privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்செல்லாத பிரதமரை மாற்றுவோம் !

செல்லாத பிரதமரை மாற்றுவோம் !

-

செல்லாத பிரதமரை செல்ல வைக்க நடந்த முயற்சியில்
பலியான 80 உழைப்பாளி மக்களுக்கு எமது கண்ணிர் அஞ்சலி!

பாம்பை வைத்து
வித்தை காட்டுபவனுக்கு
மகுடிதான் ஆயுதம்!
கருப்புப் பணத்தைக் கொண்டு
அரசியல் செய்பவனுக்கு
தன்னை பலசாலியாகக்
காட்டிக் கொள்வதில்தான்
உயிரோட்டம் !
வேடிக்கை என்னவென்றால்
வித்தைக்காரனுக்கு
போதிய வருமானம்
இல்லையென்றால்
பாம்புக்கும் வேலை இல்லை!
மகுடிக்கும் வேலை இல்லை!
ஆகவேதான்…..
கருப்பு மீட்பு அறிவிப்பு !

பணம் இருந்தும்…..
பருப்புக்கோ,
நெருப்புக் குச்சிக்கோ,
பஸ்ஸூக்கோ, மெஸ்ஸூக்கோ,
மருந்துக்கோ, சாவுக்கோ,
மக்கள் பதறுகையில்…..
ஆசுபத்திரியில் செல்லாத நோட்டால்
மகனை இழந்து
தாய் கதறுகையில்…
மோடிக்கு ஆழந்த உறக்கம்,
(14-ஆம் லூயி மன்னனைப் போல)
உலகம் சுற்றியே ஓய்ந்து போனதால்.

திரைகடலோடியும் திரவியம் தேடு.
அதானி, அம்பானியின்
கல்லாப் பெட்டி நிறைய…..

வித்தையிலாவது
பாம்புக்கும் மகுடிக்கும்
விடுதலை !
இங்கே
சுவிஸ் வங்கிக்கு விடுதலை!
சுருக்குப் பைக்கு சிறை!!
சர்வதேச திருடர்களுக்கு
விடுமுறை!
சனங்களின் கடுகு டப்பா
வெற்றிலைப் பெட்டிக்கும்
ஆடு, கோழிகளுக்கும்
வீட்டு சிறை !!

ராமனை வைத்து அரசியல் செய்தவன், ராமாயணத்தை வைத்து வித்தை காட்டினான் !
ராமனை வைத்து அரசியல் செய்தவன்,
ராமாயணத்தை வைத்து வித்தை காட்டினான் !

செல்பி நாயகனின்
அதிரடி அறிவிப்புக்கு,
அடிப்படை இல்லாமல் இல்லை !
ராமனை வைத்து
அரசியல் செய்தவன்,
ராமாயணத்தை வைத்து
வித்தை காட்டினான் !
பின்பு மாட்டை வைத்து
மடக்கினான் !
அதன் மூத்திரத்தை வைத்து
முழங்கினான் !

எல்லை தாண்டிய
பயங்கரவாதம் !
இசுலாமியத் தீவிரவாதம் !
பதுக்கல் பணம் மீட்டு –
மக்களுக்கு
15 லட்சம் டெபாசிட்டு –
அவரவர் வங்கிக் கணக்கில்.
டிஜிட்டல் இந்தியா
ஸ்டார்ட் அப் இந்தியா
மேக் இன் இந்தியா – எல்லாமே
மேஜிக் இந்தியா ஆனதால்
சோளக்காட்டு பொம்மையாய்
பல்லிளிக்குது சொல்லாடல்.

நீங்கள் ஆணி ஒன்றும் பிடுங்க
வேண்டாம் மோடிஜீ
7 1/2 லட்சம் கோடி
வாராக்கடன் பட்டியல்,
80 லட்சம் கோடி வெளிநாட்டில்
பதுக்கியோர் பட்டியல்
கெசட்டில் வெளியிடுங்கள் !
மக்கள் பார்த்துக் கொள்வார்கள் !!
பறித்தெடுத்து
நாட்டைமீட்பார்கள் !!!
துணிவுண்டா மோடிஜீ !

Modiசொரணையற்ற அரசு
மக்களின் வேதனை அறியாது
இப்போது…..
இன்ஜினை சரிசெய்வதா?
அல்லது இன்ஜினையே
மாற்றுவதா?
பகைவர்கள்,
தம் மக்களை பலியிட்டபோது
பாராளுமன்றத்தைக் கூட
பிரச்சார மேடையாக்கினர்,
பகத்சிங் ராஜகுரு சுகதேவ்.

உணர்வுள்ள மக்களே,
கொடுந்தீயின் நாவுகளாய்
மாறுவோம் !
வதைக்கும் அரசை அகற்ற,
வீதிகளில் கலகம் செய்வோம் !!

பிரதமர் மட்டுமல்ல,
இந்த அரசுக் கட்டமைப்பே
செல்லாது என்று அறிவிப்போம் !
நாட்டையும் மக்களையும்
மீட்போம் !
தேர்ந்தெடுக்க –
திருப்பியழைக்க –
தவறிழைத்தால் தண்டிக்க –
மக்களுக்கு அதிகாரம் அளிக்கும்
புதிய ஜனநாயகப்
புரட்சிக்கு அணிதிரள்வோம் !

– மக்கள் கலை இலக்கியக் கழகம், கோவை
தொடர்புக்கு
: 94 879 16569

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க