Saturday, July 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 639

கோலார் சுரங்க வரலாறு !

6

கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் – 3

”சுரங்கத்த மூடினப்போ எனுக்கு மொத்தம் இருவத்தஞ்சி வருசம் சர்வீசு”

“சுரங்கம் மூடப்பட்டது உங்களுக்கு இன்னும் நினைவில் இருக்கிறதா?”

தங்க பிஸ்கட்
“வாராவாரம் ஊரிகான் ஸ்டேசன்ல ட்ரெயின் ஏறும் போதும் இறங்கும் போதும் பாழடைஞ்சி போன பழைய கட்டிடங்கள பார்க்கும் போதும்.. அந்த ஆளுகிட்ட இப்ப கைநீட்டி சம்பளம் வாங்கும் போதும்.. அப்டியே செத்துறலாம்னு தோணும் சார்.”

“நல்லா ஞாபகம் இருக்கு சார். 2001-வது வருசம் மார்ச் 1-ம் தேதி காலைல நாங்கெல்லாம் வழக்கம் போல வேலைக்குப் போனோம். எங்கள கேட்லயே தடுத்து நிப்பாட்டிட்டாங்க. என்ன ஏதுன்னு புரியலை. வெளியே நின்னு பாத்தோம். கேட் திறக்கறா மாதிரி தெரியலை. எல்லாரும் கொஞ்ச நேரத்துல கூச்சல் போட ஆரம்பிச்சோம். சங்க தலைவருங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினோம்”

“அப்புறம் என்ன நடந்தது?”

“ரொம்ப நேரம் கழிச்சி ஆபிசருங்க வந்தாங்க. சுரங்கம் குளோஸ்னு சொல்லிட்டு எல்லாரையும் ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட்டுட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. சங்கத் தலைவருங்க எழுதிக் கொடுக்க சொல்லி கேட்டாங்க. அதுக்கு ஆபீசருங்க, இன்னும் உத்தரவு வரலைன்னு சொல்லிட்டு போயிட்டாங்க”

“சுரங்கம் மூடப்போவது பற்றி உங்களுக்கு தெரியவே தெரியாதா?”

“ரொம்ப வருசமா இதோ மூடுவோம், இப்ப மூடுவோம்னு சொல்லினே இருந்தாங்களே ஒழிய மூடலை. எப்ப மூடுவோம்னு தெளிவா சொல்லவும் இல்லை. எப்படியும் இன்னும் கொஞ்ச வருசம் ஓடும்னு தான் நாங்க நம்பிட்டு இருந்தோம்”

”அப்புறம் என்ன செய்தீங்க?”

“என்னா செய்யிறது…போராடிப் பார்த்தோம். ஆனா ஒன்னும் நடக்கலை,  பத்து மாசம் வரைக்கும் இப்படியே தெனைக்கும் போயி கையெழுத்து போடறதும், வீட்டுக்கு வார்றதுமா போச்சி. பத்து மாசம் கழிச்சி தான் லாக் அவுட் பத்தி அறிவிப்பே வந்திச்சி..”

“தொழிற்சங்கமெல்லாம்….”

“திருட்டு …….. நாயிங்க சார். எல்லா நாயும் அன்னிக்கு எங்க முன்னாடி சூடா பேசுனானுங்க.. அப்புறம் தான் தெரிஞ்சது எல்லாரும் மேனேஜ்மெண்டு கிட்ட காசு வாங்கிட்டு எங்க கழுத்த அறுத்த விசயம். தோ.. நான் இப்ப பெங்களூர்ல செக்கூரிட்டி வேலை பார்க்கிறனே அப்பார்ட்மெண்டு.. இதுக்கு கூட ஒரு தொழிற்சங்க தலைவரு தான் சார் ஓனரு. தோ.. இங்கெ ஊரிகான்ல தான் அவனும் இருக்கான். இங்க பாத்தா பிச்சக்காரன் மாதிரி சுத்துவான். அந்த ஆறுவிளக்கு ஏரியாவுக்கு அந்தாண்ட போயிட்டான்னா பெரிய கார்ல தான் போறது வர்றது எல்லாம்.. அவனும் நம்பள மாதிரி தொழிலாளின்னு நம்பி தலைவரா கொண்டாந்தோம்.. ப்ச்சு.. எல்லாம் போச்சி சார். இனிமே பேசி இன்னா ஆவப்போவுது?”

”…..”

“வாராவாரம் ஊரிகான் ஸ்டேசன்ல ட்ரெயின் ஏறும் போதும் இறங்கும் போதும் பாழடைஞ்சி போன பழைய கட்டிடங்கள பார்க்கும் போதும்.. அந்த ஆளுகிட்ட இப்ப கைநீட்டி சம்பளம் வாங்கும் போதும்.. அப்டியே செத்துறலாம்னு தோணும் சார். ஆனா.. எனக்கு ரெண்டுமே பொட்ட புள்ளிங்க சார்.. என்னா செய்யறது. அந்த ஆண்டவன் தான் சார் இவனுங்களுக்கு கூலி கொடுக்கனும்”

கோலார் தங்க வயலில் தங்கம் எப்போதிருந்து கிடைக்கத் துவங்கியது என்பது பற்றி மாறுபட்ட தகவல்கள் சொல்லப்படுகின்றன. கி.பி 77-ல் இப்பகுதியில் பயணம் செய்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் ப்ளைனி என்பவர் இங்கே தங்கம் கிடைத்தது என்பதைப் பதிவு செய்துள்ளார். வட இந்தியாவின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த ஏறக்குறைய அதே காலகட்டத்தைச் சேர்ந்த தங்க நாணயங்களை அசுத்தப் பரிசோதனைக்கு (impurity check) உட்படுத்திய போது அவை கோலாரில் இருந்து வடக்கே சென்றிருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சோழர் காலத்திலும், திப்பு சுல்தானின் காலத்திலும் கோலார் பகுதியில் தங்கம் எடுக்கப்பட்டது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன.

1880-ல் தான் முதன் முறையாக ஜான் டெய்லர் நிறுவனத்தாரால் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆழ்துளைகள் அமைக்கப்பட்டு தங்கம் வெட்டியெடுக்கும் பணி துவங்கியது. அன்று துவங்கி சுரங்கம் மூடப்பட்ட நாள் வரை சுமார் நூற்றி இருபது ஆண்டுகளில் கோலார் தங்க வயலில் எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த தங்கத்தின் அளவு சுமார் 800 டன். இது தற்போது இந்தியா ஒருவருடத்தில் நுகரும் ஒட்டுமொத்த தங்கத்தின் அளவை விட குறைவானது!

எழுதுபொருள் கடை
கோலார் தங்க வயலின் வரலாறு சுரங்கத்தோடும் சுரங்கத்தின் வரலாறு தொழிலாளர்களோடும் பிரித்தறிய முடியாதபடி மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது.

கோலார் தங்க வயலின் வரலாறு சுரங்கத்தோடும் சுரங்கத்தின் வரலாறு தொழிலாளர்களோடும் பிரித்தறிய முடியாதபடி மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது. இதில் எது ஒன்றையும் தனியே பிரித்து புரிந்து கொள்ளவே முடியாது. கோலாரின் மக்கள் இன்றைக்கு வாழும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் பற்றியும், அவர்கள் ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொள்ள சுரங்கம் மூடப்பட்டதைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சுரங்கம் மூடப்பட்ட பின்னணியில் இருந்து துவங்குவோம். வாருங்கள், துள்ளத் துடிக்க நடத்தப்பட்ட பச்சைப் படுகொலை ஒன்றைக் குறித்து அறிந்து கொள்ளுங்கள் – இந்தக் கதை எங்கோ யாருக்கோ நடந்தது மாத்திரமல்ல; நம்மைச் சுற்றிலும் நாமே அறியாமல் நமக்கோ, நமக்குத் தெரிந்தவர்களுக்கோ நித்தமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

இன்றைக்கு எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்திற்கும் என்ன நடந்து வருகிறதோ அதே தான் கோலார் தங்க வயலுக்கும் நேர்ந்தது. இது ஒரே நாளில் நடந்த கொலை அல்ல; ஹிட்லரின் ஜெர்மனியில் இறுக்கமான அறைகளுக்குள் யூதர்களைப் பூட்டி மெல்ல மெல்ல உள்ளே புகையை நிரப்பி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை மூச்சுத் திணற வைத்து கொன்ற அதே பாணி தான். 47-ல் ’சுதந்திரம்’ வாங்கிய உடனேயே கோலார் தங்க வயலுக்கு நாள் குறித்தாகி விட்டது.

வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்ததே வியாபாரத்தின் மூலமும் அரசியல் அதிகாரத்தின் மூலமும் இங்குள்ள வளங்களைச் சுரண்டிச் செல்வதற்குத் தான் என்பது நாம் ஏழாம் வகுப்பில் படித்த வரலாறு சொல்கிறது. ஆனால், சிறுவர்களுக்குத் தெரிந்த இந்த எளிய உண்மை அன்றைய தலைவர்களுக்குத் ‘தெரியாமல்’ போய் விட்டது. 47-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னும் வெள்ளையர்களின் வியாபார, வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் தங்களது சுதந்திரத்தை இழக்கவில்லை. கோலார் தங்க வயலை நடத்தி வந்த ஜான் டெய்லர் கம்பேனியார் 1956-ம் ஆண்டு வரை எந்த சிக்கலும் இன்றி தங்கத்தைச் சுரண்டியே வந்தனர்.

1956-ல் ஜான் டெய்லர் நிறுவனம் நிர்வாகப் பொறுப்பை மைசூர் அரசுக்கு கைமாற்றிக் கொடுத்த பின்னரும், வெள்ளைக்காரன் மனம் புண்பட்டு விடக்கூடாதே என்கிற அக்கறையில் அவன் காலில் விழுந்து “பொறியியல் ஆலோசகர்” என்ற பொறுப்பு வழங்கப்பட்டு 1971-ம்  ஆண்டு வரை நிர்வாகத்தில் அமர்த்தப்பட்டனர்.

ஜான் டெய்லர்
ஜான் டெய்லரும் ‘குடும்பமும்’

ஜான் டெய்லரின் கையிலிருந்து மைசூர் அரசாங்கத்துக்கு கைமாற்றப்பட்ட சுரங்கம் ஆறாண்டுகளுக்குப் பின் மத்திய அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறது, பின்  71-ம் ஆண்டு மத்திய எஃகு மற்றும் சுரங்கத் துறையின் கீழும், பின் 72-ம் ஆண்டு பாரத தங்க சுரங்க நிறுவனம் என்ற பொதுத்துறையின் கீழும் செல்கிறது.

ஜான் டெய்லரின் நேரடி நிர்வாகத்தில் இருந்த வரை லாபம் ஈட்டிக் கொண்டிருந்த சுரங்கம் அவர்கள் விலகிய உடனேயே நட்டம் காட்ட ஆரம்பித்தது உலகின் எட்டாவது அதிசயம். அந்த அதிசயத்தை சுரங்க நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம் சாதித்துக் காட்டியது.

1956-ல் இருந்து 62-ம் ஆண்டு வரை சுரங்கத்தில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் அளவிடப்பட்டது – ஆனால், இதிலிருந்து சல்லிக் காசு கூட சுரங்கத்தைப் பராமரிக்க திருப்பி விடப்படவில்லை. ஜான் டெய்லரின் நிர்வாகத்தில் இருந்த காலத்தில் தங்க படிமங்கள் அதிகமாக உள்ள பல பகுதிகளை முறையான காரணங்கள் ஏதும் குறிப்பிடாமல் முத்திரையிட்டு மூடிச் (Sealed off) சென்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து நிர்வாகத்திற்கு வரும் இந்திய அதிகார வர்க்கமோ, அவை முத்திரையிடப்பட்டதற்கு என்ன காரணம் என்று ஆராயவும் இல்லை அதற்கான முயற்சிகளையும் எடுக்கவில்லை.

அடுத்ததாக, கோலாரின் மேற்கே 40 கிமி தொலையில் இருந்து கோலார், குப்பம், தர்மபுரி வழியாக சேலம் வரை பூமிக்கடியில் தங்கப் படிமங்கள் வேர் போல் பரவிச் செல்வதை ஆங்கிலேய சர்வேயர்கள் ஆராய்ந்து மதிப்பிட்டு வைத்திருந்தனர். மேலும், கோலாரைச் சுற்றிலும் உள்ள  பகுதிகளில் குறிப்பாக எந்தெந்த இடங்களில் எவ்வளவு அடர்த்திக்கு தங்க படிமங்கள் இருக்கின்றன என்பது குறித்தும் ஓரளவுக்கு ஆராய்ந்து சர்வே ரிப்போர்ட்டுகளாக தயாரித்து வைத்திருந்தனர்.

பொதுத்துறை
சுதந்திரத்திற்கு பின் பொதுத்துறை என்ற பெயரில் படிப்படியாக சுரண்டப்பட்ட கேஜிஎஃப்

ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நிலத்தடி சர்வே பழைய வகைப்பட்டது என்பதோடு அவர்கள் எடுத்திருந்த சர்வே பரந்து பட்ட அளவில் பொதுவானதாகவே இருந்தது. எந்தெந்த இடத்தில் படிமங்களின் அடர்த்தி அதிகம் அதை அடைவதற்கான வழிவகைகள் என்ற குறிப்பான அம்சங்கள் பருண்மையான அளவில் நவீன விஞ்ஞான முறைகளின் அடிப்படையில் செய்யப்படவில்லை. கோலார் தங்க வயல் பகுதியில் மட்டும் ஓரளவுக்கு விவரங்களை சேகரித்து சர்வே ரிப்போர்ட்டுகளாக வைத்திருந்தனர்.

’சுதந்திரத்திற்குப்’ பின் அதிகாரத்திற்கு வந்த இந்திய அதிகாரிகளோ, நவீன விஞ்ஞான முறைகளைப் பயன்படுத்தி மீண்டும் சர்வே எடுக்கவும் இல்லை, ஆங்கிலேய அதிகாரிகள் சர்வே செய்யாத இடங்களை சர்வே செய்யவும் இல்லை. கனிம வளங்களை பூமியிலிருந்து வெட்டியெடுக்கும் சுரங்கத் தொழிலின் அடிப்படையே அறிவியல் ரீதியிலான சர்வேக்கள் தான். இது இந்திய நிர்வாகத்தின் கீழ் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டாக படிப்படியாக ஒரு டன் மூலப் பொருளில் இருந்து சுத்திகரிக்கப்படும் தங்கத்தின் அளவு குறைந்து கொண்டும் நட்டத்தின் அளவு கூடிக் கொண்டும் வந்துள்ளது. சுரங்கம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து பத்தே ஆண்டில் கொள்கை அளவில் ’நட்டத்தை’ காரணம் காட்டி மூடி விடுவது என்கிற முடிவுக்கு மத்திய அரசு வந்து விட்டது.

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து சுரங்கத்தை மூடுவது குறித்த விவாதங்கள் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரிடையே துவங்கி விட்டது. இந்த தகவல் கீழ்மட்ட தொழிலாளிகளை எட்டிய போது அவர்கள் கொந்தளித்து எழுந்தனர். தங்களுக்கு வாழ்வளித்த சுரங்கம் தங்கள் கண் முன்னே கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுவதைக் கண்டு பொறுக்க முடியாமல் அனல் கக்கும் போராட்டங்களை முன்னெடுக்கத் துவங்கினர்.

கோலார் நகரமே சுரங்கத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான். சுமார் இரண்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் ஏதாவது ஒரு வகையில் சுரங்கத்தோடு நெருக்கமான இணைப்பைக் கொண்டது. அவர்களது படியளக்கும் ஒரே மூலம் என்ற வகையிலும் நகரத்தின் பெரும்பான்மையினரான தலித்துகளின் சமூக இழிவைத் துடைக்க கைகொடுத்தது என்ற வகையிலும் அந்த மக்களுக்கு சுரங்கத்தோடு உணர்வு ரீதியிலான பிணைப்பு இருந்தது.

மக்களின் கோபாவேசத்தைத் தணிக்க மத்திய அரசு வழக்கம் போல மூன்று வெவ்வேறு கமிட்டிகளை அமர்த்தியது. மத்திய சுரங்கத் துறை உயரதிகாரி கே.எஸ்.ஆர் சாரி என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும், சுசீலா கோபாலன் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும், ராமதாஸ் அகர்வால் என்பவர் தலைமையில் ஒரு கமிட்டியும் 1985-லிருந்து தொண்ணூறுகளின் இறுதிக் கட்டம் வரையில் வெவ்வேறு காலகட்டத்தில் இந்தக் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. மத்திய அரசைப் பொறுத்த வரையில் இந்தக் கமிட்டிகள் என்பவை சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியங்கள்.

சுரங்கத்தில் நட்டம் ஏற்படுத்திய காரணிகளையும், அவற்றைக் களைந்து கொள்ளும் வழிமுறைகளையும் ஆராய ஏற்படுத்தப்பட்ட இக்கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாராம்சம் – அதிகார வர்க்க நிர்வாக சீர்கேடு.

மறுகாலனியாக்கம்
1990-களுக்குப் பிறகு சுரங்க வேலைகளை இழுத்து மூடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டு கொடுக்க திட்டம்…

சாரி கமிட்டியின் பரிந்துரைகளின் படி, கோலாரில் அறவிடப்படும் தங்கம் வெளிச் சந்தையின் விலைக்கு கொள்முதல் செய்யாமல் லண்டன் உலோகச் சந்தையின் மதிப்பில் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்டு பண நோட்டுகள் அச்சிடப்படுவதற்கான பின்புல ரிசர்வாக பயன்படுத்தப்படுவது சுரங்கத்தின் நட்டத்திற்கு முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் கோலாரில் இருந்து சில பத்து கிலோமீட்டர்கள் தொலைவில் கருநாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டி தங்க சுரங்கத்திலிருந்து அறவிடப்படும் தங்கமோ வெளிச்சந்தை விலையில் கொள்முதல் செய்யப்பட்டு லாபத்தில் இயங்கி வந்ததையும் சாரி சுட்டிக்  காட்டியிருக்கிறார்.

மேலும், ஜான் டெய்லர் சுமார் முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய பழைய தொழில்நுட்பங்களையே இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருப்பதால் தங்க மகசூலின் அளவு அதிகரிக்காமல், சையனைடு கழிவுகளில் அதிக தங்கம் கலந்து வெளியேறுவதையும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். பின்னர் அமைக்கப்பட்ட இரண்டு கமிட்டிகளின் பரிந்துரைகளின் சாரமும் இவைகளே. இந்த மூன்று கமிட்டிகளின் பரிந்துரை அறிக்கைகளின் காகிதங்களையும் வடிவாக வெட்டிய அதிகார வர்க்கத்தினர், அவற்றை தில்லி சுரங்கத் துறை அலுவலகத்தின் கழிவறையில் மலம் துடைப்பதற்காக தொங்க விட்டனர்.

கழிப்பறையிலிருந்து வெளியேறிய கையோடு அதிகாரிகள் செய்த அடுத்த வேலை, சுரங்கத்தை மூடுவதற்கான கோப்புகளை மத்திய தொழிற்சாலைகள் மற்றும் நிதி விவகாரங்கள் மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு (BIFR – Board for Industrial and Financial Reconstruction) அனுப்பி வைத்தது தான். மேற்படி ஆணையம், தொழில் தகறாறு சட்டத்தின் கீழ் சுரங்கத்தை மூடுவதற்கான நிர்வாக ரீதியிலான ஈமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை காலம் கடத்தாமல் உடனடியாக செய்யத் துவங்கியது.

இதற்கிடையே, மத்திய அரசால் சுரங்கத்தின் நிர்வாகப் பொறுப்பிற்கு நியமித்து அனுப்பப்பட்ட அதிகாரிகளும் தங்கள் எஜமானர்களின் விருப்பத்தை குறிப்பாலறிந்து செயலாற்றத் துவங்கினர்.

பூமியைக் குடைந்து தங்கத்தைத் தேடி முன்னேறும் போது நீரோட்டப் பகுதிகளையும் கடந்து செல்ல வேண்டும். இதன் காரணமாக சுரங்கத்தின் உள்ளே பல இடங்களில் நீர்க் கசிவு இருக்கும். இதைச் சமாளிக்க சிறு சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும். இந்த அணைகள் தொடர்ச்சியாகவும் முறையாகவும் பராமரிக்கப்பட வேண்டும். என்பதுகளில் இருந்தே நிர்வாகத்தில் இருந்த உயர் அதிகாரிகள் இந்தப் பணியைத் திட்டமிட்டுப் புறக்கணித்தனர். 94 – 96 காலகட்டத்தில் பல அணைகள் சதித்தனமாக உடைக்கப்பட்டன.

இதன் காரணமாக சுரங்கத்தின் ஆழமான பகுதிகள் நீரில் மூழ்கி விலை மதிப்பு வாய்ந்த பல கருவிகள் மீட்கப் படவியலாத படிக்கு நிரந்தரமாக மூழ்கிப் போயின. வேலை செய்யத் தகுந்த ஆழத்தின் அளவும் படிப்படியாக சுருங்கி ஒரு கட்டத்தில் 2500 அடிகளுக்கு மேல் தொழிலாளர்களால் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

கேஜிஎப் தொழிலாளர்கள்
தண்ணீரிலிருந்து தரையில் எடுத்து வீசப்பட்ட மீன்களைப் போல் சுரங்கத்திலிருந்து பிய்த்தெறியப்பட்ட தொழிலாளர்கள் தவித்துப் போனார்கள்.

சுரங்கத்தை உள்ளிருந்தே கருவருக்கும் வேலை இதோடு நிற்கவில்லை. சுரங்க நிர்வாகத்தின் உயிராதாரமான சர்வே ரிப்போர்ட்டுகள் படிப்படியாக திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்பட்டன. பெரும் புகழும் பழமையும் வாய்ந்த சேம்பியன் ரீஃப் சுரங்கத்தின் பதிவேடுகளும், சர்வே வரைபடங்களும் கைவிடப்பட்ட சர்குலர் ஷாஃப்ட் சுரங்கத்தினுள் தேங்கியிருந்த நீரில் வீசப்பட்டு அழிக்கப்பட்டன. கோலார் தங்க வயலில் இருந்த இன்னொரு பெரிய சுரங்கமான மைசூர் சுரங்கத்தின் பதிவேடுகள் ஆவணக் காப்பகத்தோடு சேர்த்து மொத்தமாக கொளுத்தப்பட்டன.  இவையணைத்தும் மக்கள் காண அவர்கள் கண் முன்னே போலீசின் துணையோடும், அதிகாரிகளின் முன்னிலையிலும் நிகழ்ந்தேறின.

இதற்கிடையே மீள்கட்டமைப்பு ஆணையம் சுரங்கத்தை லாபகரமாக நடத்தும் மாற்று வழிகள் இருப்பின் அவற்றை அறிக்கையாக சமர்ப்பிக்க சுரங்க நிர்வாகத்தையும் தொழிலாளர் தரப்பில் தொழிற்சங்கங்களையும் கோரியது. சுரங்கத்தை மூடுவது என்று முடிவெடுத்த பின், இந்தக் கோரிக்கையே கூட வெறும் சம்பிரதாயமான நடவடிக்கை தான் என்றாலும், அன்றைக்கு சுரங்கத் தொழிலாளர்களிடையே செயல்பட்டு தொழிற்சங்கங்கள் தமக்குள் மோதிக் கொண்டு மீள்கட்டமைப்பு ஆணையத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்காமல் விட்டன.

தொழிலாளர்கள் தரப்பில் இருந்து பதில் இல்லை என்பதையே சுரங்கத்தை மூடுவதற்கு போதுமான காரணமாக காட்டி தொழில் தகராறு சட்டத்தின் கீழ் ஈமக் கிரியைகளைத் துவக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடியது மீள்கட்டமைப்பு ஆணையம்.

சுரங்க நிர்வாகமும் கைவிட்டு தொழிற்சங்கங்களும் துரோகமிழைத்து விட்ட நிலையில் தொண்ணூறுகளின் இறுதியில் சுரங்கம் முதுகில் குத்தப்பட்டு மரணப் படுக்கையில் வீழ்த்தப்பட்டது.  எந்த நேரமும் சுரங்கம் மூடப்படலாம், எந்த நேரமும் தொழிலாளிகள் தெருவில் வீசியெறியப்படலாம் என்கிற நிலையில் தொழிலாளிகள் தங்கள் உயிருக்கு நிகரான சுரங்கத்தைக் காப்பதற்கான இறுதி முயற்சி ஒன்றை எடுத்தனர்.

இரண்டாயிரமாவது ஆண்டின் துவக்க மாதங்களில் மாதாந்திர சுத்திகரிக்கப் பட்ட தங்கத்தின் உற்பத்தி அளவு 45 கிலோவாக இருந்த நிலையில் தொழிலாளர்கள் தங்களால் முடிந்த அசுர உழைப்பையே இறுதி ஆயுதமாக ஏந்திக் களம் புகுந்தனர்.  தங்க ரிசர்வ் குறைந்ததால் உற்பத்தி குறைந்தது; உற்பத்தி குறைந்ததால் லாபமில்லை; லாபமில்லாததால் மூட வேண்டும் என்கிற பச்சைப் பொய்யை தங்கள் உழைப்பால் தவிடு பொடியாக்கினர் தொழிலாளிகள். அடுத்த சில மாதங்களில் மாதாந்திரம் ஐந்து கிலோ என்கிற வகையில் உற்பத்தியை பெருக்கி அதிகபட்சமாக 86 கிலோ என்கிற அளவை எட்டிப் பிடித்தனர்.

இத்தனைக்கும் படிப்படியாக சுரங்கங்கள் மூடப்பட்டு செயல்பட்டில் இருந்த சுரங்கத்தின் வேலைத் தளமும் 2500 அடி ஆழமாக சுருங்கிப் போய், நிர்வாகத்தின் எந்த ஒத்துழைப்பும் இல்லாத நிலையிலேயே இதைச் சாதித்தனர் தொழிலாளிகள்.  கிட்டத்தட்ட செத்த மாட்டில் பால் கறந்த சாதனை அது. துரோக அரசியலின் சூது வாது அறியாத அந்த எளிய அப்பாவிகளால் தங்கள் உழைப்பை மட்டுமே பயன்படுத்தி எழுதிக் காட்டிய உன்னதமான வீரகாவியம் அந்த 86 கிலோ தங்க உற்பத்தி.

சுரங்கத்தை நட்ட கணக்கு காட்டி மூடி விட்டு சர்வதேச டெண்டர் என்கிற பெயரில் அதைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்த்தே தீருவது என்று ஏற்கனவே ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் முடிவு செய்து விட்ட பின் தொழிலாளிகளின் உழைப்பையும் அது உணர்த்திய செய்தியையும் மலத் தொட்டியில் போட்டு அமிழ்த்தினர் மக்கள் விரோதிகள். தங்கள் கையாட்களாக சுரங்க நிர்வாகத்தில் அமர்த்தி வைத்திருந்த அதிகாரிகளை வைத்து கடைசியாக பிழைத்தெழ சுரங்கம் காட்டிய உயிர்மூச்சை திட்டமிட்டு நிறுத்தினர்.

கேஜிஎப் தொழிலாளர்கள்
பெருமழை பொழிந்து புற்றில் வெள்ளம் சூழப் போவதை உணர்ந்த நச்சரவங்கள் பாதுகாப்பாக நீங்கிச் செல்ல, பாடுபட்டு புற்றைக் கட்டி உண்டாக்கிய எறும்புகளோ வெள்ளத்தில் மூழ்கிச் செத்தன.

பணியில் இருந்த தொழிலாளிகளுக்கு வெடி மருந்து சப்ளையை முதலில் நிறுத்தி வைத்தனர்; தொழிலாளிகளோ ஏற்கனவே உடைக்கப்பட்ட பாறைப் படிவங்களைச் சேகரித்து உற்பத்தி சரியாமல் பார்த்துக் கொண்டனர். பணிக்குத் தேவையான அத்தியாவசிய உபகரணங்களை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுத்தனர்; இருப்பதைக் வைத்து சமாளித்துக் கொண்டு தொழிலாளர்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். கடைசி அஸ்திரமாக செயற்கையாக மின் தடைகளை உருவாக்கினர் – உடலின் ஒவ்வொரு பாகமாக வெட்டப்பட்டு வந்த போதும் தங்கியிருந்த உயிர், இறுதியில் தலையை வெட்டிய பின் பிரிந்தது, உற்பத்தி குலைந்து போனது.

அதிகார வர்க்கம் திட்டமிட்டு சதித்தனமாக வீழ்த்திய உற்பத்தியையே நட்டத்திற்கான காரணமாக மீள்கட்டமைப்பு ஆணையத்திற்கு காட்டிய சுரங்க நிர்வாகம், ஆலை மூடலுக்கு உத்தரவிடக் கோரி பரிந்துரையும் செய்தது. இறுதியில் ஆளும் வர்க்க வஞ்சக சூழ்ச்சிகள் வென்று தொழிலாளிகள் வீழ்த்தப்பட்டனர்; சுரங்கம் மூடப்பட்டது.

பெருமழை பொழிந்து புற்றில் வெள்ளம் சூழப் போவதை உணர்ந்த நச்சரவங்கள் பாதுகாப்பாக நீங்கிச் செல்ல, பாடுபட்டு புற்றைக் கட்டி உண்டாக்கிய எறும்புகளோ வெள்ளத்தில் மூழ்கிச் செத்தன. சுரங்கத்தோடு எந்த விதமான உணர்வு ரீதியான பிணைப்பும் இல்லாமல், தில்லியிலிருந்து நியமிக்கப்பட்டு நிர்வாகத்தில் இருந்த உயரதிகாரிகள் அனைவரும் முன்கூட்டியே விருப்ப ஓய்வை அறிவித்து கணிசமான தொகையுடன் வெளியேறியிருந்தனர். சுரங்கத்தையே நம்பிப் பிழைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கையோ சொல்லொணாத் துயரத்தில் விழுந்தது.

தொழிலாளர்களுக்கு முறையாக அறிவிக்காமலேயே 2001-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சுரங்கம் மூடப்பட்டது. வழக்கம் போல் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பரம்பரை பரம்பரையாக வேலை செய்த இடத்துக்குள் இனிமேல் தங்களால் நுழைய முடியாது என்கிற யதார்த்தத்தை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லாத நிலையில் வேறு எந்த வேலைகளுக்கும் செல்லாமல் மூடப்பட்ட சுரங்கத்தின் வாயிலை கைவிடப்பட்ட குழந்தைகள் போல் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருந்தனர்.

சுரங்கம் மூடப்பட்டதை அடுத்து தொழிலாளர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2008-ம் ஆண்டு கருநாடக உயர்நீதி மன்றத் தீர்ப்பு வரும் வரையில் அவர்களுக்குச் சேர வேண்டிய ஈட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. எண்பதுகளின் துவக்கத்திலிருந்தே படிப்படியாக சுரங்கம் மூடப்பட்டும் பணிப் பரப்பளவு சுருக்கப்பட்டும் வந்ததன் விளைவாக முப்பதாயிரத்துக்கும் மேல் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மூடப்பட்ட போது வெறும் மூவாயிரமாக சுருங்கியிருந்தது.

Historical_Photos_KGF_Mine_015தொழிலாளர்களில் பலர் தங்களது நடுத்தர வயதைக் கடந்திருந்தனர். சுரங்கப் பணிகளைத் தவிற வேறு எந்த வேலையும் தெரியாத அவர்கள் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திகைப்பில் ஆழ்ந்திருந்தனர். அவர்கள் அந்த ஏழாண்டுகள் அனுபவித்த துன்பம் என்பது இது வரை யாருமே எழுதாத, இனிமேலும் எவராலும் எழுதப்பட முடியாத, நாம் யாரும் கண்டும் கேட்டுமிராத கொடும் துயரங்கள்…

நாங்கள் வேலு என்ற தொழிலாளியிடம் பேசிக் கொண்டிருந்தோம்

“வேலை போச்சி.. யார்ட்ட போயி என்னா வேலை கேட்கறதுன்னே தெரியலை அப்டியே சுத்தினு இருந்தோம்..”

“நீங்க எப்படி வேற வேலைக்கு முயற்சி செய்தீங்க”

“இன்னா முயற்சி செய்யிறது? யார்னா பெங்களூருக்கு போனா சொல்லி அனுப்பிட்டு காத்திருப்போம். எனக்கெல்லாம் பெங்களூர்ல எவனையும் தெரியாது வேறெ..”

”சாப்பாட்டுக்கு…?

”ஊட்ல உலை கொதிச்சி வாரக் கணக்குல ஆகிருக்கும். அக்கம் பக்கத்துல கைநீட்டி எப்படியோ புள்ளைங்கள பட்டினி போடாம காப்பாத்தினோம்… வேலைக்கு சொல்லி வச்ச எவனாவது வந்து எதுனா நல்ல சேதி சொல்லுவானான்னு கூரைய பாத்துனே குந்தினு இருப்போம்”

“அதுவரைக்கு எப்படி சமாளிச்சீங்க?”

“ஏதோ கெடச்ச வேலை.. கெடச்ச கூலி..”

தண்ணீரிலிருந்து தரையில் எடுத்து வீசப்பட்ட மீன்களைப் போல் சுரங்கத்திலிருந்து பிய்த்தெறியப்பட்ட தொழிலாளர்கள் தவித்துப் போனார்கள்.

இனி தொழிற்சங்கங்களின் பாத்திரம் குறித்து, அந்த மக்களின் தற்போதைய வாழ்க்கை மற்றும் எதிர்கால நம்பிக்கைகள் குறித்தும்…

(தொடரும்)

கருப்பு வெள்ளை புகைப்படங்கள் 1970-களுக்கு முந்தைய சுரங்க வரலாற்றோடு தொடர்புடையவை.  நன்றி M. DEVA KUMAR

முந்தைய பகுதிகள்

  1. கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
  2. உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

ஐடிபிஐ வங்கிப் பணம் மல்லையாவின் பாக்கெட் மணியா ?

1

கிங்பிஷர் நிறுவனத்திற்கு ரூ 950 கோடி கடன் கொடுத்ததில் ஊழல் நடந்திருப்பது தொடர்பாக ஐடிபிஐ வங்கிக்கு சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய் மல்லையா
மல்லையா தனது காலண்டர் வெளியீட்டு விழா ஒன்றில்.

“ஐடிபிஐ வங்கியைப் பொறுத்த வரை அதுதான் மல்லையாவுக்கு தனியாக கொடுக்கப்பட்ட முதல் கடன். ஏற்கனவே கிங் ஃபிஷர் ஏர்லைன்சுக்கு மற்ற வங்கிகள் கொடுத்த கடன்கள் பிரச்சனைக்குள்ளாக்கியிருந்த நிலையில், வங்கிகளின் கூட்டமைப்புக்கு வெளியில் ஐ.டி.பி.ஐ தனியாக கடன் கொடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை” என்கிறார் ஒரு மூத்த சி.பி.ஐ அதிகாரி. ஐ.டி.பி.ஐ-ன் அதிகாரிகள் தயாரித்த உள்சுற்றுக்கான அறிக்கை மல்லையாவுக்கு கடன் கொடுப்பதை எதிர்த்து பரிந்துரைத்திருந்தது.

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்கள் மீதான சி.பி.ஐ விசாரணையின் ஒரு பகுதியாக ஐ.டி.பி.ஐ மல்லையாவுக்குக் கொடுத்த கடன் மீது விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக முறையே ரூ 50 லட்சம், ரூ 3.5 கோடி லஞ்சம் வாங்கிக்கொண்டு பூஷன் ஸ்டீல் மற்றும் பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக கடன் உச்சவரம்பை உயர்த்தி கடன் கொடுத்ததோடு, திருப்பிச் செலுத்தத் தவறிய கடன்களுக்கு போலி கணக்கு காட்ட உதவியதாக சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ஜெயின் கைது செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனத்துக்கு கடன் கொடுத்தது தொடர்பாக ஐடிபிஐ வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப் போவதாகவும், இது குறித்து தகவல் கோரி அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு வங்கி முறையான பதில் தரவில்லை என்றும் சி.பி.ஐ கூறியிருக்கிறது. ரூ 950 கோடி கடன் கொடுக்கப்படுவதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு ரூ 150 கோடி கடன் விண்ணப்பத்தை நிராகரித்து வங்கி முடிவெடுத்திருந்தது.

கிங் ஃபிஷர் விமான சேவை
மூழ்கிக் கொண்டிருந்த கிங் ஃபிஷருக்கு நிதியை கொட்டிய வங்கிகள்

ஏற்கனவே, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளின் கூட்டமைப்பு  மல்லையாவுக்கு ரூ 7,000 கோடி கடன் கொடுத்திருந்தன. அதில், பாரத ஸ்டேட் வங்கி அதிகபட்சமாக ரூ 1,600 கோடி தாரை வார்த்திருந்தது. இந்நிலையில் ஐடிபிஐ தனியாக கடன் கொடுத்திருப்பது  ஊழல் நடந்திருப்பதாக பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் ஒரு சி.பி.ஐ அதிகாரி.

சந்தையில் மோசமான நிலையில் இருந்த கிங் பிஷர் நிறுவனத்தின் மீதான எதிர்மறை மதிப்பீடு, எதிர்மறை நிகர மதிப்பு போன்றவற்றை அலட்சியப்படுத்தி அந்நிறுவனத்துக்கு பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய் கடனை வாரி வழங்கியிருக்கின்றன வங்கிகள்.

கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்தின் சொந்த நிதிநிலை அறிக்கையின் படியே 2005-ம் ஆண்டு முதல் அது சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது. 2005 முதல் 2011 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ 5,960 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளது. 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அது தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.

முன்னதாக, ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, ஐ.டி.பி.ஐ, பாங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, பிஎன்பி ஆகிய வங்கிகள் கடன் பணத்தை பகுதியளவு சரிக்கட்ட கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தன. இதில் ஐ.டி.பி.ஐ ரூ 109 கோடி மதிப்பில் 1.7 கோடி பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது.

கடந்த மே மாதம் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தாத 406 தனியார் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம், 2008-ல் 39,000 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2013-ம் ஆண்டு இறுதியில் 5,50,000 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இப்பட்டியலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடம் (ரூ 4,022 கோடி) வகிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள முதல் 5 நிறுவனங்களில் வின்சம் டயமண்ட்ஸ் (ரூ 3,243 கோடி), எலக்ட்ரோதெர்ம் இந்தியா ரூ (2,653 கோடி), கார்ப்பரேட் பவர் (ரூ 2,487 கோடி), ஸ்டெர்லிங் பயோடெக் (ரூ 2,031 கோடி) ஆகியவை அடக்கம். ஆயிரக்கணக்கான வங்கிப் பணத்தை கொள்ளை அடித்த இத்தகைய நிறுவனங்கள்தான் தொழில் முனைவு மூலம் இந்தியாவை முன்னேற்றப் போகிறவர்களாம். இந்நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளித்தன என்பது மட்டுமில்லை, இவை வாங்கிய கடன்கள் எதற்கு பயன்பட்டன என்பது கூட கேள்விக்குரியது.

மல்லையா
வங்கிப் பணத்தை விழுங்கிய மல்லையா – ‘மகிழ்ச்சியான தருணங்களின் அரசன்’

தொடர்ச்சியாக இழப்புகளை சந்தித்துள்ள நிறுவனத்திற்கு வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? முதலாளிகள் தமது தகிடுதித்தங்களின் மூலமாகவோ, லஞ்சம் மூலமாகவோ அல்லது லாபியின் மூலமாகவோ விதிமுறைகளை வளைத்து தேவையான கடனை பெற்றுக் கொள்கின்றனர்.

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வேறு தொழில்களுக்கு திருப்பிவிடுவது மல்லையாவுக்கு இது முதல் முறை அல்ல. கொள்ளையடிப்பதிலும் அதற்கு ஆளும் வர்க்கங்களை உடந்தையாக்கிக் கொள்வதிலும் மல்லையாவுக்கு ஒரு வரலாறே இருக்கிறது.

தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் என்கிற ஒரு பிளேடு கம்பெனியைத் துவக்கி, நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியைத் தருவதாக வாக்களித்தார் மல்லையா. இதை நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்த அப்பாவி மக்களின் பணத்தை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்டு, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்து மக்களுக்கு பட்டை நாமத்தை சாத்தினார். இதற்கு விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தியும் வளைத்தும் ஆளும் அதிகாரவர்க்கம் உடந்தையாக இருந்தது. மெக்டவல் க்ரஸ்டில் மக்கள் போட்ட முதலீடுகள் எந்தத் திசையில் எங்கே போய் சேர்ந்ததென்று தெரிந்தும் இன்றுவரை அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அனைத்து அரசுகளும் மௌனம் சாதித்து வந்திருக்கின்றன.

இப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையனை சிறையில் அடைத்து அவனது சொத்துக்களை பறிமுதல் செய்து அதன் மூலம் வங்கிகளின் கடனை அடைத்திருக்க வேண்டும். ஆனால், ஐ.பி.எல் அணி, ஃபோர்ஸ் இந்தியா பார்முலா கார் அணி என ஊதாரித்தனமாக இருப்பதோடு கிங்பிஷர் நிர்வாண காலண்டர் தயாரிப்பில் அழகிகளுடன் ஊர் சுற்றிக் கொண்டு திரிந்தார் விஜய் மல்லையா. இந்த கிரிமினல் மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாராளுமன்ற, சட்டமன்றங்கள் இப்படிப்பட்ட பிளேடு பக்கிரிகள், அவர்களுக்கு சேவை செய்வோரின் கூடாரமாக இருக்கிறது.

முதலாளிகளுக்கு கோடி கோடியாக அள்ளிக்கொடுக்கும் இதே பொதுத்துறை வங்கிகள் தான் சிறிய கடனுதவிக்காக சாதாரண மக்களை விதிமுறைகளைக் காட்டி பயமுறுத்துகின்றன, நடையாய் நடக்க வைக்கின்றன. வேலை கிடைக்காததால் கல்விக்கடனை தாமதமாக செலுத்த நேரும் மாணவர்கள், பெற்றோர்களின் படங்களை பிளக்சு பேனரில் போட்டு அசிங்கப்படுத்துகின்றன.

சாராய மல்லையா போன்ற பெருமுதலைகளுக்கு கடன் கொடுத்து வாராக்கடன்களால் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கின்றன பொதுத்துறை வங்கிகள். அதே நெருக்கடியை காரணம் காட்டி அரசுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களுக்கான பரிந்துரை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

மக்கள் பணத்தை முதலாளிகளின் பாக்கெட்டுக்கு திருப்பிவிடுவதையே முதலாளித்துவ அரசுகள் தம் தலையாய கடமையாக செய்யும் போது இந்த போலி ஜனநாயக முறைகளை கொண்டு மல்லையா போன்ற கொள்ளையர்களை தண்டிக்கவோ, அவர்களது சொத்தை பறிமுதல் செய்யவோ முடியாது.

மேலும் படிக்க

கருவாடாற்றுப்படை!

10
பூனையும் கருவாடும்
கோயம்பேடு கருவாடு விற்பனைக்கு தடைபோடு! என கவுச்சி வெறுத்த பூனைகள் கத்துகின்றன

கோயம்பேடு கருவாடு
விற்பனைக்கு தடைபோடு!
என
கவுச்சி வெறுத்த பூனைகள்
கத்துகின்றன,
சந்திலிருந்தும்
‘தி இந்து’ விலிருந்தும்.

மச்ச அவதாரம் எடுத்த
மகா விஷ்ணுவின்
மறு அவதாரமல்லவோ
கருவாடு!
மிச்ச அவதாரமாக
பன்றி வரை
பகவான் அவதரிக்க
இனிய கருவாட்டின் மேல்
இந்துவுக்கென்ன நோக்காடு!

வேதகாலத்தில்
நீங்கள் தின்று தீர்த்த
உயிரினம் போக
எங்களுக்கு எஞ்சியிருந்தது
இந்தக் கருவாடு,
அதுக்குமாடா
உங்கள் இடையூறு!

காய், கனிச் சந்தையில்
கருவாடு விற்கலாமா? என
வக்கணை பேசும் அக்கிரகாரமே!

தி இந்து அலுவலகத்தில் அசைவம் தடை
அலுவலகத்தில் யாருக்கும் அசைவமே கூடாதென அடுத்தவன் வயிற்றிலும் ‘நாமம்’ போடலாமா?

செய்திப் பத்திரிகை என்று
அரசு சலுகையை அள்ளிக் கொண்டு
விளம்பரத்திலும்
விலைக்கு செய்தி போட்டும்
நீ கடை நடத்தலாமா?

ஹோண்டா கார் விளம்பரத்துக்காக
பிள்ளையாரை டான்ஸ் ஆட விட்டு
நீ மட்டும்
‘ இந்துக்கள்’ மனதை
புண்படுத்தலாமா?

அனைத்துக்கும் மேலே
போதுமான அளவுக்கு
உன்னிடம்
புளிசோறு ‘ஸ்டாக்’ இருப்பதாலே
அலுவலகத்தில் யாருக்கும்
அசைவமே கூடாதென
அடுத்தவன் வயிற்றிலும்
‘நாமம்’ போடலாமா?

எதையுமே
அவாள் செய்தால் அனுபூதி
அடுத்தவன் செய்தால்
அதோ கதி!

அவர்கள் குலத்தையே அழித்தாலும்
வேள்வி,
நாம் கொஞ்சம் தின்றாலும் என்.வி.!

மற்றவர் ஆடினால்
சதிராட்டம், தாசியாட்டம்
அவர்கள் ஆடினால்
பரத நாட்டியம்!

அவர்கள் வயிற்றில் மலர்ந்தால்
கடல் புஷ்பம்,
நம் சட்டியில் மிதந்தால் மீன்!

பரத நாட்டியம்
மற்றவர் ஆடினால் சதிராட்டம், தாசியாட்டம் அவர்கள் ஆடினால் பரத நாட்டியம்!

சைவம் புழங்குமிடத்தில்
அசைவம் கூடாதெனில்
தமிழ் புழங்கும்
எம் தமிழ்நாட்டில்
சமஸ்கிருத புழக்கம் மட்டும்
மொழிக் கவிச்சியில்லையா?

‘தமிழால் இணைவோம்’ என்று
மொழியைக் காட்டி
காசைப் பறிப்பது,
‘கருவாட்டால்
பிரிவோம்’ என
சுத்தத்தைச் சொல்லி
இனத்தைப் பிரிப்பது,
இரண்டிலும்
இந்துவின் சங்கு, சக்கர லாவகம் பார்த்து
பெருமாளுக்கே கை நடுங்குது!

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின்
“அக்கார வடிசிலிலும்”
திருவரங்கரத்து நாச்சியாருக்கு
படைக்கப்பட்ட ரொட்டியிலும் மட்டுமல்ல
நாலாபுறத்திலும் காவிரிக்கரையின்
கருப்பஞ்சாறு புகையிலும்
கருவாட்டுக்குழம்பு மணத்திலும்
திளைத்துக் கிடந்தவன் திருவரங்கன்!

கருவாட்டுக் குழம்பு
காவிரிக்கரையின் கருப்பஞ்சாறு புகையிலும் கருவாட்டுக்குழம்பு மணத்திலும் திளைத்துக் கிடந்தவன் திருவரங்கன்!

குறிஞ்சி நிலக்கடவுள் முருகனுக்கு
காட்டுப் பன்றி படையல் போட்டது
திணைவாழ்க்கை,
பாண்டிக்கோயில் கறிசோறும் தின்று
அழகர்கோயில் துளசி தீர்த்தமும் குடித்து
கருவாட்டுக்குழம்பும், சுருட்டும்
கருப்பண்ணசாமிக்கு படைப்பது எம் வழக்கம்.

முறுக்கும், சீடையும் தின்றுவிட்டு
ஒரு வேலையும் இல்லாமல்
சும்மா உட்கார்ந்து
குடல் நாறுவது உன்சாமி,
முழு ஆட்டையும் தின்றுவிட்டு
மூலைக்கு ஒருவராய்
வேலைக்குப் போறவருடன்
வேட்டைக்குப் போவது எம்சாமி!

சிறுபாணாற்றுப் படையா
பெரும்பாணாற்றுப் படையா
இல்லை கருவாட்டுக் கடையா என
வியக்குமளவுக்கு
வெண்சோறும், எயினர் வீட்டு
கருவாட்டு புளிசாறும்
மணக்கும் காட்சிகள்
இலக்கிய சாட்சிகள்.

இறைச்சி
சுத்த அசைவமாய் சத்தானது சங்க இலக்கியம்!

நண்டும், நத்தையும்
மீனும், கருவாடும்
உடும்பும், பன்றியும்,
கோழியும், மடையானும்

ஆடும், மாடும், உரித்துத் தின்று
சுத்த அசைவமாய்
சத்தானது சங்க இலக்கியம்!

ஆமை புழுக்கியும்
சாமை வதக்கியும்
ஆய்ந்து வளர்ந்தது அகநானூறு
நற்றிணை, நல் குறுந்தொகை
திணைக்களம் ஏற்ற தெரிவால்
உணவுப்புனிதம் ஒழித்தது
எங்கள் வரலாறு!

பொருநராற்றுப்படை சீரில்
நாங்கள்
பொரித்து எடுத்த இறைச்சியின்
ஓசையும் உள்ளது
அர்த்தசாஸ்திரத்திலேயே
இறைச்சிக்கேற்ற எண்ணெய் அளவு பற்றிய
பக்குவம் உள்ளது!
‘பாரத விலாஸ்’ பருப்பெல்லாம்
இங்கே வேகாது
வேதங்களின் அசைவ உணவை
அடுக்கினால்
பாரில்
முனியாண்டிவிலாசே பத்தாது!

மீன்கள்
மீன்கள் துள்ளிடும் எம் பட்டினப்பாலை

அயிரை, ஆரல், இரால்
சுறா, விறால், வாளை
குரவை, கெண்டை என
மீன்கள் துள்ளிடும்
எம் பட்டினப்பாலை

தாழை முள்ளும்
வாளை முள்ளும்
தரித்தது எங்கள்
நெய்தல் சாலை.

”திருக்கண்ணபுரத்து செங்கண் மாலுக்கு
தன் காதலைச் சொன்னால்
இரு நிலத்தில் உன் பேடையோடு
இன்பம் எய்த
மீன் கவர்ந்து நான் தருவேன்” என
திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்
மீன் வாடை உண்டு!

மூலஸ்தானத்தில் மூத்திர நெடி
மூலஸ்தானத்தில் உங்கள் மூத்திர நெடிதாங்காமதானே பெருச்சாளி கூட கோயிலை விட்டே ஓடுது!

சைவம் சுத்தம்
அசைவம் அசுத்தமென்று
எவன்டா சொன்னது?
எங்கள் சாமிகளில் பெரும்பான்மை
கருவாடு தின்பது.

மூலஸ்தானத்தில்
உங்கள்
மூத்திர நெடிதாங்காமதானே
பெருச்சாளி கூட
கோயிலை விட்டே ஓடுது!

பெரும்பான்மை படி
இது இந்து நாடல்ல,
கருவாடு!

பார்ப்பான் சுத்தம்
சூத்திரன் அசுத்தம்!
சமஸ்கிருதம் சுத்தம்
தமிழ் அசுத்தம்!
பால் சுத்தம்
மாட்டுக்கறி அசுத்தம்!
பரம்பரை
அர்ச்சகர் சுத்தம்
இடஒதுக்கீடு அசுத்தம்!
தட்சணை சுத்தம்
தரும் தாழ்த்தப்பட்டவர் அசுத்தம்!

பார்ப்பனியம்
கட்டுக்கதைகளும் கட்டளைகளுமே பார்ப்பனிய மொத்தம்!

இப்படி – கட்டுக்கதைகளும்
கட்டளைகளுமே பார்ப்பனிய மொத்தம்!

அம்பிகளே
உங்களுக்கு கருவாடுதான் நாறுது
எங்களுக்கு
பார்ப்பன கலாச்சாரமே நாறுது!
‘மோருஞ்ஜா’ நக்கும் ஓசையில்
தயிர்கவுச்சி தாங்காமல்
பசுமாடு மூக்கைப் பொத்தும்,

பளபளக்கும்
உங்கள் ”லெதர்பேக்கு, செருப்பு
பர்சின் வெறிகொண்ட வேட்டையைப் பார்த்து
பிறந்த கன்றுக்குட்டியும்
பீதியில் கத்தும்

இனிய திருக்குறள்
பொதுவில் இருக்க
வலிய பகவத்கீதையை
வாரிசுகளின் வாயில் திணிக்கும்
சாதிய நாற்றம்
சகிக்கக் கூடியதா?
முகநூலில் உலகமே
முகம் காட்டும் காலத்திலும்
பூணுலில் அகம் காட்டும்
பொல்லாத சாதிவெறியை
கருவாடும் தாங்குமோ?

கருவாடு வகைகள்
நெஞ்சனைய வஞ்சிரம், நினைத்ததும் நா சுரக்கும் காரப்பொடி, ஓட்டாம்பாறை, சூரையும், மாசியும் யாரையும் இழுக்கும்.!

ஜனநாயக சுத்தம்
சற்றாவது உண்டா?
”தமிழ் நீசபாஷை
தமிழன் சூத்திரன்” என்று
தாளித்துக் கொட்டினாலும்
சங்கராச்சாரி படத்தை வைத்திருக்கும்
சர்சூத்திரன் இன்னும் உண்டு,
பார்ப்பன சர்வாதிகாரத்தை திருத்திய
பெரியார், அம்பேத்கர் படம்
ஒரு பார்ப்பனர்
வீட்டிலாவது உண்டா?

கோயம்பேட்டில்
கருவாடு விற்பதே
அபச்சாரமென்றால்
எங்கள் கோயில்களில்
சமஸ்கிருதம் விற்பது
அநீதியன்றோ!

கத்திரிக்காய் மட்டுமல்ல
நெத்திலியும்
எமக்கு சுத்தமாய்ச் சேரும்
இன்னும் எத்தனை வகை வேண்டும்
எங்கள் உழைப்பவர் தாழ்வாரம்
‘இந்துவே’ எட்டிப்பாரும்,
நெஞ்சனைய வஞ்சிரம்,
நினைத்ததும் நா சுரக்கும்
காரப்பொடி, ஓட்டாம்பாறை,
சூரையும், மாசியும்
யாரையும் இழுக்கும்.!

ஒழுங்காக நடந்து கொள் தி இந்து
கண்ணெரிச்சல் தாங்காத ‘இந்துவே’ கொஞ்சம் சங்கு சதையும் வயல் நத்தையும் தின்று பார் உன் மூலச்சூடும் அடங்கும்!

கானாங்கெழுத்தியும்,வவ்வாலும் வேண்டாம்
என்குமோ மனம்?
கெட்ட பார்ப்பனியம் பழகியதால்
சுட்ட கருவாடானது இனம்!

திவலைகள் உரசும்
மழைக்கால இரவில்
கவலை மீனில் உயிர்
கரையும், சிலிர்க்கும்!
சுறாவும், திருக்கையும்
எம் இரத்தத்தில் கலந்து
பிள்ளைபெற்ற பெண்ணின் மார்பில் சுரக்கும்!

சென்னாகுன்னி கருவாட்டுப்பொடிக்கு
இட்டலி ஆவி பறக்கும்,
கெளுத்தி, உளுவை
கண்ணாடிக்கெண்டையைப் பார்த்தால்
சுவை மொட்டுகள் வாய் திறக்கும்!
உடும்பும், நண்டும்
உலை கொதிக்க
உழைப்பின் வலிகள் அடங்கும்,
கண்ணெரிச்சல் தாங்காத ‘இந்துவே’
கொஞ்சம் சங்கு சதையும்
வயல் நத்தையும் தின்று
பார்
உன் மூலச்சூடும் அடங்கும்!

-துரை.சண்முகம்

மக்களுக்காக போராடினால் கிரிமினல் போலீசுக்கு பிடிக்காது !

3

தோழர். அசோக் என்பவர் DR. சந்தோஷ் நகர் பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் செயலாளர். இவர் இப்பகுதி மக்களில் ஒருவராக இருந்து பகுதியின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காகவும், பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி போராடி வரும் தோழர். இதன் காரணமாக அப்பகுதி மக்களிடம் புமாஇமு செல்வாக்கு கூடி வருகிறது. இதனால்அப்பகுதியில் உள்ள F2 எழும்பூர் போலீசுக்கு ரவுடித்தனம் செய்ய இயலவில்லை. இதற்கு பழிவாங்கும் நோக்குடன்  தோழர் அசோக் மீது  F2 எழும்பூர் போலீசு பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைத்துள்ளது.

திரைக் கதை வசனம் எழுதி பொய் வழக்கு ஜோடித்த ஆள் கடத்தல் போலீசு

சந்தோஷ்நகர் மக்கள் போராட்டம்
சந்தோஷ்நகர் மக்கள் போராட்டம் (கோப்புப் படம்)

கடந்த 19-ம்தேதி காலை 10.30 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தினத்தந்தி அலுவலகம் வழியே வேலைக்குச் சென்றிருக்கிறார் தோழர் அசோக். அப்போது சீருடை அணியாத 3 உளவு போலீசார் அவரை பின் தொடர்ந்து வந்து வழி மறித்து “நீதான வினோத்” என்று கேட்க, அதற்கு “என் பெயர் வினோத் இல்லை, அசோக்” என்று பதில் சொல்லியுள்ளார். உடனே அவர்கள் “எல்லாம் எங்களுக்கும் தெரியும்டா தே ……………….. பையா” என்று கூறி அடித்து இழுத்து தயாராக வைத்திருந்த ஒரு ஆட்டோவுக்குள் தள்ளி கடத்திச் சென்றுள்ளனர்.

அசோக்கை கடத்திச் சென்ற உளவு போலீசார், அவரை நேராக போலீசு நிலையம் கொண்டு செல்லவில்லை. பதிலாக எழும்பூர் அருங்காட்சியகத்திலுள்ள ஒரு அறையில் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு பேப்பரில் கையெழுத்து போடுமாறு மிரட்டியுள்ளனர். அதன்பின்னர் தான் F2 எழும்பூர் போலீசு நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணனிடம் ஒப்படைத்து வழிப்பறி உள்ளிட்டு 5 பிரிவுகளின் கீழ் பொய்யாக வழக்கு ஜோடித்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

ஆள் கடத்தல் செய்தது, அசோக்கின் செல்போன், இரு சக்கர வாகனத்தை பறித்தது, சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது, கற்பனையாக திரைக்கதை வசனம் எழுதி பொய் வழக்கு ஜோடித்தது என அனைத்து குற்றங்களையும் செய்தது, உளவுத்துறை போலீசார் மற்றும் F2 எழும்பூர் போலீசு நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன் ஆகியோர்தான். கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டைபஞ்சாயத்து, பாலியல் வன்கொடுமை என குற்றங்கள் குவிந்து கிடக்கும் குற்றவாளிகள் கூடாரமே போலீசு நிலையம்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், இந்த யோக்கிய சிகாமணிகள் மக்களுக்காக போராடி வந்த தோழர் அசோக்கை குற்றவாளிபோல் சித்தரிக்கிறார்கள். பீதியூட்டும் நோக்கில் யாரும் நம்பமுடியாத பொய்வழக்கை ஜோடித்து கைது செய்து சிறையிலடைத்துள்ளார்கள்.

புமாஇமு தோழர் மீது ஏன் இந்த பொய் வழக்கு?

அசோக்குக்கும் போலீசாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இருந்தது இல்லை. சமூக மாற்றத்திற்காக போராடும் புமாஇமுவின் பகுதி செயலர் என்ற முறையில் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி போராடியதுதான் குற்றம் என்கிறது போலீசு.

பல்நோக்கு கட்டிடம் கட்ட வலியுறுத்தி கவுன்சிலரை பார்க்க பகுதி மக்களை திரட்டிச் சென்ற போது ‘’ நீ என்ன இந்த ஊர்த் தலைவரா? ஏன் இவங்களுக்கு வழிகாட்டிவிடுற, உனக்கு என்ன வேணும்னு சொல்லு?’’ என்று கவுன்சிலர் பேரம் பேசியதற்கு பணியாமல் தொடர்ந்து போராடியது; இந்த ஊர் பிள்ளைங்களுக்கு நல்ல கல்வி கிடைக்காத சூழலில், பணம் கொடுத்து ட்யூசன் படிக்க முடியாத நிலையில் இரவு பாடசாலை நடத்தி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் இரவு பாடசாலைக்காக மேயருடன் சலியாது போராடி சாதித்தது; கண்முன்னால் நடந்த ரவுடித்தனத்தைத் தட்டிக்கேட்டது; போலீசார் ஊருக்குள் அத்துமீறி புகுந்து இளைஞர்களைத் தாக்கி வந்த அராஜகத்தை எதிர்த்து கேள்வி எழுப்பும் துணிச்சலை இளைஞர்களுக்கு உருவாக்கியது இவைகள் எல்லாம்தான் போலீசு பார்வையில் மாபெரும் குற்றமாம்.

எமது புமாஇமு தோழர்கள் இரவு பகலாக மக்களுக்காக உழைப்பதை பார்த்து பலர் “சின்ன வயது பிள்ளைங்க உங்க வாழ்க்கையையும் பாருங்கப்பா” என்று பாசத்தோடு சொன்ன போது,  “உங்களுக்காக உழைத்தால் எங்க வாழ்க்கையை நீங்க பாத்துக்க மாட்டீங்களா” என்று கூறி மக்கள் நலன்தான் முக்கியம் என்று போராடியதற்காகத்தான் இந்த பொய் வழக்கை போட்டுள்ளது போலீசு.

F2 எழும்பூர் போலீசின் கனவை தகர்ப்போம்!

போலீசின் யோக்கியதை என்ன என்று உங்களுக்கே தெரியும். சமீபத்தில் ஊருக்குள்ளேயே ஒரு கருங்காலியை உருவாக்கினார்கள், பொய்யாக ஒரு புகார் பெற்றார்கள். எந்தவித விசாரணையும் இல்லாமல் ஊருக்குள் புகுந்து அசோக்கையும் பிற தோழர்களையும் கொலை வெறியோடு தாக்கி கைது செய்ய முயன்றார்கள். அப்போது எங்களின் பாசத்திற்குரிய உழைக்கும் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு போலீசு மிருகங்களிடம் இருந்து தோழர்களை காப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுக்கொண்டு பீனிக்ஸ் பறவை போல் புமாஇமுவின் அரசியல் உறுதிகொண்ட இந்த தோழர்கள் மீண்டும் களமிறங்கி மக்கள் பணியாற்றி வந்ததை இவர்களால் ஏற்க முடியமா என்ன? இதனை சற்றும் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இப்போது ஒரு அபாண்ட புளுகை வழக்காக ஜோடித்து பழிவாங்குகிறார்கள். இதன் மூலம் இப்பகுதியில் மக்கள் செல்வாக்கோடு இயங்கி வரும் எமது புமாஇமு தோழர்களின் செயல்பாட்டை முடக்கவும், இதனைத் தொடர்ந்து பழையபடி இப்பகுதியில் கேள்வி கேட்பாரின்றி போலீசு அரஜாகத்தை கட்டவிழ்த்துவிடவும் கனவு காண்கிறது போலீசு.

உழைக்கும் மக்களின் உற்ற தோழன் புமாஇமு

அடிப்படை வசதிகள் கோரி ஊர்வலம்
அடிப்படை வசதிகள் கோரி ஊர்வலம் (கோப்புப் படம்)

இப்பகுதி கடந்த காலங்களில் எப்படி இருந்தது ? மாநகராட்சியும், அரசும் இப்பகுதியை தீண்டத்தகாத சேரியாகவே நடத்தியது, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்தது. இக்கொடுமைகளுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டும் என்ற லட்சியத்தோடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இப்பகுதியில் கிளை தொடங்கிய பின்னர்தான் அடிப்படை பிரச்சனைகள் ஒவ்வொன்றாக போராடி தீர்க்கப்பட்டு வருகிறது.

ஊரை இடித்து தரைமட்டமாக்க குடிசைமாற்று வாரியம் எடுத்த முயற்சியை தடுத்து நிறுத்தினோம். பராமரிப்பு இன்றி கிடந்த பொது கழிவறை சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. குடிநீர் வீணாகாமல் தடுக்க வால்வு, குடிநீர் பற்றாக்குறையை போக்க தண்ணீர் தொட்டிகள், ஊரை சுகாதாரமாக வைத்திருக்க குப்பைக் கூடைகள், அவ்வப்போது மருத்துவ முகாம்கள், ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த இரவுபாட சாலை. இவை எல்லாம் இந்த பகுதி கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி, மாநகராட்சி மேயர், சென்னை கலெக்டர், மற்றும் பிற அதிகாரிகள் ஆகியோர்களின் கருணையினாலா நடந்தது? இல்லையே. புமாஇமுவின் இப்பகுதி செயலர் தோழர் அசோக் மற்றும் பிற தோழர்கள் தலைமையில் அப்பகுதி மக்கள் அனைவரையும் திரட்டி போராடியதன் மூலம்தான் கிடைத்தது.

ஆனால், இதெல்லாம் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமைதானே, அதற்கு ஏன் போராட்டம், போலீசு கேசு என்று சிலர் கேட்கலாம். இது மக்கள் நலனுக்கான அரசாக இருந்தால் அப்படி நினைக்கலாம். இது முழுக்க முழுக்க முதலாளிகளின் நலன் கொண்ட அரசு என்பதை உங்கள் சொந்த அனுபவங்களில் இருந்தே நீங்கள் பார்க்கலாம். நமக்கு கல்வி , மருத்துவம், குடிநீர், சாலை, சுகாதார வசதி செய்து கொடுக்க காசு இல்லை என்று மறுக்கும் அரசுதான், ஃபோர்டு, ஹூண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கும், அம்பானி, டாடா போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் சலுகைகள், மானியங்களுக்காக நமது வரிப்பணத்தில் இருந்து லட்சக்கணக்கான கோடிகளை ஆண்டு தோறும் வாரி இறைக்கிறது. பணம் இல்லையென்றால் இது எப்படி முடிகிறது? இது நமக்கான அரசு இல்லை, முதலாளிகளுக்கான அரசு. இப்படிப்பட்ட அரசிடம் போராடாமல் எப்படி நமது உரிமைகளைப் பெற முடியும். இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களைத் திரட்டி போராடுவதால்தான் குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற முடிகிறது. இதைத்தான் இந்த அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்படியே போனால் மக்கள் விழிப்படைந்துவிடுவார்கள், இந்த கேடுகெட்ட மக்கள் விரோத அரசுக்கு முடிவுகட்டிவிடுவார்கள். இதெல்லாம் நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் முதலில் போராடுகின்ற புரட்சிகர அமைப்புகளை ஒடுக்குவது, பின்னர் போராடும் மக்களையே கேள்விகேட்பாரின்றி அடக்கி ஒடுக்குவது என்ற சதித் திட்டத்தோடு வெறிகொண்டு அலைகிறது இந்த அரசு.

DR. சந்தோஷ் நகர் பகுதியில் இன்று மக்களின் கோரிக்கைகளுக்காக போராடும் புமாஇமு தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைக்கிறது போலீசு. இதன் மூலம் அமைப்பு, போராட்டம் என்றாலே போலீசு பொய் கேஸ் போடும், சிறையிலடைக்கும் என்று மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிக்கிறது.

உழைக்கும் மக்களே இவர்கள் நினைப்பதைப் போல் நடந்தால் என்னாகும் என சற்று யோசித்துப் பாருங்கள். இப்போதே ஊருக்குள் உளவு போலீசார் அத்துமீறி நுழைந்து மக்களிடையே இல்லாதது பொல்லாததை சொல்லி பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்கள். நம்மிடையே இருந்து சில போலீசு உளவாளிகளை உருவாக்க நினைக்கிறார்கள், ஊரின் ஒரு பகுதி மாணவர்கள் இளைஞர்களிடையே சில சலுகைகளை செய்து தருவதாகக் கூறி ஊழல்படுத்த முயலுகிறார்கள்.

மற்றொரு புறம் இதுவரை நம்பகுதிக்குள் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மதவெறியர்கள் கால் எடுத்து வைக்க நாம் அனுமதிக்கவில்லை. ஆனால் இப்போது அவர்கள் நம்மிடையே உள்ள கடவுள் நம்பிக்கையை பயன்படுத்திக்கொண்டு விநாயகர் சிலை வைக்கப்போவதாக நாங்கள் கேள்விபடுகிறோம். இதன் மூலம் மதக் கலவரத்தைத் தூண்டிவிடுவார்கள், மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பார்கள். அப்போதும் போலீசு அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கும்.

இறுதியாக, சிங்காரச் சென்னைக்காக மாநகரில் பல குடிசைப்பகுதிகளை அகற்றியதைப் போல் நாளை நம் பகுதியையும் அரசு அகற்றும். அப்போது அதை எதிர்த்துப் போராட புரட்சிகர அமைப்பும் இருக்காது, மக்களிடையே ஒற்றுமையும் இருக்காது.

இந்த நிலைமை நம்பகுதிக்கு வர வேண்டுமா? அக்கறையோடு சிந்தித்துப் பாருங்கள் நிச்சயம் வரவே கூடாது என்றால் மக்கள் ஒற்றுமையைக் கட்டியமைக்க வேண்டும். அதற்கு எப்போதும் போல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியுடன் கரம் சேருங்கள். போராடுகின்ற அமைப்புத் தோழர்கள் மீது பொய் வழக்குப் போட்டு தனிமைபடுத்தவும், மக்களை பீதியூட்டவும் நினைக்கும் போலீசின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்போம் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து புமாஇமு வின் டாக்டர் சந்தோஷ் நகர் பகுதி செயலர் தோழர் அசோக் மீதான பொய் வழக்கை முறியடிக்கும் போராட்டத்தை மக்கள் ஆதரவோடு நடத்தி வருகிறது புமாஇமு.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை.

ஆன்மீகக் கண்காட்சியில் அரசியல் பேசக் கூடாதாம் !

25

ஹிந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நுழைவாயிலில் எந்த ‘தீவிரவாதி’யும் நுழையாமல் தடுப்பதற்காக, காவல்துறை அதிநவீன பாதுகாப்பு கருவிகளுடன் அனைவரையும் ஸ்கேன் செய்து அனுப்பிக் கொண்டிருந்தது. தீவிரவாதிகளே கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது போலீசு வெளியே ஸ்கேன் செய்து என்ன பயன்?

பரிசோதனை முடிந்து உள்ளே நுழைந்தால் வலப்பக்க அரங்கில் வந்தே மாதர்ர்ரம்……… என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். அரங்கிற்கு கீழே பலர் அந்த பாடலுக்கு விரைப்பாக நின்று கொண்டிருந்தனர். அதில் ராணுவ உடை அணிந்த ஒரு அணியும் உண்டு. ஒருவேளை மோடிஜி இந்திய ராணுவத்தை அனுப்பி கண்காட்சிக்கு பாதுகாப்பு கொடுத்திருப்பாரோ என்று பார்த்தால், ராணுவ உடையில் வந்து நிற்பது பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்தோம். இந்தியாவின் அநீதியான காஷ்மீர் ஆக்கிரமிப்பு காரணமாக உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அந்த மாணவர்கள், கார்கில் சவப்பட்டி ஊழல் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

நாளைய பாரதம்ஆர்.எஸ்.எஸ் அரங்கத்துக்குள் ஹெட்கேவார், சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்து ‘தலைவர்களின்’ படங்களை வைத்திருந்தார்கள். ஏதோ பாரிமுனை மொத்த சேட்டு வியாபாரிகள் போன்றிருந்த அந்த படங்களுக்காக, அரங்கத்தை கடந்து சென்றவர்களை எல்லாம் கையை பிடித்து இழுக்காத குறையாக, “வாங்கஜி புஷ்பாஞ்சலி செலுத்துவோம்” என்று உள்ளே இழுத்தார்கள்.

உள்ளே சென்றவர்களை “நமஸ்தேஜி, உள்ளே வாங்க”. “நீங்க எந்த ஊருஜி? எங்கள மாதிரி தேஷபக்தர்களை உங்க பகுதியில சந்திக்க விரும்புறீங்களா” என்று கேட்டு நச்சரித்தனர். அதாவது, அந்த பகுதியில் ஷாகா(ஆர்.எஸ்.எஸ் கிளை) ஆரம்பிக்க முயற்சிக்கிறார்களாம், “வேண்டாம்” என்று மறுத்தவர்களை “சரி, பூவாவது போடுங்கஜி” என்று புன்னகையுடன் கட்டளை இட்டனர். அவர்களெல்லாம் பிரிட்டீஷ் காலனியாதிக்கவாதிகளின் ரசிகர்கள் என்பதறியாத சிலர் ஏதோ பொட்டு வைத்த மகான்கள் என்று கடனுக்கு ரெண்டு பூ போட்டார்கள். ஆக அந்த பூ மரியாதை என்பதே ஒரு வித பரிதாபமான முறையில் வரவழைக்கப்பட்டதே.

பள்ளிக் குழந்தைகளுக்கு போட்டி நடத்துகிறோம் என்கிற பெயரில் சிறுவர்களை தனியே ஒதுக்கி வேதம் ஓதச் செய்து கொண்டிருந்தனர். ‘தமிழில் வேதம் ஓதினால் சாமி தீட்டாகிவிடும்’ என்பதால் ஓதுதலில் தமிழ் இல்லை போலும். அதே போல ‘பெண்கள் வேதம் ஓதினால் வேதமே தீட்டாகிவிடும்’ என்பதால் மாணவிகளும் இல்லை. ஆயினும் வேத மந்திர உச்சாடனம் கம்பீரமாகவே ஒலித்தது.

ராஷ்ட்ரியா சேவிகா சமிதிவேதத்திற்கு லாயக்கற்ற பெண் பிள்ளைகளுக்கு கோலம் போடுவது, கும்மி அடிப்பது, பல்லாங்குழி விளையாடுவது என்று தனி விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இது தவிர குடும்பப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறார்களாம். அது என்ன? விளக்கு பூஜைதான். குத்து விளக்கு ஏற்றும் பயற்சி மூலம் பெண்கள் தமது அடிமைத்தனங்களையும், பிரச்சினைகளையும் சடுதியில் களைந்து கொள்ளலாமாம். ஏன், நீண்ட கூந்தலை தலை வாருவது, மருதாணி, நகப் பூச்சு, பூ சூடுதல், நகை அணிதல் போன்ற சிருங்காரங்களையும் பயிற்சியாக கொடுத்து பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்திருக்கலாமே?

அடுத்து, அடக்கம் செய்து பல நூற்றாண்டுகளாகிப் போன சமஸ்கிருதத்திற்கு ஒரு ஸ்டால். நவீன அறிவியல் அனைத்துமே வேதங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்பட்டிருப்பதாக புளியைப் போட்டு விளக்கிகொண்டிருந்தது சமஸ்கிருத பாரதி என்கிற அந்த அரங்கு. சில்வர் நைட்ரைட்டுகே சவால் விடும் வகையில் தங்களது யாக வலிமையின் மூலமாக மழையை வரவழைப்பதாக கூறி வடிவேல் பாணியில் வசூல் செய்து கொண்டிருந்தனர் சில கனவான்கள்.

சங்க பரிவாரம்“இது சமஸ்கிருதத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் முயற்சி. நமது முன்னோர்கள் என்ன சொன்னார்கள், ஒரு கண்ணில் தமிழையும், மற்றொரு கண்ணில் சமஸ்கிருதத்தையும் வைக்கச் சொன்னார்கள். ஆனால் நாம் ரெண்டு கண்களையுமே மூடிவிட்டு இங்கிலீஷில் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ளாததால் தான் கோவிலில் உச்சரிக்கும் மந்திரத்திற்கு அர்த்தம் புரியவில்லை. அது தான் பிரச்சினைக்கு காரணம்” என்று பேசிக் கொண்டிருந்தார் ஒரு அறிஞர். சம்ஸ்கிருதம் படித்து, மந்திரம் கற்று பயிற்சி முடித்து அர்ச்சக மாணவர்கள் சாதியில் பார்ப்பனர்கள் இல்லை என்பதற்காக வேலையற்று நிர்க்கதியாக இருக்கிறார்களே, ஏனென்று கேட்பதற்கு வந்த மக்களுக்கு தெரியாது. இந்த தெரியாததுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் பலம்.

செத்துபோன சமஸ்கிருதத்தை சூத்திரர்களோ பஞ்சமர்களோ கொல்லவில்லை. அடிமைகளுக்கு ஏது நீதிபதி பதவி? பெரும்பான்மை மக்கள் பேசக்கூடாது என்று தடைவிதித்து சம்ஸ்கிருதத்தின் சாவை துரிதப்படுத்தியவர்களே இன்று அதை பேசுமாறு கோருவது வேடிக்கை. தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் பேசும் தமிழை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தீட்டு என்று ஒதுக்குகின்ற பார்ப்பனிய தீண்டாமைக்கு எதிராக போராடாமல், இவர்களே வழக்கொழியச் செய்த சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் இவ்வளவு முக்குகிறது என்றால் இது யாருக்கான அமைப்பு?

விவேகானந்தா கேந்திரத்தின் கடையில் உயரமாக ஒரு பாத்திரம் வைத்து சமையலறை கழிவுகளை கரைத்து ஊற்றினால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஒருவர். அந்த பாத்திரத்தில் ஊற்றுவதற்கு தேவையான அளவு சமையலறைக் கழிவுகள் சாதாரண மக்கள் வீடுகளில் ஒரு போதும் கிடைக்காது. பெரும் பண்ணையார்கள், முதலாளிகள், மடங்கள், பணக்காரர்கள் வீடுகளில்தான் தின்றது போக, கழித்தது போக நிறைய கழிவுகள் இருக்கும். எனவே, இத்தகைய குப்பை சேவை கூட சாதாரண ‘இந்துக்களுக்கு’ கிட்டிவிடாது. எளிய மக்களுக்கு சேவை செய்தால் கணக்கில் கம்மியாகத்தான் வருமென்பதால் விவேகானந்தா கேந்திரம் காஸ்ட்லியான ஹிந்துக்களுக்கு மட்டும் சேவை செய்கிறது போலும்.

கன்னியாகுமரிக்கு அருகில் மீனவர் பகுதிகளில் பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த கேந்திரம் மீனவ மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று விசாரித்ததும் உள்ளே அழைத்துப் போனார் அரங்கத்தில் இருந்தவர்.

ராமேஸ்வரத்தில் மீனவர் வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்திக் கொடுப்பதாக புகைப்படங்களைக் காட்டினார். “சரி, மீனவ மக்களுக்கு என்ன செய்கிறீர்கள், கடலில் மீன் பிடிக்கப் போகும் போது இலங்கை கடற்படையினரால் சுடப்படுகிறார்கள், மீன் பிடி தடைக்காலத்தில் உதவி தேவைப்படுகிறது. இதற்கு என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டால், “அவர்கள் வீடுகளுக்குப் போய் வீடுகளையும், தெருக்களையும் சுத்தமாக பராமரிக்க சொல்லிக் கொடுக்கிறோம்” என்றார். இவர்களைப் பொறுத்த வரை மீன் என்றாலே நாத்தம், குப்பை, கழிவு. மீனவர் வீடுகள் என்றாலே ஏதோ அநாகரிகமான குடியிருப்புகள். உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதாக கிளம்பும் அம்பிகள் எவ்வளவு வன்மத்துடன் நமது மக்களை பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சோறு.

அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து என்று ஒரு பெரிய கடை விரிக்கப்பட்டிருந்தது. அமைப்புக்கு ஒரு தமிழ் பெயர் கூட வைக்காமல் தமிழ்நாட்டில் கடை விரித்திருந்தார்கள். க்ராஹக் என்றால் நுகர்வோர் என்று பொருளாம்.

“நாங்க பல ரிட்டையர்ட் ஆபிசர்ஸ் எல்லாம் இதில இருக்கோம். உங்களுக்கு என்ன பிரச்சனைன்னாலும் நாங்க கையில எடுத்து தீர்த்து வைப்போம். அதுக்காக, உங்க வீட்டில மிக்சி ஓடலை, ஃபேன் ரிப்பேர் போல இல்லாம, கணிசமான பேருக்கான பிரச்சனையா இருக்கணும்” என்று கொள்கை விளக்க பிரகடனம் செய்தார் அங்கு இருந்த பெருசு ஒருவர். பதவியில் இருக்கும் போது அதிகார வர்க்கமாக மக்களை கசக்கிப் பிழிந்த இந்த ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்கிறார்கள் என்று கேட்டால்,

சென்னை மாநகர பேருந்துகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தினார்களாம், சென்னை மாம்பலம் காய்கறி சந்தையில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத எடைக் கற்களை பறிமுதல் செய்து தவறிழைத்தவர்களை தண்டித்தார்களாம், தாம்பரத்தில் நில்லாது சென்ற சோழன் எக்ஸ்பிரசை நின்று செல்லுமாறு உத்தரவிட வைத்தார்களாம், சேலம் இரவு ரயிலை சூப்பர் ஃபாஸ்ட் வகையிலிருந்து எக்ஸ்பிரஸ் வகைக்கு மாற்றினார்களாம் (அதன் மூலம் டிக்கெட்டுக்கு ரூ 20 பயணிகளுக்கு மிச்சமானதாம்). இப்படி இவர்களது நுகர்வோர் நலன்கள் எல்லாம் மாம்பலத்து ‘மக்களுக்காக’ தாம்பரம் ‘சான்றோர்களுக்காக’ மட்டுமே இருந்தன.

கிராஹக் பஞ்சாயத்து
அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து

மேலும் நடவடிக்கைகளும் சாதாரண சிறு வணிகர்கள் மேல் இருந்தன. அம்பானி, டாடா, அதானி போன்ற முதலைகள் மீது நடவடிக்கைகள் எடுப்பீர்களா என்று கேட்டால் அவர் முறைத்து பார்த்தார். மக்கள் சேவையில் அரசியலை கலக்காதீர்கள் என்று பேசினார். கோயம்பேடு கருவாடு விற்பனை கூட இவர்களால் புகார் எழுதி தி இந்து பத்திரிகையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

கூடவே, சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த ஏற்பாடு செய்ததும் இவர்கள்தானாம். “நாங்க ஆர்ப்பாட்டம், போராட்டம்னெல்லாம் போக மாட்டோம். நேரா மினிஸ்டரா பார்த்து பேசினோம். மீட்டர் இல்லாம ஆட்டோ ஓடறதால கஷ்டங்களை பத்தி அமைச்சர் செந்தில் பாலாஜிகிட்ட எடுத்துச் சொன்னோம். ஆட்டோகாரங்க எதிர்ப்பாங்களேன்னு கேட்டார். கடைசியில, அவர சம்மதிக்க வச்சி மீட்டர் கொண்டு வர வைத்து விட்டோம்”, என்றார்கள். இது மட்டும் ‘அம்மா’ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அடுத்த ஆண்டு கண்காட்சிக்கு இடமே கிடைக்காது. பொதுப் போக்குவரத்தின் கஷ்டங்களை சொல்லி அதை தீர்த்து வைத்தால் ஆட்டோவுக்கு அவசியமே இல்லையே, ஏன் அமைச்சரை பார்க்கவில்லை என்றதும் அவர் பதிலேதும் சொல்லவில்லை. பொதுவில் கண்காட்சியில் கேள்வி கேட்பவர்களை அவர்கள் எங்கேயும் விரும்புவதே இல்லை.

வெளியே வந்த போது ஆடிட்டர் குருமூர்த்தி எதிரில் வேகமாக வந்து கொண்டிருந்தார். பேசலாம் என்று அருகில் சென்றோம்.

குருமூர்த்தி
“வேறு வேலை இருக்கு இப்ப அதைப்பத்தி பேச முடியாது”

“உங்க கட்டுரைகளை எல்லாம் ரெகுலரா படிப்பேன், ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதின தினமணி கட்டுரையை கூட படித்தேன். ஒரு சின்ன சந்தேகம்.” என்ன என்று கூட கேட்கவில்லை சொல்லுங்க என்பதை போல தலையை மட்டும் ஆட்டினார்.

“பொருளாதார கொள்கையில் காங்கிரஸ் என்ன செய்ததோ அதையே தான்  பா.ஜ.க-வும் இப்போது செய்கிறது, ஆனால் நீங்க காங்கிரசை மட்டும் எதிர்த்துவிட்டு பா.ஜ.கவை ஆதரித்து எழுதுவது வாசகர்களை ஏமாற்றுவதாகாதா,” என்றதும்,

“வேறு வேலை இருக்கு இப்ப அதைப்பத்தி பேச முடியாது” என்று விறுவிறுவென்று நடந்தார். அரங்கங்களில் இருக்கும் சாதா அம்பிக்களாவது பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில்தான் முறித்துக் கொண்டனர். ஆனால் ஸ்பெஷல் அம்பியான குருமூர்த்தியோ துவக்கத்திலேயே முன்னறிந்து துண்டித்தார். பேசி, எழுதுவதில் மட்டுமல்ல, பேச்சை துண்டிப்பதிலும் ஒரு சாமர்த்தியம் வேண்டுமல்லவா?

கண்காட்சியை நிர்வாக அலுவலக கடையில் ஒருவர் நோட்டிஸ்களுடன் நின்றிருந்தார். “என்ன சார், கண்காட்சியில சாதி சங்கங்களை எல்லாம் சேர்த்திருக்கீங்க, இந்துக்களை பிளவுபடுத்தறத நீங்க ஆதரிக்கிறீங்களா?” என்று கேட்டதும்,

“அப்படி உங்களுக்கு கருத்து இருந்தா தாராளமா சொல்லுங்க, நம்ம குருமூர்த்தி சார் இருக்காரே, அவருதான் இந்த கண்காட்சிய ஏற்பாடு செய்றவரு”

“ஓ, இந்த சுதேசி இயக்கம் எல்லாம் நடத்துவாரே”

“ஆமாமா, நான் கூட அதிலே எல்லாம் வேலை செஞ்சிருக்கேன்”

“என்ன பலன் சார், இப்போ மோடி அரசு வந்ததும் அன்னிய முதலீடுதான் வளர்ச்சின்னு நாட்டை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுறாங்களே, அதை எதிர்த்து குருமூர்த்தி போராடலையே, ஆதரிக்கிறாரே?”

“அதெல்லாம் உடனே செய்ய முடியாது சார். நேரம் பார்த்து தேவைப்படும் போது அதை ஆரம்பிப்போம்.” என்றார். நாட்டு மக்களுக்கு நேரம் சரியில்லை, அவர்களது உணர்வு மட்டம் வளர்ந்து நேரத்தை நல்லதாக்க முனைந்தால் இவர்கள் கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பார்கள் போலும்! அதைத்தான் உடனே செய்ய முடியாது என்று அவர் கூறியிருக்கலாம்.

முந்தைய ஆண்டு கண்காட்சி புகைப்படங்களை ஆல்பமாக வைத்திருந்தார்கள். அதைப் புரட்டி பார்த்தால் தினமலர் பத்திரிகை செய்திகள் நிறைய இருந்தன.

“என்ன சார், தினமலர கொஞ்சம் தட்டிக் கேட்கக் கூடாதா. அவன் போடற ஆபாச படங்கள்லாம் இந்து ஆன்மீக இமேஜூக்கு நல்லதா, கெட்டதா?.”

“ஆமா சார், அவங்க அப்படித்தான். இப்போ ரெண்டு மூணு குரூப்பா பிரிஞ்சிட்டாங்க. அதனால நமக்கும் சப்போர்ட் குறைவுதான். தினமணி, இந்து பத்திரிகை எல்லாம் நல்லா கவர் பண்றாங்க” என்று பார்ப்பனிய ஊடக தருமத்தை விளக்கினார்.

ரதம்
ஹவானா தீவு காக்டெயில் போக கலந்து அடித்திருந்தனர். என்றாலும் எங்கும் ‘இந்து’ உணர்வு ஓடிக் கொண்டிருந்தது.

இந்து ஆன்மீக கம்பெனிகளை ஒரு சுற்றுச் சுற்றினால் சாதி சங்கங்கள், கார்ப்பரேட் மடங்கள், கல்வி நிறுவனங்கள், என்ஜிவோக்கள் தவிர ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்த ராஸ்ட்ரிய சேவிகா சமிதி, லிங்க பைரவி, வேத விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம், அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத், ஹிந்து ஜன ஜாக்ருதி ஸமிதி, ஸனாதன் ஸன்ஸ்தா, சமஸ்கிருத பாரதி, சேவாலயா, பாரத் விகாஸ் பரிஷித், வனவாசி சேவா கேந்திரம் என்று ஹவானா தீவு காக்டெயில் போக கலந்து அடித்திருந்தனர். என்றாலும் எங்கும் ‘இந்து’ உணர்வு ஓடிக் கொண்டிருந்தது.

சரி சந்தைக் கடைகளை பார்த்துவிட்டோம் அடுத்து சந்தைக்கு வந்தவர்களை சந்திக்கலாம் என்று வாயிலருகே வந்தோம். நடுத்தரவர்க்கத்தை தவிர வேறு எந்தப் பிரிவும் இந்த கண்காட்சிக்கு வரவில்லை என்று சொல்லலாம். எதிரே ஒருவர் வந்தார், அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம்.

“கண்காட்சியை பத்தி என்ன நினைக்கிறீங்க சார், இது எந்த வகையில் இந்து மதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்”.

இவர் அக்ரஹாரத் தமிழர் எனவே அவரின் தாய் மொழியான ஆங்கிலத்தில் தான் துவங்கினார்.

“நீங்க பாத்தீங்கன்னா, எனக்கு இந்த நாட்ல வாழவே பயமா இருக்கு, போன வாரம் கூட பாருங்க அம்பத்தூர்ல ஒருத்தரை துடிக்கத் துடிக்க வெட்டி கொன்னுருக்காங்க பாவிங்க, ஆனா போலீஸ் வேற ஏதோ காரணம் சொல்லுது, நேராவே சொல்றனே, ஐ வோட் பார் பி.ஜே.பி, நான் ஆர் எஸ் எஸ் கருத்துக்களோட உடன்படுறேன். நான் பதினஞ்சு வருஷம் குஜராத்ல இருந்தேன். ரெண்டாயிரத்து ரெண்டுக்கு முன்னால நான் இருந்த ஏரியா பூரா முஸ்லீம்ஸ் தான் அதிகம். அங்க இருக்கவே பயமா இருக்கும்! ஆனா அதுக்கப்புறம் பாருங்க அங்க எந்த பிரச்சனையும் இல்ல. இங்க இன்னும் அஞ்சு வருஷத்துல இந்த மாதிரி ஈவேன்ட்லாம் நம்மால நடத்த முடியுமான்னு சந்தேகமா இருக்கு.”

“ஏன் சார் ? ஏன் அப்டி சொல்றீங்க…”

“நோ, ஐ எம் சீரியஸ்லி டெல்லிங், குறிப்பா தமிழ்நாடு அண்ட் கேரளால முஸ்லீம்ஸ் அதிகமாய்டே வர்றாங்க நான் சென்னைக்கு வந்தப்புறம் எய்ட் டைம்ஸ் என்ன மதம் மாத்த ட்ரை பண்ணங்க. நாம தான் நம்ம மதத்தையும் கல்ச்சரையும் காப்பாத்தணும். ஒற்றுமையா இருக்கணும்.”

“ஒரே மதம்னு சொல்றீங்க, ஒத்துமையா இருக்கணும்னு சொல்றீங்க ஆனா உள்ளே பார்த்தால் ஐம்பது சாதி சங்கங்கள் ஸ்டால் போட்ருக்காங்க, இதிலேயே இந்து ஒற்றுமை இல்லையே சார் ?”

“ஸீ, அப்படிதான் இருப்பாங்க ஆனா முஸ்லீம்சுக்கு எதிரா ஒரு பிரச்சனைன்னா ஒன்னா சேர்ந்துப்பாங்க, நீங்க முசாபர் நகர்ல இதை பாத்திருக்கலாம். நமக்கு எதிரிகள் முஸ்லீம்ஸ் அண்ட் கிருஸ்டியன்ஸ் தான். இந்த சாதிகளில் ஒரு சாதி அழிஞ்சு போனாலும் இன்னொரு சாதி மூலம் நம்ம மதம் இருக்கும்ல அதனால சாதி நல்லது தான், பட் அன்டச்சப்ளிட்டி தப்பு.”

“தமிழ்நாடும் கேரளாவும் மட்டும் ஏன் இப்படி இருக்குன்னு நினைக்குறீங்க ?”

அம்பேத்கர் ஸ்டால்
“இந்த சாதிகளில் ஒரு சாதி அழிஞ்சு போனாலும் இன்னொரு சாதி மூலம் நம்ம மதம் இருக்கும்ல அதனால சாதி நல்லது தான்”

“இங்க இருக்குற ஷத்ரியா கேஸ்ட், எல்லாம் ச்சப்பாஸ், இங்க இருக்குற லோ கேஸ்ட் கூட சண்ட போடுவானுங்க, ஆனா முஸ்லீம்ஸ்சை ஒன்னும் பண்ண மாட்டானுங்க. இங்க ஆட்சி பன்றவங்க எல்லாம் டெரர்ரிஸ்ட் சார், கருணாநிதி ஈவன் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரும் எல்லா தீவிரவாதிகளுக்கும் சப்போர்ட் பண்ணுறாங்க. இந்த ரெண்டு மாநிலமும் முஸ்லிம் கொடுமையில் இருந்து தப்பிச்சுட்டாங்க அதனால் அவங்களைப் பத்தி தெரியல! “

“பீஜேபீ…” என்று ஆரம்பிப்பதற்குள் பதில் சொல்லத் தொடங்கி விட்டார்.

“ஒரே மாசத்துல இத செய்யல அத செய்யல அப்டீன்னா எப்டி சார்… ஹி இஸ் நாட் சூப்பர் மேன்…”

“சார் நாங்க அதை கேட்கவில்லை அவங்க ஆட்சில மத்த மதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?”

“ஆகாதுங்க, சீ, வோட் பாலிடிக்ஸ்னு வந்துட்டாலே, எல்லார் வோட்டும் வேணும் அதனால அவங்க கூட ஒன்னும் பண்ண முடியாது, காங்கிரஸ் மாதிரி ஒரு தேசதுரோக கட்சிக்கு மோடி எவ்வளவோ பரவாயில்லை.“

தேசபக்தர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பு துறையில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட இருப்பதை பற்றி கேட்ட போது சத்தியமா எனக்கு விசயமே தெரியாதே, என்று சூடத்தை தேடினார்.

“உங்க பசங்களை கூட்டிட்டு வந்திருக்கீங்களா?”

“பையனை கூப்பிட்டேன், வந்தான் ஆனா அவனுக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல அதனால பாதியிலேயே போய்ட்டான். இப்ப எம்.எஸ்.சி பயோடெக் பண்றான்.”

“இந்து ஆன்மீக கண்காட்சின்னு பெயர் வச்சுருக்காங்க ஆனா உள்ளே மதத்தை பத்தி ஒண்ணுமே இல்லையே நிறைய கடைங்க தான் இருக்கு, இதை எப்படி பாக்குறீங்க ?”

சற்று யோசித்தவர், தனது பையை திறந்து காட்டுகிறார். “நானே சில மெடிசின்ஸ் வாங்கத்தான் வந்தேன். அண்ட் எக்கோ டூரிசம் பத்தி விசாரிச்சுட்டு போலாம்னு, பாருங்க எல்லாத்துலயும் இப்டி நெகட்டிவே பார்க்கக் கூடாது. எதோ நாலு விஷயம் மதத்தை பத்தி மக்களுக்கு போய் சேர்ந்தா அதுவே போதும்.”

அவர் தெரிந்து கொண்ட அந்த நாலு விஷயங்கள் என்னவாக இருக்கும்? சாதி வெறி, முசுலீம் எதிர்ப்பு, மோடி ஆதரவு, பார்ப்பனிய சடங்கு போன்றவை அன்றி வேறென்ன?

பள்ளி வேன்
பல்வேறு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கில் சீருடைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அன்று விடுமுறை என்பதால், பல்வேறு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கில் சீருடைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆன்மிகத்தின் பெயரில் மதவெறி எப்படி சுலபமாக பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு செல்லப்படுகிறது? நடுத்தர வர்க்கத்திடம் மட்டுமல்ல பிஞ்சு நெஞ்சங்களிலும் இந்து பாசிசத்தை விதைப்பது இப்படித் தான். இது தமிழகம் தானா என்று ஒரு கணம் கிள்ளிப்பார்த்துக்கொள்ளும் அளவிற்கு குழந்தைகளை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஸ்டாலிலும் குழந்தைகளுக்கேற்ற மொழியில் மதவெறி நஞ்சை ஊட்டிக்கொண்டிருந்தனர்.

கண்காட்சி என்கிற பெயரில் நடத்தப்பட்ட இது, சங்கப்பரிவார பாசிச கும்பலுக்கு ஒரு விசிட்டிங் கார்ட். பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், இந்து நடுத்தர வர்க்கத்தின் மனதிலும் மதவெறியை விதைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு வாய்த்த களம். இந்த கண்காட்சி முழுவதும் மதவெறியை தூண்டும் வாசகங்களும், காட்சிகளும், படங்களும், விளக்கவுரைகளும் நிரம்பி வழிந்தன. ஒன்றுமே தெரியாத ஒருவன் இந்த அரங்குகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினாலே அவன் இந்துவெறியனாக மாறி விடுவான்.

ஆதிக்க சாதி வெறி சங்கங்களை திரட்டி, ஒன்றுபடுத்தி அதை முசுலீம் எதிர்ப்பாக மாற்றி, நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு கலாச்சாரத்தை மனதில் கொண்டு ‘சேவை’ செய்து அவர்களையும் மதவெறிக்குள் கொண்டு வந்து மொத்தத்தில் தமிழகத்தில் ஒரு கலவரத்திற்கான மனத்தயாரிப்பை கருத்துக்கள் காட்சிகள் பேரில் செய்கிறது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி.

பாஜக ஆட்சி நடைபெறுவதால் வரும் ஆண்டுகளில் இதே அணுகுமுறை இன்னமும் தீவிரமாக நடைபெறும். தமிழகம் அமைதிப்பூங்காவாக நீடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அதை களத்தில் காட்டாவிட்டால் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்தி பேசும் மாநிலங்களின் பிற்போக்குத்தனம் பிரச்சினைகள் அனைத்தும் இங்கேயும் அமலாக்கப்படும். என்ன செய்யப் போகிறோம்?

–    முற்றும்.

–    வினவு செய்தியாளர் குழு.

  1. ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
  2. வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
  3. ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி
  4. ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

சிஸ்கோ – இலாபம் வேண்டுமா ஊழியர்களை தூக்கி எறி !

0

ணினி வலையமைப்பு (நெட்வொர்க்) துறையில் முன்னணி நிறுவனமான சிஸ்கோ 6,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது. இணைய வலைப்பின்னலுக்கு உதவும் வழிச்செயலிகளையும், (ரவுட்டர்கள்), நிலைமாற்றிகளையும் (சுவிட்சுகள்) தயாரிக்கும் நிறுவனமான சிஸ்கோ சமீபகாலங்களில் தொலைக்காட்சி வாங்கிகள் (செட்டாப் பாக்ஸ்கள்), கணினி பாதுகாப்பு, தொலைத் தொடர்பு உரையாடல் (வீடியோ கான்பரன்சிங்) போன்ற துறைகளிலும் தனது தொழில்களை விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிறுவனத்தின் இந்தியக் கிளையில் சுமார் 10,000 பேர் வேலை செய்கின்றனர். இவர்களும் இந்த வேலை இழப்பினால் பாதிக்கப்படலாம்.

சிஸ்கோ
சிஸ்கோ 6,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது

2014-ம் ஆண்டு ஜூலையுடன் முடிவடைந்த காலாண்டில் கிட்டத்தட்ட ரூ 13,200 கோடியை ($220 கோடி) லாபமாக மட்டும் ஈட்டியுள்ளது சிஸ்கோ; வருவாய் $1240 கோடியாகஉள்ளது. ஆனால் இவை கடந்த ஆண்டுகளை விட முறையே 1% , 0.5% குறைந்துள்ளதால் ஊழியர்களை வேலைநீக்கம் செய்துள்ளது சிஸ்கோ. அதாவது நிறுவனத்திற்கு நயா பைசா அளவுக்குக் கூட நஷ்டமில்லை, அவர்கள் எதிர்பார்த்த அளவை விட 0.5% லாபம் குறைந்துவிட்டது, அவ்வளவுதான்.

வேலை இழப்பவர்களில் 15% நிர்வாக பிரிவில் இருக்கும் துணைத்தலைவர் போன்ற உய ர்பதவிகளில் இருப்பவர்கள் என்று கூறியுள்ளது சிஸ்கோ. அதாவது, 85% பேர் சாதாரண ஊழியர்கள்.

பொருளாதார தேக்கநிலை காரணமாகவும், கணினி வலையமைப்பு துறையில் புதிய போட்டி நிறுவனங்களின் வரவினாலும் சிஸ்கோவின் சந்தை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் முதலாளித்துவ வல்லுநர்களும், பத்திரிகைகளும் ஆட்குறைப்பு நடவடிக்கையை வரவேற்றுள்ளனர். இதன் மூலம் சிஸ்கோ சுமார் $100 கோடி வரை வரை செலவுகளைக் குறைக்க முடியும் என்று மனம் மகிழ்ந்துள்ளனர்.

“பலருக்கு வேலை இழப்பு துருதிருஷ்டமாக இருக்கலாம். ஆனால், சிஸ்கோ போட்டியில் முன்னேறுவதற்கு இது அவசியம் என்று கருதுகிறேன். சிஸ்கோ சரியான நடவடிக்கையைத்தான் எடுத்துள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார் முதலீட்டு ஆய்வாளர் மார்ஷல்.

சிஸ்கோவின் முதன்மை செயல் அலுவலர்  சாமபர்ஸ் “சந்தை யாருக்காவும் காத்திருக்காது, நாங்கள் சந்தைப் போக்கை எதிர்நோக்கி செயல்படுவோம். அதற்கு சில கடினமான முடிவுகளை தேவையாக இருக்கிறது.“ என்று கூறி இந்த வேலைநீக்கத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

நிறுவனம் லாபம் சம்பாதிக்கும் போது ஆதாயம் அனைத்தையும் முதலாளிகள் ஒதுக்கிக் கொள்ளலாம்; சந்தையில் இன்னொரு நிறுவனம் லாபம் சம்பாதிக்க ஆரம்பித்ததும், அதன் பாதிப்பை தொழிலாளர்கள் மீது சுமத்தி வேலையை வீட்டு நீக்கலாம் என்பதுதான் முதலாளித்துவ சந்தை முன்வைக்கும் வளர்ச்சி சூத்திரம்.

இவ்வாறு, ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சிவிட்டு சக்கையாக துப்பி எறிவது, ‘வெற்றிகரமான’ முதலாளித்துவ நிறுவனங்களின் வாடிக்கை. சிஸ்கோ இதை கடந்த நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு கோடைக் காலத்திலும் செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறு நிறுவனங்களை வாங்கி தன்னுடன் இணைத்துக் கொள்வதும், அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் தனது லாபவேட்டையின் செயல் முறையாக வைத்துள்ளது. கடந்த ஆண்டு 4,000 ஊழியர்கள், 2012-ல் 1,300 ஊழியர்கள், 2011-ல் 6,500 ஊழியர்கள் என ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.

முதலாளித்துவம் தனது மூலதனத்திற்கு லாபம் இல்லை என்றால் தொழிலை நடத்தாது. குறைவான லாபத்தையும் ஏற்றுக்கொள்ளாது.

“10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் மூலதனம் பயணம் செய்யும்.
20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது.
50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லா கெடுதலையும் செய்ய துணிவு கொள்கிறது.
100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது.
300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும்.
தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும்.”

என்று மூலதனம் நூலில் மார்க்ஸ் குறிப்பிடுவதன்படி தங்கள் லாபத்தில் 1% குறைவதைகூட பொருத்துக்கொள்ள இயலாமல ஊழியர்களின் வயிற்றில் அடித்து அதை ஈடுகட்ட முயற்சிக்கிறது சிஸ்கோ.

இதே போன்று கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 18,000 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது. மைக்ரோசாஃப்ட் பங்கு வைத்துள்ள “இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ்” என்ற நிறுவனம் 19% ஆட்குறைப்பை அறிவித்துள்ளது. இத்தனைக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்பார்த்ததைவிட அதிக லாபமாக $570 கோடி டாலர் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் சமீபத்தில் இணைத்துக்கொண்ட நோக்கியா நிறுவனத்தில், சந்தைப்படுத்தல் பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் ஆயிரக்கணக்கானவர்களை வேலை நீக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் இயங்கிவரும் நோக்கியா நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஏற்கனவே விருப்ப ஓய்வு என்ற பெயரில் மோசடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சென்னை நோக்கியா, பல ஆண்டுகளாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய ரூ 21,153 கோடியையும், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ 2,400 கோடியையும் செலுத்தாமல் ஏய்ப்பு செயதிருக்கிறது.

இத்தனைக்கும் மதிப்புக் கூடுதல் வரியாகவும், மத்திய விற்பனை வரியாகவும் நோக்கியா எவ்வளவு தொகையைச் செலுத்துகிறதோ, அந்தத் தொகையை தமிழக அரசு நோக்கியாவுக்குத் திருப்பிக் கொடுத்து வந்தது. அந்த வகையில் 2005 துவங்கி 4 ஆண்டுகளில் மட்டும் நோக்கியாவின் உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் தமிழக அரசு நோக்கியாவுக்கு கொடுத்திருக்கும் தொகை 650 கோடி ரூபாய். நோக்கியா தனது தொழிற்சாலையில் போட்டிருக்கும் முதலீடும் ஏறத்தாழ 650 கோடி ரூபாய்தான். 2010 நிலவரப்படி தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ 1020 கோடி.

இப்படி வேலை உத்தரவாதமின்றி ஊழியர்களை சுரண்டுவது, பலவித வரிச்சலுகைகள் மூலம் மக்கள் பணத்தை விழுங்குவது என கொழுத்து வரும் முதலாளித்துவ நிறுவனங்கள், தமது லாபத்திற்கு பங்கம் வரும் போது ஊழியர்களை தூக்கி எறிந்து ஆட்குறைப்பை அறிவிக்கின்றனர். சென்னை உள்ளிட்ட உலகின் எந்த பகுதியில் எத்தனை பேர் நீக்கப்பட உள்ளார்கள் என்ற தகவலை இன்னும் மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சீனாவில் மைக்ரோசாப்ட்டுக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறர்கள்.

மைக்ரோசாஃப்ட்டின் தலைவராக இந்தியரான சத்திய நாதெல்லா என்பவர் நியமிக்கப்பட்டவுடன் இந்தியாவிற்கு பெருமை என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்த ஊடகங்களும், தேசபக்தர்களும் நோக்கியா வேலை பறிப்பு குறித்து கருத்து தெரிவிக்காமல் சைலண்ட் மோடிற்கு சென்றுவிட்டார்கள்.

வேலைநீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் தான் 15 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு திறமையாக  வேலை செய்து வருவதாகவும், பணிதிறனில் குறைபாடு இல்லாத தன்னை எந்த காரணமும் கூறாமல் பழைய கணினியை தூக்கி எறிவது போல எறிந்து விட்டதாக வேதனையுடன் கூறுகிறார். வேலை இழப்பைவிட நிறுவனம் தன் குழந்தைக்கு வழங்கி வந்த காப்பீடு இனி இல்லை என்பது அவரை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது.

சிஸ்கோ
நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்கள் ஈவு இரக்கமின்றி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.

இதே போன்று கடந்த மே மாதம் எச்.பி நிறுவனம் 16,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் கூறும் வேலைகளை தன் சொந்த வேலையாக எடுத்துக்கொண்டு திட்டமிட்ட தேதிக்குள் பணியை முடிக்கவேண்டும் என்று தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் இராப்பகலாக உழைத்த ஊழியர்கள், அடுத்த ஆண்டு நல்ல சம்பள உயர்வு தருகிறோம் என்று ஆசைகாட்டி உழைப்பை பிழிந்து எடுக்கப்பட்ட ஊழியர்கள், அமெரிக்க சொர்க்கம் செல்லும் ஆசைகாட்டி உழைப்பு பிழிந்தெடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாட்டு தொழிலாளிகள் என பல ஆண்டுகளாக நிறுவனத்திற்காக உழைத்த ஊழியர்கள் ஈவு இரக்கமின்றி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.

இந்த வேலையை நம்பி வாங்கிய கடனட்டை கடன்கள், கடன் தவணைகள், வீட்டு செலவுகள், வீட்டுக் கடன், கார் கடன், திருமண செலவுகள், தான் திறமையில்லாதவனோ என்ற உளவியல் சிக்கல், அடுத்த வேலை எப்போது கிடைக்கும், கிடைக்குமா என்ற நிச்சயமின்மை என பலவித பிரச்சனைகளுடன் விசிறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

இதுபோன்ற நிறுவனங்களை தான் வேலைவாய்ப்பை பெருக்கும் அடசய பாத்திரம் என்று நம்பச்சொல்கிறார்கள் முதலாளித்துவ ஆதரவாளர்கள். வேலைவாய்ப்பை உருவாக்குவதாக கூறிதான் கார்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை நியாயப்படுத்துகிறது அரசு. அந்த வேலைவாய்ப்பின் லட்சணம் இது தான். சட்டபூர்வ உரிமை கூட கொடுக்காமல் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டிவிட்டு நடுத்தெருவில் நிறுத்துவதுதான் அவர்கள் உருவாக்கும் வேலைவாய்ப்பின் லட்சணம்.

முதலாளிகளின் மதமான சந்தையின் புனித நூல்களில் லாபத்தை பெருக்குவதுதான் அறம். அதற்காக எதையும் செய்யலாம் என்பது தான் இவர்களின் புனிதவிதிகள். இதை எதித்து போராட வேண்டுமென்றால் தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சங்கமாக திரள்வதை தவிர வேறு வழியில்லை.

–    ரவி

மேலும் படிக்க

ஆகஸ்டு-15: கொரியாவின் கொடி பறக்குது !

1

“சுதந்திர தினம்” என்றழைக்கப்படும் ஆகஸ்டு 15-ம் தேதியன்று, சங்கம் அமைக்கும் சுதந்திரம் மறுக்கப்பட்ட தொழிலாளர்கள், தென்கொரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்றை எதிர்த்துப் போராடிய குற்றத்துக்காக, காஞ்சிபுரத்தில் போலீசால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

“இது சட்டவிரோதக் காவல் என்பதால் உடனே விடுவிக்க வேண்டும்” என்று தாக்கல் செய்யப்பட்ட மனு 17-ம் தேதியன்று உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. 19-ம் தேதியன்று காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றமும் தொழிலாளர்களை பிணையில் விடுவிக்க மறுத்தது. பிறகு 22-ம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்றம் தொழிலாளர்களை பிணையில் விடுவித்திருக்கிறது. தொழிலாளர்கள் பிணையில் வெளியே வரவே முடியாமல் செய்வது என்ற நோக்கத்தில் வெறித்தனமாக இருந்தது நிர்வாகம். தற்போது பிணையில் வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு தென்கொரிய கம்பெனியின் தொழிலாளர் பிரச்சினை அல்ல, எல்லா கம்பெனிகளும் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகத் திரண்டு நின்று தொழிலாளி வர்க்கத்தை நசுக்கும் பிரச்சினை. எனவே, நாம் இதன் பின்புலத்தை அறிவது அவசியம்.

000

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் இயங்கி வரும் கெஸ்டாம் சுங்வூ ஹைடெக் (GSH) என்ற என்ற தென்கொரிய நிறுவனம் ஹூண்டாய் கார்களுக்கு கதவுகளை தயாரித்து கொடுக்கிறது. இங்கு பணிபுரியும் 3000 பேரில் 300 பேர் கூட நிரந்தரத் தொழிலாளர்கள் இல்லை.

ஊதியம் குறைவு என்பது மட்டுமல்ல, 8 மணி நேரத்தை தாண்டி எத்தனை நேரம் சொன்னாலும் வேலை செய்யவேண்டும். லீவு நாட்களில் வரச்சொன்னால் வர வேண்டும், அடுத்தடுத்து ஷிப்டுகள் தொடர்ந்து வேலை செய்யச் சொன்னால் மறுக்க முடியாது. வேலை நிரந்தரம் கிடையாது. சங்கமும் கூடாது. இந்த தொழில் நிறுவனத்தில் மட்டுமல்ல, எல்லா பன்னாட்டு நிறுவனங்களிலும், இந்திய தரகுமுதலாளிகளின் நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை.

இவ்வாறு தொழிலாளிகளின் ரத்தத்தைப் பிழிவதை, சட்டபூர்வமாக நியாயப்படுத்துவதற்கு இந்நிறுவனம் ஒரு அயோக்கியத்தனமான தந்திரம் செய்துள்ளது. தொழிலாளி என்ற வரையறையில் வந்தால்தான், “சங்கம், தொழிற்தகராறு சட்டம், வேலைநேரம்” போன்ற பிரச்சினைகளெல்லாம் வரும் என்பதால் தொழிலாளர்களையெல்லாம், “அலுவலக ஊழியர்கள்” (ஸ்டாஃப்) என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறது. தென்கொரிய கம்பெனி மட்டுமின்றி பல நிறுவனங்களும் கடைப்பிடித்து வரும் தந்திரம் இது – ஐ.டி துறையில் எல்லா ஊழியர்களுக்கும் “எக்சிகியூடிவ்” என்று பெயரிட்டிருப்பது போல!

புதிய ஜனநயாகத் தொழிலாளர் முன்னணி இதனை எதிர்த்து விடாப்பிடியாக போராடியதன் விளைவாக, “இவர்களெல்லாம் தொழிலாளர்களே” என்று தொழிலாளர் துறை துணை ஆணையர் அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக தொழிலாளர்களுக்குரிய உரிமைகளைக் கேட்டு பு.ஜ.தொ.மு வழக்குகள் போட்டிருக்கிறது, போராட்டமும் நடத்தி வருகிறது.

மாவட்ட ஆட்சியருக்கு மனு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இது மட்டுமல்ல, நிரந்தரத் தொழிலாளிகள் என்று 10% பேரை வைத்துக் கொண்டு, 90% பேரை காண்டிராக்ட் தொழிலாளிகளாக வைத்து சுரண்டி வந்த பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் பு.ஜ.தொ.மு முடிவு கட்டியது. காண்டிராக்ட் தொழிலாளிகளுடன் நிரந்தரத் தொழிலாளிகளையும் ஒன்றுபடுத்தி சங்கம் கட்டியது. வரவிருக்கும் “அபாயத்தை” புரிந்து கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் GSH உடன் சேர்ந்து சதியாலோசனையில் இறங்கின.

GSH நிர்வாகம், சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் 43 பேரை வேலை நீக்கமும், 12 பேரை தற்காலிக வேலை நீக்கமும் செய்தது. தொழிலாளிகள் பணியவில்லை. இதற்கெதிரான வழக்கு விசாரணை 2014 ஜூலையில் முடிந்து, நிர்வாகத்தின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு தகுதியானவை என்று நிரூபிக்கப்பட்டன. இருப்பினும் தொழிலாளர் துறை ஆணையர் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

நிர்வாகம் மீண்டும் பழிவாங்கும் என்று எதிர்பார்த்து, “வழக்கு முடிவதற்கு முன் புதிதாக யாரையும் வேலைநீக்கம் செய்யக்கூடாது” என்று உயர் நீதிமன்றத்தில் பு.ஜ.தொ.மு தடையாணை பெற்றது. நீதிமன்ற தடையாணையை மீறி, 2014 மே மாதம் 12 பேரை தற்காலிக வேலை நீக்கம் செய்தது நிர்வாகம்.

மேற்கூறிய நிர்வாகத்தின் எல்லாவிதமான குற்றங்களையும், நீதிமன்ற உத்தரவு மீறல்களையும் காஞ்சி மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க கோரினார்கள் தொழிலாளர்கள். இல்லையேல் “ஆகஸ்டு 15 அன்று போராடுவோம்” என்று அறிவித்தார்கள். நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காத ஆட்சியர், “போராடுவது உங்கள் உரிமை” என்று பதிலளித்தார். அந்த உரிமையை அமல்படுத்தியதற்குத்தான் தொழிலாளிகள் மீதும் பெண்கள் குழந்தைகள் மீதும் தடியடி, சிறை!

000

தொழிலாளிகளை விடுவிப்பதற்காக ஒரு வாரமாக நீதிமன்றத்தில் நடந்த போராட்டம், அரசையும் போலீசையும் பற்றிய உண்மையை பலருக்கும் புரிய வைத்திருக்கிறது.

17 -ம் தேதியன்று உயர்நீதிமன்ற விசாரணையின்போது “சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்தி சுதந்திர தினம் கொண்டாடுவதை தடுக்கிறார்கள் மை லார்டு” என்று ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டு நீதிபதியிடம் குமுறினார், தென்கொரிய GSH நிறுவனத்தின் வக்கீல். அப்புறம், “தென்கொரியாவின் சுதந்திர தினமும் ஆகஸ்டு 15-ம் தேதிதான் மைலார்டு” என்று கொரியாவின் சார்பிலும் கூவினார் அந்த வக்கீல். கொரிய முதலாளிகள் மட்டும் இதை நேரில் பார்த்திருந்தால், “கொடுத்த காசுக்கு மேல கூவுறான்டா ங்கொய்யால” என்று கண் கலங்கியிருப்பார்கள். மேற்படி வக்கீலின் பெயர் சந்திர சேகரன். தொழிலாளர் தரப்பு வழக்குகளை நடத்தும் லேபர் லாயர்கள் நிறைந்த ராவ் அண்டு ரெட்டி என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து தொழில் கற்றுக்கொண்டு, தற்போது தொழிலாளர்களுக்கு எதிராக கோடரிக்காம்பாக “தொழில்” செய்பவர்.

19-ம் தேதி காஞ்சிபுரம் செசன்சு நீதிமன்றத்தில் தொழிலாளர்களின் பிணை மனு விசாரணைக்கு வந்தது “மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன் சட்டவிரோதமாக கூடினார்கள், அரசு ஊழியர்களை தாக்கினார்கள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள்” என்பதுதான் வழக்கு. இந்த வழக்கை நடத்த வேண்டியவர் அரசு வழக்குரைஞர். ஆனால் தென்கொரிய கம்பெனி வக்கீல்தான் அவரை முந்திக் கொண்டு, வழக்கை நடத்தினார். “இந்த சங்கத்துக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல, இதோ டி.வி.எஸ் காரர்கள் (ஆக்சில் இந்தியா) வந்திருக்கிறார்கள், அவர்களையும் கேளுங்கள், யுவர் ஆனர்” என்று கூட்டணி அமைத்துக் கூவினார் GSH நிறுவனத்தின் வக்கீல். அரசை நடத்துவதே பன்னாட்டு கம்பெனிகள்தான் எனும்போது, வழக்கையும் அவர்கள் தானே நடத்தவேண்டும்!

காக்கிச் சட்டையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. கம்பெனியின் சம்பளப் பட்டியலில் உள்ள அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். கோர்ட்டா, போலீசு ஸ்டேசனா என்று சந்தேகப்படும் அளவுக்கும், நீதிபதியை மிரட்டும் அளவுக்கும் காக்கிக் கூட்டம். ஆகஸ்டு 15 அன்று நடைபெற்ற போராட்டத்தை புகைப்படம், வீடியோ எடுத்த உளவுத்துறை போலீசார் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வந்திருந்தனர். அங்கே திரண்டிருந்த பல்வேறு கம்பெனிகளின் எச்.ஆர் அதிகாரிகளிடம் கொடுத்து “இவன் உங்க கம்பெனியா பாருங்க” என்று ஆள்காட்டி வேலை செய்து கொண்டிருந்தனர். ரிட்டையர்டு உளவுத்துறை அதிகாரிகளும் கிளம்பி வந்து விட்டார்கள். பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் தாங்கள் பணிக்காலத்தில் சேமித்து வைத்திருந்த பு.ஜ.தொ.மு பிரசுரங்கள், சுவரொட்டிகள் போன்ற “தொல்லியல் ஆவணங்களை” நகல் எடுத்து எச்.ஆர் அதிகாரிகளுக்கு விநியோகித்துவிட்டு, தலையைச் சொரிந்து பல்லிளித்துக் கொண்டிருந்தனர்.

காலையில் விசாரணைக்கு வந்த பிணை மனு பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டதால், காக்கிகள் அனைவருக்கும் அருகிலுள்ள பெரிய லாட்ஜ்களில் கறிசோறும், ஓய்வெடுக்க ஏ.சி ரூமும் ஏற்பாடு செய்திருந்தார்கள் கொரிய முதலாளிகள். ஒரே நாளில் விசாரித்து உத்தரவிடவேண்டும் என்று உயர்நீதி மன்றத்திடம் உத்தரவு வாங்கியிருந்த காரணத்தினால், வழக்கு மறுநாளைக்கு ஒத்திவைக்கப்படவில்லை. மறுநாளும் வழக்கு நடந்திருந்தால், ஏட்டு முதல் டி.எஸ்பி வரையிலான அனைவருக்கும் தேவைப்பட்ட அனைத்தையும் நிர்வாகம் சப்ளை செய்திருக்கும். காஞ்சி அமர்வு நீதிமன்றம் அன்று மாலை தொழிலாளிகளின் பிணை மனுவை நிராகரித்து விட்டது.

புஜதொமு வின் மேல்முறையீட்டு மனு 21-ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி தேவதாசன் முன் விசாரணைக்கு வந்தது.

நிர்வாகத்தின் வக்கீலான மேற்படி சந்திரசேகரன், “சுதந்திர தினத்தன்று முழக்கமிட்டார்கள் மைலார்டு” என்று தொடங்கினார்.

“நீங்கள் கொண்டாடுகிறீர்கள், அவர்கள் கஷ்டம், அவர்கள் போராடுகிறார்கள்” என்றார் நீதிபதி.

“வேலை போய்விடும் என்று பயந்து வீட்டு முகவரியை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள் யுவர் ஆனர்” என்றார் அரசு வக்கீல்.

“பயப்படுவது நியாயம்தானே” என்றார் நீதிபதி.

“முகவரி பொய்யாக இருந்தால், புலன் விசாரணை நடத்த முடியாது மைலார்டு” என்றார் சந்திரசேகரன்.

“அதை விசாரணை அதிகாரி பார்த்துக் கொள்வார், நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்று மூக்கறுத்த நீதிபதி,

“இது மூலதனத்துக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான போராட்டம்; போலீசார் தொழிலாளிகளை கிரிமினல்கள் போல நடத்தக்கூடாது” என்றும் கூறி, தொழிலாளர்கள் அனைவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

கஸ்டு 23 சனிக்கிழமையன்று, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களும், அவர்களது மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள், பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனப் பெருந்திரளாக கூடிய அனுபவப் பகிர்வுக் கூட்டம் நடைபெற்றது. உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, சிவக்குமார் ஆகியோரும், மனித உரிமைப் பாதுகாப்பை மையத்தின் வழக்குரைஞர்களும் போராட்டத்தின் நியாயத்தையும், இதில் பன்னாட்டு நிறுவனமும் அரசும் போலீசும் அமைத்திருக்கும் கூட்டணியையும், இத்தகைய போராட்டங்கள் குறித்த வரலாற்றையும் விளக்கிப் பேசினர். புஜதொமு பொருளாளர் தோழர் விஜயகுமார் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வழக்குகள் குறித்து விளக்கிப் பேசினார். சிறை சென்ற தொழிலாளர்களில் சிலர் கவிதை வாசித்தனர். தொழிலாளர் வீட்டுப் பெண்கள் தமது பார்வையில் இந்த போராட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“வீட்டுக்காரர் ஜெயிலுக்குப் போவதெல்லாம் குடும்பத்துக்கு அவமானம் என்றுதான் முதலில் நினைத்தோம். இப்போது பெருமையாக இருக்கிறது. பெயில் கிடைக்கவில்லை என்றவுடன் ஒவ்வொருத்தரும் பத்து முறைக்கு மேல் போன் பண்ணி சங்கத்து தோழர்களிடம் பேசியிருப்போம். ஆயிரம் ரெண்டாயிரம் போன் வந்திருக்கும். அத்தனைக்கும் அலுத்துக் கொள்ளாமல் பதில் சொன்னார்கள். குடும்பங்களை தனித்தனியாக விசாரித்து கவனித்துக் கொண்டார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர் பெண்கள். கூடியிருந்த தொழிலாளர்களிடையே குடும்பம் என்ற எல்லையைத் தாண்டி, தோழமை ஒரு புதிய பரிமாணத்துக்கு விரிவடைவதைக் காண முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

000

கஸ்டு 15 போராட்டம் GSH நிறுவனத் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாகத்தான் நடத்தப்பட்டது என்ற போதிலும், இதில் கலந்து கொண்டவர்கள் அந்தக் கம்பெனி தொழிலாளர்கள் மட்டுமல்ல. டி.வி.எஸ் உள்ளிட்ட பத்து நிறுவனங்களின் தொழிலாளர்களும், தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பெற்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார்கள். ஏசியன் பெயின்ட்ஸின் ஏ.ஐ.சி.சி.டி.யு தொழிற்சங்கம் பொன்றோர் போராட்டத்தை வாழ்த்தி ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த வர்க்க ஒற்றுமை எதிரிகளை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது.

இப்போராட்டம் திருப்பெரும்புதூர் தொழிலாளிகள் மத்தியில் அகஸ்டு 15 சுதந்திரம் பற்றிய மாயையை அகற்றத் தொடங்கியிருக்கிறது. “என்ன இருந்தாலும் சுதந்திர தினத்தன்று போராடலாமா?” என்று பேசிக் கொண்டிருந்த தொழிலாளிகள் கூட, “எத்தனை பிரச்சினை இருந்தால் பெண்டாட்டி பிள்ளைகளுடன் போராட வருவார்கள்?” என்று அதன் நியாயத்தை புரிந்து கொண்டிருக்கிறார்கள். “சங்கம் வைக்கவே சுதந்திரம் இல்லை, அப்புறம் என்ன வெங்காய சுதந்திரம்?” என்றும் “கொரியா கம்பெனிக்காரனுக்குத்தான் சுதந்திரம் இருக்கு, நமக்கு எங்கடா இருக்கு?” என்ற தெளிவு தொழிலாளிகளிடையே பரவத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தெளிவு எதிரிகளைத் திகிலடைய வைத்துள்ளது.

ஆகஸ்டு-25 திங்கட்கிழமை :

பிணையில் வெளியே வந்த தொழிலாளர்கள் திருப்பெரும்புதூர் ஆலைக்கு பணிக்கு செல்கின்றனர். திருப்பெரும்புதூர் போலீசு, உளவுத்துறை போலீசார், விஷ்ணு காஞ்சி சட்டம் ஒழுங்கு போலீசு என ஒரு பெரும்படையே ஆலை வாயிலில் நிற்கிறது. தொழிலாளிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அனைவருக்கும் பணிநீக்க உத்தரவு வழங்கப்படுகிறது. எதிர்காலம் குறித்த பயம், பட்டினி குறித்த அச்சம்! இதுதானே தொழிலாளி வர்க்கத்தை மிரட்டிப் பணிய வைப்பதற்கு முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் ஆயுதம்!

இதே ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிப்பாகம் செய்து தரும் ஒய்.எஸ்.ஐ ஆட்டோமோடிவ் என்ற கம்பெனியில் 6 ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து, பணி நிரந்தரம் செய்யவிருப்பதாக நிர்வாகம் சொன்னதை நம்பி திருமணம் செய்தார், பாலாஜி என்ற தொழிலாளி. குழந்தையும் பிறந்துவிட்டது. திடீரென்று சென்ற மே 8-ம் தேதியன்று, ஆட்குறைப்பு என்ற பேரில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். “இனி நான் எங்கே போவேன்” என்று கெஞ்சிய பாலாஜியை “எங்கேயாவது போய் செத்துத்தொலை” என்று எச்.ஆர் கூறவே, ஆலையில் இருந்த தின்னரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சக தொழிலாளிகள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி விட்டனர். “இது தற்கொலை முயற்சியல்ல நாடகம்” என்று கூறி, மருத்துவ செலவைக் கூட ஏற்க மறுத்து விட்டது நிர்வாகம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட 55 தொழிலாளிகளைப் பணியமர்த்தக் கோரியதற்காக GSH நிர்வாகம் வழங்கியிருக்கும் தண்டனை – அத்தனை பேருக்கும் பணி நீக்கம்! சங்கம் அமைக்கும் சுதந்திரம் கேட்டதற்காக சிறை! மாருதி தொழிலாளர்களை வீடு வீடாகச் சென்று மிரட்டிய குர்கான் போலீசைப் போலவே, தற்போது சிறை சென்ற தொழிலாளர் குடும்பத்தினரை வீடு வீடாகச் சென்று மிரட்டி வருகிறது போலீசு. ஆனால் எதிரிகள் எதிர்பார்ப்பதைப் போல தொழிலாளிகள் அஞ்சவில்லை. இந்த அச்சமின்மைதான் எதிரிகளை அச்சுறுத்துகிறது. மாருதி போராட்டத்தைத் தொடர்ந்து குர்கான் வட்டார முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராக கூட்டு சேர்ந்ததைப் போலவே, இங்கேயும் முதலாளிகள் “மகா பஞ்சாயத்து” அமைக்கிறார்கள்.

இதை எதிர்கொள்ள வேண்டுமானால், பாலாஜியைப் போன்ற தொழிலாளிகளின் தற்கொலை முயற்சியைத் தடுக்க வேண்டுமானால், அவர்களது குழந்தைகள் அநாதைகளாகாமல் காப்பாற்ற வேண்டுமானால் தொழிலாளிகள் ஒன்றுபடவேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சாத்தியமாக்குவோம்!

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,

இந்தப் போராட்டம், கைது, பிணை தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும், வழக்குகளை நடத்துவதற்கும், போலீசும் நிர்வாகமும் செய்து வரும் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிப்பதற்கும் சில லட்சங்கள் செலவாகியிருக்கின்றன. மேலும் பல செலவுகள் காத்திருக்கின்றன. நீங்கள் செய்யும் நிதி உதவி என்பது இந்தப் போராட்டத்துக்குச் செய்யும் பேருதவியாகும். உங்கள் நன்கொடைகளை கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பக் கோருகிறோம்.

பெயர் : Sudesh Kumar.M.J

வங்கிக் கணக்கு விபரங்கள்

A/C.No.: 30080252767
State Bank Of India ( SBI)
Janapanchatram Branch
Sholavaram
Thiruvallur Dist
IFSC Code: SBIN0007594
Branch Code : 007594

அலைபேசி : 94444 42374

நன்றி

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

ஜானகிராமனைக் கொன்றது யார் ?

4

விபத்தில் இறந்த தொழிலாளியை மறைத்து விட்டு, ஒரு நிறுவனம் சுதந்திர தின விழாவை கொண்டாடியதோடு, தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியதை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா?

அன்றாடம் 1,730 கார்களை உற்பத்தி செய்யும் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, சென்னை இருங்காட்டுக் கோட்டையில் அமைந்துள்ள ஹூண்டாய் தொழிற்சாலைதான் அது.

ஹூண்டாய்
ஹூண்டாய் தொழிற்சாலை

ஆனந்த சுதந்திரத்தை கொண்டாடிய பிறகு தான் முந்தைய இரவு துப்புரவு பணியினை செய்யச் சென்ற ஜானகிராமன் (வயது 52) என்ற தொழிலாளி எதிர்பாராத விபத்தால் இறந்து போனதாக அறிவித்தார்கள். ஆனால் ஏற்கெனவே 2010 விபத்தில் சில பொறியியலாளர்கள் இறந்த போது, செய்தியாக வெளியானதைப் போல இந்தமுறை அதிகம் கசியாமல் இருக்க ஊடகங்களை நல்ல முறையில் ‘கவனித்து’க் கொண்டார்கள் முதலாளிகள். அதையும் மீறி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியை வைத்தும், நேரடியாக தொழிலாளிகள், தொழிற்சங்க தலைவர்களிடம் தொலைபேசி வழியாக பேசியும் இப்பதிவு எழுதப்படுகிறது.

ஜானகிராமனுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பட்டயப் படிப்பு முடித்து அங்கு ஒப்பந்தத் தொழிலாளியாகவும், இன்னொருவர் சாதாரண தொழிலாளியாகவும் பணியாற்றி வருகின்றனர். இப்போது நட்ட ஈடாக பட்டயப் படிப்பு முடித்திருக்கும் அவரது மகன் தன்ராஜ் தன்னை பணி நிரந்தரம் செய்யக் கோருகிறார். அதற்கு கூட ஹுண்டாய் தயாராக இல்லை.

“சுதந்திர தினமென்பதால் எல்லோருக்கும் விடுமுறை அளித்திருந்தோம். அதனால் அவர் இறந்து கிடந்தது எங்களுக்கு தெரியாது” என்கிறார் ஹூண்டாய் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி சாய் கணேஷ். “ஜானகிராமனுக்கு மாத்திரம் விடுமுறையன்று சிறப்பு பணி தரப்பட்டிருந்ததா?” என்ற கேள்விக்கு “அவருக்கு பேக்டரிக்கு உள்ளே வேலை கிடையாது. கார் உற்பத்தியாகும் பகுதிக்கு அருகில் உள்ள தோட்டத்தில்தான் வேலை” என்று பதில் சொல்லியிருக்கிறார். பதிலுக்கும் கேள்விக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? ஹூண்டாய் வாளகத்தை விட்டு வெளியே ஹூண்டாய்க்காக வேலை செய்தால், ஹூண்டாய் கணக்கில் வராதாம்.

1996 மே மாதம் தனது முதலாவது பகற் கொள்ளையாட்சி மூலம் தமிழகத்தையே மொட்டையடித்த ஜெயா கும்பல் கடைசியாக போட்ட சில கையெழுத்துகளின் கீழ் ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனம் தமிழகத்திற்கு வந்தது. 17 மாதங்களில் அது தனது முதல் காரை தயாரித்த போது நேரடியாக 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றார் கருணாநிதி. இன்றைக்கு வரையிலும் 1500 பேர் கூட அங்கே நிரந்தர தொழிலாளர்கள் இல்லை. அதுவும் பல போராட்டங்களுக்கு பிறகே கை கூடியிருக்கிறது. அவர்களுக்கே கடைசியாக போட்ட ஒப்பந்தப்படி மாத வருமானம் அதிகபட்சம் ரூ 13 ஆயிரம் தான்.

மீதமுள்ள எட்டாயிரம் ஒப்பந்த தொழிலாளிகளை அழைத்து வர கங்காணி நிறுவனங்கள் பல வெண்டார்கள் என்ற பெயரில் சென்னையில் நிறைய உள்ளன. அதில் ஒன்றுதான் லேப்கான் நிறுவனம். அந்நிறுவனம் தரும் மாதச் சம்பளம் ரூ 4 ஆயிரத்தை தாண்டாது. லாஜிஸ்டிக் பிரிவில் டிவிஎஸ் கம்பெனியும் வென்டார் சேவையை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

இந்த லேப்கான் கம்பெனியின் தொழிலாளிதான் தற்போது மரணமடைந்துள்ள அல்லது பாதுகாப்பு அற்ற பணிச்சூழல் காரணமாக கொல்லப்பட்டுள்ள தொழிலாளி ஜானகிராமன். ஏனெனில் கழிவுநீரை அகற்றுவது மட்டும்தான் அவரது வேலை. ஆனால் உற்பத்தி, பெயிண்ட் அடித்தல் போன்றவற்றின் போது வெளிவரும் ரசாயனக் கழிவுகளை அகற்றுவது அவரது பணியல்ல. அதனை செய்வதற்கு இளங்கலை வேதியியல், அல்லது வேதி பொறியியல் படிப்பு படித்தவர்கள் தான் ஈடுபடுத்தப்பட வேண்டும். அவர்களால் தான் இதன் தாக்கத்தை ஓரளவு புரிந்துகொண்டு தேவையான போது தப்பிக்க முடியும்.

அன்று வேலையில் இருந்த மேலாளர்கள் ஒன்றும் நடந்து விடாது என்று சாதாரண தொழிலாளியான ஜானகிராமனையும் இந்த வேலையில் ஈடுபடுத்தி உள்ளனர். அந்தக் கழிவுகளில் மீத்தேன் வாயு இருக்கும். பாதாள சாக்கடையில் அடைப்பு எடுக்கப் போகும் பலரையும் காவு வாங்கும் அதே வாயு.

சாதாரண காற்றை விட மீத்தேன் அடர்த்தி குறைவாக இருப்பதால் இதனை சுவாசிப்பது எளிதாக இருக்கும். ஆனால் அதனை தொடர்ந்து சுவாசித்துக் கொண்டே இருந்தால் உயிர் வாயுவை (ஆக்சிஜன்) எடுப்பது குறைய ஆரம்பிக்கும். உயிர் வாயுவின் அளவு நீங்கள் சுவாசிக்கும் காற்றில் 12 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் போது ஆரோக்யமான ஒருவருக்கு கூட மயக்கமும், சுயநினைவிழத்தலும், இதயம் நின்று போவதும், வயிற்றோடு போவதும், அதனூடாக சிறுநீரகம் செயலிழந்து போவதும் என பல செயல்கள் ஒரே நேரத்தில் நிகழும். முறையாக அதற்கான படிப்புகளை படித்தவர்களுக்கே இதைப் புரிந்து சுதாரிப்பதற்குள் மரணம் வாசல் படியில் வந்து நிற்கும். 2010-ல் இறந்த பொறியாளர்கள் நால்வரும் வேதி பொறியியலில் தங்கப் பதக்கம் பெற்றவர்கள். அவர்களுக்கே அந்தக் கதியென்றால் எதுவுமே தெரியாத ஜானகிராமன் தான் செத்துப்போவது தெரியாமலேயே மரணத்தை தழுவியிருக்கிறார்.

அப்பாவின் மரணத்திற்கு பிறகு குடும்பத்தை தூக்கி நிறுத்த தனக்கு நிரந்தர வேலை கிடைக்காதா என்று ஏங்குகிறார், தன்ராஜ். அதனாலேயே தந்தையின் மரணத்துக்குக் காரணமானவர்களிடம் எதிர்த்து கேள்வி கேட்பதை கூட அவர் செய்யவில்லை. ஆனால் அவரது நம்பிக்கை நிறைவேறும் நிலைமை அங்கு இல்லை. மறைக்கப்பட்ட முந்தைய விபத்துக்களைப் போல இதற்கும் நிர்வாகம் பணம் தர முன்வரக் கூடும். ஏனெனில் இந்த விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை எண்ணை ஜானகிராமனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் காவல்துறையினர் எழுதவேயில்லை. உண்மையில் பிணத்தை எரித்து விட்ட காவல்துறையினர் புதைத்து விட்டதாக அதில் பதிவு செய்திருக்கின்றனர். இப்போது கூட யாராவது ஜானகிராமனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று உயர்நீதி மன்றத்தில் மனுப் போட்டால் தோண்டி எடுக்க பிணமில்லை.

இரண்டாவது, போஸ்ட் மார்ட்டம் செய்தது சுதந்திர தினத்தன்று. அப்படி பொதுவாக அரசு மருத்துவமனையில் அரசு விடுமுறையன்று பிரேத பரிசோதனை செய்ய மாட்டார்கள். மாவட்ட அளவிலான மாஜிஸ்டிரேட் தகுதியுள்ள அரசு அதிகாரியிடம் அதற்கு உத்திரவு பெற்றுத் தந்தால் தான் செய்வார்கள். அதுவும் இங்கே நடக்கவில்லை. இவையெல்லாம் ஜானகிராமன் மரணத்தை மறைப்பதற்காக அல்லது அதற்கு நிறுவனம் பொறுப்பல்ல என்று காட்டுவதற்காக திட்டமிட்டு செய்திருக்கிறார்கள்.

ஜானகிராமனது மரணத்துக்கு நீதி கேட்க யாரும் இப்போது தயாராக இல்லை. ‘ஹூண்டாயை தமிழகத்திற்கு கொண்டு வந்தது நான்’ என்று பெருமிதம் பாராட்டுகிறார் ஜெயா. ‘கையெழுத்து மட்டும் தான் நீ போட்டாய். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து அமல்படுத்தி, தமிழகத்தை முன்னேற்ற பாடுபட்டவன் நான்’ என்கிறார் கருணாநிதி.

இந்த விபத்து பற்றி ஜானகிராமனை வேலைக்கு அனுப்பிய வெண்டார் நிறுவன அதிபர் வர்தன் குமார் என்பவரை செல்பேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு ‘இன்னமும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை. கிடைத்த பிறகு பேசுகிறேன்’ என்று பொய் பேசுகிறார். ‘இல்லைங்க, என்ன நடந்தது என்றாவது சொல்லுங்கள்’ என்றதற்கு ‘அதெல்லாம் சொல்ல முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

ஒரு காலத்தில் ஹூண்டாய் நிறுவனம் ஆரம்பித்த போது ஒரு தேநீர்க்கடை வைத்திருந்தவர், இன்று அந்நிறுவனத்துக்கு வேலையாட்களை சப்ளை செய்யும் முக்கியமான வெண்டார்களில் ஒருவர். ஏறக்குறைய நான்காயிரம் தொழிலாளிகளை இவர் கம்பெனிக்கு அனுப்பி வருகிறார். முதலில் நான்கு விதமான துணைத் தொழில்களை இணைத்து இவரும், சில நண்பர்களும் ஹூண்டாயின் உயரதிகாரிகளின் ஆசியுடன் இன்போடெக் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதிலிருந்து பிரிந்தவர் உலோக, ரசாயன கழிவுகளை ஒப்பந்த அடிப்படையில் ஹூண்டாயிடம் இருந்து வாங்குவது, அதற்கு அடிமாட்டு விலையில் தொழிலாளர்களை பதிலுக்கு ஹூண்டாய்க்கு தருவது, வங்கிகளுக்கு கடனை வசூலித்து கொடுப்பது என தனது தொழில் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி விட்டார். இவரைப் போல பல பத்து ஜாம்பவான்கள் சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தொழிலாளிகளுக்கும், முதலாளிகளுக்கும் நடுவில் ஒட்டுண்ணியாக ஆண்டு வருகின்றனர்.

ஹூண்டாய் கார்
ஹூண்டாய் இறக்கும் ஒவ்வொரு அழகான காருக்கும் பின்னே இப்படித்தான் நரபலிகள் செய்யப்படுகின்றன.

இந்த ஒட்டுண்ணிகள் தொழிலாளிகளின் உழைப்பை சுரண்டுவதோடு, அவர்களது மருத்துவ காப்பீட்டு உரிமை, சங்கம் கட்டும் உரிமை, பணிப் பாதுகாப்பு போன்ற உரிமைகளைத் பறிப்பதை எந்த குற்றவுணர்ச்சியுமில்லாமல் செய்கின்றனர். இனி இந்த வர்தன் குமாருக்கு சில ஆண்டுகளில் உழைப்பால் உயர்ந்த உத்தமர் விருது பாரிவேந்தராலோ அல்லது புரட்சித் தலைவியின் பொற்கரங்களாலோ, விஜய் டிவியாலோ வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஆக ஜானகிராமன் மரணம் இங்கே சட்டபூர்வமாக கூட பதியப்படவில்லை. சமூகங்களில் நடக்கும் கொலைகளில் கூட குற்றவாளிகள் தப்பித்தாலும் சட்டப்படி அதை நியாயப்படுத்த மாட்டார்கள். ஆனால் தொழிலாளிகளைக் கொல்லும் நிறுவனங்களில் அதை சட்டப்படியே செய்து தப்பிக்கிறார்கள்.

இலாபவெறியால் போதுமான நிரந்தர தொழிலாளிகளை எடுக்காமல், ஒப்பந்த தொழிலாளிகளை வேலைக்கெடுத்து, பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்ததன் காரணமாகவே ஜானகிராமன் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஹூண்டாய் இறக்கும் ஒவ்வொரு அழகான காருக்கும் பின்னே இப்படித்தான் நரபலிகள் செய்யப்படுகின்றன.

–    கௌதமன்.

குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !

1

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நெருப்புக்குத் தம் பிள்ளைகளைச் சாகக் கொடுத்த பெற்றோரின் மனம் இன்னொருமுறை வெந்து துடிக்கும்படி வந்திருக்கிறது நீதிமன்றத் தீர்ப்பு. மாவட்டக் கல்வி அதிகாரி முதல் தொடக்கக் கல்வி அதிகாரி வரையிலான அதிகாரிகள், பள்ளி ஆசிரியைகள், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 11 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளி நிறுவனருக்கு மட்டும் ஆயுள் தண்டனை, நிறுவனரின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை, சத்துணவு அமைப்பாளர், சத்துணவு உதவியாளர், கல்வித்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள், கட்டிடப் பொறியாளருக்கு 2 ஆண்டுகள் என்று தண்டனை விதித்திருக்கிறது நீதிமன்றம்.

தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பெற்றோர்
தீர்ப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் பெற்றோர் (படம் : நன்றி http://www.justknow.in/Tiruvarur/News/kudanthaipallivazhakkilthiirppu/ )

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகளை ஒரே கட்டிடத்தில் நடத்த அனுமதி கொடுத்ததும், தப்பிக்க வழியில்லாத ஆபத்தான அந்தக் கூரைக் கட்டிடத்திற்குள் பன்றிகளைப் போல பிள்ளைகளை அடைத்து வைத்திருந்ததும் இலஞ்சப் பேகளான அதிகாரிகளின் உதவியோடுதான் நடந்திருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். அவ்வாறிருக்க கீழ்நிலை ஊழியர்களைத் தண்டித்திருக்கும் நீதிமன்றம், அதிகாரிகளை விடுவித்திருக்கிறது. எனவே, இத்தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யவேண்டுமென்று கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கோரியிருக்கின்றனர்.

இந்தக் கோரிக்கை, பெற்றோரின் கோபத்திலிருந்தும் ஆதங்கத்திலிருந்தும் பிறக்கிறது. எனினும், மூலமுதல் குற்றவாளியும், குற்றவாளிகளின் காவலனும் அரசுதான் எனும்போது, நீதி வேண்டி அரசிடம் மன்றாடுவதில் என்ன பயன் இருக்கிறது? 2004-ல் நடந்த இந்தப் படுகொலை 2007-ல்தான் நீதிமன்றத்திற்கே வந்திருக்கிறது. பிறகு குற்றம் சாட்டப்பட்ட 24 பேரும் தங்களை இக்குற்றத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று மனுச்செய்திருக்கின்றனர். “முடியாது” என்று கூறுவதற்கு நீதிமன்றம் 3 ஆண்டுகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. பிறகு 2012-ல்தான் குற்றச்சாட்டு பதியப்பட்டிருக்கிறது. 2014 வரை சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். தி.மு.க. அரசு 3 அதிகாரிகளை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. கூடுதல் இழப்பீடு கோரிய பெற்றோரின் மனுவை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று, “கூடுதல் இழப்பீடு தரமுடியாது” என்று நெஞ்சில் ஈரமின்றி வாதாடுகிறது ஜெ அரசு.

ஆகவே, தற்போதைய தீர்ப்பு மட்டுமின்றி, கடந்த பத்து ஆண்டுகளில் அதிகாரிகள், போலீசு, ஆளும் கட்சிகள், நீதிபதிகள் ஆகிய அனைவருமே குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வேலையைத்தான் செய்திருக்கின்றனர். தப்பிக்க வழி தெரியாமல், தீயில் வெந்து கருகிய அந்த 94 குழந்தைகளின் துடிப்பையோ, பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் உள்ளக் குமுறலையோ அவர்கள் கடுகளவும் பொருட்படுத்தவில்லை. “சட்டம் சரியாக இருக்கிறது, அமல் படுத்துபவர்கள்தான் சரியில்லை” என்ற கருத்து ஒவ்வொரு அநீதி நிகழும்போதும் நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால், கும்பகோணம் வழக்கு விசாரணையின் காலதாமதத்தில் தொடங்கி, குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது வரையிலான அனைத்தும் சட்டப்படிதான் நடந்திருக்கின்றன. எந்தத் தனியார் கல்விக் கொள்ளையின் ரத்த சாட்சியமாக 94 குழந்தைகள் வெந்து மடிந்தார்களோ, அதே தனியார் கல்விக் கொள்ளை அரசு ஆதரவுடன், நீதித்துறை அங்கீகாரத்துடன் இன்று கொடி கட்டிப் பறக்கிறது.

“ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்” என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல; வாழ்வின் எல்லாத் திசைகளிலும் இந்த அரசியல் சமூக அமைப்பினால் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் உள்ளக் குமுறல்! இம்மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வல்லது மேல்முறையீடல்ல, இவ்வரசமைப்புக்கு எதிரானதோர் மக்கள் எழுச்சி!
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

காசாவின் கண்ணீர் – ஆவணப்படம் – வீடியோ !

16

பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீது மீண்டும் மீண்டும் பயங்கரவாத தாக்குதலைத் தொடுத்து இன அழிப்பு போரை நடத்திவருகிறது இசுரேல் யூத இனவெறி அரசு. கடந்த ஜூலை 8-ம் தேதி தொடங்கிய தாக்குதலில் இதுவரை 2,100-க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். கொல்லப்பட்டவர்களில், நானூற்றுக்கும் கூடுதலான குழந்தைகள் உள்ளிட்டு, 80 சதவீதத்திற்கும் (1,700க்கும்) மேற்பட்டோர் அப்பாவி பொதுமக்களாவர்.

காசாவின் உண்மை நிலை பற்றி அறியத்தருகிறது காசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்.

காசாவின் அழுகுரல்
காசாவின் அழுகுரல்

2008-09-ல் 22 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட தாக்குதலில் 1,387 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் 257 குழந்தைகளை உள்ளிட்டு 773 பேர் அப்பாவி பொதுமக்கள்.

2008-ம் ஆண்டு காசாவின் மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல் குறித்து அறிந்த வைபக் லாக்பெர்க் (Vibeke Løkkeberg) என்ற நார்வே நாட்டை சேர்ந்த பெண் இயக்குனர் நடப்பவற்றை உலகுக்கு அறியத்தர காசா பகுதிக்கு செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அச்சமயத்தில் சர்வதேச ஊடகவியலாளர்கள் காசா பகுதிக்குள் செல்ல இஸ்ரேல் தடை விதித்திருந்தது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு ஒளிப்பதிவாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர் எடுத்த காட்சிகளை பெற்றுத் தொகுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் லாக்பெர்க்.

இப்படம் தன் மீதான திட்டமிட்ட அவதூறு என்றும் பாலஸ்தீன சார்பு பிரச்சாரப் படம் என்றும் இஸ்ரேல் முத்திரை குத்தியுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களின் பார்வையில் இருந்து துவங்கும் இப்படம் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நேரடி காட்சிகளாக பதிவு செய்துள்ளது. இதன் உண்மையும், நம்பகத்தன்மையும் அதற்கு பல சர்வதேச விருதுகளை ஈட்டித் தந்துள்ளது. ஒருவேளை இசுரேலை அடக்க விரும்பாத ‘சர்வதேச நாடுகள்’ இப்படி விருது கொடுத்து காட்டிக் கொள்கின்றதோ? எனினும் அதே வல்லரசு உலகை கேள்வி எழுப்ப இப்படம் கண்ணீருடன் உங்களை தொட்டு எழுப்பும்.

காசாவின் அழுகுரல்ஆவணப்படத்தில் பேசும் சிறுவர்கள், இசுரேலின் ஆக்கிரமிப்புப் போரினால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும சூழலில் வளர்ந்தவர்கள்.

14 வயதான அமிரா படித்து பெரியவளாகி வழக்குரைஞர் ஆக விரும்புவதாகவும், அதன் மூலம் இஸ்ரேலிய கொடுங்கோலர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவதாகவும் கூறுகிறாள்.

12 வயதான யாஹ்யா டாக்டராக வேண்டுமென கனவு காண்கிறான், அதன் மூலம் இஸ்ரேலிய தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யமுடியும் என்கிறான்.

11 வயதான ரஸ்மியா இங்கு வாழ்க்கை மிகக் கடினமாகத்தானிருக்கிறது என்று வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் பேசுகிறாள். இந்தக் குழந்தைகள் அனைவரும் போராட்டச் சூழலில் இழப்புகளும், துயரங்களும் சூழ வாழ்பவர்கள். அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்!

விசில் அடிப்பது போன்ற சத்தத்தை அடுத்து ஒரு ஏவுகணை ஒரு அடுக்குமாடி குடியிருப்பை  தாக்குகிறது. பாஸ்பரஸ் குண்டினால் ஒரு நிமிடத்தில் அக்கட்டிடம் எரிந்து சாம்பலாகிறது.

சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ள பாஸ்பரஸ் கொத்து குண்டுகள் இலக்கிற்கு அருகில் வந்தபின் வெடித்து சிதறுவதால் அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிகிறது.

மற்றொரு தாக்குதலில் காதை செவிடாக்கும் ஒலியுடன் ஒரு குடியிருப்பு நொறுங்கிச் சிதைகிறது. ஒளிப்பதிவாளர் அக்குடியிருப்பை நோக்கி ஓடுகிறார். அங்கே பலர் உடைந்த கட்டிட சிதறல்களுக்கிடையே இறந்தவர்களின் உடல்களை மீட்கின்றனர். கான்கிரீட் சிதிலங்களை அகற்ற அகற்ற பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மீட்க்கப்படுகின்றன. கூட்டம் பெருங்குரலெடுத்து அலறுகிறது, ‘அல்லாஹூ அக்பர்’. ஆயினும் இறைவன் அரபு நாடுகளின் ஷேக்குகளின் பிடியில் இருக்கிறானோ என்னமோ! ஏனென்றால் இதே அரபுலகின் ஆளும் வர்க்கம் அமெரிக்காவின் தயவில் தனது சொகுசு வாழ்வை கழிக்கிறது.

ஐ.நா அமைத்துள்ள மருத்துவமனைக்கு காயமுற்றவர்களை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அம்மருத்துவமனை அடுத்த தாக்குதல் இலக்காகிறது. மிக அருகிலிருந்து இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தைகளின் உடல்களை பதிவு செய்திருக்கிறது இந்த ஆவணப்படம்.

காசாவின் அழுகுரல்சிறுமி ரஸ்யாவின் வீடு ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதையடுத்து அவர்கள் பாதுகாப்பிற்காக ஐ.நா வின் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர். அப்பள்ளியும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. அன்று இரவு வெளியில் சென்ற தனது உறவினர் மற்றும் அவரது குழந்தைகள் கொல்லப்பட்டு அவர்களது உடல் தெருவில் சிதறிக்கிடந்ததை பார்த்திருக்கிறாள். கடைசியாக ஐ.நா அகதி முகாமில் இருக்கும் அவள் கூறுவது இதை தான் – “இங்கு வாழ்க்கை மோசமாக இருக்கிறது, மிக மோசமாக…”

இது மட்டுமின்றி திட்டமிட்டும் குறிபார்த்தும் அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொல்வதை சிறுமி அமிராவின் கதையைக் கொண்டு அம்பலப்படுத்துகிறது இப்படம். தாக்குதலில் காயமுற்ற அமிராவின் வீட்டில், குண்டு வெடிக்கிறது, அவரும் அவரது சகோதரர்களும் வெளியில் சென்று பார்த்த போது அவரது தந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உதவி கேட்பதற்காக வெளியில் சென்ற சகோதரர்கள் இன்று வரை திரும்பவில்லை. மற்றொரு குண்டு வெடித்ததில் அமிராவின் காலில் அடிபட்டு நினைவிழந்து விடுகிறார். நினைவு திரும்பி நகர முயற்சித்த வேளையில் மற்றொரு ராக்கெட் வீட்டில் அவர் இருந்த பகுதியை தாக்கியுள்ளது. அதாவது தனது தாக்குதல் இலக்கில் யாராவது உயிருடன் நகர்வது தெரிந்தால் உடனடியாக குறிபார்த்து தாக்குகிறது இஸ்ரேல் ராணுவம்.

தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் கொத்து குண்டுகளை வீசும், குடியிருப்புகளின் மீதும் ஐ.நாவின் மருத்துவ முகாம்கள், பள்ளிகளையும் கூட விட்டுவைக்காமல் தாக்கும், அப்பாவி பொதுமக்களை குறிபார்த்து சுட்டுக்கொல்லும் இஸ்ரேலை உலகெங்கிலும் உள்ள பாசிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். நமது நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இனவெறி பாசிஸ்டுகள் தாங்கள் இஸ்ரேலின் பக்கம் இருப்பதாக அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும் அறிவித்தனர். மோடி அரசும் கூட தாங்கள் யார் பக்கம் என்பதை அறிவித்துக் கொண்டது. பாசிஸ்டுகள் ஒரே மாதிரியாக சிந்திப்பதில் வியப்பில்லை.

ஆனால், ஜனநாயகவாதிகளும், மனிதத் தன்மை கொண்டோரும் இஸ்ரேலை மட்டுமல்ல, நமது நாட்டில் இஸ்ரேலின் பக்கம் நிற்கும் ஆர்.எஸ்.எஸ் வகை பாசிஸ்டுகளையும் எதிர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே காசாவின் மக்களுக்கு நமது தார்மீக ஆதரவை அளிக்க முடியும், அளிக்க வேண்டும்.

மாணவர் உயிரை காவு வாங்கும் தனியார் பள்ளிகள் – தொகுப்பு

0
லாரல் பள்ளி
லாரல் பள்ளி

னியார் கல்வி நிறுவனங்கள் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் கொள்ளைக் கூடாரங்களாக மட்டுமல்ல; மாணவர்களின் உயிரையும் காவு வாங்கும் கொலைக்கூடங்களாகவும் மாறிவருகின்றன என்பதைத்தான் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மர்ம மரணங்களும் தற்கொலைச் சாவுகளும் உணர்த்துகின்றன.

நமது கவனத்திற்கு வந்த சில சம்பவங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம். பெட்டிச் செய்தி அளவிற்குக்கூட, இடம்பெறாமல் மூடி மறைக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கக்கூடும்.

மாணவர்களை அவமானப்படுத்துவது அவர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்டதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள்:

பூஜா, மணலி
பூஜா, மணலி

எம்.அருண்ராஜ், 12ஆம் வகுப்பு
லாரல் மேநிலைப்பள்ளி,
குரும்பகாடு, புதுக்கோட்டை

கல்வி கட்டணம்20,000 கட்ட தாமதமானதால் அவமானப்படுத்தப்பட்டதன் விளைவாக விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
(தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 04.02.2014)

பூஜா, எட்டாம் வகுப்பு.
SRFவித்யாலயா பள்ளி,
சி.பி.எல். நகர், மணலி, சென்னை.

கல்வி கட்டணம் கட்டாததால் வகுப்பு வெளியே நிறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதால் தூக்கில் தொங்கினார். (தினகரன், 23.03.2014)

தமிழரசன், கூடுவாஞ்சேரி
தமிழரசன், கூடுவாஞ்சேரி

தமிழரசன், எட்டாம் வகுப்பு.
தனியார் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி.

மதிப்பெண் குறைந்ததால் வேறுபள்ளியில் சேர்க்க சொல்லி கட்டாயப்படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, 02.05.2014)

திவ்யா, பொறியியல் மாணவி.
வேல்டெக் பொறியியல் கல்லூரி, ஆவடி, சென்னை.

விடுதியில் கைப்பேசி பயன்படுத்தியதாகக் குற்றஞ்சுமத்தி விடுதிக்காப்பாளர் மாணவிகள் மத்தியில் தரக்குறைவாக பேசியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹேமலதா, பொறியியல் – 4ஆம் ஆண்டு மாணவி
சத்யபாமா பல்கலைக் கழகம், சென்னை.

திவ்யா, வேல்டெக்
திவ்யா, வேல்டெக்

விடைத்தாளில் தேர்ச்சிக்கான மதிப்பெண் வழங்குமாறு எழுதியதற்காக சக மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தப்பட்டார். பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு மன்னிப்புக் கோரினர். பின்னரும், ஒருநாள் முழுவதும் முதல்வர் வளாகத்தில் நிற்கவைத்து அவமானப்படுத்தியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அருண்குமார், 12ஆம் வகுப்பு.
எஸ்.ஆர்.வி. மேநிலைப்பள்ளி,
ராசிபுரம், நாமக்கல்.

தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றார் என்பதற்காக அவமானப்படுத்தப்பட்டார். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெங்கடேசன், 12ஆம் வகுப்பு.
குறிஞ்சி மேநிலைப்பள்ளி, நாமக்கல்.

ஆசிரியைக்கு ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தற்காக ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டதோடு, பள்ளியைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(ஜன-4, 2014)

ஹேமலதா, சத்யபாமா
ஹேமலதா, சத்யபாமா

வினோதினி, பி.டெக்.முதலாமாண்டு.
தனியார் பொறியியல் கல்லூரி, மதகப்பட்டி, புதுச்சேரி.

பேராசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.

பிரபாகரன், பாலிடெக்னிக் மாணவர்.
ஏழுமலை பாலிடெக்னிக், விழுப்புரம்.

பாடம் நடத்தும் பொழுது ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பதற்காக ஆசிரியரால் அடித்தே கொல்லப்பட்டார்.

சுஜீத், பத்தாம் வகுப்பு.
வீராநல்லூர், திருநெல்வேலி.

பள்ளியில் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(தி இந்து, 28.08.2012)

வினோதினி, புதுச்சேரி
வினோதினி, புதுச்சேரி

தட்சிணாமூர்த்தி, 12ஆம் வகுப்பு.
விருதகிரி எஜூகேசனல் டிரஸ்ட் மேநிலைப்பள்ளி,விருத்தாசலம்.

பாடச்சுமை கொடுமையின் காரணமாக பள்ளி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
(தினத்தந்தி, 28.06.2012)

எம்.ராகுல், 10ஆம் வகுப்பு.
இ.எல்.எம். பள்ளி, புரசைவாக்கம், சென்னை.

பள்ளியில் சட்டையை கழட்டி ஆசிரியர் அடித்து அவமானப்படுத்தியதால் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
(தினமலர், 3.09.2011)

வைஷ்ணவி, எட்டாம் வகுப்பு.
சிறீ சங்கரவித்யாலயா கேந்த்ரா மெட்ரிக் பள்ளி,
திருவொற்றியூர், சென்னை.

காலையில் பள்ளிக்குச் சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை; இரவு 7.30 மணியளவில் பள்ளியின் ஒவ்வொரு அறையாக பெற்றோர்கள் தேடிக்கொண்டிருக்கும் பொழுதே, மர்மமான முறையில் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்து தம் பெற்றோர்கள் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்துபோனார்.

கொலையென்று சந்தேகிக்கத் தக்க வகையில் நிகழ்ந்துள்ள மர்ம மரணங்கள்:

வைஷ்ணவி, திருவொற்றியூர்
வைஷ்ணவி, திருவொற்றியூர்

போஸ், ஆல்வின் ஜோஸ், பரதன், மற்றும் ராம்குமார்.
செயின்ட் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி, கடலூர்.

கடந்த ஓராண்டு காலத்தில் அடுத்தடுத்து, கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

வினோத்,
குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.

தண்ணீர்த் தொட்டிக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கு முன்னர் இதே பள்ளியில் 4 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

மோகன்குமார், 11-ஆம் வகுப்பு
நாமக்கல் குறிஞ்சி மேநிலைப்பள்ளி

விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
(செப்.14,-2013)

ராகுல் சென்னை
ராகுல் சென்னை

பரணிதரன், 12ஆம் வகுப்பு.
எம்.ஏ.எம்., மேல்நிலைபள்ளி, மேட்டூர்.

பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக நிகழ்ந்த மரணங்கள்:

சந்தியா
வித்யாலயா மெட்ரிக் பள்ளி,
தொட்டகாஜனூர், தளவாடி.

பள்ளி மைதானத்தில் நிர்வாகிகள் ஜீப் ஓட்டி பழகியபோது ஜீப் மோதி பலியானாள்.
(தினகரன், 8.01.2013)

தீபக், 9-ஆம் வகுப்பு.
சென்னை

பள்ளி பேருந்து கவிழ்ந்து மரணமடைந்தான்.
(தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், 27.06.13)

தமிழரசன், கூடுவாஞ்சேரி
தமிழரசன் தற்கொலை, கூடுவாஞ்சேரி

இரண்டாம் வகுப்பு மாணவன்.
புனித மிக்கேல் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, டி.அத்திப்பாக்கம், திருக்கோவிலூர்.

பள்ளி வளாக தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து பலியானான்.
(தினமலர், 25.06.2013)

ரஞ்சன், நான்காம் வகுப்பு.
சென்னை கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பாலபவன் பள்ளி

நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்துபோனான்.
(தினகரன், 18.08.2012)

சுருதி, இரண்டாம் வகுப்பு.
சென்னை சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

பள்ளிப் பேருந்தின் ஓட்டையிலிருந்து விழுந்து இறந்து போனாள்.
(தினத்தந்தி, 26.07.2012)

பிரபாகரன் கொலையைத் தொடர்ந்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
பிரபாகரன் தற்கொலையை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

கார்த்திக்கேயன், எல்.கே.ஜி.
தனியார் பள்ளி,
பெருமூளை ரோடு, திட்டக்குடி.

தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து போனான். (தினகரன், 22.06.2011)

கிஷோர், 2ஆம் வகுப்பு.
புனித அந்தோணியார் மெட்ரிக் பள்ளி,
கங்கணாங்குப்பன், கடலூர்.

பள்ளி சுவர் இடிந்து விழுந்து மரணம்.
(தினமணி, 08.10.2011)

வ்வித உரிமைகளுமற்ற கொத்தடிமைகளைப் போல மாணவர்களை நடத்துவது; மாணவர்கள் இழைக்கும் சிறு தவறுகளைக் கூட பெரிய கிரிமினல் குற்றம் போல சித்தரித்து அவமானப்படுத்துவது; மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துது, நூறு சதவிகித தேர்ச்சியைக் காட்ட வேண்டும் என்பதற்காக மாணவர்களை கசக்கிப்பிழிவது கடும் மன உளைச்சலுக்குள்ளாக்குவது போன்ற தனியார் கல்வி முதலாளிகளின் வக்கிரமான நடவடிக்கைகள்தானே மாணவர்களின் உயிரைப்பறித்திருக்கின்றன.

“புள்ள இங்கிலீஸ் படிக்கட்டுமே” என்றுதான் தனியார் பள்ளிகள் மீதான மயக்கத்தில் தம் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர் குடந்தை குழந்தைகளின் பெற்றோர்கள். “இலட்சமாக இலட்சமாக கொட்டியது; உன் பிணத்தைப் பார்ப்பதற்குத்தானா?” என்று அழுது புலம்புகிறார், சத்யபாமா பல்கலைக் கழக மாணவி ஹேமலதாவின் தாய்.

தற்கொலை செய்து கொண்ட நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவ்வளவுக்குப் பின்னரும், தனியார் பள்ளியின் மீதான மோகம் குறையவில்லையென்றால், இன்னும் எத்தனை பிணங்களைப் பார்த்த பின்னர் கலையும்? சொந்தப் பிள்ளைகளை இழந்தால்தான் புத்திவருமென்றால், சொல்வதற்கொன்றுமில்லை!

தொகுப்பு.

திரு வெ வெங்கடேசன், மாவட்ட தலைவர்,
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
விருத்தாசலம்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்.
9345067646

தி இந்து-வை லந்து செய்யும் ஃபேஸ்புக் கருவாட்டுக் கவிதைகள்!

26

ஃபேஸ்புக் கருவாட்டுக் கவிதைகள்

தமிழச்சி பேஸ்புக்கில்

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் விதிகளை மீறி கருவாடு விற்பனை நடப்பதாகவும் சைவம் சாப்பிடுகிறவர்கள் மார்க்கெட்டுக்கு வரும்போது கருவாடு நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் பார்ப்பன பத்திரிகை ‘தி இந்து’ செய்தி வெளியிட்டதை முன்னிட்டு போலிஸ் கோயம்பேடு காய்கறி சந்தையில் திடீரென ரெய்டு நடத்தி 18 கடைகளில் கருவாடு விற்றதை கண்டுபிடித்து பறிமுதல் செய்திருக்கிறது.

சைவமும் அசைவமும் மேற்கத்திய நாடுகளில் தனிமனிதனின் விருப்பு / வெறுப்பு சார்ந்தவை. ஆனால் இந்திய சமூகத்தில் அரசியல் குறியீடுகள். சைவம் சாப்பிடும் சிறுபான்மையினர் அசைவம் சாப்பிடும் பெரும்பான்மையினரை அருவெறுப்பாக பார்த்து தங்கள் ஆச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீய மைய அதிகாரத்தை ஓர் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

செம்மீன்‘மொழி’ திரைப்படத்தில் ஓர் காட்சிவரும். தெரு பாடகன் ஆர்மோனிய பெட்டியை தட்டி அவர் பிழைப்புக்கு ஏதோ பாடிக் கொண்டிருப்பார். ஹீரோ, ‘டாய் ஒழுங்கா சுதி போடுடா’ என்று அடித்து அடித்து இசை ஞானத்தை வெளிப்படுத்துவார்.

உழைக்கும் எளிய மக்களிடம் அதிகாரம் இப்படித்தான் அதட்டிப் பேசும். ‘தி இந்து’வின் கருவாட்டு சமாச்சாரமும் இப்படித்தான்.

– தமிழச்சி

21/08/2014

கருத்துக்கள்

Krishna Kumar Appu

அடங்கப்பா!! டேய் பக்கிகளா!! கோயம்பேடு மார்கெட்ல அழுகிப்போன காய்கறில வராத நாத்தமாய்யா கருவாட்டால வந்துட போகுது.. மார்கெட்டுகுள்ள நுழைந்ததும் எந்த நாத்தம் முதல்ல அடிக்கும்.. காய்கறி நாத்தமா? கருவாட்டு நாத்தமா? அங்க கருவாட்டுக் கடை எல்லாம் இருக்கும்னு இந்த இஸ்யூ வந்த அப்புறம் தான்யா எனகெல்லாம் தெரியும். நிறைய பேரோட அறச்சீற்றம் இதுல எங்க ஜாதி வந்துச்சுன்னு தான்? இங்க லைக் போட்டுருக்க எத்தன பேர் நான் வெஜ் சாப்டுவிங்க? எத்தன பேர் சாப்ட மாட்டிங்க? பெரும்பாலானவங்க சாப்டுறவங்க தான். அங்க காய்கறி வாங்க போற பெரும்பான்மையானவங்க நான் வெஜிடேரியன்தான். ஆனா நடவடிக்கை எடுத்தது பிராமணர்கள் சொன்னதால. வெறும் சொற்ப அளவில் இருக்க அவங்க சொல்லி நம்மாளுங்க கடைய காலி பண்றாங்கன்னா, இங்க அதிகாரம் யாருகிட்ட இருக்கு? யார் சொன்னா உடனே நடக்குது? கொஞ்சம் யோசிங்க மக்களே!! நாம எங்க எந்த கடைய வைக்கனும்னு அவன் அதிகாரம் பண்றான் நாமளும் சாரி நீங்களும் அதுக்கு ஒத்து ஊதுங்க.. நமக்கு அடிமைகளா இருந்து தானே பழக்கம்.

Neyveli Shajahan

முதலில், இந்தியாவில் ஒருவரும் சைவம் கிடையாது, நீங்கள் சைவம் என்றால் பால் கூட குடிக்கக்கூடாது, பால் என்பது பசுவின், ஆட்டின், ஒட்டகத்தின் ரத்தத்தில் ஒரு பாதி. பால் என்பது ரத்தம், நீங்கள் ரத்தத்தை குடித்து கொண்டு சைவம் பேசக்கூடாது, நீங்கள் சைவம் என்றால் எந்த சைவக் குழந்தையும் தாய்ப்பாலைக் கூட குடிக்கக்கூடாது

இரண்டாவது, தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது, நீங்கள் சைவம் என்றால் எந்த தாவரத்தையும் சாப்பிடக்கூடாது

மூன்றாவது, வானத்தையும் பூமியையும் படைத்த இறைவன் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளையும், பறவைகளையும், மீன்களையும், தாவரங்களையும் மனிதன் சாப்பிடுவதற்கு அனுமதி அளித்து உள்ளான். இறைவன் சைவம் அசைவம் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் மனிதனின் பற்களை கோர பற்களையும் கடைவாய்ப் பற்களையும் படைத்து உள்ளான். உலகில் வாழும் மனிதனுக்கு இதில் எந்த உணவு கிடைக்கிறதோ எந்த உணவு உடலுக்கு ஏற்கிறதோ அந்த உணவை அவன் தாராளமாக சாப்பிடலாம், இறைவன் அனுமதி கொடுத்ததை தானாக தடுத்து கொள்ள எவருக்கும் உரிமை இல்லை.

நான்காவது, சைவம் எங்கிருந்து வந்தது என்றால் மனிதர்களாகவே புதிதாக இயற்க்கைக்கு மாற்றமாக தானாக உருவாக்கி கொண்டார்கள், இதனால் தாங்கள் மட்டும் அவதிப்படுவதும் மட்டுமல்லாமல், பிற மக்களுக்கும் தொல்லை கொடுப்பதை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. இவர்கள் செயல் தொடர்ந்தால் இவர்களை சமுதாயத்தை விட்டே துரத்த வேண்டி இருக்கும்

ஐந்தாவது, இறைவனின் எந்த வேதமும் சைவம் மட்டும் சாப்பிட சொல்லவில்லை, அசைவம் சாப்பிடுவதை பாவம் என்று சொல்லவில்லை. இறைவனின் பார்வையில் சைவம் சாப்பிடுபவனும் அசைவம் சாப்பிடுபவனும் சமம் தான். இறைவன், பைபிள் மற்றும் குரானில் பன்றியை மட்டும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி உள்ளான். இந்த பிராமினர்களும் மாட்டை சாப்பிட்டவர்கள் தான் நினைவில் கொள்ளுங்கள்,

Krishna Kumar Appu

ஒரு கிலோ திருக்கைக் கருவாட்டுல 158 மில்லிகிராம் Copper இருக்கு, 1469 மில்லிகிராம் Zync இருக்கு, 2303 மில்லிகிராம் Arsenic இருக்கு, 151 மில்லிகிராம் Selenium இருக்கு, இதுல இருக்குற Peptides ரத்தத்துல சர்க்கரை அளவ கட்டுப்படுத்துது, ரத்த உயர் அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிற மாரடைப்பைத் தடுக்கிற ஏகப்பட்ட அமினோ அமிலங்களின் அற்புத உணவு கருவாடு. அவன் ரெண்டு நாள் உருட்டி தின்ற தயிர் சோத்த விட ஒரு வேளை நாம சாப்டுற கருவாட்டுல சத்து அதிகம் தான்.

Cuddalore Port Mohammed Ghouse

மீன் விற்ற காசு நாறாது என ஓர் பொன்மொழி அறிந்திருக்கிறோம். காய்ந்து சருகாய் கிடக்கும் கருவாட்டினால் மற்றும் அதன் நெடியினால் சுகாதாரக்கேடு எதுவுமே இல்லை. எலி செத்த துர்நாற்றம் அல்ல… இயற்கையாய் வீசும் கருவாட்டு வாசம்! சமையல் வாயுவின் வாசனையுங்கூட பெரும்பான்மையோர்க்கு பிடிப்பதில்லை! பொதுவிடங்களில் புகை பிடிக்கக்கூடாதென கூறுவதில் கட்டளை இடுவதில் சுகாதார நுணுக்கம் அடங்கியிருக்கிறது. வயிற்றைக் குமட்டும் சாராயவாடையில்லா வீதிகளாய் தமிழகத்தை மாற்றவேண்டும் என எவருக்கும் தோன்றவில்லை!

Parthiban Sa

கருவாடுகளை வீதியில் விற்காமல் வேறு எங்கு விற்பது? நாற்றம் அடிக்கிறது என்றால் சந்தைக்கு வரக்கூடாது , அப்படி நாற்றம் அடிக்கிறது என்பவர்கள் கழிவறையில் மலம் கழிக்கும் போது நற்றம் எடுக்கிறது என்று அவர்கள் போகவே கூடாது இதுபோன்று சிறு சிறு தொழிலாளிகளை இப்படி தொழில் நடத்தவிடாமல் தடுத்து மோர், போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு கேட்டை திறந்து சலாம் போடும் வேலைதான் இது

தூ…

Play On Movies

புகார் கொடுத்தவன் அப்படி டாஸ்மாக் எடுக்கக் சொல்லட்டும் அத போலிஸ் வந்து எடுக்கட்டும் பாப்போம் …..அவனுக்கு சூ…. கிழிஞ்சிடும் ..இதெல்லாம் சும்மா வெளி வேஷம்

Mohamed Farook Sikkandar

உணவுகளில் எல்லோரும் அவர்களுக்கு விருப்பம் உள்ளதை உண்கிறார்கள் சைவம்தான் சாப்பிடவேண்டும், அசைவம்தான் சாப்பிடவேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அசைவம் உண்போருக்கு சில வகை அதிலே பிடிப்பதில்லை, அதே போல சைவம் உண்பவர்களும்.

ஒரு முறை நபிகள் நாயகத்திற்க்கு விருந்தில் உடும்பு இறைச்சி வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் சாப்பிடவில்லை. அதைக்கண்ட தோழர்கள் சாப்பிடாமல் தவிர்த்தனர். உடனே, நபிகள் நாயகம் எனக்கு அது விருப்பம் இல்லை, நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள் எனக்கூறினார்கள்

Prince Blessy Clement

சைவம் சாப்பிடும் சிறுபான்மையினர் அசைவம் சாப்பிடும் பெரும்பான்மையினரை அருவெறுப்பாக பார்த்து தங்கள் ஆச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனீய மைய அதிகாரத்தை ஓர் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.

Tamil Selvan
நான்வெஜ் பிரியர்களுக்கு அது துர்நாற்றமாகத் தெரியாது, ஆனால் வெஜ் பிரியர்களுக்கு கண்டிப்பாக அது அப்படித்தான் இருக்கும். காய்கறிகளின் வாசனை யாரையும் முகம் சுளிக்கவைக்கப் போவதில்லை. ஆனால் மீன், கருவாடு, பிற மாமிச வகைகள் அப்படி அல்ல. இருந்தாலும் பொது இடங்களில் சில சவுகரியங்களும் அசவுகரியங்களும் இருக்கத்தான் செய்யும். அதை சகித்துக்கொண்டுதான் ஆகவேண்டும், வேறுவழியில்லை. ஒரு சாராருக்காக அதை மாற்ற முற்படுவது முறையில்லைதான்!

Hemanathan Kumar
பழ மார்கெட்டில் கூட துர்நாற்றம் வருகிறது. பிரச்சனை துர்நாற்றமா , கருவாடா ??? துர்நாற்றம் என்றால் காய்கனி கழிவுகளாலும் வரும்.

Bhagavathsingh Gurusamy

ஏன் எங்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முட்டை போண்டா விற்பதை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தடுத்து எச்சரித்தார்.

Dhanush Nippa
இல்லாதவன அடிக்கனும்னும்னா வந்துருவாங்களே வரிஞ்சி கெட்டிக்குட்டு..

Ajai Akilan
இந்த லட்சணத்துல கருவாடுகாரர்களின் நகரத்துக்கு 375 வது ஆண்டு விழாவாம்

Mahavishnu Chandrasekaran
சந்தைக்கு வந்த காய்கள் அந்த கருவாடு சாப்பிட்டவனுடைய வியர்வையில் வந்தை மறந்துட்டாங்களே!

Abdul Hakkim
அனைத்து உணவுப்பொருட்களும் கிடைக்க்கூடிய இடம் தான் சந்தை அங்கு வரும் வாசம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் மூடிக்கொண்டு செல்ல வேண்டியதுதான் மூக்கை. அடுத்த மனிதனின் பொழப்பில் மண்னை அள்ளி போடக்கூடாது.

Parthiban Sa
இவர்கள் சொல்வதை பார்த்தால் கருவாடு நாற்றம் அடிக்கும் பொருள்தான். நாற்றம் அடிக்கு கையில் பயணிக்கும் ரூபாய் நோட்டுகளை தொட மாட்டார்களா,? இவர்களுக்குத் தனியாக ரூபாய் நோட்டுகளை அடிக்க சொல்வார்கள் போல இருக்கே ,

முகவை சதாம்
நாத்தமடிச்ச மூக்க முடிக்கிட்டு போய் காய்கறி வாங்க வேன்டியது தானே…? சென்னை உள்ள கூவத்தை விடவா கருவாடு நாறுது..?

Shan Shanmuga Sundaram
பெரியார் இல்லாத இவனுகளுக்கு அதப்பு ஏறிபோச்சு

Veera Vel
இந்திய நாட்டில் வியாபாரம் செய்வது இந்தியர்களின் அடிப்படை உரிமை. கருவாடு விற்கக்கூடாது என்று ஒரு சட்டமும் இல்லை . மீனவர்களும் மனிதர்கள்தான் . பார்ப்பனர் மட்டும் மனிதன் இல்லை

Lyakath Durai
ரிலையன்ஸ் மோர் போன்ற சூப்பர் மார்க்கெட்டுக்குள்ளே மீன் கோழி இன்னும் பல பிரிட்ஜிக்குள் வைத்து விற்பதை பார்த்து இருக்கிறேன்.

Zakir Upt
மேல் சாதியோ..கீழ் சாதியோ…,மனிதன் இறந்தால் ஒரு நாளைக்கு மேல் வீட்டில் வைத்திருக்க முடியாது….! மனிதனின் வாடையை விட, கருவாட்டின் வாடை பெரிதல்ல..!

Vrforu Kumar
இந்திய நாடு சுதந்திர நாடு.இந்துவும் முசல்மனும், கிரிஸ்துவும் இணைந்து வாழும் நாடு..கருவாட்டை வைத்து பிரிவினை விதைக்காதே நீ ஓடு..

பரிமளராசன் பேஸ்புக்கில்

கோயம்பேடு சந்தை

”கருவாடு நமக்கு சொல்லும் பாடம்”

கோயம்பேட்டுல காய்கறி வாங்கறதுலயே 98 பேர் எங்காளு, 2 பேர்தான் அவாளு ! அப்புறம் என்ன நொன்னைக்குடா அங்க கருவாடு விக்ககூடாதுன்னு 2 பேர், 98 பேருக்கு உத்தரவு போடறீங்க? உத்தரவு போட எப்படி முடியுது?

அடேய் அம்பிகளா, நீங்க கோயம்பேடு மார்கெட்டுல ஏதாவது கடைவெச்சு வியாபாரம் செய்யறீங்களா? ஒரே ஒரு காய்கறி கடைய ஒரு பூணூல் வெச்சிருப்பானா? ஒரே ஒரு கருவாட்டு கடைய ஒரு பூணூல் வெச்சிருப்பானா? கடையும் உங்களுது இல்ல. வாங்கறதுலயும் நீங்க 100க்கு 2 பேர்தான்.

ஆனா ஒட்டு மொத்த கோயம்பேட்டுக்கும் அத்தாரிட்டி போல எப்படி பேச முடியுது?98 பேர் விரும்பும் கருவாட்டு கடையை 2 பேரால் எப்படி தூக்க முடிகிறது?

அதிகார வர்கம்,ஆளும் வர்கம்,ஊடகம்,நீதி பரிபாலனம் அணைத்தும் பூணூலுக்கு ஆதரவாகவும்,98 பேருக்கு எதிராகவும் இருக்கிறது என்கிற உண்மையை கருவாடு நமக்கு உணர்த்துகிறது.

கருத்துக்கள்

Mohamed Sulthan

எலெக்‌ஷன் கமிஷன், அசைவம் கொண்டுவந்தால் அசவுகரியமாக இருக்கும், அதனால் அதற்கு தடை என்று ஆணையிட்டபோதே சரியான முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். எனக்கு பருப்பும், நெய்யும் அழற்சி என்பதால் பருப்புக்கும் நெய்யுக்கும் தடை போடலாமா? அசைவத்தை விரும்பாதவர்கள் வெகு சிலர், அவர்களுக்காக அசைவம் உண்பவர்களை தடுப்பது தனிமனித சுதந்திரத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய ஒன்று. இது சமூகத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

Parameshwaran Sivananainthan

இப்படித்தான் உத்தரவு போட்டு போ்டடு…சாமானிய மக்களை போராடத்தூண்டுகிறார்கள்…புரட்சி்பபாதைக்கு தள்ளுகிறார்கள்…உழைக்கும் மக்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு. கருவாடுக்கு கூப்பாடு போடுபவர்கள் தெருவுக்கு தெரு மது ஆறாக ஓடுகிறதே…அதற்கு உத்தரவு போடுவார்களா?

Vel Tharma

ஒரு இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய ஒரு பாகிஸ்தானியன் சொன்னான், இந்திய மக்களாட்சி என்பது பார்ப்பன மக்களின் ஆட்சி என்று இது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை?

Thatha Peer Mohamed

கருவாட்டில் இவ்வளவு தத்துவங்களா? நாளைக்கு எங்க வீட்ல கருவாட்டு குழம்புதான். இப்பவே நாக்கு ஊருது

பேஸ்புக்கில் வலையுலகம் ஹைதர் அலி

இரமேஸ்வரம் பாம்பன் பாலம் போயிருந்தபோது உழைக்கும் மீனவ மக்கள் கருவாடு காயப் போட்டு இருந்ததை எனது மகன் படம் பிடித்தது. ஆஹா வாசனை அப்படி தூக்கியது பக்கத்தில் நிற்கும்போது

கருவாடு

பாம்பன் பாலத்தை கடக்கிற சைவ பிரியர்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என அங்கும் தடை விதிக்க முயற்சி பண்ணினாலும் பண்ணுவாய்ங்க !

பேஸ்புக்கில் கி. நடராசன்
இதெல்லாம் ரொம்ப ஓவர்… நாற்றம் குடலை பிடுக்கும் பன்னி பீயை எருவாக போட்டுத்தான் கத்தரி, மிளகாய், பூசணி, தக்காளி , துளசி எல்லாம் நல்லா விளையும்… இதெல்லாம் ஒரு பிரச்சனை என்று எழுதிரானுங்க… மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிகாய், வாழைப்பழங்கள் சட்ட விரோதமாய் விற்கப்படுகிறது.. இந்த அதிகாரிகள் என்ன கழட்டினார்கள் …. இது சைவம்..அசைவம் பிரச்சனை அல்ல…சாதி கொழுப்பெடுத்த அவாள் திமிர்…

பேஸ்புக்கில் டான் அசோக் Don Ashok ‏

அசைவ உணவு சாப்பிடுகிறவனுக்கு வீடு கொடுக்க மாட்டீர்கள். அலுவலகத்தில் அசைவ உணவு சாப்பிடுகின்றவனுக்கு உண்ண இடம் கொடுக்க மாட்டீர்கள். பொது இடத்தில் கருவாடு விற்பனைக்கு இடம் கொடுக்க மாட்டீர்கள். 4% மக்களுக்காக 96% மக்களின் உரிமை பறிக்கப்படும் நாடு அநேகமாக உலகிலேயே இதுவாகத்தான் இருக்கும்.

கருத்துக்கள்:

வேல்குமார் வா

கருவாட்டை சந்தைல விக்காம பின்ன லலிதா ஜுவல்லரிலயா விப்பாங்க

UmamaheshVaran Lao Tsu

இதை எல்லாம் சொன்னபோது அந்த 96%சேர்ந்த சில அரைவேக்காட்டு ஆசாமிகள் “பார்ப்பனீயம் இருக்கிறது என்பது பொய்யான ஒரு கூச்சல் “என்றார்கள். அவர்களுக்கு மவுண்ட் ரோடு மகா விஷ்ணு செருப்பால் அடித்து ஆமாம்யா பார்ப்பனீயம் இன்னும் இருக்கு என்று புரியவைத்திருப்பார் என்று நம்புகிறேன் .

கருவாடு karuvadu_en

கோட்டையில் ரஜினி : லிங்கா – பாஜக – ஊடக சதி !

8
ரஜினி மோடி கார்ட்டூன்
லிங்காவும் பாஜகவும் எழுச்சி பெற வேறு வழி?
ரஜினி மோடி கார்ட்டூன்
லிங்காவும் பாஜகவும் எழுச்சி பெற வேறு வழி?

பாரதிய ஜனதாவை வெறும் அகோரி, சங்கர மட, ஆதீனங்களின் கட்சியாக மட்டும் சுருக்குவது தவறு. கஞ்சா, நெய் பொங்கல், புளியோதரையால் வரும் சக்தியையோ இல்லை சதியையோ ஒரு ஊட்டி தேநீரை அருந்தியபடியே நாம் எதிர்கொண்டு விடலாம். ஆனால் அமேசான் காட்டின் ‘மூலிகை திரவ’த்தை ஆம்வேயால் அருந்திக் கொண்டு, மெக்டனோல்டு, பர்கரோடு புல்லட் புரூஃப் இறுமாப்பில் மௌரியா ஷெர்ட்டனில் கதைக்கும் கனவான்களை அப்படி எதிர்கொள்வது சிரமம்.

அமெரிக்கா முதல் அம்பானி வரை, விகடன் துவங்கி குமுதம் வரை, சோ தொட்டு சுப்ரமணியசாமி இட்டு ஒரு பெரும் அறிஞர் கூட்டமே ராப்பகலாய் பாஜகவின் எதிர்கால அதிகார மென்பொருட்களை வன்நபர்களால் வடிவமைத்து வருகிறது. இந்த சிந்தனைக் குழாம் ஒன்று விடாமல் சர்வசாத்திய வஸ்துக்களையும் குலுக்கி போட்டு தாமரையை மலர வைக்க பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.

இவர்களின் எண்ணங்களோ, எதிர்பார்ப்புகளோ பல்வேறு வண்ணபாதைகளை காட்டினாலும் பாதைகள் சேருமிடம் காவிக்கரைதான். பாஜகவின் புதிய தமிழகத் தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜனின் நியமனத்தை பெண்ணுரிமையின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். வானம் பார்த்த சோகத்திலிருக்கும் வானதி சீனிவாசனும் கூட ஒரு பெண்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள். பாஜகவின் ப்ரியத்திற்குரிய வட இந்திய வணிக வர்க்க கூட்டணியை இங்கேயும் நட்டு வைப்போமென பாடுபடும் நாடார் பெருவணிகர்கள் தங்களது வெற்றியாக அகமகிழ்கிறார்கள். தமிழிசை ஒரு நாடார் அல்லவா!

தொலைக்காட்சியில் எட்டுக்கட்டையில், ஒளி விளக்குகளே பயந்து ஃபியூசாகும் அளவுக்கு கத்திப் குதறிப் பேசியதை வைத்தே தலைவர் ஆனவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே அளவுக்கு கத்தியும் கொத்தியும் பேசினாலும் மாநிலத் தலைவர் பதவி பறிபோனதில் எரிச்சலைடையாமல் இருக்க ஹெச்.ராஜா முதல் பச் கூஜா வரை பலருக்கும் தேசிய செயலாளர் ஆரம்பித்து செய்தித் தொடர்பாளர் வரையிலும் பல பதவிகள்.

பாஜக கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெறவேண்டும் என்று கருத்துக் கணிப்பு ஜோசியம் பார்த்த ஜூ.விகடன் திருமாவேலன் இன்று கமலாலயத்தில் அதிமுக கூட்டணிக்கான பேச்சுக்கள் கிசுகிசுக்கப்படுகின்றன என்று புலம்புகிறார். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக பாரத இயக்கம் தனித்து வரவேண்டாமா என்பது அவர் ஆதங்கம். அம்மாவை விடமுடியாது என்றாலும் மோடியையும் விடமுடியாத குமுதம் இருவரது நலனையும் மனதில் கொண்டு வார்த்தைகளை உருவாக்குகிறது.

அமித் ஷா கார்ட்டூன்
வேவுபார்ப்பது, பின்தொடர்வது, என்கவுண்டர் செய்வது, சாதி-மத வெறி டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்வது எல்லாவற்றிலும் அமித்ஷா வல்லவர்.

அமித் ஷா தலைவரானதும் கட்சி பலவீனமாயிருக்கும் மாநிலங்களில் பட்டயைக் கிளப்புவார் என்று இதே ஊடகங்கள் சத்தியம் செய்து சாமியாடின. பார்ப்பதற்கு ஐந்து காசு கந்து வட்டி சேட்டு போல இருந்தாலும் வேவுபார்ப்பது, பின்தொடர்வது, என்கவுண்டர் செய்வது, சாதி-மத வெறி டிஆர்பி ரேட்டிங்கை எகிறச் செய்வது எல்லாவற்றிலும் அமித்ஷா வல்லவர். காய்ந்திருந்த உத்திரப்பிரதேச மாநிலத்தில் அவர் பாய்ச்சிய சகுனி-சாணக்கியத் திட்டங்களே பாஜக-வை பெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தில் அமரச் செய்தது. விளைவு பலர் முனகினாலும் மோடி சொன்னதும் எதிர்ப்பே இல்லை, அமித் ஷாவை தலைவராக்கியதற்கு.

சரி தமிழகத்தில் என்ன திட்டம்?

ஆதிக்க சாதி கட்சிகள், குழுக்களை அணிதிரட்டும் தந்திரம் வழக்கம் போல நடைபெறும். 2014 பாராளுமன்ற தேர்தலில் 5% வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியானதும், 2016 தேர்தலில் ஒரு பாய்ச்சல் பெற வேண்டாமா? அம்மாவுடன் நேசமென்றாலும் பதவி என்று வந்துவிட்டால் சும்மா இருந்து விட முடியாது.  தருமபுரியில் பாமக சாதிவெறியும், குமரியில் இந்துமதவெறியும் சாதித்த வெற்றியை தமிழகம் முழுவதும் செய்வதற்கு ஏதாவது மாஜிக் வேண்டும்.

இதன் முன்னாட்டமாகவே சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது மோடி வெட்கங்கெட்ட முறையில் ரஜினி வீட்டிற்கு சென்றார். கோச்சடையான் எடுக்கப்பட்ட விதத்தை அறிந்தார். தேநீர் சாப்பிட விரும்பியவரை எப்படி மறுக்க முடியும் என்பதாக ரஜினி மானத்தை வாங்கினாலும், கோவை விமானநிலையத்தில் விஜயையும் பார்த்தார் மோடி. அவரும் அவ்வாறே மானம் வாங்கினாலும் இவைகளின் பின்னே இருப்பது தன்மானமால்ல, அம்மா மேலுள்ள பயமே! ஆனால் அம்மாவும், அய்யா மோடியும் காவிக் கொள்கைகளில் நட்பு சக்திகள் என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவா? அம்மா அய்யாவை பாரட்டலாமே அன்றி சூப்பர், இளைய ஸ்டார்கள் பாராட்டினால் நட்சத்திரங்களின் ஒளிர்தலுக்கு மின்சாரம் லேது.

இருந்தாலும் ரஜினி – விஜய் ரசிகர்கள் கண்ணை மூடிக் கொண்டு வாக்குகளை குத்துவார்கள் என்றே கமலாலயமும், ஊடக காரியாலயங்களும் கதை பரப்பின. கதை சிதைந்தாலும் மத்தியிலே தமிழகத்தின் உதவியின்றியே பாஜக ஆட்சியை பிடித்தது. இங்கே தாமரை பூக்கவில்லை என்றாலும் தில்லியில் நச்சு மரமாக காலூன்றியது. பதவியேற்பு விழாவுக்கு ரஜினி அழைக்கப்பட்டு லதா ரஜினிகாந்த் சென்றார். வரும் வராது என்ற நகைச்சுவையின் பொருளை ரஜினி தில்லிக்கு சென்றார் செல்லவில்லை என்று புரிந்து கொள்வது சிரிக்கத் தெரிந்தவர்களின் சாமர்த்தியம்.

ரஜினி மோடி சந்திப்பு
தேநீர் சாப்பிட விரும்பியவரை எப்படி மறுக்க முடியும் என்பதாக ரஜினி மானத்தை வாங்கினாலும், கோவை விமானநிலையத்தில் விஜயையும் பார்த்தார் மோடி.

பிறகு ரஜினி “லிங்கா” படப்படிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மங்களூரில் படப்படிப்பின் போது செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார். பொதுவில் புதுமுக நடிகரின் படங்களுக்கே ஏகப்பட்ட பில்டப்பில் படத்தின் விளம்பரம் பல்வேறு உத்திகளோடு கடை விரிக்கப்படும் போது ரஜினி படத்திற்கு அவர் ஊடகங்களை சந்தித்து ஏதாவது இலை மறையாக பேசினாலே போதும். அப்படித்தான் அவர் சந்தித்தார் என்றாலும் ஊடகங்கள் அதற்கு மறைபொருள் விளக்கத்தை அளிக்கின்றன.

ரஜினியின் காதலிக்கு அப்பாவாக நடிக்கும் ராதாரவி போன்ற ஓய்வு பெற்றவர்களெல்லாம் கூட “லிங்காவில்” நடிக்கிறார்கள் என்பதால் நேர்காணல்களில் இடம் பெறுகிறார்கள். விக்கு போட்ட ராதாரவிக்குத்தான் வேடங்கள் எவ்வளவு கச்சிதமாக பொருந்துகின்றன என்று ரஜினி சாதாவாக கூறியதை மாபெரும் ஸ்பெசல் இலக்கியமாக ஊடகங்கள் பொறித்திருக்கின்றது. “கோச்சடையான்” எனும் பொம்மை படம் ஊற்றிக் கொண்ட நிலையில் “லிங்கா”-வை ‘எழுச்சியுறச்’ செய்வதற்கு இத்தகைய அழுகுணி ஆட்டங்கள் அவசியம்தான். உண்மையில் ஆண்மைக்குறைவுக்கு சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் செய்யும் எழுச்சி விளம்பரங்களை ‘லிங்கா’ குழுவினர் செய்யக் கூடாதா என்ன?

90-களில் ஒரு போக்குவரத்து நெரிசலில் ரஜினியின் கார் சிக்கிக் கொண்டதும், அந்த நெரிசலுக்கு காரணம் ‘அம்மாவின்’ முதல்வர் பவனி கார் வரிசையே என்பதே சூப்பர் ஸ்டாரின் சமூக, அரசியல் ஓப்பனிங்கின் இரகசியம். இதை வைத்து போயஸ் தோட்டத்தால் வாழ்விழந்த ஆர்.எம்.வீரப்பன், பார்ப்பனியத்தின் மயிலாப்பூர் சாணக்கியர் சோ, தஞ்சாவூர் பண்ணையார் மூப்பனார், பார்ப்பனிய ஊடகங்கள் அனைவரும் ரஜினிக்கு காற்றடித்து ஊதிப் பெருக்கினார். என்றாலும் சுறுசுறுப்பான நடிப்பிற்கு பெயர் பெற்ற ரஜினி நிஜத்தில் பயந்து ஒதுங்கினார்.

அவ்வப்போது ‘குத்து’ வசனங்களில் அரசியல் மாதிரி சில அபத்தங்களை பேசினாலும் காலப் போக்கில் எல்லாம் ஆண்டவன் செயல் என்று தப்பித்து வந்தார். எனினும் அதே ஆண்டவன் ‘பாபா’-வில் கைவிட்டது வேறு கதை. ரஜினியை நம்பி காசு செலவழித்த மாவட்ட ரசிகர் தளபதிகள் பிறகு அரசியல் முதலீட்டை எடுக்க முடியாது என்றதும் அடக்கி வாசித்தனர். ஆனால் பார்ப்பனிய சாணக்கிய சகுனிகள் மட்டும் முடங்கி விடவில்லை.

தற்போது கர்நாடகாவில் ‘லிங்கா’ படத்தில் நடித்து வரும் செய்தியாளர்கள் ரஜினியை சந்தித்த போது, அரசியலுக்கு வருவீர்களா, நீங்கள்தான் அடுத்த முதலமைச்சரா என்ற வழக்கமான டிஎம்ஸ் குரலில் அறுந்து போன முருகன் பாடல் வரிகளை கேட்டார்கள். எல்லாம் ஆண்டவன் செயல் என்று அதே முருகன் பாடலை ஒலிக்கும் துருப்பிடித்த ஒலிக்குழாய் போல ரஜினி சொல்வார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் துருவில் கொஞ்சம் பாலிஷ் போட்டு “மக்கள் மனது வைத்தால்” நடக்கும் என்றாராம் ரஜினி. ஆண்டவன் இடத்தில் மக்கள் வந்ததற்கு என்ன காரணம்?

அதுதான் அமித்ஷா அடிக்கடி தொலைபேசியில் ரஜினியுடன் பேசி அவரது மனதைக் கரைத்து வருவதன் வெளிப்பாடாம். 2014 தேர்தலில் மாநிலத்தில் ஒரு தொகுதியில் வென்றாலும் கூட்டணி ஆரோக்கியம் சீர்கெட்டு வருகிறது. மோடியின் பதவியேற்பு வைபவத்திற்கு முன் வரிசையில் அமருவதற்கு கூட “பாஸ்” கிடைக்காமல் புறக்கணிப்பு செய்த விஜயகாந்த், உடல் நலம், கட்சி நலம் குன்றி வாடி வருகிறார். இப்போதுதான் பிறந்த நாள் வாழ்த்துக்களை தமிழக பாஜக தலைவர்கள் சொன்னதால் அவர் மகிழ்ச்சியில் இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் ஊடகங்களுக்கு செய்திகளை வீசி வருகின்றன. முன்வரிசை கிடைக்காவிட்டாலும் கடைசி வரிசையிலாவது விட்டால் கேட்டுக்கு பின்னால் எட்டிப்பார்க்கக் கூட கேப்டன் தயாராகிவிட்டார். ஆனால் மக்கள் கைவிட்டுவிட்டார்கள். வைகோவுக்கு வேறு போக்கிடம் இல்லையென்றாலும் எதிர்காலமும் இல்லை. பச்சமுத்துவிடமிருந்து பணம் வரலாமே அன்றி மக்கள் செல்வாக்கு பலம் ஓட்டுக்களாய் வராது.

ரஜினி கார்ட்டூன்
அரசியல் வாழ்க்கையில் ஃகிராபிக்ஸ் சாகசம் பயன்படாது.

இந்நிலையில்தான் ரஜினியை தமிழக முதல்வர் வேட்பாளராக்கி ஏதாவது செய்யலாம் என்று அமித்ஷா தீவிரமாக யோசித்து செயலிலும் இறங்கி விட்டாராம். இதை குதூகலத்துடன் வெளியிட்டிருக்கும் தினமலர், இதன் ஆதாரங்களை கமலாலாய வட்டாரங்களுடன் உறுதி செய்திருக்கிறது. குமுதமோ இன்னும் கொஞ்சம் சென்டிமெண்டாக ரஜினியின் மகள்கள் படம் எடுப்பதாக ஏற்படுத்திய நட்டம், லதா ரஜினிகாந்த் வியாபாரத்தில் ஈடுபட்டு உருவாக்கிய நட்டம், தனுஷ் – மகள் சண்டை காரணமாக நிம்மதியிழந்து அரசியல் ஆன்மீகத்தில் செட்டிலாக விரும்புவதாக அடித்து விட்டிருக்கிறது. ரஜினியின் இமேஜை உயர்த்துவதற்கு கூட டிவி சீரியல் போல வறுமை, மருமகன் சண்டை என்று லோக்கலாகத்தான் இவர்கள் புனைகிறார்கள்.

ஐந்து சதவீத வாக்கு வாங்கினாலும் தமிழகத்தில் பூஜ்ஜயமாக இருக்கும் பாரதிய ஜனதா, ரஜினி வந்தால் ராஜ்ஜியத்தை கைப்பற்றலாம் என்று மனப்பால் குடிக்கிறது. மோடிக்கு கொடி பிடித்த பார்ப்பனிய ஊடகங்களோ ரஜினியை வைத்து தாமரையை மலரச் செய்யலாம் என்று கனவு காண்கின்றன. ‘லிங்கா’ குழுவினரோ இந்த அமர்க்களத்தை வைத்து படத்தை வெற்றிகரமாக ரிலீஸ் செய்யலாம் என்று விளம்பரங்களை உத்வேகத்துடன் வடிவமைக்கிறார்கள். எல்லாம் சரிதான்!

ரஜினி என்ன செய்யப் போகிறார்?

அவர் என்ன செய்வார், என்ன செய்ய வேண்டுமென்பதை அம்மா இருக்கும் வரை ஆண்டவன் கூட முடிவு செய்ய முடியாது. அயோத்திக்கு ராமர் கோவில் கட்டுவதை பகிரங்கமாக கூறும் பாஜக கூட அம்மாவிற்கு போட்டியாக பாட்சாவை முன்னிறுத்த முடியாது.

வேண்டுமானால் இப்படி நடக்கலாம். அம்மா + பாஜக கூட்டணிக்கு சூப்பர் ஸ்டார் சுமாராகவாவது பிரச்சாரம் செய்யலாம்.

அதே நேரம் அமித்ஷா மற்றும் சாணக்கியர்களின் திட்டம் வேறாக இருந்தால்? அப்போதும் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். ஏனெனில் அரசியல் வாழ்க்கையில் ஃகிராபிக்ஸ் சாகசம் பயன்படாது.

நீதி வளையுமா ?

3

“இந்த நாட்டில போலீசு, கோர்ட்டு, அதிகாரிகள் யாரும மக்களுக்காக வேலை செய்றது கெடையாது. சாதாரண குடிமகன் ஏதாவது ஒரு பிரச்சனைன்னு போலீஸ் ஸ்டேசனுக்குப் போனா, இழுத்தடிப்பானுங்க, லஞ்சம் கேட்பானுங்க. நீதிமன்றங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம். நம்ம கேச விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே பல மாதங்கள் பிடிக்கும். அதற்கு பிறகும் வாய்தா வாங்கி இழுத்தடிப்பாங்க. அதனால, எந்த வம்புதும்புலையும் மாட்டிக்காம, நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு போக வேண்டியதுதான்.”

ஜனநாயகம்
ஏய், அவரு மட்டும் ஐடி கார்டு காட்ட மாட்டாரா? ஐயா அவரு ஓட்டு போட போகல, வாங்க போறாரு!

இதுதான் நாட்டின் பெரும்பான்மை குடிமக்களின் நிலைமை. ஆனால், இத்தகைய பிரச்சனை இல்லாத குடிமக்களும் உள்ளனர். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று அரசியல் சட்டம் சொன்னாலும், இந்த குடிமக்கள் மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் சமமானவர்கள்.

உதாரணமாக, பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியைச் சேர்ந்த ராதா ராஜன் திருவண்ணாமலை கோயிலில் பராமரிக்கப்பட்டு வந்த பசுக்கள் உயிரிழந்தது தொடர்பான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தாராம். தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் பராமரிப்பில் உள்ள பசுக்கள் மற்றும் கன்றுகளின் மிக மோசமான நிலையை உணர்த்துவதாக இந்த சம்பவம் இருந்ததாம்.

சாதாரண குடிமகனாக இருந்தால் தனது குறைகளை பகவான் மீது போட்டு மனபாரத்தை இறக்கிக் கொள்ள வேண்டியதுதான் என்பது மனுநீதி. ஆனால், ராதா ராஜன், தமிழகக் கோயில்களில் உரிய பராமரிப்பின்றி உள்ள பசுக்களைப் பாதுகாக்க ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்தத் திட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்திட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக சிந்திக்கும் குடிமக்களின் துயர் துடைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்கும் நீதித்துறை, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பிற நூற்றுக்கணக்கான வழக்குகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ராதா ராஜனின் அதிர்ச்சியை போக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழகமெங்கும் கோசாலைகளின் நிலை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அது தொடர்பான அறிக்கையை 2 மாதத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

நீதித்துறை
இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவாக சிந்திக்கும் குடிமக்களின் துயர் துடைப்பதையே தனது இலட்சியமாகக் கொண்டு இயங்கும் நீதித்துறை.

சமச்சீர் கல்வி வழக்கிலோ, தில்லை கோயிலை தீட்சிதர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் வழக்கிலோ தப்பித் தவறி ஆளும் வர்க்கத்திற்கு எதிரான தீர்ப்புகள் வந்து விட்டால் அவற்றை எதிர்த்து எங்கெல்லாம் மேல்முறையீடு செய்வது, மேல் முறையீட்டிலும் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து விட்டால் அதை அமல்படுத்தாமல் எப்படியெல்லாம் அலட்சியம் செய்வது, என்று ஜனநாயகத்தை தூக்கிப் பிடிக்கும் ஜெயா அரசு கோசாலை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு செய்து, அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்து, மனுதாரர் ராதா ராஜனை அலைக்கழித்திருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.

கோசாலை பாதுகாப்புக்காக, அரசுத் தரப்பு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அனந்த பத்மநாபனையும், இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் கால்நடை மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.சுமதியையும் உறுப்பினர்களாக நியமனம் செய்து விட்டனர். மூன்றாவது உறுப்பினராக மனுதாரரே இருக்கலாம் என்று நீதிமன்றமே முடிவு செய்து விட்டது.

இதே கோமாதா தொடர்பான இன்னொரு நிகழ்வு இந்தியாவை வல்லரசாக்கியே தீருவது என்று உறுதி பூண்டுள்ள சில குடிமக்கள் பற்றி அறியத் தருகிறது. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியைச் சேர்ந்த அமீன் என்ற 27 வயது இளைஞர் ஈரோடு மாவட்டத்தில் இருந்து லாரிகளில் மாடுகளை ஏற்றிக் கொண்டு ஒசூர் வழியாக சென்று கொண்டிருந்தாராம். இந்த தகவல் அறிந்த விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சாந்தகுமார், பஜ்ரங்தள மாவட்ட அமைப்பாளர் தேவராஜ், பசுமை பாதுகாப்பு படை நிர்வாகிகள் சேதுமாதவன், கிரண்குமார் ஆகியோர் மாடுகளை ஏற்றிவந்த லாரிகளை சிறைபிடித்திருக்கின்றனர்.

11 லாரிகளில் ஏற்றப்பட்டிருந்த 196 மாடுகளையும், லாரிகளுடன் சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கின்றனர். சிப்காட் காவல்துறையினரும் அமீன் உட்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

முதலாளிகளின் சேவையில் அரசு
முதலாளிகளுக்காக L போல வளையும் அரசு.

மணல் கொள்ளையர்கள் ஆற்று மணலை அள்ளிச் செல்லும் போதோ, தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் லாரிகளையோ யாராவது தடுக்க முயற்சித்தால், அவ்வாறு, முதலாளிகளுக்கு எதிராக சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டவர்கள் மீது போலீஸ் பாய்ந்து குதறியிருக்கும். ஆனால், கோமாதா விவகாரத்தில் இந்துத்துவ குண்டர்களின் அடாவடியை அங்கீகரித்து, 196 மாடுகளையும் போலீஸ் ஸ்டேஷனில் கட்டிப் போட்டு தீனி போடும் அவஸ்தையோடு வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் போலீஸ்.

இங்ஙனம், 196 மாடுகளை பறிமுதல் செய்து இந்தியாவின் வல்லரசு பாதையை செப்பனிட்டிருக்கின்றனர் விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற சங்கபரிவார அமைப்பினர்.

உயர்நீதிமன்றத்தின் அக்கறை கோசாலை பசுக்களோடு நின்று விடுவதில்லை. தனியார் கல்விநிறுவனங்கள் நடத்தும் முதலாளிகளின் தேவைகளும் அவர்களால் ஜரூராக நிறைவேற்றி வைக்கப்படுகின்றன.

புதிய மனுதர்மம்

கல்லூரிக் கல்வி இயக்குநரக இணையதளத்தில் சுயநிதி கல்லூரிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பி.ஏ. படிப்புக்கு ரூ.1,350, பி.எஸ்சி. பயில ரூ.2,850 என எல்லா படிப்புகளுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளனராம். இதன் அடிப்படையில் மாணவர்களும் பெற்றோரும் குறைந்த கட்டணத்தில் படித்து தம்மை ஏமாற்றி விடுவதாக கல்வி வியாபாரிகள் மனம் குமுறியிருக்கின்றனர்.

எனவே, பெரியார் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்ற சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகங்கள் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவின் பேரில், அவர்களது துயர் துடைக்க, போதுமான அளவு அதிகக் கட்டணத்தை நிர்ணயித்து தருவதற்கான குழு ஒன்றை நியமிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுத் தரப்பு, நீதிமன்றம் மற்றும் கல்வி முதலாளிகளின் கோரிக்கையை மறுக்கா விட்டாலும், இத்தகைய குழு அமைக்க 6 மாத அவகாசம் வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். ஆனால், நீதிபதி வி. ராமசுப்பிரமணியனோ 3 மாதங்களுக்குள் குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சுயநிதி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி முதலாளிகளின் கண்ணீரை உடனடியாக துடைக்க ஆவன செய்துள்ளார்.

ஆனால், நீதிமன்றம் நாட்டு குடிமக்கள் சிலர் மீது கருணையுடன் செயல்படும் என்பது மதுரையில் நிரூபணமாகியிருக்கிறது. சென்ற வாரம் மதுரை அதிமுகவினர் அக்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தியிருக்கின்றனர். அதை ஒட்டி நகரெங்கும் 500-க்கும் மேற்பட்ட பிளெக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்களை அமைத்துள்ளனர்.

இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று வழக்கறிஞர் ஏ பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

அரசு தரப்பிலோ, அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவதற்கு அரசாணையின் அடிப்படையிலும், சட்டப்படியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அரசே ‘மனம் திருந்தி’ நடவடிக்கை எடுப்பதாக சொல்லி விட்டதால் இந்த மனு மீது வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டியதில்லை என்று ஜெயலலிதா என்ற குடிமகனுக்கு உறுதுணையாக நின்றிருக்கின்றனர்.

இந்த 4 செய்திகளையும் வெளியிட்ட தி இந்து நாளிதழ், “மிகக் குறைந்த கட்டணத்தை உயர் கல்வித் துறையினர் தன்னிச்சையாக நிர்ணயம் செய்துள்ளனர். இதனால், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.” என்று தனியார் கல்வி முதலாளிகளுக்கும், “கோயில்களுக்கு தானமாக வழங்கப்படும் பசுக் களை விற்பனை செய்யக் கூடாது; கோசாலைகளில் உள்ள மாடுகளுக்கு தேவையான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும்; கோசாலைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்” என்று ராதா ராஜனுக்கும், “மாடுகளைக் கொண்டு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தாலும், அதை மீறி லாரிகளில் அளவுக்கு அதிகமாக மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் பல மாடுகள் நெரிசலில் சிக்கி வழியிலேயே இறக்கும் நிலை உள்ளது.” என்று இந்துத்துவ மாடுகளுக்கும் பரிந்து பேசியுள்ளது.

கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீதிமன்றம், போலீஸ் அல்லது அரசு அதிகாரிகளிடம் உங்கள் வேலையை சாதித்துக் கொள்ள வேண்டுமானால், அதற்கு தி இந்துவின் ஆதரவும் வேண்டுமானால்.

1. நீங்கள் ஒரு பார்ப்பனராக இருக்க வேண்டும். அல்லது பார்ப்பனர்களுக்கு கவலை அளிக்கும் கோசாலை போன்ற விஷயத்தை கையில் எடுத்திருக்க வேண்டும். (அல்லது)

2. நீங்கள் தனியார் கல்வி முதலாளி போன்று மக்களிடம் கொள்ளை அடித்து லாபம் சம்பாதிக்கத் துடிப்பவராக இருக்க வேண்டும். (அல்லது)

3. நீங்கள் இந்துத்துவ அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்திருக்க வேண்டும்.

உங்கள் கோரிக்கை கோமாதா, அகண்ட பாரதம், வேதத்தின் புனிதம் போன்ற இந்துத்துவ புனிதப் பசுக்களில் ஒன்றாகவோ, வைகுண்டராஜனின் நலவாழ்வு, மிடாஸின் ஆரோக்கியம், ஜெயலலிதாவின் வறுமை போன்ற முதலாளிகளின் நலனுக்கானதாகவோ இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

– செழியன்.

மேலும் படிக்க

ராம்கோ ராஜாவுக்கு அடியாளாக போலிக் கம்யூனிஸ்டு தளபதிகள் !

7

தொழிலாளர்களை பண்ணையாட்களாக நடத்தி இரக்கமில்லாமல் சுரண்டும் இராஜபாளையம் ராம்கோ முதலாளியைப் பாதுகாக்க வெட்கங்கெட்ட பிரச்சாரம் செய்யும் போலி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள இராஜபாளையம் ராம்கோ குழும பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமை பரிதாபத்திற்குரியது. இங்கு தொழிற்சாலை சட்டங்களெல்லாம் செல்லுபடியாகாது. ராம்கோ சேர்மன் வைத்தது தான் சட்டம்.

பஞ்சாலைகளில் மட்டுமல்ல, இராஜபாளையம் வட்டாரம் முழுவதுமே இவர்கள் வைத்தது தான் சட்டம். இங்கு எல்லா அரசுத்துறை அதிகாரிகளும், போலீசும், கோர்ட்டும் இவர்கள் கையில். இப்படி இருக்கும் போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை.

இங்குள்ள தொழிலாளர்களின் உரிமைகள் பற்றி எந்த தொழிற்சங்கமும், கட்சிகளும் பேசாத நிலையில், புதிய  ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் பற்றி அவர்களிடையே விளக்கிப் பிரச்சாரம் செய்து வருகிறது. தொழிளார்களை போராட்டத்திற்கு ஒன்றுதிரட்டி வருகிறது. அடியாட்களை ஏவி விடுவது, எடுபிடிகளை வைத்து மிரட்டுவது, போலீசை ஏவி பொய் வழக்கு போடுவது போன்ற ராம்கோ முதலாளியின் எதிர் நடவடிக்கைகளை எல்லாம் எதிர்த்து முறியடித்து பு.ஜ.தொ.மு வின் பிரச்சாரம் முன்னேறி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் விழிப்படைந்து வருகின்றனர். பு.ஜ.தொ.மு விற்கான ஆதரவு பெருகி வருகிறது.

புஜதொமு பிரச்சாரம்
புஜதொமு பிரச்சாரம் (கோப்புப்படம்)

இதனைக்கண்டு கலக்கமடைந்த ராம்கோ முதலாளி வேறு வழியில்லாமல் பு.ஜ.தொ.மு வின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ராம்கோ பஞ்சாலைகளின் வாயில்களில், “ராம்கோ பஞ்சாலைகளப் பற்றி அவதூறுகளைப் பரப்பி வரும் அநாமதேயங்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடியுங்கள்” என்ற தலைப்பிலுள்ள பிரசுரம் ஒன்று தொழிலாளர்களிடம் வினியோகிக்கப்பட்டது. பிரசுரத்தை வாங்கி தலைப்பைப் பார்த்துவிட்டு நம் முதலாளியே வெளியிட்டிருக்கிறார் என நினைத்த தொழிலாளர்கள் ஏமாந்து போனார்கள். பிரசுரத்தின் கீழ் “இவண், AITUC, HMS, INTUC” என்றிருந்தது. ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருக்கும் இந்த எடுபிடிகள் முதலாளியின் உத்திரவின் பேரில் இணைந்து நின்று முதலாளிக்கு ஆதரவான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர் என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொண்டார்கள்.

போலி கம்யூனிஸ்டுகளின் நோட்டிஸ்

aituc-notice-1 aituc-notice-2

போலி கம்யூனிஸ்டு AITUC சங்கம் தொழிலாளர்களுக்காக போராடுவதைப்போல நடித்து, முதலாளிகளுக்கு சேவை செய்து, தொழிலாளர்களுக்கு துரோகமிழைப்பதை பல இடங்களில் பார்த்துள்ளோம். ஆனால் இங்கு அதையும் தாண்டி ‘எகிறிக்குதித்து’ முன்னேறி விட்டனர். “எங்க முதலாளி நல்ல முதலாளி” என்று பாட்டுப்பாடி ஆட்டம் போடாத குறையாக ராம்கோ முதலாளியை ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

சும்மாவா! ராம்கோ முதலாளி கட்சியின் முக்கியப் புரவலராயிற்றே! கட்சியின் நகரக்குழு அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டுக்கட்டாக பணமும் கொடுத்தவரல்லவா முதலாளி! அவ்வளவு ஏன்? கட்சியின் மாநிலக்குழு கூட்டமே ராம்கோ முதலாளி நடத்தும் பள்ளியில் தான் நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அவ்வளவு நெருக்கம்! தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி சேர்த்த பணத்தில் முதலாளியிடம் விருந்து சாப்பிடுகிறார்கள். சி.பி.ஐ யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.

பி.எம்.ராமசாமி
சி.பி.ஐ யின் மாவட்டக் குழு உறுப்பினரும், ராஜபாளையம் மில் AITUC தொழிற்சங்க தலைவருமான பி.எம்.ராமசாமியோ கோடிகளில் புரள்கிறார்.

இந்த எடுபிடிகள் பெயரில் வெளியிட்ட பிரசுரத்தில் என்ன கூறியுள்ளனர்?

எவ்வித சட்ட உரிமையும், பாதுகாப்பும் இல்லாத தொழிற்சாலைகளிலெல்லாம் இவர்களது தொழிற்சங்கம் போராடி வருகிறதாம்! ஆனால், ராம்கோவில் அப்படி இல்லையாம்!

உண்மையில் இந்த எடுபிடிகளை தொழிலாளர்கள் குப்பையாக ஒதுக்கித் தள்ளி விட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும் மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்பட்டதால் குமுறிக் கொண்டிருந்த இராஜபாளையம் மில்ஸ் சி யூனிட் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டம் செய்து சம்பள உயர்வைப் பெற்றனர். சி யூனிட் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது போராட்டத்தின் வீரியத்தை மட்டுப்படுத்த வந்த எடுபிடி சங்கங்களை தொழிலாளர்கள் புறக்கணித்து விரட்டியதை இவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த லட்சணத்தில் சட்டத்திற்கும் மேலாக தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறார் ராம்கோ முதலாளி என்கிறார்கள் இந்த எடுபிடிகள்.

ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அடிபட்டாலோ, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டாலோ அதை விபத்தாக பதிவு செய்யக் கூடாது, அதை வெளியில் சொல்லக் கூடாது. கேசுவல் லீவு தான் தரப்படுமேயொழிய மருத்துவ விடுப்பு கிடைக்காது. அதுமட்டுமல்லாமல், “தொழிலாளர்களாகிய எங்கள் கவனக் குறைவினால் தான் விபத்துகள் நடக்கும், எனவே நாங்கள் கவனத்துடன் வேலை செய்வோம்” என்று மாதம் ஒரு முறை வெயிலில் நிற்க வைத்து உறுதி மொழி வாங்குகிறார்கள். இந்த சித்திரவதையை தொழிலாளிகள் அனுபவிக்க வைத்து விபத்தில்லா ஆலை என ஒவ்வொரு ஆண்டும் விருது வாங்கி வைக்கின்றனர்.

சட்டத்திற்கு அப்பாற்பட்டு தொழிலாளர்களை காப்பதாக இந்த எடுபிடிகள் கூறுகிறார்களே, அதே ஆலையில் தான் 15 ஆண்டுகள் வேலை செய்த பின்பும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமா, 15 ஆண்டுகள் வேலை செய்த பின்பு அற்ப காரணத்தைக் கூறி வாய்மொழியாக வேலை நீக்கம் செய்கிறார்கள். நிரந்தரத் தொழிலாளர்களைக் கூட காரணமே இல்லாமல் பணி மாறுதல் செய்கிறார்கள். தொழிலாளர்களின் நலனுக்காக பல ஆலோசனைகளைக் கூறி நிர்வாகமும் அதை செயல்படுத்துவதாக பிரசுரத்தில் கூறியிருக்கும் இந்த எடுபிடிகள் இந்த பணி நிரந்தர பிரச்சனைக்காக ஏன் எந்த ஆலோசனையும் நிர்வாகத்திடம் கூறவில்லை என்று குத்தலாக கேட்கும் தொழிலாளர்களிடம் பதில் கூற முடியாமல் திணறி கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் எந்த ஆலையிலும் இல்லாத கொடுமையாக ஓவர்டைம் வேலை செய்தால் ஆலையிலிருந்து வெளியேறி விட்டதாக டைம் மிசினில் ரேகை பதிவு செய்து விட்டுத்தான் (வேலை செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல்) ஓவர்டைம் வேலை செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கூறியிருப்பது, சம்பளம் கொடுக்கும் போது ஓவர்டைம் சம்பளம் என்று குறிப்பிடாமல் “புரடக்‌ஷன் இண்சென்டிவ்” என்று எழுதி திருட்டுத்தனம் செய்வது இந்த எடுபிடிகளின் ஆலோசனையினால் தானா என்று தொழிலாளிகள் கேட்கிறார்கள்.

வாரவிடுப்புக்கு சம்பளம் இதுவரை ராம்கோ குழும பஞ்சாலையில் கொடுக்கப்பட்டதாக வரலாறே இல்லை. இது தான் சட்டத்திற்கு மேலும் தொழிலாளிக்கு வாரி வாரி வழங்கும் வள்ளலான ‘குருபக்தமணி’யின் லட்சணமா? என்று தொழிலாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தான் ஆளில்லை.

கக்கூசில் தண்ணீர் இல்லாமல் போட்டுவிட்டு புல்வெளிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்களே; சாப்பிடும் இடத்திற்கு பத்து நிமிடம் நடக்க வேண்டியதிருக்கும் நிலையில் 30 நிமிடம் மட்டுமே உணவு இடைவேளை கொடுக்கிறார்களே; சாப்பிட்டு விட்டு வருவதற்கு ஒரு நிமிடம் லேட் ஆனாலும் சம்பளத்தில் பிடித்தம் செய்கிறார்களே இதெல்லாம் இந்த எடுபிடி தொழிற்சங்கங்களின் ஆலோசனையினால் தானா? என்று தொழிலாளர்கள் குமுறுகிறார்கள்.

தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க பல லட்ச ரூபாய்கள் நிதி உதவி, தொழிலாளர்களுக்கு சொந்த வீடு இருக்க வேண்டும் எனும் நோக்கத்தில் சொந்த பணத்தில் நிலம் வாங்கி அதனை குறைந்த விலையில் தொழிலாளிகளுக்கு கொடுத்தது, தொழிலாளர்களின் சுபநிகழ்ச்சிகளுக்காக திருமண மண்டபம் கட்டியது, பள்ளி, கல்லூரிகளை உருவாக்கியது என்று கோயபல்சுகளே வெட்கப்படும் அளவுக்கு இந்த போலி கம்யூனிச எடுபிடி தொழிற்சங்கங்கள் முதலாளிக்கு கூஜா தூக்கியிருக்கின்றன. ஆனால் உண்மை நிலை என்ன?

ராம்கோ பிரசுரம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராம்கோ முதலாளி பிறந்தநாள் கொண்டாங்களை எதிர்த்து தன்னிச்சையாக தொழிலாளர்கள் ஒட்டிய சுவரொட்டி

முதலாளி பி.ஏ.சி.ஆர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே தொழிலாளிகளின் சம்பளத்தில் கட்டாய வசூல் செய்த ஆலை நிர்வாகமா தொழிலாளிகளின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளி கல்லூரிகளும், தொழிலாளர்களுக்காக வீடும் கொடுக்கப்போகிறது? கல்லூரியில் இடம் வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கட்ட வேண்டும். இராஜபாளையம் பகுதியில் புறம்போக்கு நிலங்களும், குளங்களும் ராம்கோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், இதற்காக யார் சட்டமன்ற உறுப்பினராக வந்தாலும் அவர்களுக்கு கார் பரிசளிப்பதும் வாடிக்கை என்று தொழிலாளர்கள் மட்டுமல்ல, இராஜபாளையம் மக்களே பேசுகிறார்கள். இப்படி எடுக்கப்பட்ட நிலங்களைத்தான் செண்டுக்கு ரூ 4,000 எனும் விலையில் தொழிலாளர்கள் தலையில் கட்டி கொள்ளை லாபம் சம்பாதித்தது ஆலை நிர்வாகம்.

போலி கம்யூனிஸ்டுகள் பன்னாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க அழைத்து விட்டு அதை மனித முகம் கொண்ட முன்னேற்றம் என்கிறார்கள். இவர்களோ ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரனை வள்ளல் என்கிறார்கள். வேண்டுமானால் இந்த எடுபிடிகள் இன்னொரு நோட்டீஸ் போட்டு அதில் என்ன செலவில் எவ்வளவு நிலம் பெறப்பட்டது? எத்தனை தொழிலாளிக்கு நிலம் கொடுத்தார்கள்? அதற்காக பெறப்பட்ட தொகை எவ்வளவு? போன்ற விபரங்களை வெளியிடட்டும்.

தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் செய்து அந்தப் பணத்தைக் கொண்டு திருமண மண்டபம் கட்டி தன் பெயரில் பதிவு செய்து கொண்டிருக்கிறார் ராம்கோ முதலாளி. இந்த மண்டபத்தில் எந்த தொழிலாளியின் சுபநிகழ்ச்சிக்காவது இலவசமாகக் கூட வேண்டாம் குறைந்த வாடகையிலாவது கொடுத்ததிருக்கிறார்களா? ஆனால் வேறு நிகழ்ச்சிகள் இருந்தாலும் தொழிலாளியின் வீட்டு வைபவம் என்றால் முன்னுரிமை கொடுப்பார்களாம். என்ன பித்தலாட்டம் இது! ஆனால் தற்சமயம் முன்னுரிமை கூட கொடுப்பதில்லை என்பது தான் உண்மை.

ராம்கோ முதலாளி நிதி உதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்சி அலுவலகம் கம் திருமண மண்டபம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படி ஒரு பிரசுரம் வெளியிட்டு எடுபிடி சங்கங்கள் தங்களைத் தாங்களே மேலும் அம்பலப்படுத்திக் கொண்டாலும், தொழிலாளர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் எதுவும் கிடைத்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் பணி நிரந்தரம், வாரவிடுப்பு சம்பளம், ஓவர்டைமுக்கு இரட்டிப்பு சம்பளம் போன்ற சட்டப்படியான உரிமைகள் இருக்கின்றன என்பதையே பு.ஜ.தொ.மு பிரச்சாரத்திற்குப் பிறகு தான் தொழிலாளர்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆலையில் ஒரு இரகசிய தேர்தலை இன்று நடத்தினாலும் கூட இந்த சங்கங்கள் ஒற்றை ஒரு வாக்கைக் கூற பெற முடியாது என்பது தான் தொழிலாளர்கள் கூறும் உண்மை.

தொழிற்சங்கம் என்பது, தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி பிழைக்கும், முதலாளி வர்க்கத்தை முறியடித்து, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய, அதிகாரத்தை வென்றெடுக்கப் போராடும் அமைப்பாகும். இதனையே புரட்சிகர கம்யூனிஸ்டுகள் தங்களின் வரலாற்றுக் கடமையாகக் கருதுகிறார்கள். ஆனால் போலி கம்யூனிஸ்டுகளோ தொழிலாளி வர்க்கத்தின் சுயமரியாதையை முதலாளியிடம் அடகுவைக்கும், பிழைப்புவாதிகளாகளாக சீரழிந்து விட்டார்கள் என்பதையே மீண்டும் மீண்டும் தங்கள் செயல்களின் மூலம் நிரூபிக்கிறார்கள்.

நேர்மையான, ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத, காவல்துறை போன்ற ஏவல்துறைகளின் கெடுபிடிகளை எதிர்கொண்டு நிற்கக் கூடிய, எதற்கும் விலை போகாத தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு வின் செங்கொடிகளை ராம்கோ தொழிலாளர்கள் வெளிப்படையாக ஏந்தி வலம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

இவண்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ராஜபாளையம்