Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 560

காதலை வைத்து காவிகள் தயாரிக்கும் வெடி குண்டு

6

முசுலீம் குடும்பங்களைப் பாருங்கள். பன்றி குட்டி போடுவதைப் போல் எட்டு பத்து பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். அதில் அழகான பையனாக பார்த்து மதரஸாவிற்கு தத்து கொடுத்து விடுகிறார்கள். மதரஸாவில் என்ன செய்கிறார்கள்? இந்தப் பையன்களுக்கு பெண்களை மயக்குவதற்கு பயிற்சியளிக்கிறார்கள். பின்னர், பைக், வாட்ச், மொபைல், போன் போன்றவற்றையும், நல்ல உடைகளையும் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்களும் சோனு மோனு போன்ற பெயர்களோடு வாழும் இந்துப் பெண்களை அணுகுகிறார்கள். இந்தப் பையன்களின் அழகில் மயங்கும் இந்துப் பெண்களை மெல்ல  வலையில் வீழ்த்தி அவர்களை இசுலாமுக்கு மதம் மாற்றி பின் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். இசுலாத்தில் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாமில்லையா? எனவே அடுத்தடுத்து இந்துப் பெண்களாக குறி வைத்து அவர்களை மதம் மாற்றி குழந்தைகள் பெற்று இசுலாமியர்களின் மக்கள் தொகையை உயர்த்த சதி நடக்கிறது. இந்த சதி திட்டத்திற்கு பாகிஸ்தான் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் காசு வருகிறதாம்….”

– லவ் ஜிஹாத் என்ற இல்லாத ஒரு ‘சதி’யைக் குறித்த இந்துத்துவ கும்பலின் விளக்கம் இது. தமிழ் நாட்டு சாதிக்கட்சிகள் (குறிப்பாக பா.ம.க) தலித்துகள் குறித்தும் தலித் இயக்கங்கள் குறித்தும் முன்னெடுத்த அவதூறு பிரச்சாரமும் இதுவே.

இந்துக்கள் தெய்வமாக போற்றும் குடும்பப் பெண்களை இசுலாமிய பயங்கரவாதிகள் கவர்ந்து செல்வதால் இந்து சனாதன தர்மமே நிலைகுலைந்து போகிறது என்கிற குற்றச்சாட்டு சமீப காலங்களில் நடக்கும் பல்வேறு பகுதியளவிலான மதக் கலவரங்களுக்கான முன் தயாரிப்பாக உள்ளது. இத்தனைக்கும் லவ் ஜிஹாத் என்கிற கருத்துருவாக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடக்கு கேரளத்திலும் கடலோர தென் கருநாடகத்திலும் தேவலோக வதந்தியாக முளைவிடத் துவங்கிய போது விசாரித்த போலீசார், இதில் கடுகளவும் உண்மையில்லை என்பதை உறுதி செய்திருந்தனர். கேரளத்திலும் கருநாடகத்திலும் லவ் ஜிஹாத்தை வைத்து சரியாக கல்லா கட்ட முடியாத இந்துத்துவ கும்பல் தற்போது அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வட மாநிலங்களில் கலவரங்களைத் தூண்டி வருகின்றது.

லவ் ஜிஹாத் உண்மையில்லை என்பது வெட்டவெளிச்சமாக இருக்கும் போது, ‘கலப்பு’த் திருமணங்களை வைத்து எப்படி இந்துத்துவ கும்பலால் கலவரங்களைத் தூண்ட முடிகிறது?

இதை அறிந்து கொள்ள நாம் ’ஆபரேஷன் ஜூலியட்டை’ பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். குலைல்(gulail) மற்றும் கோப்ரா போஸ்ட்(Cobrapost) இணைய பத்திரிகைகள் இணைந்து நடத்திய இரகசியப் புலனாய்வின் பெயர் தான் “ஆபரேஷ்ன் ஜூலியட்”.

cobrapost-newslaundry
இப்பத்திரிகைகளின் செய்தியாளர்கள் இந்துத்துவ முகாமுக்குள் தைரியமாக ஊடுருவி லவ் ஜிஹாதை முன்வைத்து நடத்தப்படும் கலவரங்களுக்காக எப்படித் தயாரிப்புகள் செய்கிறார்கள், இதை எப்படி தேர்தலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்த இரகசிய விசாரணையின் விவரங்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன.

கேள்வி 1: ஒரு முசுலீம் இளைஞனும் இந்துப் பெண்ணும் காதல் கலப்பு மணம் புரிவதை இந்துத்துவ கும்பல் எப்படி மோப்பம் பிடிக்கிறது?

”இங்கே நிறைய வக்கீல்கள் சுயம் சேவகர்கள் (ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்) தான். அவர்கள் திருமண பதிவு அலுவலகத்திலும் மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலும் ஏதேனும் கலப்புத் திருமணம் பதிவாகிறதா என்பதை கவனித்து வருவார்கள். திருமணத்திற்கு பதிவு செய்தவர்களின் பெயர் முகவரி போன்ற விவரங்களையும், சம்பந்தப்பட்ட மணமக்களின் சார்பாக வக்கீல்கள் யாராவது இருந்தால் அந்த விவரத்தையும் எங்களிடம் தெரிவித்து விடுவார்கள். பின் நாங்கள் ஒரு 50, 60 பேர்கள் கொண்ட அணியாக கிளம்பிச் செல்வோம்”.  -சஞ்சை அகர்வால், பாரதிய ஜனதா நகராட்சி உறுப்பினர். முஸாபர்பூர் கலவரத்தில் சங்க பரிவார பயங்கரவாத குழுக்களின் சார்பில் களத்தில் தளபதியாக செயல்பட்டவர்.

கலப்புத் திருமண பதிவுக்கான ”சிறப்பு திருமணச் சட்டத்தின்” படி திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் தங்களது விவரங்களை திருமண நாளுக்கு முப்பது நாட்களுக்கு முன்னரே எழுதி வைக்க வேண்டும். இந்த நாட்களில் குறிப்பான ஆட்சேபணைகள் ஏதும் இல்லை என்றால் தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்த கட்டத்திலேயே மதக் கலப்புத் திருமணம் செய்யவிருப்பவரின் விவரங்களை அறிந்து கொள்ளும் இந்துத்துவ கும்பல் களத்தில் இறங்கி விடுகிறது.

Sanjay-Agarwal-operation juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சஞ்சய் அகர்வால்

மணமகனின் மேல் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்கு போடுவது பெண்ணின் குடும்பத்தாரை வைத்து ஆட்கொணர்வு மனுபோடுவது என்று சட்ட ரீதியாகவே மேல் கையெடுக்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின், தனது சம்மதத்தோடு தான் திருமணம் நடந்தது என்று பெண் வாக்குமூலமே கொடுத்தாலும், வழக்கு முடியும் வரை பெண்ணை அவளது பெற்றோருடன் செல்லுமாறு அறிவுருத்துகிறது நீதிமன்றம். ஒரு சில வழக்குகளில், இந்துத்துவ கும்பலின் வேலையைத் தனது சொந்த வேலையாகவே வரித்துக் கொள்ளும் நீதிமன்றம் பெண்ணுக்கு அறிவுரைகள் சொல்லி அவளை கணவனிடமிருந்து பிரித்து வீட்டாருடன் அனுப்பி வைக்கிறது.

இந்துத்துவ கும்பலின் பின்னணியில் அரசு, நீதித் துறை, அமைப்பு பலம் மற்றும் அரசியல் நோக்கங்கள் இருக்கும் அதே வேளையில், காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பவர்களின் பின்புலத்தில் அவர்களைக் காப்பாற்ற எவரும் இருப்பதில்லை.

கேள்வி 2: கலப்புத் திருமணம் பற்றிய தகவல் அறிந்து கொண்ட பின் இந்துத்துவ கும்பலின் செயல்பாடுகள் என்ன?

”நாங்கள் அந்தப் பகுதியில் சிறு சிறு கூட்டங்கள் நடத்துவோம். நம்முடைய பெண்ணை முசுலீம் பையன் தூக்கிட்டுப் போயிட்டான் என்றும் இதே மாதிரி நிறைய இந்துப் பெண்களைத் தூக்கிட்டுப் போயிருக்காங்கன்னும் மக்களுக்குச் சொல்வோம். இப்ப அந்தப் பகுதியில் இருக்கும் பெண்ணோட சாதியைச் சேர்ந்தவங்க திரண்டு வருவாங்க”

“தேர்தலுக்கு முன்னாடி என்றால் இந்த மாதிரி நிறைய கூட்டங்கள் நடக்கும். நானே அந்த மாதிரி கூட்டங்களில் பேசியிருக்கிறேன். நான் போனதும் இப்படிப் பேசுவேன் – “நண்பர்களே, நம்முடைய நாடு மிகப் பெரிய அபாயத்தை எதிர் நோக்கியிருக்கிறது என்று சொல்வேன். இதை தடுக்க நாம் மோடியைக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால், இந்த நாட்டிற்கு இந்துத்துவம் தேவையாய் இருக்கிறது என்பதை விளக்குவேன். இந்த முசுலீம் பசங்க நம்ம பொணணுங்களை கடத்திட்டு போறாங்க அப்படின்னு சொல்வேன். இந்த இந்த ஊரிலேர்ந்து இந்த இந்த பெண்கள் இப்படி கடத்தப்பட்டிருக்காங்கன்னு அடுக்குவேன். இந்தப் பெண்களை மீட்கனும் – லவ் ஜிஹாத்தை எதிர்த்து போரிடனும் அப்படின்னு சொல்லுவேன். மாடுகளைக் கூட வெட்றாங்கன்னு சொல்லி இதுக்கெல்லாம் ஒரே தீர்வு மோடி தான் அப்படின்னு பேசியிருக்கேன்”  –  சஞ்சைஅகர்வால்

Sangeet-Som-operation-juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சங்கீத் சோம்

பெண்ணின் குடும்பத்தார்கள் தரப்பிலிருந்து ஒரு கடத்தல் வழக்கை காவல் துறையில் பதிவு செய்து நீதிமன்றத்தின் உதவியோடு பெண்ணை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அதற்குப் பின் பெண்ணின் குடும்பத்தார் வழக்கை எப்படிக் கையாள வேண்டும், எந்த வழக்கறிஞரை வைத்துக் கொள்வது என்று அவர்களின் மொத்த நடவடிக்கைகளையும் இந்துத்துவ கும்பலே இயக்குகின்றது. இதன் பின் சம்பந்தப்பட்ட பெண் அனுபவிக்கவுள்ள உளவியல் சித்திரவதைகள் சொல்லி மாளாது. இதோ இந்துத்துவ கும்பலின் சொந்த வார்த்தைகளிலேயே அதைப் பார்க்கலாம் –

“நாங்கள் அந்தப் பெண்ணை சென்டிமென்டலாக மிரட்டுவோம். உன்னோட அப்பா செத்துப் போயிடுவாரு.. அம்மா தூக்கில தொங்கிடுவாங்க… உன்னோட அண்ணன் சமூகத்துக்கு முன்னே அவமானத்தோட வாழ பயந்து தற்கொலை செய்துக்குவான் அப்படின்னு சொல்வோம்” -சங்கீத் சோம், உத்திரபிரதேச மாநிலம் சார்தான சட்டமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ., முஸாபர்பூர் கலவரத்தின் மூளை.

என்னதான் காதல் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தாலும், பெரும்பாலான இளம் பெண்கள் இந்த உளவியல் துன்புறுத்தல்களில் வீழ்ந்து விடுகிறார்கள். கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது இந்துத்துவ கும்பலின் வக்கீல் படை தயாரித்தளித்த கதையை அட்சரம் பிசகாமல் ஒப்பிக்கிறார்கள்.

கேள்வி 3: ஒருவேளை, இந்துத்துவ குண்டர்கள் கட்டவிழ்த்து விடும் அத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு அந்தப் பெண் காதலில் உறுதியாக இருந்தால்?

அந்தப் பெண்ணுக்கு தற்காலிக நினைவுப் பிறழ்வு (temporary amnesia) ஏற்படுத்தும் மருந்துகளைக் கொடுத்து அவளை மனநல ஆலோசனை மையத்திற்கு (Counselling Center) அனுப்புவோம் என்று திமிராக கோப்ராபோஸ்ட் நிருபரின் இரகசிய கேமராவுக்கு முன் சொல்கிறார் எர்ணாகுளத்தில் செயல்படும் ஹிந்து உதவி மையத்தைச் சேர்ந்த சிஜித். மேற்படி ஆலோசனை மையத்தில் இந்துத்துவ நிபுணர்கள் இசுலாத்தைப் பற்றியும், இசுலாமியர்களைப் பற்றியும் இதம் பதமாக எடுத்துச் சொல்லி புரியவைப்பார்கள்.

ஒருவேளை அந்தப் பெண் இந்த தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு தனது காதலில் உறுதியாக இருந்தால்?

Sanjiv-Balyan-operation juliet
இரகசிய புலனாய்வு வீடியோவில் சஞ்சீவ் பல்யான்

”ஆலோசனை மையத்திலிருந்து அந்தப் பெண் நீதி மன்றத்திற்கு செல்லும் போது, நாங்கள் சொல்வது போன்ற வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் கொடுத்து நாங்கள் சொல்லும் பையனைக் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தால் நீதிமன்றத்தை விட்டு வெளியே வரும் போது அவளையும் அவள் திருமணம் செய்து கொண்டிருக்கும் முசுலீம் கணவனையும் கொன்று போட்டு விடுவோம் என்று மிரட்டி அனுப்புவோம்” என்கிறார் கேரளாவின் இந்து ஒற்றுமை மையத்தைச் சேர்ந்த ரவீஷ் தந்த்ரி.

கேள்வி 4: சரி இந்த அநியாயங்கள் எல்லாம் சட்டத்தின் ஆட்சி நடப்பதாக சொல்லப்படும் ஒரு நாட்டில் இவ்வளவு துணிச்சலோடு செய்ய எப்படி முடிகிறது?

”நான் எங்க அமைப்பில் இருக்கும் மாணவர்களிடம் பேசும் போது அவர்களை போலீசில் சேரச் சொல்லி அறிவுறுத்துவேன். ஏன்னா… நாளைக்கு நமக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது அங்கே நம்ம கார்யகர்த்தர்கள் (செயல்வீரர்கள்) இருக்கனும் இல்லையா. இங்க இருக்கிற போலீசு கான்ஸ்டபிள்களில் அறுபது சதவீதம் நம்ம சுயம் சேவகர்கள் தான்” என்கிறார் மங்களூரைச் சேர்ந்த பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் கனேஷ் குமார்.

இது மட்டுமின்றி, அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும் குறிப்பாக நீதித் துறையிலும் ஊடுருவியுள்ளனர் இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் தேசத்தின் பொது மனசாட்சியாக பார்ப்பன இந்துமதவெறியின் விசமப் பிரச்சாரங்கள் செல்வாக்கு செலுத்தும் நிலையில் ஊடுருவும் அவசியம் கூட தேவைப்படுவதில்லை. நிதிஷ் கட்டாரா கௌரவக் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் தூக்கு தண்டனை அளிக்க வேண்டிய தேவையில்லை என்ற தீர்ப்பை வழங்கிய அதே உச்ச நீதிமன்றம் தான், தேசத்தின் மனசாட்சியை சாந்தி செய்ய போதிய சாட்சியங்கள் இல்லாத நிலையிலும் அப்சல் குருவைத் தூக்கிலேற்றியது.

காதல் திருமணங்களை முன்னறிந்து கொள்வதோடு, குறிப்பிட்ட பகுதியில் பல மதவெறிக் கூட்டங்கள் நடத்தி சாதி இந்துக்களைத் திரட்டி தேசத்தின் மனசாட்சியை ஏற்கனவே இந்துத்துவ கும்பல் வடிவமைத்து விட்ட நிலையில் விசாரணைக்கு வரும் வழக்கில் தீர்ப்பு நியாயமாக இருக்கும் என்பதையும் வழக்கின் போக்கு நியாயமான திசையில் செல்லும் என்பதையும் நம்பும் அளவுக்கு நாம் வெள்ளேந்திகளா என்ன?

இந்துப் பெண்களை காப்பாற்றுவது, இந்து பாரம்பரியத்தைக் காப்பாற்றுவது என்கிற முகாந்திரங்களோடு இந்துத்துவ கும்பலின் சார்பாக திரட்டப்பட்டு கலவரங்களில் ஈடுபடுத்தப்படும் குண்டர் படையில் அந்தந்த வட்டார ஆதிக்க சாதியினர் பிரதானமாகவும் ஓரளவு அளவு தலித்துகளும் உள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களின் பலனை உடனடியாக தேர்தல் வெற்றிகளாக பாரதிய ஜனதாவும், வணிக ரீதியில் அந்தந்த வட்டாரங்களில் இந்துத்துவ கும்பல்களுக்குப் படியளக்கும் இந்து பனியா வர்த்தகர்களும் அறுவடை செய்து கொள்கின்றனர்.

அதே வேளையில், ஒரு பெண்ணுக்கு நடக்கும் திருமணத்தில் அவளது விருப்பம் பிரதானமானதல்ல என்பதே இந்துத்துவ நீதி. இதன் படி பெண்ணின் குடும்பத்தார்கள் தங்களது சாதி, மதம் மற்றும் வர்க்க நிலைக்கு ஏற்ற மனமகனுக்கு பெண்ணை விற்கும் உரிமை நிலைநாட்டப்படுகிறது. தவிற ஒரு திருமணத்தால் இணையவுள்ள ஆணும் பெண்ணையும் தவிர்த்து பார்ப்பனிய இந்து பொதுபுத்தியே தீர்மானகரமான காரணி என்பதை நிலைநாட்டுகிறார்கள்.

இது கலவரத்தில் இந்துத்துவ கும்பலால் திரட்டப்பட்டு ஈடுபடுத்தப்படும் தலித்துகளுக்கு சொல்லப்படும் மறைமுக செய்தி. ”ஒரு பெண்ணை பெற்று சீரோடும் சிறப்போடும் வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கே அவளது திருமணத்தைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை உண்டு” என்கிற ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிக் கொடுத்த இந்த பார்ப்பனிய சூத்திரத்தைத் தான் காடுவெட்டி குருவும், கொங்கு யுவராஜும் மிரட்டலோடு வழிமொழிகின்றனர்.

காதல் திருமணத்திற்கு கோட்பாடு என்ற அளவிலும் நடைமுறையிலும் முஸ்லீம் அடிப்படைவாதிகளும் எதிர்ப்பாகவே இருக்கிறார்கள். காதலர் தினத்தை இவர்களும் கூட போட்டி போட்டுக் கொண்டு எதிர்க்கிறார்கள். பொது இடங்களில் ஆணையும் பெண்ணையும் பார்த்தால் தட்டிக் கேட்பது விரட்டி அனுப்புவது என்பதை முசுலீம் மதவெறியர்களும் செய்கிறார்கள். அதே நேரம் முஸ்லீம் மதவாதிகளின் காதல் எதிர்ப்பு என்பது வெறுமனே மதம் என்ற அளவில் நிற்கும் போது இந்துமதவெறியரின் எதிர்ப்பு என்பது வாழ்வா, சாவா என்ற விதியாக முற்றுப்பெறுகிறது. காரணம் இந்துமதவெறி என்பது வெறுமனே முட்டாள்தனங்களை மட்டும் கொண்ட ஒரு மதவெறியல்ல. அதன் பின்னே ஆதிக்க சாதி, அரசு, போலீசு, நீதிமன்றம், ஊடகம் என்று அனைவரும் திரண்டு நிற்கின்றனர்.

முசுலீம்களைக் கொன்று குவிக்க காதல் கலப்புத் திருமணத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பல் வடித்துக் கொடுத்திருக்கும் ஆயுதமும் ஆதிக்க சாதியினர் , சாதிமறுப்புத் திருமணத்தை முன்வைத்து தலித்துகளை கொன்று குவிக்கும் ஆயுதமும் வேறு வேறு அல்ல. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பது ஒரு பெண்ணின் சுயமரியாதைக்கும் அவளது ஜனநாயகத் தேரிவு உரிமைக்கும் மட்டும் விரோதமானதில்லை – காதல் திருமணங்களின் மூலம் சாதி / மத கலப்பு நிகழ்வதையும் இது தடுக்கிறது. இவ்வழியில் இனத் தூய்மை மற்றும் சாதித் தூய்மையைப் பேணுவதும், ஏற்றத்தாழ்வான படிநிலை சமூக அமைப்பைத் தக்க வைத்துக் கொள்வதுமே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தந்திரம்.

உண்மையில் இனத் தூய்மை பேசும் மத, மொழி மற்றும் சாதி ஆதிக்க அரசியல் ஆன்மா ஒன்று தான். கருப்பு சட்டையும் ஓங்கிய கையுமாகத் திரிந்த சீமானின் முருக பக்த அவதாரமும், காஞ்சிபுரத்தின் பெளர்ணமி இரவில் வன்னிய மேடையில் முழங்கும் காடுவெட்டி குருவும், பிரவீன் தொகாடியாவும் தமது தோற்றங்களிலும், பேசும் பேச்சுக்களிலும் வேறு வேறானவர்களாகத் தெரிந்தாலும் – இவர்களை இயக்கும் ஆதாரமான அரசியல் நோக்கு ஒன்று தான்.

ஜனநாயக சக்திகளும் மக்களும் இதை உணர்ந்து கொண்டு களத்தில் வீழ்த்தாத வரை இந்த நாட்டிற்கு விடிவு காலம் இல்லை.

– தமிழரசன்

மேலும் படிக்க

அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் – நவீன கொத்தடிமைகள் !

1

அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

  • கௌரவ விரிவுரையாளர்கள் மீதான அடக்குமுறை கல்வி தனியார்மயமாக்கத்தின் ஒரு பகுதியே!
  • ஏழை மாணவர்களின் கல்வி உரிமைப் பறிப்புக்கு எதிராகவும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்கவும் ஒன்றிணைந்து போராடுவோம்!
  • கல்வியில் தனியார்மயத்திற்கு எதிராகவும் புதிய கல்விக் கொள்கையை முறியடிக்கவும் போராடுவோம்!
  • அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி பெற மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே!

மிழ்நாடு அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஜனவரி 28-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். வாயில் கருப்புத் துணி கட்டுக்கொண்டு போராடுவது, உண்ணாவிரதம் என பலவடிவங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு இவர்களது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காததால் தங்களை கருணை கொலை செய்யக் கோரி போராடுகின்றனர். அரசு உயர் கல்வித் துறையில் பணிபுரியும் இந்த விரிவுரையாளர்களது வாழ்க்கை அவலத்தின் முழு பரிமாணத்தையும் அறிந்துகொள்ள வேண்டியதும் அவர்களுடன் இணைந்து போராட வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகும்.

honorary-lecturers-struggleசுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பெயரில் இவர்கள் கல்லூரியில் புகுத்தப்பட்டனர். இன்று, தமிழ்நாட்டின் அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக சுமார் 3,400 பேர் பணிபுரிகின்றனர். பல கல்லூரிகளில் இவர்கள் சரிபாதி விரிவுரையாளர்களுக்கும் அதிகமானவர்களாக உள்ளனர். சில துறைகளில் தலைவர்களே இல்லாமல், ஒரு பேராசிரியரும் இல்லாமல் இந்த விரிவுரையாளர்களைக் கொண்டே இயங்குகின்றன. உதாரணத்திற்கு கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 54 பேர் கௌரவ விரிவுரையாளர்களாக வேலை செய்கின்றனர். மாலை நேரக் கல்லூரியே இவர்களை நம்பித்தான் இயங்குகிறது. கல்லூரியின் மொத்த பாடச்சுமையையும் இவர்கள்தான் சுமக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல. இவ்விரிவுரையாளர்களின் தியாகத்தால்தான் பல அரசுக் கல்லூரிகளே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்கள் இல்லையென்றால், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் பட்டப்படிப்பு என்பது பகல் கனவாகவே முடிந்துவிடும்!

கௌரவ விரிவுரையாளர்கள் அல்ல, நவீன கொத்தடிமைகள்!

இப்படி, அரசுக் கல்லூரியின் இரத்தமும் இதயமுமாக விளங்கும் கௌரவ விரிவுரையாளர்களை இந்த அரசு எப்படி நடத்துகிறது என்பதுதான் கொடுமையான விசயம். இவர்கள் கல்லூரிகளில் பணிபுரிவதற்கு எந்த எழுத்துப் பூர்வ ஆவணங்களும் கொடுப்பது கிடையாது. மாதம் ரூ 10,000 என்று தற்போது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ‘ஊதியம்’ என்பதும் முழுமையாக ஊதியமாக தரப்படுவதில்லை. இவர்கள் ஒரு நாள் விடுப்பெடுத்தாலும் அதற்குரிய தொகை பிடித்தம் செய்துகொள்ளப்படுகிறது. மே மாதத்திற்கும், ஜூன் மாதம் கல்லூரி தொடங்கும் வரையிலும் இவர்களுக்கு ஊதியம் கிடையாது. இப்படி அத்துக்கூலிகளாகவே இந்த ‘கௌரவ’ விரிவுரையாளர்கள் நடத்தப்படுகிறார்கள். இதனைவிடக் கொடுமை என்னவென்றால், சென்ற இரு ஆண்டுகளாக, ஏப்ரல் மாதத்தில் வேலை செய்தால் அதற்கு ஊதியம் தருவதாக சொல்லி வேலை வாங்கிய அரசு, இவர்களுக்கு அந்த மாத ஊதியத்தை வழங்கவில்லை. இப்படி பகல்கொள்ளையர்களைப் போல இவர்களை ஏமாற்றி வருகிறது இந்த அரசு.

பேராசிரியர்களுக்கு நிகரான கல்வித்தகுதி கொண்டிருக்கும் இவர்களுக்கு பணி பாதுகாப்பு, மருத்துவ உதவிகள், விபத்து உதவிகள் என எந்த உரிமைகளும் கிடையாது. பேராசிரியர்கள் இவர்களை மதிப்பதும் கிடையாது. வேலை வாங்கும் போது மட்டும் இவர்களை அழைத்து பேசுகின்ற, இவர்களது உழைப்பைத் துல்லியமாக கணக்கிட்டு சுரண்டுகிற அரசு, இவர்களது வாழ்வாதாரத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. இதனால், பல ஆண்டுகள் உழைத்தும் பயனின்றி வேலையைவிட்டு சென்றவர்கள் பலர்.

பாடம் நடத்தும் திறமை கொண்டவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியிலும் ஈடுபடலாம் என்ற வகையில் பல்கலைக் கழங்கங்களும் இவர்களை விடைத்தாள் திருத்தும் வேலை செய்ய அங்கீகரித்துள்ளது. ஆனால், கல்லூரி நிர்வாகங்களோ, இவர்களுக்கு விடைத்தாள் திருத்துவதற்கான விடுப்பு வழங்குவதில்லை. அந்தவகையில் சிறு பொருளாதார உதவியும் இவர்களுக்கு சென்று சேர்ந்துவிடக்கூடாது என்பதில் அரசு வக்கிர புத்தியுடன் நடந்து கொள்கிறது.

கௌரவ விரிவுரையாளர்களின் பிரச்சனை கல்வி தனியார்மயமாக்கத்தின் விளைவு!

1992-ல் இந்தியாவில் கல்வித்துறையில் தனியார்மயமாக்கம் தொடங்கியது. அன்று தொட்டு கல்விக்கு கொடுத்துவந்த குறைந்தபட்ச முன்னுரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வந்தது அரசு. இதன் ஒரு பகுதியாக உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கி வரும் நிதியையும் குறைத்தது. நேரடியாக தனியார்மயமாக்கத்தைப் புகுத்தினால் மாணவர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அது போராட்ட உணர்வுக்கு வழி வகுத்துவிடும் என்றுணர்ந்த அரசு, கட்டம் கட்டமாக கல்வித்துறை கட்டமைப்பை சீரழித்தும் வெள்ளையர்கள் கையாண்ட பிரித்தாளும் வழிமுறையை பின்பற்றியும் கல்வித்துறையில் தனியார்மயமாக்கத்தைப் புகுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டது. நிரந்தர பேராசிரியர்களை நியமிக்காமல் அரசுக் கல்லூரிகளை கட்டம்கட்டமாக செயலிழக்க வைத்து இறுதியில் இழுத்து மூடுவதற்கான ஒரு இடைக்கட்டம்தான் இந்த கௌரவ விரிவுரையாளர்கள் என்ற பணி. கௌரவ விரிவுரையாளர்களும் தொடக்கத்தில் பணிநிரந்தரம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர், இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்றனர்.

நம்ப வைத்து கழுத்தற்குக்கும் ஆளத் தகுதியிழந்த அரசு கட்டமைப்பு!

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணிநிரந்தம் செய்வோம்” என்று அறிவித்திருந்தார். ஆனால், இந்த நாலேமுக்கால் ஆண்டிலாக இவர்களை கண்டுகொள்ளவே இல்லை. மேலும், கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வும் வழங்கவில்லை. இதனால் கௌரவ விரிவுரையாளர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்த நிலையில் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கௌரவ விரிவரையாளர்களுக்கு எதிரான ஜெயா அரசின் உயர் கல்வித்துறையின் இந்த அணுகுமுறை மேலும் பல வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டுதான் வருகிறது. உதாரணமாக, தமிழக அரசுத் துறைகளில் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யமால் 6 மாதங்களாக இழுத்தடித்து வந்தது உயர்கல்வித் துறை. இதற்கு ரூ.10,000 அபராதம் விதித்து, ஜனவரி 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தியும் மீண்டும் பதில்மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடித்தது உயர்கல்வித் துறை. இதனால், உயர்நீதிமன்றம் தமிழக அரசை கடுமையாக கண்டனம் செய்து ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. ஆனால், ஜெயா அரசு இந்தக் கண்டனங்களை கழிப்பறைக் காகிதம் போல கருதி வருகிறது. இந்த உயர்கல்வித்துறைதான் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வும் பணிநிரந்தரமும் வழங்க மறுத்து வருகிறது.

அதனால், சட்டத்திற்குள் போராடுவது நீதிமன்றத்தில் முறையிடுவது போன்ற எவையும் பயனளிக்கவில்லை. இதனை உணர்ந்து கொண்ட கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் “தங்களைக் கருணைக் கொலை” செய்யுமாறு அரசிடம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தவகையிலான முறையீடுகள் போராட்டங்கள் எல்லாம் இந்த அரசினை சற்றுக்கூட அசைய வைக்காது என்பதுதான் உண்மை. காரணம், கல்வித்துறை தனியார்மயமாக்கத்தை நோக்கமாக கொண்டு செயல்படும் போது, அதன் பொருட்டு உருவாக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்களை ‘கௌரவமாக’ நடத்துவது என்பது பகல்கனவாகவே இருக்கும். அதுமட்டுமல்ல, பதில் மனு தாக்கல் செய்வதற்குக் கூட நீதிமன்றத்தை அரசே மதிப்பதில்லை. அரசின் ஒரு அங்கம் மற்றொரு அங்கத்திற்கு எதிராக செயல்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை 2015 – அரசுக்கல்வியை ஒழிக்கும் அணுகுண்டு!

கல்வி இன்று வியாபாரப் பொருளாக்கப்பட்டுள்ளது. காசுக்கேற்ற கல்வி என்ற அநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மோடி அரசோ, கல்வியை கடைசரக்குதான் என்று அறிவிக்கும் வகையில் சட்டம் இயற்ற இருக்கிறது. இதற்கான காட்ஸ் (General Agreement on Trade and Sevices – GATS) ஒப்பந்த்ததில் அண்மையில் கையொப்பமிட்டுள்ளது. இந்தச் சட்டப்படி மாணவர் என்பவர் கல்வி என்ற சேவையை வாங்குபவர்; ஆசிரியர் எனப்படுபவர் விற்பனையாளர் (Salesman); கல்வி நிறுவனம் என்பது கல்வி சேவை விற்பனை நிலையம் என்ற வகையில் கல்வித் துறையின் அடிப்படைக் கட்டமைப்பே மாற்றியமைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளின் முழு கட்டுப்பாட்டிற்குக் கல்வியைக் கொண்டு சென்றுள்ளது.

மேலும், இச்சட்டத்தின் மூலம், 8ம் வகுப்பு முதற்கொண்டு தொழிற்கல்வியைப் புகுத்துகிறது. இவ்வாறு புகுத்துவதன் மூலம் மாணவர்கள் அவரவர் சாதித் தொழிலைக் கற்றுக்கொடுப்பது, அதன் மூலம் 1967-களில் தமிழகத்தில் விரட்டியடிக்கப்பட்ட குலக்கல்வியை மீண்டும் நிலைநாட்டுவது என்று பார்ப்பன சதித்தனத்துடன் செயல்படுகிறது. இதன் மூலம், “யங் இந்தியா” இருக்கிறது என்று சொல்லி, குழந்தைகளை உழைப்பில் ஈடுபடுத்தி ‘கொள்ளை இலாபத்திற்கு நான் கேரண்டி’ என்று கூறி பன்னாட்டுக் கம்பெனிகளை கூவி கூவி அழைக்கிறது.

கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்படும் வருவாயிலிருந்து (அதாவது ஃபீஸ் மற்றும் உழைப்பில் ஈடுபடுத்தி வரும் வருவாய்) நடத்தப்பட வேண்டும் எனவும் இதனால், கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி ஒதுக்கத்தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இது போன்ற பல கொடிய சரத்துக்களை இச்சட்டம் கொண்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை முற்றிலுமாக பறிக்கும் வகையிலான புதிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஏழைகளுக்கு கல்வி எதற்கு – புதிய மனுநீதி!

கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காமல் இருப்பது என்பது ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் சதித்திட்டத்தின் ஒருபகுதி. இந்திய அரசியல் சாசனத்தை வகுக்கும் போதே கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்க்காமல் கவனமாக தவிர்த்துவிட்டது இந்திய அரசு. தற்போது, புதிய கல்வி கொள்கை கொண்டுவருவதன் மூலம் கல்வியையே சரக்காக்கிவிட்டது. அன்று பார்ப்பன மனுநீதி சூத்திரர்களுக்கு கல்வி உரிமையை மறுத்தது. இன்று ஏழைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. ஆம், புதிய கல்விக் கொள்கை என்பதே அந்த புதிய மனுநீதி! அதனால், கல்வி என்ற அடிப்படை உரிமைப் போராடி பெறவேண்டியுள்ளது.

மாணவர்கள் – விரிவுரையாளர்கள் இணைந்து போராட வேண்டும்!

தற்போது கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் அவர்கள் மட்டும் ஈடுபடுவதாக உள்ளது. இந்த வரம்பைத் தாண்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, கௌரவ விரிவுரையாளர்கள் மீதான அடக்குமுறை என்பது கல்வி தனியார்மயமாக்கத்தின் ஒரு பகுதி என்பதை அவர்கள் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் உணர்த்த வேண்டும். அந்தவகையில் உடனடியாக பாதிக்கப்படுகின்ற இவர்களுடன் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

மாணவர்களை இணைத்துக் கொண்டு போராடினால் கல்லூரி நிர்வாகம் (தமிழக அரசு) கடுமையான நடவடிக்கை எடுக்கும், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் போன்ற வாதங்கள் எல்லாம் பத்தாம்பசலித்தனமானவை மட்டுமல்ல, மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். கௌரவ விரிவுரையாளர்களின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தால் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவது அறவே நின்றுவிட்டது என்பதுதான் உண்மை. இதற்காக கேள்வி கேட்கும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் மிரட்டுகின்றன. இதன் மூலம், மாணவர்களை போராட்டத்தில் இறங்கிவிடாமல் தடுத்துவிடலாம் என பகல்கனவு காண்கின்றன.

தங்களது எதிர்காலமே அழியும் நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு அதனை உணர்த்தி, கல்வி தனியார்மயத்திற்கு எதிராக போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டியது, ஆசிரியர்களின் கடமை. தாங்கள் மட்டும் அரசிடம் சில சலுகைகளை வாங்கிவிடலாம் என்பதற்கான எந்த வாய்ப்பையும் இந்த அரசு விரிவுரையாளர்களுக்கு விட்டுவைக்கவில்லை என்பதையே, மேற்கண்ட தமிழக அரசின் அணுகுமுறைகளும் நீதிமன்ற உத்தரவுகள் செல்லாக்காசாகிவிட்டதும் நமக்கு உணர்த்துகின்றன.
தற்போதைய கல்வித் துறை கட்டமைப்பே காலாவதியாக இருக்கும் நிலையில் கௌரவ விரிவுரையாளர்களின் பணி நிரந்தர உரிமையை நிலைநாட்டவும் மாணவர்களுக்கு கல்வி உரிமையை நிலைநாட்டவும் இந்தச் சட்டமும் நீதியும் இலாயக்கற்றதாகிவிட்டதை உணர்த்த வேண்டும். தீர்வை இந்த அரசமைப்புக்கு வெளியே நிலைநாட்ட வேண்டும். ஏற்கனவே, சமச்சீர் கல்விக்காகவும், டாஸ்மாக்கை மூடுவதற்காகவும் மாணவர்கள் நடத்தியப் போராட்டங்கள் இதற்கான முன்னுதாரணமாகும். அந்தவகையில் மற்றொரு எழுச்சிக்குத் தயாராவோம்!

வெல்லட்டும், கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்!

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புஜ செய்தியாளர்,
கிருஷ்ணகிரி.

விவசாயக் கடனைப் பறிக்கும் நாட்டுப்புற நாட்டாமைகள் !

0

நாத்து விட்டு 40 நாளு முடியப்போகுது இன்னும் சேரடிக்காம பொட்டு வச்சுருக்கேன். கேட்ட எடத்துல பணம் கெடைக்கல. நாத்து பூத்துரும் போலருக்கு எப்படி நட்டு கரையேற போறேன்னு தெரியல”

புலம்பிக் கொண்டிருந்த பூங்கோதையிடம் “ரெண்டே நாள்ல பணம் ஏற்பாடு செய்றேன் ஆனா வட்டி 4 பைசா கேப்பாங்க உன்னால் முடியுமா” என்றாள் தேவகி.

பலகார மாஸ்டரான தன் பையனுக்கு ஆடி(மாதம்) போனா வேலைக்கு ஆடர் வரும் கடனை திருப்பி தரலாம் என்ற தைரியத்தில் ஒத்துக் கொண்டார் பூங்கோதை.

தேவகிக்கு இதில் கொழுத்த லாபம் உண்டு. வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தன் நகைகளை நூற்றுக்கு 70 பைசா வட்டிக்கு அடகு வைத்து, 4 பைசா வட்டிக்கு 20,000 பணத்தை பூங்கோதைக்கு கொடுத்தாள் தேவகி. இந்த நிகழ்வு எங்கள் ஊர்பக்கம் நடக்கும் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளுக்கு ஒரு வகை மாதிரி.

வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நகை அடகு வைக்க அது ஒன்றும் வட்டிக்கடை சேட்டு அல்ல – அங்கே நகைக்கடன் விவசாயிகள் பயிர் வைப்பதற்கே தரப்படும், அதாவது விதிப்படி. ஆனால், எதார்த்தம் வேறு. விவசாய பயிர் கடன் செயல்படும் லட்சணத்திற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும்.

அரசு விவசாயிகளுக்கு தருவதாக சொல்லப்படும் குறைந்த வட்டியில்லான பயிர் கடன் சரியான முறையில் பயனாளிக்கு சென்றடைகிறதா? அல்லது விவசாயிகளின் கடன் சுமையை மேலும் இது அதிகரிக்கிறதா? குறுகிய கால பயிர் கடனுக்கு வட்டியில்லா சிறப்பு மானிய திட்டம், நீண்டகால பயிர் கடனுக்கு மானியம் இல்லா குறைந்த வட்டி திட்டம் இதுபோன்ற திட்டங்களால் உரிய விவசாயிகளுக்கு பயனுள்ளதா? ஒரு ஏக்கருக்கு குறைவாக, அல்லது நிலமற்ற கூலி விவசாயிக்கு இதனால் என்ன பயன்?

இந்த கேள்விகளுக்கு பதிலாக சந்தேகத்துக்கு சாட்சியாக மேலே உள்ளதைப் போன்ற பல நிகழ்வுகளை சொல்ல முடியும். அரசின் விவசாயக் கடன் திட்டத்தை தாங்களே நேரடியாக பெற ஏழை, சிறு ,குறு, நடுத்தர விவசாயிகள் பல இடையூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது.kaviri-farmer

இந்த கடனை பெற குறைந்தது ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். பத்தாயிரம் முதல் 3 லட்சம் வரை 7 சதவித வட்டியில் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. 1 லட்சத்துக்கு மேல் கடன் வாங்குபவர் நிலத்தை அடமானமாக வைக்க வேண்டும். ஒரு லட்சத்துக்கு குறைவான தொகை என்றால் கடன் வாங்குவதற்கு ஈடாக நகை, நிலத்தின் சர்வே என்னுடன் கூடிய வி.எ.ஒ-விடம் சிட்டா அடங்கல் சான்றிதழ் பெற்று கொடுக்க வேண்டும்.

கிராமபுற வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வருடத்தில் சில மாதங்கள் மட்டும் சிறப்பு சலுகையாக பயிர் கடனுக்கு எட்டு மாத காலத்துக்கு வட்டி கிடையாது. எட்டாவது மாதம் முடிந்து ஒரு நாள் கூடுதலானாலும் எட்டு மாதத்துக்கும் சேர்ந்து வட்டி கட்ட வேண்டும். குறுகிய கால வட்டியில்லா பயிர் கடனானது நீண்ட நாள் கடனாக மாறி வட்டி விகிதம் அதிகரித்து விடும்.

இந்த நடைமுறை சாதாரண நிலமற்ற விவசாயிகளுக்கு பொருந்துமா? நிலம் உள்ளவர்களுக்கு கூட சொன்ன தேதியில் கடனை திருப்பி செலுத்த இயலுமா? வட்டி, கூட்டுவட்டி என்று மாறும் கடனை கொடுக்க முடியுமா?

பெரும்பாலான விவசாயிகளிடம் சொந்த நிலம் இருப்பது இல்லை. குத்தகைக்கோ அடகுக்கோதான் விவசாயம் செய்கிறார்கள். இவர்களால் இந்த சலுகைக் கடனைப் பெற முடிவதில்லை. ஒரு ஏக்கருக்கு குறைவான சொந்த நிலம் உள்ள சாதாரண சிறு விவசாயிடம் ஈட்டுத் தொகையாக கொடுப்பதற்கு நகையும் இருப்பதில்லை.

ஒரு ஏக்கருக்கு தரப்படும் கடன் தொகையின் அளவு நடவு செலவுக்கே போதாது. நடவுக்குப் பின், களையெடுப்பு, உரம், பூச்சி மருந்து வகையறாக்கள் என்று எல்லாவற்றுக்கும் தண்ணீராக செலவு செய்த பின் அறுவடைக் கூலி, சுமைக்கூலி என்று தொடர்ந்து வரும் செலவுகளைச் சமாளிக்க வெளியில் 4, 5 வட்டிக்கு கடன் வாங்கினால் தான் சமாளிக்க முடியும். அறுவடை முடிந்ததும் எந்த கடனை அடைப்பது? காத்திருக்கும் குடும்ப செயவுக்கு என்ன செய்வது? கேள்வி மட்டும் தான் மிச்சம்.

வட்டி இல்லா சலுகையில் கொடுக்கும் விவசாயக் கடனில் முழுதும் பயனடைவது நிலத்தின் அளவு அதிகமாக உள்ள பணக்கார விவசாயிகளும், இதைப் பயன்படுத்திக் கொண்டு விவசாயத்திற்கு தொடர்பில்லாத வட்டி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் தான்.

farmers-plantingமானியம் இல்லாத குறைந்த வட்டியிலான நீண்ட நாள் கடனின் சிறப்பு பயனையும் இவர்களே அடைகிறார்கள். அதிக நிலம் வைத்திருப்பவர்கள் தான் டிராக்டர், குபேட்டா, கதிர் அறுக்கும் இயந்திரம், நடவு நடும் இயந்திரம், ஆழ்துளைக் கிணறு அமைப்பது போன்றவற்றுக்காக கடன் பெறத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி என்ற நிலை வந்தால் இவர்கள் காட்டில் தான் மழை. அந்த வகையில் முந்தைய காங்கிரசு அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்த போது இவர்களே பெருமளவிற்குப் பயனடைந்தனர்.

இது குறித்து உள்ளூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர் ஒருவர் கூறும் போது “நானும் ஒரு விவசாயிதான். உண்மையிலேயே விவசாயத்துக்குன்னு வாங்கறவங்க கடனை திரும்பி செலுத்த சிரம படறாங்க. பல தடவை அறிவிப்பு நோட்டீஸ் விட்டு எச்சரிக்கை செய்தாலும் கடனை புதுப்பித்து மாற்றுவார்களே தவிர உடனடியாக அடைக்க முன்வர மாட்டாங்க. காரணம் விவசாயம் மட்டும் செய்து லாபம் ஈட்ட முடியாது. விவசாயம் அல்லாத ஏதோ ஒரு வகையில் (நகர்ப்புறத்து, வெளிநாட்டு வேலைகள்) வருமானம் வரும் விவசாய குடும்பத்தால மட்டும் தான் கடனை கால தாமதம் இல்லாமல் அடைக்க முடிகிறது.” என்றார்.

பானுமதி என்கிற அம்மாள், தனது மருமகனிடம் இரண்டு ஏக்கர் நிலம் இருந்தும் அவரால் பத்து ரூபாய் கூட மிச்சம் பிடிக்க முடியவில்லை என்று வருந்தியுள்ளார். பின் எப்படியாவது பணத்தைக் கட்டி வெளிநாடு அனுப்பிவிட்டால் ஐய்ந்தாறு வருடத்தில் ஏதாவது கையில கொஞ்சம் பணத்தை பாக்கலாம் என்ற நம்பிக்கையில் மருமகனை வெளிநாடு நினைத்தார். அதற்கு பணம்? மகளுக்கு போட்ட நகைகளை பயிர் கடனில் அடகு வைத்தே பணம் புரட்டியிருக்கிறார்.

இதில் காசு வாங்கிய ஏஜெண்டு ஏமாற்றாமல் இருப்பாரா, சென்ற நாட்டில் சொன்ன கூலி கொடுப்பார்களா, அங்கே உழைத்து உடல் உருகிப் போன பின் ஆரோக்கியத்தோடு திரும்ப முடியுமா என்பதெல்லாம் அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விசயங்கள்.

இன்னொரு பக்கம் மகளிர் சுய உதவிக் குழு என்கிற பெயரில் அரசே முன்வந்து மக்களில் ஒரு பகுதியினரை பிழைப்புவாதிகளாக்கி விட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு ஊரில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து இயக்கும் தொண்டு நிறுவன உரிமையாளர் ஒருவர். ஒரு மாவட்டம் முழுவதும் பெரும்பாளான ஊர்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களை இயக்கி வருகிறார். இதில் கிடைத்த அறிமுகத்தால் அவருக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியில் வட்டியில்லா பயிர் கடனை பெறுவதற்காக அந்த ஊர் அரசியல் கட்சிக்காரரின் செல்வாக்கை பயன்படுத்தி அந்த ஊர் நிலத்தின் சர்வே கணக்கு படியே பயிர் கடனாக ரூபாய் 1,75,000 கடனாக வாங்கியுள்ளார்.

ஒரு ஊரிலேயே இவ்வளவு தொகையை வாங்க முடியும் என்றால் ஒரு மாவட்டம் முழுவதும் செயல்படும் சுய உதவிக் குழுவை பயன்படுத்தி எவ்வளவு கொள்ளையடிக்க முடியும்.

ஒரு கிராம பஞ்சாயத்துக்கு எத்தனை ஏக்கர் நிலத்துக்கு பயிர் கடன் தரவேண்டும் என்று வரைமுறை வைத்துத்தான் விவசாய பயிர் கடன் ஒதுக்கப்படுகிறது. பயிர் poverty-farmerகடனை பெறுவதற்கு வைத்துள்ள விதிமுறைகளை பயன் படுத்தி சாதாரண உழைக்கும் வறிய விவசாயிகள் கடன் பெற முடிவதில்லை. பஞ்சாயத்து வாரியாக ஒதுக்கப்படும் பயிர் கடன் கொடுத்து முடிந்ததாக அரசுக்கு கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. உரியவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா? யார் பயனடைந்தார்கள்? என்பதெல்லாம் அரசைப் பொறுத்தவரை தேவையற்ற விசயம்.

விவசாயத்துக்கு கொடுக்கப்படும் பயிர் கடனில் இத்தனை பிரச்சினை என்றால் பயிர் சேதம் என்று ஒதுக்கப்படும் நிவாரணம் அதற்கு மேல். அதுவாவது பாதிக்கப் பட்டவர்களுக்கு போய் சேருகிறதா என்றால் அங்கேயும் பல பிரச்சினைகள்.

வி.ஏ.ஒ கண்காணிப்பு இல்லாமல் நிவாரண தொகை கொடுக்க மாட்டார்கள். வாய்க்கும் வயித்துக்கும் எப்போதும் இழுபறியாக இருக்கும் நிலையில் உள்ள ஒரு விவசாயி வாய்தா கட்டுவது பெரும் பாடு. எப்படியாவது கழுத்தில் துண்டைப் போட்டு பிடுங்க கடங்காரனைப் போல காத்திருக்கும் வி.ஏ.ஒ-வுக்கு வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் வழிவகுத்து கொடுத்துவிடும். காத்திருந்த கழுகைப் போல் அலுவலகத்தில் வைத்து கொடுத்த கையோடு பிடுங்கிக் கொள்வார்கள். வாய்தா தொகை கட்ட ஒத்துக் கொண்டால் தான் நிலம் பாதிப்புக்கு உட்பட்டது என்று எழுதி நிவாரண தொகை கிடைக்க ஏற்பாடு செய்வார்கள். நிவாரண தொகையைப் பொறுத்த வரை அதிகாரி வைத்தது தான் சட்டம்.

நிவாரணம் வருகிறதென்று தெரிந்தாலே ஊருக்குள் பெரும் புள்ளிகள் தங்கள் குள்ளநரித்தனத்தை காட்டத் துவங்கி விடுவர். இடிந்து கிடக்கும் கோயிலைக் கட்ட, இடியாத கோயிலுக்கு கும்பாபிசேகம் செய்யவென்று ஏதாவது வகையில் காசு பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். நிவாரண தொகை பட்டுவாடா செய்யப்படும் நாளன்று, “தலக்கட்டுக்கு இவ்வளவு வரின்னு சொல்லியும் நாளு வருசமா யாரும் குடுக்க மாட்டேங்கறிங்க. இப்படி வசுலுச்சாதான் ஆச்சு” என்று வி.ஏ.ஒ. நாற்காலிக்கு அருகிலேயே இவர்களும் நாற்காலி போட்டு உட்கார்ந்து கவனமாக வசூலித்து விடுவார்கள்.

தாசில்தார், ஆர்.ஐ.இ., வி.ஏ.ஓ., உள்ளூர் கட்சிக்காரர்கள் தவிற கோயிலுக்கும் வேறு நிவாரண தொகை பாய வேண்டும். இப்படி எல்லோர் வாயிலும் விழுந்தது போக மீதி வந்து சேர்வதைக் கொண்டு கோயில் படியில் காத்திருக்கும் பிச்சைக்காரன் திருவோட்டில் போடத் தான் காணும்.

அதிகார முறைகேடுகள் ஒரு பக்கம் இருக்க, கட்சிக்காரர்களின் செல்வாக்கும் இதில் பெரும் பகுதி ஆதிக்கம் செலுத்துகிறது. விவசாய கூட்டுறவு சுசைட்டிகளில் ஏதும் தெரியாத அல்லது தன் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஆட்களை தலைவராகவும், பொறுப்பாளராகவும், செயலாளராகவும் வைத்துக்கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்டம் போடுவது ஊருக்கு ஊர் நடக்கிறது.

விவசாயத்தை மேலிருந்து அழிப்பதற்கு பன்னாட்டுக் கம்பெனிகளோடு ஒப்பந்தம், உலக வர்த்தக கழகத்தோடு ஒப்பந்தம் என்று தீவிரமாக வேலை செய்யும் அரசு, அதைக் கீழிருந்து அழிக்க தனது அதிகாரிகள், அரசியல்வாதிகள் படையை பயன்படுத்திக் கொள்கிறது. முதலாளிகளுக்கு கடன் கொடுக்கும் போது கேப்பாரின்றி அள்ளிக் கொடுக்கும் அரசு, விவசாயி விசயத்தில் ஆயிரத்தெட்டு வழிமுறை சிக்கலை வைத்துள்ளது.

இந்த சூழலை சமாளித்து வாழ முடியாத ஏழை விவசாயிகள் இருக்கும் கொஞ்ச நிலங்களையும் அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு நகரத்தில் வந்து விழும் விவசாயிகள் கட்டிட கூலி வேலை, சர்வர் வேலை என சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு வேலைக்குச் செல்கிறார்கள். இருக்கும் மிச்ச சொச்ச நிலத்தையும் ரியல் எஸ்டேட் கும்பல் வளைத்துப் போடுகிறது.

மக்களின் பசியைப் போக்க நிலதைப் பார்த்து குனிந்து நிற்கும் ஏழை விவசாயிகள், தமக்கு தீங்கிழைக்கும் இந்த அரசின் அநீதிக்கு எதிராக நிமிர்ந்து நின்று போராடும் போது தான் இந்த நிலை மாறும். அதுவரை விவசாயத்திற்கு ஒதுக்கப்படும் எந்தந் தொகையும் எந்த விவசாயிக்கும் போய்ச் சேராது!

– சரசம்மா

SVS மருத்துவக் கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை

3

கள்ளக்குறிச்சி SVS யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி வரலாறும் மோசடிகளும் – உண்மை அறிக்கை:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட பங்காரம் மற்றும் இந்திலி ஆகிய இரு கிராமத்தின் எல்லையில் மட்டும் ஏழு தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் SVS யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி. இந்த கல்லூரியின் நிறுவனர் டாக்டர் சுப்ரமணியன் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ மன்றத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி வாசுகி சுப்ரமணியன் கல்லூரியின் தாளாளராக இருக்கின்றார். வாசுகியின் அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரும் உள்ளே சென்று விட்டால் மீண்டு வருவது கடினம் தான். அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் இவரும் ஒரு ஜெயலலிதா தான்.

கல்லூரியின் கட்டமைப்பு மற்றும் அனுமதியின் யோக்கியதை:

svs-college-068 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று மாடி கட்டிடங்களை கொண்டு இயங்குகிறது, கல்லூரி. அதுவும் இரண்டு மாடி சென்ற ஆண்டு தான் கட்டி முடிக்கப்பட்டது. நீண்ட வணிக வளாகங்களை கட்டி வாடகைக்கு விடுவது போல் தான் அதன் கட்டமைப்பே உள்ளது. கல்லூரிக்கு தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி அனுமதியும், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தின் அனுமதியும் பெற்று 2008-ல் துவங்கப்பட்டது. அப்பொழுது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாசும், தமிழக சுகாதார துறை அமைச்சராக தி.மு.க வின் MRK பன்னீர்செல்வமும் இருந்துள்ளனர். இந்தக் கல்லூரியை திறந்து வைத்தவரும் MRK தான்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு ஆசி கொடுத்த அரசியல் தலைகள்.

2012-ம் ஆண்டு அக்கல்லூரி நிர்வாகம் ஹோமியோபதி படிப்புகளை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பெற்றிருக்கவில்லை என்ற காரணத்தால் ஹோமியோபதி படிப்புகளை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பிறகு 2014-ம் ஆண்டு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்று ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை துவங்கப்பட்டது. அப்பொழுது தமிழக சுகாதார துறை அமைச்சர் அ.தி.மு.க.-ன் விஜயபாஸ்கர்.

மொத்தத்தில் SVS என்ற பெயரில் எலக்ட்ரோபதி, இயற்கை மற்றும் யோகா , ஹோமியோபதி ஆகிய மூன்று வகையான படிப்புகளும் ஒரே கல்லூரியில் தான் இயங்கி வந்துள்ளன. இந்த லட்சணத்தில் கட்டுமான சம்பந்தப்பட்ட எந்த துறையிடமும் இக்கல்லூரி நிர்வாகம் அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தீயணைப்பு, பொதுப்பணித் துறையிடமும் அனுமதி பெறவில்லை. மேற்கண்ட மூன்றில் எவற்றேனும் ஒன்றில் அனுமதி பெறவில்லை என்றாலே கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தும் செய்யவில்லை. ஏன்? பல்கலை கழக நிர்வாகம் முதல் ஓட்டுப்பொறுக்கிகள், அதிகாரிகள் என அத்துணை பேரும் வாசுகி சுப்ரமணியனுக்கு வால் பிடித்துள்ளனர்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டிடப்பணி

எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், ஆசிரியர்கள், ஆய்வகங்கள் என எதுவுமே இல்லாமல் ஒரு மருத்துவக்கல்லூரியை நடத்த அனுமதிக்க முடியுமென்றால் இந்த அரசின் யோக்கியதையை பாருங்கள்.

இந்தியாவின் உயர் படிப்புகளில் ஒன்றாக கருதப்படும் மருத்துவக்கல்லூரிக்கே இந்த இந்த நிலைமை தான் என்றால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இதற்கு எத்தனை கோடி கைமாறி இருக்கும் என்று நினைக்கவே தலை சுற்றுகிறது.

dr-mgr-university-2

மாணவ-மாணவிகளின் தற்கொலையும் அதன் பின்னணியும்:

எஸ்.வி.எஸ் கல்லூரி
பாதுகாப்புடன் வாசுகி சுப்பிரமணியன்

2008-ம் ஆண்டு இக்கல்லூரி துவங்கப்பட்டதில் இருந்து இன்று வரை ஒரு மருத்துவரை கூட இக்கல்லூரி நிர்வாகம் உருவாக்கியதே இல்லை. ஆனால் ஒரேயொரு கட்டடத்தில் துவங்கப்பட்ட இவை இன்று மூன்று மாடி கட்டிடங்களாக எழுந்து நிற்கிறது எவ்வாறு என்றால் மாணவர்களை மிரட்டி கட்டணம் வசூலிப்பது, தலித் மாணவர்களின் உதவித் தொகைகளை தானே சுருட்டிக்கொள்வது, அபராதம் என்ற பெயரில் மாணவர்களிடம் இருந்து அடாவடியாக பணம் கொள்ளையடிப்பது என்ற அராஜக முறையில் தான் கட்டியுள்ளனர். அந்தக் கட்டிடத்தை கட்டுவதற்கான அனைத்து வேலைகளையும் மாணவர்கள் தான் செய்துள்ளனர். அருகில் உள்ள கிராம மக்களைக் கூட வேலைக்கு கூப்பிட்டது இல்லை.

சின்னசேலம், கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக் கொள்வதே இல்லை. காரணம் மாணவர்கள் மீதான அடக்குமுறை, கட்டணக்கொள்ளை உள்ளிட்ட மோசடிகள் உள்ளூரில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் தனக்கு எதிராக மாறிவிடுவார்கள் என்பதை நன்கு அறிந்து திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட கிணறு

வாசுகியின் கொடுமைகள் அதிகரிக்கவே 2012-ல் கல்லூரியை விட்டு மாணவர்கள் விலக விரும்புவதாக கூறி சான்றிதழை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களிடம் ஐந்தரை வருடத்திற்கான முழு பணத்தையும் கட்டினால் தான் டி.சி தருவேன் என்று மிரட்டி இருக்கிறார் வாசுகி சுப்ரமணியன்.

இந்த அயோக்கியத்தனத்திற்கு எதிராக மாணவர்கள் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். இருப்பினும் கூட நீதிமன்றத்தால் அவர்களின் அராஜகத்தை ஒன்றும் செய்து விடமுடியவில்லை. பல துறைகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இறுதியாக 2014-ம் ஆண்டு ஒரு ரிட் மனு 22 மாணவர்களின் சார்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் கல்லூரியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. அவை இயங்குவதற்கு தகுதியானவை தான் என்ற ஒரு தீர்ப்பை ஆகஸ்ட் 2015 அன்று வழங்கியது நீதி மன்றம்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
மாணவியர் படுகொலையைக் கண்டித்து மக்கள் அதிகாரம் போராட்டம்

நீதிமன்றம் இப்படி ஒரு மோசமான தீர்ப்பு வழங்கியதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த அரசமைப்பில் நீதி கிடைக்கப்போவதில்லை என்று தான் 07-09-2015 அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டமும், 14-09-2015 அன்று 8 மாணவர்கள் தீக்குளிப்பு போராட்டமும், 05-10-2015 அன்று மாவட்ட ஆட்சியரகம் முன்பு எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளனர். இது குறித்து விரிவான கட்டுரை 09-10-2015 அன்று “SVS மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தற்கொலை முயற்சி” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எஸ்.வி.எஸ் கல்லூரி
சீல் வைக்கப்பட்ட கல்லூரி

தற்பொழுது கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை SKS கன்ஸ்ரக்ஷன் மூலம் தொடங்கியுள்ளார். அதற்கும் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும். அதே அடக்குமுறை , கட்டணக்கொள்ளை, மிரட்டல் என பல வகையில் மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை தொடரவே மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கல்லூரிக்கு எதிரே உள்ள கிணற்றில் தற்கொலை செய்து கொண்டனர்.

10 அடி நீளம், 7 அடி அகலம் 75 அடி ஆழம் கொண்ட கிணற்றில் வெறும் ஐந்து அடி மட்டுமே தண்ணீர் இல்லை. இந்த கிணற்றில் விழுந்து சாவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள் விவசாயிகள். மேலும் மாணவிகள் உடலை கைப்பற்றும் பொழுது மாணவிகளுக்கு கையில் சிராய்ப்பும், தலையில் காயமும் இருந்தது என்கிறார் கிணற்றின் உரிமையாளர் பரமசிவம்.

இந்த உயிர் பலிக்கு பிறகு கல்லூரிக்கு சீல் வைத்துள்ளனர். வாசுகி சுப்ரமணியன் அவரது மகன் மற்றும் கல்லூரி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

யார் இந்த வாசுகி சுப்ரமணியன்?

svs-college-08சங்கராபுரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள குக்கிராமம் செல்லம்பட்டு. ஜெயராமன் – காந்தி தம்பதியினருக்கு முதல் மகளாக பிறந்தவர் வாசுகி. கரு நாயக்கர் பிரிவை சார்ந்தவர். ஜெயராமன் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். 1990 களில் கிராமத்தில் இருந்த வீடு, சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு கள்ளக்குறிச்சிக்கு வந்துவிட்டனர். அங்கு சொந்தமாக ஒரு லாட்ஜ் நடத்தி வந்துள்ளார். லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துள்ள வாசுகி தனியாக ஒரு ரத்த பரிசோதனை நிலையத்தை நடத்தி வந்தார். அப்பொழுது தான் செல்லம்பட்டின் அருகில் உள்ள பால்ராம்பட்டு கிராமத்தை சார்ந்த டாக்டர்.சுப்ரமணியன் கள்ளக்குறிச்சியில் ஒரு கிளினிக்கை நடத்தி வந்தார். இவர் ஆதிதிராவிடர் பிரிவை சார்ந்தவர். பெரிய அளவில் சொத்துக்கள் இல்லை. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் தான். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு தனது தந்தை நடத்தி வந்த லாட்ஜை விற்று அந்த பணத்தை கொண்டு தான் 1996-ம் ஆண்டு பங்காரம் தற்பொழுது கல்லூரி உள்ள இடத்தை தெய்வசிகாமணியிடம் இருந்து வாங்கினார். அதற்கு முன்பு பரமசிவம் என்பவர் (தற்பொழுது மாணவிகள் இறந்து கிடந்த கிணற்றின் உரிமையாளர்) குத்தகைக்கு 3 ஏக்கரில் மரவள்ளியை போட்டிருந்தார். அதனை அறுவடை செய்ததும் நிலத்தை ரிஜிஸ்டர் செய்து கொள் என்று தெய்வசிகாமணி வாசுகிசுப்ரமணினிடம் கூறியிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்ட வாசுகி முன்பணமாக 1 லட்சத்தை தெய்வசிகாமணியிடம் கொடுக்கவே, பதிவு செய்யாமலே நம்பிக்கை அடிப்படையில் பத்திரத்தை வாசுகியிடம் ஒப்படைத்துள்ளார் நிலஉரிமையாளர். விளைவு ஒரு வாரத்தில் மரவள்ளியை பாதி பயிரிலேயே JCB மூலம் பிடுங்கி எறிந்துள்ளார் வாசுகி சுப்ரமணியன். இதனை கேட்ட தெய்வசிகாமணியை பணம் தர முடியாது என்று மிரட்டியுள்ளார்.

svs-college-01ஆக கல்லூரிக்கான அனுமதி மட்டுமல்ல இடத்தையும் போர்ஜரி செய்து தான் வாங்கியுள்ளார் வாசுகி சுப்ரமணியன். அதுமட்டுமல்லாமல் கல்லூரிக்கு அருகில் ஒரு ஓடை உள்ளது. அதனை தூர்த்து தான் நுழைவு வாயில் கட்டியுள்ளார். கல்லூரிக்கு உள்ளே 1.45 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதனையும் ஆக்கிரமித்து இருக்கிறார்.

பங்காரம் கிராமத்தை சார்ந்த கொளஞ்சி என்பவர் வயலுக்கு செல்வதற்கு கல்லூரி வழியாக சென்றதால் 2 நாட்கள் கல்லூரியில் வேலை செய்ய வைத்து துன்புறுத்தியிருக்கிறார்.

அதே பங்காரத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஓடைக்கு விறகு பொருக்க கல்லூரி வழியாக சென்றதால், அப்பெண்ணை பிடித்து இனிமேல் இவ்வழியாக வந்தால் “மரண ஊசி போட்டு கொன்று விடுவேன்” என்று மிரட்டியுள்ளார். இவ்வளவு படுபாதக செயலையும் செய்துள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
DR முத்துசாமி நிலத்தின் வழியாக பாதை போடும் காட்சி

அதுமட்டுமல்லாமல், கல்லூரிக்கு விற்ற நிலம் போக மீதி நிலத்தை சென்னையில் உள்ள எம்.ஜி.ஆரின் குடும்ப டாக்டர். முத்துசாமி அவர்களுக்கு விற்றுள்ளார் தெய்வசிகாமணி. அந்த நிலத்தின் வழியாக 2012-ம் ஆண்டு ரவுடிகளை வைத்து அடாவடியாக கல்லூரிக்கு பாதை போட்டுள்ளார்.

இதே முத்துசாமி மீது இரண்டு முறை பொய் வழக்கு போட்டு மிரட்டியுள்ளார். வழக்கு எண்:428/2007, 482/2010 இவை இரண்டும் பொய் வழக்கு என்று கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டாக்டர் முத்துசாமி நிலத்தின் வழியாக பாதை அமைப்பதற்கு முற்றிலும் உதவியது அப்போதைய RDO வாக இருந்த உமாபதி என்பவர் தான். ஏரி மண்ணை சட்டவிரோதமாக கொண்டு வந்து பாதையை போட்டனர். அதன் பிறகு வந்த கள்ளக்குறிச்சி RDO குணசேகர் கல்லூரிக்கு அடியாள் போல் நடந்து கொண்டார் என்று கூறுகின்றனர் கிராம மக்கள்.

டாக்டர் முத்துசாமியின் நிலத்தில் பாதை அமைத்தது தவறு என்று கூறி அதனை அப்புறப்படுத்த கூறிய தாசில்தாரை தனது கூலிப்படையை ஏவிவிட்டு RDO குணசேகர் முன்னிலையிலேயே மிரட்டியுள்ளார் வாசுகி சுப்ரமணியன்.

முத்துசாமிக்கு ஆதரவாக சென்ற சின்னக்கண்ணு, பக்கத்து நிலத்துகாரர். அவர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி பொய் வழக்கு கொடுக்க சொல்லி மாணவ – மாணவிகளை மிரட்டி 65 வயதான சின்னக்கண்ணு மீது வழக்கு போட வைத்து, ஒரு பாசிஸ்டின் மனநிலைக்கே சென்றுள்ளார் வாசுகி சுப்ரமணியன். அப்போதைய சின்னசேலம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், SI அண்ணாதுரை கல்லூரிக்கு சாதகமாக வழக்கு எண்: 8/2012 . பிரிவு: 147, 294(B), 323, 506(I) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளார். இதனை கேட்க சென்ற இந்திலி ஊ..ம தலைவர் ஆச்சலா, சின்னகண்ணுவின் மகன் ஆகியோரையும் வழக்கில் சேர்த்து ரிமாண்ட் செய்துள்ளார். அதன் பிறகு கல்லூரியோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் இன்ஸ்பெக்டர் செல்வராஜ்.

2008-ல் கள்ளக்குறிச்சியில் DSP-யாக பணியாற்றிய ஜெயபாலன் ஓய்வு பெற சட்டவிரோதமான முறையில் உதவியதாகவும், தற்பொழுது கள்ளக்குறிச்சி உளவுப்பிரிவில் பணியாற்றும் குணசேகருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீண்ட கால தொடர்பு இருந்து வருவதாக கூறுகின்றனர்.

எஸ்.வி.எஸ் கல்லூரி
மாணவியர் படுகொலையைக் கண்டித்து போராட்டம்

2010-ம் ஆண்டில் இருந்து கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய RDO-க்கள் கதிரவன், இன்வசன்ட் திவ்யா, அப்போதைய சப் கலெக்டர் விவேகானந்தன், மாலதி, ஆகிய அனைவருமே இந்த கல்லூரியின் சட்டவிரோத நடவடிக்கைகள் அத்துணைக்கும் துணைபோயுள்ளனர்.

வாசுகி சுப்ரமணியன் என்பவர் தனி ஆளாக நின்று இவ்வளவு மோசடிகளையும் செய்யவில்லை. இந்த கிரிமினலின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் துணை நின்றது இந்த அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் தான். ஆழமாக சிந்தித்து பார்த்தால் தனக்கென்று வரையறுக்கப்பட்ட பணிகளை செய்யாமல் தவறியதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு எதிரான குற்றக் கும்பலாக ( Mafia Gang) மாறியுள்ளது அரசு. கிரிமினல்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதற்க்கெதிராக போராடக்கூடியவர்களையும் ஒடுக்குகிறது.

வாசுகி சுப்ரமணியன் என்ற கிரிமினலை, துணை நின்ற அதிகாரிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள், மக்கள் அதிகாரம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்பினரையும் கைது செய்தது.

ஆனால், அறிஞர்கள் கூறுவது என்னவென்றால், சில அதிகாரிகள் தான் தவறு செய்கிறார்கள் .மற்றபடி அரசின் மீது குற்றம் சொல்ல முடியாது என்கிறார்கள். இல்லையேல் CBI விசாரணை கோருவது அல்லது நீதிமன்ற விசாரணை கோருகிறார்கள்.

நாடறிந்த பரபரப்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் தீர்ப்பு எவ்வாறு வந்துள்ளது என்பது நமக்கு தெரியும். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா விடுவிக்கப்பட்டதும்,குஜராத் முஸ்லீம் படுகொலையின் சூத்திதாரிகளான நரேந்திர மோடி, அமித் ஷா  போன்றோர் கொலைக் குற்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதை என்னவென்று சொல்வது?

CBI விசாரணை நடத்திய வழக்கில் சத்யம் கம்ப்யூட்டர் ராமலிங்க ராஜு இன்றும், பங்குச் சந்தை ஊழல் பேர் வழி காலஞ்சென்ன ஹர்ஷத் மேத்தா போன்ற கார்பரேட் கிரிமினல்கள் நேற்றும் உல்லாசமாக சுற்றித் திரிந்தார்கள் – திரிகிறார்கள். இவ்வளவு நடந்த பிறகும் இந்த கட்டமைப்பை நம்ப வேண்டுமா?

தற்பொழுது 3 மாணவிகள் மரணத்திற்கும் CBI விசாரணை தான் கோருகின்றனர். வேண்டுமானால், வாசுகி சுப்ரமணியன் இன்னும் செய்யாத தவறு என்ன என்பதை கண்டுபிடிக்க CBI விசாரணையை கேட்கலாம். அதிகாரிகள், MLA, MP அமைச்சர் போன்ற கிரிமினல்களின் ஆதரவோடு அவ்வளவு அயோக்கிய தனங்களையும் செய்திருக்கிறார் வாசுகி சுப்ரமணியன்.

மேலும் அழுகி நாறிப்போன இந்த சட்டத்திற்கு வெளியேயும் ஒரு மாபியா கும்பலை இயக்கி வருகிறார். அவர் தான் மாடூரை சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன். இந்த பெரு.வெங்கடேசன் முன்னர் விடுதலை சிறுத்தை கட்சியில் இருந்து வெளியேறி 2004-ம் ஆண்டு “ஆதிதிராவிடர் புரட்சி கழகம் “ என்றவொரு லெட்டர் பேடு தலித் அமைப்பை தொடங்கி தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார். அரசியல் மாபியாக்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் இவருடைய தொழில். டாக்டர் முத்துசாமிக்கும் வாசுகி சுப்ரமணியத்துக்கும் ஏற்பட்ட நிலத்தகராறில் கட்டைப்பஞ்சாயத்து செய்தவர் இவர் தான். பிறகு வாசுகி சுப்ரமணியனின் அல்லக்கையாக மாறி கல்லூரியே கதி என கிடந்தார்.

மாணவர்களை மிரட்டுவது, திட்டுவது, பெற்றோர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இவர் தான் செய்து வந்தார். இந்த வெங்கடேசன் “மன்னார்குடி மாபியா” கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக கூறுகின்றனர் பிரபல வழக்கறிஞர்கள். இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதரவில் தான் இத்துனை காலமும் ஆட்டம் போட்டுள்ளார்.

அடுத்ததாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு இந்த கல்லூரிக்கு நெருக்கமானவர் என்றும், சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள் சேர்க்கையின் போது கல்லூரியில் சேர வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட மாணவர்களாகிய நாங்கள் பிரச்சாரம் செய்த போது எங்களை மிரட்டியது வன்னியரசு தான் என்றும் உறுதியாக கூறுகின்றனர் அந்த மாணவர்கள்.

இதனை உறுதிபடுத்தும் விதமாக சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகிய மாணவிகள் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பொழுது மாணவர்களை கலைப்பது, பெற்றோரிடம் சமாதானம் பேசி பிரேத பரிசோதனை செய்ய வைத்தது உள்ளிட்ட வேலைகளை கச்சிதமாக செய்து கல்லூரியின் விசுவாசி தான் என்பதை உறுதிபடுத்தினார் விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலர் பாமரன். இவரின் இந்த அயோக்கிய தனத்தை கண்டு மருத்துவமனையிலேயே மாணவர்கள் அனைவரும் காரி உமிழ்ந்தனர்.

பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பொதுவாக தலித் அமைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்வதே அப்பட்டமான ஏமாற்று. SVS கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலரும் தலித்துகள் தான். பெரும்பாலும் இது போன்ற மோசடி கல்லூரிகளுக்கு ஆள் பிடித்து கொடுப்பதே இவர்கள் தான். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று தலித் மாணவர்களின் பட்டியலை வாங்கிக்கொண்டு முதலில் மாணவர்களிடம் பேசுவது அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் வீடுகளுக்கு சென்று பெற்றோரிடம் பேசி மனதை மாற்றுவது என்று தலித் மக்களை, மாணவர்களை பலிகடாவாக்குகிறார்கள். குறிப்பாக தலித் மாணவர்களை மட்டும் குறி வைப்பதற்கு ஒரு நோக்கம் உள்ளது. தலித் மாணவர்களுக்கென்று ஒதுக்கக்கூடிய உதவித் தொகை, அரசின் சலுகை, வங்கி கடன் போன்றவற்றை மாணவர்களின் பெயரால் தானே மொத்தத்தையும் சுருட்டிக் கொள்வதற்கு தான். இது தான் svs கல்லூரியிலும் நடந்துள்ளது. இவற்றை எல்லாம் தெரிந்தே தான் தலித் அமைப்புகள் செய்கின்றன. சாதியை கடந்து வர்க்கம் என்ற அடிப்படையில் ஆளும் வர்க்க கும்பலுக்கு சேவை செய்து வருகிறார்கள் என்பதை SVS கல்லூரியின் சம்பவங்களில் இருந்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மூன்று மாணவிகளின் உடலையும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்து பிரச்னையை சுமூகமாக முடித்து விட வேண்டும் என்று அரசு காட்டிய தீவிரம், பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தலைமையில் போராடிய மாணவர்களை அப்புறப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் என அனைத்தும் இந்த அரசு தான் செய்த தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்வது என்பது மட்டுமல்லாமல் வாசுகி சுப்ரமணியன் உள்ளிட்ட கிரிமினல் கும்பலை, கல்விக் கொள்ளையர்களை முற்றிலும் பாதுகாக்கவே விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதன் பின்னணியில் இதனை புரிந்து கொண்டால் மாணவிகள் மரணம் தற்கொலையல்ல, கொலை தான் என்பது விளங்கும்.

svs-students-suicide-demo-01ஆக SVS கல்லூரியை பொறுத்த வரை கூட்டு சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட எல்லா அயோக்கியதனங்களையும் அரங்கேற்றியுள்ளனர். இது SVS கல்லூரி மட்டும் தான் என்றில்லாமல் நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான அடக்குமுறை, கட்டணக் கொள்ளை, மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் என அனைத்தும் பகிரங்கமாகவே நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதனை மாற்ற முடியாது என்று கூறி வேடிக்கை பார்ப்பது, காரியவாதமாக , பிழைப்புவாதிகளாக ஒதுங்கிக் கொள்ள நினைப்பது அவமானம். மனித சமூகத்திற்கு எதிராக ஒரு சிறு கும்பலால் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றுவதே சரியானது.

இந்த கிரிமினல் கும்பல்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றால் அழுகி நாறிப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் சாத்தியமில்லை. இதனை தூக்கி எரிந்து விட்டு நாமே அதிகாரத்தை கையில் எடுப்போம்! குற்றவாளிகளை தெருவில் வைத்து தண்டிப்போம்!!

– வினவு செய்தியாளர்கள்.

ஆர்.எஸ்.எஸ்-ஐ நடுங்க வைத்த ரோகித் வெமுலா – வீடியோ

1
rohit-vemula-suicide-protests-4
“எட்டுக் கோடி கொடுத்தாலும் எங்களுக்கு வேண்டாம். என் மகனைக் கொன்ற குற்றவாளிகளை தண்டியுங்கள்” – ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா!

பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ’சேவை’யையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப் படுவீர்கள் என்பது தான் கோவிந்த் பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்புப் பாடம். ரோகித் வெமுலாவையும் அப்படித்தான் தற்கொலை என்ற பெயரில் கொன்றிருக்கிறார்கள்.

ஆனால் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என இந்தியா முழுவதும் மாணவர்கள் கொதித்தெழுந்து போராடுகிறார்கள். ரோகித் வெமுலாவின் தற்கொலை பார்ப்பனிய பாசிச கும்பலுக்கெதிரான கலகமாகவும், போராட்டமாகவும் உருவெடுத்திருக்கிறது. மோடி-பா.ஜ.க கும்பலின் கொட்டங்கள் இனி தங்கு தடையின்றி தொடர இயலாது என்பதற்கு இது ஒரு அறிகுறி. ஒரு ஒடுக்கப்பட்ட மாணவனின் தற்கொலை அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது. இந்த நிகழ்வை காட்சி வடிவில் ஆவணப்படுத்தியிருக்கிறோம். பகிருங்கள்!

– வினவு

 

“மூடு டாஸ்மாக்கை” கோவை கண்ணப்பன் நகர் ஆர்ப்பாட்டம் !

1

கோவை, கண்ணப்பன் நகர் நாற்சந்தியில் 29-01-2016 அன்று “மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

kovai-kannappan-nagar-demo-2கண்ணப்பன் நகர் டாஸ்மாக் கடையின் கேடு கெட்ட வரலாறு சற்றே பெரியது. கண்ணப்பன் நகர் கோவை மாநகரத்தின் முக்கியமான பகுதிகளில் ஒன்று மட்டுமல்ல தொழில் நகரான கோவையின் குறும் பட்டறைகளும் உழைப்பை விற்கும் தினக்கூலி தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் இன்றியமையாத பகுதிகளில் ஒன்று. ஒரு தேர்ந்த வழிப்பறித் திருடன் போல் சிந்திக்கும் ஜெயா அரசும் டாஸ்மாக் கடையை திறப்பதும் இது போன்ற இடங்களின் நடுவில் தான். இதே கோவையின் மேன்மக்களாக தங்களை கருதிக் கொள்வோர்களின் வசிப்பிடமான ஆர்‌.எஸ் புரத்திலோ அல்லது ரேஸ் கோர்ஸ் குடியிருப்புகளின் நடுவிலோ கொண்டு வைப்பதை கனவிலும் அவர்கள் சிந்திக்கப் போவதில்லை.

இந்தக் கடையை அகற்றக் கோரி பல கட்சிகள், அமைப்புகள் (இந்து மத வெறி அமைப்புகள் நீங்கலாக.. ஏனெனில் அவர்கள் அமைப்பின் எரி பொருளே இதுவென்பதால்) ஏராளமான முறை மனு கொடுத்தும் பயன் இல்லை. கண்ணப்பன் நகர் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டால் அந்த ஆர்ப்பாட்டத்தை கண்ணப்பன் நகருக்கும் அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் நடத்த அனுமதி தருவதாக காவல் துறை கறார் காட்டியது. இதுவொன்றும் புதிதல்ல. தன்னியல்பில் பாசிசமாகி வரும் இந்த அரசுக் கட்டமைப்பு எப்போதடா கிடைக்கும் வாய்ப்பு என இருக்கையில் பொருத்தமாக கோவைக் கலவரமும் அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பும் நடந்தது. அது நிகழ்ந்த நாள் முதல் ஏறத்தாழ இருபத்தாறு வருடங்களாக கோவையில் ஒழுங்கு விதிகள் அமலில் இருக்கிறதாம். அதனால் குண்டு வெடித்த இடங்களில் ஒன்றான கண்ணப்பன் நகரில் அனுமதி தர முடியாது, மாற்று இடத்தில் பண்ணிக் கொள்ளுங்கள் என காவல் துறை கூறிக் கொண்டிருக்க, நாம் முடிவை மாற்றத் தயாரில்லை என கூறிவிட்டோம்.

அனுமதி கேட்ட நாள் முதல் ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய நாள் இரவு வரையில் மாவட்ட அமைப்பாளருக்கு தொடர்ச்சியாக அலை பேசியில் அழைத்து ரத்தினபுரி துடியலூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு வசன பாணிகளில் பேசிக் கொண்டே இருந்தனர். கேமரா நேசன், செல்ஃபி நோயால் பீடிக்கப்பட்ட பிரதமர் மோடி வேறு வருவதாகவும் அதனால் பாதுகாப்புக்கு ஆள் பற்றாக்குறை எனவும் தேர்தல் காலம் எனவும் என்ன காரணம் சொல்லி நிறுத்துவது என்று தெரியாமல் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தனர்.

kovai-kannappan-nagar-demo-posterஆர்ப்பாட்டம் மாலை ஐந்து மணிக்கு என்று கூறியிருந்தோம். சுவரொட்டிகளும் ஒட்டியிருந்தோம். இருப்பினும் மதியம் 1 மணி முதலே காவல் துறையினர் அங்கே முகாம் இட்டிருந்தனர். நான்கு மணியளவில் 6 பேருந்துகள் 6 ஜீப்புகளை கொண்டு வந்து நிறுத்தி விட்டனர். குறிப்பிட்ட டாஸ்மாக் கடையின் முன்பு தடுப்புகளை போட்டு அவற்றை கயிறு கொண்டு இறுக்கிக் கட்டி முழுவதும் மறைத்து இரு புறமும் இருபது இருபது காவலர்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

குடிக்க வருவோரையெல்லாம், ‘கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க, அப்புறமா போலாம்’ எனக் கூறி தடுத்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தே யாரும் டாஸ்மாக் பக்கம் கூட வரவில்லை.

நாம் அந்தப் பகுதியில் நேரடியாக செய்த பிரச்சாரத்தை விட, ஒட்டிய சுவரொட்டிகள் செய்த பிரச்சாரத்தை விட நாம் விநியோகித்த துண்டுப் பிரசுரங்களை விட, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நின்று கொண்டு ரத்தினபுரி, துடியலூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களும் பெரியநாயக்கன்பாளையம் டி‌எஸ்‌பி யும் இதர போலீசாரும் செய்த பிரச்சாரமே அதிகம்.

“எதுக்கு இத்தன போலீஸ் நிக்குது?” ‘எதுக்கு இத்தன போலீஸ் நிக்குது?’ எனக் கேட்டுச் சென்றவர்களே அதிகம்.

kovai-kannappan-nagar-demo-1ஆக, இப்படியாக அந்த நாற்சந்தியில் நின்று கொண்டு எந்தப் பக்கம் இருந்து வருவார்கள் என நான்கு திசையிலும் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுமார் ஐம்பது காவலர்கள் அது போக போக்கு வரத்துக் காவலர்கள் இவர்களுக்கும் பின்னர் உளவுத் துறை ஏழெட்டு பேர் என பயங்கரமான தயாரிப்புகளுடன் வந்து நமக்காக காந்திருந்தனர். திட்டமிட்டபடி ஐந்து மணிக்கு நமது தோழர்கள் டாஸ்மாக்கிற்கு எதிர்புறம் உள்ள சந்தில் இருந்து பதாகைகளை ஏந்திக் கொண்டு தோழர் நந்து தலைமையில் முழக்கம் இட்டவாறே வந்தனர்.

இந்தக் காட்சியை பார்த்தவுடன் பத்திரிக்கையாளர்களும் போலீசும் தட தட வென சட்டைப்பைகளை பிடித்துக் கொண்டே நம்மை நோக்கி ஓடி வந்து சுற்றி வளைத்து நின்று கொண்டனர். தாமாகவும், காவல் துறையினராலும் திரட்டப்பட்ட மக்கள் நான்கு சாலைகளிலும் நின்று கொண்டு இந்தக் காட்சியை பார்த்துக்
கொண்டிருந்தனர். சிறிது நேர முழக்கத்திற்கு பின்பு கைதான 30 தோழர்கள் அருகிலிருந்த வெங்கடேஸ்வரா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிறகு இரவு வரை, ‘ரிமாண்டு தான் நீங்கல்லாம்’, ‘இதெல்லாம் ஆர்ப்பாட்ட ஸ்பாட்டே அல்ல’ ‘சிறப்பு சட்டம் இருக்கிறது’ என்றெல்லாம் பல்வேறு வசனங்களை கூறிவிட்டு எட்டரை மணி வாக்கில் விடுவித்தனர்.

kovai-kannappan-nagar-demo-3அதன் பின்னர் பகுதிக்கு வந்து விசாரித்ததில், மதியம் முதலே பல்வேறு கடைகளில் போலீஸ் நேரடியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. அதாவது, “இந்த ஆர்ப்பாட்டம் நடத்த போறவங்க யாரு”? “எங்கிருந்து வரப் போறாங்க”? என்றெல்லாம் கேட்டுள்ளனர். இது போக நாம் கைதாகி சென்ற பின்னர், விடுவிக்கப்படும் வரை அதே இடத்தில் நின்று கொண்டு கண்காணித்துக் கொண்டே இருந்துள்ளனர். மேலும் இரண்டு குரூப்புகளாக “மக்கள் அதிகாரம்” தோழர்களே வந்து போராட்டம் செய்யப் போகிறார்கள் என்றும் அதற்காகவே காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அது வரையிலும் அங்கிருந்தவர்களுக்கு தேநீர், பலகார செலவுகளுக்கு அந்த டாஸ்மாக் கடையின் பார் ஓனராம்.

“இவங்க தான் ஏற்கெனவே, சாய்பாபா காலனியில் டாஸ்மாக் கடையை உடைச்சவங்க, உன் கடையையும் உடைச்சாலும் உடைப்பாங்க”, என மென்மிரட்டல் விடுத்ததாகவும் பேச்சு உலாவுகிறது. தேநீர் பலகாரம் மட்டும்தானா அல்லது சாராயக் கடையில் சட்டம் ஒழுங்கை காத்ததற்கு மேற்படி எதுவுமா..? என்பது அந்த காவலர்களுக்கே வெளிச்சம்.

இது வரை கண்ணப்பன் நகருக்கு அந்நியமாய் தெரிந்த அமைப்பு இப்போது மக்களோடு ஒரு படி நெருக்கம் கூடுதலாகியிருக்கிறது. இது ஒரு உறுதியான பிணைப்பாக கூடிய விரைவில் மாறும். அனுபவக் கூட்டத்தில் ஒரு தோழர் கூறியபடியே, இந்த வருடத்திற்குள் டாஸ்மாக்கிற்கு எதிர்பதமாய் அகராதியில் மக்கள் அதிகாரம் ஏறும். இன்னும் சில வருடத்திற்குள் மக்கள் அமைப்பென்றாலே மக்கள் அதிகாரம் என்ற பொருள் பெறும்.

மக்கள் அதிகாரம்
கோவை

அனைத்து சாதி அர்ச்சகர் – சிதம்பரம் கருத்தரங்கம் – செய்தி

0

archagar-case-madural-prpc-hall-meeting-07க்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக சிதம்பரம் அனந்தம்மாள் சத்திரத்தில் 23-01-2016 அன்று “ஆகமம் பெரிதா? அரசியல் சட்டம் பெரிதா?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. ம.உ.பா.மைய கடலூர் மாவட்ட துணை செயலர் சி. செந்தில் கூட்ட்த்துக்கு தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் தாழை. கருணாநிதி, கோபாலகிருஷ்ணன், ம.உ.பா.மைய மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில் குமார் ஆகியோர் “இந்தத் தீர்ப்பு எத்துணை மோசமானது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழிவகுத்துள்ளது” ஆகியவற்றை சுட்டிக்காட்டி பேசினர். அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் வா.அரங்கநாதன், மற்றும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் பாலகுரு ஆகியோர் இந்த வழக்கு நடந்த காலத்தில் தங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏற்படுத்தியுள்ள மன உளைச்சலையும் வெளிபடுத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன் பேசியதாவது : “இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 17- தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும், சரத்து 14- சட்ட்த்தின் முன் அனைவரும் சமம் என்றும், சரத்து 16- சாதி, மத, மொழி, இன அடிப்படையில் பாகுபாடு பார்க்க்க்கூடாது என்றும் கூறுகின்றன. இதற்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.வாஞ்சிநாதன்
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அதைத்தான் செய்தது.
  • அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்ப்பது அரசு, மக்களின் கடமை என்கிறது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 51-க்கு அதை மீறி புராண கட்டுக்கதைகளை ஆதாரமாகக்கொண்டு உச்சநீதிம்னறம் சேது சமுத்திர திட்டம் வழக்கில் தீர்ப்பு வழ்ங்கியுள்ளது. அந்தத் திட்டம் இப்போது மாற்றுப் பாதையில் செயல்படுத்தப்படுகிறது.
  • ஒரே சட்ட்த்தையும், சாட்சிகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஜெயல்லிதாவை குன்ஹா தண்டிக்கிறார், குமாரசாமி விடுவிக்கிறார்.
  • இந்திய கூட்டுமனசாட்சிக்கு திருப்தியளிக்கும் வகையில் சாட்சிகள் இல்லாதபோதும் அப்சல் குருவுக்கும், யாகூப் மேமனுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட்து. ஆனால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை, தாழ்த்தப்பட்டவர்களை கொன்ற இந்து மதவெறியர்கள், ஆதிக்க சாதி வெறியர்கள் யாருக்கும் இது வரை தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட்தில்லை.

இது தான் இந்திய அரசியல் சட்ட்த்தின் இரட்டைத் தன்மை. அர்ச்சகர் தீர்ப்பிலே கூட அப்படிபட்ட நயவஞ்சகமான இரட்டை தன்மைதான் எச்.ராஜா, இராம.கோபாலன், சுப.வீரபாண்டியன், கி.வீரமணி என இரு எதிர் கருத்து உள்ளவர்களையும் இத்தீர்ப்பை வரவேற்க செய்கிறது. உண்மையில் இந்தத் தீர்ப்பு சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கு போராடுபவர்களுக்கு 100% தோல்வி தான். 1972 சேசம்மாள் வழக்கு தீர்ப்பில் ஆகமப்படி தான் அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்பது உட்கிடையாத்தான் சொல்லப்பட்ட்து. ஆனால் இன்று 40 வருடங்கள் கழித்து இன்று இந்த தீர்ப்பில் நேரடியாகவே கூறப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆனால் அந்தந்த கோயில்களின் நடைமுறையை முன்னிறுத்தி ஒவ்வொரு நியமனத்துக்கு எதிராகவும் வழக்கு தொடரலாம் எனக்கூறியதன் மூலம் இந்த பிரச்சினையை இன்னும் 40 வருடங்கள் இழுக்க்கடிக்கும் திட்டமிட்ட சதி இது. archagar-case-madural-prpc-hall-meeting-10

இந்த வழக்கில் முக்கியமானது 206 அர்ச்சக மாணவர்களின் வேலைவாய்ப்பல்ல, கருவறை தீண்டாமையை ஒழிப்பது தான் முக்கியமானது. அது நிறைவேறியிருக்கிறதா? என்றால் இல்லை. அதற்கு நேர் எதிராக கருவறை தீண்டாமை சரி என்றே தீர்ப்பு கூறியுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பின் அடிப்படை இந்திய அரசியல் அமைப்பு சட்ட்த்தில் உள்ள தனிமனித உரிமை, மத நிறுவனங்களின், மதங்களின் உரிமை ஆகிய இரண்டையும் வழங்குகிறது. அவற்றுக்கிடையே முரண்பாடு வரும்போது மத நிறுவனங்களின், மதங்களின் உரிமையே மேலானது என நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்பது மத சார்பற்றது அல்ல. அதை மதசார்பற்றதாக மாற்ற K.P.ஷா உள்ளிட்டவர்கள் கொண்டுவர முயன்ற திருத்தங்களும் ஏற்கப்படவில்லை. பின்னர் இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் 42வது சட்ட்த்திருத்த்த்தின் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டதே. இங்கு இந்து மத ந்டவடிக்கைகளை அரசே ஊக்குவிப்பது நடந்து வருகிறது. அது அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 48-ன் படி நடக்கிறது. மேலும், நீதிபதிகள் அதிகாரத்தில் உள்ளவர்களின்

மனநிலைக்கு ஏற்றவாறே தீர்ப்பு வழங்கி வருகின்றனர். இந்த நீதிபதிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர். அவர்கள் கூறுவதே சட்டமாக கருதப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் பார்ப்பனிய சிந்தனையை கொண்ட நீதிபதிகளை நியமிக்கும் RSS –பார்ப்பன நிதிபதிகளின் முயற்சியை தடுத்த தமிழக வழக்கறிஞர்களின் போராட்டமும், பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் தமிழக வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டங்களும் தான் 42 வழக்கறிஞர்கள் இடைநீக்கம், உயர்நீதிமன்றத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு உள்ளிட்ட வழக்கறிஞர்களின் மீதான அடக்குமுறை ஊழல் நீதிபதிகளுடன் கரம்கோர்த்து பார்ப்பன நீதிபதிகளின் நட்த்திய திட்டமிட்ட அடக்குமுறையே. இது வழக்கறிஞர்களின் பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த மக்களின் பிரச்சினை.நீதிமன்றம் மட்டுமல்ல பல்கலைகழகம், அறிவியல் கழகங்கள், உயர் அதிகார பீடங்கள் அனைத்தையும் கைப்பற்றும் RSS- BJP யின் சதியின் ஒரு பகுதி.

இந்த பார்ப்பன பாசிச அபாயத்தை எதிர்த்து ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் ஒன்றுதிரண்டு போராடி முறியடிக்க வேண்டியுள்ளது.

மக்கள் அதிகாரம், மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் S.ராஜூ

“தீண்டாமையை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்ட சட்டமன்றத்தில் சட்டம் இயற்றினாலும் அதை பார்ப்பன உச்சநீதிமன்றம் செல்லாக்காசாக்கி விடுகிறது. அப்படித்தான் 1972-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு போட்ட அரசாணையை செயலிழக்க செய்துள்ளது. 1972 சேசம்மாள் வழக்கில் அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமை செல்லாது, ஆனால் ஆகமப்படி தான் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு அர்ச்சகர் நியமனத்தில் அரசின் அதிகாரத்தை நிலைநாட்டியதே தவிர அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் நோக்கத்தை நிறைவேற்றவில்லை.

அன்று இது தீண்டாமை, சமத்துவத்துக்கு எதிரானது, சிவில் சட்ட உரிமைக்கு எதிரானது போன்ற வாதங்கள் வைக்கப்படவில்லை, 206 அர்ச்சகர் பயிற்சிபெற்ற சூத்திர மாணவர்கள் வேலைக்காக காத்திருக்கவில்லை. ஆனால் 2016-ல் இவை அனைத்தும் இருந்தன. நீதிபதி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்பதை தீண்டாமை என ஏற்கமுடியாது. ஏனெனில் அவர்கள்”இன்னின்னார் தான் வரவேண்டும் என்கிறார்களே தவிர இன்னின்னார் வரக்கூடாது” என சொல்லவில்லை என்று நரித்தனமாக வியாக்கியனம் செய்கிறது. இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் இடமளிக்கிறது. இப்படி தான் இரட்டைக்குவளை முறையும், மற்ற தீண்டாமை பழக்கங்களும் நடைபெறுகின்றன. அவற்றையும் இந்தத் தீர்ப்பு நியாயப்படுத்துகிறது.

தமிழக அரசு இயற்றிய எந்த இந்துவும் அர்ச்சகராக பயிற்சி பெற்றிருந்தால் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை இந்தத் தீர்ப்பு ரத்து செய்யவில்லை. அதனால் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கலாம், இது வெற்றி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், ஆகம விற்பன்னர் சக்திவேல் முருகனாரும் கூறி வரவேற்கின்றனர். தீர்ப்பின் இன்னொரு பகுதி ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராகவும் நீதிமன்றம் செல்ல்லாம் என சொல்லியிருப்பதையும், உண்மையில் வெற்றி என்றால் தமிழக அரசாணைக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் புறக்கணிக்கின்றனர்.

மேலும் இந்த தீர்ப்பு ஆகமத்தை கடைபிடிக்க சொல்கிறது. ஆகமம் என்பது மூணு சீட்டு விளையாட்டு போல, ஒரு மோசடி. அதில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. பார்ப்பனர்கள் சொல்வது ஆகமம் என்ற நிலை உள்ளது. 2002-ல் ஆதித்தன் வழக்கில் நம்பூதிரிகள் தான் அர்ச்சகராகலாம் என்ற மரபை மீறி ஈழவர் சாதியை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராகலாம் என தீர்ப்பளிக்கப்பட்ட்து. அதை சுட்டிக்காட்டி வாதிட்டால் அது சாதி தீண்டாமை பிரச்சினை. இந்த வழக்கில் அப்படியில்லை என நீதிபதிகள் மறுக்கின்றனர். ஆகமத்தில் குறிப்பிட்ட சாதியினர் தான் அர்ச்சகராக வேண்டும் என்று இல்லை. ஆகமம் மாற்றப்படக்கூடாது என்கிறது. ஆகமம் என்பது கோயில் கட்டமைப்பை, வழிபாட்டுமுறையை குறிப்பிடுவது. அந்த ஆகமம் இப்போது ஆகமக் கோயில் என சொல்லக்கூடிய எந்தக் கோயிலிலும் கடைபிடிக்கவில்லை. உதராணமாக கருவறையில் மின்விளக்கு போடுவது, கோயிலை நள்ளிரவிலும் திறந்து வைப்பது. என சொல்லிக்கொண்டே போகலாம்.

archagar-case-madural-prpc-hall-meeting-01மேலும் 1972 சேசம்மாள் வழக்கு தீர்ப்புக்கு பிறகு தீர்ப்பு தமிழக வெற்றியா? இல்லையா? என ஆராய நீதிபதி கமிட்டி போடும் அவலம் நடந்தது. அப்படிபோட்ட மூன்று கமிட்டிகளும் ஆகமம் எந்த கோயிலிலும் கடைபிடிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்தியது. மேலும் மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சகராக உள்ள 116 பார்ப்பனர்களில் 28 பேர் தான் அர்ச்சகராக பயிற்சி பெற்றவர்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த்து. இது தான் மற்ற கோயில்களின் நிலையும்.

இந்துக்களின் ஒற்றுமை, சமத்துவம் பேசுகின்ற ராம.கோபாலனோ, இல. கணேசனோ இந்த 206 அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களின் உரிமைக்காக கருவறை தீண்டாமையை ஒழிக்கவும் போராடவில்லை. இந்து மத நம்பிக்கையில்லாத, அதன் புராணங்களை எரிக்க வேண்டும் எனக்கூறுகின்ற மக்கள் கலை இலக்கிய கழகமும் பெரியாரிய அமைப்புகளும் இதற்காக போராடி வருகின்றன. முன்பு தாழ்த்தப்பட்டவர்கள், சூத்திர்ர்கள் கோயிலுக்குள் நுழைய கூடாது என்ற தீண்டாமையையும் எதிர்த்து கோயில் நுழைவு போராட்டங்களை நட்த்தியது அம்பேத்காரிஸ்டுகளும் பெரியாரிஸ்டுகளும் தான்.

ஆகமம் இந்து மத நம்பிக்கை அதன்படி செயல்படவேண்டும். அதை மீறுவது அரசியல் அமைப்பு சட்டம் கொடுக்கும் மத நிறுவனங்களின் உரிமை பறிப்பது என வாதிடுகின்றனர். நம்பிக்கை என்பது நடைமுறைக்கு வரும் வரை தான், வந்துவிட்டால் அந்த செயல் சட்டத்தால் கேள்விக்குள்ளாக்கப்படும். ஒருவரை கொலை செய்ய வேண்டும் என எண்ணுவது குற்றமல்ல. அதுவே அரிவாளை எடுத்து ஓங்கிவிட்டால் அது தண்டனை சட்டம் 307-படி கொலைமுயற்சி குற்றச் செயலாகும். அது காஞ்சி கோயிலில் வைத்து சங்கராச்சாரி செய்தாலும் பொருந்தும்.

பார்ப்பானை தவிர யாரும் அர்ச்சகரானால் சாமி தீட்டு ஆகிவிடும். மற்ற சாதியினர் அர்ச்சகராகக் கூடாது என்றால் சரி அப்படியே இருந்துவிட்டு போகட்டும். எங்களுக்கு தட்டும் வேண்டாம் மணியும் வேண்டாம். பார்ப்பன அர்ச்சகர் வேலையை தவிர IAS ,IPS, வெளிநாட்டு வேலை என எதற்கும் போகக்கூடாது. அனைத்து பார்ப்பனர்களும் அர்ச்சகராக மட்டுமே இருக்க வேண்டும் என நாங்கள் கூறினால் உரிமை பாதிக்கப்பட்டதாக வர மாட்டார்களா? 63 நாயன்மார்கள் விதவிதமாக கடவுளை வணங்கினார்கள் எனக்கூறுகிறது புராணங்கள். அதை மட்டும் எப்படி ஏற்கிறார்கள்?

ஆகமம் தான் பெரிது என இராம.கோபாலன், எச். ராஜா சொன்னால் பிரச்சினையில்லை. இந்திய மக்களின் சமத்துவத்தை நிலைநாட்ட உறுதியேற்ற நீதிபதிகள் பேசுவது தான் பிரச்சினை. நீதிபதி மக்களுக்காகவா? மக்கள் நீதிபதிகளுக்காகவா? என்ற கேள்வி எழுகிறது.

மக்களுக்காக தான் நீதிபதிகள் அது தான் மக்கள் அதிகாரம் என்கிறோம். மக்களின் உரிமைகளை பாதுகாக்கத் தான் மாவட்ட ஆட்சியர் காவல் துறை அதிகாரி, MLA, MP, அமைச்சர்கள். இதற்கெதிராக உங்களை தூக்கியெறியும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது.

நீங்கள் அரசு இறையாண்மை பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் மக்களின் இறையாண்மை பற்றி பேசுகிறோம்.

ஏனெனில் நீதிம்ன்றம், சட்டமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இலட்சக்கணக்கான ஏக்கர் காட்டை திருத்தி விளை நிலங்களாக மாற்ற உதிரத்தையும் உயிரையும் கொடுத்த்து உழைப்பாளிகள், விவசாயிகள், தொழிலாளிகள். அந்த மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள், மக்கள் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.

உரிமைகளை காவுவாங்குகின்ற இது போலி ஜனநாயகம். உரிமைகளை பாதுகாக்கிற உண்மையான ஜனநாயகத்தை அடைய மக்கள் அதிகராத்தை கையில் எடுத்தே தீரவேண்டும்.

இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயற்குழு உறுப்பினர் கலைசெல்வன் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
கடலூர்.

ஒரு விபத்து : அனுபவமும், படிப்பினைகளும்!

3

டந்த வாரம் வேலை முடிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையை கடந்த பொழுது, பரபரப்பான அந்த சாலையில் விளக்கு எரியாமல் இருட்டாக இருந்தது. அங்கு சிறு கூட்டம் கூடியிருந்தது. 24 வயதுடைய இளைஞனை சாலையோரமாய் கிடத்தியிருந்தார்கள். உடம்பில் எங்கும் அடியில்லை. பின்னந்தலையில் அடிபட்டு, ரத்தம் வந்திருந்தது. காதில் ரத்தம் வெளிவந்து உறைந்து போயிருந்தது.

சாலை விபத்து
(படம் – இணையத்திலிருந்து, விளக்கத்துக்காக மட்டும்)

பலரும் 108 ஆம்புலன்ஸை அழைத்தார்கள். எல்லா ஆம்புலன்ஸும் பிஸியாக இருந்ததாக சொன்னார்கள். நேரம் போய்க்கொண்டேயிருந்தது. ஒருவர் அங்கு கடந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி விசயத்தை சொல்ல, பயணிகளை இறக்கிவிட்டு அந்த பையனை நான்குபேர் தூக்கி போட்டுக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு நகரந்தார்கள்.

இந்த களேபரத்தில் அந்தப் பையனிடமிருந்து எடுத்த செல்போனை யாரோ சுட்டுவிட்டார்கள். அந்த ஹோண்டா வண்டியில் சைடில் இருந்த பெட்டியில் ஆர்.சி. ஜெராக்ஸ் தாளில் இருந்த ஒரு எண்ணை கண்டுபிடித்து பேசிய பொழுது அடிப்பட்டவருடைய தம்பி பேசினார். உடனே மருத்துவமனைக்கு வரச்சொன்னோம்.

ஆம்புலன்சுக்கு போன் செய்யும் பொழுதே, அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள காவல்நிலையத்திற்கும் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். அந்தப் பையனை அவ்வளவு போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பிறகு, காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீசும், போக்குவரத்து காவலர் ஒருவரும் அசமந்தமாய் வந்து சேர்ந்தனர். வண்டியை செந்நீர் குப்பம் எடுத்து செல்வதாய் தெரிவித்தார். அடிபட்டவருடைய செல்லை திருடிவிட்டார்களே என பொதுமக்களில் இருவர் மிகவும் ஆதங்கப்பட்டனர்.

இந்த விபத்தில் கவனிக்கத்தக்கவை :

  • தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து கொண்டிருந்த அந்தப் பையனுக்கு ஒவ்வொரு துளியும் முக்கியமானது. ஆனால் 108 ஆம்புலன்ஸ் வெகுநேரமாகியும் வந்து சேரவில்லை.
  • 1970-களில் எம்.ஜி.ஆர் படங்களில் படத்தில் இறுதிக்காட்சியில் வருவது போலவே இப்பொழுதும் சாகவாசமாய் போலீசு வந்து சேர்கிறது. வந்தும் கூட எந்தவித பதைபதைப்பும் இல்லை.
  • அம்பத்தூர் தொழிற்பேட்டை என்பது சென்னையில் முக்கியமான தொழிற்பேட்டை. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து வாவின் வரும் வழியில் உள்ள பிரதான சாலையில் தான் விளக்கெரியாமல் கும்மிருட்டாக இருந்தது. இந்த விபத்துக்கு அடிப்படை காரணம் இருட்டுதான். இந்த தொழிற்பேட்டையை பராமரிக்கும் பொறுப்பு AIEMA (AMBATTUR INDUSTRIAL ESTATE MANUFACTURER’S ASSOCIATION) -க்கு தான்! அந்த நாள் மட்டுமில்லை. அதற்கடுத்து வந்த நாட்களும் அங்கு கும்மிருட்டாக தான் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் சாலை பராமரிப்பு, பார்க்கிங் பிரச்சனை, கால்வாய் பராமரிப்பு என பல பிரச்சனைகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவுகின்றன. அய்மாவின் தொடர்ச்சியான அலட்சியம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ!
  • இதே சாலையில் தான் தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்கள் இயங்கிவருகினறன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பல அடிப்படை பிரச்சனைகளை தொடர்ந்து அம்பலப்படுத்தினாலே ஓரளவு நிலைமை சீராகும். செய்வதில்லை.

கவலைதரும் அம்சங்கள் :

  • அந்தப் பையனின் வண்டியில் முன்னாடி உள்ள பம்பர் நன்றாக வளைந்து வண்டியோடு ஒட்டிப் போயிருந்தது. இடித்தது தெரியாமல் இருக்க வாய்ப்பேயில்லை. இடித்துவிட்டு வண்டியை நிறுத்தாமல் போயிருக்கிறான்.
  • ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் பொழுது, காப்பாற்ற வேண்டிய வேண்டிய நேரத்தில் செல்லை சுட்டு நகர்ந்த நபர். நுகர்வு கலாச்சாரம் மனிதர்களை இந்த அளவுக்கு சீக்குப்பிடித்த நபராக மாற்றுகிறது.

நம்பிக்கை தரும் அம்சங்கள் :

  • அந்த பையனை எப்படியாவது காப்பாற்றிவிடவேண்டும் பதறி, மருத்துவமனைக்கு தூக்கி சென்ற மனிதர்கள்.
  • தனது ஷேர் ஆட்டோவில் முழுவதுமாய் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு, பையனை தூக்கிச் சென்ற அந்த ஆட்டோகாரர்.

இரண்டு மூன்று நாட்கள் சாலையில் கிடத்தப்பட்டிருந்த அந்த பையனின் உருவம் நினைவில் ஓடிக்கொண்டேயிருந்தது. நடந்த நிகழ்வுகளை அசைபோடும் பொழுது, எனக்கென்னவோ சமூகம் கூட அந்தப் பையனின் நிலையில்தான் இருப்பதாகப் படுகிறது.

குருத்து

குரும்பை கனவு

0
Man is climbing up to palm tree for harvest coconut.

சிவலிங்கத்தின் வயது ஐம்பது. தென்னை மரம் ஏறும் தொழிலாளி. சென்னை மாநகரின் விண்ணை முட்டும் கட்டிடங்களுக்கு மத்தியில் ஏதோ கொஞ்சம் தப்பி பிழைத்திருக்கும் தென்னை மரங்கள் பராமரிப்பு இன்றி சிக்கித் திணறும் வேளையில் இவரால் கொஞ்சம் பொலிவு பெறுவதுண்டு. தென்னை ஏறுவது அவரின் வயிற்றைக் கழுவ உதவுகின்றது என்கிற போதிலும், சிவலிங்கத்திற்கென்று ஒரு கனவு உண்டு. அவர் திரைத்துறையிலும் ஒரு காலை ஊன்றியிருக்கிறார். துணை நடிகர், டெக்னிசியன் ஒர்க்கர், செட் அமைக்க பளு தூக்கும் வேலை எனப் பல அவதாரங்கள்.

இடையில் சேர்ந்து கொண்ட லட்சியம் தான் சினிமா . படங்களில் பார்ப்பது போல் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என பாரதிராஜா காலத்தில் சென்னையை நோக்கிக் கிளம்பிய கிராமத்து இளைஞன் அல்ல சிவலிங்கம். லாரி ஓட்டுனர் ஆக வேண்டும் என்பது தான் அந்த நாட்களில் இருந்த லட்சியம். அந்தக் கனவுதான் அவரை சென்னை நோக்கி இழுத்து வந்தது.

சென்ற வாரம் அருகாமை வீட்டில் இருந்த தென்னை மரத்தின் மட்டைகளை வாங்க வந்திருந்தார்.

படம் : இணையம்

“மட்டை வெட்ட சொல்லொ அடி பாகம் காலு மேலேயே விழுந்து ஒராசி ரத்தம் கசியிது, கொஞ்சம் கிஷ்ணாயில் இருந்தா கொடுங்க மேடம். இதுல ஊத்துனா புண்ணாகாமெ காஞ்சுபுடும்.” மிக சாதாரணமாகச் சொன்னார்.

மரம் ஏறும் வயசா இது. வயதானவரிடம் இந்த வேலையை ஏன்தான் கேட்கிறார்களோ என்று அவரிடம் புகார் செய்தேன்.

“அதெல்லாம் ஒன்னுமில்லீங்கம்மா. நான் வயசுல ஏறாத மரமா. சொடுக்கு போட்ற நேரத்துல மரத்து மேல நின்னுகினுருப்பேன். நான் வயசா இருக்கசொல்லொ எங்கப்பா அரசாங்கத்தாண்ட கள்ளுக் கடையை ஏலத்துக்கு எடுத்திருந்தாரு. அப்ப இட்டுனு போயி மரம் ஏற பழக்கி விட்டாரு. மத்தாளு ஒத்த மரம் ஏறங்காட்டி நான் மூனு மரம் ஏறுவேன். இப்ப ஒடம்பு கனத்துப் புடுச்சு!”

கருத்த உடம்பில் தென்னம் பாளை தூசியும், குரும்பை ஓடுகளுமாய் வேற்க விருவிருக்க அவர் நின்றதைப் பார்க்க கரும்பு வயலில் ஆடை இல்லாமல் போய் வந்தால் உடம்பு முழுக்க எப்படி சிறாய்ப்பு இருக்குமோ அப்படி இருந்தது.

கிருஷ்ணாயில் வேண்டாம் மருந்து எடுத்து வருகிறேன் என்பதை மறுத்தவர்,

“நான் சினிமா சூட்டிங்குல வேலை செய்றவன். அடிபடாம வேலை செய்ய முடியாது. கிஷ்ணாயில் தான் மருந்து. சாரியாபூடும்.” என்றார். மரம் ஏறும் தொழிலாளிக்கு சினிமா துறையுடன் எப்படி சம்பந்தம் ஏற்பட்டது என்ற கேள்வியுடன் மருந்தை வலியுறுத்தி போடச் சொல்லிக் கொடுத்தேன்.

“16 வயதினிலிலே படம் தான் நான் அறிமுகம் ஆனது. அப்ப எனக்கு சம்பளம் சாப்பாடு போக ஒரு நாளைக்கி பத்து ரூபா தருவாங்க. சூட்டிங்கு இல்லன்னா வவுரு காஞ்சுபுடும். டிரைவர் வேலைக்கின்னு தான் வந்தேன். ஆனா கிடைக்கல. சினிமா வேல தான் கெடச்சிது.. இந்த வேலை தான் பசி ஆத்தினிச்சி. அப்டியே சினிமாலதான் நமக்கு பொழப்புன்னு ஆயிப்போச்சு. இருந்தாலும் குலத்தொழில விட முடியல. சனி ஞாயிறு வீட்டாண்ட குந்திகினு இல்லாம நாலு தெருவ சுத்தி ரெண்டு மரம் ஏறுவேன்”

“மெட்ராசுக்கு வந்து இன்னா பண்றது. டிரைவர் வேலைக்கி யாராண்ட கேக்கறதுன்னு புரியாம ஒரு மாச காலம் சுத்திகினு இருந்தேன். பெறவு வேளச்சேரியான்ட ஒரு லாரி செட்டுல விசாரிச்சு அங்க இருந்த டிரைவராண்ட தாசா பண்ணி கிளினரு வேலைக்கி சேந்தேன். ரெண்டு மாசம் நல்லாதான் ஓடிச்சு. ஒருநா லாரில பாரம் எறக்கத் தெரியாம கையில போட்டுகினேன். சோத்தாங்கையில ரெண்டு வெரலும் தகடையா நசுங்கி போச்சு. சோலி தெரியாதவனெ எதுக்கு வேலைக்கி இட்டாந்தேன்னு டிரைவராண்ட சண்ட வலிச்சாரு மொதலாளி. அம்பது ரூவா பணத்த குடுத்து வைத்தியம் பாத்துக்க இனிமே வேலைக்கி வர வேண்டாம்னு வீட்டுக்கு அனுப்பிட்டாரு.”

“பொறவு கோடம்பாக்கத்துல ஆண்டாள் லாரி சர்வீஸ் ப்ளாட் பாரத்தாண்ட படுத்துகினு கெடப்பேன். ஒரு நா அந்த மொதலாளி பாத்துட்டு விசாரிச்சு கிளினரா இரு, ஒரு நாளைக்கி 5 ரூபா சம்பளம் சேந்துகிரியா அப்புடின்னாரு. அய்யா நீங்க சம்பளம் கூட தர வேண்டாம். டைவரு வேலை கத்துகினா போதுமின்னு சேந்துகினேன்.”

“சினிமா காரங்களுக்குதான் வாடகைக்கு லாரி ஓடும். சூட்டிங்குக்கு தேவையான சாமானுங்கள ஏத்திகினு போறது. லாங்குல போகாம இன்னத்த டைவர் வேலை கத்துகின முடியும். அந்த டைவரு வேற கை மாத்தி விடவே மாட்டாரு. மத்த எல்லா வேலையும் கொடுப்பாரு. ஸ்டேரிங்க தொட விட மாட்டாரு. நான் இன்னாதான் தாசா பன்னி நடந்துகினாலும் அவரு மொறச்சுகினுதான் இருப்பாரு.”

மாதம் 15 நாள் வேலை தினமும் 5 ரூபா கூலி. வயிராற சாப்பிடக் கூடிய இளமை பருவத்தில் கால் வயிறும் அரை வயிறுமாக பட்டினி கிடக்க முடியவில்லை சிவலிங்கத்துக்கு. முதலாளியின் அனுமதியோடு சூட்டிங் ஸ்பாட்டில் சாப்பாட்டுக்காக எடுபிடி வேலை செய்துள்ளார். அவர் உடல் வாகை பார்த்து, செட் அமைக்கும் ஆர்ட் டிரைட்டர் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

“நாலு வருசமா செட்டுல கூலி வேலை பார்த்த பொறது ஒரு நா சந்தோசமா லாரிய எடுத்தேன். ஸ்டேரிங்க திருப்ப முடியல. கையில பெலமே இல்ல. உச்சி முடிய இஸ்த்துகினா போல வலி. முன்ன வேல பாத்த லாரியில அடிப்படச்சோல்ல ரெண்டு வெரலும் முறுக்கிகினு போச்சுங்கற வெவரம் அப்பதான் தெரிஞ்சுகினேன்.”

அடியாள், போலீசு, பஞ்சாயத்து தலைவர் போன்ற உதிரி வேடங்களுக்குப் பொருந்தும் உறுதியான உடல் வாகு சிவலிங்கத்திற்கு இருந்தது. தவிர சூட்டிங்கில் பளு தூக்குவது செட் அமைப்பது போன்ற வேலைகளையும் ஏற்றுக் கொண்டார். உடலை உருக்கி உழைத்துள்ளார். டிரைவர் கனவு கருவிலேயே சிதைந்து விட்ட நிலையில் கிடைத்த வேலையை செய்ய தொடங்கியுள்ளார் சிவலிங்கம்.

“சினிமாதான் பொழப்புன்னு ஆயிப்போச்சு. கும்பலா வர்ர சீனுல சேத்துப்பாங்க. போலீசு, அடியாளு இதுபோல இருந்தாலும் ஏஜெண்ட் இட்டுனு போவாரு. அப்போ காசு ரொம்ப கம்மி. இப்ப மெம்பரா இருக்கதால 1000 குடுத்துருவாங்க. ஒன்னு மட்டும் பிரிஞ்சுகிட்டேன் காசு இல்லாங்காட்டி அடிமை வேலை செஞ்சுதான் ஆகனும்.”

“ரஜினி கமலு எல்லார் படத்துலயும் ஏதோ ஒரு வேலை பாத்துக்கிறேன். அவங்களுக்கு ஆண்டவன் நல்லெழுத்து எழுந்திருக்கான் எங்கயோ போய்ட்டாங்க. ஆனா எனக்கு புள்ள விசயத்துல கூட சாமி கண்ண தொறக்க மாட்டேங்குது.”

25 வருட தாம்பத்திய வாழ்க்கையில் சிவலிங்கத்துக்கு குழந்தை இல்லை. மருத்துவ காரணம் தெரிய வில்லை. கை நிறைய ஏதேதோ முடிகயிறுகளை நம்பிக்கையோடு கட்டியிருக்கிறார். குழந்தை இல்லா குறையை சரி செய்வது ஒரு புறம் இருக்கட்டும். குறை என்ன என்று தெரிந்து கொள்ளச் செலவு செய்வதற்குக் கூட சிவலிங்கத்தின் உழைப்பில் சேரும் சொற்ப காசுகளால் முடியவில்லை என்பதுதான் எதார்த்தம்.

வட தமிழ் நாட்டின் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான சிவலிங்கத்திற்கு பிரம்மாண்டமான அந்தப் பெரிய வாகனத்தை இயக்குவது தனது வாழ்நாள் லட்சியம். அதற்காக மனதெல்லாம் டிரைவர் கனவை சுமந்து கொண்டு, அவரது அண்ணன் ஏதோ கோபத்தில் அடித்ததை சாக்காக வைத்து சென்னைக்கு வந்துள்ளார். தென்னை மரத்தில் பாலை விட்டு பூப்பூத்து காய் பிடித்து இளநீராக பருவம் வரும் முன் உதிர்ந்து போகும் குரும்பை போலானது சிவலிங்கத்தின் கனவு.

ஒருவேளை அந்தக் கனவு பலித்திருந்தாலும் அவரது தற்போதைய வாழ்க்கை நிலைக்கும் அதற்கும் பெரியளவில் எந்த மாற்றமும் இருந்திருக்கப் போவதில்லை. யாருக்கோ உழைத்து, இளமையை இழந்து, இறுதியில் முகவரியற்றுப் போக வேண்டும் என்பது தான் சிவலிங்கத்தைப் போன்ற கிராமத்துக் குரும்பைகளுக்கு விதிக்கப்பட்ட எதார்த்தமா? தனது 35 வருட வாழ்க்கையில் 2500 ரூபாய் வாடகையில் ஒரு ஓலை குடிசையைதான் அவரால் எட்டிப் பிடிக்க முடிந்துள்ளது.

நகரங்கள் சிவலிங்கங்களால் ஆனவை. இதன் பளபளக்கும் ஒவ்வொரு கட்டிடத்தின் அஸ்திவாரமாகவும் சிவலிங்கங்கள் உள்ளனர். எங்கோ ஒரு கூவத்தின் கரையிலோ, அடையாற்றின் கரையிலோ உள்ள ஓட்டைக் குடிசையில் தான் அவர்களின் இரவுகள் கழிகின்றது. இதோ வெள்ளம் வந்து சிவலிங்கங்களின் பல பத்தாண்டு உழைப்பைத் தின்று போய் விட்டது. இனி நகரத்தை அழகு படுத்த வருவார்கள். வெள்ளத்திற்கு தப்பிய அந்தக் குடிசைகளின் எஞ்சிய செத்தைகளை (கீற்றுக் கொட்டகை) இரக்கமற்ற முறையில் அள்ளிச் செல்ல அதிகாரிகள் வருவார்கள்.

குரும்பைகள் உதிர்ந்து மண்ணில் புதைந்து தான் வளர்ந்த அதே மரத்திற்கு உரமாகி அதன் வளர்ச்சிக்கு உதவும். அந்த மரத்தின் சுவையான இளநீர், யாரோ ஒருவரின் தொப்பையைக் கரைக்க பலியாகும். உதிர்ந்த குரும்பைகளை யார் தான் நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள்?

அட, மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் வேறுபாடுகளே இல்லையா என்ன? நீங்கள் சொல்லுங்கள்..

-சரசம்மா

ஹிந்து தாலிபான்கள் உருவாக்கும் காவி மதரஸாக்கள் !

12

ரலாறு: தில்லியில் உள்ள குதூப் மினாரை நிர்மாணித்தவர் சக்ரவர்த்தி சமுத்ரகுப்தன்; அதன் உண்மையான பெயர் விஷ்ணு ஸ்தம்பம்.

பூகோளம்: உயிரற்றுக் கிடந்த இந்த பூமிக்கு உயிரளித்தவர் மனு.

தொழில்நுட்பம்: மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. சஞ்சையன் த்ருதிராஷ்டிரனுக்கு போர் காட்சிகளைத் தனது யோக த்ருஷ்டியில் கண்டு சொன்னான். அந்த யோக த்ருஷ்டி தான் பிற்காலத்தில் தொலைக்காட்சியானது.

Vimanas I
இந்திய வரலாற்றில் விமானம்

பொறியியல்: வேதகாலத்திலேயே நம்மிடம் அநஷ்வத் ரதம் என்கிற மோட்டார் கார் இருந்தது. (அஷ்வத் – குதிரை ; அநஷ்வத் – குதிரையில்லாத) இந்த மோட்டார் காரை யந்திர ரதம் என்றும் சொல்வார்கள்.

அறிவியல்: மகாபாரத கவுரவர்கள் எப்படி பிறந்தார்கள் என்று நினைக்கிறீர்கள்? காந்தாரியின் கருவிலிருந்து வந்த பெரும் சதைக் கோளத்தை த்வாய்பயன் என்ற முனிவர் நூறு துண்டுகளாக நறுக்கி பசு நெய் நிரம்பிய நூறு குடுவைகளில் போட்டார். அந்த ஒவ்வொரு சதைத் துணுக்கும் ஒரு குழந்தையாக பிறந்தது – அட இதைத் தானே இன்றைக்கு ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவில் சொல்கிறார்கள்? ஆக, நம்மிடம் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது.

பரிணாமம்: ஒருவன் ரொட்டி சுடும் போது சில ரொட்டிகள் அரை வேக்காடாகவும், சில ரொட்டிகள் கரிந்து போயும், சில ரொட்டிகள் நல்ல பதமாகவும் வரும். அதே போல் கடவுள் மனிதனைப் படைத்த போது கரிந்து போன ரொட்டி தான் கருப்பர்கள். அரைவேக்காட்டு ரொட்டி வெள்ளைக்காரர்கள். பதமாக வெந்த ரொட்டிகள் தான் இந்தியர்கள்.

அச்சம் வேண்டாம் நண்பர்களே… இவற்றைத் தான் இனிமேல் நாம் வரலாறாகவும், பூகோகமாகவும், தொழில்நுட்பமாகவும், அறிவியலாகவும், பரிணாம வளர்ச்சித் தத்துவமாகவும் படிக்கப் போகிறோம். இந்த செந்தில் கவுண்டமணி காமெடிகளைப் படிப்பதன் மூலமாகத் தான் இந்திய மாணவர்களின் தேசியப் பெருமிதம் வளர்ச்சியடையும் என்கின்றனர் ஹிந்துத்துவ அறிஞர்கள்.

ஆப் கீ பார் அதோகதி சர்க்கார்.

ஹிந்து மதரஸா உங்களை அன்புடன் வரவேற்கிறது…!

saffronisation
ஹிந்து மதரஸா உங்களை அன்புடன் வரவேற்கிறது…!. படம் : இணையத்திலிருந்து

கடந்த ஆண்டு செப்டெம்பர் 2-ம் தேதி தில்லியில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் மத்யாஞ்சல் என்கிற தமது பரிசீலனைக் கூட்டமொன்றை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்புகளில் உள்ள 93 பேரும் அதன் பல்வேறு பரிவார அமைப்புகளைச் சேர்ந்த 15  பேரும் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, மத்திய பாரதிய ஜனதா அரசின் காபினெட் அந்தஸ்தில் உள்ள அமைச்சர் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் மூன்று துறைகளில் இந்துத்துவ செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும், ஏற்கனவே இத்துறைகளில் நடந்து வரும் காவிமயமாக்கல் நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் கும்பல் முக்கியமானதாக கருதும் மூன்று துறைகள் – சிக்‌ஷா, சன்ஸ்கிருதி மற்றும் சன்சார் (அதாவது கல்வி, கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு). ’பாரதியகரன்’ என்கிற அவர்களது காவிமயமாக்கல் திட்டத்தைப் பொறுத்தவரை இம்மூன்று துறைகளும், அதில் தனிச்சிறப்பாக கல்வித் துறையும் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

தாம் உருவாக்கவுள்ள எதிர்கால இந்து சாம்ராஜ்ஜியத்தின் புதல்வர்கள் என்னவிதமான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை மாத்திரமல்ல, அந்த எதிர்காலத்தை சாத்தியமாக்க நிகழ்காலத்தில் தன் அடியாட் படையின் அறிவுமட்டம் எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பதை கல்வித் துறையின் மூலமாக சாதித்துக் கொள்வதே ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டம். சுருக்கமாகச் சொன்னால், இனிமேல் ஊருக்கு மறைவாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத பயிற்சி மையங்களான ஷாகாக்களின் சித்தாந்த தயாரிப்பு வேலைகளை மக்களின் வரிப்பணத்தில், அரசின் செலவில் பள்ளிக் கூடங்களில் வைத்தே நடக்கும்.

மேற்படி பரிசீலனைக் கூட்டத்தைத் தொடர்ந்து,  திட்டமிடல் கூட்டம் ஒன்றும் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டங்களின் நோக்கம் மிகத் தெளிவானது. இந்தியாவின் வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும். திருத்தி எழுதப்படும்rss-hindu-madarasa-3 வரலாறு எவ்வாறு இருக்கும்? அது ஹிந்துப் பெருமிதத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருக்கும்.

ஹிந்து பெருமிதத்தை எவ்வாறு உயர்த்திப் பிடிப்பது?

இதை ஆரியப் படையெடுப்பிலிருந்து துவங்குகிறார்கள். முன்பொரு காலத்தில் அகண்ட பாரதம் ஒன்று இருந்ததாகவும், இந்த அகண்ட பாரதத்திற்குள் இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், நேபாளம் மற்றும் திபெத் ஆகிய பகுதிகள் இருந்ததாக எந்த விதமான தொல்லியல், வரலாற்றியல், மானுடவியல் அடிப்படையும் இல்லாத புருடாக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். உண்மையில் அக்காலத்தில் இன்றைக்குள்ளதைப் போன்ற நாடு, தேசம் என்கிற கருத்தாக்கங்களே கூட உருவாகியிருக்கவில்லை.

அடுத்து திபெத்தில் தான் முதல் மனிதன் தோன்றினானென்றும், அதிலிருந்து ஆரிய இனமும், ஆரிய இனத்திலிருந்து மற்ற இனங்களும், முதலில் சமஸ்கிருதமும், அதிலிருந்து பிற மொழிகளும் தோன்றியதாக அம்புலிமாமா கதைகளை விவரிக்கிறார்கள். இந்த கேலிக்கூத்தில் தெறித்த முத்துக்களுக்கு ஓரிரு உதாரணங்கள் – இந்தியாவுக்கு பன்றி என்கிற விலங்கை அறிமுகப்படுத்தியதே இசுலாமிய படையெடுப்பாளர்கள் தான். தலித்துகளை மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தியது இசுலாமியர்கள். தலித்துகளை மாட்டின் தோலை உரிக்க வைத்து அவர்களை தலித்துகளாக்கியதே வெள்ளைக்காரர்கள் தான். இந்தியாவின் சுதந்திர போராட்டங்கள் என்பதே முசுலீம்களுக்கு எதிராக நடந்தவை தாம்.

அதாவது பன்னெடுங்காலமாக பார்ப்பனியம் ஏற்படுத்தி வைத்திருக்கும் படிநிலை சமூக அமைப்பையும், இந்த சமூக அமைப்பைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் மனுஸ்மிருதி போன்ற தண்டனைச் சட்டத் தொகுப்புகளையும், அதன் தீய விளைவுகளையும் ஒட்டு மொத்தமாக ‘படையெடுப்பாளர்களின்’ மேல் சுமத்துவதன் மூலம் தான் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இந்து பெருமிதத்தை உற்பத்தி செய்யப் போகிறதாம்.

இந்த மூளைச் சலவையின் விளைவு எப்படி இருக்கும்? அதை நீங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும் காவிப் பரிவாரங்களின் பாசிச கோமாளித்தனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். வேதகால ரிஷிகள் மாட்டுக்கறி தின்றதன் குறிப்புகள் வேதங்களிலேயே இருப்பதை எதிரில் பேசுபவர்கள் விளக்கிச் சொன்னாலும், ஆசனவாயில் மிளகாய்ப் பொடி அப்பிய பன்றிகளைப் போல் உறுமும் இந்துத்துவ ‘அறிஞர்’ பெருமக்களின் கோணங்கித்தனங்களை நீங்கள் புதிய தலைமுறைத் தொலைக்காட்சி விவாதங்களில் கட்டாயம் கண்டிருப்பீர்கள்.

இவ்வாறான இந்துப் பெருமிதம் தலைக்கேறிய மடையர்களை உருவாக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவார கும்பல் சிரமேற்றுள்ளது. தற்போது மோடியின் வடிவில் இந்த அற்பர்களுக்கு அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிறார்கள் என்றாலும், இந்தியாவில் எல்லா கல்வி நிலையங்களையும் ஹிந்து மதரஸாக்களாக மாற்ற வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ் திட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.

rss-hindu-madarasa-abvp
ஏ.பி.வி.பி குண்டர்கள். படம்: இணையத்திலிருந்து

1949ல் உருவாக்கப்பட்ட ஏ.பி.வி.பி என்கிற ஆர்.எஸ்.எஸ் மாணவர்கள் அமைப்பு இன்று பதினைந்து பல்கலைக்கழகங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் அமைப்பாக வளர்ந்துள்ளது. மாணவ சமுதாயத்திற்கு ஹிந்து பாரம்பரிய பெருமிதங்களை கற்பிப்பதும், அவர்களை தேச நிர்மாண பணிகளில் ஈடுபட வைப்பதையும் தனது கொள்கைகள் என்று இந்த அமைப்பு சொல்லிக் கொள்கிறது. ஆனால், எதார்த்தத்தில் இந்த அமைப்பினால் திரட்டப்பட்ட மாணவர்கள் தான் இந்துத்துவ கும்பல் நடத்திய பல்வேறு கலவரங்களிலும், பாபரி மசூதி இடிப்பிலும் முன்னின்றனர். மாணவர்களை பயங்கரவாதிகளாக வார்த்தெடுப்பதை ஒற்றை நோக்கு திட்டமாக (Single point Agenda) இவ்வமைப்பு கொண்டு செயலாற்றி வருகிறது. மாணவர்கள் மத்தியில் முற்போக்கான அரசியல் கருத்துக்கள் பரவுவதைத் தடுப்பது, முற்போக்கான மற்றும் ஜனநாயக கருத்துக்களை வெளியிடும் கல்லூரி பேராசிரியர்கள் தாக்கப்பட்ட பல்வேறு சம்பவங்களில் இந்த அமைப்பை சேர்ந்த மாணவர்கள் குண்டர் படைகளாக செயல்பட்டுள்ளனர். ரோகித் வெமுலாவின் தற்கொலை எனும் கொலையை இப்பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.

rss-hindu-madarasa-2
வித்யாபாரதியின் கட்டுப்பாட்டில் சுமார் 18,000 பள்ளிகள் நாடெங்கும் செயல்பட்டு வருகின்றன

1978-ல் உருவாக்கப்பட்ட வித்யா பாரதி மற்றும் அகில பாரதிய சிக்‌ஷா சன்ஸ்தான் போன்ற அமைப்புகள் கல்வித் திட்டத்தில் படிப்படியான மாற்றங்களைக் கொண்டு வந்து இந்தியாவின் அனைத்து கல்வி நிலையங்களையும் காவி மதரஸாக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இன்றைய தேதியில் வித்யாபாரதியின் கட்டுப்பாட்டில் சுமார் 18,000 பள்ளிகள் நாடெங்கும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 18 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவை தவிற இவ்வமைப்பில் சுமார் 80,000 ஆசிரியர்கள் உள்ளனர். இது தவிற, இவ்வமைப்பின் சார்ப்பில் சில பத்தாயிரம் ஓராசிரியர் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பரிவார அமைப்பின் சார்ப்பில் நடத்தப்படும் பள்ளிகளில் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போன்ற அறிவுக்கும், உண்மைக்கும் பொருத்தமற்ற, திரிக்கப்பட்ட வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்களையும் இந்தக் காலத்திற்கு எந்த வகையிலும் பயன்படாத சமஸ்கிருதத்தையும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்வி அளிக்க வேண்டிய கடமையில் இருந்து தவறும் அரசின் கொள்கையின் விளைவாக தனியார் பள்ளிகளின் லாப வேட்டை, அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது போன்ற காரணங்களால் பெற்றோரும் வேறு வழியின்றி இது போன்ற இந்து மதரஸாக்களில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர்.

இன்று பாரதிய ஜனதா ஆளும் பல்வேறு மாநிலங்களில் வித்யாபாரதியின் கல்வித் திட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். வித்யாபாரதியின் முன்னாள் உறுப்பினர்கள், தலைவர்கள் மத்தியபாடநூல் கழகம், சி.பி.எஸ்.சி போன்ற மத்திய அரசின் பள்ளி மற்றும் உயர்கல்வி சார்ந்த துறைகளில் பொறுப்புகளில் அமர்ந்து இவ்வமைப்புகளின் பாடதிட்டங்களை வித்யாபாரதியின் பாடதிட்டங்களைப் போல் மாற்றியமைத்து வருகின்றனர்.

rss-hindu-madarasa-6
புராணத்திலிருந்து இந்திய வரலாறு – பாரதிய இதிஹாஸ் சன்கலன் யோஜ்னா

இவை தவிர 1973-ல் ஏற்படுத்தப்பட்ட பாரதிய இதிஹாஸ் சன்கலன் யோஜ்னா என்கிற அமைப்பு வரலாற்றைத் திருத்தி எழுதும் பணியை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் தன்னாட்சி அமைப்பான வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR – Indian Council of Historical Research) பொறுப்பில் இதிகாஸ் சங்கலன் யோஜ்னா அமைப்பின் தலைவரான சேர்ந்த ராவ் அமர்த்தப்பட்டுள்ளார். ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் ‘வரலாற்றுப்’ பொறுத்தப்பாட்டை ஆராய்வதே இப்பரிவார அமைப்பின் முக்கிய செயல்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இனி நமது எதிர்கால சந்ததியினர் கற்கப் போகும் வரலாறு எவ்வாறு இருக்கும் என்பதைத் தனியே விளக்கத் தேவையில்லை.

மத்திய பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாட நூல்களை திருத்தியெழுதும் பணியை வித்யா பாரதியின் முன்னாள் தலைவர் தீனாநாத் பத்ரா ஏற்றுக் கொண்டுள்ளார். ஏற்கனவே இவர் எழுதிய நூல்கள் குஜராத் மாநில கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்டு அம்மாநில அரசுப் பள்ளிகளின் பாட திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

மோடியின் ஆட்சிக்காலத்தில் குஜராத் மாநிலத்தின் கல்வி திட்டம் உள்ளாகியிருக்கும் மாற்றங்களை அவதானித்தால், இனி வரும் காலத்தில் இந்தியாவெங்கும் உள்ள கல்வித் திட்டம் என்ன வகையான மாற்றங்களை சந்திக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

வகை மாதிரிக்காக சில – பத்தாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் காந்தியின் கொலை பற்றி விவரிக்கும் பகுதியில் கோட்சே என்கிற பெயரே இல்லை. அதே பாடத்தில் தேசப்பிரிவினை பற்றி விளக்கும் பகுதியில் முசுலீம் லீகின் வரலாறு உள்ளது ஆனால் இந்து மகாசபையின் வரலாறு இல்லை. இவை தவிர ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் சொல்லப்படும் உளறல்களான ராமாணத்தில் ஆகாய விமானம், மகாபாரத குருக்‌ஷேத்திரப் போரில் அணுகுண்டு, பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவைகளும் இந்த பாட திட்டத்தில் அடக்கம்.

ஜனவரி 19, 2000-மாவது ஆண்டில் குஜராத் மாநில கல்வித் துறை எல்லா பள்ளிகளுக்கும் ஓர் அரசாணையை வழங்கியுள்ளது – அதன்படி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாதாந்திர பத்திரிகையான சாதனாவுக்கு எல்லா பள்ளிகளும் சந்தா கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்ப பட்ட இன்னொரு உத்தரவின் படி எல்லா ஆசிரியர்களும் சமஸ்கிருத பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கப் போவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இன்னொரு பரிவாரமான சமஸ்கிருத பாரதி என்பது இங்கே குறிப்படப்பட வேண்டிய தகவல்.

இச்சமூகத்தின் பொதுபுத்தியை பார்ப்பன பொதுபுத்தியாக மறுவடிவமைக்க இதன் அஸ்திவாரமாக உள்ள அறிவுத் துறையை முதல் படியாக பார்ப்பனமயமாக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ் கும்பல் நிறைவேற்றி முடித்துள்ளது. இந்நடவடிக்கைகளுக்கு ஜனநாயக உணர்வும் சொரணை உணர்வும் கொண்ட மிகச் சில அறிவுத்துறையினர் மற்றும் கல்வித்துறையினரிடமிருந்து எழுந்த எதிர்ப்பைத் தவிர மக்கள் மத்தியிலிருந்து பெருமளவிற்கு எதிர்ப்பு ஏதும் எழவில்லை என்பது நமது கவனத்திற்கும் கவலைக்கும் உரியதாகும்.

உருவாகவுள்ள காவி மதரஸாக்களிலிருந்து மூளைச் சலவை செய்யப்பட்டு வெளியேறப் போகும் ஹிந்து தாலிபான்களுக்கும் ஆப்கானின் பச்சைத் தாலிபான்களுக்கும், ஈராக்கின் ஐ.எஸ்-களுக்கும் இடையே பெருமளவில் வேறுபாடுகள் ஏதும் இருக்கப் போவதில்லை. பெண்கள் குறித்து, சாதி குறித்தும், பிற மதங்களைக் குறித்தும் பாரதிய ஜனதா மத்திய அமைச்சர்கள் உதிர்க்கும் கருத்துக்களுக்கும் தாலிபான் தலைவர் முல்லா ஓமரின் கருத்துக்களுக்கும் சாராம்சத்தில் ஏதும் வேறுபாடுகள் உண்டா என்ன?

வேகமாகப் பரவி வரும் காவி விஷத்தை உழைக்கும் மக்கள் முறிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் கற்காலத்தை நோக்கி காவிகளின் தடியால் தள்ளப்படுவோம்.

– தமிழரசன்.

மேலும் படிக்க

அரசுப் பள்ளியில் கணினிக் கல்வி புறக்கணிக்கப்படுவது ஏன் ?

1

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வெ.குமரேசன் அனுப்பிய மடல் இங்கே வெளியிடப்படுகிறது

மிழக அரசு கணினியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்க வைப்பதன் ஒரு முயற்சியாக 2011-ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் 6, 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு கணிப்பொறி பாடத்திற்கென புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்தது.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கணினிக் கல்வியை ஊக்குவிப்பதன் பொருட்டு அரசால் கொண்டு வந்த இந்த கணினி கல்வி மாணவர்கள் மற்றும் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றது. இதற்காக எல்லா அரசுப் பள்ளிகளுக்கும் தேவையான கணிப்பொறி உபகரணங்கள் வழங்கத் தேவையான நிதி ஒதுக்கி கணிப்பொறிகள் வழங்கவும் பட்டன.

ஆட்சி மாற்றத்திற்குப் பின் 2011-ம் கல்வியாண்டில் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இருந்ததே தவிர, மாணவர்களுக்கு எவ்வித பயனும் அளிக்கவில்லை. அரசு மற்றும் தனியாரின் எல்லா துறைகளும் நவீனமயமாக்கப்பட்ட (கணினி மய மாக்கப்பட்ட) இக்காலத்தில் கணினியின் அடிப் படை அறிவு மாணவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது.

மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி. போன்ற அனைத்து வகை பள்ளி களிலும் கணிப்பொறி பாடமானது கடந்த 15 ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வருகின்றது. மேலும் எல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும் கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக கடந்த 15 ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால், சமச்சீர் கல்வி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 -ம் வகுப்புவரை கற் பிக்கப்படும் கணினி கல்வி அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அனை வராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் புத்தகங்களை மட்டும் இரண்டு கல்வியாண்டுகள் விநியோகித்து, கணினி கல்வியை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்காதது ஏன்?

மக்களின் அடிப்படைத் தேவைகளான எல்லா செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்ற நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே விநியோகம் செய்து வந்த புத்தகங்களைக் கூட கடந்த சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மத்தியிலும், கல்வி யாளர்கள் மத்தியிலும்கூட போதுமான ஈர்ப்பைப் பெறவில்லை என்பது ஆச்சரியமானதே!

இவ்வளவுக்கும் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் 21,000 பேர்களுக்குமேல் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, இந்த நவீன யுகத்தில் மிகவும் இன்றியமையாததான கணினிப் பயிற்சி யைக் கற்றுக் கொடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.

இதில் ஏன் தமிழ்நாடு அரசு கருத்துச் செலுத்தவில்லை?

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்து வருகிறது; அதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலைக்கு மிக முக்கியமான காரணமே கணினிப் பயிற்சி போன்ற மிகவும் தேவையான பயிற்சியை அரசுப் பள்ளிகள் புறக்கணிப்பதுதானே?

தனியார்ப் பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் கணினிப் பயிற்சி போன்ற கல்விக்கு அப்பள்ளிகளில் முக்கியத்துவம் கொடுப்பதுதானே! கல்வி மானியக் கோரிக்கையின்போது, மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் இதுபற்றிப் பேசியும் பயன் இல்லை.

அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது.

அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் அல்லவா? அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினிப் பயிற்சி அவசியம் அல்லவா!

ஏன் கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கணினி கல்வி கிடைக்க கூடாதா ?

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டு வர வேண்டும். மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலேயே கணினி அறிவியல் பாடம் உள்ளது.சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நடப்பு கல்வி ஆண்டிலே நடைமுறைப்படுத்த வேண்டும்.

கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லாத தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகள்.

மேல்நிலைப்பள்ளிகள் (ம) தற்போது தரம் உயர்த்தப்படும் 800-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவு இல்லை . கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவை கொண்டு வரவேண்டும். பல பள்ளிகளில் கணினி ஆசிரியர்களே இல்லை. உலகமே கணினி மயமாக மாறிக்கொண்டு வரும் காலகட்டத்தில் கணினியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்.மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ்

புதிய கல்விக் கொள்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப பள்ளி முதலே கட்டாயப்பாடமாக அறிவிக்கவேண்டும். இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண கிராமப்புற ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறுவர்.

பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமனம் செய்யவேண்டும் தமிழக அரசு.

கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க, நடுநிலை,உயர்நிலை பள்ளிக்கு குறைந்தது ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும்.

21,000-க்கும் மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களின் குடும்பங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றன.

1992-ம் ஆண்டிலிருந்து இன்று வரை 21000 பேருக்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். அனைவரும் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.

1) TET, TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லை.

2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி பி.எட் ஆனால் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் பெற்ற இந்த ஆசிரியர்களுக்கு அதிலும் வாய்ப்பு இல்லை.

3) உடற்கல்வி, ஓவியம், தையல், கணினி ஆகிய “தொழிற்கல்வி” பாடங்களுக்கான “சிறப்பாசிரியர்” நியமனத்தில்கூட கணினி அறிவியல் பி.எட் படித்த பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்­­.

– திரு வெ.குமரேசன்,
மாநிலச் செயலாளர்
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.
பதிவுஎண் 655/2014.

நீச்சல் வீராங்கனை சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளி !

4
saira-swimmer-suicide-2
சாய்ரா சிரோகி

காசியாபாத் (உ.பி மாநிலம்) மாவட்டத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு பள்ளி மாணவி சாய்ரா சிரோகி (வயது-16) பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடி தாளாமல் 24-01-2016 அன்று தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

மாணவி சாய்ரா சிரோகி இந்தியாவின் நட்சத்திர நீச்சல் வீராங்கனை ஆவார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார். இந்தியா சார்பாக அகில உலக நீச்சல் விளையாட்டுப்போட்டிக்கும் தேர்வாகியிருக்கிறார். 50 மீட்டர் BreastStroke நீச்சல் போட்டியை 35.83 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். மேலும் இந்த வயதிலேயே தொடர்ச்சியாக பதினாறு மணி நேரம் 40 கிலோமீட்டர் நீந்தி அபார சாதனையும் புரிந்திருக்கிறார்.

ஆனால் நீரில் சாதனை புரிந்த இந்த வீராங்கனையை இவர் படித்த தனியார் பள்ளி ஈவிரக்கமின்றி மூழ்கடித்திருக்கிறது.

ஆங்கில நாளேடுகளில் மிகப்பரவலாக கவனம் பெற்ற மாணவி சாய்ராவின் தற்கொலை செய்தி இருவிதமான காரணங்களை முன்வைத்திருக்கிறது.

இந்து ஆங்கில நாளேட்டில் வந்த செய்தி மாணவி சாய்ரா போக்குவரத்துக்கட்டணம் ரூ. 45,000 கட்டாததால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது.

மாணவியின் தந்தை அளித்த தகவலின் படி, போக்குவரத்துக்கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் மாணவி சாய்ராவை வகுப்பிலிருந்து வெளியேற்றியிருக்கிறது. பணம் புரட்ட முடியாததால் சாய்ராவின் தந்தை, சாய்ராவை பணம் கிடைக்கும் வரை வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருக்கிறார். பலநாட்கள் வீட்டிலிருந்த சாய்ராவை பள்ளி நிர்வாகம் சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் சேர்த்துக்கொண்டதாக கூறும் மாணவியின் தந்தை இதுதான் தன் மகளின் சாவுக்கு காரணமாக இருக்குமோ எனக் கருதுகிறார்.

saira-swimmer-suicide-3சாய்ரா பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டதை மறுக்காத பள்ளி நிர்வாகம், இது ஏற்கனவே நடிந்த முடிந்த கதை என்கிறது. சாய்ரா படிக்கும் தனியார் பள்ளியான Delhi Public School Gaziabad, மாணவிக்கு முழுக் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கம் அளித்ததாகவும், ஆனால் இரண்டு வருடங்களாக போக்குவரத்துக் கட்டணம் ரூ, 45,000 மட்டும் கட்டவில்லையென்றும் இதனால் இவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜனவரி 11 அன்றே மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார் என்றும் சொல்கிறது. மாணவி வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதை மாணவியின் நீச்சல் பயிற்சியாளரும் உறுதி செய்திருக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான செய்தி, பள்ளி நிர்வாகத்தின் மற்றொரு நெருக்கடியைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மாணவி சிரோகி தொடர்ச்சியாக நீச்சல் போட்டிகளில் பங்கேற்பதால், பள்ளி வைக்கும் மாதத் தேர்வு, யுனிட் தேர்வு போன்ற தேர்வுகளில் பங்கேற்க முடிவதில்லை. அதே சமயம் பள்ளி நிர்வாகம் அனைத்து தேர்வுகளையும் எழுதச் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே தன் பயிற்சியாளரிடம் மாணவி சாய்ரா, எதிர்வரும் தேர்வுகளை முன்னிட்டு தன்னால் நீச்சல் பயிற்சியில் கலந்துகொள்ள முடியாதென்றும் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையென்றால் பள்ளியிலிருந்து தன்னை நீக்கிவிடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். தற்பொழுது மாணவி இறந்த பிறகு, மாணவிக்கு தேர்வு எழுத தாங்கள் எந்தவிதமான அழுத்தத்தையும் தரவில்லையென பள்ளி நிர்வாகம் தெரிவித்திருப்பதையும் செய்திகள் வெளிக்காட்டுகின்றன.

இரண்டு செய்திகளும் ஒரே உண்மையைத்தான் சொல்கின்றன. மாணவி சாய்ரா, தனியார் பள்ளி நிர்வாகத்தால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதே அது. இந்தவகையில் மாணவி சாய்ரா தனியார்மயத்தின் கோரமுகத்திற்கு பலியாகிருக்கிறார்.

மாணவி சாய்ராவின் தனியார்பள்ளி மட்டுமல்ல, இந்தியாவெங்கிலும் தனியார் பள்ளிகள் இப்படித்தான் செயல்படுகின்றன.

திறமையுள்ளவருக்கு முழுக்கல்விக்கட்டணம் விலக்கு என்று சொல்லிக்கொண்டே, போக்குவரத்துக் கட்டணம், ஆண்டு விழாக் saira-swimmer-suicide-1கட்டணம், தோட்டம் பராமரிப்புக் கட்டணம், தியானக் கட்டணம் என்று வாரிச் சுருட்டுவதில் தனியார் பள்ளிகள் என்றைக்கும் சுணங்கியதேயில்லை.

கடைசியில் 900 ரூபாய் பெறுமானமுள்ள ஒரு சட்டை வாங்கினால் இரண்டு சட்டை இலவசம் என்ற வியாபார உத்திதான் மாணவி சாய்ராவின் விசயத்திலும் போக்குவரத்துக் கட்டணம் ரூ, 45,000 கட்டவில்லை ஆனால் கல்விக் கட்டணம் இலவசம் என தனியார்மயத்தின் வக்கிரமாக வந்து நிற்கிறது.

தமிழ்நாட்டிலும் சிங்காரவேலர் கமிட்டி பரிந்துரைத்த கட்டண விகிதத்தை எந்த தனியார் பள்ளியும் மயிரளவிற்கும் மதித்ததில்லை. அது அமல்படுத்தப்படுகிறதா என்று எந்த அரசு அதிகாரியும் பார்த்ததுமில்லை. சென்ற வருடம் கடலூரில் கூட மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், கல்வி உரிமைக்கான பெற்றோர் மாணவர் சங்கமும்  நீண்ட போராட்டங்களை நடத்தி கமிட்டி பரிந்துரைத்த கட்டணத்தை கட்ட வைத்தனர்.

அப்படியிருந்தும் கூட பள்ளிகள் நூதன முறையில் கொள்ளையிடுவது, அரசாங்க கட்டணம் செலுத்துகிற குழந்தைகளை ஒதுக்கி வைத்து தீண்டத்தகாதவர்களாக நடத்துவது, விளையாட்டு, ஓவியம், கலை போன்ற பயிற்சிகளில் இருந்து ஒதுக்கிவைப்பது என அட்டூழியங்கள் தொடரத்தான் செய்கின்றன.

09-education-no-commodityஇதற்கு மூலகாரணம் எது? அரசின் தனியார்மயக் கொள்கைதான். கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை அதை வழங்கவேண்டியது அரசின் கடமை என்பதில் இருந்து நழுவி, காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்பதை நடைமுறைப்படுத்தும் கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருக்கிறது அரசு.

அனைவருக்கும் கல்வி என்று சொல்கிற அரசின் சட்டம் கூட நடைமுறையில் தனியார்மய பங்களிப்பைத்தான் முன்வைத்தது. இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பிற்பாடு தான் கடந்த நான்கு வருடங்களில் நாடெங்கிலும் இரண்டு இலட்சம் பொதுப்பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன.

நலிந்த பிரிவினருக்கு 25% இடங்களை தனியார் பள்ளிகள் ஒதுக்க வேண்டும்; அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு அளிக்கும் என தனியார்மயக் கொள்ளைக்கு சட்டப்பூர்வ வடிவம் கொடுத்தது இந்த அரசுதான். விளைவு? அன்றைக்கு பெங்களூரில் அரசு உதவி பெறும் குழந்தைகள் பிற குழந்தைகளிடம் இருந்து அடையாளம் காணப்படுவதற்காக குழந்தைகளின் முடியை வெட்டி உட்காரவைத்தது தனியார் பள்ளி. இன்றைக்கு காசியாபாத் பள்ளி, போக்குவரத்துக் கட்டணம் என்று சொல்லி மாணவி சாய்ராவை வகுப்பில் இருந்து வெளியேற்றியதோடு அல்லாமல் அம்மாணவியின் இறுதி மூச்சையும் நிறுத்தியிருக்கிறது.

மாணவி சாய்ராவைக் கொன்ற தனியார் பள்ளியின் வக்கிரம் இத்தோடு நிற்கவில்லை. மாணவி சாய்ரா நீச்சல் போட்டிகளில் பங்கேற்றதால் வகுப்புத் தேர்வு, யுனிட் தேர்வுகளில் பங்கேற்கமுடியவில்லை என்ற அம்சத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும்.

நமது நாட்டின் கல்வி அமைப்பு மாணவி சாய்ராவை மட்டுமல்ல விளையாட்டு, கலை, ஓவியம், பேச்சு என்று ஒவ்வொரு துறைகளிலும் என்னதான் மாணவர்கள் பரிணமித்தாலும் அவர்களை மனனக் கல்வியின் அடிப்படையில் தான் மதிப்பிடுகின்றது. மாணவி சாய்ரா என்னதான் நீச்சல் வீராங்கனையாக இருந்தாலும் படிப்பைப் பொறுத்தவரை அவள் மக்குதான் என்று சொல்லாமல் சொல்கிறது பள்ளி நிர்வாகம்.

யுனிட் தேர்வு, பருவத் தேர்வுகளைப் பொறுத்தவரை தாங்கள் மாணவிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று பள்ளி நிர்வாகம் சொல்கிற பொழுது மாணவியோ தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டால் தான் பள்ளியிலிருந்து நீக்கப்படுவேன்; ஆகையால் தன்னால் நீச்சல் பயிற்சிக்கு வரமுடியாது என்று தன் பயிற்சியாளரிடம் கூறியிருப்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மாணவியோ நீச்சல் வீராங்கனை; தனியார் பள்ளியோ பிராய்லர் கோழிகளை உருவாக்கும் இன்குபேட்டர்கள். எல்லாவிதத்திலும் மாணவி சாய்ராவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாணவர்களைப் பொறுத்தவரை, காசு பார்க்கும் தனியார் பள்ளிகள் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் இடமாக அமையவில்லை. மாறாக மனனக் கல்வியை முன்வைக்கும் வேண்டாத தொங்கு சதைகளாக இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்! இதற்கு மக்களிடையே புகுத்தப்பட்டிருக்கும் தனிநபர் பிழைப்புவாதமும் நுகர்வுக் கலாச்சாரமும் ஒரு காரணம்.

தமிழ்நாட்டிலும் எத்தனையோ சாய்ராவைப் போன்ற கண்மணிகள் தனியார்மயத்தின் கொள்ளைக்கும் கல்வி அமைப்பிற்கும் privitization-education-conferenceபலியாக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்றுக்கும் உதவாத சக்கைகளையும் தக்கைகளையும் உருவாக்குகிற இத்தகையக் கொலைக்கூடங்கள் நீச்சல் வீராங்கனை மாணவி சாய்ராவை போன்ற திறமையாளர்களை மதிப்பிடும் நிலையில் இருக்கின்றன என்பது சகிக்கமுடியாத அவலம்.

இந்த அவலம் வெட்டி எறியப்பட வேண்டும். வேண்டாத தொங்கு சதையாக இருக்கிற தனியார்மயம் சுட்டெரிக்கப்பட வேண்டும். பெற்றோர்களே உழைக்கும் மக்களே நமது குழந்தைகளை தனியார்மயத்திற்கு காவு கொடுக்காதீர்கள்.

காசுள்ளவனுக்குத்தான் கல்வி என்பது கல்வியின் நோக்கம் அல்ல. அது கல்வியை பண்பாட்டிலிருந்து நீக்கி பண்டமாக பார்க்கும் முதலாளிகளின் வியாபார உத்தி. இதன் மூலம் மனிதன் தன் அடிப்படை விழுமியங்களை காவு கொடுத்துவிட்டு விலங்கு நிலைக்குத் தாழ்கிறான்.

இன்றைக்கு தனியார்மயம் கல்விச்சூழலில் சூறையாடுகிற மாணவர்களின் எண்ணிக்கை வகைதொகையற்றவை. இந்த அட்டூழியங்களுக்கு நாம் முடிவு கட்டாவிட்டால் நாளை நாமும் சாய்ராவின் பெற்றோரைப்போன்று நம் செல்வங்களை இழந்துவிட்டு நிற்கக் கூடும். இந்தியா மாணவர்களின் பிணக்காடாக நிற்கும்!

– இளங்கோ

மேலும் படிக்க

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்

0

puthiya-jananayagam-january-2016

புதிய ஜனநாயகம் ஜனவரி 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. மோடியின் திறன்மிகு இந்தியா : இன்னுமொரு மோசடி!

2. மாற்றா… ஏமாற்றா?

3. “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது” : உச்ச நீதிமன்றத்தின் மனுநீதித் தீர்ப்பு
இந்தத் தீர்ப்பு அர்ச்சக மாணவர்களை ஆகமக் கோயில்களில் நியமிக்கக் கூடாதெனக் கூறவில்லை. “யானையைப் பானைக்குள் அடைக்கலாம். ஆனால், பானை உடையக்கூடாது” என்கிறது. இதனை வெற்றி என்று கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

4. தோழர் சாய்பாபா பிணை ரத்து, அருந்ததி ராய் மீது அவமதிப்பு வழக்கு : நீதிமன்றத்தின் என்கவுண்டர்!

5. சென்னை மாநகரம் : சட்டவிரோத சிங்காரம்
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் சென்னை நகரம் அடைந்துள்ள ‘வளர்ச்சி’யில் சரிபாதி சட்டவிரோதமான முறையில் உருவானதாகும்.

6. மியாட் மருத்துவமனை : ஐந்து நட்சத்திரக் கொலைக்கூடம்
மியாட் மருத்துவமனையில் நடந்த சாவுகள், தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளின் உயிரோடு விளையாடும் விதத்தில் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதை அம்பலப்படுத்திவிட்டது.

7. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் : 59-வது கருக்கரிவாள்!

8. வெள்ளத்தில் மூழ்கிய விவசாயம், சிறுதொழில் : வேடிக்கை பார்க்கிறது அரசு!
ஏறத்தாழ ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மறுவாழ்வுக்கு எந்தப் பதிலும் கூறாமல் மைய-மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகின்றன.

9. சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு!
ஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றும், நீதிமன்றங்கள்தான் இவற்றைப் போற்றிப் பாதுகாப்பதாகவும் உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கருத்து பொய்யானது.

10. துப்புரவுப் பணியாளர்கள் : சென்னையின் மீட்பர்கள்!
“சாதி இந்துக்களுக்கு தூய்மையான, மரியாதைக்குரிய வேலைகளையும், தீண்டத்தகாதோருக்கு அசுத்தமான, இழிந்த வேலைகளையும் ஒதுக்கிப் பிரித்துக் கொடுத்து, அதன் மூலம் சாதி இந்துக்களை மரியாதைக்குரியவர்களாகக் காட்டும், தீண்டத்தகாதோர் மீது மானக்கேட்டைத் திணிக்கும் உழைப்புப் பிரிவினையின் மீதுதான் இந்து சமூக ஒழுங்கு நிலைகொண்டுள்ளது” – அம்பேத்கர்.

11. வரலாற்றுக் குற்றத்திலிருந்து அமெரிக்காவை விடுவித்த மோடி!

12. ஏழைகளுக்குத் தீவிரவாதி வேடம்! பொய் மோதல் கொலைக்கு வீரசக்கர விருது!! இராணுவத்தின் முகத்திரை கிழிகிறது!
அகதிகளையும் ஏழைகளையும் ஏலமெடுத்து சுட்டுக் கொன்று, தீவிரவாதி என்று கணக்கு காட்டி விருது வாங்குகின்றனர் இராணுவ அதிகாரிகள் என்று ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறது “என் கைகளில் இரத்தம்” என்ற நூல்.

13. ஊருக்கு ஊரு சாராயம்! கதறுது தமிழகம்!
திருச்சியில் பிப்ரவரி 14, 2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள். போதையிலிருந்து தமிழகத்தை மீட்க சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவுகட்ட வாரீர்! – மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

புதிய ஜனநாயகம் ஜனவரி 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

ரோகித் வெமுலா கொலை – விரிவான தகவல்கள் – ஆதாரங்கள் – படங்கள்

4

rohit-vemula-driven-to-death-cartoon-2படம் : ஓவியர் முகிலன்

ரோகித் வெமுலா கொலை –
பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி

ஸ்மிருதி இரானி
ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமான மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நேரடி தலையீட்டை நிரூபிக்கும் கடிதங்கள்

ரோகித் வெமுலா – ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்பு மாணவர். இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவர். இந்தப் பல்கலையில் சேர்ந்ததில் இருந்தே அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து மாணவர்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட போது அதனை எதிர்த்து பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்.

இப்படிப்பட்ட போர்க்குணமிக்க போராளியான ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை (17-01-2016) அன்று தனது நண்பரின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடுபவர்களை எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடக்கி, ஒடுக்கி, அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது என்பதற்கு நம் கண் முன் நிற்கும் உதாரணம் தான் ரோகித் வெமுலா.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முசாபர் நகர் குறித்த ஆவணப் படத்தை டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் திரையிட்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி காலிகளைக் கண்டித்தும், யாகூப் மேமன் தூக்கைக் கண்டித்தும், ரோகித் வெமுலா, தோந்தா பிரசாந்த், விஜய்குமார், சேசு செமுடுகுண்டா மற்றும் சுன்கன்னா ஆகிய 5 மாணவர்களும் முன்னணியாக இருந்து அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிராக இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காலிகள் என்று தமது முகநூலில் சாடியிருக்கிறான் அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்து ஏ.பி.வி.பி நிர்வாகி சுசீல் குமார்.

ஏ.பி.வி.பி
தலித் மாணவர்களை அச்சுறுத்தி, ஒடுக்கும் ஏ.பி.வி.பி (படம் இணையத்திலிருந்து)

இதனைக் கண்டித்து இந்த 5 மாணவர்களும் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில் சுசீல் குமாரை அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மன்னிப்புக் கோர வைத்திருக்கின்றனர். பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய சுசீல் குமார், மறுநாள் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா என்ற அமைப்பில் உள்ள தனது சகோதரனுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் சுமார் 40 பேர் திரண்டு வந்து தங்கள் இருவரையும் தாக்கியதாகப் பொய்ப்புகார் அளித்திருக்கிறான். இதை நிரூபிப்பதற்கு இவர்கள் வேண்டுமென்றே மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளனர்.

அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை ஒடுக்குவது தொடர்பாக பா.ஜ.க, ஏ.பி.வி.பி, மனித வளத்துறை அமைச்சகம், பல்கலைக் கழகம் இடையேயான கடிதப் பரிமாற்றம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த நாடகங்களின் அரங்கேற்றத்திற்குப் பிறகு உள்ளூர் பா.ஜ.க பிரமுகரான ராமச்சந்திர ராவின் அழுத்தத்தின் பேரில் அப்போதைய பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.பி.சர்மா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பேராசிரியர் அலோக் பாண்டேயின் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்.

ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்
ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்

இந்தக் குழு விசாரித்து அளித்த அறிக்கையில், இப்பிரச்சினை சுசீல் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்த போதே எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடித்துக் கொள்ளப்பட்டது என்றும் சுசீல் குமாரின் உடலில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகம் விசாரணைக்குழு அறிக்கையை நிராகரித்து விட்டு 5 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் போராடத் தொடங்கியவுடன், அப்போதைய துணை வேந்தர் ஆர்.பி.சர்மா வேறு வழியின்றி அம்மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்து விட்டு, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலை சமாதானப்படுத்தும் வகையில் மற்றொரு விசாரணைக் கமிட்டியையும் நியமித்தார். அதோடு ஜூன் மாதம் முதல் இம்மாணவர்களுக்கு வர வேண்டிய கல்வி உதவித் தொகை பல்கலைக்கழக நிர்வாகத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.

ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்
ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க, அங்கிருந்த பார்ப்பனக் கும்பல் மத்திய மனித வளத்துறை அமைச்சகத்துக்கு ஒரு மொட்டைக் கடிதாசியைப் போட்டு அதன் வாயிலாக ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து இம்மாணவர் வட்டத்தை முடக்க முயற்சி செய்ததும், அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதுமான ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் பார்ப்பனக் கும்பல் பணிய நேரிட்டதும் நினைவிலிருக்கலாம். அதே போல இங்கும் தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.பி.யும், மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா, அரசு முத்திரை கொண்ட தனது அலுவலக கடிதத் தலைப்பில் ஹைதராபாத் மத்திய பல்கலையில் ஏ.பி.வி.பி.-ன் சதி செல்லுபடியாகாத கதையை, தேசத்தின் பாதுகாப்பிற்கு எழுந்த பிரச்சினையாக சித்தரித்து ஒரு கடிதத்தை மத்திய ’மனித’ வளத்துறை அமைச்சர், ’போலி சான்றிதழ் புகழ்’ ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ளார்.

ரோகித் வெமுலாவின் தாய்
ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா

உடனடியாக களத்தில் இறங்கிய மனித வளத்துறையின் பார்ப்பனக் கும்பல், இதற்கு விளக்கமளிக்குமாறு செப். 3 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து அப்போதைய நிலையை விளக்கி பல்கலைக்கழகம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் திருப்தி அடையாத மத்திய மனித வளத்துறை அமைச்சகம் பண்டாரு தத்தாத்ரேயாவின் புகாரின் அடிப்படையில் அந்த மாணவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ச்சியாக செப்டெம்பர் 24, அக்டோபர் 6, 20 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் கடிதங்கள் அனுப்பி அழுத்தம் கொடுத்தது.

இந்நிலையில் துணை வேந்தராக இருந்த ஆர்.பி.சர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காவிக் கூட்டத்தின் ஆசி பெற்ற அப்பாராவ் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அடிமை அப்பாராவ் பதவியேற்றதும், எவ்வித விசரணையும் இன்றி இந்த 5 மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்ற கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்ட இம்மாணவர்கள் கடுங்குளிரில் விடுதிக்கு வெளியே பல்கலை வளாகத்திற்குள்ளேயே தொடர்ச்சியாகத் தங்கி இவ்வுத்தரவிற்கு எதிராகத் தமது போராட்டத்தை நடத்திய இம்மாணவர்கள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி துணைவேந்தருக்கு பலமுறை கடிதம் அனுப்பியிருக்கின்றனர். அவர்களது அனைத்து கடிதங்களையும் நிராகரித்தார் அப்பாராவ்.

கடந்த டிசம்பர் 30 அன்று தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து யூ.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் ’தொரட்’டிடம், தாங்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட 10 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் இந்த மாணவர்கள். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் தங்களை விடுதியில் தங்க அனுமதிக்காத அப்பாராவிற்கு ரோகித் எழுதிய கடைசிக் கடிதத்தில் ”தலித் மாணவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டது பொய்ப்புகார் என்று தெரிந்தும் எங்கள் மீது நடவடிக்கை எடுத்ததை வைத்தே உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி எங்களை படிப்படியாகக் கொல்வதற்குப் பதில், தலித் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அவர்களுக்கு தாம்ப்புக் கயிறோ, 10 கிராம் சோடியம் அசைடு விஷத்தையோ கொடுத்துவிடுங்கள் அல்லது ஒரேடியாக கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்று எழுதியிருக்கிறார். மத்தியில் ஆளும் பார்ப்பன பாஜக அரசின் நேரடி அழுத்தம், அப்பாராவ் என்ற அடிமையின் வாயிலாக போராளிகளை எந்த அளவிற்கு உளவியல் ரீதியில் பாதித்திருக்கிறது என்பதை இக்கடிதத்தின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும்.

கருணைக் கொலை செய்து விடும்படி ரோகித் துணைவேந்தருக்கு எழுதிய கடிதம்

ஒருபுறம், தட்டிய கதவுகள் அனைத்தும் இறுக மூடியபடியே இருக்க, மறுபுறம் 7 மாதங்களாக கல்வி உதவித்தொகை வராமல் கல்வி நிலையத்திலிருந்தும், விடுதியிலிருந்தும் ஒதுக்கப்பட்ட சூழலில் கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளனர் இம்மாணவர்கள். ஞாயிற்றுக்கிழமை, தனது தாயிடம் மனம் ஒடிந்து பேசிய ரோகித் வெமுலா, பின்னர் தனது நண்பனின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அது தற்கொலை அல்ல, சங்கபரிவாரத்தின் நேரடியான பாசிச படுகொலை என்பதை மேற்சொன்ன சம்பவங்களும், தற்கொலைக்கு முன் ரோகித் எழுதிய கடிதமும் நமக்கு உரைக்கின்றன. ரோகித் எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள்:

“ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே… “

rohit-vemula-suicide-protests-1”ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன … ——————————————- ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை. “

“சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. “

”எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்”

ரோகித் வெமுலா தற்கொலை
பார்ப்பன சாதி வெறி ஓநாய்களின் தொடர்ச்சியான உளவியல் தாக்குதல் ஒரு சமூகப் போராளியை, ஒரு விஞ்ஞானியை, தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தில் இருந்து உயர்கல்வி பயில ஒரு பெருங்கனவோடு வந்திருந்த ஒரு மாணவனைக் கொன்றுவிட்டது.

மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக போராடிய ஒரு போராளியின் உள்ளத்தை இந்த இழிவான சாதிய சமூகமும், பார்ப்பன பாசிச கும்பலும் எவ்வளவு தூரம் பாதித்திருக்கின்றன என்பதை இந்தக் கடிதம் பறைசாற்றுகிறது. இந்த மாணவர்களின் மீது பார்ப்பன சாதி வெறி ஓநாய்களின் தொடர்ச்சியான உளவியல் தாக்குதல் ஒரு சமூகப் போராளியை, ஒரு விஞ்ஞானியை, தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தில் இருந்து உயர்கல்வி பயில ஒரு பெருங்கனவோடு வந்திருந்த ஒரு மாணவனைக் கொன்றுவிட்டது.

இது இன்று நேற்று நடக்கும் விசயமா ?.. 2000 ஆண்டுகளாக இந்திய சமூகம் பார்த்துப் பார்த்து பழகிப் போன விசயம் தான். அது ஏகலைவன் ஆகட்டும், சம்பூகன் ஆகட்டும், அல்லது நந்தன் ஆகட்டும், பார்ப்பனிய விசத்தால் கொல்லப்பட்ட சூத்திரர்களும், சண்டாளர்களும் – பின்னாளில் பார்ப்பனர் கருணையால் இறைவனடி சேர்ந்தவர்களாக சித்தரிக்கப்பட்டதை வாசித்து புளகாங்கிதமடையும் அடிமைச் சமூகத்தில் தினமும் இது போன்ற ஆயிரக்கணக்கான ஏகலைவன்கள் கொல்லப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்

அம்பேத்கர்
“எந்த திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில் குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ, பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர் (படம் இணையத்திலிருந்து)

இதற்கு நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டு ராகுல்காந்தி தொடங்கி அனைத்து ஓட்டரசியல் பெருச்சாளிகளும் தங்களை சமூக நீதிப் போராளிகளாகக் காட்டிக் கொள்கின்றனர். அனைத்து ஓட்டுக் கட்சி கிரிமினல்களும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தலித் விரோத, இஸ்லாமியர் விரோத, மக்கள் விரோத சதித் திட்டங்களில் ஒரு வகையில் பங்கு வகித்தவர்களே. இன்று தலித் அரசியல் பேசும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும், சமூக நீதி பேசும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கூட்டணி மூலமோ அல்லது தேர்தல் கூட்டணியைக் கணக்கில் கொண்டு அமைதி காப்பதன் மூலமோ இந்நாட்டை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வேட்டைக் காடாக மாற்றி வருகின்றன.

****

ரோகித் வெமுலா தற்கொலை
மாணவர் எழுச்சியைக் கண்டு மிரண்டிருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு எடுபிடிகளைக் கொண்டு அவசர அவசரமாக ரோகித் வெமுலாவின் உடலை எரித்துள்ளது

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சாதிய ஒடுக்குமுறையால் படுகொலை செய்யப்பட்ட ரோகித்தின் மரணத்திற்குப் பிறகு நாடு முழுவதும் பல்வேறு முற்போக்கு மாணவர் அமைப்புகள் ஒன்று திரண்டு போராடி வருகின்றன. வழக்கம் போல, போராடும் மாணவர்களின் மீது ஏவல் நாய்களாய் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருக்கின்றன போலீசு வெறிநாய்கள். மாணவர் எழுச்சியைக் கண்டு மிரண்டிருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு எடுபிடிகளைக் கொண்டு அவசர அவசரமாக ரோகித் வெமுலாவின் உடலை எரித்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் உயர்நீதி மன்ற கண் துடைப்பு உத்தரவையும் மீறி நாகை மாவட்டத்தில் செல்லமுத்து என்ற தலித் முதியவரின் பிணத்தை பொதுவழிக்குள் நுழையவிடாமல் போலீசு எடுபிடிகளை வைத்துத் தடுத்து சாதிய சனாதனத்தை நிலைநாட்டிய அதிகாரவர்க்கத்தின் சிந்தனையில் வேறு என்ன உதிக்க முடியும்?

பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ’சேவை’யையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப் படுவீர்கள் என்பது தான் கோவிந்த் பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்புப் பாடம்.

ரோகித் வெமுலா தற்கொலை
“நாங்கள் அவனை தொடவே இல்லை” – ஏ.பி.வி.பி (படம் : thehindu.com)

மோடி அரசு பதவியேற்ற பின் தொடர்ச்சியாகக் கொண்டு வரும் பல்வேறு மக்கள் விரோத சட்டதிருத்தங்களும், பொருளாதார சீர்திருத்தங்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், எதிர்ப்பே காட்டாத ஒரு மழுங்கிப் போன தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் இந்தக் கும்பலுக்கு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக புரட்சிகரமான அணியினரான மாணவர்களிடையே குறிப்பாக உயர்கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்களிடையே தனக்கு எதிரான கருத்துக்கள் தோன்றக் கூடாது என்பதிலும், அப்படித் தோன்றினால் அதன் சுவடு தெரியாமல் அழித்து விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல். அதன் வெளிப்பாடு தான் “யூ.ஜி.சியை ஆக்கிரமிப்போம்” இயக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், எஃப்.டி.ஐ.ஐ மாணவர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீது விதிக்கப்பட்ட தடை, மற்றும் தற்போது அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது உளவியல் ரீதியாக தொடுக்கப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்கள் போன்றவை.

ரோகித் வெமுலா தற்கொலை
ஏகலைவன் 2.0-ன் கதை “இந்தத் தடவை ஒன்னோட உயிரே வேண்டும். இந்தா கயிற்றைப் பிடி” – ஹைதராபாத் பல்கலைக் கழக நிர்வாகம். (படம் இணையத்திலிருந்து)

நாட்டின் செல்வமான கல்வியை கடைச் சரக்காக்கும் ’புதிய கல்விக் கொள்கை – 2015’ மசோதாவை ஒட்டு மொத்த மாணவர் சமூகத்தின் மீதான தாக்குதலுக்காக தயாரித்து வைத்திருக்கும் மோடி கும்பல். கல்வியை கார்ப்பரேட் கும்பலின் கையில் ஒப்படைத்து பெரும்பான்மை இந்தியர்களை அறிவு ஊனமுற்றவர்களாக மாற்றத் துடிக்கும் இக்கும்பல், இதற்கு எழும்பும் எதிர்ப்பை அடக்கி ஒடுக்க வழி செய்து கொடுக்கும் வகையில் லிங்டோ கமிட்டி அறிக்கையின் படி மாணவர் அமைப்புகளுக்கான கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவர் அமைப்புகளைக் காயடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

ரோகித் வெமுலா தற்கொலை
“வி.ஐ.பி புகார்” மீது மனுநீதியை நிலைநாட்டிய ஹைதராபாத் பல்கலைக் கழகம் – “ஏ.பி.வி.பி பசங்களோட வாழ்க்கையை அச்சுறுத்தும்படி பி.எச்.டி ஆய்வு செய்யும் தலித் நீதானா?” (படம் இணையத்திலிருந்து)

அடுத்த தலைமுறையை, பார்ப்பனிய ஏகாதிபத்திய தாசர்களாக, சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஆட்டு மந்தைகளாக, சுயமாக சிந்திக்க, தனது உரிமைக்காகக் கூட குரல் கொடுக்க முடியாதவர்களாக உருவாக்கும் தனது நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தி வருகிறது பார்ப்பனக் கும்பல். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழப் போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்திய மாணவ சமூகத்தை அடக்கி ஒடுக்கி, அரசியலோ, ஜனநாயக உணர்வோ இல்லாத தக்கை மனிதர்களாக மாற்ற நேரடிப் படுகொலைகள், உளவியல் ரீதியான தாக்குதல்கள் தொடங்கி சட்ட சீர்திருத்தங்கள் வரை பல்வேறு ஆயுதங்களைக் கையாண்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க கும்பல். நாட்டை சீர்கெடுக்கும் காவிக் கும்பலை விரட்டியடிக்க வேண்டிய தருணம் இது. நாம் பகத்சிங்கின் வாரிசுகள் என்பதை மீண்டும் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது.

– கதிர்

பேராசிரியர் சாய் பாபாவை சாகடிக்க காவி பயங்கரவாதிகள் சதி !

0

டெல்லி பேராசிரியர் சாய் பாபாவுக்கு மீண்டும் சிறை! சித்திரவதை செய்து சாகடிக்க காவி பயங்கரவாதிகள் சதி!

மதுரை ம.உ.பா.மையம் சார்பில் அரங்கக் கூட்டம்

க்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,மதுரை மாவட்டக் கிளை சார்பாக,டெல்லி பேராசிரியர் சாய் பாபா பிணையை ரத்து செய்து, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து 17-01-2016 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளை செயலாளர் லயனல் அந்தோணி ராஜ் தலைமை ஏற்றார்.

கிளைச்செயலாளர் லயனல் அந்தோணிராஜ்
கிளைச்செயலாளர் லயனல் அந்தோணிராஜ் தலைமை

பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய டெல்லி பேராசிரியர் சாய் பாபாவுக்கு மீண்டும் சிறை ! முற்போக்கு சிந்தனைகளை முடமாக்கும் காவிகள்!” என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

“பேராசிரியர் சாய் பாபா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். ஆந்திராவில் இருந்தபோது பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார். அவர் 90% மாற்றுத் திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டதால் அவர் கைகளால் தவழ்ந்து செல்லும் நிலையில் இருந்தார். டெல்லிக்கு வந்த பிறகு தான் அவர் சக்கர நாற்காலி பயன்படுத்தினார். பழங்குடி மக்களின் மீது தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.இதை உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி சிறப்புரை.

புரட்சிகர ஜன நாயக முன்ணணி என்ற அமைப்பின் இணைச் செயலராக இருந்தார். டெல்லி பல்கலைக் கழக மாணவர்களுடன் அவர் நெருக்கமான தோழமை உறவு ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.இதனால் 2014-ம் ஆண்டு மே மாதம் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) என்ற ஆள்தூக்கி கருப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரது உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் கடந்த ஜூன் மாதம் அவருக்கு சிகிச்சைக்காகப் பிணை வழங்கப்பட்டது. இப்போது பிணை ரத்து செயப்பட்டு மீண்டும் அவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளர். சிறையில் அவருக்கு நேர்ந்த கொடுமைகளைப் பற்றி அவரது மனைவிக்கு அவர் பல கடிதங்கள் எழுதியுள்ளார். அதை வைத்துப் பார்க்கும் போது அவர் சிறையிலிருந்து உயிரோடு வருவாரா என்பது சந்தேகமாக இருக்கிறது.

ரவுடிகளையும், கொள்ளையர்களையும், தேசவிரோதிகளையும் கண்காணிக்க வேண்டிய போலீசு உளவுத்துறை, அரசின் தவறான செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையெல்லாம் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தி சிறையில் தள்ளுகின்றது. இவர்களைக் கண்காணிப்பதற்கு உளவுத்துறையில் பல பிரிவுகள் செயல்படுகின்றன.

dr-saibaba-hall-meeting-4ஆந்திரா, ஒரிசா, சதிஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் நமது இயற்கை வளங்களையெல்லாம் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கு நமது ஆட்சியாளர்கள் அகலக் கதவைத் திறந்துவிட்டுள்ளனர். இதனால் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் எதிர்த்துப் போராடுகிறார்கள். போராடுகிற அனைவரையும் மாவோயிஸ்டுகளாகப் பார்க்கின்றது அரசு. இவர்களைக் காடுகளிலிருந்து விரட்டியடிப்பதற்காக பசுமை வேட்டை போன்ற பெயரில் போலீசு, ராணுவத்தைக் குவித்து மக்களைக் கொல்கிறது.இதனை எதிர்த்துக் குரல் கொடுத்ததினால் தான் சாய் பாபாவுக்கு இந்த கதி.

சாய் பாபாவைக் கைது செய்த போது போலீசு எந்த சட்ட நெறிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை. தீவிரவாதியைப் போல கடத்திக்கொண்டு போய்விட்டது. போலீசு நினைத்தால் யார்மீது எத்தனை கேசு வேண்டுமானாலும் போடலாம்.யாரும் கேள்வி கேட்க முடியாது.அதை நீதிமன்றங்களும் ஏற்றுக்கொள்கிற அவல நிலை உருவாகியிருக்கிறது. ஊடகங்களும் “பயங்கரவாதி கைது” என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டு ஒரு கருத்தை உருவாக்கி விடுகிறார்கள். இந்த நிலைமை தொடர்வதற்குக் காரணம் இந்த மாதிரி விஷயங்களில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு பயங்கரவாதம் எப்படி செயல்படுகிறது என்பதை மக்கள் உணரும்போதுதான் இதில் மாற்றம் வரும்.

dr-saibaba-hall-meeting-3குஜராத்தில் 97 இசுலாமியர்களைக் கொன்ற பாபு பஜ்ரங்கி என்பவனுக்கும், இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற மாயா கோத்னானிக்கும் உடல் நிலையைக் காரணம் காட்டி நீதிமன்றம் பிணை வழங்கியிருக்கிறது. மூன்று பேர் என்கவுண்டர் படுகொலைக்கு காரணமாயிருந்த அமித் ஷா சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். குண்டுவெடிப்புகளுக்கு காரணமாயிருந்த இந்து பயங்கரவாதிகள் உட்பட பலரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போதுமான குற்றசாட்டுகள் இல்லாத நிலையிலும் சாய் பாபா சிறைக் கொடுமைகளை அனுபவித்து வருகிறார். தற்போது அவரது சக்கர வண்டியும் உடைந்துவிட்ட நிலையில் அவர் தனிமைச் சிறையில் கழிவறையையே வாழுமிடமாகக் கொண்டு மரணத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். இது அவரை சிறையில் தள்ளியவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது காவி பாசிஸ்டுகளின் திட்டமிட்ட சதியாகும். இதற்கெல்லாம் அஞ்சி அவர் பின்வாங்கிவிடவில்லை.

கோவில்களைச் சுற்றித் திரியும் பண்டாரங்களையும் காவிகள் என்று சொல்வதுண்டு.ஆனால் இவர்கள் கார்ப்பரேட் காவிகள்.

  • புராணப் புரட்டுகளையெல்லாம் அறிவியல் கண்டுபிடிப்புகளாகப் பிதற்றித் திரிபவர்கள். வரலாற்றைத் திருத்தி எழுதத் துணிந்தவர்கள். இதற்காக 90 வயதை நெருங்குகிற பலர் உட்பட 700-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.அரசு.
  • அரசு கட்டுப்பாட்டில் உள்ள 500-க்கும்மேற்பட்ட அகாடமிகளில் ஆர்.எஸ்.எஸ். காவிகளைக் கொண்டு நிரப்பி வருகின்றனர்.
  • காந்தியைக் கலவரக்காரராகவும், கோட்சேயைத் தியாகியாகவும் சித்தரித்துபாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. மஹாபாரதத்தையும், ராமாயணத்தையும் வரலாறாகப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்க முனைந்துள்ளனர் .
மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன்
மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் நன்றியுரை
  • உ.பி.மாநிலம் அலகாபாத்திலுள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கையையும், யமுனையையும் உருவாக்கியது சரஸ்வதி நதி தான். அது பூமிக்கு அடியில் ஓடுகிறது என்றும் அதைக் கண்டுபிடிக்க பல கோடி மக்கள் வரிப் பணத்தில் செலவழிக்கின்றனர். இதற்காக அறிவுஜீவிகள் அலைகின்றனர்.
  • இது இந்து நாடு. இங்கே முஸ்லீம்கள் வாழலாம்.ஆனால் அவர்கள் இந்துக்களுக்குக் கட்டுப் பட்டவர்களாக வாழ வேண்டும் என்ற கோல்வால்கரின் தத்துவத்தைத் தூக்கிக்கொண்டு கலவரத்தை உருவாக்கி வருகின்றனர்.
  • தலித்துகளை உருவாக்கியது இந்து மதம் அல்ல. இசுலாமிய மதம்தான் என்று சரடு விடுகின்றனர்.
  • அம்பேத்கார் தலித்துகளை இந்து மதத்தை விட்டு வெளியேறச் சொன்னார். காவிகளோ தலித்துகளையும் முஸ்லீம்களையும் கிறித்தவர்களையும் இந்து மதத்திற்குத் திரும்பி வாருங்கள் என்கின்றனர். திரும்பி வந்தால் எந்த சாதியில் வைக்கப் படுவார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.
  • மோடியைக் கடவுளின் அவதாரம் என்றும் நம்மை மீட்பதற்கு வந்திருக்கிறாரென்றும் பரப்புகின்றனர்.
  • அவர்களது கற்பனைகளையெல்லாம் வரலாறாக மாற்றத் துடிக்கின்றனர்.அதற்கு ஏற்றாற் போல பல நீதிமான்கள் அமர்ந்துகொண்டு தீர்ப்பளிக்கின்றனர். பண்பாட்டு ரீதியாகவும் தாக்குகின்றனர்.

இந்தக் காவி பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும். பேரா.சாய் பாபாவை விடுதலை செய்யக் கோரி ஆசிரியர்-மாணவர்-எழுத்தாளர்கள்-அறிவுஜீவிகள் மக்கள்திரள் அனைவரையும் ஒன்று திரட்டிக் குரல் கொடுக்க வேண்டும்” என்று பேராசிரியர் முனைவர் ஆர்.முரளி அவர்கள் பேசினார்.

மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா. நடராஜன் நன்றி கூறினார்.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை, 9443471003