Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 638

கருவாடு – டீசர்

15

வினவு

உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வழங்கும்

கருவாடு

விரைவில்………….

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

1

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. ரவுடிகளை வீழ்த்திய பு.ஜ.தொ.மு – புதுச்சேரி வரலாற்றில் புதிய திருப்பம் !

2. குண்டர் சட்டத் திருத்தம் : திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம் !

3. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம்…. அம்மா சாராயம் எப்போது?
அம்மா திட்டங்கள் அனைத்தும் தனியார்மயக் கொள்ளைக்கு எதிராக மக்களின் கோபம் வெடித்துவிடாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வால்வுகள்.

4. ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?
சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழ் மட்டுமே அறிக்கை வாசிக்கும் அம்மா; நாடாளுமன்றத்தில் காட்சி தருவதற்குக் கூட நேரமில்லாத செயல்வீரர் மோடி; சபாஷ், சரியான போட்டி!

5. உணவு மானியம் : மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!
உலக வர்த்தகக் கழகக் கூட்டத்தில் ஏழை விவசாயிகளின் நலன் பற்றிப் பொளந்து கட்டிய மோடி அரசு, உள்நாட்டில் மானியங்களை வெட்டுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது.

6. நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் : தனியார்மயம் – காவிமயத்துக்கு ஏற்ப நீதித்துறை மறுவார்ப்பு!
இச்சட்டத்தால் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. மாறாக, மோடி அரசு நீதித்துறையைக் காவிமயமாக்குவதற்கு மட்டுமே பயன்படும.

7. கால்டுவெல் : சமஸ்கிருத ஆதிக்கம், இந்துத்துவத் திணிப்புக்கு எதிரான போர்வாள்!

8. பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு : பொதுத்துறையைப் பாதுகாக்காமல் வேலையை மட்டும் பாதுகாக்க முடியுமா?
இத்தனியார்மயத் தாக்குதலை எதிர்த்து தொழிலாளர்கள் கலகத்தில் இறங்காமல், அமைதியாக இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது.

9. மணிப்பூர் : இராணுவத்தின் குற்றத்தை விசாரிப்பவனும் குற்றவாளியாம்?

10. சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகள் : இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் இஸ்லாமிய சர்வதேசியம், முஸ்லிம் மக்களையே பிளவுபடுத்துவதுடன் அவர்களை மத்தியகால அடிமைத்தனத்திற்குள்ளேயும் தள்ளிவிடும்.

11. வண்ணப் புரட்சிகள் : “மேட் இன் அமெரிக்கா!”
அமெரிக்கா தனது இராணுவத்தைக் கொண்டு மட்டுமல்ல, சர்வதேசத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டும் ஆட்சி மாற்றங்களை நடத்தியிருக்கிறது, நடத்தும்.

12. பன்னாட்டு முதலாளிக்கு சுதந்திரம் ! பணிபுரியும் தொழிலாளிக்கு குண்டாந்தடி!!

13. முகேஷ் அம்பானி, லட்சும மிட்டல், திலிப் சாங்வி, அஸிம் பிரேம்ஜி, பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி :
கோடீசுவரக் கொள்ளையர்கள்!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்

19

இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 1

ராமன், வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தின் கதைத் தலைவன். இராமாயணக் கதையே மிகச் சுருக்கமானது தான். இராமாயணக் கதை எளியது, நயமானது என்பது தவிர வேறு சிறப்பு எதுவும் அதில் இல்லை.

டாக்டர் அம்பேத்கர்
டாக்டர் அம்பேத்கர்

தற்காலத்தில் வாரணாசி என வழங்கும் அயோத்தியை ஆண்டு வந்த மன்னன் தசரதனின் மகன் இராமன். தசரதனுக்கு கௌசல்யா, கைகேயி, சுமித்ரா என மனைவியர் மூவர் இருந்தனர். இவர்களைத் தவிர நூற்றுக்கணக்கான வைப்பாட்டிகளைத் தசரதன் தன் ஆசை நாயகிகளாக கொண்டிருந்தார். கைகேயி தசரதனைத் திருமணம் செய்து கொண்ட போது இன்னதென்று குறிப்பிடாத ஒரு நிபந்தனையை விதித்திருந்தார். கைகேயி விரும்பிக் கேட்கும்போது மன்னன் தசரதன் அவள் விரும்பியதை நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

தசரதனுக்கு நெடுங்காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்தது. தனக்குப் பின் ஆட்சி பொறுப்பேற்பதற்கு ஒரு வாரிசு தேவையென்று தசரதன் பெரிதும் விரும்பினார். தன்னுடைய மனைவியர் மூவர் மூலமாக ஒரு மகன் பிறப்பான் என்ற நம்பிக்கை இல்லாமற் போனதால், பிள்ளைப் பேற்றுக்காக புத்திர காமேஷ் யாகம் நடத்த முடிவு செய்தார். அதன்படி சிருங்கன் என்னும் முனிவரை அழைத்து யாகம் வளர்த்து அதன் முடிவில் மூன்று பிண்டங்களைப் பிடித்துத் தன் மனைவியர் மூவருக்கும் கொடுத்து உண்ணச் செய்தார். அப்பிண்டங்களை உண்ட மூவரும் கருத்தரித்துப் பிள்ளைகளைப் பெற்றனர். கௌசல்யா இராமனைப் பெற்றாள். கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்ராவுக்கு இலட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய இரட்டையர் பிறந்தனர்.

இவர்கள் வளர்ந்து பிற்காலத்தில் இராமன் சீதையை மணந்தான். இராமன் ஆட்சிப் பொறுப்பேற்கும் வயதை அடைந்த போது இராமனுக்கு முடிசூட்டி மன்னர் பதவியில் அமர்த்தி விட்டு, தான் அரசு பொறுப்பிலிருந்து விலகி ஓய்வு எடுத்துக் கொள்ளலாமென்று தசரதன் எண்ணினான். இந்த வேளையில், தன் திருமணத்தின் போது தசரதன் தனக்கு வாக்களித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றித் தருமாறு கைகேயி பிரச்சினையைக் கிளப்பினாள். மன்னன் அவளுடைய விருப்பம் யாது எனக் கேட்டபோது, இராமனுக்குப் பதிலாக தன் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும், இராமன் 12 ஆண்டுகள் காட்டில் வனவாசம் செய்ய வேண்டும் என்று கைகேயி கூறினாள். மிகுந்த சஞ்சலத்திற்குப் பின் தசரதன் அவளது விருப்பத்தை நிறைவேற்ற இசைந்தான். பரதன் அயோத்தியின் மன்னனானான். இராமன் தன் மனைவி சீதையோடும் தன் சிற்றன்னையின் மகன் இலட்சுமணனோடும் வனவாசம் போனான்.நயவஞ்சகன் ராமன்

இவர்கள் மூவரும் காட்டில் வாழ்ந்திருந்த போது இலங்கையின் மன்னன் இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு போய் அவளைத் தன் மனைவியருள் ஒருத்தியாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் அரண்மனையில் வைத்தான். காணாமற்போன சீதையை இராமனும், இலட்சுமணனும் தேடத் தொடங்கினர். வழியில் வானர இனத் தளபதியான சுக்ரீவனையும், அனுமானையும் சந்திக்கின்றனர். அவர்களோடு தோழமை கொள்கின்றனர். அவர்களுடைய உதவியுடன் சீதை இருக்குமிடத்தை அறிகிறார்கள். இலங்கை மீது படையெடுத்து இராவணனுடன் போரிட்டுத் தோற்கடித்து சீதையை மீட்டு வருகின்றனர். இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் அயோத்திக்குத் திரும்புகின்றனர். அதற்குள் கைகேயி விதித்திருந்த 12 ஆண்டு கெடு முடிந்து விடுகின்றது. அதன்படி பரதன் பதவி விலகுகிறான். இராமன் அயோத்தியின் மன்னனாகின்றான்.

வால்மீகி கூறும் இராமாயணக் கதையின் சுருக்கம் இதுதான்.

இராமன் வழிபட்டு வணங்குவதற்கு உரியவன் என்னும் அளவிற்கு இந்தக் கதையில் எதுவுமில்லை. இராமன் கடமையுணர்வுள்ள ஒரு மைந்தன், அவ்வளவுதான். ஆனால் வால்மீகியோ, இராமனிடம் தனிச்சிறப்பான அருங்குணங்கள் உள்ளதெனக் கருதி அவற்றை சித்தரித்துக் காட்ட விரும்புகிறார். அவர், நாரதரிடம் கேட்கும் கேள்வியிலிருந்து இந்த விருப்பம் புலப்படுவதைக் காணலாம் (பால காண்டம், சருக்கம் 1, சுலோகங்கள் 1-5):

‘’நாரதா, நீயே சொல் – இன்றைய உலகில் உயர் பண்புகள் நிறைந்தவன் யார்?’’ – இது வால்மீகி கேள்வி, அவர் கருதும் உயர் பண்புகள் எவை என்பது பற்றி விளக்குவதாவது:

‘’வல்லாண்மையுடைமை, மதத்தின் நுட்பங்களை அறிந்திருத்தல், நன்றியுடைமை, உண்மையுடைமை, சமய ஆச்சாரங்களை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட விரதங்களை உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழந்து துன்புற நேர்ந்த போதிலும் கைவிடாமை, நல்லொழுக்கம், அனைவரின் நலன்களையும் காப்பதற்கு முனைதல், தன்னடக்கத்தால் எவரையும் கவர்ந்திழுக்க வல்ல ஆற்றல், சினம் காக்கும் திறம், பிறர்க்கு எடுத்துக்காட்டாக விளங்குதல், பிறராக்கம் கண்டு அழுக்காறு கொள்ளாமை, போர்க்களத்தில் கடவுளர்களை கதிகலங்கச் செய்யும் பேராற்றல்’’ ஆகியவை.இதுதாண்டா ராமாயணம்

இவற்றைக் கேட்டு ஆழ்ந்து யோசித்துப் பதில் சொல்வதற்கு சற்று கால அவகாசம் கேட்ட நாரதர், இந்தப் பண்புகளையெல்லாம் பெற்றிருப்பவன் என்பதற்கு தக்கவன் தசரத குமாரன் இராமன் ஒருவனே என்கிறார்.

இந்தப் பண்புகளையெல்லாம் பெற்றிருப்பதால் தான் இராமன் தெய்வமாகப் போற்றிப் பூசிக்கத் தக்கவனாகின்றான் என்கின்றனர்.

ஆனால் இராமன் இத்தகைய பூசனைக்குத் தக்கவனா? இராமனுடைய பிறப்பே அதிசயமாக உள்ளது. சிருங்க முனிவரும் கௌசல்யாவும் கணவன், மனைவி என்ற உறவு கொண்டிருக்கவில்லையாயினும் இந்த முனிவன் மூலம் தான் கௌசல்யா இராமனைப் பெற்றெடுத்தாள் எனத் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மையை மூடி மறைப்பதற்காகவே சிருங்க முனிவன் பிடித்துக் கொடுத்த பிண்டத்தின் மூலம் கௌசல்யா இராமனைப் பெற்றெடுத்தாள் என்று சொல்லப் பட்டிருக்கலாம். இராமனுடைய பிறப்பில் களங்கம் எதுவுமில்லை என்று வாதிக்கப்பட்ட போதிலும், அவனது தோற்றம் இயற்கைக்கு முரணானது என்பது உறுதியாகின்றது.

இராமனுடைய பிறப்புத் தொடர்பான மறுக்க முடியாத அருவெறுப்பான வேறு பல நிகழ்ச்சிகளும் உள்ளன.

இராமாயணக் கதையின் தொடக்கத்திலேயே தசரதனின் மகன் இராமனாகப் பிறப்பதற்கு உடன்பட்டும் அதன்படி விஷ்ணுவே இராமனாக அவதரித்ததாக வால்மீகி கூறுகிறார். இதனைப் பிரம்மதேவன் அறிகின்றான். விஷ்ணு இராமாவதாரம் எடுத்துச் சாதிக்கவிருக்கும் காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடிய வேண்டுமானால் அவனோடு ஒத்துழைத்து உதவக் கூடிய வல்லமை மிக்க துணைவர்கள் இருக்க வேண்டும் என்பதையும் பிரம்மன் உணர்கின்றான். ஆனால் அத்தகைய துணைவர்கள் எவரும் அப்போது இருக்கவில்லை.

இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக கடவுள்கள், பிரம்ம தேவனின் கட்டளையை ஏற்று விலைமாதர்களான அப்சரசுகள் மட்டுமின்றி யக்ஷர்கள், நாகர் ஆகியோரின் மணமாகாத கன்னிப் பெண்கள் மட்டுமின்றி முறையாக மணமாகி வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் ஆகியோரின் மனைவியரையும் கற்பழித்து, இராமனுக்கு துணையாக அமைந்த வானரர்களை உருவாக்கினர்.

இத்தகைய வரம்பு மீறிய ஒழுக்கக்கேடானது இராமனுடைய பிறப்பு அல்ல என்றாலும், அவனுடைய துணைவர்கள் பிறப்பு அருவெறுப்புக்குரியது. இராமன், சீதையை மணந்ததும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. பௌத்தர்களின் இராமயணத்தின்படி சீதை, இராமனின் சகோதரியாவாள். சீதையும், இராமனும் தசரதனுக்கு பிறந்த மக்கள். பௌத்த இராமாயணம் கூறும் இந்த உறவு முறையை வால்மீகி இராமாயணம் ஏற்கவில்லை. வால்மீகியின் கூற்றுப்படி விதேக நாட்டு மன்னனான ஜனகனின் மகள் சீதை என்றும், அவள் இராமனுக்கு தங்கை உறவு உடையவள் அல்ல என்றும் ஆகின்றது. சீதை ஜனகனுக்கு பிறந்த மகள் அல்லவென்றும், உழவன் ஒருவன் தன் வயலில் கண்டெடுத்து ஜனகனிடம் அளித்து வளர்க்கப்பட்ட வகையிலேயே சீதை ஜனகனுக்கு மகளானாள் என்றும் கூறப்பட்டிருப்பதால் வால்மீகி இராமாயணத்தின் படியே கூட சீதை, ஜனகனுக்கு முறையாகப் பிறந்த மகள் அல்ல என்றாகிறது. எனவே பௌத்த இராமாயணம் கூறும் கதையே இயல்பானதாகத் தோன்றுகின்றது.

இந்துத்துவ வானரங்கள்
டிசம்பர் 6, 1992 பாபர் மசூதியை இந்துத்துவா வானரங்கள் தரைமட்டமாக்கிய போது

அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்கு தக்கது அல்ல எனலாம். இராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.

இனி இராமன் ஒரு மன்னன் என்ற அளவிலும், ஒரு தனி மனிதன் என்ற முறையிலும் அவனுடைய குணநலன்களைக் காண்போம். இராமன் ஒரு தனி மனிதன் என்ற வகையில் அவனுடைய வாழ்வின் இரு நிகழ்ச்சிகளை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று வாலி தொடர்புடையது; மற்றொன்று இராமன் தன் மனைவி சீதையை நடத்திய விதம் பற்றியது. முதலில் வாலி தொடர்பான நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

வாலி, சுக்ரீவன் ஆகிய இருவரும் சகோதரர்கள். கிஷ்கிந்தையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வானர இனத்தைச் சேர்ந்தவர்கள். இராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போன போது, வாலி கிஷ்கிந்தையை ஆண்டு கொண்டிருந்தான். இதற்கு முன் வாலி மாயாவி என்று இராட்சசனோடு போரிட நேர்ந்தது. வாலி-மாயாவி ஆகியோருக்கு இடையே நடந்த போரில் மாயாவி தப்பிப் பிழைத்தால் போதுமென்று தோற்று ஓடினான். வாலியும், சுக்ரீவனும் மாயாவியை துரத்திச் சென்றனர்.

மாயாவி ஒரு மலைப் பிளவில் ஓடி ஒளிந்து கொண்டான். வாலி, சுக்ரீவனை அந்தப் பிளவின் வாயிலில் நிற்கச் சொல்லி விட்டு உள்ளே சென்றான். சற்று நேரத்திற்குப் பின் அந்தப் பிளவிலிருந்து உதிரம் வடிந்தது. இதைக் கண்ட சுக்ரீவன் தன் அண்ணன் வாலி மாயாவியால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தானே முடிவு செய்து கொண்டு, கிஷ்கிந்தைக்குத் திரும்பி வந்து தன்னை அரசனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தனக்கு தலைமை அமைச்சனாக அனுமனை நியமித்துக் கொண்டு அரசாளத் தொடங்கினான்.

ஆனால் வாலியோ உண்மையில் கொல்லப்படவில்லை. வாலியால் மாயாவிதான் கொல்லப்பட்டான். மாயாவியை கொன்றுவிட்டு, மலைப்பிளவிலிருந்து வெளிவந்த வாலி, தான் நிற்கச் சொன்ன இடத்தில் தம்பி சுக்ரீவன் இல்லாததை அறிந்து கிஷ்கிந்தைக்குச் செல்கிறான். அங்கு சுக்ரீவன் தன்னை மன்னனெனப் பிரகடனப் படுத்திக் கொண்டு ஆட்சி செய்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றான். தன் தம்பி சுக்ரீவன் செய்த துரோகத்தை எண்ணிய வாலிக்கு இயல்பாகவே கடுங்கோபம் ஏற்படுகின்றது.

மலைப் பிளவில் வாலிதான் கொல்லப்பட்டானா என்பதைத் தெரிந்து கொள்ள சுக்ரீவன் முயன்றிருக்க வேண்டும். வாலிதான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தானாகவே அனுமானித்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வாலியே கொல்லப்பட்டிருந்தாலும் வாலியின் முறைப்படியான வாரிசாக உள்ள அவனுடைய மகன் அங்கதனையே அரியணையில் அமர்த்தி இருக்க வேண்டியது சுக்ரீவனின் கடமை. இந்த இரண்டில் எதையும் செய்யாத சுக்ரீவனின் செயல் அப்பட்டமான அபகரிப்பே ஆகும். எனவே வாலி, சுக்ரீவனை விரட்டிவிட்டு மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் அண்ணனும் தம்பியும் பரம எதிரிகளாகின்றனர்.

இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த சில காலத்திற்கு பின், காணாமற் போன சீதையைத் தேடிக் கொண்டு இராமனும், இலக்குவனும் காடு, மலைகளில் சுற்றித் திரிகின்றனர். அதே வேளையில் சுக்ரீவனும் அவனுடைய தலைமை அமைச்சன் அனுமனும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவக்கூடிய நண்பர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத வகையில் இவ்விரு அணியினரும் காட்டில் சந்திக்கின்றனர். இரு அணியினரும் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைப் பறிமாறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு இடையே ஓர் உடன்பாடு ஏற்படுகின்றது. அதன்படி, சுக்ரீவன் தன் சகோதரனான வாலியைக் கொன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இராமன் உதவிட வேண்டும், அதே போல காணாமற்போன தன் மனைவி சீதையை இராமன் பெறுவதற்கு வானரர்களான சுக்ரீவனும், அனுமனும் உதவிட வேண்டும் என்று முடிவாகின்றது.

வாலியை கோழைதனத்துடனும், பேடித்தனத்துடனும் மறைந்ந்து நின்று கொன்ற குற்றவாளி தான் ராமன்
வாலியை கோழைத்தனத்துடனும், பேடித்தனத்துடனும் மறைந்து நின்று கொன்ற குற்றவாளி தான் ராமன்

வாலியும், சுக்ரீவனும் தனிப் போரில் ஈடுபட வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். இவர்கள் இருவரும் வானரர்கள் ஆதலால் சுக்ரீவன் யார், வாலி யார் என்று அடையாளம் கண்டு கொள்வதற்கு சுக்ரீவன் தன் கழுத்தில் ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் போரிடும்போது, இராமன் ஒளிந்திருந்து அம்பு எய்தி வாலியைக் கொன்று விட வேண்டும் என்று திட்டம் வரையறுக்கப்படுகின்றது. இதன்படியே வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுகின்றனர். சுக்ரீவன் கழுத்தில் மாலையை அணிந்து கொண்டிருந்தான். மரத்தின் பின்னால் மறைந்திருந்த இராமன் வாலியை அடையாளம் கண்டு அம்பு எய்கிறான். அதனால் வாலி இறக்கின்றான்.

இதன் மூலம் சுக்ரீவன் கிஷ்கிந்தைக்கு அரசனாகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. வாலியின் படுகொலை இராமனுடைய நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். இராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து இராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும். நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற இராமனின் செயல் கோழைத்தனமானதும், பேடித்தனமானதுமாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்.

இனி இராமன் தன் சொந்த மனைவியான சீதையை நடத்திய விதத்தை காண்போம்.

(தொடரும்…)

(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர், பக். 449 – 481)

மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்

1

ரசியலிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்றோ உலகமயமாக்கத்தின் அதிவேகத்தில் அழிக்கப்பட்டும் வருகின்றன. அதேபோல இலக்கியம், இன்னபிற கலை வடிவங்களிலும், இந்தியாவின் பெரும்பான்மையான விவசாய மக்கள் இடம்பெறுவதில்லை. இடம்பெறும்போது காட்சிப் பொருளாகவும், மலிவான ரசனையாகவும் – கலை வியாபாரிகளால் விற்கப்படுகின்றனர்.

இந்திய மக்களின் விடுதலை வழி – பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஆயுதந்தாங்கிய விவசாயிகளின் எழுச்சியினால் விடுவிக்கப்படும் கிராம்பபுறங்களிலே இருக்கிறது என முழங்கியவாறு 1969-ல் பிறந்தது, நக்சல்பாரி இயக்கம். அதில், விவசாய மக்களுடன் நகர்ப்புற நக்சல்பாரிக் கலைஞர்கள் இணைந்து ஆரம்பித்த ஓர் இலக்கியப் பயணத்தை இங்கே தருகிறார் சுமந்தா பானர்ஜி. நானே சகலமும் என்ற நகர்ப்புற மேட்டிமைத்தனத்தை உதறி, கிராமத்தின் மொழியை, அறிவை, கலையைக் கற்றுக் கொண்டு, தங்களின் அரசியல் இலட்சியத்தை வடிக்கச் செய்த அந்த முயற்சி எந்த வரலாற்றிலும் அழுத்தமாக இதுவரை பதியவில்லை. அந்தப் பயணத்தின் வரலாற்றைத் தருகிறார், பத்திரிக்கையாளர் சுமந்தா பானர்ஜி.

***

சுப்பாராவ் பாணிகிரஹி
சுப்பாராவ் பாணிகிரஹி

லைஞனுக்கும் மக்களுக்கும் இடையே, இந்திய நகர்ப்புறப் படைப்பாளிகளுக்கும் நாட்டுப்புற ஏழைகளுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி பெரிய கடல் அளவு விரிந்துவிட்டது. அதைக் குறைக்கவோ, உடைத்தெறியவோ முயற்சிகள் மிகக் குறைவாகவே நடக்கின்றன.

மேற்கத்திய கலை, கலாச்சாரம் நமது கலை, இலக்கியத்தின் மீது மயக்கு வலை வீசி வருகிறது; நமது படைப்பாளி அதன் முன்னே பலமிழந்து போய் நிற்கிறான்; அதையே தனது இலக்கியத்திலும் போலி செய்து உருவாக்க முயலும் போது, பெரும்பாலான மக்கள் தன்னைக் காது கொடுத்துக் கேட்பது கூட இல்லை என்பதை உணர்கிறான்; மெல்ல மெல்ல ஒரு சிறு வட்டத்துக்குள்ளே சுருங்கிப் போகிறான்; அதிலேயே மன நிறைவடைந்தும் போகிறான்.

இதற்கு மாறாக, சமூக உணர்வுள்ள கலைஞனோ மேலும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். புதிய சமுதாயத்தைப் படைக்க முனையும் ஓர் குடிமகனாகவும், அதே சமயம் தற்போது ஆளும் வர்க்கத்தின் நிறுவனத்துக்குள்ளே சார்ந்தும் முரண்பட்டும் வாழ்பவனாகவும் இருக்கிறான். இதனால் ஒருவித குற்ற உணர்வு அவனுக்குள்ளே தோன்றுகிறது; இரட்டை உணர்வுகளுக்கு அவன் ஆட்படுகிறான்.

ஒருபக்கம் பாரம்பரியத்தின் நிலைக்களானான நிலப்பிரபுத்துவ கிராமச் சமூகத்தின் அழிவு; மறுபுறம் அதே சமுதாயம் உருவாக்கிய பாரம்பரியக் கலை வடிவங்கள் -புதியனவற்றைப் படைக்க விருபும் கலைஞன் இந்த முரண்பாட்டில் சிக்கித் தவிக்கிறான்.

இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தில் தாகூர் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். நாட்டுப்புறக்கலை, கலாச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவர் ‘பாவுல்’, ‘படியாலி’, ‘சாரி’ போன்ற இசை மெட்டுக்களில் பாடல்களை எழுதினார். இந்தப் பாடல்கள் வங்காளத்தில் உள்ள எல்லா மத்தியதர வர்க்கக் குடும்பங்களிலும் இன்றும் பாடப்படுகின்றன. இதில் உள்ள வேடிக்கை – சாந்தி நிகேதனத்திலிருந்து (தாகூர் ஆசிரமம்) ஒரு சில மைல் தொலைவில் உள்ள பிர்பூம் மாவட்டக் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு அந்தப் பாடல்களில் ஒன்று கூடத் தெரியாது. விவசாயிகளுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத சொற்களும், பாடல் வடிவமும் தான் காரணமாக இருக்க வேண்டும்; அல்லது இப்பாடல்களைப் பாடும் நடுத்தர வர்க்கம் இவற்றைக் கிராமத்துக்குக் கொண்டு செல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இவையெல்லாம் விவசாயிகளுக்குப் புரியாது என்று சொல்லித் தப்பித்துவிட முடியாது. நமது நாட்டுப் பாடல்களில் எத்தனையோ நெடியகதைகள், புராணக் கதைகளை ஒப்பிட்டுச் சொல்லும் உருவகங்கள், பருவகால மாற்றம் – சடங்குகள் – இன்னும் எத்தனையோ தொகுக்கப்படுகின்றன; அவர்களும் எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்.

எனவே, இடைவெளி, உயர்ந்த அல்லது தாழ்ந்த கலாச்சார மட்டங்களினால் வருவதில்லை. கிராமங்களில் யதார்த்தத்தை, உலகத்தை அறிந்து கொள்ளும் விதம் வேறாகவும், நகர்ப்புறத்தில் வேறாகவும் இருப்பதால்தான் அந்த இடைவெளி. பள்ளி, கல்லூரிகளில் பெற்ற கல்வியை வைத்துக் கொண்டு மேற்கத்திய இலக்கியத்தை ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டோம். ஆனால், நமது நாட்டுப்புறக் கலாச்சாரம் பற்றி நாம் கற்கவில்லை; நாட்டுப்புற யதார்த்தத்திலிருந்து நாம் வெகுதூரம் விலகி இருக்கிறோம்; அது மட்டுமல்ல, அதன் மொழி, கலாச்சாரத்திலிருந்தும் தொலைவில் நிற்கிறோம்.

நகர்ப்புறப் பார்வையாளர்களுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இதன் விளைவு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விபரீதமாக இருக்கிறது. முதலில் நாட்டுப்புறப் பாடலின் துரித தாளலயத்தை மட்டுப்படுத்தி இந்துஸ்தானி போன்ற இசை முறையின் மந்த கதியைத் தழுவ ஆரம்பித்தார்கள் கிராமிய இசைக் கலைஞர்கள்; நகர்ப்புறப் பார்வையாளர்களைக் கவருவதற்கு சினிமாப் பாடலைப் பாடினார்கள்; நமது கலாச்சாரத்தில் ‘சமஸ்கிருத ஆதிக்கம்’ (பார்ப்பனீய கலாச்சாரம்) இப்படித்தான் ஊடுருவி விட்டது.

இதன் பொருள் – நாட்டுப்புறக் கலாச்சாரத்தை எந்தவிதப் பாதிப்பும் இல்லாம்ல் பரிசுத்தமாக அருங்காட்சியகப் பொருளைப் போலப் பாதுகாக்க வேண்டும் என்பதல்ல. எது தேவையானது? மிக இயற்கையான வளர்ச்சியில், மாற்றத்தில் தற்கால ஒலிகளை, படிமங்களை, சித்திரங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சமுதாயத்தில் சமூக – கலாச்சாரத் தேவைகளைப் புறக்கணித்தும் கூட வியாபார நோக்கத்தோடு புதுப்புது வடிவ உத்திகளைத் தறிகெட்டுப் பயன்படுத்துகிறார்கள்.

நாட்டுப்புற, நகர்ப்புறக் கலாச்சாரங்கள் இணைய வேண்டும். நகர்ப்புறக் கலாச்சாரம், நாட்டுப்புறக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் காவலன் போல நடந்து கொண்டாலோ, நாட்டுப்புறம் மறுதலையாகச் சேவை செய்வது போல நடந்து கொண்டாலோ இரண்டு கலாச்சாரங்களும் எதிரும் புதிருமாகவே இருக்கும்.

எனினும் வரலாற்றிலே சில சமயங்களில் – எடுத்துக்காட்டாக, அரசியல் இயக்கங்களின் போது, அரசியல் எழுச்சிகளின்போது – இரு தரப்பிலிருந்தும் ஒரே லட்சியத்துக்காக உறவுகள் நெருக்கமாவதைப் பார்க்க முடியும்.

மேற்கு வங்க எடுத்துக்காட்டு ஒன்று: 1859 – 60-ல் நெல் பயிரைப் புறக்கணித்து, ஆங்கிலேயரின் ஆணைக்கு அடிமைப்பட்டு லாபத்துக்காக அவுரிச்செடி பயிரிட்டார்கள் சிலர். உடனே, அவுரிச் செடி பயிரிடுவோர்க்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தினார்கள். இப்போராட்டத்தை ஆதரித்து எழுதிய ஹரீஷ் முகர்ஜி இறந்த போது விவசாயிகளில் யாரோ சிலர் சேர்ந்து ஒரு சோகப்பாடல் எழுதினார்கள். நாட்டுப்புற, நகர்ப்புற இணைப்பாக அப்பாடல் எழுந்தது.

செரபண்ட ராஜூ
செரபண்ட ராஜூ

1905-இல் நடுத்தர வர்க்கப் புரட்சியாளர் இளைஞர் குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்ட போது பெயர் தெரியாத ஒரு கிராமத்துப் பாடகர் தியாகிக்கான பாடலை ஆக்கினார். அதன் நேர்த்தியான படிமங்கள் இன்றுவரை கூட மக்கள் மத்தியில் ஒளியோடும், வலுவோடும் நிற்கின்றன.

“பத்து மாதமும் பத்துநாட்களும்
போகட்டும்.
மறுபடி அம்மா நான்
பிறந்திடுவேன்.
என்னை நீ தெரிந்து கொள்ள
கழுத்தில் பார் – தூக்குக்
கயிற்றின் வடு
அழுத்தமாய்ப் பதிந்திருக்கும்.”

1940-களில் கொடிய வங்களாத்துப் பஞ்சம் வந்தது. தெபகா விவசாயிகளின் இயக்கம் அப்போதுதான் வீறுகொண்டு எழுந்தது. கம்யூனிஸ்டு கலைஞர்கள் நகரங்களிலிருந்து கிராமப் புறங்களுக்குச் சென்றார்கள்; கிராமத்துப் பாடகர்களுடன் சேர்ந்து கூட்டாகப் பல பாடல்களை எழுதினார்கள்; விவசாயிகளின் துன்ப துயரங்களும், போராட்டங்களும் உயிர்த் துடிப்போடு வடிக்கப்பட்டன.

நாட்டுப்புறம், நகர்ப்புறம் – இரண்டும் உணர்வெழுச்சியோடு, அற்புதமாக இணைந்தது – மார்க்கிஸ்டு – லெனினிஸ்டு கட்சியின் ஆயுதப் புரட்சி எழுச்சியிலே. (இந்த நக்சல்பாரி உழவர் எழுச்சிதான் ‘நக்சலைட்’ பயங்கரவாத இயக்கம் என்று அரசினால் அவதூறு செய்யப்பட்டு வருகிறது.) 1967-ல் நக்சல்பாரி கிராமத்தில் முதல் தீப்பொறி கிளப்பினார்கள் உழைக்கும் விவசாயிகள்.

கூலி ஏழை விவசாயிகளின் உதவியோடு நாட்டுப்புறத்தில செந்தளப் பிரதேசங்களை எழுப்புகின்ற அந்த அரசியல், ஆயிரக்கணக்கில் நடுத்தர வர்க்கச் செயல் வீரர்களைத் தன் அணியிலே ஈர்த்தது. தங்களை முற்றாக அரசியல் ரீதியில், கலாச்சார ரீதியில் புடம் போட்டுக் கொள்ள, அவர்கள் நக்சல்பாரி இயக்கத்தோடு முழுமையாக இணைந்தார்கள். அரைக் காலனியக் கல்வி ஊட்டப்பட்டுத் தயாரானவர்கள் அதிலிருந்து பிய்த்துக் கொண்டு, நலிந்த விவசாயிகளின் பார்வை மூலமாக சமூக அரசியல் யதார்த்தத்தைப் புதிதாக அறிந்து கொண்டார்கள்; ஒரு விதத்தில் பார்த்தால், தங்களது வாழ்க்கையின் பழைய பகுதியை வெட்டி எறிந்தார்கள்.

இயக்கத்தில் இணைந்த நடுத்தர வர்க்கச் செயல் வீரர்கள் தங்களை மாற்றிக் கொண்டதன் காரணமாக அரசியல் தளத்திலும், கலாச்சார தளத்திலும் ஒரு தாக்கத்தை உண்டாக்கினார்கள். மிகச் சிலருக்கே அப்போது உருவான இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் தெரியும். இயக்கத்தில் பங்கெடுத்தவர்களே பாடல்களை, கவிதைகளை எழுதினார்கள். ஒரு சில சிறிய ஏடுகளில் அவை இடம் பெற்றன; செவி வழியாகவே பல பாடல்கள் பதிவு பெற்றன; கிராமங்களில் அந்ததப் படைப்புகள் இன்றுவரை கூடப் பாடப்படுகின்றன.

***

முதல்தடம் ஆந்திரத்தில் 1960-களில் பிறந்தது. ஓர் இளம் கவிஞர் சிரிகாகுளம் மாவட்டப் பகுதிகளில் பண்ணைக்கும், போலீசுக்கும் எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்திய விவசாயிகளோடு இணைந்தார்; போராட்டத்தின் மத்தியிலேயே 1969 டிசம்பரில் போலீசால் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் புரட்சிக் கவிஞர்தான் சுப்பாராவ் பாணிக்கிரகி. இவர் விவசாயிகளின் போராட்டம் பற்றி பல பாடல்களை எழுதிக் குவித்தார்; மிகப் பழைய ‘ஜமுக்குலகதா’ (இது ஒரு நாட்டுப்புற நாடக உத்தி – மூன்று நடிகர்கள் – பாடல், நடிப்பு மூலம் கதை சொல்வார்கள்.) என்ற நாட்டுப்புறக் கலை வடிவத்தை உயிர் பெறவைத்தார். சிரிகாகுளப் புரட்சி இயக்கம் அதில் பதியப்பட்டது.

இன்னமும் பசுமையாக என் நெஞ்சில் நிற்கும் ஓர் சம்பவம். 1973 சிரிகாகுளப் பகுதியில் ஓர் கிராமத்தில் தங்கியிருந்தேன். விவசாயிகள் வீட்டுச் சிறுவர்கள், சிறுமிகள் சுப்பாராவின் பாடலைப் பாடினார்கள். “சிவப்பென்றால் சிலருக்குப் பயம் பயம்” – அங்கே இங்கே கிடந்த நசுங்கிப் போன அலுமினியக் குவளைகள், கரண்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து தாளம் போட்டுப் பாடினார்கள்; குரலில் ஒரே உற்சாகம்:

“சிவப்பென்ற பேரைக்
கேட்கும்போதே சிலருக்கு
முகமெல்லாம் கறுப்பாக மாறுது
இளம்பிள்ளை நெஞ்சமோ
என்றுமே மறவாது
உடலெங்கும் சிவப்பு
நிறம்தானே ஓடுது.”

சுப்பாரவ் பாணிக்கிரகியின் மிகச் சிறந்த பாடல்:
“கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள், துணிந்து நாங்கள் சொல்கின்றோம் மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்”

இந்தியாவெங்கும் உள்ள கம்யூனிஸ்டு புரட்சியாளர்களின் படை நடைப் பாடலாக இருந்து வருகிறது.

தற்கால புரட்சி தெலுங்குக் கவிஞர்களுக்கு முன்னோடியாக சுப்பாராவ் வாழ்ந்து காட்டினார். அத்தெலுங்குக் கவிஞர்கள் பழமைப் பிற்போக்கினை எதிர்த்தார்கள்; புதிய கவிதை உத்திகளைப் பயன்படுத்தினார்கள். தங்களை ‘திகம்பர கவிகள்’ (பழமையை உதறி எறிந்தவர்கள் என்ற பொருளில்) என்று அழைத்துக் கொண்டார்கள்.

சிரிகாகுளம் எழுச்சி இவர்களது கவனத்தை புரட்சியின் பக்கம் ஈர்த்தது. அவர்கள் ஜூலை 1970-ல் ‘வி-ர-ச-ம்’ (விப்ளவ – ரசயிதள – சங்கம்) – புரட்சிகர எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். அடுத்த ஆண்டே அவர்கள் பதிப்பித்த முதல் கவிதைத் தொகுப்பு ஆந்திர அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது; ஜுவாலாமுகி, நிகிலேஷ்வர், செரபண்டராஜு போன்ற கவிஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

வரவர ராவ்
வரவரராவ்

வி-ர-ச-ம் கவிஞர்களில் முன்னோடியாக நின்றவர் செரபண்டராஜு. ஆந்திர உழைக்கும் விவசாயிகளின் புரட்சி அமைப்பான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட ஒரே காரணத்துக்காகப் பன்னிரண்டாண்டுகளுக்குச் சிறைவாசம் அனுபவித்தார். சிறை தந்த பரிசான மூளைப் புற்று நோய் காரணமாக 1982 ஜூன் மாதம் இறந்து விட்டார்.

ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து, கிராமப்புறக் கலாச்சாரத்திலே ஊறி வளர்ந்த செரபண்டராஜு புதிய இலக்கியத் துறைகளில் தேர்ச்சி மிக்கவராக வளர்ந்தார். ஆனால், நக்சல்பாரி உழவர் இயக்கமே அவரை மீண்டும் நாட்டுப்புறத்தோடு இணைத்தது. அரசியல் இயக்கத்தில் முறைப்பட்டு வளர்ந்த போது நிறைய பாடல்களை உருவாக்கினார். அவை ஆந்திரக் கிராமங்களில் இ.பொ.க. (மா-லெ) இயக்கக் கூட்டங்களில் பாடப்பட்டன.

1978-ல் மரணப்படுக்கையிலிருந்து அவர் கைப்பட எழுதிய வரிகளுக்கு எடுத்துக்காட்டாக இறுதி வரை வாழ்ந்து காட்டினார்: “என் மணிக்கட்டையே நீ வெட்டி எறிந்தாலும் ஏந்தியவாளை நான் எந்நாளும் விடமாட்டேன்!”

நக்சல்பாரி இயக்கம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை மக்கள் கலாச்சாரத்தைப் பரப்பும் உணர்வுபூர்வமான முயற்சிகள் இடைவிடாமல் செயல்படுத்தப்படுகின்றன; முக்கிய நகரங்களில் கலையும் கலாச்சாரமும் குவிந்துவரும் போக்கிற்கு நேர்எதிராகக் கிராம்பபுறத்தை நோக்கி கலாச்சார இயக்கம் திருப்பப்பட்டுள்ளது; கலை, பரந்துபட்ட மக்களுக்காக மாற்றப்பட்டுள்ளது.

பல பாடல்கள் கூட்டுப் படைப்புக்களாகச் சிறையில் தயாரிக்கப்பட்டன. ஒரே அறையில் அடைக்கப்படும் விவசாயிகளும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்; அவை வயிரம் வாய்ந்த கவிதைகளாக, பாடல்களாக சிறையின் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறின. 1970-ல் மேற்கு வங்க மித்னபூர் சிறையிலே நக்சல்பாரிகள் கூட்டுப்பாடல் ஒன்றைத் தயாரித்தார்கள்.

சிறையின் நாலு சுவர்க்குள்ளே காத்திருப்பது கொடுமையானது. அந்த இயலாமையிலிருந்து தொடங்குகிறது பாடல். மெள்ள கிராமத்தின் சூழ்நிலை, வீடுகளில் தாய்மார்கள் கஞ்சி கூட இல்லாமல் தவிப்பது ஆகியவற்றை விவரித்துவிட்டு, மாற்றம் நிச்சயம் என்ற நம்பிக்கை பிறப்பதாக முடிகிறது பாடல்.

“கவியாய்க் கிடக்கிறது
அரிசிப் பானை
ததும்புகிறது விழிக்குடம்
இதயம் நோகிறது
தாயே உன்னை நான்
எப்படிக் காப்பாற்றுவேன்?
இனியும் நான்
இங்கே இருக்க முடியாது-
அதோ
மக்கள் படை செல்கிறது
மலைகள் அதிரும் ஒலிகேட்கிறது
மாடமாளிகை நொறுங்கும்
ஒலி கேட்கிறது
இனியும் என்னைக்
காத்திருக்க வைக்காதே
தாயே
நானும் அங்கே போக வேண்டும்
விடியலைக் கீறிச்
சூரியனைக் கொண்டு வர!”

நடுத்தர வர்க்கச் செயல் வீரகளுக்கு இன்னொரு பிரச்சனை இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்திலிருந்து வரும் தோழர்களின் துயரங்களைக் காணும் போது தங்களையே ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையோடு பார்க்கிறார்கள். அந்த வர்க்கத் தோழர்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் வரை இந்த இடைவெளி விழுந்து கொண்டேதான் இருக்கும். ‘வி-ர-ச-ம்’ செயலாளரான வரவரராவ் எழுதிய கவிதை வரிகள் அந்தக் கேள்விகளைச் சரியாக எழுப்புகின்றன.

“தொழிலாளி
சிந்தும் வியர்வையால்
வெளியிடமுடியாத
ஓர் உண்மையை
அவனது காலி
வயிற்றால்
வெளியிட முடியாத
ஓர் உண்மையை
அவனது கண்ணீர்
வெளியிடமுடியாத
ஓர் உண்மையை
அவனது
உறுதிமிக்க
கைமுஷ்டிகள்
வெளியிட முடியாத
ஓர் உண்மையை
கவிஞனின் பேனா சிந்தும்
ஒரு துளி மை
என்றாவது
வெளியிட முடியுமா?”

நடுத்தர வர்க்கக் கவிஞன் தனது வேரினை இடம் பெயர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் வைக்கும் போது எப்போதும் தனக்குப் பிடித்தமான கடந்த கால கற்பனைக் கோலங்களை உதறி எறியவே விரும்புகிறான்.

“காதலில் சந்திரனாக வராதே
முடியுமானால்
சூரியனாக நீ வா – அதில்
கொஞ்சம் நெருப்பை அள்ளி
இருண்ட காட்டில்
விளக்கேற்றப் போகிறேன்

காதலில் மலராக வராதே
முடியுமானால்
இடியென நீ வா – அந்த
ஒலியினை வாங்கி
எட்டுத் திக்கும்
போர்ச் செய்தி
முழக்கப் போகிறேன்

நிலவு ஆறு – மலர் –
தாரகை – பறவை
இவற்றை ஓய்வாகப் பார்க்கலாம்
பின்னால் ஒருநாள்.
ஆனால் இன்றோ
இறுதிப் போர் நடந்து முடியாத
இன்றோ,
தேவை – நம் சேரியில்
புரட்சித் தீ!”

இப்பாடலை எழுதியவர் முராரி முகோபாத்யாயா. ‘இறுதிப் போரில்’ அவர் 1970-களில் போலீசால் கொல்லப்பட்டார்.

நகர்ப்புறச் சூழலில் எழுதப்பட்ட கவிதைகள் ஒரு போக்கை எடுத்துச் சொல்லுகின்றன. அதாவது, மேலும் மேலும் பிரச்சார மொழியில், நடையில் கவிதையின் அக்கறை பெருகியிருப்பது தெரிய வருகிறது. சரோஜ் தத்தா (நக்சல்பாரிப் புரட்சியாளர்), கவிஞர் 1970-களில் கொந்தளித்த நாட்களில் கட்சி அணிகளுக்கு இது பற்றிச் சில செய்திகள் சொன்னார்:

“கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; மிகப் பழைய கவிஞர்களை மறந்து விடுங்கள்; ஆயுதப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் புதிய போர்க்குணம் மிக்க கவிஞர்களைப் போற்றுங்கள்.” பண்டையப் பொதுவுடைமைச் சமுதாயத்தில், கூட்டுச் சமூகத்தின் முழக்கமாக மொழி இருந்ததல்லவா, அதே போன்ற செயல்பாட்டை மொழி இப்போது எடுத்துக் கொள்கிறது. கூட்டுச் சமூக மதிப்பீடுகளை ஏந்திச் செல்லும் கருவியாகவே புரட்சிகர முழக்கங்களும், உரை வீச்சுக்களும் அமைய வேண்டும்.

நகர்ப்புற நடுத்தர வர்க்கக் கலைஞர்கள் இத்தகைய சோதனைகளைச் செய்தார்கள்; முயற்சி முழுவதும் வெற்றியல்ல என்றாலும் நக்சல்பாரி கலாச்சார இயக்கத்தில் அவை ஆவணம் போல பயன்பட்டன. இந்திய வரலாற்றில் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பான நேரத்தில் உயிர்த் துடிப்போடு இயங்குவது எப்படிப்பட்ட அனுபவம் என்பதைச் சித்தரிக்கின்ற அளவுக்கு அந்த இயக்கங்கள் நினைவில் இருக்கும். ஒரே சமயத்தில் பிரசுர எழுத்தாளராகவும் கவிஞர்களாகவும் எப்படிச் செயல்படுவது என்பதற்குப் பல பரிசோதனைகளும் நடந்துள்ளன.

அவ்வாறு படைப்பை உருவாக்கும் போது அழகியல் அவசியங்கள் இரண்டாம்பட்சமாயின. எல்லா அரசியல் கொந்தளிப்புக் கட்டங்களிலும், அழகியல் மதிப்பீடுகள் நெருக்கடிக்குள்ளாகின்றன. அந்த மாதிரி நேரங்களில் உருவாக்கப்பட்ட படைப்புகளை விமரிசிக்க, பொதுவாகக் கலைக்குப் பயன்படுத்தும் அதே விமர்சன அளவு கோல்கள் தேவையா?

நக்சல்பாரி இயக்கக் கலைஞர்கள் – ஏடுகளில் பதிப்பித்து வருவதும், பதிப்பிக்காமல் வாய்மொழி மூலமோ, பாடலோ மட்டும் செய்தவர்களாயினும் – நாட்டுப்புற, நகர்ப்புற – இரண்டு கலாச்சாரங்களிலும், சிறந்தவற்றைக் கிரகித்துக் கொள்ள முயன்றார்கள்.

அவர்கள் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டுக்குத் தங்களை மாற்றிக் கொள்ளும் போக்கில் படைப்பு வேலையில் உச்சநிலையை எட்டுகிறார்கள். புதிய வாழ்க்கை முறையை ஏற்கும்போது சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொண்டு செயல்பட்டுத் திருத்திக் கொள்கிறார்கள். இந்த நுணுக்கமான விஷயங்களும் விவசாயத் தோழர்கள் மற்றும் தியாகிகளோடு கொண்ட உணர்வெழுச்சி மிக்க பிணைப்புகளும் செழுமையாக அவர்களது படைப்புகளில் வெளிப்பட்டன. குறைபாடுகள் பல இருந்தாலும் இந்திய வாழ்நிலையை மாற்ற அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும், வருங்கால ஆவணத்துக்காக – போலீசு துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்படும் வீரர்களின் முழக்கங்களையும், சிரிகாகுளம் விவசாயிகள் சித்திரவதை செய்யப்படும்போது எழுப்பும் துயரமிக்க, கோபாவேசம் மிக்க வசவுகளையும் – துணிச்சலோடு பதிவு செய்வதையும் நாம் மறக்க முடியாது.

அவர்களது கவிதையை, பாடலை நாம் கேட்கும்போது இரண்டு உலகங்களுக்கு மத்தியில் முன்னும் பின்னும் போய் வருகிறோம்.

பட்டினியால் வாடும் விவசாயி, சமூகச் சடங்குகள், மலைவாழ் மக்களின் திருவிழாக்கள், கொரில்லாப் போராட்டங்கள், போலீசு வெறியர்களால் நாசமாக்கப்பட்ட கிராமங்கள், ரத்தம் தோய்ந்த வயல்வெளிகள், நகர்ப்புற இளைஞர் மாணவர்களின் உலகம், சிறை உடைப்புகள், ‘போலீசுடன் மோதல்’ என்ற நாடகத்தின் பின்னே புரட்சியாளர்களைப் படுகொலை செய்வது – இவை மட்டுமல்ல; நகர்ப்புறக் கவிதை வடிவத்தின் சந்தங்கள், மழைவாழ் மக்களின் பறை ஒலியோடும், சந்தால் பழங்குடி மக்களின் போர்ப்பறை முழக்கத்தோடும் இவர்களது கவிதைகளில் இணைந்து கலப்பதைப் பார்க்கலாம். மண்ணைத் தோண்டும் கொந்தாளங்களின் ஒலிகளை நாம் கேட்கலாம்; எரியும் கந்தகத்தூளின் மணத்தை நுகரலாம்.

“மலரிடைப் புதைந்த கந்தக்குண்டுகள்” -ஷூமான் என்ற ஜெர்மானிய இசைப்பாடலாசிரியன் பயன்படுத்திய சொற்கள் இவை. போலந்து தேசிய இன எழுச்சிகளின் போது சோபின் என்ற இசையறிஞன் எழுதித் தயாரித்த போலிஷ் நாட்டுப்புற நாட்டிய இசையை இப்படி வருணித்தார் ஷூமான்.

ஆங்கில மூலம்: “The Truth Unites” (“உண்மை ஒற்றுமைப்படுத்தும்” – மாத ஏடு) தமிழில் : இராசவேல்
“புதிய கலாச்சாரம்”, ஏப்ரல் ’86-இல் வெளியிடப்பட்ட கட்டுரையின் மறுவெளியீடு.
_____________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2000
_____________________________

ஒரு இந்து பெண்ணுக்கு 100 முசுலீம் பெண்களை தூக்குவோம்

19

பெண்கள் செல்பேசியை பயன்படுத்தக் கூடாதென ஒரு நகரில் சமூகத் தடை விதிக்கப்பட்டிருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? சில தினங்களுக்கு முன் ஆக்ராவில் நடைபெற்ற அகில பாரதிய வைசிய ஏக்தா பரிஷத் என்ற வணிக சாதியின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை படித்துப் பாருங்கள். ஆயிரக்கணக்கான வணிகர்கள் கூடியிருந்த அந்த சபையில் பாஜகவின் மத்திய சிறு, குறுந்தொழில் மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ராவும் கலந்து கொண்டிருந்தார். அங்குதான் ஆக்ராவின் வைசிய சாதி இளம்பெண்களுக்கு, செல்பேசியை பயன்படுத்த தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய பெண் - மொபைல்
வைசிய சாதி சங்கம், பள்ளி செல்லும் பதின்ம வயது பெண்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்ய முடிவு எடுத்திருக்கிறது. (படம் : நன்றி http://www.telegraph.co.uk)

இச்சங்கத்தின் தலைவர் சுமந்த் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘’செல்பேசி, இணையம் போன்றவை இளம் நெஞ்சங்களை இசுலாமியர்களின் லவ் ஜிகாத் என்ற பொறியில் சிக்க வைத்து விடுகிறது. இப்படி சிக்குபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் வைசிய சாதியினை சேர்ந்த பெண்கள் தான். எங்களுக்கு வருமுன் காப்பதை தவிர வேறு வழியில்லை’’ என்று இயற்றப்பட்ட தீர்மானத்தை நியாயப்படுத்தியுள்ளார். இத்தடையை விதிப்பதற்கு முன், மாநில அளவில் வைசிய சாதியினை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து, செல்பேசிக்கு எதிரான ஆலோசனை வழங்குதல் முதலில் நடைபெறும் என்று இச்சாதிச் சங்கம் உறுதியளித்துள்ளது.

நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஒரு வளமையான, ஆதிக்க சாதி இத்தகைய சமூக விலக்கை தங்களது பெண்களுக்கு அறிவித்திருப்பது இதுவே முதன்முறையாகும். சாதிச் சங்கத்தின் இம்முடிவு குறித்து அச்சமூக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் நிலவுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்திர பிரதேசத்தில் 80 க்கு 73 இடங்களை பிடித்திருக்கும் பாஜக இனிவரும் 2017 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியினை பிடிக்கவும், வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெறவும் திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே கடந்த மாத மத்தியில் நடந்த இம்மாநில பாஜக செயற்குழு கூட்டத்தில் இசுலாமியர்களுக்கெதிரான லவ் ஜிகாத் பிரச்சாரத்தை அவர்கள் முடுக்கி விட யோசித்தனர். வினய் கட்டியார் போன்றவர்கள் இதற்காக பேசவும் செய்தனர்.

இந்துப் பெண்களை காதலித்து பின்னர் மதம் மாற்றும் இசுலாமிய இளைஞர்களின் லவ் ஜிகாத் நடவடிக்கைக்கு ஆளும் சமாஜ்வாதி கட்சியின் ஆசி இருப்பதாக பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. கடந்த மாதம் நடந்த மாநில கட்சி கூட்டத்தில் உபி மாநில தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய் பேசுகையில், சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை சமூகத்து பெண்களை பாலியல் வல்லுறவு செய்யவும், பின்னர் கட்டாய மத மாற்றம் செய்யவும் லைசென்சு வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனை உத்திர பிரதேச அரசியலில் பேசுபொருளாக மாற்றி விட்டார்கள் பாஜக தலைவர்கள். வரும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு இதை வைத்து ஆதிக்க சாதி இந்துக்களை அணிதிரட்டுவதற்கு முனைகிறார்கள்.

கடந்த வாரம் அலிகாரில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை இந்து மதத்திற்கு மாற்றும் கர்-வாப்பசி நிகழ்வை ஆர்.எஸ்.எஸ் நடத்தியது. வி.எச்.பி, இந்து ஜக்ரன் மஞ்ச், ஏபிவிபி, பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா போன்ற சங்க வானரங்கள் இணைந்து மாவட்டம் தோறும் ஒரு முன்னணி ஒன்றையும் தற்போது அமைத்து வருகின்றன. இசுலாமிய ஆண்களை மணக்கும் இந்துப் பெண்களை மதம் மாற விடாமல் தடுப்பது அதன் முக்கியமான குறிக்கோள். மீரட்டில் இந்த அமைப்புக்கு பெயர் “மீரட் பச்சாவோ மஞ்ச்”.

ஏற்கெனவே ஜூலை மாத இறுதியில் இங்கிருக்கும் மதராசாவில் கட்டாய பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி ஒரு இந்துப் பெண்ணை மதம் மாற்ற சதி நடைபெற்றதாக போலியான வதந்திகளை பரவ விட்டார்கள். அதனால் ஒரு சிறியளவிலான கலவரத்தையும் நடத்தி, தொடர்ச்சியான சமூக பதட்டத்தையும் அம்மாவட்டத்தில் நீட்டிக்க வைத்திருக்கிறார்கள் இந்துமத வெறியர்கள். இப்போது முசாஃபர் நகர், பரேலி, புலாந்த்ஷகர், சரண்பூர், பாக்பட் மாவட்டங்களிலும் இம்முன்னணியினை ஆர்.எஸ்.எஸ் அமைத்துள்ளது. லவ் ஜிகாத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தர்ம ஜக்ரான் மஞ்ச் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறது. கடந்த மாதம் ஆரம்பத்தில் ஒரு வார காலம் இந்து இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் காதலுக்காக மதம் மாற மாட்டோம் என்ற உறுதிமொழியினை ஏற்க வைக்க தொடர் பிரச்சாரத்தை செய்துள்ளனர்.

இந்துத்துவ வெறியர்கள்
இந்துத்துவ வெறியர்கள்

கோரக்பூரை சேர்ந்த இந்துமதவெறி பேச்சாளரும், பாஜக எம்.பி.யுமான யோகி ஆதித்யாநாத் தான் தற்போதைய இடைத்தேர்தலுக்காக கட்சியால் நியமிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர். இவர் ஒரு துறவியும் கூட. “அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” என்று யூ-டியூபில் முழங்கி இருக்கிறார். அடுத்து எங்கெல்லாம் இசுலாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கலவரமும் அதிகமாக இருக்கிறது, ‘அவர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் இந்துக்களால் குடியிருக்க முடியாது, அதைத்தானே காசுமீர் பள்ளத்தாக்கில் பார்த்தோம்’ என்றும் விஷமத்தனமாக மதவெறியைத் தூண்டி தேர்தல் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இதனைத்தான் மையமாக மக்கள் முன்வைத்து உபி இடைத்தேர்தலை எதிர்கொள்கின்றனர். வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த சட்டசபைத் தேர்தலின் நிகழ்ச்சி நிரலே இதுவாகத்தான் இருக்கும்.

மீரட் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஆகஸ்டு முடிய பதிவாகியிருக்கும் காவல்துறை குற்றப் பதிவேட்டின்படி, 37 பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இதில் ஏழு மட்டும் தான் இசுலாமியர்கள் சம்பந்தப்பட்டது. மீதி இந்துக்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் இசுலாமியர்களால் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக பாஜக தனது விருந்தாவன் நிகழ்ச்சியில் ஒரு தீர்மானம் போட்டுள்ளது. மீரட் கல்லூரியின் மாணவிகளை கேட்டால் பலருக்கும் லவ் ஜிகாத் என்ற வார்த்தையே தெரிந்திருக்கவில்லை. வக்கிரமாக தங்களை கேலி செய்வதில் எல்லா சமூகத்தினரும் தான் இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் அம்மாணவிகள். அவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்து’க்கள் தான் என்பது வெள்ளிடைமலை.

ஆனால் சங்க வானரங்களோ லவ் ஜிகாத்தில் ஈடுபடும் இசுலாமிய இளைஞர்கள் நல்ல நவநாகரீக உடையணிந்து (ராமதாசு சொல்வது போல கூலிங் கிளாசும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து), உயர்தர மோட்டார் பைக்கில் வலம் வருகின்றனராம். அவர்களது பைக்கில் பின்புறம் அமர்ந்து செல்ல இந்துப் பெண்கள் விரும்புகிறார்களாம். அவர்களது மணிக்கட்டில் சிவப்பு மணிக்கயிறு எப்போதும் கட்டப்பட்டிருக்குமாம். அதாவது உடனடியாக திருமணம் செய்ய ஏற்பாடாம் இது. லவ் ஜிகாத் என்பது முதலில் கேரளா, கர்நாடகாவில் நடைபெற்று வந்த்தாம். இப்போது உ.பி.க்கும் பரவி விட்டதாம். இப்படித்தான் அவர்கள் கதை சொல்கிறார்கள்.

கதை சொல்வதோடு நிற்காமல், இப்படி காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை முசாஃபர்நகர் ரெஸ்டாரண்ட் ஒன்றில் பிடித்து கணவனான இசுலாமியருக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டிருக்கின்றனர். பெண்ணை பெற்றோருடன் பாதுகாப்பாக திருப்பி அனுப்பி விட்டனர். இன்னொரு இடத்தில் இசுலாமியரை மணம் செய்து கொண்டு கிராம வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மீண்டும் பெற்றோர்கள் இருக்கும் கிராமத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, இன்னொரு திருமணத்தினை சொந்த சாதியில் நடத்தி வைத்திருக்கின்றனர்.

பஹு-பேட்டி-பச்சாவோ-ஆந்தோலன் என்பதுதான் முசாஃபர் நகர் கலவரத்திற்கு இந்துத்துவா அமைப்புகள் பயன்படுத்திய முழக்கம். அதாவது மகளையும், மருமகளையும் பாதுகாப்போம் என்று அர்த்தமாம். நாடு முழுக்க குஜராத் மாடல், மோடி, வளர்ச்சி என்று பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கையில் கிராமப்புற பகுதிகளில் நடந்த பிரச்சாரங்களில் முசுலீம்களை நமது பெண்களிடம் அத்துமீறி நடப்பவர்கள் என்று அமித் ஷா வர்ணித்துக் கொண்டிருந்தார்.

சஞ்சீவ் பலியான் அந்த தேர்தலை மான்-சம்மான், பஹூ-பேட்டி கா சுனாவ் என்றுதான் வரையறை செய்தார். அதாவது மகள், மருமகள்களை கவுரவிக்கும், மரியாதை செய்யும் தேர்தல் என்று அர்த்தம். உத்திரபிரதேசத்தில் நடக்கும் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடுவோரில் 99% பேர் இசுலாமியர்கள் தான் என்று அடித்து விடுகிறார் உபி பாஜக தலைவர் லஷ்மிகாந்த் பாஜ்பாய். தேசபக்தி உள்ளவர்கள் தங்களது லவ் ஜிகாத்திற்கு எதிரான இயக்கத்தில் பங்குபெறுவார்கள் என்று கூறுகிறார் வி.எச்.பி-ன் தேசிய செய்தி தொடர்பாளர் சுரேந்திர குமார் ஜெயின். வரும் செப்டம்பர் 15-க்குப் பிறகு கல்லூரிகளிலும் அதற்கு வெளியிலும் ஒரு விவாதம் நடத்த ஏபிவிபி தயார் செய்து வருகிறது.

சிதம்பரம் பத்மினியையோ, வாச்சாத்தி மலை வாழ் பெண்களையோ, அந்தியூர் விஜயாவையோ சீரழித்தவர்கள் இசுலாமியர்கள் அல்ல. பெண்கள் வேலைக்கு போனால் தீட்டு என்று சொன்ன காஞ்சி சங்கராச்சாரிகளின் மடம்தான் ஆபாச வக்கிரங்களுக்கும், வன்முறை சதித் திட்டங்களுக்கும்பெயர் பெற்றது. லவ் ஜிகாத் ஒருபுறம் இருக்கட்டும். இந்து மதத்திற்குள்ளேயே சாதி மாறி திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக கவுரவக் கொலையுண்ட பெண்களை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ் முன்வருமா? முன்வருவது இருக்கட்டும், அப்படி கௌவரக் கொலை செய்வதே இவர்கள்தான்.

பெண்ணின் கற்பு, மானம் முதலிய பிற்போக்குத்தனங்கள் உண்மையில் அதே பெண்களை அடிமைப்படுத்தவே பயன்படுகிறது. தற்போது இசுலாமிய எதிர்ப்பிற்காகவும் இந்த ‘கற்பு’ பயன்படுகிறது. இந்துமதவெறியர்களின் இந்த அடாவடித்தனங்களால் வட இந்தியாவில் குறிப்பாக உ.பி மாநிலத்தில் பெரும் கலவரச் சூழல் ஏற்ப்பட்டிருக்கிறது. இறுதியில் இந்தியாவை பெரும் பிற்போக்குத்தனத்தில் ஆழ்த்தி, சிறுபான்மை மக்களை கலவர சூழலில் வைத்து, ‘இந்து’க்களை மதவெறியால் திரட்டித்தான் மோடியின் ‘வளர்ச்சி’ வருகிறது.

மோடிக்கு கொடி பிடித்தவர்களுக்கு இதயம் என்ற ஒன்று இருக்குமானால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். இல்லையேல் லவ் ஜிகாத் போரில் கலந்து கொண்டு ரத்த வெறியை தீர்த்துக் கொள்ள வேண்டும். பாஜக ஆட்சியில் சமூக வாழ்க்கை எவ்வளவு கொடூரமாக மாறி வருகிறது என்பதற்கு உ.பி ஒன்றே  போதும்.

–    கௌதமன்.

போர் வரி, மீசை வரி, முலை வரி – திருவிதாங்கூர் பார்ப்பனியம்

26

மக்கள் கலை இலக்கியக் கழகம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 22,23 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தி பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள்…

ஐயா வைகுந்தர் வழிபாடு: “கருவறைக்குள் பார்ப்பான் எதற்கு? நாங்களே தமிழில் வழிபடுகிறோம்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் மனுதர்ம விதிகள் ஆட்சி செய்த காலத்தில், பார்ப்பனப் பிடியிலிருந்து வெளியேறி சாணார் (நாடார்) சாதியினருக்கான புதிய வழிபாட்டுமுறையை ஐயா வைகுந்தர் என்பார் உருவாக்கினார். இன்றளவும் அவ்வழிபாட்டினர் குமரியில் வாழ்ந்து வருகிறார்கள். ஐயா வைகுந்தர் வழிபாடு குறித்தும், அக்காலத்தின் சாதியக் கொடுமைகள் குறித்தும் மாநாட்டில் திரு. சுயம்பு (வயது 50) எடுத்துரைத்தார்.

“ஐயா வைகுந்தர் வாழ்ந்த காலத்தில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. அரசன் பதினெட்டு வகைச் சாதிகளாக மக்களைப் பிரித்து வைத்து ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவற்றில் நாடார் சாதியினரைப் பதினெட்டாம் சாதியாக வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

அய்யா வைகுண்டர் வழிபாடு
அய்யா வைகுண்டர் வழிபாடு

அம்மக்கள் கோவில் தெருக்களில் செல்வதற்கும், உயர்சாதியினரின் தெருக்களில் செல்லவும், குளம், கிணறுகளில் தண்ணீர் எடுக்கவும், குளிக்கவும், காற்றோட்டமுள்ள வீடுகளில் வசிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. நாங்கள் திருமணங்களில் தாலி கட்டுவதற்குக் கூட வரி விதிக்கப்பட்டது. பசுக்கள், மண்வெட்டிகள், அரிவாள்களுக்கும் கூட வரி விதிக்கப்பட்டது. பனைத் தொழில் செய்பவர்கள் பனை மரத்திற்கும் கூட வரி செலுத்த வேண்டும் என்ற பெயரில் கொத்தடிமைகளாகக் கூலியின்றி வேலை செய்ய வேண்டும். சாணார் மக்கள் தீண்டத்தகாதவர்களென்றும் தள்ளி வைக்கப்பட்டனர். பெண்கள் மேலாடை அணிவதற்கும், தெய்வத்தை வழிபடுவதற்கும் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கூட “திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவும் சாதியக் கொடுமைகளைப் போன்று உலகில் வேறெங்கும் கண்டதில்லை” என எழுதியுள்ளனர். இக்கொடுமைகளைக் கண்டதனால் தான் விவேகானந்தர் குமரிக்கு வந்த பொழுது, “திருவிதாங்கூர் சமஸ்தானம் பைத்தியக்காரர்கள் வாழும் இடம்” எனக் குறிப்பிட்டார்.

இவற்றால் வெகுண்ட ஐயா வைகுந்தர் கொடுமைகளுக்கு ஆளான மக்களிடம், “மார்பில் ஆடையணியுங்கள். முட்டுக்குக் கீழ் துணி கட்டுங்கள். தங்கத்தில் தாலி கட்டுங்கள். இடுப்பில் குடம் வைத்துத் தண்ணீர் எடுங்கள். கோவில்களை நீங்களே கருவறையில் சென்று பூசை செய்யுங்கள், வணங்குங்கள்” என்றார். இதனைத் தொடர்ந்து மேலாடை அணிந்ததற்காகக் கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் கட்டி வைத்து அடித்தக் கொன்றனர். சிலரைச் சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வைத்தார்கள் மேலாடை அணிந்த பெண்களின் மார்புகளை வெட்டினார்கள்.

இவ்கையில், மன்னரையே எதிர்த்து, மக்களை ஒன்று சேர்ந்து மன்னரிட்ட சட்டதிட்டங்களையெல்லாம் மிதித்து மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சி ஏற்பட வழிவகுத்துக் கொடுத்தார் ஐயா வைகுந்தர். அவர் மக்களோடு இணைந்து வாழ்ந்தார். மன்னரின் படைகள் அவரைக் கைது செய்ய முற்பட்ட பொழுது, மக்களனைவரும் மன்னரின் படைகளை எதிர்த்து வீரப்போரிட்டனர்.

172 ஆண்டுகளுக்கு முன்பே, கருவறையில் சென்று வழிபடும் நிலையை ஐயா வைகுந்தர் ஏற்படுத்தினார். எங்கள் வீட்டுச் சடங்குகளில் பார்ப்பனர்களை அனுமதியாமல் நாங்களே நடத்திக் கொள்கிறோம். தமிழிலேயே வழிபாடு செய்கிறோம். இன்றளவும் ஐயா வைகுந்தரை மக்கள் தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.”

_____________________________

மனுதருமக் கொடுங்கோன்மை எங்கே என்போரே – இதோ இங்கே…
“மீசைக்கு வரி, மார்புக்கு வரி, தாலிக்கு வரி…”

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்த குமரி மாவட்டத்தில் அன்று நிலவிய சாதிக் கொடுமைகளையும், சாணார் சாதியினர் (நாடார்கள்) எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும், இன்று தங்களுடைய ஒடுக்கப்பட்ட வரலாற்றை மறந்து ஆதிக்கச் சாதியினராக சாதியக் கொடுமைகளை நிகழ்ந்தும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் குறித்தும் வழக்குரைஞர் இலஜபதிராய் எடுத்துரைத்தார்:

“இராமன் சீதையைக் கரம் பிடித்த கதையையும், மகாபாரதக் கட்டுக்கதைகளையும், பகவத்கீதையின் பிதற்றல்களையும் அறிந்திருக்கும் நம் மக்கள், முத்துக்குட்டி என்றழைக்கப்பட்ட சமூகப் போராளியின் போராட்டங்கள் குறித்தோ அல்லது நமது சகோதரிகள் மேலாடை (மாராப்பு) அணியக் கூடாத அனுமதிக்கப்படாத அவலங்கள் குறித்தோ அறியாமலிருப்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

அய்யா வைகுண்டர்
அய்யா வைகுண்டர்

1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார், சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொலை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த முத்துக் குட்டி என்பவர், தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக் கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை.

1937 வரையிலும் கூட ஒடுக்கப்பட்ட சாதியினர் “தமது வீட்டுக் கதவுகளை” குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வைக்கக்கூடாது; அவர்கள் வீட்டில் செம்புப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது; வீடுகளில் பசுமாடுகள் வளர்க்கக் கூடாது; நிலம் வைத்திருக்கக் கூடாது” போன்ற கடுமையான விதிகள் அமுலாக்கப்பட்டன. இன்றும் நமது சட்டங்கள் மூலமாகவும், நீதிமன்றங்கள் மூலமாகவும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ நடைமுறைப்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன.

ஒடுக்கப்பட்ட சாதியினர் செல்லப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டனர்; ‘சோறு’ என்பதற்குப் பதிலாக ‘கஞ்சி’ என்றே சொல்ல வேண்டுமென்றும், தமது வீடுகளை ‘குடிசை’ என்றே அழைக்க வேண்டுமென்றும் இழிவுபடுத்தப்பட்டனர். குமரி மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்டனர். “அந்நடைமுறை நீடித்திருந்தால் நல்லதுதான். இன்று குமரி சுற்றுலா மையமாக மாறியிருக்கும்” என்று உயர்சாதி இளைஞனொருவன் வக்கிரமாகக் குறிப்பிடுகின்றான்.

1993-ல் அப்பாபாலு – இங்க்ளே எனும் வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கே.ராமசாமி என்பவர் வேதனையோடு குறிப்பிட்டதைப் போல, ‘இன்னும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காக வன்கொடுமைச் சட்டம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அரசியலமைப்புச் சட்டம் பெயரளவில்தான் உள்ளது.’

“பசு புனிதமானதென்றும், இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மாட்டார்கள்” என்றும் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், குமரி மாவட்டத்திலுள்ள 60,000 பார்ப்பனர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் பசுமாமிசம் உண்பவர்கள்தான். அம்மக்களை இன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தந்திரமாகத் தங்கள் பின்னால் அணிதிரட்டி வருகிறார்கள். ஆணாதிக்கக் கொடுங்கோலன் ராமனுக்கு, தன் மனைவி சீதையைச் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்யத் தூண்டிய ராமனுக்குக் கோவில் கட்ட முற்படுகிறார்கள்.

1746-ல் மார்த்தாண்ட வர்மா எனும் திருவனந்தபுரத்து மன்னன் தனது அரண்மனையைக் கட்டும் பொழுது, அரண்மனையின் பலத்துக்காக வேணி ஈழவர், நாடார், முக்குலர் சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளைப் பலி கொடுத்தான். அத்திருவனந்தபுரம் அரண்மனை மட்டுமன்றி, நம்முடைய ஒட்டுமொத்த அரசியலமைப்புச் சட்டமும் கூட ஒடுக்கப்பட்ட சாதிகளின் பலிபீடங்களின் மேல்தான் நிறுவப்பட்டுள்ளது.”
______________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003
______________________________

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்

5

ற்போது மோடியின் ‘நல்லாட்சி’யில் அஜ்மீர், மாலேகான், சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியின் மரணம் குறித்த விசாரணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், தேசிய புலனாய்வுத் துறையின் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள ‘திடுக்கிடும்’ திருப்பங்கள் கடந்த சில நாட்களாக ஆங்கில ஊடகங்களில் கசிய விடப்பட்டு வருகின்றன.

சுனில் ஜோஷி, பிரக்யா சிங்
சுனில் ஜோஷி, பிரக்யா சிங்

அதாவது, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியரான (பிரச்சாரக்) சுனில் ஜோஷி, பெண் சாமியாரான ப்ரக்யா சிங் தாக்கூரிடம் பாலியல் ரீதியில் அத்துமீற பல முயற்சிகள் எடுத்தாராம். இதனால் ஆத்திரமுற்ற ப்ரக்யா சிங், சுனில் ஜோஷியைப்  போட்டுத் தள்ளியதுதான் ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருக்கும்  ‘திடுக்கிடும்’ திருப்பங்களின் சாராம்சம்.

2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம். மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் இஸ்லாமியர்கள் திரளாக வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை முடிகின்ற நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறுகிறது ஒரு வெடிகுண்டு.

சிதறித் தெரித்த சில்லுகளுடன் மேலே எழும்பிய புகைப்படலம் கலைவதற்குள் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. அதை அடுத்து அருகில் இருந்த சந்தைப் பகுதியில் ஒரு குண்டு, என்று தொடர்ச்சியாக நான்கு குண்டுகள் வெடித்தன.

என்ன நடக்கிறது என்பதைக் கூட உணர வாய்ப்பில்லாத நேர இடைவெளிக்குள் நடந்த இந்த தாக்குதலில் அப்பாவி முசுலீம் மக்கள் சிதறடிக்கப்பட்டனர். பிய்த்தெறியப்பட்ட சதைத் துணுக்குகளால் அந்த இடமே இரத்தகளரியானது. இந்த தாக்குதலில் மொத்தம் 38 பேர் கொல்லப்பட்டனர், 200-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.

2007-ம் ஆண்டு டெல்லிக்கும் லாகூருக்கும் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 68 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் பாகிஸ்தான் ’தீவிரவாதிகள்’ தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என்று வெடித்த வெடிமருந்தின் கந்தகப் புகை அடங்குவதற்குள் பத்திரிகைகளால் அனுமானிக்கப்பட்டது.

மீண்டும் 2008-ம் ஆண்டு மாலேகானின் மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டு நால்வர் கொல்லப்பட்டனர். 2006ம் ஆண்டு துவங்கி அடுத்த சில ஆண்டுகளுக்கு மாலேகானைத் தொடர்ந்து, ஆஜ்மீர், ஹைதரபாத் (மெக்கா மஸ்ஜித்), தானே, கோவா, நந்தியாத், கான்பூர், பானிபட் போன்ற பகுதிகளில் தொடர்ச்சியான இடைவெளியில் குண்டுகள் வெடித்தவாறே இருந்தன.

ஒவ்வொரு முறையும் இந்திய ஆளும் வர்க்கமும் ஆளும் வர்க்க பத்திரிகைகளும் உடனடியாக பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டின. இந்திய முஜாஹிதீன் என்கிற ஒரு அமைப்பு இருப்பதாகவும், அதற்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புகள் உண்டெனவும், அவர்களுக்கு முன்பு தடைசெய்யப்பட்ட சிமி அமைப்பும் சேர்ந்து இந்தியாவின் மேல் பயங்கரவாதப் போர் ஒன்றைத் தொடுத்திருப்பதாகவும் கதைகள் பின்னப்பட்டன.

பின்னப்பட்ட கதைகளுக்குப் பொருத்தமான நடிகர்கள் தேவையல்லவா? அதனால், ஒவ்வொரு முறை குண்டு வெடித்த பின்னும் அக்கம் பக்கத்தில் தாடி, குல்லாவுடன் நடமாடிய நபர்களை அள்ளிச் சென்று தீவிரவாதிகள் என்று தலைப்பிட்டு பத்திரிகை வாய்களுக்கு அவல் போட்டுக் கொண்டிருந்தனர்.

அசீமானந்தா
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அசீமானந்தா

இதில் ஒரு கேள்வி வருகிறது. அட, அனேகமான குண்டுவெடிப்புகளில் குறிவைக்கப்பட்ட இலக்கு இசுலாமியர்கள் வசிக்கும் பகுதியாகவும், அவர்கள் தொழும் இடங்களாகவும் இருக்கிறதே, என்னதான் தீவிரவாதிகளாய் இருந்தாலும் பாய்மார்கள் தங்கள் சொந்த ஆதரவு சக்திகளையே (இந்துத்துவ அளவுகோலின் படி) தாக்கிக் கொல்லும் அளவுக்கு அத்தனை கேனையர்களாகவா இருப்பார்கள்?

இந்த கதை திரைக்கதை வசனம் நடக்கும் களம் வட இந்தியா என்பதையும், காட்சிகள் ஓடும் திரையரங்குகள் ஆங்கில, இந்தி ஊடகங்கள் என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு போன்ற பெரியார் பாரம்பரியம் கொண்ட மாநிலத்திலேயே கள்ளக் காதல், கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி தகராறுகளில் சக ரவுடிகளால் காவி ரவுடிகள் கொல்லப்படும் போது “சிக்கிய பக்ருதீன், சிக்குமா 20 பேர் டீம்?- போலீஸ் பக் பக்” என்று தலைப்பிட்டு கூத்தாடும் ஜூனியர் விகடன்கள் இருக்கும் போது, வட இந்தியாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

போகட்டும், மாலேகான் துவங்கி வடக்கில் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு போலீசு வரைந்த திரைக்கதை வசனம் நீதி மன்றத்தில் எடுபடவில்லை. என்ன தான் நீதித் துறையும் காவித் துறையாக இருந்தாலும், சொல்லும் கதை கொஞ்சமாவது தர்க்கப் பொருத்தத்துடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறதே. தொடரும் விசாரணைகளில் கிடைத்த தடயங்கள், ஆதாரங்கள் காவி கும்பலை நோக்கி தவிர்க்கவியலாமல் சென்று சேர்கிறது.

ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங், அசீமானந்தா, முன்னாள் இராணுவ அதிகாரி புரோகித் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் சிக்குகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மேல் மட்டம் துவங்கி கீழ்மட்டம் வரை பயங்கரவாத அமைப்புக்குள் பயங்கரவாத அமைப்பாக ஒரு பயங்கரவாத வலைப்பின்னல் செயல்பட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்தது.

இன்றைக்கு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் பாரதிய ஜனதா, வெறுமனே காங்கிரசின் மேல் மக்கள் கொண்டிருந்த சலிப்பின் காரணமாக மட்டும் இந்த வெற்றியைப் பெற்று விடவில்லை – மக்களின் பொதுப் புத்தியையும் நடுத்தர வர்க்க இந்து உளவியலையும் திட்டமிட்ட ரீதியில் 2000-ம் ஆண்டுகளின் மத்தியிலிருந்தே தயாரித்துள்ளார்கள். அந்த தயாரிப்புகளுக்கு குண்டு வெடிப்புகள் மிக முக்கிய பங்காற்றியுள்ளதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

பிடிபட்ட இந்து பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணைகளில் இருந்து பல உண்மைகள் தெரிய வந்திருக்கின்றன. ஆஜ்மீர், சம்ஜௌதா உள்ளிட்ட சில தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர ஊழியரான சுனில் ஜோஷி. அவரும் ப்ரக்யா சிங்கும் இணைந்து பல்வேறு தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வந்தனர்.இவர்கள் இருவருக்கும் அசீமானந்தா சாமியார் குறிப்பிட்ட சில காலம் தனது வனவாசி கல்யாண் ஆஷ்ரம் (இது ஒரு ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு) அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த ஆசிரமம் ஒன்றில் அடைக்கலம் கொடுத்ததோடு, பல தாக்குதல் சம்பவங்களின் திட்டமிடுதலிலும், செயல்படுத்துவதிலும் இணைந்திருந்தார். இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மேல் மட்டத் தலைகளும் நேரடியாக தமது ஆசிகளை வழங்கியிருக்கின்றனர் என்பதும் வெளியானது.

பிரக்யா தாக்கூர்
சுனில் ஜோஷியின் கொலையை காதல் – கள்ளக் காதல் கொலையாகக் காட்டி அதன் மேல் ஒரு பாலியல் வண்ணத்தைப் பூசுகின்றது மோடி அரசு.

மேலும், விசாரணை அமைப்புகளின் பிடி மெல்ல மெல்ல இறுகி வருவதை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ் மேல் மட்ட தலைகள், அதன் கரங்கள் தங்கள் கழுத்தை இறுக்கிப் பிடிக்கும் நிலை உருவாவதைத் தவிர்க்க சில நடவடிக்கைகளை எடுக்கின்றன. பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை தற்காலிகமாக அமைப்பில் இருந்து நீக்கியுள்ளனர். மொத்த வலைப்பின்னலையும் ஒருங்கிணைத்து நடத்திச் சென்ற சுனில் ஜோஷி நிரந்தரமாக உலகத்தை விட்டே நீக்கப்படுகிறார்.

தனது தாயாரின் சொந்த ஊரில் தலைமறைவாக இருந்த சுனில் ஜோஷி, அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியில் இருந்த போது படுகொலை செய்யப்படுகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக அவரது பாதுகாவலர்களாக நியமிக்கப் பட்டிருந்த ராஜ், மேகூல், கான்சியாம், உஸ்தாத் ஆகிய நான்கு உதவியாளர்களும் இந்த சம்பவத்தின் பின் மாயமாகியிருந்தனர்.

இது அனைவரும் அறிந்த வரலாறு.

இதுவரை, நடந்த முடிந்த விசாரணைகளின் திசை ஒருவாறாக இருக்கும் போதே அதற்கு சற்றும் பொருந்தாத முடிவுகளுக்கு தேசிய புலனாய்வுத் துறை வந்தடைந்திருப்பதற்கும் தற்போது மோடி மத்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதற்கும், இந்துத்துவ பயங்கரவாதம் அரசியல் சட்டபூர்வ வடிவங்களை எடுத்து வருவதற்கும் இடையே உள்ள தொடர்புகளை தனியே விளக்கிப் புரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் அதற்கிருக்கும் தொடர்புகளை 2008-ம் ஆண்டிலிருந்து திட்டமிட்ட ரீதியில் பூசிமொழுகி வந்தது. தப்பியோடும் பல்லி, ஆபத்து நெருக்கடிகளின் போது வாலைக் கத்தரித்து விடுவது போல சுனில் ஜோஷியைத் திட்டமிட்டே கொன்றிருந்தனர் எனபதே ஏற்கனவே கிடைத்திருந்த தடயங்களின் யதார்த்தப்பூர்வமான நீட்சியாக இருந்திருக்க வேண்டும்.

இந்நிலையில், சுனில் ஜோஷியின் கொலையை காதல் – கள்ளக் காதல் கொலையாகக் காட்டி அதன் மேல் ஒரு பாலியல் வண்ணத்தைப் பூசுவதன் மூலம் அக்கொலையைத் தொடர்ந்த தர்க்கபூர்வமான காரணிகளின் சங்கிலித் தொடர் தனது காக்கி டவுசரோடு பிணைக்கப்பட்டிருப்பதை மூடி மறைக்கவே இந்த புதிய கதை கட்டப்பட்டுள்ளது.

இப்படிச் சொல்வதால் , ‘தேசத்தின் நலனுக்காக திருமண வாழ்க்கையை மறுத்து, பாலியல் இன்பங்களைத் துறந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் துறவிகளைப் போல் வாழ்பவர்கள்’ என்று பீற்றிக் கொள்ளப்படும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர்களின் (பிரச்சாரக்) தனிப்பட்ட ஒழுக்கசீலங்களைப் பற்றிய மயக்கங்கள் ஏதும் இருப்பதாக அர்த்தம் இல்லை.

சட்டசபைக்குள் புளூ பிலிம் பார்த்ததாகட்டும், கோவிந்தாச்சார்யா – உமாபாரதி விவகாரங்களாகட்டும், சஞ்சய் ஜோஷியின் நீலப்பட சி.டியாகட்டும், இன்னும் ஓரினச் சேர்க்கை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளாகட்டும் – அவர்களே சொல்லிக் கொள்ளும் ஒழுங்கசீலத்தின் மேல் அவர்களே ஒண்ணுக்கடிக்கும் போது நாம் மட்டும் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும். ஆனால் இங்கே ஒரு பயங்கரவாத செயலை மறைப்பதற்கே சங்க வானரங்கள் இப்படி ஒரு கதையை புனைந்துரைக்கின்றன.

ஒட்டு மொத்தமாக பாலியல் காரணங்களைக் காட்டி ஜோஷியின் மரணத்தை மட்டுமல்ல, குண்டு வெடிப்புகளையே கூட இதே காரணத்தைக் கொண்டோ அல்லது இதையொத்த வேறு அற்பக் காரணங்களை முன்வைத்தோ இந்துத்துவ பாசிஸ்டுகள் வேறு ஒரு திசைக்கு நகர்த்தும் சாத்தியங்களும் இருக்கிறது.

மோடி ஆட்சியில் இந்தியாவின் வரலாறு மட்டும் திருத்தப்படுவது இல்லை, இந்துமதவெறியர்களின் குற்றச் செயல் வரலாறும் மாற்றி எழுதப்படுகிறது. வரலாற்றை திருத்தும் பாசிசத்தின் பிரச்சாரப் பணி ஆரம்பித்து விட்டது என்பதால் பயங்கரவாதம் இனி நம் வீட்டுக்கதவை எப்போதும் தட்டலாம்.

பழைய பேப்பர்

2

“பழைய பேப்பர்… இரும்பு… பால் கவர்
ஈயம்… பித்தாள… ”
அந்த மூன்று சக்கர மிதிவண்டியில்
துரு பிடிக்காத பாகம்
அவன் குரல் மட்டும்தான்!

தலையில் ஓடும் வியர்வை
மூக்கு நுனியில்
சூரிய முட்டையாய் உடையும்,
உச்சி சூரியனை
பிடிவாதக் கால்கள்
மிதித்து மேலேறும்
கொத்தாகப் பேப்பர் பார்க்கையில்
படிக்கல் சூடு
மனதில் குளிரும்.

வாங்கிக் குடிக்கும்
சொம்புத் தண்ணீரை
தொண்டைக் குழி
வாங்கும் வேகத்தில்,
ஏறி இறங்கும்
குரல்வளை மேடு
அடுத்தத் தெருவின்
நினைப்பில் கரையும்.

சத்துமாவு டப்பாவை
காலில் மிதித்து,
சிதறிய பால்கவரை
ஒரு பிடிக்குள் அமுக்கி,
சந்தேக கண்கள் சரிபார்க்க
தராசை தூக்கிப் பிடிக்கையில் பசி அடங்கும்.

வண்டியின் கைப்பிடி சூடுக்கு
வழியும் வியர்வையே ஆறுதல்,
ஓட்டுபவரின் உடம்பு சூடு
தாங்காமல்
ஒவ்வொரு பாகமும்
இரும்புக் குரலில் கத்தும்.
சக்கரமோ
இன்று மாலைக்குள்
இலக்கை எட்ட வேண்டும்
என மிதிக்கும் தொழிலாளியின்
உயிர் மூச்சில் சுற்றும்…

ஏ! பழைய பேப்பர்
என்று எங்காவது ஒரு
பதில் குரல் கேட்க எத்தனித்து
அவன் செவிமடலும்
இமை மடலும்
வெயில் தோற்க விரியும்!

– துரை.சண்முகம்.

பயனர்களை ஆட்டுவிக்கும் பேஸ்புக் அல்காரிதம்

3

பேஸ்புக்கில் நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக போடும் நிலைத்ததகவல்கள் அனைத்துமே உங்கள் நட்பு வட்டத்திலிருக்கும் அனைவரின் முகப்பக்கத்திலும் காட்டப்படுகிறதா என்பதையும் உங்கள் நண்பர்கள் அனைவருடைய நிலைத்ததகவல்கள் அனைத்துமே உங்கள் முகப்பக்கத்தில் காட்டுகிறதா என்பதையும் சோதித்து பார்த்திருக்கிறீர்களா?

லைக்வயர்ட் (Wired) இணையதளத்தை சேர்ந்த மேட் ஹோனன் (Mat Honan) என்ற பத்திரிக்கையாளர் சோதனை முயற்சியாக இரண்டு நாட்களுக்கு பேஸ்புக்கில் பிடித்தது, பிடிக்காதது என தான் பார்க்கும் அனைத்தைக்குமே லைக் என்ற விருப்பத்தை தெரிவிப்பது என முடிவெடுத்து செயல்படுத்தியுள்ளார்.

நண்பர்களின் நிலைத்தகவலில் இருந்து செய்தி ஓடையில் வரும் தகவல்கள் மற்றும் விளம்பரங்கள் வரை அனைத்திற்கும் அவர் விருப்பம் (Like) தெரிவித்துள்ளார். சோதனையின் ஒரு நாள் முடிவிலேயே அவரது பேஸ்புக் பக்கம் அவருடைய நண்பர்களின் நிலைதகவல்கள் எதையுமே காட்டவில்லை, பக்கம் முழுவதுமே விளம்பரதாரர் மற்றும் செய்தி நிறுவனங்களின் தகவல்களால் நிரம்பி வழிந்துள்ளது. இது மட்டுமல்ல இச்சோதனையின் மோசமான விளைவு மறுநாள் தெரியவந்தது. அவரது பக்கம் மட்டுமின்றி நண்பர்களின் பக்கத்திலும் கூட இவர் விருப்பம் தெரிவித்த விளம்பர மற்றும் செய்தி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அவர்கள் “என்ன நடந்து விட்டது” என்று அவரை தொடர்பு கொண்டு விசாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அதாவது நட்பு வட்டத்திலிருப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் பதியும் எல்லா நிலைத்தகவல்களும் உங்கள் நண்பர்களுடைய பக்கத்தில் காண்பிக்கப்படுவதில்லை என்பதையும் நட்பு வட்டத்திலிருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளும் நிலைத்தகவல்கள் அனைத்தும் உங்கள் பக்கத்தில் காட்டப்படுவதில்லை என்பதையும் ஒரு அதிதீவிர – லைக் போடும் சோதனையின் மூலம் நிரூபித்துள்ளார் மேட் ஹானன்.

பேஸ்புக் உங்கள் முகப்பக்கத்தில் எதை காட்ட வேண்டும் என்பதை தீர்மானிக்க மென்பொருள் படிமுறையை (Algorithm) பயன்படுத்துகிறது. 2014 முதல் பேஸ்புக் செய்தி ஓடை என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. பேஸ்புக்கில் ஒருவர் விருப்பம் தெரிவிக்கும் தகவல்கள் மற்றும் இணையத்தில் பார்க்கும் பக்கங்களின் அடிப்படையில் அவருடைய விருப்பத்தை கணக்கிடுவதன் அடிப்படையில் பிற விளம்பரதாரர் மற்றும் செய்தி நிறுவனங்களின் தகவல்கள் அச்செய்தி ஓடையில் காட்டப்படுகின்றன.

பேஸ்புக்கின் அல்காரிதம் ஒருவர் விருப்பம் தெரிவிக்கும் தனிநபர் நிலைத்தகவல்கள் மற்றும் இணையத்தில் பார்க்கும் பக்கங்களின் அடிப்படையில் அவருடைய ஆர்வத்தை அறிந்து அது சார்ந்த தகவல்களை, செய்திகளை, விளம்பரங்களை காட்டுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. நண்பர்களின் நிலைத்தகவல்களுக்கு மட்டும் நீங்கள் விருப்பம் தெரிவித்தாலும் கூட அவற்றில் உள்ள குறிச்சொற்களை கொண்டு அவை சார்ந்தவை செய்தி ஓடையில் காட்டப்படும்.

உதாரணமாக, ஏதோ ஒரு நண்பரின் மொக்கை நிலைத்தகவல்களுக்கு நீங்கள் தொடர்ச்சியாக விருப்பம் தெரிவித்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். கொஞ்சம் சீரியசாக பதிவிடும் நண்பரின் நிலைத்தகவல்களை நீங்கள் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அவர் தனது மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் உட்பட பதிவிடும் எந்த நிலைத்தகவலையும் உங்கள் பக்கத்தில் பேஸ்புக் காட்டாது.

மேலும், நாம் போடும் எல்லா நிலைத்தகவலும் நண்பர்களுக்கு காட்டப்படுகிறதா என்பதையும் நண்பர்களுடைய எல்லா நிலைத்தகவலும் நமக்கு காட்டப்படுகிறதா என்பதையும் அறிந்து கொள்ள எந்த வசதியும் பேஸ்புக்கில் இல்லை.

நேரடியாக நண்பர்களுடைய பக்கத்திற்கு போய் பார்ப்பதன் மூலம் அவரது நிலைத்தகவல்களை நேரிடையாக அங்கு பார்க்க முடியும் என்றும் சிலர் வாதிடலாம். நாள் முழுவதும் நம் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவரின் முகப்பக்கத்திற்கும் நேரிடையாக சென்று பார்ப்பதை செயல்படுத்த முடியுமா? அதற்கு வேறு வேலையின்றி முகநூல் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க வேண்டி வரும்.

மேற்சொன்ன அல்காரிதத்தை பேஸ்புக் பயன்படுத்த வேண்டிய தேவையையும், அமெரிக்காவின் FTC போன்ற நெறிப்படுத்தும் அமைப்புகள் அதை கண்டுகொள்ளாமல் விடுவதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பேஸ்புக் பரீசீலனையில்நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை, கருத்துக்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலமா பேஸ்புக் வணிகரீதியில் லாபங்களை ஈட்டி வருகிறது. பயனரின் பக்கத்தில் காட்டும் விளம்பரங்களும், பயனர் பற்றிய தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாலும் தான் பேஸ்புக் வணிகரீதியில் வெற்றிகரமாக தொடர்கிறது. சுமார் 132 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் பேஸ்புக்கின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ. 12 லட்சம் கோடிக்கும் மேல். ஏற்கனவே பேஸ்புக் தனது பயனர்களின் உணர்ச்சிகளை (லைக்குகளை) வணிக நிறுவனங்களுக்கு விற்பது பற்றிய பதிவை வினவில் வெளியிட்டிருந்தோம்.

மேலும், பேஸ்புக் உள்ளிட்ட பல இணைய சேவை நிறுவனங்கள் தங்களது பயனர்களின் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு அமைப்பிடம் பகிர்ந்து கொள்வது எட்வர்டு ஸ்னோடன் வெளியிட்ட தரவுகளில் அம்பலமாகியிருக்கிறது.

எனவே உலகளாவிய தமது கண்காணிப்புக்கு உதவுவதாகவும், விளம்பர மற்றும் பங்குச் சந்தையில் பெரும் சக்தியாகவும் விளங்கும் பேஸ்புக்குக்கு எதிராக ஏதேனும் செய்துவிடுவார்களா என்ன?

அதையும் மீறி நெறிப்படுத்தும் விதிமுறைகளை விதித்து பேஸ்புக்கை சீர்செய்தால், பேஸ்புக் நீங்கள் விரும்பும் பேஸ்புக்காக இருக்காது. பேஸ்புக்கின் தற்போதைய பரபரப்பு, கிளர்ச்சி (Sensation), அவற்றுக்கான லைக்குகள் இதில் பழக்கப்பட்டுவிட்டவர்களுக்கு வரிசைகிரமமாக வரும் நண்பர்களின் நிலைத்தகவல்கள் அலுப்பை ஏற்படுத்தும்.

புரியும்படி சொன்னால், சிறுவர்களுக்கு விற்கப்படும் ஐஸ்கிரீமில் சிறிது போதைபொருளை கலந்து விற்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். சிலகாலத்திற்கு பின் போதையில்லா சுத்தமான ஐஸ்கிரீம் சிறுவர்களுக்கு பிடிக்காது, ஐஸ்கிரீம் இல்லாமல் இருக்கவும் முடியாது. ஏற்கனவே பேஸ்புக்கில் லைக் என்ற விருப்பத்தை பெறுவதே ஒரு ஈகோ-போதையாக நம்மில் பலரை அடிமைப்படுத்தியுள்ளது.

எனவே, பேஸ்புக்கை எதற்காக பயன்படுத்துகிறோம் என்று நாம் நினைப்பதற்கும் நடைமுறையில் பேஸ்புக் யாருக்கு பயன்படுகிறது என்பதற்கும் பாரிய இடைவெளி உள்ளது.

இன்றைய ’நாகரீக’ உலகில் நாம் மேலும் மேலும் தனித் தனித்தீவுகளாக பிரிந்து உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் சமூகத்திடம் பகிர்ந்து கொள்ளுவதற்கான வாய்ப்பை வெகுவாக இழந்து வருகிறோம். மெய் உலகில் சமூக உறவுகளை பேண இயலாதவர்களுக்கு மெய்நிகர் உலகு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் அந்த வாய்ப்பை வழங்குவதாக நாம் நினைக்கிறோம்.

பேஸ்புக் தனிதகவல் பாதுகாப்பு
பேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக பயன்படுத்தாததால் அல்லது புரிந்து கொள்ளாததால் இன்று வரை அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன

பேஸ்புக்கில் ஒருவர் தனது குழந்தைப் பருவம் முதலான பழைய, புதிய நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், உறவினர்கள் என தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரையும் தனது நட்பு வட்டத்தில் வைத்துக் கொண்டு உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற வகையில் பலர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தனிநபரின் தகவல்கள், புகைப்படங்கள் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை விபரங்களை பகிரங்கப்படுத்துவதுடன், சமூக மற்றும் இணையக் குற்றங்கள் நடப்பதற்கு அடிப்படையாக அமைகின்றன. குறிப்பாக பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் பெண்களின் படங்களை பாலியல் ரீதியில் தவறாக சித்தரித்து பதிவேற்றுவதில் ஆரம்பித்து கடும் மன உளைச்சலை கொடுக்கும் பல அத்துமீறல்கள் நடக்கின்றன.

பேஸ்புக் தனது பயனர்களின் அந்தரங்கத்தை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு பயனரும் தான் பதிவிடும் ஒவ்வொரு நிலைத் தகவலையும் யார் யார் பார்க்கலாம் என்பதை மட்டுப்படுத்தும் வசதி, தங்களது தனிப்பட்ட விவரங்களையும் நிலைத்தகவல் ஓடைகளையும் (status feed) நட்பு வட்டத்தையும் முன்பின் அறியாதவர்கள் பார்க்க முடியாமல் மட்டுப்படுத்தும் வசதி, உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளை (Privacy Settings) கொண்டு வந்தது. ஆனால் பலரும் பேஸ்புக்கின் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாக பயன்படுத்தாததால் அல்லது புரிந்து கொள்ளாததால் இன்று வரை அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. இந்த வகையான அத்துமீறல்களை மட்டுமே பெரும்பாலான பயனர்கள் பிரச்சனையாக கருதுகின்றனர்.

ஆனால், தனிநபர்கள் மட்டும் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக பயன்படுத்தவில்லை. பேஸ்புக் நிறுவனமே தனது பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி விற்றுள்ளது.

பயனர்களின் தனித் தகவல்கள் பகிர்ந்து கொள்வதை மட்டுப்படுத்தும் அமைப்பை (Privacy Settings) அவர்களை அறியாமலேயே மாற்றுவதிலிருந்து தனிநபர் தகவல்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது வரை பல மீறல்கள் நடந்ததை அடுத்து 2011-ம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையம் (FTC) தனிநபர் அந்தரங்கம் தொடர்பாக சில நெறிமுறைகளை நிர்ணயித்து அவற்றை பின்பற்றுமாறும் அவை பின்பற்றப்படுவதை கண்காணிக்க சுயாதீனமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவும் பேஸ்புக்கிற்கு உத்தரவிட்டது.

“என்ன செய்வது, திரும்பவும் புறா வழி தூது என்று மறுபடியும் கற்காலத்திற்கே சென்றுவிடலாமா” என்று அவர்கள் கேட்கலாம். இதற்கு பதிலளிக்கிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த சட்டக் கல்வி மாணவர் மேக்ஸ் செரிம்ஸ்.

பேஸ்புக்கின் நடைமுறைகள் ஐரோப்பிய தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாக குற்றம் சுமத்தியுள்ள மேக்ஸ் செரிம்ஸ், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக் வேவு பார்த்ததாகவும், அவற்றை அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ-வுக்கு தருவதாகவும், பயனர்களின் அந்தரங்க தகவல்களை வேவு பார்த்ததற்காக அந்நிறுவனம் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு தலா ரூ 40 ஆயிரம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் வியன்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கில் பேஸ்புக்கால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவும், வழக்கிற்கு ஆதரவளிக்கவும் அவர் அழைப்பு விடுத்ததையடுத்து அவருக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேக்ஸ்சுக்கு பெருமளவில் ஆதரவு பெருகியிருப்பதால் இது தொடர்பாக பதில் அளிக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கு பற்றி கருத்து கூறிய மேக்ஸ் “நாம் அனைவரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவே விரும்புகிறோம். ஆனால் அந்தரங்கம் பற்றிய கவலையும், அச்சமும் இன்றி பயன்படுத்த விரும்புகிறோம். இப்போது நம் முன்னால் இரண்டு தேர்வுகள் உள்ளன, கற்காலத்திற்கு திரும்பி செல்வது அல்லது எதிர்த்து போராடும் நடவடிக்கையில் இறங்குவது. நாங்கள் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்” என்கிறார்.

முன்னதாக 2011-ம் ஆண்டு முதல் 22 விதிமுறை மீறல் புகார்கள் அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையரிடம் (ODPC) மேக்ஸ் செரிம்சும் அவரது நண்பர்களும் பதிவு செய்திருந்தனர். சென்ற 2013-ம் ஆண்டு பயனர்களின் தகவல்களை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் பிரிசம் (PRISM) திட்டத்திற்கு அளித்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என மேலும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. ப்ரிசம் (PRISM) திட்டத்திற்கு தகவல்களை அளித்த புகாரை நிராகரித்த தகவல் பாதுகாப்பு ஆணையம் மற்ற 22 புகார்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தற்போது அயர்லாந்தின் தகவல் பாதுகாப்பு ஆணையம் முழுமையாக அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தகவல் பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று மேக்ஸ் செரிம்ஸ் குழுவினரின் இணையதளங்களுள் ஒன்றான  europe-v-facebook.org தெரிவிக்கிறது. அதனால் தான் இம்முறை தங்களது போராட்டத்தை நீதிமன்றத்தில் மட்டுமின்றி மக்களிடமும் கொண்டு சென்றிருக்கின்றனர்.

முதலாளித்துவ அமைப்பை தக்கவைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும், அமைப்புகளும், அதன் ஆன்மாவான லாபத்திற்கு எதிராகவும், உலகளாவிய கலாச்சார தாக்குதலுக்கும் எதிராக ஒரு துரும்பையும் அசைத்து விடாது. அதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமின்றி நமது நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் போன்ற நெறிப்படுத்தும் அமைப்புகள் பேஸ்புக் தனது பயனர்களின் அந்தரங்கத்தை மீறுவதை கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றன. மேக்ஸ் செரிம்ஸ் குழுவினரும் கூட விரைவிலேயே சட்ட வழிமுறிகளில் இதற்கு தீர்வு இல்லை என்பதை புரிந்து கொள்ளக்கூடும்.

இதற்கான தீர்வு பேஸ்புக்கின் மெய்நிகர் உலகிற்கு வெளியே மெய் உலகில் சமூகத்திடம் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதிலும், முதலாளித்துவ லாபவெறியின் அல்காரிதம் நம்மை அடிமைப்படுத்துவதற்கு எதிராக போராடுவதிலும் தான் உள்ளது.

– மார்ட்டின்

தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே! பிரச்சார இயக்கம்

0

ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்க கும்பலுக்கு அடிபணியாதே!
தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே!

பிரச்சார இயக்கம்

ன்பார்ந்த தொழிலாளர்களே!

nalachattam-bannerஇந்தியாவில் தொழில் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் பாய்கிறது என்றும், அதை தொழிலாளர் நலச்சட்டங்கள் தான் கெடுக்கின்றன என்றும் அச்சட்டங்களைத் திருத்தத் துவங்கியுள்ளது, மோடி அரசு! முதல் கட்டமாக, தொழிற்சாலைகள் சட்டம், அப்ரண்டீஸ் சட்டம், ஆலைகள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள் தருதல் மற்றும் பதிவேடுகள் பராமரித்தல் குறித்த சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு சட்டத் திருத்தத்துக்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அதன் நகல்களை குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தர வேண்டும் என்பது விதியாக உள்ளது. அந்த விதிகளை மயிராக மதித்து அவசர, அவசரமாக மேற்படி சட்டத் திருத்த மசோதாக்களைத் தாக்கல் செய்துள்ளது மோடி அரசு. இதுதான் மோடி அரசின் ஜனநாயகம்!

  • ஒவ்வொரு சிப்டிலும் ஆட்களை குறைத்துவிட்டு, எஞ்சி இருக்கின்ற தொழிலாளியை கூடுதல் நேரம் வேலை செய்ய வைப்பதை ஓவர்டைம் என்கின்றனர், முதலாளிகள். இப்படி ஓவர்டைம் செய்வது தொழிலாளியின் உடல்நலத்துக்கு கேடு என்பதால், காலாண்டுக்கு 50 மணி நேரம் மட்டுமே ஓவர்டைம் செய்ய வேண்டும் என்று தொழிற்சாலைகள் சட்டத்தில் வரம்பு இருந்தது. இந்த வரம்பினை 100 மணிநேரமாக உயர்த்தி, சட்டத்திருத்தம் செய்யப்போகிறது, மோடி அரசு. இந்த சட்டத்திருத்தம் செய்யப்படுமானால், 8 மணிநேர வேலை என்பதையே 10, 12 மணி நேரமாக மாற்றி விடுவார்கள். அதற்கு மேல் 2, 3 மணிநேரம் ஓவர்டைம் செய்யவைத்து விடுவார்கள், முதலாளிகள். மொத்தத்தில், நாளொன்றுக்கு 12 – 15 மணிநேரம் வேலை செய்வது கட்டாயமாகி விடும். கட்டாய உழைப்பினால் முதலாளியின் உற்பத்தியும், லாபமும் பன்மடங்கு பெருகிவிடும். தொழிலாளிக்கு என்ன ஆகும்? 30 வயதில் மூட்டு தேய்ந்து, 40 வயதில் நாடி தளர்ந்து, 50 வயதில் சாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். முதலாளியின் லாபவேட்டைக்கு தொழிலாளியை நரபலி கொடுப்பதுதான் மோடியின் இந்த தொழிலாளர் நலச்சட்ட திருத்தம்.
  • சில தொழிற்சாலைகளில், சில வேலைப் பிரிவுகளில் பெண் தொழிலாளர்கள் இரவு சிப்டில் (இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை) வேலை செய்வதற்கு தடை இருந்தது. இரவு 7 மணி முதல் 10 மணி வரை வேலை செய்தால், வீட்டுக்கு வாகன ஏற்பாடு செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளும் இருந்தன. இவை எல்லாம் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தந்தன. புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட்டால், இந்த பாதுகாப்புகள் பறிக்கப்படும். பெண் தொழிலாளர்கள் ஆண்களை விட குறைவான சம்பளத்தில், எந்தக் கேள்வியும் கேட்காமல் வேலை செய்வார்கள்; சங்கம் அமைக்கவோ, உரிமைகளைக் கேட்கவோ முடியாது; பணிய வைப்பது சுலபம். இந்த காரணங்களுக்காகவே, அவர்களை இரவு சிப்டில் வேலை செய்ய நிர்பந்தம் தருகின்றனர். இந்த சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், பெண் தொழிலாளர்களோ வேலைச்சுமை, குறைந்த சம்பளம், பாலியல் வன்கொடுமை, குடும்ப நெருக்கடி போன்ற கொடுமைகளுக்கு ஆளாக நேரிடும்.
  • தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்) சட்டத்தைத் தளர்த்துவது என்பது மற்றொரு திட்டமாகும். தொழில்நுட்பத் தகுதி உள்ளவர் மட்டுமே அப்ரண்டீஸ் பயில முடியும் என்கிற இப்போதைய நிபந்தனை நீக்கப்பட்டு, படித்தவர், படிக்காதவர் யார் வேண்டுமானாலும் அப்ரண்டீஸ் ஆகலாம் என்கிற வகையில் கதவு திறக்கப்படும். இந்த சட்டத்திருத்தம் அமுலுக்கு வருமானால், 10 – 20 நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு, எஞ்சிய தொழிலாளர்களை அப்ரண்டீஸ் என்று கணக்கு காட்டிவிடுவார்கள். மலிவான கூலிக்கு தொழிலாளர்களைச் சுரண்டுவதும், நிரந்தரம் செய்யாமலேயே பல ஆண்டுகளுக்கு ஒட்ட ஒட்ட உறிஞ்சுவதும் தான் நடக்கும். இப்போது சட்டவிரோதமான முறையில் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் டிரெய்னி, அப்ரண்டீஸ் என்கிற பெயரில் பல ஆண்டுகளுக்கு சுரண்டப்பட்டு, வேலைநிரந்தரம் இல்லாமலேயே துரத்தப் படுகின்றனர். இந்நிலையில், மேற்படி சட்டத்திருத்தமானது, மேலும் பல இலட்சம் பேரை முதலாளிகள் சுரண்டுவதற்கு சட்ட அங்கீகாரத்தை தந்துவிடும். வேலைநிரந்தரம் என்பதையே குதிரைக் கொம்பாக்கிவிடும்.
  • இந்திய நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் நலன் காக்க 44 சட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சட்டமும் தொழிலாளி வர்க்கத்தின் தீரமிக்கப் போராட்டத்தின் பலனாகப் போடப்பட்டவைதான். ஆனால், ஒரு சட்டமாவது தொழிலாளி வர்க்கத்தைப் பாதுகாத்திருக்கிறதா? இல்லை. 7 பேர் சேர்ந்தால் சங்கம் ஆரம்பிக்கலாம் என்கிற உரிமையை 88 ஆண்டுகளுக்கு முன்பே காலனியாதிக்க காலத்திலேயே நிலைநாட்டி இருக்கிறோம். ஆனால், 700 பேர் சேர்ந்தால் கூட சங்கம் ஆரம்பிக்க முடியவில்லையே, இதைக் கண்டு சந்தோசப்பட முடியுமா? முதலாளிகளது தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எதிராக கிரிமினல் வழக்கினை தொடுப்பதற்கு கூட சட்டத்தில் வழியைக் கண்டோம். இந்த சட்டத்தால் ஒரு முதலாளியாவது தண்டிக்கப்பட்டிருக் கிறானா? புகார் கொடுத்த தொழிலாளிக்கு வேலை பறிபோன கொடுமையைத்தான் கண்டிருக் கிறோம். 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்தால் வேலைநிரந்தரம் என்று கூட சட்டப் பாதுகாப்பை பெற்றோம். எல்லா வேலைகளும் காண்ட்ராக்ட் மயமாகி, வேலை நிரந்தரம் என்பதே கேலிக்கூத்தாகிவிட்டது.

தொழிலாளர் நலச்சட்டங்கள் வெறும் காகிதத்தில் இருப்பதைக் கூட முதலாளிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான், அதை எல்லாம் “திருத்து” என்கிறான். “காலாவதியாக்கிவிடு” என்கிறான்.

தொழிலாளர் நலச் சட்டங்களை கழிப்பறைக் காகிதமாக்கிய கனவான்களில் முதலிடம் பிடிப்பது, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்தான். வேலையைப் பறிகொடுத்த தொழிலாளியிடம் செட்டில்மெண்ட் பேரம் பேசுவது, தொழிற்சங்கப் பதிவுக்கு விண்ணப்பம் கொடுத்த மறுநிமிடமே முதலாளிக்குத் தகவல் தந்து தொழிலாளியைக் காட்டிக் கொடுப்பது, முதலாளிக்கு புரோக்கராக இருந்து சங்கத்தைக் கலைக்குமாறு ‘அதட்டல் அறிவுரை’ தருவது, சட்டப்படியான போராட்டங்களைக் கூட சட்டவிரோதம் என்று அறிவித்து முதலாளிகளுக்கு எடுப்பு வேலை செய்யும் அலுவலகமாக மாறிவிட்டது, தொழிலாளர் துறை. இங்குள்ள அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற மறுதினமே முதலாளிகளது சட்ட ஆலோசகர்களாகி விடுகின்றனர். முதலாளிகளின் கைக்கூலியான மனிதவள (எச்.ஆர்.) அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் சிறந்த கைக்கூலிகளாக இருப்பதாக முதலாளிகள் பாராட்டுகின்றனர். ஒரு கையில் அரசாங்க பென்சன்! மறு கையில் தொழிலாளர்களது கழுத்தை அறுத்ததற்கு முதலாளிகள் கொடுக்கின்ற கமிசன்.

தொழிலாளர் நலச்சட்டங்களை செல்லாக் காசாக்கியதில் நீதித்துறையின் பங்கு அலாதியானது! தப்பித்தவறி ஏதாவது ஒரு வழக்கில் தொழிலாளிக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால், முதலாளிகள் அடுத்தடுத்த கோர்ட்டுகளுக்கு மேல்முறையீடு செய்து, தொழிலாளியின் ஆயுள் முழுவதையும் கோர்ட்டு வாசலிலேயே அழித்து விடுவதற்கேற்பதான் கோர்ட்டு நடைமுறையும் உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றமே காண்டிராக்ட் என்கிற கொத்தடிமை முறையைப் பாதுகாத்து தரப்பட்ட தீர்ப்புகள், பணிநிரந்தர உரிமையை நிராகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புகள், சட்டவிரோத வேலைநீக்கத்தை அங்கீகரித்து தரப்பட்ட தீர்ப்புகள் ஏராளம்…ஏராளம். உலகமயமாக்கத்துக்கு ஏற்பத்தான் அரசியல் சட்டத்துக்கு நீதிமன்றம் விளக்கம் கூற முடியும் என்று தீர்ப்புகள் தொழிலாளர்களுக்கு எதிராக களமிறங்குகின்றன. போதாக்குறைக்கு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடி ஆகாது என்று அரசே ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

nalachattam-poster

தொழிலாளர் நலச்சட்டங்கள் இருந்த சுவடு கூட தெரியாமல் அவற்றை அழித்துவிட சொல்கிறது முதலாளிவர்க்கம். எந்தச் சூழ்நிலையிலும் தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமைகளை நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாது என்பதும் முதலாளிகளின் கட்டளையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கக் கும்பலின் அடியாளாக இருந்து அடுத்தடுத்த தாக்குதல்களைத் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்து முடக்குவதே அரசின் நோக்கமாக இருக்கிறது.

இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் என்றைக்கும் நமக்கு விடிவு இல்லை என்பதை உணர்வோம். தொழிற்சங்கங்கள் என்கிற போர்வையில் தரகு வேலை செய்யும் துரோகிகளால் நமது துயரங்களைப் போக்கவோ, உரிமைகளைப் பாதுகாக்கவோ முடியாது. மூலதன கொடுமைக்கு முடிவு கட்டவோ, இவர்களின் அடியாளான அரசைத் தகர்த்தெறியவோ முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையான புரட்சிகர தொழிற்சங்கங்களால் மட்டுமே இதனை சாதிக்க முடியும். போர்க்குணமிக்க போராட்டங்களைக் கட்டியமைத்து தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் காப்போம்! அதற்கு மாற்று அதிகாரத்திற்கான கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!

மத்திய, மாநில அரசுகளே!

  • தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துகின்ற முயற்சிகளைக் கைவிடு!
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மதிக்காத முதலாளிகளைக் கைது செய்! அவர்களது சொத்துக்களை நட்ட ஈடின்றி பறிமுதல் செய்!
  • தொழிலாளர் நலத்துறையை தொழிற்சங்கங்களது கண்காணிப்பில் கொண்டுவர சட்டம் இயற்று!
  • தொழிலாளர் விரோதப் போக்கின்கீழ் தரப்படும் புகார்களை 3 மாதத்தில் விசாரித்து, கிரிமினல் நடவடிக்கை எடு!
  • ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் முதலாளிகளது ஆலோசகர்களாக இருப்பதை தடை செய்! அவர்களது பென்சனை ரத்து செய்!

தொழிலாளர்களே!

  • தொழிலாளர்களது குரல்வளையை நெருக்கும் வகையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுவதை முறியடிப்போம்!
  • 8 மணிநேர வேலைக்கு வேட்டு வைத்து, தினசரி 15 மணிநேரம் வேலை செய்வதை நிரந்தரமாக்கும் சட்டத்திருத்தங்களை தகர்த்தெறிவோம்!
  • அப்ரண்டீசுக்கான தகுதிகளை அப்புறப்படுத்தி, காண்டிராக்ட் முறையை  நிரந்தரமாக்கும் சட்டத்திருத்தங்களை அனுமதியோம்!
  • பெண்களை இரவுப்பணியில் அமர்த்தி, அதிக வேலைச் சுமை – குறைந்த கூலி கொடுத்து, வரம்பற்ற சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்டத்திருத்தங்களை தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
  • வேலைநிரந்தரத்தை அடியோடு மறுத்து , சுரண்டலுக்கு அங்கீகாரம் தருகின்ற சட்டத்திருத்தங்களை எதிர்த்து முறியடிப்போம்!

செப்டம்பர் – 2014

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்
பதிவு எண் 24/KRI
தொடர்புக்கு – 97880 11784 ஒசூர்.

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

அரசுப் பள்ளிகள் : பெற்றோர் சங்கத்தின் நேரடி நடவடிக்கை

1

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் இல்லை
கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பறை இல்லை

என்பதை கண்டித்து 27.8.2014 அன்று காலை 10 மணியளவில் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மாவட்ட கல்வி துறை அதிகாரி ஒரு வாரகாலத்தில் போதுமான ஆசிரியர்களை நியமிக்கின்றோம் என உறுதி அளித்தார். கோட்டாட்சியர் அன்றே கம்மாபுரம் சென்று புதிய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து புதிய வகுப்பறை கட்டுவதை துரிதப் படுத்தினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு பேரணியை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். பேரணியில் பெற்றோர் சங்கத்தினர், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர், புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனியினர், பெற்றோர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பேரணி பாலக்கரை, கடலூர் சாலை, காய்கறி சந்தை வழியாக மாவட்ட கல்வி அலுவலகத்தை அடைந்தது. அலுவலகம் முன்பாக மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் செந்தாமரைக்கந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி +2 மாணவிகளுக்கு இதர பள்ளிகளிலிருந்து முதுகலைபட்டதாரி ஆசிரியர்களை தற்காலிக மாற்றம் செய்து ஒருவாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் நியமிக்க உள்ளார் என்றும், கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

பேரணி,ஆர்ப்பாட்டம் போஸ்டர்

விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குறித்து மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் 25-6-2014 அன்று ஆய்வு செய்ததில் கீழ்கண்ட விபரங்கள் தெரியவந்தன.

  • மேற்படி பள்ளியில் 2013-ம் ஆண்டு +2 பொதுத்தேர்வு எழுதிய 479 மாணவிகளில் 212 பேர் பெயிலாகி விட்டனர். 2014-ம் ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய 411 மாணவிகளில் 100 மாணவிகள் பெயிலாகிவிட்டனர். ஆசிரியர் பற்றாக்குறையே இதற்கு காரணம்.
  • இவ்வாண்டு (2014-15) +1 மற்றும் +2 படிக்கும் மாணவிகள், அவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பற்றிய விவரம்:
    தமிழ்- 863 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    இயற்பியல்- 650 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    வேதியல் – 651 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    கணிதம் – 331 மாணவிகளுக்கு – 1 ஆசிரியர்
    மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு தலா 1 ஆசிரியர் பணியிடம் தான் நிரந்தரமாக அரசு அனுமதித்துள்ளது.
  • போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் ஒரே ஆசிரியர் பல வகுப்பு மாணவிகளை ஒன்றாக கூட்டமாக வைத்து மரத்தடியில் பாடம் நடத்துவதால் மாணவிகளின் கல்வித்தரம் குறைந்து தேர்வில் தேர்ச்சி அடைந்தாலும் அதிக மதிப்பெண் பெறாமல் உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்படுகிறது. பள்ளியில் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.

போதுமான ஆசிரியர்களை உடன் நியமிக்குமாறு கோரி கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும், சென்னை, பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் எங்களது 9-7-2014 நாளிட்ட கடிதத்தில் முறையீடு செய்யப்பட்டது.

27-7-2014 நாளிட்ட செயற்குழுவில், “மேற்படி பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை 15 தினங்களில் நியமிக்காவிட்டால் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப்படும்” என்று தீர்மானம் இயற்றி அவற்றை கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டது.

மேற்படி பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 மாணவிகளின் பெற்றோர் தனித்தனியாக கையொப்பமிட்ட 265 மனுக்கள் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும், சென்னை பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் 7.8.2014 அன்று அனுப்பப்பட்டன.

எந்த நடவடிக்கையும் கல்வித் துறை எடுக்கவில்லை. எனவே, பள்ளியில் பயிலும் +1 மற்றும் +2 மாணவிகளின் பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம் 16.8.2014 அன்று நடத்தியதில் போராட்டம் நடத்தினால்தான் தீர்வு கிடைக்கும் என பெண்கள் வலியுறுத்தினர். 27-8-2014 அன்று விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

4.8.2014 அன்று கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் பார்வையிட்ட போது அப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்களுக்கு மரத்தடியில் மண்தரையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். மதில் சுவரே கரும்பலகையாக காட்சியளித்தது. இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், விருத்தாசலம் கோட்டாச்சியர், வட்டாச்சியார், என அனைத்து ஆட்சியர்களுக்கும் 6.8.14 நாளிட்ட கடிதத்தில் முறையீடு செய்யப்பட்டது. எந்த அசைவும் இல்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நமது போராட்ட அறிவிப்பிற்கு பிறகு கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட விருத்தாசலம் வட்டாட்சியர் 23-8-14 அன்று தேர்வு செய்து அளவீடு செய்துள்ளார். மேலும் விருத்தாசலம் கோட்டாட்சியர் 26-8-14 அன்று மேற்படி பள்ளிக்கு கட்டிடம் கட்டும் இடத்தை ஆய்வு செய்துள்ளார்.

மது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தினர் தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை எதிர்த்தும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற கல்வி ஆண்டின் இறுதியிலே விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் சந்திப்பினை ஏற்பாடு செய்து தொடர்ந்து பல கூட்டங்களை நடத்தினர்.

இந்த கல்வி ஆண்டு தொடக்கத்தில் 13 ஏக்கரில் அமைந்துள்ள விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நமது சங்கத்தினர் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பினை ஏற்பாடு செய்தோம். அந்த பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் புதர்கள் மண்டி கிடந்தது. அதை புகைப்படமாக எடுத்து அப்படியே மாவட்ட ஆட்சியருக்கு புகாராக அனுப்பினோம். உடனே நகராட்சி ஊழியர்கள் புதரை அகற்றினர். பள்ளி தலைமை ஆசிரியர் அவர் பங்குக்கும் சுத்தம் செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு 5 அல்லது 10 பெற்றோர் வந்தாலே பெரிய விஷயம் என்றும் அப்பள்ளி ஆசிரியர் நினைத்து இருந்த நிலையில் நமது முயற்சியால் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் வந்தனர்.

நமது சங்கத்தின் சார்பில்  “மாணவர்களின் எதிர்காலம், பெற்றோர்-ஆசிரியர் கையில்” என தலைப்பிட்டு நோட்டீஸ் அச்சிட்டு 10-ம் வகுப்பு மற்றும் +2 மாணவிகள் ஒவ்வொருவரிடமும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு பெற்றோர்கள் அவசியம் வரவேண்டும் என வலியுறுத்தி கூட்டம் நடைபெறும் முதல் நாள் மாலை கொடுத்து அனுப்பப்பட்டது.

பிரசுரத்தில் “அன்பார்ந்த பெற்றோர்களே அனைத்து சுக துக்க காரியங்களுக்கும் தவறாமல் போகிறோம். டி.வி சீரியல் பார்க்க் தவறுவதில்லை. நம் பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக படிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை சந்திக்க தவறலாமா? நேரம் இல்லை வேறு வேலை இருக்கிறது என்று காரணம் சொல்லாதீர்கள். உங்கள் பிள்ளைகள் நல்ல மனிதனாக வளர,பொதுத்தேர்வில் வெற்றி பெற அதிக மதிப்பெண் பெற கல்வித்தரம் மேம்பட ஆசிரியர்களை சந்திப்பது அவசியம். அனைவரும் தவறாமல் வாரீர். மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினராக சேருங்கள்” என அச்ச்டித்து விநியோகித்தோம்.

Notice

மறுநாள் கூட்டத்திற்கு 500-க்கும் மேற்பட்டோர் ஆண்கள், பெண்கள் என திரளாக வந்திருந்தனர். பெற்றோர்களிடம் பேசிய ஆசிரியர்கள், உங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருகின்றனரா, தினமும் மாலையில் வீட்டில் படிக்கின்றனரா, பள்ளியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா” என்பதை கண்காணித்து அவர்களின் கல்வியில் கவனம் செலுத்துமாறு கூறினர். கைபேசி போன்றவற்றை பிள்ளைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பக் கூடாது என வலியுறுத்தினர்.

ஒரு ஆசிரியர், மாதம் தோறும், வாரம் தோறும் நடைபெறும் தேர்வுகளின் தேர்ச்சி மதிப்பெண்ணை பார்த்து குறையிருந்தால் ஆசிரியரிடம் தெரிவித்தால் தாங்கள் அந்த மாணவியிடம் சிறப்பு கவனம் எடுத்து சொல்லிக் கொடுப்போம் என்றார்.

“பள்ளிக்கு பல மாணவிகள் காலம் தாமதமாக வருகின்றனர். இலவச சைக்கிள்கொடுக்கிறோம். இலவச பஸ் பாஸ் கொடுக்கிறோம். ஏன் தாமதம்?சாப்பிடாமல் பல மாணவிகள் வந்து இங்கு மயங்கி விழுகின்றனர். இதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மதிய உணவு நாங்கள் தருகிறோம். கிராமத்தில் இருந்து வரும் மாணவிகள் சாப்பாட்டிற்காக தாமதமாக வருவதை தவிக்க வேண்டும்” என்பதை பெற்றோர்களிடம் வலியுறுத்தி தலைமை ஆசிரியர் பேசினார்.

“பிள்ளைகள் தவறு செய்யும்பொழுது ஆசிரியர் கண்டித்தால் அதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ளாமல் ஆசிரியரை புகார் கூறும் போக்கு உள்ளது. அதனை பெற்றோர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

நமது சங்கத்தின் தலைவர் வை.வெங்கடேசன் பேசும் பொழுது, “அரசுப் பள்ளி நமது பள்ளி, அதனை தரம் உயர்த்த போராட வேண்டும் அதுதான் நிரந்தர தீர்வு. நமது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதன் மூலமே தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தை கட்டணக் கொள்ளையை ஒழிக்க முடியும்” என பேசினர்.

இறுதியில் பெற்றோர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். பெற்றோர்கள் பெரும் விழிப்புணர்வு பெற்றதாகவும் தங்கள் பிள்ளைகளின் படிப்பின் மீது முழு கவனம் செலுத்துவதாகவும் கூறி அன்றே நிறைய பெற்றோர்கள் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து சங்கத்தின் செயல்பாடுகளில் தங்களையும் இணைத்துக் கொள்வதாக உறுதியளித்தனர்.

நமது தொடர் போரட்டத்தால் முதன்மை கல்வி அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தி ஆசிரியர் பற்றாக்குறை உள்ள இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளுமாறு வாய்மொழி உத்தரவிட்டார். ஆனால் பள்ளியில் போதிய நிதியில்லை. மேலும் +2 விற்கு அனுபவமில்லாத ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை உள்ளது.

நமது பெற்றோர் சங்க போராட்டத்தை அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் தூண்டிவிடுகின்றனர் என கல்வி துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதனால் நீங்கள் போராட்டம் நடத்த வேண்டாம். நாங்கள் நிலைமையை சமாளிக்கிறோம் என சங்கத்தினரிடம் தலைமை ஆசிரியர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் நமது சங்கம் தற்காலிக ஆசிரியர் தேவையில்லை, நிரந்தர ஆசிரியர் நியமிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்து நடத்தினோம். இந்நிகழ்ச்சி பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்துவதாகவும் சங்கமாக திரண்டு போராடுவதன் வலிமையினையும் உணர்த்துவதாக அமைந்தது.

இது போல் விருத்தாசலம் டேனிஷ் மிஷன் என்ற அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்தினோம்.

மஞ்சக்கொல்லை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்தினோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சங்கத்தின் சார்பில் மாணவர்கள் மூலமாக பிரசுரம் கொடுத்து அழைத்தது நல்ல பலனை கொடுத்தது. ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உற்சாகம் அடைந்நதனர். நாங்கள் அழைத்தால் பெற்றோர்கள் வருவதில்லை என நமது சங்கத்தை பாராட்டினர்.

பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு கல்வித்  துறையை, நிர்வாகத்தை சுலபமாக நாம் அணுக பெற்றோர் சங்கத்தில் சேர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம்.

2-9-14 அன்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பிரசுரம் அச்சடித்து மாணவர்களிடம் கொடுத்து உள்ளோம்.

அரசு பள்ளிக்காக மாணவர்களின் கல்வி உரிமைக்காக பெற்றோர் சங்கத்தின் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தொடர்கிறது.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு
வை.வெங்கடேசன்,தலைவர்
9345067646

ஜன் தன் யோஜனா – திருட வாரான் வீட்டு கஜானா!

11

”ப்ரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா – மேரா காத்தா பாக்ய விதாதா” சௌகார் பேட்டை சேட்டு பான் பராக்கை புளிச்சென்று துப்பி விட்டு இந்தியில் ஏதோ திட்டுகிறாரா? குழப்பம் வேண்டாம். இது பிரதமர் மோடியின் சிந்தனையில் உதித்த ஒரு புத்தம் புதிய திட்டம். இப்படித்தான் ஊடகங்கள் அதிசயிக்கின்றன.

பிரதான் மந்த்தி ஜன் தன் யோஜனா - மேரா காத்தா பாக்ய விதாதா
ப்ரதான் மந்த்ரி ஜன் தன் யோஜனா – மேரா கட்டா பாக்ய விதாதா” சௌகார் பேட்டை சேட்டு பான் பராக்கை புளிச்சென்று துப்பி விட்டு இந்தியில் ஏதோ திட்டுகிறாரா?

மோடி சுதந்திர தின உரையில் பேசும் போது நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளாகியும் 68 சதவீத மக்களுக்குக் கூட வங்கிக் கணக்கு இல்லை என்றும்.. இல்லாத அத்தனை பேர்களுக்கும் உடனடியாக வங்கிக் கணக்கை ஆரம்பித்துக்  கொடுத்து அவர்களை ‘நிதித் தீண்டாமையில்’ இருந்து விடுவிக்கப் போவதாகவும் அறிவித்தார்.

இதன்படி, கடந்த 28-ம் தேதி ஒரே நாளில் நாடெங்கும் சுமார் 600 நிகழ்ச்சிகளும் 77,852 முகாம்களும் நடத்தப்பட்டு ஒன்றரைக் கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. வழக்கமாக வங்கிக் கணக்குத் துவங்க வேண்டுமானால் குறைந்தபட்சம் இரண்டு அடையாள ஆவணங்கள் வேண்டும் என்கிற விதி முறையை ஒன்றாக தளர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. அதே போல், இது பிரதமரின் செல்லத் திட்டம் என்பதால் குறிப்பிட்ட இத்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் கணக்குகளுக்கு குறைந்தபட்ச சேமிப்பு ஏதும் வைக்கத் தேவையில்லை.

கணக்குகள் வைத்திருப்போருக்கு முப்பதாயிரம் வரை ஆயுள் காப்பீடும், ஒரு லட்சம் வரை விபத்துக் காப்பீடும் (எதிர்காலத்தில்) வழங்கப்படும், வங்கிக் கணக்கின் வரவு செலவு விவரங்களை ஆறு மாத காலத்திற்கு ஆராய்ந்து விட்டு 5,000 ரூபாய் மிகைப்பற்று (Overdraft) கடன் வசதி கொடுக்கப்படும் என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. தொண்டையைச் செறுமிக் கொண்டு இடைபுகும் பேங்க் ஆப் இந்தியாவின் விஜயலட்சுமி ஐயர், ‘அதெல்லாம் முதல்ல ரெண்டாயிரம் தான்… அப்பால பொறவு பார்ப்போம்” என்கிறார்.

ஒரு திட்டம் என்று அறிவித்தால் அதன் பின்னே மக்களை கவரும் வெற்று முழக்கமும், முதலாளிகளுக்கு பயன்படும் நோக்கமும் கண்டிப்பாக இருக்கும். ஆனால் மோடி விசயத்தில் முன்னது கூட போதிய அளவுக்கு செட்டப் செய்யப்படவில்லை. எவர் ஆராயப் போகிறார்கள் என்பதனாலும் இந்த அலட்சியம் இருக்கலாம்.

வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள காப்பீட்டை யார் வழங்குவார்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. காப்பீடு வழங்குவதற்கான அடிப்படை நிதியை யார் வழங்குவார்கள் என்றும், அதற்கான ப்ரீமியம் யார் செலுத்த வேண்டும் என்பது பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. நிதி அமைச்சர் மிகைப்பற்று கடனின் அளவு 5000 என்கிறார், வங்கி அதிகாரியோ 2000 என்கிறார். அடுத்து மிகைப்பற்று கடனுக்கான வட்டி விகிதம், கால அளவு குறித்து எந்த விவரங்களுக்கும் சொல்லப்படவில்லை.

எல்லா மக்களும் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் காட்டி வங்கிக் கணக்கு துவங்கலாம் என்கிறார்கள் – நாடு முழுவதும் மாநிலம் விட்டு மாநிலம் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்துள்ள கூலித் தொழிலாளிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏது அடையாளங்கள்?

சி.ஐ.ஐ பின்பாட்டு
மோடிக்கு பின் பாட்டு பாடியுள்ளது தரகு முதலாளிகளின் சங்கமான சி.ஐ.ஐ. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

இத்திட்டம் பற்றியும் நடந்து முடிந்த முகாம் குறித்தும் தனியார் வங்கி ஊழியர் ஒருவரிடம் விசாரித்த போது, இத்திட்டத்தின் படி கணக்கு வைத்திருப்பவர் ஒரு மாதம் பத்து முறைகளுக்கு மேல் பணம் எடுக்க முடியாது என்கிறார். மேலும், எந்த வரைமுறையும் இல்லாமல் போதிய ஆவணங்கள் எதையும் சரிபார்க்காமல், எல்லோருக்கும் வங்கிக் கணக்கு துவங்கி வருவதாகவும், தனியார் வங்கிகள் இதற்கென இலக்கு நிர்ணயித்து மக்களை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.

அதே போல் மிகைப்பற்று கடன் கொடுப்பதற்கு கொலேட்ரல் எனப்படும் சொத்து ஈடு வைக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதிகளைக் குறிப்பிடுகிறார். எனினும், பிரதமரின் செல்லத் திட்டம் என்று சொல்லப்படுவதால், விதிமுறைகளை மீறி எந்த அடையாளங்களும் இல்லாத, திருப்பிச் செலுத்தப்படும் உத்திரவாதம் ஏதும் இல்லாத கடன்களை வழங்குவதும் வங்கிகளைப் பிடித்து புதை குழியில் தள்ளுவதும் ஒன்று தான் என்கிறார். ஆனால் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இந்த மிகைப்பற்று காரணமாக வங்கிகள் திவாலாக போவதில்லை. மாறாக இந்த நிதி மறைமுகமாக முதலாளிகளுக்கு பயன்படும் விதத்தைத்தான் நாம் கண்டு பிடிக்க வேண்டும். இன்று ஐ.டி துறை ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் கூப்பன்கள் போல மக்களுக்கும் கொடுக்கப்படலாம்.

“இது புத்தாக்கத்துடன் கூடிய சரியான திசையில் செல்லும் மிகத் தேவையான திட்டம். நாட்டின் மிகப் பெரிய சவாலான வறுமை ஒழிப்பை நிதி ஒருங்கிணைப்பு மூலம் தீர்க்கும் திட்டம்” என்று மோடிக்கு பின் பாட்டு பாடியுள்ளது தரகு முதலாளிகளின் சங்கமான சி.ஐ.ஐ. சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

சி.ஐ.ஐ. சொல்லும் “எல்லா மக்களையும் நிதி ஒருங்கிணைப்பின் கீழ் கொண்டு வருதல்” என்கிற வார்த்தையும் (financial inclusion), அதை நடைமுறைப்படுத்துவதற்காக மோடி அறிவித்திருக்கும் திட்டமும் மோடி பக்த ஜனங்கள் பீற்றிக் கொள்வது போல் புத்தம் புது சரக்கல்ல.

உங்களுக்கு வங்கியில் கணக்கு இருக்கிறதா?
உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதே நோக்கத்திற்காக மன்மோகன் சிங் முன் வைத்த திட்டம் தான் ‘உங்கள் பணம் உங்கள் கையில்’. எல்லா மக்களுக்கும் ஆதார் அட்டைகளைக் கொடுப்பது; பல்வேறு திட்டங்களுக்காக அளிக்கப்படும் மானியங்களை ஆதார் அட்டையோடு இணைப்பது; ஆதார் அட்டைகளை வங்கி வலைப்பின்னலோடு சேர்ப்பது போன்றவை மன்மோகன் காலத்திலேயே துவங்கப்பட்ட திட்டங்கள்.

அதாவது அனைத்து மக்களையும் நிதிச் சந்தையில் இணைப்பது தான் நிதி ஒருங்கிணைப்பின் நோக்கம். கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட இத்திட்டங்கள் கூட அவர்களது சொந்த மூளையில் உதித்த திட்டங்கள் அல்ல; உலக வங்கியின் திட்டங்கள் தான் அவை. அதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட வங்கி வலைப்பின்னலுக்கு வெளியே சுய சார்பு பொருளாதார கட்டமைப்பு எதுவும் நிலவக் கூடாது என்பதே இதன் நோக்கம்.

ஏற்கனவே வங்கிகளின் நிதி ஓடைகளின் பாதையில் செயல்பட்டு வந்த தேசிய தொழில்களையும், சிறு குறு தொழில்களையும் சீரழித்து சின்னாபின்னமாக்கிய பின், இதற்கு வெளியே இயங்கும் கிராமிய சிறு வீத பொருளாதார அடிப்படைகளைத் தகர்த்து மொத்த இந்தியாவையும் ஓட்டாண்டிகளாக்க வேண்டும் என்பது உலக வங்கியின் நோக்கம்.

இதற்காகவே கிராமப்புற பொருளாதாரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியவர்கள் கிராமப்புற மக்கள் தமது சேமிப்பில் 42%-ஐப் பணமாக வைத்துள்ளனர் என்கிற உண்மையைக் கண்டு பிடித்துள்ளனர்.  இத்தனை காலமாக வங்கிச் சேவையுடன் இணைக்கப்படாமல் இருக்கும் நாட்டின் 60% கிராமப்புற மக்களை உடனே வங்கிச் சேவையுடன் இணைப்பது, கருப்பட்டிப் பானைகளுக்குள் ஒளிந்திருக்கும் பணத்தை கொள்ளயடிப்பது என்கிற திசையில் ஆளும் வர்க்கம் சிந்திக்கத் துவங்கி நீண்ட காலமாகிறது. கூடவே ஏழைகளின் குறைந்த பட்ச வாழ்க்கை பராமரிப்பு கூட முதலாளிகளின் நலனுக்கு உதவிடும் வகையில் மாற்றப்பட வேண்டுமென்பதிலும் அவர்கள் குறியாக இருக்கிறார்கள்.

ஏகாதிபத்திய பொருளாதார நலன்களுக்கு ஏற்ப உலக வங்கி மென்று துப்பியதை, மன்மோகன் ஒரு முறை குதப்பி துப்பியதையே மோடியும் மலிவான முறையில் காப்பி எடுத்து வெளியிட்டுள்ளார். மோடியின் வாயில் இருந்து வந்து விழும் போது ஜன் தன் யோஜனா என்கிற பெயரில் விழுந்துள்ளது.

ஆதார், மற்றும் உங்கள் பணம் உங்கள் கையில் என்பதெல்லாம் நடைமுறைக்குச் சென்ற போது அவர்களே எதிர்பார்த்த பலனைக் கொடுக்கவில்லை. ஏனெனில், 120 கோடி மக்களையும் நிதிச் சந்தையில் இணைப்பதன் முதல் படியாக வங்கிக் கணக்கு துவங்குவது தான் இருக்கிறது. இதற்கு ஏற்கனவே ரிசர்வ் வங்கி வகுத்திருந்த வழிமுறைகள் தடையாக இருந்தாலும், நீதிமன்றத்தின் தடையும் எதிர்பாராமல் வந்து சேர்ந்தது.

எல்லா மக்களின் தலையிலும் ஒரு வங்கிக் கணக்கை திணிப்பது எதிர்பார்த்த வேகத்தில் நடக்காத காரணத்தை ஆராய அமைக்கப்பட்ட நசிகேத் மூர் கமிட்டி இந்தாண்டின் துவக்கத்தில் சில ஆலோசனைகளை முன்வைத்தது. அந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி, பணம் வழங்கும் வங்கிகள் (payment banks) என்ற புதிய வங்கி முறை ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இப்புதிய வங்கிகள் தங்களுக்கென்று சொந்த கருவூலங்கள் வைத்திருக்கத் தேவையில்லை. நிலையான அலுவலகங்களும் தேவையில்லை. நடமாடும் வங்கிகள். சுமார் 70 ஆயிரம் முகவர்களை நியமித்து ஸ்வைப் கார்டுகள் மூலம் செயல்படும் இந்த வங்கிகளை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் சுயேச்சையான முகவர்கள் மூலம் செயல்படவுள்ள புதிய வகை கந்து வட்டிக் கம்பேனிகளான இவற்றை நடத்த வங்கித் துறையோடு எந்த தொடர்பும் இல்லாத தொலைதொடர்பு நிறுவனங்களும், பெட்ரோலிய நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

மோடி அறிவித்திருக்கும் ஜன் தன் யோஜனா திட்டம் குறைந்தபட்ச பொருளாதாரம் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் சுமார் ஆறு கோடி குடும்பங்களை குறிவைப்பதாகவும், வறுமைக்கோட்டுக்கு மேலே வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கும் சுமார் ஏழரை கோடி குடும்பங்களை பணம் வழங்கும் வங்கிகள் குறிவைப்பதாகவும் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ்.

இவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருப்பது மானியங்களை நேரடியாக மக்களின் கையில் ஒப்படைப்பதோடு, ஊழலையும் கட்டுப்படுத்தும் என்கிறார்கள். ஊழலை மட்டுப்படுத்துவோம் என்று அவர்கள் சொல்வதன் பின்னே மானிய வெட்டு என்கிற பெயரில் ரேசன் கடைகளை இழுத்து மூடி பொது விநியோக முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்பது உலக வங்கியின் கட்டளை. முதலில் மக்களை வெளிச்சந்தை விலைக்கு பொருட்களை வாங்கப் பழக்குவது, அப்படிப் பழகும் வரை வங்கிக் கணக்குகளில் கொஞ்சம் கூடக் குறைய பணத்தை வரவு வைத்து விட்டு பின் முற்றிலுமாக நிறுத்துவதே அவர்களின் நோக்கம்.

இதை நாங்கள் இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் ரேசன் மண்ணெண்ணையை வெளிச்சந்தை விலைக்கு விற்பது, மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது என்கிற திட்டம் முன்னோட்டம் பார்க்கப்பட்டது. அரசே நடத்திய இந்த வெள்ளோட்டத்தின் முடிவில் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் குறித்த காலத்தில் மக்கள் மண்ணெண்ணை வாங்குவதை கணிசமாக குறைத்துள்ளனர். பலர் விறகு அடுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர்.

ஒருபக்கம் பொது வினியோக முறையை ஒழித்துக்கட்டுவது; இன்னொரு பக்கம்  இன்னமும் நிதிச் சூதாட்டச் சந்தையில் இணையாமல் தனித்து இயங்கும் கிராமப் பொருளாதாரத்தை நிதிச் சந்தையில் இணைப்பது, ஏழை மக்களின் வியர்வைப் பணத்தை முதலாளிகளின் நிதிச் சூதாட்டக் களத்தில் குவிப்பதே இந்த திட்டங்களின் நோக்கம். வேறு வேறு பெயர்களில் அறிவிக்கப்படும் நிதித் திட்டங்களின் ஒரே இயங்கு திசை இது தான். மோடியென்றாலும் கேடியென்றாலும் வேறுபாடு இல்லையல்லவா அது போல!

–    தமிழரசன்.

பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்

22

ந்து மதம் என்பதில் உள்ள கடவுகளின் எண்ணிக்கை ”எண்ணித் தொலையாது, ஏட்டிலடங்காது,” என்பதுபோல், எண்ணிக்கைக்கு அடங்காத கடவுள்கள் சொல்லப்பட்டு இருப்பதும், அத்தனைக் கடவுளுக்கும் புராணம், கோயில், குளம், பூஜை, உற்சவம், பஜனை பாட்டு – முதலியதுகள் ஏற்படுத்தி இருப்பவை. அவைகளுக்காக நமது இந்திய நாட்டில் வருடம் ஒன்றுக்கு பல கோடிக்கணக்கான ரூபாய்களும், பல கோடி ரூபாய் பொருமானமுள்ள நேரங்களும், பலகோடி பெறும்படியான அறிவுகளும் வெகுகாலமாய் பாழாகிக் கொண்டு வருவதும் எவராலும் சுலபத்தில் மறுக்ககூடிய காரியமல்ல.

பெரியார்இக்கடவுள்களின் முதன்மை பெற்றதும், மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றதும், இந்துக்கள் என்போர்களில் ஏறக்குறைய எல்லோராலும் ஒப்புகொண்டு வணங்கப்படுவதுமான கடவுள் பிள்ளையார் என்பது.”இதனை கணபதி என்றும், விநாயகன் என்றும், பிள்ளையார் என்றும், விக்னேஸ்வரன் என்றும், இன்னும் இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான பெயர்களைச் சொல்லி அழைப்பதும் உண்டு.”

நிற்க. இந்த பிள்ளையார் என்னும் கடவுளை இந்துக்கள் என்பவர்கள் தாங்களுடைய எந்த காரியத்திற்கும் முதன்மையாய் வைத்து வணங்குவதும், கடவுள்களுக்கெல்லாம் முதல் கடவுளாக இப்போது அமுலில் இருக்கும் வழக்கத்தை எந்த இந்து என்பவனாலும் மறுக்க முடியாது. ஆகவே, இப்படிப்பட்டதான யாவராலும் ஒப்புகொள்ள கூடியதும், அதி செல்வாக்குள்ளதும், முதற் கடவுள் என்பதுமான பிள்ளையாரின் சங்கதியைப்பற்றி சற்று கவனிப்போம்.

ஏனெனில், கடவுள்களின் சங்கதி தெரிய வேண்டுமானால் முதல் முதலாக முதற் கடவுளைப்பற்றி தெரிந்துகொள்வதுதான் நன்மையானதாகும், தவிர, முதல் கடவுள் என்று சொல்லப்படுவதின் சங்கதி இன்னமாதிரி என்பதாக தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம்.

ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தை கவனிக்க வேண்டியது முறையென்று சொல்லப்படுவதால், நாமும் கடவுளின் கதைகளைப் பற்றி விளக்கப்போவதில் முதல் கடவுள்பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறையாகுமன்றோ! இல்லாவிட்டால், “அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்திற்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படக்கூடும்”. அன்றியும் சமீபத்தில் அக்கடவுளில் உற்சவம் (பிள்ளையார் சதுர்த்தி) ஒன்றும் வரப்போவதால் இந்த சமயம் ஒரு சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்.

பிள்ளையார் பிறப்பு

அழுக்கு விநாயகர் சதுர்த்தி
படம் : நன்றி பரிமளராசன் (பேஸ்புக்கில்)

1. ஒரு நாள் சிவனின் பெண்ஜாதியான பார்வதி தேவி, தான் குளிக்கப் போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியாக ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அது ஒரு ஆண்குழந்தையாகும்படி கீழேபோட்டதும் அது ஆண் குழந்தையாகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து – “நான் குளித்துவிட்டு வரும்வரையில் வேறு யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லி அதை வாயிற்படியில் உட்காரவைத்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருசனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில்காக்கும் பிள்ளையார் அந்த பரமசிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக்கொண்டு இருப்பதால் உள்ளேப் போகக்கூடாது” என்று தடுத்ததாகவும், அதனால் பரமசிவக் கடவுளுக்கும் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்த பிள்ளையார் தலையை கீழேத் தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்கு போனதாகவும், பார்வதி சிவனைப்பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இது கேட்ட பார்வதி, தான் உண்டாக்கிய குழந்தை வெட்டுண்டதற்காக புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தை தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி வெட்டுண்ட தலை காணாமல் போனதால், அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்ட வைத்து, அதற்கு உயிரைக் கொடுத்தது, பார்வதியை திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது, இக்கதைக்கு சிவபுராணத்திலும், கந்த புராணத்திலும் ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.

2. ஒரு காட்டில் ஆண் – பெண் யானைகள் கலவி செய்யும்போது சிவனும் பார்வதியும் கண்டு கலவி ஞாபகம் ஏற்பட்டு கலந்ததால் யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதையில் கூறுகின்றதாம்.

3. பார்வதி கர்ப்பத்தில் ஒரு கருவுற்று இருக்கையில் ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாக புகுந்து அக்கருசிசுவின் தலையை வெட்டிவிட்டதாகவும், அதற்கு பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் விநாயகர் புராணம் கூறுகின்றதாம்.

4. தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகிறது, இது தக்காயகபரணி என்னும் புத்தகத்தில் இருக்கிறதாம்.

இன்னும் பல வழிகள் சொல்லப்படுகின்றன. அதனைப்பற்றியும் இப்பிள்ளையாரின் மற்ற கதைகளை பற்றியும் மற்றொரு சமயம் கவனிக்கலாம்.

பிள்ளையார் விசர்ஜன்
பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும்.

எனவே, பிள்ளையார் என்னும் கடவுள் சிவனுக்கோ பார்வதிக்கோ மகனாக பாவிக்கப்பட்டவர் என்பதும், அந்த பிள்ளையாருக்கு யானைத்தலை செயற்கையால் ஏற்பட்டதென்பதும் ஒப்புகொள்ளவேண்டிய விஷயமாகும்.

கடவுள் கூட்டத்தில் முதல்வரான பிள்ளையார் சங்கதியே இப்படி பலவிதமாகச் சொல்லப்படுவதும், அவைகளிலும் எல்லா விதத்திலும் அவர் பிறரால் உண்டாக்கப்பட்டதாகவும், பிறப்பு, வளர்ப்பு உடையவராகவும் ஏற்படுவதுமானதாயிருந்ததால், மற்றக் கடவுள்கள் சங்கதிபற்றி யோசிக்கவும் வேண்டுமா? நிற்க.

ஒரு கடவுளுக்குத் தாய் தகப்பன் ஏற்பட்டால், அந்த தாய் தகப்பன்களான கடவுள்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? (இவைகளை பார்க்கும்போது, கடவுள்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்றால் எப்படி ஒப்புகொள்ள முடியும்? ஆகவே, இந்த கடவுள்களும் உலகமும் ஏற்பட்டதற்கு வேறு ஆதாரங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. இதனை பின்னால் கவனிக்கலாம்)

கடவுளைப்பற்றிய விவகாரங்களோ, சந்தேகங்களோ ஏற்படும்போது மாத்திரம் ”கடவுள் ஒருவர்தான்; அவர் நாம, ரூப, குணமற்றவர்; ஆதி அந்தமற்றவர்; பிறப்பு இறப்பு அற்றவர்; தானாயுண்டானவர்” என்று சொல்லுவதும், மற்றும்  “அது ஒரு சக்தி” என்றும் பேசி அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக்கொண்டு பிறகு இம்மாதிரி கடவுள்களை கோடி கோடியாய் உண்டாக்கி அவைகளுக்கு இது போன்ற பல ஆபாசக் கதைகளை வண்டி வண்டியாய் கற்பித்து, அவற்றையெல்லாம் மக்களை நம்பவும், வணங்கவும், பூசை செய்யவும், உற்சவம் முதலியன செய்யவும் செய்வதில் எவ்வளவு அறியாமையும், புரட்டும், கஷ்டமும், நஷ்டமும் இருக்கின்றது என்பதை வாசகர்கள்தான் உணரவேண்டும்.

உதாரணமாக, ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகின்றோம், சிதம்பரம் கோயிலில் யானை முகம்கொண்ட ஒரு பிள்ளையார் சிலை செய்து, அதன் தும்பிக்கையை மற்றொரு பெண் சிலையின் பெண் குறிக்குள் புகவிட்டு, இக்காட்சியை யாவருக்கும் தெரியும்படியாக செய்திருப்பதுடன், இந்த காட்சிக்கு தினமும் முறைப்படி பூசையும் நடந்து வருகின்றது, பல ஆண் – பெண் பக்தர்கள் அதை தரிசித்து கும்பிட்டும் வருகிறார்கள்.

சில தேர்களிலும், ஒரு பிள்ளையார் உருவம் தனது துதிக்கையை ஒரு பெண் உருவத்தின் பெண் குறியில் குறியில் புகுத்தி அப்பெண்ணை தூக்கிகொண்டு இருப்பது போலவும், அந்த பெண் காலை அகட்டியவாறே அந்தரத்தில் நிற்பது போலவும் செதுக்கப்பட்டு இருக்கின்றது. இவைகளைப் பார்த்த யாராவது இது என்ன ஆபாசம் என்று கேட்டால், இவைகளுக்கு ஒரு கதையும் புராணமும் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

அதாவது, ஏதோ ஒரு அசுரனுடன் மற்ற ஒரு கடவுள் யுத்தம் செய்ததாகவும்,அந்த யுத்தத்தில் அசுரர்களை எல்லாம் அந்த கடவுள் கொன்று கொண்டே வந்தும், தன்னால் முடியாத அளவுக்கு அசுரர்கள் (“வல்லபை”) என்னும் அசுர ஸ்திரீயின் பெண் குறியில் இருந்து, ஈசல் புற்றிலிருந்து ஈசல் புறப்பட்டு வருவது போல பல லட்ச்சக்கணக்கான அசுரர்கள் வந்துகொண்டே இருந்ததாகவும், இதை அறிந்த அந்தக் கடவுள் பிள்ளையார் கடவுளின் உதவியை வேண்டியதாகவும், உடனே பிள்ளையாரானவர், தனது தும்பிக்கையை அந்த அசுரப் பெண்ணின் பெண்குறிக்குள் விட்டு அங்கிருந்த அசுரர்களையெல்லாம் அப்படியே ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டதாக சொல்லப்படுகின்றது. எனவே, இம்மாதிரி காட்டுமிராண்டித்தன்மையான ஆபாசங்களுக்கு, கண்டவைகளை எல்லாம் கடவுள் என்று சொல்லும் ”ஆஸ்திகர்கள்” என்ன பதில் சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம்.

”எவனோ ஒருவன் ஒரு காலத்தில் இப்படி எழுதிவிட்டான்” என்று பொறுப்பில்லாமல் சொல்லிவிட்டால் போதுமா? இன்றைய தினம் அவ்வெழுத்துகொண்ட ஆதாரங்கள் போற்றப்படவில்லையா?அன்றியும், பல கோயில்களில் உருவாரங்களாக தோன்றவில்லையா? இதை எவனோ ஒருவன் செய்துவிட்டான் என்று சொல்வதனால், இவைகளுக்கு தினமும் பெண்டு பிள்ளை வாகனம் முதலியவைகளுடன் பூஜைகள் நடக்காமல் நின்றுவிட்டதா? யோசித்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்கின்றோம்.

சீர்திருத்தக்காரர்கள் “அப்படி இருக்க வேண்டும்”, “இப்படி இருக்க வேண்டும்” என்றும், “மதத்திற்கு ஆபத்து; சமயத்திற்கு ஆபத்து; கடவுளுக்கு ஆபத்து” என்றும் கூப்பாடு போட்டு மதத்தையும் கடவுளையும் காப்பாற்றவென்று அவைகளிடம் “வக்காலத்து” பெற்று மற்ற மக்கள் துணையைக் கோரும் வீரர்கள் யாராவது இதுவரை இந்த ஆபாசங்களை விலக்க முன்வந்தார்களா என்றும் கேட்கின்றோம்.

இவற்றை எல்லாம் பற்றி எந்த ஆஸ்திக சிகாமணிகளுக்கும் ஒரு சிறிதும் கவலையில்லாவிட்டாலும், பிள்ளையார் சதுர்த்தி என்கின்ற உற்சவம் என்றைக்கு என்பதில் மாத்திரம் ஆராய்ச்சி குறைவதில்லை என்று சொல்வதோடு, இந்த ஆபாச சங்கங்களை எல்லாம் ஒழிக்க முயற்சிக்காமல், சும்மா இருந்து கொண்டும், இவ்வாபாசங்களைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டும் இருந்துவிட்டு, இதை எடுத்துச் சொல்பவர்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிவிடுவதாலேயே எந்தக் கடவுள்களையும் எந்த சமயத்தையும் காப்பாற்றிவிட முடியாது என்றே சொல்லுவோம்.

இனி அடுத்தமுறை அடுத்த கடவுளை பற்றி கவனிப்போம்.

–    தந்தை பெரியார்.
(குடியரசு – கட்டுரை – 26.08.1928)

தேசத்தின் பாதுகாப்பு துப்புரவு தொழிலாளிக்கு இல்லை

0

தெருவில் சென்னை மாநகராட்சியின் அல்லது தனியாருக்குச் சொந்தமான கழிவுநீர் ஏற்றிச்செல்லும் லாரி சென்றால் முகத்தைச் சுழித்துக் கொண்டு மூக்கை மூடிக் கொள்கிறோம். இந்த கழிவுநீர் எல்லாம் எங்கே போகிறது? எப்படி சுத்தப்படுத்தப்படுகிறது? இவற்றை யார் கையாளுகிறார்கள்? என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

நாம் நமது அழுக்குகளை கழுவி விட்டு, சுத்தபத்தமாக நடமாடுவதை சாத்தியப்படுத்தும் துப்புரவு தொழிலாளர்களின் உயிருக்கு மதிப்பே இல்லாமல் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

வாபாக் சுத்திகரிப்பு நிலையம்
சம்பவம் நடந்த கொடுங்கையூரில் உள்ள, வெளிநாட்டு நிறுவனத்தால் பராமரிக்கப்படும் மெட்ரோவாட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கூடி நிற்கும் பகுதி மக்கள்.

சென்ற சனிக்கிழமை (ஆகஸ்ட் 30, 2014) சென்னையில் கொடுங்கையூர் அருகில் மணலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு தாக்கியதில் பள்ளர் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் என்ற 21 வயதான தொழிலாளியும், கருமாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயகுமார் என்ற 28 வயதான தொழிலாளியும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களுடன் வேலை செய்த 26 வயதான ராஜூ என்ற தொழிலாளியும், 27 வயதான சத்தியராஜ் என்பவரும் ஸ்டேன்லி அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“என்ன சார் இது, டுவென்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரியில் இப்படி எல்லாம் நடக்குது. டெக்னாலஜி எங்க போயிட்டிருக்கு, செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பிட்டோம். மோடி நாடு முழுக்க ஒரே நாள்ல கோடிக்கணக்குல வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வைக்கிறார். ஆஃப்டர் ஆல் ஒரு சாக்கடை மேட்டர பாதுகாப்பா கையாள முடியலையே. எல்லாம் கரப்ஷன், இந்த கவர்ன்மென்ட் டிபார்ட்மென்ட் எல்லாம் இப்படித்தான்” என்று நொந்து கொள்ளாதவர் உண்டா? ஆனால் இரண்டு தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கிய இந்த நிகழ்வு குறித்து பத்திரிகைகளில் வெளியாகியிருக்கும் விபரங்கள் இதை விட சிக்கலான, மேலும் கொடூரமான சித்திரத்தை அளிக்கின்றன.

மணலியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 8 கோடி லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் இரண்டு ஆலைகளும், ஒரு நாளைக்கு 11 கோடி லிட்டர் நீரை சுத்திகரிக்கும் கொள்ளளவு கொண்ட ஒரு ஆலையும் உள்ளன. இவற்றில் 11 கோடி லிட்டர் கொள்ளளவிலான ஆலைதான் மிகவும் நவீனமான, தானியங்கி முறையிலான ஆலை என்கின்றனர் மெட்ரோ வாட்டர் பொறியாளர்கள். ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் வால்வுகளை இயக்கி மூடவும் திறக்கவும் வசதி இருக்கின்றது என்கின்றார்கள் அவர்கள்.

அதாவது, மெட்ரோ வாட்டர் நவீன தொழில்நுட்பத்தை வாங்கி சென்னை மாநகரவாசிகளின் கழிவுகளை சுத்தம் செய்ய ஈடுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம், அந்த தொழில்நுட்பத்தை விற்ற அன்னிய நிறுவனத்துக்கும், அதை நிறுவிய ஒப்பந்ததாரருக்கும், ஒப்பந்தத்தை வழங்கிய அதிகாரிக்கும் உடனடி கணிசமான ஆதாயம் கிடைத்திருக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால், சாதாரண உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு அதில் என்ன கிடைக்கிறது?

ஜெயகுமாருக்கும், நந்தகுமாருக்கும் ராஜூக்கும், சத்யராஜூக்கும் அந்த தொழில்நுட்பங்கள் பாதுகாப்பைத் தேடித் தந்து விடவில்லை.

இந்த ஆலையை வடிவமைத்து, நிறுவி 10 ஆண்டுகளுக்கு இயக்குவதற்கான உரிமத்தை பெற்றிருப்பது விஏ டெக் வாபாக் என்ற நிறுவனம். ஆஸ்திரியா-ஜெர்மனியைச் சேர்ந்த அந்நிறுவனம் சிக்கலான பல கைமாறுதல்கள் மூலம் இப்போது சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. அந்தத் தனியார் நிறுவனம் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை அமர்த்தி சுத்திகரிப்பு தொட்டிகளை பராமரித்து வந்திருக்கிறது. நம் நாட்டு கழிவுநீரை சுத்திகரித்து வெளிவிடுவதற்கு ஜெர்மனியிலிருந்து துரைமார் வர வேண்டியிருக்கிறது, அவர்களோ உள்ளூர் தேசி கூலிகளை ஒப்பந்த முறையில் குறைந்த கூலிக்கு நியமித்து தமது லாபத்தை பெருக்கிக் கொள்கின்றனர். ஜெர்மன் தொழில்நுட்பம் கூட நம் நாட்டு தொழிலாளர் உயிரை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதில்லை; ஜெர்மன் முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்கும் வகையில்தான் வருகிறது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பராமரிப்பு வேலைக்கு நியமிக்கப்பட்ட 6 தொழிலாளிகள் தமது வேலையை தொடங்கியிருக்கின்றனர். சென்னை மாநகரத்தின் லட்சக்கணக்கான மக்கள் தமது படுக்கைகளில் நித்திரையில் ஆழ்ந்திருக்கும் நேரம் இந்தத் தொழிலாளர்களுக்கு வயிற்றுப்பாட்டுக்கான வேலை ஆரம்பிக்கும் நேரமாக இருந்திருக்கிறது.

12 அடி ஆழமான கழிவுநீர் தொட்டியில் நந்தகுமார் முதலில் இறங்கியிருக்கிறார். கழிவு நீர் தொட்டியில் விஷவாயு கசிந்து நிரம்பியிருந்ததால் அவர் உடனடியாக மயக்கமாகியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து உள்ளே இறங்கிய ராஜூ, சத்யராஜ் இருவரும் மயக்கமடைந்திருக்கின்றனர். மேலே நின்றிருந்த ஜெயகுமார் நிலைமையை உணர்ந்து கொண்டிருக்கிறார். அவர் உயிரைப் பிடித்துக் கொண்டு உதவி கேட்டு இடத்தை விட்டு ஓடி விடவில்லை. தனது சக தொழிலாளர்களை காப்பாற்றுவதற்காக உடனடியாக தானும் தொட்டிக்குள் இறங்கியிருக்கிறார். அவர் தொட்டியில் இறங்கி சத்யராஜ், ராஜூ இருவரையும் மேலே கொண்டு வந்திருக்கிறார். மூன்றாவதாக நநதகுமாரை காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கும் போது ஜெயகுமாரும் வாயு தாக்கி மயக்கமடைந்திருக்கிறார்.

உதவிக்கு அழைக்கப்பட்ட தீயணைப்பு மீட்புப் படையினர் இருவரையும் மீட்டு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. சுத்திகரிப்பு தொட்டிக்குள் இறங்குவதற்கு முன்பு பாதுகாப்புப் பட்டையை அணிந்து கொண்டு இறங்கியிருந்தால், நிலைமை மோசமானவுடன் மேலே நிற்கும் தொழிலாளிகள் அவர்களை உடனடியாக இழுத்து வெளியில் கொண்டு வந்திருக்க முடியும் என்கிறார் ஒரு பொறியாளர். சென்ற ஆண்டு கோட்டூர்புரம் சுத்திகரிப்பு ஆலையில் சென்ற ஆண்டு இதே போன்ற விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ வாட்டர் என்ன சொல்கிறது?

நவீன எந்திரங்கள் வாங்கி, நவீன சுத்திகரிப்பு ஆலை நிறுவ பல கோடி ரூபாய் செலவழித்திருக்கும் மெட்ரோ வாட்டர் வாயு கசிவை உணர்ந்து தகவல் தெரிவிக்க தேவையாட உபகரணத்தை பொருத்தி தொழிலாளர்களை எச்சரிக்கும் ஏற்பாட்டை நாங்கள் செய்யவில்லை.

ஆலையின் பராமரிப்பை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் விட்டு பாதுகாப்பற்ற சூழலில் வேலை தொழிலாளர்களை வேலை செய்யும் நிலையை ஏற்படுத்தியிருந்தோம்.

தங்கள் சார்பில் பாதுகாப்பு வசதிகள் கோரி வாதாடவோ, பணி நிரந்தரம் செய்யவோ ஒரு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை கூட அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

எங்களுடைய தவறான கொள்கைகளால், தவறான முடிவுகளால் இரண்டு தொழிலாளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இப்படி எல்லாம் ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள். “விபத்து நடந்ததற்கான காரணத்தை விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவுகளைப் பொறுத்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருக்கின்றனர். காவல்துறை, வளாக பொறுப்பாளர் பாக்யராஜ் மற்றும் ஆலை மேலாளர் ஷ்யாம் ஆகியோர் மீது ‘கவனக்குறைவால் மரணம் விளைவித்தனர்’ என்று வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பியிருக்கிறது.

மெட்ரோ வாட்டரின் விசாரணை முடிவுகள் அதற்கேற்ற நேரத்தில் வந்து சேரும், அதன் அடிப்படையில், பன்னாட்டு முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகளின் கல்லாவை நிறைக்கும் வகையில் வேறு ஏதாவது திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படலாம்.

கொல்லப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்ச இழப்பீடு பெறுவது கூட பெரும் போராட்டமாக இருக்கும். மெட்ரோ வாட்டர் அவர்களை வேலைக்கு அமர்த்தியது தனியார் நிறுவனம் என்று தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முற்படும். தனியார் நிறுவனத்துக்கு இன்றைய ‘நவீன’, ‘வளர்ந்து வரும் வல்லரசான” இந்திய சட்டங்களின் படி எந்தப் பொறுப்பும் இருக்காது. லாபத்தை அள்ளிக் கொண்டு ஜெர்மனிக்கு கொண்டு போவது மட்டும்தான் அவர்களது பங்குதாரர்களுக்கு அவர்களது பொறுப்பு.

எங்கும் தனியார் மயம், எதிலும் உலகமயம், எதற்கும் தாராளமயம் என்று தனியார் லாபவெறியை தாராளமாக அனுமதிக்கும் உலகளாவிய முதலாளித்துவ பயங்கரவாதத்தின் இன்னொரு உயிர்ப்பலி ஜெயகுமார், நந்தகுமார் ஆகியோரின் மரணம்.

இதற்கு காரணமான ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், முதலாளிகளும் என்ன தண்டனை பெறப் போகிறார்கள்?

மேலும் படிக்க

கோலார் சுரங்க வரலாறு !

6

கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 3

”சுரங்கத்த மூடினப்போ எனுக்கு மொத்தம் இருவத்தஞ்சி வருசம் சர்வீசு”

“சுரங்கம் மூடப்பட்டது உங்களுக்கு இன்னும் நினைவில் இருக்கிறதா?”

தங்க பிஸ்கட்
“வாராவாரம் ஊரிகான் ஸ்டேசன்ல ட்ரெயின் ஏறும் போதும் இறங்கும் போதும் பாழடைஞ்சி போன பழைய கட்டிடங்கள பார்க்கும் போதும்.. அந்த ஆளுகிட்ட இப்ப கைநீட்டி சம்பளம் வாங்கும் போதும்.. அப்டியே செத்துறலாம்னு தோணும் சார்.”

“நல்லா ஞாபகம் இருக்கு சார். 2001-வது வருசம் மார்ச் 1-ம் தேதி காலைல நாங்கெல்லாம் வழக்கம் போல வேலைக்குப் போனோம். எங்கள கேட்லயே தடுத்து நிப்பாட்டிட்டாங்க. என்ன ஏதுன்னு புரியலை. வெளியே நின்னு பாத்தோம். கேட் திறக்கறா மாதிரி தெரியலை. எல்லாரும் கொஞ்ச நேரத்துல கூச்சல் போட ஆரம்பிச்சோம். சங்க தலைவருங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினோம்”

“அப்புறம் என்ன நடந்தது?”

“ரொம்ப நேரம் கழிச்சி ஆபிசருங்க வந்தாங்க. சுரங்கம் குளோஸ்னு சொல்லிட்டு எல்லாரையும் ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. சங்கத் தலைவருங்க எழுதிக் கொடுக்க சொல்லி கேட்டாங்க. அதுக்கு ஆபீசருங்க, இன்னும் உத்தரவு வரலைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க”

“சுரங்கம் மூடப்போவது பற்றி உங்களுக்கு தெரியவே தெரியாதா?”

“ரொம்ப வருசமா இதோ மூடுவோம், இப்ப மூடுவோம்னு சொல்லினே இருந்தாங்களே ஒழிய மூடலை. எப்ப மூடுவோம்னு தெளிவா சொல்லவும் இல்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச வருசம் ஓடும்னு தான் நாங்க நம்பிட்டு இருந்தோம்”

”அப்புறம் என்ன செய்தீங்க?”

“என்னா செய்யிறது…போராடிப் பார்த்தோம். ஆனா ஒன்னும் நடக்கலை,  பத்து மாசம் வரைக்கும் இப்படியே தெனைக்கும் போயி கையெழுத்து போடறதும், வீட்டுக்கு வார்றதுமா போச்சி. பத்து மாசம் கழிச்சி தான் லாக் அவுட் பத்தி அறிவிப்பே வந்திச்சி..”

“தொழிற்சங்கமெல்லாம்….”

“திருட்டு …….. நாயிங்க சார். எல்லா நாயும் அன்னிக்கு எங்க முன்னாடி சூடா பேசுனானுங்க.. அப்புறம் தான் தெரிஞ்சது எல்லாரும் மேனேஜ்மெண்டு கிட்ட காசு வாங்கிட்டு எங்க கழுத்த அறுத்த விசயம். தோ.. நான் இப்ப பெங்களூர்ல செக்கூரிட்டி வேலை பார்க்கிறனே அப்பார்ட்மெண்டு.. இதுக்கு கூட ஒரு தொழிற்சங்க தலைவரு தான் சார் ஓனரு. தோ.. இங்கெ ஊரிகான்ல தான் அவனும் இருக்கான். இங்க பாத்தா பிச்சக்காரன் மாதிரி சுத்துவான். அந்த ஆறுவிளக்கு ஏரியாவுக்கு அந்தாண்ட போயிட்டான்னா பெரிய கார்ல தான் போறது வர்றது எல்லாம்.. அவனும் நம்பள மாதிரி தொழிலாளின்னு நம்பி தலைவரா கொண்டாந்தோம்.. ப்ச்சு.. எல்லாம் போச்சி சார். இனிமே பேசி இன்னா ஆவப்போவுது?”

”…..”

“வாராவாரம் ஊரிகான் ஸ்டேசன்ல ட்ரெயின் ஏறும் போதும் இறங்கும் போதும் பாழடைஞ்சி போன பழைய கட்டிடங்கள பார்க்கும் போதும்.. அந்த ஆளுகிட்ட இப்ப கைநீட்டி சம்பளம் வாங்கும் போதும்.. அப்டியே செத்துறலாம்னு தோணும் சார். ஆனா.. எனக்கு ரெண்டுமே பொட்ட புள்ளிங்க சார்.. என்னா செய்யறது. அந்த ஆண்டவன் தான் சார் இவனுங்களுக்கு கூலி கொடுக்கனும்”

கோலார் தங்க வயலில் தங்கம் எப்போதிருந்து கிடைக்கத் துவங்கியது என்பது பற்றி மாறுபட்ட தகவல்கள் சொல்லப்படுகின்றன. கி.பி 77-ல் இப்பகுதியில் பயணம் செய்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் ப்ளைனி என்பவர் இங்கே தங்கம் கிடைத்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். வட இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த ஏறக்குறைய அதே காலகட்டத்தைச் சேர்ந்த தங்க நாணயங்களை அசுத்தப் பரிசோதனைக்கு (impurity check) உட்படுத்திய போது அவை கோலாரில் இருந்து வடக்கே சென்றிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சோழர் காலத்திலும், திப்பு சுல்தானின் காலத்திலும் கோலார் பகுதியில் தங்கம் எடுக்கப்பட்டது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.

1880-ல் தான் முதன் முறையாக ஜான் டெய்லர் நிறுவனத்தாரால் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு தங்கம் வெட்டியெடுக்கும் பணி துவங்கியது. அன்று துவங்கி சுரங்கம் மூடப்பட்ட நாள் வரை சுமார் நூற்றி இருபது ஆண்டுகளில் கோலார் தங்க வயலில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 800 டன். இது தற்போது இந்தியா ஒருவருடத்தில் நுகரும் ஒட்டுமொத்த தங்கத்தின் அளவை விட குறைவானது!

எழுதுபொருள் கடை
கோலார் தங்க வயலின் வரலாறு சுரங்கத்தோடும் சுரங்கத்தின் வரலாறு தொழிலாளர்களோடும் பிரித்தறிய முடியாதபடி மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது.

கோலார் தங்க வயலின் வரலாறு சுரங்கத்தோடும் சுரங்கத்தின் வரலாறு தொழிலாளர்களோடும் பிரித்தறிய முடியாதபடி மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது. இதில் எது ஒன்றையும் தனியே பிரித்து புரிந்து கொள்ளவே முடியாது. கோலாரின் மக்கள் இன்றைக்கு வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் பற்றியும், அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொள்ள சுரங்கம் மூடப்பட்டதைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுரங்கம் மூடப்பட்ட பின்னணியில் இருந்து துவங்குவோம். வாருங்கள், துள்ளத் துடிக்க நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை ஒன்றைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள் – இந்தக் கதை எங்கோ யாருக்கோ நடந்தது மாத்திரமல்ல; நம்மைச் சுற்றிலும் நாமே அறியாமல் நமக்கோ, நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நித்தமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இன்றைக்கு எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்திற்கும் என்ன நடந்து வருகிறதோ அதே தான் கோலார் தங்க வயலுக்கும் நேர்ந்தது. இது ஒரே நாளில் நடந்த கொலை அல்ல; ஹிட்லரின் ஜெர்மனியில் இறுக்கமான அறைகளுக்குள் யூதர்களைப் பூட்டி மெல்ல மெல்ல உள்ளே புகையை நிரப்பி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மூச்சுத் திணற வைத்து கொன்ற அதே பாணி தான். 47-ல் ’சுதந்திரம்’ வாங்கிய உடனேயே கோலார் தங்க வயலுக்கு நாள் குறித்தாகி விட்டது.

வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்ததே வியாபாரத்தின் மூலமும் அரசியல் அதிகாரத்தின் மூலமும் இங்குள்ள வளங்களைச் சுரண்டிச் செல்வதற்குத் தான் என்பது நாம் ஏழாம் வகுப்பில் படித்த வரலாறு சொல்கிறது. ஆனால், சிறுவர்களுக்குத் தெரிந்த இந்த எளிய உண்மை அன்றைய தலைவர்களுக்குத் ‘தெரியாமல்’ போய் விட்டது. 47-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும் வெள்ளையர்களின் வியாபார, வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது சுதந்திரத்தை இழக்கவில்லை. கோலார் தங்க வயலை நடத்தி வந்த ஜான் டெய்லர் கம்பேனியார் 1956-ம் ஆண்டு வரை எந்த சிக்கலும் இன்றி தங்கத்தைச் சுரண்டியே வந்தனர்.

1956-ல் ஜான் டெய்லர் நிறுவனம் நிர்வாகப் பொறுப்பை மைசூர் அரசுக்கு கைமாற்றிக் கொடுத்த பின்னரும், வெள்ளைக்காரன் மனம் புண்பட்டு விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவன் காலில் விழுந்து “பொறியியல் ஆலோசகர்” என்ற பொறுப்பு வழங்கப்பட்டு 1971-ம்  ஆண்டு வரை நிர்வாகத்தில் அமர்த்தப்பட்டனர்.

ஜான் டெய்லர்
ஜான் டெய்லரும் ‘குடும்பமும்’

ஜான் டெய்லரின் கையிலிருந்து மைசூர் அரசாங்கத்துக்கு கைமாற்றப்பட்ட சுரங்கம் ஆறாண்டுகளுக்குப் பின் மத்திய அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது, பின்  71-ம் ஆண்டு மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துறையின் கீழும், பின் 72-ம் ஆண்டு பாரத தங்க சுரங்க நிறுவனம் என்ற பொதுத்துறையின் கீழும் செல்கிறது.

ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம். அந்த அதிசயத்தை சுரங்க நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் சாதித்துக் காட்டியது.

1956-ல் இருந்து 62-ம் ஆண்டு வரை சுரங்கத்தில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் அளவிடப்பட்டது – ஆனால், இதிலிருந்து சல்லிக் காசு கூட சுரங்கத்தைப் பராமரிக்க திருப்பி விடப்படவில்லை. ஜான் டெய்லரின் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் தங்க படிமங்கள் அதிகமாக உள்ள பல பகுதிகளை முறையான காரணங்கள் ஏதும் குறிப்பிடாமல் முத்திரையிட்டு மூடிச் (Sealed off) சென்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நிர்வாகத்திற்கு வரும் இந்திய அதிகார வர்க்கமோ, அவை முத்திரையிடப்பட்டதற்கு என்ன காரணம் என்று ஆராயவும் இல்லை அதற்கான முயற்சிகளையும் எடுக்கவில்லை.

அடுத்ததாக, கோலாரின் மேற்கே 40 கிமி தொலையில் இருந்து கோலார், குப்பம், தர்மபுரி வழியாக சேலம் வரை பூமிக்கடியில் தங்கப் படிமங்கள் வேர் போல் பரவிச் செல்வதை ஆங்கிலேய சர்வேயர்கள் ஆராய்ந்து மதிப்பிட்டு வைத்திருந்தனர். மேலும், கோலாரைச் சுற்றிலும் உள்ள  பகுதிகளில் குறிப்பாக எந்தெந்த இடங்களில் எவ்வளவு அடர்த்திக்கு தங்க படிமங்கள் இருக்கின்றன என்பது குறித்தும் ஓரளவுக்கு ஆராய்ந்து சர்வே ரிப்போர்ட்டுகளாக தயாரித்து வைத்திருந்தனர்.

பொதுத்துறை
சுதந்திரத்திற்கு பின் பொதுத்துறை என்ற பெயரில் படிப்படியாக சுரண்டப்பட்ட கேஜிஎஃப்

ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நிலத்தடி சர்வே பழைய வகைப்பட்டது என்பதோடு அவர்கள் எடுத்திருந்த சர்வே பரந்து பட்ட அளவில் பொதுவானதாகவே இருந்தது. எந்தெந்த இடத்தில் படிமங்களின் அடர்த்தி அதிகம் அதை அடைவதற்கான வழிவகைகள் என்ற குறிப்பான அம்சங்கள் பருண்மையான அளவில் நவீன விஞ்ஞான முறைகளின் அடிப்படையில் செய்யப்படவில்லை. கோலார் தங்க வயல் பகுதியில் மட்டும் ஓரளவுக்கு விவரங்களை சேகரித்து சர்வே ரிப்போர்ட்டுகளாக வைத்திருந்தனர்.

’சுதந்திரத்திற்குப்’ பின் அதிகாரத்திற்கு வந்த இந்திய அதிகாரிகளோ, நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி மீண்டும் சர்வே எடுக்கவும் இல்லை, ஆங்கிலேய அதிகாரிகள் சர்வே செய்யாத இடங்களை சர்வே செய்யவும் இல்லை. கனிம வளங்களை பூமியிலிருந்து வெட்டியெடுக்கும் சுரங்கத் தொழிலின் அடிப்படையே அறிவியல் ரீதியிலான சர்வேக்கள் தான். இது இந்திய நிர்வாகத்தின் கீழ் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டாக படிப்படியாக ஒரு டன் மூலப் பொருளில் இருந்து சுத்திகரிக்கப்படும் தங்கத்தின் அளவு குறைந்து கொண்டும் நட்டத்தின் அளவு கூடிக் கொண்டும் வந்துள்ளது. சுரங்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து பத்தே ஆண்டில் கொள்கை அளவில் ’நட்டத்தை’ காரணம் காட்டி மூடி விடுவது என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்து விட்டது.

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து சுரங்கத்தை மூடுவது குறித்த விவாதங்கள் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரிடையே துவங்கி விட்டது. இந்த தகவல் கீழ்மட்ட தொழிலாளிகளை எட்டிய போது அவர்கள் கொந்தளித்து எழுந்தனர். தங்களுக்கு வாழ்வளித்த சுரங்கம் தங்கள் கண் முன்னே கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அனல் கக்கும் போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினர்.

கோலார் நகரமே சுரங்கத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான். சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் ஏதாவது ஒரு வகையில் சுரங்கத்தோடு நெருக்கமான இணைப்பைக் கொண்டது. அவர்களது படியளக்கும் ஒரே மூலம் என்ற வகையிலும் நகரத்தின் பெரும்பான்மையினரான தலித்துகளின் சமூக இழிவைத் துடைக்க கைகொடுத்தது என்ற வகையிலும் அந்த மக்களுக்கு சுரங்கத்தோடு உணர்வு ரீதியிலான பிணைப்பு இருந்தது.

மக்களின் கோபாவேசத்தைத் தணிக்க மத்திய அரசு வழக்கம் போல மூன்று வெவ்வேறு கமிட்டிகளை அமர்த்தியது. மத்திய சுரங்கத் துறை உயரதிகாரி கே.எஸ்.ஆர் சாரி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும், சுசீலா கோபாலன் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும், ராமதாஸ் அகர்வால் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும் 1985-லிருந்து தொண்ணூறுகளின் இறுதிக் கட்டம் வரையில் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தக் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. மத்திய அரசைப் பொறுத்த வரையில் இந்தக் கமிட்டிகள் என்பவை சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியங்கள்.

சுரங்கத்தில் நட்டம் ஏற்படுத்திய காரணிகளையும், அவற்றைக் களைந்து கொள்ளும் வழிமுறைகளையும் ஆராய ஏற்படுத்தப்பட்ட இக்கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாராம்சம் – அதிகார வர்க்க நிர்வாக சீர்கேடு.

மறுகாலனியாக்கம்
1990-களுக்குப் பிறகு சுரங்க வேலைகளை இழுத்து மூடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டு கொடுக்க திட்டம்…

சாரி கமிட்டியின் பரிந்துரைகளின் படி, கோலாரில் அறவிடப்படும் தங்கம் வெளிச் சந்தையின் விலைக்கு கொள்முதல் செய்யாமல் லண்டன் உலோகச் சந்தையின் மதிப்பில் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு பண நோட்டுகள் அச்சிடப்படுவதற்கான பின்புல ரிசர்வாக பயன்படுத்தப்படுவது சுரங்கத்தின் நட்டத்திற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் கோலாரில் இருந்து சில பத்து கிலோமீட்டர்கள் தொலைவில் கருநாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டி தங்க சுரங்கத்திலிருந்து அறவிடப்படும் தங்கமோ வெளிச்சந்தை விலையில் கொள்முதல் செய்யப்பட்டு லாபத்தில் இயங்கி வந்ததையும் சாரி சுட்டிக்  காட்டியிருக்கிறார்.

மேலும், ஜான் டெய்லர் சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய பழைய தொழில்நுட்பங்களையே இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தங்க மகசூலின் அளவு அதிகரிக்காமல், சையனைடு கழிவுகளில் அதிக தங்கம் கலந்து வெளியேறுவதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். பின்னர் அமைக்கப்பட்ட இரண்டு கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாரமும் இவைகளே. இந்த மூன்று கமிட்டிகளின் பரிந்துரை அறிக்கைகளின் காகிதங்களையும் வடிவாக வெட்டிய அதிகார வர்க்கத்தினர், அவற்றை தில்லி சுரங்கத் துறை அலுவலகத்தின் கழிவறையில் மலம் துடைப்பதற்காக தொங்க விட்டனர்.

கழிப்பறையிலிருந்து வெளியேறிய கையோடு அதிகாரிகள் செய்த அடுத்த வேலை, சுரங்கத்தை மூடுவதற்கான கோப்புகளை மத்திய தொழிற்சாலைகள் மற்றும் நிதி விவகாரங்கள் மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு (BIFR – Board for Industrial and Financial Reconstruction) அனுப்பி வைத்தது தான். மேற்படி ஆணையம், தொழில் தகறாறு சட்டத்தின் கீழ் சுரங்கத்தை மூடுவதற்கான நிர்வாக ரீதியிலான ஈமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை காலம் கடத்தாமல் உடனடியாக செய்யத் துவங்கியது.

இதற்கிடையே, மத்திய அரசால் சுரங்கத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு நியமித்து அனுப்பப்பட்ட அதிகாரிகளும் தங்கள் எஜமானர்களின் விருப்பத்தை குறிப்பாலறிந்து செயலாற்றத் துவங்கினர்.

பூமியைக் குடைந்து தங்கத்தைத் தேடி முன்னேறும் போது நீரோட்டப் பகுதிகளையும் கடந்து செல்ல வேண்டும். இதன் காரணமாக சுரங்கத்தின் உள்ளே பல இடங்களில் நீர்க் கசிவு இருக்கும். இதைச் சமாளிக்க சிறு சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும். இந்த அணைகள் தொடர்ச்சியாகவும் முறையாகவும் பராமரிக்கப்பட வேண்டும். என்பதுகளில் இருந்தே நிர்வாகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் இந்தப் பணியைத் திட்டமிட்டுப் புறக்கணித்தனர். 94 – 96 காலகட்டத்தில் பல அணைகள் சதித்தனமாக உடைக்கப்பட்டன.

இதன் காரணமாக சுரங்கத்தின் ஆழமான பகுதிகள் நீரில் மூழ்கி விலை மதிப்பு வாய்ந்த பல கருவிகள் மீட்கப் படவியலாத படிக்கு நிரந்தரமாக மூழ்கிப் போயின. வேலை செய்யத் தகுந்த ஆழத்தின் அளவும் படிப்படியாக சுருங்கி ஒரு கட்டத்தில் 2500 அடிகளுக்கு மேல் தொழிலாளர்களால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

கேஜிஎப் தொழிலாளர்கள்
தண்ணீரிலிருந்து தரையில் எடுத்து வீசப்பட்ட மீன்களைப் போல் சுரங்கத்திலிருந்து பிய்த்தெறியப்பட்ட தொழிலாளர்கள் தவித்துப் போனார்கள்.

சுரங்கத்தை உள்ளிருந்தே கருவருக்கும் வேலை இதோடு நிற்கவில்லை. சுரங்க நிர்வாகத்தின் உயிராதாரமான சர்வே ரிப்போர்ட்டுகள் படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டன. பெரும் புகழும் பழமையும் வாய்ந்த சேம்பியன் ரீஃப் சுரங்கத்தின் பதிவேடுகளும், சர்வே வரைபடங்களும் கைவிடப்பட்ட சர்குலர் ஷாஃப்ட் சுரங்கத்தினுள் தேங்கியிருந்த நீரில் வீசப்பட்டு அழிக்கப்பட்டன. கோலார் தங்க வயலில் இருந்த இன்னொரு பெரிய சுரங்கமான மைசூர் சுரங்கத்தின் பதிவேடுகள் ஆவணக் காப்பகத்தோடு சேர்த்து மொத்தமாக கொளுத்தப்பட்டன.  இவையணைத்தும் மக்கள் காண அவர்கள் கண் முன்னே போலீசின் துணையோடும், அதிகாரிகளின் முன்னிலையிலும் நிகழ்ந்தேறின.

இதற்கிடையே மீள்கட்டமைப்பு ஆணையம் சுரங்கத்தை லாபகரமாக நடத்தும் மாற்று வழிகள் இருப்பின் அவற்றை அறிக்கையாக சமர்ப்பிக்க சுரங்க நிர்வாகத்தையும் தொழிலாளர் தரப்பில் தொழிற்சங்கங்களையும் கோரியது. சுரங்கத்தை மூடுவது என்று முடிவெடுத்த பின், இந்தக் கோரிக்கையே கூட வெறும் சம்பிரதாயமான நடவடிக்கை தான் என்றாலும், அன்றைக்கு சுரங்கத் தொழிலாளர்களிடையே செயல்பட்டு தொழிற்சங்கங்கள் தமக்குள் மோதிக் கொண்டு மீள்கட்டமைப்பு ஆணையத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்காமல் விட்டன.

தொழிலாளர்கள் தரப்பில் இருந்து பதில் இல்லை என்பதையே சுரங்கத்தை மூடுவதற்கு போதுமான காரணமாக காட்டி தொழில் தகராறு சட்டத்தின் கீழ் ஈமக் கிரியைகளைத் துவக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடியது மீள்கட்டமைப்பு ஆணையம்.

சுரங்க நிர்வாகமும் கைவிட்டு தொழிற்சங்கங்களும் துரோகமிழைத்து விட்ட நிலையில் தொண்ணூறுகளின் இறுதியில் சுரங்கம் முதுகில் குத்தப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டது.  எந்த நேரமும் சுரங்கம் மூடப்படலாம், எந்த நேரமும் தொழிலாளிகள் தெருவில் வீசியெறியப்படலாம் என்கிற நிலையில் தொழிலாளிகள் தங்கள் உயிருக்கு நிகரான சுரங்கத்தைக் காப்பதற்கான இறுதி முயற்சி ஒன்றை எடுத்தனர்.

இரண்டாயிரமாவது ஆண்டின் துவக்க மாதங்களில் மாதாந்திர சுத்திகரிக்கப் பட்ட தங்கத்தின் உற்பத்தி அளவு 45 கிலோவாக இருந்த நிலையில் தொழிலாளர்கள் தங்களால் முடிந்த அசுர உழைப்பையே இறுதி ஆயுதமாக ஏந்திக் களம் புகுந்தனர்.  தங்க ரிசர்வ் குறைந்ததால் உற்பத்தி குறைந்தது; உற்பத்தி குறைந்ததால் லாபமில்லை; லாபமில்லாததால் மூட வேண்டும் என்கிற பச்சைப் பொய்யை தங்கள் உழைப்பால் தவிடு பொடியாக்கினர் தொழிலாளிகள். அடுத்த சில மாதங்களில் மாதாந்திரம் ஐந்து கிலோ என்கிற வகையில் உற்பத்தியை பெருக்கி அதிகபட்சமாக 86 கிலோ என்கிற அளவை எட்டிப் பிடித்தனர்.

இத்தனைக்கும் படிப்படியாக சுரங்கங்கள் மூடப்பட்டு செயல்பட்டில் இருந்த சுரங்கத்தின் வேலைத் தளமும் 2500 அடி ஆழமாக சுருங்கிப் போய், நிர்வாகத்தின் எந்த ஒத்துழைப்பும் இல்லாத நிலையிலேயே இதைச் சாதித்தனர் தொழிலாளிகள்.  கிட்டத்தட்ட செத்த மாட்டில் பால் கறந்த சாதனை அது. துரோக அரசியலின் சூது வாது அறியாத அந்த எளிய அப்பாவிகளால் தங்கள் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி எழுதிக் காட்டிய உன்னதமான வீரகாவியம் அந்த 86 கிலோ தங்க உற்பத்தி.

சுரங்கத்தை நட்ட கணக்கு காட்டி மூடி விட்டு சர்வதேச டெண்டர் என்கிற பெயரில் அதைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்தே தீருவது என்று ஏற்கனவே ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் முடிவு செய்து விட்ட பின் தொழிலாளிகளின் உழைப்பையும் அது உணர்த்திய செய்தியையும் மலத் தொட்டியில் போட்டு அமிழ்த்தினர் மக்கள் விரோதிகள். தங்கள் கையாட்களாக சுரங்க நிர்வாகத்தில் அமர்த்தி வைத்திருந்த அதிகாரிகளை வைத்து கடைசியாக பிழைத்தெழ சுரங்கம் காட்டிய உயிர்மூச்சை திட்டமிட்டு நிறுத்தினர்.

கேஜிஎப் தொழிலாளர்கள்
பெருமழை பொழிந்து புற்றில் வெள்ளம் சூழப் போவதை உணர்ந்த நச்சரவங்கள் பாதுகாப்பாக நீங்கிச் செல்ல, பாடுபட்டு புற்றைக் கட்டி உண்டாக்கிய எறும்புகளோ வெள்ளத்தில் மூழ்கிச் செத்தன.

பணியில் இருந்த தொழிலாளிகளுக்கு வெடி மருந்து சப்ளையை முதலில் நிறுத்தி வைத்தனர்; தொழிலாளிகளோ ஏற்கனவே உடைக்கப்பட்ட பாறைப் படிவங்களைச் சேகரித்து உற்பத்தி சரியாமல் பார்த்துக் கொண்டனர். பணிக்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்களை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுத்தனர்; இருப்பதைக் வைத்து சமாளித்துக் கொண்டு தொழிலாளர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். கடைசி அஸ்திரமாக செயற்கையாக மின் தடைகளை உருவாக்கினர் – உடலின் ஒவ்வொரு பாகமாக வெட்டப்பட்டு வந்த போதும் தங்கியிருந்த உயிர், இறுதியில் தலையை வெட்டிய பின் பிரிந்தது, உற்பத்தி குலைந்து போனது.

அதிகார வர்க்கம் திட்டமிட்டு சதித்தனமாக வீழ்த்திய உற்பத்தியையே நட்டத்திற்கான காரணமாக மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு காட்டிய சுரங்க நிர்வாகம், ஆலை மூடலுக்கு உத்தரவிடக் கோரி பரிந்துரையும் செய்தது. இறுதியில் ஆளும் வர்க்க வஞ்சக சூழ்ச்சிகள் வென்று தொழிலாளிகள் வீழ்த்தப்பட்டனர்; சுரங்கம் மூடப்பட்டது.

பெருமழை பொழிந்து புற்றில் வெள்ளம் சூழப் போவதை உணர்ந்த நச்சரவங்கள் பாதுகாப்பாக நீங்கிச் செல்ல, பாடுபட்டு புற்றைக் கட்டி உண்டாக்கிய எறும்புகளோ வெள்ளத்தில் மூழ்கிச் செத்தன. சுரங்கத்தோடு எந்த விதமான உணர்வு ரீதியான பிணைப்பும் இல்லாமல், தில்லியிலிருந்து நியமிக்கப்பட்டு நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் அனைவரும் முன்கூட்டியே விருப்ப ஓய்வை அறிவித்து கணிசமான தொகையுடன் வெளியேறியிருந்தனர். சுரங்கத்தையே நம்பிப் பிழைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கையோ சொல்லொணாத் துயரத்தில் விழுந்தது.

தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிக்காமலேயே 2001-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சுரங்கம் மூடப்பட்டது. வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக வேலை செய்த இடத்துக்குள் இனிமேல் தங்களால் நுழைய முடியாது என்கிற யதார்த்தத்தை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லாத நிலையில் வேறு எந்த வேலைகளுக்கும் செல்லாமல் மூடப்பட்ட சுரங்கத்தின் வாயிலை கைவிடப்பட்ட குழந்தைகள் போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருந்தனர்.

சுரங்கம் மூடப்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2008-ம் ஆண்டு கருநாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பு வரும் வரையில் அவர்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. எண்பதுகளின் துவக்கத்திலிருந்தே படிப்படியாக சுரங்கம் மூடப்பட்டும் பணிப் பரப்பளவு சுருக்கப்பட்டும் வந்ததன் விளைவாக முப்பதாயிரத்துக்கும் மேல் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மூடப்பட்ட போது வெறும் மூவாயிரமாக சுருங்கியிருந்தது.

Historical_Photos_KGF_Mine_015தொழிலாளர்களில் பலர் தங்களது நடுத்தர வயதைக் கடந்திருந்தனர். சுரங்கப் பணிகளைத் தவிற வேறு எந்த வேலையும் தெரியாத அவர்கள் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திகைப்பில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் அந்த ஏழாண்டுகள் அனுபவித்த துன்பம் என்பது இது வரை யாருமே எழுதாத, இனிமேலும் எவராலும் எழுதப்பட முடியாத, நாம் யாரும் கண்டும் கேட்டுமிராத கொடும் துயரங்கள்…

நாங்கள் வேலு என்ற தொழிலாளியிடம் பேசிக் கொண்டிருந்தோம்

“வேலை போச்சி.. யார்ட்ட போயி என்னா வேலை கேட்கறதுன்னே தெரியலை அப்டியே சுத்தினு இருந்தோம்..”

“நீங்க எப்படி வேற வேலைக்கு முயற்சி செய்தீங்க”

“இன்னா முயற்சி செய்யிறது? யார்னா பெங்களூருக்கு போனா சொல்லி அனுப்பிட்டு காத்திருப்போம். எனக்கெல்லாம் பெங்களூர்ல எவனையும் தெரியாது வேறெ..”

”சாப்பாட்டுக்கு…?

”ஊட்ல உலை கொதிச்சி வாரக் கணக்குல ஆகிருக்கும். அக்கம் பக்கத்துல கைநீட்டி எப்படியோ புள்ளைங்கள பட்டினி போடாம காப்பாத்தினோம்… வேலைக்கு சொல்லி வச்ச எவனாவது வந்து எதுனா நல்ல சேதி சொல்லுவானான்னு கூரைய பாத்துனே குந்தினு இருப்போம்”

“அதுவரைக்கு எப்படி சமாளிச்சீங்க?”

“ஏதோ கெடச்ச வேலை.. கெடச்ச கூலி..”

தண்ணீரிலிருந்து தரையில் எடுத்து வீசப்பட்ட மீன்களைப் போல் சுரங்கத்திலிருந்து பிய்த்தெறியப்பட்ட தொழிலாளர்கள் தவித்துப் போனார்கள்.

இனி தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து, அந்த மக்களின் தற்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்கால நம்பிக்கைகள் குறித்தும்…

(தொடரும்)

கருப்பு வெள்ளை புகைப்படங்கள் 1970-களுக்கு முந்தைய சுரங்க வரலாற்றோடு தொடர்புடையவை.  நன்றி M. DEVA KUMAR

முந்தைய பகுதிகள்

  1. கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
  2. உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை