தலைவரோடு கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தார்” என்கிறார். பின்னர் ”அந்த நிறுவனம் மூடப்பட்டதால் என்னுடைய சகோதரர் வேலை இழந்தார்” என்கிறார். ஒரு நிறுவனத்தில் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்தவர், எப்படி அந்நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழக்க முடியும்? ராஜினாமா செய்தபின் அவருடைய ஆல்டர் பெர்சனாலிடி அந்நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
ராகவன் ஒரு யோக்கியராக இருந்தால் தனது சகோதரரது ஊழலைக் கண்டித்து அவரை குடும்ப நீக்கம் செய்திருக்க வேண்டும். போலீசிடமும் புகார் அளித்து ரெய்டு நடத்த உதவியிருக்க வேண்டும். அடுத்து நடிகர் சேகர் குற்றச்சாட்டு சொன்னவுடன் ஆஜராகும் அவர் தனது பெயரை ஏன் இழுக்கிறீர்கள் என்று சகோதரரது குற்றத்தை ஒப்புக் கொள்கிறார். பிறகு சகோதரர் ராஜினாமா செய்தார், கருத்து வேறுபாட்டால் நீங்கினார், நீதிமன்றத்தால் மூடப்பட்ட பிறகு வேலையிழந்தார் என்று முன்னுக்குப் பின் முரணாக ஒரு பதிவிலேயே உளறுகிறார். குற்றம் செய்பவனுக்கு குளறுபடி இல்லாமல் பேச வராது என்பது இங்கே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சென்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ராகவன், ரூ. 81 இலட்சத்தை தனது சொத்துக் கணக்காக காட்டியிருக்கிறார். எனில் இவருடைய நிரந்தர வருமானம் என்ன? தொலைக்காட்சி விவாதத்தில் உளருவது போல உளறும் இவர் வழக்குரைஞர் தொழிலும் செய்கிறாராம். என்ன வழக்குரைஞரோ?
ராகவனது சகோதரர் சீனிவாசன் அந்நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதாக அவரது தொழில்சார் சமூகவலை தளமான லின்க்ட் இன் (Linkekd in) சுயவிவரத்தில் இன்று வரையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.வி. சேகரின் அம்பலப்படுத்தலுக்கு முன்தினம் வரையிலும் சீனிவாசனின் ஃபேஸ்புக் சுயவிவரத்தில் கூட ‘எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் இயக்குனர்’ என்பது குறிப்பிடப்பட்டிருந்ததையும், அதன் பின்னர் அது நீக்கப்பட்டதையும் எஸ்.வி. சேகர் அதே ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மேற்கு மாம்பலத்தை தலைமையிடமாகக் கொண்டு சிறு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக 2001-ம் ஆண்டு துவங்கப்பட்ட லேம்பெண்ட் சாஃப்ட் சிஸ்டம்ஸ் (Lambent Soft systems ), 2008-ம் ஆண்டு ஆன்லைன் கல்வி சேவையை வழங்கும் எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ்-ஆக மாற்றப்படுகிறது. 2007- 2008 நிதியாண்டில் 3.95 கோடி வருமானத்தை ஈட்டிய எட்செர்வ் நிறுவனம், பிப்ரவரி 2009-இல் ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தின் (IPO) மூலம் முதலீடுகளை பெறுவதற்காக ரூ.10 முக மதிப்புள்ள 3,973,908 பங்குகளை ரூ. 55-லிருந்து ரூ.60-தை ஆரம்ப விலையாக நிர்ணயித்து பங்குச்சந்தையில் வெளியிட்டது.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு(FII) 18,86,954 பங்குகளையும், வெளிநாட்டு நிறுவனமல்லா முதலீட்டாளர்களுக்கு (Non institutional Investors-NII) 5,66,086 பங்குகளையும், சாதாரண மக்களுக்கு 13,20,868 பங்குகளையும் ஒதுக்கீடு செய்திருந்தது எட்செர்வ். பங்கு வெளியிட்ட மூன்றாவது நாளே எல்லா பங்குகளும் விற்று, 1.3 மடங்கு அதிகமாக பங்கு வர்த்தகம் நடந்துள்ளது. அதிலும், நிறுவனமல்லா முதலீட்டாளர் பங்குகளில் 3.1 மடங்கு அதிகமாக பங்கு வர்த்தகம் நடந்துள்ளது. மேற்கு மாம்பலத்தின் அய்யங்கார் நிறுவனம் எப்போது தனது பங்குகளை சந்தையில் வெளியிடுமென்று ’சர்வதேச முதலீட்டாளர்கள்’ காத்திருந்தனர் போலும்.
பொதுவாக பங்குச் சந்தைக்குச் செல்வது சாதாரண பொதுமக்களின் முதலீடுகளை பெறுவதற்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் மக்களின் முதலீடுகளை விட கருப்புப் பண முதலைகளின் பினாமி நிறுவனங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இவற்றின் முதலீடுகள் தான் மிக அதிகம். அதாவது கருப்பை வெள்ளையாக்கும் நடைமுறைகளில் பங்குச் சந்தை முதலீடும் ஒன்றாகும்.
இதன் மூலம் பங்குச் சந்தையில் மூலம் சுமார் ரூ 23.84 கோடி அளவுக்கு நிதி திரட்டியது எட்செர்வ். இம்முதலீடுகள் யாரிடமிருந்து வந்தன என்பதை செபி, அமலாக்கப் பிரிவு என யாருக்கும் சொல்லத் தேவையில்லை. நிறுவனமல்லா முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் (SEBI) பதிவுசெய்திருக்க வேண்டியதில்லை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் செபியிடம் பதிவு செய்திருந்தாலும், அந்த நிறுவனங்களில் யார் முதலீடு செய்துள்ளார்கள் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இப்பேற்பட்ட யோக்கியர்தான் இன்று தொலைக்காட்சி விவாதங்களில் கருப்புப் பணத்திற்கு ஆதரவாக நாட்டு மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று ஆணையிடுகிறார். உண்மையில் இவர்கள் கொள்ளையடிப்பதற்கான குற்றத்திற்கு நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமாம்.
இதன் பிறகு வரிசையாக செப். 2009-ல் 2tion.com நிறுவனத்தையும், பிப்ரவரி 2010-ல் ரூ. 4 கோடிக்கு SchoolMate, மார்ச் 2010-ல் ரூ. 4.6 கோடிக்கு SmartLearn WebTV, ரூ.1.25 கோடிக்கு Sparkling Mind, போன்ற கல்வி சேவை நிறுவனங்களை கையகப்படுத்தியது.
2010-ம் ஆண்டில் மோடி முதலமைச்சராக இருந்த போது குஜராத் அரசின் தொழில் முனைவு மேம்பாட்டு மையம், குஜராத் தொழில் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றிடமிருந்து குஜராத் இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் ரூ. 40 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் பெற்றது. அதாவது குஜராத்தின் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கி, அவர்களுக்கு குஜராத்தின் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வேலையும் பெற்றுக்கொடுக்கும் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தை தான் எஸ்.வி சேகர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு குஜராத் அரசு எந்த ஒப்பந்தப்புள்ளி கோரல் அழைப்பையும் (Tender Invitation) வெளியிட்டதாக தெரியவில்லை. எனில், குஜராத் அரசின் ஒப்பந்தம் மேற்கு மாம்பலத்திலுள்ள ஒரு அய்யங்கார் கம்பெனிக்கு எப்படி வந்தது?
மோடி – பா.ஜ.க – ராகவன் – சீனிவாசன் – எட்செர்வ் நிறுவனம் என்ற வழித்தடமின்றி வெறென்ன இருக்கமுடியும். முன்னதாக 2009-இல் வேலையில்லாத இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசிடமிருந்து பெற்றிருந்தது. பா.ஜ.க. வும் காங்கிரசும் தொழில் பங்காளிகள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
பஞ்சாப் நேஷனல் வங்கி, இத்தாலியை சார்ந்த Banca IFIS மற்றும் இத்தாலிக்கு தெற்கிலுள்ள மால்டாவைச் சேர்ந்த கடன் நிறுவனமான – எஃப்ஐஎம் வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியான இந்தியா ஃபேக்டரிங் (India Factoring and Finance Solutions) நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மொத்தம் ரூ. 5 கோடியில் ரூ. 1.16 கோடியை எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் மோசடி செய்தது. ரூ. 5 கோடிக்கே இத்தாலி, மால்டா ஆகிய இரு வெளிநாட்டு முதலீட்டு வங்கிகள் சம்பந்தப்பட்டுள்ளன என்றால் கருப்புப் பணத்தின் பாய்ச்சலை புரிந்து கொள்ளலாம்.
இதற்காக இந்தியா ஃபேக்டரிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கில் எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை மூடியும், அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரை (Official Liquidator) நியமித்து அதன் சொத்துக்களை முடக்கி, அச்சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவையைக் கட்ட செப், 2013-ல் தீர்ப்பளித்தது, உயர் நீதிமன்றம்.
இந்த நிறுவனமும் அதன் இயக்குனர்களும் செபியின் மோசடி மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைகள் தடை விதிகள் மற்றும், மூலதன மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள் நெறிகளுக்கு முரணாக பெரு நிறுவனங்களுக்கிடையிலான வைப்பு திட்டங்கள் (Deposit schemes) மற்றும் பல திரைமறைவு பரிவர்த்தனைகளின் மூலம் பங்கு விற்பனை – முதலீடு திரட்டியதை செபி (SEBI) கண்டறிந்தது.
இதையடுத்து, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செபி (SEBI) எட்செர்வ் சாஃப்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தையும் அதன் நிர்வாக இயக்குனர் கிரிதரன் மற்றும் மூன்று இயக்குனர்களையும் பங்கு சந்தையிலிருந்து மூன்றாண்டுகளுக்கு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த பங்குச் சந்தை முறைகேடுகள் நடந்தது 2009-ல் அதாவது, 2013-ல் நிறுவனம் நீதிமன்றத்தால் முடக்கப்படும் முன்னர் நடந்தது.
எட்செர்வ் தன்னுடைய சகோதரரது சொந்த நிறுவனம் அல்ல என்றும் ராகவன் தனது பதிலில் சொல்கிறார். அதாவது, அந்நிறுவனம் செய்த முறைகேடுகளுக்கு தனது சகோதரர் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது என்கிறார். இயக்குனராக இருப்பவர்கள் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடிவெடுக்கும் அதிகாரமுடையவர்களாகவும் பங்குள்ளவராகவும் தானே இருப்பார்கள்? இம்முறைகேடுகள் நடந்த போதும், அரசின் ஒப்பந்தங்களைப் பெற்ற போதும் கே.டி.ராகவனின் சகோதரர் கே.டி.சீனிவாசன் அந்நிறுவனத்தின் இயக்குனராக தான் இருந்திருக்கிறார். பின்னர் நீதிமன்றம் மூடுமாறு உத்திரவிடும் போதுதான் அவர் பதவி விலகியதாக யோக்கியர் ராகவனே கூறுகிறார்.
தன்னுடைய சகோதரருக்காக வழக்குரைஞராகி வழக்காடிய ராகவன், பிறகு, ”உங்களுடைய சகோதரரின் தொழிலுக்கோ, அவர் செய்து கொண்டிருக்கும் வேலைக்கோ நீங்கள் எப்படி காரணமாவீர்கள்” என்றும் கேட்கிறார். ராகவனுக்கும், சகோதரரின் தொழிலுக்கும் தொடர்பில்லை எனில் அதை முதலிலேயே சொல்லி விசயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாமே, எதற்காக அவருக்காக வாதாட வேண்டும்? இதுவே ராகவனுக்கும் சகோதரர் சீனிவாசனின் தொழிலுக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்துகிறது. ராகவன் தனது சகோதரரின் அரசியல் தரகரா அல்லது தன் சகோதரர்க்கு ராகவன் பினாமியா என்பது பா.ஜ.க. வினருக்கு தான் தெரியும்.
வெளிவந்தது ஒரு நிறுவனமும், சிறு துளியும் தான். எஸ்.வி சேகரின் அந்தப் பதிவிலேயே சில பா.ஜ.கவினர் இரு ‘தலைவர்களுக்கும்’ சமாதானம் செய்துவைத்து தமிழக பா.ஜ.க-வை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய போது கட்சித் தலைகள் விட்டுவிடுவார்களா? அதுவும் இல.கணேசனின் ஆதரவு பெற்ற ஆர்.எஸ்.எஸ் அய்யங்கார் குடும்பத்தை விட்டுவிடுவார்களா? விசயம் அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.
கர்நாடகா ரெட்டி சகோதரர்கள் – எட்டியூரப்பா – லலித் மோடிக்கு உதவிய சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, அதானி, அம்பானிக்கு உதவும் மோடி, வியாபம் ஊழல் புகழ் சிவராஜ் சிங் சவுகான் என்று தொடரும் வரிசையில் இன்னும் எத்தனை பா.ஜ.க. வினர் இருக்கிறார்கள் என்பதை எஸ்.வி.சேகர் போன்ற கட்சிக்காரர்கள் மட்டுமே அறிவார்கள்.
ராகவன் போன்ற இத்தகைய பா.ஜ.க கேடிகள் தான் கருப்புப் பணத்தைப் பற்றி தொலைக்காட்சி விவாதங்களில் மூச்சு முட்ட கதறுகின்றனர் என்றால், மோடியின் கருப்பு பண மீட்பு, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையின் யோக்கியதையை அறிந்து கொள்ளுங்கள்.
– வினவு புலனாய்வு செய்தியாளர் குழு.
ஆதாரங்கள் :
இதையும் பாருங்க …
எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | Chowkidar Modi Troll
என்னண்ணே இப்படி பண்ணீட்டீங்க…குடுகுடுப்பைக்காரன் மாதிரி நடுராத்திரியில வந்து 500,1000, ரூபா நோட்டெல்லாம் ‘செல்லாது…செல்லாது’ன்னு நாட்டாமை தீர்ப்பு வாசிச்ச மாதிரி சொல்லிட்டுப் போயிட்டீங்க. இங்க ஊரே கதிகலங்கிப் போச்சுசுண்ணே! காலையில எழுந்திருச்சு காபி குடிக்கப் போறவன், வண்டிக்கு பெட்ரோல் போடுறவன், கல்யாணம் -கருமாதி செலவுக்கு கடன் வாங்கினவன், முதல் நாள் மகளிர் குழு கடன் வாங்குன பொம்பளைக இப்படி எல்லாரும் கிறுக்குப் பிடிச்சமாதிரி ஆயிட்டாங்க. உசிரக்குடுத்து நாயா பேயா உழைச்ச காசை திடீர்னு ஒரு நாள் ராத்திரியில செல்லாதுன்னா மனுசன் என்ன பாடுபவான்னு உங்களுக்கு தெரியாதுண்ணே. அதெல்லாம் மனுசனா பொறந்தவனுக்குத்தான் தெரியும்! பேங்குல குடுத்து மாத்திக்கலாங்குற விஷயம் தெரியுறதுக்கே ரெண்டு, மூணு நாளாகிப்போச்சு!
ஏன்டா இப்படி கிறுக்குத்தனம் பண்றீங்கன்னு கேட்டா, “நாங்க கருப்புப்பணத்தை பிடிக்கப் போறோங்”குறான் உங்க ஆளு. அதென்னடா புதுசா கருப்புப்பணம்? அது எங்கடா இருக்கு?னு கேட்டா, “சட்டவிரோதமா சம்பாதிக்கிற பணம், அரசுக்கு வரிகட்டாம ஏய்க்கிற பணம்தான் கருப்புப் பணம்”னு விளக்கம் சொல்லுறான். நீ சொல்ற ஆளுக எல்லாம் ஊருக்குள்ள நெஞ்ச நிமித்திக்கிட்டு திரியுறானே…நேரா போயி பிடிக்க வேண்டியதுதானே. வரி கட்டாதவன் யாருன்னு தெரியாமவாடா இத்தனை நாளா ஆட்சி செஞ்சீங்க? அதை விட்டுட்டு சும்மா இருக்குறவன் உசிரை ஏன்டா வாங்குறீங்க?னு மடக்குனா, உடனே “தேசம், பக்தி, தீவிரவாதி, பாரதமாதா” அப்படீனு சம்பந்தமில்லாம உங்கள மாதிரியே உளறுறானுக! நான் உழைச்ச காசுக்கும் உங்க பாரதமாதாவுக்கும் என்னண்ணே சம்பந்தம்? அது என்ன ரிசர்வ்பேங்கு கவர்னரா? புரோக்கரா? புரியலையேண்ணே!
வெளிநாட்டுல 70 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணத்தை பதுக்கி வச்சிருக்குறதா உங்க உளவுத்துறை புலிகளே சொல்லுது! நீங்க என்னடானா இந்த 15 நாளா டிவி, பேப்பருனு எங்க திரும்புனாலும் கருப்புப்பணம்…கருப்புப்பணம்னு சாமியாடி ஊரைச் சாகடிக்கிறீங்க! நாட்டுல இருக்குறவன எல்லாம் கேணப்பயலா ஆக்குறீங்க!
மோடியண்ணே … உனக்கு கருப்புப் பணம்தான வேணும். டாடா பிர்லா,அம்பானி,அதானி மாதிரி பெரிய வெங்காயத்தை எல்லாம் உன்னால பிடிக்க முடியாதுன்னு எங்களுக்குத் தெரியும்! வாங்கித்தின்ற நாயிக்கு என்னைக்குமே நாக்கு எழும்பாதுணே!
நீ எங்க ஊரு பக்கம் ஒருநிமிஷம் வாண்ணே…உனக்கு ரொம்ப ஈசியான ஆளா காட்டுறேன்.
எங்க ஊருல 500 ஏக்கர் நிலத்தை வாங்கி பத்திரம் முடிச்சு பட்டாவோட ஒருத்தன் இருக்கான். ஆளு யாருன்னு தெரியல. ஆனா ஓ.பி.எஸ்தான் ஒனருனு ஊரே அடிச்சு சொல்லுது! சும்மா திரிஞ்ச ஒருத்தன் பிரசிடண்டாகி 5 கோடியில வீடு கட்டி, அதுல 50,000 ரூபாய் நாய வாங்கி குடிவச்சுருக்கான்! ஒரு மீட்டர் வட்டிக்காரப்பய 3 கோடியில வீடு கட்டி, உள்ள ரிமோட் கட்டில்ல படுத்துக் கிடக்குறான்! வருசநாட்டு மலையில பாதிமலையை வளைச்சுப் போட்டிருக்காரு எங்க எம்.எல்.ஏ. தங்கத்தமிழ் செல்வன்! உங்க ஆளு ஒருத்தன் அறநிலையத்துறை நிலத்தை பிளாட் போட்டு வித்துப்புட்டு யோகா பண்ணிட்டிருக்காரு! பெரிய திமிங்கலத்தை பிடிக்க முடியாட்டியும் இப்படி ரெண்டு தவளைகளையாவது வந்து பிடிண்ணே…. மோடின்னா ஒரு கெத்து வேணாமாணே?
“டேய்…58 இஞ்சு நெஞ்சுக்கறி வச்சிருக்காருடா எங்க மோடி. ஒழுங்கா கருப்புப் பணத்தையெல்லாம் பேங்குல போட்டுருங்கடா”னு ஒங்க சிஷ்யப்புள்ளைக விதவிதமா மிரட்டித்தான் பாக்குறாங்க. ஆனா ஒரு பய கூட கண்டுக்க மாட்டேங்குறான். பஸ்ல டெய்லி கலக்சன்ல வர்ற நூறு ரூபா நோட்டை எல்லாம் ஆளுங்கட்சிக்காரங்க அள்ளிக்கிட்டு, பழைய 500, 1000 நோட்டுகள வீசிட்டுப் போயிர்றான்! பேங்கு மானேஜரெல்லாம் வரியில்லாம கணக்குப் பிரிச்சு எப்படி டெபாசிட் பண்றதுன்னு ‘பார்ட்டி’களுக்கு ஐடியா குடுக்குறாங்க! எஸ்.பி.ஆபீசுல வாரவட்டி கிரிமினல் லிஸ்ட்டுல இருக்குற ஒருத்தன் 500 க்கு 100 கமிசன் வச்சு நோட்டு மாத்துறான்! 20% கமிசனுக்கு எத்தனை நூறுரூபா நோட்டும் வாங்கிக்கலாம்னு ஏலம் போடுறான் பலபேரு! ஏடிஎம் மிசின்லய 100 ரூபா நோட்டு காணாமப் போயிருச்சு! என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா…னு கேட்டா, “அண்ணே நாங்கெல்லாம் ஒன்பதாவது பாசுண்ணே. மோடி பத்தாவது பெயிலுண்ணே!” அப்படீனு நக்கலா பேசுறாய்ங்க! அடடா இப்படி இடத்துல தேசபக்தி பேசுறவன் யாராவது இருந்தா நல்லா இருக்குமேன்னு தேடிப்பாத்தா, உங்க காவிப்படையில ஒருத்தனக் கூட அந்த ஏரியாவிலேயே காணோம்னா பாத்துக்குங்க!
ஒரு ஊர்ல ரெம்ப கெட்டவன் ஒருத்தன் இருந்தானாம். அவனோட மகனுக்கு, ‘நம்ம அப்பாவைவிட பெரிய ஆளா வரணும்’னு ஆசை! அதனால ஊரே குடிக்குற தண்ணீர் தொட்டியில பீயைக் கரைச்சு ஊத்திவிட்டானாம்! அதுமாதிரி நான் காங்கிரச விட கெட்டிக்காரன்னு காட்டுறதுக்கு இந்தக் கூத்து பண்றீங்களோனு தோணுது!
எங்க ஊரு கஞ்சா வியாபாரிக்கிட்ட ஒரு வழக்கம் இருக்குண்ணே. திடீர்னு ஆந்திராவுக்கு வேலைக்கு போறேன்னு பையைத் தூக்கிகிட்டு கிளம்புவான். ஒரு ஆறு மாசம் கழிச்சு பார்த்தா வெளிநாட்டுல இருந்து வர்றவன் மாதிரி டிப்டாப்பா வருவான். என்னடான்னு விசாரிச்சா, கஞ்சா வியாரத்துக்கு போயிட்டு வந்திருக்கான்னு சொல்வாங்க! அது மாதிரிதாண்ணே உங்க பேச்சும் வேலையும் இருக்கு! ராமன் கோயில் கட்டுறோம்னு சொல்லிக்கிட்டு, பாபர் மசூதிய இடிச்சீங்க! தீவிரவாதத்தை ஒழிக்கிறேன்னு சொல்லிக்கிட்டே, முஸ்லீமை கொல்றீங்க! நாட்டப் பாதுகாக்கிறேனு சொல்லிக்கிட்டே, காஷ்மீர் மக்களை கொல்றீங்க! தெறமையான டாக்டர்களா உருவாக்கப் போறேனு சொல்லிக்கிட்டு, இல்லாத வீட்டுப் புள்ளைகள படிக்க விடாம பண்றீங்க! இப்ப கருப்புப் பணத்தை ஒழிக்கப்போறேனு சொல்லிக்கிட்டு விவசாயி, தொழிலாளி, சிறு வியாபாரிகிட்ட இருக்குற பணத்தைப் புடுங்கி பேங்குல போடுறீங்க! அப்புறம் பாதுகாப்பா அதை பெரிய களவாணிககிட்ட நகட்டிக்கிட்டுப் போயிருவீங்க! மோடி அண்ணே…. கேடி பில்லா…கில்லாடி ரங்கானா அது நீங்க ஒரே ஆள்தாண்ணே!
“எல்லாரும் வரிகட்டுனாத்தான நாடு வல்லரசாகும்”னு உங்க ஆளுக இழுக்குறாய்ங்க. என்னமோ இந்தியா வரியே இல்லாத சொர்க்கபூமி மாதிரி பேசுறாய்ங்க! இதுவரைக்கும் வாங்குன வரிக்கு என்ன செஞ்சு கிழிச்சீங்க? உரம்-விதை மானியம், பெட்ரோல் டீசல் மானியம், ரேசன்-சிலிண்டர் மானியம், இலவச மின் இணைப்பு இப்படி இருக்குறத எல்லாம் உருவிக்கிட்டேதான இருக்குறீங்க! அப்புறம் என்ன மயித்துக்கு எங்ககிட்ட புதுசா வரி கட்டச்சொல்றீங்க?
நாட்டுப் பொருளாதாரத்தையே சூறையாடி வெளிநாட்டுல 70 லட்சம் கோடிய கருப்புப்பணமா பதுக்கி வச்சிருக்கான். அவன்கிட்ட சல்லிக்காசை புடுங்க துப்பில்ல! அரசு வங்கிகள்ல 75 லட்சம் கோடிய கடன் வாங்கிட்டு, வட்டி கூட கட்ட முடியாதுன்னு நெஞ்சக் காமிக்கிறான். அதையும் வசூலிக்க தெம்பில்ல! இந்தக் களவாணிகளுக்கு 12 லட்சம் கோடிய வெட்கமில்லாம தள்ளுபடி பண்றீங்களே … உனக்கு எதுக்குண்ணே 58 இஞ்சு நெஞ்சுக்கறி?
எங்களையெல்லாம் கண்ணை மூடி யோகா பண்ணச்சொல்லிட்டு, அவைங்களை எல்லாம் சுவாகா பண்ண வச்சிட்டையேணே!
இந்து…இந்துன்னு ஓயாம கத்துறீங்களே, அந்த இந்துக்கள்ல ஒழுக்கமா உழைச்சுப் பொழைக்கிற இந்துக்கள் எல்லாமே பேங்கு வாசலுக்கு வந்துட்டான்.! லஞ்சம்-ஊழல்- கடத்தல்- ரியல் எஸ்டேட் பண்ற களவாணி இந்துக்கள் ஒருத்தனும் வெளிய தலைகாட்டவே இல்லை. இந்தப்பயலுக எல்லாம் அப்பன் ஆத்தாவை மட்டும் சுத்திப்புட்டு ‘ஞானப்பழம்’ வாங்குற பிள்ளையாரு சாதிக்காரங்க! நீங்களும், உங்க கட்சியும்தான் இவனுகளுக்கு பரமசிவன்- பார்வதி! உழைக்குற இந்து இப்பதான் உங்க ஆளுகள அடையாளம் பார்த்து அடிக்க ஆரம்பிச்சிருக்கான். அனைத்து மாநில டிஜிபி-களை கூட்டிப் பேசினதிலேயே உங்களுக்கு ரொம்ப வலிக்குதுனு புரியுது! என்னேன்னே செய்யுறது? வீட்டுக்குள்ள இருந்தவன வீதியில இழுத்து விட்டது நீங்கதானே! காட்டுல வெளைஞ்சதை மார்க்கெட்டுக்கு கொண்டு போனா வாங்குறதுக்கு ஆள் இல்லை! உரமூட்டை தூக்கப் போனா நூறு ரூபா நோட்டா கேக்குறான்! வட்டிக்காரன் கிட்டப் போன அவனும் 500 ரூபா நோட்டத்தான் காட்டுறான்! காலேஜ்ல படிக்கிற பையனுக்கு பணம் அனுப்பப் போனா, அடுத்தவங்களுக்கு நீங்க அனுப்ப முடியாதுன்னு மானேஜர் விரட்டுறாரு! ‘அடுத்தவன் இல்லையா அது என்னோட சொந்த மகன்தான்’னு கெஞ்சினாலும் ஒத்துக்க மாட்டேங்குறான்! உங்க சட்டத்தாலே பெத்த புள்ளையக் கூட சொந்தம் கொண்டாட முடியலை! அப்புறம் அடிக்காம வேற என்ன என்னண்ணே செய்வான்?
அப்புறம் ஒரு முக்கியமான விசயம்ணே…. “என்னோட அரசு ஏழைகளுக்கானது. கருப்புப் பணத்துக்கு எதிராப் போராடுறோம்”னு பஞ்ச் டயலாக் பேசும்போது மூஞ்சியில‘எபெக்ட்’ பத்தலைண்ணே! சொதப்பலா இருக்கு! உங்ககிட்ட இந்த சமூகம் இன்னும் நிறைய எதிர்பாக்குது! அதனால இன்னும் ‘பெட்டரா’ கொஞ்சம் நடிக்க முயற்சி பண்ணுங்கண்ணேய்!
– மாறன்,
விவிசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.
மோடிக்கு எதிராக மன்மோகன் சிங் ஆவேச பேச்சு
மவுனகுரு கொந்தளிக்கிறாரு மக்கள் எல்லாம் மவுனமா இருக்கீங்க என்னதாம்பா நடக்குது நாட்ல ?
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
செல்லாத பிரதமரை செல்ல வைக்க நடந்த முயற்சியில்
பலியான 80 உழைப்பாளி மக்களுக்கு எமது கண்ணிர் அஞ்சலி!
பாம்பை வைத்து
வித்தை காட்டுபவனுக்கு
மகுடிதான் ஆயுதம்!
கருப்புப் பணத்தைக் கொண்டு
அரசியல் செய்பவனுக்கு
தன்னை பலசாலியாகக்
காட்டிக் கொள்வதில்தான்
உயிரோட்டம் !
வேடிக்கை என்னவென்றால்
வித்தைக்காரனுக்கு
போதிய வருமானம்
இல்லையென்றால்
பாம்புக்கும் வேலை இல்லை!
மகுடிக்கும் வேலை இல்லை!
ஆகவேதான்…..
கருப்பு மீட்பு அறிவிப்பு !
…
பணம் இருந்தும்…..
பருப்புக்கோ,
நெருப்புக் குச்சிக்கோ,
பஸ்ஸூக்கோ, மெஸ்ஸூக்கோ,
மருந்துக்கோ, சாவுக்கோ,
மக்கள் பதறுகையில்…..
ஆசுபத்திரியில் செல்லாத நோட்டால்
மகனை இழந்து
தாய் கதறுகையில்…
மோடிக்கு ஆழந்த உறக்கம்,
(14-ஆம் லூயி மன்னனைப் போல)
உலகம் சுற்றியே ஓய்ந்து போனதால்.
…
திரைகடலோடியும் திரவியம் தேடு.
அதானி, அம்பானியின்
கல்லாப் பெட்டி நிறைய…..
…
வித்தையிலாவது
பாம்புக்கும் மகுடிக்கும்
விடுதலை !
இங்கே
சுவிஸ் வங்கிக்கு விடுதலை!
சுருக்குப் பைக்கு சிறை!!
சர்வதேச திருடர்களுக்கு
விடுமுறை!
சனங்களின் கடுகு டப்பா
வெற்றிலைப் பெட்டிக்கும்
ஆடு, கோழிகளுக்கும்
வீட்டு சிறை !!
…
செல்பி நாயகனின்
அதிரடி அறிவிப்புக்கு,
அடிப்படை இல்லாமல் இல்லை !
ராமனை வைத்து
அரசியல் செய்தவன்,
ராமாயணத்தை வைத்து
வித்தை காட்டினான் !
பின்பு மாட்டை வைத்து
மடக்கினான் !
அதன் மூத்திரத்தை வைத்து
முழங்கினான் !
…
எல்லை தாண்டிய
பயங்கரவாதம் !
இசுலாமியத் தீவிரவாதம் !
பதுக்கல் பணம் மீட்டு –
மக்களுக்கு
15 லட்சம் டெபாசிட்டு –
அவரவர் வங்கிக் கணக்கில்.
டிஜிட்டல் இந்தியா
ஸ்டார்ட் அப் இந்தியா
மேக் இன் இந்தியா – எல்லாமே
மேஜிக் இந்தியா ஆனதால்
சோளக்காட்டு பொம்மையாய்
பல்லிளிக்குது சொல்லாடல்.
…
நீங்கள் ஆணி ஒன்றும் பிடுங்க
வேண்டாம் மோடிஜீ
7 1/2 லட்சம் கோடி
வாராக்கடன் பட்டியல்,
80 லட்சம் கோடி வெளிநாட்டில்
பதுக்கியோர் பட்டியல்
கெசட்டில் வெளியிடுங்கள் !
மக்கள் பார்த்துக் கொள்வார்கள் !!
பறித்தெடுத்து
நாட்டைமீட்பார்கள் !!!
துணிவுண்டா மோடிஜீ !
…
சொரணையற்ற அரசு
மக்களின் வேதனை அறியாது
இப்போது…..
இன்ஜினை சரிசெய்வதா?
அல்லது இன்ஜினையே
மாற்றுவதா?
பகைவர்கள்,
தம் மக்களை பலியிட்டபோது
பாராளுமன்றத்தைக் கூட
பிரச்சார மேடையாக்கினர்,
பகத்சிங் ராஜகுரு சுகதேவ்.
உணர்வுள்ள மக்களே,
கொடுந்தீயின் நாவுகளாய்
மாறுவோம் !
வதைக்கும் அரசை அகற்ற,
வீதிகளில் கலகம் செய்வோம் !!
…
பிரதமர் மட்டுமல்ல,
இந்த அரசுக் கட்டமைப்பே
செல்லாது என்று அறிவிப்போம் !
நாட்டையும் மக்களையும்
மீட்போம் !
தேர்ந்தெடுக்க –
திருப்பியழைக்க –
தவறிழைத்தால் தண்டிக்க –
மக்களுக்கு அதிகாரம் அளிக்கும்
புதிய ஜனநாயகப்
புரட்சிக்கு அணிதிரள்வோம் !
– மக்கள் கலை இலக்கியக் கழகம், கோவை
தொடர்புக்கு : 94 879 16569
யாதின் ஒசா குஜராத்தின் பி.ஜே.பி முன்னாள் எம்.எல்.ஏ. இவர் மோடியின் பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை பற்றிய தகவல் முன்கூட்டியே பி.ஜே.பியின் அபிமான தொழிலதிபர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதியுள்ளார்.
இவர் ஒரு காலத்தில் மோடியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியவர். பா.ஜ.க தலைவர் அமித் ஷா அரசியல் வாழ்வைத் துவங்கி வைத்தவர். அவர் தனது முகநூலில் வெளியிட்டுள்ள கடிதம் பலரால் பகிரப்பட்டு மிக விரைவில் பலரையும் சென்றடைந்துள்ளது.
ஒசா, மோடி குஜராத் முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக கிச்சன் காபினெட்டில் இருந்தவர். இவர் முதன்முதலாக சபர்மதி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அமித் ஷாவை தனது தேர்தல் முகவராக (election Agent) நியமித்திருந்தார். 1997 தேர்தலில் அமித் ஷா வேட்பாளராக தேர்வாவதற்கு உதவியுள்ளார். சமீபத்தில் பா.ஜ.கவில் ஓரங்கட்டப்பட்டதால் அதிருப்தியில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்.
இக்கடிதத்திற்கு முன்னதாக ஒசா கெஜ்ரிவாலுக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் பீகார் தேர்தலையொட்டி அமித் ஷாவிற்கும் அக்பருதீன் ஓவாய்சிக்கும் நடந்த திரைமறைவு பேரத்தை அம்பலப்படுத்தியிருந்தார். அவர்களுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது தானும் உடனிருந்ததாக கூறினார். பீகார் தேர்தலின் போது அக்பருதீன் ஓவாய்சி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு சமூகத்தில் மதவாத பிளவை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு அமித் ஷாவினால் எழுதிக் கொடுக்கப்பட்டது என்ற உண்மையை வெளியிட்டிருந்தார்.
***
பிரதமர் மோடிக்கு பணத்தை மதிப்பிழக்கச் செய்த நடவடிக்கை தொடர்பாக எழுதிய கடிதம்:
பெறுநர்:
ஸ்ரீ நரேந்திர மோடி
மதிப்பிற்குரிய இந்தியப் பிரதமர்
7, லோக் கல்யாண் மார்க்,
நியூ டெல்லி
அன்புள்ள நரேந்திரபாய்,
இந்தக் கடிதம் கிடைக்கும் வேளையில் சிறப்பான உடல் நலத்துடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நவம்பர் 8, 2016 அன்று ரூபாய் நோட்டுகள் குறித்து நீங்கள் ஆற்றிய உரையைக் கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவமுள்ள தீரச்செயலுக்காக என் இதயத்திலிருந்து உங்களை வாழ்த்தினேன். துரதிருஷ்டவசமாக என் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் சொன்ன செய்தி இது: நவம்பர் 8 நண்பகல் 12 மணியளவில் அகமதாபாத் நகரத்தின் பெரிய தொழிலதிபரின் மனைவி அங்கிருந்த முன்னணி நகைக்கடைக்கு வந்து முன்பே பதிவு செய்து வைத்திருந்த 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை வாங்கினார். அவர் வரும்போது தங்கம் பெட்டியில் தயாராக இருந்தது. இரண்டு நிமிடங்களில் பணம் செலுத்தப்பட்டு வியாபாரம் முடிந்தது. அவர் அந்த கடைக்கு முன்பே பதிவு செய்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கத்தான் எதேச்சையாகக் கடைக்கு வந்தார். அவர் ஒரு மிகவும் பிரபலமான மருத்துவர்.
உங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி ஒரு காலத்தில் உங்கள் கிச்சன் காபினெட்டில் இருந்திருக்கிறேன். அந்த வகையில் நாட்டின் 50 சதவீதக் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் உங்களுக்கு நெருக்கமான அன்பான அந்த தொழிலதிபர்களுக்கு உங்களது ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்த தகவல் நீங்கள் அறிவிப்பதற்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு உடனே பொறி தட்டியது. இதைப் பற்றியே ஒரு நாள் முழுவதும் சிந்தித்து, விசாராணைகள் நடத்திய பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியவை. இந்த வெகுஜன நோக்கிலான நடவடிக்கையின் மூலமாக இந்த நாட்டு மக்களை நீங்கள் முட்டாள்களாக்கி விட்டீர்கள்.
உண்மையில், தேச நலனுக்காக என்று சொல்லி நீங்கள் எடுத்த நடவடிக்கை உங்களுக்கு நெருக்கமானவர்களையும் அன்புக்குரியவர்களையும், உங்கள் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் மேலும் பணக்காரர்களாக்குவதற்காகத்தான்.
அமித் ஷாவிற்கு நெருக்கமான கூட்டாளிகள் நவம்பர் 8 இரவு முதல் பணப் பரிவர்த்தனை வர்த்தகங்களில் ஈடுபட்டார்கள் என்பதை தெளிவாகவும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையிலும் நிரூபிப்பதற்கான வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அவர்களின் அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் முன்னால் 37 சதவீதக் கழிவுடன் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காக ஒரு பெரிய வரிசை இருக்கிறது. தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் குறைந்தபட்சம் 1 கோடி ரூபாய்களை எடுத்துச் சென்றால் அங்கிருக்கும் ஊழியர்கள் அதை எண்ணி 63 லட்சம் செல்லத்தக்க ரூபாய்களைக் கொண்ட ஒரு பையைக் கொடுப்பார்கள்.
இந்த வீடியோவை வெளியிட்டு விடலாம். ஆனால் நீங்கள் அமித் ஷாவின் சகாக்களை விட்டுவிட்டு வரிசையில் இருப்பவர்களைத் தண்டிப்பீர்கள். ஆயினும் நான் அந்த வீடியோவை இரண்டு அல்லது மூன்று மூத்த ஊடகவியலாளர்களுக்குக் காட்டிவிட்டு உங்களுக்கு தகவல் அனுப்புவேன். ஒன்றுக்கு இரண்டு முறை அந்த வீடியோவைச் சோதித்து விட்டு நான் சொல்வது உண்மைதானா என்று அவர்களிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
கூட்டுறவு வங்கிகளில் பெரிய அளவில் நடைபெற்றுள்ள முறைகேடுகளையும், சட்டவிரோதச் செயல்களையும் பற்றி விவரம் அறிந்த பின்தான் நேற்று நீங்கள் அவ்வங்கிகளின் மீது தடைவிதித்தீர்கள் என்று உங்களை அறிந்த யாரும் நம்பமாட்டார்கள்.
உங்களுடைய எதிரி கூட உங்களின் செயல்திறனையும், திறமையையும், புத்திசாலித்தனத்தையும் மதிக்கிறார்கள். அந்த முக்கியாமான அம்சத்தினைக் குறித்து நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம். நீங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கையின் முழு வரைபடத்தையும் மனதில் கொள்ளாமல் நீங்கள் ஒரு செயலில் இறங்க மாட்டீர்கள் என்று உங்களை நன்கு அறிந்த எனக்குத் தெரியும். ஒரு நடவடிக்கையினால் விளையப்போகும் அனைத்து சாதக பாதகங்களும் உங்கள் சிந்தையில் பிரகாசமாக இருக்கும்.
நான் மிகுந்த மரியாதையுடன் சொல்லவிரும்புவது என்னவென்றால், கூட்டுறவு வங்கிகளின் முறைகேடுகள் அனுமதியுடந்தான் நடந்திருக்கின்றன. ஏனெனில், குஜராத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பா.ஜ.க ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. நவம்பர் 8 இரவு 9 மணியிலிருந்து நவம்பர் 9 அதிகாலை 5 மணி வரை இந்த வங்கிகள் ரூ.500 மற்றும் ரூ.1000 தாள்களுக்கு குறைந்த மதிப்புடைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருக்கின்றன. நவம்பர் 8 அன்று நாட்டிலுள்ள எல்லா வங்கிகளிலும் துல்லியமாக எவ்வளவு மதிப்புடைய ரொக்கம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி மூலமாகக் கேட்டிருக்கிறீர்கள். அந்த விவரங்களை வைத்து நான் சொன்னது உண்மைதானா என்று நீங்களே உறுதிசெய்து கொள்ளுங்கள். நான் சொன்னது தவறு என்று நிரூபிக்கப்பட்டால், நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பேன் என உறுதியளிக்கிறேன்.
சுறாமீன்களும் திமிங்கிலங்களும் தப்பித்து விட்டன, உங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு முன்பே உங்களது நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டு விட்டது என்று இந்திய மக்களிடையே நிலவும் சந்தேகங்களைப் போக்குவதற்கு, நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருப்பதாக அறிவித்தவர்களைப் பற்றி இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிட வேண்டும். ஃபோர்ச்சூன் 300 பட்டியலில் இருக்கும் 300 தொழில் நிறுவனங்களின் எந்தவொரு சேர்மனோ, நிர்வாக இயக்குனரோ அல்லது இயக்குனரோ இப்படி அறிவித்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக எனக்குத் தெரியும். அப்படி அறிவிக்க வில்லையென்றால் என்னுடைய குற்றச்சாட்டுகள் உண்மை என்றுதான் பொருள்.
4000 ரூபாய்களுக்காக அல்லது சிறு தொகைகளை வங்கியில் போடுவதற்காக பசியிடனும், தாகத்துடனும் வரிசையில் நிற்கும் மக்களைப் பார்த்தேன். ஒரு மெர்சிடிஸ், பிஎம்டபுள்யூ, அவுடி, வோல்வொ, போர்ஷா அல்லது ரேஞ்ச் ரோவர் காரையோ அல்லது அதன் உரிமையாளரையோ வங்கிகளுக்கு வெளியிலிருந்த வரிசையில் பார்க்கவில்லை. ஏ.டி.ம் அல்லது வங்கி முன் வரிசையில் நிற்பவர்கள்தான் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள், மேற்கூறிய கார்களின் உரிமையாளர்களிடம் அது இல்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம்.
ஃபோர்ச்சூன் பட்டியலிலுள்ள 300 நிறுவன அதிபர்களைத் தவிர, ரியல் எஸ்டேட் நடத்துபவர்கள், காண்டிராக்டர்கள், குறிப்பாக அராசாங்கத்திடம் காண்டிராக்ட் பெற்றவர்கள், சுரங்க உரிமையாளர்கள், குறிப்பாக இரும்புத் தாது எடுக்கும் நிறுவன உரிமையாளர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் எவ்வளவு பணம் வங்கிகளில் செலுத்தியிருக்கின்றனர் என்று இந்த நாட்டு மக்கள் அறிய ஆவலாயிருக்கின்றனர். மேற்கூறியவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நாட்டு மக்களுக்குத் தெரியவில்லையென்றால், 50 சதவீதம் கருப்புப் பணத்தினை பதுக்கி வைத்திருக்கும் 10-12 தொழிலதிபர்கள் முன்னரே உங்களின் நடவடிக்கை குறித்து உங்களிடமிருந்து தகவல் பெற்று ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்கிற குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்களை உங்களிடம் பெற்றுக் கொண்டு 7000 பேருக்குக் கூட வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கும் இந்த 10-12 நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள் வங்கிகளில் எவ்வளவு தொகை செலுத்தியிருகின்றனர் என்று வங்கி வரிசைகளில் சிறு தொகைகளுக்காகக் காத்திருக்கும் வழியறியா ஏழைகள் தெரிந்துகொள்ள ஆர்வமாயிருப்பார்கள். 300 முதல் 400 கோடி வரை செலுத்தியவர்களின் விவரங்களையும், அந்தத் தொகைகள் அவர்களின் வருமான வரித் தாக்கல் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கணக்குடனோ அல்லது தெரிந்த மூலாதரங்கள் வழியே வந்த வருமான அளவுடனோ ஒத்துப்போகவில்லையெனில், வருமானவரித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரங்கள் அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டால் அவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நவம்பர் 8 இரவு எட்டு மணிக்கு முன் யார் எவ்வளவு தங்கம், வைரத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரணை நடத்த வேண்டுமென்றும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உச்சாணிக் கொம்பில் இருக்கும் வெகு சிலர் பெருமளவு தங்கத்தையும் வைரத்தையும் அந்த நேரத்தில் வாங்க வேண்டிய தேவையைப் பற்றி மக்கள் சிந்தித்துப் பார்க்க உதவும்.
உங்களின் நடவடிக்கை நாட்டின் நலனுக்காகவா அல்லது நேரடியாக உங்களுக்கும், உங்கள் நேசத்துக்குரியவர்களுக்கும் உங்களின் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்மை செய்வதற்காகவா என்று இந்த நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தயைகூர்ந்து, கருணை உள்ளத்துடன் வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்களிடம் உண்மையான,
யாதின் ஓசா
______________________________
– தமிழாக்கம்: விஜயசங்கர் ராமச்சந்திரன்.
இரு பருவமழைகள் மூலம் தமிழகத்திற்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மி.மீ. ! அதாவது, தென்மேற்கு பருவ மழை மூலம் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) 332.3 மி.மீ.–ம், வடகிழக்குப் பருவமழை மூலம் (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) 459.2 மி.மீ–ம் கிடைக்கிறது. குளிர் காலத்தில் 36.8 மி.மீ., கோடைகால மழையின் மூலம் 129.6 மி.மீ.-நீரும் கிடைக்கிறது ! தென்மேற்குப் பருவமழை பெரும்பாலும் கடலோர மாவட்டங்களில்தான் அதிகம் பெய்கிறது. இதில் கணிசமான அளவு கடலில் கலந்துவிடுகிறது ! கோடைகால மழையோ மேற்பரப்பின் வெப்பநிலையால் பெருமளவு நீராவியாகி விடுகிறது. வடகிழக்குப் பருவமழை ஒன்றுதான் மாநிலம் முழுக்கப் பரவலாகக் கிடைக்கும் ஒரே ஆதாரம்!
மேற்பரப்பு நீர்வளம் :
17 முக்கிய ஆற்றுப்படுகைகள், 61 நீர்தேக்கங்கள், மற்றும் 49,480 பாசனக்குளங்கள் (தனியார் குளங்கள் உட்பட) ஆகியவை மூலம் ஒரு ஆண்டில் கிடைக்கும் நீர்வளம் 46, 540 மில்லியன் கன மீட்டர் ! (ஒரு கன மீட்டர் நீர் =1000 லிட்டர்). இதில் சரிபாதி நீரானது (நிலத்தடி நீர் கசிவுக்கும், அதிக வெப்பத்தால் நீராவியாவது போக) நிலப்பரப்பில் வழிந்தோடி கடலில் கலந்து விடுகிறது. எனவே நமது பயன்பாட்டுக்குக் கிடைப்பது 24,864 மில்லியன் கனமீட்டர் ! இம்மேற்பரப்பு நீரில் 90 சதவீதம், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் இதனால் பயன்பெறுகின்றன !
நிலத்தடி நீர்வளம் :
நிலத்தில் விழும் மழைநீர் படிப்படியாக மண்ணுள் கசிந்து ஆழமான பகுதியில் தேங்கி நிற்கும் நீரைத்தான் நிலத்தடிநீர் என்கிறோம். இயற்கையின் நீண்டகால நிகழ்ச்சிப் போக்கில் உருவாகும் இத்தகைய நிலத்தடி நீர்வளமாக தமிழகத்தில் இருப்பது 22,423 மி.க.மீ. என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்! இதில் 60 சதவீத அளவு (13,558 மி.க.மீ) நீரை ஏற்கனவே உறிஞ்சியெடுத்து பயன்படுத்தி விட்டோம்! தற்போதைய கையிருப்பு 40 சதவீதம் (8875 மி.க.மீ) மட்டும் தான் !
“மொத்தமுள்ள 386 வட்டாரங்களில், 239 வட்டாரங்கள் அபாயகரமான கட்டத்தில் இருக்கின்றன. இதில் 139 வட்டாரங்களில் ஒரு வருடத்தில் ஊறும் நீரில் 90 சதவீத அளவுக்கு மேல் உறிஞ்சப்படுகிறது ! 11 வட்டாரங்களில் குடிக்கத் தகுதியற்ற உப்புநீராக மாறிவிட்டது ! அரியலூர், சேலம், கோவை, சிவகங்கை, தேனி மாவட்டங்களில் உள்ள 10 வட்டாரங்களில் புதிதாக கிணறு, போர் தோண்டுவதற்கு தடைவிதித்து கருப்புப் பகுதியாக (black area) அறிவித்துள்ளது தமிழக அரசு ! 136 தாலுகாக்கள் மட்டுமே பாதுகாப்பான அளவில்(70% உறிஞ்சப்படும் பகுதிகள்) உள்ளன !” என்று தமிழக மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்தின் 2009-ம் ஆண்டு ஆவணம் கூறுகிறது !
மொத்த நீர்வளமும் – எதிர்காலத் தேவையும் !
மாநில நீர்வள ஆதார நிறுவனங்களின் 1998-ம் ஆண்டு அறிக்கையின் படி, மேற்பரப்பு நீர் + நிலத்தடி நீர் ஆகிய இரண்டும் சேர்ந்து தமிழகத்தின் மொத்த நீர்வளம் 46.540 மி.க.மீ.(1643 டி.எம்.சி) ! என்றும், வளர்ந்துவரும் மக்கள்தொகை மற்றும் தொழில்துறை வளர்ச்சியை கணக்கில் கொண்டால் 2001-ல் 54,395 மி.க.மீ (1921 டி.எம்.சி) –யும், 2050-ல் 57,725 மி.க.மீ.ட்டர் நீரும் தேவைப்படும் என வேளாண் வல்லுனர்களும், நீரியல் நிபுணர்களும் மதிப்பிட்டுள்ளனர் ! 2001-லேயே 286 டி.எம்.சி. நீர் பற்றாக்குறை என்றால், தற்போது இப்பற்றாக்குறை 300 டி.எம்.சி-க்கு மேலும் அதிகரித்திருக்கும் என உறுதியாக நம்பலாம்!
2050-ல், 4% முதல் 6% வரை மக்கள் தொகை அதிகரிக்கலாம் என்ற அடிப்படையில் வீட்டு உபயோகத்திற்கான நீர்த்தேவை 55.72%-மும், தொழில்துறையின் தேவை 27.7%-மும் அதிகரிக்கும் எனவும், தற்போதுள்ள சுற்றுச்சூழல் மற்றும் குறைந்தபட்ச ஆற்றுநீர் வழிந்தோடுவதைப் பராமரிப்பதற்கு 1600 மி.க.மீ. நீர் தேவைப்படும் எனவும் துல்லியமாக மதிப்பிடும் அறிக்கை, விவசாயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “நகர்ப்புறமயமாதல் அதிகரித்து வருவதால் விவசாயப் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பில்லை. குறைவான நீரே தேவைப்படும் ” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, விவசாயத்திற்கான நீர்த்தேவையை மதிப்பிடாமலே செல்கிறது ! அதாவது, எதிர்கால தமிழக விவசாயம் தற்போதுள்ள நிலைமையை விட மிக மோசமாக சீரழிந்து போகட்டும். விவசாயிகள் நிலத்தை விட்டே ஓடட்டும். என்பதை இந்த அரசு, ஏற்கனவே தீர்மானித்துவிட்டது என்பதுதான் இதன் பொருள் !
பாசனத் திட்டங்களின் அவலநிலை !
கால்வாய் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்றுவகைப் பாசனத் திட்டங்கள் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 130 லட்சம் ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் இதுவரை பாசனவசதி செய்யப்பட்டுள்ளது ! இதில், கால்வாய் பாசனம் மூலம் 29.2% , குளத்துப்பாசனம் மூலம் 21.3%, கிணற்றுப்பாசனம் மூலம் 48.9% நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
கால்வாய் பாசனத்தில், அண்டைமாநிலங்களின் இனவெறி அரசியல் ஒரு புறமிருக்க, நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளாலும், ஆகாயத்தாமரை போன்ற வீரியரக களைச்செடிகளாலும், அலட்சியமான அரசின் பராமரிப்புக் குறைவாலும் பெரிய அளவில் பாசனப் பரப்பு விரிவாகவில்லை. 1960-களில் இருந்ததைவிட சற்று கூடுதலாக 21.5 லட்சம் ஏக்கர் என்ற அளவிலேயே நீடிக்கிறது !
குளங்கள் மூலம் பாசனவசதி பெற்றவை 1960-ல் 22.5 லட்சம் ஏக்கராக இருந்தது ! இது 2000–ல் 15.75 லட்சம் ஏக்கராகவும், தற்போது 10 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது ! சராசரியாக ஒரு குளத்தின் மூலம் சராசரியாக 48 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இன்று 30 ஏக்கருக்கும் கீழாக குறைந்துவிட்டது!
கிணற்றுப்பாசனத்தின் நிலையோ இதைவிட பரிதாபமாக கிடக்கிறது. நிலத்தடி நீர்வளம் தான் இதன் ஆணிவேர் ! நிலத்தடி நீரே அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட பிறகு கிணற்றுப் பாசனம் மட்டும் எப்படி உருப்படும்? “மாநிலத்தில் சுமார் 19 லட்சம் கிணறுகள் உள்ளன. மொத்தப் பாசனப்பரப்பில் 52% நிலமான சுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் கிணற்றுப்பாசனம் மூலமே பயன்பெறுகின்றன. இதில் 30% கிணறுகள் முற்றிலும் நீரின்றி வறண்டு விட்டன ! 27% கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீராகி விட்டன ! மீதியுள்ள கிணறுகளில் தினமும் 4 முதல் 6 மணிநேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது!” என்று 2012-ல் வெளியான ‘தமிழக நீராதரங்களின் தேவையும்- அளிப்பும்’ என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.
“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பதுதான் மாநிலத்தின் மின் பற்றாக்குறைக்குக் காரணம்” என்ற அரைவேக்காட்டு அறிவாளிகளின் கூற்று எவ்வளவு பெரிய பொய் என்பதை இந்தப் புள்ளி விவரங்கள் கன்னத்தில் அறைந்து நிரூபிக்கிறது ! கிணற்றுப் பாசனம் என்பது விவசாயிகள் தனது சொந்த மூலதனத்தில் உருவாக்கிக் கொண்டது ! அரசு முதலீடு இதில் எதுவுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது !
தொகுப்பாகப் பார்த்தோமானால், பசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசனவசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் தத்தளிப்பதையும், தற்போதுள்ளதை விட மிக மோசமான நிலைக்கு நமது விவசாயம் ஆளாக இருக்கும் ஆபத்தையும் மேற்கண்ட விவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன !
மாற்றுத் திட்டங்களா ? அழிவுத் திட்டங்களா ?
நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போன்ற ஒரு பராமரிப்பு வேலைகள்தான் ! நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும் !
நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் முக்கால் அடி ஆழம் வரையுள்ள மண்ணை மேல்மண்(TOPSOIL) என்று வரையறுக்கிறது அறிவியல். பெரும்பாலான தாவரங்கள் இம்மேல் மண்ணில் இருந்துதான் தங்களின் வளர்ச்சிக்கான நுண்ணூட்ட சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன. மண்வளம் என்ற சொல்லே மேல்மண்ணின் அங்ககச் சேர்க்கையைத்தான் குறிக்கிறது. ! மழைநீரை உள்வாங்கி மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவதிலும் இம்மேல்மண் தான் முக்கியப் பங்கு வகிக்கிறது! வனப்பரப்பு அழிக்கப்படும்போது வளமான மேல்மண்ணும்(TOP SOIL) வெளியே கிளறப்பட்டு, மேற்பரப்பு மண்ணும் (SURFACE SOIL) மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு நீர்த்தேக்க அணைகளில் `வண்டல் மண்ணாக மேடிட்டு நிற்கிறது. இதனால் அணைகளின் கொள்ளவு குறைகிறது. மேலும் நிலத்தடி நீர்வளம் பெருகுவதும் பெருமளவு தடைபடுகிறது ! எனவே வனத்தையும், வன அடிவாரத்திலுள்ள நீர்பிடிப்புப் பகுதியிலும் உள்ள மேல்மண்ணையும் வெளிக்கிளறாமல் தடுத்து பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தைப் பெருக்கமுடியும் என்பதுதான் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான வழிமுறை !
இதன் அடிப்படையில்தான் நிபுணர்கள் திட்டங்களை வகுக்கிறார்கள். 2050-ம் ஆண்டில், தற்போதுள்ளதை விடக் கூடுதலாக 57,725 மி.க.மீ. நீர் தேவைப்படும் என 1998-ல் மதிப்பீடு செய்யப்பட்டதை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான பல்வேறு திட்டங்களை நிபுணர்கள் அரசிடம் முன்மொழிந்து அறிக்கையாகக் கொடுத்துள்ளனர்.
நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப்பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது, நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள இடங்களில் கசிவுநீர் குட்டைகள், சம மட்டக்கரைகளை அமைப்பது,
என்றும் தமிழக நிபுணர்கள் குழு வழிகாட்டியது !
இதற்காக வறட்சிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (DPAP), ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம்(IWOP) தேசிய நீர்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம்(NWDPRA),ஆகிய மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழக அரசு தன் பங்கிற்கு தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி ஆணையம் (TAWDEV) ஒன்றை அமைத்தது, இவற்றின் வாயிலாக தமிழகத்தில் சிறியதும்,பெரியதுமாக 19,330 நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலானவை இன்று பராமரிப்பின்றி சேதமடைந்து பல்லிளித்துக் கிடப்பதோடு, சிறு மழை நீரோட்டத்தையும் தாங்கும் திறனின்றி இருக்கின்றன. கிணற்றுத் தண்ணீர் பற்றாக்குறை, மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு காரணங்களை சமாளிப்பதற்காக விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் சிறு குளங்களை, ‘புதிதாக வெட்டப்பட்ட குளங்கள்’ என கணக்குக் காட்டி பல இடங்களில் கொள்ளையடித்துள்ளனர் வேளாண் அதிகாரிகள் !
1960-களில் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக இருந்த வனப்பரப்பு இன்று 16%–ஆக அழிக்கப்பட்டு விட்டது ! பெரும் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக சந்தனம், தேக்கு, ஈட்டி, மஞ்சள்கடம்பு, செம்மரம் போன்ற வணிக மதிப்புமிக்க மரங்களை வன அதிகாரிகளின் துணையோடு வெட்டிக் கடத்தியது, கல்குவாரிகளை சட்ட விரோதமாக அனுமதிப்பது, வனச் சுற்றுலாத் தளங்கள் அமைப்பது ஆகியவைதான் வனக்காடுகள் அழிப்புக்கு முக்கிய காரணம் !
“தமிழ்நாடு வன வளர்ப்புத் திட்டம்” என்ற பெயரில் ஜப்பான் அரசிடம் 586 கோடி ரூபாய் கடன் வாங்கியது தமிழக அரசு ! 2005 முதல் 2013 வரை அமுலான இத்திட்டத்தின் படி “1.77 ஹெக்டேர் பரப்பளவில் மரங்களை நடவு செய்ததாக” அரசு கூறுகிறது ! , ஆனால், மலைப் பகுதிகளில் நடவு செய்ய ஆகும் கூடுதல் செலவைத் தவிர்ப்பதற்காக, “உயரமான இடங்களில் நட்டிருக்கிறோம்” எனக் கணக்குக் காட்டிவிட்டு, ஒரு பாதியை நாற்றுக்களை தனியார் நர்சரிக்கு விற்றுவிட்டு, மீதியை பெரிய பள்ளங்களில் கொட்டி விட்ட கதைகள் எல்லாம் தினசரிகளில் படங்களுடன் செய்தியாக வந்து நாறியது ! கடைசியில், ஜெயாவின் 64–வது பிறந்தநாளுக்கு 64 லட்சம், 65–வது பிறந்த நாளுக்கு 65 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டமாக இது சீரழிந்து போய்விட்டது என்பதுதான் உண்மை !
தொழிற்சாலைக் கழிவுகளால் ஆற்றுநீர் மாசுபடுவது மற்றுமொரு ஆபத்தாகும்.“குடிநீர், மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் ஆறுகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள் அமைக்கத் தடை ! தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு செய்வதை தங்கள் சொந்த செலவில் செய்துகொள்ள வேண்டும் !” என்ற அரசின் சட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது ! 300க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசுபடுத்துபவை (RED CATEGORY) என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி வைத்துள்ளது ! ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது என்பதையும் இதே அரசுதான் கூறுகிறது !!
ஆலைக்கழிவுகளால் ஆற்றுநீர் விஷமாவது மட்டுமல்ல, நீர்தேக்கங்களில் ஆகாயத்தாமரை போன்ற வீரியரகக் களைகள் பரவுவதற்கும் காரணமாக உள்ளது. “தண்ணீரில் இயல்பாக உள்ள நைட்ரஜன், பாஸ்பேட் உடன், இக்கழிவுகளில் உள்ள நைட்ரஜன் பாஸ்பேட்டும் கூடுதலாக சேர்வதால் நீர்வாழ் தாவரக் களைகளில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் விளைவாக தண்ணீரிலுள்ள ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துவிடும். ஆக்சிஜன் குறைந்த நீர் குடிப்பதற்கும் விவசாயத்திற்கும் தகுதியற்றது” என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்! சாத்தான்களிடம் வேதம் ஓதி என்ன பயன்?
இவ்வாறு மாற்றுத்திட்டங்கள் எல்லாம் ஒப்பந்ததாரர்கள், கிரிமினல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளைக்குத்தான் இத்திட்டங்கள் பயன்பட்டதே தவிர மேல்மண் அரிமானத்தை தடுக்கவோ, நீர்வளத்தைப் பெருக்கவோ, விவசாயத்தை வளப்படுத்தவோ உதவவில்லை !
கரடியிடம் தப்பித்து சிங்கத்திடம் சிக்கிய கதையாக !
நடைமுறையில் தோல்வியடைந்த மேற்கண்ட திட்டங்களுக்கு மாற்றாக, இன்று உலகவங்கியின் கடனுதவியுடன் ‘உயர் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்களை’ நாடுமுழுவதும் மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன !
“நீர்பிடிப்புப் பகுதியின் மேல்மண் இழப்பைத் தடுப்பது, அணைகளின் மண்மேடிடுவதைத் தடுப்பது, நிலத்தின் செயல்திறன் இழப்பைத் தடுப்பது, நிலப்பயன்பாட்டை மேம்படுத்துவது” ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுதான் மேற்கண்ட நீர்வளப் பாதுகாப்புத் திட்டங்கள் நம் உள்நாட்டு நிபுணர்களால் வகுக்கப்பட்டது. ஆனால் உலகவங்கியோ
“பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட் தண்ணீருக்கும் அறுவடையாகும் பொருள்களின் வர்த்தக மதிப்பின் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்” என்ற கறாரான நிபந்தனையின் பேரில் கடன் வழங்குகிறது ! உதாரணமாக, தான் கடன் வழங்கும் ‘தாமிரபரணி கால்வாய் மேம்பாட்டுத் திட்டத்தில்’ “திசு வளர்ப்பு வாழை உற்பத்திக்கும், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனக் கருவிகளின் பயன்பாட்டுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்” என்று மிரட்டுகிறது ! உதவி என்ற பெயரில் தனது எஜமானர்களின் பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கிறது உலகவங்கி !
இதே பாணியில்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பேசிக்கொண்டே, ஒருபுறம் வனக்காடுகளை சுற்றுலாப் பயணிகளின் விபச்சார விடுதியாகவும், கனிமவளக் கொள்ளைக்காகவும் சூறையாடப்படுகிறது ! மறுபுறமோ, “மரம் நடுவோம் ! மழை பெறுவோம் !” என்று விவசாயப் பட்டா நிலங்கள் மற்றும் தரிசு நிலங்களிலும், மரம் வளர்ப்புத் திட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். இது, வர்த்தக மதிப்புடைய மரங்களை வளர்ப்பதற்கு மறைமுகமாக விவசாயிகளைப் பயன்படுத்தும் தந்திரமே ! (“தனிமரங்கள் மழையை ஈர்க்காது. அடர்ந்த வனக்காடுகள் தான் மழைநீரை ஈர்க்கும்!: என்ற அறிவியல் உண்மையை மூடி மறைத்துவிட்டு, பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சாலையோரங்களில் மரம் நடுவதையே பெரிய வாழ்க்கை லட்சியமாக நடுத்தர வர்க்க இளைஞர்களிடம் பறைசாற்றி திசை திருப்பி வருகின்றனர்.!)
எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்ல, இருக்கும் நீர்வளத்தை தக்க வைப்பதற்கான திட்டங்களும் அரசிடம் இல்லை! ஆனால் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயத்தை ஒழித்துக்கட்டும் வேலைகள் மட்டும் வேகமாக அரங்கேறி வருகின்றன!
விவசாயிகளே விவசாயத்தை தீர்மானிப்போம்!
“இயற்கை வளங்களை, முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை!” “நீண்டகாலம் நீர் தேங்காமல் இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக் கூடாது!” “தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன் மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்!” “நீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புக் களையும் உடனே அகற்றவேண்டும்!” “நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார் கையகப்படுத்தாமல் இருப்பதை கலெக்டர் தலைமையிலான மாவட்டக் கமிட்டி உத்திரவாதம் செய்ய வேண்டும்!” என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏராளமாக வந்துவிட்டன! காவிரியில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக கர்நாடகா அரசு செய்யும் அதே சண்டித்தனத்தை, தமிழக நீர் நிலைகள் மீதான தீர்ப்புகளில் தமிழக அரசும் பின்பற்றிவருகிறது! தனது உத்தரவை மதிக்காத கர்நாடக அரசிடம் மட்டுமல்ல, தமிழக அரசிடமும் மண்டியிடுகிறது நீதிமன்றங்கள்!
தமிழக நில ஆக்கிரமிப்புச்சட்டம்-1965, 1975, 1996 , தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம்-2007 என பல பல அரசுச் சட்டங்களும் இருக்கின்றன!
மழை நீரை அளவிடுவதில் துவங்கி, நீர்பிடிப்புப் பகுதிகளைப் பாதுகாக்க, நீர்த்தேக்கங்கள்-தடுப்பணைகள் கட்ட- அணைகளைப் பராமரிக்க, ஆற்றுநீரைப் பாதுகாக்க, ஆற்றுநீர் மாசுபடுவதைத் தடுக்க- குளங்கள், கால்வாய்களை பராமரிக்க, பாதுகாக்க, எதிர்காலத் திட்டங்களை வகுக்க- விவசாயிகளை முன்னேற்றுவதற்கு வழிகாட்டும் பல்கலைக்கழகம், அரசின் வேளாண் திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் வேளாண் அதிகாரிகள், புதுப்புது பயிர்களைக் கண்டுபிடித்து,, நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், இவர்களை எல்லாம் வழிநடத்தும் அரசின் வேளாண்மைத்துறை, என ஒரு பெரிய பட்டாளமே விவசாயத்தின் பெயரால் சொகுசாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது! இவர்கள்தான் விவசாயத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசின் நிர்வாகக் கட்டமைப்புகள்!
ஆனால், இவர்கள் எந்த நோக்கத்திற்காக வேலை செய்கிறார்களோ, எதற்காக நம் வரிப்பணத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்களோ அதுமட்டும் நடக்க வில்லை! அதாவது, நம் வாழ்வாதாரமான விவசாயம் பாதுகாக்கப்படவில்லை! விவசாயிகள் வாழ்வும் முன்னேறவில்லை! விவசாயம் நாட்டில் பொய்த்துப் போனதற்கும், விவசாயிகள் விவசாயத்தை வெறுத்து நிலத்தை விட்டும், ஊரை விட்டும் ஓடுவதற்கும் இவர்கள்தான் பொறுப்பாளர்கள்!
நம்மை வாழவைப்பார்கள் என்று நம்பித்தான் இவர்கள் சொல்வதையெல்லாம் பயிரிட்டோம்! உணவுப் பொருள்களை கைவிட்டு பணப்பயிர்களை, வீரிய ரகங்களை பயிரிடச் சொன்னார்கள்! அதற்குப் பிறகுதான் நம் நிலத்தடி நீர் வற்றிப்போனது!
முன்பு மானியம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர்கள் திடீரென்று உரமானியத்தை நிறுத்தினார்கள்! அரசுக் கொள்முதலை குறைத்தார்கள்! அதன்பிறகுதான் இடுபொருள் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமலும், வியாபாரிகளிடம் சிக்கி சீரழிவதும் தீவிரமானது!
இனியும் விவசாயத்தை நம்பி வாழ முடியாது என்ற விரக்தி நிலைக்கு பெரும்பாலான விவசாயிகள் வந்துவிட்ட நிலையில், தற்போது “ஏற்றுமதிக்கான விவசாயம் செய்யுங்கள். மானியம் தருகிறோம். அதிக லாபம் கிடைக்கும்” என்று வழி காட்டுகிறார்கள்! வாழும் வழிதேடி ஏங்கி நிற்கும் விவசாயிகளுக்கு சுடுகாடு செல்லும் திசையைக் காட்டுகிறார்கள்!
இது நமக்கு ஒத்துவராது, நான் மரபுவழி விவசாயம் செய்யப்போகிறேன்! இயற்கை விவசாயத்திற்கு திரும்புகிறேன்! என்று நம்மாழ்வார் வழியில் செல்லும் நவீன விவசாயியா நீங்கள்! அவ்வளவு எளிதாக நீங்கள் தப்பிச் சென்றுவிட முடியாது!
தமிழ்நாடு மாநில வேளாண் மன்றச் சட்டம் (TAMILNADU STATE AGRICULTURAL COUNCIL ACT) ஒன்றை கடந்த 2009-ஜுன்- 24-ல் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. மருத்துவர்களுக்கு இருக்கும் மருத்துவக் கவுன்சில் போல இது விவசாயத்திற்கானது. “அங்கீகாரம் பெற்ற வேளாண் பட்டாதாரிகள் மட்டுமே விவசாயம் பற்றிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்” என்கிறது இச்சட்டம்! இதன்படி மாற்று விவசாயம் பற்றி பிரச்சாரம் செய்வதே குற்றமா விடும்! சுருங்கச் சொன்னால், நம்மாழ்வாரை “தீவிரவாதி” என்று குற்றம் சாட்டுகிறது இந்தச் சட்டம்!
இதற்கு மேலும், இந்த அரசுக் கட்டமைப்பு நம் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் என்று நம்புவதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? தோளின் மீதேறி உட்கார்ந்துகொண்டு நம் குரல்வளையை நசுக்கிவரும் இந்தச் சனியனை இனியும் சுமந்துகொண்டு திரிய வேண்டுமா? இதை உதறி எறிந்துவிட்டு விவசாயிகளே ஏன் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது? விவசாயத்தை விவசாயிகளை விட யாரால் திறமையாக நிர்வகிக்க முடியும்? விவசாயிகளும், விவசாயத்தை நேசிப்பவர்களும் இந்தக் கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
– மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.
‘தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில் அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். 1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.
அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர். தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர். சரி இப்போது இவர்களது குடும்பத் திருமணத்திற்கே 500 கோடி
செலவழிக்கிறார்கள் என்றால் சொத்து எப்படியும் ஒரு 50,000 கோடிகளைத் தாண்டலாம்.
சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர். இவரது மகள் பிராமணிக்கு 16-11-2016 அன்று திருமணம் நடைபெற்றது. உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.
சுருங்கச் சொன்னால் இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய். தற்போது அந்த பட்ஜெட் 650 கோடி என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு சும்மா கண்துடைப்புக்காக ஏதோ விசாரணை, ஆய்வு, ஆகட்டும் பார்க்கிறோம் என்று சீன் போட்டார்கள். மோடி அரசின் கருப்பு பண நடவடிக்கையால் உழைத்து வாழும் பல குடும்பங்களில் திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகியிருக்கின்றன. பல திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. செலவுக்கு புதிய பணமில்லாமல், பழைய பணத்தை மாற்ற முடியாமல் பல பெற்றோர் பித்துப்பிடித்த நிலையில் இருக்கின்றனர். இது போக செல்லாத நோட்டு அறிவிப்பால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்து போயிருக்கின்றனர்.ஆனால் ரெட்டி சகோதர்கள் மோடியின் நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
நான்கு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்விற்கு பழைய விஜயநகர அரசு போன்று 150 கோடி செலவில் செட் அமைத்திருக்கிறார்கள். விஜயநகர அரசின் தலைநகரையே மறுநிர்மாணம் செய்திருக்கிறார்கள். ஹம்பி நகரத்தின் முக்கியமான சின்னங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். பாலிவுட்டின் தலை சிறந்த கலை இயக்குநர்கள் இதை வடிவமைத்துள்ளார்கள். விஜய நகர பேரரசு காலத்தல்தான் தென்னிந்தியாவில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை பல்வேறு நிலைகளில் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த செட்டும், ரெட்டிகளும் அவர்களுக்கு சகல உதவிகளும் செய்யும் பா.ஜ.க-வும் நன்றாகவே பொருந்துகின்றனர்.
ஊரே சோகத்தில் துவண்டிருக்கும் போது இவர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆபாசத்தை ஒழிக்காமல் மக்களுக்கு அமைதி ஏது?
பாருங்கள் – பகிருங்கள்!