Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 558

மக்கள் விரலில் மையடி ! மல்லையா கடன் தள்ளுபடி ! கேலிச்சித்திரம்

0
king cartoon Slider

மல்லையா உள்ளிட்ட 63 முதலாளிகளின் 7016 கோடி கடன் தள்ளுபடி.

king cartoon

என்னை என்ன சொம்பைனு நினைச்சிங்களாடா ?
ஒருத்தனை விடாம கருப்புப் பணத்தை மை போட்டு புடிப்பேன் !

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

இந்த தீண்டாமைக் குற்றத்தின் மதிப்பு 2.8 லட்சம் கோடி ரூபாய் !

1

த்திய மாநில அரசுகளின் பட்ஜெட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுகளின் மேம்பாட்டிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பெருமளவில் செலவிடப்படாமலிருப்பது சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட/ பழங்குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ரூ. 2.8 லட்சம் கோடிகள் மத்திய மாநில அரசுகளால் செலவிடப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

atrocity-against-oppressed-castes-2
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நிதியைத் திருப்பிவிட்டு டெல்லியில் நிர்மாணிக்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டு கிராமம்; (கோப்புப் படம்)

தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கு என சொல்லிக்கொண்டு ”பட்டியல் சாதியினருக்கான துணைதிட்டம்” (Scheduled Caste Sub Plan), மற்றும் ”பழங்குடியினருக்கான துணை திட்டம்”(Tribal Sub Plan) ஆகிய பட்ஜெட் வறைமுறைகள் 70-களின் இறுதியில் கொண்டுவரப்பட்டன. இதன்படி மத்திய மாநில அரசுகள் தங்களின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட/பழங்குடிளின் மக்கள் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீகித நிதியை மேற்கண்ட திட்டங்களில் ஒதுக்கி செலவிடவேண்டும்.

அதன்படியும் இறுதியாக நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியும் இந்தியாவில் மத்திய பட்ஜெட்டில் 16.5% பட்டியல் சாதியினர் துணைத்திட்டத்திற்கும், 8.6% பழங்குடியினர் துணைதிட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மேற்கண்ட திட்டங்கள் அமலுக்கு வந்த காலம் முதல் 2014-15 ஆண்டுவரை ஒதுக்கப்பட்ட தொகை என்பது, ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய தொகையைக் காட்டிலும்
சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்கள் (5,27,723.72 ) குறைவாகும்.

இது ஒருபுறமிருக்க, ஒதுக்கப்பட்ட நிதியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடைசி மூன்று ஆண்டுகளை மட்டும் எடுத்துக் கொண்டால், 2012-13 ஆண்டில் மட்டும் ரூ. 3952 கோடிகளும், 2013-14-ல் 6839 கோடிகளும், 2014-15 மிக அதிகபட்சமாக 20,513 கோடிகளும் பயன்படுத்தப்படவில்லை. அதிலும் திருவாளர் மோடி ஆட்சியில் இந்த தலித் வெறுப்பு (பயன்படுத்தப்படாத நிதியின் அளவு) முந்தைய ஆண்டுகளை காட்டிலும் 250% மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மோடிதான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலுக்கு தலைகுனிவதாக கண்ணீர் வடிக்கிறார். அதைக் கேட்டு புளகாங்கிதம் அடையும் தலித் தலைவர்களும் இருக்கிறார்கள்.

(இடது) சிதிலமடைந்த நிலையில் உள்ள சென்னை எம்.சி.ராஜா தாழ்த்தப்பட்டோர் விடுதிக் கட்டிடம். (கோப்புப் படம்)
(இடது) சிதிலமடைந்த நிலையில் உள்ள சென்னை எம்.சி.ராஜா தாழ்த்தப்பட்டோர் விடுதிக் கட்டிடம். (கோப்புப் படம்)

மாநில வாரியாக எடுத்துக்கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிதி பயன்படுத்தப்படாமல் இருப்பதில் ஆந்திரா, உத்திரபிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களும், பழங்குடிமக்கள் நிதியில் ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களும் முன்னிலை வகிக்கின்றன. 2005 முதல் 2014 ஆண்டுகளில் ஆந்திரா மாநிலம் செலவிடாத தொகை ரூ.19,367 கோடி. உத்திரபிரதேசம் ரூ.16,970 கோடி. 2014-15 ஆண்டிற்கான நிதியில் 61% (ரூ.4,643) தொகையை செலவு செய்யாமல் வைத்திருக்கிறது தெலுங்கானா. பழங்குடியினருக்கான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் அவர்களை மாவோயிஸ்டுகள் பக்கம் போகவிடாமல் தடுப்பதாக ஆளும் வர்க்கம் சொல்லிக் கொள்கிறதே, அந்த மாநிலங்களின் யோக்கியதை இது.

தலித்திய மாயாவதியின் உத்திரபிரதேசம் பயன்படுத்தபடாத நிதியில் முன்னணி மாநிலங்களின் ஒன்றாக இருக்கிறது. மாயாவதியின் ஆட்சிக் காலமான 2007-12 ஆண்டுகளில் சுமார் 3500 கோடிகளுக்கு மேலாக செலவிடப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை2002-2015 ஆகிய 13 ஆண்டுகளையும் சேர்த்து மொத்தம் ரூ. 5,000 கோடிகள் செலவிடப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான நிதியைச் செலவிடும் விசயத்தில் கேரளாவும் தமிழகமும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பரவாயில்லை என்கிறது, இந்தப் புள்ளி விவரம்.

நிலவும் அரசமைப்பில் பங்கேற்பதன் மூலம் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடிவு ஏற்படுத்த்த முடியும் பேசும் தலித் தலைவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கூட பெற்றுத்தரமுடியவில்லை என்பதே யதார்த்த நிலை.

சரி, செலவு செய்யப்பட்டது யாருக்கு ?

atrocity-against-oppressed-castes-3
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையைத் தாமதமின்றி வழங்கக்கோரி திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப்படம்)

ஒதுக்கப்பட வேண்டிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கிய தொகையும் செலவிடப்படவிலைலை என்பவை ஒருபுறம். செலவிடப்பட்ட தொகை யாருடைய நலனுக்காக செலவிடப்பட்டது என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்கு நல்ல உதாரணம் குஜராத்தின் நர்மதா அணைக்கட்டு திட்டம். இத்திட்டம் பழங்குடிமக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்று அம்மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அவர்களுக்குரிய நிவாரணமோ, மாற்று இடமோ தரப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, பழங்குடி மக்கள் துணைத்திட்ட நிதியை நர்மதா அணைக்கட்டு திட்ட நிறுவனத்திற்கு ஒதுக்கியிருக்கிறது குஜராத் அரசு. அது மட்டுமல்ல, விவேகானந்தரின் 150-வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்களுக்கும் இந்த நிதியை குஜராத் அரசு திருப்பி விட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது தெகல்கா.

ஜார்கண்டு, சட்டிஸ்கார், ஆந்திரா, தெலிங்கானா மாநிலங்களில் பழங்குடி மக்கள் நலன் என்ற பெயரில் செலவிடப்பட்ட தொகை, என்னென்ன இனங்களுக்குச் செலவிடப்பட்டுள்ளது என்ற விவரங்களை எடுக்க முடிந்தால் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள இயலும். பழங்குடி மக்களுக்கான நிதியை பழங்குடி ஒழிப்பு – மாவோயிஸ்டு ஒழிப்பு நடவடிக்கைக்காக செலவிடப்பட்டிருப்பதையும் நாம் காணக்கூடும்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது தாழ்தப்பட்ட மக்கள் மேம்பாட்டு நிதியை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு திருப்பிவிடப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அதே போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மாநிலத்திற்கு விமானம் வாங்குவதற்கும், முதலமைச்சர் வீட்டிற்கு ஹெலிபேட் அமைப்பதற்கும், மாவட்ட தலைநகரங்களில் சாலைகள் அமைப்பது போன்ற வேலைகளுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதேதான் பிற மாநிலங்களிலும் நடந்திருக்கிறது. தொகையில் மட்டும்தான் வேறுபாடு.

மொத்தத்தில் இத்திட்டங்களினால் கணிசமாகப் பயனடைகிறவர்கள் அமைச்சர்கள், கார்ப்பரேட் கட்டுமான நிறுவனங்கள், காண்டிராக்டர்கள்! ஆனாலும் ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். தலித் மக்கள் நலனுக்காக எந்த ஆட்சி அதிகம் நிதி ஒதுக்கியது என்று தங்களுக்குள் சண்டையிட்டும் கொள்கிறார்கள்.

இது, இந்தியாவின் பெரிய ஊழல் முறைகேடுகளில் ஒன்று. எல்லா கட்சிகளுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் இதில் பங்கிருக்கிறது. ஆனால் இதை ஊழல் என்றோ முறைகேடு என்றோ எவரும் பேசுவதில்லை. தீண்டாமையையும் சாதி ஆதிக்கத்தையும் ஊழலாகவோ, முறைகேடாகவோ கருதாத மனப்போக்கு இதனை எப்படி ஊழலாகக் கருத முடியும்?

ஒருபுறம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகள், பெருகி வரும் சாதி சங்கங்கள், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான வன்முறைகள், முன் எப்போதைக் காட்டிலும் தேர்தல் அரசியலில் அதிகரித்துவரும் சாதி அமைப்புகளின் செல்வாக்கு, பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களுடைய நிலத்தை அபகரித்துக் கொள்வதையே வளர்ச்சியாகச் சித்தரிக்கும் பொருளாதாரக் கொள்கை – தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்துக்கான நிதி ஒதுக்கீடு என்ற இந்தப் பிரச்சினைய மேற்கூறிய பின்புலத்தில் வைத்துப் பாருங்கள். நிலவுகின்ற அரசமைப்புக்குள்ளேயே தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தைச் சாதித்துவிட முடியும் என்ற நம்பிக்கை எத்தனை அபத்தமானது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

கயர்லாஞ்சி படுகொலை வழக்கைக் கையாண்ட அதிகாரிகளில் ஆகப் பெரும்பான்மையினர் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தபோதிலும், போட்மாங்கே குடும்பத்துக்கு இந்த அரசமைப்பில் நீதி கிடைக்கவில்லை. நிதி கிடைக்காததில் வியப்பேதும் இல்லை. தேர்தல் அரசியல் மூலமாகவே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தை அடைந்துவிட முடியும் என்று பேசுவதற்கும், பேசுபவர்களை நம்புவதற்கும் இன்னமும் ஆளிருக்கிறதே, அதுதான் வியப்புக்குரியது.

– அமலன்
___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது ஏன் ? சிறப்புக் கட்டுரை

6
டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

னநாயகத்தின் பக்தர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் தெருவில் இறங்கிப் போராடி வருகின்றனர். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மாபெரும் தோல்வி என்கின்றனர் அமெரிக்கத் தெருக்களில் பேரணியாகச் செல்லும் மக்கள். அமெரிக்க முதலாளித்துவ பத்திரிகைகளோ திகைப்பில் ஆழ்ந்துள்ளன – நடந்து முடிந்த சம்பவங்களை நம்ப முடியாபமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதற்கெல்லாம் பொருள் விளக்கம் சொல்லும் அமெரிக்க அறிவுஜீவிகள் சொந்த நாட்டில் நடந்து முடிந்துள்ளவற்றுக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எதிர்காலத்தில் நிலைமையை எப்படிச் சமாளிப்பது, எந்தவிதமாக தங்களது நலன்களைக் காத்துக் கொள்வது என முதலாளி வர்க்கம் ஆலோசிக்கத் துவங்கி விட்டது. அமெரிக்காவின் அண்டை நாடுகள் வேறுவழியின்றி ’பொறுத்திருந்து’ பார்க்கப் போவதாக அறிவித்துள்ளன. தேர்தல் கருத்துக்கணிப்புப் புலிகளோ தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்து விட்டு ஆசன வாயால் முனகிக் கொண்டுள்ளனர்

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்றுள்ளார்.

முதலாளித்துவ பத்திரிகைகள் நம்பமுடியாத ஒன்று நடந்தேறி விட்டது போல புலம்பி வருகின்றன. அமெரிக்க ஜனநாயகத்தின் பக்தர்களோ ஒரு சுபயோக சுபதினத்தில் உலக ஜனநாயகத்தின் கருவறையை முதன்முறையாக திறந்து பார்த்ததைப் போலவும், அது உண்மையில் விபச்சார விடுதியின் அறையாக இருப்பதை அப்போது தான் கண்டுபிடித்தவர்களைப் போலவும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர். டிரம்பின் வெற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒரு அடிமுட்டாளை – பொறுக்கியை – ஊரறிந்த அயோக்கியனை – புளுகனை – ஏமாற்றுக்காரனை – பெண் பித்தனை ஏன் அமெரிக்கர்கள் தங்கள் அதிபராகத் தெரிவு செய்தனர்?

முதலில் இந்தத் தேர்தல் நல்லவற்றுக்கும் தீயவற்றிற்கும் இடையே நடந்த மோதல் அல்ல. கேவலத்திற்கும் கழிசடைக்கும் இடையே நடந்த போட்டி – இதில் கழிசடை வென்றுள்ளது. பல ஜனநாயக காதலர்கள் முன்னிறுத்தியதற்கு நேர் எதிரான பிம்பம் கொண்டவர் ஹிலாரி கிளிண்டன். குறிப்பாக விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின.

பெருவாரியான வெள்ளையின தொழிலாளிகள் டிரம்புக்கு வாக்களித்தோடு, அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் அவரை ஆதரித்திருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. இவர்களில் கணிசமானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள், இனவெறியர்கள் என்பதையும் அமெரிக்க ஊடகங்கள் தற்போது பீறாய்ந்து வருகின்றன. குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராவதற்கான போட்டியின் போது நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் வெள்ளை இனத்தவர்களின் குரலை ஓங்கி ஒலித்தார் டிரம்ப்.

தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வந்த சமயத்திலேயே குடியரசுக் கட்சியில் பெருவாரியாக தங்களை இணைத்துக் கொண்டு டிரம்புக்கு ஆதரவான பிரச்சாரங்களை நடத்தி வந்தனர், கூ கிளக்ஸ் கிளான் என்கிற வெள்ளை நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள். எட்டாண்டுகளாக நடக்கும் கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவின் ஆட்சி, அதிகரித்து வரும் எல்.ஜி.பி.டி உரிமைகள் குறித்த விவாதங்கள் உள்ளிட்டவைகளோடு அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக முன்னிறுத்தப்பட்ட ஹிலாரி கிளிண்டன் என அனைத்தும் ஒன்று சேர்ந்து வெள்ளை இனவெறியர்களை மொத்தமாக டிரம்பின் பின் அணிதிரட்டியது. டிரம்ப் வென்றதை அடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அவரை அதிபராக ஏற்க மறுத்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கூ கிளக்ஸ் கிளான் வெற்றிப் பேரணிகளை நடத்தி வருகின்றது.

டொனால்ட் ட்ரம்ப் எதிரான மக்களின் போராட்டம்.
டொனால்ட் டிரம்புக்கு  எதிரான மக்களின் போராட்டம்.

இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் ஹிலாரி கிளிண்டனை ஸ்தாபனத்தின் (Establishment) பிரதிநிதியாக (ஆளும் வர்க்கத்தின் ஒட்டு மொத்தமாக) அடையாளம் கண்டனர். இதோடு சேர்த்து கடந்த எட்டாண்டு ஜனநாயக கட்சியின் ஆட்சியும், அதற்கு எதிரான அதிருப்தியையும் ஹிலாரி சுமக்க வேண்டியிருந்தது. இதனுடன் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தல்களும் இணைந்து கொள்ளவே, அவருடைய தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

இதற்கு நேர்மாறாக டொனால்ட் டிரம்ப்  அமைப்பு முறைக்கு எதிரானவராக அடையாளம் காணப்பட்டார். தேர்தல் பிரச்சாரங்களின் போது டிரம்ப் அடித்த வாய்ச்சவடால்களை ‘அறிவார்ந்த’ பத்திரிகையாளர்கள் முகம் சுழித்த போது மக்கள் முகம் மலர்ந்தனர். ஃபோர்ட் கார் கம்பெனித் தொழிற்சாலைக்கு அருகே நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், “ஏய் போர்டு கம்பெனி முதலாளியே, இங்கேயிருந்து தொழிற்சாலையை மெக்சிகோவுக்கு மாற்றினால், அமெரிக்காவுக்குள் நுழையும் ஒவ்வொரு காருக்கும் வரியைப் போட்டுத் தீட்டி விடுவேனாக்கும்” என்று முழங்கிய போது கூடியிருந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்தனர். இதே போல் சீனாவில் உற்பத்தியாகும் ஆப்பிள் போன்களுக்கு வரியை உயர்த்தப் போவதாக டிரம்ப் அறிவித்து முதலாளிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தார் – மக்களோ அதை இரசித்தனர்.

அடுத்து, ஒபாமாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதன் வெளியுறவுக் கொள்கைகளை புதிய பிற்போக்குவாதிகளும் (Neo conservatives) தாரளவாத போர்வெறியர்களுமே (Liberal hawks) தீர்மானித்தனர். அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை புரியும் இப்பிரிவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட சிந்தனைக் குழாம்களின் வழிகாட்டுதல் சிரியா உள்ளிட்ட போர்களையும், ரசியாவுடனான மோதல் போக்கையும் தீர்மானித்தன.

துவக்கத்திலிருந்தே ரசியாவுடன் மோதல் போக்கைக் கைவிடுவதைக் குறித்து பேசி வந்த டிரம்ப், சிரிய போர் அமெரிக்காவின் மிகப் பெரிய தவறு என விமர்சித்து வந்தார். தற்போது டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் மத்திய கிழக்குக் கொள்கையிலோ, ரசியாவுக்கு எதிரான போக்கிலோ எதாவது மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படை உள்ளதா? இல்லை. ஏனெனில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்பது அதன் ஏகாதிபத்திய பொருளாதார நலன்களை அடிப்படையாக கொண்டது. ஒரு நாட்டுடன் போர் வேண்டுமா வேண்டாமா என்பதை முதலாளிகளின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்படும் அமெரிக்க ஆளும் வர்க்கமே தீர்மானிக்கிறது – அதை அறிவிக்கும் உரிமை மட்டுமே அதிபருக்கு உண்டு.

எனினும், டிரம்ப் தனது பிரச்சாரங்களில் போர்களுக்கு எதிராகவும், அமெரிக்க பொருளாதார நலன்களுக்கு எதிராக (ரசியாவுடன் இணக்கமாகச் செல்வது) எப்படி பேசினார்? இது அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நலன்களை பிரதிபலிக்கும் அமெரிக்க அரசு கட்டமைப்புக்கும் எதிராதனாயிற்றே? அவர் ஏன் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ள வேண்டும்? இங்கே தான் டிரம்பின் தனிப்பட்ட பண்புகள் முன்னுக்கு வருகின்றன.

விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின. நன்றி படம்: விக்கி லீக்ஸ்
விக்கிலீக்ஸ் பகிரங்கப்படுத்திய மின்னஞ்சல்கள் ஹிலாரி எந்தளவுக்குப் போர் வெறி கொண்டவர் என்பதையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தோற்றத்தில் நேரடியாக பங்குடையவர் என்பதையும் அம்பலப்படுத்தின. நன்றி படம்: விக்கி லீக்ஸ்

டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டனைப் போல் ‘அனுபவம்’ வாய்ந்த அரசியல்வாதி அல்ல. பிறக்கும் போதே வாயில் வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். அவரது வாயிலிருந்து கரண்டியை உருவும் போது என்னவெல்லாம் வழிகிறதோ அதெல்லாம் கட்டளைகள். அந்தக் கட்டளைகளை நிறைவேற்றும் கடமை அந்தக் கட்டளைகளுக்கு உட்பட்ட அனைவருக்கும் உண்டு என நம்புகிறவர்.

தானே ஒரு பெருமுதலாளி என்பதால் , அந்த உலகத்தின் இருண்ட பக்கங்கள் டிரம்புக்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். அரசாங்கத்தின் திரைமறைவு இயக்கம், அது எந்தளவுக்கு முதலாளிகளின் நலனோடு பிணைக்கப்பட்டுள்ளது, அரசுக்கு முதலாளிகள் அளிக்கும் உத்தரவுகள் கொள்கை முடிவுகளாக எவ்வாறு அமல் படுத்தப்படுகின்றது, இதில் மக்களுக்கு சொல்லப்படுவது எவை – சொல்லப்படாத உண்மைகள் எவை, போர்கள் ஏன் நடக்கின்றன – அதன் பின் உள்ள சொல்லப்படாத காரணங்கள், மக்கள் நலன் என்பதாக முன்வைக்கப்படும் திட்டங்களின் உண்மை நோக்கம் என்ன – என்பதெல்லாம் மக்களை விட மிகத் தெளிவாக அதே உலகத்தில் இயங்கும் டிரம்புக்குத் தெரியும்.

அவர் ஒரு முதலாளி என்றாலும் உதிரித்தனம் கொண்ட மைனர். எனவே, ரசியாவுடனான மோதல் போக்கோ, சிரியாவில் நடக்கும் போரோ… எதனைக் குறித்தும் பேசும் முன்பாக அது முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் கட்டிக் காப்பாற்றும் அரசுகட்டமைவின் (Establishment) கருத்துடன் ஒத்துப் போக வேண்டுமே என்கிற அச்சம் டிரம்பிடம் இல்லை. அவர் அந்தக் கட்டமைவிற்கு மேலாகத் தன்னை நிறுத்திப் பார்க்கிறார். எனவே அதன் போலித்தனங்களையும், ஊடகங்களின் வழியாக அது எவ்வாறு நியாயப்படுத்தப்படுகின்றது என்பதையும் அறிந்தவர். லட்சக்கணக்கான மக்களின மரணங்களையே குழிதோண்டிப் புதைத்த அந்த உலகத்தில், தனது ‘கருத்துக்கள்’ கடலில் கரைத்த பெருங்காயமே என்பதை அவர் முற்றாக அறிந்துள்ளார்.

அப்படி அனைத்துக்கும் மேலிருந்து பார்ப்பதால், அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு விளக்கங்கள் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை – பொறுப்பேற்க வேண்டிய தேவையுமில்லை. ஒவ்வொன்றும் பேசும் போது பேச்சாக இருக்கும் – பேசி முடித்த பின் தெறித்து விழுந்த எச்சிலாக இருக்கும். இவற்றில் எதையாவது டிரம்ப் நிறைவேற்றுவாரா? அது அவரின் அந்தந்த நேரத்திய மனநிலையைப் பொறுத்தது. குடிகாரன் பேச்சு போலத் தான். நேற்று வரை நீங்கள் சொன்னவற்றில் இன்னதெல்லாம் நிறைவேற்றப்படவில்லையே என்று நாளை யாராவது கேட்டால் “அப்படியா சொன்னேன்” என்று புறங்கையால் ஒதுக்கி விட்டுப் போவார் அல்லது ”நீ எவன்டா அதைக் கேட்க” என்று அதே புறங்கையை ஓங்கவும் செய்வார்.

எனவே தான், ”ஒபாமா கேரைத் தூக்கிப் போடுவேன் – போட்டபின் எதாவது ஒன்றைக் கொண்டு வந்து விடலாம்” “சீனாவை தட்டி வைப்பேன்” “ரசிய அதிபர் புதின் நல்லவர்.. அவரை ஈசியாக டீல் செய்வேன்” “மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஒரு சுவரைக் கட்டுவேன் – அதற்கான செலவை மெக்சிகோவை ஏற்கச் செய்வேன்” என்பதில் துவங்கி எதைக் குறித்தும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் அவரால் பேச முடிகிறதது. சீமான், விஜயகாந்த் வகையறாக்கள் அளிக்கும் வாக்குறுதிகளை கவனித்துப் பார்த்தால், அதில் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற பொறுப்போ, நாளை பதில் சொல்லியாக வேண்டுமே என்கிற அச்சத்தையோ நாம் காண முடியாது. டிரம்ப் ஒரு சர்வதேச சீமான்.

ஹிலாரி ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி (Seasoned politician) என்பதால் எதைக் குறித்தும் வாக்குறுதி அளிப்பதற்கு முன் அதன் சாதக பாதகங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு பேச வேண்டியிருந்தது. ஆனால், டிரம்ப் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் சாத்தியப்பாடுகள் குறித்து அவருக்கு எந்த அக்கறையும் இல்லை. வேலையிழப்புக்கு என்ன காரணம்? வந்தேறிகள். அதற்கு என்ன செய்யலாம்? அவர்களை விரட்டியடித்து விடலாம். இதைத் தான் படிப்பறியும், உலக ஞானமும் இல்லாத வெள்ளையின தொழிலாளர் வர்க்கம் விரும்பியது. ஹிலாரி கிளிண்டன் மற்றும் அவரது பிரச்சாரக் குழுவினர் மெனக்கெட்டு கட்டமைத்த “ரசிய பூதம்” “இசுலாமிய வேதாளம்” ”மூன்றாம் உலக காட்டுமிராண்டிகள்” போன்றவற்றை வெறும் வெற்றுச் சவடால்களின் மூலமாகவே ஊதித் தள்ளிவிட்டார் டிரம்ப்.

கடந்த ஓராண்டுகளாக குடியரசுக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்து வரும் ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர், டிரம்ப் வெல்லப் போகிறார் என்பதை முன்னரே யூகித்து விட்டார். குடியரசுக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த வாக்காளர் ஒருவர், மைக்கேல் மூரிடம் “நாம் டிரம்புக்கு ஓட்டளிக்க வேண்டும். அனைத்தையும் தலைகீழாக கவிழ்த்துப் போட வேண்டும்” (Shake things up) என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்திய மூலதனம் தனது லாப வேட்டைக்காக உள்நாட்டிலிருந்து உற்பத்தி ஆலைகளை மூன்றாம் உலகநாடுகளுக்குக் கடத்திச் சென்றதால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது அமெரிக்க தொழிலாளர் வர்க்கம். இந்தப் போக்கானது பொதுவில் குற்றச் செயல்களை அதிகரித்திருந்தாலும், குறிப்பாக கருப்பினத்தவரிடம் அதிகரித்தளவில் காணப்படுகின்றது. மாறாக வெள்ளையினத்தவரிடம், வேலையிழப்புகள் நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்து போதைப் பழக்கத்தை அதிகரித்துள்ளது. எனவே வழமையான ஆளும் வர்க்கப் பசப்பல்களை அவர்கள் நம்ப மறுக்கின்றனர். மறுபுறம் இதே பிரிவினர் கல்வியறிவற்றவர்களாகவும், அரசியல் அறிவற்றவர்களாகவும் இருப்பதால் டிரம்ப் முன்மொழியும் எளிமையான தீர்வுகளுக்கு பலியாகினர். இதோடு கூடவே, வெள்ளையினத்தின் இறுதி மீட்பராக டிரம்ப்பை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டர் இனவெறி அமைப்பினர்.

trumpதற்போது அமெரிக்கா ஒரு அதிதீவிர வலதுசாரிப் பாதைக்குள் அடியெடுத்து வைத்திருப்பதாகவும், கூ கிளக்ஸ் கிளான் போன்ற இனவெறி அமைப்புகள் குடியரசுக் கட்சியைக் கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும் லிபரல் ஜனநாயகவாதிகள் அச்சப்படுகின்றனர். ”டிரம்ப் போன்ற ஒரு அரைவேக்காட்டின் விரல் நுனியில் அமெரிக்க அணுகுண்டுகளை இயக்கும் சிவப்புப் பொத்தான் இருப்பதை நினைத்தாலே நடுக்கமாக உள்ளது” எனப் பதறுகிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.

தாராளவாத ஜனநாயக காதலர்கள் அச்சப்படுவதைப் போல் அணுகுண்டின் சிவப்புப் பொத்தானின் மேல் டிரம்பின் விரல்கள் தாளமிட்டு விடுமா? உறுதியாகச் சொல்ல முடியாது. அரசுக் கட்டமைவிற்கு உள்ளே வானளாவிய அதிகாரத்துடன் நுழைந்துள்ள டிரம்ப்பை அது தனக்கேற்றபடி மறுவார்ப்பு செய்யுமா இல்லையா என்பதைப் பொறுத்தது. ஒருவேளை அரசுக் கட்டமைவின் தேவைகளுடன் டொனால்ட் டிரம்பின் சிந்தனைப் போக்கு பொருந்தி வரவில்லை என்றால்? ஹிலாரிக்கு இருப்பதைப் போல் திட்டமிட்ட கொடூர (systematic cruelty) மனம் டிரம்புக்கு இல்லை என்பதால் – அச்சச்சோ மக்கள் பாவம் என்றும் சிந்திக்கலாம்; அல்லது ஹிலாரியைப் போல் விளைவுகளைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொறுமை இல்லாததால் – மூன்றாம் உலகக் குரங்குப் பயல்கள் செத்தொழியட்டும் என்றும் சிந்திக்கலாம். எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த அமெரிக்க அரசுக் கட்டமைவு தனக்கேற்றபடி டிரம்ப்பை தகவமைத்துக் கொள்ளும் வாய்ப்புகளே அதிகம் என்பதையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து, பெண்களைக் குறித்து இழிவாக சிந்திக்கும் ஒரு பொறுக்கியை எப்படி அமெரிக்க வாக்காளர்கள் தெரிவு செய்தனர் எனக் கலங்குகின்றனர் மேற்கத்திய பாணி பெண்ணுரிமை ஆர்வலர்கள்.

அது தான் அமெரிக்கா. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரையோர மாநிலங்களைத் தாண்டி அமெரிக்காவின் மத்திய பகுதி மொத்தமும் தீவிர கத்தோலிக்க அடிப்படைவாத கருத்துக்களுடனும் மத்திய கால கலாச்சார விழுமியங்களுடனுமே உள்ளது. டிரம்ப்புக்கு வாக்களித்த பெண்ணிடம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் நிருபர் ஒருவர் ”பெண்களை இழிவாக பேசும் டிரம்ப்புக்கு ஏன் வாக்களித்தீர்கள்?” எனக் கேட்டதற்கு அவர் அளித்த பதில், “அவர் தான் உண்மையான ஆம்பிள்ளை”.

ஆணாதிக்க எதிர்ப்பு, எல்.ஜி.பி.டி இயக்கங்கள், ஒருபாலினத் திருமணங்கள் என்பவை எல்லாம் நகரங்களில் உள்ள படித்த உயர் நடுத்தர வர்க்க அமெரிக்கர்களின் உலகத்துடன் முடிந்து விடுகின்றது. உண்மையான அமெரிக்காவோ கத்தோலிக்க தாலிபான்களின் சித்தாந்தத்தில் லயித்துக்கிடக்கிறது.

இறுதியாக, டிரம்ப் இசுலாமியர்களுக்கு எதிரானவர் என்பதால் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதாவது எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என வாயில் எச்சிலூறக் காத்திருக்கின்றனர் அமெரிக்கவாழ் இந்தியர்கள். உண்மையில் டிரம்ப் குடியரசுக் கட்சியை வெளியிலிருந்து வந்து கைப்பற்றியவர் என்பதால் உட்கட்சியிலிருந்து எழும் கலகக் குரல்களை எதிர்கொள்ள வெள்ளையின வெறியர்களையே நம்பியுள்ளார். வெள்ளையின வெறியர்களை அவர் தனது ஏவல் நாய்களாகப் பராமரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இனவெறியர்களைப் பொருத்தவரையில் தலையிலிருப்பது குல்லாவா குடுமியா என்பதல்ல பிரச்சினை – தோலின் நிறம் கருப்பா வெளுப்பா என்பதே முக்கியம்.

எனவே, முதலில் நாஜிகள் தாக்கப் போவது உங்களையல்ல – ஆனால் உங்கள் பாதுகாப்பும் உறுதியல்ல.

– சாக்கியன்

மோடியின் பலிபீடம் : 7 நாளில் 33 பேர் பலி !

2
black money surgical operation slider

வம்பர் 8 இரவு செல்லாத நோட்டை அறிவித்து விட்டு மோடி ஜப்பான் சென்றார். புல்லட் ரயில், அணு மின்சாரத்திற்காக பிடில் வாசித்தார். பிறகு கோவா வந்தார். விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கிளிசரின் வடித்தார். பிறகு உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றார். மக்கள் தம்மை ஆதரிப்பதாக கூறினார். 50 நாட்களில் நிலைமை சரியாகும் என்றார். பிறகு பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளை சந்திக்கிறேன் என்று சவால் விட்டார்.

பெருமுதலாளிகளுக்கு வராக்கடனாகவும், கடனாகவும் இலட்சம் கோடிகளை வாரி வழங்கும் இந்திய அரசு சார்பில் சாதாரண மக்களின் பணத்தை பிடுங்கும் திட்டமே மோடியின் செல்லாத நோட்டு திட்டம். இதனால் அம்பானி – அதானி கருப்புப் பண முதலைகள் மனம் மகிழ உழைக்கும் மக்களை வதைத்து வருகிறது மோடியின் அரசு. இந்த ஏழு நாட்களில் இது வரை செல்லாத நோட்டுக்களை மாற்ற முடியாமல் மாரடைப்பில், தற்கொலையில், நிலை குலைந்து இறந்து போனோர் 33 பேர். இதில் ஒரு கொலையும் உண்டு.

black money surgical operation_cartoon
படம் : துரை

ஹஃப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டிருக்கும் இந்தப் பட்டியல் பல்வேறு முக்கிய ஊடகங்களின் செய்திகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது ஊடகங்கள், காவல் நிலையங்களுக்கு வராத சாவுகள் இன்னும் பிரம்மாண்டமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

1. பஞ்சாபின் தார்ன் தரன் பகுதியைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங். அவரது மகளுக்கு திருமணம் நடக்க நான்கு நாட்களே இருக்கின்றன. அப்போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பைக் கேட்டவர் அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் காலமானர். “எங்களது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனது கணவர் பெரும் பதட்டத்தில் இருந்தார். மார்பு வலிக்கிறது என்று கூறிக்கொண்டே இறந்து போனார்” என்கிறார் சுக்தேவ் சிங்கின் மனைவி சுர்ஜித் கவுர்.

2. உத்திரப் பிரதேசத்தின் புலன்ஷ்தார் பகுதியைச் சேர்ந்த மாணவன் சுமித். இவனது தந்தை எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரிகிறார். செல்லாத நோட்டு காரணமாக தனது தாய் சில்லறை நோட்டுக்களை தரமறுத்ததால் சுமித் தற்கொலை செய்து கொண்டான்.

Women waiting ATM3. ஒடிசாவின் சம்பல்பூரில் இரண்டு வயது குழந்தையை சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏற்றிச் செல்ல ஓட்டுநர் மறுத்துவிட்டார். காரணம் பெற்றோர்களிடம் சட்டவிரோதமான 500 நோட்டு மட்டும் இருந்தது.

4. தெலுங்கானா மாநிலத்தின் செகந்தராபாத்தில் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக 2 மணி நேரமாக வரிசையில் நின்ற 75 வயது பெரியவர் லஷ்மி நாராயணா நிலை குலைந்து மயங்கி இறந்து போனார். கையிலிருந்த ஒன்றே முக்கால் இலட்சம் பணத்தை சேமிப்பு கணக்கில் போடுவதற்காக அவர் வங்கிக்கு சென்றிருந்தார்.

5.பீகாரின் அவுரங்காபாத்தில் வங்கி வரிசையில் நின்ற முதியவர் சுரேந்திர சர்மாவும் இறந்து போயிருக்கிறார்.

6. மத்திய பிரதேசத்தின் சட்டார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான ஹல்க் லோதி மோடி அறிவிப்பின் விளைவால் தற்கொலை செய்து கொண்டார். ராபி பருவ சாகுபடிக்கான உரங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்த அவரிடம் மோடி அறிவித்த செல்லாத நோட்டுக்கள் மட்டுமே இருந்தன.

7. உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அசிஸ் அன்சாரி எனும் 60 வயது தொழிற்சாலை தொழிலாளி, வங்கி வரிசையில் நோட்டை மாற்றுவதற்காக நிற்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

8. கிழக்கு உத்திரப்பிரதேசத்தின் ஜலூன் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் வர்மா ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர். அவரும் வங்கி வரிசையில் மரணமடைந்தார். “திருமண செலவுகளுக்காக கையில் இருக்கும் 2 இலட்சத்தை மாற்றுவதற்காக அவர் மூன்று நாட்களாக வங்கி சென்று வந்தார். வங்கி மேலாளரின் காலில் விழுந்து கெஞ்சினாலும் பலனில்லை”, என்கிறார் அவரது மகன் ரவி.

9. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரான மகேஷ் சர்மாவிற்கு சொந்தமான கைலாஷ் மருத்துவமனையின் கிளை ஒன்று, மேற்கு உத்திரப்பிரதேசத்தின் புலன்ஷாரில் இருக்கிறது. நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்றை சேர்க்கும் போது மருத்துவமனை நிர்வாகம் பத்தாயிரம் ரூபாயை முன்பணமாக கட்டுமாறு பெற்றோரிடம் சொன்னது. மோடியின் செல்லாத நோட்டுக்கள் மட்டுமே வைத்திருந்த பெற்றோர் கதறியும் நிர்வாகம் ஏற்கவில்லை. குழந்தை இறந்து போனது.

10. தில்லியைச் சேர்ந்த 24 வயது ரிஸ்வானா மூன்று நாட்களாக செல்லாத நோட்டுக்களை மாற்ற முடியவில்லை என்ற அதிர்ச்சியில் மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

11. குஜராத்தின் சூரத்தில் இரு குழந்தைகளின் 50 வயது தாய் ஒருவர், தற்கொலை செய்து கொண்டார். காரணம் கடைக்காரர்கள் மோடியின் செல்லாத நோட்டுக்களை பெற மறுத்ததால் தனது குடும்பத்திற்கு தேவையான உணவை அவரால் அளிக்க முடியவில்லை.

12. வங்கி சென்று புதிய நோட்டு பெறமுடியாமல் தனது சகோதரன் திரும்பியதைக் கண்டு மனமுடைந்த மேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஷாம்லியைச் சேர்ந்த 20 வயது ஷாபனா, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

13. கர்நாடகா மாநிலத்தின் சிக்பல்லபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், தனது குடிகார கணவனுக்குத் தெரியாமல் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 15,000 ரூபாய் பணத்தை இருப்பு வைக்க வங்கிக்குச் சென்றார். அங்கே யாரோ அவரது பணத்தை திருடியதையடுத்து தற்கொலை செய்து கொண்டார்.

14. சட்டீஸ்கரின் ராஜ்காரைச் சேர்ந்த 45 வயது விவசாயி ஒருவர் மூன்று நாட்களாக வங்கி சென்றும் 3,000 ரூபாயை மாற்ற முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார். அந்த பணத்தை தமிழகத்தில் மாட்டிக் கொண்ட தனது குழந்தைகளுக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தார்.

15. குஜராத்தின் லிம்பிடி நகரைச் சேர்ந்த 69 வயது பெரியவர் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்காக இந்தியன் வங்கிக் கிளை ஒன்றில் நிற்கும் போது நிலை குலைந்து மாரடைப்பால் காலமானார்.

16. கான்பூரைச் சேர்ந்த யாருமற்ற ஒரு முதிய பெண் பணத்தை எண்ணும் போது மரணமடைந்தார். அவரது உடலருகே மோடி அறிவித்த செல்லாத நோட்டுக்கள் 2.69 இலட்சம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

17. அதே கான்பூரில் ஒரு இளைஞர், மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு வந்து காலமானார். அதற்கு முந்தைய தினம்தான் பல மாதங்களாக விற்காமல் இருந்த அவரது நிலம் விலை பேசப்பட்டு ரூ 70 இலட்சத்தை முன்பணமாக பெற்றிருந்தார்.

18. செல்லாத நோட்டுக்களை வைத்திருந்த காரணத்திற்காக மும்பை மருத்துவமனை ஒன்று புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை சிகிச்சைக்காக சேர்க்க மாட்டோம் என்று மறுத்தது. அதனால் குழந்தை இறந்து போனது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பழைய பணம் செல்லுபடியாகும் என்று மோடி அறிவித்திருந்தார்.

19. ஆந்திராவின் விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த கோமலி எனும் 18 மாதக் குழந்தை இறந்து போனது. குழந்தையின் பெற்றோர் மருந்து வாங்குவதற்காக புதிய நோட்டுக்கள் தரவில்லை என்று மருத்துவமனை மறுத்துவிட்டது.

20. உத்திரப் பிரதேசத்தின் மனிபுரியில் இருந்த மருத்துவர்கள் ஒருவயது குழந்தையான குஷ்ஷின் அதிக காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். பழையை 500, 1000 நோட்டுக்கள் மட்டும் வைத்திருந்ததால் பெற்றோர்கள் வேறு வழியின்றி குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்ததும் அது மரணமடைந்தது.

21. ராஜஸ்தானில் பாலி மாவட்டத்தில் ஒரு பிறந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் நிறுவனம் மறுத்துவிட்டது. குழந்தையின் தந்தையான சம்பலால் 500, 1000 நோட்டுக்களுக்குப் பதில் 100 ரூபாய் நோட்டுக்களை ஏற்பாடு செய்து கொண்டு வரும்போது குழந்தை மரித்துவிட்டது.

22. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சலவைத் தொழில் செய்யும் பெண்மணி வங்கிக் கணக்கில் தன்னிடம் உள்ள இரு 1000 ரூபாய் நோட்டை போடச் சென்றார். அப்போது அந்த நோட்டுக்கள் செல்லாது என்று சிலர் சொன்ன போது என்ன ஏது என்று புரியாமல் அதிர்ச்சியடைந்து மரணமடைந்தார்.

23. தெலுங்கானாவின் மகுபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயது கண்டுக்குறி வினோதா தன்னிடம் உள்ள சேமிப்பு பணமான 55 இலட்சம் ரூபாய் செல்லாது என்று அறிந்த போது தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்ப நிலத்தை விற்று அந்தத் தொகை மூலம் கணவரின் சிகிச்சை, மகளின் வரதட்சணை, மற்றும் ஒரு சிறு நிலத்தை வாங்குவதற்கும் அவர் திட்டமிட்டிருந்தார்.

24. மேற்கு வங்கத்தின் ஹவ்ராவைச் சேர்ந்த ஒரு கணவன் அவனது மனைவியான மது திவாரியை கொலையே செய்து விட்டான். செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பிறகு அவனது மனைவி ஏ.டி.எம் சென்று வெறுங்கையோடு திரும்பியதே காரணம்.

25. பீகாரின் கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது ராம் அவாத் ஷா கடும் மாரடைப்பால் காலமானார். காரணம் அவர் சேமித்து வைத்திருந்த ரூ. 35,000 பணம் மோடி அறிவித்த செல்லாத நோட்டாக இருந்ததால் அவரது வருங்கால மருமகன் அதை ஏற்க மாட்டான் என்பதே.

26. கேரளாவின் தலசேரியைச் சேர்ந்த 45 வயது உண்ணி, கேரள மின்வாரியத்தில் பணிபுரிந்தவர். மோடி அறிவிப்புக்கு முந்தைய தினம்தான் அவர் கடனாக வங்கியிலிருந்து ரூ 5 இலட்சத்த்தை வாங்கியிருந்தார். மறு தினம் இதை எப்படி மாற்றுவது என்று தத்தளித்தவர் வங்கிக்குச் சென்று பணம் செலுத்தும் சீட்டை நிரப்பும் போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து போனார்.

27. மும்பை வங்கி ஒன்றில் பழைய செல்லாத நோட்டுக்களை இருப்பு வைக்கச் சென்ற 72 வயது விஸ்வாஸ் வர்தக், மாரடைப்பால் காலமானார்.

28. தனது பண்ணையில் வேலை செய்த தொழிலாளிகளுக்கு கூலி கொடுப்பதற்காகாக வங்கி சென்று பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற பர்கத் ஷேக் மாரடைப்பால் காலமானார். குஜராத்தின் தாராபூரைச் சேர்ந்த அவருக்கு வயது 47.

29. கேரளாவின் ஆலப்புழையில் பணத்தை மாற்றுவதற்காக ஒரு மணிநேரமாக வங்கி வரிசையில் நின்ற 75 வயது முதியவர் கார்த்திகேயன் நிலை குலைந்து மரணமடைந்தார்.
Old man
30. அதே போன்று கர்நாடகாவின் உடுப்பியில் வரிசையில் நின்ற 96 வயது கோபால ஷெட்டி மரணமடைந்தார். அப்போது வங்கி திறந்திருக்க கூட இல்லை.

31. மத்தியப் பிரதேசத்தின் சாகரைச் சேர்ந்த 69 வயது வினய் குமார் பாண்டே ஒரு ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர். அவரும் நோட்டுக்களை மாற்றச் சென்ற போது வங்கியில் காலமானார்.

32. மத்தியப் பிரதேசத்தின் போபாலில், ஸ்டேட் வங்கி கிளை ஒன்றின் காசளரே இறந்து போனார். நீண்ட வரிசையில் இருக்கும் மக்களை சமாளிப்பதற்கு வங்கி ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்ய பணிக்கப்பட்டனர்.

33. உத்திரப்பிரதேசத்தின் பைசாபாத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் மோடி அறிவிப்பைப் பார்க்கும் போதே நெஞ்சு வலிப்பதாக உணர்ந்தார். மருத்துவர் வருவதற்குள் மரணமடந்தார்.

இவை போக தமிழகத்திலும் ஏனைய இந்தியாவிலும் இறந்தவர்கள் கணக்கு நமக்கு தெரியவில்லை. வட கிழக்கு இந்தியா உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கிராமங்களில் பணமில்லாமல் மக்கள் படும் அவதிகள் நாளிதழ்களில் வந்திருக்கின்றன. ஆகவே இந்த கொலைப்பட்டியல் இன்னும் நீளும். அடுத்து விரலில் மை வைக்க வேண்டும் என்று தாக்குகிறார்கள். அதில் எத்தனை பேர் பலியாவர் என்பது தெரியவில்லை.

வரிசையில் நின்று மரிக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டுமானால் நாம் வீதியில் இறங்க வேண்டும். அரசையும் பொருளாதாரத்தையும் பாசிச மயமாக்கி வரும் மோடி அரசை தூக்கி எறியாமல் இந்தியாவில் அமைதியோ, வாழ்வோ வரப்போவதில்லை.

நன்றி : THE HUFFINGTON POST

சிங்கூர் தீர்ப்பு : விவசாயிகளுக்குக் கிட்டிய வெற்றியா ?

0

மே.வங்கத்தின் சிங்கூரில் டாடாவின் நானோ கார் திட்டத்துக்காக விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்க வேண்டுமென கடந்த ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு சிங்கூர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களுக்குத் திரும்பக் கிடைத்துள்ளபோதிலும், நாடு தழுவிய அளவில் முக்கியத்துவம் பெற்ற சிங்கூர் விவசாயிகளின் போராட்டம் எழுப்பிய மையமான கேள்விக்கு நீதித்துறை இதுவரை விடையளிக்கவில்லை. சிங்கூர் விவசாயிகளின் போராட்டமானது தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல்போயுள்ளதோடு, அப்போராட்டத்தைச் சட்டவாதத்தில் மூழ்கடிப்பதுதான் இப்போது நடந்துள்ளது.

singur-struggle
நிலப்பறிப்புக்கு எதிராக சிங்கூர் விவசாயிகளின் போராட்டம். (கோப்புப்படம்)

சிங்கூர் நிலப்பறிப்புக்கு எதிரான வழக்கானது இரண்டு முக்கிய விவகாரங்களைக் கொண்டதாகும். ஒன்று, போலி கம்யூனிச இடதுசாரி அரசாங்கம் டாடாவின் நானோ கார் திட்டத்திற்காக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்ததைப் பற்றியது. இரண்டாவது, விவசாயிகளின் போராட்டத்தைத் தனது அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டு 2011-இல் ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி தலைமையிலான அரசாங்கம், சிங்கூர் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பி அளிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து டாடா நிறுவனம் தொடுத்துள்ள வழக்கு பற்றியது. முந்தைய ‘இடதுசாரி ‘அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலமானது தனக்குச் சொந்தமானது என்றும், மம்தா அரசின் சட்டமானது ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் டாடா நிறுவனம் தொடுத்துள்ள வழக்கு இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தற்போது, சிங்கூரில் விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதைப் பற்றிய வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோபால கவுடா, அருண் மிஸ்ராஆகியோர் வெவ்வேறு காரணங்களைக் கூறி தனித்தனியாகத் தங்கள் தீர்ப்பை எழுதியுள்ளனர். நீதிபதி கோபால கவுடா, “1894 -ஆம் ஆண்டின் சட்டத்தில் பிரிவு 3 (எஃப்) இல் குறிப்பிட்டுள்ள ‘பொது நோக்கத்திற்காக’ (Public Purpose) என்கிற விதி சிங்கூரில் நிலம் கையப்படுத்தப்பட்டதற்குப் பொருந்தாது. ஏனெனில், இந்த நிலம் ஒரு தனியார்முதலாளி தொழில் தொடங்குவதற்காகத் தரப்பட்டுள்ளதால் இதில் ‘பொதுநோக்கம்’ என்பது அறவே இல்லை”என்று தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.

நீதிபதி அருண் மிஸ்ரா, “ஒரு தனியார் முதலாளித்துவ நிறுவனம் தொழில் தொடங்குவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தை அரசு கையகப்படுத்தி அளிப்பது என்பதில் ‘பொதுநோக்கம்’அடங்கி இருக்கிறது. ஒரு முதலாளி தொழில் தொடங்குவதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, பொருளுற்பத்தியும் பெருகி நாட்டில் வளர்ச்சி ஏற்படுகிறது” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நிலைக்குமா? நீடிக்குமா?: பறிக்கப்பட்ட நிலம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் சிங்கூர் விவசாயிகள்.
நிலைக்குமா? நீடிக்குமா?: பறிக்கப்பட்ட நிலம் திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில் சிங்கூர் விவசாயிகள்.

இரண்டு நீதிபதிகளும் பொதுப் பயன்பாடு பற்றி முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், 1894-ஆம் ஆண்டு சட்டத்தின் பகுதி 7-இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், நிலம் கையகப்படுத்தப்பட்டபோது சரியாகப் பின்பற்றப்படாததால் சிங்கூரில் நிலங்களைக் கையகப்படுத்தியது செல்லாது என்று இத்தீர்ப்பை அளித்துள்ளனர். மற்றபடி, சிங்கூர் விவசாயிகளின் போராட்டம் எழுப்பிய ”எது பொதுப்பயன்பாடு?” என்ற மையமான கேள்விக்கு நீதித்துறை இன்றுவரை விடையளிக்காமல் நழுவிக் கொண்டுள்ளது.

1894-ஆம் ஆண்டின் காலனிய காலத்து நிலம் கையகப்படுத்தல் சட்டப்படி, ”பொதுப் பயன்பாட்டுக்காக” எந்த நிலத்தையும் அரசாங்கம் கட்டாயமாக அபகரித்துக் கொள்ளலாம். அன்று ரயில்வே துறைக்காக நிலங்களைக் கையகப்படுத்த வெள்ளைக்காரன் கொண்டுவந்த இந்தச் சட்டத்தைக் கொண்டுதான், போலி சுதந்திரத்துக்குப் பின்னர் ரயில்வே, அணைகள், சுரங்கங்கள், மின் நிலையங்கள் முதலான அரசுத்துறை நிறுவனங்களை அமைக்க இந்திய ஆட்சியாளர்கள் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தினர். பொதுப் பயன்பாட்டுக்கானது, நாட்டின் வளர்ச்சிக்கானது என்ற நோக்கில்தான் தங்கள் நிலங்களை விவசாயிகளும் கொடுத்தனர். தோற்றத்திலாவது பொதுப் பயன்பாடாக இருந்த நிலை தனியார்மய – தாராளமயத்துக்குப் பிறகு இப்போது அடியோடு மாறிவிட்டது. தொழில் வளர்ச்சியைச் சாதித்து வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி, தனியார் முதலாளிகளுக்கு அளிப்பதில் தவறில்லை – இதுதான் ”பொதுப்பயன்பாடு” என்று அரசு இப்போது விளக்கமளிக்கிறது. பொதுப்பயன்பாடு என்ற பெயரில் நடக்கும் இந்தக் கார்ப்பரேட் கொள்ளையும் அடக்குமுறையும்தான் விவசாயிகளும் உழைக்கும் மக்களும் எதிர்த்துப் போராட வேண்டிய மையமான விசயமாக உள்ளது.

சிங்கூர், நந்திகிராமம், கலிங்காநகர் – என நாடெங்கும் தொடர்ந்த விவசாயிகளின் போராட்டத்தால் பொதுக் கருத்து வலுப்பட்டு, முதலாளித்துவ ஊடகங்களே ”பொதுப்பயன்பாடு” என்ற பெயரில் அரசாங்கமானது பெருமுதலாளிகளுக்கு விளைநிலங்களைப் பிடுங்கிக் கொடுக்கும் அடியாள் வேலை செய்வதை அம்பலப்படுத்தின. நாடெங்கும் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் வீரியமான போராட்டத்தின் காரணமாகவே அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு கூட்டணி அரசு 2013-ஆம் ஆண்டு “நிலம் கையப்படுத்தல், மறுகுடியமர்த்தம், மறுவாழ்வு, சட்டத்தை (LARRA-2013) நிறைவேற்றியது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கூட்டணியை வீழ்த்தி பா.ஜ.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. விவசாயிகளின் போராட்டத்தால் சிங்கூரிலிருந்து வெளியேறிய டாடா நிறுவனத்தை அழைத்து நானோ கார் தொழிற்சாலை தொடங்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த அன்றைய குஜராத் முதலமைச்சரான மோடி, இப்போது பிரதமராகியுள்ளார். இப்பேர்பட்ட மோடி, ”பொதுப் பயன்பாட்டுக்காக” விவசாய நிலங்களை ஆக்கிரமித்து நூறு பொலிவுறு நகரங்கள் (Smart Cities) அமைக்கப் போவதாக அறிவித்தார். மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த 2013-ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் பிரிவு 3 (இசட்-ஏ) விதிகள், விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கத் தடையாக இருப்பதால், அச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து முந்தைய காலனிய காலச் சட்டத்தையே நிலைநாட்டும் வகையில் புதிய சட்டத்தை மக்களவையில் கொண்டுவந்து நிறைவேற்றத் துடித்தார். அரசுத்துறைகளுக்கு மட்டுமின்றி, எந்தவொரு தனியார் முதலாளிக்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்த விவசாயிகளின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை, இதற்கெதிராக பாதிக்கப்பட்டோர் வழக்கு தொடுக்க முடியாது என்பதுதான் மோடி கொண்டுவரத் துடிக்கும் புதிய சட்டத்தின் சாரம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள மோடி கும்பலின் நிலம் கையகப்படுத்தல் திருத்தச் சட்டம் எனும் கொடிய பாசிச சட்டமானது விவசாயிகளின் தலைக்குமேல் கத்தியாக இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், டாடா நிறுவனமோ, சிங்கூரில் 900 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குப் பெற்று ‘இடதுசாரி’ அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளதையும், அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துமாறும் வழக்கு தொடுத்திருக்கிறது. நிலுவையில் உள்ள அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, குத்தகை ஒப்பந்தம் சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இன்னுமொரு அமர்வு தீர்ப்பளித்தால் என்னவாகும்? நீண்ட போராட்டத்தின் மூலம் சிங்கூர் விவசாயிகளுக்கு நிலம் கிடைத்தாலும், வேறொரு தீர்ப்பின் மூலம் அந்த நிலங்கள் பறிக்கப்படலாம். இந்த அபாயத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதன் மூலம் முறியடிக்க முடியாது. மோடி அரசின் கொள்கையை நாடாளுமன்றத்தின் மூலமோ, சட்டத் திருத்தத்தின் மூலமோ தடுத்து நிறுத்திடவும் முடியாது.

இந்நிலையில், ”பொதுப் பயன்பாடு” என்ற பெயரில் விளைநிலங்களையும் கனிம வளங்களையும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கும் அடக்குமுறைக்கும் எதிராக விவசாயிகளும் உழைக்கும் மக்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களைக் கட்டியமைப்பதே இன்று அவசர அவசியக் கடமையாக முன்நிற்கிறது.

– தனபால்

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

6000 கோடி ஒப்படைப்பு – கரசேவகர்களின் கப்சா ! கேலிச்சித்திரம்

0
Modi Slider

வைர வியாபாரி 6000 கோடியை ஒப்படைத்ததாக பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தி பொய் என்று அம்பலம் !

6000 crore rumor cartoon

மோடிஜி…
நீங்க கிளப்பிவிடுற புரளிகளை எல்லாம் அப்படியே செய்தியாக்குற எடிட்டஸ் தான் ஜி உண்மையான கரசேவகர்கள். அவங்களையும் கொஞ்சம் கவனிங்க.

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !

0

மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு  அல்ல – தோழர் மருதையன் உரை – பாகம் 3

டந்த சில நாட்களாக நடைபெறுகின்ற விவாதத்தைக் கவனித்தால், ஒரு முக்கியமான விஷயத்தை எல்லாருமே திரும்பத் திரும்ப  வலியுறுத்துகின்றனர். அதாவது, காகிதப் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும்; ரொக்க பரிவர்த்தனை அற்ற பொருளாதாரத்திற்கு (Cashless Economy) மாறிக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

அப்படி மாறிக் கொள்ளும் போதுதான் இலஞ்ச ஊழலை ஒழிக்க முடியும்; அதுதான் சர்வரோக நிவாரணி என்று வலியுறுத்துகின்றனர். இதுவரை நாம் பார்த்த விஷயங்களெல்லாம் கேஷ்லெஸ் எக்கானமி அல்லது வங்கிப் பொருளாதாரத்தில் இருக்கக் கூடியவர்கள் செய்யக் கூடிய ஊழல்தான், அதில் உருவாகக் கூடிய கருப்புப் பணம் என்பதைப் பற்றியும், மேலும் அதுதான் முதன்மையான ஊற்றுக்கண்; அதாவது கார்ப்பரேட் முதலாளிகள் என்பதை இவ்வளவு நேரம் பேசினோம்.

குளோபல் ஃபைனான்சியல் இன்டெக்ரிட்டி(Global Financial Integrity) என்ற அமைப்பு செய்த ஆய்வில், மொத்தமாக உலகளவில் சுவிஸ் வங்கி போன்ற பல்வேறு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் யார் யாருடையது, அது எவ்வளவு என்பதைக் கூறுகிறது.

அந்த ஆய்வில், அரசியல்வாதிகள் அதிகாரிகளுடைய பணம் 3 சதவீதமாகும். போதைமருந்து கடத்தல் போன்ற சட்டவிரோத அல்லது முறைகேடான தொழில்களிலிருந்து வருகின்ற வருமானம் 33 சதவீதமாகும். மீதமுள்ள 3-ல் 2 பங்கு, ஏறத்தாழ 64 சதவீத பணம் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகள், தரகு முதலாளிகள் இவர்களுடைய பணம் தான் சுவிஸ் வங்கி போன்ற பல வங்கிகளில் கருப்புப் பணமாக அமர்ந்திருக்கிறது.

உண்மை இப்படியிருக்கும்போது எல்லோரும் பேங்க் அக்கவுண்ட் ஆரம்பிக்காததும், கார்டு வழியாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளாததும் தான் ஒரே காரணம்; எல்லோரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டுவர வேண்டுமென்று இவர்கள் ஏன்? இப்படி வங்கிக்குள் கொண்டுவர வேண்டுமென்று மோடி முதலில் சொல்லத் தொடங்கவில்லை. அது யுபிஏ(UPA) காங்கிரசு கூட்டணி ஆட்சிக் காலத்தில் வந்தது. அவர்கள் சொல்லும்பொழுது எல்லோருக்கும் வங்கி கணக்கு ஆரம்பித்து, இனிமேல் மானியத்தை வங்கியில் போட்டு விடுகிறோம், அங்கே வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். அதாவது மானிய விலையில் ரேசன், சிலிண்டர் கொடுக்கமாட்டோம், சந்தை விலையில் வாங்கிக் கொள்ளுங்கள், இடைப்பட்ட தொகையை அங்கேச் செலுத்திவிடுகிறோம் என்று யுபிஏ அரசு இருக்கும் போதே தொடங்கினார்கள்.

அதற்குக் கடுமையான எதிர்ப்பிருந்த காரணத்தினால் அவர்கள் அதைக் கைவிட்டார்கள். 2014 ஆம் ஆண்டு மோடி வந்த பிறகு அதையே சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், திரும்பப் பிரச்சனையாகும் என்பதனால் மிகவும் தந்திரமாகவும், சூழ்ச்சியாகவும் என்ன செய்தாரென்றால் ‘’நான் பொருளாதாரத் தீண்டாமையை ஒழிக்க விரும்புகிறேன்’’. இந்த நாட்டில் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு அக்கவுண்ட் ஆரம்பிக்க வேண்டும்.

வங்கிக் கணக்கு இல்லாமல் ஒரு மனிதனா? இந்தியக் குடிமகனா?. கணக்கு ஆரம்பித்தால் எல்லோருக்கும் 5000 ரூபாய் வரை கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று முதலில் ஆசையைக் காட்டுகிறார். அதற்குப் பிறகு எரிவாயு உருளைக்கு மானியம் வேண்டுமென்றால் அக்கவுண்ட் இருந்தால் தான் கிடைக்கும் என்ற கட்டாயத்தை உருவாக்குகிறார்.

இன்றைக்கு உணவுக்கு அதாவது ரேசனுக்கும், ரேசன் கடைக்குப் பதிலாக ரேசன் மானியம் வரப் போகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் வங்கிக் கணக்குகளை 23 கோடி பேர் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைச் சாதனையாகக் கூறிக் கொள்கிறார்கள். இதெல்லாம் மோசடியான (Fraud) கணக்கு. வங்கி ஊழியர்களே 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் என்று போட்டுத் தொடங்கிய கணக்குகள் தான் என்பது அம்பலமாயிருக்கிறது.

அந்தக் கணக்குகளில் யாரும் பரிவர்த்தனை செய்து கொள்வதில்லை, அதெல்லாம் செயல்படாத கணக்குகள் (Dead Account) என்பதும் அம்பலமாயிருக்கிறது. இருந்தாலும் கூட எப்படியாவது வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்ய வைக்க வேண்டும் என்ற முயற்சியிலே இவர்கள் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். தினமலர் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியிட்டனர். செல்போன் ஆப் (Mobile App) வழியாக காய்கறிகள் வாங்கலாம், பூக்காரம்மாவுக்கு பணம் கொடுக்கலாம், எப்படி கொடுக்கலாம்? இனி எதிர்காலம் என்பது இதுதான் என்றாகிவிட்டது. அதனால் எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்பதைப் படம் போட்டு விளக்கம் தருகிறார்கள்.

இந்த மோடினுடைய 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பாராட்டுத் தெரிவித்து முழுபக்க அளவிற்கு விளம்பரம் கொடுத்திருக்கிறது பேடிஎம்(Paytm). செல்போன் முலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கான கேட்வே(Gateway) நிறுவனம். இவர்களெல்லாம் விளம்பரம் கொடுத்துக் கொண்டாடுவது ஏன்? மக்களை வங்கிக் கணக்கு தொடங்கென பிடித்து நெட்டித் தள்ளுவது ஏன்? என்பதுதான் கேள்வி. பெரும்பான்மையான உழைக்கும் மக்களும் சரி, சிறு வணிகர்களும் சரி வங்கிப் பொருளாதாரத்திற்கு வெளியே இருக்கிறார்கள்; பணப் பொருளாதராத்தில் இருக்கின்றனர். அவர்களைக் கட்டாயமாக வங்கிப் பொருளாதாரத்திற்குள்  கொண்டு வருவதற்கு வேறு எந்த காரணத்தையும் இவர்களால் சொல்ல முடியவில்லை. திரும்பத் திரும்ப என்ன சொல்கின்றனர் என்றால் ரொக்க பரிவர்த்தனையற்ற பொருளாதாரத்தில்தான் ஊழல் ஒழியும் என்கிறார்கள். அது எப்படி ஒழியும்?

இதைப் பார்ப்பவர்கள், கேட்பவர்களிடம் எப்படி விளக்குகின்றனர் என்றால் எல்லாமே ஏ.டி.எம் கார்டை தேய்ப்பதாக வந்துவிட்டால் ஆர்.டி.ஓ ஆபிசில் எப்படி இலஞ்சம் வாங்குவார்கள்? அதைப் பற்றி இவர்கள் கவலைப்படத் தேவையேயில்லை. அதற்கும் அவர்கள் வழி கண்டுபிடிப்பார்கள். தேர்தல் கமிசன் கெடுபிடிகள் எல்லாம் தொடங்கிய போது பணம் அப்படி கொடுக்க முடியாது, இப்படி கொடுக்க முடியாது, பறக்கும் படை, அந்த படை, இந்த படையென்று சொன்னார்கள். அதையெல்லாம் தாண்டி டோக்கன் கொடுத்து பணம் எப்படி வினியோகிப்பது எப்படி என்பதை ஓட்டுக்கட்சிகள் கண்டுபிடித்ததை போல இலஞ்சம் வாங்குவதற்கும் கொடுப்பதற்குமான வழிகளை அவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

இலஞ்சம் எப்படி வாங்குவது என்பதை ஆர்.டிஓ ஆபிசில் பார்க்கக் கூடாது. வேறு எங்கே பார்க்க வேண்டும்? இலஞ்சம் வேண்டுமென்பது அதானியின் தேவை. அதானிக்கு நத்தம் விஸ்வநாதன் இருந்தால்தான் 5,000 கோடி திருட முடியும். அம்பானிக்கு மோடி இருந்தால் தான் பல்லாயிரம் கோடிக்கணக்கான இயற்கை வளங்களை சூறையாட முடியும். 4G மாதிரி அலைக்கற்றைகளை அடிமாட்டு விலைக்கு அபகரிக்க முடியும்.

இப்படியாக அந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இலஞ்சம் ஊழல் என்பது தேவை. முதலாளித்துவ சுரண்டல், முதலாளித்துவ அமைப்பு என்பது இலகுவாக இயங்குவதற்கு, அவர்களுக்கு இந்த அரசு இயந்திரம் வேலை செய்ய வேண்டுமானால், அந்த குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிட்டி புள்ளி விவரத்தில் சொன்னதுபோல 3% தான் அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தினரின் பணம். 64% என்பது கார்ப்பரேட் முதலாளிகளுடைய பணம். இந்த 64% கருப்புப் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், வளர வேண்டும் என்று சொன்னால் அந்த 3% இலஞ்ச ஊழல் பணம் நிரந்தரமாக கிடைக்கும்படி இருக்க வேண்டும். அதை உத்திரவாதப்படுத்தும் பொறுப்பு டாடாவிற்கும், பிர்லாவிற்கும், அம்பானிக்கும், அதானி, மிட்டல் போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு இருக்கிறது. இங்கே கார்டு தேய்ப்பது வந்தால் அங்கே ஊழல் ஒழிந்து விடும் என்று சிந்திப்பதைப் போல முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை.

எல்லா மக்களையும் வங்கிக் கணக்கிற்குள் கொண்டு வருவதற்க்கான நோக்கம் என்ன? பெரும்பான்மை மக்களை வரி கட்ட வைப்பது தான் என்னுடைய நோக்கம் என்று அருண் ஜேட்லி தெளிவாகச் சொல்கிறார். அப்படியென்றால் பெரும்பான்மை மக்கள் இப்போது வரி கட்டாமலா இருக்கின்றனர்? இன்கம்டாக்ஸ் கட்டாதவர் தான் வரி கட்டாதவரென்று பலர் நினைக்கலாம். ஆனால் மறைமுக வரிகளாக நாம் எண்ணற்ற வரிகளைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது வரிகளை எல்லாம் ஒருங்கிணைத்து கொண்டு வரப்பட்டிருக்கிற ஜி.எஸ்.டி(GST)-ல் அதிகபட்ச வரி 28% என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மேல் எஜூகேசன் செஸ், அந்த செஸ், இந்த செஸ்னு வாங்குவாங்க. இதல்லாமல் ஐ.டி. போன்ற நிறுவனங்கள், வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மறைமுக வரியாக இதை செலுத்துகின்ற அதே நேரத்தில் நேர்முக வரியாக வருமான வரியும் செலுத்துவார்கள்.

அப்படி அவர்கள் செலுத்தும் வரி என்பது கணிசமாகப் பார்த்தால் 30-40% இருக்கும். ஆனால் முதலாளிகள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள்? முதலாளிகள் செலுத்துகின்ற அதிகபட்ச நேர்முக வரி என்பது 30% . உலகத்திலேயே மிகக் குறைவான நேர்முக வரி விதிப்பு உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா.

தனியார்மய, தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட தொடங்கிய 1994-1995 காலம் முதல் இன்று வரை யாருக்கு வரி குறைக்கப்பட்டிருக்கிறது, யாருக்கு வரி கூட்டப்பட்டிருக்கிறது என்பதை பரிசீலித்துப் பாருங்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு வரிப் படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு உதாரணம் சொல்கிறேன். சேவை வரி என்பது ஒரு வரி. இப்போது நாம் செல்பேசியிலிருந்து ரீசார்ஜ் செய்கின்றோம், டாப் அப் செய்கின்றோம். அதற்கு அந்த சேவையை வழங்குவதற்காக அவனுக்கு காசு கொடுக்கின்றோம். விவரமாகப் பார்த்தால், அரசாங்கத்திற்கு அவன் வழங்குகின்ற சேவைக்குப் பணம் கொடுத்து தான் நாம் வாங்குகிறோம். சேவை வரி என்ற வரியை நாம் யாருக்கு கொடுக்கிறோம்? எதற்காகக் கொடுக்கிறோம்? ஏன் அவ்வளவு தொகையை அங்கே வாங்குகிறார்கள்? ஓட்டல் பில் முதல் எல்லா துறைகளுக்கும் சேவை வரி வந்து விட்டது. அது ஒரு உதாரணம்.

ஆனால் இதே காலக்கட்டத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் சூப்பர் டாக்ஸ் என்று இருந்த காலகட்டம் எல்லாம் உண்டு. மிகப்பெரிய பணக்காரர்களின் வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் போனால், 80-90%  வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலையெல்லாம் இருந்தது.

ஆனால் அந்த வரிவிதிப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு 30% சதவீதத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். வரியைக் குறைப்பதற்கு சொல்லப்பட்ட இரண்டு காரணங்களை நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும். வருமான வரியை அல்லது நேர்முக வரியை, மூலதனத்தின் மீதான வரியை முதலாளிகளின் மீதான வரியை குறைத்தால் தான் அந்நிய முதலீட்டாளர்கள் அல்லது முதலாளிகள் முதலீடு போடுவார்கள். தொழில் தொடங்குவார்கள். அதனால் வரி போடக் கூடாது என்பது ஒரு வாதம்.

இரண்டாவது என்ன? அரசாங்கம் அதிகமாக 60,70.80% என்று வரி விதிப்பதால் தான் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அதனால் நீங்கள் வரியைக் குறைவாக வைத்தீர்கள் என்றால் முதலாளிகள் நேர்மையாக வரியைக் கட்டி விடுவார்கள். நீங்கள் நேர்மையற்ற முறையில் அடாவடியாக அதிகமாக வரியை விதித்ததால்தான் இந்த வரி ஏய்ப்பு என்ற சிந்தனையே முதலாளிகளுக்கு வருகிறது என்ற வாதம் முன் வைக்கப்பட்டது.

ஆனால், தனியார்மய தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் சாய்நாத் போன்ற எழுத்தாளர்கள் பலரது ஆய்வின் படி சராசரியாக ஆண்டிற்கு 5 இலட்சம் கோடி அளவிற்கு கார்ப்பரேட்  முதலாளிகளுக்கு வரி விலக்கு அளிக்கபட்டிருக்கிறது. ஆண்டுதோறும் வரி குறைக்கப்பட்டிருகிறது.

இதனால் தான் 90% ல் இருந்து 30% க்கு வந்து விட்டது வருமான வரி. அப்படி குறைத்த பிறகு கருப்புப் பணம் குறைந்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் கருப்புப் பணம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது என்பது தான் ஆய்வுகள் கூறுகின்ற தகவல்.

இப்படி 90% ல் இருந்து 30% வரிக் குறைக்கப்பட்டிருப்பதை நாம் எப்படிப் பார்ப்பது? 90% வரி முடியாது. சரி 80% ஆக குறைக்கிறோம்,அப்புறம் 60% ,50%, 40% ஆக குறைக்கிறோம். அப்படியும் கட்ட முடியாது என்று சொல்லச் சொல்ல அவர்களிடம் இருக்கும் கருப்புப் பணத்தை வெள்ளை என்று ஒத்துக் கொள்கிறோம்; மிச்சத்துக்காகவாவது கட்டுங்க என்று கருப்புப் பணத்தை வெள்ளை என்று அங்கீகரிக்கிறது இந்த அரசாங்கம்.

அவை வெறுமனே வரி குறைப்பு மட்டுமல்ல. சில வரிகளை மூலதன ஆதாய வரி, வெல்த் டாக்ஸ் போன்றவை முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கின்றன. ஆக முதலாளிகள் , நான் வரி கட்ட முடியாது கருப்புப் பணம் தான் வைத்துக்கொள்வேன் என்று சொல்லும் போது  அரசாங்கம் மண்டியிட்டு அவர்கள் முன் தாள் பணிந்து நீங்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தை இவ்வளவு ரூபாய் வரைக்கும் நாங்கள் வெள்ளை என்று ஒத்துக் கொள்கிறோம் என்று இறங்கி வருகிறது; அப்படி இறங்கி வந்து வந்து இனி வரியே கட்ட வேண்டாம், வரி என்று ஒன்றும் உங்களுக்கு கிடையாதுப்பா என்று சொன்னாலும் இந்த முதலாளிகள் திருப்தி அடையப் போவதில்லை.

சென்னையில் இருந்த நோக்கியா நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எண்ணற்ற சலுகைகள் வழங்கப்பட்டது அந்நிறுவனத்திற்கு. அவர்கள் போட்ட மூலதனத்திற்கு மேல் பலமடங்கு இலாபம் அடைந்து விட்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு 22,000 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என்று கேட்ட போது, முடியாது என்று சொல்லி கம்பெனியையே மூடிவிட்டுப் போய்விட்டனர்.

இதுதான் வரி செலுத்துவதன்பால் முதலாளிவர்க்கம், பன்னாட்டு முதலாளிகள் கொண்டிருக்கின்ற அணுகுமுறை. இப்போது வரி கட்டுவது ஏன் என்று மக்களைக் கேட்டால் என்ன பதில் சொல்கின்றனர்? வரி இருந்தால் தானே அரசாங்கம் இயங்க முடியும். அப்போது தான் ரோடு போடுவார்கள். தண்ணீர் கொடுப்பார்கள். பள்ளிக்கூடம் இருக்கும். ஆஸ்பத்திரி இருக்கும். வேண்டிய வசதிகள், அடிப்படைத் தேவைகளை மக்களுக்குச் செய்து கொடுப்பார்கள் என்பதே மக்களுடைய புரிதல். ஆனால் அதெல்லாம் நமக்கு இப்போது செய்து கொடுக்கப்படுகிறதா என்றால் இல்லை. முன்பு பெயரளவிற்கு இருந்தது. இப்போது அதுவும் இல்லை.

அது ஒருபக்கம் இருக்கட்டும். முதலாளி எதற்கு வரி கட்டுகிறான் என்றால் அவன் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும். சாலை, மின்சாரம், வங்கிக் கடன் போன்ற வசதிகளை எல்லாம் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். இதைச் செய்து கொடுத்தால் மட்டும் போதாது. அந்த முதலாளியினுடைய தொழிலை, சொத்தைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளர்களுடைய தொழிற்சங்கம் போராட்டம், கோரிக்கை என்று சொன்னால் அங்கே போய் முதலாளியின் சொத்திற்கு நாயைப் போல காவலுக்கு நிற்க வேண்டும். இது தான் அரசாங்கத்திற்கு முதலாளிகள் வரி கட்டுவதற்க்கான காரணம்.

கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், முதலாளிகளுக்கு அரசாங்கத்தால் ஏற்கனவே செய்து வந்த சேவையைக் காட்டிலும் மேலதிகமான சேவைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அவர்களுக்கு சலுகை விலையில இலவசமாக நிலம் தருவது, மின்சாரத்தை குறிப்பிட்ட காலம் வரைக்கும் இலவசமாக தருவது, குறைந்த விலையில் தருவது, தண்ணீரை இலவசமாக தருவது, இலவசமாக சாலை போட்டுக் கொடுப்பது, வங்கிக்கடனை குறைந்த வட்டிக்கு ஏற்பாடு செய்து தருவது, அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பதற்கு ஏற்பாடு செய்து தருவது என்று ஒரு வேலை பாக்கி இல்லாமல் தோளில் சுமந்து தூக்கித் திரிகிறது இந்த அரசாங்கம். கடந்த 20 ஆண்டுகளாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

அதே நேரம் நமக்கு என்ன நடக்கிறது என்று சொன்னால், இதற்கு முன்பு இருந்தது போல அரசுப் பள்ளிகள் இப்போது கிடையாது, அரசு மருத்துமனைகள் இப்போது கிடையாது எல்லாமே தனியார் மருத்துவமனைகள். ஒரு சாலை கிடையாது. எல்லாமே டோல்கேட் தான். இப்படி தண்ணீர் உள்ளிட்ட எல்லாச் சேவைகளுமே காசிருந்தால் மட்டுமே என்று ஆக்கப்பட்டுவிட்டது.

அரசாங்கம் நம்மிடம் வரி வாங்கிக் கொண்டு செய்கின்ற சேவை என்று ஒன்றில்லை. என்ன மிச்சம் இருக்கிறது என்று சொன்னால்; இந்த கோரிக்கைகளுக்காகப் போராடினால் போலீசு வந்து நிற்கும்; ஆர்.டி.ஓ வந்து நிற்பாரு. போலீசையும் தாண்டிப் போனால் வேறு எதாவது துணை இராணுவப் படைகளோ, இராணுவமோ வந்து நிற்கும். இப்படி இந்தப் படைகள், மக்களை ஒடுக்குகின்ற படைகள், மக்களை ஒடுக்குகின்ற அதிகார நிறுவனங்கள், அவர்களுக்கு ஊதியம் தருவதற்கும், அவர்களைப் பாதுகாக்க, என்பதற்கு மட்டும்தான் நம்முடைய வரிப்பணம் பயன்படுத்தப்படுகிறதே தவிர, மக்களுக்கான சேவைக்கு நம்முடைய வரிப்பணம் பயன்படுத்தப்படுவதில்லை.

நம்மை ஒடுக்குகின்ற  இந்த சேவை என்பது யாருக்கு ஆற்றப்படும் சேவை? இது முதலாளிகளுக்கு ஆற்றப்படும் சேவை. சிங்கூரில் போராட்டம் நடந்தால் போலீசு அங்கே அணிவகுத்து நிற்கிறது. அது யாருக்கு செய்கிற சேவை? டாடாவிற்கு செய்யும் சேவை. எஸ்.ஆர்.எம்(S.R.M), பிரபல கருப்புப் பண அதிபர். இன்றைக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொளந்து கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மோடி பின்னால் உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். மோடிக்கு முன்பாக அந்தத் தொலைகாட்சி நிகழ்ச்சியின் நெறியாளர் மோடி பேசியதையே பேசிக் கொண்டு இருக்கிறார். அப்புறம் மற்ற பங்கேற்பாளர்கள் எல்லாம் இருக்கின்றனர். கருப்புப் பணத்த ஒழிப்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்கின்றனர். இப்படி ஒருக் கேலிக்கூத்து வேறு எங்காவது நடக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன்னால் தான் அந்த தொலைக்காட்சியின் அதிபர் உள்ளே சென்று வந்தார். துண்டு சீட்டுல ரூ.50 இலட்சமும், ஒரு கோடியும் வாங்கிக் கொண்டு மெடிக்கல் சீட்ட விற்பனை செய்த அயோக்கியத்தனத்திற்காக அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அவரது கையாள் மதன் ஓடி விட்டார், அது எனக்குத் தெரியாது என்று கூறினார் அவர். கமிசனர் ஆபிசுக்குப் போய் மக்கள் புகார் கொடுத்தால் புகாரை எடுக்கமாட்டேன் என்கிறார்கள். புகார் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.

வேறுவழியின்றி பணத்தைப் பறிக் கொடுத்தவர்கள் எல்லோரும் பச்சமுத்துவின் வீட்டைத் தேடி வந்தால் அந்த வீடு இருக்கின்ற தெருவில் கூட நுழைய முடியாமல் போலீசு மறித்து நிற்கிறது. யாரைக் காப்பாற்ற? பலகோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய ஒரு கருப்புப் பண பேர்வழியைக் காப்பாற்ற!

பங்களா நாய்க்கு கறி வாங்கிப் போடுவதும் பிஸ்கட் வாங்கிப் போடுவதும் யாருடைய வேலை? அந்த நாய் யாருடைய சொத்தைப் பாதுகாக்கின்றதோ அந்த சொத்துக்குரிய முதலாளியுடைய வேலை அது. அப்படி இந்த அரசை, தன்னுடைய சொத்தை காவல் காக்கின்ற, தன்னுடைய சொத்தை பெருக்குவதற்கு கையாள் வேலை பார்க்கின்ற இந்த அரசு , அதற்கு கூலி கொடுக்க வேண்டியது, வரி கட்ட வேண்டியது இதனால் ஆதாயம் அடைகின்ற முதலாளி வர்க்கத்தின் பொறுப்பு.

ஆனால் இந்தப் பங்களா நாய்கள் யார் மீது ஏவி விடப்படுகிறதோ அந்த மக்கள் அல்லது அந்த முதலாளியிடம் அடிமைகளாக, தொழிலாளிகளாக வேலை பார்க்கின்ற மக்களாகிய நீங்கள் தான் அந்த நாயை சோறு போட்டு வளர்க்கணும். நம்மையே கடிக்கின்ற நாய்க்கு நாமே சோறு போட்டு வளர்க்கணும். அதாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு எதிராகத் தான் இருக்கும், முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த அரசாங்கத்திற்கான சம்பளத்தை எல்லாம் மக்கள் தங்களுடைய வரிப்பணத்தில் இருந்து மட்டும் தான் கொடுக்கணும். முதலாளிகள் 5 காசு ஈயமாட்டார்கள் என்பது தான் இப்போதைய கொள்கை.

வரி வலையை அகலமாக்குவோமே ஒழிய ஆழமாக்க முடியாது என்பதுதான் மோடி அரசின் கொள்கை. ஆழமாக்குவது என்றால் அதிக பணம் வைத்திருக்கின்ற பெரு முதலாளிகள் மீதான வரியை அதிகப்படுத்துவது. வரி வலையை அகலப்படுத்துவது என்றால் என்ன? பெரு முதலாளிகளை விட்டுவிட்டு, ஐந்து, பத்து சம்பாதிப்பவர்களைக் கூட கட்டாயப்படுத்தி அரசுக்கு வரி கட்ட வைப்பது. அதற்காகத்தான் நம்மை ரொக்க பொருளாராத்திலிருந்து வங்கி பொருளாதாரத்திற்கு வருமாறு மோடி அழைக்கிறார், அருண் ஜேட்லி அழைக்கிறார்.

இப்படி வங்கி பொருளாதாரத்திற்கு போவதால் வரும் நன்மை என்ன? ஏனென்றால் இப்போது பேசும் போதே எப்படி சொல்கிறார்கள் என்றால் ரொக்க பரிவர்த்தனை என்பதே சட்டவிரோதமானது, கிரிமினல் அயோக்கியத்தனம் போலவும் வங்கிப் பொருளாதாரம் என்பது சட்டப்பூர்வமானது, யோக்கியர்கள் செய்வது போலவும் பேசுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்பதை இதுவரை பார்த்தோம். வங்கி சார்ந்த பொருளாதாரத்தில்தான் பெருங் குற்றங்கள் நடக்கின்றன.

சிறு வணிகர்கள், அவர்களிடம் வாங்கும் சாதாரண மக்கள் போன்றோர் வங்கிப் பொருளாதாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்டால் என்ன நடக்கும்? மக்கள் அனைவரின் விவரங்களும் அரசின் கைக்குள் செல்லும். அது மட்டுமல்ல, அரசிடம் ஆதார் அட்டை – உலகில் வேறு எங்குமே இல்லாத பயோ மெட்ரிக் கார்டு – இருக்கிறது. கை ரேகையையும், கருவிழி ரேகையையும் பதிவு செய்கின்ற அட்டை அது. இது மொத்த மக்களையும் குற்றவாளிகளாக ஆக்குகின்றன அட்டை. ஒரு கண்காணிப்பு அரசை உருவாக்குவதற்கு இதை ஒரு சோதனையாக இந்தியாவில் செய்கிறார்கள்.

இந்த அட்டை வரும்போது என்ன சொன்னார்கள். பல்வேறு தனித்தனி அட்டைகளை வைத்து சிரமப்படவேண்டாம், இந்த அட்டையை மட்டும் காட்டினால் போதும் வேலை முடிந்துவிடும் என்று சொன்னவுடன் மக்கள் அதை ஏற்றார்கள். இந்த அட்டை இருந்தால் நமக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பினார்கள். பிறகு என்ன நடந்தது?

ஆதார் அட்டை இருந்தால்தான் வங்கிக் கணக்கு துவங்க முடியும், காஸ் மானியம் கிடைக்கும், ரேசன் கார்டு கிடைக்கும், இனி ஆதார் அட்டை இருந்தால்தான் கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க முடியும் என்ற நிலை வரப்போகிறது. அப்படி ஆதார் அட்டை என்பது எல்லாவற்றுக்குமானதாக மாற்றப்பட்டுவிட்டது. இனி ஆதார் அட்டையும் வங்கிக் கணக்கும் இணைக்கப்படும். ஏற்கனவே சொன்ன தினமலர் விளம்பரம் போல, உங்கள் வங்கிக் கணக்கை செல்பேசிக்குள் கொண்டு வாருங்கள், செல்பேசி செயலி மூலம் உங்களது பரிவர்த்தனையை செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள்.

செல்பேசி யாரிடம் இருக்கிறது? 4 ஜி-யினுடைய ஆகப்பெரும்பான்மையான கட்டுப்பாடு அம்பானியின் கையில் இருக்கிறது. ஆக செல்பேசி, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு அனைத்தும் ஒரு வலைப்பின்னலில் கொண்டு வரப்படும். அரசாங்கமும் அம்பானியும் ஏற்கனவே ஒரு வலைப்பின்னலில்தான் இருக்கிறார்கள்.

ஆக மக்களுடைய நடவடிக்கைகள், நிதி நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிக்கப்படும், கட்டுப்படுத்தப்படும். வரி விதிப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.

– தொடரும்

ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.

பிற பாகங்களுக்கு :

ஜெய் அதானி ! ஜெய் அம்பானி ! ஜெய் டாடா ! ஜெய் ஸ்ரீராம் ! கேலிச்சித்திரம்

0
கருப்பு_மோடி வித்தை Slider

ஜெய் அதானி ! ஜெய் அம்பானி !! ஜெய் டாடா !!! ஜெய் ஸ்ரீ ராம் !!!!

கருப்பு_மோடி வித்தை

கருப்பை வெள்ளையாக்கும் மோடி வித்தை. வித்தைகள் தொடரும்…

படம் : துரை

இணையுங்கள்:

மோடி ஆசியுடன் 500 கோடி கருப்பு பணத்தில் ரெட்டி திருமணம்

1
janardhan_redding wedding 2
பெல்லாரியில் உள்ள ரெட்டியின் வீடும் வீட்டிற்கு பின்புறம் உள்ள மலை ஒன்றையும் சேர்த்து அலங்காரம் செய்துள்ளார்கள்.

நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் அறிவிப்பிற்கு பின் மக்கள் நிம்மதியாக தூங்குவதாகவும், கருப்பு பண முதலைகளின் தூக்கம் தான் கெட்டுவிட்டதாகவும் மோடி சொன்னார். ஆனால் உழைக்குமக்கள் ( நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகள்) தினசரி செலவுகளுக்கே தவித்துக் கொண்டிருக்கிறது. தினசரி வேலை செய்தால் தான் சோறு என்ற நிலையில் இருக்கும் உழைக்கு மக்கள் வேலை கிடைக்குமா என்று பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி சொன்னபடி மக்கள் தூங்கவில்லை. கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதே போல மோடி சொன்னதற்கு மாறாக அவரது நண்பர்களான கருப்புப் பண முதலைகளும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஆதாரம் வேண்டுவோரை பெங்களூருவில் நடக்கும் ரெட்டி சகோதரர்களது குடும்ப திருமண உலகிற்கு அழைத்துச் செல்கிறோம்.

janardhana reddy wedding set

கர்நாடகம் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் பிரபலமானவர்கள் இந்த ரெட்டி சகோதரர்கள். சகோதர்களில் ஒருவரான ஜனார்தன் ரெட்டி பாரதிய ஜனதாவின் முன்னாள் அமைச்சர். இவரது மகளுக்கு நாளை (16-11-2016) திருமணம் நடக்கவிருக்கிறது. உண்மையில் அதை திருமணம் என்று சொல்வது நமக்கு வேறு வார்த்தைகள் இல்லை என்பதால்தான். இயக்குநர் ஷங்கரின் சினிமா நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்குமோ அதையும் தாண்டுகிறது ரெட்டியின் விழா.

சுருங்கச் சொன்னால் இந்த மெகா திருமணத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா? 500 கோடி ரூபாய். மோடி அரசின் கருப்பு பண நடவடிக்கையால் உழைத்து வாழும் பல குடும்பங்களில் திருமணங்கள் பிரச்சனைக்குள்ளாகியிருக்கின்றன. பல திருமணங்கள் நின்று போயிருக்கின்றன. செலவுக்கு புதிய பணமில்லாமல், பழைய பணத்தை மாற்ற முடியாமல் பல பெற்றோர் பித்துப்பிடித்த நிலையில் இருக்கின்றனர். ஆனால் ரெட்டி சகோதர்கள் மோடியின் நண்பர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான்கு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண நிகழ்விற்கு பழைய விஜயநகர அரசு போன்று 150 கோடி செலவில் செட் அமைத்திருக்கிறார்கள். விஜயநகர அரசின் தலைநகரையே மறுநிர்மாணம் செய்திருக்கிறார்கள். ஹம்பி நகரத்தின் முக்கியமான சின்னங்களை கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள்.  பாலிவுட்டின் தலை சிறந்த கலை இயக்குநர்கள் இதை வடிவமைத்துள்ளார்கள். விஜய நகர பேரரசு காலத்தல்தான் தென்னிந்தியாவில் பார்ப்பனியக் கொடுங்கோன்மை பல்வேறு நிலைகளில் உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த செட்டும், ரெட்டிகளும் நன்றாகவே பொருந்துகின்றனர்.

இந்த திருமணத்தின் அழைப்பிதழே சமூக வலைதளங்களில் அதிர்ச்சியுடன் பேசப்பட்டது. எல்.சி.டி திரை பொருத்தப்பட்ட அழைப்பிதழை திறந்தால் அதன் திரையில் ஜானர்தன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் தோன்றி திருமணத்திற்கு அழைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு அழைப்பிதழின் விலை சுமார் ரூ.20,000. கிட்டத்தட்ட ஒரு டி.வியையே அளித்திருக்கிறார்கள். அதில் ரெட்டி சகோதரர்களது மாளிகை, கோவில், மணமக்களது அறிமுக சீன் என்று கிட்டத்தட்ட ஒரு முழு சினிமாக்குரிய பட்ஜெட்டையே செலவழித்திருப்பது நிச்சயம்.

janardhan_redding wedding 2
பெல்லாரியில் உள்ள ரெட்டியின் வீடும் வீட்டிற்கு பின்புறம் உள்ள மலை ஒன்றையும் சேர்த்து அலங்காரம் செய்துள்ளார்கள்.

மணமகன் மற்று மணமகளுக்கு பங்களா செட்டுகள் மட்டும் 36 ஏக்கரில் போடப்பட்டது. உணவருந்துவதற்கு பெல்லாரி கிராமங்களை போன்ற செட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 12 முதல் 15 வரை இரவுகளில் பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்களின் நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நட்சத்திரங்கள்தான் மோடியின் கருப்பு பண நடவடிக்கைகளை மனதார பாராட்டினர். என்ன இருந்தாலும் பாம்பின் கால் பாம்புதான் அறியுமில்லையா?

முக்கிய விருந்தினர்களை அழைத்துச் செல்ல வடிவமைக்கப்பட்டுள்ள மாட்டு வண்டிகள் போன்ற சொகுசு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரூவின் முதல்தர ஐந்து நட்சத்திர ஒட்டல்களில் மட்டும் 1500 அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. திருமண மைதானத்தில் 15 ஹெலிபேடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க 1000 மேலாளர்கள், 2500 மேற்பார்வையாளார்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்திருமணத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பு செய்கிறார்கள். இதற்கென மீடியா சென்டரை திருமண மைதானத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்நிகழ்வுகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க-வின் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீராமுலு நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீராமுலு சுமார் 50,000 பேர் நிகழ்வுக்கு வருவார்கள் என தெரிவித்தார். நாட்டு மக்கள் பணமில்லாமல் அதற்கு தீர்வும் தெரியாமல் அலையும் போது பா.ஜ.கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய தேசபக்தி வேலைகளை செய்து தமது பெயரை நிலைநாட்டுகிறார்கள்.

janardhan reddy wedding 6திருமண நிகழ்வை பதிவு செய்ய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு குளிர்சாதன பேருந்துகளும், நட்சத்திர ஓட்டல்களில்  தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் நமது கவர் ஜனர்லிஸ்டுகளுக்கு இங்கே ஒரு சுரங்கமே கிடைக்கும் என்பது நிச்சயம்.

12-11-2016 அன்று மெகந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென தனிச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிருஷ்ண தேவராயரின் அரண்மனை போன்ற செட்டில் நிகழ்வு நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும் பா.ஜ.க எம்.பி ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜனார்தன் ரெட்டியின் சகோதரர் சோமசேகர் ரெட்டி, பா.ஜ.க-வின் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நிகழ்வுக்கு வருவதாக உறுதியளித்துள்ளார், தேவகவுடா திருமணத்திற்கு முந்தைய நாள் வருவார் என்று தெரிவித்துள்ளார். மணமகளின் பெயர் அதாவது ரெட்டியின் மகளது பெயர் என்ன தெரியுமா? பிராமணி!

தற்போது பா.ஜ.க தலைமை தனது கட்சிக்காரகளை  இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ரகசியமாக ஆலோசனை கூறியிருக்கிறது. ஏற்கனவே இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள எல்லா கெட்டவார்த்தைகளாலும் மோடி காறி உமிழப்பட்டு கொண்டிருக்கும் போது ரெட்டியின் மீதான தங்கள் பாசத்தை வெளிப்படையாக காட்டினால் மக்கள் கோபம் அதிகாமாகும் என்பதால் இந்த ஏற்பாடு. ஆனால் இதையும் தாண்டி பலர் செல்வது உறுதி என்பதை மேனேஜர் மற்றும் எம்.பியான ஸ்ரீராமுலு மூலமே அறியலாம். என்ன காவிக் கட்சியினர் முக்காடு போட்டு வரவேண்டியிருக்கும்.

ரெட்டி சகோதர்கள் யார் என்று தெரியாதவர்களுக்காக சில குறிப்புகள்

“தேசிய’அரசியலை ஆட்டிப் படைப்பதில்  அம்பானி சகோதரர்கள் கில்லாடிகள் என்றால், கர்நாடகா அரசியலுக்கு ரெட்டி சகோதரர்கள் அல்லது பெல்லாரி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரைக் குறிப்பிடலாம். 1999-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுஷ்மா சுவராஜ் பெல்லாரி நாடாளுமன்றத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபொழுது, அவரது தேர்தல் வேலைகள், “தேவைகள்’அனைத்தையும் ரெட்டி சகோதரர்கள்தான் கவனித்துக் கொண்டனர்.

அன்று தொடங்கி அரசியலில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் அவர்கள் இந்தியாவின் “ஜி.டி.பி.’க்கு இணையாக வளரத் தொடங்கினர்.  தனி ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ஆடம்பரக் கார்கள் என இவர்களின் பகட்டு வாழ்க்கையைப் பார்த்து விக்கித்துப் போன மக்கள், “இவர்களின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய் இருக்கலாம்’ என இரகசியமாகப் பேசிக் கொண்டபொழுது, “எங்களின் சொத்து மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தேறும்” எனச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்துத் தங்களின் பணத் திமிரை வெளிக்காட்டிக் கொண்டனர். சரி இப்போது இவர்களது குடும்பத் திருமணத்திற்கே 500 கோடி செலவழிக்கிறார்கள் என்றால் சொத்து எப்படியும் ஒரு 50,000 கோடிகளைத் தாண்டலாம்.

Reddy brothers” பா.ஜ.க. கடந்த பத்தே ஆண்டுகளுக்குள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு “வளர்ந்துள்ளதற்கு’ ரெட்டி சகோதரர்களின் பண பலமும் ஒரு காரணம் என்பதை மூத்த பா.ஜ.க. தலைவர்களால்கூட மறுக்க முடியவில்லை. குறிப்பாக, கடந்த 2008- ஆம் ஆண்டு நடந்த அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விற்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் கிட்டவில்லை.  எனவே, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மற்றும் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரத்தை, “தாமரை நடவடிக்கை’ என்ற பெயரில் நடத்தியது, பா.ஜ.க.  இந்தக் குதிரை பேரத்திற்குத் தலைமேயேற்றதோடு, அதற்காகப் பல கோடி ரூபாய்களை வாரியிறைத்தார்கள், ரெட்டி சகோதரர்கள்.

இதற்கு நன்றிக் கடனாக கருணாகர ரெட்டிக்கு வருவாய்த் துறையும், ஜனார்த்தன ரெட்டிக்கு சுற்றுலாத் துறையும், ரெட்டி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தரகனான சிறீராமுலுவிற்கு சுகாதாரத் துறையும் சன்மானமாக அளிக்கப்பட்டன.”

முதலாளிகளின் கருப்புப் பணத்தை காப்பாற்றவே மோடி இந்த செல்லாத நோட்டு நாடகத்தை நடத்துகிறார் என்பதற்கு ரெட்டி சகோதர்களே சாட்சி! அவர்களது திருமணமே காட்சி! மோடி நேரடியாக வர இயலாமல் போனாலும் வீட்டில் எல்.சி.டி திரையில் நேரலையில் பார்த்து வாழ்த்து தெரிவிப்பார்.

நாம் காறித்துப்புவதோடு இக்கூட்டத்தை துரத்துவதற்கான வேலைகளை பார்ப்போம்.

– அமலன்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

janardhan reddy wedding family

janardhan wedding 3

janardhan reddy daughter wedding

brahmani-reddy

brahmani

எல்.சி.டி – திரையில் தோன்றி வரவேற்க்கும் ஜனார்தன் ரெட்டி குடும்பத்தினர்  வீடியோ :

 

மேலும் தகவலுக்கு :

நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !

0
natham slider

மோடியின் நோக்கம் கருப்புப் பண ஒழிப்பு  அல்ல – தோழர் மருதையன் உரை – பாகம் 2

ந்த பார்ட்டிசிபேட்டரி நோட்டு என்பதெல்லாம், ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் பணம் போடுவதற்கான வழி என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. மோடி வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக நிறைய பேசுகிறார். அந்நிய முதலீடுகள் என்று இந்தியாவுக்கு வருகின்ற முதலீடுகளின் கணக்கீட்டின்படி, அதிகபட்சமாக இந்தியாவில் முதலீடு செய்திருப்பது அமெரிக்காவோ, பிரான்ஸோ, ஜெர்மனியோ பிரிட்டனோ அல்ல, இந்துமாக்கடலில் அமைந்துள்ள மொரீசியஸ் என்ற குட்டித்தீவு. மிஞ்சிப்போனால் 12 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட நாடு இது. அந்த மொரீசியஸ் தீவு சுமார் 40%-க்கும் மேலான அந்நிய முதலீட்டை இந்தியாவில் போட்டுள்ளது. இதுபோன்று கேமன் தீவுகள் உள்ளிட்ட பல தீவுகள் உள்ளன.

private_bahamas_island_large_1இந்தத் தீவு நாடுகள் இவ்வளவு பணத்தை முதலீடு செய்ய எப்படி முடிகிறது?  யாருடைய பணம் அது? அந்தப் பணமெல்லாம் இந்தியத் தரகு முதலாளிகளின் கருப்புப் பணம். இங்கிருந்து பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தி பலப்பல நாடுகளைச் சுற்றி, மொரீசியஸ் சென்று இறுதியில் அந்நிய முதலீடாக இந்தியாவிற்குள் திரும்பி வருகிறது. இப்படி இந்தியா முழுவதும் நிறைந்திருக்கக் கூடிய கருப்புப் பணமானது ஜீவாத்மா என்றால், உலக நாடுகளில் உள்ள கருப்புப் பணம் பரமாத்மா போன்றது. பாஜக-வினருக்கு அவர்கள் மொழியில் புரியும்படியாகச் சொல்வதாக இருந்தால் ஜீவாத்மா, பரமாத்மாவில் கலக்கிறது. தேசிய சாக்கடை சர்வதேசிய சாக்கடையில் கலக்கிறது. அதற்குப்பிறகு மொரீசியஸ் வழியாக இந்தியாவிற்குள் அது நுழையும் போது புனித கங்கையாகிறது. அதாவது அந்நிய முதலீடாகிறது.

இதில் மோடி மூழ்கி எழுந்து, விழுந்து கும்பிடுவார். எந்தக் கருப்புப் பணத்தை ஒழிப்பதாகப் பேசுகிறார்களோ, அந்தக் கருப்புப் பணம் வெளி நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து அந்நிய மூலதனம் என்ற பெயரில் இங்கே நுழைகிறது. அந்தக் கருப்புப் பணத்துக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

“இந்தக் கருப்புப் பணத்தை எப்படி வெளியே எடுத்துச் செல்கின்றனர்? டாடா, அம்பானி போன்ற பெரிய கைகளை விட்டுவிடுவோம். நத்தம் விசுவநாதனை எடுத்துக்கொள்வோம். நத்தம் யார்? அதிமுக-வில் அமைச்சராவதற்கு முன் ஒயின் ஷாப் வைத்திருந்தார். பிறகு படிப்படியாக முன்னேறி அமைச்சராகினார். சமீபத்தில் அம்மா நடத்திய ரெய்டின் விளைவாக வெளிவந்த உண்மைகள் என்ன? அவருக்குத் துபாயில் சொத்து இருக்கிறது; ஒரு தீவையே விலைக்கு வாங்கிவிட்டார். இந்தோனேசியாவில் நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது என்றெல்லாம் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. அவர் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும்போது தான், அதானி குழுமம் சூரிய ஒளி மின்சாரத்தை, அளவுக்கதிகமான விலையில் தமிழத்தின் தலையில் கட்டியது. இதற்காக எவ்வளவு தொகை இலஞ்சமாக தரப்பட்டிருக்கும் என்று தெரியாது. அந்த இலஞ்சப் பணத்தையெல்லாம் ஒரு மஞ்சள் பையில் போட்டு சுருட்டி எடுத்துக் கொண்டு விமானத்தில் பயணித்து துபாயில் போட்டு விட்டு வந்தாரா நத்தம் விசுவநாதன்? அப்படி எதுவும் நடப்பதில்லை.”

அந்த நாடுகளில் அங்கேயிருக்கும் நபர் மூலமாக சொத்து வாங்கப்பட்டுவிடும் அல்லது அந்த வங்கிக்கணக்கிலே பணம் செலுத்தப்பட்டுவிடும். அப்படி ஒரு சர்வதேச வலைப்பின்னல் இந்த முதலாளிகளிடையே இருக்கின்றது. நாளை நத்தம் விசுவநாதன் ஒரு ஊழல் அமைச்சராக அல்ல ஒரு அந்நிய முதலீட்டாளராக இந்தியாவுக்குள் வருவார். இவருடைய பணம் அந்நிய முதலீடாக இங்கே வரும். ஊழல் என்பது இப்படித்தான் நடக்கிறது.

நத்தத்தை விடுங்கள், சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி கேமன் தீவுகளுக்குச் சென்று வருவாராம். கேமன் தீவு என்பது வரியில்லா சொர்க்கம். இதன் மக்கள் தொகையே ஒன்றரை இலட்சம் பேர்தான். அந்தத் தீவுகளுக்கு இவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கப் போவது போல சென்று வருகிறார். இது இந்த அரசாங்கத்துக்குத் தெரியாதா?

உதாரணமாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறை கண்டுபிடித்த ஒரு வழக்கைச் சொல்கிறேன். 2010-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட பல்வேறு மாநிலங்கள் அனல் மின்சாரத்துக்காக நிலக்கரியைக் கொள்முதல் செய்ததில் ரூ.29,000 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்பது புலனாய்வுத் துறையின் முடிவு. இந்தோனேசிய சுரங்கத்திலிருந்து நம் நாடு நேரடியாக நிலக்கரி வாங்கியிருந்தால் ஒரு டன் நிலக்கரியின் விலை 50 டாலர்; மாறாக அந்த நிலக்கரியை வாங்கும் பொறுப்பு தனியார் தரகு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிலக்கரி இந்தோனேசியாவில் தான் இருக்கின்றது; ஆனால் அது ஏழு, எட்டு நபர்களிடம் கைமாறுகிறது. துபாயில் இருக்கும் கம்பெனி ஒன்று காகிதத்தின் மூலம் அதை சிங்கப்பூருக்குக் கைமாற்றுகிறது. சிங்கப்பூரில் இருந்து வேறொரு நாட்டுக்கு அதே முறையில் கைமாறுகிறது. இப்படியாக ஒவ்வொரு கை மாறும் போதும் அந்த நிலக்கரியின் விலை $3, $5, $6 என அதிகரித்துக் கொண்டே போகிறது. இறுதியாக பல்வேறு நாடுகளில் காகிதங்கள் வழியாக நடத்தப்பட்ட வர்த்தகத்தில் ஒரு சுற்று சுற்றி வரும் போது இதே நிலக்கரி டன் ஒன்றுக்கு $87 டாலராக உயர்ந்து விடுகிறது. அதாவது, $37 டாலர்கள் அதிகரிப்பு.

இந்த ஊழலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, ஒடிஷா போன்ற மாநிலங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மின்சார வாரியம் மட்டும் இந்த மோசடியான விலை உயர்வால், இழந்திருக்கும் தொகை ரூ.1500 கோடி. இந்த ஊழலில் மாநில அரசுகள், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அதானி, அம்பானி, ரூயா, ஜிண்டால், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அதானி குஜராத்திலுள்ள ஒரு மின் நிலையத்திற்கு எந்திரங்களை இறக்குமதி செய்த வகையில், எந்திரங்களின் விலையைக் கூட்டிக் காண்பித்து ரூ.6000 கோடி ஊழல் செய்திருக்கிறார் என்று கண்டுபிடித்திருக்கிறது வருவாய் புலனாய்வுத்துறை. அந்த அதானியின் விமானத்தில் ஏறித்தான் இந்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார் மோடி. இந்த அதானியின் காசில் தான் மோடி பிரதமரானார். அதானிக்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்கித் தருவதற்காகவே மோடி கணக்குப்பிள்ளை போல அதானியின் கூடவே சென்றார். அந்த மோடி கருப்புப் பணத்தை ஒழிக்கப்போவதாக நம்மை நம்பச் சொல்கிறார்.

இப்போது வருவாய் புலனாய்வுத் துறை “ஏன் நிலக்கரியை $87-க்கு வாங்கினீர்கள்? ஏன் இத்தனை கைகள் மாறின?” என்று கேட்டால், “இதெல்லாம் வழக்கமான வணிக நடவடிக்கை” என்று பதில் வரும். சட்டப்படி இது குற்ற சாட்ட முடியாதது. ஆனால் இந்த வழக்கில் என்ன நடந்ததென்றால், இவர்கள் கைமாற்றிவிட்ட கம்பெனிகள் அனைத்தும் லெட்டர்பேட் கம்பெனிகள். இப்படி பொய்யான கம்பெனிகளின் பேரில் $37 டாலர் வரை செயற்கையாக உயர்த்தப்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்ட முடிந்தாலும், குற்றவாளிகளுக்குச் சேர்ந்திருக்கக்கூடிய பணத்தை புலனாய்வுத் துறைகளால் கைப்பற்ற முடியுமா? அல்லது முடக்க முடியுமா? முடியாது, அதற்கான அதிகாரம் இந்த அரசுக்கு இல்லை. இது போன்று முதலீடு செய்யப்பட்ட ரூ.29,000 கோடிப் பணம் இந்தியாவிற்குள் அந்நிய மூலதனம் என்ற பெயரில் வரும். அது வெள்ளைப் பணமாக வரும். கருப்பை வெள்ளையாக மாற்றுகின்ற இந்த நடவடிக்கைக்கு அரசாங்கமே உடந்தையாக இருக்கும்போது, கருப்புப் பணத்தைப் பிடிக்கிற கேள்வி எங்கிருந்து வந்தது?

இந்த ரூ.29,000 கோடி தொகை என்பது அதிகாரிகளும், அமைச்சர்களும் மட்டுமே அடித்த கொள்ளை அல்ல. நத்தத்துக்கோ அல்லது தொடர்புடைய அதிகாரிகளுக்கோ எலும்புத்துண்டு போல ஒரு சிறு தொகைதான் கிடைத்திருக்கும். ஆனால் கறியைப் போல பெரும் தொகையை விழுங்குவது இந்தத் தரகுமுதலாளிகள்.

இங்காவது நிலக்கரியை வாங்கினார்கள்; அதில் ஊழல் நடந்தது. ஆனால் எதுவுமே வாங்காமலேயே வெறும் காகிதத்தைக் காட்டியே நடைபெற்ற பல நூறு கோடி ரூபாய் ஊழல்கள் உள்ளன. இந்தக் கருப்புப் பணத்தைப் போட்டு வைப்பதற்காகவே வங்கிகள் பஹாமா தீவிலும் உள்ளது. இதன் மொத்த மக்கள் தொகையே மூன்றரை இலட்சம் தான். 2008-ம் ஆண்டில் இந்த பஹாமா தீவுக்கு இந்தியாவில் இருந்து செய்யப்பட்ட ஏற்றுமதியின் மதிப்பு $22 இலட்சம் டாலர் (சுமார் 15 கோடி ரூபாய்) ; இரு ஆண்டுகள் கழித்து இந்த நாட்டிற்கான ஏற்றுமதியின் மதிப்பு $280 கோடி டாலராகியது (19,000 கோடி ரூபாய்); அப்படி என்ன ஏற்றுமதி நடந்தது? இரண்டு இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. ஒன்று ரிலையன்ஸ் மற்றொன்று எஸ்ஸார். இவர்கள் இருவரும் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்ததாகக் கணக்கு காட்டியிருக்கிறார்கள். பஹாமாவிலுள்ள மூன்றரை இலட்சம் பேரும் 24 மணி நேரமும் வண்டிகளில் சுற்றித்திரிந்து பெட்ரோலிலேயே குளித்து, பெட்ரோலையே குடித்தாலும் கூட அவ்வளவு பெட்ரோலை அங்கே செலவிட முடியாது.

Reddy brothers
ரெட்டி சகோதரர்கள் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அபிமானப் பிள்ளைகள்

இது ஒரு நடைபெறாத வணிகம். இதில் அம்பானிகள் மட்டுமல்ல, பாஜக-வில் உள்ள ரெட்டி சகோதரர்களும் ஈடுபட்டுள்ளனர். ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தையே விழுங்கியவர்கள் இன்னும் கூடுதலாகச் சொன்னால், கர்நாடக எல்லையையே ஆந்திராவுக்குள் நகர்த்தி வைத்தவர்கள். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் அபிமானப் பிள்ளைகள்.

இந்த ரெட்டி சகோதரர்கள் கர்நாடகாவிலிருந்து உயர்தரமான இரும்புக் கனிமத்தை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். அங்கேயுள்ள துறைமுகங்களின் மூலம் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 5000 கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுங்கத்துறை மூலமாகத் தெரிவிக்கப்படும் கணக்கு வெறும் 1000 முறை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்று காட்டுகின்றது.  4000  கப்பல் எப்படி விட்டுப்போனது? அதிலிருந்து கிடைத்த வருவாய் எங்கே? அது எங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது?  இது மோடிக்குத் தெரியாதா?

ஆகவே கருப்புப் பணம் என்பது, எங்கேயோ  பெட்டியில் வைத்திருப்பதை எடுத்துக் கொண்டு வருவதல்ல. கருப்பு நடவடிக்கைகளைக் கையாள்வது எப்படி என்பதைப் பற்றியது தான் இந்தப் பிரச்சினை. இப்படி கருப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துகின்ற எல்லா வழிமுறைகளையும் வகுத்திருக்கிறார்கள். இப்படி வகுத்த நிகழ்வுகள் மிக முக்கியமாக நடைபெற்றது பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் தான்.

“உலக வங்கியின் அறிக்கையின்படி 1998-2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் தான் அதாவது வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவிலேயே கருப்புப் பணம் மிக அதிகமான அளவிற்கு அதிகரித்திருக்கிறது. 2011-ல் 2G ஊழல் போன்ற பிரச்சினை எல்லாம் வர ஆரம்பித்த பிறகு அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிராக இரத யாத்திரை தொடங்கினார். 70 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாட்டில் இருக்கின்றது; அதைக் கைப்பற்றி இங்கே கொண்டு வரப் போகிறேன் என்று கூறினார்; அத்வானி அன்று இரும்பு மனிதராக தூக்கி நிறுத்தப்பட்டார். கருப்பு பணத்தை அப்படியே அடித்துத் தூக்கி கொண்டு வந்து விடுவார் என்ற மாதிரி ஒரு பிரமை உருவாக்கப்பட்டது. ஆனால் அவரை அடித்துத் தூக்கி விட்டார் மோடி.”

அன்னா ஹசாரேவை, 2G ஊழலை.. இது போன்ற விவகாரங்களை எல்லாம் முன் வைத்து கருப்புப் பணத்தை நாங்கள் கைப்பற்றி கொண்டு வரப் போகிறோம். ஆளுக்கு 15 இலட்சம் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கப் போகிறோம் என்று பிரச்சாரம் செய்தவர் மோடி. ஆனால் இதே யு.பி.ஏ (UPA)  ஆட்சிக் காலத்தில் கருப்புப் பணப் பிரச்சினையின் மிக முக்கியமான ஒரு சான்றாக இருந்தது வோடஃபோன் வரி ஏய்ப்பு வழக்கு. அந்த வரி ஏய்ப்பு வழக்கில், வரியை வசூலிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னால் இத்தகைய வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக பிரணாப் முகர்ஜி ஒரு சட்டம் கொண்டு வந்த போது ஜெனரல் ஆண்டி அவாய்டென்ஸ் ரூல்ஸ் (GAAR) என்ற சட்டம் கொண்டு வந்த போது , அதை எதிர்த்துப் பெரும் குரலை எழுப்பியவர் இன்றைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

அன்றைக்கு காங்கிரசு ஆட்சியில் இருந்தபோது சுவிஸ் வங்கியில் இருந்து பணத்தைக் கொண்டு வந்தீர்களா என்று இவர்கள் கூச்சல் எழுப்பினார்கள். அப்போது ”சுவிஸ் வங்கியினர் பெயரைக் கொடுக்க மாட்டேன் என்கின்றனர். நாம் என்ன இரானுவத்தையா அனுப்ப முடியும்” என்று பாஜக வை கேலி செய்தார். மறுபேச்சு பேசாமல் உட்கார்ந்தார்கள் இந்த பாஜக-காரர்கள். இன்றைக்கு அதே வழக்கில் பிரணாப் முகர்ஜி என்ன பதிலைச் சொன்னாரோ அதே பதிலைத் தான் உச்சநீதிமன்றத்தில் பாரதீய ஜனதா கட்சியும் சொல்லியது.

ரூ.70 இலட்சம் கோடியை பிரித்துத் தருகிறேன் என்று சொன்ன மோடி அதைப் பற்றி பேசுவதில்லை. இப்போது வந்து உள்நாட்டுப் பணத்தை எப்படியாவது கொண்டு வரணும் என்று பிளேட்டை திருப்பிப் போடுகிறார்கள். சரி, உள்நாட்டில் எங்கே இருக்கிறது கருப்புப் பணம் என்று உனக்குத் தெரியாதா? இதைக் கண்டுபிடிப்பதற்குப் பொறுப்பான துறைகள் என்ன?  இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்ட், என்ஃபோர்ஸ்மென்ட், ரெவின்யூ இன்டெலிஜென்ஸ், சி.பி.ஐ இதர எண்ணற்ற துறைகள் மற்றும் உன்னுடைய ஃபைனான்ஸ் மினிஸ்ட்ரி எல்லாம் இருக்கின்றது . அவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?  ஒன்று, இந்த கருப்புப் பண முதலைகளிடம், கார்ப்பரேட் முதலாளிகளிடம் விலை போய் விட்டார்கள். அல்லது நீங்களே கூடி வகுத்த சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று நீங்களே முடிவு செய்து விட்டீர்கள்.

நீங்கள் வரி வசூல் செய்வதற்காக நிர்வாகம் செய்வதற்காக வைத்திருக்கிற இந்த அரசமைப்பு என்பது கையாலாகாததாகி விட்டது. விலை போய் விட்டது. உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை,  எங்கே கருப்புப் பணம் என்று கண்டுபிடிக்க ரூ.500, ரூ. 1000 செல்லாது என்று சொல்லி நாட்டு மக்கள் அனைவரையும் துன்புறுத்துகிறாய்.

இந்த அறிவிப்பை அமல்படுத்துவதற்கு முன்பு முப்படைத் தளபதிகளை எல்லாம் பார்த்துப் பேசினாராம் மோடி.. எதற்கு? உள்நாட்டில் மக்கள் கலகம் வரும், மக்களைச் சமாளிப்பதற்காக. கருப்புப் பணம் வைத்திருக்கக் கூடிய முதலைகளுக்கு எதிராகத் தளபதிகளோ, இராணுவமோ ஏவப்படவில்லை, ரூ.500-ம் ரூ.1000-மும் செல்லாது என்று கூறிவிட்டால் மக்களுக்கு ஏற்படக் கூடிய நெருக்கடி, அவர்களுக்கு வரக்கூடியக் கோபத்திலிருந்து அரசாங்கத்தைத் தற்காத்துக் கொள்வதற்கு முப்படைத் தளபதிகளோடு ஆலோசனை நடக்கிறது.

இத்தனையும் செய்துவிட்டு  தொலைக்காட்சி விவாதங்களில் பி.ஜே.பி சார்பாகப் பேசக் கூடிய பேச்சாளர்கள் என்ன சொல்கின்றனர்? “இது கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கி ஒரு சின்ன நடவடிக்கை” இதென்று பணிவாகப் பேசுகிறார்கள். ஒழிப்பதெல்லாம் இன்றைக்கு முடிகின்ற காரியமில்லை என்று கடவுளைக் காண முடியாத மாதிரி அதைப் பேசுகிறார்கள்.

அப்படியெனால் எதற்காக நாட்டையே துன்பத்தில் ஆழ்த்துகின்ற இந்த நடவடிக்கை? இதற்கு முற்றிலும் வேறு நோக்கம் இருக்கிறதென்று சொல்கிறோம்.

-தொடரும்

ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.

பிற பாகங்களுக்கு :

மோடி : பினாமியே பினாமி சொத்துக்களை கைப்பற்றுமா ? கேலிச்சித்திரங்கள்

4

கருப்பு பண முதலைகளால் என் உயிருக்கு ஆபத்து. – மோடி

modi-cartoon-1-post

***

பினாமி சொத்துக்களை மீட்க நடவடிக்கை. – மோடி

modi-cartoon-2

திருவாளர் சங்கி மங்கி.

முதல் ரெண்டு நாள்ல கருப்பு பணத்தை ஒழிச்சிட்டாரு,
அடுத்த ரெண்டு நாள்ல பினாமி சொத்துக்களை ஒழிச்சுருவாரு,
அடுத்த நாள் காலையிலிருந்து ஊழல் இந்தியா க்ளீன் இந்தியாவாயிடும்

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

திருடனுக்கு பதுக்கத் தெரியாதா ? – இட்லிக் கடை அம்மா

0
kollllai

இட்லிக் கடை அம்மாவின் குமுறல் – சென்னை சைதாப்பேட்டை சலவைத் துறை

தினமலர் பத்திரிக்கையை மட்டும் படித்து மோடியை கருப்புப் பணம் ஒழிக்க வந்த கண்ணன் என்றும் நாட்டுக்காக இந்த கஷ்டத்தை பொறுத்துக் கொள்ளுங்கள், நாட்டின் பொருளாதாரம் முன்னேற ஒருசில தியாகங்களை செய்ய வேண்டும் என ஒரு பக்கம் மென்மையாக பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் ரெண்டு நாள் சாப்பிடாவிட்டால் செத்துப்போக மாட்டாங்க… என்று பேசும் அறிவாளிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் – குண்டர்களுக்கும் சாதாரண மக்களின் கஷ்டங்கள் ஒருபோதும் தெரியாது. அடிப்படை வசதிகளே இல்லாமல் தினசரி வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ள சென்னை சைதைப் பகுதியில் சாதரண இட்லிக்கடை வைத்திருக்கும் அம்மாவின் குரலைக் கேளுங்கள். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பைப் பற்றியும், அதன் பாதிப்பை பற்றியும் முகத்தில் அறைவது போல கேட்கிறார். பாருங்கள், பகிருங்கள்!

நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்.

வரிசையில் நிற்கும் மக்களை கேலி செய்யும் அறிஞர்கள் – கேலிச்சித்திரம்

3

ஏ.டி.எம் கள் முழுமையாக செயல்பட மூன்று வாரங்கள் ஆகும். – செய்தி

modi cartoon

” கபாலி டிக்கெட் வாங்கவும், ஜியோ சிம் வாங்கவும் வரிசையில் நிற்க முடியுது. ரூபாய் நோட்டுக்காக நிற்க முடியாதா ? மாற வேண்டியது அரசாங்கமல்ல மக்கள் தான் ”

…இப்படி டயலாக் பேசுன அறிவாளிகள் எல்லாம் அடுத்த மூனு வாரத்துக்கு எங்கே நிற்க்கப் போறீங்கன்னு பார்க்கலாம்.

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

மோடிய திட்டாதவங்க யாரு ? தமிழ் ஃபேஸ்புக்கின் விளாசல் – தொகுப்பு

16

Manitham Mattun

அம்பானியும் அதானியும்
ஆடிய ஆட்டத்தில் விழுந்த
ஓட்டைகளை
அப்பாவிகளின் உழைத்து தேய்ந்த எலும்புகளால் அடைப்பதற்கு பெயர் அரசாங்கமாம்
தூ..

_______________

Edgar Solomonraja

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனப்படுவது…
இப்போதைக்கு 2 வகைப்படும்….

  1. எதிரிகளை அழித்துவிட்டதாக நாடகமாடுவது!
  2. சொந்தகுடிகளை நாடகமாடி அழித்துவிடுவது!

#மோடி_அகராதி

____________________

Barathi Thambi

விளைவுகள்….

//கான்பூரில் பணம் இல்லாததால் மக்கள் ரேசன் கடைகளை சூறையாடி அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை பங்கிட்டு எடுத்துச்சென்றனர்!//

//உபியில், பணம் இல்லாததால் மக்கள் பேங்கை அடித்து நொறுக்கி பணத்தை பங்கிட்டு எடுத்துச்சென்றனர்//

//இன்று திட்டமிட்ட இரயில் பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க போதிய பணமில்லை. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என நேற்றே முயற்சித்தாலும் காத்திருப்போர் பட்டியல் 50க்கு மேல் இருந்தது. எனவே பயணச் சீட்டு எடுக்காமல் பயணிப்பது என முடிவெடுத்தேன்.

ரயிலில் பரிசோதகர் வந்தார். ஏ டி எம் களில் பணமில்லை, அதனால் பயணச்சீட்டு எடுக்கவில்லை, இது என் பிரச்சினை அல்ல, அரசு உருவாக்கிய பிரச்சினை அதனால் அபராதமும் கட்ட முடியாது, இல்ல சட்டபடிதான் நடந்துக்க வேணும் என்றால் என் ஏடிஎம் கார்டை தருகிறேன். அபராதம் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதா என அவருடன் வாதம் செய்ததில், உட்காருங்க சார் என்றார். //

____________________

Bala G

பீதியா இருக்கு..

மோடிஜீயின் ஆப்ரேசன் அமாவாசை மணி.. இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ரிலீஸ் குறித்து பொதுமக்கள் கடுமையாக விமர்சிப்பதைப்பார்த்து அவர் கடுப்பாகிப்போய் அடுத்த அட்டாக்கா நாலாயிரம் ரூபாய் நோட்டை ரிலீஸ் பண்ணிட்டார்னா என்ன பண்றது..

எதுக்கும் அடக்கியே வாசிப்போம்..

மரண பயத்தை காட்டிட்டான் பரமா மொமண்ட்..

____________________

தே.கி. மலையமான்

ஒரு ஆந்திரக் கட்டிடத் தொழிலாளி அவருக்கு தெரிந்த அரைகுறைத் தமிழில் நேற்றிரவு வீட்டருகே என்னிடம் “என்க்கிட்ட 30000 ரூபா இருந்தது அதுல ஒரு பத்தாயிரத்த மாத்தினேன் அதுக்கு கமிசனா ஒரு ஆயிரத்துக்கு 200 வீதம் 2000 ரூபாக் கொடுத்து மாத்தினேன் என்றார்.” சரிங்க பேங்குக்கு போய் மாத்த வேண்டியதுதானா..ஏன் இந்த மாதிரி புரோக்கர்ங்கிட்ட எல்லாம் மாத்தனும் ன்னே்ன்..என்கிட்ட அக்கெளண்ட் இல்லையே என்றார்..(இதுதான் பலக்கோடிக்கணக்கோரின் நிலைமை அவர்களுக்கு போதிய கால அவகாசமோ போதிய முறையான வழிக்காட்டுதலோ செய்யாமல் திட்டம் அறிவித்ததனால் எவ்வளோ துயர்).அதுக்கு இப்ப நான் என்ன பண்ணும்ங்க என்றேன். “பாக்க நீங்க போலீஸ் மாதிரி இருக்கீங்க”..அவங்கள மாதிரி ஆளுங்கள ஏதாவது பண்ணனுங்க சார் அதான் என்றார் வேதனையுடன்… எனக்கு என்ன சொல்லி அவருக்கு புரியவைப்பதென்றே தெரியவில்லை…மீதி இருக்குற 20000 ரூபாயவாவது பேங்க் ல போய் மாத்துங்க..வோட்டர் ஐடி இருந்தாலே போதும்..2 அல்லது 3 நாளு கழிச்சிப் போய் மாத்திக்குங்க கண்டவங்கக்கிட்ட கொடுத்து ஏமாறாதீங்க என்று சொல்லிவிட்டு மகனை கூட்டிவர அப்பா வீட்டிற்கு நகர்ந்தேன்…

இதுபோல் எத்தனை கோடி பேர் தங்களது பல வருட சேமிப்பை ஒரே ஒருவரின் மடத்தனமான நடவடிக்கையால் இழந்துக்கொண்டிருக்கின்றனரோ?? ஏழைகளின் கண்ணீரில் கார்ப்பரேட்களின் சிரிப்பை ரசிக்கிறார் ஜப்பானிலிருந்து இந்நாட்டு பிரதமர்.

____________________

Raja Hussain

மோடி ஏன் ஜப்பான் சென்றார்?

இந்திய மக்கள் மோடியின் மீது கொண்டிருக்கும் வெறுப்பு எந்த அளவிற்கு உள்ளதென்றால் மோடியின் உருவ பொம்மையை கொளுத்த மாட்டோம் மோடியையே கொளுத்தி விடுவோம் என்ற அளவிற்கு நிலைமை உள்ளதால் மோடி ஜப்பானுக்கு தப்பி ஓடியதாக தகவல்!!!

____________________

Sellampillai Rajkumar

4000 க்கும் 4500க்கும் என்ன அப்படி பெரிய வித்தியாசம் என்று RBI விளக்கவேண்டும். தினமும் எடுக்கலாம், வாரத்துக்கு 24000 ரூபாய் எடுக்கலாம் என்று கணக்கு வேறு கொடுக்கிறார்கள். தினமும் வங்கிக்கு வந்து வரிசையில் நின்றால், குடும்பத்துக்கு மோடி வந்தா கஞ்சி ஊற்றுவார். உழைக்கும் மக்களின் அடிமடியில் கைவைத்து இருப்பதை பிடிங்கி வங்கியில் சேர்த்து அதையும் கார்பொரேட் நிறுவனத்துக்கு கொடுக்க இருக்கிறது.

கருப்பு பண முதலைகள் வெறும் 1% பேர் தான் அவர்களும் அதை தங்கமாக, நிலமாக, டாலராக வெளிநாட்டில் முடங்கி இருக்கிறது. அதை விடுத்து 99% மக்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டு இருக்கிறது மோடி அரசாங்கம்.
வாராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்ட முதல் 10 பேரின் கடன் மட்டும் 10 லட்சம் கோடிக்கும் மேல். [அம்பானி சகோதர்கள் மட்டும் 3 லட்சம் கோடி].

சுழற்சியில் இருப்பதாக அரசு சொல்வது 16 லட்சம் கோடி. மேற்படி 10 லட்சம் எந்த கணக்கில் வருகிறது..??

கடந்த மூன்று நாட்களாக அப்பாவி மக்களிடம் இருந்து பிடிங்கி வங்கிக்கு கொண்டு வந்த தொகை 2 லட்சம் கோடிகளாம்..

வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணம் மட்டுமே 10 லட்ச கோடிக்கு மேல், எப்படி கணக்கு காண்பிப்பது என்று தெரியாமல் தான் சிறுவாடுகளின் மேல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்று ஒன்றை தொடங்கி நடத்தி கொண்டு இருக்கிறார்கள். சுருக்குப்பை, கடுகுடப்பா, முதியோர்களின் முந்தானை முடிச்சியில் இருக்கும் சிறு தொகைகளை வங்கிக்குள் வந்து கொண்டு இருக்கின்றன.\

இதில்லாமல் வீடுவீடாக சென்று தங்கவேட்டை நடத்தும் திட்டம் ஒன்றும் இருக்கிறதாம்.

எளியோர்களின் மீது மோடி அரசு பெரும் போர் ஒன்றை தொடங்கி இருக்கிறது..
எளியோர்கள் தாக்கு பிடிப்பார்களா, அல்லது பர்மா அகதிகளை போல் சொந்த நாட்டிலே அனைத்தையும் இழந்து அகதிகளாய் அடிமைகளாய் அலைவார்களா…??

காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !!

________________

Prakash JP

//வங்கிகளில் லட்சம் கோடி டெப்பாசிட்… கருப்பு பண ஒழிப்புக்கு வெற்றி — தினமலம் கூவல்….//

ப்பா என்னே அறிவு.. செல்லாது என அறிவிப்பதற்கு சில மணிநேரம் முன்பு ATM ம்மில், எடுத்த பத்தாயிரம் ரூபாயில் இருக்கும் பத்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை, அடுத்தநாள் அதே வங்கியில் செலுத்தினால், அது மீட்கப்பட்ட “கருப்பு பணம்மா” ?? முட்டாள் கூட்டம்….

பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்தை “கருப்பு பணம்” என்று கூசாமல் சிலர் சொல்கிறார்கள்..

சாதாரண மக்களிடம் கையிருப்பில் உள்ள, செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்துகிறார்கள்.. அது எப்படி கருப்பு பணமாகும்??

__________________

.சுரேஷ் குமார் கொத்தமங்கலம்

பண முதலைகள் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை எல்லாம் மோடி அண்ணாச்சி அவர்கள் ஜப்பான் புல்லட் ரயிலில் ஏற்றிக்கொண்டு மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்.

ஊருக்கு வந்ததும் அவர் தேர்தலின் போது அளித்த வாக்குப்படி இந்தியர்கள் அனைவரது வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சத்தை வரவு வைப்பார் என்பதை இங்கே தெரியப்படுத்துகிறோம்.

ஆகவே மக்களே இப்போது தாங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை விரைவாக சென்று வங்கியில் செலுத்துங்கள்.
அம்பானிக்கும் , அதானிக்கும் வராக்கடன்கள் கொடுக்க பணம் தேவைப்படுகிறது.

____________________

Vini Sharpana

பதிவை பார்த்தெல்லாம் நான் இதுவரை யாரையும் அன்பிரண்ட் செய்ததில்லை. ஆனால், இப்போது ஒருவரை நீக்கியே விட்டேன். அவர் ’மோடியால் கருப்பு பணம் ஒழிந்துவிட்டது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’ என்பதுபோல ஒரு நாளைக்கு 20 பதிவுகளாவது போட்டு எனக்கு கடுமையான எரிச்சலை உண்டாக்கிவிட்டார். நானே 2000 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு சில்லரை கிடைக்காமலும் எதுவும் வாங்கமுடியாமலும் கடுப்பில் இருக்கிறேன் 🙁 எங்கு பார்த்தாலும் பேங்க்குகளிலும் ஏ.டி.எம் வாசலிலும் மக்கள் தவித்துப்போய் நீண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களது வலி வேதனையெல்லாம் அறியாமல் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருக்கும் கேடியை புகழவும் ஒரு இழிமன நிலை கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது

____________________

Abdul Hameed Sheik Mohamed

“மோடி என்ன செய்தாலும் நீங்கள் ஆதரிக்க மறுப்பதற்கு என்ன காரணம் ? ” என்று ஒரு நண்பர் ஆதங்கத்துடன் இன்பாக்ஸில் வந்து கேட்கிறார்.

நான் ஒரு முட்டாள் இல்லை என்பதைத்தவிர ஒரு காரணமும் இல்லை

____________________

Madanraj Rajagopal

சாப்பிடக்கூட காசு இல்லாதவர்கள் பாரத் மாதாகீ ஜே என சொன்னால் பத்து நிமிடத்தில் பசி தீரும்.

குழந்தைக்கு பால் இல்லாவிட்டால் பக்கத்தில் இருக்கும் பசு மாட்டு மூத்திரத்தை சங்கில் ஊற்றி கொடுக்கவும். மூத்திரம் வைரத்தைவிட மேலானது என நீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது.

வைத்தியத்துக்கு பணம் இல்லாவிட்டால் அடிவயிற்றில் இருந்து ஜெய்ஹிந்த் என கத்தவும். நாபிகமலத்தின் வாயிலாக குண்டலினி கிளம்பி நோய்கள் தீரும்.

வங்கி கியூவில் நிற்க சிரமமாக இருந்தால் மோடிக்காக மேக்னா படேல் ஆடிய வீடியோக்களை போனில் பார்க்கவும். மோடிக்காக எதையும் தியாகம் செய்யலாம் எனும் எழுச்சியும் கிளர்ச்சியும் உண்டாகும்.

அதிகம் பகிருங்கள், இந்த தகவல் ஒவ்வொரு இந்தியனையும் போய் சேரட்டும். மோடியின் கரத்தினை வலுப்படுத்துவோம்.

share if you are a true indian.

1 share = 100 glass of cow urine.

____________________

Ramachandran Muthaiah

மோடி வந்தா சேஞ்சு வரும்னு சொன்ன பலபேரு சேஞ்சிக்காக ரோடு ரோடா அலையுறதா நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது ?

____________________

Syed Abdul Kadhar

பெரும்பாலும் அனைத்து ஏடிஎம்களும் பணமின்மையால் மூடப்பட்டு விட்டன.

விடுப்பின்றி கூடுதல் பணி நேரம், ஓய்வின்மை இவைகளால் கடும் உடல் மன நெருக்கடிகளுக்கு உள்ளாகும் வங்கி ஊழியர்கள் ஓரிரு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஜப்பானில் இருக்கும் மோடி, ஜப்பானிலேயே இருந்து கொள்ள வேண்டிவரும்..

____________________

Jamalan Tamil

கெட்டிக்காரன் புழுகு எட்டு நாளைக்கு என்பார்கள்.. தற்போது ஆறு நாட்கள்கூட தாங்கவில்லை. தமிழகத்தில் 4500 கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன. 1500 நியாயவிலைக்கடைகள் மூடப்பட உள்ளது. காரணம் கிராமமக்களின் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் வங்கி கூட்டுறவு வங்கிதான். இவர்கள்தான் கிராமங்களின் பொருளியல் நிர்வாகத்தை செய்பவர்கள். இவர்கள்தான் நியாயவிலைக்கடைக்கான பொருட்களை வாங்குபவர்கள். தற்போது மத்திய ரிசர்வ வங்கி இவர்களை தனிநபர் கணக்கு என்று சொல்லி பணம் வழங்குவது பத்தாயிரம்தானாம்.. இதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லையாம். ஏழை விவசாயிகளின் சேமிப்பும் வரவு செலவு கடன் எல்லாம் அந்த வங்கிகளில்தான் நடைபெறுகிறது என்பதாவது ரிசர்வ் வங்கிக்கும் தான் அறிவித்த 24 ஆயிரத்தையே 25 ஆயிரம் என்று தொலைக்காட்சியில் உளறும் அரசு பொருளாதார விவகாரத்திற்கான செயலளார் சக்தி காந்த தாஸ் க்கும் தெரியுமா?

paytm ல் பல லட்சம் டிராண்ஸ்க்ஷன் நடந்துவிட்டதாக பெருமையில் பீற்றுகிறார்கள் பிஜேபி நடுநிலை கூஜாதூக்கிகள். உண்மையில் பே-டிஎம் யாருக்கு பணத்தை அளிக்கிறது. குப்பன் சுப்பன் என்கிற கிராமபுற ஏழை சில்லறை வியபாரிகளா? பே-டிஎம் நடத்துபவர் ஆங்கிலம் தெரியாத ஏழையாக இருந்து இன்று மில்லியனர் ஆகிவிட்டார் என்று பீற்றுகிறார்கள். அவர் பணக்காரராவதில் என்ன பெருமை. கோடிக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடித்தால்தான் ஒருவன் பணக்காரனாக முடியும். நல்லா இருக்கு இவிக நடுவு நிலமை… இந்த பத்திரிக்கை சொம்பு தூக்கிகள்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூணாம்.

அட வெட்கங்கெட்டவைங்களா? இதற்க்குத்தான் வெள்ளையும் சுள்ளையுமா அலைஞ்சீங்களா?

____________________

Arul Ezhilan

மோடியின் கண்ணீர்!

மக்கள் தங்கள் சேமிப்பு பணத்தை இழந்து விட்டு தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஒரு கேடும் இல்லை. அவர்கள் மிகப் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் ஜப்பானில் இருந்து திரும்பிய மோடி என்னை கொலை செய்தாலும் மக்களுக்காக நிற்பேன் என்று வெட்டி சவடால் அடித்திருக்கிறார். நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஒருவன் சாட்டையால் தன்னை அடித்தபடியே நம்மிடம் பிச்சை எடுப்பான் அது நமக்கு அருவறுப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் ஆனால் அடித்து அடித்து ரத்தம் வர வர பரிதாபம் தேட முயல்வான்.. இது பற்றி ராகுல் அடித்திருக்கும் கமெண்ட்தான் ஹிட் //ஜப்பானில் சிரிப்பு, இந்தியாவில் கண்ணீர்// …

____________________

Veera Kumar

தினமலர் பேப்பர படிச்சுட்டு தன்னை பெரிய பொருளாதார மேதையாக நினைத்து கொள்ளும் சில முட்டாள்கள் தவிர்த்து அத்தனை மக்களும் மோடியை கேவலமாக திட்டுகிறார்கள் .

____________________

சு.விஜய பாஸ்கர்

இப்போது சென்னை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருக்கிறோம்.

எனக்கு கடும் தண்ணீர் தாகம். ஆளுக்கொரு பாட்டிலாக இரண்டு தண்ணீர் பாட்டில்கள் உள்ளன. ஆனால் தண்ணீர் குடிக்க இயலவில்லை. சிறுநீர் முட்டிக்கொண்டு வருகிறது. என்ன செய்ய.. இதனால் தூங்கவும் இயலவில்லை. தண்ணீர் இருந்தும் குடிக்க முடியவில்லை. சிறுநீரும் கழிக்க இயலவில்லை. தண்ணீர் பாட்டிலை பார்த்துகொண்டே, சிறுநீரை அடக்கிப்பிடித்துக்கொண்டு, தூங்காமல் விழித்துக்கொண்டு வருகிறேன்.

இப்போ சீனை மாற்றிப்போடுங்க.

வீட்டில் அரசி இல்லை. பணம் 500 ரூபாய் தாள்கள் பல உள்ளன. பசி வயிற்றை கிழிக்கிறது. 500 ரூபாயை வாங்க கடை இல்லை. பசியோடு 500 ரூபாயை பார்த்துக்கொண்டு வயிற்றைப் பிடித்துக்கொண்டு இருக்க வேண்டும்.

பொறுத்திப் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் பொறுமையாக இருந்துகொள்ளுங்கள்.

பக்கத்தில் அமர்ந்திருக்கும் தோழரிடம் கேட்டேன். “முட்டிக்கிட்டு வருதே என்ன செய்ய?”.. அவர் சொன்ன பதில் “எல்லாருக்கும் அதே நிலைதான், ஆனா எப்போ ட்ரைவருக்கும் கண்டருக்கும் முட்டிக்கிட்டு வருதோ, அப்போதான் எல்லாருக்கும் விடிவு வரும்”.

இப்போ முடிவு பண்ணிக்கொள்ளுங்கள். யாருக்கு முட்டவைக்க வேண்டும் என்று.

பின்குறிப்பு: ட்ரெயின்ல போயிருக்கலாமே ஜீன்னு சொல்ற அறிவாளிகளும், டெபிட் கார்டு யூஸ் பண்ணலாமே ன்னு சொல்ற தேச பக்தர்களும் பக்கத்தில் வந்துறாதீங்க. மலத்தை கரைச்சி வச்சிருக்கேன்.

____________________

Paraneetharan K

மக்கள் இந்த கஷ்டத்தை இன்னும் 50 நாட்களுக்கு பொறுத்துக் கொள்ள வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி!

திருவாளர் பொதுஜனம்: ரெண்டு வருடமா பொறுத்துக்கொண்டு விட்டோம்…இதில் ஐம்பது நாள் என்ன, இன்னொரு ரெண்டரை வருடம் பொறுத்துக்கொள்கிறோம். பிறகு உங்களை அத்வானி, வாஜ்பாய் இருக்கும் இடத்துக்கு ஒரே அடியா அனுப்பி வைக்கிறோம்.

____________________

Saravanan Savadamuthu

கருப்பு பணம் தானே வேணும்?

முதல்ல ஊர் சுத்தறத நிறுத்திட்டு, இவனுங்க வங்கியில வாங்குன கடன கட்ட சொல்லு…

திருட்டுப் பணம் தானா வெளியில் வரும்…. மிஸ்டர் கேடி

  1. ஜிவிகே ரெட்டி (GVK Group) (33933 Crores)
  2. வேனுகோபால் தூத் (Videocon Group) (45405 Crores)
  3. மதுசூதன ராவ் (Lanco Group) (47102 Crores)
  4. ஜி.எம்.ராவ் (GMR Group) (47976 Crores)
  5. சஜன் ஜிந்தல் (JSW Group) (58171 Crores)
  6. மனோஜ் கவுர் (Jaypee Group) (75163 Crores)
  7. கவுதம் அதானி (Adani Group) (96031 Crores)
  8. சசி ருஇயா & ரவி ருஇயா (Essar Group) (101000 Crores)
  9. அனில் அகர்வால் (The Vedanta Group) (103000 Crores)
  10. அனில் அம்பானி (Reliance Group)(125000 Crores)

(மேல உள்ள பட்டியலில் உள்ள 10 பேர் நம் தேசத்தின் பொது துறை வங்கிகளில் வாங்கி கட்டாத கடனின் ஒரு சிறிய பகுதி இது.)

தகவல் அ.முத்துகிருஷ்ணன்

____________________

Bala G

எப்போதும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடையில் தான் காய்கறிகள் பணம் கொடுத்து வாங்குவோம்..

இன்று கையில் செல்லாத (யாருமே வாங்கிக்காத) இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இரண்டு இருக்கு..
எஸ்.ஜே.சூர்யா சொல்ற மாதிரி ” இருக்கு.. ஆனா இல்ல.. ”

வேற வழியில்லாமல் அம்பானி கடையில் போய் டெபிட் கார்ட்டை தேய்ச்சு காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்கினேன்.. என்பதைவிட வாங்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறேன்..

இதுதான் மோடிஜியின் ராஜ தந்திர அரசியல்..
புரிகிறதா..

____________________

Ravi Shankar

இன்று
பலரின் தாடிகளுக்கு
லேடி காரணமல்ல,
மோடியே காரணம்.

ஷேவ் பண்ண கூட காசில்லைடா !

____________________

Poornachandran Ganesan

மோடி மஸ்தான் வேலை
இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணம் சுமார் 16 லட்சம் கோடி என்று தெரிகிறது. இதில் சுமார் 13 லட்சம் கோடிப்பணம் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளில்தான் புழங்கிவந்தது. பத்துமாதமாகத் திட்டமிட்ட மோடி, இந்த அளவு பணத்திற்கு நூறுரூபாய் ஐம்பது ரூபாய் நோட்டுகளை அடிக்கச் சொல்லி வைத்துக் கொண்டல்லவா 500-1000 ரூபாய் நோட்டுகளை முடக்கியிருக்க வேண்டும்? மக்கள் அவதிப்பட்டு கையில் காசின்றித் தவித்து செத்துச் சுண்ணாம்பான பிறகுதான் 100 ரூபாய் நோட்டுகளை அடிப்பார்களா? இன்னும் 50 நாட்கள் இப்படியே அவஸ்தைப் படும்படி பிரதமர் சொல்கிறார். அப்புறம் மட்டும் என்ன? பலன் பூஜ்யம்தான். மோடியின் வித்தை தெரிந்தோ தெரியாமலோ நிறையப் பேர்-குறிப்பாக பாஜகவினர், அறிவிப்புக்கு முன்னாலேயே பணத்தை மாற்றி விட்டார்கள் என்று செய்திகள் வருகின்றன.

____________________

Appanasamy Apps

ஐயய்யோ! கருப்புப் பணத்தை ஒழித்த அரசு இப்போ பினாமி சொத்துகளையும் பறிமுதல் செய்யப்போகிறதாம்!

மிக்சி, ஓடாத கிரைண்டர், கேஸ் ஸ்டவ், டிவி, பிரிஜ், வாஷிங், மிஷின், ஒரு ஓட்டை கூலர், மூணு சீலிங் பேன், ஒரு கம்யூட்டர், நாலு பேண்ட், எட்டு சட்டை, ஆறு பணியன், ஆறு ஜட்டி எதுக்குமே என்னிடம் பில் இல்லை.. பினாமியாக நான் சேர்த்துள்ள சொத்துகள் இவை. இதை எப்படி பதுக்குவேன்? யாராவது ஐடியா சொல்லுங்களேன்.

____________________

Venkat Ramanujam

நானோ சிப் கூட ஓகே ., ஆனா 120mtr பூமி அடியில் வச்சாலும் காட்டி கொடுக்கும்ன்னு விட்டிங்கே பாரு ஒரு நூலு .. ? திருப்பதியில் வெங்கிக்கு ஜிலேபி போடுறங்கான்னு சொன்ன பிக்காலி 420 கோஷ்டி தானடா நீங்க .. ?

#15lakhsmasterstroke மண்டையாஸ் தாங்க முடியலடா ..?‍♂

____________________

Aga Mugan

நெல்லை மாவட்டத்தில் 425 கிராம பஞ்சாயத்துகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 408 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இங்கு பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. பல விவசாயிகளுக்கு வங்கி கணக்கு, ஆதார் அட்டை போன்ற விபரங்கள் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் தேவைக்காக பணத்தை வீட்டில் வைத்திருந்தனர்.

தற்போது ரூ.500, ரூ.1000 செல்லாது என்பதால் செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கிராமங்களில் உள்ள வங்கி, தபால் நிலையங்களுக்கு சென்றால் பணம் இல்லை என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். சில வங்கிகளில் போதிய பணம் இல்லாமல் டெபாசிட் செய்து விட்டு நாளை வந்து வாங்கி கொள்ளுமாறு ஊழியர்கள் கூறுகின்றனர்.

இதனால் காய்கறி மார்கெட்டுகள், பலசரக்கு கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த நேரத்தை பயன்படுத்தி கிராமப்புற வங்கிகள் பொது மக்களிடம் ஆதார் அட்டையை கேட்டு கெடுபிடி செய்து வருகிறது. பணத்தை மாற்ற ஏதேனும் ஒரு அடையாள சான்று காண்பித்தால் போதும் என அரசு அறிவித்துள்ள நிலையில் பல வங்கிகள் ஆதாரை மட்டுமே கேட்பது புரியாத புதிராக உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆதார் எண் இல்லாத விவசாயிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

____________________

Meenakshi Sundaram Somaya

நம்பவே முடியாத மோடி
==============================

கொல்ல சதி உயிரையும் கொடுப்பேன் என்று வசனம் பேசிய மோடி யின் ஒரு நாள் COSTUME..மூன்று உடைகள் …

____________________

Anthony Fernando

அனைத்து அமைப்புகளும் தெருவில் இறங்கி போராட வேண்டிய நேரமிது. தெருவில் நிற்பதை நிறுத்தி விட்டு தெருவில் இறங்கி போராட்டத்தை ஆரம்பிப்போம்.

____________________

சம்பத் இளங்கோவன்

 ஊரே அல்லோகலப்படும் தகவலை யாரும் அம்மையாரிடம் சொல்லவில்லை போலும் அறிக்கையில ஒரு வார்த்தை காணோம். அதிர்ச்சியான தகவலை எதுக்கு சொல்லிக்கிட்டுன்னு நினைச்சிருக்கலாம்தானே?
_______________

ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !

5
தனியார்மயம் ஏற்றுக் கொள்ளாத அனைவருக்குமான பொது விநியோக முறை நடைமுறையிலுள்ள தமிழகத்தின் ரேஷன் விநியோகம்.

2013 – செப்டம்பரில் மைய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்வரும் நவம்பர் -1 முதல் தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு. இச்சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக முறைக்கு எதிராக இருப்பதைக் குறிப்பிட்டு, அதனைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடந்த மூன்றாண்டுகளாக மறுத்து வந்தது தமிழக அரசு. இந்நிலையில், தமிழகத்திற்கு மாதாந்தோறும் ஒதுக்கீடு செய்துவரும் மொத்த அரிசி ஒதுக்கீட்டில் 1.26 இலட்சம் டன் அரிசியை, ஒரு கிலோ ரூ.8.30-க்குப் பதிலாக, சந்தை விலையில் ரூ.22.53-க்கு மட்டுமே இனி தருவோம் எனக் கட்டளையிட்டு, அ.தி.மு.க. அரசைப் பணிய வைத்துவிட்டார், மோடி.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் தெரிவித்திருக்கும் அறிக்கை அம்மாவின் பெயர் இல்லாமல், தமிழக அரசின் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. கேவலம், அரிசியின் விலையை உயர்த்துகிறேன் – என மோடி சொன்னவுடன், உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது அம்மாவின் துணிச்சலுக்குக் களங்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதாலோ அல்லது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரித்த கருணாநிதியை எதிர்த்து மூன்றாண்டுகளுக்கு முன்பு அம்மா அறிக்கை போர் நடத்திய வரலாறு காரணமாகவோ இந்த ஒப்புதல் அவரது பெயரில் வெளியிடப்படவில்லை.

தனியார்மயம் ஏற்றுக் கொள்ளாத அனைவருக்குமான பொது விநியோக முறை நடைமுறையிலுள்ள தமிழகத்தின் ரேஷன் விநியோகம்.
தனியார்மயம் ஏற்றுக் கொள்ளாத அனைவருக்குமான பொது விநியோக முறை நடைமுறையிலுள்ள தமிழகத்தின் ரேஷன் விநியோகம்.

இந்தியாவிலேயே இரண்டு மாநிலங்கள்தான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்தன. அதிலொன்று, தமிழகம்; மற்றொன்று கேரளம். இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தமிழகமோ, கேரளமோ பொது விநியோக முறையில் பின்னுக்குப் போய்விடவில்லை. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டமும் வாராது வந்த மாமணியல்ல.

1990-களில் தனியார்மயம்-தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டு வந்த அனைவருக்குமான பொது விநியோக முறையைக் கைகழுவுமாறு மாநிலங்களுக்கு உத்தரவிட்ட அப்போதைய நரசிம்ம ராவ் அரசு, வறுமைக் கோட்டுக்குக் கீழே, மேலே எனக் குடும்ப அட்டைகளை இரண்டாகப் பிரித்து, வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்ப அட்டைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசி, கோதுமை வழங்கப்படும் என அறிவித்தது. இதன் மூலம் மானியத்தின் பயன்கள் உண்மையான ஏழைகளை மட்டுமே சென்றடையும் என்று கூறி, இந்தப் பாகுபாட்டை நியாயப்படுத்தியது. ஆனால், இந்த நடைமுறை ஏழைகளுக்கு எதிரானதாகவே அமைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகளும், நோஞ்சான் குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

இந்த நிலையில், இந்திய மக்கள் அனைவருக்கும் படியளக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, மன்மோகன் சிங்-சோனியா காந்தி கூட்டணியால் கொண்டுவரப்பட்டதுதான் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம். முந்தையது வறுமைக் கோடு என்ற மோசடிக் குறியீடை முன்வைத்து குடும்ப அட்டைகளை இரண்டாகப் பிரித்ததென்றால், பிந்தைய உணவுப் பாதுகாப்புச் சட்டம் சதவீதக் கணக்கீடுகளை வைத்து பொது விநியோக முறையை இரண்டாகப் பிளந்தது.

“படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்” என்பார்களே, அது போல, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற நாமகரணத்தைச் சூட்டிக் கொண்டுள்ள இச்சட்டம், இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பது அளிப்பதை அடியோடு ரத்து செய்கிறது. அனைவருக்குமான பொது விநியோக முறைக்கு மாறாக, நகர்ப்புறங்களில் 50 சதவீதப் பேருக்கும், கிராமப்புறங்களில் 75 சதவீதப் பேருக்கும் மட்டுமே மானிய விலையில் தானியங்கள் அளிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ள இச்சட்டம், அரிசி கிலோ ரூ.3.00, கோதுமை ரூ.2.00, மோட்டா ரக தானியம் கிலோ ரூ.1.00 என்ற விலையில், குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் ஐந்து கிலோ வீதம் இந்த தானியங்களுள் ஏதாவது ஒன்று விநியோகிக்கப்பட வேண்டும் எனக் கூறுகிறது.

உணவின்றி தவிக்கும் உழைக்கும் மக்கள் தமிழகத்தில் இவை இரண்டுக்கும் நேர் எதிரான பொது விநியோக முறைதான் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்பொழுது தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே மூன்று இலட்சம் குடும்ப அட்டைகளுள் ஒரு கோடியே தொண்ணுத்தொரு இலட்சம் குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு குடும்ப அட்டைக்குக் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச தானியத்தின் அளவு ஐந்து கிலோ மட்டும்தான். ஆனால், தமிழகத்திலோ இந்தக் குறைந்தபட்ச அளவு 12 கிலோவாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பம் மூன்று நபர்களைக் கொண்டிருந்தாலே தமிழகத்தில் 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. ஆனால்,  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ என்ற வீதத்தில் இந்த அளவு 15 கிலோவாகக் குறைந்துவிடும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளுக்கு அதிகபட்சமாக 50 கிலோ வரை தானியங்கள் பெற முடியும். ஆனால், தமிழகப் பொது விநியோக முறையின் கீழ் அதிகபட்ச அளவு 20 கிலோதான். இந்த வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தில் நடைமுறையிலுள்ள பொது விநியோக முறையின் கீழ் இந்த 20 கிலோ அரிசியையும் இலவசமாகப் பெற முடியும். ஆனால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் பொது விநியோக முறையில் வறுமை கோட்டுக்குக் கீழே வாழும் அட்டையைப் பெற்றவர்கள்கூட, கிலோ ஒன்றுக்கு மூன்று ரூபாய் பணம் கொடுத்துதான் தானியங்களைப் பெறமுடியும்.

இந்தியாவில் இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது விநியோக முறையைத் தனியார்மய-தாராளமயச் சீர்திருத்தத்திற்கு ஏற்ப ஒழித்துக்கட்டி விட வேண்டும் என்பதுதான் மைய அரசின் தீய நோக்கம். அதனைச் செயற்படுத்தும் முதல்படியாக, தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட்டதாகவும், அந்த அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் அரிசியை, இனி சந்தை விலையில் மட்டுமே ஒதுக்கீடு செய்ய முடியும் எனக் கட்டளையிட்டுக் காரியத்தைச் சாதித்துவிட்டது, மோடி கும்பல்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், அனைவருக்குமான பொது விநியோக முறையும், விலையில்லா அரிசித் திட்டமும் தொடரும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக, 2,100 கோடி ரூபாய் கூடுதல் மானியச் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதாவது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி ரேஷன் கார்டுகள் இரண்டாகப் பிரிக்கப்படுவதைத் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததால், தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மொத்த அரிசியில் 1.26 இலட்சம் டன் அரிசியைத் தமிழகம் சந்தை விலையில் வாங்க வேண்டிய கூடுதல் செலவு தமிழக அரசின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிதிச்சுமைகூட இரண்டாம்பட்சமானதுதான். அரசின் தண்டச் செலவுகளையும் வரி ஏய்ப்புகளையும் தடுத்துவிட்டால், இந்தக் கூடுதல் மானியச் செலவைச் சமாளித்துவிட முடியும்தான்.  ஓரளவு நீதியான, சமத்துவமான ரேஷன் முறையை, அனைவருக்குமான பொது விநியோக முறையை நடைமுறைப்படுத்தி வந்ததற்காகத் தமிழகம் தண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதும், ரேஷன் விநியோகத்தைத் தீர்மானிக்கும் உரிமை தமிழகத்திடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இப்பிரச்சினையின் மையம்.

உணவற்ற உழைக்கும் மக்கள்தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்தால், தமிழகத்திற்குக் குறைந்த விலையில் அரிசி வழங்க முடியாது எனக் கறார் காட்டும் மோடி அரசு, காவேரி விவகாரத்தில் கர்நாடகத்தின் மீது இதில் கடுகளவாவது பாய்ந்திருக்குமா ? மாறாக, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி, கர்நாடகாவைக் காப்பாற்றியிருக்கிறது. ஒரு காகிதச் சட்டத்தைவிட, காவேரி மீதான தமிழகத்தின் உரிமையும் பல இலட்சம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமும் எந்த விதத்தில் தாழ்ந்து போய்விட்டது?

தனியார்மயத்திற்குச் சார்பான தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழகத்தின்  மீது வலிந்து திணிக்கும் மோடி அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களையும் உரிமைகளையும் ஓரளவிற்காவது பிரதிபலிக்கும், சட்டத்துக்கு இணையான காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மறுக்கிறது. ஜல்லிக்கட்டை அனுமதிக்குமாறு தமிழகத்திலிருந்து எழும் கோரிக்கையை உச்சநீதி மன்ற உத்தரவைக் காட்டி ஒதுக்கித் தள்ளும் மோடி அரசு, காவேரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாகத் தரப்பட்ட உச்சநீதி மன்ற உத்தரவை அமல்படுத்த மறுக்கிறது.

திராவிடக் கொள்கைகளால்தான் தமிழகம் சீரழிந்து நிற்பதாக முதலைக் கண்ணீர் வடிக்கும் தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல், அதற்கு மாற்றாகத் தேசியத்தையும், பா.ஜ.க.வையும் முன்னிறுத்துகிறது. ஆனால், ரேஷன் அரிசி விநியோகம் தொடங்கி மருத்துவ படிப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பது வரை, காவிரியில் தமிழகத்தின் உரிமை தொடங்கி மாநில அரசின் வரி விதிப்பு உரிமை ஈறாக, மோடியின் ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்துப் பறிக்கப்படுகின்றன. கூடங்குளத்தில் அடுத்தடுத்து அணுஉலைகள், சமஸ்கிருதத் திணிப்பு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றம் என வரிசைக் கட்டி வரும் மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்ப்பன இந்துத்துவா கும்பலுக்குத் தமிழக மக்களின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் எடுத்துக் காட்டுகின்றன. ஆர்.எஸ்.எஸ்.பார்ப்பனக் கும்பலும், மோடியும் தமிழக மக்களின் எதிரியாக நிற்பதை அம்பலப்படுத்துகின்றன.

– குப்பன்

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________