Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 559

கருப்புப் பண நபர்களிடம் உண்டியலோடு கெஞ்சும் மோடி !

0

சுயவிளம்பர மோகத்தில் திளைக்கும் மோடிஅரசு, தனது புதிய சாதனையாக பல்லாயிரம் கோடிகளுக்குக் கருப்புப் பணத்தை மீட்டு விட்டதாக இப்போது ஆரவாரமாக விளம்பரப்படுத்தி வருகிறது.

மோடி அரசு கொண்டுவந்துள்ள ”ஐ.டி.எஸ். எனும் வருமானம் அறிவிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.65 ஆயிரம் கோடிக்கும் மேலாக கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு முன்பு எந்த அரசும் இந்த அளவுக்கு அதிகமான கருப்புப் பணத்தை மீட்டதில்லை” என்று பெருமிதம் கொள்கிறார் பா.ஜ.க. தலைவர்அமித் ஷா.

Hunter_Modibharosa-post”இதற்குமுன் காங்கிரசு அரசாங்கம் 1997-ஆம் ஆண்டில் கொண்டுவந்த வீ.டி.ஐ.எஸ். எனும் திட்டத்தின்கீழ் ரூ.30,000 கோடி அளவுக்குத்தான் கருப்புப் பணம் வெளியே வந்தது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்களின் சாதனைகளை விஞ்சும் வகையில், எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவில் கருப்புப் பணம் வெளியே வந்து மோடி அரசின் திட்டம் மிகப் பெரிய வெற்றியைச் சாதித்துள்ளது” என்று பூரிக்கிறார் அருண் ஜெட்லி.

முன்பு இந்திராகாந்தி ஆட்சியின்போதும், பின்னர் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதும் தானாக முன்வந்து கருப்புப் பணத்தை வெள்ளையாக்கிக்கொள்ளும் திட்டங்கள்அறிவிக்கப்பட்டன. முந்தைய திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு, அதே வழியில்தான் இந்த சூரப்புலிகளும் இப்போது கருப்புப்பண மீட்பு நாடகத்தை நடத்தியுள்ளனர்.

மோடி அரசு அறிவித்துள்ள ஐ.டி.எஸ். திட்டத்தின்படி, 2016 செப்.30-ஆம் தேதிக்குள் வருமான வரி 30%, அபராதம் 15%  – ஆக மொத்தம்  45% தொகையைக் கட்டிவிட்டு இதுவரை கணக்கில் காட்டாத சொத்துக்களைக் கருப்புப்பணப் பேர்வழிகள் சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம்;  அபராதத் தொகையை அடுத்த ஆண்டுக்குள் மூன்று தவணைகளில் செலுத்த சலுகை தரப்படும்; அவர்களைப் பற்றிய எந்தத் தகவலையும் அரசு வெளியிடாது; எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

இதன்படி, இப்போது 64,275 பேரிடமிருந்து ரூ.65,200 கோடி தொகை வசூலிக்கப்பட்டதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது. அதாவது, சராசரியாக ஒரு கருப்புப்பணப் பேர்வழியிடமிருந்து ஒரு கோடி ரூபாய்தான் வசூலாகியிருக்கிறது. இதிலே, ஒரு தனிநபரிடமிருந்து மட்டும் 10,000 கோடி ரூபாய் கிடைத்ததாம். அந்த நபர் யார் என்று தெரியவில்லை.

தனியார்மய – தாராளமயமாக்கத்துக்குப் பிறகு, கடந்த 20 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே கருப்புப் பணம் பூதாகரமானதாக வளர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறத்தாழ பாதியளவுக்குக் கருப்புப் பணத்தால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே கூறுகின்றனர். இந்நிலையில், ஒரு பெரு நகரத்திலேயே கருப்புப்பணப் பேர்வழிகளிடமிருந்தும் அமைச்சர்களிடமிருந்தும் இத்தனை கோடிகளுக்கும் மேலாகக் கைப்பற்ற முடியும். ஆனால், நாடு தழுவிய அளவில் வேட்டை நடத்தி சராசரியாக ஒரு கருப்புப்பணப் பேர்வழியிடமிருந்து ஒரு கோடியைத்தான் மோடி அரசு வெளியே கொண்டுவந்திருக்கிறது.

மாதத்துக்கு 2 கேசு கொடுங்கண்ணே என்று கள்ளச்சாராய வியாபாரிடம் மாமூல் வாங்கும் போலீசுக்காரன் பேரம் பேசுவதைப்போலத்தான், மோடி கும்பலின் கருப்புப்பண மீட்பு நாடகமும் நடந்துள்ளது. வருமானவரி அதிகாரிகள் கருப்புப்பண முதலாளிகளைப் பார்த்துப்பேசி, உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது, கொஞ்சம் பெரிய மனது வைத்து ஒத்துழையுங்கள், பிரதமரின் லட்சியக் கனவை நிறைவேற்றுங்கள் என்று கெஞ்சி உண்டியல் வசூலைப்போல கேட்க, அவர்களும் தருமம் போடுவதுபோல கொஞ்சம் கருப்புப் பணத்தை கணக்கில் காட்டியிருக்கிறார்கள். இதற்குத்தான் இத்தனைஆரவாரக் கூச்சல்கள்!

உள்நாட்டில் கருப்புப்பண வேட்டையின் யோக்கியதை இப்படி சந்தி சிரிக்கும்போது, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கப் போவதாக மோடி அரசு அடித்த சவடால்களோ இன்னுமொரு கேலிக்கூத்து.

”வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்டுக் கொண்டு வருவோம்; அப்படி கொண்டுவரப்படும் கருப்புப் பணத்திலிருந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் பணத்தைப் போடுவோம்” என்று அண்டப்புளுகை அள்ளி வீசியது பா.ஜ.க. மோடியின் நூறுநாள் ஆட்சியில் ஒரு சல்லிக்காசு கருப்புப் பணத்தைக்கூட மீட்க முடியாமல் போனதோடு, கருப்புப்பண பேர்வழிகள் வெளிநாட்டில் பதுக்கியுள்ள சொத்துகளுக்கு வரி மற்றும் அபராதமாக 60% செலுத்தி இந்தியாவிற்குள் கொண்டுவரலாம் என்று மோடி கும்பல் சலுகை காட்டியபோதிலும், அதுவும் தோற்றுப்போய், அந்தத் திட்டமும் புஸ்வாணமாகிப் போய்விட்டது.

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டள்ள கருப்புப் பணத்தைப் பிடிப்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால், பாருங்கள் அதிலே சிக்கல் வந்துவிட்டது. இருந்தாலும், உள்நாட்டு கருப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டங்களை அறிவித்து அதிலே சாதனை படைத்துவிட்டோம் என்று இப்போது கூச்சமின்றி மார்தட்டிக் கொள்கிறது மோடி அரசு.

ஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப் பண மீட்பு – என்ற இரு முக்கிய வாக்குறுதிகளை வைத்துத்தான் மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவையும் அம்பலப்பட்டுப் தோற்றுப்போய்விட்டன.

மோடி என்றால் மோசடிப் பேர்வழி என்பதற்கு இவற்றைவிட வேறென்ன சான்று வேண்டும்?

– குமார்

___________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2016
___________________________________

எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

32
Marudhiyan

ருப்புப் பணத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கட்டுக்கட்டாகக் கட்டி இரும்புப் பெட்டிக்குள் போட்டு பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறார்கள்; கட்டிலுக்கு அடியில் மெத்தையில் வைத்துத் திணித்து தைத்து வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் திரைப்படங்கள் உருவாக்கியிருக்கின்றன. திரைப்படங்கள் தோற்றுவிக்கும் இந்தக் கருத்தை மக்கள் மத நம்பிக்கைகளைப் போல ஏற்றுக்கொண்டுள்ளனர்.  ரஜினி நடித்த சிவாஜி சினிமாவிலாவது கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு ஆடிட்டர்களையும்,  பணக்காரர்களின் வீட்டு வேலைக்காரர்களையும் கூப்பிட்டு   “உங்க ஐயா பணத்தை எங்கே ஒளிச்சு வெச்சுருக்காருன்னு சொல். இல்லையென்றால் உதைப்பேன்” என்று இயக்குநர் சங்கர் மிரட்டுவார்.  அடையாளம் காட்ட மறுத்தவனை ஆள் வைத்து உதைத்து வழிக்குக் கொண்டுவருவார்.

அந்த மாதிரி பிரதமர் மோடி, கருப்பு பணத்தை எப்படி ஒழிப்பது என்று இயக்குநர் சங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். பா.ஜ.க-வின் ஆடிட்டர் குருமூர்த்தியைக் கேட்டால் யார் யாரெல்லாம் கருப்புப் பண ஆடிட்டர்கள் என்பதை அவரே சொல்லி விடுவார். அந்த ஆடிட்டர்களைகருப்புப் பண முதலைகளை அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு கருப்புப் பணத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தமேயில்லாத கோடிக்கணக்கான ஏழை மக்களின் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார் மோடி. இதனால் சில இடங்களில் மாரடைப்பினால் மக்கள் இறக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வணிகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது தாங்கவொனாத் துயரத்தை அளித்திருக்கிறது.

இருந்தபோதிலும் கருப்புப் பணம், கள்ள நோட்டுக்கள் இந்த நாட்டிலிருந்து ஒழியுமென்றால் அதற்காக இந்தத் துன்பத்தை நாங்கள் சகித்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஒரு நல்ல நோக்கத்திற்காக நம்முடைய பிரதமர் நடவடிக்கை எடுத்தியிருக்கிறார். இருந்தாலும் மக்களுக்கு இவ்வளவு துன்பம் தராமல் செய்திருந்தால் இதை வரவேற்றிருப்போம் என்ற வகையில்தான் மக்களிடையே கருத்து நிலவுகிறது அல்லது ஊடகங்களால் அப்படித்தான் கருத்து உருவாக்கப்படுகிறது. உண்மையிலேயே இது கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையா  என்பதுதான் எங்களுடைய கேள்வி.

எல்லோரும் சொல்வதைப் போல, இந்த நடவடிக்கையால் முழுமையாக கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது அல்லது அரைகுறையாகத் தான் முடியும் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை.

“இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய சார்பில், அவர்களுடைய அரசான  இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம். மக்கள் கையிலிருக்கிற சேமிப்பு, உழைத்து சம்பாதித்த பணம் இவற்றையெல்லாம், யார் கருப்புப் பணத்தை உருவாக்குகிறார்களோ அந்தப் பெருமுதலாளிகளின் கையில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்.”

கருப்புப் பணத்தை, இந்த நடவடிக்கையால் ஒழிக்க முடியும் என்று சொல்பவர்கள் அல்லது நம்புபவர்கள் அது எப்படி என்பதை விளக்க வேண்டும். இது ஏன் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை விளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மோடி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையைப் போலத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அதுவல்ல.

இது தோற்றுப்போன மோடி அரசு எடுத்திருக்கும் அரசியல் நடவடிக்கை. 2014 தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோடி அளித்த வாக்குறுதிகள் பல. உலகத்திலேயே எந்த அரசியல் தலைவனும், டொனால்ட் ட்ரம்ப் போன்ற கேடுகெட்ட அரசியல் தலைவன் கூட அளித்திடாத வாக்குறுதியை மோடி அளித்தார். நான் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடுவேன் என்று மோசடியாக வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்று கேட்டபோது ” அது சும்மானாச்சுக்கும் எலெக்சனுக்காக சொன்னது” என்று பதிலளித்தார் அமித் ஷா. அந்த அளவிற்கு நேர்மையோ  நாணயமோ இல்லாத அரசு இது.

மோடி பல நம்பிக்கைகளை உருவாக்கினார். வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறேன். விலைவாசியை குறைக்கப் போகிறேன் என்று அளந்து விட்டார். வளர்ச்சி தான் என்னுடைய ஒரே கொள்கை என்று பேசினார். மேக் இன் இந்தியா , ஸ்டார்ட் அப் இந்தியா, சிட் டவுன் இந்தியா , டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் என்று ’பஞ்ச டயலாக்’ திட்டங்களை அறிவித்தார். அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றினார். வானொலியில் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் இரண்டாண்டுகள் தாண்டிய பிறகும் இன்னதை சாதித்தேன் என்று சொல்லிக்கொள்ளும்படியாக மோடியால் எதையும் கூறமுடியவில்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான் மிச்சம்.

இந்த சூழ்நிலையில் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பது தான் மோடி அரசின் முன்னாள் இருக்கின்ற கேள்வி. மோடி அரசு இதற்காகத் தொடர்ந்து இரண்டு முறைகளைக் கையாள்கிறது.  பொதுமக்களுடைய கருத்தை இரண்டு துருவங்களாகப் பிரித்து மோத விடுவது. ஒரு எதிரியை உருவாக்கி அவன்தான் நாட்டு மக்களின் எதிரி என்று காட்டுவது. அவர் எதிரியா இல்லையா என்பது பற்றி நாட்டு மக்களிடம் விவாதம் நடக்கும். இதுதான் தேசம் சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று ஒரு பிரச்சினையை அவர்கள் எழுப்புவார்கள். அதுகுறித்து ஆம் இல்லை என்று விவாதம் நடக்கும்.

பா.ஜ.க என்ற கட்சியே அப்படித்தான் ஆட்சிக்கு வந்தது..  இராமன் அயோத்தியில் தான் பிறந்தான். எனவே மசூதியை இடித்து கோயில் கட்டியே தீருவோம் என்றனர். இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? அது மக்களிடையே விதைக்கப்பட்ட ஒரு மத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வைத்து தேசம் முழுவதையும் இரண்டு கூறுகளாகப் பிளந்து, மதக்கலவரங்களை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பான்மை இந்து மதவெறியைத் தூண்டித்தான் ஆட்சிக்கு வந்தார்கள்.

இப்போது மோடி வந்ததில் இருந்து என்ன நடக்கிறது? பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள், அனுப்பபடுகிறார்கள். அதனால் தான் காசுமீர் பிரச்சினை என்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறதா என்றால் ஆமாம் அனுப்புகிறது. ஆனால் அதுதான் காசுமீர் பிரச்சினைக்குக் காரணமா என்றால், இல்லை.

எல்லோருக்கும் பொருந்துகிற சட்டத்தை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தலாக் தலாக் என்று மூன்றுமுறை சொன்னால் மணவிலக்கு என்று சொல்கின்றனர். இப்படி இசுலாமிய மதவாதிகள் பேசுகிறார்களா இல்லையா என்றால் ஆமாம் பேசுகிறார்கள். ஆனால் மதரீதியான சட்டங்கள் ஏற்றத்தாழ்வுகள், சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இந்துக்களிலும் இருக்கிறதா இல்லையா? ஆனால் இசுலாமியர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி அதன் மீது ஒரு விவாதத்தை தொடங்குகிறார்கள். அடுத்ததாக இப்போது கருப்புப் பணம். கருப்புப் பணம் என்பது இன்னொரு இராம ஜென்ம பூமி.

கருப்புப் பணம் யார் வைத்திருக்கிறார்கள் என்பது இந்த அரசாங்கத்திற்கு தெரியாதா? இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கு தெரியாதாம். என்ஃபோர்ஸ்மென்ட்  டைரக்டரேட்டுக்கு தெரியாதாம். மோடிக்கும் தெரியாதாம். ரூ.1000-யும் ரூ.500-யும் முடக்குவதன் மூலம், அதாவது கொக்கு தலையில் வெண்ணை வைத்து கருப்புப் பணத்தை பிடிக்கப் போகிறார்களாம்!

மோடியின் ஸ்வச் பாரத்துடன் இதை ஒப்பிடலாம். திடீரென்று மோடி துடைப்பதுடன் கிளம்பினார். உடனே ஷாருக்கான், கமல ஹாசன் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் துடைப்பத்தை எடுத்தார்கள். இந்தியா தூய்மையாகி விட்டதா?

இந்தியாவின் தலைநகரத்தில் பிள்ளைகளை பள்ளிகூடத்துக்கு அனுப்ப வேண்டாம்; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. காரணம், சுற்றுசூழல் மாசு. தூய்மை இந்தியா என்று துடைப்பத்தை எடுத்தாரே மோடி. ஏன் டெல்லி தூய்மையாகவில்லை?

“கார்கள், வாகனங்கள் உருவாக்கிய புகையை, ஆலைகள் உருவாக்கிய புகையை எவனாவது துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்ய முடியுமா? முடியாது. புகையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் கார்களை தடுக்க வேண்டும், குறைக்க வேண்டும். அல்லது மாசு ஏற்படுத்தும் ஆலைகளை அப்புறபடுத்த வேண்டும்.  ஆட்டோமொபைல், கார்கள் விற்பனையை அதிகரிப்பதுதான் மோடியின் கொள்கை. எப்படி துடைப்பத்தை வைத்து புகையைச் சுத்தம் செய்ய முடியாதோ அது போல 500 ,1000 ரூபாய் நோட்டுக்களைத் தடை செய்து கருப்புப் பணத்தை ஒழிப்பதும் முடியாது.”

கருப்புப் பணம் என்றால் என்ன? முறைகேடான தொழில்களில் சேர்த்த பணம் கருப்பு பணம். அது ஒரு வகை. முறையாகத் தொழில் செய்பவர்களும் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அந்த வரி ஏய்ப்பு செய்த பணமும் கருப்புப் பணம்.

முறைகேடு என்று எடுத்துக்கொண்டால் இலஞ்சம் வாங்குவது. அதிகாரிகள் இலஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கின்றனர். அதுபோல அரசியல்வாதிகளிடமும் கோடிக்கணக்கில் பணம் இருக்கின்றது. அவர்களெல்லாம் வைத்திருக்கும் கருப்புப் பணத்தில் 30% வருமான வரி கட்டிவிட்டால் அது வெள்ளையாகிவிடுமாம்.

கிட்டத்தட்ட 65,000 கோடிக்கும் மேல் கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறோம் என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது. 65,000 கோடி அரசாங்கத்தின் கைக்கு வந்துவிட்டதாக பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சில நூறு பேர் தாங்கள் வைத்திருந்த 65,000 கோடிக்கு வரியையும் அபராதத்தையும் கட்டியிருக்கிறார்கள். அரசுக்கு 28,000 கோடி வரி வந்திருக்கிறது. அவ்வளவுதான்.

“எப்படி சம்பாதித்தீர்கள் என்று கேட்க மாட்டோம். வரியை மட்டும் கட்டி விடுங்கள்” என்று கருப்புப் பண பேர்வழிகளின், அவர்கள் காலில் விழாத குறையாகக் கெஞ்சித்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 65000 கோடி என்பது கஞ்சா விற்ற காசா, இலஞ்சம் வாங்கிய காசா என்பதை ஐ.டி. டிபார்ட்மென்ட் விசாரிக்கவில்லை.

ஆனால் பாமர மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கருப்பு பண பேர்வழிகள் 500, 1000 த்தை வங்கியில் கொடுத்தால் சிக்கிக் கொண்டுவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல, வரி  கொடுத்தால் எல்லாக் குற்றங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

ஜெயலலிதா வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. “அந்தப் பணத்திற்கு நான் வரி கட்டிவிட்டேன்” என்பதுதான் நீதிமன்றத்தில் அம்மா சொன்ன விளக்கம். ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஒருவர் அந்த வருமானம் எப்படி வந்தது என்பதை சொல்லியாக வேண்டும். அதனால்தான் ஜெயாவின் வாதம் எடுபடவில்லை.

ஆனால் இந்த விதி மற்ற கருப்புப் பண முதலைகளுக்குப் பொருந்தாது. கருப்பை வெள்ளையாக்கும் மோடி அரசு உள்ளிட்ட எல்லா அரசுகளும் எனக்கு வரியை மட்டும் கொடுத்துவிடு. உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொல்லித்தான் கருப்பை வெள்ளையாக்குகின்றனர்.

500, 1000 ரூபாய் செல்லாது என்று இரவு 8:30 மணிக்கு மோடி அறிவித்த பிறகு விடிய விடிய சென்னை உள்ளிட்ட அனைத்து இந்திய நகரங்களிலும் நகைக் கடைகள் திறந்திருந்தன. இன்னொரு பக்கம் ஏ.டி.எம்-ல் மக்கள் கூட்டம். நாளைக்கு சோற்றுச் செலவுக்கு 400 ரூபாய் கிடைக்குமா என்று. ஒரே இரவில் கிராமுக்கு ரூ.1500, ரூ.2000 என தங்கம் விலை ஏறுகிறது. கருப்புப் பணத்தை பிடிப்பது தான் இந்த அரசாங்கத்தின் நோக்கமென்றால் நகைக்கடைக்கு வந்தவனையெல்லாம் அப்படியே வளைத்துப் பிடிக்க வேண்டியது தானே.

கருப்புப் பணத்தை காகிதப் பணமாக வைத்துக் கொள்ளாதீர்கள். தங்கமாக வாங்கி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்; சொத்தாகவோ, ரியல் எஸ்டேட்டாகவோ ஷேராகவோ வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் காகிதப்பணமாக மட்டும் வேண்டாம் என்கிறது மோடி அரசு.

மோடி தன் உரையிலேயே சொல்கிறார். பணப்பொருளாதாரத்தை ஒழித்து அனைவரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டுவரப் போகிறேன் என்கிறார். கருப்புப் பணம் தொடர்பான ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன. வங்கிப்பொருளாதாரத்தை தங்களுடைய பொருளாதார நடவடிக்கைக்கு அடிப்படையாக வைத்திருக்கும் மிகப்பெரிய தரகு முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கருப்புப் பணத்தினுடைய மிக முக்கியமான இருப்பிடம் என்று சொல்கின்றன.

இதே பா.ஜ.கவினர் முன்னர் சொன்னார்களே, அந்த 70 இலட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது யார்? உள்ளூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளுமா? சிலர் அப்படி இருப்பார்கள். ஆனால் மிகப்பெரும்பான்மையாக இந்த கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் இந்த நாட்டினுடைய மிகப்பெரிய தரகு முதலாளிகள் டாடா, அதானி, அம்பானி.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தில் உருவாகிறது. அதை உருவாக்குபவர்கள் இவர்கள் தான். எனவே வங்கிகளின் மூலம் உருவாகும் கருப்புப் பணம் என்பதுதான் முதன்மையானது. ரூ.500, ரூ.1000 – ஆக மாற்றி தேர்தல் நேரத்திலே விநியோகிப்பது, அல்லது மற்ற செலவுகளுக்குக் கருப்புப் பணமாகப் பயன்படுத்துவது என்பதெல்லாம் ஒரு கொசுறு.

அப்படிப்பட்ட கருப்பு பணம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானது. முக்கியமான குற்றவாளிகள் யாரோ, இந்தக் கருப்புப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்கள் யாரோ, அவர்களைப் பற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை. ஏனென்றால் எல்லா ஊடகங்களும் அவர்கள் கையில் இருக்கிறது. மோடியும் பேசுவதில்லை? ஏனென்றால் மோடி அவர்கள் பையில் இருக்கிறார். கருப்புப் பண முதலைகளில் மிக முக்கியமானவரான அதானி, அவருடைய சட்டைப்பையில் இருக்கும் மோடி, கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறாராம். நம்மை நம்பச் சொல்கிறார்.

இந்த மையமான விடயத்திலிருந்து திசைதிருப்பவே கருப்புப் பணத்தோடு கள்ளநோட்டையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் மோடி. பாகிஸ்தானிலிருந்து ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகளை அடித்து விடுகின்றனர். அது கணிசமான அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்தில் ஊடுருவியிருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்றால் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கவியலாதவை என்று பாஜகவை சார்ந்தவர்கள் வாதாடுகின்றனர். கள்ள நோட்டுக்களை ஒழிப்பது தான் இவர்கள் நோக்கம் என்றால், மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம். உங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து புதிய நோட்டுக்களை வாங்கிக்கொள்ளுங்கள்; அப்படி செய்யவில்லையென்றால் நீங்கள் வைத்திருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவையாகிவிடும்” என்று சொல்லியிருக்கலாம்.

இது ஒன்றும் புதியதல்ல, 2015-இல் அப்போதைய கவர்னராக இருந்த இரகுராம் ராஜன் 2005-ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூ.500 நோட்டுக்களை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவித்தார். கள்ள நோட்டைப் பிடிப்பதுதான்  நோக்கம் என்றால் அப்படி செய்திருக்கலாம். அப்படியே வைத்துக் கொண்டாலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அடிக்கத் தெரிந்தவர்களுக்கு இந்தப் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களையும் அடிக்க முடியாதா என்ன?

இதற்கு பாஜக கட்சியினர் ஒரு பதில் வைத்திருக்கின்றனர். புதிய 2000 ரூபாய் நோட்டில் கம்ப்யூட்டர் சிப் (Chip) பொருத்தப்பட்டுள்ளதாம், அதனால் அதை வானத்திலிருந்தே பார்த்து எங்கே இருக்கின்றதென்பதைக் கண்டுபிடிக்கமுடியுமாம்.

”உலகத்தில் இதுவரை யாருமே இப்படி ஒரு தொழில்நுட்பத்தில் நோட்டு அடிக்கவில்லை, வதந்தியை நம்பவேண்டாம்” என்று ரிசர்வ் வங்கியே சொன்ன பிறகும் தொலைக்காட்சியில் பேசக்கூடிய பாஜக-வின் உண்மை விளம்பிகள் ரூ.2000 நோட்டில் சிப் இருக்கிறது என்று துணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

வேறு ஒரு கேள்வியும் எழுகிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கு கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகிப்பதைத் தவிர வேறு வழியில்லையா என்பது தான் அந்தக் கேள்வி. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இருக்கட்டும். பார்ட்டிசிபேட்டரி நோட்(Participatory Note) என்றொரு  நோட்டு இருக்கிறது. அது ரூபாய் நோட்டு அல்ல.

அந்த நோட்டில் தாவூத் இப்ராஹீம், ஹஃபீஸ் சையது அல்லது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ போன்ற யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிலே யார் முதலீடு செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கக்கூடாது என்பது தான் அதிலிருக்கக்கூடிய முக்கியமான முதல் விதி. அதை பாகிஸ்தானிலிருந்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நியூயார்க்கிலோ, வாஷிங்டனிலோ, இலண்டனிலோ அல்லது பாரீசிலோ அந்தப் பணத்தை முதலீடு செய்யலாம். வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors) வாயிலாக இந்தியாவில் இருக்கக்கூடிய BHEL அல்லது BSNL போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது அம்பானி, அதானி நிறுவனங்களிலோ மூலதனம் போட முடியும்.

யார் அந்தப் பங்குகளை வாங்குகிறார்கள் என்று கேட்பதற்கான அதிகாரம் மோடி அரசுக்குக் கிடையாது. இப்படி அனாமதேயமாக மொட்டைக்கடுதாசியைப் போல யார் போடுகிறார்கள் என்றே தெரியாமல், அவன் கஞ்சா விற்பவனாக இருந்தாலும், விபச்சாரம் செய்பவனாக இருந்தாலும், ஆயுதக் கடத்தல் பேர்வழியாக இருந்தாலும் பாகிஸ்தான், அமெரிக்க உளவாளியாக இருந்தாலும், யார் வேண்டுமானாலும் இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய முடியும், அதை அரசாங்கம் சோதிக்க முடியாது என்ற ஒரு ஏற்பாட்டைச் செய்தது யோக்கியர் என்று பெயர் பெற்ற வாஜ்பாயியின் ஆட்சி. அவர் காலத்தில் தான் இந்த பார்ட்டிசிபேட்டரி நோட் என்ற மொட்டைக்கடுதாசி முதலீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றைக்கும் இது அமலில் இருக்கிறது. “ தாவூத் BHEL-லிலோ, BSNL-லிலோ, கோல் இந்தியாவிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்திருப்பார். அவற்றிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகையையோ (டிவிடெண்ட்) அல்லது விற்றுக் கிடைக்கக் கூடிய வெள்ளைப் பணத்தையோ தீவிரவாதிகளுக்க வினியோகிப்பது சுலபமா? இல்லை, பாகிஸ்தானில் ஒரு அச்சகம் வைத்து அங்கே ரூ.500 மற்றும் சிப் பொருத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை அச்சடித்து, மூட்டையாகக் கட்டி, கழுதையின் முதுகில் ஏற்றி அதனை இமயமலையில் ஏற்றி அதற்குக் காவலாக இரண்டு தீவிரவாதிகளைப் போட்டு மலையின் மறுபக்கம் கொண்டுவந்து இந்திய பார்டர் செக்யூரிட்டி ஃபோர்சையும், கம்பிவேலிகளையும் தாண்டி, மூட்டைகளை இந்தப் பக்கம் தூக்கிப் போட்டு, இங்கேயுள்ள தீவிரவாதிகளிடம் பிரித்துக்கொடுத்து, அப்புறம் குண்டு வெடிக்கச்செயவது சுலபமா?

யாரிடம் கதை சொல்கிறார்கள் இவர்கள்? போதைமருந்து வியாபாரிகள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள், கருப்புப் பண முதலைகள் வரையில் எல்லா அயோக்கியர்களும் அடையாளம் தெரியாமல் முதலீடு செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பது உங்கள் அரசு. அப்படி வருகின்ற அந்நிய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க அதையே தன்னுடைய சாதனையாக மோடி சொல்லிக் கொள்கிறார். அதாவது கருப்புப் பணம் உள்ளே வருவதைத் தான் வளர்ச்சி என்று சொல்லுகிறார். ஆனால் இங்கே கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகவும், அதைப் பூமிக்கடியில் டிரங்குப் பெட்டிகளில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் நமக்குக் காதிலே பூ சுற்றுகிறார் மோடி.

-தொடரும்

ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.

பிற பாகங்களுக்கு :

மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !

31
bjp_tweet

“கட்சிகாரங்களுக்கு தகவல் சொல்லி முன்னாடியே அவங்க பணத்தை மாத்திருப்பாங்கப்பா. நாமதான் கஷ்டப்படனும்”

ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த மறுநாள் அதன் பாதிப்புகள் குறித்து கேட்டபோது மளிகை கடை அண்ணாச்சி ஒருவர் கூறியது.

bjp_tweet
பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவர்களில் சஞ்சீவ் கம்போஜ் அவரது டிவிட்டர் பக்கத்தில் புது நோட்டையே காட்டிவிட்டார். நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஊடக பிரச்சாரகர்கள் உள்ளிட்டு பலரும் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை மிக இரகசியமாக  செயல்படுத்தப்பட்ட துல்லிய தாக்குதல் என்று வருணித்தார்கள். நடுத்தரவர்க்கமும் இப்படி தான் நினைத்திருந்தார்கள். தற்போது அண்ணாச்சி தன் அனுபவத்தில் கூறியது சரிதான் என்பதை உறுதி செய்யும்விதமாக ரூபாய் நோட்டு விவகாரத்தில் நடந்திருக்கும் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது நவம்பர் 8-ம் தேதி. ஆனால் நவம்பர் 6-ம் தேதியே பா.ஜ.க-வின் பஞ்சாப் மாநில தலைவர்களில் ஒருவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தகவல் மட்டுமல்ல புதிய ரூ.2000-த்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதோடு இந்த 2016 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தின் அளவு மிக அதிகமாக அதிகரித்திருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தான் வைப்பு தொகை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக மார்ச் காலாண்டில் 2 லட்சம் கோடி, ஜூன் காலாண்டில் 1 லட்சம் கோடியாக வளர்ந்து வந்த வைப்பு தொகை இந்த ஜூலை காலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு வளர்ந்துள்ளது. பார்க்க firstpost  – இணையத் தளத்தில் வந்துள்ள செய்தி.

Quarterly bank deposits
இந்த கலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ள வைப்புத் தொகை. ( நன்றி : firstpost )

ஆக பா.ஜ.க தலைவர்களுக்கு அரசின் முடிவு முன்னரே தெரிந்திருப்பதும், அதே சமயத்தில் டெபாசிட் தொகை வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக அதிகரித்ருப்பதையும் இணைத்து பார்க்கும் போது பா.ஜ.க-வின் கருப்புப் பண முதலைகளுக்கு முன்னரே தகவல் கொடுத்துவிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. மோடி அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள் மேற்கு வங்க பா.ஜ.க-வின் வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறது, மார்க்சிஸ்டு கட்சி

இதுமட்டுமல்ல் இந்தி பத்திரிகையான தைனிக் ஜார்கன்,அக்டோபர் 27-ம் தேதியே அரசின் புதிய ரூபாய் நோட்டு குறித்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியிலிருக்கும் தனது தொடர்புகள் மூலம் இத்தகவலை பெற்று வெளியிட்டிருக்கிறார் பத்திரிகையாளர் பிரஜேஷ் துபே.

கருப்பு பணம் என்பது பெருமளவில் வெளிநாட்டு வங்கிகளிலும், அந்நிய நிதி மூலதனமாகவும் பல்வேறு பெயர்களில் பங்கு சந்தைகளிலும் சுற்றிவருகிற ஒன்று. அதே நேரம் ரூ.500, ரூ.1000 என்று பணமாக பதுக்கி வைத்திருப்பது சிறிய அளவிலானது. அதனால் மோடியின் நடவடிக்கை முதலாளிகளின் கருப்பு பணவிசயத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதும் இது மக்கள் மீதான தாக்குதல் என்பதை முன்னரே எழுதியிருந்தோம். ஆனால் உள்நாட்டில் இருக்கும் இந்த சிறிய அளவு கருப்புப் பணத்தைக் கூட பா.ஜ.கவின் கூட்டாளிகளான முதலாளிகள், தொழிலதிபர்கள், கட்சிப்பிரமுகர்கள் வெள்ளையாக்கி வங்கிகளில் முன்னெச்சரிக்கையாக சேர்த்திருப்பது அம்பலமாயிருக்கிறது.

ஆக இந்த சர்ஜிக்கல் ஸ்டைரக் நடத்தப்பட்டிருப்பது மக்களிடம் மட்டும் தான். மக்களுக்கத்தான் இந்த செல்லாத நோட்டுப் பிரச்சினை தெரிந்திருக்கவில்லை. ஆனால் கருப்பு பண முதலைகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அதனால் தான் எந்த கருப்பு பண முதலைகளும் வங்கியின் வாசலில் நிற்கவில்லை. கருப்பு பணத்தின் மூலவர்களில் ஒருவரான ரஜினிகாந்த் உள்ளிட்டு சினிமா பிரபலங்கள், ஐ.பி.எல் விளையாட்டு வீரர்கள் மோடியை ஆதரிக்கிறாரகள். ஆனால் அப்பாவி மக்கள் தான் வங்கியில் நிற்கிறார்கள். மோடி அறிவித்த இரவில் பணம் இருந்தும் சோறு கிடைக்காமல் இருந்தார்கள்.

இது தொடர்பாக ஊடகங்களில் பேசிய பா.ஜ.க பேச்சாளர்கள் உள்ளிட்டு சிலர் ஒரு சிறிய அளவிலாவது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறிவந்தார்கள். அப்ப்டி சிறிய அளவில் கூட எதையும் மோடியின் அறிவிப்பு சாதிக்கவில்லை என்பதோடு அதிலும் ஊழலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இத்தனையும் செய்துவிட்டு ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்திருப்பது கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வரும் என்றும் அதை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். அர்னாப் முதல் பாண்டே வரை இதே பல்லவியை சலிக்காமல் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

BJP (Bharatiya Janata Party) spokesperson Meenakshi Lekhi during a press conference in Kolkata on Oct.27, 2013. (Photo: IANS)
பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி

ஆனால் பா.ஜ.க – கட்சியே இந்நடவடிக்கை கருப்பு பண விவகாரத்தை திசை திருப்பக்கூடிய செயல் என்றும், பொதுமக்களுக்கு எதிரான ஒன்று என்றும் அறிவித்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதிர்ச்சியடைய தேவையில்லை. எதிர்கட்சிகளாக இருக்கும் போது தவிர்க்க இயலாமல் சில உண்மைகளை பேசுவது அவசியமாகிறது. அப்படியான சூழலில் பா.ஜ.க தெரிவித்த கருத்து தான் அது.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முன்னர் காங்கிரஸ் ஆட்சியின் போது 2005-ம் ஆண்டில் முந்தைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ன மாற்றப்போவதாக அறிவித்தார்கள். அப்போது பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்போம்.

“நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது. சகல துறைகளிலும் அரசு திணறி வருகிறது. வாராக்கடன் அதிகரித்து பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது. இச்சூழலில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து மாற்றும் அரசின் மாய்மாலம், மக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடிய செயல்.

ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவிக்கும் ப.சிதம்பரத்தின் இந்த திட்டம் பணக்காரர்களுக்கானது. மக்களுக்கு எதிரானது. இத்திட்டத்தின் மூலம் சுவிஸ் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொண்டு வரமுடியாது. அதே சமயத்தில் வங்கி கணக்கு இல்லாத ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். தங்கள் பணத்தை அமெரிக்க டாலரிலும், யூரோவிலும், பவுண்டிலும் வைத்திருப்பவர்களை பாதிக்காது, ஆனல் சாதாரண மக்களின்ஒவ்வொரு பைசா சேமிப்பையும் பாதிக்கும்.

இது போன்ற திசை திருப்பும் நடவடிக்கையாயால் படிப்பறிவில்லாத, வங்கி வசதியில்லாத சாதரண மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இத்திட்டம் ஏழைகளுக்கு எதிரானது. 65% இந்திய மக்கள் வங்கியில்லாமல் ரூபாய் நோட்டாகத்தான் தங்கள் பணத்தை சேமிக்கிறார்கள். சிறிய அளவில் சேமிப்பு வைத்திருப்பவர்கள், வங்கி கணக்கு இல்லாதவர்கள், தங்கள் சிறிய வாழ்நாள் சேமிப்பை வைத்திருப்பவர்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களை இடைத்தரகர்களுக்கு இரையாக்கும்.

இத்திட்டம் கருப்புப் பணத்தை ஒழிக்காது. கருப்புப் பண முதலைகள் எந்த சிரமும் இல்லமால் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வார்கள். அதற்கு தேவையான வேலைகளை செய்துகொள்ள ஆட்களை அமர்த்தி பணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

சுவிஸ் எச்.எஸ்.பி.சி வங்கி கணக்குகளின் விவரங்கள் அரசிடம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து கருப்பு பண முதலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.”

ஆக தாங்கள் தற்போது எடுத்துள்ள நடவடிக்கை எத்தையது என்பதையும் அதன் தாக்கம் என்ன என்பதுமல்லாமல் அதன் நோக்கத்தையும் தன் வாயிலேயே அறிவித்திருக்கிறார்கள். மக்களை வதைப்பதில் இவர்கள் எவ்வளவு கைதேர்ந்தவர்கள் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும் ? வீடியோவை பாருங்கள் பகிருங்கள்.

 

மேலும் தகவல்கள் :

சிறப்புக் கட்டுரை : கருப்புப் பணம் என்றால் என்ன ? பிரபாத் பட்நாயக்

1
Money box

மோடி அரசின் கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கை ! – பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

320px-Prabhat_Patnaik,_2012_December_12_
பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

வம்பர் 8 இரவு 8 மணிக்கு தேசிய தொலைக்காட்சிகளில் தோன்றிய நரேந்திர மோடி அந்நாளின் நள்ளிரவிலிருந்து, அதாவது வெறும் நான்கு மணி நேரத்தில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சட்டப்ரீதியான தகுதியை இழக்கும் என்று அறிவித்தார். இந்த வினோதமான முடிவு ‘கருப்புப் பணத்தை” தாக்கும் என்று நியாயப்படுத்தினார். அது மட்டுமின்றி “பயங்கரவாதிகள்” பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாமல் போய்விடுமென்றும் கூறினார்; அரசாங்கத்தை உற்சாகமாக ஆதரித்துவரும் சில தரப்பினர் மோடியின் இந்த முடிவு “பயங்கரவாதத்தின் மீது தொடுக்கப்பட்ட துல்லியத் தாக்குதல்” என்பது வரை பேசிவிட்டனர்.

கள்ள நோட்டுகள் பற்றி பிறகு பேசுகிறேன். முதலில் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜியே வழக்கத்திற்கு மாறாகப் பாராட்டியிருக்கும் “கருப்புப் பண” விவகாரத்தை முதலில் பார்க்காலாம். ஆயிரம், ஐநூறு ரூபாய்த் தாள்களை மதிப்பிழக்கச் செய்த மத்திய அரசின் நடவடிக்கை ‘கருப்புப் பணத்தின்’ மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிற வாதம், ‘கருப்புப் பணத்தின்’ தன்மை குறித்து கொஞ்சம்கூடப் புரிதல் இல்லாமல் முன்வைக்கப்படும் ஒன்று. நிதானமில்லாமல் எளிமைப்படுத்தப்படும் கருத்தும் கூட.

‘கருப்புப் பணம்” என்பது டிரங்குப் பெட்டிகளிலும், தலையணை உறைகளுக்குள்ளும் கற்றை கற்றையாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் என்கிற உள்ளார்ந்த புரிதலிலிருந்து வரும் கருத்து அது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்தால் அதிக எண்ணிக்கையிலான பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்துவிட்டு, புதிய நோட்டுகளைப் பெறும் பரிவர்த்தனைக்காக வங்கிகளுக்கு செல்வார்களாம்; அவர்கள் மீது வங்கிகளுக்கு சந்தேகம் ஏற்பபட்ட உடன் வரி நிர்வாக அதிகாரிகளுக்கு வங்கிகள் புகார் தெரிவிக்குமாம்;  உடனே அவர்கள் குற்றவாளிகளைப் பிடித்து விடுவார்களென்றெல்லாம் இந்த அனுமானங்கள் இப்படியான புரிதலிருந்து வருகின்றன. இப்படி ‘கருப்புப் பணம்’ வெளிச்சத்திற்கு வரும்போது, எதிர்காலத்தில் தவறுகள் நடக்காது என்று சொல்கிறது அந்த அனுமானம்.

’கருப்புப் பணம்’ உண்மையிலேயே நோட்டுகளாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று வைத்துக் கொண்டாலும், இந்த வாதத்தின் இரண்டாவது பகுதி அர்த்தமற்றதுதான். ஒருவர் கணக்கில் வராத 20 கோடிகளை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருக்கிறாரென்றால், அவர் புதிய நோட்டுகளைப் பெறுவதற்காக 20 கோடியையும் எடுத்துக்கொண்டு வங்கிக்குச் செல்லமாட்டார். (எப்படியிருந்தாலும் அவர் அப்படிச் செய்ய அனுமதிக்கப்படவும் மாட்டார்). அதற்கு பதிலாக, அவர் பல அடிமைகளிடம் சிறு தொகைகளைக் கொடுத்து வங்கிகளுக்கு அனுப்பி வைப்பார். இறுதிக் கெடு தேதியான டிசம்பர் 30-க்குப் முன் இப்படி பல நாட்கள் செய்வார்.

Black-money
கருப்புப் பணம்’ என்ற இந்த கருத்தாக்கமே அபத்தமானது. ‘கருப்புப் பணம்’ என்று சொல்லும்போதே நம் மனக்கண்ணில் தோன்றும் பிம்பம் வெளிப்படையாக வங்கித் வைப்புத் தொகையாக இருக்கும் பணமல்ல.

உண்மையில் பார்த்தால் இந்த தொடர் முயற்சி கூட அவருக்குத் தேவைப்படாது. பழைய நோட்டுகளுக்குப் பதில் கமிஷனை எடுத்துக் கொண்டு புது நோட்டுகள் தருவதாகக் கூறி பல தரகர்கள் விரைவில் வருவார்கள். இப்படி “கருப்புச் செயல்பாட்டாளர்கள்” பழைய ”கருப்புப் பண” நோட்டுகளை பரிவர்த்தனை செய்து புதிய நோட்டுகளைப் பெறும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வதால் பதுக்கப்பட்டிருக்கும் பணக்குவியல் வெளிவந்து விடும் என்று ‘நிபுணர்கள்’ பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்வைக்கும் வாதம் பொருளற்றது.

அதை விட முக்கியமானது, ‘கருப்புப் பணம்’ என்ற இந்த கருத்தாக்கமே அபத்தமானது. ‘கருப்புப் பணம்’ என்று சொல்லும்போதே நம் மனக்கண்ணில் தோன்றும் பிம்பம் வெளிப்படையாக வங்கித் வைப்புத் தொகையாக இருக்கும் பணமல்ல; தலையணை உறைகளுக்குள்ளோ அல்லது மண்ணுக்கு அடியில் புதைக்கப்பட்ட பெட்டிகளுக்குள்ளோ பதுக்கப்பட்டிருக்கும் கற்றை கற்றையான நோட்டுகள்தான் நினைவுக்கு வரும். உண்மையில் பார்த்தால், ‘கருப்புப் பணம்’ என்று நாம் சொல்லும்போது, கள்ளக்கடத்தல், போதைமருந்து விற்பனை, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் சப்ளை செய்வது போன்ற முழுமையான சட்டவிரோதச் செயல்களையோ அல்லது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையோ, அல்லது வரி செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்படாமல் நடக்கும் செயல்பாடுகளையோதான் குறிக்கிறோம்.

சான்றாக, நூறு டன் உலோகங்களை தோண்டி எடுத்துவிட்டு, வரியைக் குறைப்பதற்காக 80 டன்களைக் கணக்கில் காட்டுவதை நாம் ‘கருப்புப் பண’ உற்பத்தியாகக் கொள்கிறோம். அதே போல், 100 டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு, 80 டாலர் மதிப்புள்ள பொருட்களையே ஏற்றுமதி செய்வதாகக் கணக்கில் காட்டுவதும், மீதமுள்ள 20 டாலர்களை சட்டவிரோதமாக ஸ்விட்சர்லாந்து நாட்டு வங்கியில் போட்டு வைப்பதும் ‘கருப்புப் பண’ உற்பத்திக்கு மற்றொரு சான்றாகும். அல்லது, ரூபாயை ஹவாலா முறையில் அன்னிய கரன்சியாக மாற்றி அயல் நாட்டு வங்கிகளில் பதுக்குவதும் ‘கருப்புப் பண’ உற்பத்திதான். சுருக்கமாகச் சொன்னால், ‘கருப்புப் பணம்’ என்பது பலவகையான அறிவிக்கப்படாத நடவடிக்கைகளையே குறிக்கும்.

‘கருப்புப் பணம்’ என்பது ஒரு இருப்பைக் குறிப்பதல்ல, ஓட்டத்தைக் குறிப்பது என்பதுதான் இதன் பொருள். ‘கருப்புச் செயல்பாடுகள்’ அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபத்தைத் தருபவை; பணத்தைக் குவித்து வைத்திருப்பது லாபம் தராது. வர்த்தகச் செயல்பாடுகள் என்பதற்கு மார்க்ஸ் சொல்லியிருப்பது “கருப்புச் செயல்பாடுகளுக்கும்’ பொருந்தும்; அதாவது, பணத்தை சுற்றில் விடுவதால்தான் லாபம் ஈட்ட முடியுமேயொழிய, பதுக்கி வைப்பதினால் அல்ல; ’கஞ்சன்’ முன்னதைச் செய்வான், முதலாளி பின்னதைச் செய்வான். வர்த்தகப் பணம் குறைந்த அல்லது நீண்டகாலத்திற்கு இருப்பாக வைக்கப்படும் என்பது உண்மைதான் (உதாரணமாக, மூலதனம்-பண்டம்-மூலதனம் என்கிற சுழற்சியில்); ஆனால் இது ‘வெள்ளை நடவடிக்கைகளுக்குப்’ (வர்த்தகம்) பொருந்தும் அளவிற்கு ‘கருப்பு நடவடிக்கைகளுக்கும்’ பொருந்தும்.

அதனால்தான், ‘கருப்புப் பணம்’ இருப்பாக வைக்கப்படும் என்றும், ‘வெள்ளைப் பணம்’ சுற்றில் விடப்படும் என்றும் அவற்றின் தனித்தன்மையை வரையறுப்பதற்கு ஆதாரமே இல்லை. எல்லாப் பணமும் சில இடைவெளிகளுக்குப் பிறகு சுற்றி வருகிறது; ‘கருப்புச் செயல்பாடாக’ இருந்தாலும் ‘வெள்ளைச் செயல்பாடாக’ இருந்தாலும் இதுதான் உண்மை. ஆகவேதான், ‘கருப்புப் பணத்தை” வெளியே கொண்டுவருவதன் சாரம் “கருப்பு நடவடிக்கைகளைத்” தேடிக் கண்டுபிடிப்பதில் இருக்கின்றதேயொழிய, இருப்பாக வைத்திருக்கும் பணத்தைத் தாக்குவதில் அல்ல. இதற்கு, நேர்மையான, முறையான, சிரமம் மிகுந்த புலனாய்வு தேவைப்படுகிறது.

money
‘கருப்புப் பணம்’ இருப்பாக வைக்கப்படும் என்றும், ‘வெள்ளைப் பணம்’ சுற்றில் விடப்படும் என்றும் அவற்றின் தனித்தன்மையை வரையறுப்பதற்கு ஆதாரமே இல்லை.

கணினிகளின் காலத்திற்கு முன்பேயே, முனைப்புக் கூடிய புலனாய்வின் வாயிலாக எந்தவொரு வரி ஏய்ப்பாளரையும் பிடித்துவிடுவார்கள் என்ற பெருமை பிரிட்டிஷ் அரசின் உள்நாட்டு வருவாய்ச் சேவை அமைப்புக்கு இருந்தது. இந்தியாவை விட சிறியநாடு பிரிட்டன் என்பது உண்மைதான். ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, அதன் அளவிற்கும் தேவைக்கும் ஏற்றதுபோல் அதிகமான அலுவலர்களைக் கொண்ட அமைப்பை உருவாக்கலாம். இதை நாம் செய்துவிட்டால், பொறுமையும், திறமையும் நிறைந்த வரி நிர்வாக அமைப்பை ஏற்படுத்திவிட்டாலே உள்நாட்டிலிருக்கும் ‘கருப்புப் பணத்தையாவது’ வெளிக் கொண்டுவர முடியும்.

ஆனால், ஒரு கணிசமான அளவு ‘கருப்புச் செயல்பாடுகள்” அயல்நாட்டிலிருக்கும் வங்கிகள் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. உள்நாட்டில் இருப்பதை விட இந்தச் செயல்படுகளின் அளவு மிக அதிகம் என்று சிலர் கூறுவார்கள். தேர்தலுக்கு முன் நரேந்திர மோடியும் ‘கருப்புப் பணத்தை’ வெளிநாட்டிலிருந்து ‘திரும்பக் கொண்டு வருவதைப்” பற்றிதான் பேசினார். பெரும்பாலான ‘கருப்புப் பணம்’ வெளிநாட்டில் இருக்கிறது என்பதை சூசகமாக உணர்த்தினாலும், அவரும் ‘கருப்புப் பணம்’ என்பது ஒரு பதுக்கிவைக்கப்பட்ட குவியல், அது ஒரு செயல்பாடு என்ற அப்பாவித்தனமான புரிதலில்தான் இருந்தார். ‘கருப்பு நடவடிக்கைகளுக்கு’ பெரும் மூலாதாரமாக அன்னிய வங்கிகள் இருக்கும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது சாமானிய மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்துமேயன்றி, அத்தகைய கருப்பு நடவடிக்கைகளை ஒழிக்க உதவாது.

ரூபாய் நோட்டுகளைச் மதிப்பிழக்கச் செய்வது இந்தியாவில் இது முதல் முறையல்ல. ஜனவரி 1946-இல், 1000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. 1978-இல் மொரார்ஜி தேசாய் அரசாங்கம் 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுகள் ஜனவரி 16 நள்ளிரவிலிருந்து செல்லாது என்று அறிவித்தது. 1978-லும் (1946லும் கூட) இது பொதுமக்களை பாதிக்கவில்லை. ஏனெனில், அவர்களில் மிகப்பெரும்பாலானோர் அந்த நோட்டுகளைப் வைத்திருக்கவில்லை. ஏன், பார்த்ததுகூட இல்லை. (1978இல் கூட 1000 ரூபாய் என்பது பெரும் தொகை; சாமானியர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் பார்த்தது இல்லை).

மொரார்ஜி அரசின் நடவடிக்கை பொதுமக்களை பாதிக்கவில்லை; ‘கருப்புப் பணம்’ என்கிற தீமையையும் ஒழிக்கவில்லை. மோடி அரசின் நடவடிக்கையும் அதேபோல் பயனற்றதாகப் போகும்; அதே நேரத்தில் பொதுமக்களின் வாழ்க்கையையும் கடுமையாகப் பாதிக்கும் என்கிற பக்க விளைவும் இருக்கும்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்வது ‘கருப்புப் பணத்தை’ கட்டுபடுத்துகிறதோ இல்லையோ, இந்த நடவடிக்கை பணத்தை ரொக்கமாகப் பயன்படுத்தும் பொருளாதார அமைப்பிலிருந்து மாறிச்செல்லும் நீண்டகால விளைவினை ஏற்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் நிதி உதவி பெறாத, கணக்கில் வராத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அன்னிய வங்கிகளின் நிதியுதவியுடன் நடைபெறும் ‘கருப்பு நடவடிக்கைகள்’ இந்த ரொக்கமில்லாத இந்தியாவின் பார்வையிலிருந்து தப்பித்து விடும் என்பது ஒரு புறமிருக்க, ரொக்கமில்லாத இந்தியா என்பதே, ஒரு கிரெடிட் கார்டு வாங்குவதற்கும், வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும் ஒரு சாமானியன் படும்பாட்டினை அறியாத மேல்தட்டு வர்க்கத்தின் பகல் கனவுதான்.

ten thousand rupees
மதிப்பிழக்கச் செய்யப்பட்ட் பத்தாயிரம் ரூபாய் தாள்.

”எல்லைக்கு அப்பால்’ அச்சிடப்படும் போலி நோட்டுகளின் சுழற்சியைத் தடுப்பதன் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுக்க முடியுமென்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. புதிய நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் கள்ள நோட்டு உற்பத்தியைத் தடுக்கும் என்கிற அனுமானத்திலிருந்துதான் இந்த வாதம் எழுகிறது. அப்படியே இருந்தால் கூட போலிகளை உருவாக்க முடியாத வகையிலான புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தும் இந்தப் பணியை படிப்படியாக, யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் செய்திருக்கலாம். இப்படித்தான், பழைய நோட்டுகளை மாற்றி புதியவற்றை அறிமுகப்படுத்தும் பணி இதுவரை நடந்து வந்திருக்கிறது. நவம்பர் 8 இரவிலேயே பனிச்சரிவு போல் கள்ள நோட்டுகள் வந்து குவியும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கக் கூடிய நிலை இல்லையே? மக்களின் பாதுகாப்பு உணர்வின் மீதும், சவுகரியங்கள் மீதும் அதிரடியான ஆச்சரியமூட்டக்கூடிய பெரும் தாக்குதலை ஏன் அரசாங்கம் அந்த இரவில் தவிர்க்கவில்லை.?

மோடி அரசின் இந்த நடவடிக்கை, நவீன இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் நடந்ததில்லை. பெரும்பணக்காரர்கள் வைத்திருக்கும் நோட்டுகளை மட்டும் மதிப்பிழக்கச் செய்து, பிறரின் நோட்டுகளுக்கு விலக்கு அளித்த பிரிட்டிஷ் அரசாங்கம் கூட மோடி அரசை விட மக்களின் உணர்வுகளுக்கு அதிகம் மதிப்பளித்திருக்கிறது. இந்த அவசர நடவடிக்கை, அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அமுல்படுத்தும் வகையில் மோடி எடுத்துவரும் ஏராளமான பிற நடவடிக்கைகளைப் போன்றதுதான். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது மக்களுக்கு எதிரானது.

– பிரபாத் பட்நாயக்
நன்றி: thecitizen
( பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் முன்னால் பேராசிரியர் மற்றும் பல்வேறு பொருளாதார கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார்.  ‘சிடிசன்’ இணைய இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் )

தமிழாக்கம் : விஜயசங்கர் ராமச்சந்திரன்
(
ஃபிரண்ட்லைன் ஆசிரியரான விஜயசங்கர் ராமச்சந்திரன் அவரது  ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவருக்கு எமது நன்றி.)

மோடி என்ன பெரிய பருப்பா ? மக்கள் கருத்துக்கள் !

9

காசேதான் கடவுளப்பா
அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமப்பா…
கைக்கு கை மாறும் பணமே

உன்னை கைப் பற்ற நினைக்குது மனமே…

து வேற நேரம் காலம் தெரியாம கத்திகிட்டு கெடக்கு. முதல்ல அந்த ரேடியோவ நிறுத்துடா தம்பின்னு கோபமா சத்தம் போட்டுட்டேன். நேத்துலேருந்து ஆயிரம், ஐநூறுங்கற வார்த்தைதான் எல்லா வடிவத்துலயும் காதுல ரீங்காரமா கேட்டுட்டே இருக்கு இதுல பாட்டுலயும் காசு பணமுன்னா கண்ண கட்டுது. வேலைய முடிச்சுட்டு இருக்குற பணத்த கைச்செலவுக்கு மாத்திகிட்டு வரலன்னு அவசரமா கெளம்பும் போது பாட்டு வேற?

பின்ன என்னங்க! காசுதான் எல்லாமுன்னு அந்த கடவுளுக்கே தெரியும் போது மோடிக்கு தெரியாம இருக்குன்னா அவரு எப்பேர்பட்ட முட்டாளா இருந்துருக்கனும். நியாயமா பாத்தா மோடி மேலதான் இந்த கோபம் வந்துருக்கனும். நமக்கு மட்டும்தான் இந்த கோபம் வருதோன்னு தோணவே வங்கிக்கு வந்தவங்கக்கிட்டையும் பேசி பாத்தேன்.

இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க.
இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க.

சென்னையோட முக்கியமான இடத்துல இருக்கும் அந்த ஸ்டேட் பேங்கு வாசல்ல புதுசா மாத்துன பணத்தோட பத்துபேர் நின்னாங்க. அவங்கள்ட்ட பேசுனோம்.

நாங்க ஜாபர்கான் போட்டையிலேருந்து வர்ரோம். பையனுக்கு வர ஞாயித்து கிழமை கல்யாணம் வச்சுருக்கோம். தாலி, பட்டுபுடவை வேஷ்டி, மத்த துணிமணி, மண்டபத்துக்கு, மளிகை சாமான் எதுக்குமே பணம் இல்ல. யாருகிட்ட கடன் கேக்க முடியும். அப்படியே குடுத்தாலும் நூறு நூறாவா குடுப்பான். செலவுக்கு வேணுமேன்னு இருந்த பணத்த எல்லாம் எடுத்துட்டோம். வாங்குற பொருளுக்கு கார்டு (டெபிட்கார்ட்) தேச்சு பணம் கொடுக்கவும் முடியாது. டெபாசிட் பண்ணினாலும் 4 ஆயிரம்தான் கொடுப்பான். எப்படி யோசிச்சாலும் மண்ட கொழம்புது. கல்யாண வேலை அப்படியே தேங்கி போயி நிக்குது.

இவங்க எல்லாம் எங்க காம்பவுண்ட சேர்ந்தவங்க (இருந்தவர்களில் ஒரு முஸ்லிமும் அடக்கம்). எங்க நிலைமைய பாத்துட்டு அவங்க எல்லாரும் சேந்து அடையாள அட்டைய பயன்படுத்தி எனக்கு 52 ஆயிரம் பணம் எடுத்து கொடுத்துருக்காங்க. திரும்பவும் வரிசைல நிக்கலாமா இல்ல வேற பேங்குக்கு போகலாமான்னு யோசிச்சோம் ஒருத்தர் ஒரு நாளைக்குதான் பணம் எடுக்கலாமுன்னு சொல்லிக்குறாங்க. அதான் நாளைக்கு வரலாமான்னு பேசிட்டு இருக்கோம்.” என்றார்.

கட்டிட தொழிலாளி ஒருவர் “நேத்து ஒரு நாள் பொறி கலங்கி போனாப்போல போச்சு. நானு கட்டட தொழிலாளிங்க. வேலை முடிஞ்சு கூலி வாங்கிட்டு வந்த பணம் வீட்டுக்கு வந்ததும் செல்லாதுன்னா எப்படி இருக்கும் சொல்லுங்க. சத்தியமா நேத்து ஒரு ரூபா கிடையாது. இன்னைக்கு வரைக்கும் எதுவுமே வாங்கல. பிள்ளைகள வச்சுகிட்டு பால் கூட வாங்க முடியாம வெறும் வறடீதான் குடிச்சோம்.” என்றார்

காலை வேலையின் பரபரப்பினால் அடங்காத வேர்வையோட, வாரப்படாத தலையுமா, அள்ளி சொறுகிய சேலையுமா பணம் செல்லுமா செல்லாத என்ற பெரும் பேச்சுடன் அதே வளாகத்துக்குள் இருந்த ரேசன் கடையில நின்றது பெண்கள் கூட்டம்.

சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகை
சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகை

“வாங்குனா சில்லறை கொடுக்கனுமே அதுக்கு அவங்க எங்க போவாங்க.” என்றார் ஒருவர்.

“அதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு பிறகு செல்லாதுன்னு சொல்லிருக்கனும்.”

“பத்து நாளையில நம்ம நெலமை சரியாகிடும். பணக்காரன் பாடுதான் திண்டாட்டம். வச்சுருக்க பணத்துக்கு வரி கட்டியாகனும். அப்படி பதுக்கி வச்சுருக்கப் பணத்த ஒழிக்கதாங்க இதெல்லாம்.”

“அப்படியே நேர்மையா கட்டிடகிட்டிட போறானுங்க”

“ஒருத்தர் கிட்ட 100 கோடி பணம் இருக்குன்னு வச்சுக்குங்க. பேங்கல கொண்டந்து போட்டா வருமான வரி கட்டித்தான் ஆகனும் ஏமாத்தவே முடியாது”

“ஒருத்தரால எவ்வளவு பணம் வரி இல்லாம மாத்த முடியுமோ அதுக்கு ஆளு ஒன்னுக்கு இவ்வளவு கமிஷன் தாரேன்னா நானும் போவேன் நீயும் போவே. ஒன்னையும் என்னையும் ஏற்பாடு பண்ணித் தர ஆளு இருக்கும். ரேசன் சாமான் வாங்க 150 பணத்துக்கு என்ன செய்றதுன்னு முழிச்சுட்டு இருக்கவங்க கிட்ட பதுக்கி வைக்கிறதுக்கு ஏது பணம். பணக்காரன் மண்ணு, மனையா வச்சுருப்பானே தவிர பணமா எதுக்கு வச்சுருக்கான்” என்று நீண்டது அந்த விவாதம்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில கூட்டம் சரவணபவன் ஹோட்டலையும் தாண்டி நின்னுச்சு. வரிசையின் நீளத்தைப் பாத்தா நமக்கு பணம் கிடைக்குமோ என்ற அச்சம் எல்லார் முகத்துலையும் தெரிஞ்சது. இந்த பேங்குல மாத்திரலாமா அந்த பேங்குல மாத்திரலாமான்னு நாலு எடத்துக்கு மாறி மாறி அலைஞ்சோம். நாங்க மட்டுந்தான் அப்படின்னு பாத்தா நின்னவங்கல்ல பாதி பேரு அப்படிதான்னு அப்புறந்தான் தெரிஞ்சது.

“இன்னைக்கே எனக்கு அவசரமா 50,000 ஆயிரம் பணம் வேணும். சரக்கு வந்து மூணு நாளாச்சு. இன்னைக்கு பார்சல எடுக்கலன்னா திருப்பி அனுப்பிருவானுங்க. அக்கவுண்டுல பணம் இருந்தும் எடுக்க முடியல. எடுத்தாலும் வெறும் 4 ஆயிரத்த வச்சுகிட்டு நாக்கா வழிக்க முடியும். யாருகிட்டயும் உதவியும் கேக்க முடியாது. மானங்கெட்ட அரசாங்கத்தை நம்பி எப்படி தொழில் செய்றது.” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு.
உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு – மோடிக்கு ஆதரவாக வெடித்த ஒரு பார்ப்பனர் (காவி சட்டைக்காரர்)

அதே வரிசையில் பட்டையும் பூணூலுமாக ஒரு பெரியவர் கோபத்தோட பேசியனார். அவருக்கு முன்னால் யாரும் வரிசையில புகுந்துட்டாங்களா என்று விசாரிச்சா கருத்து சுதந்திரம் இல்லன்னாரு.

“வச்சுருக்க பணத்தை டிசம்பர் கடைசி தேதிக்குள்ள மாத்திக்கனும், இல்ல ரிசர்வ் வங்கியல போதுமான ஆவணங்கல கொடுத்து பழய பணத்தப் புது பணமா மாத்திக்கனும். இப்படிதான் பேப்பர்ல போட்டுருக்கு. இவரு (முன்னாடி இருப்பவர்.) நல்லா பேப்பர படிச்சு பாருங்க ரிசர்வ் வங்கி கிளைகள்ளையும் மாத்திக்கலாம்னு போட்டுருக்குன்னு சொல்லிட்டு, அரசாங்கத்தையும் திட்றாரு.

எனக்கு விசயம் தெரியாதுன்னு நெனச்சு பேசுராரு. உங்க கிட்டையும் எங்கிட்டையும் பணம் இல்ல நமக்கு பாதிப்பும் இல்ல. பணக்காரந்தான் இதுல மாட்டப் போறான். மோடி சரியாதான் முடிவு எடுத்துருக்காரு. ஆனா மம்தா, மோடியோட முடிவு தவறுன்னு சொல்லிருக்கா அவள நிக்க வச்சு சுடனும். எது பேசவும் கருத்து சுதந்திரமே இல்லாம போச்சும்மா” என்றார். விட்டா அவரு உடனே போய் சுட்டுறுவாருன்னு தோணுச்சு. டாடா, பிர்லா, அம்பானி, அதானி வகையறாக்களெல்லாம் வெளிநாட்டுல முதலீடா பதுக்கியிருக்கிறதெல்லாம் தெரியாத அளவுக்கு அவரு அப்பாவியா? ஆனா அவரோட அதிகார தொனியா பாத்தா அப்படி தெரியல.

இதையெல்லாம் வேடிக்கை பாத்துட்டு இருந்த சரவணபவன் ஊழியரிடம் பணப் பிரச்சனையில் வியாபாரம் எப்படி இருக்கு என பேச்சு கொடுத்தோம்.

“நீங்களே சொல்லிட்டிங்க பணம் பிரச்சனைன்னு பிறகு வியாபாரம் எப்படின்னா என்னத்த சொல்றது. நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம். இருந்தும் யாரும் வரல, நாங்கதான் சாப்பிட்டோம். வியாபாரம் பாதிக்குமே சரி பேங்குல மாத்திக்கலான்னு வாங்குனா அதுக்கும் சேத்து வருமான வரி கட்றது யாரு.

நானுமே பிரச்சனையில மாட்டிகிட்டேன். வீடு கட்ற செலவுக்கு வேணுமேன்னு தீபாவளி அன்னைக்கிதான் 2 லட்சத்துக்கு நகைய வித்துட்டு பணமா வச்சிருந்தேன். பணம் செல்லாதுன்னதும் நகை விலை பவுனுக்கு 2 ஆயிரம் ஏறி போச்சு. இப்ப வித்து இருக்கலாமேன்னு வருத்தப்படுறதா? இல்ல இருக்குற பணத்த முழுசா மாத்த முடியுமான்னு கவலப்படுறதா சொல்லுங்க” என்றார்.

நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம்.
நேத்து கடையில போராட்டம் பண்ணி வீட்டு செலவுக்கு ஐநூருவா வாங்கிட்டு போனேன். அறிவிப்பப் பாத்ததும் சமையலைக் கொறச்சுதான் செஞ்சோம் – சரவணபவன் ஊழியர்.

மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண், “பணம் செல்லாதுன்னு தெரிஞ்சப்ப விடிஞ்சு செலவு பன்ன 110 ரூபாய தவிர காசு கெடையாது. காலையில காலேஜ் பேற பிள்ளைக்கு பஸ்சு டிக்கட்டுக்கு என்ன பன்றது.  குழு பணம் வங்கியில போட எங்க உறுப்பினர்கள் கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தச்சு. இருந்த ரெண்டு ஐநூருவா நோட்ட வச்சுட்டு இருந்த நூறுருவா நோட்ட எடுத்துகிட்டேன்.

ராத்திரி வெளியூருக்கு போறேன்னு இரயில்வே ஸ்டேசனுக்கு போன எங்கூட்டுக் காரரு டிக்கெட் தர மாட்டேங்குறாங்க. டிக்கெட் தந்தா சில்லறை தர மாட்டேங்கறாங்கன்னு வீட்டுக்கு திரும்பியே வந்துட்டார். அவராவது பரவால்ல போகாமையே திரும்பிட்டார். வெளியூர் காரங்க பாதி ராத்திரி ரயிலுக்காக காத்துக் கெடந்தவங்க நெலம ரெம்ப மோசம்னாரு. குழந்தைங்கள வச்சுகிட்டு பாலு கூட வாங்க முடியாம அவதிப் பட்டாங்களாம். மோடி செஞ்சது தப்பு ரைட்டுங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும் அர்த்த ராத்திரியில கண்ணக் கட்டி காட்டுல விட்டாப்போல செஞ்சுபுட்டேரே அதுதான் மனசு ஆரல.”

“பக்கத்தில் இருந்தவர் சொன்னார், “நேத்து வேலை முடிஞ்சு கூலி வாங்கிட்டு வரும் போது பஸ்சுல டிக்கெட்டு தரலன்னுட்டாங்க. ஐநூறுவா மாத்த ஐடி புருப் இருக்கான்னு கேக்குறான். ரேசன் கார்டு ஜெராக்ஸ்ச கொடுத்தா வாங்காம நடு வழியிலேயே எறக்கி விட்டுட்டான். எங்கூட வியாபாரம் பாக்குறவங்க பூ, பழம், காய் எல்லாமே விக்காம வீணா போச்சு. காசு இருந்தாதானே மக்களும் வாங்குவாங்க.” என்றார்.

அவர் கூட வந்தவரோ “மூனு நாளா எம்பையனுக்கு உடம்பு சரியில்லை நேத்து இருந்த இருநூறு ரூபாய டாக்டருக்கு குடுத்து வைத்தியம் பாத்துட்டேன். 700 ரூபாய்கி மருந்து எழுதிக் கொடுத்துருக்காரு. கையில இருந்த ஐநூறு செல்லாதுன்னு மருந்து தர மறுத்துட்டாங்க. காசு இருந்தும் இன்னைக்கி சாயங்காலம் வரைக்கும் மருந்து வாங்க முடியல. சுருண்டு படுத்துருக்கான் எம்பையன். இப்படி திடீர்னு ஒரு முடிவெடுத்தா மக்கள் எப்படி சிரமப்படுவாங்கன்னு கொஞ்சமாச்சு யோசிச்சி இருப்பாங்களா?

“ரொம்ப அடாவடியா இருக்குங்க, மோடி என்ன பெரிய பருப்பா (மயிர) ராத்திரியோட ராத்திரியா விடிஞ்சா பணம் செல்லாதுன்னு அவன் சௌகரியத்துக்கு ஆணவமா அறிவிச்சுட்டான். பாலு, தண்ணி எதுவும் வாங்க முடியலங்க. ஆயிரம் ஐநூறு செல்லாதுன்னு அரசுதானே அறிவிச்சுச்சு அவங்களுதுதானே கேஸ் கம்பெனி, ரேசன் கடை, ரயில்வே ஸ்டேசன், பஸ்சு இதெல்லாம். அங்க வாங்கலாமில்ல.” என்றார் ரேசன் கடையில நாங்க சந்தித்த ஒரு பெண்.

மோடியின் திமிரை அந்தப் பெண் புரிந்துகொண்ட மாதிரி டி.வியிலயோ இல்லை பத்திரிகைகள்ள கட்டுரை எழுதற அறிஞருங்களுக்கோ தெரியல! என்ன இருந்தாலும் பாதிக்கப்பட்டது நாம இல்லையா?

– சரசம்மா, சங்கவை.

மாவீரன் திப்பு – மானங்கெட்ட ஆர்.எஸ்.எஸ் : கேலிச்சித்திரம்

0
thippu-rss cartoon-Slider

திப்புசுல்தான் சாதாரண மன்னன் தான். சுதந்திர போராட்ட வீரன் அல்ல. – கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு

thippu-rss cartoon

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிட்லர் வெற்றி ! கேலிச்சித்திரம்

7
TRUMP CARTOON SLIDER

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட்  டிரம்ப் வெற்றி !

தங்கள் நாட்டின் அதிபர் பதவிக்கு பொருத்தமானவராக அமெரிக்க முதலாளி வர்க்கத்தால் டொனால்ட் டிரம்ப்பைப் போன்ற கழிசடையையே உற்பத்தி செய்ய முடியும் என்றால் உலக முதலாளித்துவத்தின் கோபுர கலசமாக அமெரிக்கா இருப்பது நியாயம்தானே?

TRUMP CARTOON 1

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

யாருக்கு மூடு ஜாஸ்தி ? – இந்து ஆன்மீக சொற்பொழிவு !

40

பரிமலை கோயிலுக்குள் 10 வயதிலிருந்து – 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கலாம் என கேரள அரசு 07-11-2016 அன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகால பார்ப்பனிய அடிமைத்தனத்தில் ஆட்பட்டிருக்கும் பக்த கோடிகள் இதை சுயமரியாதை தன்மானம் தொடர்பான விவகாரமாக பார்க்கவில்லை. கோயிலுக்குள் நுழைந்தால் தெய்வக் குத்தம் ஆகிவிடும் எனும் மக்களை மிரட்டிப் பணிய வைக்கும் பார்ப்பனியத்தின் பொதுபுத்தி மக்களின் இத்தகைய உணர்வு நிலைக்கு பிரதானமான காரணமாக இருக்கிறது.

sun-news-vivatha-medaiஆனால் பொதுசிவில் சட்டம் தொடர்பாக இதுவரை பம்மாத்து காட்டி வந்த இந்துத்துவக் கும்பலோ கோயிலுக்குள் இந்துப் பெண்கள் ஏன் நுழையக்கூடாது என்பதில் புதுக் காரணம் ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

07-11-2016 அன்று சன் செய்தி விவாத மேடையில் சாஸ்திர விரோதமா? சம(ய) உரிமையா? எனும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் என்று சீனிவாச சாஸ்திரிகள், குமரவேல் எனும் இருபார்ப்பனர்கள் வழங்கிய அருளுரை பார்ப்பனியம் பெண்களை எப்படி பார்க்கிறது என்பதை எடுத்துக்காட்டியது.

நெறியாளர் தமிழ்நாட்டில் மேல்மருத்துவர் ஆதிபராசக்தி கோயிலைக் காட்டி, பெண்கள் கருவறைக்குள்ளேயே பூசை செய்கின்றனரே! ஏன் சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சீனிவாச சாஸ்திரிகள் நச்சென்று ஒரு பதிலைச் சொன்னார். சாஸ்திரிகளின் கருத்துப்படி மேல்மருவத்தூர் இந்துதர்மத்தின்படி நடக்கும் கோயில் கிடையாதாம். காஞ்சி சங்கராச்சாரிக்கு இணையில்லை என்றாலும் ஓரளவு ரவுடியாக அம்மா பராசக்தி இருந்தாலும் அவர் ஆகமவிதியின் கீழ் வராத சூத்திரர் என்கிறார் சீனிவாச சாஸ்திரிகள்! ஆகமவிதிப்படி நடக்காத மேல்மருவத்தூர் கோயில் இந்து கோயில் அல்ல; பக்தர்களும் இந்துக்கள் அல்லர் என்பது சாஸ்திரிகளின் நிலைப்பாடு!

மற்றொரு ஆன்மீக சொற்பொழிவாளர் குமரவேல் சபரிமலைக்கு பெண்கள் செல்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது என்கிறார். ஆண்களின் உடலமைப்பைப் பார்த்து பெண்களுக்கு அவ்வளவு எளிதில் காமம் கிளம்பாதாம். ஆனால் பெண்களின் உடலமைப்பு அப்படிபட்டதல்ல என்கிறார். பார்த்தவுடனேயே ஆண்களுக்கு பற்றிக்கொள்ளுமாம்; மேலும் அவ்வாறு காமம் பற்றிக்கொள்வதை ஆண்களின் உடலைமப்பு காட்டிக்கொடுக்கும் என்கிறார். அதாவது விறைத்துவிடும் என்கிறார். இந்த காரணத்தினால் ஆண்களின் விரதம் தடைபடுகிறது. ஆகையால் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்றார்.

இதை மறுத்து பேசப்புகுந்த சியாமளா என்பவர் ஆண்களுக்கு அத்துணை எளிதில் டெம்ட் (‘அவர் கூறியபடியே’) ஆகிறது என்றால் ஆண்கள் கடைபிடிக்கும் விரதத்தின் யோக்கியம் என்ன? என்று மறுகேள்வி கேட்டார். இவ்விதம் சாஸ்திர விரோதமா? சம(ய) உரிமையா? எனும் விவாத நிகழ்ச்சியை ஆன்மீக சொற்பொழிவாளர்கள் யாருக்கு மூடு ஜாஸ்தி? என்பதை நிறுவுவதிலேயே பொழுதைக் கழித்தனர்!

குறிப்பாக ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படும் அளவிற்கு பெண்களின் உடலமைப்பு இருப்பதால் விரதம் தடைபடுகிறது என்று குமரவேல் சொன்ன பொழுது சீனிவாச சாஸ்திரிகள் ஸ்திரிகளுக்குத்தான் காமம் அதிகம் என்று குமரவேலின் கருத்தை மறுத்தார்! மேலும் இது கலியுகம் என்பதால் காமம் மிகுதியாக இருக்கும்; வேறு யுகத்தில் கூட பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதைப் பற்றி பேசலாம்; ஆனால் கலியுகத்தில் கூடவே கூடாது என்றார்!

கிட்டத்தட்ட இதையேதான் முசுலீம் மதவாதிகளும் கூறுகின்றனர். பெண்கள் புர்கா போடவேண்டியதின் காரணமே ஆண்களின் காமப் பார்வையிலிருந்து தப்புவதோடு, ஆண்களை அவ்விதம் உணர்ச்சிவசப்படாமல் காப்பாற்றும் பொருட்டே என்கின்றனர். அய்யா ஜைனுலாபுதீனிடம் இது குறித்து கேட்டால் அவர் சாஸ்திரிகளின் பேச்சையே குர் ஆன் சொல்லும் உண்மை என  வலியுறுத்துவார். பெண்ணினத்திற்கு எதிராக கடவுளோடு இவர்கள் வைத்த கூட்டணியில் மதபேதம் கிடையாது.

விவாதத்தில் பங்கேற்ற ஸ்ருதி சுரஷ் என்ற மாணவி இந்த அயோக்கியர்களின் விவாதத்தைக் கேட்டுவிட்டு பதில் சொல்ல முடியாமல் ‘தவறாக பேசுகின்றனர்’ என்று வெட்கினார்.

சியாமளா எந்த வேத சாஸ்திரம் சபரி மலைக்குள் பெண்கள் செல்வதைத் தடுக்கிறது? என்பதற்கு ஆதாரம் கேட்டார். சீனிவாச சாஸ்திரிகளும், குமரவேலும் சாஸ்திரத்திற்கு ஆதாரம் கேட்டவுடன் சாஸ்திரம் அல்ல; ஐதீகம் காரணமாக போகக் கூடாது என்று அந்தர்பல்டி அடித்தனர். சீனிவாச சாஸ்திரிகள், ஐயப்பனின் பதினெட்டு படிகளும் புருஷ லட்சணத்திற்கு உரியது என்று அடுத்த பொய்யை அவிழ்த்துவிட்டார். இதன் படி ஒவ்வொரு படியும் ஒவ்வொரு புராணங்களைக் குறிப்பதாகவும் பதினெட்டு புரணாங்களின் குறியீடாக பதினெட்டு படிகள் இருப்பதாகவும் புருஷ இலட்சணம் படி ஆண்கள் தான் செல்ல வேண்டுமென அடித்துவிட்டார்! புருஷ இலட்சண இலக்கணத்தின்படி பெண் கணவனுக்கு பத்தினியாக பதிவிரதையாக இருப்பது அவசியம் என்றார்.

ready-to-wait
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது கூடாது என்பதை பெண்களே ஏற்கிறார்கள் என்று காட்டுவதற்கு “Ready to wait” என்ற ஹேஷ்டெக்குடன் இந்துமதவெறியர்கள் செய்யும் பிரச்சாரம்!

இங்கு மறுக்கப் புகுந்த சியாமளா, ‘பத்தினி ஒழுக்கம் பெண் படி தாண்டக் கூடாது என்று சொல்கிறது; இன்றைக்கு எந்த பெண் படிதாண்டாமல் இருக்கிறார்? வேலைக்கு பெண்கள் செல்லாமல் குடும்பத்தை நடத்த முடிவதில்லை’ என்று கூறினார். இவ்வளவிற்குப் பிறகும் பத்தினி விரதம் முக்கியம் என்று சாஸ்திரி உடும்பு பிடியாக நின்றார்.

சாஸ்திரியின் பதிலைப் பார்த்தபிறகுதான் வேலைக்குச் செல்லும் பெண்கள் மோசமானவர்கள் என்று காஞ்சி பெரியவா ஏன் சொல்கிறார் என்று புரிந்தது! படி தாண்டி பத்தினி விரதத்தை மீறுபவர்களை ஒழுக்கம் கெட்டவர்கள் என்று இந்துதர்மமே சொல்வதை காஞ்சிப் பெரியவா முதல் சீனிவாச சாஸ்திரிகள் வரை வலியுறுத்துவதை தெரிந்து கொள்ள முடிந்தது!

மேலும் விவாதத்தில் சீனிவாச சாஸ்திரிகள் கணவனை வணங்கி காலில் விழுந்தால் அது ஐயப்பனையே வணங்கியதற்கு சமம் என்று ஒரு பெண் கணவனைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கூறினார். தடாலடியாக இந்துமதத்தில் ஒரு பெண்ணுக்கு பாவமும் கிடையாது; புண்ணியமும் கிடையாது என்று மனு ஸ்மிருதியை எடுத்துக்காட்டி பெண்கள் சபரிமலைக்குப் போனாலும் புண்ணியம் ஏதும் கிடைக்காது; ஆகையால் சபரிமலைக்கு பெண்கள் போவதில் பிரயோசனம் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்!

இங்கு சியாமளா என்பவர் ஆண்கள் ஒரு நாள் மட்டுமே விரதம் இருந்து மாலையணிந்து போகிறார்களே அவர்களுக்கு மட்டும் புண்ணியம் கிடைக்குமா என்று கேட்டார். அதற்கு சாஸ்திரிகள் ‘இதென்ன பிரமாதம்? தைமாதம் போனால் சபரிமலையில் மலக்குவியல்களாக இருப்பதால் பெரும்பாலான பக்தர்கள் விரத மண்டலத்தை ஒருமாதம் முன்கூட்டியே சிப்ட் செய்துபோகின்றனர்’ என்று ஆண்களுக்கான அட்ஜெஸ்ட்மெண்ட் சரிதான் என்று பேசினார்.

சாஸ்திரியின் இந்தக் கருத்துக்கு ஆமோதித்தால் இந்துத்துவக் குட்டு உடைந்துவிடும் என்று நினைத்த குமரவேல் இதை மறுத்து சபரிமலையில் மந்திரம் ஓதி தகடுபொருத்தி சக்தி வரவழைக்கப்படுகிறது. இதை மீறி விரதத்தை முன்தள்ளுவது அல்லது முறையாக செய்யாமல் இருந்தால் தகடின் பாசிட்டிவ் பவர் ஆண்களுக்கு கிடைக்காது என்றும் விரதத்தில் குறைவைக்கும் ஆண்களுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்று சியாமளாவை மிரட்டி சமாதானப்படுத்தினார்!

மேலும் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை ஏன் தெரியுமா என்று குமரவேல் கேட்டார். காயத்ரி மந்திரத்தின் வீரியத்தை பெண்களால் தாக்குப்பிடிக்கும் அளவிற்கு பெண்களுக்கு வலுவில்லை என்பதால் மந்திரம் சொல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றார்! (ஆனால் மனுஸ்மிருதியில் மனு, பெண்கள் அனைவரும் சூத்திரர்களாகவே கருதப்பட வேண்டும் என்பதால் மந்திரங்களும் வேதங்களும் பெண்களிடம் இருந்து விலக்கப்பட வேண்டும் என்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது).

மக்கள் தெய்வக் குத்தம் வந்துவிடுமோ என்று சபரிமலைக்குச் செல்ல பயப்படும் பொழுது, சாஸ்திரியும் குமரவேலும்

  • பெண்கள் அடிப்படையிலேயே இழிவானவர்கள்,
  • காமம் மிகுந்தவர்கள்,
  • பத்தினி விரதம் இருக்க வேண்டும்,
  • பெண்ணுக்கு பாவம் புண்ணியம் கிடையாது,
  • மந்திரங்கள், வேதம் ஓத அனுமதியில்லை

என்று காரணம் சொல்கிறார்கள். இந்த இந்துதர்மத்தின் படி பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்கிறார்கள். இதுதான் காரணம் என்பது மக்களுக்குத் தெரியாது. அப்படி மக்களுக்குத் தெரிந்தால் தன்னை இழிவுபடுத்தும் பார்ப்பனிய இந்து மதத்திற்கு கண்டிப்பாக செருப்படி நிச்சயம் என்பது இவர்களின் வாக்குமூலத்திலிருந்து புரிந்தது!

– தமிழ்வேல்

நாங்கள் மார்க்சின் வாரிசுகள் – பென்னாகரத்தில் நவம்பர் புரட்சி நூற்றாண்டு விழா !

0
கலைநிகழ்ச்சி

நவம்பர் 7 ரஷ்ய சோசலிசப் புரட்சியின்  100 -வது ஆண்டு தொடக்க விழா !
காரல் மார்க்ஸ் 200-வது  பிறந்தநாள்  விழா!
நக்சல்பாரி  பேரெழுச்சியின் 50-வது ஆண்டு துவக்கவிழா!
சீன கலாச்சார புரட்சியின்  50-ஆண்டு நிறைவு விழா!
கம்யூனிச  அகிலத்தின் 150-துவக்க விழா!

பென்னாகரம்  அரங்குகூட்டம்.

வம்பர் 7 ரஷ்ய  புரட்சிநாளை ஒவ்வொரு ஆண்டும் பென்னாகரம் பகுதி விவிமு, புமாஇமு தோழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.  இவ்வாண்டு ஐம்பெரும் விழாக்கள் என்பதால் இன்னும் அதிகமாக சிறப்புச்செய்யும் வகையில் தோழர்கள் திட்டமிட்டு  அரங்குகூட்டமாக நிகழ்ச்சி நடத்தினர்.

04aஇசைச்சித்திரம்இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாவட்டம் முழுவதும் இந்நாளை கொண்டாட  வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் பார்க்கும் இடமெல்லாம் சுவரொட்டியும் பென்னாகரம் வட்டாரத்தின் பல பகுதிகளில் தோரணங்களும் கட்டப்பட்டு காட்சி அளித்தது. பரவலாக துண்டு பிரசுரமும் வினியோகித்தனர். இதனைத் தொடர்ந்து, 8 கிளைப்பகுதிகளில் கொடியேற்றினர்.  பின்னர்,   இறுதியாக பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டெம்போ ஸ்டேண்டில் முழக்கமிட்டு கொடியேற்றிய பிறகு அனைவரும் பேரணியாக அரங்குகூட்டம் நடக்கும் இடத்தை சென்றடைந்தனர்.

இதற்கு முன்னதாக, தோழர்களின் வீடுகளில் புத்தாடை அணிந்து அந்த அந்த கிராமங்களில் இனிப்புகளை வழங்கியும் நவம்பர் 7  உழைக்கும் மக்கள் கொண்டாட வேண்டிய நாள் என்கிற உழைக்க மக்களும் அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் 07.11.2016  அன்று  குடும்பம்  குடும்பமாக  நவம்பர் 7 விழா அரங்கு கூட்டத்தில்  நூற்றுக்கணக்கான  உழைக்கும்  மக்களும் பல்வேறு புரட்சிகர, ஜனநாயக சக்திகளும் கலந்து  கொண்டனர்.

இந்த அரங்கு கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை  முன்னணி வட்டார செயலாளர் தோழர் கோபிநாத்  தலைமை  தாங்கினார். அடுத்ததாக மக்கள் அதிகாரம்   மண்டல ஒருங்கினைப்பாளர் முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் ஆர்.எஸ்.எஸ்  பி.ஜே.பியும் விழா எடுக்கிறான். நம் மூதாதையர்களை  அழித்துவிட்டு நம்மை விழா எடுக்க வைக்கிறார்கள்..  இதை மக்களும் விழாவாக கொண்டாடுகிறார்கள் இப்படி  எதிரியார், நண்பன் யார் என தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.  இந்த  குழப்பத்தை போக்கி எதிரியார் நண்பன் யார் என்பதை புரிய வைப்பதும் இன்றைய அரசியல் சூழலில் வெகு சீக்கிரமே புரட்சியை சாதிக்க விரைந்து செயல்படவேண்டும் என்பதே  இந்த  விழாக்களின்  நோக்கம் என்றார்.

05bபார்வையாளர்கள்மாமேதை  கார்ல் மார்க்சு தியாகத்தை பற்றிப்பேசிய முத்துக்குமார்,   நாம்  செத்தாலும்  பரவாயில்லை, நம்  பிள்ளைகளாவது நல்லாயிருக்கட்டும் என்றுதான் நாமெல்லாம்  நினைப்போம். பிள்ளைகள் பட்டினி கிடந்து  சாவதை பார்த்துக்கொண்டு நம்மால் வாழ முடியாது ஆனால் நான்கு பிள்ளைகள் செத்து போன பிறகும்  மார்க்ஸ் மக்களுக்காக வாழ்ந்தார், போராடினார். எந்த  நிலையிலும் போராட்டத்தை கைவிடவில்லை மனித  குலத்தையே தனது குடும்பமாக கருதினார். தனது உறவாக கருதினார்.  இதற்கான போராட்டத்தில்   பல்வேறு துன்பங்களையே மகிழ்ச்சியாக கருதினார்.  இதற்கு நேர் எதிராக இருக்கும் முதலாளித்தும் தான்  ஒருவனுடைய சுய நலத்திற்காக மனித குலத்தை பற்றி  துளியும் அக்கறையின்றி இயற்கையை அழிக்கின்றனர்.   இன்றைக்கு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதற்கு முதலாளியின் இலாபவெறிதான் காரணம்  முதலாளி இயற்கையை அழிக்கிறான். ஆக ஒருபுறம் மனித குலத்தை அழிக்கும் முதலாளித்துவ கொள்ளைக்கூட்டம் மறுபுறம் இதற்கு எதிராக போராடும்  மனித குலத்தை காக்கும் கார்ல் மார்க்ஸ்சின் வாரிசுகளாக புரட்சிகர கம்யூனிஸ்டுகளின் கூட்டம். இதில் ஒவ்வொருவரும் யார் பக்கம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இந்த முடிவை 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எடுத்தார்கள் ரஷ்ய மக்கள். மனித குலத்தை காக்கும்  கம்யூனிஸ்ட் இயக்கம்தான் தனக்கானது என முடிவு செய்தார்கள். மாமேதை தோழர் லெனின் தலைமையில்   அணி திரண்டு ஜார் ஆட்சியை தூக்கியெறிந்து ஒரு பொன்னுலகத்தை படைத்தனர். ரஷ்ய  மக்கள் அதன் பிறகு  கல்வி, மருத்துவம், குடியிருப்பு, போக்குவரத்து, மின்சாரம், பெண் விடுதலை என அனைத்தையும் பெற்று ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தனர். அது போன்று  நம் நாட்டிலும் படைக்க வேண்டும். இன்றைக்கு மும்பையில் அம்பானி கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு  ஒரு ஐயாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல். ஆனால் லட்சகணக்கான மக்கள் வசிக்க வீடு இல்லை, இப்படி மலைக்கும் மடுவுக்குமான  ஏற்றதாழ்வு இந்தியாவில் உள்ளது. மேலும் ஏழைகளுக்குள்ளே ஏற்றத்தாழ்வு உள்ளது. சாதிமாறி காதலித்தால் இங்கே உயிர் இருக்காது. கல்வி கடைசரக்காகிவிட்டது, படித்தாலும் வேலை இல்லை. பெண்கள் வாழவே முடியாத சமூகமாக, சமூகம் மாறிவிட்டது. அனைத்திலும் பகற்கொள்ளை நடக்கிறது. ஆனால் நல்லாட்சி தருவதாக கூறி ஆட்சி நடத்தும் இந்த அரசு கட்டமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. இதற்கு தீர்வு, 1967 ஆம் ஆண்டு மே மாதம் வெடித்த நக்சல்பாரி எழுச்சிதான் என்றும் இதுதான் உண்மையான மக்கள் அதிகாரம், ஜனநாயகம் என்றார்.

இதை சாதிக்க வேண்டும் என்றால் நாம் அமைப்பாக திரள்வது மட்டுமின்றி, அந்த அமைப்பு கலாச்சார ரீதியாகவும் வலுவான அமைப்பாக இருக்கவேண்டும். இதை 1966 ல் சீனத்தில் மாவோ கலாச்சார புரட்சின் அவசியத்தை நடத்தும் வகையில் உணர்த்தினார். புரட்சிக்கு பிறகு தான் கலாச்சார புரட்சி செய்யவேண்டும் என்பது அல்ல. இப்போதே நிலபிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய பிற்போக்கு கலாச்சாரத்திற்கு எதிராக சமரசமின்றி போராடவேண்டும், அப்போதுதான் நாம் வெற்றி பெற முடியும் என்றார்.

பின்னர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை பு.ஜ.தொ.மு மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் வழங்கினார்.  இதன்பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனியின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடந்தது. இறுதியாக பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் முடிந்த அரங்கு கூட்டம் முடிந்தது. பின்னர் அந்த மண்டபத்திலேயே  அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இவ்வாறு நடந்து முடிந்த இந்த விழா ஒரு மக்கள் விழாவாக மாறிவருகிறது என்றால் இது மிகையல்ல.

தகவல்:
விவசாயிகள்  விடுதலை  முன்னணி.
புரட்சிகர  மாணவர்  இளைஞர்  முன்னணி.
தருமபுரி.
தொடர்புக்கு: 99433 12467

கருப்புப் பணம் : மோடியின் கறைபடிந்த நாடகம் !

16

black money 1நூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்த உடனே யார் யார் எப்படி செயல்பட்டார்கள் என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று. கூடவே மோடியின் இந்த நாடகத்தில் பாதிக்கப்பட்டோரும், பலனடைந்தோரும் யார் எனப் பார்க்கலாம்.

செல்லாத 500, 1000 ரூபாயை மாற்றுவதற்கு சென்னையில் உள்ள பல்வேறு நகைக்கடைகள் நவம்பர் 8 நள்ளிரவு தாண்டியும் திறந்திருந்தனவாம். இது குறித்து தினகரன் நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது. செல்லாத ரூபாய்களை டிசம்பர் மாத இறுதி வரை வங்கியிலும், மார்ச் மாத வரையில் அடையாளச் சான்றுடனும் மாற்றிக் கொள்ளலாம் என்பதால் நகைக் கடை முதலாளிகள் கிடைத்த வரை சுருட்டியிருக்கின்றனர்.

மற்ற கடைகள் போல விற்பனைப் பொருட்கள் சில்லறை விலையில் இங்கே இல்லை என்பதால் ஐநூறு, ஆயிரம் ரூபாய்களில் புழங்கும் பல்வேறு முட்டாள் புதுப் பணக்காரர்களும், மேட்டுக்குடியினரும் தி.நகருக்கு படையெடுத்தனர். வந்தவர்கள் அனைவரும் கார்களில் வந்தனராம். நள்ளிரவில் பேருந்து சேவையும் இல்லை, இருந்திருந்தாலும் தமது பணத்தை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு இங்கே வரவேண்டிய தேவையில்லை.

நான்கு இலட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் கணக்கு காட்ட வேண்டும் என்பதால் வந்த மேட்டுக்குடியினர் தங்களது கார் ஓட்டுநர், வீட்டுப் பணியாளர்கள் பெயரில் ரசீது வாங்கிக் கொண்டு நகைகளை வாங்கியிருக்கின்றனர். சிலர் பிடித்த நகைகளையும், பலர் கிடைத்த நகைகளையும் வாங்கிக் கொண்டனர். சிலர் தங்க நாணயம், மற்றும் தங்க கட்டிகளை வாங்கிச் சென்றனர். சாலைகளில் கார்கள் அணிவகுத்து நிற்க, போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு செய்ய நகைகள் அமோகமாக விற்றிருக்கின்றன.

black money 2நேற்று நள்ளிரவில் மட்டும் பல கோடிகளுக்கு நகை விற்பனை இருந்திருக்கும் என ஒரு நகை வியாபாரி தெரிவித்ததாக தினகரன் செய்தி கூறுகிறது.

இவர்களெல்லாம் தகவல் கிடைத்த உடன் பணத்தை புத்திசாலித்தனமாக தங்கமாக மாற்றிக் கொள்வதாக நினைத்து அப்படி அலை பாய்ந்திருக்கின்றனர். 500, 1000 ரூபாய்களை ஒன்றரை மாதத்தில் மாற்றிக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவோ, நேரமோ இவர்களுக்கு இல்லை. மேலும் வங்கியில் மாற்றினால் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் என்றும் நினைத்திருக்கலாம். கூடவே அன்றாட வாழ்க்கையில் லஞ்சம், ஊழல், கழிவு மூலம் பணம் சுருட்டும் புதுப் பணக்காரர்களாகவும் இவர்கள் இருக்கலாம். அதில் அரசு மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளும் இருக்கலாம். இவர்களில் பலர் ஓசியில் தொந்தி வளர்க்கும் கூட்டத்தினராக இருக்க வேண்டும். ஒரு வேளை முறைகேடு இன்றி பணம் சம்பாதித்திருந்தாலும், தங்கம் வாங்கினால் தப்பிப்பாய் என்று அவசரப்படும் அப்பாவிகளும் கூட இதில் இருக்கலாம்.

பாரம்பரிய பணக்காரர்கள் மற்றும் முதலாளிகளது கருப்புப் பணம் வரியில்லா சொர்க்கங்கள் என அழைக்கப்படும் வெளிநாட்டு தீவுகளில் பத்திரமாக இருப்பதால் அவர்கள் இப்படி ‘அற்பத்தனமாக’ நடக்க வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்த வரை கருப்புப் பணமும் பாதுகாப்பாக இருக்கும். தேவைப்பட்டால் இந்தியாவில் தொழில் தொடங்கவோ சொத்துக்களை வாங்கவோ மொரிஷியஸ் போன்ற அன்னிய முதலீடுகளுக்காகவே ஆண்டு முழுவதும் சேவை செய்யும் நாடுகள் மூலம் சட்டப்பூர்வமாகவே அந்த பணத்தை கொண்டு வர முடியும்.

மோடிக்கு மட்டுமல்ல அவரது கூட்டாளிகளான அதானி, அம்பானி போன்ற கேடிகளுக்கும் இந்த கேடிகளுக்காக இந்திய பொருளாதாரத்தை இயக்கும் ரிசர்வ் வங்கி அறிஞர்களுக்கும் இது தெரியும். இருப்பினும் நாட்டு மக்களிடம் ஏதாவது செய்து காட்ட வேண்டிய தேவை மோடிக்கு இருக்கிறது. உத்தரகாண்ட் பேரழிவின் போது தானே விமானத்தில் சென்று, இனோவா கார் மூலம் 15,000 குஜராத் மக்களை காப்பாற்றியவர் என்பதால் இந்த நள்ளிரவு தடை மூலம் இந்தியாவின் கருப்புப்பணத்தை நொடியில் கைப்பற்றிவிட்டார் என்று விரைவில் பாலிவுட்டில் படமும், பாராட்டு விழாவும் நடக்கலாம். தொடர்ந்து ஏதாவது செய்தால்தான் தனது வெத்துவேட்டு இமேஜை தக்கவைக்க முடியும் என்பது பாசிஸ்டுகளின் பாலபாடம்.

black money 4
கருப்புப் பண மோசடி பாபா ராம் தேவுடன் கை தூக்குகிறார் கருப்புப் பண மீட்பு போராளி மோடி!

வோடோபோன், நோக்கியா போன்ற நிறுவனங்கள இங்கே வரிஏய்ப்பில் கொண்டு சென்ற பணம் எத்தனை ஆயிரம் கோடி? மோடி அரசும் சரி, அதற்கு முந்தைய மன்மோகன்சிங் அரசும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்த வராக்கடன் எத்தனை இலட்சம் கோடி? சமீபத்திய பனாமா லீக்சில் இந்திய முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முதலீடு செய்திருப்பது எத்தனை இலட்சம் கோடி?

இவற்றையெல்லாம் யாரும் கொண்டு வரவோ மீட்கவோ முடியாது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு அருகில் இருக்கும் நாளில் மோடி இதை அறிவித்திருக்கிறார். பகவான் அமெரிக்காவின் உற்சவர் மாற்றத்தில் அடிமை இந்தியாவின் வாழ்த்தாகவும் இதை சொல்லலாம்.

ஏனெனில் அனைவருக்கும் ஆதார், அனைவருக்கும் வங்கிக் கணக்கு அவசியம், மானியங்கள் வங்கிக் கணக்கில் அளிக்கப்படும், வணிக நடவடிக்கைகளில் ரொக்க புழக்கத்தை குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகமாக்குதல், ஜி.எஸ்.டி வரி விதிப்பு, பாதுகாப்பு துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி, பொதுத்துறையை தனியார்மயமாக்குவதை விரைவு படுத்துதல், ரிலையன்சின் ஜியோ அனைத்தும் இந்த செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டு அறிவிப்போடு தொடர்புடையது.

சில மேதாவிகள் மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம், பதுக்கல் பணம், அரசியல்வாதிகள் நோட்டுக்கு வாக்கு பெறுவது அனைத்தும் ஒழிக்கப்படும் என்று மடத்து ஆண்டிகள் மாளிகை கட்டும் கனவுத் திட்டம் போல பிதற்றுகிறார்கள். இத்தகைய முட்டாள்களே மோடியின் பிரச்சாரத்தின் காலாட்படையாக கதறுகிறார்கள் அதாவது உளறுகிறார்கள்.

ரொக்கப் புழக்கம் சுற்றும் லஞ்சம் எல்லாம் கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனை, இதர அரசு அலுவலகங்களில்தான். ஊழல் எனப்படும் உயர் மட்ட கொள்ளைகளில் இந்த ரொக்க புழக்கம் தேவையே இல்லை. அது பினாமி சொத்துக்களாகவும், வரியில்லா நாடுகளில் வங்கிக் கணக்காகவும், வரியில்லா தீவுகளில் பினாமி தொழில் நிறுவன பங்குகளாகவும் இன்னும் எண்ணற்ற வழிகளில் செயற்படுகின்றன. இனி வரும் தேர்தல் காலங்களில் மோடியின் நடவடிக்கை ஒரு வெங்காயத்தையும் ஒழித்து விடாது. ஏற்கனவே ஒரு வாக்குக்குக்கு 500, ஒரு குடும்பத்திற்கு 2000 என்று இருப்பதை இனி கூப்பன்களாகவோ, சேவைகளாகவோ கொடுத்து விட்டால் போதும். இவற்றை கொடுக்கல் வாங்கல் இல்லாமலே கூட சட்டப்பூர்வமாக செய்யமுடியும். ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜனே தமிழகத்தின் தேர்தலில் சில ஆயிரம் கோடி புழங்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதை இங்கே நினைவு கூர்க.

black money 3இதைத்தாண்டி ஜெயா கும்பல் பகிரங்கமாக கொடுக்கும் பணத்தை என்ன செய்ய முடியும்? திருப்பூர் கன்டெயினர் விவாகரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு பெரிய மலை முழுங்கி கொள்ளை நடக்கும் நாட்டில் இந்த செல்லாத 500 ரூபாய் நோட்டு நாடகம் யாரை தண்டிக்கும்? இனி இந்தியாவில் லஞ்சம், ஊழல், மற்றும் அரசியல்வாதிகளின் பணத்தேவைகளை சட்டப்பூர்வமான பெயரில் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து சேவை செய்யும் உள்நாட்டு ஹவாலா நிறுவனங்கள் வரும்.

மோடியின் அறிவிப்பால் நேற்றிரவு இரவு உணவு இல்லாமல் அதாவது 500 ரூபாய் நோட்டை மாற்ற முடியாமல் பட்டினி கிடந்தோர் பலர். அன்றாடக் கூலி வேலைகளுக்கு மாலையில் கொடுக்க சில்லறை இல்லை என்பதால் பல நூறு கட்டிடத் தொழிலாளிகள் வேலை இழந்திருக்கின்றனர். சில்லறை பிரச்சினைகளுக்காக சிறு வியாபாரிகளும், அன்றாடம் அண்ணாச்சி கடைகளில் வாங்கும் சாதாரண மக்களும் சொல்லணாத் துயரங்களை அடைந்திருக்கின்றனர்.

கருப்புப் பணத்தின் ஊற்று மூலமான முதலாளிளுக்கும், அவர்களின் எலும்புத் துண்டை கவ்வித் தின்னும் அதிகார வர்க்கத்திற்கும் இந்த அறிவிப்பால் எந்தப் பிரச்சினையும் இல்லை. மக்களுக்கு  இந்த உண்மை தெரியவில்லை. மோடியின் அறிவிப்பால் நடைமுறை சிக்கல்களை சந்திக்கும் அளவே அவர்கள் இதை பேசுகிறார்கள். கருப்புப் பணத்தை ஏதோ அந்தக் கால நம்பியாரின் படுக்கை அறையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் பணப்பெட்டியாகவே அவர்கள் கருதுகிறார்கள். மோடி அதை எப்படியாவது எடுக்க முயல்கிறார் என்று கொஞ்சம் நம்புகிறார்கள். இதுதான் மோடியின் நோக்கம். இதை அர்னாப் கோஸ்வாமி முதல் ரங்கராஜ் பாண்டே முதல் மாபெரும் வெற்றி என கூவுவார்கள்.

இத்தகைய ஊடகங்களுக்கு விளம்பரங்களையும், பிரதமர்களுக்கு புரவலர்களையும் அளிக்கின்ற முதலாளித்துவ உலகம் இந்த அறிவிப்பால் தனது இலாபத்தை கச்சிதமாக கணக்கு போட்டுக் கொண்டிருக்கும்.

விழுப்புரத்தில் மக்கள் வெள்ளம் – நவம்பர் புரட்சியின் உற்சாகம் !

0
விழுப்புரம் நிகழ்ச்சி (3)

1917 நவம்பர் 7 ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி தோழர் லெனின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சி நிறுவப்பட்டு நூறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகத்துவமான நாளை மக்களுக்கு தெரியபடுத்தி நமது நாட்டிலும் ஓர் பாட்டாளி வர்க்க அரசை நிறுவ உழைக்கும் மக்களை, தொழிலாளி வர்க்கத்தை விடுதலையுணர்வூட்டி மக்கள் விழாவாக கொண்டாட வேண்டும் என்று விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்பின் சார்பாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் 07.11.2016 திங்கள் கிழமை அரங்குக்கூட்டம் நடைபெற்றது. அரங்கமெங்கும் நிரம்பி வழிந்தது மக்கள் வெள்ளம்.

தோழர் அம்பேத்கர் 1
தோழர் அம்பேத்கர்

இந்த கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணியின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் தலைமை தாங்கி பேசுகையில், 1917 க்கு முன்பு நடந்த பிரெஞ்ச் புரட்சியாக இருக்கட்டும், மன்னாராட்சியை வீழ்த்திய முதலாளித்துவ புரட்சியாக இருக்கட்டும் அந்த புரட்சிகள் எல்லாம் ஏற்கனவே நிலவிய சுரண்டல் அரசுக் கட்டமைப்பை மாற்றியமைக்கவில்லை. அதனை மென்மேலும் அழகு படுத்தி சுரண்டலை தீவிரப்படுத்த தான் உதவியது. அதாவது சுரண்டும் வர்க்கத்தை இடமாற்றம் செய்தது. மக்களின் உழைப்பை ஒரு சுரண்டும் வர்க்கம் வீழ்த்தப்பட்டு மற்றொரு சுரண்டும் வர்க்கம் உருவாகியது. ஆனால், ரசியாவில் நடந்த சோஷலிச புரட்சி உலகெங்கிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு விடிவெள்ளியாய் அமைந்தது. “உழைக்காதவனுக்கு உணவு இல்லை. உழைப்பவனுக்கு அதிகாரம்” என்ற ஓர் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நாள் தான் நவம்பர் 7 ரசிய புரட்சி. அந்த மகத்துவமான நாளை பாட்டாளி வர்கத்தின் விடுதலை நாளாக கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். ரசியப் புரட்சி நமக்கு மிகப்பெரும் அனுபவம். அது போல் இந்தியாவிலும் பாட்டாளி வர்க்க அரசை நிறுவ முடியும் என்று கூறி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

தோழர் லோகநாதன்
தோழர் லோகநாதன்

அடுத்ததாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில இணைச் செயலர் தோழர். லோகநாதன் அவர்கள் பேசுகையில், பசி, பட்டினி, பஞ்சம், கொடிய வறுமை, பட்டினிச் சாவுகள் என்று உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையான மக்கள் வாடிய போது இதற்கான காரணங்களை கண்டறிந்து இந்த நிலைமையை மாற்றவேண்டும் என்று ஓர் அறிவியல் பூர்வமான தத்துவத்தை முன்வைத்தார் காரல் மார்க்ஸ். அந்த தத்துவம் தான் கம்யுனிசம். உலகை கொள்ளையடிக்க துடிக்கும் முதலாளிகளின் சுரண்டலில் இருந்து உழைக்கும் மக்களை விடுதலை பெற வைக்கும் அந்த தத்துவத்திற்கு தன் வாழ்நாளையே அர்பணித்துக் கொண்டார். அந்த மாபெரும் தலைவரின் 200 ம் ஆண்டு விழா. உழைப்பை மையமாகக் கொண்டு இந்த உலகம் இயங்குகிறது. ஆனால் உழைப்பின் பயனை வெகு சிலர் அபகரித்துக்கொள்ளும் முதலாளித்துவத்தின் அய்யோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தினார் மார்க்ஸ். அதோடு மட்டுமில்லாமல் பல்வேறு வழிகளில் அதனை பிரச்சாரம் செய்து தனது போராட்டத்தை தொடங்கினார். தன்னை வர்க்க இறக்கம் செய்து கொண்டு பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து, மார்க்சியத்தை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

தோழர் மணிவாசகம்
தோழர் மணிவாசகம்

அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் விருதை செயலர் தோழர். மணிவாசகம் அவர்கள் மார்க்சிய தத்துவத்தை கொண்டு போல்ஸ்விக் கம்யுனிஸ்ட் கட்சியை நிறுவினார் தோழர் லெனின். மார்க்சியத்தின் பாதையில் தொழிலாளர்கள், விவசாயிகளை அணிதிரட்டி ரசிய போல்ஸ்விக் கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டி தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை நிறுவினார். முதலாளித்துவத்திற்கு மாற்று கம்யுனிசமே என்று முழங்கினார். உலகத்தில் முதல்முறையாக அழுக்குச் சட்டைக்காரர்கள், விவசாயிகளும், தொழிலாளர்களும் ஆட்சியில் அமர்ந்தனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும் முதலாளிகளின் சுரண்டல் ஆட்சியும் முறியடிக்கப்பட்டது. உலக வரலாற்றில் எந்த அரசும் செய்யாத சாதனைகளைச் செய்தது தோழர் லெனின் தலைமையிலான ரசிய சோஷலிச அரசு என்பதன் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

தோழர் ஞானவேல்ராஜா
தோழர் ஞானவேல்ராஜா

அவரை தொடர்ந்து பேசிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் விழுப்புரம் செயலர் தோழர். ஞானவேல் ராஜா அவர்கள், உழைத்து வாழக்கூடிய மக்களும் நாட்டை ஆள முடியும் என்பதை நிருபித்து கட்டிய நாள் நவம்பர் 7. பல்வேறு கண்டம் தாண்டி இருக்கும் ரசியாவில் பாட்டாளி வர்க்க அரசு நிறுவப்பட்டது.. இந்தியாவில் நாம் என்ன செய்ய போகிறோம்? மாற்றம் வேண்டும் நினைக்கிறோம். அதற்கு தடையாக இருப்பது இந்து மதம். ஏனென்றால், அது பிறப்பிலேயே நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற கோட்பாட்டில் மக்களை பிரித்து வைத்துள்ளது. இந்த நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களை பஞ்சமன் என்றும், சூத்திரன் என்றும் கூறி ஆண்டாண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. இந்த அடிமை சங்கிலியை நம்மால் உடைக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறோம். உண்மையில் சிந்து சமவெளி நாகரிகத்தில், நாம் பொதுவுடைமை வாழ்க்கையைத் தான் வாழ்ந்தோம். அனைவரையும் சமமாக கருதியது. அது தான் நமது திராவிட பண்பாடு. ஆரிய பார்ப்பன கூட்டம் வந்த பிறகு சதி, சூழ்ச்சியின் மூலம் நம்மை அடிமையாக்கினான். இந்த ஆரிய கூட்டத்தை எதிர்த்த நமது முன்னோர்களின் வரலாறு தெரியாமல் இன்றைய இளைஞர் சமூதாயம் ஆண்டராய்ட் போனில் சிக்கிக்கொண்டுள்ளனர். பார்ப்பனிய பண்பாடு நம்மை மாற்றியுள்ளது. மனிதனாக வாழ தகுதி இல்லாத சூழல் நம் நாட்டில் நிலவுகிறது. இந்த பார்ப்பன பண்பாட்டை வீழ்த்த இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

தோழர் சுதேஷ்குமார்
தோழர் சுதேஷ்குமார்

இறுதியாக சிறப்புரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைச் செயலர் தமிழ்நாடு, தோழர். சுதேஷ்குமார் அவர்கள் பேசுகையில், “நமது ஆசான் லெனின் கூறுகிறார், தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ளும் போது தான் நமது இலக்கை அடைய முடியும் “என்றார். அப்படி பல்வேறு தோல்விகளில் இருந்து தான் ரசியாவில் முதல் சோஷலிச நாடு அமைந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்பு மாடமாளிகையில் நிலப்பிரபுக்கள், மன்னர்கள், முதலாளிகள் என்று சுகபோகமாக இருந்தனர். மற்றொருபுறம் ஏழைமக்கள் பசி, பட்டினி, கல்வி இல்லை,மருத்துவம் இல்லை, உணவு இல்லை ,உடை இல்லை. என்று கொடிய வறுமையில் திண்டாடியது. அந்த மக்களின் தேவை உணவோ, உடையோ இல்லை. விடுதலை. ரசிய பாட்டாளி மக்கள், லெனின் தலைமையில் தங்களை புரட்சியில் இணைத்துகொண்டனர்.

இதற்காக ரசிய மக்கள் தங்கள் இன்னுயிரையும் கொடுத்தனர். புரட்சி நடந்தேறியது. அன்று ரசியாவில் இருந்த அதே நிலைமை தான் இன்று இந்தியாவில் நிலவுகிறது. புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்ட விருபுகிறார் மோடி. கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று சட்டப்பூர்வமாக மிரட்டுகிறார். விளைச்சல் இல்லாததாள் விவசாயிகள் தொற்கொலை செய்து கொள்கிறார்கள். தண்ணீர் இல்லாமல் பூமி வறட்சி நிலமாக்கப்பட்டு .குறைந்த விலைக்கு முதலாளிகளுக்கு நிலம் தாரை வார்க்கப்படுகிறது. கோவையில் நெசவுத் தொழில் அழிக்கப்பட்டு நெசவு தொழிலாளிகளின் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நாடும், நாட்டு மக்களும் அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மறுகாலனியாக நடவடிக்கைக்கு தீவிரப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இந்து பாசிசம் வெறிபிடித்து அலைகிறது. இந்த இருபெரும் கொடிய பிடியில் இருந்து மக்களை விடுவிக்க வர்க்கமாக ஒன்று திரள வேண்டும். உழைக்கும் மக்கள் ஒவ்வொருவரும் புரட்சிகர அமைப்பில் கரம் கோர்க்க வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த கூட்டத்தின் இடையிடையே மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர பாடல் பாடினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் உணவு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:

  • விவசாயிகள் விடுதலை முன்னணி,
  • புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
  • புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
  • விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி.

தொடர்புக்கு: 95977 89801.

நவம்பர்– 7 சிவப்பின் மலர்ச்சி நவம்பர் புரட்சி!

சிவப்பெனில்
உவப்பே!

கருவறை உயிரோட்டம்
தாய்மையின் சிவப்பு.
மழலையின் செவ்வாயில்
மொழியின் சிவப்பு.

சாதிகள் தரைமட்டம்
காதலின் சிவப்பு.
சங்கமிக்கும் பொதுஉணர்வில்
தோழமைச் சிவப்பு.

வைகறைச் சூரியன்
புத்துணர்ச்சியின் சிவப்பு.
வர்க்க உணர்வே
வாழ்வின் சிறப்பு!
வசந்தம் வேண்டுமா?
இசைந்திடு.. சிவப்பு!

சிவப்பு என்றால்
சிலருக்கு மட்டும் பிடிக்காது.

யார் அந்தச் சிலர்?

கந்து வட்டிக்காரன்
கள்ளச்சாராய பேர்வழி
கிரானைட் கொள்ளையன்
மணல் மாஃபியா

ரியல் எஸ்டேட் முதலை
சுரண்டும் பெருமுதலாளி
சொகுசு எழுத்தாளன்
ஆதிக்க சாதிவெறியன்
ரத்தம் குடிக்கும் மதவெறியன்…

இவர்களை
நமக்கு மட்டும்
பிடிக்குமா என்ன?

பின் எப்படி
நமக்கு பிடிக்காமல் போகும்
சிவப்பு!

அந்தச் சிவப்பின் உவப்பு
ரசியப் புரட்சி!

மனிதப் பரிணாமத்தின்
புதிய உணரச்சி.
மானுட அழகின்
படிமலர்ச்சி!

புதிய மனிதனின்
இதயம் பெற
பெருகுவோம்… சிவப்பு!

துரை. சண்முகம்

இலண்டனில் மல்லையா – தில்லியில் பிடி ஆணை ! கேலிச்சித்திரம்

6
VIJAI mallaiya cartoon Slider
கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடி ஆணை – டெல்லி நீதிமன்றம்!
VIJAI mallaiya cartoon

அட… லார்டு லபக்கு தாஸ்களா இன்னுமாடா இந்தியா உங்கள நம்புது ?

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

பெண்களை இழிவுபடுத்தும் சபரிமலை ஐயப்பனை கைது செய் !

25

விண்வெளியில் பறந்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் குடிமகன் என்றாலும் இந்தியாவின் தூரத்து சொந்தம் என்ற வகையில் அவரை இங்கே அப்துல் கலாம் வகையறா கனவான்களும், சீமாட்டிகளும் கொண்டாடுவர். அப்பேற்பட்ட நாட்டில்தான் சாமி கும்பிடுவதற்கு கூட பெண்களுக்கு அனுமதியில்லை.

Sabrimala-woman-entry
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது கூடாது என்பதை பெண்களே ஏற்கிறார்கள் என்று காட்டுவதற்கு “Ready to wait” என்ற ஹேஷ்டெக்குடன் இந்துமதவெறியர்கள் செய்யும் பிரச்சாரம்!

சபரிமலை ஐயப்பனை ஆண்கள் மட்டுமே வழிபடவேண்டும், மாத விலக்கு பருவத்திற்கு முந்தைய பிந்தைய பெண்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பது அவாள்கள் உருவாக்கிய விதி முறை. இது குறித்து அவ்வப்போது பெண்கள் அமைப்புக்களும், முற்போக்கு அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதன்படி 2006-ம் ஆண்டில், கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென ஒரு பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதற்கு ஐயப்பனன் கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம்போர்டு மற்றும் பரம்பரை அறங்காவலரான பந்தளம் மகாராஜா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மதநம்பிக்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று ஏற்கனவே உத்திரவு பிறப்பித்திருக்கும் நீதிமன்றம், தானே அதை மீறக்கூடாது என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்த வழக்கில் எல்லா பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று இதற்கு முன்னர் அச்சுதானந்தன் தலைமை தாங்கிய இடதுசாரி முன்னணி அரசு, 2007-ம் ஆண்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு உ ம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்தது. அவர்கள் பெண்களை அனுமதிக்க கூடாது என்று கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். என்ன இருந்தாலும் இவர்கள் ‘மென்மையான’ இந்துத்துவா அல்லவா!

தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கேரள அரசின் நிலைப்பாடு என்ன என்று நீதிபதிகள் கேட்கின்றனர். உடனே முந்தைய அச்சுதானந்தன் அரசு எடுத்த அதே நிலைப்பாடுதான் மாற்றமில்லை என்று தற்போதைய இடதுசாரி முன்னணி அரசு கூறியிருக்கிறது. உடனே தேவசம்போர்டு வழக்கறிஞர், “இப்படிமாநில அரசு அடிக்கடி நிலைப்பாடை மாற்றக்கூடாது. பெண்களை அனுமதிக்க கூடாது” என்று வாதிட்டிருக்கிறார்.

பிறகு நீதிபதிகள் இந்த வழக்கை அடுத்த ஆண்டு 2017 பிப்ரவரிக்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த தள்ளிவைப்புக்கு காரணம் இது போன்ற பிரச்சினைகளை ஆறப்போட்டு கொல்வது மனுநீதிமன்றத்தின் வழக்கம். அது உண்மையெனும் விதமாக இந்துமதவெறியர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் அணிவகுத்து, பெண்களை விடக்கூடாது, நம்பிக்கையில் தலையிடக்கூடாது என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள்.

magara-jothi
சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்

பொதுவாக சபரிமலை சீசன் வந்து விட்டால் சாமிகளின் அட்டகாசம் தாங்கமுடியாது. டீக்கடையில் பேப்பர் கப், டாஸ்மாக்கில் சரக்கடிக்க தனி பிளாஸ்டிக் டம்ளர் என சரக்கு தொடங்கி சகலத்திலும் அய்யப்பமார் சாமிகளின் புனிதம் காக்கப்படுகிறதாம். இதில் வயதுக்கு வந்த ஒரு பெண் ஐயப்பனை வணங்க வந்தால் அது தீட்டாம். கேட்டால் பெண்ணின் ரத்தவாடை அறிந்து காட்டு விலங்குகள் வந்து விடுமாம்!

ஏன் ஆணின் உடலில் கூட மல, சலம், வியர்வை, ரத்தம், சளி என எல்லா எழவும்  இருந்துதானே தொலைக்கிறது. இதைப் பார்த்து காட்டு விலங்குகள் இது ஆண் சமாச்சாரம் என ஓடிவிடுமா? அப்புறம் சேலை கட்டிய பெண்கள் ஒட முடியாதாம். அதனாலென்ன ஜீன்ஸ் போட்ட பெண்கள் ஒடலாமே? ஏதோ சிந்து பாத்தின் சாகசப் பயணம் போல உதார் விடும் இந்த சாமிகள் எவரும் நோகமால் ரயில், பஸ், இதர வாகனங்கள், சுமைதூக்கிகள், சாப்பாட்டுக் கடைகள், மலையிறங்கியதுமே சரக்கடிக்க ஏற்பாடுகள் என எல்லா வசதிகளையும் வைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்கள்.

இப்பொதேல்லாம் சபரிமலைப் பயணம் என்பது ஒரு பிக்னிக் ஸ்பாட் பயணமாகி விட்டது. தேவைக்கேற்றபடி ஒரு மண்டல விரதம், ஒரு நாள் ஏன் ஒரு வேளை விரதம் என்பதாகவெல்லாம் சுருங்கிய நிலையில் பெண்கள் மட்டும் வரக்கூடாது என்ற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல?

பெண்களைக் கண்டால் முகம் சுளிக்கும் ஐயப்பன் பூசை செய்யும் கண்டலரு பார்ப்பான பூசாரியின் அயோக்கியத்தனங்கள் அதுவும் பண மோசடி, விலைமாதர் சகவாசம், கணபதி ஹோமம் மந்திரம் கூட தெரிந்திராத பக்திப் பரவசம் இதையெல்லாம் சகித்துக் கொண்ட சூட்சுமம் என்ன? இந்த கிரிமினல் பார்ப்பானர் ஜெயிலில் கம்பி எண்ணவேண்டிய கேடி இன்னும் குஷாலாக வெளியில் சுதந்திரமாக சுத்தி வருகிறார். இதைக் கண்டெல்லாம் ஆண்பக்தர்களுக்கு கோபம் வருவதில்லை. சபரிமலைக்கு சென்ற நடிகைகள் ஜெயமாலாவும், சுதாசந்திரனும் சாமியைத் தொட்டதற்காக தீட்டு கழித்தவர்கள் எவரும் கண்டலறுவின் அயோக்கியத்தனங்களுக்காக அய்யப்பனுக்கு ஒரு எழவுத் தீட்டும் செய்யவில்லை. அப்படி செய்ய வேண்டியிருந்தால் பூசாரியையும், சாமியையும் ஒரு சேர குண்டு வைத்து பிளப்பதே தீட்டுக்கழிப்பாக இருக்கும்.

இதைப்பற்றி எந்த சுரணையும் இல்லாத சாமிகள்தான் ஆண்டுதோறும் பயணம் சென்று சாஸ்தாவைத் தரிசித்து வீரமணி பாட்டுக்களையெல்லாம் குத்தாட்ட ஸ்டைலில் பாடி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.

இப்படி பக்தர்களிலேயே பிழைப்பு வாதம் வந்து விட்டாலும் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கூடாது என்பதில் மட்டும் எல்லா சாமிகளும் ஒன்றுபடுகிறார்கள். அதற்கு ஆயிரத்தெட்டு ‘அறிவியல்’ விளக்கம் வேறு சொல்லி வதைக்கிறார்கள். காலையில் மலத்திற்கு முன் சிறுநீர் வருவது ஏன்? அக்குளில் அரிப்பு வந்தால் ஏன் சொறியவேண்டும், மோர்ச்சோறு ஏன் கடைசியில் விழுங்க வேண்டும் முதலானவற்றுக்கு இந்து மதத்தில் அறிவியல் விளக்கங்கள் உண்டு என்றால் பாருங்களேன். சந்தேகம் உள்ளவர்கள் காஞ்சி காமகேடி ஜெயேந்திரனிடம் போய் கேட்கலாம்.  மனைவி-மகளோடல்லாமல் தனியாக போவது ஷேமம் என்பது அனுபவஸ்தர்கள் வாக்கு.

SABARIMALASசபரிமலைக்கு கிளம்பும் ஆண் சாமிகளுக்கு வேண்டிய எல்லா பணிவிடைகளையும் செய்யும் பெண் மட்டும் சாமி ஆக முடியாதாம். அந்தப் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஆம்பளை சாமிகள் வீட்டில் இருக்க மாட்டார்களாம். அவ்வளவு சுத்தமாம். இதே சுத்தம் ஐயப்பனுக்கும் தேவையென்பதால் பெண்களுக்கு தடா!

கடவுள் என்றால் ஆணுக்கும், பெண்ணுக்கும், பாக்டீரீயா, வைரஸ் முதலான சகலவற்றுக்கும் பொதுதானே என்றால் அது வேறு இது வேறு என்று இழுப்பார்கள். இப்படி மனிதகுலத்தின் சரிபாதி பெண்ணினத்தை இழிவு படுத்தும் சபரிமலை அய்யப்பனை வணங்குபவர்கள் காட்டுமிராண்டிகளா இல்லையா?

“சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் அன்றைக்கு கோயிலின் தலைமைத் தந்திரியாக இருந்த கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை அன்றைக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?” என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்தார் அன்றைக்கு முதல்வராக இருந்த மார்க்சிஸ்டு கட்சியின் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா?  “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.

மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல.  பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.

இப்பேற்பட்ட மார்க்சிஸ்டுகள் இன்றைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாலும் இந்த மகர ஜோதி குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வார்களா? ஒரு மூடநம்பிக்கையை வருமானம் சார்ந்து மறைக்கும் போது இன்னொரு மூட நம்பிக்கை பாலினம் சார்ந்து ஒடுக்குகிறது. இதையெல்லாம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து பார்ப்பனியத்தை கேள்வி கேட்கும் தைரியமோ, அறிவோ, தெளிவோ மாரக்சிஸ்டு கட்சியிடம் இல்லை. அப்படி பிரச்சாரம் செய்தால் ‘இந்துக்களின்’ வாக்கு போய்விடும் என்பது மார்க்சிஸ்டுகளின் பயம். மக்கள் மத்தியில் இதை பிரச்சாரம் செய்யாமல் நீதிமன்றத்தில் மட்டுமே கொண்டு வந்து விட முடியாது.

மேலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய வழக்கில் தீர்ப்பு கொடுத்திருக்கும் உச்சநீதிமன்றம் சபரிமலை வழக்கிலும் என்ன கொடுத்து விட முடியும்? ஒருவேளை பெண்கள் போகலாம் அதை முடிவெடுக்க வேண்டியது பந்தளம் மகாராஜா என்று கொடுத்து விட்டால், யாரும் யாரையும் குற்றம் சொல்ல முடியாமல் பிரச்சினையை அமுக்கிவிடலாம். பிறகு பெண்களும் கோவிலுக்கு போக முடியாது. போக கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லையென  லாவணியும் பாடலாம்.

happytobleed“இது நம்பிக்கை சார்ந்த விசயம். இதை அரசோ, நீதிமன்றமோ திணிக்க முடியாது” என்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ஆளுர் ஷாநவாஸ். அதை தானும் ஏற்பதாக பா.ஜ.கவின் கே.டி. ராகவனும் கூறுகிறார். ஆதிக்க சாதிவெறியைத்தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்காமலே தடை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது, இது போன்ற மதநம்பிக்கைகளை அப்படி பார்க்க முடியாது என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் ஷாநவாஸ்.

ஒருவேளை மசூதிகளில் பெண்கள் தொழ முடியாமை, மவுல்விக்களில் பெண்கள் இல்லாமை, புர்கா, தலாக், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் இசுலாமிய மதத்தின் தனித்துவத்தை பேணவும், அதை நீதிமன்றமோ, அரசோ திணிக்க முடியாது என்பதற்காக அவர் இப்படி சேம்சைடு கோல் போட்டிருக்கலாம்.

சபரிமலை விவகாரத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள் என்பதை வெறுமே நம்பிக்கை விவகாரமாக அவர் பார்க்கிறார். அப்படி எனில் நேரடி வன்முறை சாராமல், ஆதிக்கசாதிவெறியர்கள் நடத்தும் தீண்டாமைக் கொடுமைகளையும் அவர் தனிப்பட்ட மத,சாதி நம்பிக்கை என்று அவர் ஏற்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கை, உரிமை அனைத்தையும் மதச்சார்பின்மையில் இருந்து பார்க்காமல் எல்லா மதங்களுக்கும் உரிமை உண்டு, அனைத்தையும் அனுசரித்து போகவேண்டும் என்று போனால் அது இப்படித்தான் கேடி ராகவனோடு அணிசேர வேண்டியிருக்கும். இதையே அரசியல் ரீதியாக பா.ஜ.க வுடன் கூட்டணி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் கூறுகிறார். அப்போது கண்டனம் தெரிவித்த ஷாநாவாசை இப்போது ரவிக்குமார் திருப்பிக் கேட்டால் என்ன  சொல்ல முடியும்?

ஒடுக்கப்படும் மக்களையெல்லாம் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி ஒடுக்குதலை நியாயப்படுத்துவது பார்ப்பனிய மரபு. “ஹரியின ஜனங்கள்தான் ஹரிஜனங்கள்” என்று காந்தி காலத்தில் துவங்கியது இந்த கணக்கு. மோடி பிரதமரானதும் துப்புறவுத் தொழிலாளிகளின் பணியை கடவுளின் பணியென்றார். அதே போல வீட்டில் மட்டும்தான் பெண் இருக்க வேண்டும் என்று  கூறும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வழியில்தான் “பாரத தேசம் பெண்களை தாயாக போற்றும் நாடு” என்று வானரக் கூட்டம் ஓதி வருகிறது.

நியாயமாக சபரிமலையில் பெண்களை அனுமதி, என்று தற்காப்பு நிலையில் இன்று பேசுவதை விட, பெண்களை இழிவுபடுத்தும் ஐயப்பனை கைது செய் என்று போராடுவதே சரியாக இருக்கும். சட்டப்படி கோவில் சொத்துக்களின் உரிமையாளரான அந்தந்த கோவில் கடவுள்களை ஒரு தனி நபராகவே சட்டம் கருதுகிறது. ஆகவே ஐயப்பன் சிலையை தூக்கி மத்திய சிறையில் அடைத்து விசாரியுங்கள் !