Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 572

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

1

நக்சல்பாரி – புரட்சியின் இடிமுழக்கம்

ந்தச் சொல்லை ஏதாவது ஒரு வகையில் நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது.

நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அந்தச் சொல்லுக்கு நல்லவிதமான கருத்தைத் தரும்வகையில் அவை ஒரு போதும் செய்திகள் கொடுத்ததே இல்லை.

“நிலப்பிரப்புகள், அரசியல்பிரமுகர்கள் நக்சல்பாரிகளால் சுட்டுக்கொலை”, “நக்சல்பாரிகள் போலீசு நிலையங்களை தாக்கி துப்பாக்கிகள் பறிமுதல்”, “நக்சல்பாரிகள் வைத்த நிலக்கண்ணி வெடித்து போலீசார் பலி”, “ரயில்நிலையவங்கள், பாலங்களைத் தீவிரவாதிகள் தகர்த்தனர்”, “வெடிகுண்டுகள் பயங்கர ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் கைது”, “போலிசுடன் நடந்த மோதலில் நக்சல் பாரிகள் கொல்லப்பட்டனர்”.

– இப்படியான செய்திகளைக் கொண்டு நக்சல்பாரிகள் என்றாலே நோக்கமற்ற, சமூக விரோத பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், வன்முறையாளர்கள் என்ற எண்ணம் பரப்பப்படுகிறது.

“தனிநபர் அநீதிக்கு இலக்கானவர்கள், வேலை வாயப்பற்ற இளைஞர்கள் நக்சல்பாரிகளாக மாறி தவறாக வழிநடத்தப்பட்டு அப்பாவி மக்களையும் சமூகத்தையும் பழிவாங்கத் துடிப்பவர்கள்” என்று கோமல் சுவாமிநாதன், கமலஹாசன் போன்ற சினிமாக்காரர்களால் கொச்சைப்படுத்தப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.

“சமூக விரோதிகள்”, “தீவிரவாதிகள்”, “பயங்கரவாதிகள்”. “நக்சலைட்டுகள்”, நக்சல்பாரிகள்”, “தீ கம்யூனிஸ்டுகள்”, இப்படிப் பலவாறு எதிரிகளால் குறிப்பிடப்படும் கம்யூனிசப் புரட்சியாளர்கள் எவரும் இதனாலெல்லாம் வருந்தவோ, வெட்கப்படவோ கிடையாது.

ஏனென்றால் சாவுக்கு அஞ்சாதவர்கள்தாம் நக்சல்பாரிகள். “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்படுவதில் இருந்து பிழைத்தவர்களைப் பிடித்து வந்து குற்றுயிரும் குலையுயிருமாக வழக்குமன்றத்தில் நிறுத்தப்பட்டபோதும் நக்சல்பாரிகள் சொன்னார்கள் “ஆம்! நாங்கள்தான் பண்ணையார்களைக் கொன்றோம்; மக்கள் எதிரிகளை அழித்தொழிப்பது குற்றமில்லை! தூக்குத் தண்டனையா, கொடு! தீர்ப்பை முடிவு செய்துவிட்டு விசாரணை என்று ஏன் நாடகமாடுகிறாய்?” என்று கலகக் குரல் எழுப்பினார்கள்.

ஆகவே, எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம். தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்.

ஆனால் இதற்குப் பெயர் ஏன் நக்சல்பாரி என்று வந்தது?

நக்சல்பாரி –-

இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறுகிராம்ம். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ளது அந்த கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள் மிட்டா மிராசுகள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்கு முறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டுள்ள இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது.

அன்று, அரசாங்கக் குறிப்பேடுகளில் மட்டுமே அறியப்பட்ட இருள்கப்பிய கிராமமாகத்தான் இருந்தது, அந்த நக்சல்பாரி.

ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது. உலகின் எல்லா மொழி அகராதியிலும் அதற்குத் தனி விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இனிமேலும் நக்சல்பாரி என்ற சொல் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை.

நக்சல்பாரி என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் அச்சம் கொள்ள வைக்கிறது.

பண்ணை நிலப்பிரபுக்களையும், கந்து வட்டி லேவாதேவிக்காரர்களையும், கொள்ளை வியாபாரிகளையும், அதிகார வர்க்கத்தினர்களையும் குலைநடுங்கச் செய்கிறது.

ஏனென்றால் நக்சல்பாரி என்பது இப்போது,

– ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது.

– ஒரு ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியைக் குறிக்கிறது.

– நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது.

– நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது.

– எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது.

– உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாகத் தெரிகிறது.

நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி உலகம் முழுவதும் அறிந்திருந்தாலும் அதற்கு இந்தப் பெயர் எப்படி வந்தது என்பது பலருக்கும் தெரியாது.

அது இப்படித்தான் நிகழ்ந்தது.

1871-ம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிசில் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள் முதலாளிகளின் அரசு அமைப்பைத் தகர்த்து பாரிசு கம்யூன் என்னும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவினார்கள். அது இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டு தோல்வியுற்றாலும் அதன் மூலம் உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வதற்கான முன் மாதிரி ஒன்றை உலகுக்கு எடுத்து காட்டினார்கள்.

அதைப் போலத்தான் “உழுபவனுக்கே நிலம்,உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன் வைத்து, 1967-ம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி, விவசாயிகள் இந்தியப் புரட்ச்க்கான போர்ப் பிரகடனம் செய்தார்கள்.

அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.

மேற்கு வங்கம், டார்ஜிலிங் மாவட்டத்தில் சுமார் முன்னூறு சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கிய மூன்று கிராமங்கள் நக்சல்பாரி, கரிபாரி, பன்சிதேவா ஆகியவை. வடக்கே நேபாளம், கிழக்கே சிக்கிம், பூடான், தெற்கே வங்கதேசம் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இவற்றுக்கு இடையே வடகிழக்கிந்தியாவை இணைக்கும் மெல்லிய கழுத்துப் பகுதியில் ஓடும் ‘மெச்சி’ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, நக்சல்பாரி கிராமம்.

நக்சல்பாரி விவசாயிகளில் பெரும்பாலும் சந்தால், ராஜபான்ஷி, ஒரேயன் ஆகிய பழங்குடி இனத்தவர்கள். விதை, ஏர், மாடு ஆகிய அனைத்தையும் கொடுத்து, விளைச்சலில் பெரும் பங்கை குத்தகையாக விழுங்கிக் கொண்டிருந்த “ஜோத்திதார்” எனப்படும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்தது அக்கிராமம் முழுவதும்.

ஜோத்திதார்களின் ஆதிக்கம் கண்டஞ்சி எப்போதும் சும்மா அடங்கிக் கிடந்தவர்கள் அல்ல நக்சல்பாரி கிராம மக்கள். 1951- 54 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சிறு சிறு போராட்டங்கள் மூலம் வலுவான விவசாயிகள் சங்கமாகவும், கம்யூனிசக் கட்சி அமைப்பாகவும் அணி திரண்டனர். 1955 – 57 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நக்சல்பாரி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். தேயிலைத் தோட்ட முதலாளிகளின் அடியாட்களாகக் கொண்டு வரப்பட்ட போலீசுப் படையைப் பின்வாங்கும்படி விரட்டியடித்தவர்கள்.

அங்கே தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள் திரண்டதும், தொழிலாளர்- விவசாயிகள் கூட்டணி உருவானதும் இயல்பாகவும் அவசியமாகவும், தவிக்கவியலாத்தாகவும் அமைந்தது.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை வைத்திருந்த முதலாளிகள், தோட்டத் தொழிலாளர்களையே தங்களது விவசாய விளைநிலங்களில் குத்தகைதார்ர்களாகப் பயன்படுத்தினர். நில உச்சவரம்புச் சட்டம் வந்தபோது விவசாய நிலங்களையும் தேயிலைத் தோட்டம் என்று கணக்குக் காட்டி ஏய்த்தனர். ஒருபுறம் தாங்கள் நினைத்த போதெல்லாம் தோட்டத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தனர். மறுபுறம் ஜோத்திதார்கள் பெருமளவு விவசாயிகளை தமது குத்தகை நிலத்திலிருந்து வெளியேற்றினர்.

1958 – 62 ஆகிய ஆண்டுகளில் நக்சல்பாரியில் விவசாயிகளின் இயக்கம் மேலும் போர்க்குணமடைந்தது. நில வெளியேற்றத்துக்கு எதிராக “குத்தகைதார விவசாயிகளே அறுவடையைக் கைப்பற்றுவது, பயிர்களைக் காப்பதற்காக ஆயுதமேந்துவது, போலீசின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தயாராயிருப்பது” என்று நக்சல்பாரி விவசாயிகளுக்குத் தலைமையேற்றிருந்த கம்யூனிஸ்டுக் குழு வழிகாட்டியது.

1966–ல் சிலிகுரி பகுதியில் நடந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் 16 நாள் வேலை நிறுத்தம், அடுத்த ஆண்டு வெடிக்கக் காத்திருந்த நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியில் முன்னணிப் பாத்திரமாற்றத் தொழிலாளர்களைத் தயார் செய்தது.

1967-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற அரசியலில் கூட முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சர், போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார்கள்.

நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முனனும் பின்னும் வாக்குறுதிகிகளை வாரி வழங்கினர், போலிக் கம்யூனிஸ்டுகள். அவர்களது நிலம் மற்றும் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த அரே கிருஷ்ண கோனார் அதையே உறுதிசெய்ததோடு, நில விநியாகம் வெற்றியடைய வேண்டுமானால் அமைப்பாகத் திரண்ட விவசாயிகள் கீழ் இருந்து “முன் முயற்சி” எடுக்க வேண்டும் என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வைத்தார்.

கீழிருந்து கட்டவிழ்ந்து கிளம்பும் விவசாயிகளின் “முன் முயற்சி” போலி மார்க்சிஸ்டுகளின் முகத்திரையைக் கிழித்துவிடும், அவர்களுடைய பதவி நாற்காலியையே பறித்து விடும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்பு வந்தது. ஆனால் ஒரு துண்டு நிலம் கூட நிலப்பிரபுக்களிடம் இருந்து கைப்பற்றப்படவில்லை. வழக்கம்போல நிலங்கள் எல்லாம் பினாமி பெயர்களுக்கு மாற்றப்பட்டன. ஆயிரக்கணக்கான வழக்குகளும், வழக்கு மன்றத் தடையுத்தரவுகளும் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீது போடப்பட்டன. அதிகாரவர்க்கம் நிலப்பிரபுக்களுக்குத் துணை நின்றது.

“பினாமி பெயரால் நடந்துள்ள மோசடியான மாற்றங்களைப் பற்றி அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் சட்டத்தாலும் நீதிமன்றங்களாலும் காகிதக் கட்டுக்களாலும் ஆவணங்களாலும் போடப்படுகின்ற தடங்கல்கள் ஏராளம், ஏராளம்” என்று புலம்பினார் அரே கிருஷ்ண கோனார்.

மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், வர்க்கப் போராட்டத்தின் கருவியாக அரசாங்கத்தைப் பயமன்படுத்துவதற்காகவுமே பதவியேற்பதாகக் கூறிக் கொண்ட அந்தப் போலி இடது சாரிகளால் எதையுமே செய்ய முடியவில்லை.

இன்னொருபுறம், ஏராளமான குத்தகை விவசாயிகளை நில வெளியேற்றம் செய்வது அதிகரித்தது. அவற்றைத் தடுக்கவோ, பண்ணை நிலப்பிரபுக்களிடமிருந்து சட்டப்படியான உபரி நிலங்களைக் கைப்பற்றி வாக்களித்தபடி கூலி, ஏழை விவசாயிகளுக்கு வழங்கவோ இல்லை. அப்படிச் செய்தால் தரகு அதிகார முதலாளிகள் – நிலப்பிரபுக்களின் கருவியான மத்திய அரசு இவர்களின் மாநில அரசை பதவி நீக்கம் செய்துவிடும் என்று அஞ்சினர். பேசாமல் மனுக்களை சமர்ப்பித்து விட்டு பொறுமையாகக் காத்திருக்கும்படி விவசாயிகளுக்கு உபதேசம் செய்தார்கள், போலி மார்க்சிஸ்டு அமைச்சர்கள். மேற்கு வங்க ஐக்கிய முன்னணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தி பதவி பறிபோகும் சூழ்நிலை உருவாகாமல் தடுப்பதே விவசாயிகள் உட்பட எல்லா இயக்கங்களின் கடமையாக இருக்கவேண்டுமென அறிவுறுத்திவந்தனர்.

அரசியல் நிர்ணயச் சட்டம், வழக்குமன்றம், அதிகார வர்க்கம் ஆகியவற்றிக்குக் கட்டுப்பட்டு பதவியைத் தக்க வைத்துக் கொள்வதா, அல்லது இவற்றை மீறி உபரி, குத்தகை நிலங்களைப் பறிமுதல் செய்து விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதா? தங்களது பதவியா, விவசாயிகளுக்கு நிலமா? இரண்டிலொன்றை தெரிந்தெடுத்துக் கொள்ளும்படி போலி இடதுசாரிகள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் தமது வர்க்க பாசத்தை, வர்க்க குணத்தை, துரோகத்தனத்தைக் காட்டிவிட்டார்கள். அரசாங்கப் பதவிதான் தமக்கு அவசியமானது, அதைக் காப்பதற்காக உழைக்கும் மக்களின் நலனைப் பலியிடவும், தாங்களே அவர்களை ஒடுக்கவும் துணிந்து விட்டார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள், குறிப்பாக இடதுசாரிக் கட்சிகள் முழங்கி வரும் முற்போக்கு, சீர்திருத்தம் எல்லாம் வெறும் மோசடிகள் தாம் என்பதற்குச் சாட்சியமாக அமைந்தது நக்சல்பாரி உழவர்களின் எழுச்சி.

மார்ச் – 18, 1967 சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணிக்கு, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.

“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். பறிமுதலும் விநியோகமும் செய்யும் அதிகாரம் விவசாயிகள் கமிட்டிகளுடையதுதான். இதைச் செய்ய வேண்டுமெனில் நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும். நிலப்பிரப்புத்துவ எதிர்ப்புப் போராட்டம் என்பது நிலப்பிரபுக்களை எதிர்ப்பதுடன் முடிந்துவிடாது; அவர்களுக்கு ஆதரவாக வருகின்ற மத்திய, மாநில அரசுகளையும் நாம் எதிர்த்து நின்றாக வேண்டும். எனவே ஒரு நீண்டகாலப் போருக்கு நாம் தயாராக வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி தாலுகா செயலர் ஜங்கல் சந்தாலும், ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அழைப்பை பெரும் எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.

ஏற்கனவே போர்க்குணமிக்க போராட்டங்களால் விழிப்புணர்வும், அமைப்புப் பலமும் கொண்டிருந்த சிலிகுரி வட்ட, குறிப்பாக நக்சல்பாரிப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தனர். மழையிலும், வெயிலிலும் ஜோத்திதார்களின் நிலங்களில் உழைத்துக் களைத்தும் கருகியும் போயிருந்த உழவர்களின் முகங்களில் நம்பிக்கை சுடர்விடத் தொடங்கியது.

நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மீட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். வழக்கு மன்றமோ, அரசாங்கமோ தங்களைப் பாதுகாக்காது என்பதை இச்சம்பவம் விவசாயிகளுக்குப் புரியவைத்தது. சிலிகுரி வட்ட விவசாயிகள் மாநாட்டு அழைப்பை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று அவர்கள் முடிவு செய்தனர்.

ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. 15,000 முதல் 20,000 விவசாயிகள் தங்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவு செய்து கொண்டனர். எல்லா கிராமங்களிலும் ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

உடனே துவங்கின நடவடிக்கைகள்; பட்டாக்கள், கடன் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாகிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. வில்லும் அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் காவல் நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக் கூட முடியாது என்ற நிலைமை மே மாதத்தில் உருவானது.

நிலைமை கட்டுக்கு மீறிச் செல்வதைக் கண்டு அஞ்சிய வருவாய்த்துறை அமைச்சர் அரே கிருஷ்ண கோனார் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த சிலிகுரிக்கு விரைந்தார். “நக்சல்பாரியில் நடக்கும் சட்டவிரோதமான நிலப் பறிமுதல்கள் எல்லாம் உடனே நிறுத்தப்படும்” என்றும், “கனு சன்யால், ஜங்கல் சந்தால் போன்ற போலீசால் தேடப்படும் நபர்கள் சரண்டையவும் ஒப்புக் கொண்டுவிட்ட”தாகவும் அறிவித்தார். “இது கடைந்தெடுத்த பொய்” என்று மறுத்தனர்,புரட்சியாளர்கள்.

மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். ஒரு காவலர் கொல்லப்பட்டவுடன் பின் வாங்கிய போலீசு 25-ம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரை கொன்றது, விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர், தலைவர்களைக் காட்டிக் கொடுக்குமாறு போலீசு செய்த சித்திரவதைகளால் இம்மியும் பயனில்லை.”போலீசை ஏன் தாக்கினர்கள்?” என்ற கேள்விக்கு விவசாயிகள் பதிலளித்தார்கள்; “நாங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க விரும்பினோம்”.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பை தேற்றுவித்தது. கட்சித் தலைமை இறந்து போனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்தது. ஆனால் ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை நீலிக்கண்ணீரால் தடுக்க இயலவில்லை.

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்” என்ற முழக்கங்களால் கல்கத்தா நகரச் சுவர்களை அதிரவைத்தனர். கல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள்.

போலிகள், மக்கள் விரோதிகளுக்கு மரண அடி
உழைக்கும் மக்களின் அரசியல் மூச்சாய் நக்சல்பாரி!

க்சல்பாரியோ தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்தது. ஜூன் 8 முதல் 10 தேதிகளுக்குள் 80 நிலபறிமுதல்கள், 13 நிலப்பிரபுக்களின் வீடுகளில் கொள்ளை, இரண்டு கொலைகள், ஒரு கடத்தல், ஆயுதம் தாங்கிய குழுக்களின் வரிவசூல் நடவடிக்கைகள், விவசாயிகளின் மக்கள் நீதிமன்றம்…. என புள்ளி விவரங்களைக் காட்டி அலறியது போலீசு.

நக்சல்பாரியில் ‘தீவிரவாதி’களின் நடவடிக்கை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக பாராளுமன்றத்தில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் ஒய்.பி. சவாண் (இவ்வறிவிப்பின் மூலம் மார்க்சிஸ்டு கட்சிக்கு உள்ளேயே இருக்கும் தீவிரவாதிகளைத் தனியே பிரித்து அடையாளம் காட்டினார் சவாண்). அரே கிருஷ்ண கோனார், வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பாசனத்துறை அமைச்சர் விஸ்வநாத் முகர்ஜி மற்றும் சிலர் அடங்கிய அமைச்சர்கள் குழு ‘தீவிரவாதி’ களை நல்வழிப்படுத்த நக்சல்பாரிக்கு விரைந்தது; சென்ற வேகத்தில் தோல்வி கண்டு திரும்பியது.

ஜூன் இறுதியில் மார்க்சிஸ்டு கட்சித் தலைமை நக்சல்பாரி புரட்சியாளர்களை வெளிப்படையாகத் தாக்கத் தொடங்கியது மார்க்சிஸ்டு கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” ஒன்றைக் கட்டி ஜூன் 27-ம் தேதி சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். மார்க்சிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சுசிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முன் பாதம்” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ம் தேதி ஒலிபரப்பில் வருனித்த பீகிங் வானொலி, மார்க்சிஸ்டுக்களின் ஜக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.

ஜூலை 12-ம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது படையெடுத்தது போலீசு. ஜங்கள் சந்தாலும் முன்னணிபோராட்ட போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்ய்பட்டனர்.

மார்க்சிஸ்டு கட்சியின் வங்காளி வார இதழான தேஷ் – ஹிதாஷியின் ஆசிரியராக இருந்த சுசிதல்ராய் சவுத்ரி கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். வெளியேற்றப்பட்ட பின் பத்திரிகை அலுவலகத்தை கைப்பற்ற மார்க்சிஸ்ட் குண்டர்கள் முயன்ற போது மோதல் வெடித்தது.

சுசிதல்ராய் சவுத்ரி ‘தேசப்ரதி’ என்ற வங்காள நாளேட்டையும் பின்னர் ‘லிபரேசன்’ ஆங்கில இதழையும் தொடங்கினார். இரண்டு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களைச் சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின. சீனத்தின் மக்கள் தினசரியும், பீகிங் வானொலியும் தொடர்ச்சியாக ‘மார்க்சிஸ்டு’களின் திருத்தல் வாதத்தை அம்பலப்படுத்தினர். வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ நாடெங்கும் ‘மார்கசிஸ்டு’கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது.

மார்க்சிஸ்டு கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலக்க் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. மார்க்சிஸ்டு கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்கள் சாரு மஜும்தார், கனு சண்யால், சசிதல் ராய் போன்ற தோழர்களின் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம். மார்க்சிஸ்டு தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் சிறு சிறு அமைப்பு இயக்கங்களையும் கட்டி அமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல் வாத துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால் இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நக்சல்பாரி எழுச்சியும் ஆதரவாளர்களை குறுங்குழுவாதிகள், வறட்சிவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமல்ல, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம் இடதுசாரி கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால் அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1967-ம் ஆண்டு “மார்க்சிஸ்டு” கட்சி தலைமை மதுரையில் மத்தியக் கமிட்டியைக் கூட்டி நக்சல்பாரி எழுச்சியை கொச்சைப்படுத்தி, முழுக்க முழுக்க திருத்தல்வாதிகள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டது.

இதைத் தொடர்ந்து காசுமீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகியவற்றில் பெரும்பான்மையான மாநில கமிட்டிகளை வெளியேறின. “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்” என்ற அறைகூவல் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஓரிசா எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்கசிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

ஜூன் மாதத்தில் தோற்றுவிக்கப்பட்ட “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” பல்வேறு மாவோயிசக் குழுக்களின் பாலமாகச் செயல்பட்டது. நவம்பர் மாதத்தில் அக்குழு கூட்டிய அனைத்திந்திய மாநாட்டில் “அனைத்திந்திய புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் கமிட்டி” என்றொரு அமைப்பை ஏற்படுத்துவது என முடிவு செய்தது; கீழ்க்கண்ட அறைகூவலையும் விடுத்தது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும். மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். மதுரையில் வெளிப்பட்ட இறுதியான, தீர்மானகரமான துரோகத்திற்குப் பின் இனியும் தாமதிக்கவியலாது.”

தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது.

நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை போலி மார்க்சிஸ்டுகளின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.

அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவுகளும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலைமுடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.

சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு,அசாம், காசுமீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. வெட்டியெறியப்பட்ட நிலப்பிரபுக்களின் தலைகள் மட்டுமே கிராமங்களில் தங்கின. வெட்டப்படாத தலைகளோ நகரங்களை நோக்கி ஓடின.

‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகளை முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு நிர்வாகம் அஞ்சி நடுநடுங்கியது. நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் பரவின.

நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.

1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக ஆதிவாசிகிரிஜனங்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழித்தனர் அல்லது கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராம்ப் புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ளமுயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். இதுகண்டு எழுச்சியுற்ற வங்காள இளைஞர்கள் கல்கத்தா நகரில் கல்வி நிறுவனங்களையும், பிற்போக்குப் பண்பாட்டு சின்னங்களாக கருதி சீர்திருத்தவாதிகளின் சிலைகளையும் தாக்கினர். போலீசு நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதும், சிறைகளைத் தகர்த்துக் கொண்டு வெளியேறுவதும்கூட நிகழ்ந்தன.

ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.

ஆனால், இவை எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. தெலுங்கானா – தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் ஆயுதப்போராட்டமாகவும், தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கத்தில் போர்க்குணமிக்க மக்கள் திரள் போராட்டமாகவும் நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் நக்சல்பாரி இயக்கத்தால் துண்டிவிடப்படும் மக்களின் எழுச்சிக் குரலையோ, அதுகாட்டிய ஆயதப் போராட்டப் பாதையையோ ஒருபோதும் அடக்கி விடமுடியாது. எங்கெல்லாம் நக்சல்பாரியின் குரல் ஒலிக்கும். அது வெட்ட வெட்டத் துளிர்க்கும்,வளரும். அது நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரோலித்துக் கொண்டே இருக்கும்.

மடியாது… மறையாது நக்சல்பாரி!

நக்சல்பாரி உழவர் பேரழுச்சியும், அதைத் தொடர்ந்து நக்சல் பாரி இயக்கமும் தோன்றி முப்பதாண்டுகளாகின்றன. இருந்தபோதும் அதை ஒரு வரலாற்று நினைவாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது.

இன்றைய இந்திய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைமைகளில் நக்சல்பாரி முன்னிலும் பன்மடங்கு முக்கியத்துவமும் அவசியமும் பெறுகிறது.

நக்சல்பாரி இயக்கம் தோன்றிய ஒரு 15 ஆண்டுகளுக்கு முற்போக்கு நாடகமாடி ஓட்டுப் பொறுக்குவதை பிற்போக்கு இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ்.-ன் அரசியல் அவதாரங்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு செய்தன. அநேகமாக எல்லா மாநிலங்களிலும், நில உச்சவரம்பு, நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அன்றைய சோவியத் சமூக ஏகாதிபத்திய ருசியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பல அரசு ஏகபோகத் தொழில்களைத் துவங்கி, அவை பொதுத்துறைத் தொழில்கள், ஜனநாயக சோசலிசத்தின் சின்னங்கள் என மோசடி நாடகத்தை நடத்தினார், பாசிச இந்திரா. மேலும் பல தனியார் தொழில்கள் அரசுடமையாக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கங்கள் முதல் உணவு தானிய மொத்த வியாபாரம் வரை பல துறைகளும் அரசு ஏகபோகமாக்கப்பட்டன.

முதலில் 14, பிறகு 6 என்று 20 பெரிய தனியார் வங்கிகள் அரசுடமையாக்கப்பட்டன. இதோடு மன்னர் மானிய ஒழிப்பு போன்ற பல நடவடிக்கைகளுக்கும் முற்போக்கு, சோசலிச முத்திரை குத்திக் கொண்டார்கள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உரம்-உணவு தானியத்திற்கு மானியம் போன்ற சலுகைகளைக் காட்டி ஏய்த்தும், பாகிஸ்தானுடன் போரில் வெற்றி என்கிற தேசிய கௌரவத்தைத் தூண்டியும் அதிகப் பெரும்பான்மையுடன் இந்திரா ஆட்சிக்கு வந்தார். “சோசலிசத்தலைவி” என்று இந்திராவை தி.மு.க. முதல் போலிக் கம்யூனிஸ்டுகள் வரை புகழ்ந்தனர்.

ஆனால் அவர் “பாசிச காளி” தான் என்பது விரைவிலேயே தெரிந்தது. நக்சல்பாரி இயக்கத்தின் மீது மட்டுமல்ல, தொழிற்சங்கக் கோரிக்கைக்காக போராடிய இரயில்வே உட்பட பல பொதுத்துறைத் தொழிலாளர்களையும், அவரது இலஞ்ச ஊழல் அதிகார முறைகேடுகளுக்கு எதிராகப் போராடிய குஜராத், பீகார் மாணவர் இயக்கத்தையும் கொடூரமாக ஒடுக்கினார். தேர்தல் தில்லுமுல்லுகள் அம்பலமாகி பதவி பறிபோகும் நிலை உருவானதும் “தேசத்துக்கே ஆபத்து”, “சி.ஐ.ஏ.சதி”, “இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா” எனக் கூச்சலிட்டு அவசரநிலை பாசிச ஆட்சியைப் பிரகடனம் செய்தார். புரட்சியாளர்களை ம்ட்டுமல்ல, பிற்போக்குக் கட்சிகள் உட்பட போலிக் கம்யூனிஸ்டுகள் தவிர – எல்லா எதிர்த் தரப்பினரையும் கொடிய சிறையில் தள்ளினார். பலரை சித்திரவதைக்குள்ளாக்கிக் கொன்றார்.

இந்திராவின் முற்போக்கு முகத்திரை கிழிந்து பாசிச முகத்தை அடையாளம் கண்டு கொண்ட மக்கள், காங்கிரசு ஆட்சியை வீழ்த்தினர். நிலையான மாற்று தலைமையைத் தர முடியாத ஜனதாக் கட்சி கூட்டணி ஆட்சியும் சிறுது காலத்திலேயே நொறுங்கியது. மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திரா முற்போக்கு நாடகங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ஏற்றுமதி அடிப்படையிலான உற்பத்தி, இராணுவமயமான பொருளாதாரம், உழைக்கும் மக்கள் மீதான ஒடுக்குமுறை என்கிற கொள்கையைத் தீவிரமாக்கினார்.

பஞ்சாப், அசாம், காசுமீர் என்று அரசு பயங்கரவாத அடக்குமுறையை விரிவுபடுத்தி, தீராப் பகையை வளர்த்து தானே அதற்குப் பலியானார். இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள் என்னும் நோய்பிடித்த, பயங்கரவாத ஒடுக்குமுறை வெறிபிடித்த அரசு எந்திரத்தை வரித்துக்கொண்ட இந்திராவின் வாரிசு ராஜீவ், ஆயிரக்கணக்கான சீக்கியர்களைப் படுகொலை செய்து இரத்த வெள்ளத்தில் நீந்தி ஆட்சிக் கட்டில் ஏறினார்.

“எனக்கு இடது – வலது, முற்போக்கு – பிற்போக்கு சித்தாந்தம், கொள்கைகள் எதுவும் கிடையாது. எல்லாம் தாராளமயம், உலகமயம், நவீனமயமாக்கி இருபத்தோராம் நூற்றாண்டுக்கு நாட்டை அழைத்துச்செல்வதுதான் குறி” என்று பிரகடனம் செய்தார், ராஜீவ்

தாயைப் போலவே பாசிசப் பாதையில் நடைபோட்டு, ஈழத்தின்மீது ஆக்கிரமிப்புப் போர்த்தொடுத்து தானே உருவாக்கிய பகைமைக்குப் பலியானார். உள்நாட்டில் மட்டுமல்ல; இராணுவத்தை நவீனமயமாக்குவதாக சவடாலடித்துக் கொண்டே போபர்ஸ் பீரங்கி பேரம், ஜெர்மனி நீர்முழ்கிக் கப்பல் பேரம், பிரிட்டனின் எலிகாப்டர் பேரம் ஆகியவற்றில் கோடிகோடியாக இலஞ்ச – ஊழல் செய்து அம்பலப்பட்டுப் போனார்.

காங்கிரசுக்கு மாற்று என்று வந்த இரண்டாவது ஜனதாதள தேசிய முன்னணியும் சிறிது காலத்தில் வீழ்ந்தது. மீண்டும் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு, நரசிம்மராவின் தலைமையில் வரலாறு காணாத ஊழல் சேற்றில் மூழ்கிப் போனது. அதைவிட முக்கியமாக எதிலும் எங்கும் “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” நாட்டை ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளுக்கு மறுஅடகு வைத்தது. அதனால் நாடு எண்ணிலடங்காத கேடுகளுக்கு இலக்கானாது.

பன்னாட்டு, தேசங்கடந்த தொழில் கழகங்களுக்கும், ஏகாதிபத்திய நிறுவனங்களான உலகவங்கி, சர்வதேச நிறுவனத்திற்கும் நேரடி ஆளுகையின்கீழ் இந்திய அரசு அமைப்புகள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் ஆணைகளை ஏற்று மின் உற்பத்தி, தொலைபேசித் துறை உட்பட அத்தியாவசியப் பணித்துறை, சேவைத் துறைகள் கூட அந்நியருக்குத் தாரைவார்க்கப்பட்டன. நல்ல இலாபமீட்டும் அரசுத்துறைத் தொழிற்சாலைகள்கூட தனியார் மயமாக்கப்பட்டன. இதனால் கோடிகோடியாக இலஞ்சம் பெற்றதோடு மக்கள் நலனும், நாட்டு நலனும் பறிபோனது. ஆலைகள் மூடப்பட்டு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.

கல்வித்துறை, மருத்துவத்துறை தனியார்மயமாக்கப்பட்டு, அவற்றுக்கான மானியங்களை வெட்டி, அவை வியாபார கொள்ளைக்கான களங்களாகி விட்டன.

பண்ணை நிலப்பிரபுக்களோ, தமது விவசாயத்தை நவீனமயப்படுத்திக் கொள்ளும் அதேசமயம், சாதி – மத வகைப்பட்ட ஆதிக்கங்களைத் தொடரவும் விவசாயிகளை ஈவிரக்கமின்றிச் சுரண்டவும், பரந்துபட்ட மக்களைப் பட்டினிச் சாவில் தள்ளவும் வழிசெய்யப்பட்டது. உரம் உணவு மானியங்களை குறைத்து, நியாய விலைக் கடை விநியோகங்களையும் வெட்டி ஏழை விவசாயிகளின் வயிற்றலடித்தனர்.

ஏகாதிபத்திய ஐந்து நட்சத்திர கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. ஆபாச வானொலி, திரைப்படங்கள், பாலியல் சுற்றுலா விடுதிகள் என அரசே விபச்சாரத்தையும், களிவெறியாட்டத்தையும் உரமிட்டு வளர்க்கிறது. தேசிய இன உரிமை, மொழிபண்பாட்டு உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

நாடாளுமன்ற போலி ஜனநாயகமே அழுகி நாறுகிறது. இன்று கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறு. “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. சாதி – மத வெறியைத் தூண்டி அரசியல் ஆதாயத்துக்காக மக்களைப் பலியிடுவது அதிகரித்துவிட்டது. சிற்றூர் – பேரூர்களில் எல்லாம் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியல் கிரிமினல்மயமாகிவிட்டது.

அதேசமயம் அவர்களுள் யார், யார், எந்தப் பிரிவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஆதாயமடைவது என்பதில் நாய்ச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே, மக்கள் அணி திரள்வதற்கும், தங்கள் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கமொன்றுதான் உள்ளது. அதுமட்டுமே நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, அதற்குப் புறம்பாகவும் எதிராகவும், ஆக்கபூர்வமான அரசியல், பொருளாதாரத் தீர்வு காணவும் மக்களை வழிநடத்தும் துணிவும் தெளிவும் கொண்டது.

(நக்சல்பாரி எழுச்சிநாள் முப்பதாம் ஆண்டையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளால் 1997, மே மாதம் வெளியிடப்பட்ட வெளியீடு.)

இரண்டாம் பதிப்பு 2011 டிசம்பர் மாதம் கீழைக்காற்று வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டது.

கிடைக்குமிடம்
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு,
எல்லீசு சாலை, சென்னை 600 002
044-2841 2367

விலை : ரூ 12

வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

0

கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில்

2-venmani

“அய்யோ எரியுதே! யாராவது காப்பாத்துங்களேன்! அம்மா-அப்பா” என்ற அலறல்கள் செவிப்பறையைக் கிழிக்கின்றன. எரியும் குடிசைக்குள்ளிருந்து நீயாவது பொழைச்சுக்கோ என்று தன் குழந்தையை வெளியில் தூக்கிப் போடுகிறாள் அந்தத் தாய் எரிந்து கொண்டே. அதை மீண்டும் தூக்கி நெருப்பில் போடுகிறான் கோபாலகிருஷ்ணநாயுடு எனும் பண்ணையாரின் கூலிப்படைத் தலைவன் . “கூலியாடா வேண்டும்? செவப்புக் கொடியாத் தூக்குறீங்க? செத்துத் தொலைங்கடா!” என்கிறான். கீழ்வெண்மணியில் நடந்த இந்த படுகொலை 1968 டிசம்பர் 25 அன்று நடந்தது.

சூரியன் எழுவதற்கு முன் எழுந்து மறைந்த பின்னரும்கூட வேலை ஓயாது விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும். நிலமெல்லாம் பண்ணையாருக்குச் சொந்தம். ஓய்வெடுக்க நேரமில்லை. கூலி கேட்கத் துணிவில்லை, மீறிக் கேட்டால் சாணிப்பாலும், சவுக்கடியும்தான் மிஞ்சும். சவுக்கடியால் தெறித்த ரத்தம்பட்டுக் களிமண்ணும் செம்மண்ணாகும்.

இந்த அநியாயத்துக்கு எதிராக உழைக்கும் மக்களை அணிதிரட்டுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இருள் நிறைந்த தங்களின் வாழ்வை மீட்க வந்த கம்யூனிச இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள் மக்கள். தம் குருதி தோய்ந்த செங்கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். “உழுபவனுக்கே நிலம்; உழைப்பவனுக்கே அதிகாரம்” என்ற முழக்கம் பண்ணையார்களை நடுங்கச் செய்கிறது.

அரை லிட்டர் நெல்கூலி உயர்வு கேட்டு கீழ்வெண்மணியில் தொடங்கியது போராட்டம். வெளியூர்காரர்களை வைத்து அறுவடை செய்யலாம் என்ற ஆண்டைகளின் கனவில் மண்ணள்ளி போட்டார்கள் மக்கள். வெளியூர் ஆட்கள் வந்த வண்டிகளை மறித்து அவர்களைத் திருப்பி அனுப்பினார்கள். பண்ணையாரின் அடியாட்கள் மக்களைத் தாக்க, செங்கொடிகள் மக்களைக் காக்கின்றன. அடியாட்களை விரட்டுகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் செங்கொடிகள் ஆண்டைகளை அச்சுறுத்துகின்றன.

பண்ணையாளர்களின் சங்கமான நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவனான இரிஞ்சியூர் கோபாலகிருஷ்ணநாயுடு சிவப்புக் கொடியை இறக்கிவிட்டுத் தங்களின் மஞ்சள் கொடியை ஏற்றினால் கேட்ட கூலியைத் தருவதாகக் கூறி, இல்லையேல் கீழ்வெண்மணி எரிக்கப்படும் என்று மேடைகளிக் கொக்கரித்தான். போலீசும், அரசும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தன. இனியும் இந்த அரசை நம்பிப் பயனில்லை. கீழ்வெண்மணியை செங்கொடிகள் பாதுகாத்தன. அதுவரை அடி வாங்கிய உழைக்கும் மக்கள் திருப்பியடிக்க ஆரம்பித்தார்கள்.

டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.

விவசாயத் தொழிலாளர்கள் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டார்கள் – இது நெல் உற்பத்தியாளர்கள் சங்கம்.

இரு கிராம மக்களிடையே நடந்த சண்டை – இது தமிழக அரசு. ஒரு நிலக்கிழார் தானே எரித்துக் கொலை செய்திருக்க மாட்டார் – கோபாலகிருஷ்ண நாயுடுவை விடுதலை செய்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு.

“உயிரை விட்டாலும் செங்கொடியை விடேன்” என்று உரிமைகளுக்காகப் போராடிய கீழ்வெண்மணியின் மரபுதான் நம் மரபு. வர்க்கமும், சாதியும் பின்னிப் பிணைந்து இருக்கிற இந்த சமூகத்தில் உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடாமல் ஆதிக்க சாதிவெறிக்கு, பண்ணை கொடுமைக்குக் கல்லறை கட்டமுடியாது என்பதைக் கீழ்வெண்மணி நமக்குக் கற்றுத் தருகிறது.

1980 அதிகாலையில் ஒரு நாள்…

கீழ்வெண்மணியில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவுத்தூணுக்கு அருகே 48 துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது கோபாலகிருஷ்ண நாயுடுவின் உடல். இது கீழ்வெண்மணி மக்களின்-நக்சல்பாரிகளின் தீர்ப்பு.

வர்க்க-சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அரசு எந்திரமானது உழைக்கும் மக்களுக்கானது இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

பண்ணைக்கு உழைத்துக் கொடுத்த மக்களை நெருப்பிலிட்டுப் பொசுக்கிய, ஆதிக்க சாதிவெறி பிடித்த பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவைப் போன்றவர்கள் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும், ஆதிக்க சாதிக் கட்சிகளிலும், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற மதவெறி அமைப்புகளிலும் நிரம்பி வழிகிறார்கள். நம்மிடமோ கீழ்வெண்மணியின் நெருப்பு தகித்துக் கொண்டிருக்கிறது.

– மருது
புதிய மாணவன், டிசம்பர் 2015

venmani-poster

வேதாரண்யம் பகுதி வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்- தெருமுனைக் கூட்டம்

வேதாரண்யம் வட்டம் –ஆதனூர் கிராமத்தில் 25/12/2015 அன்று மாலை 7.00 மணியளவில் மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் கிருட்டிணமூர்த்தி அவர்கள் தலைமையில் வெண்மணித் தியாகிகள் நினைவு நாள்-தெருமுனைக் கூட்டம் பறை முழக்கத்துடன் தொடங்கியது.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் வீரையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் சரவணன், முகிலன் ஆகியோர் உரையாற்றினர்.

கூட்டத்தில் பேசியத் தோழர்கள் வெண்மணிச் சம்பவத்தை நினைவு கூர்ந்ததுடன் “வெண்மணிச் சம்பவம் முடிந்து போய்விடவில்லை. நாட்டில் நடக்கும் எல்லாவித ஒடுக்குமுறைகளும், சுரண்டல்களும் சாதிய ஒடுக்கு முறைகளும் வெண்மணியை நினைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றன” என்பதையும், “மக்கள் விரோதிகள் அனைவரும் கோபாலகிருட்டிண நாயுடுக்கள்தான்” என்பதையும் நடப்பு அரசியல் நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பேசினர்.

தோழர்கள் பேசும் போது, “இந்த அரசமைப்புத் தோற்றுவிட்டது இதற்கு மாற்று மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுப்பதுதான் தீர்வு” என்று விளக்கிப் பேசினர்

பு.மா.இ.மு.தோழர் வீரமணி நன்றியுரைக்குப் பின் கூட்டம் முடிவடைந்தது.

மக்கள் அதிகாரம் தோழர்கள்,பு.மா.இ.மு தோழர்கள், பகுதிப் பெண்கள்,ஆண்கள், இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

வெண்மணி நினைவு நாளையொட்டி அண்டர்காடு மற்றும் ஆதனூர் பகுதி உழைக்கும் மக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.ஆதனுர் பகுதி இளைஞர்களும் மாணவர்களும் இரண்டு நாட்களாக உற்காகத்துடன் செயல்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

venmani-poster

தகவல்
மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

காவிமயமாகும் சட்டம் – பாசிசமயமாகும் அரசு – மதுரை உரைகள்

0

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளை 12-ம் ஆண்டு விழா கருத்தரங்கம்

prpc-madurai-annual-day-conference-1மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை 12-ஆம் ஆண்டு தொடக்க விழா கருத்தரங்கம் 19.12.2015 மாலை 5 மணிக்கு மதுரை மடிசியா அரங்கத்தில் மாவட்ட செயலாளர் லயனல் அந்தோனிராஜ் தலைமையில் நடைபெற்றது. கிளைப் பொருளாளர் சங்கையா அனைவரையும் வரவேற்றார்.

“காவிமயமாகும் நீதித்துறை! பாசிசமயமாகும் அரசு! தீர்வின் திசை என்ன?” என்பது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்

இந்தக் கூட்டம் கம்யூனிஸ்ட்களுக்கோ, புரட்சியாளர்களுக்கோ இல்லை. இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை எல்லாம் இருக்கிறது, இது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடு என்று நம்புகிறவர்களுக்குத்தான் இந்தக்கூட்டம்.

இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 51 அறிவியல் பூர்வமான விஷயங்களை சமூகத்திலே முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகன் உச்சநீதிமன்றத்திலே ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார். 17 இலட்சம் வருடத்திற்கு முன்பாக இங்கே இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டப்பட்டது. இது இராமன் பாலம். இந்தப் பாலம் தொடர்பான செய்தி வால்மீகி இராமாயணத்திலும், துளசிதாசர் இராமாயணத்திலும் இருக்கிறது. அந்த இராமன் பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டு வரப்போகிறார்கள். அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திலே வழக்குத் தாக்கல் செய்கிறார். உடனடியாக உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதிக்கிறது.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்

ஒரே அரசியல் சட்டம்தான். இந்துக்களுக்கு தனி, முஸ்லீம்களுக்குத் தனி, கிறிஸ்துவர்களுக்குத் தனி, சீக்கியர்களுக்குத் தனி என்று கிடையாது. ஆனால் வெவ்வேறு வகையான தீர்ப்புகள் இருக்கிறது. சல்மான் கான் வழக்கில் நீதிமன்றத்திலே சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. உயர்நீதிமன்றம் அதே சாட்சியத்தின் அடிப்படையில் விடுதலை செய்கிறது. ஜெயலலிதாவை நீதிபதி குன்ஹா அவர் முன் வந்த சாட்சியத்தின் அடிப்படையில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கிறார். நீதிபதி குமாரசுவாமி அதே சாட்சியத்தின் அடிப்படையில் அவரை விடுவிக்கிறார். ஒரே சட்டம்தான்.

ஏராளமான இஸ்லாமியர்கள். கிறிஸ்துவர்கள் இந்து மத வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பார்ப்பன, வைதீக, இந்து மதவெறி ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சார்ந்த எந்த ஒரு நபரும் இன்றுவரை தூக்கு மேடை ஏறியதில்லை, இதன் எதிரொலியாகக் குண்டு வைத்த இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கூட தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். அஜ்மல் கசாப்பிலிருந்து, யாகூப் மேமன் வரை. ஒரே சட்டம்தான். குண்டு யார் வைத்தாலும் வெடிக்கும். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களும் வைக்கிறார்கள், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வைக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றத் தீர்ப்பு மூலம் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாகவும், இந்துக்கள் பிரதமராகவும், உயர்பதவிகளிலும் அலங்கரிக்கிறார்கள். ஒரே அரசியல் சட்டத்திலே இரண்டு விதமான தீர்வுகள் சொல்லப்படுகின்றன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. 1969-ல் தந்தை பெரியார் கருவறைத் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை அறிவிக்கிறார். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது. இந்துக் கோயில்களில் அது வரை இருந்த பரம்பரை வழி அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்படுகிறது. இதற்கு எதிராகப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்கள்.அந்த வழக்கில் ஆகம முறைப்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது நீதிமன்றம். இருப்பினும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அரசு கொண்டுவந்திருந்த சட்டத்திருத்தத்தையும் தடைசெய்யவில்லை இதைத்தான் பெரியார், ”ஆபரேசன் வெற்றி ஆனால் நோயாளி மரணம்” என்று குறிப்பிட்டார்.

prpc-madurai-annual-day-conference-3இப்போதைய தீர்ப்பின் மூலமும் கருவறைத் தீண்டாமை சட்டப்படி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகமம் என்பது என்ன? கோவில்கள் எப்படி அமைந்திருக்க வேண்டும், கருவறை எப்படி அமைந்திருக்க வேண்டும், கடவுளுக்கு எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்பன பற்றித்தான் ஆகமத்தில் கூறப்பட்டிருக்கிறதே ஒழிய குறிப்பிட்ட சாதியினர்தான் அர்ச்சகராக வேண்டும் என்று எந்த ஆகமத்திலும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் காலங்காலமாக இந்தக் கோயில்களில் அர்ச்சகராக இருக்கிறோம் என்ற காரணத்தை மட்டுமே சொல்லி அவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இது மட்டுமா காலம்காலமாக இருந்தது? தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமணத்திற்குத் தடை ஒழிக்கப்பட்டது. இப்பொழுது கூட கர்நாடகாவில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருண்டால் புண்ணியம் கிடைக்கும் என்ற வழக்கத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திலே நாடார் ஜாதிப் பெண்கள் மார்பகத்தை மறைத்து சேலை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டது., ”அவர்கள் மார்பில் சேலைஅணிவது எங்கள் மத உணர்வைப் புண்படுத்துகிறது” என்று பார்ப்பனர்கள் அவர்களின் மார்பகத்தை அறுத்து எறிந்தனர்.

இவற்றையெல்லாம் பழக்க வழக்கங்கள் என்று இன்று ஏற்றுக் கொள்ள முடியுமா? அயோத்தி இராமன் வழக்கையே எடுத்துக் கொள்வோம். இராமன் அங்குதான் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்கிறார்கள் பார்ப்பனர்கள். 17 இலட்சம் வருடத்திற்கு முன் இராமன் பிறந்தான், புஷ்பக விமானம் இருந்தது, இராமேசுவரத்திற்கும் இலங்கைக்கும் இடையில் அணிலையும், குரங்கையும் வைத்து பாலம் கட்டினான் என்று புளுகுகிறார்கள் பார்ப்பனர்கள்.

அனைத்தையும் நம்பிக்கை என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியுமா? அனைத்து மதத்தினருக்கும் நம்பிக்கை என்பது தனிப்பட்ட முறையில் உண்டு. ஆனால் அவற்றைப் பொதுவான கருத்தாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் வரலாற்று ரீதியிலான மற்றும் அறிவியல் ரீதியிலான சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். நம் நாட்டின் அரசியல் சட்டம் எப்படி இருக்கிறது? நீதிபதிகள் எப்படிப்பட்டவர்கள்? இரண்டுமே காவிமயமாக்கத்தான் இருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் மதச்சார்பற்ற என்ற வார்த்தை எங்கும் கிடையாது. 1976-ம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதில்தான் மதச்சார்பற்ற என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டது. 1948-ல் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் என்று ஒரு மசோதா கொண்டுவரப்பட்டு அது தோற்கடிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம், சரத்து 25,26,27 ஆகியவைதான் இப்போது பிரச்சினையாக உள்ளன. அவை மத நிறுவனங்களின் உரிமையைக் கூறுகின்றன. அதே அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 16 அனைவரும் சமம் என்று கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் பசுவதை தடை செய்யப்பட்டால் இந்தியாவில் எங்கும் நம்மால் மாட்டுக்கறியை உண்ண முடியாது.

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் கூறுகிறார் ”எனக்கு மட்டும் சர்வ அதிகாரமும் இருந்தால் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிப்பேன்” என்று. இந்திய அரசியல் சட்டத்தின் மீது ஆணையெடுத்துக் கொண்டு பதவியேற்ற ஒரு நீதிபதி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பேசக் கூடாது. எனினும் அவரது பேச்சு நமக்கு உணர்த்துவது எது? நீதித்துறை காவிமயமானதைத்தான், குஜராத்தில் ஒரு நீதிபதி ஒரு வழக்கிலே கூறியிருக்கிறார், ”நமது நாட்டை 2 விசயங்கள் தான் கெடுக்கிறது, ஒன்று ஊழல். மற்றொன்று இட ஒதுக்கீடு” என்று. இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச்சட்டப்படி ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அதை மறுத்து ஒரு நீதிபதி பேசலாமா? ஒரு வழக்கில் ஒரு நீதிபதி அடுத்த ஆண்டு முதல் டிசம்பர் 6 அன்று போராட்டம் நடத்துவதற்கு எந்த அமைப்பினருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று தீர்ப்புக் கூறுகிறார். அந்த நீதிபதி ஒரு பார்ப்பனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த உடனே கொண்டு வரப்பட்ட முதல் சட்டம் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம். அனைத்துத் துறைகளிலும் நாம் காலூன்றிவிட்டோம். மீதமுள்ள ஒரே துறை நீதித்துறை. அதிலும் நமது ஆட்களைக் கொண்டுவந்துவிட்டால் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துக்களின் இராஜ்ஜியமே இந்தியா முழுவதும் இருக்கும் என்று முடிவுகட்டுகின்றது பி.ஜே.பி. அரசு. இந்தியாவில் உள்ள 940 நீதிபதிகளில் 20 பேர்தான் தாழ்த்தப்பட்டவர்கள், அனைத்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் சேர்த்துக் கூட்டிப்பார்த்தால் 100 பேர் தான் இருப்பார்கள். மீதி அனைவரும் பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதியினர்தான். இதுதான் இந்திய சமூகத்தில் நீதித்துறையின் இலட்சணம்.

“சகிப்புத்தன்மை – பன்முகத்தன்மை ஆர்.எஸ்.எஸ்.-ன் கொள்கையா?” என்பது பற்றி பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்

பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்
பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்

சென்ற வாஜ்பாய் அரசு, பி.ஜே.பி யின் அரசு. இப்போ இருக்கும் அரசு ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசு. அடுத்த இலக்கு இந்துத்துவா அரசு. இப்போது இருக்கிற அரசு பாசிச அரசு அல்ல. பாசிசமாக இருந்தால் மைக்செட் போட முடியாது; கூட்டம் நடத்த முடியாது. ஆனால் அரசை பாசிஸ்டுகள் கைப்பற்றிக் கொண்டார்கள். அப்போ பாசிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்? ஹிட்லர் 1931-ல் வரலாறுகளைத் திரித்து இதுதான் வரலாறு என்றான். இப்போது இவர்களும் அதேதான் செய்கிறார்கள். நீங்கெல்லாம் ஒரு விளம்பரம் பாத்திருப்பிங்க. அதுல புளு கலர் லைட் விட்டு விட்டு எரியும். அப்போது கொக்….. கொக் கோலா, கொக் கொக் கோலா னு சவுண்ட் வரும். அது மாதிரி பலலாயிரம் கோடி செலவு பண்ணி மம்…..மம் மோதி… மம்…மம் மோதி அப்படினு விளம்பரம் பண்ணி ஆட்சிக்கு வந்தாரு மோடி.

பிளாஸ்டிக் சர்ஜெரியை நாங்க முன்னாடியே கண்டுபிடிச்சுட்டோம். 17 லட்ச வருசத்துக்கு முன்னாடியே விமானத்தக் கண்டுபிடிச்சுட்டோம், கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணை. அதே மாதிரி பேசுனது பிரதமர் ஆச்சே. அது என்னய்யா பிளாஸ்டிக் சர்ஜெரினு கேட்டா யானை தலையை வெட்டி மனுசத் தலையில வைச்சா பிள்ளையார். அதான் பிளாஸ்டிக் சர்ஜெரி அப்படினு விளக்கி சொல்றாரு. சும்மாவா மம்….மம் மோதியாச்சே. இத யாரு மத்தியில பேசுறாரு? ஆயிரக்கணக்கான அறிஞர்கள் விஞ்ஞானிகள் கூடியிருக்கிற அரங்கத்துல. வெட்டி உறுப்பு மாத்துறது பிளாஸ்டிக் சர்ஜெரி இல்ல டிரான்ஸ்பிளான்டேஷனானு கேக்காதீங்க கொன்னுடுவார். அடுத்து விமானத்தை நாங்கதான் கணடுபிடிச்சோம். என்னடானு கேட்டா. பதினேழு லட்சம் வருசத்துக்கு முன்னாடி அயோத்தியில இருந்து கிளம்பி ராமேஸ்வரத்துக்கு புஷ்பக விமானத்துல பறந்து வந்து இறங்குனாங்க இராமனும், சீதையும். விமானத்துக்கு பைலட் யாருடா,? டீசல்ல ஓடுச்சா, பெட்ரோல்ல ஓடுச்சா, தண்ணில ஓடுச்சா? அதெல்லாம் கேட்டா கொன்னுடுவோம். ஏன்னா இதெல்லாம் எங்க நம்பிக்கை. வேட்டையாடிக்கிட்டிருந்த மனுஷன் நாகரிகமா மாறி முதல்ல கண்டுபிடிச்சது சக்கரம். அப்புறம் வண்டி. வண்டியும் சக்கரமும் மட்டும் இருந்தா போகுமா? அதுக்குத்தான் மாட்டையோ, குதிரையோ பூட்டி ஓட்டுனாத்தான் வண்டி போகும்னு கண்டுபிடிச்சான். 17-ம் நூற்றாண்டிலேதான் மெசின் கண்டுபிடிச்சான், ரைட் பிரதர்ஸ் தான் பல ஆண்டு ஆய்வு நடத்தி விமானத்தக் கண்டுபிடிச்சாங்க. அது முதல்ல 12 செகண்டுதான் வானத்தில் பறந்ததது. அப்புறந்தான் அது ஆகாய விமானமா பறந்தது. இதுதான் நம் 2000 ஆண்டு சரித்திரம்.

prpc-madurai-annual-day-conference-2நம்ப முடியாத கதைகளாகத்தான் இராமன், லட்சுமணன், பரதன் ஆகியோரின் பிறப்பு இருக்கிறது. இப்படி கதைகளை வச்சுக்கிட்டு உச்சநீதிமன்ற நீதிபதி, சுஷ்மா சிவராஜ் பகவத் கீதையை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். பகவத் கீதை என்ன சொல்லுது? அது ஒரு 18 அத்தியாயம் கொண்ட தொகுப்பு.

ரௌடி, பொறுக்கி, மொள்ளமாரி, அவங்களுக்கெல்லாம் வழிகாட்டி மாதிரி.முதல் அத்தியாயம் போரில் கொலை செய்யப்பட்டவர்கள் உடலைத்தான் அழிக்கிறாய் உயிரை அழிக்க முடியாது என்று கூறுகிறது. அதற்கு பெரியார் மனுசனுக்குத்தான் உயிர் இருக்கிறதா? இல்லை புழு, பூச்சி, ஆடு, மாடுகளுக்கெல்லாம் உயிர் இருக்கிறதா என்று வினா எழுப்பினார். அதற்கு இன்னமும் பதில் வரவில்லை. மூன்றாவது அத்தியாயத்தில் நான்கு வர்ணங்களையும் படைத்தவன் நானே என்று கூறுகிறார், 18-வது அத்தியாயம் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்று கூறுகிறது. அதைத்தான் மோதி சொல்கிறார். காண்ட்ராக்ட் தொழிலாளர்களை வேலையைச் செய் கூலியை எதிர்பார்க்காதே என்று கூறுகிறார் மோதி. சத்ரியனக் கூட செத்துப்போகச் சொல்கிறது கீதை. ஆனா பிராமணர்களைப் போரில் தொடவே கூடாது என்கிறது. இதைத்தான் மோதியும் சொல்கிறார். இன்னமும் நாட்டில் பலபேருக்கு சோறு இல்ல, வீடு இல்ல, மருத்துவ வசதி இல்ல. மழை பேஞ்சா அடிச்சுக்கிட்டு போகுது. இதெல்லாம் ஏன்னு கேட்டா இதெல்லாம் முன் ஜென்மத்தில் பண்ண பாவம் என்று (கர்ண பகவான் சொன்னதாக) சொல்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்க்கர் 1931-ல் இந்துக்கள் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராடி உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்துப் போராட அணி சேருங்கள் என்று சொன்னார். இவ்வாறு வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து கொண்டு தேசதுரோகம் செய்ததுதான் ஆர்.எஸ்.எஸ்.-ன் வரலாறு. பிரிட்டிஸ்காரர்களிடம் காட்டிக்கொடுத்த இந்த ஏவல் நாய்கள்தான் ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த சித்பவன் பிராமணர்கள்.

இப்ப மோடி உருவாக்கியிருப்பது (மேக் இன் இண்டியா) வாங்க வாங்க வாங்க…. அமெரிக்கர்களிடம் போய் வாங்க வாங்க. என்னடானா வளர்ச்சியாம். கால் கீழ ஒரு கட்டி, வயத்துல ஒரு கட்டி, இது எப்படி வளர்ச்சியாகும்? இது வீக்கம், கேன்சர் (Cancer) அம்பானி வளர்ந்துட்டான் நாடு வளர்ந்துடுச்சு, அதானி வளர்ந்துட்டான் நாடு வளர்ந்துடுச்சு, சாதாரண மக்களுக்கென்ன வளர்ச்சி? மிகப்பெரிய சர்வாதிகாரி முசோலினி என்ன சொன்னார். அரசும் மூலதனமும் இணையும் போதுதான் பாசிசம் உருவாகும் என்று முசோலினி சொல்கிறார். நம் நாட்டில் அரசும், மூலதனமும் அதாவது அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா, மோடி, ஜெட்லி எல்லாம் சேர்ந்தது தான் பாசிச அரசு. அடுத்த நிகழ்வு இந்துத்துவா அரசு.

சகிப்புத்தன்மையை மீறி ஆர்.எஸ்.எஸ் மிரட்டி வருகிறது.

இதனடிப்படையில் தபோல்க்கர கொன்னுட்டான். தபோல்க்கர் என்ன சொன்னாரு? பெண் தெய்வங்களான சரஸ்வதி, லட்சுமி, சக்தி, இவங்கெல்லாம் உடை அலங்காரம், வைரத்தோடு, மூக்குத்தி, காசு மாலை, பட்டுச் சேலை, இப்படி எல்லாம் அணிஞ்ச மாதிரி காட்டுறதெல்லாம் பொய். பழைய கோவில்கள்ள உள்ள சிலைகளெல்லாம் உடை அலங்காரம் இல்லாமதான் உள்ளது. திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்த ரவி வர்மன் என்ற ஒவியன்தான் இந்த சிலைகளுக்கு உடை அலங்காரம் வரைந்தான் இந்த விஷயத்ததான் தபோல்கர் ஆதாரத்தோட சொன்னார். தபோல்க்கர கொன்னுட்டாங்க. அடுத்து பன்சாரே. அவரொரு கம்யூனிஸ்டு. 1681-ல் சிவாஜி இறந்துட்டாரு. அவர் உயிரோடு இருக்கும் போதுதான் வெள்ளைக்காரர்கள் நாட்ட பிடிச்சுட்டாங்க. இப்ப சிவாஜியும் வெள்ளைக்காராங்களோட கைக்கூலிதான் என்று ஆதாரத்தோட சொன்னாங்க. இந்த விஷயத்ததான் புத்தகமாக எழுதினார் பன்சாரே. பன்சாரேவ கொன்னுட்டாங்க. அடுத்து கல்புர்கி. அவர் நாத்திகர் அல்ல. அவரு சாதி தீண்டாமையை எதிர்க்கிற லிங்காயத்வாதி. லிங்காயதம் என்பது இந்து மதத்தின் ஒரு அங்கமல்ல. வீர சைவம் என்பது இந்து மதத்தின் ஒரு அங்கமல்ல. அப்படினு புத்தகம் எழுதினாரு.அவரையும் கொன்னுட்டாங்க. இப்ப விஷயம் என்ன? மூன்று பேரையும் கொன்னது ஒரே துப்பாக்கி ரவை. இந்தக் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாயப்படுத்தும் புத்தகம்தான் பகவத்கீதை.

இப்ப பெருமாள் முருகனை எழுத முடியாமல் செய்தது யார்? இந்த நாட்டுல புஷ்பக விமானம் இருந்ததற்கு ஆதாரம் இல்லைனு சொன்னா பன்சாரேவுக்கு நடந்ததுதான் உனக்கும். அப்ப இந்த சகிப்புத்தன்னையின்மையை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? போலீஸ் ஸ்டேசன்ல போய் புகார் கொடுத்தா நீதிமன்றத்துல நீதி கிடைக்குமா? மூன்று பேரும் கொலை செய்யப்பட்டு இன்னும் எப்.ஐ.ஆர்., எப்.ஐ.ஆராகவே இருக்கிறது. இன்னும் கொலை செய்தவனக்கூட கண்டுபிடிக்கவில்லை. எப்படி எதிர்கொள்வது?

பன்சாரேவைக் கொலை செய்தார்கள் கண்டனக் கூட்டம் நடத்தினோம். கல்புர்க்கியைக் கொலை செய்தார்கள் நாம் கண்டன கூட்டம் நடத்தினோம். இப்ப பிரச்சனை என்னான்னா அடுத்து கண்டனக் கூட்டம் நம்ம நடத்தப் போறோமா இல்லை அவங்க நடத்தப் போறாங்களா? வீதியில் இறங்கிப் போராட நம்மளத் தள்ளுறாங்க. 3000 ஆண்டுகளாக நம்மைக் கொன்று குவித்தவர்கள் இன்னும் நம்மைக் கொல்கிறார்கள், நீயும் நானும் இந்துன்னு சொல்றே. நீயும் நானும் இந்துன்னா அப்ப சாக்கடையை வந்து அள்ளு. நான் உன்னோட மணி ஆட்டுற வேலையைப் பாத்துக்கிறேன், சாக்கடைய அள்ளுறேன்னு ஐஸ்வர்யா ராயக் கூட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறதல்ல. சாக்கடையில் இறங்கனும். இறங்கி அள்ளனும். ஐஸ்வர்யா வந்து அள்ளுவியா, க்ளீன் இந்தியா அம்பாஸிடர் கமலஹாசன் வந்து அள்ளுவிய? இந்த 3000 ஆண்டு காலமாக நாங்க செய்ற அதே வேலையை செஞ்சுகிட்டு இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை உயரவில்லை. இதெல்லாம் மாற வேண்டுமென்றால் அடுத்த கண்டனக் கூட்டம் அவர்கள் நடத்த வேண்டும்

மதுரைக் கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் நன்றி சொல்லி கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், இசுலாமியர்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரை

சென்னை மழை வெள்ளம் : ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆக்கிரமிப்புகள் !

3

’சென்னை மழைவெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குடியிருப்பும் காரணமா?’ என்ற தினகரன் செய்தியை பார்த்துவிட்டு அப்படி எந்த இடத்தில் ஆக்கிரமித்துள்ளனர் என தேடி புறப்பட்டோம். நெற்குன்றம், விருகம்பாக்கம் பகுதியில் சுற்றி அலைந்ததில் ஒரு இடத்தில் மிகப்பெரிய கட்டிடங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு சென்று விசாரித்ததில் அதுதான் நாம் தேடிச்சென்ற இடமென தெரிந்துவிட்டது. விருகம்பாக்கம் ஏரிக்கு – அதாவது பெரியார் நகர், முத்தமிழ் நகர் போன்ற நகர்களுக்கு – எதிரில் உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில்தான் அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன.

சுias-encroachment-1மார் 1000 கட்டிடங்களுக்கும் மேலாக, 20 மாடி கட்டிடங்கள் ஒரு வரிசையிலும், 12 மாடி கட்டிடங்கள் மற்றொரு வரிசையிலுமாக பிரமாண்டமான கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து கொண்டிருந்தன. அண்ணாந்து பார்த்தது கழுத்து வலித்ததால், கீழே குனிந்து பார்த்தால் நேற்றிரவு பெருமழை பெய்திருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பும்படி மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துக்கொண்டிருந்தது. ஊடகங்களில் செய்தி வெளியாகி விட்டதால், பிற ஊடகங்கள் வரிசையாக படையெடுக்கும் என்ற அச்சத்தில் அவசர, அவசரமாக நீரை மோட்டார் வைத்து வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

புதிதாக கொட்டப்பட்டிருந்த குளோரின் பவுடரைத் தாண்டி கொசுக்களின் உற்பத்தி மையங்கள் ஒவ்வொரு வாசலிலும் கிளை திறந்திருந்தன. வீடுகளுக்குள் புகுந்திருந்த பகுதிகளை சூழ்ந்த வெள்ளத்தை வெளியேற்றுகின்றனர் என விசாரித்தோம்.

ias-encroachment-2“நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ இங்க இருக்கிற காவாயில குளிச்சிருக்கேன்” என ஒருவர் மண்தரையைக் காட்டி சொன்னார். அதனுடைய முனையில் கால்வாயின் மிச்ச சொச்சங்களாக சிமெண்ட் காரை கொஞ்சம் தென்பட்டது. “20 அடி அகலம் பத்தடி ஆழமிருக்கும்” என சொல்லி காணாமல் போன கால்வாயைப்பற்றி அடுத்த அதிர்ச்சியை கிளப்பினார்.

அந்தப் பகுதிக்கு எதிர்ப்புறமிருந்த பெரியார் நகர், முத்தமிழ் நகர் போன்ற பகுதிகள் விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவையாம், எழுபது வயது முதியவர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த விருகம்பாக்கம் ஏரியின் உபரி நீரை கூவம் நதிக்கு கொண்டு செல்வதற்காகத்தான் அந்த கால்வாய் பயன்பட்டதாக தெரிவித்தார். அதன் இருகரையோரமும் முப்போகம் விளைவித்ததாகவும், அதன் பின்னர் செங்கல் சூளை வேலை நடந்து வந்ததாகவும் அந்த காலம் – இரண்டு தலைமுறைகளாக தாங்கள் இங்கயே வசித்து வருவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

ias-encroachment-5“எங்கப்பா சின்னபுள்ளையா இருக்கிறப்போ இங்க விவசாயம் நடந்துனு இருந்துச்சு, அப்போ வேலை செய்யறதுக்காக இங்க வந்து குடிசை போட்டு வாழ்ந்து வர்ரோம். இதோ, இன்னிக்கு என் புள்ளை பெரியவன் ஆயிட்டான், இத்தன வருசத்துல இங்க பெய்யிற மழைக்கு வீட்டுக்குள்ள தண்ணி வந்ததில்ல, ஆனா இந்த பில்டிங் கட்டறதுக்காக இந்த காவாய தூத்துட்டாங்க, அப்புறம் சின்ன சின்ன மழைக்கு கூட வூட்டுக்குள்ள தண்ணி பூந்துரும்” 45 வயதுள்ள அம்மா ஒருவர் தெரிவித்தார்.

கால்வாயாகவும், விளைநிலமாகவும் இருந்த நிலத்தை கடந்த நான்காண்டுகளுக்கு முன்பாக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கான மலிவுவிலை வீடு கட்டிக்கொடுக்க ஆக்கிரமித்துள்ளது அரசு. இரண்டாண்டுகளுக்கு முன்னர் குடியிருப்புகள் கட்டத் தடையாக இருந்த 20 அடி அகல கால்வாய் முழுவதுமாக மண் கொட்டப்பட்டு தூர்க்கப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 600 ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், 120 குரூப் 1 அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள 200 அரசு அதிகாரிகளுக்கு இந்த குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படவுள்ளன.

ias-encroachment-9“இவ்வளவு பெரிய காவாய தூர்த்தாங்களே, நீங்க எதுவும் செய்யலையா?” என நாம் கேட்டபோது, “கால்வாய மட்டுமா தூர்த்தாங்க, நாங்க குடிசையில் இருந்தாலும் காசு போட்டு எங்களுக்குனு கக்கூஸ் பாத்ரூம் கட்டியிருந்தோம். அந்த இடத்தயும் பில்டிங்குக்கு ரோடு போடனுமுனு சொல்லி ஏரியா கவுன்சிலர் மோகன வச்சி இடிச்சித்தள்ளிட்டானுங்க. அதுக்கு எதிரா அப்பவே போராட்டம் பண்ணுனோம். அப்பதான் 200 போலிச வச்சி போராட வுடாம பண்ணுனாங்க. அவ்ளோ போலிச எப்படி தடுக்கிறது?” என பரிதாபமாக கேட்கிறார் ஒரு தாய்.

இப்படி கால்வாயை தூர்த்துவிட்டதால் சமீபத்தில் பெய்த கனமழையில் மொத்த குடிசைகளும் மூழ்கிப் போயுள்ளன. “நடுராத்திரி, திடீர்னு ஒரு குடிசை வீட்டுல தீப்புடிச்சிடிச்சு. கரண்ட் பாக்ஸ் வெடிச்சு தீப்புடிச்சதால நாங்க எல்லாரும் பயந்துட்டோம். ஏற்கனவே மழை தண்ணி வூட்டுக்குள்ள பூந்ததனால எல்லாரும் வீட்டை பூட்டிட்டு மேட்டுக்கு ஓடிட்டோம். நைட்டெல்லாம் ஒரு சத்திரத்துல தங்கிட்டு காலையில வந்து பார்த்தா மொத்த வீடுகளும் மூழ்கிடுச்சு. அப்புறம் இவ்வளவு நாள் கழிச்சி நாலு நாள் முன்னாடிதான் இங்க வந்தோம். வந்து பார்த்தா இன்னமும் தண்ணி வடியல” வெள்ளம் வந்த நாளை வேதனையுடன் நினைவு கூறுகின்றனர். மற்ற பகுதிகளை போலவே, இங்கும் பொதுமக்களும், தன்னார்வலர்களுமே வந்து உதவிகள் செய்ததாக தெரிவிக்கின்றனர். ஏரியா கவுன்சிலர் உட்பட யாரும் வந்து பார்க்கவில்லை. துணைமேயர் சாலையோடு வந்து அப்படியே சென்று விட்டார்.

ias-encroachment-6பெண்கள வீட்டு வேலைக்கும், ஆண்கள்  கொத்தனார் வேலைகளுக்கும் சென்று சேர்த்து வைத்திருந்த கொஞ்ச நஞ்ச சொத்துகளும் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. திரும்ப வாழ்வை துவக்க வழியே இல்லாத சூழலில் இருக்கின்ற இடத்தை விட்டும் அவர்களை துரத்தியடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது அதிகார வர்க்கம்.

ஏரி, கால்வாய்களை ஆக்கிரமித்தவர்களை விட்டுவிட்டு கால்வாய் ஓரமாக குடிசை போட்டுள்ள – அதுவும் 25 ஆண்டுகளாக குடிசையிலிருக்கும் இந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என சொல்லுகிறது அதிகார வர்க்கம். தேங்கியுள்ள மழைநீருக்கு காரணம் கால்வாயை ஆக்கிரமித்ததுதான் என போராடியதற்காக, இப்போது நீர்பிடிப்பு பகுதிகளை இந்த மக்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் அதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேறிட வேண்டுமெனவும் மிரட்டுகின்றனர் அதிகாரிகள். “நாங்களாவது கால்வாய் ஓரமாத்தான் வீடு கட்டியிருக்கிறோம். அதுக்கே எங்கள துரத்துறீங்களே, இந்த பில்டிங் எல்லாம் கால்வாய் மேலேத்தான் கட்டியிருக்காங்க, இத ஏன் கேக்க மாட்டேன்கிறீங்க? எங்களுக்கு ஒரு நீதி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு நீதியா?” என குமுறுகின்றனர் பகுதிவாழ் மக்கள்.

ias-encroachment-3“இவ்ளோ செலவு செஞ்சி அதிகாரிகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கிற கவர்மெண்ட் எங்க குடிசையை மாத்தி இங்க ஒரு வீடு கட்டிக் கொடுக்க கூடாதா? எங்கள தூக்கி எங்கயோ செம்மஞ்சேரிக்கும், கண்ணகி நகருக்கும் போனு சொல்றாங்க, ஏன் இந்த அதிகாரிங்கள அங்க போக சொல்ல வேண்டியதுதானே? முடியாதில்ல, எங்கள மட்டும் ஏன் போக சொல்றீங்க? என்ன ஆனாலும் சரி இந்த இடத்த விட்டு நாங்க போகமாட்டோம்” என உறுதி காட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.

மாஃபியாக் கொள்ளைக் கும்பல்களை போன்று சட்டவிரோதமாக கால்வாயை ஆக்கிரமித்ததோடு அல்லாமல், அதை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும், அதனால் பாதிக்கப்பட்டவர்களையும் அடியாளை வைத்து – போலிசை வைத்து – விரட்டியடிக்கின்றனர் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள். 20 குடும்பங்கள் வசிக்க வேண்டிய இடத்தில் சுமார் 50 குடும்பங்கள் நெருக்கமாக குடிசைகள் அமைத்து காலம் காலமாக வசித்து வரும் இவர்கள் ஆக்கிரமிப்பாளர்களா? இல்லை கால்வாய், விவசாய நிலமென 17 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து வெள்ளத்திற்கு காரணமான ஐ.ஏ.எஸ் அதிகாரகள் ஆக்கிரமிப்பாளர்களா?

போராடும் மக்களை தங்கள் நலனுக்காக அடித்து விரட்டும் இந்த அதிகாரிகள்தான் மக்களுக்கு நிவாரணப் பணிகளை செய்யப் போகின்றவர்களாம்(!) ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிக்கொண்டுள்ள இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் வெள்ளப் பாதிப்புக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை அகற்றப்போகிறவர்களாம்(!). அப்படியெனில், மக்களுக்காக பணிபுரியும் தகுதியை இழந்துவிட்ட, மக்களுக்கு எதிரியாக மாறிப்போயுள்ள, இந்த அதிகார வர்க்க ‘ஆக்கிரமிப்பாளர்களை’ யார் அகற்றுவது?

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

நைஜிரியாவோடு போட்டி போடும் மோடி லாட்டரி

2

modi lottery (4)”வாழ்த்துக்கள், முகநூல் அதிர்ஷ்ட குலுக்கலின் மூலம் நீங்கள் 4,000,000 பிரிட்டன் பவுண்டுகளை வென்றுள்ளீர்கள்” என்றது அந்த மின்னஞ்சல். அந்த தொகையைப் பெற என்னுடைய வங்கி கணக்கு விவரங்களையும், செயலாக்க கட்டணமாக 150 பிரிட்டன் பவுண்டுகளையும் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சில்லரை வேலை மட்டும் பாக்கி. அதைச் செய்ய முடியும் என்று தான் நினைக்கிறேன்.

இணைய லாட்டரிகளை நான் எப்போதும் விரும்புவேன். ஏனென்றால் நீங்கள் அதில் எப்போதும் கெலித்துக் கொண்டே இருக்கலாம். எனது மின்னஞ்சல் நிரம்பி வழிந்து, மாதா மாதம் அதிக சேமிப்பிடத்திற்காக கூகிள் நிறுவனத்திற்கு 2 டாலர் கொடுக்குமளவிற்கு நான் இணைய லாட்டரிகளில் ஜெயித்துக் கொண்டே இருக்கிறேன் என்றால் பாருங்களேன்.

இப்படி நான் லாட்டரியில் ஜெயித்துக் கொண்டேயிருப்பதால் எனது மொத்த சொத்து மதிப்பு இப்போது 82.3 ட்ரில்லியன் டாலர். என்னிடம் உள்ள விவரங்கள் சரியென்றால், இது ஒட்டுமொத்த உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கொஞ்சம் அதிகமானது. பல கோடீஸ்வரர்களையும், பில் கேட்ஸ் மற்றும் வாரன் ப்ஃபெட் போன்றவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களை விட நான் பணக்காரனாக செய்ய வேண்டியதெல்லாம் எனது வங்கிக் கணக்கையும், செயலாக்க கட்டணத்தையும் ஆம்ஸ்டர்டாம், லாகோஸ், லிச்ரென்ஸ்டீன், பெனின் அல்லது வேறு அழகான நகரங்களில் இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு கொடுத்தால் போதும்.

modi lottery (2)சரி விடுங்க.. நான் இன்னும் அந்த பரிசுத் தொகைகளை எல்லாம் வாங்கவில்லை. நேரமில்லாதது தான் காரணம். ஆனா பாருங்க, அந்த மாதிரி மின்னஞ்சல்கள் என்னை சந்தோஷமா வைத்திருப்பதோடு, எனக்குத் தேவையான பாதுகாப்புணர்ச்சியையும் கொடுக்கிறது. ஆப்பிரிக்காவின் செத்துப்போன சர்வாதிகாரிகளின் விதவைகளிடமிருந்து தமது அறக்கட்டளையில் பங்காளியாக சேர்ந்து அதன் சொத்துக்களை சேர்ந்தே அனுபவிக்க அழைப்பு விடுத்து வரும் மின்னஞ்சல்கள் கூட இந்தப் பாதுகாப்புணர்ச்சியை தருவதில்லை.

இந்த மாதிரி பெரிய எண்களோடு மல்லுக்கட்டும் போது நாம் கொஞ்சம் எச்சரிக்கை ஆகிவிடுவதும் உண்டு. ஒரு சர்வாதிகாரி சுமார் 200 விதவைகளை விட்டுட்டு போயிருக்கார் – அத்தனை பேரும் எனக்கு மட்டுமின்றி வேறு சில லட்சக்கணக்கானவர்களுக்கும் சோக நயத்தோடு அன்பரே என்று விளிக்கும் மடல்களை கணக்கு வழக்கில்லாமல் அனுப்பியிருக்காங்க.. ஆனா, லாட்டரிகள் எப்போதும் சந்தோஷமானவை. அவை உங்களுக்கு ஒரு விசேஷமான உணர்வை அளிக்கின்றன – லாட்டரிகளால் நீங்கள் எப்போதும் தோற்பதேயில்லை.

இதே காரணத்திற்காகத் தான் நமது பிரதமரையும் எனக்குப் பிடித்துப் போயிருக்கிறது என்பதை அவரது கடைசி மூன்று வெளிநாட்டு பயணங்களுக்குப் பின் தான் நான் உணார்ந்தேன். நரேந்திர மோடியால் நாம் எப்போதும் ஏராளமான பணத்தை கெலிக்கலாம். ஆம்ஸ்டர்டாம், பெனின் மட்டுமல்ல, உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டே இருக்கும் (இதற்காகத் தானே மோடி நிறைய சுற்றுப் பயணங்கள் போகிறார்). 2014 தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி – பணத்திற்கான உத்திரவாதத்தைப் பொறுத்தளவில் அவர் எப்போதும் பேச்சு மாறுவதில்லை.

தேர்தலுக்கு முன் அவரும் அவரது கட்சிக்காரர்களும் ஒவ்வொரு இந்தியனுக்கும் 15 லட்சம் கொடுப்பதாக உறுதியளித்திருந்தனர். ஏனென்றால், இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் மொத்த கருப்புப் பணத்தை இந்திய மக்கள் தொகையால் வகுத்தால் வரும் தொகை 15 லட்சம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், உங்களுக்காக கடைசி சுவிஸ் ப்ராங்க் வரை பீறாய்ந்து வந்து விடுவோம் என்றார். அப்புறமென்ன, நாமெல்லாம் வெற்றியாளர்கள் தானே. அதுவும் சமமான வெற்றியாளர்கள். (ஆனா, இதுல ஒரு சின்ன சிக்கல். அதாவது, தேர்தலுக்கு முன்பாக பீகாரிகளுக்கு நிறைய செய்வதாக சொல்லி வந்தார். 1.25 லட்சம் கோடிகள் பீகாரிகளுக்காம். சிலர் இதெல்லாம் சும்மா பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக அடிக்கும் உட்டாலக்கடி வேலை என்றார்கள் – சரி, இதையெல்லாம் லூஸ்ல விடுங்க.. இப்படி எடக்கு மடக்கா பேசறவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்)

modi lottery (1)நமது பிரதமர் ஆம்ஸ்டர்டாம், அசெர்பெய்ஜான் பேர்வழிகளை விட பல படிகள் மேலே போய் இன்ப அதிர்ச்சியும் அளித்தார் – அட அவரு நம்ம வங்கிக் கணக்கு விவரங்களை கேட்கலை; அதையும் அவரே உருவாக்கி கொடுத்து விட்டார். போன சுதந்திரதின உரையில் தனது அரசாங்கம் மொத்தம் 17 கோடி வங்கி கணக்குகளை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் மோடி. இவை எல்லாம் இது வரை வங்கிக் கணக்கையையே கண்டிராத ஏழை இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டவை. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், இந்தக் கணக்கை ரூபாய் இருப்பு இல்லாமலே கூட பராமரிக்க முடியும். ஐம்பது சதவீதத்திற்கும் மேலான வங்கிக் கணக்குகளில் பூஜ்ஜியம் ரூபாய்கள் தான் இருக்கின்றது என்பது தனிக் கதை.

அடடா, பூஜ்ஜிய இருப்பு…! யோசித்துப் பாருங்களேன், கோடிக்கணக்கான தூய்மை இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் துடைத்து வைத்தது போல் துட்டே இல்லாமல் தூய்மையாக இருக்கும். இதற்கு செயலாக்க கட்டணமாக நைஜீரிய லாட்டரியைப் போல 150 பவுண்டுகள் கேட்க மாட்டார்கள். நைஜீரியா, பெனின், லிச்டென்ஸ்டீன்… இனி உங்கள் சேவை எங்களுக்குத் தேவையில்லை – உங்க திசைக்கே ஒரு பெரிய கும்பிடு. பொதுத்துறை வங்கிகள் இப்படி லட்சக்கணக்கான வங்கிக் கணக்குகளை ரூபாய் இருப்பு இல்லாமல் பராமரிக்க 2,000 கோடிகள் தண்டமாக செலவாகும் என்று புலம்புகின்றன – அவர்களை விடுங்கள், வங்கிகள் என்றாலே இப்படித்தானே புலம்புவார்கள்.

அப்புறம், இந்த வருட “அதிரும் குஜராத்” (Vibrant Gujrat) வைபவத்தில் மோடி தனது முந்தைய சாதனைகளைத் தானே தாண்டிச் சென்றார். ஜனவரி 11லிருந்து 13 வரை வெறும் 24 வேலை மணி நேரத்தில் மோடியின் உதாரண மாநிலம் 2.1 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 21000 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. சராசரியாக கணக்கிட்டால் ஒரு நிமிடத்திற்கு 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது நான்கு நொடிகளுக்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கணக்காகிறது.

உசேன் போல்ட்டே பொறாமைப் படும் வேகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் படித்தால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் ஒவ்வொரு நொடிக்கும் ஆறு வங்கிக்கணக்குகள் மேனிக்கு 17 கோடி வங்கிக் கணக்குகளைத் திறந்த சாதனையின் முன் இதெல்லாம் சும்மா கொசு தான். ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் படிக்க வேண்டிய பக்கங்களை வைத்துப் பார்த்தால் இதுவும் ஒரு சாதனை தான். பூஜ்ஜிய இருப்பு வங்கிக் கணக்கில் படிக்க என்ன இருக்கிறது சொல்லுங்கள்? ஒரு பூஜ்ஜியத்தைப் படித்தால் எல்லா பூஜ்ஜியத்தையும் படித்த மாதிரி தானே? இதில் இன்னொரு தொழில் ரகசியமும் இருக்கிறது – அதிரும் குஜராதின் நேயர்கள் அந்த 150 பவுண்டு செயலாக்க கட்டணத்தை எந்த வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற விவரம் வழங்கப்படவில்லை.

இப்போதைக்கு சீனத் துயரத்திலிருந்து நமக்கு வேண்டிய மட்டும் உருவிக் கொள்வது என்பதை மட்டும் மோடி விளக்கி இருக்கிறார். இதற்காக தொழில் துறையைச் சேர்ந்த 40 மந்த புத்திக்காரர்களை தன் முன்னே ஆஜராகச் சொல்லியும் இருக்கிறார். சீனச் சந்தை நெருக்கடி நமக்கு பாதிப்பு ஏற்படுதும் என்ற அச்சத்தைக் பிரதமரும் அவரது ஆலோசகர்களும் கிண்டலடித்துள்ளனர். (பெரும்பாலான யோசனைகளை அவர்கள் கிண்டலடிப்பார்கள் என்றாலும், இதில் ஒரு அர்த்தம் இருக்கிறது).

modi lottery (3)நமது பொருளாதார அடிப்படைகள் 2014-ம் ஆண்டு மே மாதத்தின் ஒரு நள்ளிரவில் ஒரேயடியாக வலுப்பெற்று விட்டதால், முதலாளித்துவமே நமது நாட்டில் வேறு மாதிரி தான் வேலை செய்கிறது. ’பக்கத்து வீட்டிலிருப்பது பிச்சைக்காரன்’ என்ற தனது ஆரோக்கியமான – போட்டிப்   பொருளாதார தத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய அம்சத்தைப் பொருளாதாரத்தோடு கோர்த்து விட்டுள்ளார் மோடி. சீனர்கள் வெறும் சீனர்கள் தானே? அவர்களிடம் புராண காலத்தில் முன்னும் பின்னும் பறக்கும் விமானங்கள் இருந்ததா என்ன?

அந்த நாட்டுக்குச் சென்ற போது பத்து பில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஒப்பந்தங்களை மோடி செய்துள்ளார் என்பதையும் நாம் மறக்க கூடாது. இதில் எதும் நடக்கவில்லையென்றால் அதற்கு கன்பூஷிய சோம்பேறுத்தனத்தில் ஊறிய ஜி ஜின்பிங்கும் அவரது கும்பலும் தேவையான நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களையும், செயலாக்க கட்டணத்தையும் வழங்காதது தான் காரணமாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் அந்த பத்து பில்லியன் என்பது நமக்கெல்லாம் மோடி தருவதாக சொல்லி இருக்கும் ஒரு ட்ரில்லியன் டாலரில் ஒரு சதவீதம் தானே?

செயலும் செயலாற்றுதலும் மிக்க ஒருவர் கிடைத்தால் நமது எதிர்பார்ப்புகள் அதிகமாவது இயற்கை தானே. எனவே அழுத்தம் அதிகமாகத் தான் உள்ளது. 17 கோடி வங்கிக் கணக்குகள் எதையாவது எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. இதில் தங்கள் பேரிலும் ஒரு வங்கிக் கணக்கு உள்ளதென்பதை பலர் அறிய வரும் போது அழுத்தம் இன்னும் அதிகரிக்கும். இப்போதைக்கு வங்கிக் கணக்குகளை மின்னல் வேகத்தில் திறப்பதில் தான் கவனம் காட்டப்பட்டுள்ளது. தங்கள் பேரில் வங்கிக் கணாக்கு துவங்கப்பட்டுள்ளது என்பதை இன்னமும் அறியாமல் இருப்பவர்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். அந்தப் பதினைந்து லட்சத்தில் முதல் தவணை வந்து சேரும் போது கூட இந்த தகவல் சென்று சேரலாம்.

குழப்பமே தேவையில்லை, துட்டு வந்து கொண்டே இருக்கிறது. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தில் இருந்து மட்டுமில்லை – ஏராளமான முதலீடுகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. நமக்கு வர வேண்டிய முதலீடுகளின் ஒரு சிறிய பட்டியலைப் பாருங்கள் – ஐக்கிய அரபு நாட்டில் 75-லிருந்து 100 பில்லியன் டாலர், அமெரிக்காவிலிருந்து 45 பில்லியன் டாலர், பிரான்சிலிருந்து 2 பில்லியன் யூரோ, ஜப்பானிலிருந்து 3.5 ட்ரில்லியன் யென் (33.5 பில்லியன் டாலர்), தென் கொரியாவில் இருந்து 10 பில்லியன் டாலர்.

இந்த பிரம்மாண்டமான வரவுகளுக்கு இடையில் சில சில்லறைச் செலவுகளும் இருக்கின்றன. குறுந்தொழில்கள் துவங்க பிஜி தீவுகளுக்கு வழங்கப்பட்ட 5 மில்லியன் டாலர் மற்றும் பூட்டானியர்கள் இந்தியா வழங்கிய நீர்மின் திட்ட பொம்மையோடு விளையாட செய்யப்பட்ட கொசுறு செலவும் உண்டு. அப்புறம் நாடோடி மங்கோலியர்கள் நவீன முதலாளித்துவம் வழங்கும் சந்தோஷங்களை அறிந்து கொள்ள வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டாலர் கடனும் இந்தப் பட்டியலில் உண்டு.

இதெல்லாம் ஒரு வருடத்திற்கும் குறைவான நாட்களில் சாதிக்கப்பட்டவைகள்.

இனிமேல் நைஜீரிய சீமாட்டி மேடம் அபாச்சே தனது செத்துப் போன சர்வாதிகாரி கணவன் விட்டுச் சென்ற மில்லியன் டாலர் சொத்துக்களை இணைந்து அனுபவிக்க அழைப்பு விடுத்து அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு நாம் மறுப்புத் தெரிவித்து பதில் எழுத வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அதற்கு பதில் நமது வங்கிக் கணக்கு விவரங்களையும் செயலாக்க கட்டணத்தையும் நாம் தில்லிக்கு அனுப்பலாம்.. நிறைய நல்ல நாட்கள் நமக்காக காத்துக் கொண்டிருக்கின்றன… சரி, வெறும் நாட்கள் என்று கூட வைத்துக் கொள்ளுங்களேன்.

(பி. சாய்நாத் எழுதி அவுட்லுக்கில் வெளியான  The Lord Of The Lottery Rings  மூலக் கட்டுரையிலிருந்து தழுவி எழுதப்பட்டது)

– தமிழரசன்

மோடி அரசின் கல்விக் கொள்ளையை எதிர்த்து பு.மா.இ.மு தில்லியில் போராட்டம்

0

காட்ஸ் மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு டெல்லியில் நடத்திய போராட்டம்!

12-12-2015 அன்று புதுதில்லி, ஜந்தர் மந்தரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ‘இந்தியாவே காட்ஸிலிருந்து வெளியேறு’, ‘மோடி கும்பலின் புதியக் கல்விக்கொள்கை இந்துத்துவம் மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் கள்ளக் குழந்தை’ என்ற முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தியது.rsyf-delhi-protest-4டிசம்பர் 15 அன்று மோடி அரசு, உலகவர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் நாட்டின் சேவைத்துறைகளான கல்வி, தண்ணீர், இயற்கை வளங்கள், சுகாதாரம் என அனைத்தையும் முற்றாக அடகு வைத்து நாட்டை மறுகாலனியாதிக்கத்தின் நிரந்தரப்பிடியில் சிக்க வைக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய கல்விக்கொள்கை-2015, காட்ஸின் அடியொற்றி நாட்டின் கல்விக்கட்டமைப்பை தகர்க்கும் வகையிலும் இந்துத்துவ பாசிசத்தை புகுத்தும் வகையிலும் முன் கூட்டியே மோடிகும்பலால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே கடந்த சிலமாத காலமாக இக்கல்விக்கொள்கை முன்வைக்கும் அபாயங்களை மாணவர்கள் தம் அனுபவத்தில் கண்டு கொண்டு, பல்வேறு வகையான போராட்டங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்களின் உதவித் தொகையை இரத்து செய்தது, கல்வி நிலையங்களுக்குள் காவல் நிலையங்களை அமைப்பது, பல்வேறு சதிகளின் மூலம் பார்ப்பனியத்தைப் புகுத்துவது மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது என பல்வேறு அட்டூழியங்களுக்கு எதிராக பல்கலைக் கழக மானியக் குழு முற்றுகை, பேரணி, ஆர்ப்பாட்டம், இணையப்பிரச்சாரம் என பலவகையான போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் இவையாவும் கல்வி என்ற ஒன்றை மட்டும் சுற்றி பொருளாதாரக் கோரிக்கைகளாக  மட்டும் புரிந்து கொள்வது சரியாக இருக்காது. நாட்டையே அடிமைப்படுத்தும் சதி இந்த புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது.

இந்த வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழ்நாட்டின் வெள்ள நிவாரணப் பணிகளுக்கிடையே டெல்லியில் காட்ஸை எதிர்க்கும் அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு (All India Forum for Right to Education) நடத்தும் காட்ஸ் எதிர்ப்பு இயக்க மாநாட்டில் முனைப்போடு பங்கேற்றது.

ஆர்ப்பாட்ட தயாரிப்புகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

08-12-2015 முதலே AIFRTE மேடையை அலங்கரித்த பல்வேறு சமூக இயக்கங்களுக்கு (AISA-All india stuents association, AISF-All India students federation, PSDU-Progessive democratic students union, TVV-Telengana Vidhya Vedika, APSC-Ambedkar Periyar Study Circle IIT Madras, KAPSC-Karnataka Amedkar Periyar Study circle, AIRSO-All india revolutionary students organization) மத்தியில் பு.மா.இ.மு புரட்சிகரப் பாடல்களைப் பாடினர்.

குறிப்பாக Education is our right, WTO get-out; WTO-get out; RSS-kick out என நமது தோழர்கள் செங்கொடிப் பதாகையை rsyf-delhi-protest-3ஏந்தி ஆங்கிலத்தில் இயற்றிப் பாடிய பாடலை பல்வேறு மொழிபேசும் மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்! குறிப்பாக AISA, பல்கலைக்கழக மானியக்குழு முற்றுகையின் போது, காட்ஸ் ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்பதை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

புதிய கல்விக்கொள்கை-2015, ஆரம்பக் கல்வியிலே தொழிற்கல்வியைப் புகுத்துவதன் மூலம் எப்படி நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு பார்ப்பன வருணாசிரம அதர்மத்தின் கீழ் கல்வி உரிமையை மறுக்கிறது என்பதை மேடையிலே எடுத்துக்காட்டும் விதமாக பு.மா.இ.மு தோழர்கள் “ஆயிரம் காலம் அடிமை என்றாயே? அரிசன் என்று பேருவைக்க யாரடா நாயே?” என்று நாட்டை மறுகாலனியாக்கும் இந்துத்துவ  கும்பலை அம்பலப்படுத்தி தோலுரித்தனர்.

தமிழ்நாட்டில் தோழர் கோவன் டாஸ்மாக் பாடல்கள் பாடியதற்காக எப்படி இந்த ஆளும் வர்க்கம் தேசத்துரோக வழக்கை போட்டது என்பதை எடுத்துக்காட்டி, “புதியக் கல்விக்கொள்கையை அம்பலப்படுத்தும் விதத்தில் நாங்கள் பாடும் பாடலுக்காக, காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடி கும்பல் தேசத்துரோகம் குற்றம் சாட்டுமானால் நாங்கள் தேசத்துரோகிகளே” என்று மேடையில் அறிவித்து பாடினார்கள்.

கலை நிகழ்ச்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

12-ம் தேதி பு.மா.இ.மு நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு தோழர்கள் டில்லி மாணவர்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரம், முழக்கங்கள், ஊர்வலம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“தப்லி” என்று இந்தி மொழியில் அழைக்கப்படும் பறையை தோழர்கள் விண்ணதிர இசைத்து, கேளாத செவிகள் கேட்கட்டும் என்று பகத்சிங்கின் புரட்சிகரப்பாதையை டில்லியின் பல்வேறு பல்கலைக்கழக வளாகங்களுக்கு எடுத்துச் சென்றனர். குறிப்பாக அரசியல் விவாதம் பெரும்பான்மையாக நடைபெறும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் பிரச்சாரம் செய்தனர். விடுதிவளாகம் (15 விடுதிகள்), சிற்றுண்டி வளாகம் (5 தாபாக்கள்), பொதுச்சாலை என அனைத்து இடங்களிலும் காட்சை முறியடிப்போம் என முழங்கி பிரசுரம் வினியோகித்தும், பறை இசைத்தும் புரட்சிகரப்பாடல்கள் பாடியும் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தோழர்கள் நடத்திய பிரச்சாரம் ஜே.என்.யு, டில்லி பல்கலைக்கழகம், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, ஐ.ஐ.டி டில்லி, பல்கலைக் கழக மானியக்குழு முற்றுகை நடக்கும் இடம் என டில்லி எங்கிலும் சென்றடைந்தது.

இதன் ஒருபகுதியாக 12-ம் தேதி ஆர்ப்பாட்டம் பு.மா.இ.மு ஒருங்கிணைப்பில் டில்லி ஜந்தர்மந்தரில் நடந்தது. தோழர்கள் நிறுவிய கார்ட்டூன் பிரச்சாரங்கள், செங்கொடிப்பதாகைகள், முழக்கங்கள், மோடி முன்வைக்கும் புதிய கல்விக்கொள்கையை தூக்கி எறிவது மட்டுமல்ல, மாணவர்கள் மற்றும் மக்களே தங்களது சுதந்திரமான படைப்பாற்றலை வெளிப்படுத்தும் கல்விக்கொள்கையை தாங்களே உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை  விதைத்தது.

rsyf-delhi-protest-2பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தனது தலைமை உரையில் இங்கு நிலவும் ஜனநாயகம் எப்படி போலியானது ,மறுகாலனியாதிக்கப் பேரழிவுகள் எப்படி 90-களில் புகுத்தப்பட்ட தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் மூலம் இந்தியாவை வாரிச்சுருட்டியது, தற்பொழுது மோடி கும்பல் கையெழுத்திடப்போகும் காட்ஸ் ஒப்பந்தம் எப்படி இந்திய இறையாண்மையைப் பற்றி இறுக்குகிறது, புதியக் கல்விக்கொள்கை எப்படி பார்ப்பன பாசிசத்தைப் புகுத்துகிறது என்பதையெல்லாம் அம்பலப்படுத்தி பேசினார்.

குறிப்பாக கல்வி என்பது உரிமை என்ற நிலையில் இருந்து இந்த அரசு கைகழுவிக்கொண்டு, நிதிச்சுமை என்பதன் பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு கல்வியை விற்று தரகு வேலை பார்ப்பதன் மூலம் இந்த அரசு ஆளத்தகுதியற்று, கல்விவழங்க வக்கற்று, தோற்றுப்போய்விட்டது என்பதை எடுத்துக்காட்டினார்.

நிதி இல்லை என்று சொல்லும் அரசிடம் நிதி எங்கே இருக்கிறது என்பதை பு.மா.இ.முவால் எடுத்துக்காட்ட இயலும் என அம்பானி, டாட்டா, கோயங்கா போன்ற தரகுமுதலாளிகளிடம் தான் அது சிக்கியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டி தனியார்மயத்தை தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே கல்வியை அனைவருக்கும் பொதுவானதாக மாற்ற முடியும் என அறிவித்ததை பெரும்பாலானோர் கவனித்தனர்.

தங்களை இடதுசாரிகள் என்று அழைத்துக்கொள்பவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துவிட்டு அதைச் செயல்படுத்தும் பார்ப்பனியத்தை கண்டுகொள்ளாமல் விடுகிற பொழுது புதிய கல்விக்கொள்கையில் பார்ப்பனியமும் ஏகாதிபத்தியும் எப்படி ஒத்திசைவாக இணைந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார்.

ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பன பாசிசம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மனுதர்மத்தின்படி மறுத்தே வந்திருக்கிறது என்பதையும் தற்பொழுது புதிய கல்விக்கொள்கை எட்டாம் வகுப்பிலேயே தொழிற்கல்வியைக் கொண்டுவருவதன் மூலம் பொதுக்கல்வி மறுக்கப்பட்டு, வருணாசிரம பாசிசம் நிலைநாட்டப்பட்டு, தாராளமாக கூலிகளை மேல்நிலை வல்லரசுகளுக்கு எப்படி விற்கப் போகிறது என்பதை எடுத்துக்காட்டிய பொழுது பார்ப்பனியம் வேரறுக்கப்படவேண்டியது எத்துணை அவசியம் என்பதை ஜந்தர்மந்தரில் கூடியிருந்த மாணவர்கள் கண்டுகொண்டனர்.

இப்படிப்பட்ட புதிய கல்விக்கொள்கை தகர்க்கப்பட வேண்டுமானால் மாணவர்கள் போராட்டம் இக்கல்விக்கொள்கையின் காரணகர்த்தாவான ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பனியத்தையும் வீழ்த்துகிற புரட்சிகர அரசியலாக இருக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இந்த வகையில் மாணவர்கள் அணிதிரண்டால் மட்டும்போதாது மாணவர்கள் இந்நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான, விவசாயிகள், தொழிலாளிகள், பெற்றோர்கள் கூட்டிணைவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் மது ஒழிப்புப் போராட்டம் எப்படி மாணவர்களால் எடுத்துச்செல்லப்பட்டு வீச்சான மக்களின் போராட்டாமாக மக்கள் தங்கள் அதிகாரங்களை நிறுவிக்கொள்ளும் போராட்டமாக மாறியது என்பது விவரிக்கப்பட்டது.

இதன் அடியொற்றி தோழர்கணேசனின் உரைக்குப்பின்பாக,

நாட்டைச்சூறையாடும் மறுகாலனியாதிக்க நச்சை முறியடிப்போம்.

பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம்.

மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்

என காட்ஸை வீழ்த்துவதற்கான போர்தந்திரம், முழக்கமாக முன்வைக்கப்பட்டது. பு.மா.இ.மு தோழர்கள் பாடிய பாடலில் “ஆர்.எஸ்.எஸ்ஸா? நக்சல்பாரியா?” எனும் கேள்வி வரி, பலத்த வரவேற்பை மாணவர்கள் மத்தியில் பெற்றது.

ஆர்ப்பாட்ட பேச்சாளர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முழக்கத்தால் கவரப்பட்ட பிற பேச்சாளர்கள், குறிப்பாக கல்வியாளர் பேராசியர் அனில் சட்கோபால் இது சமரசமற்ற முழக்கம் என்று புரட்சிகர அரசியலின் காத்திரத்தை வரவேற்று பேசினார். AIFRTEயின் அமைப்புச் செயலாளர் தோழர் ரமேஷ் பட்நாயக், பு.மா.இ.மு தோழர்கள் மக்களை பாடல்களாலும் எழுச்சிமிகு உரைகளாலும் கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் சென்றதை பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும் பேராசிரியர் பிரேந்திர ராவத் பேசும் பொழுது புதிய ஜனநாயகப்புரட்சி எப்படி நடத்துவது என்பது தெரியாவிட்டாலும் பு.மா.இ.மு முன்வைக்கும் அரசியல் சரியானது என மேடையிலேயே பேசினர். பேராசிரியர் ரவிக்குமார், தெற்காசியப்பல்கலைக்கழகம், காட்ஸ் கொண்டு வரும் அபாயம் குறித்து விழிப்புணர்வூட்டிப் பேசினார். பேராசிரியர் சச்சின், AIFRTE, இந்தியில் புதியக்கல்விக்கொள்கையால் மாணவர் எதிர்கொள்ளும் அபாயம் குறித்து விளக்கினார்.  மேலும் தோழர் சுசிதா (AISA), தோழர் ஆனந்த் (TNM-The new materialists), தோழர் தாவா (DSU), தோழர் ரமேஷ் (அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், ஐ.ஐ.டி சென்னை) ஆகியோர் காட்ஸை எதிர்த்து ஏகாதிபத்தியத்தையும் பார்ப்பனியத்தையும் ஒழிப்பதில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என அறைகூவல் விடுத்தனர்.

இதில் குறிப்பாக AISA மற்றும் TNM தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு பு.ம.இ.மு முன் வைக்கும் புரட்சிகர அரசியலை ஊன்றிக் கவனித்தனர். ஒரு கட்டத்தில் பிற அமைப்பைச் சேர்ந்தவர்களும் (ராஷ்ட்ரிய சேவா தள்) கூட போராட்ட உணர்வால் பு.மா.இ.மு முன்வைக்கும் முழக்கத்தை முழங்கியது (இன்குலாப் ஜிந்தாபாத்) புரட்சிகர அரசியலை மக்கள் இறுகப் பற்றுவதற்கான சாட்சியாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதை மெய்ப்பிக்கும் வகையில் ஓர் முரண்பாட்டை இங்கு தெரியப்படுத்தவேண்டியது அவசியமாகும். பொதுவாக ஜந்தர் மந்தர் மக்களின் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் இடமாக முழக்கமும் சத்தமுமாக இருக்கும். நம் நாட்டின் பாராளுமன்றமும் அத்தகையதுதான் என்பதை நீங்கள் அறிவீர்களோ என்னவோ, ஆனால் இந்த போலி ஜனநாயகத்தைத் தாங்கிப்பிடிப்பவர்கள் ஒவ்வொரு முறையும் இந்த போலி ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் பொருட்டு, பாராளுமன்றத்தின் மாண்பு ஓட்டுக்கட்சி உறுப்பினர்களால் சீரழிக்கப்படுவதாக அங்கலாய்ப்பார்கள். ஆனால் ஆச்சரியமாக இந்த முறை காட்ஸ் கையெழுத்தாகும் சமயத்தில் காட்ஸ் குறித்து கடுகளவு சத்தமும் பாராளுமன்றத்தில் இருந்து வெளிவரவில்லை. மாறாக அது ஜந்தர் மந்தரில் 12-12-2015 அன்று போர்முழக்கமாக வந்திருந்தது.

இந்தநாட்டின் பாராளுமன்றம் யாருக்கானது? எங்கிருக்கிறது என்பது பு.மா.இ.மு ஜந்தர்மந்தரில் நடத்திய ஆர்ப்பாட்டத்திலிருந்து தெரியவரும். முன்னது இந்த ஆளும்வர்க்கத்திற்கானது; ஆகையால் தான் பேரமைதி. பின்னது மக்கள் அதிகாரத்துக்கானது; ஆகையால் தான் பெருமுழக்கம்.

பு.மா.இ.மு டெல்லியில் காட்ஸை எதிர்த்து நடத்திய போராட்டத்தின் பருண்மையான முடிவு எது என்பதை கீழ்க்கண்டவாறு ஒரு வாக்கியத்தில் தொகுக்க முடியும்;

மக்கள் தங்கள் அதிகாரத்தை புரட்சிகரபதாகையின் கீழ் நிறுவிக்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

சிவகங்கை பாலியல் குற்ற வழக்கு – திசை திருப்பும் போலீசு

0

சிவகங்கை சிறுமி பாலியல் குற்ற வழக்கில் ஏ.டி.ஜி.பி உள்ளிட உயர்போலீசு அதிகாரிகளை காப்பாற்ற வழக்கை திசை திருப்புகிறது சி.பி.சி.ஐ.டி போலீசு! அதற்கு துணை நிற்கிறது தமிழக அரசு

sivagangai-protest-against-rapist-police-officials-1சிவகங்கை சிறுமியை பெற்ற தந்தை முதல் உயர் போலிசு அதிகாரிகள் வரை கூட்டுப் பாலியல் வன்முறையை ஏவிய கொடூரத்தை பத்திரிக்கை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பிர்கள். இந்த செய்தி மழைக்கால மின்னலைப் போல தோன்றி மறைந்து போனதையும் அறிவோம். இந்த சம்பவத்தில் ஈடுபற்ற குற்றவாளிகளாக சிறுமியின் தந்தை, அண்ணன், மாமா, அண்ணனின் நண்பன் அரவிந்த் நடத்துநர் நமச்சிவாயம் சிவகங்கை காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் சங்கர் உட்பட 8பேர் மீது வழக்கு பதியப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால் கடந்த ஜூன் மாதம் காரைக்குடி மாஜிஸ்டிரேட்டிடம் தன் வாழ்க்கையை சீரழித்த மேலும் பல குற்றவாளிகள்ப் பற்றி வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மதுரை ஜி.ஜி அலுவலகத்தில் பணியாற்றும் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் சிவக்குமார், தென் மண்டல ஜி.ஜி-யாக பணியாற்றி தற்போது ஏ.டி.ஜி.பி-யாக உள்ள இராஜேஸ்தாஸ், எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் மற்றும் பல போலீஸ் அதிகாரிகள் என 28 பேர் பெயரை வாக்குமூலமாக குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் கூட்டுச்சேர்ந்து தங்கள் விரும்பியபோதெல்லாம் அச்சிறுமியை அழைத்து வரச்செய்து கட்டாய போதையூட்டி வல்லுறவு செய்திருக்கிறார்கள். இந்த குற்றவாளிகள் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. காரணம் இவர்கள் எல்லாம் உயர்பதவியில் உள்ளவர்கள். சிறுமி என்றுகூட பாராமல் வெறிநாய்களைப் போல கடித்துக் குதறியிருக்கிறார்கள்.

இது ஏதோவிபரம் தெரியாமல் செய்த ஒருநாலாந்தர பொறுக்கியின் செயலாகக் கருதி ஒதுக்கி விட முடியாது. இந்த நாட்டையே sivagangai-protest-against-rapist-police-officials-5காவல் காப்பதாகவும், சட்ட ஒழுங்கை காப்பதாகவும் கூறிக்கொள்ளும் அரசின் அங்கமான சீருடையணிந்த மிருகங்களால் நடத்தப்பட்ட சமூக அவலம் இது. தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலிசைவிைட திறமையானவர்கள் என்கிறார்கள். சிதம்பரம் பத்மினி காவல் நிலையத்தில் கணவன் முன்னே பலாத்காரம் செய்யப்பட்டார். சிவகாசி ஜெயலெட்சுமி விவகாரத்தை நாடே காறித்துப்பியது. விரப்பன் தேடுதல் வேட்டையில் வாச்சாத்தி பழங்குடி பெண்களை பாலியல் பாலத்காரம் செய்தது காக்கிக் கூட்டம். எந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

பெண்களை பாரத மாதாவாகவும், தாய் உள்ளம் கொண்ட ஆட்சி அம்மா ஆட்சி என்கிறார்கள் அ.தி.மு. அடிமைகள். பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஆனால் இந்தப் பேய்கள் பெண்ணுக்கு இறங்கவில்லை. சிறுமியை சீரழித்தவர்களை காப்பற்ற துடிக்கிறது ‘அம்மா’ அரசு. அதற்காக புகார் கொடுக்கக் காரணமான சிறுமியின் அத்தையை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசு. இவரது தூண்டுதலால் தான் சிறுமி போலீசு அதிகாரிகள் பற்றி பொய் வாக்குமூலம் கொடுத்ததாக வழக்கையே திசைதிருப்புகிறது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இவரது 18-வயது மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகங்கள் அரசியல் கட்சிகள் அமைதிக்கு என்ன காரணம்? டெல்லி மாணவி பாலியல் சம்பவத்தில் நாடே பற்றி எரிந்த போது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. உலக நாடுகளே ஆங்கில ஊடகங்கள் வாயிலாக கண்டனம் தெரிவித்தார்கள். சிவகங்கை சிறுமி சம்பவம், நம்மை பாதுகாப்பதாக சொல்லிக் கொள்ளும் போலீஸ் துறையிலே ஐ.ஜி, ஏ.டி.ஜி.பி போன்ற உயர் பொறுப்பிலே உள்ள சீருடையணிந்த கிரிமினல்களால் நடத்தப்பட்டிருக்கிறது. இது பகிரங்கமாக வெளியே நாறிய பிறகும் எதுவுமே நடக்காததுபோல மூடி மறைக்கிறார்கள், வழக்கை திசை திருப்புகிறார்கள்.

இவர்கள் செய்த குற்றத்திற்கு நடுத்தெருவில் வைத்து தூக்கிலிடவேண்டும் அவ்வளவு பெரிய குற்றம் இது. நீதித்துறையோ, போலீ, இராணுவம், உயர் அதிகாரிகளை கண்டித்தால் அரசின் ஸ்தரத்தன்மை கெட்டுவிடும் என்கிறது.

ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் உயர் அதிகாரிகள் என்பதால் அடக்கி வாசிக்கிறார்கள். குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

தீர்வு என்ன?

sivagangai-protest-against-rapist-police-officials-6இந்த சமூகமே நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க சமூக அமைப்பு. பெண்களை போகப் பொருளாகவும் நுகர்வு பொருளாகவும் கருதும் உளவியல் சிந்தனையை ஊட்டி வளர்க்கும் சமூக அமைப்பு, ஆபாச சீரழிவு பண்பாட்டு வக்கிரங்களை பரப்பி ஆண்களை வெறியூட்டி வருகிறது. பெற்ற தந்தையே மகளை பலாத்காரம் செய்வதும், பாதுகாக்க வேண்டிய போலீசே கூட்டு சேர்ந்து வல்லுறவு செய்வதும், நீதி வழங்க வேண்டிய நீதித்துறையோ திருடர்களை பாதுகாப்பதாகவும், போராடும் மக்களை, வழக்கறிஞர்களை ஒடுக்கும் கருவியாகவும் இருப்பது என அரசு உறுப்புகள் அருகதையற்று நிற்கிறது.

இந்நிலையில் சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் அறைகுறையான தீர்ப்பை பெறுவதற்கே 18 ஆண்டுகள் போராடவேண்டியிருந்ததை மறக்க முடியாது. எனவே சிவகங்கை சிறுமிக்கு நீதிகிடைக்க பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க மக்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. நம்மை பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி இதுதான்.

21-12-2015 -அன்று மாலை 4.00 மணியளவில் போலீஸ் அனுமதி மறுத்த நிலையிலும் அதை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். பெண்கள் உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனா். போலீஸ் அவா்களை கைது செய்தது. அங்கு கூடியிருந்த மக்கள் போலீசை திட்டினா் உங்களையும் ஒரு நாளுக்கு இப்படி ஏத்தனும்டா என்று போலீசை நோக்கி ஒருவா் கூறினாா். வழக்கு குறித்த விபரங்களை மூடி மறைப்பதற்கு போலீஸ் முழு மூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் அதிகாரத்தின் ஆா்ப்பாட்டமானது உயா் போலீஸ் அதிகாரிகளின் குற்ற செயலை அம்பலப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள்
8438103269

நிவாரணம் போதாது நீதி வேண்டும் – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

0

க்கள் அதிகாரம் மற்றும் விவசாய சங்க கூட்டமைப்பு சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி 21-12-2015 திங்கள் காலை 10 மணி அளவில் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை : தோழர் ரவி, மக்கள் அதிகாரம்

flood-relief-sirkazhi-demo-1கடந்த இரண்டு மாதங்களாக பெய்த தொடர்மழையால் தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழையால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீர்காழி வட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் அழிந்தும், மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று மாதமாக விவசாயத் தொழிலாளர்களும் வேலையில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.

அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ இதுவரை நம்மை திரும்பி பார்க்கவில்லை. அவர்கள் தாமாக வந்து பார்க்க மாட்டார்கள். அவர்கள் சட்டையைப் பிடித்து இழுத்து வந்து நடுரோட்டில் வைத்துதான் இனி நமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இது அடையாள ஆர்ப்பாட்டமே ஒழிய தீர்வல்ல.

தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 25,000-ம், கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு உதவித் தொகையாக ரூ 15,000-ம், தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 50,000-ம் வழங்க வேண்டும்.

பகுதியில் உள்ள ராஜன் வாய்க்கால், மண்ணியாற்றில் மார்ச் மாதம் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். பாசன வடிகால் வாய்க்காலைத் தூர்வாரி பாசனத்தை முறைப்படுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை உடனே நிறைவேற்றா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதை இந்த அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.

flood-relief-sirkazhi-demo-5திரு. P.S இராஜேந்திரன், விவசாய சங்கம், புதுப்பட்டினம்

நமது பகுதியை எந்த அதிகாரியும் வந்து பார்வையிடவில்லை. நம்மை இந்த அரசு அலட்சியப்படுத்துகிறது. நமது கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றா விட்டால் வேறுமாதிரியான போராட்டம் நடத்த வேண்டும்.

திரு மனோகர், விவசாய சங்கம், கொடக்கார மூலை

நமது வீட்டில் உள்ள நகை, நட்டு வரை அடகு வைத்து பயிர் செய்தோம். மழை வெள்ளத்தால் அனைத்தும் அழிந்து போய் விட்டது. எங்கள் ஊர் கூட்டுறவு வங்கியில் நகையெல்லாம் இருக்கிறது. அதை இரண்டு முறை உடைத்து திருட முயன்றார்கள். காரணம் இங்குள்ள விவசாயிகள் அவ்வளவு நெருக்கடியில் இருக்கிறோம். எத்தனையோ முறை கலெக்டருக்கும், தாசில்தாரிடமும் மனு கொடுத்து மனு கொடுத்து ஓய்ந்து போய் விட்டோம். இனிமேல் மனு கொடுப்பதால் பலனில்லை என்பதை மக்கள் அதிகாரம் தோழர்கள் சொல்வதுதான் சரி. அதுதான் நமது பாதையாக இனி இருக்க வேண்டும்.

flood-relief-sirkazhi-demo-3திரு மோகன், கொடக்கார மூலை பாசன விவசாய சங்கம்

எங்கள் சங்கத்தின் சார்பாக நாங்கள் கலெக்டர் நடத்தும் எத்தனையோ குறை தீர்ப்பு கூட்டங்களில் கலந்து கொண்டோம். ஆனால், எந்த பயனுமில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லையெனில் மக்கள் அதிகார தோழர்களோடு போராடுவோம்.

தோழர் ந. அம்பிகாபதி, மாவட்ட அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி

எல்லாருக்கும் சோறு போட்ட விவசாயிகள் இன்று நடுத்தெருவில் வந்து நிற்கிறோம். தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் பாதிப்பால் கோடீஸ்வரனிலிருந்து, ஏழை வரை பாதிக்கப்பட்டனர். பெரிய பங்களாவிலிருந்து குடிசை வீடு வரை மூழ்கி சிறுகச் சிறுக சேர்த்த உடைமைகள் அழிந்து, உயிர்ச்சேதமும் ஏற்பட்டது.

flood-relief-sirkazhi-demo-2பணக்காரர்களிலிருந்து ஏழை வரை சோறு சோறு என்று கத்திய அவலத்தைப் பார்த்தோம். அந்த சோற்றை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த அரசு எந்த உதவியும் செய்யவில்லை. 60 ஆயிரம் ஏரி, குளம் நீர்நிலைகளை நமது முன்னோர் நமக்கு அளித்துச் சென்றதை நாம் காக்கத் தவறிவிட்டோம். 68 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அனைத்தும் அழிக்கப்பட்டு ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதற்கு இந்த அரசு அமைப்பே காரணம்.

காட் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு நாட்டையும் விவசாயத்தையும் அடகு வைத்து விட்டது. தனியால் கல்வி நிலையங்களும், அரசு கட்டிடங்களும் ஏரி, குளங்களில் கட்டப்பட்டுள்ளன. மோடி அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்குமான அரசுதான். மாநில அரசும், மத்திய அரசும் விவசாயிகளின் குறைகளை தீர்க்கப் போவதில்லை.

இந்த அரசு அமைப்பு ஊழல், லஞ்சம், முறைகேடுகளால் புழுத்து நாறி எதிர்நிலை சக்தியாக மாறி விட்டது. ஆளத் தகுதியிழந்து முரண்பட்டு நிற்கிறது. அதிகார வர்க்கத்தையும், அரசியல் கட்சிகளையும் விரட்டி அடித்து நமது மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும். அதற்கு எடுத்த கூட்டுதான் இந்த ஆர்ப்பாட்டம்

மிலிட்டரி அமிர்தலிங்கம், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு

flood-relief-sirkazhi-demo-4மக்கள் நலனுக்காக பாடிய தோழர் கோவன் அவர்களை இந்த மக்கள் விரோதிகளின் அரசு கைது செய்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இன்று விவசாயிகளின், தொழிலாளர்களின் நலனுக்காக நடத்தும் இந்த ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது. காரணம் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வர்க்கத்தைச் சேர்ந்த பிரிவினரும் ஒன்றாகி உள்ளனர். இது வருங்காலத்தில் நமது ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வெற்றியாக அமையும்.

திரு சிவபிரகாசம், தலைவர், கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் கூட்டமைப்பு.

எனக்கு 94 வயது இருந்தாலும் நீங்கள நல்லா வரணும் என்று நான் போராடுகிறேன். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பச்சை துண்டு பலமானது என்பதை இந்த அரசு அதிகாரிகள் உணர வேண்டும். மக்கள் அதிகாரம் தோழர்கள் நமக்கு துணையாக உள்ளனர். நாம் யார் என்பதை இந்த அதிகாரிகளுக்கு உணர்த்துவோம். எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.

மேலும் கொள்ளிடம் ஒன்றிய விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் செயலர் திரு விஸ்வநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

நன்றியுரை : முருகன், விவசாய சங்களம், மாதானம்.

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் அடித்து கலக்கியது போல் விவசாய பயிர் உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

முன்னதாக,

  • நிவாரணம் போதாது நீதி வேண்டும்!
  • வெள்ளப் பேரழிவிற்கு காரணமான முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்…!
  • அனைத்திலும் செயலிழந்து தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பை துயரத்தோடு ஏன் சுமக்க வேண்டும்?

என தஞ்சை, நாகை, திருவாரூர், புதுகை மாவட்டங்களில் மக்கள் அதிகாரம் சார்பாக சுவரொட்டிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

flood-relief-tnj-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
சீர்காழி

ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

0

ஆலயத்திலும் அகிலத்திலும் பார்ப்பான் வைத்ததே சட்டம்!
உச்ச நீதி (உச்சி குடுமி) மன்றம் திட்டவட்டம்!

விழுப்புரம் ஆர்ப்பாட்டம்

2006 தி.மு.க ஆட்சியின் போது கொண்டு வந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்ததின் மூலம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

archagar-verdict-vpm-demo-banners-3இந்தப் பள்ளிகளில் பல்வேறு சாதியினை சார்ந்த சுமார் 206 மாணவர்கள் பயின்று ஆகம விதிகளை முறையாக கற்று தேர்ந்து அரசு சான்றிதழும் பெற்றனர். இந்த சட்ட ஆணையை எதிர்த்து மதுரையை சார்ந்த சிவாச்சாரியார்கள் சங்கம், சட்டப்பிரிவு 25-க்கு எதிரானது என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஆதரவாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கிய கழகமும் தம்மை இணைத்துக்கொண்டு வழக்கை நடத்தின. இந்த வழக்கின் தீர்ப்பு 2013 ஆண்டே வரும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு பின்பு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த சூழலில் கடந்த 16-12-2015 அன்று தனது தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு 1972 ஆண்டு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்விலே வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பை விட நயவஞ்சகமான முறையில் நுணுக்கமாக வழங்கி பார்ப்பனிய நரித்தனத்தை நிலைநாட்டி உள்ளது.

archagar-verdict-vpm-demo-banners-1அயோக்கியத்தனமான இந்தத் தீர்ப்பை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பதாகவும், தேவைபட்டால் மேல்முறையீடு செய்வது பற்றி பரிசிலிப்போம் என்று ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பாணியில் அறிக்கை விடுகின்றனர்.

ஆகப்பெரும்பான்மையாக உள்ள பிற சாதி உழைக்கும் மக்களை கீழானவர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் அவர்கள் சிலையை தொட்டால் சாமி செத்துவிடும் என்று கூறி மக்களை இழிவு படுத்தி வந்த பார்ப்பனியம் அதனை சட்ட ரீதியாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதிபடுத்தியுள்ளது.

சட்டப்பிரிவு 17-ன் படி தீண்டாமை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது குற்றம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தற்பொழுது “இலை மறை காயாக“ வழங்கியுள்ள இந்த தீர்ப்பு தீண்டாமை குற்றமே.

archagar-verdict-vpm-demo-banners-2இந்த கேடுகெட்ட தீர்ப்பை கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிர அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விழுப்புரத்தில் பு.மா.இ.மு., வி.வி.மு,.பு.ஜ.தொ.மு ஆகிய அமைப்புகள் இணைந்து 21-12-2015 திங்கள் அன்று மாலை 5.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விண்ணதிரும் முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஞானவேல் ராஜா தனது தலைமையுரையில், “உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முறையாக பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு எதிராகவும், சாதி தீண்டாமையை மறைமுகமாக திணிக்கிறது” என்பதையும் அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் மனோகர், “உச்ச நீதி மன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் தான் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பு என்பது பிற சாதி உழைக்கும் மக்களுக்கு எதிராக தான் தீண்டாமையை விதைத்துள்ளது. இதன் வேரறுக்க வேண்டுமானால் உழைக்கும் வர்க்கமாய் ஒன்று திரள வேண்டும்” என்பதை வலியுறுத்தி பேசினார்.

archagar-verdict-vpm-demo-poster

தோழர் லோகநாதன் உரை
தோழர் லோகநாதன் உரை

அவரைத் தொடர்ந்து கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் பாண்டிச்சேரி துணைச் செயலாளர் தோழர் லோகநாதன், “ஆகம விதிகளை பின்பற்றினால் தான் அர்ச்சகராக முடியுமென்றால் முதலில் பார்ப்பானே அர்ச்சகராக இருப்பதற்கு தகுதி இல்லை. காஞ்சி தேவநாதன் தொடங்கி சங்கராச்சாரி வரை கிரிமினல் குற்றவாளிகள். அவர்கள் பூஜை செய்யலாம். ஆனால் பஞ்சமர்களும் , சூத்திரர்களும் அர்ச்சனை செய்யக்கூடாதாம்.  இந்துக்களுக்கு நாங்கள் தான் பிரிதிநிதிகள், பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.க – இந்து முன்னணி உள்ளிட்ட கைக்கூலிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து பேசவில்லை. நாம் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு உழைக்கும் மக்களை பிளவுபடுத்தும், இழிவு படுத்தும் பார்பனிய சித்தாந்தத்தை ஒழித்துக்கட்ட அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் பின்னே வருவது தான் தீர்வு” என்பதை விளக்கி பேசினார்.

தோழர் ராஜு உரை
தோழர் ராஜு உரை

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, “தமிழகத்திலே பெரியாரை பேசாமல் எந்த கட்சிகளும் அரசியல் பண்ண முடியாது. ஆனால் இன்றைக்கு பெரியாரின் கொள்கைக்கு எதிராக வழங்கி இருக்கும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை பற்றி எந்த கட்சிகளும் பேசவில்லை காரணம், பார்ப்பன விழுமியங்களை ஏற்றுக் கொண்டவர்களாக திராவிட கட்சிகள் உள்ளன. இன்னொரு பக்கம் பெரியாரை மரியாதை குறைவாக பேசித் திரியும் பா.ஜ.க வை சேர்ந்த எச்.ராஜா, சுயமரியாதை பாரம்பரியத்தை கொண்ட தமிழர்களுக்கு அவமானம்..

தில்லை கோவிலை தீட்சிதர்களிடம் பிடுங்கி கொடுத்தது தொடங்கி , அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கு வரை தமிழ் மக்களுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கி வருகிறது, உச்சநீதிமன்றம். எனினும் இந்த தீர்ப்பு ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் என்கிறதே : தில்லையிலே தீட்சதர்கள் கோவில் சொத்தை திருடியிருக்கிறார்கள் , மது, மாது என்று அனைத்து மோசடி வேலைகளிலும் ஈடுபடுகிறார்களே இவர்கள் எந்த ஆகமத்தை பின்பற்றுகிறார்கள்?

ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் கூறியுள்ள உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு மிகவும் அயோக்கியத்தனமானது. இது சட்டபூர்வமாகவே சாதி தீண்டாமையை நிலைநாட்டுகிறது. இந்த சட்டத்தையும், அரசையும் நம்பி நம் உரிமைகளையும், சுய மரியாதையையும் பெற முடியாது. சாதி இழிவை ஒழித்துக்கட்டுவதற்கு மக்களே அதிகாரத்தை கையில் எடுப்பது தான் தீர்வு” என்று பேசியது மக்களுக்கு எழுச்சியூட்டும் விதமாக அமைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விழுப்புரம். தொடர்புக்கு:99650 97801.

ஆகமவிதியின் பெயரில் அவாள் விதி – வீடியோக்கள்

1

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு – முதல் பாகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு – பாகம் 2

‘கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்’ என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது.

ம.க.இ.க – ம.உ.பா.மை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதி பாகம்

இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு.

அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்

சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின.

ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார்.

 

ஏரிகளை ஆக்கிரமித்தது மக்களா முதலாளிகளா ?

5

சென்னை மழை வெள்ளம் குறித்த தொடர் கட்டுரையின் இறுதிப் பகுதி

முந்தைய மூன்று பாகங்கள்:

ஏரிகளை ஆக்கிரமித்து உருவான சென்னை
ஏரிகளை ஆக்கிரமித்து உருவான சென்னை

க்கிரமிப்புகளை அகற்றி சென்னையை இன்னுமொரு வெள்ளத்திலிருந்து காப்பது பற்றியுமான விவாதங்கள் மெல்லத் துவங்கியுள்ளன. சென்னையின் பேரழிவிற்கு தோல்வியுற்ற அரசு நிர்வாக எந்திரத்திலிருந்து, செயல்படாத அரசாங்கத் தலைமை, மிக மோசமாக திட்டமிடப்பட்ட நகர விரிவாக்கம் போன்ற பிற காரணங்கள் இருக்க, ஆக்கிரமிப்புகள் பற்றிய உரையாடல்களுக்கு முதலாளித்துவ ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

பொத்தாம் பொதுவான ”ஆக்கிரமிப்புகள்” என்கிற வார்த்தைக்குப் பின்னே ஊடகங்கள் நிறுத்துவது கூவம், அடையாறு நதியோரங்களில் குடிசைகள் போட்டு வாழும் ஏழைகளைத் தான். 1996-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது ஆக்கிரமிப்புகள் தான் காரணமென்று பழியை மக்களின் மீது போட்டார்கள். விளைவாக அங்கே வாழ்ந்த குடும்பங்களை வேறோடு பிடுங்கி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நட்டார்கள்.

இவ்வாறாக ஆக்கிரமிப்புகள் என்றதும் குடிசைகள் மட்டும் என்பதாக ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. முன்பொரு காலத்தில் வேளச்சேரி மிகப் பெரிய ஏரியாக இருந்தது, மியாட் மருத்துவமனை அடையாற்றின் கரையாக இருந்தது, முகப்பேரு, ரெட்டேரி பகுதிகளில் இன்று இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் லேக் வ்யூ அப்பார்ட்மெண்டுகளும் முன்பு ஏரிகளாக இருந்தவை தாம். சரிந்து விழுந்த மவுலிவாக்கம் கட்டிடம் ஏரியின் மீது எழுப்பபட்டது தான்.

ஆக, ”ஆக்கிரமிப்பாளர்கள்” சேரிகளில் வாழும் குடிசைவாசிகள் மாத்திரமல்ல – ஐந்து அல்லது ஆறு இலக்கங்களில் சம்பாதிக்கும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரும் தான். இது தவிற தொன்னூறுகளுக்குப் பின் துரிதப்படுத்தப்ட்ட புதிய பொருளாதார கொள்கைகயின் விளைவாக ஏற்பட்டிருக்கும் ”வளர்ச்சியின்” ஆக்கிரமிப்புகளே பிரதானமான காரணமாக உள்ளன. உதாரணமாக, சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட இரண்டாம் ஓடுதளம் மிகச் சரியாக அடையாற்றின் மீதே அமைந்துள்ளது.

பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் சிரீபெரும்புதூர் சாலையெங்கும் நிலங்களில் அமைந்துள்ள பன்னாட்டுக் கம்பெனிகளும் நீர்பிடிப்புப் பகுதிகள் அல்லது வடிகால் பகுதிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவையே. நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை, அங்கிருந்து இயல்பாக வழிந்து சிறிய குளங்களுக்கும், பின் அதிலிருந்து கால்வாய்கள் மூலம் பெரிய ஏரிகளுக்கும் வந்தடைய வேண்டும். பின் ஏரிகளில் இருந்து சிறிய ஆறுகளாக கடலை நோக்கிச் சென்றாக வேண்டும்.

சென்னையின் புற நகர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஹெக்டேர் நிலத்தை வளைத்து ஏற்படுத்தப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் அதனுள் பிரம்மாண்டமான கட்டிடங்களை ஏற்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் மிகச் சரியாக நீர்வழிகளின் மீதே அமைந்துள்ளன. இவ்வாறு பெரிய கட்டிடங்களை அமைக்கும் போது குறிப்பிட்ட வளாகத்திற்குள் சேரும் நீர் வடிந்து செல்வதற்கான கால்வாய் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

1990-ம் ஆண்டில் ஒப்பீட்டளவில் பசுமையுடன் காணப்படும் சென்னை
1990-ம் ஆண்டில் ஒப்பீட்டளவில் பசுமையுடன் காணப்படும் சென்னை
2010-ல் பசுமையை அழித்து விட்டு நகரம் 'வளர்கிறது'.
2010-ல் பசுமையை அழித்து விட்டு நகரம் ‘வளர்கிறது’.

கட்டிடங்கள் எழுப்ப ஒப்புதல் வாங்கும் போது, அதோடு சேர்த்து நீர் மேலாண்மைத் திட்ட நகலையும் இணைத்து தான் அனுமதி பெற்றிருப்பார்கள். எனில், அவை ஏன் ஏற்படுத்தப்படவில்லை? ஏன் இந்த தவறுகளை உரிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் விசாரித்து தண்டிக்கவில்லை? ஏனெனில், அவ்வாறான நடவடிக்கைகள் தொழில் முனைவிற்கு எதிரானதாகவும், வளர்ச்சிக்கு எதிரானதாகவும் அரசால் கருதப்படுகிறது. திறந்த மடம் போல் எந்த நாட்டைச் சேர்ந்த முதலாளியும் உள்ளே புகுந்து தொழிலாளர் நலன், தொழிலாளர் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் என்று சகல விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு மலிவான கூலிக்கு உழைப்பைச் சுரண்டுவதையும் வளங்களைக் கொள்ளையடிப்பதையுமே ”வளர்ச்சி” என்கின்றனர்.

போலவே, குடிசைகளை பிடுங்கி எரிவதையும், நடைபாதையில் தக்காளி விற்கும் கிழவியை விரட்டியடிப்பதை மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றுவது என்பதாகப் புரிந்து கொள்பவர்கள், வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் குளங்களை ஆக்கிரமித்து அதன் மேல் அடுக்குமாடிக் குடியிருப்புகளை எழுப்பி நடுத்தர வர்க்கத்தினரின் ஆசையைத் தூண்டி ஏமாற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளைப் பற்றி ஏன் சிந்திப்பதில்லை?

விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டிடங்களின் சொந்தக்காரர்கள் ஒரு சிறிய தொகையை அபராதமாக செலுத்தி தங்களது சட்டவிரோதச் செயலை சட்டப்பூர்வமாக்கிக் கொள்ளலாம் என்கிற விதியை 28 நாட்களே ஆண்ட வி.என்.ஜானகியின் அரசு 1988-ல் கொண்டு வந்தது. 1991-1996 காலகட்டத்தில் தமிழகத்தை மொட்டையடித்த புரட்சித்தலைவின் ஆட்சியின் கீழ் ஏரி குளங்கள் ஆக்கிரமித்து ப்ளாட்டுகள் போடும் ரியல் எஸ்டேட் கொள்ளை ஒரு தொழிலாக ஒழுங்கமைக்கப்பட்டது.

ஐந்தாண்டுகளில் நீர் நிலைகளும், இயற்கையான வடிகால்களும் நாசமாக்கப்பட்ட நிலையில் தான் 1996 வெள்ளம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1996 – 2001 தி.மு.க ஆட்சிக்காலத்தில் விதிமுறைகளை மீறி    1998-க்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமாக்கினார்கள் (Town and country planning Act) தொடர்ந்து வந்த அ.தி.மு.க அரசுக்கு (2001-2006) கொள்ளையை சட்டப்பூர்வமாக்கும் தி.மு.க பாணி முக்காடு கூட தேவைப்படவில்லை. சென்னையின் புவியியல் சமநிலையை எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் கொள்ளையடிக்க கதவைத் திறந்து வைத்தார்கள்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ள ஐ.டி. நிறுவனங்கள்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ள ஐ.டி. நிறுவனங்கள்.

அடுத்து வந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீதிபதி மோகன் தலைமையிலான கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அதாவது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள (அதாவது 98-க்குப் பிறகு) கட்டிடங்களைக் குறித்து ஆய்வு செய்த அந்தக் கமிட்டி, மீண்டும் Town and country planning act சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து 2007-க்கு முன் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களை சட்டப்பூர்வமாக்க பரிந்துரைத்தது. இவ்வாறாக, சென்னையின் 50 சதவீதத்திற்கும் மேலான கட்டிடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன.

இவை தவிர அரசே புகுத்தும் “வளர்ச்சி” திட்டங்களின் விளைவாக ஏற்படும் ஆக்கிரமிப்புகள் தனி. சென்னை விமானநிலையம் அடையாற்றை மறித்து நிற்கிறது என்றால், ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம் என்று பீற்றிக் கொள்ளப் படும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஏரியின் மீது நிற்கிறது.

இப்போது சொல்லுங்கள் எந்த ஆக்கிரமிப்பை முதலில் அகற்றலாம்? யார் குற்றவாளிகள்?

உலகமயமாக்கல் பொருளாதாரம் அருளும் ”வளர்ச்சியென்பது” உண்மையில் வேரில்லாத மரம் போன்றது. உலகநாடுகளுக்குத் தேவையான பொருட்களை மூன்றாம் உலக நாடுகளின் சல்லிசான மனிதவளம், இயற்கை வளம் மற்றும் உழைப்புச் சுரண்டலின் மூலம் குறைந்த மூலதனத்தில் உற்பத்தி செய்து கொள்ளை லாபத்திற்கு ஏற்றுமதி செய்வதே அதன் நோக்கம். இதன் விளைவாக தனது மொத்த பொருளாதார நடவடிக்கைகளையும் நகரங்களை நோக்கியே அது குவிக்கிறது.

நோக்கியா, பாக்ஸ்கான், ஹுண்டாய், ஹோண்டா, ஃபோர்டு, மோட்டரோலா, ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் தமது கடையை இங்கே திறப்பது நமக்கு அவர்கள் கொடுக்கும் வரம் அல்ல – சாபம். இவர்கள் இயற்கையின் மீதும், புவியியல் சமநிலையின் மீது தொடுக்கும் தாக்குதலின் பாரதூரமான விளைவுகளைத் தான் பெருவெள்ளத்தின் வடிவில் நாம் கண்டோம்.

இவ்வகையில் தொன்னூறுகளுக்குப் பின் செயற்கையான முறையில் ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட சென்னை நகருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் படையெடுத்தனர். இதில் ஏற்கனவே படிக்க வசதி இருந்ததால் பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளின் தேர்ச்சி பெற்றோர் ஐந்திலக்க சம்பளத்தோடு ஏரிகளின் மேல் அமைந்த ஏரி பார்த்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இடம் பிடித்துக் கொண்டனர். இவர்களுக்கு இரவு நேரக் காவலர்களாகவும், ஆட்டோ ஓட்டுனர்களாகவும், குப்பை வாருபவர்களாகவும் சேவை செய்ய கிராமப்புரங்களில் இருந்து – விவசாயம் பொய்த்துப் போன நிலையில் – சென்னைக்கு வந்தவர்களை அடையாறு கூவம் போன்ற நதிகளின் கரைகளே வரவேற்றன. பிந்தையவர்களைத் தூக்கி வீசலாம் என்று பேசுபவர்கள் முந்தையவர்களைப் பற்றி வாய் திறப்பதில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்களின் முக்கியமானவர்கள் சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள். இந்த கொள்ளை எம்.ஜி.ஆர் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. சாரய கொள்ளையர்கள் கல்வி தந்தைகளானார்கள். கூடவே ஏரிகள், கால்வாய்கள் என அரசு புறம்போக்கு நிலங்களை வளைத்துக்கொண்டார்கள். இன்று அது தமிழகம் முழுக்க விரிந்து பரவியிருக்கிறது.

அடையாறு நதியின் மேல் கட்டப்பட்டுள்ள சென்னை விமான தளத்தில் விமானம் ஓடுமா, மிதக்குமா?
அடையாறு நதியின் மேல் கட்டப்பட்டுள்ள சென்னை விமான தளத்தில் விமானம் ஓடுமா, மிதக்குமா?

தற்போதைய் வெள்ளத்தையொட்டி பச்சைமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மனிதாபிமானம் கொப்பளித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தான் பொத்’ஏரி’ மீது அமைந்திருக்கும் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்திலிருந்து கயிறு கட்டி மாணவர்கள் மீட்கப்படுகிறார்கள். தென்தமிழக கடற்கரையோரத்தை நாசப்படுத்திய தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியோ இயற்கை பேரழிவிற்கு கண்ணீர் வடிப்பதாக கூறுகிறது. சென்னைக்கு மிக அருகில் என்று ஏரிகளை பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் முதலாளிகளும் கூட சாம்பார் சாதம், போர்வைகள் என தங்கள் மனிதாபிமானத்தை கடைவிரித்துவிட்டு குற்றத்தை மறைக்கிறார்கள்.

எஸ்.ஆர்.எம் மட்டுமல்ல சென்னையை சுற்றியுள்ள பல சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், பல்கலைகழகங்களும் , கார்ப்பரேட் மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள் அடையாற்றின் கரைகளையும், அதற்கான நீர்வழித்தடங்களையும் அழித்துவிட்டு அதன் மீது தான் கட்டப்பட்டுள்ளன. கூவத்தின் கரைகளை தின்று செறித்திருக்கும் ஏ.சி.சண்முகத்தின் எம்.ஜி.ஆர் பல்கலகழகம், அப்பல்லோ மருத்துவமனை, ஜேப்பியாரின் சத்யபாமா பல்கலை என இந்த பட்டியிலுக்கு முடிவில்லை.

வெள்ளம் உண்டாக்கிய பெருந்துயரும் மக்களின் கண்ணீர்க் கதைகளும் பரவலான மனிதாபிமானத்தை தோற்றுவித்துள்ளன. சென்னையின் மழை வெள்ளத்திற்கு பின்னே ஒளிந்திருக்கும் அரசியலை அறியாத வரை இந்த மனிதாபிமானத்தின் ஆயுள் சடுதியில் மறைந்து விடும்.

ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.
ஏரிகளை அழித்த சுயநிதிக் கல்விக் கொள்ளையர்கள்: பச்சமுத்து, ஜேப்பியார், ஐசரி வேலன், உடையார், ஏ.சி.சண்முகம்.

இந்த மழை வெள்ளம் உணர்த்தியிருக்கும் மிக முக்கியமான பாடத்தை நாம் மறந்து விடக்கூடாது. அரசும், அரசின் ஒவ்வொரு உறுப்புகளும் மிக மோசமாகத் தோற்றுச் சரிந்து போனதை இந்த மழை உணர்த்தியுள்ளது. அரசு எந்திரத்தின் ஒவ்வொரு அலகும் தனக்கேயான கடமைகளில் இருந்து வழுவியுள்ளதுடன் மக்களைக் கொல்லும் இரத்தக் காட்டேரிகளாக மாறியுள்ள எதார்த்தத்தை கண்டோம். ஆளும் வர்க்கம் ஆளத் தகுதியிழந்து விட்டதை இந்தப் பேரிடர்க் காலம் நமக்கு உணார்த்தினாலும் இந்த நிலை ஒரு மழையால் தோன்றியதன்று. இந்த மழை கோப்பை நிரம்பி வழியத் தேவையான கடைசி சொட்டு மட்டும் தான்.

மக்களைக் காப்பாற்ற வக்கற்றுப் போன, மக்களைக் கொலைக்களத்திற்கு அனுப்பிய இந்த அமைப்பு முறையின் மீது நாம் நம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும் – மக்களின் அதிகாரம் நிலை நாட்டப்படுவது ஒன்றே மக்களைக் காப்பாற்றும். தோற்றுப் போன அவர்கள் மீண்டும் வருவார்கள்; நிவாரணம் என்கிற பிச்சைக் காசை விட்டெறிந்தால் எத்தனை ஓட்டுக்கள் கிடைக்கும் என்கிற கணக்கோடு வருவார்கள்.

மீண்டும் ஒரு முறை கொலைக்களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் தூண்டில் அது என்பதால் அவர்களைப் புறக்கணிப்பதும், புதிதாய் மக்களின் தலைமையில், மக்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு அதிகார அமைப்பைக் கட்டமைப்பது ஒன்றே மீண்டும் நாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாதிருக்க சாத்தியமான ஒரே வழி.

சென்னை மழை வெள்ளம் குறித்த தொடர் கட்டுரையின் முந்தைய பாகங்கள்:

  1. சென்னை மழை வெள்ளம் – புவியியல் குறிப்பு
  2. செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !
  3. இந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு

– தமிழரசன்

வினவு பொறுப்பாளர் தோழர் காளியப்பனுக்கு நிபந்தனை பிணை !

0
தோழர் காளியப்பன்
வினவு தளத்தின் பொறுப்பாளர் தோழர் காளியப்பன்

க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலரும், வினவு தளத்தின் பொறுப்பாளருமான தோழர் காளியப்பனை (கன்னையன் ராமதாஸ்) 30-10-2015 அன்று கைது செய்ய சென்னை சி.பி.சி.ஐ.டி போலிசின் சைபர் பிரிவு  கொல்லைப்புறமாக சுவரேறிக் குதித்து வீட்டினுள்ளே நுழைந்தது. வீட்டில் இல்லாததால் காளியப்பனைக் கைதுசெய்ய தஞ்சையிலேயே முகாமிட்டது.

இதே நாளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த தோழர் கோவன், 30-10-2015 அன்று அதிகாலை 2.30 மணியளவில் திருச்சி, அரவானூரில் அவரது வீட்டிலிருந்து சென்னை குற்றப்பிரிவு உளவுத்துறை போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டார்.

“மூடு டாஸ்மாக்கை மூடு”, “ஊருக்கூரு சாராயம், தள்ளாடுது தமிழகம்” என்ற இரண்டு பாடல்களும் வினவு தளம், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக பல இலட்சம் மக்களைச் சென்றடைந்துதான் இந்த நள்ளிரவுக் கைதுக்கு காரணம். இ.பி.கோ. 124ஏ தேசத்துரோகம், 153 இரு பிரிவினருக்கிடையில் மோதலைத் தூண்டுதல், 502/1 வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செயப்பட்டிருக்கிறது.

தோழர் காளியப்பனை கைது செய்ய நினைத்த போலிசு மற்றும் அரசின் முக்கிய நோக்கம் வினவு தளத்தினை முடக்க வேண்டும் என்பதே. இதையே தனி விருப்பமாக தந்தி டி.வி பாண்டே போன்றோர் முன்னெடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் (பா.ஜ.க. தவிர), தமிழக- தேசிய ஊடகங்களும், அறிவுத்துறையினரும், கட்ஜு, சந்துரு ஆகிய முன்னாள் நீதிபதிகளும், அம்னஸ்டி இன்டர்நேசனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் இக்கைதைக் கண்டித்து, கோவனை விடுதலை செய்யக் கோரின. ம.க.இ.க., மக்கள் அதிகாரம் அமைப்புகள் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. பறை என்ற ஈழத்தமிழர் பண்பாட்டு அமைப்பு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பிரிட்டிஷ் ஆட்சி கூட மதுவிலக்கு கோரிக்கைக்குப் போராடியவர்கள் மீது ராஜத்துரோக வழக்கு போட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கொடிய அடக்குமுறை, பாசிச ஜெயாவின் வக்கிர கொடுங்கோல் ஆட்சியை உலகறியச் செய்துள்ளது. டாஸ்மாக் என்பது தமிழக மக்கள் மீது ஜெயா அரசு தொடுத்திருக்கும் யுத்தம். சசி பெருமாள் படுகொலை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றின் வரிசையில் வருவதுதான் தோழர் கோவன் மற்றும்  வினவு தளத்தின் பொறுப்பாளர் காளியப்பன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகள்.

செசன்ஸ் நீதிமன்றத்தில் தோழர் கோவனுக்கு பிணை பிடைத்ததும், அவரை போலீஸ் காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. அங்கேயும் மூக்குடைபட்டு வேறு வழியின்றி தோழர் கோவன் பிணையில் வெளியே வந்தார். இடையில் தோழர் காளியப்பனுக்கு முன் பிணை கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து அரசுத் தரப்பில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் தோழர் காளியப்பனுக்கு கடந்த வாரம் நிபந்தனை பிணை அளித்திருக்கிறது. அதன் படி சென்னையில் தங்கி தினமும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறது நீதி மன்றம்.

தோழர் கோவன்
பாடகனைக் கைது செய்துவிட்டீர்கள், “வைரலாக”ப் பரவிய பாட்டை உங்களால் என்ன செய்ய முடியும்? விசாரணைக்கு இழுத்து வரப்படும் தோழர் கோவன்.

ஒரு அரசியல் விமரிசனத்துக்கான தேசத்துரோக வழக்கு என்றோ, ஒரு கலைஞனின் குரலை நசுக்குவதற்கான தேசத்துரோக வழக்கு என்றோ பார்ப்பதும், கருத்துரிமை என்ற அடிப்படையில் கண்டனம் தெரிவிப்பதும் பிரச்சினையின் ஒரு பரிமாணத்தை மட்டுமே பார்ப்பதாகும். இதன் மற்ற பரிமாணங்கள் மிகவும் முக்கியமானவை.

சாராய விற்பனை, ஆற்றுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை, தாது மணல் கொள்ளை உள்ளிட்டு எல்லா வழிகளிலும் இயற்கை வளங்களை, மக்களின் பொதுச்சொத்தை கார்ப்பரேட் மஃபியா கும்பல்களுடன் சேர்ந்து கொண்டு அரசே சூறையாடுகிறது. இதில் அ.தி.மு.க. கட்சியினர் மட்டுமின்றி, போலீசு உள்ளிட்ட அதிகார வர்க்கத்தின் கணிசமான பிரிவினர் நேரடியாகவே ஈடுபட்டிருக்கின்றனர். இந்த கிரிமினல் மஃபியாவின் தலைமையாக ஜெயா-சசி கும்பல் இயங்குவதும், பல்லாயிரம் கோடிக்கு ஆங்காங்கே சொத்துக்களை வாங்கிக் குவிப்பதும் அடுக்கடுக்காக அம்பலமாகி வருகின்றன.

ம.க.இ.க.-வின் பாடல் இந்த மஃபியா கும்பலைக் குறிவைத்துத் தாக்குவதாலும், தோற்றுப்போன இந்த அரசமைப்பிடம் கெஞ்சிக் கொண்டிருக்காமல், மக்கள் தாமே அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு டாஸ்மாக்கை இழுத்து மூடவேண்டும் என்று அறைகூவல் விடுவதாலும்தான், இத்தனை மூர்க்கத்தனமாகப் பாய்ந்திருக்கிறது ஜெ அரசு. இந்த அரசியலை இலட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சென்றதற்காக வினவு தளத்தின் மீதும் அடக்குமுறை ஏவி ஒழிக்க நினைக்கிறார்கள்.

_________________________________

தூத்துக்குடி – கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள்

0

தூத்துக்குடி

க்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் அதிகாரமும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியும் வெள்ளம் பாதித்த தூத்துக்குடி பகுதியில் நிவாரணப்பணிகளை மேற்கொண்டனர்.

tuticorin-flood-relief-04தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் நிவாரணப் பொருட்களை மக்களிடமிருந்து சேகரித்தோம். இப்பகுதியிலிருந்து கடலூருக்கும் பொருட்கள் அனுப்பப்பட்டன.

நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதில் வீடுகள் அதிகமாக சேதமடைந்த, அதிகாரிகளும் ஓட்டுக்கட்சியினரும் செல்லாமல் புறக்கணிக்கும் பகுதிக்கு முன்னுரிமை தந்தோம். அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள மாதவன் நகர், அந்தோனியார்புரம், முள்ளக்காடு பகுதியிலுள்ள கக்கன் நகர், நேரு நகர், பிச்சைமணி நகர், பார்வதிபுரம், சாமி நகர், பாலாஜி நகர், இந்திரா நகர் மற்றும் வீரநாயக்கன் தட்டு ஆகிய பகுதிகளில் தோழர்கள் நிவாரணப் பொருட்களை விநியோகித்தனர்.

tuticorin-flood-relief-05முதலில் வெளியூரிலிருந்து திரட்டி வந்த பொருட்களை குறிப்பாக துணிகளை வயதுக்கு ஏற்பவும், ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்பவும் வகைபிரித்து பண்டல்களாக்கினோம். இதன்மூலம் ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் ? என்னென்ன வயது? ஆணா – பெண்ணா? என்று கேட்டு அதற்கேற்ப துணிகளையும், பால் ஊட்டும் பாட்டில், நிப்பிள், நேப்கின்களையும் விநியோகித்தோம்.

இந்த முயற்சியை பாராட்டிய பொதுமக்களையும், பாதிக்கப்பட்ட பகுதி இளைஞர்கள், பெண்களையும் இந்த பணியில் எங்களுடன் இணைத்துக் கொண்டு செயப்பட்டோம்.

இதில் கக்கன் நகர், அந்தோனியார்புரம், பிச்சைமணி நகர், பார்வதிபுரம் மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவு ஊக்கத்துடன் பங்கெடுத்தனர். தமது தெருவில் மட்டுமல்லாது அருகிலுள்ள பிற பகுதிக்கும் வந்து இரவு 9.00 வரை களத்தில் நின்றனர்.

பெரும்பாலும் உப்பள தொழிலாளிகளும் உதிரித்தொழிலாளிகளும் கொண்ட இப்பகுதி மாவட்ட நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. அதிலும் துப்புரவு பணியாளர்கள் உள்ள பாலாஜி நகர், இந்திரா நகர் பகுதிக்கு வெள்ளம் வந்து ஒருமாதமாகிய நிலையிலும் எங்களைத்தவிர யாரும் போகவில்லை. “இங்கு இந்து முன்னணி இருந்தும் எதையும் செய்யவில்லை. நீங்கதான் உதவறீங்க” என்று மக்கள் தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கக்கன் நகர் பகுதியில் வீடுவாரியாக கணக்கெடுத்து பொருட்களை தனித்தனி பைகளில் போட்டு மேலே பெயர் எழுதப்பட்டு டிரை சைக்கிள் மூலம் விநியோகிக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாதவன் நகரில் ஆதித்தமிழர் கட்சியினர் உதவிக்கு வந்தனர். அதிகம் பாதிக்கப்பட்ட வீடுகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு முன்னுரிமை தந்து பொருட்களை தர உடனிருந்து செயல்பட்டனர்.

tuticorin-flood-relief-18ஒரு சுற்று நிவாரணப்பொருட்களை தந்து முடித்தவுடன் அடுத்து பிரச்சார சுற்றை தொடங்கினோம். நம் ஊருக்கு எதனால் வெள்ளம் வந்தது? ஓடைகளை யார் ஆகிரமித்தது? அரசு நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தது? வானத்திலிருந்து பெருமழை ஏன் கொட்டியது? இதற்க்கு இயற்கைதான் காரணமா – இல்லை கார்ப்பரேட் முதலாளிகளா? என்று கேள்வியெழுப்பி புரியவைத்தோம். தெருமுனைப் பிரச்சாரம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களிடமும், பள்ளி மாணவர்களிடையேயும், தொழிலாளர் களிடையேயும் இதையே பிரசுரமாகவும் போட்டு விநியோகித்து வருகிறோம்.

இப்பிரச்சாரத்தின்போது  “உங்கள் வீட்டை அழித்த ஸ்டெர்லைட் போன்ற முதலாளிகள் நிவாரணம் தரும்போது பேசாமல் வாங்கிக்கொள்வது சரிதானா?” என்று சிந்திக்க தூண்டினோம்.

உப்பளத்து முதலாளி ஓடையை ஆக்கிரமித்ததால்தான் சாமி நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஊருக்குள் பாய்ந்தது, வடியாமல் நின்றது. பிச்சைமணி நகர் மக்கள்தான் 50 பேராக மண்வெட்டுயுடன் சென்று ஓடையை அகலப்படுத்தி வெள்ளத்தை ஓரளவு வடியவிட்டனர். அதிகாரிகள் சிறு துரும்பையும் எடுத்துப் போடவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இப்படி பாதிக்கப்பட்ட மக்களும் சில அமைப்புகளும்தாம் களத்தில் இறங்கி வேலைகளில் ஈடுபட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் செயலிழந்து தோற்றுவிட்டது. மக்களை அச்சுறுத்துவது, வழக்குபோடுவது என்பதைத் தாண்டி உருப்படியாக எதையும் திட்டமிடவோ செயல்படுத்தவோ வக்கற்றதாகி விட்டது. உழைக்கும் மக்களுக்கு இந்த அரசின் மீது மரியாதை துளியும் இல்லை. போலீசின் மீதான அச்சத்தையும் போக்கிவிட்டால் இந்த அரசு இனியும் நீடிக்க முடியாது என்பதையே களப்பணியில் கிடைத்த அனுபவங்கள் காட்டுகின்றன.

தகவல்
மக்கள் அதிகாரம்,
தூத்துக்குடி

கடலூர் மாவட்ட மீட்பு பணிகள் தோற்றுப் போன அரசு அதிகாரம்! தோள் கொடுக்குது மக்கள் அதிகாரம்!

டந்த மாத துவக்கத்தில் கடலூர் மாவட்டத்தையே உலுக்கி கெடுத்த கனமழை – பெருவெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்த வேலையில் கடலூர் நகரில் மையமாக பாதிக்கப்பட்ட புருஷோத்தம்மன் நகர் துவங்கி மேலிருப்பு, கீழிருப்பு, விசூர், பெரியகாட்டுப்பாளையம், சின்னக்காட்டுப்பாளையம், ஓணாங்குப்பம், கல்குணம், பீமாராவ் நகர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களுடன் இணைந்து நிவாரண மீட்பு பணியில் ஈடுபட்டனர் மக்கள் அதிகார தொண்டர்கள். இந்நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமானது தமிழகத்தையே முடக்கியது.  குறிப்பாக கடலூர், சென்னை, தூத்துக்குடி, மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்தது. மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

cuddalore-flood-relief-1212-34டி.விகளுக்கு போஸ் கொடுக்கும் வகையில் மடிப்புக்கலையாத மல்லுவேட்டி மைனர்களாக அம்மாவின் அடிமை விசுவாசிகள், அதிகாரிகள் பட்டாளம் நிவாரண பணிகளிலிருந்து மக்களை மீட்டு விட்டதாக பம்மாத்து காட்டியதை கண்டு ஆத்திரம் கொண்டு ஆங்காங்கே முற்றுகையிட்டனர். மற்ற கட்சிகளும் பெயரளவுக்கு நிவாரணம், துப்புரவு என நாடகங்களை நடத்திய வேலையில் அடுத்த சுற்று களம் இறங்கியது மக்கள் அதிகாரம்.

கடலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் நிவாரணம் உதவி என்ற பெயரில் சில தனி நபர்கள், அமைப்புகள் மனிதாபிமான உணர்வோடு பொருட்களை சேகரித்து தமிழகத்தின் பலபகுதிகளிலிருந்து உணர்வுபூர்வமாக உதவி செய்தனர். ஆனால் பல பகுதிகளில் பெரும்பான்மையான நிலைமை வேறுவகையாக இருந்தது.  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சாதி கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் என பலராலும் கொண்டு வரப்பட்ட பொருட்கள் வீதிகளில் நின்று மக்களை ஓடி வரவழைத்து நிவாரணங்களை வீசி எரிந்தனர். நேற்றுவரை 10 பேருக்கு சோறுபோட்ட இந்த உழைக்கும் கைகள் இன்று அனைத்தையும் பறிகொடுத்து குடிக்க தண்ணீரும், தின்னசோறுமின்றி தவியாய் தவிக்கிறது. இன்னொரு பக்கம் குவியும் நிவாரணப்பொருட்கள் வரும்வழியிலேயே அ.தி.மு.க.வினராலும், அதிகார திமிர்பிடித்த ரவுடிகளாலும் வழிமறிக்கப்பட்டு அ.தி.மு.க தான் நிவாரணம் கொடுப்பதுபோல் ஆங்காங்கே நாடகமும் அரங்கேறி கொண்டு இருந்தது. இந்த கேவலமான நிலையை கண்டு உதவி செய்ய வந்தவர்களும், மக்களும் இணைந்து கொண்டு அ.தி.மு.க-வினரை கேள்விகேட்டு மடக்கினார்கள், அறுவறுப்பாக பார்த்து ஆத்திரமடைந்து காறி துப்பினார்கள் மக்கள்.

உப்பு சப்பற்ற வெந்த சோத்தை மட்டுமே உணவு என்ற பெயரில்  தந்த அரசின் செலவு 40 கோடி ரூபாயாம்.  பல இடங்களில் தண்ணீரில் செல்ல முடியாமல் கால்வாய்கள் தூர்ந்து போய் நிரம்பி வழிந்து அரசின் செயல்பாடு அடியோடு முடங்கி துர்நாற்றம் அடித்தது, ஆங்காங்கே மக்களும் போராட துவங்கினார்கள்.  இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட நிர்வாகம் மாவட்ட எல்லையிலேயே போலீசை போட்டு நிவாரண வாகனங்களை மடக்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று, இப்பொருட்கள் அ.தி.மு.க-வின் செல்வாக்கு பகுதிக்கு மட்டுமே கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட காவல்துறையினர் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி பல இடங்களில் நிவாரண வாகனங்களை சூறையாடினார்கள், மிரட்டி பறித்தார்கள். ஆனால் இத்தகைய அனைத்து அச்சுறுத்தல்களையும், தடைகளையும், உடைத்தெறிந்து பு.ஜ.தொ.மு, பு.ம.இ.மு, மக்கள் அதிகார தோழர்களும், தொண்டர்களும், அதன் ஆதரவு நண்பர்களும், அறிவுஜீவிகளும், வணிகர்களும், தொழிலாளர்களும், மாணவர்களும் தமிழகம் எங்கும் நிவாரணப்பொருட்களை சேகரித்து தாங்களே சொந்த பொறுப்பில் வாகனம் வைத்து கொண்டு பொருட்களை எடுத்து வந்தனர்.

கடலூர் பெரியார் சிலை அருகில் நிவாரணம் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது.  நம்முடைய முகாம் அலுவலகத்தையோ, நிவாரணப்பொருட்களின் விநியோகத்தையோ ஒரு செய்தி ஊடகங்கள் கூட ஒளிபரப்ப மறுத்தது. ஆர்.எஸ்.எஸ்-ன் செய்திகளை மட்டுமே வாந்தி எடுத்தனர்.  தினமும் உளவுத்துறை போலிசின் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தினர்.

நகரில் இரு இடங்களில் நிவாரணப்பொருட்கள் பிரிப்பு பணிகளும் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம், மக்கள் எண்ணிக்கை, தேவையின் விவரம் போன்றவை சேகரிக்கப்பட்டன.  இந்த அடிப்படையில் அந்தந்த பகுதிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இரவுபகலாக தோழர்கள் உழைத்தனர்.  ஆம்! கொட்டும் மழையிலும், உணவுக்கு வழியின்றியும், முகாமை துவங்கும்போது கையில் சல்லிகாசும் இல்லை, பொருளும் இல்லை.  மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உணர்வு மட்டுமே தோழர்களை எரிசக்தியாய் இயக்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆய்வுக்கு சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் மாணவர்களும், இளைஞர்களும், “நீங்க டாஸ்மாக்குக்கு எதிரா பாட்டு பாடின இயக்கம்தானே, உங்க பாட்டு உண்மை நிலையை எடுத்து சொல்லிச்சு” என்று வரவேற்றனர்.  அறிமுகமானவர்கள் நண்பர்களானார்கள். அவர்களின் மூலமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேவையின் அடிப்படையில் பாய், போர்வை, பிஸ்கட், உடைகள், வீட்டுச்சாமான்கள், ஸ்டவ் அடுப்புகள், மளிகைப்பொருட்கள் என தரம் பிரிக்கப்பட்டு கடலூர் புருஷோத்தம்மன் நகர், பீமாராவ் நகர், சுரேஷ் நகர், குறவன்குளம், மஞ்சக்குப்பம், ஓம் சக்தி நகர், ராணாகுப்பம், தீர்த்தனகிரி, புலியூர், பாரதி நகர், பூவாலை, குமரப்பன்நாயக்கன்பேட்டை, கரிசமங்களம், சேணாஞ்சாவடி, தானம் நகர், புதுக்குளம், தங்கலிக்குப்பம் சின்னஇருசலாம் பாளையம், பெரிய இருசலாம் பாளையம், சேத்தியார் தோப்பு, புதுச்சேரி நோனாங்குப்பம் என பல கிராமங்களில் விநியோகம் செய்யப்பட்டன.

மக்கள் அதிகாரத்தின் விநியோக முறை என்பது மற்றவர்களைவிட அடிப்படையில் வேறுபட்டதாக இருந்தது ஒவ்வொரு வீட்டிலும் முன்கூட்டியே பாதிப்புகளை கண்டறிந்து டோக்கன் வழங்கப்பட்டது.  டோக்கன் பெற்ற அனைவரையும் ஊரின் மைய இடத்தில் வரவழைத்து அங்கே வெள்ளம் ஏற்படுத்திய சேதத்திறகு யார் குற்றவாளிகள் என்று பேசப்பட்டது.

“மக்களே இது மாணவர்கள், தொழிலாளர்களால் தங்கள் உழைப்பின் மூலம் திரட்டப்பட்ட பொருட்கள் நாங்கள் கொடுக்கும் இந்த நிவாரணம் உண்மையில் இழந்துபோன உங்கள் வாழ்க்கையை முழுமையாக மீட்காது. நிவாரணம் என்பது தீர்வு அல்ல, நம் வாழ்வை பறித்ததற்கான காரணத்தை அறிந்து அதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும், பாதுகாக்க தவறிய அரசமைப்பையும் அம்பலப்படுத்தி போராட வேண்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த நாட்டின் காட்டையும், மலைகளையும், கனிம வளங்களையும் சூறையாடியது இந்த முதலாளி வர்க்கம், அவர்களுக்கு எடுபிடி வேலைசெய்து ஆறு, குளம், ஏரிகளை தூர்வாராமல் நம்மை இந்த துயரத்திற்கு தள்ளி வாழ்வை பறித்தது மக்களை பாதுகாக்க வக்கற்று தோற்று போன இந்த அரசு அதிகாரம். கனமழை, பெருவெள்ளம் இருக்குமென வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்த பின்னும் இத்தகைய இயற்கை பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தவறிய இந்த அரசு செயலிழந்து போனதே காரணம். இனி அரசு அதிகாரிகளையும், ஆளும் கட்சியினரையும், இதர அரசியல் கட்சிகளையும் நம்பி கெஞ்சிகேட்டு, மண்டியிட்டு, மனுகொடுத்து மாற்றம் வராது. எனவே நம்வாழ்வை, நம் மக்களை, நம் கிராமத்தை, நம் நகரத்தை பாதுகாக்க நாம் அதிகாரத்தை கையிலெடுப்பதே தீர்வு. அதற்கு எங்கள் அமைப்புகளும், மக்கள் அதிகாரமும் உங்களுடன் என்றும் துணை நிற்கும்” என்ற பிரச்சாரத்தை மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதை பார்த்த ஒவ்வொரு பெண்களும், “தம்பி யார் வந்தாலும் ஊர்முனையில் நின்று கொண்டு எங்களை நாயா போயா அலைய விடுவாங்க கிடைக்குமோ, கிடைக்காதோ என்று மக்களும் முண்டி அடித்து முட்டி மோதிக்கொண்டு சண்டை சச்சரவுகள் ஆகும். இது எங்களுக்குள்ளேயே பிரச்சனையை உருவாக்கி விடும். ஆனால் நீங்க நிவாரணம் கொடுக்கும் முறை உண்மையிலேயே எங்களை புரிந்துகொண்டு செய்கிறீர்கள்” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தோழர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று உணவு கொடுத்து உபசரித்தார்கள்.  தோழர்களோ மக்களுக்கு புரட்சிகர உணர்வூட்டி வருகிறார்கள்.

ஆம்! இதோ அரசு அதிகாரம் உதிர தொடங்கி விட்டது.  மக்கள் அதிகாரம் மக்களின் வாழ்வாக மலர்ந்து வருகிறது.

இவன்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி
கடலூர் மாவட்டம். செல்: 7200037204

அர்ச்சகர் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!

67
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு,  பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.

2006-ல் தி.மு.க அரசு பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பார்ப்பன சமூகத்தினர் முதல் பல்வேறு பார்ப்பனர் அல்லாத சாதியினர் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு மொத்தம் 206 மாணவர்கள் பயிற்சி பெற்று முறையாக தீட்சையும் பெற்றனர். இந்த பயிற்சிப் பள்ளியே சட்ட விரோதமானது என்றும், இந்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 க்கு விரோதமானது என்றும், இந்து மத நம்பிக்கைக்கும், மரபுகளுக்கும் எதிரானது என்றும் கூறி மேற்படி மாணவர்களின் நியமனத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை அர்ச்சகர்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒரு சங்கமாக திரட்டும் பணியை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் செய்தோம். பிறகு அந்த மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டோம். இத்தனை ஆண்டுகள் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இப்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து, ஒரு வரியில் சொல்வதென்றால் : கோயிலில் நுழையக்கூடாது தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி நந்தனாருக்கு அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு அன்று ஒரே நாளில் வழங்கப்பட்டு விட்டது. இந்த மாணவர்களோ, சுமார் எட்டாண்டு காலம் இழுத்தடிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்று நடையாய் நடந்தனர். தகுதி வாய்ந்த இந்த மாணவர்களை, பிறப்பின் காரணமாக, அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் வெளியேற்றும் வாய்ப்பை பார்ப்பன அர்ச்சகர்களுக்கு இத்தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்தும், நேர்மையற்ற முறையிலும் சொல்லியிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

“திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான் பார்ப்பன அர்சச்கர்கள் தொடுத்த வழக்கு. அந்த அரசாணையை ரத்து செய்வதாக இந்தத் தீர்ப்பு நேரடியாக குறிப்பிடவில்லை. இந்த 206 மாணவர்களை ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் நியமிக்கக் கூடாது என்றும் கூறவில்லை. இவர்களை நியமிக்கலாம். ஆனால் அந்த நியமனம் ஆகம விதிக்கும், மரபுகள் சம்பிரதாயங்களுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டுமென்றும் அதனை மீற முடியாதென்றும் கூறுகிறது. அதாவது “யானையைப் பானைக்குள் அடைக்கலாம். அதே நேரத்தில் பானை உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பதுதான் இத்தீர்ப்பு கூறும் செய்தி.

மயிலை கபாலீசுவரர் கோயிலிலோ, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலோ, திருவரங்கத்திலோ, மதுரை மீனாட்சி கோயிலிலோ இந்த மாணவர்களில் சிலரை அர்ச்சகர்களாக நியமிக்கும் பட்சத்தில், இந்தக் கோயில்களில் பணி புரியும் பார்ப்பன அர்ச்சகர்கள், “அர்ச்சக மாணவர்களின் நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் நிரூபித்து அவர்களை வெளியேற்றலாம்” என்று கூறுகிறது இந்தத் தீர்ப்பு.

அதாவது ஒரு மாணவன் ஏதோ ஒரு கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால், நியமிக்கப்பட்ட மறுநாளே, அவரது நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறுவார்கள். மாணவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்துக்கு நடந்தாலும் நீதியைப் பெற முடியாது என்பதே உண்மை. எனவேதான் இந்தத் தீர்ப்பு மிகவும் தந்திரமானது என்று கூறுகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உடன்பாடு கொண்ட சிலர், திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை என்ற காரணத்தினால், இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர்.

“குறிப்பிட்ட கோயிலில், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியைச் சேர்ந்த நபர்களோ அல்லது  குடும்பத்தினரோதான் வழிவழியாக அர்ச்சகராக வரவேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லையாதலால், இம்மாணவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் பட்சத்தில், “அந்த நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று பார்ப்பன அர்ச்சகர்களால் நிரூபிக்க இயலாது” என்பதே இவர்கள் முன்வைக்கும் வாதம்.

“பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இது இன்று புதிதாகத் தெரியவந்த உண்மை அல்ல. 1971 சேஷம்மாள் தீர்ப்பின்போதே தெரிய வந்த உண்மைதான். ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபு – பழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் பார்ப்பன அர்ச்சகர்கள் எப்போதும் பயன்படுத்துகின்றனர். எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சொற்றொடர்களின் துணை கொண்டுதான் தங்களது ‘உரிமை’யை நீதிமன்றங்களில் அவர்கள் நிலைநாட்டி வருகின்றனர். பார்ப்பனியத்துக்கும் தீண்டாமைக்கும் அரசியல் சட்ட அங்கீகாரத்தை காலங்காலமாக இப்படித்தான் இவர்கள் பெற்று வருகின்றனர்.

பார்ப்பனரல்லாத மாணவர்களை அர்ச்சகராக நியமிப்பதைத் தடுப்பதற்கு எந்த ஆகம நூலிலும் எதுவும் இல்லை என்பதைச் சொல்லி, மாணவர்களை ஆகமக் கோயில்களில் நியமிக்குமாறு கோரி இந்த அரசுக்கும், பார்ப்பன அர்ச்சகர்களுக்கும் எதிராக நாம் போராடலாம். அந்தப் போராட்டம் சாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தையும், நீதிமன்றத்தையும், அரசையும் அம்பலப்படுத்தப் பயன்படுமேயன்றி, சமத்துவ உரிமையை நிலைநாட்டிக் கொள்ளப் பயன்படாது.

மத உரிமை அல்லது மத நிறுவனங்களின் உரிமை என்பது, ஒரு குடிமகனின் சமத்துவ உரிமையின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு போதும் இருக்கக்கூடாது. ஆனால் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துவதை நமது அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. இதன் காரணமாகத்தான் சமூக ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் தீண்டாமையை, மதரீதியில் பார்ப்பனியத்தின் மத உரிமையாக அரசியல் சட்டத்தின் பிரிவு 25 அங்கீகரிக்கிறது.

எனவே, ஆகமம், மரபு ஆகியவற்றின் துணை கொண்டும், அவற்றின் வரம்புக்கு உட்பட்டும் சமத்துவ உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயற்சிப்பதும், பார்ப்பனியத்தையும் தீண்டாமையையும் முறியடிக்க முயற்சிப்பதும்  மதத்தின் அதிகாரத்துக்கு பணிந்து போவதன் இன்னொரு வடிவமாகவே இருக்கும். “தீண்டாமை இந்து மத நன்னெறிகளுக்கு எதிரானது என்று நிறுவுவதன் வாயிலாக தீண்டாமையை ஒழித்து விடலாம்” என்று வாதிட்ட காந்தியை மறுத்து பெரியார் கூறியவற்றை இந்த இடத்தில் நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

சாதி தீண்டாமை ஒழிப்பு என்ற நோக்கத்துக்காக பெரியாரால் முன்வைக்கப்பட்டதே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் கோரிக்கை. எவ்வாறேனும் அர்ச்சகர் பணி நியமனத்தைப் பெற்றுவிடுவது என்பதற்கான தந்திரமாக இதனைச் சுருக்கிவிடலாகாது.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளின் அங்கமாகவே இளையபெருமாள் கமிட்டி பரிந்துரைத்தது என்பதும் இங்கே நினைவு கூரத்தக்கது. ‘நம்முடைய மரபு’ சாதி, தீண்டாமையைக் காப்பாற்றும் மரபு என்பதை யாரும் மறுக்க முடியாது.

“மரபு என்ற பெயரிலோ, பழக்க வழக்கம் என்ற பெயரிலோ  பார்ப்பன ஆதிக்கத்தையோ, சாதியையோ, தீண்டாமையையோ ஒரு மத உரிமையாக அங்கீகரிக்க முடியுமா?” என்பதுதான் இந்த வழக்கில் எழும்பும் மையமான கேள்வி.

“அப்படி  அங்கீகரிக்கலாம்” என்பதைத்தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. “பார்ப்பனரல்லாதவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று எந்த மரபு அல்லது பழக்கம் கூறினாலும் அது ஒரு தீண்டாமைக் குற்றம் என்று சட்டப்பிரிவு 17-ஐக் குறிப்பிட்டு நாங்கள் வாதிட்டோம்.

இது தீண்டாமை குற்றம் அல்ல என்பதற்கு உச்சநீதி மன்றம் ஒரு  விசித்திரமான விளக்கத்தைத் தனது தீர்ப்பில்  சொல்லியிருக்கிறது.  “ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது” என்று கூறுகிறது. இங்ஙனம் சாதி ஆதிக்கத்தையும், தீண்டாமையையும்  மிக நாசூக்கான, தந்திரமான ஆங்கிலத்தில் இந்தத் தீர்ப்பு  நிலைநிறுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே  அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு.

“அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோரவியலாது” என்று கூறி சிவாச்சாரியார்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது 1971-ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு. அது வெற்றி என்று கொண்டாடப்பட்டபோது, “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்” என்று அதனை அம்பலப்படுத்தினார் பெரியார். பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்றது போலத் தெரிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் அவர்களே என்பதை அம்பலமாக்கினார்.

சேஷம்மாள் தீர்ப்புக்குப் பிறகு இன்று புற நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், 206 பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். இப்போதும், தி.மு.க அரசின் அரசாணையை ரத்து செய்யாமல் விட்டதன் மூலம், பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்று விட்டதைப் போன்றதொரு தோற்றத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தோற்றம் உண்மையல்ல. இது சேஷம்மாள் தீர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேம்பட்ட, நுண்ணயமிக்க, தந்திரமான தீர்ப்பு என்பதே உண்மை. இதனை அம்பலப்படுத்துவதுதான் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்ட அனைவரின் பணியாகவும் இருக்க முடியும்.

மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

இந்த சேதாரத்தை வழங்கியோர் அதிகார வர்க்கம் + ஜெயா அரசு

2

chennai floods people experience (2)மிழக மழை வெள்ள சேதத்திற்கு அரசு மற்றும் அரசாங்க கட்டமைப்பின் தோல்வி முக்கியமாக காரணமாகும். உணவு, உடை, இருப்பிடம், மின்சாரம், சாலைப் போக்குவரத்து, கல்வி, வேலை, மருத்துவம் என மக்களின் அடிப்படைத் தேவைகளை வழங்கும் கடமையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அவற்றைத் தனியார்களிடம் தாரை வார்த்துவிட்டு போலீசு, இராணுவம், சிறை, நீதித் துறை போன்ற குண்டாந்தடிகளை மட்டும் அரசு தன்வசம் வைத்துள்ளது. எனினும், இந்த துறைகளும் கூட ஒரு ஆபத்துக் காலத்தில் மக்களைக் காப்பாற்றும் திராணியற்று மொத்தமாய்க் குலைந்து நொறுங்கியதை வெள்ளத்திற்குப் பிந்தைய நாட்களில் நாம் கண்டோம்.

இத்துறைகளின் கடைமட்ட ஊழியர்கள் ஓரளவிற்கேனும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்பது உண்மை. ஆனால் அவர்களும் கூட மேலிருந்து எந்தவிதமான வழிகாட்டுதலோ, கட்டளைகளோ இன்றி சொந்த விருப்பத்தில் மட்டுமே செயல்பட்டுள்ளனர். இத்துறைகளின் உயரதிகாரிகளோ எதிர்வரும் ஆபத்தைக் குறித்தோ, ஆபத்து நேர்ந்த பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ கிஞ்சித்தும் அக்கறையின்றி இருந்துள்ளனர்.

ஃப்ரண்ட்லைன் பத்திரிகை அரசு இயந்திரம் பக்கவாதத்தால் முடமாகிக் கிடந்த நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறது – “ஒவ்வொருவரும் வேறு யாரோ ஒருவருடைய உத்தரவிற்குக் காத்திருந்தனர்”.

ஏன்?

கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்தில் கருவாகி காலனிய ஆட்சிக்காலத்தில் உருவாகி பின் போலி சுதந்திர இந்தியாவில் தனது முழு பரிமாணத்தை அடைந்த அரசு எந்திரம் மக்களுக்கு எந்த வகையிலும் என்றுமே கடமைப்பட்டதில்லை. அன்றாட சிவில் நிர்வாக பணிகள் மட்டுமின்றி, மக்களால் ’ஜனநாயக’ முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் நிறைவேற்றும் சட்டங்களை அமல்படுத்தும் அதிகாரமும் பல்வேறு துறைகளின் செயலாளர்களான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், மணியக்காரர்கள், காவல்துறை மற்றும் சிவில் நிர்வாகத்துறையின் அதிகார வர்க்க வலைப்பின்னலிடமே உள்ளது.

இந்த மொத்த நிர்வாக கட்டுமானமும், மக்களுக்கு பதிலளிக்கும் கடமையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதோடு (உங்களால் தவறிழைத்த ஒரு கலெக்ட்டரின் பதவியைப் பறிக்க முடியுமா?) மக்களுக்கு மேலானவர்களாக தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. எனவே, மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் தனது கடமையில் இருந்து தவறினாலும் கூட எவரும் தண்டிக்க மாட்டார்கள் என்கிற தடித்தனம் இவர்கள் இயல்பிலேயே உள்ளது.

bureaucracyஆனால், வெள்ள காலத்தில் இந்த நிர்வாக இயந்திரம் முற்றாகத் தோற்றுப் போனதற்கு இது மட்டுமே காரணமில்லை.

தொண்ணூறுகளுக்கு பின் துரிதப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையிலான தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயமாக்கல் நடவடிக்கைகளுக்குத் தகுந்தவாறு மொத்த அரசு எந்திரமும் மீள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைகளின் தலைமைச் செயலாளரும் பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் கையாளாக மறுவார்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியே அந்நிய முதலாளிகளுக்கும் உள்நாட்டு தரகு வர்க்கத்திற்கும் சேவை செய்தற்கென மாற்றப்பட்டுள்ளது.

அடையாற்றின் கரையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மியாட் மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் வெள்ள நீர் புகுந்ததால் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர்கள் செயலிழந்தன. இதன் காரணமாக 18 நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டனர். டிசம்பர் 4-ம் தேதி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைச் செயலளர் ஞானதேசிகன், ”உங்களுக்கே தெரியும் மியாட் மருத்துவமனை தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. மியாட் போன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பு உள்ளது. மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளைக் கைவிட்டுள்ளது. சட்டம் அதன் கடமையைச் செய்யும்” என்கிறார்.

நன்றாக கவனியுங்கள், இந்த பேட்டி வெளியானது டிசம்பர் 4. அதாவது வெள்ள பாதிப்புகள், மக்கள் படும் துன்பங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் உண்டாக்கி விட்டிருந்த சமயத்தில் தான் மியாட் நிகழ்த்திய படுகொலைகள் பற்றிய தகவல்கள் கசிந்தன – தொடர்ந்து தலைமைச் செயலரின் பேட்டியும் வருகிறது.

அதே நாளில் ஞானதேசிகன் குறிப்பிட்ட் “சட்டத்தின் கடமையை” நிலைநாட்டும் அதிகாரம் கொண்ட சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனின் அறிக்கையும் வெளி வருகிறது. அதன்படி, சுகாதாரத் துறை நடத்திய ‘விரிவான’ விசாரணைகளின் படி, இறந்து போன நோயாளிகள் எவரும் பிராணவாயு சிலிண்டர்கள் இல்லாமலும், ஜெனரேட்டர்கள் செயலிழந்ததாலும் மரணிக்கவில்லை என்றும், அவர்கள் சில நாட்களுக்கு முன்பே வேறு மருத்துவ காரணங்களுக்காகவே இறந்தனர் என்றும் தெரிவிக்கிறது.

ஜெயா விடுதலைக்கு அடிமைகளின் நேர்த்திக் கடன்
ஜெயா விடுதலைக்கு அடிமைகளின் நேர்த்திக் கடன்

பத்திரிகை ஊடகங்கள், மக்களின் ஆவேசங்களுக்கு ஒரு பதில். அந்த பதிலுக்கு நேர் முரணாக மேற்கொண்டு இந்த கொலைகளை எப்படி ஊத்தி மூடப்படப் போகிறார்கள் என்பதற்கு ஒரு விசாரணை மற்றும் அறிக்கை.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த பெரும் விபத்துக்களையும், பேரிடர்களையும் அதனைத் தொடர்ந்து அந்த விவகாரம் எப்படி ஊத்தி மூடப்பட்டது என்பதையும் கவனித்துப் பாருங்கள். ஆந்திரத் கூலித் தொழிலாளிகளை பலிவாங்கிய மவுலிவாக்கம் கட்டிடம் கட்ட அனுமதியளித்தது அரசு நிர்வாகம் தான். தீயில் குழந்தைகளைக் கருக்கிய கும்பகோணம் பள்ளிக்கு விதிமுறைகளை மீறி அனுமதியளித்ததும் அதிகார வர்க்கம் தான்.

2012-ம் ஆண்டு இந்துப் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றின்படி (Our City, an illegal City) சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட கட்டிடங்களில் 50 சதவீதமானவை விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டவை தாம். இவையனைத்திற்கும் சட்ட விதிமுறைகளை மீறி அனுமதியளித்தது சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அதிகார வர்க்கம் தான்.

இது தவிர பொருளாதார வளர்ச்சி என்கிற மந்திர மாங்காயை தரவல்லதாக சொல்லப்படும் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் சென்னை நகருக்கு உள்ளும் அதைச் சுற்றிய புறநகர்ப் பகுதிகளிலும் ஏராளமான நிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்தப் பன்னாட்டுத் தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, கழிவு நீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஒருபக்கம் என்றால், இந்த நிறுவனங்களில் அநேகமானவை நீர் நிலைகளின் ஆக்கிரமித்தும், சதுப்பு நிலங்களின் மீதுமே அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச் சூழல் விதிமுறைகள், கட்டுமான விதிமுறைகள், கழிவு நீர் மேலாண்மை தொடர்பான விதிமுறைகள் என்று சகலத்தையும் காற்றில் பறக்கவிட்டு இவற்றுக்கான அனுமதியை அளித்துள்ளது அதிகார வர்க்கம். பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்ளையர்களுக்கும் சுரண்டல்வாதிகளுக்கும் சேவை செய்வது மட்டுமின்றி – அதை மக்கள் எதிர்த்தால் களத்திலிறங்கி அவர்களை ஒடுக்கும் வேலையையும் அதிகார வர்க்கமே செய்கிறது.

ஆற்று மணல் கொள்ளை, தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என்று இயற்கை வளங்களையும், நதிநீர்ப் படுகைகளையும் கொள்ளையர்கள் சுரண்டித் தீர்ப்பதை எதிர்த்து மக்கள் போராடினால் வருவாய்த் துறை அதிகாரிகளும் காவல்துறை குண்டாந்தடிகளும் மக்கள் எதிர்ப்பை நசுக்கி தங்கள் எஜமானர்கள் யார் என்பதை உணர்த்துகின்றனர். ஆக, மொத்த அரசு எந்திரமும் மக்கள் சேவைக்கென இல்லாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களின் கைக்கூலிப் பட்டாளமாக மாற்றப்பட்டுள்ளது.

வட தமிழகமும் குறிப்பாக சென்னையும் சந்தித்த இயற்கைப் பேரழிவுக்கு அரசு எந்திரம் ஒருமுனையில் காரணமாக உள்ளது என்றால், இன்னொரு முனையில் அந்த எந்திரத்தை ‘வேலை’ வாங்கும் பொறுப்பில் தற்போது இருக்கும் ஜெயா தலைமையிலான அரசின் கையாலாகத்தனமும் உள்ளது.

stickerசமீபத்தில் (வெள்ளத்திற்குப் பின்) ஜெயலலிதாவின் பாதுகாவலுக்குப் பொறுப்பான இராண்டு போலீஸ் உயரதிகாரிகள் மாற்றப்பட்டனர். ஏன் மாற்றப்பட்டனர் என்பது பற்றி பத்திரிகைகள் தெரிவிக்கப்பட்ட காரணத்தை கவனியுங்கள் – அதாவது, பிரதமர் மோடி வெள்ள பாதிப்புகளைக் காண சென்னை வந்த போது அவரை வரவேற்க ஜெயலலிதா சென்றுள்ளார். அப்போது அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பை நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை புகைப்படக் கலைஞர் படமெடுக்க இந்த அதிகாரிகள் தடுத்து மறித்துள்ளனராம். எனவே அந்த அதிகாரிகளை ஜெயா பந்தாடினாராம். இது தான் ஜெயலலிதா.

ஒரு அதிகாரியோ அமைச்சரோ நிர்வாகத் திறமையில்லாத காரணத்திற்காக ஆட்சித் தலைமை மாற்றுவதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், ஜெயாவைப் பொறுத்தவரை எந்தக் காரணமும் தேவையில்லை. தன் முன்னே குனியாமல் நின்றார், மீசை ரெண்டு இன்சுக்கு மேலே முறுக்கிவிடப்பட்டிருந்தது, சட்டைப் பையில் வெளியே தெரியும் படி தனது படம் இல்லை போன்ற சல்லித் தனமான சில்லறைக் காரணங்களே ஒரு அமைச்சரையோ அதிகாரியையோ பந்தாடப் போதுமானது. இப்படித்தான் கெடா மீசை ஐ.பி.எஸ் நடராஜன் ஆள் மாறாட்ட படத்திற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். இத்தகைய கூத்துக்கள் உலகில் எங்கேயாவது உண்டா?

குழந்தைகள் பொம்மைகளை அடித்து உருட்டி விளையாடுவதைப் போல் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் மட்டுமல்ல – மக்களையும் நடத்த தயங்காதவர் ஜெயலலிதா. ஒரே கையெழுத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வீட்டுக்கனுப்புவதோ, பத்தாயிரம் சாலைப் பணியாளர்களைத் தெருவில் நிறுத்துவதோ, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அடித்துத் துவைத்து ஊருக்கு வெளியே வீசிவிட்டு வருவதோ அவர்கள் பழக்கமில்லாத சாலையில் அவர்கள் தடுமாறுவதோ ஜெயலலிதாவின் மனதில் சிறு சலனத்தையும் கூட ஏற்படுத்தியிருக்காது.

அதனால், தான் வெள்ளத்தால் சகலத்தையும் இழந்து நின்ற மக்களைப் பார்த்து கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி “வாக்காளப் பெருமக்களே” என்று அவரால் விளிக்க முடிகிறது. அதனால் தான் இத்தனை மக்களின் வாழ்வும் பொருளாதாரமும் அழிந்து எல்லோரும் தெருவில் நிற்கும் போது மிருக காட்சி சாலையில் பிறந்த புலிக் குட்டிகளுக்கு நியூமராலஜி படி பெயர் சூட்டி மகிழ முடிகிறது. இனி ரோம் எரியும் போது பிடில் வாசித்தான் நீரோ என்ற பழமொழியில் ஜெயாதான் போட்டியின்றி உட்கார்வார்.

போனபார்டிஸ்டுதனமான அல்லது முகமது பின் துக்ளக் தனமான அல்லது பாசிஸ்டுதனமான இந்த கோமாளித்தனங்களைத் தான் பார்ப்பன அறிவுஜீவிகளும், ஊடகங்களும் நிர்வாகத் திறமை என்றனர். அம்மாவின் முன் அடிமைகளைப் போல் மந்திரிப் பிரதானிகள் விழுந்து கிடந்த காட்சியைக் கண்டு உலகமே காறித் துப்பிய போது இவர்கள் அதையெல்லாம் ஜெயலலிதாவின் அசைக்க முடியாத அதிகாரத்தின் அடையாளங்கள் என்று துதி பாடினர். மூன்று மாதங்களுக்கும் ஆறு மாதங்களுக்கும் ஒரு அமைச்சர் பந்தாடப்படும் நிலையில் அவரால் தனது துறையைப் பற்றி எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

car jayaபொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் வெளியிட்ட லஞ்சப் பட்டியலின் படி, ஒவ்வொரு பொதுப்பணித் துறை ஒப்பந்தத்திற்கும் கீழிருந்து மேல் வரை யார் யாருக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்க வேண்டும் அந்த லஞ்சப் பணம் கீழிருந்து மேல் நோக்கி எப்படி பாய்கிறது என்பது அம்பலமானது. கும்பினி ஆட்சிக் காலத்தில் ஜமீந்தார்களும், குறுநில மன்னர்களும் மக்களிடம் அடித்துப் பறித்து கும்பினிக்கு கப்பம் கட்டியதைப் போறே அமைச்சர்களும் போயஸ் தோட்டத்திற்கு கட்ட வேண்டிய கப்பத்தை வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர். அமைச்சர்களின் செயல்பாடுகள் வட துருவத்திலும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் தென் துருவத்திலும் நிறுத்தப்பட்டன.

தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் அதிகாரிகளோ அமைச்சர்களோ தமது துறை சார்ந்து திறம்படச் செயல்பட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவர்கள் அம்மாவின் மனதைக் குளிர வைத்து விட்டாலே போதுமானது. அதனால் தான் ஜெயா கர்நாடக சிறையில் இருந்த போது மொத்த அமைச்சரவையும் பால்காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, மண்சோறு சாப்பிடுவது, மொட்டை அடித்துக் கொள்வது, தாடியை மழிக்காமல் பரதேசிகளைப் போல் திரிவது என்று கோமாளிகளைப் போல் அலைந்தார்கள்.

அதிகாரிகளும் சளைத்தவர்கள் இல்லை. ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போதும், சிறீரங்கம் இடைத்தேர்தலின் போதும் தேர்தல் கண்காணிப்பாளர்களாக இருந்த மாவட்ட ஆட்சியாளர்கள் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் போன்றே செயல்பட்டனர். நவம்பர் மாத மழையைக் குறித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியாளர், “புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்கிணங்க பெய்த மழை” என்று குறிப்பிடுகிறார். உண்மையில், கடுமையாக கண்டிக்க வேண்டிய இந்த கோமாளித்தனத்தை ஊடகங்கள் கேலி செய்து அந்த ஆட்சியர் பேசியதன் பின்னிருந்த அடிமைத்தனத்தைக் கண்டிப்பதில் இருந்து தவறினர்.

ஒருபக்கம் உலகமயமயமாக்கலுக்கு சேவை செய்வதற்கு தகுந்தாற்போல் ஏகாதிபத்திய சேவைக்கென கைக்கூலிகளாக வார்த்தெடுக்கப்பட்ட அதிகார வர்க்கமும், இன்னொரு பக்கம் தன்னியல்பிலேயே அரசியல் போனபார்டிஸ்ட்டான ஜெயலலிதாவும் கச்சிதமாக பொருந்திப் போனார்கள். இன்று சென்னை மற்றும் வட தமிழகத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் துன்ப துயரங்களுக்கும் இந்தக் கேடு கெட்ட கூட்டணியே காரணம்.

cuddalore-flood-relief-pp-posterஏரி குளங்களை ஆக்கிரமித்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்ப்பது, மணல் கொள்ளைக்கு ஆறுகளைத் திறந்து விடுவது, தாதுமணல் கொள்ளைக்கு விளக்குப் பிடிப்பது, கிராணைட் கொள்ளைக்கு துணை போவது, ஆறு குளங்களை கோக் பெப்சிக்கு சல்லிசான விலைக்கு பட்டா போட்டுக் கொடுப்பது போன்ற “வளர்ச்சித்” திட்டங்களை கொஞ்சமும் மனச்சலனமோ கருணையோ இன்றி செயல்படுத்த தயங்காதவர் என்பதால் தான் திறமையான நிர்வாகியாக ஜெயா முன்னிறுத்தப்படுகிறார். இதேகாரணங்களுக்காகத் தான் மோடியும் “வளர்ச்சி” நாயகனாக முன்னிறுத்தப்படுகிறார்.

ஜெயா ஒரு சேலை கட்டிய மோடி; மோடி வேட்டி கட்டிய ஜெயலலிதா.

அதிகாரிகளும், அமைச்சர்களும், அரசு எந்திரமும், அரசாங்க பிரதிநிதிகளும் தகுதியற்ற அடிமைக் கும்பலாக சீரழிந்து போனதன் ஒரு சுருக்கமான சித்திரம் இது தான். இவ்வாறாக தமிழக அரசு நிர்வாக ரீதியில் முற்றாகத் தோல்வியுற்ற நிலையில் தான் பெருமழை வந்து சேர்ந்தது. மக்களின் வாழ்வை மழை அழித்து விட்டது. இதை இயற்கை மனிதனுக்கு வழங்கிய தண்டனை என்று அரசியலற்ற முறையில் புலம்புகின்றனர் சில அறிஞர்கள். ஆனால், அழியத் தயாரான கொலை நிலமாக தமிழகத்தை மாற்றி வைத்தவர்களை யார் தண்டிக்கப்பது?

இப்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில், முட்டையில் பேன் பார்க்கும் வேலையைத் துவங்கியுள்ள முதலாளிய ஊடகங்கள் “ஆக்கிரமிப்புகள்” பற்றிப் பேசத் துவங்கியுள்ளன. ஆனால், இந்த அக்கறையின் இலக்கெல்லாம் அடையாறு கூவம் நதியோரங்களில் குடிசை போட்டு பிழைப்பு நடத்தும் ஏழைகளை நோக்கியே இருக்கிறது.

உண்மையில் சென்னை வெள்ளத்திற்கு குடிசைகளின் ஆக்கிரமிப்பு தான் காரணமா?

– தொடரும்

  • தமிழரசன்