Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 636

கோவையில் இன்று பகத்சிங் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்

1

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் பாதையில் அணி திரள்வோம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாணவர்களே, இளைஞர்களே,

ன்று இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி பிறகு நம் நாட்டை அடிமைப்படுத்தி இங்குள்ள வளங்களை ஏராளமாகக் கொள்ளையடித்துச் சென்றது. அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பறித்து அடக்குமுறைகளை ஏவியது. ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களை தீவிரவாதிகள் என்றும் தேசத் துரோகிகள் என்றும் கூறிக் கைது செய்து கடுமையாக சித்ரவதை செய்தது.

எனினும், கைது, சிறையெல்லாம் துச்சமாக மதித்து இம்மண்ணிலிருந்து அந்நிய ஆதிக்கத்தைத் துடைத்தெறிய தீரமிக்க போராட்டத்தை நடத்திய போராளிகள் ஏராளம். இன்று பெயரளவுக்கேனும் சுதந்திரம் இருக்கிறதென்றால் அது அந்த தியாகத்தின் பலன்தான். சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையல்ல, அது நம் முன்னோர்களின் ரத்தத்தையும், கண்ணீரையும், சுவாசத்தையும் கலந்து தியாகத்தால் எழுதப்பட்ட சரித்திரம். இப்படிப்பட்ட சரித்திரத்தைப் படைத்தவர்களின் முன்னோடிதான் தோழர் பகத்சிங்

செப்-28, தாய் நாட்டின் மானம் காக்க தூக்குக் கயிற்றைத் துணிந்து முத்தமிட்ட பஞ்சாப் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாள் !

ஆங்கிலேய ஏகாதிபத்திய அடிவருடியாக இருந்த காந்தி மற்றும் காங்கிரஸின் துரோகத்தை தோலுரித்தார் பகத்சிங்.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை இம்மண்ணிலிருந்து விரட்டி சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் எனும் உன்னத லட்சியத்திற்காக போராடியவர், பகத்சிங்.

இந்தத் தீரமிகு போராட்டத்தில் மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப தன் மரணத்தையே வேலைத் திட்டமாக முன்வைத்தார், பகத்சிங்

“புரட்சி ஓங்குக!” என்ற பகத்சிங்கின் முழக்கம் நாடு முழுக்க வியாபித்தது. தனது 23-வது வயதிலேயே தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடி இன்னுயிர் ஈந்த பகத்சிங்கின் மரணம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கிளர்ச்சியைத் தோற்றுவித்தது.

அன்று ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி கொள்ளையடித்தது என்றால் இன்றோ பல பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாகி வருகிறது நமது நாடு. காடுகளும், மலைகளும் இன்னபிற மதிப்புமிக்க இயற்கை வளங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளின் லாப வேட்டைக்காக இரக்கமின்றி சூறையாடப்படுகின்றன. அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களும் சுரண்டப்படுகின்றனர். நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிக்கப்பட்டு பன்னாட்டுக் கம்பெனிகளின் கப்பல்கள் நமது கடல் வளத்தை அபகரிக்கின்றன. இதனால் மீன் வளமும் அழிந்து மீனவர்களின் வாழ்க்கையும் அழிந்து வருகிறது.

பணம் இல்லாதவனுக்குப் படிப்பு இல்லை. படித்தவனுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தவனுக்கு அது நிரந்தரமில்லை என்று பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்வு நிர்க்கதியாகிவிட்டது. லஞ்சம், ஊழல், முறைகேடுகளில் அதிகார வர்க்கமே புழுத்து நாறுகிறது. கொலை, கொள்ளை, பெண்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றும், நீரும், உணவும் நஞ்சாகி நோய்கள் பெருகுகின்றன. வாழவழியின்றி தற்கொலைச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் என்ன காரணம் ? இந்த அரசு என்பது மக்கள் நல அரசு அல்ல.

மோடி ஆட்சிக்கு வந்தால் தேனும், பாலும், ஆறாக ஓடும் என மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஆனால் நடப்பதென்ன? பன்னாட்டுக் கம்பெனிகளின் நலனுக்கான, பார்ப்பன கும்பலுக்கான ஆட்சிதானே நடக்கிறது? சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு, ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் 250-க்கும் மேற்பட்ட மத மோதல்களை நடத்தியுள்ளது சங்கப் பரிவாரக் கும்பல்.

தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்பட்டு தொழிலாளிகளின் உரிமை பறிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விவசாயிகளுக்கு மானிய வெட்டு, தடை செய்யப்பட வேண்டிய மரபணு மாற்று பயிர்கள் பயிரிட அனுமதி, கல்விக்கான மானியம் குறைப்பு, வரி அதிகரிப்பு என பாசிச மோடியின் ஆட்சியில் மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர்.

அன்று நாட்டைக் காட்டிக் கொடுத்த துரோகிகள் எட்டப்பன், தொண்டைமான், ஆற்காடு நவாப் என்றால் இன்று காங்கிரஸ், பாஜக மற்றும் பெரிய, சிறிய ஓட்டுக்கட்சிகள்,  அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (என்‌.ஜி‌.ஓ.க்கள்).

எனவே, மாறி மாறி ஓட்டுப்போட்டு பலனில்லை, பன்னாட்டு கம்பெனிகளை இம்மண்ணிலிருந்து விரட்டி உழைக்கும் மக்களின் அரசமைய பகத்சிங் மேற்கொண்ட புரட்சி பாதை இன்று அவசியமாகியுள்ளது.

பகத்சிங்க்கின் வாரிசுகளாய் சமுதாய மாற்றத்தைப் படைப்போம் வாரீர் !

“இந்தப்போர் எங்களோடு துவங்கவும் இல்லை
எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை”
– தோழர்.பகத் சிங்

poster

அரங்குக் கூட்டம்

நாள் : 26.09.2014
இடம் : அண்ணாமலை அரங்கம் (சாந்தி திரையரங்கம் அருகில், கோவை)
நேரம் : மாலை 4.00 மணி

நிகழ்ச்சி நிரல

தலைமை
தோழர் உமா,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

வரவேற்புரை
தோழர் திலீபன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை
தோழர் காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர கலை நிகழ்ச்சி
புமாஇமு குழுவினர்

நன்றியுரை
தோழர் கிரிஷ்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை
8220840468
rsyfkovai@gmail.com

வேதாரண்யம் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ் ரவுடித்தனம்

2

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கோடியக்காடு கிராமம் சுமார் 400 குடும்பங்களைக் கொண்டது. இங்கு வாழும் மக்கள் மீன் பிடித்தொழிலையும் உப்பளத் தொழிலையுமே நம்பி வாழ்ந்து வருகிறார்கள். அன்றாடம் உழைத்து வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் நிலையில் இருக்கும் இம்மக்களின் ஒற்றுமையை குலைக்க அரசும் அதிகார வர்க்கமும் மற்றப் பகுதிகளில் செயல்படுத்தும் தந்திரங்களைப் போல இங்கு உருவாக்கப்பட்டதுதான் வீர சைவப் பேரவை (பண்டாரம்) என்கிற சாதிச் சங்கம்.

காமராஜ்
வேதாரண்யம் எம்.எல்.ஏ காமராஜ்

இப்பகுதியில் வசித்துவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆதரவாளர் குமார் என்பவரின் குடும்பப் பிரச்சினையில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் இச்சங்கத்தின் செயல்பாடு குறித்து அவர் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். கட்டப்பஞ்சாயத்தாரின் அழுத்தம் காரணமாக காவல் நிலையத்தில் புகார் ஏற்கப்படாமல் போக உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. காவல்துறை வழக்கின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குமாரின் மனைவி லதாவை மானபங்கப்படுத்தி தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் மூலம் அளித்த புகாரின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் கொடுத்த காரணத்தால் கட்டப்பஞ்சாயத்தினர், பாதிக்கப்பட்ட குமாருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

இதனை ஏற்காத குமார் மீது சாதி சங்கத்தின் தூண்டுதலின் பேரில் அவரது தந்தையும் சகோதரர்களும் சேர்ந்து கடுமையாக கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். பாதிக்கப்பட்ட குமார் ரத்தம் வழிந்து கிடந்ததை பார்த்து அப்பகுதியை சேர்ந்த 5 குடும்பத்தினர் உதவியோடு வேதாரண்யம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து புகார் பதிவு செய்யப்படுகிறது. ஆனாலும் தாக்குதல் தொடுத்த நபர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கட்டப்பஞ்சாயத்து நபர்களையும் தாக்கியவர்களையும் கைது செய்யக்கோரியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரைக் கண்டித்தும் வி.வி.மு சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. மேலும் முதலமைச்சர், மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் என புகார் மனுக்கள் அனுப்பப்பட்டதோடு மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் நேரில் சந்தித்தும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

வி.வி.மு வின் இந்நடவடிக்கை கட்டப்பஞ்சாயத்தினருக்கு ஆத்திரமூட்டியதால் குமார் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட 6 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். திருமணம், இறப்புக்கு ஒதுக்கி வைத்தல், குடிநீர் எடுக்க விடாமல் தடுப்பது, கடைகளில் சாமான்கள் கொடுக்கக்கூடாது என மிரட்டுவது என அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் வேதாரண்யம் காவல்துறை துணை கண்காணிப்பாளரின் பரிந்துரையின் அடிப்படையில் வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

சமாதானக் கூட்டத்தில் நாங்கள் இனி அவ்வாறு செய்யமாட்டோம் என எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்ற கட்டப்பஞ்சாயத்தினர் 6 குடும்பத்தினரையும் தொடர்ந்து மிரட்டுகின்றனர். இதனையொட்டி காவல் துறையினரிடம் புகார் செய்யப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த கட்டப்பஞ்சாயத்தினர் கும்பலாகச் சேர்ந்து குமார் என்பவரை மீண்டும் கடுமையாக தாக்குகின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு குமாருக்கு ஆதரவானவர்களையும் தாக்க முற்படுவதோடு குமாரை மருத்துவமனைக்கு கொண்டு போக முடியாமல் தடுக்கின்றர்.

இதனைக் கேள்விபட்ட வி.வி.மு. பொறுப்பாளர் தோழர் தனியரசு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவே காவலர்கள் சென்று தாக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர். அன்று இரவு குமாருக்கு ஆதரவானவர்களை 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு கற்களாலும் ஆயுதங்களாலும் தாக்க முற்படுகின்றனர். இதனை அறிந்த வி.வி.மு அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கின்றனர். எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதக் காரணத்தால் இரவு 12 மணியளவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று முறையிடுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த துணைக் கண்காணிப்பாளர் புகார் கொடுக்கச் சென்ற அனைவர் மீதும் 307  பிரிவில் வழக்கு போடுவேன் என மிரட்டுகின்றார்.

அதன்பின் கோடியக்காடு பகுதிக்கு இரண்டு காவலர்களை ரோந்து பணிக்காக அனுப்புகின்றார். போலிசைக் கண்டதும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ஓடிவிடுகின்றனர். காலையில் போலிசு சென்றதும் பால்சாமி, அவரது மகன் மற்றும் அவரது மகள் ஆகியோரின் வீடுகளையும் அவர்களையும் கல் வீசியும் ஆயுதங்களாலும் வீடு புகுந்து தாக்குகின்றனர், ரவுடிக் கும்பல். இதனை அறிந்த வி.வி.மு. தோழர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கின்றனர். போலிசு அங்கு சென்ற பிறகு தாக்குதல் தொடுத்தவர்கள் ஓடிவிடவே தாக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் தோழர்களுடன் சென்று புகார் தெரிவிக்கின்றனர்.

வீசியெறியப்பட்ட அறைக்கலன்கள்
வீசியெறியப்பட்ட அறைக்கலன்கள்

அதன்பிறகு வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ என் வி. காமராஜ் என்பவர் வி.வி.மு தோழர்கள் தனியரசு, வெங்கடேசன் ஆகிய இருவரையும் அவரது ஆட்களை அனுப்பி வலுக்கட்டாயமாக தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு சாதி சங்க கட்டப்பஞ்சாயத்து கும்பல் மற்றும் அவரது அடியாட்கள் முன்னிலையில் தோழர்கள் இருவரையும் கடுமையான வார்த்தைகளால் வசைபாடி,

“எல்லா பிரச்சனைகளிலும். வி.வி.மு, ம.க.இ.க எதுக்குடா வரிங்க? நாங்க ஆளுங்கட்சி இருக்கிறோம்டா, நாங்க இருக்கிறப்போ நீங்க எதுக்கடா வரிங்க? எல்லா ஊரிலும் அ.தி.மு.க ஆளும் கட்சி எவ்வளவு ரவுடித்தனம் செய்றாங்க பாத்தியா? இதுக்கப்புறம் எந்த பிரச்சினையிலும் தலையிடக் கூடாது. அப்படி மீறி தலையிட்டா உங்கல ரோட்ல ஓடவுட்டு வெட்டுவேன், கடையெல்லாம் அடிச்சு நொறுக்கிடுவேன். பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளுவேன்”

என மிரட்டி அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக வி.வி.மு சார்பில் தோழர் தனியரசு முதலமைச்சர், மனித உரிமை ஆணையம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டதோடு காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்தும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து வி.வி.மு மற்றும் பு.மா.இ.மு. சார்பில் சுவரொட்டி மாவட்டம் முழுதும் ஒட்டப்பட்டது.

இதனால் மேலும் ஆத்திரமுற்ற எம்.எல்.ஏ தனது ஆட்களை அனுப்பி வேதாரண்யம் பகுதியில் தோழர் தனியரசு நடத்தி வந்த காமட் பர்னிச்சர் கடையை உடைத்து சுமார் 1 லட்சத்துக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தி ரோட்டில் வீசியெறிந்திருக்கிறார். சட்டமன்ற உறுப்பினரின் ஆட்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூபாய் 30,000 ரொக்கத்தையும் திருடிச் சென்று விட்டனர்.

சூறையாடப்பட்ட கடை
சூறையாடப்பட்ட கடை

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  சூறையாடப்பட்ட கடையை படம் எடுத்த ஊடகங்களை மிரட்டி படத்தை அழித்தனர், காமராஜின் ஆட்கள். இதனால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் செய்தி வெளியிடவில்லை.

தனது கட்டப்பஞ்சாயத்து ரவுடித்தனத்திற்கு எதிராக இருந்த நபர்களை ஒடுக்க மீனவர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி கலவரத்தை உண்டாக்கிய எம்.எல்.ஏ என்.வி, காமராஜ் அதற்கு எதிராக யார் வாயை திறந்தாலும் அவர்களை நிம்மதியாக விடுவதில்லை. விவிமு தோழர்கள் மீது கொலை மிரட்டல் விடுவதற்கு இன்னும் பல காரணங்கள் உள்ளன.

  • வேதை நகரப்பகுதியில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக விவிமு-பு.மா.இ.மு. அமைப்புகள் நூற்றுக்கணக்கான மக்களை திரட்டி சாலை மறியல் மற்றும் முற்றுகை செய்த போது அக்கடையின் சாக்னா கடையை இவரது எடுபிடிக்கு மாற்றிக்கொடுக்க இருந்ததால் அந்த போராட்டத்தை கைவிடுமாறு தோழர்களிடம் பேசினார். தோழர்களிடம் அது எடுபடாமல், சாராயக்கடை அகற்றப்பட்டது.
  • நகராட்சியில் துப்புரவு பணிக்கு ஆதிக்க சாதியினரை ( தேவர், முத்தரையர்) தேர்ந்தெடுத்து அவர்களை அந்த வேலையில் ஈடுபடுத்தாமல் அலுவலக பணியில் ஈடுபடுத்தியது எம்.எல்.ஏ தலைமையில்தான் நடந்தது. இதற்கு எதிராக தாழ்த்தப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சார்பாக விவிமு துணையோடு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் மனு போடப்பட்டது. இது தொடர்பாக எம்.எல்.ஏ என்.வி. காமராஜ் தோழர்களை அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து பார்த்தார். தோழர்கள் அடிபணியவில்லை.
  • ஏற்கனவே பகுதியில் உள்ள கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் உப்பள தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக விவிமு தலையிட்டு சம்பள உயர்வு பெற்றுத் தந்தது காமராஜூக்கு எரிச்சல் ஊட்டியிருந்தது.
  • இதே பகுதியில் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழாவில் ஆபாச நடனம் ஆட விடப்பட்டது தோழர்களால் தட்டிக்கேட்கப்பட்டது. அதனால் ஆபாச நடனம் நிறுத்தப்பட்டது. அப்போது விழாவில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்த இப்பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான  காமராஜூக்கு கோபம் தலைக்கு ஏறியது. அன்றைக்கு ஏதும் பேச முடியவில்லை.
  • பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் சரியான முறையில் மருத்துவர் வருவதில்லை. இது தொடர்பாக தோழர் தனியரசு ஒரு நாள் மருத்துவ மனையில் போராடி,  மருத்துவமனைக்கு வட்டாட்சியர் வருகிறார், அவரிடம் முறையிடுகிறார், பிரச்சினை பெரிதாகிறது. அன்று இரவு மருத்துவராக இருந்தவர் அதிமுக பிரமுகரின் மகள் என்பதால் இச்சம்பவம் எம்.எல்.ஏ.வுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

இறுதியாகத்தான் கோடியக்காடு மீனவர் பிரச்சனையில் விவிமு தோழர்களின் தலையீடு அவருக்கு இன்னும் எரிச்சல் ஊட்டியிருக்கிறது.

இவ்வாறு தொடர்ச்சியாக மக்களுக்கான கோரிக்கைகளூக்காக விவிமு தோழர்கள் போராடி வந்துள்ளார்கள். இத்தகைய போராட்டங்கள் எப்போதும் மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடுகிற, சுரண்டுகிற, கட்டபஞ்சாயத்து செய்கிற மக்கள் விரோத அரசியல்வாதிகளுக்கு பிடிப்பதில்லை. ஆகையால்தான் விவிமு தோழர்களுக்கு எதிராக வேதை அதிமுக எம்.எல்.ஏ என்.வி, காமராஜின் கொலை மிரட்டல், கடை சூறையாடல் நடத்தப்பட்டுள்ளது.

ரவுடி எம் எல் ஏ காமராஜ் 5 ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாரதிய ஜனதாவில் இருந்தார். சாதாரண உப்பளத் தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்தவர் இந்த இரண்டு கட்சிகளில் இருந்து, தற்போது எம்.எல்.ஏவாக மாறி குறுக்கு வழியில் சம்பாதித்து திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக உருவெடுத்துள்ளார். சமீபத்தித்தில் இவரது மகனது திருமணம் சில கோடி ரூபாய் செலவழித்து நடத்தப்பட்டது. ஆளும் கட்சி திமிரிலும், அதிகார வர்க்க அரவணைப்பிலும் இந்த காமராஜும், கட்டப்பஞ்சாயத்தினரும் செய்யும் அராஜகங்களை எதிர்த்து விவிமு இறுதி வரை போராடும்.

poster

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
வேதாரண்யம்

மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள் : 24.09.2014

க. காளியப்பன்,
மாநில இணைப் பொதுச்செயலாளர்,
1, அண்ணாநகர்,
சிவாஜி நகர் வழி, தஞ்சாவூர் – 613 001,
தொலைபேசி : 04362-272765, 9443188285

பத்திரிகை செய்தி

விவசாயிகள் விடுதலை முன்னணி தோழரின் கடையை அடித்து நொறுக்கி, பொருட்களைக் கொள்ளையடித்த வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜையும், அவரது அடியாட்களையும் கைது செய்!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் தோழர் தனியரசு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரது சிறிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடையை அடித்து நொறுக்கி, சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூ 30,000 பணத்தையும் வேதாரண்யம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜூம், அவரது அடியாட்களும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மக்களின் உடைமைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர் என்று கருதப்படுகின்றன ஒரு சட்டமன்ற உறுப்பினரே இத்தகைய அராஜக, ரௌடித்தனத்தில் இறங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது, கடும் கண்டனத்திற்குரியது.

இப்பகுதியில் செயல்பட்டு வரும் எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்காக போராடி வருகிறது. குறிப்பாக, சாதிப் பஞ்சாயத்து, உள்ளூர் கட்டப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மக்கள் வசிக்கும் பகுதியில் பெரும் தொல்லையாக இருந்த டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்துவதில் போராடி வெற்றி கண்டது. இத்தகைய எமது செயல்பாடுகளால் தமது செல்வாக்கும், அதிகாரமும் பாதிக்கப்படுவதாகக் கருதிய சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் எமது தோழர் தனியரசுவைக் கடத்திக் கொண்டு போய் நாகூசும் சொற்களால் அவமானப்படுத்தி கொலைமிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் காமராஜின் அந்த அராஜகத்தைக் கண்டித்து 19.09.2014 அன்று வி.வி.மு அமைப்பினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற காமராஜ் 24.09.2014 அதிகாலை சுமார் 3 மணிக்கு தனது அடியாட்களை அனுப்பி எமது தோழர் தனியரசுவின் கடையை உடைத்து நொறுக்கி அதிலிருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், ரூ 30,000/- பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். தகவலறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

எனவே, காவல்துறை உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுத்து சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், அவரது அடியாட்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். கொள்ளையடிக்கப்பட்ட பணம், பொருட்களை மீட்டுத் தருவதுடன், தோழர் தனியரசுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக வரும் 30-ம் தேதி நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 1-ம் தேதி வேதாரண்யத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நன்றி.

தங்கள் உண்மையுள்ள

க. காளியப்பன்

மின்கட்டண உயர்வின் காரணம் என்ன ?

25

மிழ்நாட்டில் ‘அம்மா’வின் ஆணையில்லாமல் ஒரு அணுவும் அசைய முடியாது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் ‘அம்மா’வுக்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி. அந்த தீயசக்தியின் பெயர் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்.

இன்றைய நாளிதழ்களில் (24.09.2014) முழுப்பக்க விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்தி உத்தரவிட்டிருக்கிறது இந்த ஆணையம்.

மின் கட்டணம்
தமிழக மக்கள் தலையில் ரூ 6,805 கோடி சுமையை இறக்கியிருக்கிறது ஒரு ‘தீய’ சக்தி

வீடுகளுக்கு உள்ளிட்ட குறைந்த அழுத்த பயன்பாட்டுக்கு 15% அதிகரிப்பு, தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள், நீர்இறைப்புக்கு பயன்படுத்தப்படும் உயர்அழுத்த பயன்பாட்டுக்கு 30% அதிகரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு யூனிட்டுக்கு ரூ 2.60-ரூ 5.75 ஆக உள்ள வீடுகளுக்கான மின்கட்டணம் இனி ரூ 3 முதல் ரூ 6.60 என அதிகரிக்கும். இந்த மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு சடங்கு முடிந்த பிறகு வரும் நவம்பர் மாதம் முதல் இதை அமலுக்கு கொண்டு வருகிறார்கள்.

தான் ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் தனது அனுமதி இல்லாமல், தான் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்யாமல் ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது குண்டர் சட்டத்தை ‘அம்மா’ பாய்ச்சுவார் (தேவைப்பட்டால் அதற்கேற்றபடி சட்டத்தை திருத்திய பிறகு பாய்ச்சுவார்); அல்லது குறைந்தபட்சம் ஒரு அவதூறு வழக்காவது போட்டு பல்வேறு ஊர்களுக்கு இழுத்தடிப்பார் என்று யாராவது நினைத்தால், ஆணையத்தின் மீது கைவைக்க அம்மாவாலேயே, ஏன் ‘ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்தியாவுக்கு வெளியே பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் அனைத்தையும் கொண்டு வந்து விடக் கூடிய’ திறன் படைத்த (ஆனால் இன்னும் கொண்டு வரவில்லை) மோடியாலேயே கூட முடியாத காரியம். ஆணையத்தின் உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றங்களில் கூட மேல்முறையீடு செய்ய முடியாது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட அமைப்பு. கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியற்றை மாநில அரசிடமிருந்து பிடுங்கி இந்த அமைப்புக்குக் கொடுப்பதற்கான சட்டம் 1998 பா.ஜ.க அரசினாலேயே இயற்றப்பட்டு விட்டது. அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி முதலாளிகளின் நேரடி பிரதிநிதிகளால் ஆளப்படும் ஒழுங்குமுறை ஆணையங்களே இன்றைக்கு மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் வலிமையான அமைப்புகள்.

2003-ல் பா.ஜ.க. ஆட்சியில் இயற்றப்பட்ட மின்சார சட்டத்தின்படி மின் உற்பத்தி, மின் அனுப்புகை, மின் விநியோகம் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்யக்கூடாது என்று வாரியங்கள் மூன்றாக உடைக்கப்பட்டன.

முதலமைச்சர் ஜெயலலிதா
மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்புக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையாலாகாத முதலமைச்சர் ஜெயலலிதா.

மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும், மின்சாரம் உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை, தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்திரவிடப்பட்டது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.

மின்சார வாரியம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்கு முன்பு மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டம்; அதை மின்சார ஒழுங்குமுறை மேல் முறையீட்டு ஆணையமும் உறுதி செய்திருக்கிறது. எனவே,  தமிழ்நாடு மின்சார வாரியம் (மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) மின்கட்டண உயர்வு கேட்டு விண்ணப்பிக்காத போதே, 2014-15 நிதி ஆண்டுக்கான அதன் வருவாய்த் தேவையை கணக்கிட்டு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஒழுங்குமுறை ஆணையம். அப்படி மின்வாரியத்தின் ஆரோக்கியத்தின் மீது இந்த ஆணையத்துக்கு என்ன அக்கறை?

தனியார் மின் உற்பத்தி முதலாளிகளிடம் கொள்ளை விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு செலவழிக்க வேண்டிய சுமார் ரூ 18,000 கோடி மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் அவ்வாறு வாங்கியதால் பட்ட கடனுக்கு வட்டி ரூ 2,000 கோடி கட்டுவதை உறுதி செய்வதற்குத்தான் இந்த ரூ 6,800 கோடி ரூபாய் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது ஆணையம்.

இந்த மின்கட்டண உயர்வுக்கான அறிவிப்புக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத கையாலாகாத முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையை தலைப்புச் செய்தியாக முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது தினத்தந்தி நாளிதழ்.

அதில், தனியார் முதலாளிகளின் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் அடங்கிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக எதுவும் செய்ய இயலாத தனது கையாலாகாத்தனத்தை ஒத்துக் கொண்டு, ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியச் செலவு ரூ 4,370 கோடியாக உயர்ந்திருப்பதாலும், மின் வாரியத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை உயர்ந்திருப்பதாலும் ஆணையம் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது என்று மின்கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பிக்கிறார் ஜெயலலிதா.

மேலும், இந்த 30% கட்டண உயர்வு ஏழை மக்களை பாதிக்கா வண்ணம் தனது அரசு பார்த்துக் கொள்ளும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே 2014-15 நிதி ஆண்டில் மின்கட்டண மானியம் வழங்க ரூ 10,575 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழ்நாடு அரசு. இந்த கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த மானியச் செலவும அதிகரிக்கும். அந்தச் சுமையும் மறைமுக வரிகள் மூலம் மக்கள் மக்கள் தலையில் கட்டப்படும். ஏற்கனவே பெரும்பான்மை நேரம் மின்வெட்டில் அவதிப்படும் குடிசைப்பகுதி மக்களுக்கு ஒரு குண்டு பல்பு எரிவதற்கு கட்டண உயர்வில்லை என்று அறிவிப்பது யாரை ஏமாற்ற?

ஊழியரின் ஊதியம், நிலக்கரி விலை என்று பேசும் ஜெயலலிதா மின்வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55%-ஐ விழுங்கும் மின்சாரம் வாங்கும் செலவு பற்றி பேசவில்லை.

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2003-04-ம் ஆண்டில் தனியாரிடமிருந்து 1,317 கோடி யூனிட்டுகள் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது. இது 2008-09-ம் ஆண்டில் 2,114 கோடி யூனிட்டுகளாக அதிகரித்திருக்கிறது. இதே காலகட்டத்தில் மின் வாரியம் அடைந்த நட்டம் 2003-04-ம் ஆண்டில் 1,110 கோடியிலிருந்து 2008-09-ம் ஆண்டில் 7,131 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

2009-10-ல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின்தேவையில் 19 விழுக்காட்டை  வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.

தமிழகத்திலுள்ள ஜி.எம்.ஆர். பவர் நிறுவனம், பிள்ளைபெருமாநல்லூர், சாமல்பட்டி மற்றும் சமயநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் மின்நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை முறையே ரூ 10.41, ரூ 8.55, ரூ 10.18, ரூ 10.96 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள், அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ 2.14 காசுகள் என்பதையும் இத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்குமேல் ரூ 657 கோடி தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு கப்பமாக ஆண்டு தோறும் செலுத்தப்படுகிறது. ஜி.எம்.ஆருக்கு ரூ 147 கோடி, அப்போலோ மருத்துவக் குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைபெருமாள் நல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ 292 கோடி, சாமல்பட்டி மின் நிறுவனத்துக்கு ரூ 108 கோடி, சமயநல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ 110 கோடி ரூபாய் 2013-14-ம் ஆண்டுக்கான திறன் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்திருக்கிறது. திறன் கட்டணம் என்பது தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரக் கட்டணத்திற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும் மின்சார வாரியம் செலுத்த வேண்டிய கப்பத் தொகையாகும். தனியாருடான ஒப்பந்த காலம் முடியும் வரை மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்தத் திறன் கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்த வேண்டும்.

1994-ல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008-ல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது.

1994-95-ல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ 347 கோடி. 2007-08-ம் ஆண்டில் இது ரூ 3,512 கோடி பற்றாக்குறையாக மாறியது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் இவைதான் நட்டத்துக்கு காரணம் என்று அவதூறு சொல்கின்றனர் மேட்டுக்குடி ‘அறிவுஜீவி’கள். ஆனால், இந்த திட்டங்களுக்கான மானியத்தை தமிழக அரசு வழங்கிய பிறகும் ஏற்படும் மின்வாரியத்தின் பற்றாக்குறைக்கு  தனியார் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான பணமே முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.

இதற்கு உதாரணமாக 2005-06-ல் தமிழக அரசு வாங்கிய மின்சார விலை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.  அந்த ஆண்டு அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ 17.78.  சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ 8.74; மதுரை பவர் ரூ 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ 6.58. யூனிட்டுக்கு ரூ 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06-ல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் ரூ 330 கோடி கொடுத்திருக்கிறது மின்வாரியம்.

இப்படி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் கேள்விக்குள்ளாக்கினால், தீவிரமான மின்வெட்டைப் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றவாறு அடாவடித்தனமாகப் பதில் அளித்து இப்பகற்கொள்ளை நியாயப்படுத்தப்படுகிறது.

2011-ம் ஆண்டு ஜெ ஆட்சிக்கு வந்தவுடனே மின் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தி விட்டு, இனி கட்டண உயர்வும் மின்வெட்டும் இருக்காது என்று அறிவித்தார். மின்வெட்டு தீராதது மட்டுமல்ல, கட்டணமும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. மூன்றே ஆண்டுகளில் தமிழக மின்வாரியத்தின் நட்டம் ரூ 45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ 75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் 1 முதல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை என்று சவடால் அடித்தார் ஜெயலலிதா. ஆனால் சென்னையைத் தவிர்த்து சிறுநகர மற்றும் கிராமப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் உள்ளது. இப்போது, கூடுதலாக உயர்அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழில்துறை மற்றும் வணிகத்துறையினருக்கு செவ்வாய் கிழமையிலிருந்து இரவு 10 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை 20% மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை தரப்பட்டுள்ள மின்திறனில் 10% மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மின்சாரம், தொலைபேசி, பெட்ரோல்/டீசல்/சமையல்வாயு கட்டணங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணையங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், கல்வி, குடிநீர், மருத்துவம் போன்ற சேவைகள் தனியாரின் லாபக் கொள்ளைக்கு விடப்பட்டுள்ள நிலையில் காசு இருப்பவர்களுக்குத்தான் வெளிச்சம், மற்றவர்கள் இருட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்காலத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா?

–    அப்துல்

மேலும் படிக்க

சீதையின் பார்வையில் ராமன் அற்பமானவன் : டாக்டர் அம்பேத்கர்

2

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 2

சுக்ரீவனும், அனுமானும் இராமனுக்காக திரட்டிய (வானர) சேனையோடு இலங்கை மீது இராமன் படையெடுக்கிறான். அப்போதும் வாலி-சுக்ரீவன் ஆகிய இரு சகோதரர்களிடையே கையாளப்பட்ட மிகக் கேவலமான வழிமுறையைத்தான் இராமன் கையாளுகிறான். பேரரசன் இராவணனையும் அவன் மகனையும் கொன்றுவிட்டு இராவணனுடைய தம்பி விபீஷணனை அரியணை ஏற்றுவதாய்ச் சொல்லி விபீஷ்ணனின் உதவியைப் பெறுகிறான். அதன்படி இராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் இராமன் கொன்று விடுகின்றான். போர் ஓய்ந்தபின் இராமன் செய்கிற முதற் காரியம் பேரரசன் இராவணனின் உடலை நல்லடக்கம் செய்வது தான். அதன் பின்னர் இராமனின் நோக்கமெல்லாம் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே இருந்தது. ஆட்சி அரங்கேறிய பின், தானும் இலட்சுமணன் சுக்ரீவன் ஆகியோரும் சுக மகிழ்வோடு இருப்பதாகவும் இராவணன் கொல்லப்பட்ட சேதியையும் அனுமான் மூலம் சீதைக்கு அனுப்புகிறான்.

டாக்டர் அம்பேத்கர்இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையை சந்தித்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. சீதையை சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியிலமர்த்திய பிறகும் கூட சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமானைத்தான் அனுப்புகிறான். அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிகள் தான் என்ன? சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்கு சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனை சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டுபோய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை.

சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?

மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”

இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.”

இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ன எண்ணத்தை-சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி-அதன் அடிப்படையில் சீதையை கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது-“நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே”-என்று சீதை வெளிப்படையாக சொல்கிறாள்.

நெருப்பில் சீதை
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.

ஆயினும் இராமனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு தன் புனிதத்தை நிரூபித்திட முன்வருகிறாள். அதன்படி சீதை அக்னிப் பிழம்பில் இறங்கி எவ்வித சேதாரமுமின்றி வெளிவருகிறாள். அவள் மேற்கொண்ட சோதனையின் மூலம் அவள் புனிதமானவள் என்பதைக் கடவுள்களே மெச்சிப் பாராட்டினார்கள். அதன் பின்னரே தன் மனைவி சீதையை இராமன் மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போகிறான்.

அயோத்திக்குத் திரும்பிய மன்னன் இராமன் தன் மனைவி சீதையிடம் எவ்வாறு நடந்து கொள்கிறான்? இராமன் இப்போது அயோத்தியை ஆளும் அரசன். அவன் மனைவி சீதையோ பேரரசி. இராமன் அரசாளுங் காலத்திலேயே வெகு விரைவில் சீதை அரசி என்ற நிலை இல்லாமற் போய் விட்டது. இராமனின் அவப்பெயருக்கு இந்நிகழ்ச்சி முத்தாய்ப்பு வைத்தது போல உள்ளது. வால்மீகி எழுதிய இராமாயணத்திலேயே இந்நிகழ்ச்சி காணக் கிடக்கிறது.

அயோத்திக்கு அரசனாக இராமனும், அரசியாக சீதையும் கொலுவேறிய கொஞ்ச காலத்திலேயே சீதை கர்ப்பிணியாகிறாள். நாட்டில் அவதூறு பேசுவோர் சிலர், சீதை கருவுற்றிருப்பதைக் கண்டு அவளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இராவணனிடம் சிறைப்பட்டிருந்த காலத்திலேயே சீதை கருவுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட நடத்தை கெட்ட ஒருத்தியை தன் மனைவி என மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு வந்ததற்காக இராமனைப் பழித்துப் பேசினர் என அரசவைக் கோமாளியான பத்ரன் என்பவன் தன் காதிற்பட்ட அவதூறு வார்த்தைகளை இராமனிடம் சொல்கிறான். இராமனும் இவ்வித வதந்திகளைக் கேட்டுத் தாள முடியாத அவமானத்தில் அமிழ்ந்து போனான் என்பது இயல்பே. எனினும் அக்களங்கத்தைக் கழுவிட இராமன் மேற்கொள்ளும் அணுகுமுறையோ இயல்புக்கு மாறானதாக உள்ளது. இவற்றினின்று விடுபட இராமன் மிகத் துரிதமான குறுக்கு வழியைக் கையாளுகிறான்.

அதாவது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவளை உணவின்றி, இருக்க இடமின்றி, முன் தகவல் ஏதுமின்றி மக்கள் நடமாட்டமில்லாத காட்டில் கொண்டுபோய் விட்டு விட்டதானது நாணயமற்ற சதியாகும். சீதையை நாடு கடத்திக் காட்டிற்கு அனுப்புவதெனும் இராமனின் முடிவு திடீரென மேற்கொள்ளப்பட்டதல்ல என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. இராமனுக்குள் இப்படியோரு முடிவு உதயமானது, உருவெடுத்தது, நிறைவேறியதைப் பற்றியெல்லாம் சற்று தெளிவாக குறிப்பிட வேண்டியது அவசியம்.

சீதையைப் பற்றி நாட்டில் உலவிய வதந்திகளைத் தன் அரசவைக் கோமாளியான பத்ரன் மூலம் கேட்டறிந்த இராமன் தன் சகோதரர்களை அழைத்து, தனது உணர்வுகளைப் புலப்படுத்துகிறான். சீதையின் புனிதமான கற்பும், தூய்மையும் இலங்கையிலேயே நிரூபிக்கப்பட்டது. அதற்குக் கடவுள்களே சாட்சியாயிருந்தார்கள். தானும் அதனை முற்றிலும் நம்புவதாக இராமன் தன் சகோதரர்களுக்கு சொல்கிறான். “எனினும் பொதுமக்களோ சீதை மீது வதந்திகளைக் கிளப்புவதாகவும் என்னைப் பழிப்பதாகவும், எனக்கு அவமானம் ஏற்படும் வகையில் பேசுவதாகவும் அறிகிறேன். இத்தகைய இழிவினை யாராலும் சகித்துக்கொள்ள முடியாது. மானம், கௌரவம் என்பது பெரும் சொத்து. கடவுள்கள் மற்றும் பெருமான்கள் எல்லாம் அத்தகைய மாண்பினைத் தக்கவைத்துக் கொள்ள பெரும்பாடு படுகின்றனர். இத்தகைய இழிவையும் அவமானத்தையும் தாங்கிக்கொள்ள என்னால் முடியவில்லை. அப்படிப்பட்ட இழிசொல் மற்றும் அவமானத்திலிருந்து என்னை நான் காப்பாற்றிக் கொள்ள உங்களைத் துறந்திடவும் நான் தயாராய் இருக்கிறேன். சீதையை கைவிட்டு விட மாட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்” என்றான் இராமன்.

நாட்டு மக்களின் வதந்திகளிலிருந்து தப்பிட சீதையை காட்டிற்கு அனுப்பி விடுவதொன்றே சுலபமான வழியென இராமன் திடமாக முடிவு செய்து விட்டான் என்பதையே இவ்வாக்குமூலம் காட்டுகிறது. இப்படிச் செய்வது சரியா, தவறா!-என்பதை யோசிக்கக் கூட அவன் காத்திருக்கவில்லை. சீதையின் வாழ்வு அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவனுடைய பேரும் புகழுமே அவனுக்குப் பெரிதெனத் தோன்றியது. அரசாளும் மன்னன் என்ற முறையில், அவ்வித அவதூறுகளைப் போக்கிட அவன் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யவில்லை. ஓர் அப்பாவி மனைவியின் நம்பிக்கைக்குரிய கணவன் ஒருவன் எதைச் செய்வானோ அதையும் செய்யவில்லை. யாரோ ஒரு சிலர் கிளப்பிவிட்ட வதந்திகளுக்கு இணங்க வேண்டியவனானான்.

இராமனின் இச்செயலைச் சுட்டிக்காட்டி இராமன் ஒரு ஜனநாயகப் பேரரசன் எனச் சொல்லித் திரியும் இந்துக்கள் இல்லாமலில்லை. அதே வேளையில் இராமன் கோழைத்தனமாய் விளங்கிய பலவீனமான மன்னன் எனச் சொல்பவர்களும் இல்லாமலில்லை.

எது எப்படி இருப்பினும் தன் பெயரையும் புகழையும் காப்பாற்றிக் கொள்ள சீதையை காட்டிற்கு அனுப்பிடுவது எனத் தான் செய்த கொடுமையான முடிவினை தன் சகோதரர்களுக்கு சொல்லிய இராமன் சீதைக்கு சொல்லவில்லை. அந்த முடிவினால் பாதிப்புக்கு ஆளாகப் போவது சீதை மட்டுந்தான். எனவே அந்த முடிவினை கட்டாயம் தெரிந்து கொள்ளும் உரிமைக்குரியவள் சீதையாவாள். ஆனால் சீதையோ முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறாள். இத்திட்டம் சீதைக்குத் தெரியக் கூடாத மிகப்பெரும் இரகசியமெனக் கருதி அத்திட்டத்தை செயற்படுத்த சரியானதொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இராமன் காத்திருந்தான். சீதையின் கொடிய விதி இராமனின் எதிர்பார்ப்புக்கு கைகொடுத்தது.

பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் விசேஷமான சில பொருட்கள் மீது ஆசைப்படுவார்கள். அத்தகைய ஆசைகளை, விருப்பங்களை நிறைவேற்றுவது மரபு என்பது இராமனுக்கும் தெரியும். சீதைக்கு அப்படி ஏதேனும் விருப்பமுண்டா என்று ஒரு நாள் இராமன் சீதையிடம் கேட்டான். ஆம் என்றாள் சீதை. அந்த ஆசை என்னவென்று கேட்டான் இராமன். கங்கைக் கரையோரம் அமைந்துள்ள ஏதாவதொரு முனிவரின் ஆசிரமத்தில் தங்கி, அங்கு கிடைக்கும் பழங்களையும், கிழங்குகளையும் சாப்பிட்டு ஓரிரவாவது தங்கித் திரும்ப வேண்டும் என்பதே தன் ஆசை என்றாள் கர்ப்பிணியான சீதை. அதைக் கேட்டு இராமனுக்கு அளவிலா மகிழ்ச்சி. ‘’அன்பே, கொஞ்சம் பொறுத்துக் கொள். நாளையே நீ அங்கு போக நான் ஏற்பாடு செய்கிறேன்’’ என்றான் இராமன். நேசத்திற்குரிய கணவனின் நேர்மையான பேச்சென்று சீதை இராமனின் வார்த்தையை கருதுகிறாள். ஆனால் இராமன் செய்ததென்ன?

லவன் - குசன்
சீதை தன்னுடைய தூய்மையைப் புலப்படுத்தினால், அதற்குப் பின் இந்தத் தடவையாவது இராமன் சீதையை மீண்டும் தன் மனைவியாய் ஏற்றுக்கொள்வான்-என்பதற்கு உத்திரவாதம் ஏதுமில்லை.

சீதையைக் காட்டிற்கு அனுப்பி கைகழுவிட இதுவே தக்க தருணம் என இராமன் நினைக்கிறான். அதற்கொப்ப தம் சகோதரர்களை இரகசியமாய் அழைத்துச் சந்திக்கிறான். சீதையை வனவாசம் அனுப்பி விடுவதெனும் தன் அறுதியான முடிவினை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறான். அதற்கு இதுவே தக்க தருணம் என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறான். இராமனின் சகோதரர்கள் எவரும் சீதைக்காகப் பரிந்து பேசக் கூடாது என்கிறான். இராமனின் முடிவுக்கு எதிராக சீதைக்காகப் பரிந்து பேசினால் அவர்களை எதிரிகளாய்க் கருதுவேன் என்கிறான்.

அடுத்த நாள் காலையில் சீதையைத் தேரில் ஏற்றிக் கொண்டு போய் கங்கைக் கரையோரக் காட்டிலுள்ள ஓர் ஆசிரமத்தில் விட்டுவிட்டு வா என்று இராமன் இலட்சுமணனுக்கு ஆணையிடுகிறான். சீதையைப் பற்றி இராமன் செய்துள்ள முடிவை சீதைக்கு தெரிவிக்க இலட்சுமணனுக்கு போதிய துணிவுமில்லை, வழியும் தெரியவில்லை. இச்சங்கடத்தைப் புரிந்துகொண்ட இராமன் கங்கைக் கரையோரக் காடுகளில் தங்கி சில காலத்தைக் கழிக்க சீதையே விரும்பிச் சொன்னாள் எனச் சொல்லி இலட்சுமணனின் மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றான்.

இந்த உரையாடல்கள் எல்லாம் இரவிலேயே நடந்து முடிந்தன. மறுநாள் விடியற் காலையில் இலட்சுமணன் சுமந்தனை அழைத்து தேரில் குதிரைகளைப் பூட்டச் சொன்னான். குதிரைகளைப் பூட்டியுள்ள தேர் தயாராய் உள்ளதென்று சுமந்தன் சொன்னான். பிறகு இலட்சுமணன் அரண்மனைக்குப் போகிறான். சீதையை சந்திக்கிறான். வனத்தில் உள்ள ஆசிரமத்தில் தங்கிச் சில நாள் வாழ்ந்து திரும்பிட விரும்பியதாய் அவள் வெளிப்படுத்திய ஆசையை நினைவூட்டுகிறான்; அதனை நிறைவேற்ற இராமன் அளித்த உறுதிமொழியை சொல்லுகிறான். அதன்படி அப்பணியைத் தான் செய்ய இராமன் பணித்திருப்பதையும் சீதைக்கு சொல்லுகிறான். பூட்டிய குதிரைகளுடன் காத்திருக்கும் தேரைக் காட்டி, ‘புறப்படுங்கள் போகலாம்’ என்கிறான். சீதையின் உள்ளம் விம்மிப் புடைக்கிறது. தாவி ஏறித் தேரில் அமர்கிறாள். அவள் உள்ளமெல்லாம் இராமனுக்கு நன்றி சொல்லும் நல்லுணர்வால் நிரம்பியது. சுமந்தன் தேரோட்ட இலட்சுமணன் காவலனாய்த் தொடர அவர்கள் குறிப்பிட்ட வனத்திற்குப் போகிறார்கள். கடைசியில் கங்கைக் கரையை அடைந்தார்கள். மீனவர்களின் உதவியோடு படகில் ஏறி அக்கரையை அடைகிறார்கள். இலட்சுமணன் சீதையின் கால்களில் வீழ்கிறான். அவன் தன் கண்களில் நீர் மல்க ‘மாசற்ற பேரரசியே, என்னை மன்னியுங்கள். உங்களை அரண்மனையில் வைத்திருப்பது அவமானத்திற்குரியதென்று மக்கள் கிளப்பிய வதந்திகளிலிருந்து தப்பிட நாடாளும் இராமன் எனக்கிட்ட கட்டளையை நான் நிறைவேற்றுகிறேன். உம்மைக் காட்டிலே கைவிட்டுத் திரும்பும் என்னை மன்னிக்க வேண்டும்’ என்றான் இலட்சுமணன்.

காட்டில் எப்படியாவது செத்தொழியட்டும் என்று கைவிடப்பட்ட சீதை, அடைக்கலம் தேடி அருகிலிருந்த வால்மீகியின் ஆசிரமத்தை அடைந்தாள். வால்மீகி தன் ஆசிரமத்தில் சீதைக்கு இடமளித்துப் பாதுகாப்பும் கொடுத்தார். கொஞ்ச காலத்தில் சீதை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். குசா, லவா என அக்குழந்தைகளுக்குப் பெயரிட்டாள். தாயும் இரு குழந்தைகளும் வால்மீகியுடன் வாழ்ந்து வந்தனர். வால்மீகி அச்சிறுவர்களை வளர்த்து தாம் இயற்றிய இராமாயணத்தை அவர்கள் பாடக் கற்றுக் கொடுத்தார். காட்டிலுள்ள வால்மீகியின் ஆசிரமத்தில் அந்தச்சிறுவர்கள் 12 ஆண்டுகள் வளர்ந்து வந்தனர். வால்மீகியின் ஆசிரமம் இராமன் அரசாளும் அயோத்தி நகருக்கு நெடுந் தொலைவிலொன்றுமில்லை. இந்த 12 ஆண்டுகளில் ஒரு தடவையாவது இந்த உதாரண புருஷனான இராமன், பாசம் மிக்க தந்தை, சீதை என்னவானாள்-அவள் செத்தாளா-பிழைத்தாளா-என்பதைப் பற்றி விசாரிக்கக் கூட இல்லை.

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு விநோதமான சூழ்நிலையில் இராமன் சீதையை சந்திக்கிறான். இராமன் ஒரு யாகம் வளர்க்க நினைக்கிறான். அந்த யாகத்தில் அனைத்து ரிஷிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கிறான். வால்மீகியின் ஆசிரமம் அயோத்திக்கு மிக அருகிலிருந்தும் கூட வேண்டுமென்றே இராமன் வால்மீகியை அந்த யாகத்திற்கு அழைக்கவில்லை. ஆனால் வால்மீகியோ, குசா, லவா ஆகிய சீதையின் இரு பிள்ளைகளைத் தன் சீடர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த யாகத்தில் கலந்து கொள்ள வந்தார்.

யாகம் நடந்து கொண்டிருந்தபோது குழுமியிருந்த பேரவை முன் அவ்விரு சிறுவர்களும் இராமாயணப் பாடல்களைப் பாடினர். செவிமடுத்த இராமன் நெகிழ்ந்து போனான். இக்குழந்தைகள் யார் எனக் கேட்டான். அவர்கள் சீதையின் பிள்ளைகள் என்றார்கள். அப்போதுதான் சீதை அவன் நினைவுக்கு வருகிறாள். அந்த நேரத்திலும் அவன் செய்ததென்ன? சீதையை அழைத்து வாருங்கள் என்று அவன் ஆள் அனுப்பவில்லை. பெற்றோர்கள் செய்த பாவத்தை அறியாத அந்த அப்பாவிக் குழந்தைகளை அழைத்து வால்மீகிக்கு சொல்லச் சொன்னான்.

‘’சீதை களங்கமற்றவளாகவும் கற்புமுள்ளவளாகவுமிருந்தால் யாகத்தில் குழுமியுள்ள இச்சபையோர் முன் வந்து தன் தூய்மையை நிரூபிக்கட்டும். அதன் வாயிலாக என் மீதும் அவள் மீதும் படிந்துள்ள விஷம பேச்சுக்கள் மறைந்து போகும்’’-என விதிப்பயன் விளைவித்த கொடுமைக்கு ஆளான அக்குழந்தைகள் மூலம் சொல்லியனுப்புகிறான்.

இதே மாதிரியான சோதனையை சீதை முன்பொருமுறை இலங்கையிலே மேற்கொண்டாள். சீதையை காட்டிற்கு அனுப்புமுன், மீண்டும் சீதை அத்தகையதொரு சோதனையை மேற்கொள்ள வேண்டுமென்று இராமன் சொல்லி இருக்கலாம். சீதை தன்னுடைய தூய்மையைப் புலப்படுத்தினால், அதற்குப் பின் இந்தத் தடவையாவது இராமன் சீதையை மீண்டும் தன் மனைவியாய் ஏற்றுக்கொள்வான்-என்பதற்கு உத்திரவாதம் ஏதுமில்லை. இருப்பினும் வால்மீகி சீதையை யாக சபைக்கு அழைத்து வருகிறார். இராமன் முன் சீதையை நிறுத்தி வால்மீகி சொன்னார்: ‘’தசரதனின் மகனே, வம்பர்களின் வாய்ப் பேச்சைக் கேட்டு காட்டிலே நீ கைவிட்ட சீதை இங்கே இருக்கிறாள். நீ அனுமதித்தால் இச்சபை முன் அவள் தன் தூய்மையை சத்தியம் செய்து நிரூபிப்பாள். இதோ உன்னுடைய இரட்டைப் புதல்வர்கள் இங்கே இருக்கின்றார்கள். அவர்களுக்கு உணவளித்து, என் குடிலை உறைவிடமாய்த் தந்து நான் பராமரித்து வளர்த்து வந்தேன்’’ என்றான். இதைக் கேட்ட இராமன் சொன்னான்: ‘’சீதை களங்கமற்றவள், கற்புள்ளவள் என்பதை நான் நன்கறிவேன். இவர்கள் என் பிள்ளைகள் என்பதும் எனக்குத் தெரியும். அவளுடைய தூய்மைக்கு ஆதாரமாக முன்பொருமுறை இலங்கையில் அவள் கடும் சோதனையை மேற்கொண்டாள். அதன் பின்னரே நான் அவளை மீண்டும் மனைவியாய் ஏற்று கூட்டி வந்தேன். ஆயினும் மக்கள் இன்னும் அவ்வித சந்தேகம் கொண்டுள்ளனர். எனவே சீதை மீண்டுமொரு முறை இங்கு கூடியுள்ள ரிஷிகள் மற்றும் பொது மக்கள் முன்னால், அவர்கள் பார்க்கும்படி அத்தகையதோர் சோதனையை மேற்கொள்ளட்டும்’’ என்றான்.

நீர் மல்கிய கண்கள் நிலம் நோக்கிட இரு கரம் கூப்பிய நிலையில் சீதை சொன்னாள்: ‘’இராமனைத் தவிர வேறொரு ஆடவனை நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை; அது உண்மையானால் பூமாதேவியே வாய் திறவாய், நான் புதையுண்டு போகிறேன். என் சொல்லிலும் செயலிலும் நினைவிலும் கனவிலும் எப்போதும் நான் இராமனையே நேசிக்கிறேன்-அது உண்மையானால் பூமாதேவியே வாய் திறவாய். நான் புதையுண்டு போகிறேன்’’ என்றாள். சீதை வார்த்தைகளை உதிர்க்கும்போதே பூமி பிளந்தது; சீதை உட்புகுந்தாள். தங்கத்தாலான சிம்மாசனத்தில் அமர்ந்து அவள் மறைந்து போனாள். சீதை மீது வானவர்கள் பூமாரி பொழிந்தார்கள். பார்த்திருந்த மக்களோ மெய்மறந்து நின்றார்கள்.

அதாவது காட்டுமிராண்டித் தனமானவனை விட கேவலமாய் நடந்து கொண்ட இராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான இராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது…

(தொடரும்)

அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பாகம் 2

முந்தைய பகுதி : நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்

இந்திய உயிரைக் குடிக்கும் அமெரிக்க கோக்

3

செய்தி : கோக் தொழிற்சாலைக்கு ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் நர்மதா ஆற்று நீர்

17

போராடும் மக்களுக்கு பரிசு போலீஸ் குண்டாந்தடி

16

பூமிப் பந்தையே விழுங்கிச் செரிக்கும் அமெரிக்க கோக்

15

கடைசிச் சொட்டு நீரையும் உறிஞ்சி குடிக்க நீளும் கொலைக்கரங்கள்

14

உலகையே கொத்திக் குதறும் அமெரிக்க ஏகாதிபத்திய மூளை

13

நமது நீரை உறிஞ்சி காய்க்கும் கோக், பெப்சி, கின்லே, அக்வாஃபினா

12

அமெரிக்க கோக்கே வெளியேறு

18

படங்கள் : ஓவியர் முகிலன்

பொது சிவில் சட்டம் – மாயையும் உண்மையும்

305

இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா? பொது சிவில் சட்டம் குறித்த உண்மைகள் – 1

முன்னுரை

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம் (படம் : நன்றி outlookindia.com)

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

இந்து – முசுலீம் தனிநபர் சட்டங்கள் பற்றிய ஒப்பீட்டைப் படிக்கும் வாசகர்கள் இந்து சட்டத்தின் ‘முற்போக்கான’ தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். எதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்தைச் சட்டத்தின் மூலம் செயற்கையாக உருவாக்கும் முயற்சிதான் ‘இந்து தனிநபர் சட்டம்’ என்பது வரலாற்று விவரங்களுடன் தரப்பட்டுள்ளது. அரசியலிலிருந்து மதத்தைப் பிரிக்கக் கூடாது என்று வாதாடும் பாரதீய ஜனதா, குடும்பத்திலிருந்து மட்டும் மதத்தைப் பிரிக்க வேண்டும் என்று கூறும் இரட்டை வேடத்தின் நோக்கம் ஆராயப்பட்டுள்ளது. இறுதியாக, பாரதீய ஜனதாவிதற்கு எதிராகப் போலி கம்யூனிஸ்டுகள் முதல் பின் நவீனத்துவ அறிஞர்கள் வரை பல தரப்பினரும் வைக்கும் தீர்வுகளுக்கான மறுப்புரை தரப்பட்டுள்ளது. உண்மையான மதச்சார்பின்மைக்கும் மதச்சார்பற்ற சிவில் சட்டத்திற்குமான போராட்டம் மட்டுமே இந்துத்துவத்தை முறியடிக்கும் என்பதை நூல் வலியுறுத்துகிறது.

1995 –இல் ஒரு உச்சநீதி மன்றத் தீர்ப்பு உருவாக்கிய விவாதத்தையொட்டி புதிய கலாச்சாரத்தில் தோழர் சூரியன் எழுதிய தொடர் கட்டுரையை தற்போது நூல் வடிவில் தருகிறோம் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கு இது பெரிதும் பயன்படும் என நம்புகிறோம்.

பிப்ரவரி’ 2002
ஆசிரியர் குழு,
புதிய கலாச்சாரம்

1. பொது சிவில் சட்டம் : மாயையும் உண்மையும்

பொது சிவில் சட்டம் என்று வழங்கப்படும் ‘ஒரு சீரான உரிமையியல் சட்டம்’ (Uniform Civil Code) குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

பதினான்கு வயதில் ஒரு மகனையும், இரண்டு பெண்களையும் உடைய ஜிதேந்திர மாதுர் என்ற நபர் தனது மனைவி மீனாவை மணவிலக்கு செய்யாமலேயே சுனிதா என்ற இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார்.

இருந்தாலும் இருதார மணக்குற்றத்துக்காக இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், இரண்டாவது திருமணம் செய்வதற்கு முன்னால் ஜிதேந்திர மாதுர் அப்துல்லாகானாக மதம் மாறிவிட்டார்; தான் மணக்கவிருந்த சுனிதாவை பேகம் பாத்திமாவாக மதம் மாற்றி டெல்லி ஜூம்மா மசூதியில் வைத்துத் திருமணமும் செய்து கொண்டு விட்டார். இந்த விவகாரம் எதுவுமே முதல் மனைவி மீனாவுக்குத் தெரியாது.

”அன்று காலை இருவருமாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு காகிதத்தை என் கையில் கொடுத்தார். அது அவருடைய இரண்டாவது திருமணத்தின் (நிக்காஹ் ) பதிவுச் சான்றிதழ். அதிர்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்றார் மீனா.

ஷா பானு வழக்கு
“ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து.

தான் முசுலீமாக மதம் மாறிவிட்டதால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தனது சட்டபூர்வ உரிமை என்பது ஜிதேந்திர மாதுரின் வாதம். இந்த ‘நிக்காஹ்’ செல்லாது என அறிவிக்கக்கோரி மீனா தொடுத்த வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றத்தீர்ப்பு வந்துள்ளது. இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்திற்காகவே இசுலாமுக்கு மதம் மாறியுள்ளதால் இந்தத் திருமணம் செல்லாது என்றும், முசுலீமாக மதம் மாறியிருந்தாலும் முதல் மனைவியை மணவிலக்கு செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யவியலாது என்றும் நீதிபதி குல்தீப் சிங், நீதிபதி சஹாய் ஆகியோர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்துள்ளது.

இந்தப் தீர்ப்பைப் பொருத்தவரை, இதை முசுலீம் மதத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பின் இணைப்பாக ”பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு முயல வேண்டும் என்றும், அரசியல் சட்டத்தின் வழிகாட்டுதல் கோட்பாடு தந்துள்ள இந்த வாக்குறுதியை அமல்படுத் வேண்டும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டிருப்பது பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன் “ஷாபானு” வழக்கில் வந்த தீர்ப்பிற்கு எதிராக முசுலீம் மதவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு ராஜீவ் அரசு பணிந்த்து. “முசுலீம்களை ராஜீவ் அரசு தாஜா செய்கிறது” என்ற பாரதீய ஜனதா கும்பல் குற்றம் சாட்டியவுடனே அதைச் சமாளிப்பதற்காகப் பூட்டிக் கிடந்த பாபர் மசூதியை இந்துக்களின் வழிபாட்டுக்கு திறந்துவிட்டு ராமஜென்மபூமி விவகாரத்துக்கு உயிரூட்டினார் ராஜீவ். பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டு விட்டது.

இந்த உச்சநீதி மன்றத் தீர்ப்பையொட்டித் தன்னைச் சந்தித்த முசுலீம் தலைவர்களிடம் ”பொது சிவில் சட்டமெதுவும் கொண்டு வரும் உத்தேசம் அரசுக்கு இல்லை” என்று வாக்குறுதியளித்திருக்கிறார் நரசிம்மராவ். சிறுபான்மையினரைத் “தாஜா” செய்யும் இந்த வாக்குறுதியினால் கோபமடையக்கூடிய இந்து வெறியர்களை சமாதானப்படுத்த, ராவ் எதைத் திறத்துவிடுவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மதத்தின் அடிப்படையிலான வெவ்வேறு தனிநபர் சட்டங்கள் தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்துவிடும் என்று ஒருமைப்பாட்டின் பெயரால் கேள்வி எழுப்புகிறது பாரதீய ஜனதா. இடையிடையே பெண்ணுரிமை பற்றிப் பேசுவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை.

முசுலீம் மதவாதிகளோ ”எமக்கு இறைவன் வகுத்தளித்த சட்டங்களை மாற்றுவதற்கு எந்த மனிதருக்கும் உரிமையில்லை” என்கின்றனர். பொதுச் சட்டம் என்ற பெயரில் இந்துச் சட்டத்தை அனைவரின் மீதும் திணிக்கும் சதியே இது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொது சிவில் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்குரிய இணக்கமான சூழ்நிலை ( குறிப்பாக இந்து -முசுலீம் உறவில் ) இன்னும் உருவாகவில்லையென்றும் அத்தகைய சூழ்நிலை உருவாகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம்!

ஒரு கையில் மசூதிகளை இடிப்பதற்குக் கடப்பாரையையும், இன்னொரு கையில் ”ஒரே நாடு- ஒரே மக்கள்” என்ற சாட்டைக் குச்சியையும் வைத்திருக்கும் பாரதீய ஜனதா அவ்வப் போது அதைச் சொடுக்குகிறது. உடனே கிளம்புகிற முசுலீம் தலைவர்களின் எதிர்ப்புக் குரலைக் காட்டி ‘மதச்சார்பற்ற சிவில் சட்டத்தின் எதிரிகள் முசுலீம்கள் மட்டும்தான்’ என்று நிறுவுகிறது. பாரதீய ஜனதா மட்டுமல்ல, மீனாவின் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி குல்தீப் சிங்கும் இதையேதான் கூறுகிறார்.

பொது சிவில் சட்டம்
ஆணாதிக்க மதச் சட்டங்களை புனிதப்படுத்திக் கொள்ளவா பொது சிவில் சட்டம்? (படம் : நன்றி http://www.thehindu.com )

“இந்தியாவுக்குள்ளே இரண்டு தேசங்கள் அல்லது மூன்று தேசங்களாக வாழ்வது குறித்த கோட்பாடுகளையெல்லாம் இந்தியத் தலைவர்கள் ஏற்கவில்லை என்பதும், இந்தியக் குடியரசு எனபது ஒரே தேசம்தான் – இந்தியத் தேசம்தான் என்பதும், அதில் எந்தச் சமூகத்தினரும் மதத்தின் அடிப்படையில் தனித்தன்மை எதையும் கோர முடியாது என்பதும், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலேயே தங்கிவிடுவது என்று முடிவு செய்தவர்களுக்கு நன்றாக தெரியும்.. இந்துக்களும், சீக்கியர்களும், பவுத்தர்களும், ஜைனர்களும் இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் மத உணர்வுகளைத் தியாகம் செய்திருக்கிறார்கள். சில சமூகத்தினர்தான் அவ்வாறு விட்டுக் கொடுக்க மறுக்கிறார்கள்.”

மத உரிமை, பெண்ணுரிமை, சொத்துரிமை, குடும்பம் ஆகியவை தொடர்பான பிரச்சினை இந்திய ஒருமைப்பாடு குறித்த பிரச்சினையாக மாறிவிட்டது. பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்வதன் வாயிலாக சிறுபான்மை மதத்தினர் (முசுலீம்களும், கிறித்தவர்களும் ) தங்கள் நாட்டுப் பற்றை நிரூபிக்க வேண்டுமென்ற பாரதீய ஜனதாவின் விஷமப் பிரச்சாரம் உச்சநீதி மன்றத்தீர்ப்பினால் புனிதப்படுத்தப்பட்டுவிட்டது.

இத்தனை விவாதங்களுக்கு உட்படுத்தப்படும் பொது சிவில் சட்டம் என்பது தான் என்ன?

  • எந்தவொரு ஆணோ,பெண்ணோ அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மதம் மாறாமலேயே திருமணம் செய்து கொள்ளும் உரிமைக்கும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமணக் கொள்கைக்கும் எதிராக மதங்கள் வழங்கும் சலுகைகளை நிராகரித்தல்.
  • ஆண், பெண் இருவரின் ஒப்புதலும் இருப்பின் நீதிமன்றத்தில் மணவிலக்கு பெறும் உரிமை.
  • கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட மனைவியும், குழந்தைகளும் அவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறும் உரிமை.
  • பருவம் வராத சிறுவர் – சிறுமிகளுக்கு பெற்றோர்களே காப்பாளர்கள் என்ற மதச்சட்டங்களுக்கு மாறாக, அச்சிறுவர்களின் நலனில் அக்கறை கொண்ட வேறு யாரையேனும் கூட நியமிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம்.
  • சொத்து மற்றும் பாரம்பரியச் சொத்துக்களில் ஆண் -பெண் இருபாலருக்கும் சம உரிமை.
  • மணமான அல்லது மணமாகாத எந்தவொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தையொன்றைத் தத்து எடுத்து கொள்ள சட்ட பூர்வமான உரிமை.

மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் தொடர்ச்சியாக மேற்கத்திய அரசுகள் கொண்டு வந்த, மேற்கூறிய அம்சங்களைக் கொண்ட “குடிமக்கள் அனைவருக்குமான பொது சிவில் சட்டம்” என்பது திருமணம், சொத்துரிமை, மற்றும் குடும்ப விவகாரங்கள் அனைத்திலும் மதத்தின் அதிகாரத்தைப் பறிக்கிறது; மதச்சார்பற்ற அரசு அவற்றைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது.

முசுலீம் சட்டத்திற்கு மட்டுமா முரண்பாடு?

அம்பேத்கர் சட்ட அமைச்சர்
சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான்.

இத்தகையதொரு பொது சிவில் சட்டத்துடன் முசுலீம் தனிநபர் சட்டம் மட்டுமல்ல, தற்போது அமலில் உள்ள இந்து, கிறித்தவ, பார்சி தனிநபர் சட்டங்கள் அனைத்துமே வெவ்வேறு அளவில் முரண்படுகின்றன.

ஆனால் அத்வானியின் சீடர்கள் பொது சிவில் சட்டத்திற்குத் தரும் விளக்கம் மிகவும் சுருக்கமானது;  “முசுலீம் நாலு பொண்டாட்டி வச்சிக்கலாம்; ‘நமக்கு’ அந்த உரிமை இல்லை. அவன் ‘தலாக் தலாக தலாக்’ னு சொன்னாப் போதும். உடனே விவகாரத்து; நாம் கோர்ட்டுக்கு அலையணும். அதென்ன அவனுக்கு மட்டும் தனிச் சட்டம்?”

நியாயமாக இந்தக் கேள்வி முசுலீம் பெண்களிடம் எழுப்பப்பட வேண்டும். முசுலீம் தனிநபர் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான். பாரதீய ஜனதாவிற்குத் தங்கள் மேல் தோன்றியுள்ள திடீர்க் கரிசனையை நம்புவதற்கு முசுலீம் பெண்கள் தயாராக இல்லை என்பது ஒருபுறமிருக்க, பாரதீய ஜனதாவும் இப்பிரச்சாரத்தை அவர்களிடம் கொண்டு செல்வதில்லை. மாறாக ,மேற்படி ‘உரிமைகளில்லாத ‘ இந்து ஆண்களிடம் தான் கொண்டு செல்கிறது. அதன் நோக்கமும் கண்ணோட்டமும் இதன் மூலம் அம்பலமாகிறது.

இந்துச் சட்டத்தின் வரலாறு

இது ஒருபுறமிருக்க, ‘நமக்குள்ளேயே’ இந்து சட்டம் விதித்திருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பற்றியும், நம்முடைய சட்டத்தில் அசிங்கமாக வெளிப்படும் சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் பற்றியும் பாரதீய ஜனதா பேசுவதில்லை.

வரலாற்றுப் பழி தீர்ப்பதையே தனது முழுமுதற் கொள்ளையாக அறிவித்திருக்கும் பாரதீய ஜனதா இந்துச் சட்டத்தின் வரலாறு பற்றிச் சாதிக்கும் மவுனம் பொருள் நிறைந்தது. இந்தச் சட்டத்தொகுப்பின் தயாரிப்பின் போது நடைபெற்ற விவாதங்கள் எந்த அளவு அம்பலமாகின்றதோ, அந்த அளவு பாரதீய ஜனதாவின் இந்து ராஷ்டிரக் கனவு சிதைந்து போகும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் செயற்கை முறையில் பாராளுமன்ற மண்டபத்திற்குள் ‘தயாரிக்கப்பட்ட’ இந்துமதத்தின் குட்டு வெளிப்பட்டுப் போகும்.

சாதி ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கத்தின் அவமானகரமான சின்னமாகக் காட்சியளித்த இந்துச் சட்டத்தைச் சீர்திருத்த அம்பேத்கர் முயன்றபோது அதை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் பாரதீய ஜனதாவின் மூதாதைகள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“இச்சமூகம் ஒரு இயக்கமற்ற சமூகமாகும் . கடவுள் அல்லது சுமிருதிகள் தான் சட்டத்தை உருவாக்க வேண்டும். ஆகவே இச்சட்டங்களை மாற்றுவதில் இந்துச் சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றே இச்சமூகம் நம்பி வந்தது . இதனால்தான் இந்துச் சமூகத்தில்தலைமுறை தலைமுறையாகச் சட்டங்கள் மாறாமல் இருந்து வந்தன. தங்களின் சமூக, பொருளாதார, சட்ட வாழ்க்கையை உருவாக்குவதில் தங்களுக்கு இச்சமூகம் என்றும் ஒத்துக் கொண்டதே இல்லை. முதன் முறையாக இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு இந்துச் சமூகத்தை நாம் தூண்டுகிறோம்” என்று அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது அம்பேத்கர் குறிப்பிட்டார்.

”கடவுளால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மாற்றுவதற்கு மனிதனுக்கு உரிமையில்லை’’ என்று கூறும் முசுலீம் மதவாதிகளை இன்று கேலி செய்கின்ற இந்து மதவாதிகள் தங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இராசேந்திரப் பிரசாத்
மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

ஒரு தார மணம், ஜீவனாம்சம், பெண்ணுக்கும் சொத்துரிமை, வாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை 1951-ல் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர்.

காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் சநாதனிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் இம்மசோதாவை மூர்க்கமாக எதிர்த்தனர். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

இந்து மசோதா மீதான விவாத்தையே தடை செய்யத் திட்டமிட்ட சநாதனக் கும்பல், எல்லா மதத்தினருக்கும் சேர்த்து பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கோரி பிரச்சினையைத் திசை திருப்பியது. அதன் மூலம் முசுலீம்களையும் தூண்டிவிட்டு இந்துச் சட்டத்திற்குச் சமாதி கட்ட முயன்றது.

”இந்துச் சட்ட மசோதாவை எதிரிப்பவர்கள் ஒரே நாளில் பொது சிவில் சட்டத்தின் தீவிர ஆதரவாளர்களாக மாறிவிட்டது எனக்கு வியப்பளிக்கிறது” என்று அவர்களின் முகத்திரையைக் கிழித்தார் அம்பேத்கர்.

பலதார மணம், வைப்பாட்டி முறை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்துப் பெண்களின் நலனை முன்னிட்டுக் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தின் வாயிலில் பெண்களின் ஆர்ப்பட்டமொன்றை நடத்தி அரசை மிரட்டினார்கள், பாரதீய ஜனதாவின் மூதாதைகள். அதுவரை மசோதாவை ஆதர்ப்பதாகக் கூறிய நேரு பல்டியடித்தார்.

திருமணம் மற்றும் மணவிலக்கு பற்றிய பிரிவை மட்டும் ஒரு தனி மசோதாவாக ஆக்கிவிடலாமென்றும் மற்றவைகளைக் கைவிட்டு விடாலாமென்றும் நேரு முன்வைத்த சமரச யோசனையை அம்பேத்கர் ஏற்றார். ஆனால் மசோதாவின் இந்தப் பகுதிகூட நிறைவேற்றப்பட முடியாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில்தான் அமைச்சராகத் தொடர்ந்து நீடிப்பதில் அர்த்தமில்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்தார் அம்பேத்கர்.

இந்துச் சட்டத்தின் அடிப்படைகள்

தற்போது வழக்கில் உள்ள இந்துச் சட்டம் 1955-56-ல் நிறைவேற்றப்பட்டது. இது மூன்று வகைப்பட்ட விசயங்களைத் தன் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

  1. வருண சமூகத்தைக் கட்டிக் காப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பார்ப்பனியச் சட்ட மரபுகளான சுருதிகள், சுமிருதிகள் மற்றும் அவற்றுக்கான விளக்கவுரைகள்.
  2. சூத்திரர், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடி மக்களிடையே நிலவி வரும் மரபுகள்.
  3. மேற்கத்திய சட்ட மரபுகளான நியாயம் – நீதி – மனச்சாட்சி, முன்மாதிரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்படும் சட்டங்கள்.

1.சுருதிகள், சுமிருதிகள், விளக்கவுரைகள்

வேதங்கள் ‘ஒலி வடிவில் இறைவனால் முனிவர்களுக்கு அருளப்பட்டவை’ என்பதால் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. சுருதி என்ற சொல்லுக்கு ‘காதால் கேட்டது’ என்று பொருள்.

சுமிருதிகள் என்றால் ‘நினைவில் நின்றவை ‘ எனப் பொருள். வேதங்களின் உட்பொருள் குறித்த ஆதிகால முனிவர்கள் அளித்த விளக்கங்களைக் கேட்டு நெஞ்சில் நிறுத்திக் கொண்டவையே சுமிருதிகள். முற்கால சுமிருதிகளுக்குத் தரும சூத்திரங்கள் என்றும், ‘மனுஸ்மிருதி’ போன்ற பிற்கால சுமிருதிகளுக்குத் தரும சாத்திரங்கள் என்றும் பெயர்.

தரும சாத்திரங்கள் என்றழைக்கப்படும் இச்சட்டங்கள் நாடெங்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படவில்லை. புதிதாக எழுகின்ற பிரச்சனைகளுக்கு ஏற்ப இச்சட்டத்தை எவ்வாறு பிரயோகிப்பது என்பதை விளக்கி எழுதப்பட்ட விளக்கவுரைகள் ஏராளமாக உள்ளன. கி.பி- 7-ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை இத்தகைய விளக்கவுரைகள் பல எழுதப்பட்டுள்ளன. நால்வருண முறை என்னும் அடிப்படைச் சட்டத்தில் ஒன்றுபடுகின்ற அதே சமயம் மரபுகள், பழக்கங்கள், ஒவ்வொரு வட்டாரமும் சந்திக்கும் சிறப்பான பிரச்சினைகள் ஆகியவற்றுக்கேற்ப இந்த விளக்கவுரைகள் மாறுபட்டன

2. சூத்திரர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்கள் மத்தியில் நிலவும் மரபுகள்

இன்று உருவாக்கப்பட்டுள்ள இந்து மதத்தின் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் மக்களாகிய மேற்கூறியோர் மத்தியில் (ஒவ்வொரு சாதி அல்லது சமூகக் குழுவிற்குள்ளும்) நிலவி வந்த பண்பாடு, மேல் வருணத்தாரின் பண்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தனது பண்பாட்டைப் பின்பற்றும்படி முற்காலத்தில் பார்ப்பனியம் இவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை; மாறாக, அவ்வாறு பின்பற்ற முயன்றோரைத் (எ.கா: நந்தன்) தண்டித்தது.

ஆனால், இந்து மதத்தை அனைத்திந்திய ரீதியில் ஒருங்கிணைக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இப்போது ‘கீழ்சாதி மரபு’ களையும் இந்துச் சட்டத்தின் அங்கமாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் வேதங்கள், சுமிருதிகளின் அடிப்படையிலான மைய நீரோட்ட இந்துச் சட்டத்திற்கு இவற்றை அடிப்படையாக ஏற்காமல், ‘இழிவான இந்த மரபுகளை’ பின்னிணைப்பாக வைத்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் தனது ‘புனிதத்தை’க் காப்பாற்றிக் கொண்டது.

3. மேற்கத்திய சட்ட மரபுகள்

நவீன சமூகம் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு சுமிருதிகளில் விடை தேடவியலாது என்பதை இந்துச் சட்டத்தை உருவாக்கியவர்கள் புரிந்திருந்தனர். எனவே மதச்சார்பின்மை என்னும் உள்ளடக்கத்தை நீக்கிவிட்டு, மேற்கத்திய சட்ட மரபின் வடிவத்தை அவர்கள் இந்துச் சட்டத்தின் அடிப்படையாகச் சேர்த்துக் கொண்டனர். பாராளுமன்ற ஜனநாயகம் என்ற சட்டத்திற்கேற்ப புதியதொரு இந்து மதத்தை உருவாக்க இது அவசியமாக இருந்தது.

ஆசை வார்த்தைகள், மன்னர்- மானியம், பதவிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கு உபாயங்களையும் கடைப்பிடித்து ‘இரும்பு மனிதர்’ இந்தியாவை உருவாக்கிவிட்டார். ஆனால் இந்து மதத்தை ஒருங்கிணைத்து புத்துருவாக்கம் செய்வது இந்தியாவை உருவாக்குவதைக் காட்டிலும் கடினமான பணியாக இருந்தது.

தனது வாள்முனையில் இந்தியாவை ஒன்றுபடுத்திய பிரிட்டீஷ் ஆட்சியின் பேனா முனையேகூட ஒருங்கிணைந்த இந்துச் சட்டத்தை உருவாக்கவில்லை. அந்தந்த வட்டாரத்தில் என்ன தரும சாத்திரங்கள் வழக்கில் உள்ளனவோ அவற்றிற்கு பிரிட்டீஷ் நீதிமன்றங்களில் விளக்கம் கூறும் அதிகாரம் பார்ப்பனப் பண்டிதர்களுக்கே இருந்தது.

‘சுதந்திர – ஜனநாயக ‘ இந்தியாவில் இந்த முறையைத் தொடர முடியாதென்பதால் ஒரே சுமிருதியையும், அதற்கு விளக்கம் சொல்ல ஒரே பண்டிதரையும் உருவாக்கும் பணியை இந்துச் சட்டத் தொகுப்பை உருவாக்கிய சநாதனிகள் மேற்கொண்டனர். ( இவ்வாறு தொகுக்கும் போது அடிப்படையான வருண தருமநெறிகளுக்கு ஊறு வந்துவிடக் கூடாதேயென்று திரைமறைவில் காஞ்சி சங்கராச்சாரி செய்த சித்துவேலைகளை வீரமணி அவர்கள் தனி நூலில் அம்பலப்படுத்தியுள்ளார் ) ஒருவாறாக இந்துச் சட்டத் தொகுப்பு எனும் ‘ஒருங்கிணைந்த சுமிருதி’ உருவாக்கப்பட்டது. அதற்கு விளக்கமளிக்க இறுதி அதிகாரம் படைத்த பார்ப்பனப் பண்டிதராக உச்சநீதி மன்றம் ‘நியமனம்’ பெற்றது.

அம்பேத்கரின் ராஜினாமாவுக்குப் பிறகு, இந்து திருமணச் சட்டம் (1955), இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரிப்புச் சட்டம் (1955 ) (1956), இந்து காப்பாளர் சட்டம் (1956) ஆகியவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன.

(தொடரும்…)

COMING SOON ! ‘அம்மா டாஸ்மாக்’ – கேலிச்சித்திரம்

0

amma-sarakku-cartoon-small

கேலிச்சித்திரம் – ஓவியர் முகிலன்

பாஜக பிரெஞ்சு கூட்டணியில் டெல்லி மெட்ரோ ஊழல்

2

டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒப்பந்தம் பெறுவதற்காக ‘அல்ஸ்டோம் இங்கிலாந்து’ என்ற பிரெஞ்சு ரயில் மற்றும் டர்பைன் உற்பத்தி நிறுவனத்தின் இங்கிலாந்து கிளை லஞ்ச ஊழலில் ஈடுபட்டது இங்கிலாந்து அரசால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2000-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை டெல்லி மெட்ரோ பணி, மற்றும் போலந்து, துனிசியா நாடுகளில் டிராம் சேவை கட்டுமானங்களுக்கான ஒப்பந்தப் பணி பெறுவதற்காக ஊழல், ஊழலுக்கான சதி செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக இந்நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் முதலாளித்துவத்துவத்திற்கே உரிய முறைகளில் ஆட்சியாளர்களை ஊழல்மயப்படுத்தி வளர்ந்துள்ளது இந்நிறுவனம்.

அல்ஸ்டோம்டெல்லி மெட்ரோ திட்டத்தின் முதல் கட்டத்தில் ரயில் கட்டுப்பாடு, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு கட்டுமானம் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக 30 லட்சம் யூரோக்களை (சுமார் ரூ 24 கோடி) லஞ்சமாக கொடுத்துள்ளது அல்ஸ்டோம். இதை அடித்தளமாக கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தடுத்த பணிகளுக்கும் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது இந்நிறுவனம்.

இந்த லஞ்சப்பணம் பல்வேறு நிறுவனங்களுக்கு ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது. செப்டமர் 12, 2001-ல் ரூ 1.98 கோடி இந்தோ-யூரோப்பியன் வென்சர்ஸ் பிரைவைட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திற்கு மே 3, 2002 ல் 31 லட்சம் யூரோ குளோபல் கிங் டெக்லானஜி நிறுவனத்திற்கும் ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் லஞ்சம் கொடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

டெல்லி மெட்ரோ ரயில் கார்பரேசன் என்ற அரசு நிறுவனம் மத்திய மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசு ஆகியவற்றால் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். நிர்வாக ரீதியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தான் அதை கட்டுப்படுத்துகிறது. தற்போது ஊழல் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 2000-ம் ஆண்டில் ‘உத்தமர்’ வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ தான் மத்தியில் ஆட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது டெல்லி மெட்ரோவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தவர் அத்வானி, மெட்ரோவை கட்டுப்படுத்தும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர் கர்நாடக சுயம்சேவக் ஆனந்த் குமார். அப்போதைய டெல்லி மெட்ரோ சேர்மேனாக இருந்தவர் பா.ஜ.க வின் அப்போதைய டில்லி மாநில தலைவர் மதன்லால் குரானா. ஆக முறைகேடு நடந்த காலத்தில் பா.ஜ கும்பல் தான் டெல்லி மெட்ரோவை கட்டுப்படுத்தி இயக்கியிருக்கிறது. இவர்களின் ஒப்புதலுடன்தான் லஞ்சத்தின் மூலம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது அல்ஸ்டோம்.

டெல்லி மெட்ரோ திட்டம் கொண்டுவரப்பட்டபோது, அப்போதைய டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் இதற்கு உரிமை கொண்டாடுவதாக புலம்பிய பாஜகவினர் இது முழுக்க முழுக்க பா.ஜ.க ஆட்சியின் சாதனை என்று சொந்தம் கொண்டாடினர். இப்போது அந்த சொந்த சாதனையை வேதனையாக நினைத்து மறக்க முயற்சிக்கின்றனர்.  கேடி மோடியைக் கொண்டாடும் ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்பாமல் கள்ள மவுனம் சாதித்து வருகின்றனர்.

இந்த ஊழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்போதைய டெல்லி மெட்ரோ நிர்வாக இயக்குநர் ஸ்ரீதரன் தாங்கள் பிரெஞ்ச் அல்ஸ்டோம் நிறுவனத்துடன் தான் கூட்டு வைத்திருந்ததாகவும் அதன் இங்கிலாந்து கிளையிடம் தங்களுக்கு தொடர்பில்லை என்றும் கூறி சப்பைகட்டு கட்டியிருக்கிறார். அதுபோல குற்றச்சாட்டில் பணபரிவர்த்தனை நடந்ததாக கூறப்படும் இந்தோ யூரோப்பியன் வென்ச்சர்ஸ், குளோபல் கிங் டெக்னாலஜி குறித்து தான் கேள்விபட்டது இல்லை என்று ஒரே போடாக போட்டுள்ளார். இவர்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை மிகவும் திறமையுடன் நிறைவேற்றிக் காட்டியதாக புகழப்படுபவர். இந்தத் திட்டத்துக்காக பல கோடி ரூபாய் லஞ்சப் பணம் கைமாறியது பற்றிக் கூட தெரியாமல் இதை திறமையுடன் நிறைவேற்றியிருக்கிறார். சென்னை மெட்ரோவிலும் இவர்தான் அவ்வப்போது மேற்பார்வை செய்து வருகிறார். மேலும் அப்துல் கலாம் வரிசையில் உழைத்து முன்னேறிய நட்சத்திரங்கள் வரிசையில் இந்த ஸ்ரீதரும் முக்கியமானவர்.

டெல்லி மெட்ரோ திட்ட செலவுகளில் 60% ஜப்பான் கடனாக கொடுத்துள்ளது. கடனை நம் தலையில் கட்டிவிட்டு, திட்ட ஆலோசனை, தொழில்நுட்பங்கள், ஒப்பந்தங்கள் மூலம் ஏகாதிபத்திய நாடுகளே மீண்டும் அதை கொள்ளையடித்து விடுகின்றன். ஆக கடனாகவும், ஒப்பந்தங்களாகவும் என இரட்டை லாபம் அடைகின்றன ஏகாதிபத்தியங்கள். தரகு முதலாளிகள் இவர்களின் பங்காளிகாளாக இருந்து கூட்டுக் கொள்ளையடிக்கிறார்கள். இவர்களால் அளிக்கப்படும் எலும்புத் துண்டுகள் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்த்தினருக்கு அவ்வப்போது அளிக்கப்படுகிறது.

ஏதோ நாட்டை உய்விக்க்க வந்த திட்டங்கள் போல ஆளும்வர்க்கங்களால் பிரச்சாரம் செய்யப்படும் இது போன்ற திட்டங்கள் ஏகாதிபத்திய நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் கொழுக்கவே பயன்படுகின்றன. மறுபுறம் உழைக்கும் மக்களோ அத்து கூலிக்காக தகர கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்டு இதே மெட்ரோ திட்டங்களில் உயிரை பணயம் வைத்து வேலைவாங்கப்படுகிறார்கள்.

மேலும் பொதுத்துறை-தனியார் துறை கூட்டு என்ற பெயரில் கொண்டு வரப்படும் மெட்ரோ திட்டங்கள் பொதுபோக்குவரத்தை அரசிடமிருந்து தனியாருக்கு மாற்றும் சதியையும் கொண்டிருக்கிறது. சில மும்பை மெட்ரோ ரயில் நிலையங்களில் ரிலையன்ஸ் மெட்ரோ என்றுதான் சின்னங்களே பொறிக்கப்பட்டுள்ளன. அதுபோல கட்டண நிர்ணயமும் தனியாரின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வியையும், மருத்துவத்தையும், தண்ணீரையும் மக்களிடமிருந்து பறித்து முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு, முதலாளிகளின் வளர்ச்சிக்காக கொண்டுவரப்படும் பெரிய பெரிய கட்டிடங்களையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் காட்டி வளர்ச்சி என்று நம்மை நம்பச்சொல்கிறது ஆளும்வர்க்கம். உள்கட்டமைப்பு திட்டங்களில் நடக்கும் ஊழல் மட்டுமல்ல மக்கள் பணத்தில் முதலாளிகளுக்காகச் செய்யப்படும் உள்கட்டமைப்பு திட்டமே ஊழல் தான்.

அல்ஸ்டோம் நிறுவனம் மீதான யுகே தீவிர குற்ற அலுவலகத்தின் விசாரணை 2011-ல் துவங்கியது.  லஞ்ச ஊழலை தடுக்கத் தவறியதற்காக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அல்ஸ்டோம் நிறுவனத்துக்கு 2.56 கோடி யூரோ (சுமார் ரூ 20 கோடி) அபராதம் விதித்திருந்ததைத் தொடர்ந்தே இங்கிலாந்தில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது. அல்ஸ்டோமின் கன்னட்டிகட் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் நிறுவனத்தின் சார்பாக லஞ்சம் கொடுத்ததாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.  3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் மூன்று யுகே இயக்குனர்களை லஞ்சம், பணப் பரிமாற்ற மோசடி, போலிக் கணக்கு ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்திருந்தது. அல்ஸ்டோமின் ஜெர்மன் போட்டியாளர் சீமன்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்து ஒப்பந்தப் பணிகளை வெல்ல முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் $160 கோடி (சுமார் ரூ 9,600 கோடி) அபராதம் கொடுத்து தப்பித்துக் கொண்டது.

2G அலைக்கற்றை போன்ற விவகாரங்கள் இந்தியா போன்ற முதிர்ச்சியடையாத நாடுகளில்தான் நடக்கின்றன என்று பித்தலாட்டம் செய்யும் அதியமான் போன்ற முதலாளித்துவ ஆதரவாளர்களின் முகத்தில் அறைவது போல முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் நிறுவனங்களின் ஊழல் செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன.

மேலும் படிக்க

சிறப்புற நடந்த கருவாடு திரையிடல் நிகழ்வு!

6

வினவு தளத்தின் முதல் ஆவணப்படமான “கருவாடு “படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் கடந்த சனிக்கிழமை (20-09-2014) அன்று உற்சாகத்துடன் நடைபெற்றது.

விரிவான ஏற்பாடுகளோ, அணிதிரட்டலோ இல்லாமல் மிகக்குறைந்த அவகாசத்தில் நடைபெறும் கூட்டம் என்பதால் தோழர்களும் வாசகர்களும் சேர்த்தே குறைந்த அளவில்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். அதை தகர்க்கும் வண்ணம் வினவு வாசகர்கள், தோழர்களுக்கு இணையாக கலந்து கொண்டார்கள். வினவு வாசகர்கள், தோழர்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என சற்று நேரத்திற்கெல்லாம் அரங்கம் முழுவதும் நிரம்பிவிட்டது. அதற்கு மேலும், பல வாசகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அனைவருக்கும் இருக்கை வசதி செய்ய முடியாதது வருத்தம் அளித்தது.

இத்தகைய சூழலை முன்னரே எதிர்பார்த்து விழா அரங்கத்தின் கீழ் தளத்திலுள்ள மற்றொரு அரங்கத்தையும் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்வது என பதிவு செய்திருந்தோம். இதன்படி தோழர்களை கீழ் தளத்திலும் வாசகர்களை மேல் தளத்திலுமாக என இரண்டு திரைகளில் கருவாடு வெளியிடுவது என முடிவானது. இரண்டு தளங்களிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது.

விழாவிற்கு தோழர் அஜிதா வினவு சார்பாக தலைமை தாங்கினார். அனைவரையும் வரவேற்று இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்கினார்.

தோழர் அஜிதா
தோழர் அஜிதா

அவர் பேசியதாவது,

“கோயம்பேட்டில் கருவாடு விற்பது சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு பிரச்சனையாக இருப்பதாக கூறி தி இந்து செய்தி வெளியிட்டதையும் அதன் எதிரொலியாக கருவாடு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய வைத்ததையும் கண்டித்து வினவில் செய்தி வெளியிட்டோம். அது வாசகர்களால் பரவலாக வரவேற்புடன் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்த கருத்துக்களையும் தொகுத்து வெளியிட்டோம்.

சரி இணையத்தைத் தாண்டியும் மக்கள் கருத்தை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து கோயம்பேடு சந்தை, எம்.ஜி.ஆர் நகர் சந்தை, மூலக்கொத்தளம் சந்தைகளில் மக்களை சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். சரி போகிறதுதான் போகிறோம், ஒரு கேமராவையும் எடுத்துச் சென்றால் நன்றாக இருக்குமே என்று நண்பர்கள் உதவியுடன் கேமராவை எடுத்துச் சென்று மக்கள் கருத்தை பதிவு செய்தோம்.

அதன் படி ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள்தான் கருவாடு ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன” என படம் கருவாகி வளர்ந்து கருவாடான வரலாற்றை கூறினார்.

“கருவாடு படத்தில் மக்கள் கருத்தை தொகுத்து அளித்திருக்கிறோம். இதைத் தாண்டி நாம் செய்ய வேண்டிய வேலைகளும் இருக்கின்றன. தந்தை பெரியாரின் காலத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் எங்கெல்லாம் தலை எடுத்ததோ அங்கெல்லாம் அதை தலையில் அடித்து உட்கார வைத்தார். அந்தப் பணியை தற்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டும்”  என்று கேட்டுக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக கருவாடு ஆவணப்படத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் வெளியிட்டார். ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முன்னாள் ஸ்டன்ட் மாஸ்டரான பெரியவர் டி ராஜா பெற்றுக் கொண்டார்.

ஆவணப்பட வெளியீடு
ஆவணப்பட வெளியீடு

அதைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய தோழர் கதிரவன்,

தோழர் கதிரவன்
தோழர் கதிரவன் உரை

“செய்தி வெளியிட்டு, கருவாட்டை பறிமுதல் செய்ய வைத்து தன் பார்ப்பன செல்வாக்கை காட்டியிருக்கிறது பார்ப்பன இந்து பத்திரிகை. உழைக்கும் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளுக்காக போராடும் போது கண்டுகொள்ளாத அரசு கருவாடு பிரச்சனையில்  உடனடியாக தலையிட்டு ரூ 20,000 மதிப்புள்ள கருவாடுகளை பறிமுதல் செய்ததன் மூலம் தன் பார்ப்பன பாசத்தை காட்டியிருக்கிறது.

பார்ப்பனர்களை தவிர மற்றவர்கள் சூத்திரர்கள், இழிந்தவர்கள் என்று கூறி கருவறைக்குள் நுழையக்கூடாது என்று பார்ப்பனர்களும், உச்சநீதிமன்றமும் சொல்கிறார்கள். அதுபோல தான் இங்கேயும். கருவாடு என்பது ‘இழிந்த’ உணவு, ‘இழிந்த’ மக்களின் உணவு என்பதால்தான் தடை செய்திருக்கிறார்கள். இரண்டும் ஒரே சங்கிலியின் இரண்டு கண்ணிகள்.

இதே ஜெயலலிதாதான் 2002-ல் கிடாவெட்டு தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். மதுரை பக்கம் ஆண்ட பரம்பரை என்று வீரம் காட்டும் எவனும் சட்டத்தை மீறி கிடாவெட்டத் தயாராக இல்லை. மகஇக மற்றும் எமது தோழமை அமைப்புகளைச் சேர்நத தோழர்கள்தான் கிடா வெட்டும் போராட்டம் நடத்தி சிறை சென்றனர். இறுதியில் அந்த சட்டம் முறியடிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என்று பேசியிருக்கிறார். ஏனென்றால் அது தேவ பாஷை. மற்ற மொழிகள் நீச்ச பாசை என்கிறார்கள்.

ஆக இது ஏதோ கருவாட்டு பிரச்சனை மட்டும் என்பதல்ல, கருவறை தீண்டாமை, மொழித் தீண்டாமை போன்ற ஒரு பார்ப்பனிய பிரச்சனை. அதற்கு எதிரான போராட்டத்தில் இந்த ஆவணப்படத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று  கேட்டுக்கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து “கருவாடு” படம் திரையிடப்பட்டது. வாசகர்கள் பல காட்சிகளுக்கு கைதட்டி தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார்கள். “எங்களுக்கு உசிதமா படலை”, ”உயிரை கொன்ன்ன்னு”, “என் பையன் அப்படி இல்லை” என்பன போன்ற பார்ப்பனர்களின் கருத்துக்கள் வெளிவரும்போது மாணவர்களும் இளைஞர்களும் அரங்கத்தை கேலிச் சிரிப்பால் நிறைத்தனர். பார்ப்பனர்களின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் “மனுசன்னு இருந்தா கோவம் வரணும்” “எம்.ஜி.ஆரே கருவாடு இல்லாம சாப்பிட மாட்டாரு தெரியுமா” என்பன போன்ற கோயம்பேடு தொழிலாளிகளின் கருத்துக்களும், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பெரியவர் பேசிய கருத்துக்களும் கைத்தட்டல்களை அள்ளியது.

படம் திரையிடல்
படம் திரையிடல்

“தமிழகத்திற்கு வரும் கருவாட்டின் பெரும்பகுதி மோடியின் குஜராத்தில் இருந்துதான் வருகிறது. கருவாடு தேவையில்லை என்றால் அவரே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்” என்ற கருவாடு மொத்த வியாபாரி கூறிய செய்தி ஆச்சரியமளித்தது.

தோழர்கள் மற்றும் பொதுவான வாசகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் “கருவாடு” கவர்ந்ததை பார்க்க முடிந்தது. படம் நிறைவடைந்ததும் ஆரவாரமாக கைதட்டி படத்தை வரவேற்றார்கள்.

இதைத் தொடர்ந்து படத்தின் மீதான் விவாதத்தை துவக்கிவைத்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் பேசினார். அதில் குஜராத்தில் இருந்து வந்த நண்பர் ஒருவரை சந்தித்ததாகவும், குஜராத்தின் அகமதாபாத் போன்ற நகரங்களின் மையப் பகுதிகளில் புலால் உணவு கிடைப்பதில்லை. நகரின் ஒதுக்குப் புறமான பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். புலால் வாங்க அங்கு தான் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்ததாகவும் பதிவு செய்தார். மஹாராஷ்டிராவில் மகாவீரார் ஜெயந்தியை ஒட்டி பத்து நாட்களுக்கு புலால் கிடைப்பதை தடைசெய்கிறார்கள் இந்துமத வெறியர்கள் என்பதையும் இது இன்னும் பல பண்டிகைகளுக்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு இருப்பதையும் கூறி எச்சரித்தார்.

தோழர் மருதையன்
தோழர் மருதையன்

பெரும்பான்மை மக்களின் உணவு பழக்கத்தை தடைசெய்யும் பார்ப்பனியத்தின் அராஜகத்தை கண்டித்தார்.

“நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனை பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டிலும் பல பத்தாண்டுகளாக நம் மக்கள் இதற்கு பழக்கப்படுகிறார்கள் என்பது தான். தாங்கள் இழிந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு பார்ப்பனர்கள் போல தாங்களை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இதை அகற்ற வேண்டியது முக்கியமான வேலை” என்று கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து படத்தில் கருத்து சொல்லிய எம்.ஜி.ஆர் நகர் பகுதி பெரியவர் ராஜா, தான் சிறு வயதில் அனுபவித்த பார்ப்பன சாதி ஒடுக்குமுறையை பற்றி விளக்கினார்.

பெரியவர் ராஜா உரை
பெரியவர் ராஜா உரை

“ஏன் பார்ப்பனீயம் பார்ப்பனீயம்னு சொல்றேனா அதை அனுபவிச்சவங்க நாங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.

இப்போ எனக்கு 90 வயசு ஆகுது. எனக்கு 14 வயசு இருக்கும் போது, தம்பி எந்திரிபா, (ஒரு வாசகரை எழும்பச் சொல்கிறார்). இந்தத் தம்பி மாதிரிதான் இருப்பேன். எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம். என் அம்மா டீச்சரா இருந்தாங்க.

லீவுக்கு எங்க அம்மா வேலை பார்க்கும் ஊருக்கு போயிருந்தேன். குளிக்க கால்வாய்க்கு போனேன். அது தாமிரபரணி ஆத்தோட கால்வாய். ஆத்தில குளிக்க படித்துறை கட்டி வைச்சிருப்பாங்க. அந்த ஊரில் பார்ப்பனர்களுக்கு என்று ஒரு படித்துறை. ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுது என்றால் முதலில் பார்ப்பனர்களுக்கான படித்துறை இருக்கும். அடுத்து பார்ப்பனர்கள் இல்லாத ஜாதியினருக்கான படித்துறை. இன்னும் பத்து பதினைந்து அடி தள்ளி பள்ளர், பறையர்களுக்கான படித்துறை இருக்கும்.

நான் ஊருக்கு புதுசு, சின்ன பையன். எனக்கு இது எதுவும் தெரியாது. தெரியாம போய் பார்ப்பனர்களுக்கான படித்துறையில் குளிச்சிட்டு தலை துவட்டிக்கிட்டிருந்தேன். அங்க வந்த பூணூல் போட்ட ஐயர் ஒருத்தர்

“ஏண்டா இங்கே குளிச்ச” என்றார்.

“படித்துறை இருந்தது. தண்ணி இருந்தது குளிச்சேன். இன்னா இப்போ?” என்று கேட்டேன்.

அந்த பார்ப்பனர் அங்கிருந்த மரக்குச்சியை எடுத்து என்னை அடிக்க முயற்சிக்க நான் ஓடினேன். அவரும் விரட்டினார்.

இறுதியில் வேறு நபர்கள் வந்து காப்பாற்றி, “தெரியாம பண்ணிட்டான். இனி இப்படி நடக்காது” என்று உறுதிமொழி கொடுக்கவும்

“இனி இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிடுவேன்” என்று  அனுப்பி வைத்தான் அந்த பார்ப்பான். எனக்கு அவமானமாக இருந்தது.” இதை நினைவு கூர்ந்த பெரியவர் தன்னால் அந்த அவமானத்தை இப்போது நினைத்தாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

“பெரியார் என்ற ஒருவர் இல்லை என்றால் நாம் அவ்வளவுதான்” என்று பெரியாரின் பணிகளின் தாக்கத்தை தன் சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “இளைஞர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். சின்ன வயசுல போஸ்ட் ஆபீஸ்ல போய் ஒரு ஸ்டாம்ப் வாங்க வேண்டும் என்றால் “சாமீமீமீமீ ஒரு ஸ்டாம்ப் குடுங்க” என்று தான் கேட்க வேண்டும். நாமம் போட்டுக்கொண்டு ஒரு பார்ப்பான் உள்ள உக்காந்திருப்பான். போலீஸ் ஸ்டேசன் போனா சப்-இஸ்பெக்டர் நாமம் போட்டிருப்பார். “சாமீஈஈஈஈ என்ன விட்டிருங்க”-ன்னு கெஞ்சணும்.

கோர்ட்டுக்கு போனா ஜட்ஜ் நாமம் போட்டிருப்பாரு. அவருக்கு விசிறிவிட நம்மாளு இருப்பான். பக்கத்துல இருந்து விசிறுனா தீட்டுனு சொல்லி பத்தடி தூரத்தில நின்னு கயிற்றை பிடித்து இழுத்துக் கொண்டிருப்பான். அவரும் ஜாலியா தீர்ப்பெழுதுவாரு. இப்படித் தான் இருந்தது.

இப்போ மாதிரி சார் என்று சொல்ல முடியாது, சாமி சாமின்னு தான் சொல்லனும். சாமி தான் நமக்கு பிரச்சனை. இப்ப திருப்பியும் சாமிகளை கொண்டு வருகிறான்.

பெரியார் இல்லைனா நாம் இன்னைக்கு மாதிரி இருக்க முடியாது. இப்போ முன்ன மாதிரி இல்ல. முன்ன எங்க ஊரு அக்கிரகார தெருவுல போகும் போது செருப்பு போட்டு நடக்கக் கூடாது, துண்டை தோள்மேல போடக் கூடாது. இப்ப ஊருக்கு போனா அக்கிரகார தெருவுல அவங்க யாருமே இல்ல. கொஞ்ச வருசத்து முன்னாடி கல்கத்தா, டெல்லினு போனானுக. இப்போ அமெரிக்கா, யூரோப் னு செட்டிலாயிட்டாங்க.

டிரெயின்ல 3 டயர் ஏசி கம்பாட்மென்டுல போனா நீங்களே கூட இதத் தெரிஞ்சிக்கலாம்.  “என்ன அத்திம்பேர்! அமெரிகாவுல இருக்குற பொண்ணு எப்படி இருக்கா”, “மாமா அமெரிகாவுல இருந்து ஆப்பிரிக்கா போயிட்டாளேமே” இப்படித் தான் பேசிப்பானுக.. இந்தித் திணிப்பு போன்றவற்றை சுட்டிக் காட்டி எனக்கு வயசாயிருச்சி. இளைஞர்களா நிறைஞ்சி இருக்கீங்க. போராடுங்க” என்று கேட்டுக்கொண்டு தன் கருத்தை பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து படம் தொடர்பாக வாசகர்கள் தங்கள் கருத்துக்களை கூறினர். இறுதியாக தோழர் அஜிதா நன்றி கூறினார். வெளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டிவிடிகளை பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றார்கள். பதிவு செய்யப்பட்ட வாசகர்களின் கருத்துக்களை தனியாக வெளியிடுகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நாம் நேரடியாக கருத்து கேட்டால் நன்றாக இருப்பதாகத் தான் கூறுவார்கள். எனவே என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்டால் அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம் என்று கூடி பேசிக்கொண்டிந்த ஒரு வாசகர்களின் கூட்டத்தில் புகுந்தோம்.

படம் நன்றாக இருப்பதாகத் தான் அவர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். கூடவே வினவு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற படங்கள் எடுக்கப் போவதாகவும், அடுத்து தண்ணீரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் கூற

அதுதான் ஒரு நாளில் படம் எடுத்துவிட்டார்களாமே அப்படியானால் மாதத்திற்கு ஒரு படம் எடுத்து வெளியிடலாமே என்றார் இன்னொருவர்.

நல்ல ஆலோசனை தான், முயற்சிக்கிறோம்!

வினவு செய்தியாளர்

(திரையிடல் நிகழ்விற்கு வந்த நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் விரைவில் வீடியோ பதிவாக வெளியிடப்படும்)

டி.வி.டி பெற விரும்புபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

cd-stickers

முகவரி :  எண் 16, முல்லை நகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
மொபைல் : (+91) 99411 75876
லேண்ட்லைன் : (+91 44) 23718705 (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை)

மோடி ஆட்சியில் காவிமயமாகும் நீதித்துறை

0

நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம்: தனியார்மயம் – காவிமயத்துக்கு ஏற்ப நீதித்துறை மறுவார்ப்பு!

தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதாவும் அதை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவும் அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தக் கட்சியின் எதிர்ப்புமின்றி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தற்போது பத்திரிகை கவுன்சில் தலைவராகவும் உள்ள மார்க்கண்டேய கட்ஜு நீதித்துறை ஊழல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கிளப்பியதைத் தொடர்ந்து, சொல்லி வைத்தாற்போன்ற வேகத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கட்ஜூ
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ : ஊழல் ஜெயலலிதாவுக்கு நற்சான்றிதழ் அளிக்கும் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு உத்தம சிகாமணி.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்னாள் தலைமை நீதிபதிகள் பதவி உயர்வு வழங்கினார்கள் என்றும், அரசியல் தலையீட்டுக்குப் பணிந்து போனார்கள் என்றும் கடந்த ஜூலை மாதத்தில் தனது முகநூலில் (ஃபேஸ்புக்) தெரிவித்தார் கட்ஜு. மேலும், தான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் (நவ. 2004 – அக்.2005) நீதித்துறை நியமனங்களில் தி.மு.க. தலையிட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் சூழலில், இவ்விசயம் ஊடகங்களின் முதன்மை விவாதப் பொருளாக மாற்றப்பட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் நீதிபதிகளும்தான் ஊழல் பெருச்சாளிகள் என்பதைப் போலவும், வட இந்திய ஆதிக்க சாதி நீதிபதிகளெல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்பதைப் போலவும் ஒரு தோற்றம் இந்த விவாதத்தின் மூலம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.

ஊழல் மோசடி – முறைகேடுகளிலும் பாலியல் புகார்களிலும் சிக்கி நாடு முழுவதும் நீதிபதிகள் அம்பலப்பட்டு நிற்பதும், நீதித்துறையில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடும் புதிய விவகாரமல்ல. நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுதான் ஒரு ஊழல் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். ‘புனிதமானவர்களும் யோக்கியமானவர்களுமான’ நீதிபதிகளை அவ்வளவு எளிதில் தண்டித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. அதனால்தான் தமிழகத்தைச் சேர்ந்த ஊழல் நீதிபதி ராமசாமி, மே.வங்கத்தைச் சேர்ந்த சௌமித்ரா சென் உள்ளிட்ட பல நீதிபதிகள் எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பியிருக்கின்றனர். நீதிபதிகளின் ஊழல்களும் மோசடிகளும் பாலியல் கொட்டங்களும் சந்தி சிரித்து, நாறிக் கொண்டிருக்கின்றன. கீழிருந்து மேல் வரை நீதித்துறையே ஊழலில் ஊறிக் கிடக்கிறது என்பதை ஒருமுறை நீதிமன்றத்து படியேறிவிட்டு வந்த எந்த மனிதனும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கட்ஜுவோ, ஒருசில ஊழல் நீதிபதிகள் மட்டும்தான் பிரச்சினை என்பது போலவும், அவர்களால்தான் நீதித்துறை கெட்டுவிட்டது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறாரே அன்றி, அடிமுதல் நுனி வரை நீதித்துறையில் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்ற உண்மையைப் பேசக்கூட இல்லை. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் எட்டுப்பேர் ஊழல் பேர்வழிகள் என்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இன்னும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நீதிபதிகள் மீது ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன. இது பற்றியெல்லாம் கட்ஜு எதுவும் பேசவில்லை, மாறாக, நீதிபதிகளையும் நீதிமன்ற நடைமுறைகளையும் அவற்றின் தீர்ப்புகளையும் தனது செருப்பைவிடக் கேவலமாகக் கருதும் பாசிச ஜெயலலிதா நீதித்துறையின் மாண்புகளை மதித்தார் என்று நற்சான்றிதழ் அளிக்கிறார் (ஆனந்த விகடன், 20.8.2014). ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து “எனக்கு எதுவும் தெரியாது” என்ற ஒரே போடாகப் போடுகிறார். இவையெல்லாம் கட்ஜுவின் யோக்கியதைக்கு சான்றுகள். அவரது குற்றச்சாட்டின் உள்நோக்கத்தை சந்தேகிப்பதற்கான அடிப்படைகள்.

யோக்கிய சிகாமணிகள்
ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட யோக்கிய சிகாமணிகள் (இடமிருந்து) பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீ.ராமசாமி, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சௌமித்ரா சென், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.டி.தினகரன்.

கட்ஜு கிளப்பியுள்ள இப்பிரச்சினை, நீதித்துறை பற்றி மையமாக எழுப்ப வேண்டிய கேள்வியைத் திசை திருப்புகிறது. நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும் பொதுச் சொத்துக்களையும் கார்ப்பரேட் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தனியார்மயம், தாராளமயம் என்ற மக்கள் விரோதக் கொள்கையின் மூலம் பகற்கொள்ளையடிக்கும் விவகாரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்தான் ஒரே தேசியப் பிரச்சினை என்பது போலச் சித்தரித்த அன்னா ஹசாரேவை அன்று முதலாளித்துவ ஊடகங்கள் விளம்பரப்படுத்தின. அதேபோலத்தான் இன்று நீதித்துறை நியமனங்களில் அரசியல் தலையீட்டையும் ஊழலையும் களைந்துவிட்டால், நீதித்துறையானது அப்பழுக்கற்றதாக மாறிவிடும் என்று நம்பச் சொல்லும் கட்ஜுவையும் முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. அன்று மோடிக்கு அன்னா ஹசாரே நற்சான்றிதழ் கொடுத்தைப் போலத்தான் இன்று கட்ஜுவும் ஜெயலலிதாவுக்கு நன்சான்றிதழ் கொடுக்கிறார்.

பிரசாந்த் பூஷண்
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும், ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர்களின் ஒருவருமான பிரசாந்த் பூஷண்

ஆனால், இந்திய நீதித்துறையின் யோக்கியதை என்ன? முதலாளித்துவ வர்க்க வெறியும், ஆதிக்கசாதித் திமிரும், ஆணாதிக்க வக்கிரமும் கொண்ட சட்டபூர்வ நாட்டாமைகள்தான் உயர்- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்பதற்கு அவர்கள் அளித்துள்ள ஏராளமான தீர்ப்புகளே ஆதாரங்களாக உள்ளன. பாபர் மசூதிதான் ராமன் பிறந்த இடம் என்று தீர்ப்பளித்ததோடு, சிதம்பரம் நடராசர் கோவிலைப் பார்ப்பன தீட்சிதர்களிடம் அயோக்கியத்தனமாக இந்நீதிபதிகள் ஒப்படைத்தனர். சங்கராச்சாரி என்ற பார்ப்பன கொலைகாரன் விடுவிக்கப்படுவதும், பதானி தோலா மற்றும் லட்சுமண்பூர் பதேயில் தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்த ஆதிக்க சாதிவெறியர்கள் விடுதலை செய்யப்படுவதும், கலவரங்களை நடத்திப் பல உயிர்களைக் காவு வாங்கிய இந்துவெறி குண்டர்கள் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் உலாவருவதும், அப்பாவி முஸ்லிம்கள் பொவழக்குகளில் சிறையிடப்படுவதும் இந்திய நீதித்துறையின் அயோக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றன.

வாய்தா ராணி ஜெயலலிதா முதலாக மத்திய – மாநில அமைச்சர்கள் பலரும் நீதித்துறையின் தயவில் ஊழல் வழக்குகளைச் சுலபமாக எதிர்கொண்டு தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்கள். அம்பானியும் டாடாவும் அதானியும் நாட்டைச் சட்டப்படியே கொள்ளையிட நீதிமன்றங்கள்தான் உரிமங்கள் வழங்குகின்றன. ஜெயாவுக்கு எதிரான டான்சி நிலபேர ஊழல் வழக்கிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.க்களுக்கு அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் இலஞ்சம் கொடுத்த வழக்கிலும் ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் புது பொழிப்புரை எழுதி, அக்கிரிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவர்கள்தான் உச்ச நீதி மன்ற நீதிபதிகள். வோடஃபோன் நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பையும், நர்மதை அணைக்காக பல இலட்சம் பழங்குடியின மக்கள் மாற்று இடம் கூடத் தரப்படாமல் துரத்தியடிக்கப்பட்டதையும், காஷ்மீரிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களில் தொடரும் அரசு பயங்கரவாதப் படுகொலைகளையும் உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்தியது. 2ஜி ஊழல் விவகாரத்தில் தரகு முதலாளி டாடாவுக்கும் தரகர் நீரா ராடியாவுக்குமிடையிலான உரையாடலை நீதிபதிகள் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளவில்லை. அது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று அந்த முக்கியமான சாட்சியத்தைக் கிடப்பில் போட்டனர். இவையெல்லாம் அரசியல் தலையீடு அல்லது ஊழல் காரணமாகவா நடந்தன? எவ்வித அரசியல் கட்சித் தலையீடு இல்லாத நிலையிலும், எவ்வித நிர்ப்பந்தங்கள் இல்லாத போதிலும், ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் நாட்டின் சுயாதிபத்திய உரிமையையும் பறிக்க கூடியதுமான தீர்ப்புகளைத்தான் நீதிபதிகள் வழங்கி வருகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை, நீதிபதிகளே தேர்வு செய்து நியமிக்கும் “கொலீஜியம்” முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நியமன முறையில் நீதிபதிகள் மீதான மக்களின் கண்காணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ். அதிகார வர்க்கத்தைப் போலவே மக்களுக்கு மேலானவர்களாக, மக்களின் எஜமானர்களாகவே நீதிபதிகளும் திணிக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சியின் தலையீடு, சாதி, பணம், இலஞ்சம், ஊழல் என்று எல்லா முறைகேடுகளும் நீதிபதிகள் நியமனத்தில் நிரம்பியிருப்பதென்பது ஊர் சிரித்த விவகாரம்தான்.

ஊழல் - மோசடி
உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகத்தின் அனைத்து நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு ஏறத்தாழ 867 பேர் ஊழல்-மோசடிப் பேர்வழிகள் என்று “ஊழலுக்கு எதிரான இயக்க”த்தினர் பகிரங்கமாக வெளியிட்டுள்ள பிரசுரம்.

தற்போதுள்ள கொலீஜியம் முறையில் தவறான தேர்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாலும், நீதித்துறை நியமனங்களில் நிர்வாகத் துறையின் பங்களிப்பு இல்லாததாலும் இந்த முறையை மாற்றியமைப்பதாகச் சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். புதிய முறையிலான நீதிபதிகள் நியமன ஆணையத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இரு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள், மைய அரசின் சட்ட அமைச்சர் மற்றும் சமூகத்தால் மதிக்கப்படுகின்ற இருவர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள் என்றும், சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்கள் இருவரை (EMINENT PERSONS) பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தேர்வு செய்வார்கள் என்றும், மாநில அளவிலான நீதித்துறை ஆணையங்கள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ரிக்கார்ட் டான்ஸ்
டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஹோலி பண்டிகையை ஒட்டி டெல்லி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நடத்திய விழாவில் நீதிபதிகள் முன்னிலையில் நடந்த ரிக்கார்டு டான்ஸ் (இந்து, மார்ச் 14, 2014)

இந்த ஆணையம் நீதிபதிகளைத் தேர்வு செய்யும்போது, இக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அத்தேர்வு ரத்தாகும் என்பதால், ஆளும் கட்சிக்கு உடன்பாடில்லாத நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவார்கள் என்றும், நீதிபதிகள் நியமன ஆணையத்தில் இடம்பெறும் சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்கள் இருவரும் ஆளும் கட்சிக்கு விசுவாசமானவர்களாகவே இருப்பார்கள் என்றும், இதனால் நீதிபதிகள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறிவிடும் என்றும் சில சட்ட வல்லுநர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளின் தகுதிகள் என்ன, அவர்களைத் தெரிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி இந்த மசோதா தெளிவாக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தவறு செய்யும் நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்யவோ, தண்டிக்கவோ இந்த ஆணையத்துக்கு அதிகாரமும் இல்லை. கடைசியில், புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற கதையாக முந்தைய கொலீஜியம் முறையில் திரைமறைவில் நடந்துவந்த அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடுகளையும் நிர்ப்பந்தங்களையும், இனி ஆணையத்தின் பெயரால் நேரடியாக செயல்படுத்தும் வகையில்தான் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்துறையின் ஊழல்களை விசாரிக்கும் பணியில் நீதித்துறை ஈடுபட்டதை அலைக்கற்றை, நிலக்கரி, ஆதர்ஷ், காமன்வெல்த் உள்ளிட்ட பல வழக்குகளில் பார்த்தோம். இப்போது நீதித்துறை ஊழலை ஒழித்து அதன் மீது ஒழுக்கத்தை நிலைநாட்டும் அதிகாரத்தை நிர்வாகத்துறை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கேலிக்கூத்து.

ஊழல்கடந்த மே மாதத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் குழுவால் (கொலீஜியம்) பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞரான கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மோடி அரசு நிராகரித்தது. சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் நண்பராகச் செயல்பட்டதால் தன் மீது அவதூறு பரப்ப உளவுத்துறையை மோடி அரசு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, நீதிபதி பதவிக்கான தனது ஒப்புதலை கோபால் சுப்பிரமணியம் திரும்பப் பெற்றுக் கொண்டார். இப்போது கோபால் சுப்பிரமணியம் இடத்தில் மோடி விசுவாச வழக்குரைஞரான உதய் லலித் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டுள்ளார். குஜராத் இந்துவெறி பயங்கரவாதப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கும் மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான வழக்குரைஞர்களே இப்போது சோலிசிட்டர் ஜெனரல், அட்வகேட் ஜெனரல் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். நீதித்துறை குறித்த மோடி அரசின் அணுகுமுறைக்கு இவை சான்றுகள்.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், நீதிமன்ற நியமன ஆணையத்தில் இடம்பெறக்கூடிய ‘சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்களாக’ சு.சாமி, சோ போன்றவர்கள் மோடி அரசால் தேர்வு செய்யப்படுவார்கள். காலியாக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களில், அமித் ஷா, தீனாநாத் பத்ரா, ஒ.எஸ்.ராவ் போன்ற, உடம்பில் ஆர்.எஸ்.எஸ். ரத்தம் ஓடுகின்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். இத்தகைய நீதிபதிகள் எழுதும் தீர்ப்புகள் ஏட்டளவில் உள்ள மதச் சார்பின்மையையும் கருத்துரிமையையும் பறித்து, எல்லா துறைகளிலும் இந்துராஷ்டித்தை சட்டபூர்வமானதாக்கும்.

இந்த நீதிபதிகள் நியமன மசோதாவின் மூலம் நீதித்துறை ஊழலை ஒழிக்கப்போவதாக அரசு கூறுவது நகைக்கத்தக்க ஒரு கேலிக்கூத்து. சுதந்திரமாகவும், சுயேச்சையாகவும் இருந்தால்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று நீதித்துறை சொல்கிறதே, அது மிகப்பெரிய பம்மாத்து. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மறுகாலனியாக்கத்துக்கும் காவிமயமாக்கத்துக்கும் ஏற்ப மோடி அரசு நீதித்துறையை மறுவார்ப்பு செய்து கொள்ளும் என்பது மட்டுமே உண்மை.

– பாலன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

சிறுகதை : கொழுப்பு

3

நாளை (சனிக்கிழமை செப்டம்பர் 20, 2014) நடைபெறவிருக்கும், பார்ப்பனியத்தின் அசைவ உணவு மீதான தீண்டாமை குறித்த “கருவாடு” ஆவணப்படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் நிகழ்வை முன்னிட்டு, புதிய கலாச்சாரம், மார்ச் 2000 இதழில் வெளியான கொழுப்பு சிறுகதையை வெளியிடுகிறோம்.

கொழுப்பு – சா. செல்வராசு

”சீக்கிரம் எழு புள்ள, அப்படியே அந்த சூரி கத்திய தேடி எடுத்துக்குடு!”

கொழுப்புபயந்துபோய் சடாரென எழுந்து உட்கார்ந்து கொண்டு, சற்று நேரம் குழம்பினாள் குள்ளச்சி. ஏதும் பேச முடியாமல் இருமல் முந்திக் கொண்டது.

”ராமசாமிக் கவுண்டரு மாடு சொக்கிருச்சாம், பாவம் சோளப் பயிர தின்னுட்டுக்கீது. வந்து எழுப்பி டீ வாங்கி குடுத்துட்டு சொல்லிட்டுப் போராரு. மாட்ட சீக்கிரம் எடுத்துரணுமாம்.”

”அடப்பாவத்த, யான மாதிரி அந்த மாட்ட வச்சிருந்தாரு. நேத்து கூட வாசலுக்கு சாணி எடுக்க போனப்போ பாத்தனே! பாவம் பெத்த புள்ள மாதிரில்ல வளத்தாரு கவுண்டரு” சொல்லி முடித்து குள்ளச்சி மூச்சு வாங்குவதற்குள், மாசிலான் குறுக்கிட்டான்.

”அதுக்கு என்ன செய்யச் சொல்றே? அது தலையெழுத்து நாம தின்னணுன்னு கீது, போ, போ, முதல்ல கத்தி எடுத்துக் குடு!”

மாடு உரிப்பதிலும், ஓர வஞ்சனை இல்லாமல் பங்கு போடுவதிலும் மாசிலானை விட்டா ஆள் கிடையாது.

விடிந்து ஏழு மணிக்கெல்லாம் புளியந்தோப்பில் கும்பல் கூடிவிட்டது. வேடிக்கை பார்ப்பவர்களும், தனக்கும் பாத்தியம் உண்டு என உத்திரவாதப்படுத்த வந்தவர்களுமாக தெருவே கூடியிருந்தது.

மாட்டினுடைய வாயில் பச்சை நிறத்தில் நுரைதள்ள, வயிறு தண்ணீர் நிரம்பிய பாரி போல ஊதிப் போய், மறுபக்கம் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்த மாசிலானை முழுதும் மறைத்திருந்த்து. கால்களெல்லாம் விரைத்துப் போய் பெருத்து அம்மணமாகக் கிடந்தது. கண்கள் சாம்பல் பூத்து ஒரே திசையை நோக்கிக் குத்திட்டுக் கிடந்தன. வாய் மட்டும் மெல்லிய சிரிப்புடன் இருந்தது. வாயில் கிரசரில் சிக்கிய கரும்புச் சக்கை போல் சோளப்பயிர் வெளிப்பக்கம் தள்ளிக் கொண்டிருந்தது.

முன்னும் பின்னும், மூக்கிலும் வாயிலும் ஈக்கள் ஒரு பட்டாளமே மொய்த்துக் கொண்டிருந்தன. காதும், வாலும் செயலிழந்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட காக்கைகள் மூக்கையும், காதையும் நோண்டித் தின்று கொண்டிருந்தன, இதைத் துரத்த மாசிலானுக்கும் நேரமில்லை, மற்றவர்களுக்கும் அக்கறையில்லை. நுகத்தடிகள் போலக் கிடந்த விரைத்த பின்னங்கால்களில் சிறுவர்கள் ஏத்தம் விளையாட்டு விளையாடினார்கள்.

“ஏய்….. யார்ரா அவன்? போயி..(ங்)கொப்பன ஒரு நல்ல ஏத்தமா வாங்கிக் குடுக்கச் சொல்லி ஆடுறா. அதுக்கு மாட்டுக்காலுதான் கெடச்சிச்சா?”

அதற்குள் மற்றொருவன் வாலின் நுனியில் உள்ள முடிகளைப் புடுங்கிக் கொண்டிருந்தான்.

“டேய், டேய், டேய்! ஏன்டா பாவம் அப்படிப் புடுங்குற. ஓணான் புடிக்கனுன்னா உங்க அக்கா தலையில இதவிட நீளமா இருக்கும், போய்புடுங்குடா! ஆளப்பார்ரா…. ஆள!”

“ஏம்பா மாசிலான் என்னைக்கப்பா நீ அறுத்து பங்கு போட்டு குடுக்கறது. நேத்து செத்ததுப்பா, சீக்கிரம் பாரப்பா. இதுக்குன்னே பல பேரு சம்பாதனைய உட்டுட்டுக்கூட காத்துக் கெடக்குறாங்க.”

“பெரிசு! கொஞ்சம் பொறுமையா இரு. விடிய நாலு மணிலிருந்து ஆளப்புடிச்சி, மரத்தத் தேடி,கயித்தத் தேடி தூக்கினு வந்து போட்டினுகீது, நோகாம இன்னேரத்துக்கு வந்து பெரிய சேட்டு மாதிரி பங்கு கேக்கற, போயி ஒரு ஓரமா ஒக்காரு, பங்கு போட்டுட்டு கூப்புடறேன். ஒக்கார முடிலென்னா படுத்து தூங்கு, பங்கு போட்டுட்டு எழுப்புறே(ங்)”

பெரியவருக்கு வாய்திறந்ததே தப்பா போச்சுடா என்றாகி விட்டது.

இளம் வெயில் சுர்ரென்று சுட்டது. கத்தியைத் தீட்டி முடிப்பதற்குள் மாசிலானுக்கு வியர்த்து விட்டது. சட்டையைக் கழட்டி பக்கத்திலிருந்த கொப்பில் மாட்டிவிட்டு, பீடியை வேகமாகப் பற்ற வைத்தான். வேட்டியைப் பின்பக்கமாக வாங்கி இறுக்கமாகச் செருகிக் கொண்டான்.

நாலு மைனர்களைக் கூப்பிட்டு, மாட்டை மல்லாக்காகப் பெறட்டி, நாலு கால்களையும் எதிரெதிர் திசையில் இழுத்துப் பிடிக்கச் செய்தான் மாசிலான்.

என்னவோ செய்யப் போகிறார்கள் என்று சிறுவர்கள் மிரட்சியுடன் விழிகளை அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். முன்னங்கால்களுக்கிடையில் இருந்த பந்து போன்ற பகுதியில் பதமாகத் தீட்டிய கத்தியை வைத்து அழுத்தி லாகவமாக ஒரு கீறல். பாதிப் பழுத்த மாதுளம்பழம் போலப் பிளந்து சிரித்தது அந்த இடம்.

“சும்மா சொல்லக் கூடாதுப்பா, கவுண்டரு இந்த மாட்டுக்கு நல்ல தீனி போட்டாருப்பா. அதனாலதான் இவ்வளவு பசையா இருக்கு”, பெருமிதத்தோடு புன்சிரிப்புடன் நிமிர்ந்து, நின்றிருந்த கூட்டத்தை ஒரு நோட்டம் விட்டான் மாசிலான். இந்த நல்ல கொழுப்புக் கறி கிடைக்க காரணமே நான்தான் என்பது அவன் பார்வையிலேயே தெரிந்தது.

“நல்ல சைன் தோலுப்பா. பாத்துக்கீறு, ஓட்ட உழுந்துரப் போகுது. நாலு தப்பட்டைக் கட்டலாம்”. பெரியவர் எச்சரிக்கைப்படுத்தினார்.

“என்னது… நாலு தப்பட்டையா? இந்த தடவ தோலு நமக்கு இல்லபா. கவுண்டரு தோல மட்டும் வித்து அவருகிட்டசேக்கச் சொல்லிட்டாரு”

“ஏய்…என்னடா தமாஷ் பண்றியா? என்ன விளையாட்டா பண்ற”, ஊர் ஏஜமான் அதட்டினார்.

“நிஜமாதாம்பா சொல்றேங். தோல தர்றதா சத்தியம் பண்ண பிறகுதான் மாட்டையே தொட வுட்டாரு. கவுண்டரு, தெரியுமா?”

“நீ எப்படிடா இதுக்கு ஒத்துக்கின. இது உனக்கு மொறைய மீர்றதா தெரிலியா? அப்படின்னா நாளைக்கு கவுண்டமாரு சாவுக்கு எந்த வாத்தியத்தை அடிப்ப. எல்லாரும் இப்படியே தோல வாங்கிக்கினா தொழில் எப்பிடிடா செய்யறது.”

“உனக்கும், எனக்கும் தெரியுது, இது அந்த கவுண்டருக்கு தெரியலியே! என்ன பண்றது, ஏதோ தோலாவது வித்துக் குடுத்தா புண்ணாக்கு செலவாவது மீறுமேன்னுதான்…” இழுத்தான் மாசிலான்.

மாசிலானின் சப்பகட்டு எஜமானுக்கு நியாயமாகப்படவில்லை.

“என்னமோ பண்ணுங்கடா. எனக்கென்னவோ பழையமொறைய மாத்தறது கொஞ்சமும் புடிக்கல.”எஜமான் புலம்பினார்.

“என்னை என்ன பண்ணச் சொல்றீங்க.சொத்து கவுண்டருது. வாய் கூசாம தோல கேட்டுட்டாரு வேற வழி எனக்குத் தெரில” மீண்டும் மாசிலான் அதே பல்லவியை முனகினான்.

“டேய்! என்னடா பெரிய புடுங்கி மாதிரி பேசற. இன்னிக்கி தோல கேக்குறாரு, நாளைக்கு…நல்ல சைஸ் கறியா பாத்து யாருக்கும் தெரியாம எடுத்து வைய்யின்னுவாரு. அப்புறமா வீட்டுல கொஞ்சம் பிரச்….சனை, நீயே கறிய பெற..ட்…டி ஹி…ஹி…ஹின்னுவாரு. என்ன செய்யப் போறே? இதா பாரு…இப்படியே போனா நாம நாமளா இருக்க முடியாது.”

எங்கேயோ தப்பு நடந்து விட்டதாகப்பட்டது மாசிலானுக்கு. இருந்தாலும் வாக்குறுதியைக் காப்பற்றணும்னு கருதினான் மாசிலான்.

“அதெல்லா(ங்) சரிதா(ங்)…. பேசாம நமக்குச் சொல்லாம கவுண்டரே மாட்ட பொதச்சிட்டிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”

இப்படி ஒரு குண்டைப் போட்டு விட்டு, கழுத்தில் கத்தியை வைத்தான் மாசிலான். அப்போது முதுகுவரை தோல் கழட்டப்பபட்டிருந்தது. “ஆமாண்டா! ரொம்ப புத்திசாலின்னு நெனப்போ, பதினாறு ஊரு கிராமத்த கூட்டி கவுண்டர கைகட்ட வச்சிருவே(ங்). நாக்க அடக்கிப் பேசு. இதுக்கு மேல பேசினா மரியாதை கெட்டுரும். சாதி கெட்டவன்தான்டா இப்பிடிப் பேசுவான்” எஜமானுக்குச் சூடேறிவிட்டது.

“ஏன்டா! பொழப்பத்தவங்களே… ஆகிற காரியத்த பேசு! ஏன்டா இப்படிக் கத்துறீங்க, கவுண்டரு பொதச்சிருவாரோ? இது நடக்குற காரியமா! போங்கடா” அவரு ஒரு பக்கமும், அவரு பொண்டாட்டி புள்ளைங்க ஒரு பக்கமும் புடிச்சி, மாட்ட தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளியே பொதச்சிருவாரா? இது நடக்குற காரியமா! போங்கடா” இன்னொரு பெருசு அறைந்து கூறியது.

“ஏம்பா மாசிலா(ங்)… அந்த அரியாகொளத்தாரு பங்கு போட்டாச்சா?”

“ஆமான்டா! மொதல்ல உங்களுக்குத்தான்டா அவசரம். அந்தப் பக்கமா ஒக்காரு. கூப்பிடுறேன்” வருபவர்களெல்லாம் மாசிலானை வேலை செய்ய விடாமல் தொல்லை கொடுத்தனர்.

அரியா குளத்தார் எனபவர்கள் குடியேறியவர்கள். உள்ளூரில் பெண்ணெடுத்து சம்பந்தி ஆனவர்கள். இவர்கள் மாடு தூக்க, மேளம் வாசிக்க வரமாட்டார்கள். பங்காளிமார்கள் சேர்க்கவும் மாட்டார்கள்.

“ஏம்மா! சீக்கிரம் கொஞ்சம் பங்கு போட்டு குடுப்பா, ஊரிலிருந்து எங்க மகளும்,மருமவனும் வந்திருக்காங்க. பத்து மணி ரயிலுக்குப் போணுமாம். ஏதோ அதுக்குள்ள இந்த கறியாவது வெச்சி போட்டு அனுப்பலாம்” பரிதாபத்தோடு கேட்டான் முனுசாமி.

“ஏன்டா ஏதாவது உனக்கு அறிவு கீதா! இதையா மருமவனக்கு போடப் போற. ஒரு கோழி கீழி அடிச்சி போடுவியா…”

“நீ இருக்கப்பவம்பா! கோழியும் அடிப்ப, யானையைக்கூட அடிச்சிப்போடுவ. நாங் கூலிக்காரன், இப்படி ஏதாவது மாடு, கீடு செத்தாத்தான் கதி”

“ஏம்பா இவன மொதல்ல அனுப்புப்பா. பாவம் பொலம்பி தொலையுறான்” பரிதாபப்பட்டார் தர்மலிங்கம்.

கொஞ்ச நேரத்தில் மாடு, உரிச்ச கோழி மாதிரி ஆனது. பத்துமடத் தோலை விரித்து மல்லாந்து கிடந்த்து. ஊதிப்பெருத்த, உப்பிக் கிடந்த வயிற்றில் தீட்டிய கத்திமுனை லேசாகப்பட்டதுதான் தாமதம், விஷக்காற்று கலந்து துர்நாற்றத்தோடு குப்பென்று காற்று பீறிட்டு வெளியேறி மாசிலான் மூக்கை துளைத்துச் சென்றது.

“நேத்து சாயந்திரம் செத்தது, நாத்தம் வராம என்ன செய்யும்?” மாசிலான் நாற்றத்தைச் சமாளித்துக் கொண்டு சமாதானம் செய்தான். நாற்றம் அந்த தோப்பையே சூழ்ந்தது. சுற்றியிருந்தவர்கள் மூக்கைப் பிடித்தும் பிடிக்காமலும் முகம் சுளித்தனர்.

சாணி கரைத்து வாசலில் தெளித்தது போல விரிந்து கிடந்த தோலின் மீது ரத்தமும், ஈழையும் பிறவும் திட்டுத்திட்டாக உறைந்து கிடந்தன. அதன் மீது பிறந்த மேனியுடன் சிறுவர்கள் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். மாசிலான் விரட்டியதில் ஒரு சிறுவன் சறுக்கி தோலின் மீதே விழுந்து குய்யோ…வென்று கத்தினான். அவனோட அம்மா ஓடிவந்து தன் மகனைத் தூக்கிக்கொண்டாள்.

“சும்மா இரு மாசிலா(ங்) பிள்ள ஏதோ ஆசையா சறுக்கி வெளையாடுறான்… மெரட்டுறியே! பிள்ள பயந்த போச்சி! யாரு டீ, செல்லம்…மாசிலானா? அவன அடிச்சரலாம் வா….”அரவணைத்து கன்னத்தில் வழிந்த மாடு ரத்தத்தோடு முத்தமிட்டாள்.

இன்னும் சில சிறுவர்கள் தோலின் மேல் உறைந்து கிடந்த ரத்தத்தில் உள்ளங்கைகளை நனைத்து, ஒருவர் முதுகில் ஒருவர் அப்பி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அன்றையப் பொழுதில் செத்தமாடு தெருவையே திருவிழாக் கோலமாக்கிவிட்டது.

“சாயந்திரம் நேரத்துல வந்துருவேங்….பங்கு போட்டதும் கறிய வாங்கிவை. வரும்போது மெளகா செலவு வாங்கி மூடி வச்சிராதே! அடுப்புல கொஞ்சம் சூடு பண்ணிவைய்யி. இல்லன்னா கெட்டுடும்”, என்று மனைவியிடம் எச்சரித்து விட்டு வேலைக்கு போனான் ஒரு தெருவாசி.

“ஏம்பா மாசிலான் பிச்சையில ஏதாவது கீதா பாரூப்பா, உட்ராதே!” ஊர் எஜமான் நினைவுபடுத்தினார்.

மாசிலான் திடீரென நினைவுக்கு வந்தவனாக நுரையீரல், இதயம் இவைகளை லாவகமாக விரல்களால் விலக்கிவிட்டு, கணையத்தைத் தேடிப் பிடித்து திரும்பத் திரும்ப பித்தநீர்ப்பையை அழுத்ததிப் பார்த்தான், ஆனால் ஒன்றும் தென்படவில்லை என்பதை உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

நூறு மாடுகளில் ஒன்று இரண்டில்தான் கோ ரோஜனம் கிடைக்கும். நாட்டு மருத்துவர்களிடம் இதற்கு நல்ல மவுசு. 5 கிராம் கிடைத்து விட்டாலே 500 வரை விலை போகுஉம். அன்றைக்கு மாசிலான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

கொம்புகள் தூக்கி எறியப்பட்டவுடன், பங்குகள் போடப்படன. அவரவர் பங்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டினர்.

முகத்தில் கோபக் கனலோடு ஒருவர், ஒரு சிறுமியின் கைகளைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு மாடு அறுத்த இடத்திற்கு வந்தார். சிறுமியின் கையில் ஒடுங்கிப் போன அலுமினியச்சட்டி அதில் ஒரு பங்கு கறி.

“ஏய்! எவன்டா இந்த பங்க எம்புள்ள கிட்ட போட்டனுப்பனவன். வெறும் எலும்பும் கொடலும் தான் எனக்கா? அவ்வளவு கேவலமா எம்புள்ள! போங்கடா… உங்க கறியும் நீங்களும்….” என்று கறியைத் தூக்கி குப்பையில் வீசி எறிந்தார்.

ரொம்ப நாளைக்கப்புறம் கிடச்ச கறியிலேயும் அப்பன் மண்ணைப் போட்டுட்டானே என்று, குப்பையிலிருந்த கறியையும், அப்பனையும் மாறி மாறிப் பார்த்து அழுதது அந்தப் பிள்ளை.

கடைசிப் பங்கை எடுத்த பையன், “ஏம்பா ஏம்பங்குல கொஞ்சம் கொழுப்பு போடுப்பா” என்று கேட்டான்.

“இருந்ததே அவ்வளவுதாம்பா! வேணுன்னா ஏம் பங்கைப் பாரு” என்று எடுத்துக் காட்டினான், மாசிலான். கூடத்திலிருந்து ஒரு குரல் வந்தது. “மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுவுறான்! பறையன் கொழுப்புக்கு அழுவுறான்!”

– இதைக் கேட்டதும் மாசிலான் கூனி்குறுகிப் போனான். தலை குனிந்தான் தனக்குரிய பங்கை வேண்டா வெறுப்பாக எடுத்துக் கொண்டு போர்க் களத்தை விட்டு வெளியேறினான்.

பொழுது சாய்ந்து விட்டது. பறவைகளும் ஆடு, மாடுகளும் தங்கள் இருப்பிடத்தைத் தேடிக் கொண்டிருந்தன. வேலைக்குப் போன குள்ளச்சி இன்னும் வீடு திரும்பவில்லை.

“பொழுது இருட்டிடுச்சி இன்னும் கழனியிலே என்னத்த புடுங்குறா….” மனசுக்குள் குள்ளச்சியைத் திட்டிக்கொண்டான் மாசிலான். ஆறு மாதத்திற்கு முன் குள்ளச்சிக்கு வாரம் இரண்டு முறை மாட்டு ஈரல் தரச் சொல்லியிருந்தார் டாக்டர். காசநோய் அப்பதான் குணமாகும். அவளுக்காக இரண்டு துண்டு ஈரலை மாசிலான் மறைத்து வைத்திருந்தான். தனது தொழில் தருமத்துக்கு இழுக்கு வந்ததை உணர்ந்து உள்ளுக்குள் நொந்து கொண்டேதான் அதைச் செய்தான்.

நினைவுகளில் மூழ்கியிருந்த மாசிலானைத் தீடீரென எழுப்பியது ஒரு குரல். “தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்” முனியம்மாள் பதடத்துடன் சொன்னதும், பதறிப் போய் ஓடினான் மாசிலான்.

குள்ளச்சியைச் சற்றி சிறு கும்பல். நாடியைப்பிடித்துப் பார்த்த நாட்டு வைத்தியர் மாசிலானத் தனியாகக் கூப்பிட்டு ஏதோ கிசுகிசுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

வாய் பிளந்து, வயிறு ஒட்டி, கண்கள் சாம்பல் பூத்து திறந்து வெறுமையாகக் கிடந்தன. குள்ளச்சியைக் கட்டிலில் போட்டு நான்கு பேர் வீடு சேர்த்தனர்.

தெருவில் கறிவேப்பிலை மணத்துடன் உப்புக்கறி வாசம் மூக்கைத் துளைத்தது. வீசப்படும் எலும்புக்காக தெரு நாய்கள் எல்லைச் சண்டையில் ஈடுபட்டிருந்தன. தலையில், எண்ணெயறியாத பிள்ளைகளின் வாய், முகமெல்லாம் கொழுப்புப் பசை வடிந்திருந்த்து.

குள்ளச்சிக்காக மறைத்து வைத்திருந்த ஈரலை மாசிலான் வெளியே எறிந்தான். எறிந்த மாத்திரத்தில் கவ்விய நாய்கள் சண்டையிட ஆரம்பித்தன.

மாசிலான் மனதை சோகம் கவ்விக் கொண்டது. குள்ளச்சியைக் கட்டிக் கொண்டதிலிருந்து எத்தனையோ காட்சிகள், சம்பவங்கள் அவன் மனத்தில் ஓடின. அப்படியே சரிந்து போய் மரத்தடியில் குந்தினான்.

ஒப்பந்தப்படி தோல் பணத்தை வாங்க கவுண்டர் அனுப்பிய ஆள் தொலைவில் வேகமாக வந்து கொண்டிருந்தான்.
_____________________________
புதிய கலாச்சாரம், மார்ச்-2000
_____________________________

அசோக் லேலாண்டு தேர்தலில் புஜதொமுவை ஆதரியுங்கள்

0

சூர் அசோக் லேலாண்டு 2-ல் 19-09-2014 அன்று சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. தொழிற்சங்கத்துறையில் பெரிதும் பேசப்படுகின்ற தலைவர்கள், புதிதாக தோன்றியுள்ள தலைவர்கள் இங்கு களத்தில் நின்றாலும் ஆலையில் நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் மேற்கொண்ட போராட்டங்களை இவர்கள் செய்ததில்லை; குறைத்ததில்லை என்பது கடந்தகால வரலாறு.

அசோக் லேலாண்ட் சங்கத் தேர்தல்

குறிப்பாக, லேலாண்டு 1-ல் 482 நிமிடம் என்ற டைம் ஸ்டடியை லேலாண்டு ஆலை நிர்வாகம் கொண்டு வந்தது. மேலும் 160 கிலோ எடையுள்ள பொருளை கையால் தள்ளிக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற முறையைப் புகுத்தியது. இவ்விரண்டிற்காகவும் இயந்திரத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு சிரமமான பகுதிகளை சீரமைக்கவும் பு.ஜ.தொ.மு. தோழர்கள் போராடினர். இதனால் பல சார்ஜ்-சீட்டுகள், சஸ்பெண்ட் அடக்குமுறைகளை எதிர்கொண்டு இறுதியில் வெற்றி பெற்றனர். 482 நிமிட உற்பத்தியை முறியடித்தனர். கையினால் தள்ளுவதற்கு பதிலாக கன்வேயர் முறையை கொண்டுவர வைத்தனர்.

அசோக் லேலாண்ட் தொழிற்சங்கத் தேர்தல்

ஆலை நிர்வாகம் கருவிகளில் மாற்றம் செய்யாமல் இருந்த பகுதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். இன்று வாய் கிழிய மேடை போட்டு பேசுகின்ற தலைவர்கள் இதனை களத்தில் சாதித்ததில்லை. மேலிருந்து ஒருதலைவர் வந்து தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை ஒழித்துவிட முடியாது. கீழிருந்து தொழிலாளர்களை விழிப்படையச் செய்து களப்போராளிகளை உருவாக்கி போராடுவதன் மூலமே அடக்குமுறைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்ற நோக்கில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அசோக் லேலாண்ட் தொழிற்சங்கத் தேர்தல்

15-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம்

[பிரசுரத்தைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

  • அசோக்லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • ஜனநாயகமான உற்பத்திச் சூழல், பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை வென்றெடுப்போம்!
  • புதிதாக 1,000 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்தப் போராடுவோம்!
  • களப்போராளிகளை வெற்றி பெறச் செய்வோம்!

ன்பார்ந்த லேலாண்டு தொழிலாளர்களே! தோழர்களே!

பாதுகாப்பற்ற பணிச்சூழல், அடக்குமுறை, ஆட்குறைப்பு என்ற பொதுநிலைமை நமது நாட்டின் தொழிற்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக தலைவிரித்தாடுகிறது. தொலைபேசி, இரயில்வே, போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறைகளிலே தொழிற்சங்கங்கள் மிக மோசமான அளவில் சிதைக்கப்பட்டுள்ளன. மிச்சமீதம் இருக்கின்ற சட்டங்கள், உரிமைகள் எல்லாம் படுவேகமாக பறிக்கப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் அசோக்லேலாண்டும் இதிலிருந்து தப்பவில்லை. 14,000 ஆக இருந்த நமது ஆலைத் தொழிலாளர்கள் இன்று 6,000 தொழிலாளர்களாக சுருக்கப்பட்டுள்ளனர். இந்தப் போக்கு நம்மை இன்னும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அசோக்லேலாண்டு 1-ல் நடந்த ஆட்குறைப்பு நடவடிக்கை!

அசோக்லேலாண்டு 1-ல் இருந்து சுமார் 900 தொழிலாளர்களை இடமாற்றம் செய்து அசோக்லேலாண்டு 2-க்கு அனுப்பியது இது தமிழக அளவில் நடந்த ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை; அசோக்லேலாண்டில் தாண்டவமாடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மிகப் பிரம்மாண்டமான தாக்குதலின் கூரிய வெளிப்பாடு. 2004-ம் ஆண்டிலிருந்து இதை முன் ஊகித்து தொழிலாளர்களுக்கு உணர்த்தி, போராட அறைகூவி வருகின்றோம். இன்று நிலைமைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

உணவுத் தட்டில் புழு இருந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது முதல், ஆலை நிர்வாகம் பணியிடத்தில் தோண்டிய பாதுகாப்பற்ற குழியில் தவறிவிழுந்த தொழிலாளிக்கு உதவச் சென்றவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வரை லேலாண்டு 2-ல் நிலவுவதெல்லாம் “இம்மென்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம்!”. ஆலையில் நிலவும் பணிச்சூழல் என்பது மிகவும் கொடூரமானது. இந்தப் பணிச்சூழல் என்பது ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல; மேலும் இது உளவியல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், இவற்றை எதிர்த்துக் கேட்கவேண்டிய சங்கத்தின் நிலைமை என்ன? பாராளுமன்ற ஓட்டுச்சீட்டு சீரழிவு அரசியலுக்கு சற்றும் குறையாத எல்லா சீரழிவுகளையும் இந்தத் தேர்தலில் நாம் காண்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நமது ஆலையில் போட்டியில் ஈடுபடும் அணியினர் கொள்கை என்று ஏதாவது பேசுவார்கள். தற்போதோ கொள்கை என்று எதுவும் இல்லை. இந்த அணியில் இருந்து கொண்டே அந்த அணிக்கு ஆதரவு! ஒரு கருத்தை மேடையில் முழங்கிக் கொண்டே அதனை கீழே போட்டு புதைப்பது என்று வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. தற்போது கொள்கை ஒன்று இருப்பதாக இவர்கள் காட்டிக் கொள்வதெல்லாம் தொழிலாளர்களை ஏமாற்றும் நடவடிக்கை மட்டுமல்லாது, முதலாளித்துவத்திற்கு செய்யும் சேவைதான்!

இது மட்டுமா, சொந்த அணியிலேயே தேர்தலில் நிற்பதற்கு பணத்தைக் கொடுத்து சீட் கேட்பது, சாராயம், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது, பொய்யான கருத்துக்களை கிசுகிசுக்களாக பரப்பி ஓட்டு வாங்குவது, செய்யாத விசயங்களை செய்துவிட்டதாகக் கூறி ஓட்டு வாங்குவது, அடுத்தவர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறி ஓட்டுவாங்குவது என எல்லா சீரழிவுகளும் தலைவிரித்தாடுகின்றன. தங்களுக்குள் பதவிப்போட்டி, காலைவாருதல், ஈகோ, காரியவாதம் ஆகியவைதான் நிறைந்துள்ளன.

நாம் விரும்பவில்லை என்றாலும் இவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், தண்ணீர் வியாபாரம், கந்துவட்டி, பைனான்ஸ் போன்ற தனியார்மயம், தாராளயமயத்தால் உருவான எல்லா கேடுகெட்ட ‘தொழில்’களையும் செய்பவர்களாக உள்ளனர். இயன்றவரை எல்லா சமூக விரோத நடவடிக்கைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். ஒரு வேட்பாளர் என்பவர் இவற்றில் ஏதாவது ஒரு ‘தகுதி’யைக் கொண்டவராகவே உள்ளார். மொத்தத்தில் இந்த வகையினரின் கைதான் தேர்தலில் உயர்ந்து நிற்கிறது; இவர்களின் குரல்தான் தேர்தலில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தொழிற்சங்கத் தலைமை எப்படியெல்லாம் சீரழிந்துள்ளது என்பதை கடந்த காலத்தில் பலமுறை பு.ஜ.தொ.மு.வின் பிரசுரங்களில் விளக்கியுள்ளோம். தொழிற்சங்க சுல்தான்களாக, தாதாக்களாக இருக்கின்றனரே ஒழிய, தொழிலாளர்களின் ஜனநாயக பூர்வமான தலைமையாக இவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அசோக் லேலாண்டின் வரலாறாக உள்ளது. தொழிலாளர்களுக்காக போராட்ட குணம் இல்லாத இவர்களால், ஆலை மேனேஜ்மெண்டுடன் அட்ஜெஸ்ட்மென்ட் இல்லாமல் தொழிற்சங்க பதவிக்கு போட்டி போடமுடியாது; போட்டியிடவில்லை என்பதை நாம் நன்கு அறிவோம்.

கேவலத்திலும் கேவலமான விசயம் என்னவென்றால், ஆட்குறைப்பு, வேலைப்பளு திணிப்பு உள்ளிட்ட தாக்குதலை இவர்கள் மறைக்கின்றனர். மாறாக, தொழிலாளர்களுக்கு வழக்கமாக ஆலை நிர்வாகம் செய்யக்கூடிய, செய்யவேண்டிய கடமைகளையே இவர்கள் தங்களது சாதனைகளாக காட்டிக்கொள்கின்றனர்.

இவ்வளவும் தொழிலாளர்களாகிய நாம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை திசைதிருப்புவதில் இவர்கள் எல்லோரும் உடன்படுகின்றனர் என்பதையே காட்டுகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர்கள் எல்லோரும் நமக்கு முக்கியமான பிரச்சினை என்று சொல்வது, எல்லோரும் முன்தள்ளும் விசயம் பணம் என்பதைத்தான். இதனைத்தான் எல்லா தொழிலாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சனை என்பதாகக் கூறி, தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை சுருக்கிக் காட்டுகிறார்கள். மற்றபடி ஆலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதான ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

ஆனால், இவர்களே சொல்கின்ற இந்தப் பிரச்சனையை இவர்கள் தீர்த்ததில்லை என்பதுதான் வரலாறு. ஒசூரில் நமக்கு சமமான அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்தைவிட பாரிய அளவில் குறைவான ஊதியம் வாங்குபவர்கள்தான் லேலாண்டு தொழிலாளர்கள் என்ற நிலைமைக்குக் காரணமான இவர்கள், இதனை மாற்றியமைக்கப் போவதாகவும், இதனால் தங்களை ஆதரிக்குமாறும் மீண்டும் மீண்டும் ஓட்டுக் கேட்கிறார்கள். நிலைமையை மாற்றிவிடுவார்கள் என்ற கருத்தும் சில தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.

ஆனால், இது உண்மையா? இந்த நிலைமையை இவர்கள் மாற்றுவார்களா? இவர்களால் மாற்ற முடியுமா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. ஒசூரில் நமக்கு, ‘சமமான அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்திற்கு சமமான ஊதியம்’ என்ற அகத்திக்கீரையைக் காட்டி கசாப்புக் கடைக்காரன் ஆடுகளை ஏமாற்றுவதைப் போல தொழிலாளர்களான நம்மை ஏமாற்றுகின்றனர். ஆகையால், சம ஊதியம் – குறைந்த பட்ச மாற்றம் என்று எதையும் இவர்கள் சாதிக்க மாட்டார்கள் என்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். மற்றபடி பாதுகாப்பான பணிச்சூழல், ஜனநாயக பூர்வமான உற்பத்தி என்று இவர்கள் பேசுவதெல்லாம் பம்மாத்து. ஏனென்றால், பாதுகாப்பான பணிச்சூழல் என்பது மேலிருந்து சங்கத் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வாங்கிக் கொடுத்து விடுவதல்ல.

தொழிலாளர்கள் இந்த அவலங்களை வெளி உலகிற்கு காட்டி, ஆலை நிர்வாகத்தின் பயங்கரவாதங்களை அம்பலப்படுத்தி, அதன் மூலம் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் ஆதரவை வென்றெடுப்பதன் மூலம் தான் வெற்றிபெற முடியும். அந்த உரிமைகளுக்காக போராடும் களப்போராளிகளே இன்றைய தேவை. இன்று வேட்பாளர்களாக நிற்கும் பலரும் பாதுகாப்பற்ற, கொடூரமான நமது ஆலையின் பணிச்சூழலை எதிர்த்து நின்றதில்லை என்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். இவ்வாறு எதிர்த்து நின்று தொழிலாளர்கள் குரல்கொடுத்த போதெல்லாம் அவர்களுக்கு துணைநின்றதும் இல்லை. சில கமிட்டி உறுப்பினர்கள் தொழிலாளர் பிரச்சனைகளை கமிட்டிக் கூட்டங்களில் எடுத்துச் சொன்னாலும், ஆலை நிர்வாகத்தின் குரலையே இவர்களுக்கு பதிலாக தந்து அவர்கள் குரலை அடக்கிவிடுகின்றனர். சங்கப் பொறுப்புகளில் இருந்த பலரும் நிர்வாகத்துடன் சமரசம், ஆலை நிர்வாகத்தின் எல்லா உத்தரவுகளுக்கும் அடக்கி வாசித்தல் என்று லேலாண்டு தொழிலாளர்களை பரதேசி திரைப்படத்தில் வருகின்ற கொத்தடிமை நிலைக்கு கொண்டு சென்றவர்கள்தான் என்பதை நாம் உணரவேண்டும்.

இவ்வாறு ஆலைக்குள் லேலாண்டு தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற நிர்வாகத்தின் அடக்குமுறை, ஜனநாயகமற்ற உற்பத்திமுறை, பாதுகாப்பற்ற பணிச்சூழல், நியாயமற்ற ஊதியம் போன்றவற்றிற்கு எதிராக குரல்கொடுத்து வருபவர்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள்தான். ஆலையில் பாதுகாப்பற்ற பணிச்சூழலால் ஏற்பட்ட விபத்தை எதிர்த்து கேட்டதற்காக, நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நேர்மையாக எதிர்கொண்டு வருபவரும் பு.ஜ.தொ.மு. தோழர்தான். இவற்றால் ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை சந்தித்து வருபவர்களும் பு.ஜ.தொ.மு. தோழர்கள்தான். இதற்கெல்லாம் அஞ்சாமல் களத்தில் போராடி வருபவர்களும் பு.ஜ.தொ.மு. தோழர்கள் தான்!

அந்த வகையில் இந்தத் தேர்தலில் பு.ஜ.தொ.மு.வின் தோழர்களான

தோழர்.சு.பரசுராமன், இணைச் செயலாளர் பொறுப்புக்கும்
தோழர்.எஸ்.இரவிச்சந்திரன், எல்.சி.வி.சேசிஸ் பகுதி கமிட்டிக்கும்

போட்டியிடுகின்றோம்.

எங்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி–தருமபுரி–சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784 – ஒசூர்.

16-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம்

[பிரசுரத்தைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

  • அசோக்லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • ஜனநாயகமான உற்பத்திச் சூழல், பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை வென்றெடுப்போம்!
  • புதிதாக 1000 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்தப் போராடுவோம்!
  • களப்போராளிகளை வெற்றி பெறச் செய்வோம்!

லேலாண்டு-2 ஆலை முதலாளித்துவ பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்களை இங்கே உங்கள் முன் வைக்கிறோம். இவை நாம் நாளும் அனுபவிக்கும் கொடுமைகள், கொடூரங்கள், சித்திரவதைகள்! இயன்றவரை தொகுத்துள்ளோம்! இந்த அவலங்களுக்கு முடிவுகட்டதான் எமது பு.ஜ.தொ.மு. தோழர்களான நாங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றோம். பதவி பவிசுக்காக அல்ல. நாங்கள் வெற்றிபெறுவது எவ்வளவு அவசியம், அவசரம் என்பதை இந்த இரத்த சாட்சியங்களைப் படித்தால் நீங்களே உணர்வீர்கள்!

  • அசோக்லேலாண்டு யூனிட் 2 என்பது கம்பெனி எனும் பெயரில் உள்ள இட்லரின் வதைக்கூடமாக உள்ளது. கம்பெனி நுழைவாயிலே முதல் கேட் நிர்வாகத்தரப்பு ஆட்கள், இரண்டாவது கேட் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள், மூன்றாவது கேட் முழுக்க பெரும்பான்மையாகிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என தனித்தனிதீவுகளாக தொழிலாளர்களைப் பிரித்துள்ளது லேலாண்டு நிர்வாகம். வர்க்க ஒற்றுமையின் வாசனை கூட வெளிவந்துவிடக் கூடாது என்ற லேலாண்டின் நரித்தனம் இது!
  • கேண்டீனை சரியாக 8.00 மணிக்கெல்லாம் மூடிவிடுகிறார்கள். அதற்கு பிறகு காலதாமதமாக ஒருவர் 8.01-க்கு சென்றாலும் அங்கே அனுமதியில்லை. தாமதமாக வருபவர், தான் வேலைசெய்யும் பகுதிக்கு சென்று காலை உணவு உண்ணாமலேயே பட்டினியுடனே உற்பத்தி போட வேண்டும். அதுமட்டுமின்றி நிர்வாகம் காலதாமதத்திற்கு தண்டனையாக 15 நிமிடத்திற்கான வேஜ்-கட் செய்துவிடுகிறார்கள். 8.16-க்கு ஒருவர் சென்றால் 30 நிமிடத்திற்கான வேஜ்-கட் செய்துவிடுகிறார்கள். இது நினைத்துப் பார்க்க முடியாத வன்முறையாகும். அதுவும் கேப் வெல்டு, பெயின்ட் சாப் தொழிலாளர்கள் மலை ஏறுவது போல் ஓடவேண்டும். தன்னுடைய வேலைப்பகுதிக்கு அவ்வளவு மேடு-பள்ளங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும், இதற்கான முறையான பாதைவசதி ஏதும் கிடையாது. தொழிலாளர்கள் முட்டிமோதி சென்றுதான் தங்களது வருகையைப் பதிவு செய்யவேண்டும் என்ற நிலை.
  • வெல்டிங் சாப்-பில் பல்வேறு பிக்சர்கள் இருக்கும். தொழிலாளர்கள் அதனைச் சுற்றி வேலை செய்துவிட்டு கேபினின் பகுதிகளான அவற்றை அடுத்தடுத்த ஸ்டேஜ்களுக்கு மாற்றித்தர வேண்டும். அதாவது பிக்சர் மற்றும் வெல்டிங்கள் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும். தொழிலாளர்கள்தான் கன்வேயர் மாதிரி ஓடிஓடி வேலைசெய்ய வேண்டும். இதற்கு டைம்-ஸ்டடி எப்படி தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? சி.எல் மற்றும் அப்ரண்டீசை மிரட்டி ஆசைகாட்டி ஓடஓட விரட்டி வேலை வாங்குவதன் மூலம்தான். இவ்வாறு சக்கையாக பிழிந்து வேலைவாங்கியதைவிட, பன்மடங்கு இலக்கை வைத்து தொழிலாளர்களை செய்யச் சொல்கின்றனர். கம்ப்யூட்டர் மூலம் கணக்கீடு செய்து வைத்துக்கொண்டு அதன்படியும் உற்பத்தி செய்யவேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர்.
  • ஏற்கனவே, உடல்நிலை சரியில்லாதவர்கள், விபத்துக்குள்ளானவர்கள் போன்றோர்களுக்குக்கூட அங்கே இரக்கம் காட்டுவதில்லை. அங்கே இருக்கின்ற ஸ்பாட் வெல்டிங் கன்கள் அனைத்தும் ஃபோர்டு போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் (பழைய காலாவதியான தொழில்நுட்பம் என்பதாலும், அவற்றை பயன்படுத்த அந்நாட்டு அரசுகள் தடைவிதித்து விட்டதாலும்) வீசியெறிந்தவற்றை எடுத்துவந்து அவற்றை பொருத்தி வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றனர். ஒவ்வொரு கன்னும் யானை, முதலை மாதிரி இருக்கின்றன. அவை அனைத்தும் அனகோன்டா பாம்பினைப்போன்ற ஹோஸ்பைப்பில் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை தன் உடம்பில் சுற்றிக்கொண்டுதான் வெல்டிங் செய்யவேண்டும். அதில் உள்ள மேக்னட் தொழிலாளியுடைய உடம்பை, தொழிலாளியின் உள்ளுறுப்பைக்கூட பதம்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.
    இது இளம் வயது தொழிலாளர்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அவர்களை ஆறுமாதம், ஒருவருடம் என வேலை வாங்கிவிட்டு உனக்கும் இந்த கம்பெனிக்கும் இனி எந்தவித சம்மந்தமுமில்லை என துரத்தி விடுகின்றனர். வேலை செய்யும்போது கடும் வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும்அதிகாரிகள் வேலை வாங்குகின்றனர். பெயரளவிலான மரியாதைகூட அங்கே அவர்களுக்கு இல்லை. இப்படி வாங்கப்பட்ட, வாங்கப்படுகின்ற உற்பத்தியைத்தான் பிளான்ட்-1 லிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மூத்த தொழிலாளர்களை செய்யச் சொல்லி நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது. வேறுவழியின்றி வேதனையோடு புலம்பிக்கொண்டேயும் தனது மனதிற்குள் புழுங்கிக்கொண்டேயும் வேலைசெய்துவருகின்றனர்.

ஸ்லோ பாய்சன் கில்லர் ஷாப்!

  • ஒரு சீனியர் தொழிலாளி கம்பெனி டாய்லட்டில் இடறி விழுந்து விட்டதால் அவரது வலதுகரம் ஒடிந்துவிட்டது. அதற்காக மருத்துவம் எடுத்துக்கொண்டு தனது உடல்நிலையை ஓரளவிற்கு சரிசெய்துகொண்டு வேலைக்கு திரும்பியுள்ளார். அவரது வலதுகரத்தில் ஸ்டீல் ராடு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொழிலாளிக்கு ஸ்பாட்வெல்டிங் அடிக்கச் சொல்லி அதிகாரி நிர்ப்பந்திக்கிறார். விபத்துக்குள்ளான, ராடு பொருத்தப்பட்ட அந்தக்கையால் ஸ்பாட் வெல்டிங் வைக்க வேண்டியிருப்பதால் அதனை அந்தத் தொழிலாளி மறுத்தார். இதற்காக, பல முறை சங்கச் செயலாளர் உட்பட நிர்வாகிகளிடம் முறையிட்டும் பலனின்றி மன வெறுப்புடனே வேலைசெய்தார். பின்னர் அவருடன் வேலைசெய்யும் சக தொழிலாளர்களின் முயற்சியால் பெயின்ட்சாப்பில் உள்ள ஒருவரிடம் பேசி பரஸ்பரம் இடமாற்றம் செய்துகொள்ளப்பட்டது. அந்தளவிற்கு ஈவிரக்கமற்ற கொலைக்களமாக எம்.டி.விஸ்பாட் வெல்டிங் சாப் (ஸ்லோ பாய்சன் கில்லர் ஷாப்) உள்ளது.
  • ஸ்பாட் வெல்டிங் சாப் முழுவதும் வெல்டிங் இயந்திரம் வெளியேற்றும் புகை வெளியேறி விடாமல் அது தொழிலாளர்களையே தாக்கும் வண்ணம் காற்றோட்டம் இல்லாமல் எக்ஸாஸ்ட் ஃபேன் போன்றவை போதிய அளவில் பொருத்தப்படாமல் உள்ளது. கணக்கு காட்டும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும் ஓரிரு ஃபேன்கள் இயங்காமலேயே இருக்கின்றன. இதுகுறித்து கேட்டால் “அது மெயின்டனன்ஸ் பிரிவினருடைய வேலை”, என்று கைகழுவி விடுகின்றனர் அதிகாரிகள். இது குறித்து அக்கறை கொள்ளும் ஓரிரு தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திப் போராடினால், அந்த நேரத்தில் மட்டும் ஃபேனை இயங்கச்செய்து விடுகின்றனர். பிறகு அந்தக் குறிப்பிட்ட தொழிலாளியை வேறு இடம் மாற்றி அனுப்பி வைத்து விடுவது போன்ற இழிந்த போக்கையே கடைபிடிக்கின்றனர். ஃபேன்களும் பழைய இயங்கா நிலைக்கு சென்றுவிடுகின்றன!
  • உற்பத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு தொழிலாளர்கள் வேலைவாங்கப்படுகின்றனர். இதற்கு தொழிலாளியாக இருந்து நிர்வாக அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டிருப்பவர்களையே ஆலைநிர்வாகம் பெரிதும் பயன்படுத்துகிறது. அவர்கள்தான் வெறித்தனமாக அங்கே வேலைசெய்யும் வாரிசு எம்ப்ளாயிகளான இளம் தொழிலாளர்களை அதட்டியும், “ரிப்போர்ட் எழுதிக் கொடுத்து விடுவேன்”, என மிரட்டியும்வேலைவாங்குகின்றனர். “இந்த வயதில் உனக்கு இவ்வளவு சம்பளமா?”என்கிறவன்மத்தோடு வேலைவாங்குகின்றனர். தன்னோடு நெருங்கிப் பழகும் தொழிலாளர்களிடம், சீனியர்- ஜூனியர் பாகுபாடு பார்க்கும் கண்ணோட்டத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். நிர்வாக அதிகாரிகளின் இந்த பிரித்தாளும் நயவஞ்சகத்தை புரிந்துக்கொள்ளாமல் சிலர் இதற்கு பலியாகிவிடுகின்றனர்.
  • மெடிக்கல் பிரச்சினையில் உள்ளவர்களை அவர்களுக்காக அனுதாபம் காட்டி இடமாற்றம் செய்கிறோம் என்று சொல்லி அதனினும் கொடுமையான மெட்டீரியல் மூவ்மென்ட் என்ற ட்ராலி தள்ளும் வேலையை கொடுக்கின்றனர். அதனைச் செய்து பார்த்துவிட்டு,“இதற்கு ஏற்கனவே செய்த வேலையே போதும்!” என தொழிலாளி கருதும்வண்ணம் செய்துவிடுகின்றனர். இதனை பார்க்கும் பிற தொழிலாளர்கள் (மெடிக்கல் பிரச்சினை உள்ளவர்கள்) இடமாற்றம் கோராமல் மனதில் புழுங்கிக்கொண்டே வேலைசெய்து வருகின்றனர்.
  • எல்.சி.வி. கேப் வெல்டிங் பகுதியில் ஒரு பி.டி.சி தொழிலாளி ட்ராலியில் வைத்து மெட்டீரியல் மூவ்மென்ட் செய்தால் லேட்டாகிறது என்று சொல்லி, பெரிய கத்திபோன்ற கூரிய முனையுள்ள கேபின் பாடியை தூக்கிவர நிர்ப்பந்தித்ததால் விபத்தாகி இரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்தும் அவரது வலது கரமே செயலிழந்து போயிற்று. பெங்களூர் தனியார் மருத்துவமனையில் வைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதற்கான இழப்பீடுகளைக் கொடுத்து கவனித்துக் கொள்கிறோம் என வாய்வழி பேச்சில் சொல்லிவிட்டு வெறும் முதலுதவி மட்டுமே செய்துவிட்டு அவரை கவனிக்காமல் விட்டுவிட்டனர்.கடைசியில் அவரது சக தொழிலாளர்கள்தான் அவருக்கு உணவளித்து பாதுகாத்தார்கள். இதுபோன்ற கொலைபாதகச் செயல்களை எல்லாம் பட்டியலிட்டால் கருட புராணத்திலும் மனுதர்மத்திலும் சொல்லப்பட்டவை குறைவோ என்று எண்ணத்தோன்றும்.

அடுத்து, பெயிண்ட் சாப்!

வெளிக்காற்று நுழையவிடாமல் மூச்சுத் திணறவைத்து தொழிலாளர்களை கொலை செய்வது எப்படி என கருட புராணத்தில் சொல்லப்பட்டதை நிலைநாட்டும் சாப்! இந்த சாப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு முறையாக மெடிக்கல் டெஸ்ட் எடுத்து சோதித்தாலே இவர்களது நிலைமையை புரிந்து கொள்ள முடியும். சார்ஜ் சீட், சஸ்பெண்ட் போன்ற அடக்குமுறைகளை தொழிலாளர்கள் மீது செலுத்துவதன் மூலம் பல உண்மைகளை மறைத்துவிடுகிறது ஆலைநிர்வாகம்.

எல்.சி.வி.: தலைக்கு மேல் தொங்குவது கேப் அல்ல! கொலைக்கருவி!

  • எல்.சி.வி சேசிஸ் லைனில் கேப் மௌன்ட்டிங் ஆகின்ற ஸ்டேஜில், கன்வயர் ஓடிக்கொண்டிருக்கின்ற போதே சேசிஸின் முகப்புப்பகுதியில் கேபினானது மேலிருந்து வந்திறங்குகிறது. கேபினை மேனுவல் கிரேனைக் கொண்டுதான் மூவ் செய்து கொண்டே லாவகமாக இறக்கிக் கொண்டே அதனை பொருத்தவேண்டும். தொங்கிக்கொண்டிருக்கும் கேபினுக்கு கீழே தொழிலாளர்கள் வேலைசெய்து கொண்டிருக்கும்போது பலமுறை கேபினானது அதன் நிலையிலிருந்து நழுவி தொழிலாளர்கள் மீது விழும் வண்ணம் இறங்கி வந்துள்ளது. இவ்வாறு இறங்கி வருவதற்குக் காரணம் அங்கே நிலையான தடுப்பான் (ஸ்டாப்பார்) ஏதும் பொருத்தப்படவில்லை. மேலும், மேனுவலாக கீழே இறக்கும் பொழுது அது சீரான வகையில் இறங்கி வராது, பலநேரங்களில் ஜர்க் ஆகி வேகமாக இறங்குவதுதான் நடக்கிறது. இவையெல்லாம் கேபினுக்கு கீழே வேலை செய்கின்ற தொழிலாளர்கள் மீது விழுந்து அவர்களின் உடல்நசுங்கி போவதற்கோ, அல்லது பலத்த உடலுறுப்பு சேதங்கள் நடப்பதற்கோ வாய்ப்புகள் உள்ளன. இதற்கு சாட்சியாக சமீபத்தில் நடந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுகிறோம்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள், தொழிலாளி ஒருவர் கேபினுக்கு கீழே வேலைசெய்துக் கொண்டிருக்கும்போது திடீரென கேபின் இறங்கிவிட்டது. உடனே அவர் சுதாரித்துக்கொண்டார். அதனால், மயிரிழையில் உயிர் தப்பினார். இதனால், ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவால் அவர் அங்கேயே மயக்கமடைந்தார். ஆம்புலனஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இதற்கு பிறகு, இந்த இடத்தில் நிரந்தரத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து, டிப்ளமோ அப்ரண்டீஸ், சி.எல் தொழிலாளர்களை ஈடுபடுத்தியது ஆலைநிர்வாகம். இதன் மூலம் விபத்து நடப்பதற்கான ஆபத்தான சூழலை தொடரவைத்துள்ளது. அப்போதைக்கு பிரச்சனைத் தீர்ந்ததாக நிரந்தரத் தொழிலாளர்களாகிய நாம் கருதினோம். ஆனால், ஒருசில வாரத்திற்குள் மெல்ல மெல்ல நிரந்தரத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. கன்வயர் லைனில் அந்த இடத்தில் மட்டுமாவது (கேப் மௌவுண்டிங் பகுதியில்) கன்வயரை நிறுத்தி ஸ்டாப்பரை பொருத்தி பாதுகாப்பாக வேலையை முடித்தனுப்ப முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தொழிலாளரின் உயிரை மயிராய் மதிக்கிறது ஆலை நிர்வாகம். இது குறித்து தொழிலாளர்கள் எடுத்துரைத்தாலும் ஏற்பதில்லை. சங்கநிர்வாகிகளை அழைத்து சுட்டிக்காண்பித்தால் அந்த நேரத்தில் இயல்பாக அவர்களும் கோபமடைந்து அதிகாரிகளை திட்டுகின்றனர். அடுத்து மேல்மட்ட நிர்வாகம் சொல்லும் கருத்துக்கு பலியாகி அதனை தொழிலாளர்களிடம் ஒப்பித்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

எல்.சி.வி. சேசிஸ் லைன் – தொழிலாளர்களின் காலை ஒடித்து கண்ணைக் குருடாக்கும் பகுதி!

  • எல்.சி.வி. கேப் டிரிம், சேசிஸ் லைன்களை சி.எல், அப்ரண்டீஸ் இளைஞர்களை வேலைசெய்ய வைத்து அதிகபட்சமாக விரட்டிவிரட்டி வேலை வாங்கி இதுதான் இதற்கு உரிய டைம் என்று சொல்கின்றனர். ஒரு வண்டிக்கு 5.3 நிமிடம் என்று கால இலக்கை இவர்களே தீர்மானித்துக் கொள்கின்றனர். இந்த வேகத்தில் கன்வேயரை இயக்கி தொழிலாளர்களை வேலை வாங்குகின்றனர். தொழிலாளர்கள் மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும்போதே இடையில் கன்வயர் வேகத்தை அவர்களுக்கே தெரியாமல் கூட்டிவைத்து விடுகின்றனர். இதனைப்பற்றிக் கேள்வி கேட்டால் சார்ஜ்-சீட், சஸ்பெண்ட் என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டுகின்றனர். கன்வேயரில் மூவ் ஆகிக்கொண்டிருக்கும் மவுண்ட் செய்யப்பட்ட கேபினுக்கு மேல் ஏறி வேலை செய்துவிட்டு மூவிங் நிலையிலிருந்து கீழே குதித்துத்தான் இறங்க வேண்டும் என்ற ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதால் இடறி விழுந்து கால் ஒடிந்து சிலமாதங்கள் விடுப்பில் இருந்து மருத்துவம் செய்துகொண்டு வேலைக்கு திரும்பியுள்ளார் ஒரு தொழிலாளி. அந்த வேலைகளை மூத்த தொழிலாளர்களை செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் கொடுமை இங்கே இன்னும் நிகழ்கிறது. பாதுகாப்பு குறித்து அக்கறையோடு இருக்கும் ஓரிரு தொழிலாளர்கள்தான் அதனை எதிர்த்துப் போராடுகின்றனர். ஆனால், பிரச்சினையை தீர்க்காமல் அத்தொழிலாளர்களை இடமாற்றம் செய்து விடுகின்றனர். இங்கு மூவிங்கில் இருக்கின்ற கன்வேயரில் இருந்து இறங்குவதற்கு தேவையான பிளாட்ஃபார்ம் பொருத்தமாக அமைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஆலை நிர்வாகம் அமைக்கவில்லை. இதனை கேட்கும் தொழிலாளர்களை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு தொழிலாளியை அங்கே அதே வேலையை செய்ய வைத்து, கேள்வி கேட்கும் தொழிலாளி வேலை செய்வதில்லை என்றும் பழி போடுகின்றனர். தங்களுக்கு விசுவாசமான கெம்பா தொழிலாளர்கள் மூலம் அவதூறு செய்கின்றனர்.
  • எல்.சி.வி. சேசிஸ் அசெம்பிளி லைனில் உள்ள ரேடியேட்டர் பிட்மண்ட் வலதுபுற ஸ்டேஜ்ஜில் கிளிப் பொறுத்துவதற்கு சர்க் கிளிப் ட்ரைவர் கொடுப்பதற்கு பதிலாக சாதாரண கட்டிங் பிளேயரைத்தான் கொடுத்து வேலைபார்க்கச் சொல்கிறார்கள். இது பாதுகாப்பற்ற செயல் என்றும் இவ்வாறு வேலைசெய்தால் வேலை செய்யும் தொழிலாளியின் கண்ணோ அல்லது சக தொழிலாளர்களின் கண்களையோ பதம் பார்த்துவிடும் என்று சொல்லி அதனால் அதற்குரிய சரியான டூலைக் கொடுங்கள் என்று கேட்கும் தொழிலாளரை, “இதற்கு முன்னர் எல்லோரும் இந்த கட்டிங் பிளேயரை வைத்துத்தான் செய்துள்ளார்கள். நீங்கள்தான் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறீர்கள். நான் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்துவிடுவேன்” என்று சொல்லி மிரட்டுகின்றனர் அதிகாரிகள். சர்க் கிளிப் பிளேயர் என்ற உபகரணம் சுமார் 500 ரூபாய் விலை கொண்டது. அவ்விலைக்குரிய இச்சிறு கருவியை கொடுப்பதால் பல லட்சம் வண்டிகள் உற்பத்தி செய்யும் ஆலை நிர்வாகத்திற்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லைதான். டூலை கேட்கும் ஒரு சிறு விசயத்தில் கூட தொழிலாளியின் கோரிக்கையை அங்கீகரிக்க மறுக்கின்ற வக்கிரம் இங்கு நிலவுகிறது. ஜனநாயகமற்ற கொடுங்கோன்மையாக இது உள்ளது. இதற்கு காரணம் தொழிலாளியை அவர்கள் அடிமைகளாகக் கருதுகிறார்கள் என்பதால்தான்.

எம்.டி.வி. கேப் ட்ரிம் பகுதி – தொழிலாளரின் உணர்வை ட்ரிம் செய்யும் பகுதி!

  • எம்.டி.வி. கேப் டிரிம் என்பது கேபினை இறக்கும் இடம். இங்கு கன்வேயரைச் சுற்றி ஓடிஓடி வேலை செய்ய வேண்டும். இதற்கு முக்கியக் காரணம் கன்வேயரின் வேகம் அந்த வேலையை முடிப்பதற்கு போதுமானதாக இல்லாமல், அதில் நான்கில் ஒரு பகுதியாக இருப்பதே. மார்பின் மேல் பகுதியில் விபத்துக்குள்ளாகி ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டுள்ள தொழிலாளி ஒருவர் இப்பகுதியில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தார். தனது உடல்நிலைமை காரணமாக அவர் தொடர்ந்து இப்பகுதியில் வேலை செய்ய இயலாது எனத் தெரிவித்து வந்தார். இதனை பொருட்படுத்தாமல் அவரை ஆலை நிர்வாகிகள் இந்தப் பகுதியில் வேலை செய்ய கட்டாயப்படுத்தினர். இதனால், ஒருநாள் அதிக பலம் காட்டி வேலை செய்து கொண்டிருக்கும் போது, மார்பில் பொருத்தப்பட்டிருந்த ஸ்டீல் பிளேட் சதையைப் பிய்த்துக்கொண்டு வெளியே வந்தது. உடல்முழுவதும் இரத்தம் சொட்டச்சொட்ட அதிகாரியிடம் சென்று தனது இரத்தம் வருவதைக் காட்டி இனியாவது தனக்கு இடமாற்றம் செய்துதருமாறு கேட்டார். ஆனால், சிறிதும் இரக்கமற்ற முறையில் லேலாண்டு நிர்வாகம் அத்தொழிலாளியை அந்தப் பகுதியிலேயே வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றும் வேதனையோடு அவர் அங்கேயே வேலை செய்துக்கொண்டிருக்கிறார்.
  • நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் அனுபவமிக்க மூத்த அதிகாரிகளை நியமிப்பதில்லை. மாறாக அனுபவமற்ற, தொழிலாளர்களின் நிலைமை புரியாத, பணத்தாசையும், பதவி வெறியும் பிடித்த இளம் அதிகாரிகளை நியமிக்கின்றனர். இந்த இளம் அதிகாரிகள் மேல் அதிகாரிகள் போடும் உத்தரவுக்கு ஆடுவது மட்டுமின்றி மூத்தத் தொழிலாளர்களை அவர்களின் வயதுக்குரிய மரியாதைகூட கொடுக்காமல் கிண்டல் அடிப்பது, அவமானப்படுத்துவது, நகைப்பது, சீண்டுவது என்ற எல்லாவிதமான சேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர். மூத்தத் தொழிலாளர்களின் தன்மான உணர்வை கேள்விக்குள்ளாக்குகின்றனர். இதனை எதிர்த்து கேட்டால், ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தத்தில் அதிகார வெறிபிடித்தவர்களாக இந்த இளம் அதிகாரிகள் உருவெடுத்துள்ளனர்.

உணர்ச்சிகளை அடக்குகிறோம் – உணர்வுகளற்ற நடைப்பிணங்களாகிறோம்!

கன்வேயரின் வேகம் 5.3 நிமிடங்கள்! அதாவது 5.3 நிமிடத்திற்கு ஒரு வண்டி!இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பலரும் இரண்டு ஸ்டேஜ், மூன்று ஸ்டேஜ் வரை ஓடி ஓடிதான் அவரவர் வேலைகளை முடிக்கின்றனர். உரிய ஸ்டேஜ்குள்ளேயே வேலையை முடிக்கவில்லை என்று அதிகாரிகள் விரட்டுகின்றனர். இந்தச்சூழலே சிறுநீர், மலம் கழிப்பது போன்ற மனித கழிவுவெளியேற்றத்திற்கே நேரம் கொடுப்பதில்லை. அதிகாரிகள் வேலை முடிக்கவில்லை என்று விரட்டுவதால், பலரும் டாய்லெட்டுக்கு போகாமல் அடக்கி வைத்துக்கொண்டு வேலை செய்கின்றனர். இதனால் சிறுநீரகக்கல், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கு தொழிலாளர்கள் பலர் ஆளாகி அவதியுறுகின்றனர்.

நாம் எந்த அளவிற்கு அடிமைகளாக்கப்பட்டுள்ளோம் என்ற இந்த அடக்குமுறையை நீங்கள் உணரவேண்டுமென்றால், சிப்ட் முடிந்தவுடன் எல்லா டாய்லெட்டும் அவுஸ்ஃபுல்லாக இருப்பதையும் தொழிலாளர்கள் வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும் அந்த அவலக்காட்சியையும் பாருங்கள்! லேலாண்டு ஆலை நிர்வாகத்தின் இந்த அடக்குமுறைக்கு சாட்சியம்!

தற்காலிகத் தீர்வு!

நிமிட உற்பத்தி முறை என்பது ஓர் நவீன அடக்குமுறை. இது தொழிலாளர்களை நிரந்தர நோயாளியாக்குகிறது. இந்த நிமிட உற்பத்திமுறையை எதிர்க்காமல் மேற்கண்ட அடக்குமுறைகளிலிருந்து தொழிலாளர்கள் விடுதலை அடைய முடியாது. அடுத்து, தற்போதுள்ள இந்த அடக்குமுறைகள் குறைந்த பட்சம் குறையவேண்டுமென்றால் நமது ஆலையில் மட்டும் சுமார் 1,000 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள் புதிதாக நியமிக்கப்படவேண்டும். மூன்றாவதாக, நம்மீதான அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கான களப்போராளிகளை,தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அவர்கள் மூலம் தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைக்கவேண்டும். அந்த வகையில் இன்று களத்தில் நிற்கின்ற பு.ஜ.தொ.மு. தோழர்களை வெற்றி பெறச் செய்வீர்!

இறுதியாக,

ஒரு முறை, சிப்ட்டுக்கு இடையே தொழிலாளி ஒருவர் டாய்லெட்டிலிருந்து வெளிவரும்போது அழுதுகொண்டே வெளிவந்தார். காரணம் என்னவென்று கேட்டார் தோழர்.“எனக்கு பைல்ஸ் பிரச்சினை உள்ளது. டாய்லெட்கூட நிம்மதியாக இருந்துவிட்டுச் செல்ல முடியவில்லை. வலியைத் தாங்க முடியவில்லை, லேட் ஆகிவிட்டது” என்று கண்ணை துடைத்துக்கொண்டே சொல்லிச்சென்றார்.

அன்று… அவர் கண்ணைத் துடைத்துக் கொண்டார், வலியைப் பொறுத்துக்கொண்டார், துன்பத்தைத் தாங்கிக்கொண்டார்!

இன்று… நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்!

தேர்தல் நாள் 19-09-2014

தோழர்.சு.பரசுராமன்,
இணைச் செயலாளர் பொறுப்புக்கு

தோழர்.சீ.இரவிச்சந்திரன்.
கமிட்டி உறுப்பினர் பொறுப்புக்கு, எல்.சி.வி. சேசிஸ் பகுதி.

எங்களுக்கு வாக்களித்து பெருவரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி–தருமபுரி–சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784 – ஒசூர்.
ndlfhosur2004@gmail.com

தமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

26

1. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் விழா!

rsyf-tricy-periyar-banner rsyf-tricy-periyar-sticker-1 rsyf-tricy-periyar-sticker-2 rsyf-tricy-periyar-sticker-3

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 136-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 17-09-2014 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி செயல்படும் பகுதிகளிலும், கல்லூரிகளிலும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், சாதிப்பிரிவு, மதத்துவேசத்துக்கு எதிராகவும், சமஸ்கிருத இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் போராடியுள்ளார். கடவுள் நம்பிக்கைதான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது என்றும், பார்ப்பனியம் தான் சாதி, மத வேறுபாட்டிற்கு அடித்தளம் என்றும் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி பார்ப்பனியத்தை களையெடுக்க பாடுபட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்ய அவர் மேற்கொண்ட பிரச்சாரம் அளப்பரியது. பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி, பெண்ணுரிமை போராளி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று பார்ப்பனிய கும்பலின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது.

அகண்ட பாரத கனவோடு மோடி ஆட்சியமைந்தபின் ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறி கும்பலுக்கு புது தெம்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், இந்தி மொழியை அலுவல் மொழியாக்கும் திட்டம், மத்திய பல்கலைகழகங்களில் இந்தி மொழியை விருப்ப மொழியாக்கும் திட்டம் என்ற பெயரில் தாய் மொழி தமிழை அழிக்கவும், தமிழ் மக்களை அழிக்கவும் அடுத்தடுத்து தன் பார்ப்பனிய இந்துத்துவா கொள்கைகளை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு இருக்கிறது மோடி அரசு.

இந்தச் சூழலில், பார்ப்பனிய கொள்கைக்கு எதிராக போராடிய பெரியாரின் பிறந்த நாளில், பார்ப்பனிய எதிர்ப்பு மரபை மீட்டு, பெரியார் போலவே மாணவர்களும் போராட வேண்டும் என்ற வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் “பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை, சாதிப்பிரிவு, மதத்துவேசம் முதலியவை தான் நமது தேசத்தின் பெரும் விரோதிகள்!” என்ற முழக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் பெரியார் கல்லூரியில் உள்ள இரண்டு பெரியார் சிலைகளுக்கும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச்செயலர் தோழர்.வசந்த் மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து “பெரியார் புகழ் ஓங்குக!” என்று மாணவர்கள் முழக்கமிட்டனர்.

தந்தை பெரியாரின் சிறப்பு பற்றியும், அவரின் போராட்டங்கள் பற்றியும் பேசி, சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு போன்ற பார்ப்பனிய கொள்கைக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட வேண்டும். இதை தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாளில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம் என்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் ஓவியா மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அடுத்த நிகழ்வாக அரியமங்கலம் உக்கடை மற்றும் கல்லாங்காடு பகுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர். செழியன் தலைமையில் தந்தை பெரியாரின் படத்திறப்பு விழா நடைபெற்று, மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்று பெரியாரின் கொள்கை பற்றி தோழர் செழியன் விளக்கி பேசினார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சிக்கு எதிராக நாம் போராடியது, அதைத் தொடர்ந்து பெரியாரின் பிறந்த நாளில் படத்திறப்பு விழா நடைபெற்றது பொதுமக்களிடமும், பகுதி இளைஞர்களிடமும் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

2. மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்.

3. மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி

ந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 17.09.2014 காலை 9.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். பெரியார் சிலை அருகே நின்று பறை ஓசை எழுப்பியவுடன் அங்கு சென்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் சற்று நின்று பெரியாரின் சிலையை நோக்கி பார்த்தனர். பெண் தோழர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறகு அங்கிருந்தே, “பார்ப்பன மத வெறிக்கும்பலான RSS, BJP கும்பல்களை விரட்டியடிப்போம்” என்ற விண்ணதிரும் முழக்கத்தை தோழர்கள் முழங்க அச்சத்தோடு அருகில் வந்த பெண் காவல்துறை அதிகாரி, “அனைத்து கட்சிகளுக்கும் மாலை போட மட்டுமே அனுமதி கொடுத்துள்ளோம் நீங்க ஏன் கோசம் போடரீங்க” என்று தடுக்க வர, உடனே ஒரு தோழர் “பெண்ணான நீங்கள் இந்த பதவியில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு பெண் உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார்தான் காரணம், சொல்லப்போனால் நீங்கள்தான் முன்னின்று இந்நிகழ்சியை செய்திருக்க வேண்டும்” என்று கூறியவுடன் அந்த பெண் காவல்துறை அதிகாரி மவுனமாக திரும்பிச்சென்றார்.

காலை நிகழ்வின் தொடர்ச்சியாக மாலை 7 மணியளவில் திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி இந்நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இத்தெருமுனைக்கூட்டத்தை ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர்.சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். அடுத்து பேசிய தோழர்.சத்தியா பெரியாரை பற்றி தெரியாத இளைய தலைமுறைகளை பற்றியும் பெரியாரை நாம் ஏன் பின் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறப்புரையாற்றிய தோழர்.கோவன் அவர்கள் பெரியார் நடத்திய போரட்டங்கள் பற்றியும் BJP, RSS-ன் பார்ப்பன பயங்கரவாத செயல்களைப் பற்றியும் அதை தமிழகத்தில் வளரவிடாமல் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் எனவும் விளக்கிப்பேசினார்.

இடையிடையே கலைக்குழு தோழர்கள் மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் புரட்சிகர பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினர். இறுதியாக ம.க.இ.க தோழர்.ஜீவா நன்றி தெரிவித்து கூட்டத்தினை முடித்து வைத்தார்.

இக்கூட்டத்தில் பகுதிவாழ் உழைக்கும் மக்களும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை.

4. வேதாரண்யம்

குத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் அண்ணா அரங்கம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 17.09.2014 அன்று மாலை 6 மணி அளவில் மாலை அணிவித்து மோடி அரசின் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராகவும், கல்வியில் பயிற்று மொழியாகவும், அலுவலகத்தின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், தமிழ்மொழியை அறிவித்து ஆணையிடக் கோரியும், விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் பகுதி வட்டார பொறுப்பாளர் தோழர் தனியரசு மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் வழக்குரைஞர் சரவணத் தமிழன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
நாகை மாவட்டம்

ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?

1

ற்பில் சிறந்தவள் கண்ணகியா, சீதையா?” என்ற பட்டிமன்ற வாதங்களைக் கேட்டு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும் ரசிகர்களைப் போல, “ஜனநாயகத்தை வெறுப்பதில் விஞ்சி நிற்பவர் மோடியா, லேடியா?” என்று பட்டிமன்றம் நடத்தினாலும், நாம் முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கத்தான் வேண்டியிருக்கும்.

மோடி அமைச்சரவைக் கூட்டம்
மோடி நடத்தும் அமைச்சரவைக் கூட்டம் : கையில் சாட்டை இல்லாதது ஒன்றுதான் குறை!

அன்றாடம் தமிழகச் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “உள்ளே ஜனநாயகம் இல்லை” என்று புலம்பியபடியே வெளியே வருகிறார்கள். பிறகு, மறுநாள் உள்ளே போகிறார்கள். மீண்டும் வெளியேற்றம், மறுபடியும் புலம்பல். தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்ற ஊரறிந்த உண்மையை அறிவிப்பதற்காகவே தி.மு.க. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஜனநாயகத்தை வெறுப்பதில் மோடியைக் காட்டிலும் லேடிதான் விஞ்சி நிற்பதாக வாசகர்கள் எண்ணக்கூடும். மோடியின் குஜராத் மாடல் ஜனநாயகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலேயே அப்படி ஒரு முடிவுக்கு வருவது நியாயமல்ல.

குஜராத் சட்டமன்றத்தை மோடி எப்படி நடத்தினார் என்பது பற்றி மாத்ருபூமி இதழின் (ஜே.எஸ்.மனோஜ், ஏப்ரல், 4, 2014) அகமதாபாத் நிருபர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மோடியின் குஜராத்தில் சட்டசபை ஆண்டுக்கு 29 நாட்கள்தான் நடந்திருக்கிறதாம். இந்தியாவிலேயே இதுதான் குறைவு. 20 முதல் 25 நாட்கள் வரை நடக்கும் ஒரு பட்ஜெட் கூட்டத் தொடர், ஓரிரு நாட்கள் நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடர், அவ்வளவுதான். அரை நாள் மட்டுமே சட்டமன்றம் கூடிய அமர்வுகளும் உண்டு. ஒரு கூட்டத்தொடரின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பது மட்டுமே நிகழ்ச்சி நிரலாக இருந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளை மதிப்பது என்ற வார்த்தையே மோடியின் அகராதியில் கிடையாது. மோடி மேடையில் பொளந்து கட்டுவாரே தவிர, எதிர்க்கட்சிகளை விவாதங்கள் மூலம் அவர் எதிர்கொள்ளமாட்டார். அந்த வேலையை சபாநாயகர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பினால், சபாநாயகர் அவர்களைக் கூண்டோடு வெளியேற்றுவதன் வாயிலாக மோடியின் கருத்தை நிலைநாட்டி விடுவார். எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இடைக்கால நீக்கம் செய்வது குஜராத் சட்டமன்றத்தில் வழக்கமான நடைமுறை என்கிறார் மனோஜ். இது குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால்தான் விஞ்சி நிற்பது மோடியா, லேடியா என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

அம்மா சல்யூட்
அம்மாவின் முன் “கையது கொண்டு மெய்யது பொத்திக் கொள்ளும்” பாக்கியம் பெற்ற தமிழக அமைச்சர்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத அவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதும் அங்கே வழக்கமான நிகழ்வு என்கிறார்கள் பத்திரிகை நிருபர்கள். தலைமை தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கை மீதுகூட அங்கே விவாதம் நடந்ததில்லையாம். கூட்டத்தொடரின் கடைசி நாளில்தான் அந்த அறிக்கை அவையில் வைக்கப்படும். பொதுவாக கடைசி நாளான வெள்ளிக்கிழமைகளில் சட்டமன்றம் 2 மணி நேரத்துக்குப் பிறகு ஒத்தி வைக்கப்படும். எனவே, தணிக்கையாளர் அறிக்கையின் மீது எந்த விவாதமும் நடக்காது.

அது மட்டுமல்ல, குஜராத் அரசின் 15 முக்கியமான துறைகளை மோடி தன்வசம் வைத்திருந்தார். இருந்தாலும், சட்டமன்றத்தில் எந்தக் கேள்விக்கும் மோடி பதில் சொல்ல மாட்டார். துறையின் துணை அமைச்சர்கள்தான் பதில் சொல்வார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் மோடி தனது அறைக்குப் போய் விடுவார். அவையின் எஞ்சிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் செயல்வீரர் என்பதால் அனாவசியமாகப் பேசுவதில்லை போலும். ஒரு சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அவர் மூன்றே முறைதான் பேசியிருக்கிறார். அவற்றில் இரண்டு இரங்கல் செய்திகளை வாசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. அனல் மின்நிலையம் நிறுவுவது முதல் பஸ் ஸ்டாண்டு கக்கூசு அமைப்பது வரையிலான எல்லா அறிவிப்புகளையும் அம்மாதான் வெளியிடுகிறார். பாராட்டி மேசையைத் தட்டும் ஒரு வேலையை மட்டும்தான் அமைச்சர்கள் செய்கிறார்கள். அந்த அளவுக்கு எல்லாப் பொறுப்புகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பணியாற்றுகிறார் அம்மா.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், மொத்தம் 22 நாட்கள் நடைபெற்றுள்ள பேரவையில் 110-ம் விதியின் கீழ் 41 அறிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா படித்திருக்கிறார். விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிக்கைகள் மீது விவாதம் நடத்த முடியாது என்பதைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செய்வதாகவும், என் மீது வசை பாடுவதற்கும் மட்டும் தடை இல்லாத அந்த விதி என்ன தலைவிதியா என்று கேட்கிறார் கருணாநிதி. ஆயினும் என்ன, லேடி சட்டமன்றத்துக்கு வந்து அறிக்கையாவது படிக்கிறாரே!

03-4-modi-hard-work

“மோடி நாடாளுமன்றத்துக்கே வருவதில்லையே” என்று கேட்ட காங்கிரசு நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், “சில நாட்கள் முன்புதானே வந்தார். நீங்கள் அவரைத் தரிசிக்கவில்லையா?” என்று திருப்பிக் கேட்டார் சுஷ்மா. “தரிசிப்பதற்கு அவர் என்ன கடவுளா?” என்றார் கார்கே. அவர் கிண்டலுக்கு கேட்டாலும் உண்மை கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் செய்ததைப் போல, மோடி தனது ஹோலோகிராமை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்புண்டு.

குஜராத் மாடலை நாடாளுமன்றத்தில் உடனே முழுமையாக அமல்படுத்த முடியாத காரணத்தினால்தான் மோடிக்கு எதிராக இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேட்க முடிகிறது. குஜராத் சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்குத் தனிச் சிறப்பான கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த உறுப்பினரும் மாநிலம் தழுவிய விசயங்கள் குறித்தோ, அரசின் கொள்கை சார்ந்த விசயங்கள் குறித்தோ கேள்வி எழுப்ப முடியாது. மாநிலத்தில் நடந்த தற்கொலைகள் அல்லது பாலியல் வன்முறைகள் எவ்வளவு என்பன போன்ற கேள்விகளுக்குக்கூட அங்கே அனுமதி கிடையாது; உறுப்பினர்கள் தத்தம் தொகுதிப் பிரச்சினைகள் பற்றி மட்டும்தான் கேட்கலாம் என்று குறிப்பிடுகிறார் மாத்ருபூமி கட்டுரையாளர்.

எதிர்க்கட்சிகளின் நிலைமையாவது பரவாயில்லை. பா.ஜ.க. உறுப்பினர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபகரமானது. சொந்தமாக கேள்வி கேட்க அவர்களுக்கு அனுமதி இல்லை. மண்டபத்தில் எழுதிக் கொடுத்த கேள்வியைத்தான் அவர்கள் கேட்கவேண்டும். 2007-ம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடந்தபோது ஒரு கேலிக்கூத்து நடந்தது. குஜராத் போலீசின் சாதனைகளைப் பதிலாகச் சொல்வதற்குத் தகுந்த மாதிரி பா.ஜ.க. உறுப்பினர்களைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும் என்பது மோடியின் திட்டம். சொந்தமாக கேட்டால் ஏதாவது ஏடாகூடமாகிவிடும் என்பதால், சட்டமன்ற கேள்வித்தாள் படிவங்களை, குஜராத்தின் எல்லா மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி, “வெற்றுப் படிவத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ க்களின் கையெழுத்தை மட்டும் வாங்கி அனுப்பவும்” என்று உத்தரவிட்டிருக்கிறார். கேள்வியை நாமே எழுதிக் கொள்ளலாம் என்பது மோடியின் திட்டம். ஆனால் ஒரு முட்டாள் போலீசு அதிகாரி, அந்தப் படிவத்தை காங்கிரசு எம்.எல்.ஏ.விடமும் கொடுத்துக் கையெழுத்து கேட்கப்போக, குட்டு உடைந்து சிரிப்பாச் சிரித்து விட்டது.

அது குஜராத் கதை. இப்போது மோடி பிரதமர் ஆகிவிட்டபடியால், எம்.பி.க்களின் கதி என்ன என்று பார்ப்போம். சமீபத்தில் மோடி தனது அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திக்கும் புகைப்படம் ஒன்றை பத்திரிகைகளில் பார்த்தபோது ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மாவுக்கு முன்னால் ஓ.பி. முதலான அமைச்சர்கள் எப்படி “கையது கொண்டு மெய்யது பொத்தி” அமர்ந்திருப்பார்களோ, அப்படியே இருந்தது. ஒரு வேறுபாடு, அமைச்சர்களைக் காட்டிலும் 2 அடி உயரமான மேடையில் ஒரு ஆதீனத்தைப் போல அமர்ந்திருந்தார் மோடி. அமைச்சர்கள் பள்ளிப் பிள்ளைகள் போல அட்டென்சனில் நின்று பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விசயத்திலும் லேடியை விஞ்சி விட்டார் மோடி.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் என்ற முறையில் முஸ்லிம்களைக் காட்டிலும் மோடியால் வெறுக்கப்படும் எதிரி – ஜனநாயகம். ஆர்.எஸ்.எஸ்-ல் ஜனநாயகம் கிடையாது. அதன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மோடியும்கூட இந்த தேசத்தின் மீட்கும் பொறுப்பை இறைவன் தன் மீது சுமத்தியிருப்பதாகத்தான் கூறிக் கொள்கிறார். மீட்பர்கள் எனப்படுவோர் மற்றவர்களைவிட இரண்டடி உயரத்தில் அமர்வது தானே ஹிந்துப் பண்பாடு. தானே மீட்பன் என்பது இந்த உலகத்துக்கே தெரிய வேண்டுமென்பதற்காகவும், அமைச்சர்களின் மண்டையில் இருக்கக்கூடிய ஆணவ மலத்தை அகற்றும் நோக்கத்துடனும் மேற்படி காட்சியைப் பிரதமர் அலுவலகம் சார்பில் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார் மோடி.

மேற்படி நேர்காணல் ஒன்றில், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம், “நீங்கள் அரசியலுக்கு வந்து சாதித்தது என்ன?” என்று மோடி கேட்டிருக்கிறார். தான் மாணவர் சங்கத்தில் செயல்படத் தொடங்கியதிலிருந்து அவர் விளக்கத் தொடங்க, “உங்கள் பயோ டேட்டாவெல்லாம் எனக்குத் தெரியும்; நீங்கள் சாதித்ததை மட்டும் சொல்லுங்கள்” என்று மோடி மடக்கவே, வாய் குழறித் தடுமாறியிருக்கிறார் சொல்லில் வல்லவரான சுப்ரீம் கோர்ட் வக்கீல் ரவிசங்கர் பிரசாத். இது ஒரு மூத்த அமைச்சரின் நிலைமை என்றால் சாதா எம்.பி.க்களின் நிலை பற்றி சொல்லத்தேவையில்லை.

குஜராத்தில் மோடியின் அமைச்சர்களுடைய கார் ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரையும் மோடிதான் நியமிப்பார்; எல்லா அமைச்சக அதிகாரிகள் நியமனம், மாற்றல் ஆகியவற்றையும் மோடி தான் தீர்மானிப்பார். இது குஜராத் மாடல் பற்றிய ஏற்கெனவே தெரிந்த செய்தி. தற்போது டில்லியிலும் அதே கதைதான். அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றல் தொடர்பானவற்றைத் தீர்மானிப்பது உள்துறை அமைச்சகம் என்று சொல்லப்பட்டாலும், மோடிதான் அனைத்தையும் முடிவு செய்கிறார். கையெழுத்துப் போடுவது மட்டுமே ராஜ்நாத் சிங்கின் வேலை. அவரது கையெழுத்துகூட இல்லாமல் சில நியமனங்கள் நடந்திருப்பது பற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரசார் கேள்வி எழுப்பியதற்கு, “நான் ரொம்ப பிசி; அதனாலத்தான் கையெழுத்து போட முடியலை” என்றார் ராஜ்நாத் சிங். அவையே சிரித்தது. பா.ஜ.க. எம்பி.க்கள் மட்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

குஜராத் மாடல் ஜனநாயகத்தின் இன்னொரு சிறப்பம்சம் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கு அமைச்சர் பெருமக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடை. மோடியால் இதற்கென்றே நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர் மட்டும்தான் ஊடகங்களிடம் பேசலாம். மற்றபடி அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் ஊடகங்களிடம் வாய் திறக்கக்கூடாது; மோடியும் பேசமாட்டார். ஆதீனம் ஏதாவது சொல்ல விரும்பினால், தொலைக்காட்சி நிருபர்களை அழைத்து அருள்வாக்கு சொல்லுவார். அதன் மீது நிருபர்கள் கேள்வி கேட்கக் கூடாது. ஊடகங்களை கையாளும் விசயத்திலும் மோடிக்கும் லேடிக்கும் மில்லி மீட்டர் கணக்கில்தான் இடைவெளி இருப்பதால் யார் முந்துகிறார்கள் என்பதை ஊனக்கண் கொண்டு நம்மால் மதிப்பிட முடியவில்லை.

நீதிமன்றத்தை அவமதிப்பதில் அம்மாவின் சாதனைகளைப் பற்றி தமிழ் வாசகர்களுக்கு விளக்கத்தேவையில்லை. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகளைத் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் புலம்பியிருந்தார். மோடியும் இந்த விசயத்தில் சளைத்தவரல்ல. அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்காக கண்டனத்துக்குள்ளாவது குஜராத்தில் ரொம்ப சகஜமான விசயம் என்று கூறியிருக்கிறார் பிரபல வழக்குரைஞர் (காலம் சென்ற) முகுல் சின்ஹா. சாலைப்பணியாளருக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் வரை அப்பீல் செய்த அம்மாவைப் போலவே, குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதை எதிர்த்தும், முஸ்லிம் மாணவர்களுக்கான கல்விச் சலுகைகளை எதிர்த்தும் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியவர் மோடி. பத்து ரூபாய் பிரச்சினைக்குப் பத்து கோடி செலவு செய்து சுப்ரீம் கோர்ட்டு வரை போவதில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. குஜராத் படுகொலை வழக்குகளில் நீதிமன்றத்தை மோடி கேலிப்பொருளாக்கிய விசயம், அம்மாவின் மகளிரணி நடத்திய அரைநிர்வாண நடனம், கஞ்சா கேஸ் ஆகியவை பற்றி நாடறியும் என்பதால், அவற்றை இங்கே விளக்கவில்லை. சொத்துக்

குவிப்பு வழக்கில் நீதிபதி முதல் அரசு வழக்குரைஞர் வரையில் அனைவரையும் ஓட ஓட விரட்டியவர் ஜெயலலிதா. இருந்தபோதிலும் அம்மா நீதித்துறையை மதித்தார் என்று கட்ஜு கூறியிருப்பதால், இந்த விசயத்திலும் நம்மால் முடிவுக்கு வர இயலவில்லை.

அம்மா தன்னுடைய அமைச்சர்கள் அனைவரையும் உளவுத்துறையை வைத்துக் கண்காணிப்பதைப் போலவே, குஜராத் மாடலிலும் கண்காணிப்பு உண்டு. தற்போது கட்காரி வீட்டில் உளவுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதை என்ன சொல்லி சமாளித்தாலும், குஜராத் மாடல் டெல்லியில் வேலை செய்யத் தொடங்கி விட்டது என்பது கட்காரிக்குப் புரியாமல் இல்லை. மேற்படி விவகாரத்துக்குப் பின்னர் தன்னைச் சந்திக்க வரும் விருந்தினர்கள் பலரை, வீட்டுக்கு வெளியில் கண்காணிப்பில்லாத இடங்களில் காரை நிறுத்தச் சொல்லி, அங்கே அவர்களைக் கள்ளக்காதலர்கள் சந்திப்பது போல கட்காரி சந்திக்கிறார் என்கின்றன ஊடகங்கள்.

கோரிக்கை எவ்வளவு நியாயமாக இருந்தாலும், தனது சொந்தக் கட்சிக்காரர்களே அந்த கோரிக்கைக்காகப் போராடினாலும், மோடி சகித்துக் கொள்ளமாட்டார். குஜராத்தில் மோடி அரசு மின் கட்டணத்தை ஒரே அடியாக நான்கு மடங்கு உயர்த்தியதை எதிர்த்து, பா.ஜ.க.வின் விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் போராட்டம் நடத்தியது. போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பா.ஜ.க.வின் உள்ளூர்த் தலைவர் ஜீத்தாபாய் பட்டேலை வளைத்துப் போட பார்த்தார் மோடி; அவர் மசியவில்லை.

உடனே ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பைத் துண்டித்து, 300 டிரான்ஸ்ஃபார்மர்களை அகற்றியது மோடி அரசு. ஆனாலும், விவசாயிகள் விட்டுக் கொடுக்கவில்லை. உடனே ஜீத்தாபாயின் வீடு மாநகராட்சியால் இடித்துத் தகர்க்கப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ. – விடுதியில் ஒற்றை அறையில் செயல்பட்டு வந்த விவசாயிகள் சங்கத்தின் அலுவலகம் இரவோடு இரவாக காலி செய்யப்பட்டது. அலமாரிகளையும், புத்தகங்களையும் தூக்கி எறிந்த அவர்கள், கோல்வால்கர், ஹெட்கேவார் படங்களையும் எறிந்து விட்டார்கள்” என்று பேட்டியளித்திருக்கிறார் ஜீத்தாபாய்.

“நான்தான் அரசு” என்று கூறிய பதினான்காம் லூயியைப் போல, மோடியும் நான்தான் குஜராத் என்று சொல்பவர்” என்கிறார் ஜே.பி. இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கிரிஷ் படேல். பா.ஜ.க. அரசு என்று தனது டிவிட்டரில் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அடுத்த 30 நிமிடங்களுக்குள் அதனை மோடி அரசு என்று திருத்தி வெளியிட்டதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

“எனக்கு நான்தான் போட்டியாளன். ஏனென்றால் நான் எட்டியிருக்கும் உயரம் மிக அதிகமானது. மோடி 16 மணி நேரம் வேலை செய்கிறார் என்றால், அவர் ஏன் 18 மணி நேரம் வேலை செய்யக்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். மோடியிடமிருந்து மக்கள் ஏராளமாக எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய சாதனைகளை நானேதான் முறியடிக்க வேண்டியிருக்கிறது” என்று மோடி ஒரு பேட்டியில் கூறியிருப்பதைக் காட்டுகிறார் பத்திரிகையாளர் ஆகார் படேல். என்னே தன்னடக்கம்!

“உங்கள் அன்புச் சகோதரி நாளொன்றுக்கு 22 மணி நேரம் உழைக்கிறார்” என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க. பொதுக்குழுவில் மிகுந்த தன்னடக்கத்துடன் அம்மா உரையாற்றியிருக்கிறார். அந்த உரையை மோடி கேட்டதில்லை போலும். இன்றைய தேதியில் லேடி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 25 மணி நேரம் உழைக்கக் கூடும். மோடியால் 24 மணி நேரத்துக்கு மேற்பட்ட உயரத்தைத் தொட்டு அம்மாவை விஞ்ச முடியுமா என்ன, பார்த்து விடுவோம்!

– தொரட்டி
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம்

3

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!

“மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு என்பது வெறும் மொழித்திணிப்பு மட்டுமல்ல; இந்நாட்டின் பல்தேசிய இன மக்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீதான பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பே” என்பதை வலியுறுத்தும் வகையில் 16.07.14 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் பூவிருந்தமல்லி அருகில் உள்ள கரையான் சாவடி கல்யாணி சீனிவாச பத்மாவதி மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கம் நடைபெற்ற முதல் நாள் இரவு முதல் காலை வரை பெய்துகொண்டிருந்த மழையால் மாநகரம் மந்தமாக இருந்தது என்றாலும் புமாஇமு தோழர்கள் மழையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கூட்டத்திற்கான வேலைகளை அதிகாலை முதலே சுறு சுறுப்பாக செய்து கொண்டிருந்தனர். சாலை நெடுகிலும் புமாஇமுவின் கொடிகள் அரங்கத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்க, மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மாநகர் முழுவதும் புமாஇமு வின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தன் வாழ்நாள் இறுதிவரை பார்ப்பனீயத்தை எதிர்த்து போராடிய தந்தை பெரியார் வேடமணிந்த தோழர்கள் இருவர் காலை 9 மணி முதல் கரையான்சாவடியில் நின்று பிரசுரங்களை வினியோகித்து உழைக்கும் மக்களை கருத்தரங்கிற்கு அணிதிரட்டிக் கொண்டிருந்தனர்.

16 -ம் தேதி காலையில் பெய்த மழையினால் மக்கள் இயக்கம் குறைவாக இருந்த கரையான்சாவடி பகுதியில் 10 மணி முதல் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் சாரை, சாரையாக அரங்கத்தை நோக்கி அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர். குறிப்பாக பல்வேறு பள்ளி மாணவர்கள் பள்ளித் தேர்வை பொருட்படுத்தாமல், அரசியல் தேர்வை எதிர்கொள்ளும் துணிவுடன் பள்ளிச் சீருடையுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அரங்கமே நிரம்பி வழிந்தது.

நூற்றுக்கணக்கில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஜனநாயக சக்திகள் நிறைந்திருந்த இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்த பு.மா.இ.முவின் மாநில அமைப்பாளர் தோழர். கணேசன் “மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என பெயர் மாற்றியது என அடுத்தடுத்து தனது பார்ப்பனீய பண்பாட்டு திணிப்பை செய்து வருகிறது. இவையெல்லாம் அடுத்து வரப்போகும் அபாயத்தின் ஒரு முனை. இந்நாட்டிலுள்ள பல்தேசிய இன மக்கள் பேசும் மொழி, பண்பாடு ஆகியவற்றை அழித்து, இந்நாட்டின் வரலாற்றை திரித்து நாட்டையே சமஸ்கிருதமயமாக்குவது – பார்ப்பனீயமயமாக்குவது – இதன் மூலம் அகண்ட பாரதம் என்ற கனவை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நிறைவேற்ற துடிப்பதுதான் பார்ப்பன பாசிச அபாயம்.

மோடி அரசின் இந்தித் திணிப்பைப் பற்றி கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பிரச்சாரம் செய்தபோது சிலர் அப்படி நடந்துவிடுமா என்று நினைத்திருக்கலாம். ஆனால், தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ‘பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாயம் பயிற்று மொழியாக்க வேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நாங்கள் சொன்னது உண்மை என்பதற்கான ஆதாரம் இதுதான். இந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் திட்டத்தை தகர்க்கும் வல்லமை பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டுக்கும், வீரமிக்க தமிழ் மரபுக்கும் தான் உண்டு.

இப்படிப்பட்ட தமிழின் பெருமையை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வு நூலின் மூலம் உலகறியச் செய்து சமஸ்கிருத மயக்கத்தை தெளிய வைத்த தமிழறிஞர் கால்டுவெல்தான். மீண்டும் ஆரிய பார்ப்பன கும்பல் பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தத் தொடங்கி இருக்கும் இத்தருணத்தில் கால்டுவெல்லை போர்வாளாக ஏந்தி உழைக்கின்ற மக்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும்.

1960-களில் இந்தியை திணிக்க முற்பட்ட போது அதை எதிர்த்து பள்ளி, கல்லூரி, வீதிகள் தோறும் போர் முழக்கமிட்டு போர்க்குணமாக போராடியவர்கள் தமிழக மாணவர்கள். இன்றும் அத்தகைய மாணவர் போராட்ட மரபை உயர்த்திப் பிடித்து களம்காண மாணவர்கள் முன்வரவேண்டும். மோடி அரசின் சமஸ்கிருதமயமாக்கம் – பார்ப்பனீயமாக்கம்- அகண்ட பாரத கனவுக்கு சவக்குழி வெட்ட வேண்டும் ” என்று அறைகூவி அழைத்தார்.

அடுத்ததாக, “உயர்தனிச் செம்மொழியாம் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை உயர்த்திப்பிடிப்போம் !” என்ற தலைப்பில் உரையாற்றிய ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முனைவர் ப.முருகையன் அவர்கள், “ஐந்தாயிரம் ஆண்டுகளாக வழக்கில் உள்ள உயர்தனிச்செம்மொழியான தமிழை அழிக்க இந்த மோடி அரசு முயல்கிறது என்றால் அதை செய்யவிடாமல் பார்ப்பன எதிர்ப்பு மரபை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. தமிழை அழிக்க நினைப்பவனின் நாக்கை அறுத்து குடலை எடுக்க வேண்டுமென்று பழங்கால இலக்கியம் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியில் ஒரு விழாவுக்கு மபொசியை அழைத்து, அவ்விழாவிலே தன் பள்ளியில் தமிழ் வழியில்தான் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றது என்று பெருமையாகப் பேசியதையும் அதற்கு பதில் அளித்த மபொசி, “குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்காமல் நாய்ப்பாலையா கொடுப்பார்கள்? தமிழ் வழிக்கல்வி கொடுக்கின்றேன் என்பதை பெருமையாகப் பேசலாமா?” என்று பதிலளித்ததை நினைவுகூர்ந்து, இன்று அரசு ஆரம்பப்பள்ளி முதல் ஆங்கிலவழிக் கல்வியை கொண்டு வந்து தமிழை அழிக்க முயற்சி செய்கிறது என்றார். வெற்றிலைப்பாக்கு வாங்கிவா என்றால் வெற்றிலையும் பாக்கையும் மட்டும் வாங்கி வரும் ஆங்கிலக்கல்வி மாணவர்களையும், வெற்றிலைப்பாக்கு என்றாலே சுண்ணாம்பையும் சேர்த்து வாங்கிவர வேண்டும் என்ற இயல்பான அறிவு பெற்ற தமிழ்வழிக்கல்வி மாணவர்களையும் ஒப்பிட்டு தாய்மொழி இயல்பான அறிவாக இருப்பதையும் விளக்கினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திட்டமிட்டு தமிழ்ச்சுவடிகளை அழித்ததன் மூலம் ஒழுக்கத்தை போதிக்கும் தமிழ் நூல்கள், மருத்துவ நூல்கள் என பலவற்றையும் இல்லாமல் செய்து கொக்கரித்தது ஆரியக்கூட்டம். தமிழரின் வாழ்வியல் முறைகளை அழித்து அதில் பார்ப்பனீயத்தை திணித்ததற்கு எதிராக அன்று முதல் இன்று வரை எத்தனையோ இலக்கியங்கள் தோன்றி தமிழ் என்றால் அது பார்ப்பன எதிர்ப்பு மரபு தான் என்றும், இன்னும் 100 ஆண்டுகளில் அழியப்போகிற மொழிப்பட்டியலில் இருந்து தமிழை மீட்க முடியும் என்ற நம்பிக்கை அரங்கில் இருந்த மாணவர்களைப் பார்க்கும் போது தனக்கு ஏற்பட்டதாகக் கூறினார் முனைவர் முருகையன். தமிழ் இனி மெல்லச்சாகாதிருக்க வேண்டுமென்றால் சூடு சொரணையுடன் என் சாவிலும் தமிழ் மணந்து சாக வேண்டும் என்ற உணர்வுடன் இவ்வளவு காலம் எவ்வாறு பார்ப்பன எதிர்ப்பினை கடைபிடித்தோமோ அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை.சண்முகம், உழைக்கின்ற மக்களால் உருவாக்கப்பட்டு, உயர்வாக்கப்பட்டு , நிலைநிறுத்தப்பட்ட உயர்தனிச்செம்மொழியான தமிழை, தான் பேசுவதிலும் அதை மாணவர்கள் , தொழிலாளர்கள் கேட்பதிலும் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தி “எல்லா ‘கட்’டும் ‘கட்’டல்ல, தமிழுக்காக இன்று அடித்த ‘கட்’டே ‘கட்’” என்று “மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு! பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பே!” என்ற தலைப்பில் தனது சிறப்புரையை தொடங்கினார்.

உயர்தனிச்செம்மொழியான தமிழ் நமது தாய் மொழியாக இருக்கும் போது எழுத்து வடிவமே இல்லாத, உருவாக்கப்பட்ட மொழியான சமஸ்கிருதத்தை அனைவரும் கற்க வேண்டும் என்பது அநியாயம். இது வெறும் மொழிப்பிரச்சினை மட்டுமல்ல. சமஸ்கிருதத் திணிப்பு என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்து ராட்டிர – அகண்ட பாரதம் என்ற அபாயத்தின் ஒரு முனை. அவ்வாறு உணர்ந்து தான் சித்தர்கள் முதல் பெரியார், பகுத்தறிவுவாதிகள், கம்யூனிஸ்டுகள் வரை அந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராகப் போராடினார்கள். 15,000 சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரக்கொண்டாட்டம் என்பது சமஸ்கிருத பண்பாடு, கலாச்சாரத்தை திணிக்கும் தொலை நோக்கான ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தின் முதல்படி.

உழைக்கும் மக்களை சூத்திரன் என்று கூறி அவர்களை அடிமைப்படுத்தி வைத்த பார்ப்பனீயத்தின் கொலைக்கருவிதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்வது என்பது அடிமைத்தனத்தை நாம் விரும்பி ஏற்பதாக அர்த்தம். சூடு சொரணையுள்ள எந்த மனிதனும் ஏற்க மறுக்கும் அடிமைத்தனத்தை நாம் ஏற்க மறுப்பதாலேயேதான் சமஸ்கிருதத்திணிப்பு என்ற பார்ப்பனீயமயமாக்கத்தை எதிர்க்கின்றோம்.

நமது தமிழ் மரபு எப்படிப்பட்டது?

தமிழ் என்றால் இனிமை, எளிமை, நீர்மை என்று பிங்கலந்தை நிகண்டில் எழுதப்பட்டிருப்பதில் இருந்து தமிழை இயற்கையின் மூலமாக வர்ணித்து இருப்பதையும் தமிழோடு சேர்ந்து இருப்பதுதான் கடவுளுக்கே சிறப்பு என்று கவிஞர்கள் கூறியதையும் விளக்கினார். ஒழுக்கம் என்பதை அனைவருக்கும் போதித்து அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக, விரசமின்றி, நயமாக, நாகரீகமாக எடுத்துக்கூறிய தமிழையும் அதன் பண்பாட்டையும் ஒழித்துவிட்டு அந்த இடத்தில் மறைந்து இருந்து கொல்லும் கோழைத்தனத்தையும், ஆபாச இலக்கியத்தையும் மட்டுமே போதிக்கும் பார்ப்பன பண்பாட்டை கொண்டு வந்து வைப்பதுதான் மோடியின் திட்டம். இந்தப் பின்னணியில் இருந்து வரும் எதிரியை வீழ்த்த நாம் தமிழின் பெருமைகளையும் அதன் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இலட்சக்கணக்கான மக்கள் பேசக்கூடிய கோண்டு மொழியும், சந்தால் மொழியும் அட்டவணையில் இல்லை. 1961-ல் கணக்கெடுப்பின் போது 2,500 பேர் மட்டுமே பேசிய மொழியான சமஸ்கிருதம் 1962-ல் மொழிகளுக்கான அட்டவணையில் இணைக்கப்பட்டது என்றால் அது அதிகாரவர்க்கத்தின் மொழி என்பதால்தான். அதனால்தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே செம்மொழியாகவும் சமஸ்கிருதம் ஆக்கப்பட்டது. உயர்தனிச் செம்மொழியான தமிழைக் காக்க வெண்டுமென்றால் தமிழ்ப் பண்பாட்டை காக்க வேண்டுமென்றால் பார்ப்பன எதிர்ப்புப் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.அந்த மொழிப்போரில் நெஞ்சில் குண்டேந்தி சுயமரியாதை உணர்ச்சியுடன் இந்தியை திணித்ததற்கு எதிராக பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் போராடி வென்றதுதான் தமிழ் மரபு. அந்த மரபை, வர்க்க உணர்வுடன் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கையிலேந்த வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

பார்ப்பன பண்பாட்டை அம்பலப்படுத்தும் வகையில் ம.க.இ.க வின் புரட்சிகர பாடல்கள் பு.மா.இ.மு தோழர்களால் பாடப்பட்டன. மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டத்தின் இறுதி வரை இருந்து ஆர்வமாக கவனித்தனர். பல மாணவர்கள் பேச்சாளர்களின் பேச்சை குறிப்பெடுத்த வண்ணம் இருந்தனர். செஞ்சட்டை தோழர்களின் பிரச்சாரத்தால் அணிதிரண்டு வந்த மாணவர்களுக்கு இக்கருத்தரங்கம் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் உணர்வூட்டப்பட்ட மாணவர் படையாக களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது.

அரங்கத்தில் இருந்த புத்தகக் கடையில் மாணவர்களும், இளைஞர்களும் ஆரம்பத்திலிருந்தே புத்தகங்களை ஆர்வமாக வாங்கினர். பு.மா.இ.மு தொடர்பு அலுவலகத்தில் பல மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து உறுப்பினரானார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களை ரவுடிகள் , பொறுக்கிகள், விட்டேத்திகள் என அரசும், ஊடகங்களும் சித்தரிப்பது எவ்வளவு பொய் என்பதற்கு இவையெல்லாம் ஒரு சான்று.

**** **** **** ****

ழைக்கும் மக்களே, நண்பர்களே,

மிகப்பெரிய ஜனநாயக அரசு என பீத்திக்கொள்வதன் யோக்கியதையைப் பாரீர்…

இந்த நாட்டில் ‘குடிமக்கள் அனைவருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருப்பதாக’ யாராவது கருதினால் இந்த சம்பவங்களை படித்து புரிந்துகொண்டு உண்மையான ஜனநாயக உரிமைகளுக்காக போராட வாருங்கள்.

உண்மையிலேயே ஜனநாயக உரிமை உள்ளதென்றால், கூட்டம் நடத்துவதற்கும், எமது கருத்தை சொல்வதற்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், இந்த அரசமைப்பில் அப்படி ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன, என்றாலும், இரண்டு சம்பவங்களை மட்டும் சொல்கிறோம்.

சம்பவம் – 1

பா.ஜ.க ஆட்சிக்கும், மோடி பிரதமராவதற்கும் முன்னால் குஜராத் மாடல் வளர்ச்சி என்று பா.ஜ.க கூவியதையும், காவி பயங்கரவாதம் கார்ப்பரேட் பயங்கரவாதத்துடன் இணைந்து உழைக்கும் மக்களை கூறுபோட துடிப்பதையும் அம்பலப்படுத்தி எமது புரட்சிகர அமைப்புகள் சார்பில் 6 மாதங்களுக்கு முன்னாள் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தர்ம பிரகாஷ் என்ற மண்டபத்தில் “மோடி வளர்ச்சி எனும் முகமூடி” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டு கூட்டம் நடத்தியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

ஒரு தனியார் இடத்தில் கூட்டம் நடத்த போலீசு அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், அக்கூட்டத்திற்கு தர்ம பிரகாஷ் மண்டப உரிமையாளர் கோரியபடி முறையான போலீசு அனுமதி பெற்றுக் கொடுத்துத்தான் கூட்டம் நடத்தினோம். கூட்டத்தின் முதல் நாளில் தொடங்கி, கூட்டம் முடிந்த அடுத்த நாள் வரை மண்டப உரிமையாளரை ஐ.எஸ் எனும் உளவுத்துறை போலீசார் மிரட்டியுள்ளனர். அப்போது மண்டப உரிமையாளர் போலீசாரிடம், “உங்களிடம் முறையான அனுமதி பெற்று வந்த பின்புதான் சார் நான் பணம் வாங்கினேன்” என்று சொல்ல அதற்கு உளவுப் போலீசார் “இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நாங்க அனுமதி கொடுத்தாலும் புரட்சினு பேசுற இவங்கள மாதிரி அமைப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது, மீறி கொடுத்தா அதற்கான விளைவை நீ அனுபவிக்க வேண்டி வரும்” என்று நேரடியாக மிரட்டியுள்ளனர்.

தற்போது சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான கூட்டத்திற்கு இடம் கேட்டுச் சென்றபோது அமைப்பு பெயரைக் கேட்டு உளவு போலீசு மிரட்டியதையெல்லாம் சொல்லி தேதி காலியாக இருந்தாலும் இடம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார், மண்டப உரிமையாளர்.

சம்பவம் -2

மஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான இந்தக் கருத்தரங்கத்திற்கு இடம் பார்க்க சென்ற போது போலீசு நெருக்கடி, பணம் நெருக்கடியால் பல இடங்கள் கிடைக்காமல் போக, இறுதியாக கரையான் சாவடியில் கல்யாணி சீனிவாச பத்மாவதி மண்டபத்தில் முழுமையாக பணம் கட்டி இடத்தை பதிவு செய்தோம். பிரசுரத்தில் இடத்தை அறிவித்து பிரச்சாரமும் செய்தோம்.

இதைத் தெரிந்து கொண்ட உளவு போலீசு மண்டபத்தின் நிர்வாகத்தினரிடம் சென்று இடம் கொடுக்கக் கூடாது என்று 13-ம் தேதி மிரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மண்டப நிர்வாகி எமது தோழரை தொடர்பு கொண்டு  “15-ம் தேதி காலை முகூர்த்தத்திற்கு இடம் கொடுத்திருந்தேன். அவர்கள் அடுத்த நாளும் கேட்டார்கள். நான் மறந்துபோய் உங்களிடம் பணம் வாங்கிவிட்டேன். நீங்கள் உங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நாம் அவரிடம் “இடம் பதிவுசெய்த போது காலண்டரை பல முறை பார்த்து எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று உறுதிபடுத்திக்கொண்டுதானே முழு வாடகையும் பெற்றுக்கொண்டு பதிவு செய்தீர்கள். இப்போது மாத்திப் பேசுறீங்களே, நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோமே” என்றதும்,

“ஏற்பாடு பணத்தையும் நான் கொடுத்து விடுகிறேன், வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

“அப்படி முடியாது” என்று உறுதியாக மறுத்த போது,

“நான் மாப்பிள்ளையுடன் பேசி விட்டு உங்களை தொடர்புகொள்கிறேன்” என்றவர் திரும்ப பேசவில்லை.

முதல் நாள் அப்படியொரு திருமண நிகழ்ச்சி இருப்பதாக அவர் அன்று சொல்லவில்லையே, இதில் வேறு ஏதோ பிரச்சனை உள்ளது என்று கருதி இது பற்றி மண்டப உரிமையாளரிடம் நேரில் சென்று பேசும் போதுதான் தெரிகிறது, அப்படி ஒரு திருமண நிகழ்ச்சியே இல்லையென்பது. அந்த நடக்காத திருமணத்தின் பெயரால் எமது கூட்டத்தை தடுக்க முயற்சி செய்த மாப்பிள்ளை வேறு யாருமல்ல ஐ.எஸ் எனும் உளவுத்துறை போலீசுதான்.

நாம் கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருந்ததால் மாப்பிள்ளைகள் கருத்தரங்க கூட்டத்தினை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள். பார்ப்பனீயத்துக்கு அரசு மாமா வேலைப் பார்க்கும் போது போலீசு தானே மாப்பிள்ளையாக இருக்க முடியும். நிற்க, நடக்க, பேச என எதற்கும் உரிமை இல்லை. நடப்பதெல்லாம் பாசிச ஆட்சி, யாரை ஏமாற்ற ஜனநாயக ஆட்சி என்ற பெயர்?

இதுதான் இந்த ஜனநாயக அரசு என்பதன் யோக்கியதை. கார்ப்பரேட் முதலாளிகள் இந்நாட்டைக் கூறு போட்டு கொள்ளையடிக்கவும், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஓட்டுக் கட்சிகள் கூட்டம் போட்டு அதை நியாயப்படுத்தவும் , பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் மதவெறியாட்டம் போட்டு உழைக்கும் மக்களை கொள்ளுபவர்களுக்குமான ஜனநாயகம்தான் இங்குள்ளதே தவிர, இந்த அநீதிகளை எதிர்த்துப் பேசவும், எழுதவும், போராடவுமான உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம் இல்லை என்பதை மக்கள் எங்கள் அனுபவம் மூலமாக மட்டுமல்ல உங்கள் சொந்த அனுபவம் மூலமாகவே கூட உணரமுடியும். இப்படி உணருகின்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் போதுதான் உண்மையான ஜனநாயகத்தை படைக்க முடியும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவ – இளைஞர் முன்னணி,

சென்னை.

9445112675